ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 37 -அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ --பதிவு 44

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 44

அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ 



இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் வஸ்திரத்தைக் (ஆடை) கொண்டு இடையை-இடைச்சரிவை அலங்கரித்தவள்  என்று பார்த்தோம் .. அருணா எனும் அடை மொழி அடிக்கடி வருகிறது .. அதை இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம் இன்று

சிந்தூ அருண விக்ரஹாம்


இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியான ஸ்லோகத்தில் வருகிறது என்று முன்பே பார்த்தோம்  .

சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம்.

இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியதால் உண்டானது. 

அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான்.

அப்பொழுதே அம்பாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள்.

ஏன் உருவத்தோடு தோன்றினாள்.

அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.

ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ? 

அவள் எப்படியிருப்பாள் ? " "தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் "* " என்கிறது துர்கா ஸூக்தம்.



அக்னி சிகப்பாகத்தான் இருக்கும்.🔥

37 அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ; =

அவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும்.?? 

மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்"

அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் 

நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.

அபிராமி பட்டரும் '" சிந்தூர வர்ணத்தினாள்"என்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும்  சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள்."

*ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்""* 

தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.

ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்  ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா" 
இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள்.  என்று சொல்கிறார் ..

அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். 

இதன் அர்த்தம் என்ன. 

நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் *V(நீலீ)* ஆரம்பித்து சிகப்பில் *R* முடிக்கிறோம் 

பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்
======================================================================


Comments

ravi said…
பாதாரவிந்த சதகம் !

74.பரஸ்மாத் ஸர்வஸ்மாதபிச பரயோ: முக்தி கரயோ:
நகஸ்ரீபிர் ஜ்யோத்ஸநா குலித துலயோ: தாம்ர தலயோ:
நிலீயே காமாக்ஷ்யா நிகம நுதயோ: நாகி நதயோ:
நிரஸ்த ப்ரோன் மீலன்னலின மதயோ ரேவ பதயோ:

நன்றாக மலர்ந்த தாமரையின் செருக்கை விரட்டியடித்த காமாக்ஷியின் திருவடிகளினுள் லயமடைகிறேன். அவை, மிகச் சிறந்தவற்றைக் காட்டிலும் சிறந்தவை. முக்தி தருபவை, நக ஒளியால் நிலவின் பரப்பை ஒத்தவை, தாமிரநிறம் கொண்ட அடித்தலம் கொண்டவை. வேதங்களால் துதிக்கப்பெற்றவை. தேவர்களால் வணங்கப்பெற்றவை.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
தடுமாற்றம் அடைந்து சுழல்கின்ற
என்னை சிறிதாவது கவனித்துக்கொள்ள
நினைத்தலாகாதோ? (தட்டுப் பட்டுச் சுழல்வேனை ...
சற்றுப் பற்றக் கருதாதோ)

முருகா🙏

முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்
முற்றச் சுற்றிப் ...... பலநாளும்

தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்
சற்றுப் பற்றக் ...... கருதாதோ

வட்டப் புட்பத் ...... தலமீதே
வைக்கத் தக்கத் ...... திருபாதா

கட்டத் தற்றத் ...... தருள்வோனே
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே
ravi said…

பழனிக் கடவுள் துணை -29.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-43

மூலம்:

புகழ்விரும்பிப் பாடுபட்டுப் பொல்லாத கோடி
இகழ்வடைந்து நொந்தேன்இ தென்னோ – திகழ்வடிவேற்
பூசைப் பயன்முழுதும் பொக்கமுறா(து) ஈந்தருள்வாய்
ஆசைப் பழனிமன்ன வா (43).

பதப்பிரிவு:

புகழ் விரும்பிப் பாடுபட்டுப் பொல்லாத கோடி
இகழ்வு அடைந்து நொந்தேன்! இது என்னோ? – திகழ் வடிவேல்
பூசைப் பயன் முழுதும் பொக்கம் உறாது ஈந்து அருள்வாய்!!
ஆசைப் பழனி மன்னவா!!! (43).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பொக்கம்- குற்றம்;

ஆசைப் பழனி மன்னவா! அடியேன் உன் அழியாத அருட்புகழைப் பெற விளையாது, மானிடப் புகழ் பெற விரும்பி, அரும் பெரும் பாடுபட்டு, அதன் விளைவாக, பொல்லாத கோடி இகழ்வு அடைந்து, என் மனம் நொந்தேன்! தவித்தேன்! இது என்ன வினை என் ஆண்டவனே! வினையெல்லாம் களையும் பழனிவேலவனே! ஜோதி வடிவாய்த் திகழ்கின்ற உன் வடிவேல் பூசைப் பயன் முழுதும், குற்றம், குறைவு உறாது, எனக்குத் தந்து அருள்வாய்!! பழனாபுரி ஆண்டவனே!

உன் நாமம் சொல்லாத நாள் இல்லை, எம் பழனிப் பெருமானே! கொல்லாமல் கொல்லும் இந்தப் பொல்லாத உலகில் இருந்து, நல்லோனே! வல்லோனே! நீதான், எனைத் தள்ளாது, உன் அருளை அள்ள அள்ளக் கொள்ளாது அளித்து எனைக் காக்க வேண்டும்!!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺" *நம் கைவசம் இருக்கும் பல சுகங்களை மறந்து இல்லாத ஒன்றுக்காக மனக்கவலையோடு வாழ்ந்துவருகிறோம் என்பதை ...... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹அரசன் அருணாச்சலம் தனது மந்திரியை அழைத்து:...

🌺"இதோ பார் மந்திரியாரே, நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கிறேன்.

🌺எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. இருந்தும், நான் மன நிம்மதியாக இல்லை. மனக்குழப்பம் என்னை வாட்டி வதைக்கிறது.

🌺சலிப்பும், வெறுப்பும் என்னை பின்தொடர்கிறது. ஆனால், எதுவும் இல்லாத என் சேவகன் இருக்கிறானே,

🌺அவன் என்னை விட
வாழ்வில் மனமகிழ்ச்சியுடன் இருக்கக் காணுகிறேன்.

🌺ஆனந்தத்தில் அவன்
மிதக்கிறான். பார்க்க பொறாமையாக
இருக்கிறது' என்று ஆதங்கப்பட்டான்.

🌺உடனே அந்த மந்திரி, அரசே! அந்த
சேவகனிடம் 99 ஆட்டத்தை பரீட்சித்துப்
பாருங்கள்' என்றான்.

🌺அதற்கு அரசன் அருணாச்சலம் : அது என்ன 99 ஆட்டம்?
புதுமையாக இருக்கிறதே!" என்றான்.
அதற்கு மந்திரி சொன்னான், 99 ஆட்டம் என்பது 99 பொற்காசுகளை எடுத்து
ஒரு பையில் போட்டு சேவகனின் வீட்டு வாசலில் வைத்துவிடுங்கள்.

🌺"100 பொற்காசுள் உங்களுக்கான
அன்புப் பரிசு " என்று அதிலே எழுதி
வைத்துவிட்டு வந்துவிடுங்கள்.

🌺பின்பு என்ன நடக்கிறது என்று
பொறுத்திருந்து பாருங்கள்!" என்றான்.
அப்படியே அரசனும் செய்துவிட்டு
அவதானித்தான்.

🌺பொற்காசுள் நிறைந்த
பையைக்கண்ட சேவகன் ஆனந்தத்தில்
மிதந்தான்.

🌺பணப்பையை எடுத்து எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைவாக இருந்தது.

🌺கட்டாயம் ஒரு பொற்காசு வெளியில் எங்காவது விழுந்திருக்க வேண்டும்' என மனதில் நினைத்துக்கொண்டான்.

🌺அதன்படி அவனும், அவனது மனைவி, பிள்ளைகுட்டிகள் என அனைவரும் தவறிய அந்த ஒரு பொன்நாணயத்தை தேட ஆரம்பித்தனர்.

🌺தேடித்தேடி இரவும் முடிந்து பொழுதும் விடிந்தது, தேடல் மாத்திரம் முடிந்தபாடில்லை.

🌺கோபமடைந்த சேவகன் அவர்கள் மீது எரிந்துவிழத் தொடங்கினான். அவன் மனமகிழ்ச்சி மனவருத்தமாக மாறியது.

🌺மறுநாள் சேவகன் விரக்தியடைந்தவனாக காணப்பட்டான்.

🌺புன்முறுவல் பூத்திருந்த அவனது முகம் சிடுமூஞ்சாக மாறியிருந்தது. தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தான்.

🌺இதையெல்லாம் ஓரமாக நின்று
பார்த்துக்கொண்டிருந்த அரசனுக்கு
99 ஆட்டம் என்றால் என்னவென்று புரிந்து போய்விட்டது.

🌺அந்த வல்ல ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு
வழங்கிய 99 வகையான
செளபாக்கியங்களோடு இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

🌺வாழ்வில் நமக்கு கிடைக்காத
அந்த ஏதோ ஒரே ஒரு பாக்கியத்திற்காக நிம்மதியை இழந்து மனவருத்தத்தோடு
வாழ்ந்து வருகிறோம். ஏங்கித் தவிக்கிறோம்.

🌺நம் கைவசம் இருக்கும் பல சுகங்களை மறந்து இல்லாத ஒன்றுக்காக மனக்கவலையோடு வாழ்ந்துவருகிறோம். அவைகளை விலக்க வேண்டும்

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 "A simple story that explains that we are living with anxiety for something that we don't forget about the many pleasures we have at hand 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹King Arunachalam called his minister:...

🌺 "Look minister, I am the king of such a great empire.

🌺I have nothing to say no to. However, I was not at peace. Confusion consumes me.

🌺 Boredom and disgust follow me. But there is my servant who has nothing,

🌺 He is better than me
I want to be happy in life.

He is in bliss
floats Jealous to see
"There is," he said.

🌺 Immediately that minister, the king! That
Sevakan has tested 99 games
Look' he said.

🌺 King Arunachalam: What is that 99 game?
It's new!" he said.
To which the minister said, 99 games means taking 99 gold coins
Put it in a bag and leave it at the servant's door.

🌺 "100 gold coins for you
A gift of love" written on it
Leave it and come.

🌺What happens next
Wait and see!" he said.
The king did the same
Observed.

🌺 Full of gold dust
The servant with the bag was in joy
He floated.

🌺 He took the wallet and counted. It was a dime short.

A gold coin must have fallen somewhere outside,' he thought.

🌺Accordingly, he, his wife and children all started searching for that one gold coin that was missing.

🌺The search is over and the morning has dawned, but the search is not over.

🌺 The enraged Sevakan began to lash out at them. His happiness turned to sadness.

🌺 The next day the servant looked dejected.

🌺 His smiling face turned into a frown. He was cursing himself.

🌺Standing aside all this
To the king who was watching
What is 99 game is understood.

🌺 That mighty Sri Krishna is for us
99 types provided
We forget to be with riches.

🌺 What we don't get in life
That something with a loss of peace and sorrow for a single privilege
We are living. We are longing.

🌺 We are living with anxiety for something that we don't forget about the many pleasures that are available to us. vilakku them

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
The man, a busy professional also named John, is stuck in a massive traffic jam en-route to his much needed vacation. When he tries to circumvent the roadblock, he gets lost and, running out of fuel, energy, and growing ever hungrier, turns into a cafe in the middle of nowhere - The Cafe of Questions.



ravi said…
Inside the cafe, John gets a delicious breakfast, but he is also confronted with a series of uncomfortable, oddly well-timed questions, such as “Why are you here?” “Do you fear death?” and “Are you fulfilled?” The waitress, cook, and fellow guests seem to be able to read his mind, and they all make him reflect deeply on the path in life he has chosen thus far. One of the staff, Casey, shares the story of the green sea turtle. She too was once on vacation, she says. Snorkelling off the coast of Hawaii, she spotted a green sea turtle right next to her in the water. This being the first time she ever saw one, she was excited and decided to follow the little guy for a while. “To my surprise, although he appeared to be moving pretty slowly, sometimes paddling his flippers and other times just floating, I couldn’t keep up with him. I was wearing fins, which gave me propulsion power through the water, and didn’t have on a buoyancy vest or anything that would slow me down. Yet he kept moving farther from me, even though I was trying to keep up. After about ten minutes, he lost me. Tired, disappointed, and a little embarrassed I couldn’t keep up with a turtle, I turned back and snorkelled to shore.” The next day, Casey returned to the same spot, and again, she found and tried to keep up with another green sea turtle. As she realized that turtle too was about to lose her, she stopped paddling and just floated in the water. “As I was floating on the surface, I realized something: When the turtle was swimming, it linked its movements to the movements of the water. When a wave was coming at him, he would float, and paddle just enough to hold his position. When the pull of the wave was from behind him though, he’d paddle faster, so that he was using the movement of the water to his advantage. The turtle never fought the waves. Instead, he used them.” Casey, on the other hand, had been paddling the whole time. This was easy enough when the tide was in her favour, but the more she fought the incoming waves, the less energy she had to capitalize on the outgoing ones later. “As wave after wave came in and went out, I became more and more fatigued and less effective. Not the turtle though. He kept optimizing his movements with the movements of the water. That’s why he was able to swim faster than I could.”



ravi said…
If you’re like me — and John — at this point in the story, you’ll wonder: That’s great — but what does it have to do with me and my life? Actually, a whole lot, as Casey went on. Have you ever felt like you’re fighting an uphill battle? As if for every two steps forward, life somehow pushes you one step back? It happens to all of us. We do our best to fulfil our duties as responsible adults, and yet, it seems we must fight tooth and nail to make room for the few people and activities that are truly important to us. Why is that? Well, as the green sea turtle might tell us: “You’re swimming against the current of life. Why don’t you try swimming with it?”



After Casey gives him some time to think about the story, John interprets it as follows: “I think the turtle - the green sea turtle - taught you that if you aren’t in tune with what you want to do, you can waste your energy on lots of other things. Then, when opportunities come your way for what you do want, you might not have the time or strength to spend on them.”
ravi said…
*❖ 97 சமயாந்த:ஸ்தா =*

சமயாசாரத்தின் வழிபாட்டு முறைகளுள் உறைபவள் (ஸ்ரீவித்யா உபாசனை முறைகளில் சமயாசார முறையும் ஒன்று)
ravi said…
அம்மா

நன்றாக மலர்ந்த தாமரையின் செருக்கை விரட்டியடித்த உன் திருவடிகளினுள் லயமடைகிறேன்.

அவை, மிகச் சிறந்தவற்றைக் காட்டிலும் சிறந்தவை.

முக்தி தருபவை,

நக ஒளியால் நிலவின் பரப்பை ஒத்தவை,

தாமிரநிறம் கொண்ட அடித்தலம் கொண்டவை.

வேதங்களால் துதிக்கப்பெற்றவை.

தேவர்களால் வணங்கப்பெற்றவை.

ஈடு ஏதும் உண்டோ தாயே உன் திருவடிக்கு ?

இணையில்லா ஈகை கொண்ட பாதம் கல் நெஞ்சம் கொண்ட என்னையும் கரைக்கட்டும் ...

பொன்னால் செய்து போட்டாலும் பெண்ணால் பெரும் பெருமைகள் ஏதும் பேச இயலுமோ தாயே ?

தாயாய் நீ இருக்க தரணி வெல்வது ஏதும் கடினமோ தாயே ?💐💐💐
ravi said…
இன்னிக்கு 45ஆவது ஸ்லோகத்துல

अयाच्यमक्रेयमयातयामं अपाच्यमक्षय्यं अदुर्भरं मे |

अस्त्येव पाथेयमित:प्रयाणे श्रीकृष्णनामामृतभागधेयम् ॥ ४५ ॥

அயாச்யம் அக்ரேயம் அயாதயாமம் அபாச்யம் அக்ஷய்யம் அதுர்பரம் மே |

அஸ்த்யேவ பாதேயமித: பிரயாணே ஸ்ரீகிருஷ்ண நாமாம்ருத பாகதேயம் ||
ravi said…
அதுனால இது எதையும் நீ நம்பாதே. நீ பகவானோட நாமத்தை நம்புன்னு, முதல்லேருந்து நாமத்துல ருசி வந்து, அது மூலமா பகவானோட அனுபவம் நமக்கு கிடைச்சுடுத்துன்னா, நாம் கொஞ்சம் கூட குறைப்படாம எந்த ஒரு பயமோ, சோகமோ, மோஹமோ இல்லாம இந்த லோகயாத்திரையை நடத்தலாம்ங்கிறதை இந்த கவி ரொம்ப அழகான விதத்துல சொல்லிக் கொடுக்கிறார்

அயாச்யம் அக்ரேயம் அயாதயாமம் அபாச்யம் அக்ஷய்யம் அதுர்பரம் மே |

அஸ்த்யேவ பாதேயமித: பிரயாணே ஸ்ரீகிருஷ்ண நாமாம்ருத பாகதேயம் ||
ravi said…
*அயாச்யம்* –

இதை இன்னொருத்தர் கிட்ட போய் கேட்க வேண்டாம்.

இந்த லோகயாத்திரைக்கு ஒரு ரொம்ப ருசியான கெட்டுப் போகாத ஒரு அமிர்தம் போன்ற உணவு எனக்கு இருக்கு.

அதை இன்னொருத்தர் கிட்ட போய் பிச்சை கேட்க வேண்டாம்.

என் கிட்டயே இருக்கு. *அக்ரேயம்* –

விலை கொடுத்து வாங்க வேண்டாம். நாளானா கெட்டுப் போகாது.

இதை சமைக்க வேண்டாம். இது எடுக்க எடுக்க குறையாது. இது தூக்கறதுக்கு ரொம்ப பாரம் கிடையாது.

அப்பேற்பட்ட அமிர்தமயமான ருசியோடு கூடிய ஒரு அன்னம் இருக்கு.

என்னோட வழி பிரயாணத்துக்கு. அது என்னன்னா *ஸ்ரீகிருஷ்ணா நாமாம்ருத பாகதேயம்* ன்னு நாம அமிர்தம் இருக்கு என்கிட்ட.

கிருஷ்ணனோட நாமம் இருக்கு ன்னு சொல்றார்🪷🪷🪷
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

54 –
நாணிலை நாட்ட நானாய் ஒன்றி நீ
தாணுவா நின்றனை அருணாசலா (அ)
ravi said…
*_அருணாசலா_* ....

உன் நிலை நான் அறிய

நீ நானாக மாறியே ஒன்றாய் ஓங்கி நின்றாய் *அருணாசலா*

உணர்ந்திலேன் உன் கருணை *அருணாசலா* ...

மலையின் உயரம் அறிவேன்

உன் கருணையின் உயரம் அறியேன் *அருணாசலா*

கடலின் ஆழம் அறிவேன்

உன் அன்பின் ஆழம் உணரேன் *அருணாசலா*

வானம் அளந்தே நீளம் சொல்வேன்

உன் பெருமையின் நீளம் சொல்ல இயலேன் *அருணாசலா*

வானில் மின்னும் தாரகைகள் எண்ணிக்கை சொல்வேன் ...

நீ அளித்த வரம் எண்ணிக்கை தெரியலேன் *அருணாசலா*

மண்ணில் உள்ள கற்களை பிரித்து கணக்கிடுவேன்

என்னில் கலந்த உன்னை பிரிக்க முடியுமோ இனி நீயே சொல்வாய் *அருணாசலா* .. 🪷🪷🪷🪷🪷
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 471* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*198 समानाधिकवर्जिता - ஸமாநாதிக வர்ஜிதா -*

ஈடிணையற்றவள் சிவசக்தி.

சர்வேஸ்வரியை யாருடன் ஒப்பிடுவது?

ஞானமயம் அவள். ப்ரம்மணி.

அர்ஜுனன் க்ரிஷ்ணனிடம் சொல்கிறானே '' நீ அகிலபுவனமும் போற்றும் சர்வ சக்தி வாய்ந்தவன் உனக்கு யாரை சமமாக சொல்வேன் ?''

அம்பாள் அதே தான்.
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 69*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
नन्दति मम हृदि काचन मन्दिरयन्ता निरन्तरं काञ्चीम् ।

इन्दुरविमण्डलकुचा बिन्दुवियन्नादपरिणता तरुणी ॥ ५२॥


52. Nandhathi mama hrudhi kaachana mandhirayanthi nirantharam Kanchim,

Indhu ravi mandala kuchaa bindu viyan nnadha parinatha tharuni.

நந்ததி மம ஹ்றுதி காசன மன்திரயன்தா னிரன்தரம் காஞ்சீம் |

இந்து ரவிமண்டலகுசா பின்துவியன்னாதபரிணதா தருணீ ||52||
ravi said…
காமாக்ஷி அம்பாள், காஞ்சிநகரத்தை தனது நிரந்தர வாசஸ்தலமாக கொண்டவள்.

சூர்ய சந்திரர்களை மார்பில் கொண்டவள்,

நேத்ரமாக கொண்டவள்,

தாடங்கங்களாக கொண்டவர்கள் என்று சொல்வது வழக்கம்.

வ்யோம, பிந்து, நாதத்தை வெவ்வேறு ரூபமாக கொண்டவள்.

வேதங்களில் பரமேஸ்வரனை ஸுக்ல பிந்து ரூபமாகவும், காமாக்ஷியை சோண பிந்து ரூபமாகவும், அவர்கள் இருவரின் பரஸ்பர சம்பந்தத்தால், மிஸ்ர பிந்து வியோம, பிந்து, நாதம் பிறந்து அதுவே ஜகத் காரணமாக ஆகிவிட்டது என சொல்லப்பட்டுள்ளது.

மொத்தத்தில் எல்லாமே அம்பாளின் பரிமாணங்கள் தான். 🪷🪷🪷🪷🪷
ravi said…
நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பு அரிய

பெலத்தைச் செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென்

புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்

நலத்தைப் பொறுத்தது இராமானுசன் தன் நயப்புகழே

--- ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)
ravi said…
ராமானுஜரின் (அடியவர்க்கு) அருள்/

அன்பு/நன்மை தரும் (குணப்)புகழானது,

இந்த பூவுலகை (பூவுலக மாந்தரை) துன்புறுத்தி
உண்ணும் நீசக் கலியை -

வலிமையை வென்று அடக்கியும்,

பிறங்கியது இல்லை - விளங்கவில்லை (ஒளிரவில்லை)

என் மிகுதியான பாவங்கள்
(காலனின் இருப்பிடமான) எமலோகத்தில் குறித்து வைக்கப்பட்ட
அப்புத்தகச் சும்மை -

எரித்த பின்னர்

நன்மை/பயன் பெற்றது (ஓங்கிச் சிறப்புற்றது!)🪷🪷🪷
ravi said…
*Know your Parents: (KYP)*

One who loves till her eyes close, is your *Mother*.
One who loves without an expression in his eyes, is your *Father*.
____________________________
*Mother* - Introduces you to the world.
*Father* - Introduces the world to you.
________________________
___
*Mother* : Gives you life.
*Father* : Gives you living.
__________________________
*Mother* : Makes sure you are not starving.
*Father* : Makes sure you know the value of starving.

__________________________

*Mother* : Personifies Care.

*Father*: Personifies Responsibility.

__________________________

*Mother* : Protects you from a fall.
*Father* : Teaches you to get up from a fall.
__________________________
*Mother* : Teaches from her own experiences.
*Father* : Teaches you to learn from your own experiences.
___________________________
*Mother's* love is known to you since birth.
*Father's* love is known when you become a Father.
_________________________

*Dedicated to all parents.*
🙏🏻🙏🏻
.
ravi said…
*தமிழ் இலக்கியம்*


*நல்வழி : 40*

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.

*பொருள்*

தெய்வப் புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளும்,
நான்கு வேதத்தின் முடிவும், அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய மூவர் பாடிய தேவாரமும், மாணிக்க வாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையும், திருமூலர் பாடிய திருமந்திரம் ஆகிய நூல்கள் சொல்லும் பொருள்கள் அனைத்தும் ஒன்று தான் என்று நீ உணர்ந்து கொள்.


*நல்வழி இதனுடன் முடிகிறது*

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
[29/01, 07:24] +91 96209 96097: *பிரதிஷ்டிதாய நமஹ*🙏
தன்னில் தானே நிலை பெற்றவர்
[29/01, 07:24] +91 96209 96097: விஶ்வரூபா ஜாக³ரிணீ *ஸ்வபந்தீ* தைஜஸாத்மிகா 🙏
எல்லா உயிர்களின் இயல்பாக விளங்குபவள்
ravi said…
*பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத்திருநாமங்கள்!*
*இன்று சொல்லி வணங்குவோம் .*

*யார் ஒருவர் தினமும் மேற்கண்ட* *ஸ்ரீநாராயணனின் 24 திருநாமங்களை அனுதினமும் தவறாமல் ஜெபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும்* *மனநிம்மதியுடன் கூடிய ராஜ யோகமும், பிறவி முடிந்த பின்னும் மேலுலக* *இன்பத்தையெல்லாம் அனுபவித்து இறுதியில் எம்பெருமான் ஸ்ரீநாராயணனின் திருவடிகளை அடையலாம்.*

*பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத்திருநாமங்கள்!*

*1.ஓம் கேசவாய நமஹ!*
*2.ஓம் சங்கர்ஷனாய நமஹ!*
*3.ஓம் நாராயணாய நமஹ!*
*4.ஓம் வாசு தேவாய நமஹ!*
*5.ஓம் மாதவாய நமஹ!*
*6.ஓம் ப்ரத்யும்னாய நமஹ!*
*7.ஓம் கோவிந்தாய நமஹ!*
*8.ஓம் அனிருத்தாய நமஹ!*
*9.ஓம் விஷ்ணவே நமஹ!*
*10.ஓம் புருஷோத்தமாய நமஹ!*
*11.ஓம் மதுசூதனாய நமஹ!*
*12.ஓம் அதோஷஜாய நமஹ!*
*13.ஓம் த்ரிவிக்மாய நமஹ!*
*14.ஓம் லஷ்மி நரசிம்ஹாய நமஹ!*
*15.ஓம் வாமனாய நமஹ!*
*16.ஓம் அச்சுதாய நமஹ!*
*17.ஓம் ஸ்ரீதராய நமஹ!*
*18.ஓம் ஜனார்தனாய நமஹ!*
*19.ஓம் ஹ்ருஷீகேஷாய நமஹ!*
*20.ஓம் உபேந்த்ராய நமஹ!*
*21.ஓம் பத்மநாபாய நமஹ!*
*22.ஓம் ஹரயே நமஹ!*
*23.ஓம் தாமோதராய நமஹ!*
*24.ஓம் கிருஷ்ணாய நமஹ!*

*யார் ஒருவர் தினமும் மேற்கண்ட ஸ்ரீநாராயணனின் 24 திருநாமங்களை அனுதினமும் தவறாமல் ஜெபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜ யோகமும், பிறவி முடிந்த பின்னும் மேலுலக இன்பத்தையெல்லாம் அனுபவித்து இறுதியில் எம்பெருமான் ஸ்ரீநாராயணனின் திருவடிகளை அடையலாம்*
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீராஜமாதங்கி நவராத்திரி சிறப்பு பதிவுகள் :*

ஸ்ரீராஜமாதங்கி நவராத்திரி காலத்தில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!

பனிரெண்டு மாதங்களுக்கும் பனிரெண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாஸ்திர நூல்கள். ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. பனிரெண்டு நவராத்திரிகள் இருந்தாலும் இந்த நான்கு நவராத்திரி காலங்கள் மிக மிக முக்கியமானவை என்று சாக்த சாஸ்திர நூல்கள் விவரிக்கின்றன.

ஸ்ரீராஜமாதங்கி நவராத்திரியில், ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஆராதிப்பதும் வீட்டில் உள்ள அம்பாள் படங்களுக்கு மலர்கள் சூட்டி வணங்குவதும் விசேஷம். குறிப்பாக, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி அலங்கரிப்பதும் ஏதேனும் ஒரு இனிப்பு நைவேத்தியம் செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்புகளை நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம்.

தை அமாவாசைக்குப் பிறகு வருவதே ஸ்ரீராஜமாதங்கி நவராத்திரி. இந்தக் காலங்களில் வருகிற சதுர்த்தி, பஞ்சமி விசேஷம். இதை மாக சதுர்த்தி, வரசதுர்த்தி என்றும் வசந்த பஞ்சமி என்றும் கொண்டாடுவார்கள். மகத்துவம் வாய்ந்தது. புத்தியில் தெளிவையும் மனதில் நம்பிக்கைச் சுடரையும் ஏற்றித் தந்தருளக்கூடியது.

சியாமளா நவராத்திரி காலத்தில், தினமும் அம்பிகையை வழிபடலாம். வீட்டில் உள்ள அம்பாள் திருமேனிச் சிலைகளுக்கோ அல்லது படங்களுக்கோ சந்தனம் குங்குமமிட்டு, மலர்களால் அலங்கரித்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடலாம்.

இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!

ravi said…
துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு.

அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான்.

இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்.

மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார்.

குருவே இது மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம்.

கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல அறம்" என்று பாராட்டினார் !!

*பணத்தாலும், பதவியாலும், அதிகாரத்தாலும் நீங்கள் பலமானவர்களாக இருக்கலாம். அந்த பலத்தை உங்களை நேசிப்பவர்களிடமோ, அல்லது உங்களை விட பலம் குறைந்தவர்களிடமோ காட்டாதீர்கள்..

வாழ்க்கை ஒரு வட்டம். தொடங்கிய இடத்துக்கே வந்தாகனும்!......
ravi said…
தினம் ஒரு(தெயவத்தின்)குரல்

“ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே, நமஸ்தே”:

”ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கு மறுபடி மறுபடி நமஸ்காரம்” என்று எல்லோருக்கும் புரியும். மங்களமாக ‘ஸ்ரீ’ என்று ஆரம்பித்து ஒன்றுக்கு இரண்டாக ‘நமஸ்தே’ சொல்லியிருக்கிறார். ஒரு தடவைக்கு மேல் சொல்லி விட்டால் அனந்தம் தடவை சொல்லிவிட்டதாக அர்த்தம். முக்யமான ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்வதென்றால் இப்படி டூப்ளிகேட் பண்ணுவது வழக்கம். ‘போற்றி, போற்றி’ என்பது அப்படித்தான். ‘ஜய ஜய சங்கர’ என்கிறோம். ப்ரஹ்மஸுத்ரம்கூட ஒரே வாக்யத்தை இரண்டு தடவை திருப்பித்தான் முடிகிறது.

ravi said…
“நமஸ்தே நமஸ்தே” – “தே” – உனக்கு; ”நம:” – நமஸ்காரம். ‘நம: தே’ என்பது ’நமஸ்தே’ என்றாகும். “தே” – உனக்கு. “ஸுப்ரஹ்மண்யாய” – ஸுப்ரஹ்மண்யனுக்கு. பாட்டு முழுக்க ‘க்கு’ போட்டுக்கொண்டு நாலாம் வேற்றுமையிலேயே போகிறது.

ஸுப்ரஹ்மண்யனான உனக்கு நமஸ்காரம். அனந்த கோடி நமஸ்காரம்.

ஸுப்ரஹ்மண்யன் என்றால்? நல்ல ப்ரஹ்மண்யன். தேர்ந்த ப்ரஹ்மண்யன். ப்ரஹ்மண்யன் என்றால்?

ravi said…
ப்ரஹ்மம்’ என்றால் ஸத்யமான பரமாத்ம ஸ்வரூபம் என்று மாத்ரமே அர்த்தம் பண்ணிக்கொள்கிறோம். ‘ப்ரஹ்ம’ பதத்துக்கு இன்னொரு முக்யமான அர்த்தம் ‘வேதம்’ என்பது. வேதத்துக்கு ‘ப்ரஹ்ம’ என்று ஒரு பெயர். அதனால்தான் வேத மந்திரத்தில் ஒரு குழந்தைக்கு தீக்ஷை கொடுப்பதான உபநயனத்தை ‘ப்ரஹ்மோபதேசம்’ என்பது. வேதம் கற்றுக் கொள்வதாலேயே அந்தக் குழந்தை ‘ப்ரஹ்மசாரி’ ஆகிறான். ‘ப்ரஹ்ம யஜ்ஞம்’ என்கிற மாதிரியான பல இடங்களிலும் ‘ப்ரஹ்ம’ என்றால் வேதம் என்றே அர்த்தம். வேதத்தை அநுஸரிப்பது, அநுஷ்டிப்பது – அதாவது வைதிகம் என்பதுதான் ப்ரஹ்மண்யம். அதை முக்கியமாகக் கொண்டவர்களே ப்ராஹ்மணர்கள். வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிற பரமாத்ம ஸ்வரூபமாகவே இருப்பதால் ஸுப்ரஹ்மண்யராக இருக்கப்பட்ட மூர்த்தி வைதிகத்தின் விசேஷ தெய்வமாக வைதிகர்களின் விசேஷ தெய்வமாக இருப்பதாலும் ஸுப்ரஹ்மண்யராகிறார்.

வேதத்துக்கு முக்கியமென்ன? அக்னி உபாஸனை. ஸுப்ரஹ்மண்யர்தானே அக்னி ஸ்வரூபமாயிருப்பவர்? பரமேச்வரனின் நேத்ராக்னிப் பொறி ஆறு சேர்ந்துதானே அவராக ஆனது? அதனால் அவர் வேத தேவராக இருப்பவர். வேதம் படிப்பதும் சொல்லிக் கொடுப்பதுமே தொழிலாயுள்ள ப்ராஹமணர்களின் தெய்வமாயிருப்பவர் ஸுப்ரஹ்மண்யர்.

ஆசார்யாளும் ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்க’த்தில், “மஹீதேவ தேவம், மஹாதேவ பாவம், மஹாதேவ பாலம்” என்று சொல்லியிருக்கிறார். ‘மஹீதேவர்’ என்றால் ‘ப்ராஹமணர்’. ‘மஹீதேவ தேவர்’ என்றால் ப்ராஹ்மணர்களின் தெய்வம் என்று அர்த்தம்.

தமிழிலுள்ள பக்தி நூல்களில் ரொம்பவும் புராதனமான ‘திருமுருகாற்றுப்படை’யிலும் இப்படியே தான் சொல்லியிருக்கிறது. ஷண்முகனின் ஆறு முகங்களில் ஒவ்வொன்றும் ஒருவிதமான அநுக்ரஹம் செய்வதாக நக்கீரர் சொல்லிக்கொண்டு போகும்போது

                ஒரு முகம்

      மந்திர விதியின் மரபுளி வழாஅது

      அந்தணர் வேள்வியோர்க்கும்மே

என்று சொல்லியிருக்கிறார். திருவேரகம் என்கிற ஸ்வாமிமலையை வர்ணிக்கிற இடத்திலும் அங்கே நல்ல ப்ரஹ்மசர்ய அநுஷ்டானமுள்ள ப்ராஹமணர்கள் முத்தீ வளர்த்து யஜ்ஞாதிகள் செய்து ஸுப்ரஹ்மண்ய மந்திர ஜபமும் பூஜையும் செய்வதையே சொல்லியிருக்கிறார்.

யஜ்ஞ கர்மத்தில் பங்கு கொண்டு செய்கிற ப்ராஹ்மணர்களுக்கு ரித்விக் என்று பெயர். பதினாறு வகையான ரித்விக்குகளில் ஒருவருக்குப் பேர் ‘ஸுப்ரஹ்மண்ய’ என்பது.

‘ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி’ என்பதே குமாரஸ்வாமிக்கு ப்ரஸித்த நாமாவாக இருப்பதிலிருந்தே அவர் வேதத்துக்கும் வைதிகத்துக்கும் அதிதேவதை என்று நிச்சயமாகிறது.
(நாளை தை கிருத்திகை)
ravi said…
29.01.2023:

"Gita Shloka (Chapter 1 and Shloka 20)

Sanskrit Version:

अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान्कपिध्वजः।
प्रवृत्ते शस्त्रसंपाते धनुरुद्यम्य पाण्डवः।।1.20।।

English Version:

aTha vyavasThithaan drushtvaa
Dhaartaraashtraamkapidhvajah: |
pravrutte shastrasampaate
Dharudyamya paandavah: ||

Shloka Meaning

O King Dhrutaraashtrah! Now seeing the Kauravas arrayed in battle order
and the exchange of weapons about to begin, Arjuna took up his bow.

Jai Shri Krishna 🌺
ravi said…
கையால் தொழுது உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு

எய்யாது என் தன் தலைமேல் வைத்து ’எம் பெருமான், பெருமான்’ என்று

ஐயா என் தன் வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப

ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே!

*நூல்: திருவாசகம் (ஆசைப்பத்து #8)*

*பாடியவர்: மாணிக்கவாசகர்*
ravi said…
என் தலைவனே,

திருவையாற்றில் எழுந்தருளிய இறைவனே, சிவபெருமானே,

வீரக் கழல் அணிந்த உன்னுடைய திருவடிகளை

என் கையால் வணங்கவேண்டும்,

அப்படியே கட்டித் தழுவிக்
கொள்ளவேண்டும்,

அந்தப் பாதங்களை எந்நேரமும் என் தலைமீது சுமந்துகொண்டு

‘எம்பெருமானே, பெருமானே’ என்று வாய் நிறையச் சொல்லவேண்டும்,

அப்படியே தீயில் பட்ட மெழுகுபோல் உருகவேண்டும்

என்றெல்லாம் நான் ஆசைப்பட்டேன், அருள் செய்வாயோ தயாபரனே !💐💐💐
ravi said…
[29/01, 17:28] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ ஸர்வாதி
அச்யுத : |

*வ்ருஷாகபிரமேயாத்மா*
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[29/01, 17:29] Jayaraman Ravilumar: *102. வ்ருஷாகபயே நமஹ (Vrushaakapaye namaha)*
ravi said…
மகாபாரதத்தில் பதினேழாம் நாள் யுத்தம்.

அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் கடும் போர் நிலவிக் கொண்டிருந்த வேளையில்
கர்ணனின் தேர்ச் சக்கரம் சேற்றில் சிக்கிக் கொண்டது.


“நான் தேர்ச் சக்கரத்தை விடுவிக்கிறேன். அதன் பின் போரைத் தொடருவோம். அதுவரை என்னைத் தாக்காதே அர்ஜுனா!” என்றான் கர்ணன்.

ஆனால் கண்ணபிரான்,

“அர்ஜுனா! இது தான் சரியான சந்தர்ப்பம்.

நீ உன் கணைகளைத் தொடுத்து அவனைக் கொல்!” என்றார்.

பாணத்தைப் பிரயோகிக்கத் தயாரானான் அர்ஜுனன்.

அப்போது கர்ணன், “அர்ஜுனா! நில்! இது தர்மமாகுமா? கொஞ்சம் பொறு!” என்றான்.
ravi said…
ஸ்லோகம்:

अङ्कोलं निजबीजसन्तति:, अयस्कान्तोपलं सूचिका,

साध्वी नैजविभुं, लता क्षितिरुहं, सिन्धुः सरिद्वल्लभम् ।

प्राप्नोतीह यथा तथा, पशुपतेः पादारविन्दद्वयं,

चेतोवृत्तिरुपेत्य तिष्ठति सदा, सा भक्तिरित्युच्यते ॥

அங்கோலம்ʼ நிஜபீ³ஜஸந்ததிரயஸ்காந்தோபலம்ʼ

ஸூசிகா
ஸாத்⁴வீ நைஜவிபு⁴ம்ʼ

லதா க்ஷிதிருஹம்ʼ ஸிந்து⁴꞉ ஸரித்³வல்லப⁴ம் .

ப்ராப்னோதீஹ யதா² ததா² பஶுபதே꞉ பாதா³ரவிந்த³த்³வயம்ʼ
சேதோவ்ருʼத்திருபேத்ய திஷ்ட²தி ஸதா³ ஸா ப⁴க்திரித்யுச்யதே

இது சிவானந்தலஹரியில் 61வது ஸ்லோகம்,
பக்தினுடைய லக்ஷணம்.
ravi said…
இந்த ஸ்லோகத்தில் நிறைய, உதாரணங்கள் கொடுத்து எப்படி பயத்தில் இருப்பவன் பயத்தை போக்கி கொள்ள தவிப்பானோ, தன்னுடைய கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டும் என்று அந்த தவிப்பு desperate னு Englishல சொல்லுவா, அந்த மாதிரி, நம்பிக்கையே இல்லை, ஏதாவது பற்றுகோடாக ஏதாவது கிடைக்காதா?அப்படினு நினைக்கின்ற மாதிரி,

ஶம்புவினுடைய பாதங்களை பிடித்து கொள்ள வேண்டும்,

அப்படினு மனசு கிட்ட சொல்றார் .

மனசு கிட்ட சொல்றா மாதிரி, நம்மகிட்ட எல்லாம் சொல்றார். ஏன் என்றால் ஆச்சார்யாளுக்கு ஒரு பயமும் கிடையாது,
ravi said…
[29/01, 17:22] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 73 started on 6th nov

*பாடல் 24* ...💐💐💐
[29/01, 17:23] Jayaraman Ravilumar: *பாடல் 24 ... கூர்வேல் விழி*

(மங்கையர் மோகம் கெட, திருவருள் கூட)

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன்,

அருள் சேரவும் எண்ணுமதோ

சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர பூபதியே.
ravi said…
முருகனின் அருள் கிட்டவில்லையே என்று அவனைக் குறை
கூறுமுன்

அதைப் பெறுவதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா?
என்று நம்மை நாம் தற்சோதனை செய்து பார்க்கவேண்டும்.

அநுபூதி அடைந்த பின் பாடிய பாட்டா இது?

இல்லை நம்
குறைகளை எல்லாம் தமதாக ஏற்றுக்கொண்டு, நெஞ்சம்
அழுங்கி,

முருகனின் கருணையை வேண்டுகிறார்
அருணை முனிவர்.

மங்கையரின் வேல் விழி மயக்கத்தை மாற்றுவதற்கு முருகனின்
வேலைத் தியானிக்க வேண்டும்.

முழு மாயா சொரூபமான
கிரவுஞ்ச கிரியை அழித்த அந்த வேல், நமது செக மாயையையும்
பொடியாக்கி அழித்துவிடும்.

எல்லா மயக்கங்களிலும் கொடிதான
மாதர் மயக்கம் தீர இறைவனின் அருளே பக்க துணையாக நிற்கும்
என்பதை பல பெரியோர்களும் கூறியுள்ளார்கள்.🪷🪷🪷
ravi said…
" ஸ்ரீராமபிரான் ஸ்தாபித்த நவக்கிரகங்கள் "

இத்தனை மகிமை பெற்ற தேவிபட்டினத்துக்கு வந்த ராமபிரான்,
தான் செல்லும் காரியம் வெற்றிகரமாக முடிய உப்பூர் பிள்ளையார் பூஜைக்குப்
பிறகு நவக்கிரக வழிபாடு நடத்த இத்தலத்தைத் தேர்ந்தெடுத்தார்.

அதன்படியே தேவிபட்டினம் கடற்கரைக்குச் சென்ற ராமபிரான், அங்கு கடலுக்கு அருகில் தமது திருக்கரங்களால் மணலால் பிடித்து நவக்கிரகங்களை உருவாக்கி பூஜித்து வணங்கினார்.

பூஜையின் போது தாம் உருவாக்கிய நவக்கிரகங்களை கடலின் அலைகள் பொங்கி வந்து அழித்து விடக்கூடாது என்பதற்காகவே ராமபிரான் கடலரசனுக்குக் கட்டளையிட்டதாகவும், அதன்படியே அவ்விடத்தில் ராமனின் ஆணைக்கு கட்டுப்பட்டு கடலில் அந்தப் பகுதியில் அலையே இல்லாமல் போனது என்பது ஐதீகம்.

இந்தப் பிரசித்திபெற்ற தேவிபட்டினத்தின் நவக்கிரகங்கள் கடல் நீருக்குள் அமைந்திருக்கின்றன. நாம் நவக்கிரகங்களை வணங்க காலை நேரத்தில் சென்றால் சுமார் 50 அடி தூரம் செல்லும்போது கடல் நீர் கணுக்கால் அளவில்தான் இருக்கும். இருள்கவியத் தொடங்கியதும் நீர் மட்டம் உயர்ந்து விடும். கடல்நீரில் நின்று தான் வழிபட வேண்டி இருக்கும்.

முன்பெல்லாம் கரையில் இருந்து நவக்கிரகத்தலத்துக்குப் படகிலும் செல்லலாம். இப்போது பாலம் கட்டி விட்டார்கள். பாலத்தில் நடந்து சென்று நவக்கிரகங்கள் அமைந்திருக்கும் நீரில் இறங்கி வழிபட்டுத் திரும்பலாம்.

தேவிபட்டினம் சென்று நவக்கிரகங்களைச் சென்று பார்த்தாலே நமது முன்ஜென்ம பாவங்கள் முதல் எல்லாப் பாவங்களும் தொலைந்து போகும். நவக்கிரக தோஷங் கள் விலக இங்கு வழிபடலாம்.இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள், கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம். பக்தர்களின் அனைத்து வேண்டுதல் களையும் நிறைவேற்றி வைப்பவர்கள் இந்த நவக்கிரக நாயகர்கள்.

நவதானியங்கள் படைத்தல், நவக்கிரக வலம் வருதல், தானம் செய்தல், தோஷ பரிகாரம் செய்தல் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாகும். இங்கு வரும் பக்தர்கள் அனைத்தையும் முறை யாகச் செய்து பலனடைகிறார்கள்.

இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் மற்ற கோயில்களைப் போல் அர்ச்சகர், பூசாரி தயவு இல்லாமல் பக்தர்களே இங்குள்ள நவக்கிரகங்களைத் தொட்டு அவரவர் கைகளாலேயே
அபிஷேகம், அர்ச்சனை செய்து மகிழலாம் என்பது இத்தலத்தின் சிறப்பு விசேஷம்.

இங்குள்ள புனிதமான சக்கரத் தீர்த்தம் புராணத்தில் இடம்பெற்ற புகழ் வாய்ந்தது.
அன்னை பராசக்தி சக்கரத்தீர்த்தத்தை வற்றச் செய்து மகிஷனை வதம் செய்த பிறகு, மீண்டும் தீர்த்தத்தை அங்கே தோன்றச் செய்தாள். அதனாலேயே இந்த சக்கரத் தீர்த்தம் மேலும் புனிதமானது.

தவிரவும், தர்மதேவன் தவமிருந்து ஈஸ்வரனுக்கு உரிய ரிஷபவாகனமாக ஆனதால் தர்ம தீர்த்தமும், காலவரிஷி இங்கே தவமிருந்ததால் கால தீர்த்தமும் இதில் கலந்து இதன் தன்மையை மேலும் புனிதமடையச் செய்தது என்று தலபுராணம் சொல்கிறது. *எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும்
ravi said…
*┼────●🦅●────┼─*

_*இரவு சிந்தனை 🤔*_

💫 வாழ்க்கையில் எது கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை.

நம் மீது அன்பும்
அக்கறையும் கொண்ட
சில உறவுகள் மட்டும் கிடைத்தால் போதும்...

*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
30.01.2023:

"Gita Shloka (Chapter 1 and Shloka 21)

Sanskrit Version:

हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते।
सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत।।1.21।।

English Version:

hrshikesham tadaa vaakyam
idamaaha mahipate |
senayorubhayormadhye
raTham sThaapaya me achuyata ||

Shloka Meaning

After surveying the rival army, Arjuna took his bow and spoke these words.
Place my chariot in the middle of the two armies

Achyuta - One of the multiple names with which Krishna is known as.
Means one who has no fall or one who never slips down from the state of the Supreme Self.
It might also mean one who protects those who take refuge in him, from sinking in the ocean of samsara.

Jai Shri Krishna 🌺
ravi said…
*❖ 98 சமயாசார தத்பரா* =

சமயாச்சார வழக்க முறைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபாடு உடையவள்
ravi said…
அம்மா

வழி முறைகள் அனைத்தும் ஏற்பவளே

வரைமுறை இன்றி அருள்பவளே

எதிர்மறைகள் அனைத்தும் ஏரிப்பவளே

நதி வழி சென்றும் அறிய முடியாதவளே

தவளே நீ எங்கள் சங்கரனுக்கு மனைமங்களம்

அவர் தமக்கு தாயும் ஆயினாய் ...

அதனால் கடவுளர் யாவருக்கும் மேலை இறைவியும் ஆனாய் ...

துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாகில் தொண்டு செய்தே

விதி முறைகள் வீண் பழிகள் முன் வினைகள் செய்யும் பாவங்கள் எனை சுற்றி சுற்றி கும்மி அடிக்கும் வேளையிலே

உனை அன்றி வேறு உளராரோ சடுதியில் வந்து காக்க சகல பாவங்கள் தீர்க்க 👌👌👌💐💐💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

55 –
நின் எரி எரித்து எனை நீறு ஆக்கிடுமுன்
நின் அருள் மழை பொழி அருணாசலா (அ)
ravi said…
*_அருணாசலா_*

வானமாய் வெட்ட வெளி எங்கும் பரந்து நின்றாய் தில்லையிலே

நீராய் நிரம்பி வழிந்தாய் திருச்சியிலே

நெருப்பாய் உயர்ந்து நின்றாய் திருவண்ணாமலையிலே

காற்றாய் கருணை பொழிகின்றாய் காலஹஸ்தியிலே

நிலமாய் நீண்டு நின்றாய் ஏகாம்பரமாய் காஞ்சியிலே

என்னுள் புகுந்த ஐம்பெரும் கள்வரை அடக்கி ஒழித்தாய் ஐம்பூதங்களாய் தரணியிலே

ஐந்தெழுத்து சொல்வோர்க்கு *ஐயம்* இல்லை *ஜயம்* மட்டுமே என்றே உரைத்தாய் திருவாரூரிலே

*ஐயனே* உன் ஞான ஒளி என்னை புனித மாக்கிவிட்டதே *அருணாசலா*

அதை உன் கருணை மழை நெய்போல் வளர்த்து விடும் அதிசயம் என்ன *அருணாசலா* ? 🙏🙏🙏🙏🙏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 70*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
शम्पालतासवर्णं सम्पादयितुं भवज्वरचिकित्साम् ।
लिम्पामि मनसि किंचन कम्पातटरोहि सिद्धभैषज्यम् ॥ ५३॥

53. Sampa latha savarnam sampaadayithum bhava jwara chikithsam,

Limpaami manasi kinchana kampathata rohi sidha baishajyam.

ஶம்பாலதாஸவர்ணம் ஸம்பாதயிதும் பவஜ்வரசிகித்ஸாம் |

லிம்பாமி மனஸி கிம்சன கம்பாதடரோஹி ஸித்தபைஷஜ்யம் ||53||🙏🙏🙏
ravi said…
ஸம்ஸார துக்கம் ஒரு பெரிய வியாதி,

அதற்கு ஒரே மருந்து, ஒளஷதம், அம்பாள்

காமாட்சியின் திருப்பாதங்கள்.

மின்னல் கொடி போல் ஒளி வீசும் கம்பெனி தீரத்தில் அவதரித்த அந்த அம்பாள் எனும் திவ்ய மருந்தை எப்படி உபயோகப்படுகிறேன் தெரியுமா?

கடும் ஜுரம் வந்தால் எப்படி மருந்தை உடம்பெல்லாம் பூசிக்கொள்வேனோ அப்படி அம்பாள் திருநாமத்தை உருவத்தை மனது நிறைய பூசிக்கொள்வேன்.

அப்புறம் என்ன? ஸம்ஸார தாபம், வியாதி பறந்து விடாதா?🙌🙌🙌
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 472* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*198 समानाधिकवर्जिता - ஸமாநாதிக வர்ஜிதா -*

கவி காளிதாசன் சொல்கிறான் .

அம்மா உனக்கு சமமாக எதுவும் இல்லை ..

உனக்கு மேலும் எதுவும் இல்லை .

யாரையும் ஒப்பிட முடியாத உன்னை

கர்வம் கொண்டவள் என்றே உபநிஷதங்கள் சொன்னால் என்ன சொல்வது ?

ஒப்பிட்டு பேச யாராவது ஒருவர் இருந்தால் தான் கர்வம் எட்டிப்பார்க்க வாய்ப்பு உள்ளது ...

கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால்

உபநிஷதங்கள் சொல்வது தவறில்லை என்று புரிகிறது தாயே ...

உன்னை பக்தியுடன் வணங்க கோடி பிள்ளைகளை பெற்றுள்ளாய் ...

அதனால் கர்வம் கொண்டனையோ ?

எந்த தாய்க்குத் தான் தன் மக்கள் ஒழுக்க மானவர்கள் என்று நினைக்கும் போது கர்வம் எழாது ?? 💐💐💐
ravi said…
யாவையும் யாவரும் தானாய்,

அவரவர் சமயம் தோறும்

தோய்விலன்; புலன் ஐந்துக்கும்

சொலப்படான், உணர்வின் மூர்த்தி;

ஆவிசேர் உயிரின் உள்ளால்

ஆதுமோர் பற்றிலாத

பாவனை அதனைக் கூடில்,

அவனையுங் கூடலாமே.

------நம்மாழ்வார் 💐💐💐
ravi said…
எல்லாமும் அவன்தான் எல்லாரும் அவன் தான்

அவரவர் மதங்களால் பாதிப்பு இல்லாதவன்

(தோய்விலன்)

ஐந்து புலன்களுக்கும் சொல்ல முடியாமல் உணர்வின் வடிவமாய்

உயிரின் உள்ளே போய் யோசித்தால்,

பற்று எதுவும் இல்லாத ஒரு பாவனையை எட்டிப் பிடிக்க முடிந்தால்

அவனைத் தொட்டுப் பார்க்க முடியும்.🙏🙏🙏
ravi said…
பாதாரவிந்த சதகம் !

76.கதம் வாசாலோபி ப்ரகட மணி மஞ்ஜீர நிநதை:
ஸதை வானந்தார்த்ரான் விரசயதி வாசம்யம ஐனான் ப்ரக்ருத்யா தே சோ'ணச்ச
விரபிச காமாக்ஷி சரணோ
மனீஷா நைர்மல்யம் கதம் இவ ந்ருணாம் மாம்ஸலயதே

காமாக்ஷி / உன் சரணம், மணிச்சிலம்புகளில் தெளிவாகச் செவிக்குப் புலப்படுகிற இனிய ஒலிகளால் வாயாடியாகி, வாயைக்கட்டி மௌனமாக இருப்பவரை எப்போதும் ஆனந்தத்தில் நனைந்தவர்களாக ஆக்குகிறது. இயல்பால் செவ்வொளி கொண்டிருந்தாலும், அறிவின் தெளிவைப் புஷ்டி செய்கிறது. இது எப்படி?
அரட்டையடிக்கிற சரணம் மௌனியின் உள்ளத்திற்கு
இனியதாகிறது, சிவப்பு தெளிவற்ற நிலையின் தோற்றம். உண்மை நிலைக்கு மாறுபட்ட காட்சியை (விக்ஷேபத்தை) தரும். தெள்ளத்தெளிந்த அறிவை அது தருகிறது. இது எப்படி நேரும்?

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺" 🌺 *திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்ட கோயில் பற்றி - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺சோமுகாசுரன் வேதங்களை
திருடிச்சென்று, கடலுக்கடியில்
ஒளிந்துகொண்டபோது, திருமால்
பெரிய சுறா மீனாக உருவம்
தாங்கி, கடலுக்கடியில் சென்று,
அவனை சம்ஹாரம் செய்து,
வேதங்களை மீட்டு பிரம்மனிடம்
தந்தார்.

🌺பிறகு மீன் உருவத்துடன்
கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில்
கடலை கலக்கி விளையாடினார்.
இந்த செயலால் உலகம்
துன்பமடைந்தது.

🌺அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை உணர்த்தினார்.
திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன்
பல காலம் சிவபூஜை செய்ததாக
வரலாறு கூறுகிறது.

🌺காஞ்சிபுரம்
ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன்
உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள
தூணில் பெரிய கொக்கு வடிவில்
சிவபெருமானும், அவருடைய
அலகில் சிக்கிக்கொண்டு மீன்
உருவத்தில் வழிபடும் பெருமாளையும்
காண்கிறோம்.

🌺திருமால் மீனாக அவதாரம் எடுத்து
சிவனை வழிபட்டதால் இக்கோயில்
இறைவன் மச்சேஸ்வரர்
எனப்படுகிறார்.

🌺கும்பகோணம் அருகிலுள்ள
தேவராயன்பேட்டை என்ற ஸ்தலம்
முன்னாளில் சேலூர் (சேல் - மீன்)
என்று அழைக்கப்பட்டது.

🌺அங்குள்ள சிவபெருமானையும்
மீன் வடிவ திருமால் வணங்கியதால்,
இறைவன் மச்சேஸ்வரர் என்று
அழைக்கப்படுகிறார்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
அந்த பகவானோட அனுக்ரஹம் எப்பவும் நமக்கு தயாரா இருக்கு.

நாம இந்த படிப்பு, உடம்பு, உறவு, ஊரு, பேரு, பணம் இதிலெல்லாம் ரொம்ப நம்பிக்கை வெச்சு, அந்த அனுக்ரஹத்தை நாம தான் அஹங்காரம்ங்கிற குடையைப் பிடிச்சு தடுக்கறோம்.

மழையாட்டம் அந்த அனுக்ரஹம் கொட்டிண்டிருக்கு.

அதை நான் அனுபவிக்கணும்னா அதுக்கு பகவானோட presenceஐயும், அவரோட அனுக்ரஹத்தையும் நாம feel பண்ணணும்னா, அவரை உணரனும்.

அதுக்கு மஹான்கள் எப்பவும் சௌகரியமா பண்ணக் கூடிய நாம ஜபம் என்கிற வழியை சொல்லித் தரா.

மத்ததுல எல்லாம் ரொம்ப addict ஆகாதே.

பணம் சம்பாதிக்கறதுலயோ, படிப்புலயோ, உறவு மேலேயோ, பேர்லயோ, உடம்பு பார்த்துக்கறதுலயோ அதை moderateஆ பண்ணு.

இந்த பகவானோட பக்தியை அளவுக் கடந்து பண்ணு. இதுல moderation வேண்டாம்😌😌😌
ravi said…
🌹🌺" 🌺 Temple patr where Thirumal took incarnation as a fish and worshiped Shiva. - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Somukasura Vedas
Stealth, under the sea
While hiding, Thirumal
Figured as a large shark
bear, go under the sea,
samahara him,
Bring back the Vedas to Brahman
gave

🌺Then with fish figure
Happy to go under the sea
He stirred the sea and played.
The world by this action
Distressed.

🌺Then Lord Shiva took the shape of a big crane and made Tirumal realize his mistake.
Tirumal with Matsya (fish) figure
That he performed Shiva Puja for many times
History tells.

Kanchipuram
In front of Ekambareswarar temple
in the 16-foot hall
In the shape of a large beak on the pillar
Lord Shiva is also his
Fish caught in the unit
Perumal is also worshiped in the image
We see

🌺 Thirumal took incarnation as a fish
This temple is for worshiping Lord Shiva
Lord Macheswarar
is called

🌺 Near Kumbakonam
A place called Devarayanpet
Formerly Selur (sale - fish).
was called

Lord Shiva is also there
By worshiping the fish-shaped Thirumal,
That Lord Macheswarar
is called


🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
https://chat.whatsapp.com/FRi3ygWIpMaCCiEHYkdnxH

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீராஜமாதங்கி நவராத்திரி சிறப்பு பதிவுகள் :*

லோக மாதா ஸ்ரீ ராஜமாதங்கி என்னும் ஸ்ரீ ஷ்யாமளா தேவி ஸ்ரீ வித்யா உபாஸனையில் பிரதானமாக விளங்குபவள். ஞானம், வித்தை மற்றும் கலைகளின் அதிபதி. கேட்போருக்கு கேட்டவற்றை அள்ளி தரும் கற்பக விருக்ஷம்.

ஸ்ரீ லலிதாம்பிகையின் வாசஸ்தலமாகிய ஸ்ரீ நகரத்தில், பலவிதமான கோட்டைகள் அமைந்துள்ளன. அவற்றுள், தங்க, வெள்ளிக் கோட்டைகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள கதம்பவனத்தில், (ஸ்ரீ சக்ரத்தில், இந்த இடம், த்ரிகோணம், பஞ்சகோணம், அஷ்டதளபத்மம், ஷோடச தள பத்மம், உள் பத்து கோணம், வெளிப்பத்து கோணம், சதுரம் என்ற ஏழு ஆவரணச் சக்கரங்கள் கூடும் இடமாக உள்ளது) தங்கத்தினாலான படிகள் உள்ள, மாணிக்கத்தால் ஆன மண்டபங்கள் உள்ள விசாலமான ஆலயத்தில், ரத்தினம் இழைத்த அழகான சிம்மாசனத்தில், ப்ரஹ்ம வித்தையின் 98 அக்ஷரங்களின் அதிபதியாக விளங்கும் ஸ்ரீ சியாமளா தேவி வீற்றிருந்தருளுகிறாள்.

கஸ்தூரி திலகம் அணிந்து, மூன்று கண்களுடனும், தாம்பூலத்தால் சிவந்த திருவாயில் தவழும் புன்சிரிப்புடனும், சந்திரகலை சிரசில் மின்ன, கதம்ப மாலை துளசி மாலை முதலியன அணிந்து, கிளி, தாமரை மலர் முதலியவற்றைத் தாங்கிய திருக்கரங்களுடன், வீணா கானம் செய்து கொண்டு, சிருங்கார ரஸம் ததும்பும் கருணா கடாக்ஷத்துடன், 'ஸங்கீத மாத்ருகை' எனப் போற்றப்படும் மந்திரிணீ தேவியாகிய ராஜ மாதங்கி தேவி தன்னைத் தொழுவோருக்கு அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறாள்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
5000 ஆண்டுகளுக்கு முன் வியாசர் மகாபாரதத்தில் எழுதிய விஷ்ணு சகஸ்ரநாமத்தில், அவர் சமஸ்கிருதத்தில் அருளியுள்ள விஷ்ணு திருநாமங்களைத்தான்

திருவள்ளுவர், திருக்குறள் முழுவதும் இறைவனுடைய பெயர்களாக தமிழில் எழுதியுள்ளார்

💥குறள் 2. *வாலறிவன்* 👉

விஷ்ணு சகஸ்ரநாமம்

821. *சர்வக்ஞ*

*பொருள்* : முற்றும் உணர்ந்தவன்

💥குறள் 3. *மலர்மிசை ஏகினான்* 👉

விஷ்ணு சகஸ்ரநாமம் 40. *புஷ்கரக்ஷா*

*பொருள்* : மலர் மேல் இருப்பவன்

💥குறள் 6. *ஐந்தவித்தான்* .

👉விஷ்ணு சகஸ்ரநாமம் 47. *ஹ்ருஷிகேசன்*

*பொருள்* : புலன்களை வென்றவன்

💥குறள் 7. *தனக்குவமை இல்லாதான்* 👉

விஷ்ணு சகஸ்ரநாமம் 357 *அதுலஹ*

*பொருள்* : ஒப்பில்லாதவன் 💥

குறள் 9. *எண்குணத்தான்*

👉விஷ்ணு சகஸ்ரநாமம் 843. *குணப்ருத்*

*பொருள்* : எண்ணும் நற்குணங்களுடையவன்

💥குறள் 610. *அடிஅளந்தான்* 👉

விஷ்ணு சகஸ்ரநாமம் 79. *விக்ரமஹ*

*பொருள்* : பாதத்தால் உலகளந்தவன்

💥குறள் 1103. *தாமரைக்கண்ணான்*

👉விஷ்ணு சகஸ்ரநாமம் 349.

*அரவிந்தாக்ஷா*

*பொருள்* : தாமரை போன்ற கண்களை உடையவன்🪷🪷👀
ravi said…
[30/01, 17:41] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 74 started on 6th nov

*பாடல் 25* ...💐💐💐
[30/01, 17:42] Jayaraman Ravilumar: *பாடல் 25 ... மெய்யே என*

(வினை மிகுந்த வாழ்வை நீக்கு முருகா)

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?

கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.🪷
ravi said…
திருக்கரங்கள், வேல், திருவடிகள் என மேனி முழுவதும் சிவந்தவனே.

மயில் மேல் வரும் உலக ரட்சகனே.

வினைப் பயனால் ஏற்பட்ட இவ்
உலக வாழ்வை சாஸ்வதம் என்று எண்ணி, அதில் நான் களிப்புடன்
திரிந்து உழல்வது என்ன பரிதாபம்.😥
ravi said…
[30/01, 17:38] Jayaraman Ravilumar: ஸ்லோகம்:

अङ्कोलं निजबीजसन्तति:, अयस्कान्तोपलं सूचिका,

साध्वी नैजविभुं, लता क्षितिरुहं, सिन्धुः सरिद्वल्लभम् ।

प्राप्नोतीह यथा तथा, पशुपतेः पादारविन्दद्वयं,

चेतोवृत्तिरुपेत्य तिष्ठति सदा, सा भक्तिरित्युच्यते ॥

அங்கோலம்ʼ நிஜபீ³ஜஸந்ததிரயஸ்காந்தோபலம்ʼ

ஸூசிகா
ஸாத்⁴வீ நைஜவிபு⁴ம்ʼ

லதா க்ஷிதிருஹம்ʼ ஸிந்து⁴꞉ ஸரித்³வல்லப⁴ம் .

ப்ராப்னோதீஹ யதா² ததா² பஶுபதே꞉ பாதா³ரவிந்த³த்³வயம்ʼ
சேதோவ்ருʼத்திருபேத்ய திஷ்ட²தி ஸதா³ ஸா ப⁴க்திரித்யுச்யதே

இது சிவானந்தலஹரியில் 61வது ஸ்லோகம்,
பக்தினுடைய லக்ஷணம்.
[30/01, 17:40] Jayaraman Ravilumar: शिव शिव पश्यन्ति समं, श्रीकामाक्षीकटाक्षिता: पुरुषा: ।
विपिनं भवनं, अमित्रं मित्रं, लोष्टं च युवतिबिम्बोष्ठम् ॥

ஶிவ ஶிவ பஶ்யந்தி ஸமம், ஶ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: ।
விபிநம் ப⁴வநம், அமித்ரம் மித்ரம், லோஷ்டம் ச யுவதிபி³ம்போ³ஷ்ட²ம் ॥

அப்படினு மூக பஞ்ச சதியில் சொன்னா மாதிரி,

மஹான்கள் காமாக்ஷி கடாக்ஷத்தினால் கோபம், பயம், எல்லாத்திலிருந்து விடுபட்டவர்கள். ஆனால் நம்மள மாதிரி இருப்பவர்களுக்காக, நீ ஒவ்வொன்றுக்கும் பயப்படறயே, அது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உபாயத்தை தேடுகிறாய். ஸர்வ பயாபகம், எல்லா பயத்தையும் போக்க கூடியது, பரமேஸ்வரனுடைய பாத தாமரை, அதை நீ அடைந்தால், உனக்கு ஒரு பயமும் இருக்காது. மேலான சுகம் கிடைக்கும். அப்படினு சொல்லி கொடுக்கிறார். வள்ளுவர் கூட,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
அப்படினு சொல்றார்.

அந்த மாதிரி, கவலைகள், பயங்கள் இதெல்லாம் போறது என்பது, அது தான் உத்தம பக்தி. Definition of bhaktiயே அதுதான். அந்த உத்தம பக்தி ஏற்பட்டால், சார் சொல்லுவார்.
‘ வாழ்வும், தாழ்வும், சாவும் அவன் அருள் என்பான் தெய்வ சாது.’ அப்படினு.

அந்த மாதிரி உத்தம பக்தியை ஆச்சார்யாள் சொல்றார்.
ravi said…
[30/01, 17:34] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ ஸர்வாதி
அச்யுத : |

*வ்ருஷாகபிரமேயாத்மா*
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[30/01, 17:34] Jayaraman Ravilumar: *102. வ்ருஷாகபயே நமஹ (Vrushaakapaye namaha)*
ravi said…
கண்ணன் கர்ணனைப் பார்த்து, “கர்ணா! உனக்குக் கூட தர்மம் என்ற சொல் இருப்பது தெரியுமா?

தர்மத்தைப் பற்றி நீ இப்போது பேசுகிறாயே!

சிறுவயதில் நீங்கள் எல்லோரும் சேர்ந்து பீமனுக்கு விஷம் வைத்த போது
நீ கூறும் தர்மம் எங்கே போனது?

அரக்கு மாளிகையில் பாண்டவர்களை எரிக்கத் திட்டமிட்ட போது நீ கூறும் தர்மம் எங்கே போனது?

பொய்ச்சூதில் பாண்டவர்களை வீழ்த்தியபோது உன் தர்மம் எங்கே போனது?

அபலைப் பெண்ணான திரௌபதியைச் சபை நடுவே அவமானப்படுத்திய போது இந்தத் தர்மத்தைப் பற்றி நீ பேசினாயா?

இதிலெல்லாம் உனக்குச் சம்பந்தம் இல்லை என்று கூறித் தப்பிக்கப் பார்க்காதே!

துரியோதனன் செய்த ஒவ்வொரு தவறின் போதும் நீயும் உடனிருந்தாய்!

பதின்மூன்று வருடங்கள் தண்டனை முடிந்த பிறகும்
பாண்டவர்களுக்கு ராஜ்ஜியத்தைத் தர மறுத்தீர்களே!

அப்போது தர்மம் எங்கே போனது?
ravi said…
*┼────●🦅●────┼─*

_*இரவு சிந்தனை 🤔*_

💫 சில நேரங்களில்
"வாய்"மூடல்"கூட
நம்மை பெரும்
இன்னல்களிலிருந்து
காப்பாற்றி விடும்...

தெரிந்ததை பேசு...
தெளிவாக பேசு...
தெரியவில்லையெனில்
அமைதி காத்திடு...!✍️

*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
🌹🌺 "A simple story explaining that the purpose of human birth is not only to gain material.. but to follow Sri Krishnan Thiruvadi 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹 "When Sage Vishwamitra was engrossed in yoga with his eyes closed, he heard the sound of Menakai's handshake and his transcendental meditation was interrupted.

🌺 Then, Vishwamitra got together with Menakai and gave birth to the Egeli named Sakunthalai which is admired all over the world.

🌺The conclusion is that no one can protect them from misogyny, even if they are sages or gods in the sky.

🌺 However, an exceptional devotee who is attracted by Lord Krishna does not get caught in the lure of the allure of the goddess.

🌺 If one is once attracted by Kṛṣṇa, to him the illusion of this world is an inferior matter.

🌺The purpose of this human birth is not only to earn material

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
Thirumanikoodam Varatharaja Perumal.

1288.
தூம்பு உடைப் பனைக் கை வேழம்* துயர் கெடுத்தருளி* மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்* கடு மழை காத்த எந்தை*
பூம் புனல் பொன்னி முற்றும்* புகுந்து பொன் வரன்ற* எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.🙏🙏🙏
ravi said…
[31/01, 07:32] +91 96209 96097: *ஸுப்தா* ப்ராஜ்ஞாத்மிகா துர்யா ஸர்வாவஸ்தா²விவர்ஜிதா
நிம்மதியான நித்திரையை அளித்து புத்துணர்ச்சி அளிப்பவள் 🙏
[31/01, 07:32] +91 96209 96097: *ஸ்கந்ததராய நமஹ*🙏🙏
முருகரை தாங்கி நிற்பவர்
ravi said…
🌹🌺" *மனித பிறவியின் நோக்கம் பொருள் ஈட்டுவது மட்டும் அல்ல.. ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி பற்றுவதே ஆகும் என்பதை ...... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹"விசுவாமித்திர முனிவர் கண்களைமூடிய நிலையில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது மேனகையின் கைவளை ஓசை கேட்டு அவரது ஆழ்நிலை தியானம் கலைந்தது.

🌺பிறகென்ன, விசுவாமித்திரர் மேனகையோடு கூடி உலகமெங்கும் போற்றப்படும் சகுந்தலை என்ற பெயர் கொண்ட எழலியினை ஈன்றெடுத்தார்.

🌺அவர்கள் மாமுனிவர்களாயிருந்தாலும், வானிலுள்ள தேவர்களாயிருந்தாலும் பெண்ணாசையிலிருந்து அவர்களை யாரும் காக்க முடியாது என்பதே இதன் முடிவாகும்.

🌺ஆனாலும், ஒருவிதிவிலக்கு பகவான் கிருஷ்ணரால் கவரப்பட்ட ஓர் பக்தன் மங்கையின் கவர்ச்சி என்னும் தூண்டிலில் மாட்டிக் கொள்வதில்லை.

🌺ஒருவன் ஒரே ஒருமுறை கிருஷ்ணரால் கவரப்பட்டான் என்றால் அவனுக்கு இவ்வுலகின் மாயை என்பது ஒரு கீழான விஷயம் ஆகும் "

🌺இந்த மனித பிறவியின் நோக்கம் பொருள் ஈட்டுவது மட்டும் அல்ல.. ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி பற்றுவதே ஆகும்

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை..*

*_✍️ 31, Tuesday, Jan., 2023_*

*🧿'' போட்டி உலகில்''..*


*♻️வெற்றி மீது நமக்கு மிகப் பெரிய விருப்பம் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றியையே பிரதானமாகக் கொண்டு செயல்படுகிறோம்.*

*போட்டி நிறைந்த உலகில் இதைத் தவிர்க்க முடியாது தான்.*

*♻️சூறாவளியாக சுழன்று ஓடும் நீரோட்டம் போன்ற நம்முடைய இந்த வாழ்க்கைப் பயணத்தில் மற்றவர்களை விட நாம் ஓரிரு படிகளாவது கூடுதலாக முன்னேற வேண்டியது கண்டிப்பாகத் தேவையாகும்*

*♻️ஒரு ஜப்பானியரும் ஒரு அமெரிக்கரும் காட்டிற்குச் சென்று வேட்டையாட விரும்பினார்கள் , அதற்காக அவ்விருவரும் அருகிலுள்ள அடர்ந்த காட்டிற்குள் சென்றனர்*

*♻️அந்த அடர்ந்த காட்டில் அவர்களிருவரும் சிறுசிறு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொண்டே சென்று கொண்டிருந்த போது வேட்டையாடுவதற்காக வைத்திருந்த அவர்களுடைய துப்பாக்கிகளிலிருந்த தோட்டாக்கள் காலியாகி விட்டதை உணர்ந்தார்கள்.*

*♻️அந்த சூழலில் திடீரென அவர்களுக்கு அருகில் சிங்கம் ஒன்று கர்ஜிக்கும் ஒலியைக் கேட்டனர். அதனைத் தொடர்ந்து இந்நிலையில் தங்களால் அந்த சிங்கத்தை எதிர் கொள்ள இயலாது என தெரிந்து கொண்டு உடன் இருவரும் அந்த அடர்ந்த காட்டினை விட்டு வெளியேறுவதற்காக வேகமாக ஓட ஆரம்பித்தனர்.*

*♻️ஆனால் அவ்விருவரில் ஜப்பானியர் மட்டும் தன் ஓட்டத்தை நிறுத்தி அவரது காலில் அணிந்திருந்த முழுக்காலணிகளை கழற்றி கைகளில் எடுத்துக் கொண்டார்*

*♻️இதனைக் கண்ட அமெரிக்கர், "நீங்கள் என்ன இப்போது செய்கிறீர்கள்? சீக்கிரம் வாருங்கள்... நாமிருவரும்.. இந்த காட்டினை விட்டு வெளியேறுவதற்காக நம்முடைய மகிழ்வுந்து ( கார் ) இருக்குமிடத்திற்கு விரைவாக ஓடி விடுவோம் "எனக் கூறினார்*

*♻️அதற்கு ஜப்பானியர், இந்த முழுக்காலணிகளானவை வேகமாக ஓடுவதற்கு இடைஞ்சலாக இருக்கின்றன அதனால் இந்த முழுக்காலணிகளை கழற்றி விட்டேன்.*

*♻️இப்போது பாருங்கள் நம்மில் யார் முதலில் மகிழ்வு உந்திற்கு செல்கின்றோம் என்பதை." எனக்கூறி கொண்டு மகிழ்வுந்து இருக்கும் இடம் நோக்கி பறந்தோடி சென்றார்.*

*♻️நமது இலக்கை நாம் அடைந்து விடுவோம் என்று எப்போதும் நேர்மறையாகச் சிந்திக்கும் நபர்கள், நிச்சயம் அந்த இலக்கை அடைந்து விடுவர்.*

*♻️ஏனெனில், அவர்களது நேர்மறை எண்ணம் அவர்களுக்கு அளிக்கும் உத்வேகமும், ஆற்றலும், இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும். நம்மால் முடியாது என்ற எதிர்மறையாக எண்ணும் போது அந்த எண்ணமே நம்மை வீழ்த்தி விடும்.*

*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய வாழ்க்கைப் பயணமானது மிகவும் கடுமையானது,*

*⚽வெற்றி என்பது குருட்டு நம்பிக்கையால் அமையாது. அது கடும் உழைப்பால் தான் சாத்தியப்படும். வெற்றி பெற வேண்டும் என்னும் தாகம் மனத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்..*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝

https://srimahavishnuinfo.blogspot.com
ravi said…

பழனிக் கடவுள் துணை -31.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-45

மூலம்:

மின்னற் கொடியனைய வேலாயு தக்குகனை
வன்னக் கலாப மயிலானைப் – பொன்னகரில்
தேவர்குடி யேற்றும் திருப்பழனிச் செவ்வேளை
ஆவலுற்றுப் போற்றலெளி தா (45).

பதப்பிரிவு:

மின்னல் கொடி அனைய வேலாயுதக் குகனை
வன்னக் கலாப மயிலானைப் – பொன் நகரில்
தேவர் குடியேற்றும் திருப்பழனிச் செவ்வேளை
ஆவல் உற்றுப் போற்றல் எளிதா? (45).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

வன்னம் - வண்ணம். இரு சொற்களுக்கும் நிறம், அழகு எனும் பொருள் உண்டு.

மின்னல் கொடி ஒளிர்ந்து, சட்டென்று மறையும். அப்படி சட்டென்று மாயும் மாய மின்னல் போல் அல்லாமல், எப்பொழுதும் மின்னும் மின்னொளி என ஒளிரும் அதிசய வேலாயுதக் குகனை, கண் கவர் நிறம் மற்றும் சொல்லொண்ணாதப் பேரழகு உடைய கலாபமுடைய மயிலானை, தேவர்களைக் காத்து, அவர்களின், பொன் நகரில் குடியேற்றும் திருப்பழனிச் செவ்வேளை, ஆவல் உற்றுப் போற்றல் எளிதா? எளிது அல்ல.

சீர், தளை தெரிந்தாலும், ஆவல் இருந்தாலும், பழனிவேள் அருள் காவல் இல்லை என்றால், யாரும் அவனைப் பாட முடியாது என்று உணர்க! தெளிக!

சர்வ பராக்கிரமம் பொருந்திய எம்பெருமான் யார் மொழிக்கும், ஆவலுக்கும் வசப்பட மாட்டான். அவன் அகப்படுவது, அவன் பொறுக்கி எடுத்த நமர் கூட்டத்தினரின் கள்ளமற்ற, உண்மையான அன்புக்கு ஒன்றே.

முருகா சரணம்!

ஒன்றும் தெரியாதவன் என்று என்னைத் துன்புறுத்த எண்ணும் துயரமே! நான் ஒன்றும் தெரியாதவன் தான்- பழனிப்பெருமாளைத் தவிர ஒன்றையுமே தெரியாதவன் என்று உணர்! இனியாவது, அள்ளி அள்ளித் தரும் வள்ளிக் கேள்வன், பழனிவள்ளல் அடிமை, என்னை, விட்டுத் தள்ளித் தள்ளி நில்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
[30/01, 17:38] Jayaraman Ravilumar: ஸ்லோகம்:

अङ्कोलं निजबीजसन्तति:, अयस्कान्तोपलं सूचिका,

साध्वी नैजविभुं, लता क्षितिरुहं, सिन्धुः सरिद्वल्लभम् ।

प्राप्नोतीह यथा तथा, पशुपतेः पादारविन्दद्वयं,

चेतोवृत्तिरुपेत्य तिष्ठति सदा, सा भक्तिरित्युच्यते ॥

அங்கோலம்ʼ நிஜபீ³ஜஸந்ததிரயஸ்காந்தோபலம்ʼ

ஸூசிகா
ஸாத்⁴வீ நைஜவிபு⁴ம்ʼ

லதா க்ஷிதிருஹம்ʼ ஸிந்து⁴꞉ ஸரித்³வல்லப⁴ம் .

ப்ராப்னோதீஹ யதா² ததா² பஶுபதே꞉ பாதா³ரவிந்த³த்³வயம்ʼ
சேதோவ்ருʼத்திருபேத்ய திஷ்ட²தி ஸதா³ ஸா ப⁴க்திரித்யுச்யதே

இது சிவானந்தலஹரியில் 61வது ஸ்லோகம்,
பக்தினுடைய லக்ஷணம்.
[30/01, 17:40] Jayaraman Ravilumar: शिव शिव पश्यन्ति समं, श्रीकामाक्षीकटाक्षिता: पुरुषा: ।
विपिनं भवनं, अमित्रं मित्रं, लोष्टं च युवतिबिम्बोष्ठम् ॥

ஶிவ ஶிவ பஶ்யந்தி ஸமம், ஶ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: ।
விபிநம் ப⁴வநம், அமித்ரம் மித்ரம், லோஷ்டம் ச யுவதிபி³ம்போ³ஷ்ட²ம் ॥

அப்படினு மூக பஞ்ச சதியில் சொன்னா மாதிரி,

மஹான்கள் காமாக்ஷி கடாக்ஷத்தினால் கோபம், பயம், எல்லாத்திலிருந்து விடுபட்டவர்கள். ஆனால் நம்மள மாதிரி இருப்பவர்களுக்காக, நீ ஒவ்வொன்றுக்கும் பயப்படறயே, அது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உபாயத்தை தேடுகிறாய். ஸர்வ பயாபகம், எல்லா பயத்தையும் போக்க கூடியது, பரமேஸ்வரனுடைய பாத தாமரை, அதை நீ அடைந்தால், உனக்கு ஒரு பயமும் இருக்காது. மேலான சுகம் கிடைக்கும். அப்படினு சொல்லி கொடுக்கிறார். வள்ளுவர் கூட,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
அப்படினு சொல்றார்.

அந்த மாதிரி, கவலைகள், பயங்கள் இதெல்லாம் போறது என்பது, அது தான் உத்தம பக்தி. Definition of bhaktiயே அதுதான். அந்த உத்தம பக்தி ஏற்பட்டால், சார் சொல்லுவார்.
‘ வாழ்வும், தாழ்வும், சாவும் அவன் அருள் என்பான் தெய்வ சாது.’ அப்படினு.

அந்த மாதிரி உத்தம பக்தியை ஆச்சார்யாள் சொல்றார்.
ravi said…
*சங்க இலக்கியம்*

*மூதுரை – ஔவையார் பாடல்கள்*

*கடவுள் வாழ்த்து*

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

*பொருள்:*

பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது
பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய இலக்குமியின் அன்பும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 473* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*199 सर्वशक्तिमयी - ஸர்வ சக்திமயீ.*

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டினால் போல் அம்பாள் சர்வ சக்தி உருவானவள்.

தச மஹா வித்யா சக்தி உடையவள்.

சக்தி என்பது இங்கு அம்பாளின் தலைமையில் உள்ள இதர உப தெய்வங்களையும் (வாராஹி, அஸ்வாரூடா போன்ற மந்த்ரிணீ சக்திகள் )குறிக்கும்.
ravi said…
முகுந்தமாலா பூர்த்தி 45, 46 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
அயாச்யம் அக்ரேயம் அயாதயாமம் அபாச்யம் அக்ஷய்யம் அதுர்பரம் மே |

அஸ்த்யேவ பாதேயமித:

பிரயாணே ஸ்ரீகிருஷ்ண

நாமாம்ருத பாகதேயம் ||
ravi said…
அந்த பகவானோட அனுக்ரஹம் எப்பவும் நமக்கு தயாரா இருக்கு.

நாம இந்த படிப்பு, உடம்பு, உறவு, ஊரு, பேரு, பணம் இதிலெல்லாம் ரொம்ப நம்பிக்கை வெச்சு, அந்த அனுக்ரஹத்தை நாம தான் அஹங்காரம்ங்கிற குடையைப் பிடிச்சு தடுக்கறோம்.

மழையாட்டம் அந்த அனுக்ரஹம் கொட்டிண்டிருக்கு.

அதை நான் அனுபவிக்கணும்னா அதுக்கு பகவானோட presenceஐயும், அவரோட அனுக்ரஹத்தையும் நாம feel பண்ணணும்னா, அவரை உணரனும்.

அதுக்கு மஹான்கள் எப்பவும் சௌகரியமா பண்ணக் கூடிய நாம ஜபம் என்கிற வழியை சொல்லித் தரா.

மத்ததுல எல்லாம் ரொம்ப addict ஆகாதே.

பணம் சம்பாதிக்கறதுலயோ, படிப்புலயோ, உறவு மேலேயோ, பேர்லயோ, உடம்பு பார்த்துக்கறதுலயோ அதை moderateஆ பண்ணு. இந்த பகவானோட பக்தியை அளவுக் கடந்து பண்ணு.

இதுல moderation வேண்டாம். ஏன்னா இது அமிர்தம்னு சொல்லி
ravi said…
மூகபஞ்சசதியில கடாக்ஷ சதகத்துல

அத்யந்தஶீதலமதந்த்³ரயது க்ஷணார்த⁴ம்

அஸ்தோகவிப்⁴ரமமனங்க³விலாஸகந்த³ம் ।

அல்பஸ்மிதாத்³ருʼதமபாரக்ருʼபாப்ரவாஹம்

அக்ஷிப்ரரோஹமசிரான்மயி காமகோடி ॥

ன்னு ‘ *அபார க்ருபா பிரவாஹம்’*

மழையாட்டம் அந்த அனுக்ரஹம், காமாக்ஷியோட கடாக்ஷம் நம்ம மேல கொட்டிண்டிருக்கு.

அது என் மேல படட்டும்னு வேண்டிக்கறார்.

அது படறதுக்கு நாம மத்ததெல்லாம் நம்பாம இந்த நாமத்தை நம்பி அதுல அதிகமா நாம addict ஆனோம்னா அந்த அனுக்ரஹம் கிடைக்குன்னு எல்லா மஹான்களும் சொல்லியிருக்கா.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 71*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
अनुमितकुचकाठिन्यामधिवक्षःपीठमङ्गजन्मरिपोः ।

आनन्ददां भजे तामानङ्गब्रह्मतत्वबोधसिराम् ॥ ५४॥

54. Anumitha kucha katinyaam adhi vaksha peetam anga janma ripo,

Anandhadhaam bhaje Aananga brahma Thathwa botha siraam.

அனுமிதகுசகாடின்யாமதிவக்ஷஃபீடமங்கஜன்மரிபோஃ |

ஆனன்ததாம் பஜே தாமானங்கப்ரஹ்மதத்வபோதஸிராம் ||54||
ravi said…
மன்மதன் மனது சம்பந்தப்பட்டவன் .

மனதினால் தான் காமம் காதல் என்றெல்லாம் ஒருவன் ஒருவளிடம் தன்னை இழக்கிறான்.

அப்படி மனதை வசியப்படுத்துபன் மன்மதன், காமன்,

அவனுக்கு அங்கன் என்று பெயர்,

அங்கம் என்றால் மனது என்றும் ஒரு அர்த்தம்.

மனதை வேறு ஒரு வஸ்துவை நாட, கவரச் செய்வதால், *மனஸிஜன்* என்றும் அவனுக்கு பெயர்.

பரமேஸ்வரன், காமேஸ்வரன் மனதில் முழுதும் நிறைந்தவளான காமாக்ஷி தேவியை தியானித்து நமஸ்கரிக்கிறேன்.🙌
ravi said…
பொலிக பொலிக பொலிக

போயிற்று வல் உயிர்ச் சாபம்

நலியும் நரகமும் நைந்த
நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை

கலியும் கெடும் கண்டுகொண்மின்

கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி

ஆடி உழிதரக் கண்டோம் 🙌🙌🙌
ravi said…
பூவுலகே பேருவகையால் பொலிந்ததாம்.

(கண்ணன் மீதான பக்தி மிகுந்ததால்)

உலக உயிர்களின் சாபங்களும், பாவங்களும் தொலைந்து,
கலியும் கெட்டதால்,

நலிவைத் தரும் நரகத்து யமனுக்கு பூவுலகில் வேலை என்பதே இல்லாமல் போனதாம்.

திருப்பாற்கடல் மாயக்கண்ணனின் பூதகணக் கூட்டங்கள் பூவுலகத்தில் புகுந்து

இசையுடன் பாடி, இங்குமங்கும் ஆடி மகிழ்வதைக் காண்கிறோம்

அடியவர்க்கு பெருநம்பிக்கை தருவது உன் திருநாமம் அன்றோ கண்ணா 💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

56 –
நீ நான் அறப்புலி நிதம் களிமயமா
நின்றிடும் நிலை அருள் அருணாசலா (அ)
ravi said…
நீ என்று தனி உளதோ *அருணாசலா*

நான் என்றும் ஒன்று உண்டோ *அருணாசலா* .

உன்னில் என்னை சேர்த்த பின் இரு உயிர் உண்டோ *அருணாசலா* ?

எல்லாம் நீயே என்றே ஆனபின் என்னிடம் கேள்வி கேட்பது ஏனோ *அருணாசலா*?

உன் அருள் இன்றி உன் தாள் வணங்க இயலுமோ *அருணாசலா*

உன் பரிசம் இன்றி ஐம்பூதங்கள் வேலை செய்யுமோ *அருணாசலா* ..

இந்திரியங்களும் ஞானேயிந்திரங்களும் உன் பார்வை பட்டே உயர்த்தெழுந்தனவன்றோ *அருணாசலா*

உள்ளம் உவகை நிரம்ப

உடம்பெல்லாம் மயிர்சிலிர்க்க

மனமெல்லாம் மாதொரு பாகன் நாமம் நினைக்க

நீ நான் என்று பிரிவின்றி பேரின்ப நிலை தந்தாயே *அருணாசலா*💐💐💐
ravi said…
நீ என்று தனி உளதோ *அருணாசலா*

நான் என்றும் ஒன்று உண்டோ *அருணாசலா* .

உன்னில் என்னை சேர்த்த பின் இரு உயிர் உண்டோ *அருணாசலா* ?

எல்லாம் நீயே என்றே ஆனபின் என்னிடம் கேள்வி கேட்பது ஏனோ *அருணாசலா*?

உன் அருள் இன்றி உன் தாள் வணங்க இயலுமோ *அருணாசலா*

உன் பரிசம் இன்றி ஐம்பூதங்கள் வேலை செய்யுமோ *அருணாசலா* ..

இந்திரியங்களும் ஞானேயிந்திரங்களும் உன் பார்வை பட்டே உயர்த்தெழுந்தனவன்றோ *அருணாசலா*

உள்ளம் உவகை நிரம்ப

உடம்பெல்லாம் மயிர்சிலிர்க்க

மனமெல்லாம் மாதொரு பாகன் நாமம் நினைக்க

நீ நான் என்று பிரிவின்றி பேரின்ப நிலை தந்தாயே *அருணாசலா*💐💐💐
ravi said…
*99 மூலாதாரைக நிலயா* =

மூலாதார சக்கரத்தில் நிலை கொண்டுள்ளவள் (மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது)🪷
ravi said…
ஆதி மூலம் என்றே அழுகுரல் கேட்டே அரங்கனாய் ஓடி வந்தாய்

எதற்கும் மூலம் ஒன்று உண்டு அதுவே ஒரு தாயின் கர்ப்பை... பேணி காக்க இதிலும் சிறந்தது உண்டோ ..

அழும் குரலுக்கு ஆதரவு அம்மா என்றால்

அரவணைப்பு பசிக்கு

தன் பாலை விருந்தாக்கி விழிகளில் மான் போல் மிரட்சி கொண்டு

மீன்போல் குட்டி பொறித்து கண் போல் காப்பவளே

இனி ஓர் கர்ப்பை வேண்டேன் தாயும் வேண்டிலேன் ...

மூலமே நீ இருக்க நிழல் தேடும் பித்தனோ நான் ...

முதுகெலும்பு இல்லாதோர் சொல்லட்டும்

நீ முதன்மை அல்ல என்றே ...

உரைக்கும் வாய் நரைத்த வாயாகும் அன்றோ ..

முதன்மை நீ மூலம் நீ முத்து முத்தாய்

கொத்து கொத்தாய் சத்து சத்தாய் வித்துக்கு வித்தாய்

முத்திக்கும் முத்தியாய்

வித்துக்கு வித்தாய்

அதில் முளைத்து எழுந்த
புத்திக்கு புத்தியாய்

புத்தியினுள்ளே புரக்கும் புரத்தின் புரமாய்

என் அகமாய் நின்றே

நித்யம் மந்தஸ்மிதம் புரிகின்றாய் என் பூத்தவளே 😌
ravi said…
31.01.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 22)

Sanskrit Version:

यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान्।
कैर्मया सह योद्धव्यमस्मिन्रणसमुद्यमे।।1.22।।

English Version:

yaavadetaan nirIkshoham
yoDhukaamaan avasthiThaan |
kairmaya saha yoDhavyam
asmin raNa samudyate ||


Shloka Meaning

Arjuna wanted Krishna to place the chariot in between the competing armies at spot
so that he could have a clear view of those who are eager to fight, and also know those
with whom I should fight on the eve of this battle.

Jai Shri Krishna 🌺
ravi said…
*தினமும் ஒரு திருவாசகம்* 🪷🪷🪷 8
ravi said…
*கோத்தும்பி*��
ravi said…
பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த

நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்

மாவேறு சோதியும் வானவரும் தாம் அறியாச்

சேஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ!
ravi said…
நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை ஆர் அறிவார்

வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி

ஊன் ஆர் உடை தலையில் உண்பலி தேர் அம்பலவன்

தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ!
ravi said…
*நூல்: திருவாசகம் (திருக்கோத்தும்பி #1 & 2)*

பாடியவர்: மாணிக்கவாசகர்
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீராஜமாதங்கி நவராத்திரி சிறப்பு பதிவுகள்*:

மந்திர சாஸ்திர உபாசனையில் மேலான இடம் வகிக்கும் ஸ்ரீ வித்யா உபாசனையில் முதலில் ஸ்ரீ மஹா கணபதி மந்திரம், ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி மந்திரம், பின்னர் ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம் உபதேசிக்கப்படும் அதன் பிறகே ஸ்ரீ வாராஹி மந்திரம் உபதேசம் செய்யப்படும். மாதங்கியின் மந்திரம், 98 எழுத்துக்கள் கொண்டதாகும். மாதங்கி மந்திரம் ஒருவருக்கு சித்தியாகிவிட்டால் உலகில் உள்ள மற்ற வேத மந்திரங்கள் உட்பட அனைத்துமே ஒரு முறை படிப்பதாலேயே சித்தியாகும் என மதங்கமனுகோசம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள். அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்டவள் சியாமளா தேவி. மன இருளையகற்றி ஞான ஒளியைத் தருபவள் இவள். கதம்பவனவாஸினீ’ என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள்.

லலிதா திரிபுரசுந்தரி வாசம் புரிந்தருளும் ஸ்ரீநகர ஸாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த மாதங்கியுடையதே. மந்திரியின் தயவு இருந்தால் ராஜாவின் அன்புக்குப் பாத்திரமாவதைப் போல மாதங்கியின் தயவை நாடியவன், லலிதையின் அருளை அடைவான் என்கிறது தந்த்ர சாஸ்திரம். இவளால் செயல்படுத்த முடியாதது என்று எதுவுமே இல்லை.

நம் உடலில் அமைந்துள்ள ஆதாரச்சக்கரங்களில், தொண்டைப் பகுதியில் அமைந்துள்ள 'விசுத்தி' சக்கரத்தில் பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள்.

இவளை அனாஹத சக்கரம் என்ற ஹ்ருதய ஸ்தானத்தில் தியானிக்க வேண்டும். இவளது அங்க தேவதை லகுஷ்யாமளா, உபாங்க தேவதை வாக்வாதினி, பிரத்யங்க தேவதை நகுலீ. இவர்கள் சாதகனுக்கு நல்ல வாக்குவன்மை, கலைகளில் தேர்ச்சி, சங்கீத ஞானம், சகலகலா பாண்டித்தியம் அருள்வார்கள்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*நூல்: திருவாசகம் (திருக்கோத்தும்பி #1 & 2)*

பாடியவர்: மாணிக்கவாசகர்
ravi said…
*இனி வரும் குறை என் செய்யும் ?*

( முருகன் special ) 💐💐💐

எந்த குறை வந்தாலும்

வந்த குறை என்ன செய்யும் ?

மறை போற்றும் *மாணிக்கம்* துணை இருக்க

கறை கொண்ட வாழ்வு தனில் கரை இன்றி தவிக்கும் போது

வரை இன்றி அருள வரும் *வைரம்* இருக்க

வரும் குறை என்ன செய்யும் ?

மோதகம் தனை நிறை உண்ணும் சோதரன் துணை இருக்க

*கோமேதகம்* தன் வேல் இருக்க

மயில் இருக்க சேவல் இருக்க

இனி வரும் குறை என்னை என்ன செய்யும் ?

நீலகண்டன் அருள் இருக்க

*நீல* மேனி துயர் துடைக்க

நிலவென கந்தன் சிரித்திருக்க

வரும் குறை என்ன செய்யும் ?

முத்துக்கள் பற்களாக *முத்து* முத்தாய் அவன் புகழ் பாட

*புஷ்பராகம்* இசை அமைக்க

*பவளம்* அவன் மேனி எனில்

*வைடூரியம்* அவன் வார்த்தை எனில் *மரகத* மாலைகள் மந்திரம் சொல்லாதோ ...

*அரோகரா* என்றே அண்டம் ஆனந்த நடம் புரியாதோ 🙌🙌🙌
ravi said…
[31/01, 17:58] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 75 started on 6th nov

*பாடல் 25* ...💐💐💐
[31/01, 17:58] Jayaraman Ravilumar: *பாடல் 25 ... மெய்யே என*

(வினை மிகுந்த வாழ்வை நீக்கு முருகா)

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?

கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.🪷
ravi said…
*கையோ* ... திருக்கரங்கள் மட்டுமோ,

*அயிலோ* ... கையில் விளங்கும் வேலாயுதம் மட்டுமோ,

*கழலோ* ... திருவடிகள் மட்டுமோ,

*முழுவதும் செய்யோய்* ...

திருமேனி முழுவதும் செம்மை நிறம்
கொண்டவனே,

*மயில் ஏறிய சேவகனே* ... மயில் ஏறிய மாவீரனே,

*வெவ்வினை வாழ்வை* ... கொடிய தீவினையால் வந்த வாழ்க்கையை,

*மெய்யே என உகந்து ...* என்றும் நிலையானது என மகிழ்ந்து,

*ஐயோ* ... அந்தோ,

*அடியோன் அலையத் தகுமோ ...* அடியேன் உழலுதல் நீதியோ?
ravi said…
59வது ஸ்லோகத்தில், 4 பறவைகளுடைய உதாரணத்தை சொல்லி, எப்படி சாதக பக்ஷி மழையை நாடி இருக்குமோ,

எப்படி சகோர பக்ஷி நிலவையே பார்த்துண்டு இருக்குமோ,

அப்படிங்கிற உதாரணத்துல, அனன்ய பக்தி!

எந்த ஒரு விஷயமோ, அந்த சந்திரனா சந்திரன் தான், வேற உயிரைனாலும் விடுவேன்,

ஆனால் சந்திரன் நிலவை தவிர வேற ஒன்றையும் குடிக்க மாட்டேன், சாதக பக்ஷி மழையை தவிர வேற ஒன்றையும் குடிக்காது.

அந்த மாதிரி, அந்த வேறு இடத்தில் மனஸை வைக்காமல் பரமேஸ்வரனிடத்தில் மனஸை வைக்கறது, அப்படிங்கிற அந்த அனன்ய பக்தியை
ravi said…
பற்றி சொன்னார்.

போன ஸ்லோகத்தில் ஆத்துல அடிச்சுண்டு போகிறவன் எப்படி கரையை விரும்புவானோ, அந்த மாதிரி உதாரணம் சொன்ன போது,

அந்த ஆவல் எனக்கு பகவானுடைய பாதாரவிந்தம் கிடைக்காதா?
அப்படினு desperateஆக அந்த ஏக்கம்.

அந்த ஆவல். அது வெளிப்படும் படியா பலவித உதாரணம் சொன்னார்.

இந்த ஸ்லோகத்தில் பார்த்தால், அந்த ஆவலும் இருக்கும், அந்த ஏக்கம் என்கிற அனன்ய பக்தியும் இருக்கு.

அது ரெண்டுக்கும் மேல, இந்த ஸ்லோகத்தில் கொடுத்து இருக்கிற உதாரணத்தில், எந்த தடையும் மீறிண்டு விடாம முயற்சி பண்ணி அந்த perseverance சொல்லுவா Englishல, அந்த மாதிரி விடா முயற்சியோடு, தடைகள் எல்லாம் மீறிண்டு, ஒரு நதியானது எப்படி கடலை சென்று அடைகிறதோ,

அந்த மாதிரி, பகவானோட பாதாரவிந்தத்தில், தைல தாரை போல மனசு அங்கேயே நிற்கணும்.
ravi said…
ஸ்லோகம்:

अङ्कोलं निजबीजसन्तति:, अयस्कान्तोपलं सूचिका,

साध्वी नैजविभुं, लता क्षितिरुहं, सिन्धुः सरिद्वल्लभम् ।

प्राप्नोतीह यथा तथा, पशुपतेः पादारविन्दद्वयं,

चेतोवृत्तिरुपेत्य तिष्ठति सदा, सा भक्तिरित्युच्यते ॥

அங்கோலம்ʼ நிஜபீ³ஜஸந்ததிரயஸ்காந்தோபலம்ʼ

ஸூசிகா
ஸாத்⁴வீ நைஜவிபு⁴ம்ʼ

லதா க்ஷிதிருஹம்ʼ ஸிந்து⁴꞉ ஸரித்³வல்லப⁴ம் .

ப்ராப்னோதீஹ யதா² ததா² பஶுபதே꞉ பாதா³ரவிந்த³த்³வயம்ʼ
சேதோவ்ருʼத்திருபேத்ய திஷ்ட²தி ஸதா³ ஸா ப⁴க்திரித்யுச்யதே

இது சிவானந்தலஹரியில் 61வது ஸ்லோகம்,
பக்தினுடைய லக்ஷணம்.
ravi said…
[31/01, 17:50] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ ஸர்வாதி
அச்யுத : |

*வ்ருஷாகபிரமேயாத்மா*
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[31/01, 17:50] Jayaraman Ravilumar: *102. வ்ருஷாகபயே நமஹ (Vrushaakapaye namaha)*
ravi said…
மேலும், “அர்ஜுனா! திரௌபதி என்னும் அபலைப் பெண் அன்று அவமானப்பட்ட போது அவளுக்கு உண்டான வலியையும்,
அபிமன்யு என்ற சிறுவன் அநியாயமாகக் கொல்லப்பட்ட போது அவனுக்கு உண்டான வலியையும் இவன் உணர வேண்டுமென்றால்

இப்போது நிராயுதபாணியாக நிற்கும் போது இவனைத் தாக்க வேண்டும்.

அதுவே இவனுக்குச் சரியான தண்டனை!” என்றான் கண்ணன்.
ravi said…
பாதாரவிந்த சதகம் !

77.சலத் த்ருஷ்ணாவீசீ பரிசலன பர்யாகுலதயா
முஹுர் ப்ராந்தஸ்தாந்த: பரமாசி'வ வாமாக்ஷி பரவான்
ததீர்ஷு காமாக்ஷி ப்ரசுரதர கர்மாம்புதிமமும்
கதாஹம் லப்ஸ்யேதே சரண மணிஸேதும் கிரிஸுதே

பரமசிவனது அழகிய மனைவியே ! மலைமகளே / காமாக்ஷி ! புதிது புதிதாக எழுகிற ஆசையின்,அலைகளில் தடுமாடுவதால், மிகவும்
சுழன்றும் களைத்துமுள்ள நான், பிறர் உதவியைப் பெரிதும் எதிர்பார்ப்பவனாகி, மிகவும் பெரிதான வினைக்கடலைக் கடக்கவிரும்புகிறேன். அதற்கு உன் திருவடியாகிய ரத்தினப் பாலத்தை என்று சென்றடைவேன் ?

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
*"சுரைக்காய்க்கு உப்பு இல்லை"*

"சுரைக்காய்க்கு உப்பு இல்லை" என்று சொல்கிறார்கள்.இதன் அர்த்தம் என்ன?.

சுரக்காய் சாப்பிட்டால் உடலிலுள்ள கெட்ட உப்புக்களை சிறுநீரகம் வழியாக வெளியே கொண்டுவந்துவிடும்.

எனவே சுரக்காய் சாப்பிட்டால் உடலில் கெட்ட உப்புக்கள் இருக்காது என்பததைத்தான் நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

எனவே சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் ,யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படும் சிறுநீரக கிருமித் தொற்று உள்ளவர்கள், அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள், கிரியேட்டினின் எனப்படும் உப்பு அதிகமாக வெளியேறுபவர்கள் , சிறுநீர் வழியாக புரோட்டின் வெளியேறுபவர்கள், மொத்தத்தில் சிறு நீரக சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் சுரக்காய் ஒரு அருமையான மருந்து.

எனவே சுரைக்காயை பச்சையாகவோ, வேக வைத்து ,பொரியல் செய்தோ, அவியல் செய்தோ சாம்பாரில் பயன்படுத்தியோ அல்லது சூப் வடிவத்திலோ தொடர்ந்து சாப்பிட்டு வருவது சிறுநீரக கோளாறு உள்ள அனைவருக்கும் மிகவும் நல்லது.

எனவே சுரக்காய் சாப்பிடுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!
ravi said…
*துர்யாய நமஹ*🙏
அனைத்து உலகங்களையும் தாங்குபவர்
: ஸுப்தா *ப்ராஜ்ஞாத்மிகா* துர்யா ஸர்வாவஸ்தா²விவர்ஜிதா
உடலை தக்க வைத்துக் கொள்ள உண்டான ஆற்றலை அளிப்பவள் 🙏
ravi said…
*சங்க இலக்கியம்*

*மூதுரை-ஔவையார் பாடல்கள்*

*பாடல் 1 :*

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
‘என்று தருங்கொல்?’ என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

*பொருள்:*

ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும்,
நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது. எப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது வளர்ந்துள்ள தென்னை மரம் அந்நீரை சுவையான இளநீராக தந்து விடும். அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
🌹🌺" 🌺"Vithala Devotee who Said He Will Go to Bandaripuram Pandurangan Temple - A Simple Story to Explain 🌹🌺

-------------------------------------------------- ------


🌹🌺Senai is a hairstylist, a devotee of Vitalan. In his hut he keeps beautiful Pandurangan Rukmini idols and performs Pandurangan bhajan day and night.


🌺 It is customary for other devotees to perform Akanda Bhajan along with him. Isn't it the time when the Mughals ruled our country? A Nawab was the representative of the Mughal Emperor at Bhandaripuram, who was in charge of Bhandarpur and many other towns.


🌺He needs a special Navidan. An announcement was made that if a good man was found, he would be given a place to stay near his mansion, bear all the family expenses and keep him comfortable. A Nawab's apprentice should not work for anyone else.


🌺 What is this difficulty? Work left for work, plenty of money, . Nawab will provide the house and all the necessities. Work for Nawab for half an hour every day, is that all?


Many aspirants competed for this job. Senai doesn't know this and there is no attempt or competition to find out.


🌺Vithalan Arul got this job only for Senai. What makes him happy is that he only works for a short time in the morning. Don't you have a lot of time to chant Vittalan at home with Panduranga and other devotees all the rest of the time??

🌺 If you are born as a human, you will be free of competition, envy and heartburn? To the other navigators, "Have you seen the life that came to Senai? Whenever we did not get it, they were looking for a way to somehow get him out of this job.

🌺One day on Ekadasi, Senai saw a large number of Banduranga devotees walking towards Bhandaripuram Vithalan with bhajans from outside. Their vivacity impressed him.

🌺Unbeknownst to him, his head, feet and hands all swayed in that bhaktirasam and made him forget himself, Senai left with them for Bandaripuram.

🌺 The door of the house, the Nawab and the work of the day were completely forgotten for him.
Will one who observes this, miss the good time? He went straight to the Nawab.

🌺 Sir!! who are you? What is the matter..
"Sir, Senai will not come today"

Why? "You said that you will go to Banduripuram Pandurangan Temple".. So I will not go and see the Nawab today.

🌺 Nawab's anger rose from the soles of his feet to the top of his head.

🌺 It wasn't even a few minutes. In front of him, Senai was standing for service with his hands tied as usual. It seemed to the Nawab that someone had deliberately misinformed him.

🌺 As he sat in front of him and shaved Senai as usual, the Nawab felt a happiness unlike today. Every time he touched and looked directly at the Nawab while working, he was filled with peace and unspeakable joy, the Nawab was flying in pleasure.

🌺 "Senai, your work today is amazing. As he was asking, "What's special today?" Vitalan's beautiful face appeared and disappeared in front of him for a moment.

🌺Magnetic eyes, phunmuruval, sentamarai face, musk tilakam all made him ravishing.

🌺 At that time, the servants tied up Senai and brought him to a stop.

🌺 Stunned Nawab!! When I looked for Senai, who was in front of me, he was not there.

🌺Meanwhile, when Senai was leaving for work, Banduranga saw devotees on the way, he forgot his work and went with them to Bandaripuram. Halfway, the servants caught him and dragged him, but the Nawab's ears only heard this, but he understood that Banduranga himself appeared before him as an idol and did the work of his devotee.

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹Valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவிலுக்கு போகப்போறேன் என்று சொன்ன விட்டல பக்தன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺சேனாயி ஒரு முடி திருத்தும் நாவிதர், விட்டலன் பக்தர். தனது குடிசையில் அழகிய பாண்டுரங்கன் ருக்மணி சிலைகளை வைத்து இரவும் பகலும் பாண்டுரங்கன் பஜனை செய்வார்.

🌺மற்ற பக்தர்களும் அவரோடு சேர்ந்து அகண்ட பஜன் செய்வதும் வழக்கம். அவர் வாழ்ந்த காலம் நமது தேசத்தை முகலாயர்கள் ஆண்ட நேரம் அல்லவா. பந்தர்பூர் மற்றும் பல ஊர்களுக்கும் அதிகாரியாக ஒரு நவாப் முகல் சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக பண்டரிபுரத்தில் இருந்தான்.

🌺அவனுக்கு ஒரு பிரத்யேகமான நாவிதன் தேவை. ஒரு நல்ல ஆள் கிடைத்தால் அவனது மாளிகை அருகிலேயே இருக்க இடம் கொடுத்து, சகல குடும்ப செலவுகளையும் ஏற்று, சவுகரியமாக வைத்துகொள்வதாக அறிவிப்பு வந்தது. நவாபிடம் நாவிதனாக உள்ளவன் மற்றெவர்க்கும் பணி புரியக்கூடாது.

🌺இதிலென்ன கஷ்டம்? வேலைக்கு வேலையும் மிச்சம், கை நிறைய காசு, . இருக்க வீடு, சகல தேவைகளும் நவாப் செய்துகொடுப்பார். தினமும் ஒரு அரைமணி நேரம் நவாபிடம் வேலை, அவ்வளவு தானே?

🌺நிறைய நாவிதர்கள் இந்த வேலைக்கு போட்டி போட்டார்கள். சேனாயிக்கு இது தெரியாது தெரிந்துகொள்ள எந்த முயற்சியோ போட்டியோ இல்லை.

🌺விட்டலன் அருளால் இந்த உத்தியோகம் சேனாயிக்கு மட்டும் கிடைத்தது. இதில் என்ன சந்தோஷம் அவருக்கு என்றால், காலையில் சிறிது நேரம் மட்டும் தான் வேலை. மற்ற நேரமெல்லாம் வீட்டில் பாண்டுரங்கனோடும் மற்ற பக்தர்களோடும் விட்டலனை பாட நிறைய நேரம் கிடைக்குமல்லவா??

🌺மனிதனாக பிறந்தாலே போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் இல்லாமல் இருக்குமா? மற்ற நாவிதர்களுக்கு "இந்த சேனாயிக்கு வந்த வாழ்வை பார்த்தாயா? எப்போ நமக்கு கிடைக்க வில்லையோ, இவனை எப்படியாவது இந்த வேலையிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று வழி தேடிக்கொண்டிருந்தனர்.

🌺ஒருநாள் ஏகாதசி, நிறைய பாண்டுரங்க பக்தர்கள் வெளியூரிலிருந்து கூட்டமாக பஜனை ஆட்டம் பாட்டத்துடன் பண்டரிபுரம் விட்டலனை நோக்கி நடந்து கொண்டிருப்பதை சேனாய் பார்த்து விட்டார். அவர்களது விட்டலகானம் அவரை கவர்ந்தது.

🌺அவரையறியாமல் தலை, கால், கை எல்லாம் அந்த பக்திரசத்தில் ஆடி அவரை தன்னை மறக்க செய்தது, சேனாய் அப்படியே அவர்களோடு பண்டரிபுரம் கிளம்பிவிட்டார்.

🌺அவருக்கு வீடு வாசல், நவாப், அன்றைய வேலை எல்லாமே சுத்தமாக மறந்துபோனது.
இதை கவனித்துகொண்டிருந்த ஒருவன், நல்ல சமயத்தை நழுவவிடுவானா? நேராக நவாபிடம் சென்றான்.

🌺அய்யா!! யார் நீ? என்ன விஷயம்..
"அய்யா, இன்னிக்கு சேனாய் வரமாட்டானுங்க”

🌺ஏன்? "பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவிலுக்கு போகப்போறேன் என்று சொன்னானுங்க".. அதனாலே இன்னிக்கு நவாபை போய் பாக்கமாட்டேன்" வேணா நீ போய் அவன்கிட்ட சொல்லிடுன்னு சொன்னதாலே நான் சொல்ல வந்தேங்க"

🌺நவாபுக்கு கோவம் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை எகிறி ஆட்களை ஏவி அந்த சேனாய் நாயை கட்டி இழுத்துவா இங்கே, நானே அவனை வெட்டறேன்" என்றான்.

🌺சொல்லி சில நிமிஷங்கள் கூட ஆகவில்லை. அவன் எதிரே சேனாய் வழக்கம்போல கைகட்டி சேவகத்துக்கு நின்று கொண்டிருந்தார். நவாபுக்கு தன்னிடம் வேண்டுமென்றே யாரோ தப்பாக தகவல் சொல்லியிருக்கிறான் என்று தோன்றியது.

🌺அவன் எதிரே அமர்ந்து வழக்கம் போல சேனாய் முடிதிருத்தும்போது இன்று என்றுமில்லாத ஒரு சந்தோஷம் நவாபுக்கு ஏற்பட்டது. ஒவ்வொருமுறை நவாபை தொட்டும், நேரே பார்த்தும் வேலை செய்யும்போது அவனுக்கு மனமெல்லாம் ஒரு அமைதி, சொல்லவொண்ணா களிப்பு தோன்றியது, நவாப் இன்பவானில் பறந்துகொண்டிருந்தான்.

🌺“சேநாயி இன்று உன் வேலை பிரமாதம். என்ன அப்படி இன்று விசேஷம்” என்று கேட்டுகொண்டிருந்தபோது அவன் முன் விட்டலனின் அழகிய முகம் ஒரு கணம் தோன்றி மறைந்தது.

🌺காந்த கண்கள், புன்முறுவல், செந்தாமரை முகம், கஸ்தூரி திலகம் அனைத்தும் அவனை புளகாங்கிதமடைய செய்தது.

🌺அந்தநேரம் சேவகர்கள் சேனாயியை கட்டி இழுத்து கொண்டு வந்து நிறுத்தினர்.

🌺திகைத்த நவாப்!! எதிரே இதுவரை இருந்த சேனாயியை தேடிய போது அவன் இல்லை.

🌺இதற்குள் சேநாயி வேலைக்கு கிளம்பும்போது வழியில் பாண்டுரங்க பக்தர்களை பார்த்தது, வேலையை மறந்து அவர்களோடு பண்டரிபுரம் சென்றது பாதிவழியில் சேவகர்கள் அவனை பிடித்து கட்டி இழுத்து வந்தது அனைத்தும் சொல்லப்பட்டாலும் நவாபின் காது தான் இதை கேட்டதே தவிர அவன் சிலையாக பாண்டுரங்கனே தன் முன் தோன்றி தனது பக்தனின் வேலையை செய்தான் என்பதை புரிந்து கொண்டான்…

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…

பழனிக் கடவுள் துணை -01.02.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-46

மூலம்:

எளிதாய் உடும்புமுயல் ஏனமன்ன வற்றைக்
களியோடு கொன்று களித்துண்(டு) – அளிகூர்வார்
எல்லோர்க்கும் பொல்லான் எவனோ அவன்றானோ
வல்லோன், பழனியறி வான் (46).

பதப்பிரிவு:

எளிதாய் உடும்பு முயல் ஏனம் அன்னவற்றைக்
களியோடு கொன்று களித்து உண்டு – அளிகூர்வார்
எல்லோர்க்கும் பொல்லான் எவனோ, அவன் தானோ
வல்லோன், பழனி அறிவான்!! (46).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

சீவகாருண்யத்தைப் பறைசாற்றும் பிறிதொரு பாடல்.

சிற்றுயிர்களைக் கொன்று தின்பவரைக் கடுமையாகத் தாக்கித் திருத்துவோரைப் பொல்லார் என உலகோர் நினைப்பார்கள். ஆனால், அப்படிச் செய்வதே, செய்வோரே, வல்லோர், நல்லோர் என்று உணர வேண்டும்.

சிறிய ஜீவராசிகளான உடும்பு, முயல், பன்றி போன்றவற்றை எளிதில் களியோடு கொன்று, களித்து உண்டு இன்புறுவர் அனைவருக்கும் பொல்லானாய்த் திகழ்ந்து, அவர்களைத் கண்டித்து, தாக்கித் திருத்துவோன் எவனோ, அவன் தான் வல்லோன், நல்லோன். அவனைப் பழனியம்பதி உறை பெருமாள் நன்கு அறிவான்; அருள்வான்.

விதியெல்லாம் கழித்து, "நீயே கதி!" என்று உருகி, உன்பாலே மறுகும் எனக்கு, உன் இணையில்லாப் பேரன்பாலே, நீயே தக்க, பக்க, மிக்க, பக்கா துணை என்று அருள்! என் பழனிக் கோமானே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
31.01.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 22)

Sanskrit Version:

यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान्।
कैर्मया सह योद्धव्यमस्मिन्रणसमुद्यमे।।1.22।।

English Version:

yaavadetaan nirIkshoham
yoDhukaamaan avasthiThaan |
kairmaya saha yoDhavyam
asmin raNa samudyate ||


Shloka Meaning

Arjuna wanted Krishna to place the chariot in between the competing armies at spot
so that he could have a clear view of those who are eager to fight, and also know those
with whom I should fight on the eve of this battle.

Jai Shri Krishna 🌺
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

ஆசாரத்தால்தான் டிஸிப்ளின் எனும் மனநெறி ஏற்படுகிறது. ஆசாரம் வெளிவிஷயம் என்பது சுத்தப் பிசகு. அதனால்தான் மனஸில் உத்தமமான பண்பும், உயர்ந்த கட்டுப்பாடும் உண்டாகிறது. மநுஷ்யனின் மனநெறி நன்றாயிருந்து விட்டால் அதன் சக்தி ஸாமான்ய மானதில்லை. அது இவனுடைய ‘நேச்சர் ‘என்னும் இந்திரிய வேகங்களை அடக்கியாள்வது மட்டுமில்லை; வெளி ‘நேச்சரை’யே அடக்கியாண்டு விடுகிறது. பிராம்மணன் அத்யயன ஆசாரத்தை அநுஷ்டித்தால் அதற்காகவே மும்மாரிகளில் ஒன்று பெய்கிறது என்பது தமிழ் மூதுரை; வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை.

ravi said…
இப்படியே பதிவ்ரதைகளின் கற்பு நெறியினால் இயற்கை இன்னொரு மழையைப் பெய்கிறது என்று சொல்கிறது: மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை.

இதையே இப்போது பகுத்தறிவாளர்களும் கொண்டாடும் திருக்குறளும் சொல்கிறது:

தெய்வம் தொழாள் கொழுநற்  றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

ராஜா நீதி நெறிப்படி ஆட்சி பண்ணுவதும் ஒரு மழையை வரவழைத்துவிடும் :

நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை

இதற்கு மறுதிசையில், இவர்கள் நெறி தப்பினால் இயற்கையும் கன்னா பின்னா என்ற பண்ண ஆரம்பிக்கும்.

ravi said…
வள்ளுவரே சொல்கிறார்: ராஜா நீதிமுறை தப்பினால் பிராம்மணனும் தன் ஆசாரமமான அத்யயனத்தை மறந்துவிடுவான் — அறுதொழிலோர் நூல் மறப்பர். ஒருத்தன் முறை தப்பினால் மற்றவர்களும் முறை தப்பிப் போய்விடுவார்களென்று எச்சரிக்கிறார். இப்படி மநுஷ்யனுக்கு மநுஷ்யன் மனநெறி கெட்டுப்போவதால் பாதகமான பலன் தொடர்ந்து போவது மட்டுமில்லை. ராஜா தன் ஆசாரத்தை விட்டால் பால் வளமும் குன்றிவிடும்: ஆ பயன் குன்றும் என்று ‘தெய்வப்புலவர்’ என்னும் திருவள்ளுவர் சொல்கிறார். இதற்குப் பகுத்தறிவு பதில் சொல்ல முடியாது.

ravi said…
மாற்ற முடியாதவை என்கிற Natural Forces -ம் (இயற்கைச் சக்திகளும்) மநுஷ்யனின் மனநெறிக்கு அடங்கியவைதான்.

ஒரே ஈஸ்வரனின் தர்ம ஸ்வரூபந்தான் [வெளி] இயற்கையில் இருக்கிற மஹத்தான ஒழுங்குக் கட்டுப்பாடு, மநுஷ்ய மனஸின் தர்மக் கட்டுப்பாடு இரண்டாகவும் ஆகியிருப்பது. இதிலே மநுஷ்யன்தான் மனமறிந்து மனஸின் தர்மத்தை உண்டாக்கிக் கொண்டு, அதில் ஈஸ்வர ஸாந்நித்யத்தை வரவழைத்துக் கொள்ள முடியும். அந்த திவ்ய சக்தியால்தான் [வெளி] இயற்கையும் இவன் கட்டியாள முடிவது.

ravi said…

நெறிதான் ஸுர்யனை, சந்திரனை, வாயுவை, gravity-ஐ ஆர்டரில் நிறுத்தி வைத்திருக்கிறது. ‘ஃபிஸிக்ஸ்’ மட்டுமில்லை. மனஸ் நன்றாயிருந்தால்தான் இவை லோகாநுகூலமாக நன்றாயிருக்கும். ஜனங்கள் மனஸ் கெட்டுப் போனால் இயற்கையிலும் உத்பாதங்கள் ஜாஸ்தியாகும் என்று ‘சரக ஸம்ஹிதை’ என்ற ஆயுர்வேத சாஸ்த்ரம் சொல்கிறது.

நெறியில் சிறந்தவர்கள் என்னென்ன அற்புதங்கள் பண்ணினார்கள் என்று கதை புராணங்களில் எத்தனையோ பார்க்கிறோம். ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்கிற மாதிரியே ‘பாய் எனப் பாயும் அக்கினி’யைப் பற்றி கண்ணகி கதை சொல்கிறது. அதே மதுரையில் ஞான ஸம்பந்தரும் அவர் தங்கியிருந்த மடத்திற்குச் சமணர்கள் வைத்த நெருப்பு, அவர்களை ஆதரித்த பாண்டிய ராஜாவையே (இறுதியில் அவன் நல்வழிப்படுவதற்கு ஆரம்ப தண்டனையாக) தாக்கவேண்டும் என்று ஈஸ்வரனைப் பிரார்த்தித்தவுடன் அவனிடம் வெப்பு நோய் உருவில் போய்ச் சேர்ந்தது.
ravi said…
உண்மை .... தாரக மந்திரம் ... ஓம் நமோ நாராயணா எனும் *அஷ்டாக்ஷர* மந்திரத்தில் இருந்து *ரா* வை எடுத்து

*பஞ்சாக்ஷ்ர* மந்திரமான நமசிவாய வில் *ம* வை எடுத்து

தையித்த நாமம் ...

ஒரே கல்லில் இரண்டு விலை உயர்ந்த மாம்பழங்கள்

ரம்யத்தை அள்ளித்தரும் நாமம் *ராம நாமம்* 👣👣
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 70*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
ऐक्षिषि पाशाङ्कुशधरहस्तान्तं विस्मयार्हवृत्तान्तम् ।

अधिकाञ्चि निगमवाचां सिद्धान्तं शूलपाणिशुद्धान्तम् ॥ ५५॥

55. Iykshishi pasangusa dhara hathanthaam, vismayarha vruthaanthaam,

Adhi Kanchi nigama vaachaam sidhantham soola pani shuddhanthaam.

ஐக்ஷிஷி பாஶாங்குஶதரஹஸ்தான்தம் விஸ்மயார்ஹவ்றுத்தான்தம் |

அதிகாஞ்சி னிகமவாசாம் ஸித்தான்தம் ஶூலபாணிஶுத்தாந்தம் ||55||
ravi said…
காமாக்ஷி எனும் ஸ்ரீ லலிதை எப்படிப்பட்டவள் !

அவளது சரித்திரம் அற்புதமானது.

மிக பலம் வாய்ந்த எவராலும் வெல்லமுடியாத பண்டாசுரன், மஹிஷாசுரன் போன்ற ராக்ஷஸர்களை வென்று அருமையான சரித்திரம் படைத்தவள்.

சகல வேதங்களின் முடிவும் ஸாரமு மானவள் ,

திரிசூலம் பினாகம் தரித்த பிநாகபாணி பரமேஸ்வரனே போற்றி மகிழும் பார்வதி தேவி.

கரங்களில் பாசம் அங்குசம் தரித்தவள். காஞ்சிபுர வாஸினி ஹிமவான் குலரத்னம்

அம்பாளை நமஸ்கரிக்கிறேன். 🙌🙌🙌
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 474* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*199 सर्वशक्तिमयी - ஸர்வ சக்திமயீ.*

பாரதி தாசன் இந்த நாமத்தின் அர்த்தத்தை உள் வாங்கி இயற்றிய பாடல் நம் நெஞ்சில் என்றும் பசுமையாக இருக்கும்

எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி

ஏழு கடல் அவள் வண்ணமடா! – அங்குத்

தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்த

தாயின் கைப்பந்தென ஓடுமடா – ஒரு

கங்குலில் ஏழு முகிலினமும் – வந்து

கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? – எனில்

மங்கை நகைத்த ஒலியெனலாம் – அவள்

மந்த நகையங்கு மின்னுதடா!

காளை ஒருவன் கவிச்சுவையைக் – கரை

காண நினைத்த முழு நினைப்பில் – அன்னை

தோளசைத்தங்கு நடம்புரிவாள் – அவன்

தொல்லறிவாளர் திறம் பெறுவான் – ஒரு

வாளைச் சுழற்றும் விசையினிலே – இந்த

வைய முழுவதும் துண்டு செய்வேன் – என

நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை

நேர்படுவாள் உன்றன் தோளினிலே!’

🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து

இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும்

இராமாநுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள

வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே
ஐயப்படா நிற்பர்

வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே

--- ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)
ravi said…
பொய்மையான விஷயங்களை (உண்மை போல்) முன்னிறுத்தும் தத்துவங்கள் அகலும்படியாக

இப் பூவுலகில்

சத்தியமான விஷயங்களை (அடியவர்க்கு) வழங்கிக் காத்தருள ராமானுஜர் எழுந்தருளியிருக்க

வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் -

இந்த உலகில் யாராவது உள்ளனரோ என

வேதனையில் உடல் வாடி, பயனற்ற வகையில்

சந்தேகப்பட்ட வண்ணம் இருப்பர்

இப்பூவுலக மாந்தர், (உடையவர் திருவடிகளே நமக்குக் கதி என்ற) நல்லறிவைத் தொலைத்து விட்டு!
ravi said…
*❖ 100 ப்ரஹ்மக்ரந்தி விபேதினி =*

பிரம்மக்ரந்தி எனும் நாடி-முடிச்சுத் தளைகளை துளைப்பவள்

(பிரம்மக்ரந்தி மூலாதாரத்திற்கும் சுவாதிஶ்டானத்திற்கும் நடுவில் இருப்பதாக யோக சாஸ்திரம் கூறுகிறது)
ravi said…
அம்மா

பந்தம் எனும் முடிச்சுக்களை அவிழ்த்தே முக்திக்கு முத்தாரம் போடுபவளே

போட்ட முடிச்சுக்களில் மூழ்கியே பந்தங்களில் சந்தம் எழுப்புகின்றோம் ...

அந்தம் ஒன்றும் இல்லாத உன்னை கந்தம் அணிந்து பந்தம் தொடர வேண்டுகின்றோம்

வேடிக்கை மனிதர்கள் நாங்கள்

வேண்டும் வேண்டும் என்றே கேட்போம்

வேள்வி தீ முடிந்த பின்னும் எங்கள் ஆசை தீ அழிவதில்லை ...

அநியாமாய் உனை மறக்கின்றோம்

அவதி தீயை வளர்க்கின்றோம் ...

பிள்ளைகள் நாங்கள் பிழை செய்வோம் பல தெரிந்தே ...

பெற்றவள் நீ உற்றவள் இல்லை என்றே ஊர் திரிய செல்லாதே ...

உத்தமியே உனை நான் மறந்தும் எனை நீ மறப்பாயோ
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

57 –
நுன்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட
எண்(ண) அலை இறும் என்று அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா*

என் எண்ண அலைகள் ஏதேதோ அழுக்கை கரை வந்து சேர்க்கிறதே

உன் நினைவு வரும் முன் ஓ வென்றே சத்தம் போட்டு வரும் அலைகள்

அகம் தனில் சேர்க்கும் அழுக்கு அண்டம் தனிலும் பெரிதாய் உள்ளதே

ஆனந்த லஹரியும் சிவானந்த லஹரியும் சௌந்தர்ய லஹரியும் வந்து மோதாமல்

உருப்படா எண்ணங்கள் அலை அலையாய் என்னை மோதுவது ஏன் *அருணாசலா*

நீ யே எல்லாம் என்றே நினைத்த பின்னும் அழுக்குகள் என்னிடம் சேருவது நியாமோ *அருணாசலா*

எண்ண அலைகளை சீர் படுத்தி

பொன்னம்ப அலைகள் என்னை ஆட்கொள்ள அருள் செய்வாய் என் *அருணாசலா*🪷🪷🪷
ravi said…
அருமையான இரண்டு
நரசிம்மர் திருத்தலங்கள்....

மாங்கல்யம் கூடி வர
வழிபட வேண்டிய கோவில்
ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள்

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியர்கள் என்ற இனத்தவர் இப்பகுதியில் அமைந்துள்ள பாறைப்பகுதியில் ஒட்டி வாழ்ந்துள்ளனர். நாளைடைவில் குஜிலியர் என்ற இனத்தவரின் பெயரோடு அவர்கள் வாழ்ந்து வந்த பாறைப்பகுதியையும் சேர்த்து 'குஜிலியம்பாறை' என இவ்வூர் அழைக்கப்பட்டது. குஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் ராமகிரி என்ற ஊர் உள்ளது. இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.

திருமணக்கோலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும். தனி சன்னதியிலுள்ள கமலவல்லி தாயாரை வணங்கினால் வறுமை நீங்கி பொருள் சேர்க்கை, தொழில் அபிவிருத்தி ஏற்படும். இங்குள்ள விஷ்ணு, துர்க்கையை வணங்கினால் பாவங்கள் அகன்று தோ ஷங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாசலில் உள்ள ஆஞ்சநேயரை வடை மாலை, துளசி மாலை, நெய்வேத்யம் செய்து வழிபட்டால் எக்காரியமும் வெற்றியடையும். இங்கு வேதநாயகனாக விளங்கும் பெரிய திருவடியான கருட பகவானுக்கு 16 மோதகம், தயிர், அன்னம் வைத்து பூஜித்தால் நாகதோஷம், பட்சி தோஷம் விலகி சுகம் உண்டாகும்.

ஒரே கருவறையில் 3 நரசிம்மர்கள்...

தன் பக்தன் பிரகலாதன், அவனது தந்தை இரணியனால் கொடுமைப்படுத்தப்படுவதை அறிந்த திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார். அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

அவரது கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர். இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். நரசிம்மர் கைகளில் பிரயோக சக்கரம், குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவற்றை ஏந்தியுள்ளார். மற்ற கைகள் இரணியனை வதம் செய்த நிலையில் உள்ளது.
ravi said…
Ayatanavan bhavati

Stars are the source of water,
He who knows this,
Becomes established in himself,
Water is the source of stars,
He who knows this,
Becomes established in himself.
He who knows the source of water,
Becomes established in himself,


Parjanyova apamayatanam
Ayatanavan bhavati
Yah parjanyasya syayatinam Veda
Ayatanavan bhavati
Apovai parjanya Syayatanam
Ayatanavan bhavati
Ye Evam veda
Yopa maya tanam Veda
Ayatanavan bhavati

Clouds are the source of water,
He who knows this,
Becomes established in himself,
Water is the source of clouds,
He who knows this,
Becomes established in himself.
He who knows the source of water,
Becomes established in himself,

Samvastaro Va Apamayatanam
Ayatavan bhavati
Yassavatsa rasyaya tanam Veda
Ayatavan bhavati.
Apovai samvasara ayatanam
Ayatanavan bhavati
Ya Evam veda
Yopsu Navam pratistitam veda
Pratyeva tistati

Rainy season is the source of water,
He who knows this,
Becomes established in himself,
Water is the source of rainy season,
He who knows this,
Becomes established in himself.
He who knows that there is a raft is available,
Becomes established in that raft.

{This stanza is included in some versions of mantra Pushpam
Om thad Brahma, Om it is Brahma
Om Thad Vayu. Om it is air
Om Thad Athma Om it is the soul
Om Thad Sathyam Om it is the truth
Om That Sarvam Om it is everything
Om That puror nama Om salutations to that Purusha
Anthascharathi bhootheshu Guhyam Viswa Murthishu
That which is inside all beings secretly is that Universal God
Thvam Yajna You are the fire sacrifice,
Thwam vashatkara You are the the personification of Vedic sacrifice
Thwam Indra You are the Indra
Thvam vayu You are the air
Thvam Rudra You are the Rudra
Vishnus thvam You are the Vishnu
Brahmasthvam You are the Brahma
Thvam prajaipathi You are the Lord of all beings
Om Thadhapa apo jyothi raso amrutham brahma bhur bhuvasuvarom
Om water is light, the essence is the nectar and the concept of Brahma is in all the seven worlds.}


Rajadhi rajaya Prasahya Sahine|
Namo Vayam Vai Sravanaya Kurmahe
Samekaman Kama Kamaya mahyam
Kamesvaro Vai Sravano dadatu
Kuberaya Vai Sravanaya
Maha rajaya Namah.
(This last stanza is normally recited by priests while giving back prasada after performing an Archana in all temples)

King of kings , we praise thee,
Who is the giver of all victories,
Who is the fulfiller of all desires,
Please bless me with wealth,
To fulfill all our desires,
Oh, Kubhera*, we praise thee,
Salutations to the king of kings.
* Kubhera is the Lord of wealth.
ravi said…
HARI OM ! MANTRA PUSHPAM IN TAMIL
மந்திர புஷ்பம்
மந்திர புஷ்பம்
மந்திர புஷ்பம்
யோபம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான்
பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான்
பஸுமான் பவதி ய ஏவம் வேத யோபா மாயதனம் வேத
ஆயதனவான் பவதி அக்னிர்வா அபா - மாயதனம் ஆயதனவான்
பவதி யோக்னே - ராயதனம் வேத

ஆயதனவான் பவதி ஆபோ வா அக்னே - ராயதனம்
ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபா - மாயதனம் வேத
ஆயதனவான் பவதி வாயுர்வா அபா-மாயதனம் ஆயதனவான்
பவதி யோ வாயோ - ராயதனம் வேத ஆயதனவான் பவதி

ஆபோ வை வாயோ-ராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம்
வேத யோபா மாயதனம் வேத ஆயதனவான் பவதி அஸெள
வை தபன்னபா - மாயதனம் ஆயதனவான் பவதி யோமுஷ்ய தபத
ஆயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்

ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபா-மாயதனம் வேத
ஆயதனவான் பவதி சந்த்ரமா வா அபாமாயதனம் ஆயதனவான்
பவதி யஸ்சந்த்ரமஸ ஆயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம் ஆயதனவான் பவதி

ய ஏவம் வேத யோபா-மாயதனம் வேத ஆயதனவான் பவதி
நக்ஷத்ராணி வா அபா-மாயதனம் ஆயதனவான் பவதி யோ நக்ஷத்ராணா
மாயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை நக்ஷத்ராணா
மாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத

யோபா-மாயதனம் வேத ஆயதனவான் பவதி பர்ஜன்யோ வா
அபா-மாயதனம் ஆயதனவான் பவதி ய: பர்ஜன்யஸ்-யாயதனம்
வேத ஆயதனவான் பவதி ஆபோ வை பர்ஜன்யஸ்யா-யதனம்
ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாமாயதனம் வேத

ஆயதனாவான் பவதி ஸம்வத்ஸரோ வா அபா-மாயதனம்
ஆயதனவான் பவதி யஸ்-ஸம்வத்ஸரஸ்-யாயதனம் வேத
ஆயதனவான் பவதி ஆபோ வை ஸம்வத்ஸரஸ்-யாயதனம்
ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோப்ஸு நாவம்
ப்ரதிஷ்டிதாம் வேத ப்ரத்யேவ திஷ்டதி

ராஜாதிராஜாய ப்ரஸஹ்யஸாஹினே நமோ வயம் வைஸ்ரவணாய
குர்மஹே ஸ மேகாமாங்காமகாமாய மஹ்யம் காமேஸ்வரோ
வைஸ்ரவணோததாது குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம:

ந கர்மணா ந ப்ரஜயா தனேன த்யாகேனைகே அம்ருதத்வ
மானஸு பரேண நாகம் நிஹிதம் குஹாயாம் விப்ராஜ
தேதத்யதயோ விஸந்தி

வேதாந்த-விஜ்ஞான-ஸுநிஸ்சிதார்தா: ஸந்ந்யாஸ-யோகாத்-யதய:
ஸுத்த-ஸத்வா: தே ப்ரஹ்ம லோகே து பராந்தகாலே பராம்ருதாத்
பரிமுச்யந்தி ஸர்வே

தஹ்ரம் விபாபம் பரவேஸ்ம பூதம் யத்புண்டரீகம் புரமத்ய
ஸஸ்தம் தத்ராபி தஹ்ரம் ககனம் விஸோகஸ்-தஸ்மின் யதந்தஸ்
ததுபாஸிதவ்யம்

யோ வேதாதௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தே ச ப்ரதிஷ்டித:
தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய ய: பரஸ்ஸ மஹேஸ்வர:

யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதேநாவ்ருதாம் புரீம்
தஸ்மை ப்ரஹ்ம ச ப்ரஹ்மா ச ஆயு: கீர்த்தி ரஜாந்தது:

(வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி)

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
ravi said…
பகவானின் நீர்மை.....!!!

நீர் கீழ் நோக்கி பாயும்.
அவன் தாழ்ந்தோரிடத்தில் எளிதாகச்செல்வான்

நீர் மேல் நோக்கி பாயாது.
நான் உயர்ந்தவன் என இறுமாப்பு கொண்டால் அவன் நம்மிடம் வரமாட்டான்.

எந்த காரியத்துக்கும் நீர் வேண்டும்.
எந்த காரியத்துக்கும் அவன் அனுக்ரஹம் வேண்டும்.

நீர் வேண்டாமல் யாரும் இருக்க முடியாது.
அவனை வேண்டாமல் யாரும் இருக்க முடியாது.

நீரின் தன்மை குளிர்ச்சி.
அவனும் குளிர்ந்த தன்மை உடையவன்

நீர் கொதித்தால் அதை ஆற்றுவதற்கு நீரே வேண்டும்.
அவன் கோபம் கொண்டாலும் அவனையே பற்ற வேண்டும்.

நீரை நமக்கு வேண்டும்படி வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
அவனையும் நமக்கு வேண்டும்படி வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

நீரை எப்பாத்திரத்திலும் வைத்துக்கொள்ளலாம்.
அவனையும் எந்த ரூபத்திலும் வைத்துக்கொள்ளலாம்.

நீரைக்கொண்டு மற்ற பண்டங்களை சமைக்கலாம்.
பெருமானைக் கொண்டு மற்ற பலன்களைப்பெறலாம்.

நீரை நீருக்காகவே பருகலாம்.
எம்பெருமானையே புருஷார்த்தமாகவும் கொள்ளலாம்.

நீரில் ஐந்து வகை. மேகம், கடல், மழை, கிணறு, நிலத்தடி நீர்.
பெருமானும் ஐந்து வகை. பரம், வ்யூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி.

நீர் ஆகாயம், பூமி, பூமிக்கு கீழே என்று எங்கும் வ்யாபித்திருக்கும்
பெருமானும் அப்படியே எங்கும் வ்யாபித்திருப்பவன்

நீரைக்கொண்டுதான் எதையும் சுத்தி செய்யவேணும்.
பகவன் நாமம் கொண்டுதான் எதையும் சுத்தி செய்யவேணும்.

தோண்டத் தோண்ட சுரக்கும் நீர்.
கொள்ளக் கொள்ள இன்பம் தருவன் பகவான்.

நீர் நமக்காக இருக்கிறது.
பகவான் நமக்காக இருக்கிறான்.

நீர் தடாகங்களை எல்லோரும் அணுகி பயன் பெறலாம்.
பகவானையும் எல்லோரும் அணுகி பயன் பெறலாம்.

நீரில் இறங்கி. படிந்து, மூழ்கி, துளைந்து, வாய்மடுத்து, ஆடி களிக்கலாம்
அவனும் படிந்து, மூழ்கி, துளைந்து, வாய்மடுத்து, ஆடி களிக்கக்கூடியவன்

குழாமாகச்சென்று நீரை அனுபவிப்பது மிகவும் இன்பம் தரும்.
குழாமாகச்சென்று அவனை அனுபவிப்பதும் மிகவும் இன்பம் தரும்.

படகில் சிறிது த்வாரம் இருந்தாலும் நீர் உள்ளே புகுந்துவிடும்.
சிறிது இடம் கொடுத்தாலும் பகவான் நம்முள்ளே புகுந்து விடுவான்.

எல்லா நீரும் நீரே. ஆனால் நதிகளின் நீர் விசேஷம். எல்லார் மனதிலும் பகவான் உள்ளான். ஆனால் கோயில்களில் உள்ளவன் விசேஷம்.

கோயில்களில் உள்ளவன் விசேஷம். ஆனால் திவ்ய தேசங்களில் உள்ளவன் மிகவும் விசேஷம்.

தாகம் உள்ளவர் நீர் பருகுவர்.
தாபம் ( மன வருத்தம் ) உள்ளவர் பகவானைப் பருகுவர்.
ravi said…
*சென்னைக்கு அருகில் ""சிறுவாபுரி-தீண்டா திருமேனி ஆலயத்தின் அதிசயம்""*:

*சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோயில் செல்லும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு*.

*தீண்டா திருமேனி பெருமாள் அதிசயம். திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு (சிறுவாபுரி) கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் பல லட்சம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இத்திருக்கோயிலின் மிக அருகில் அமைந்துள்ளது பல நூற்றாண்டுகள் பழமையான *தீண்டா திருமேனி பெருமாள் கோவில்*.

*இத்திருக்கோவிலில் விசேஷம் என்னவென்றால் இங்குள்ள பெருமாள் திருமேனிக்கு அபிஷேகங்கள் எதுவும் செய்வதில்லையாம். ஏனென்றால் இத்திருமேனியில் அபிஷேகப் பொருட்கள் எதுவாயினும் ""திருமேனியுடன் ஒட்டிக்கொள்கிறது."" இதனால் இங்குள்ள அர்ச்சகர்கள் பெருமாள் திருமேனியை தொடாமல் அரிதாக அபிஷேகம் செய்கின்றனர். ""பெருமாளுக்கு சாத்தப்படும் அஸ்திரமும் திருமேனியுடன் ஒட்டிக்கொள்கிறது."" இது மிகவும் அதிசயமான ஒன்றாக இருக்கிறது. தவறுதலாக அர்ச்சகர்கள் கை விரல்கள் திருமேனியில் பட்டால் திருமேனியுடன் கைவிரல் ஒட்டி கொள்கிறதாம். மிகவும் சிரமப்பட்டு விரலை திருமேனியிலிருந்து எடுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.*

* *இது போன்று ""அபூர்வாமான* *அதிசயதக்க விசேஷ ஆலயம்"" பக்தர்கள் வருகை குறைவால் கேட்பாரற்று கிடைக்கிறது*

*தயவு செய்து சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தவறாமல் இத்திருக்கோவிலுக்கு சென்று தீண்டா திருமேனி ஆலயத்து சுவாமி தரிசனம் செய்யவும் திருக்கோயில் அருகாமையில்......*

*மேலும் இதே ஊரில் மிகவும் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த சுயம்பு லிங்கேஸ்வரர் ஆலயமும் உள்ளது. அதனையும் கண்டு ஆன்மீக பக்தர்கள் ""சிறுவாபுரி முருகனையும் −தீண்டா திருமேனி பெருமாள், சுயம்பு லிங்கேசுவரர் மூன்று ஆலய தரிசனம் செய்து அருள் பெறுங்கள் நன்றி*:

*இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை - தமிழ்நாடு*

*சிறுவாபுரி பாலசுப்ரமணியரே போற்றி*:
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
‘நிஷ்டா சாந்தி: பராயணம்’ என்று (விஷ்ணு) ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது. அதில் ஒரே விஷயத்தை அழகாக ஸம்பந்தப்படுத்திக்கொண்டு போவதாகச் சில நாமாக்கள் தொடர்ச்சியா வருவதுண்டு. அப்படி ஒரு ஏழெட்டு பேர் ஸந்நியாஸ விஷயமாகவே பூ பூவாகச் சேர்த்து மாலை தொடுத்தாற் போல் வருகிறது.
…………………….நிர்வாணம் பேஷஜம் பிஷக் | 
ஸந்ந்யாஸக்ருத் சமோ சாந்தோ நிஷ்டா சாந்தி:பராயணம் ||
[விரல் விட்டு எண்ணி] இப்படி ஒன்பது நாமாக்கள் ஒரே விஷயமாக வருகின்றன. ‘நிர்வாணம்’ – அதுதான் ஞான யோகத்தின் முடிவு. ஸகுணமாக விஷ்ணு என்று இருப்பவனேதான் அப்படி இருப்பவனும். பேஷஜம் என்றால் மருந்து. பவரோகத்திற்கு (ஸம்ஸார வியாதிக்கு) மருந்தான ஞானம் என்று அர்த்தம். “அருமருந்தொரு தனி மருந்து” என்று பாடுகிற மருந்து…..
முத்துத்தாண்டவர் என்கிற நடராஜா பக்தரின் பாட்டு அது. அவர் [ஸங்கீத] த்ரிமூர்த்திகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தவர். அவரைப் பாம்பு கடித்தபோது நடராஜாதான் மருந்து என்று சொல்லி இந்தப் பாட்டைப் பாடினாராம். உடனே விஷமும் இறங்கி விட்டதாம்…..
கர்மா விஷம் ஏறியபோது ஞானமான விஷங்கொல்லிப் பூண்டாக வருகிறவன் பகவான்தான்.
மருந்தும் அவனே, மருந்து தருகிற வைத்தியனும் அவனே!அதைத்தான் ‘பிஷக்’ என்று சொல்லியிருக்கிறது. இங்கே திருவான்மியூரில் ஸ்வாமி மருந்தீச்வரராக இருக்கிறார். வைத்தீச்வரன் கோவில் என்றே பேர் உள்ள ஊரில் ‘பவரோக வைத்யநாத ஸ்வாமி’ என்று ஸம்ஸார வியாதியைத் தீர்க்கிற ஞானாச்சார்யனாக இருக்கிறார். “கீதை என்ற மருந்தைக் கொடுத்த டாக்டர்” என்று ஆசார்யாள் [விஷ்ணு ஸஹஸ்ரநாம] பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.
கீதையின் ஸ்வாமி முடிவாகக் கொடுத்த மருந்து என்னவென்றால் ஸந்நியாஸந்தான். கர்ம யோகத்தின் வழியாக ஞான யோகத்தில் ஸந்நியாஸத்திற்குத்தான் அழைத்துக் கொண்டு போய் முடித்திருக்கிறார். ஆயுர் வேதத்தில் பேதிக்குக் கொடுத்துவிட்டு அப்புறம் மருந்து தருவதுண்டு. அப்படிக் கர்மாக் கழிசடை எல்லாம் போகவே கர்ம யோகத்தை கொடுத்துவிட்டு, அப்புறம் மருந்தாக ஞானத்தைக் கொடுக்கும்போது ஸந்நியாஸத்தை விதித்திருக்கிறார். ஆதியில் நாலு ஆச்ரமங்களையும் அவர்தான் உண்டாக்கி, அந்த்யாச்ரமமாக [முடிவிலுள்ள ஆச்ரமாக] இதை ஏற்படுத்தியவர். ‘ஸந்ந்யாஸக்ருத்’ என்ற நாமா அதைத்தான் தெரிவிக்கிறது.
ஸந்ந்யாஸக்ருத் சமோ
சமோ. சமம், சமம் என்று நிறைய பார்த்துக் கொண்டு போனோமே அதுவும் பகவத் ஸ்வரூபந்தான். மனஸ் அடங்குவது — அதுதானே சமம்? — அதுதான் ஞான யோகத்தின் உயிர்நிலை. துளிக்கூட அடங்காமல் அடங்காப் பிடாரியாக இப்போது நமக்கு இருப்பதிலிருந்து, துளித் துளியாக அது அடங்கிக் கொண்டே போவதில் எத்தனையோ ஸ்டேஜ்கள். முடிவில் துளிக்கூட மனஸ் என்று ஒரு வஸ்து இல்லாமல் அது அப்படியே ஆத்மாவிலே அடங்கிப் போவதுதான் ஸித்தி ஸ்தானம். அதுதான் ஸந்நியாஸிக்கு லக்ஷ்யம். நான்கு ஆச்ரமிகளில் ஒவ்வொருத்தனுக்கும் இதுதான் தர்மம் என்று சொல்கிற ஒரு ஸ்ம்ருதி ‘கொடேஷன்’ ஆசார்யாள் இந்த இடத்தில் கொடுத்திருக்கிறார். அதில், ‘ஸந்நியாஸிக்கு சமம் தர்மம்; வான ப்ரஸ்தனுக்கு நியமம் என்ற கட்டுப்பாடான தபோவ்ரதங்கள் தர்மம்; க்ருஹஸ்தனுக்கு தானம் தர்மம்; ப்ரம்மசாரிக்கு தர்மம் குரு சுச்ரூஷை’ என்று இருக்கிறது1.
அப்புறம் சாந்த: என்று நாமா வருகிறது. ‘சமம்’ என்பதோடு கூடியவன் சாந்தன்.
அதற்கடுத்தபடியாகத்தான் ‘நிஷ்டா’ என்றே நாமம் வருகிறது. ஸந்நியாஸியாகி, மனமடங்கப்பெற்ற சாந்தனாகி ஒருவன் ஞானாநுபவத்திலேயே நிலைத்து நிற்கிற நிஷ்டையில் நிற்கிறானே, அந்த நிலையும் பகவான்தான். ஸகுணத்தில் பகவானாக இருப்பவன் நிர்குணத்தில் இப்படி இருக்கிறான்.
அந்த நிலையிலிருக்கிற அமைதியை ‘சாந்தி’ என்றும் அதுதான் பரமான goal என்பதைப் ‘பராயணம்’ என்றும் இரண்டு நாமாக்களாகக் கொடுத்திருக்கிறது.
(இன்று பீஷ்ம ஏகாதசி- விஷ்ணு சகஸ்ரநாம தினம்)
ravi said…
புகவே வேண்டா புலன்களில்நீர்

புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின்

மிக்கவெல்லாம்
வேண்டா போக விடுமின்கள்

நகவே ஞாலத் துள்புகுந்து
நாயே அனைய நமையாண்ட
தகவே உடையான்

தனைச்சாரத்
தளரா திருப்பார் தாந்தாமே.🙌🙌🙌
ravi said…
ஐம்புலன்களின் துயர் வேண்டாம் எனில்,

தாமரை மலர் அனைய எம்பெருமான் திருவடிகளை
ஓயாது நினையுங்கள்.

பாம்பணிந்த எங்கள் பிரான் திருவடிகள் அன்றி
வேறொன்றும் நமக்கு வேண்டாமே...

போக விட்டு விடுங்கள்.

விலங்கைப்போல் நகைப்பிற்கிடமாய் வாழும் நம்மை,

அன்பினால் ஆட்கொள்ளும் வல்லமை கொண்ட‌
எங்கள் இறைவனைச் சாராது இருப்பின்

இப்பாழ் நெஞ்சு இளைப்பாறுவது எவ்வாறு ?🪷🪷🪷
ravi said…
[01/02, 17:45] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 76 started on 6th nov

*பாடல் 25* ...💐💐💐
[01/02, 17:45] Jayaraman Ravilumar: *பாடல் 25 ... மெய்யே என*

(வினை மிகுந்த வாழ்வை நீக்கு முருகா)

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?

கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.🪷
[01/02, 17:46] Jayaraman Ravilumar: முருகனை 'எத்தனை கலாதி' என்கிற திருத்தணிகைத் திருப்புகழில்
(பாடல் 247),

.. செக்கர் நிறமாய் இருக்கும் பெருமாளே ..

என்பார். ஆகமங்களிலும் அவன் நிறம் பால சூர்யப் பிரகாசம், குங்கும
வர்ணம், பச்சை வர்ணம் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளன.

முருகன்
காட்சி கொடுக்கும் பொழுது இந்த ஒளி எல்லா இடங்களிலும்
வியாபித்து வருவதை,

.. அடர் பவள ஒளி பாய ..

... என்பார் 'சுடரனைய திருமேனி' என்கிற சிதம்பரத் திருப்புகழில்
(பாடல் 502),

தந்திர சாஸ்திரங்கள் பல நிறங்களுக்கு பல விமர்சனத்தை தந்துள்ளன.

பிரம்மத்தை எந்த பாதிப்பும் இல்லாத வெள்ளை என்றும், அந்த
பிரம்மத்தினின்று வெளிப்படும் அம்சம் சிவப்பு நிறம் என்றும் கூறுவார்கள்.

அருவமான பிரம்மத்தின் பிரகாச அம்சம் சிவப்பு நிறமாய் உருவான
சிவனாகவும் முருகனாகவும் காட்சி அளிக்கிறது.

ஆகையால் உலகம்
உய்ய உருக் கொண்ட பிரமத்தின் விமர்சன அம்சமான முருகனைப்
பற்றுதலே கதியாகும்.
ravi said…
[01/02, 17:39] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ ஸர்வாதி
அச்யுத : |

*வ்ருஷாகபிரமேயாத்மா*
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[01/02, 17:39] Jayaraman Ravilumar: *102. வ்ருஷாகபயே நமஹ (Vrushaakapaye namaha)*
[01/02, 17:41] Jayaraman Ravilumar: அர்ஜுனன் எய்திய பாணம் கர்ணனின் கவசத்தைத் துளைத்துக் கொண்டு அவன் மார்பில் பாய்ந்தது.

கர்ணன் மாண்டு போனான்.

மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,

“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன்.

ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.

அப்போது சூரிய பகவான், “இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய்.
ravi said…
எந்த விதமான distractionsக்கும் இடம் கொடுக்காம, தடைகள்ங்கிறது வெளில இருந்து வரலாம், நமக்கு உள்ள இருந்து வரும், மனைவி மக்கள் ரூபத்திலயோ அல்லது நம் மனதுக்குள்ள இருந்து, ஏதோ நப்பாசைகள் ரூபத்திலயோ, பல விதத்தில் இந்த பக்திக்கு இடைஞ்சல் வரும்.

ஸ்வாமிகளுக்கு நிஜமாக கஷ்டங்கள் வந்தது.

அது எல்லாத்தையும் தாண்டிண்டு அவர், இடையறாத பக்தி பண்ணின்டு ஞான, வைராக்கியத்தை அடைஞ்சு விளங்கினார்.

அதுக்கு அவர் அந்த பஜனத்தை ஒரு கடமையாக காலை 5 மணியில் இருந்து ராத்திரி 10 மணி வரைக்கும் இந்த புஸ்தகங்கள் வச்சுண்டு பாராயணம் பண்றது, ப்ரவசங்கள் பண்றது, பாடம் எடுக்கறது, வேற பேச்சுக்கே இடம் கொடுக்காம, அந்த பகவானுடைய பேச்சிலேயே, அந்த பகவானோட கதைகளை கேட்கறதுலையே தன்னால் வாழ்நாள் முழுக்க செலவு பண்ணார்.

அதுக்கு தடைகள் இடைஞ்சல்கள் எல்லாம் அவ்வளவு வந்தது.

அது ஒண்ணுத்தையும் அவர் பொருட்படுத்தவில்லை

தானும் எந்த ஒரு ஆசைக்கும் இடம் கொடுக்காம அப்படி பக்தி பண்ணி காமித்தார்.🙌🙌🙌
ravi said…
[01/02, 17:53] Jayaraman Ravilumar: குலசேகர கவியும் இந்த 46 ஸ்லோகங்கள்ல அதைத் தான் ரொம்ப stress பண்ணி சொல்றார்ங்கிறது ஒரு inference, ஒரு realization
இந்த ஆவர்த்தி படிக்கும் போது.

இந்த 45 ஸ்லோகங்கள்ல பக்தியோட பெருமையையும், நாமத்தோட மஹிமையையும் சொல்லி, நமக்கு கிருஷ்ண பக்தியில ஊர்றதுக்கும், அதை அனுபவிக்கறதுக்கும், அதை வ்ருத்தி பண்ணிக்கரதுக்கும் அழகழகான வழிகள் சொல்லிக் கொடுத்து,

எதையெல்லாம் தவிர்க்கணும், எதையெல்லாம் சேர்க்கணும்னு சொல்லி கொடுத்தார்.
[01/02, 17:54] Jayaraman Ravilumar: இந்த கடைசி ஸ்லோகத்துல

यस्य प्रियौ श्रुतधरौ कविलोकवीरौ मित्रे द्विजन्मवरपद्मशरावभूताम् ।

तेनाम्बुजाक्षचरणाम्बुजषट्पदेन राज्ञा कृता कृतिरियं कुलशेखरेण ॥ ५६॥

யஸ்ய ப்ரியௌ ச்ருதித⁴ரௌ கவிலோகவீரௌ

மித்ரே த்³விஜன்மவர பாராசவாவபூ⁴தாம் ।

தேநாம்பு³ஜாக்ஷசரணாம்பு³ஜஷட்பதே³ன

ராஜ்ஞா க்ருʼதா க்ருʼதிரியம் குலசேக²ரேண ॥ 46 ॥
[01/02, 17:55] Jayaraman Ravilumar: ன்னு எனக்கு இரண்டு அன்பான நண்பர்கள் இருக்கா.

ஒருத்தர் பிராம்மண ஜாதியில பிறந்தவர்.

இன்னொருத்தர் மிஸ்ர ஜாதியில பிறந்தவர்.

இரண்டு பேரும் நன்னா படிச்சவா ‘ *கவிலோகவீரௌ* ’ இரண்டு பேரும் கவிலோக வீரர்கள்.

அதாவது கவிஸ்ரேஷ்டர்கள்.

இப்பேற்பட்ட இரண்டு நண்பர்கள் எனக்கு இருக்கா.

தாமரை கண்ணனான அம்புஜாக்ஷனுடைய முகுந்தனுடைய திருவடித் தாமரைகள்ல வண்டு போல என் மனம் எப்பவும் இருக்கு.

அந்த குலசேகரன் என்ற ராஜாவால் இந்த முகுந்தமாலை என்ற ஸ்தோத்ரம் செய்யப் பட்டதுன்னு வர்றது.
ravi said…
🌹🌺" *பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவிலுக்கு போகப்போறேன் என்று சொன்ன விட்டல பக்தன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺சேனாயி ஒரு முடி திருத்தும் நாவிதர், விட்டலன் பக்தர். தனது குடிசையில் அழகிய பாண்டுரங்கன் ருக்மணி சிலைகளை வைத்து இரவும் பகலும் பாண்டுரங்கன் பஜனை செய்வார்.

🌺மற்ற பக்தர்களும் அவரோடு சேர்ந்து அகண்ட பஜன் செய்வதும் வழக்கம். அவர் வாழ்ந்த காலம் நமது தேசத்தை முகலாயர்கள் ஆண்ட நேரம் அல்லவா. பந்தர்பூர் மற்றும் பல ஊர்களுக்கும் அதிகாரியாக ஒரு நவாப் முகல் சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக பண்டரிபுரத்தில் இருந்தான்.

🌺அவனுக்கு ஒரு பிரத்யேகமான நாவிதன் தேவை. ஒரு நல்ல ஆள் கிடைத்தால் அவனது மாளிகை அருகிலேயே இருக்க இடம் கொடுத்து, சகல குடும்ப செலவுகளையும் ஏற்று, சவுகரியமாக வைத்துகொள்வதாக அறிவிப்பு வந்தது. நவாபிடம் நாவிதனாக உள்ளவன் மற்றெவர்க்கும் பணி புரியக்கூடாது.

🌺இதிலென்ன கஷ்டம்? வேலைக்கு வேலையும் மிச்சம், கை நிறைய காசு, . இருக்க வீடு, சகல தேவைகளும் நவாப் செய்துகொடுப்பார். தினமும் ஒரு அரைமணி நேரம் நவாபிடம் வேலை, அவ்வளவு தானே?

🌺நிறைய நாவிதர்கள் இந்த வேலைக்கு போட்டி போட்டார்கள். சேனாயிக்கு இது தெரியாது தெரிந்துகொள்ள எந்த முயற்சியோ போட்டியோ இல்லை.

🌺விட்டலன் அருளால் இந்த உத்தியோகம் சேனாயிக்கு மட்டும் கிடைத்தது. இதில் என்ன சந்தோஷம் அவருக்கு என்றால், காலையில் சிறிது நேரம் மட்டும் தான் வேலை. மற்ற நேரமெல்லாம் வீட்டில் பாண்டுரங்கனோடும் மற்ற பக்தர்களோடும் விட்டலனை பாட நிறைய நேரம் கிடைக்குமல்லவா??

🌺மனிதனாக பிறந்தாலே போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் இல்லாமல் இருக்குமா? மற்ற நாவிதர்களுக்கு "இந்த சேனாயிக்கு வந்த வாழ்வை பார்த்தாயா? எப்போ நமக்கு கிடைக்க வில்லையோ, இவனை எப்படியாவது இந்த வேலையிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று வழி தேடிக்கொண்டிருந்தனர்.

🌺ஒருநாள் ஏகாதசி, நிறைய பாண்டுரங்க பக்தர்கள் வெளியூரிலிருந்து கூட்டமாக பஜனை ஆட்டம் பாட்டத்துடன் பண்டரிபுரம் விட்டலனை நோக்கி நடந்து கொண்டிருப்பதை சேனாய் பார்த்து விட்டார். அவர்களது விட்டலகானம் அவரை கவர்ந்தது.

🌺அவரையறியாமல் தலை, கால், கை எல்லாம் அந்த பக்திரசத்தில் ஆடி அவரை தன்னை மறக்க செய்தது, சேனாய் அப்படியே அவர்களோடு பண்டரிபுரம் கிளம்பிவிட்டார்.

🌺அவருக்கு வீடு வாசல், நவாப், அன்றைய வேலை எல்லாமே சுத்தமாக மறந்துபோனது.
இதை கவனித்துகொண்டிருந்த ஒருவன், நல்ல சமயத்தை நழுவவிடுவானா? நேராக நவாபிடம் சென்றான்.

🌺அய்யா!! யார் நீ? என்ன விஷயம்..
"அய்யா, இன்னிக்கு சேனாய் வரமாட்டானுங்க”

🌺ஏன்? "பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவிலுக்கு போகப்போறேன் என்று சொன்னானுங்க".. அதனாலே இன்னிக்கு நவாபை போய் பாக்கமாட்டேன்" வேணா நீ போய் அவன்கிட்ட சொல்லிடுன்னு சொன்னதாலே நான் சொல்ல வந்தேங்க"

🌺நவாபுக்கு கோவம் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை எகிறி ஆட்களை ஏவி அந்த சேனாய் நாயை கட்டி இழுத்துவா இங்கே, நானே அவனை வெட்டறேன்" என்றான்.

🌺சொல்லி சில நிமிஷங்கள் கூட ஆகவில்லை. அவன் எதிரே சேனாய் வழக்கம்போல கைகட்டி சேவகத்துக்கு நின்று கொண்டிருந்தார். நவாபுக்கு தன்னிடம் வேண்டுமென்றே யாரோ தப்பாக தகவல் சொல்லியிருக்கிறான் என்று தோன்றியது.

🌺அவன் எதிரே அமர்ந்து வழக்கம் போல சேனாய் முடிதிருத்தும்போது இன்று என்றுமில்லாத ஒரு சந்தோஷம் நவாபுக்கு ஏற்பட்டது. ஒவ்வொருமுறை நவாபை தொட்டும், நேரே பார்த்தும் வேலை செய்யும்போது அவனுக்கு மனமெல்லாம் ஒரு அமைதி, சொல்லவொண்ணா களிப்பு தோன்றியது, நவாப் இன்பவானில் பறந்துகொண்டிருந்தான்.

🌺“சேநாயி இன்று உன் வேலை பிரமாதம். என்ன அப்படி இன்று விசேஷம்” என்று கேட்டுகொண்டிருந்தபோது அவன் முன் விட்டலனின் அழகிய முகம் ஒரு கணம் தோன்றி மறைந்தது.

🌺காந்த கண்கள், புன்முறுவல், செந்தாமரை முகம், கஸ்தூரி திலகம் அனைத்தும் அவனை புளகாங்கிதமடைய செய்தது.

🌺அந்தநேரம் சேவகர்கள் சேனாயியை கட்டி இழுத்து கொண்டு வந்து நிறுத்தினர்.

🌺திகைத்த நவாப்!! எதிரே இதுவரை இருந்த சேனாயியை தேடிய போது அவன் இல்லை.

🌺இதற்குள் சேநாயி வேலைக்கு கிளம்பும்போது வழியில் பாண்டுரங்க பக்தர்களை பார்த்தது, வேலையை மறந்து அவர்களோடு பண்டரிபுரம் சென்றது பாதிவழியில் சேவகர்கள் அவனை பிடித்து கட்டி இழுத்து வந்தது அனைத்தும் சொல்லப்பட்டாலும் நவாபின் காது தான் இதை கேட்டதே தவிர அவன் சிலையாக பாண்டுரங்கனே தன் முன் தோன்றி தனது பக்தனின் வேலையை செய்தான் என்பதை புரிந்து கொண்டான்…

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 475* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*200 सर्वमङ्गला - ஸர்வமங்களா -*

புனித ஸ்வரூபி.

சிவம் என்றாலே மங்களம்.

அவள் சிவை.

புனிதத்தின் பிறப்பிடம் அம்பாள்.

சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே ....

என போற்றுகிறோமே அவள் அருள் இன்றி அணுவும் அசையாது
ravi said…
200 நாமங்கள் பார்த்து விட்டோம் அவள் அருளால் ... மலைப்பாக இருக்கிறது ... ஒரு நாமம் கூட நம்மை சோர்வடைய செய்யவில்லை .. மாறாக தேனை அள்ளி அள்ளி குடிப்பது போல் உள்ளது ...
Shivaji said…
சக்தியின் அருள் உங்களுக்கு paripoornamai உள்ளது. ஶ்ரீ maathere நமஹா.🌹🌹🙏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 71*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
आहितविलासभङ्गीमाब्रह्मस्तम्बशिल्पकल्पनया ।

आश्रितकाञ्चीमतुलामाद्यां विस्फूर्तिमाद्रिये विद्याम् ॥ ५६॥

56. Aahitha vilasa bangeem Aabrahma sthambha shilpas kalpanaya,

Aasritha Kanchim athulaam aadhyaam visphoorthi maadriye vidhyaam.

ஆஹிதவிலாஸபங்கீமாப்ரஹ்மஸ்தம்பஶில்பகல்பனயா |

ஆஶ்ரிதகாஞ்சீமதுலாமாத்யாம் விஸ்பூர்திமாத்ரியே வித்யாம் ||56|
ravi said…
ப்ரளயத்தில் மறைந்த அனைத்து ஜீவன்களும் மீண்டும் புத்துயிர் பெற்று வளர்ந்து வாழ காரணமாக இருப்பவள் அம்பாள் ஒருவளே .

புழு முதல் பிரம்மன் வரை அனைத்து ஜீவன்களும் தோன்ற காரணம் அவளே.

உஷ்ணம் ஏற்பட்டு பால் எப்படி பொங்குமோ அப்படி அவளிடமிருந்து உருவானவையே சகல ஜீவராசிகளும்.

அவள் மாயை, காஞ்சியை அரசாளும் காமாக்ஷி மஹாராணி.

பரமேஸ்வரன் உள்ளத்தை கொள்ளை கொண்டவள்.

அவளை நமஸ்கரிக்கிறேன்.🪷🪷🪷
ravi said…
உலகம் உண்ட பெருவாயா !

உலப்பில் கீர்த்தி அம்மானே !

நிலவும் சுடர் சூழ் ஒளிமூர்த்தி !

நெடியாய் ! அடியேன் ஆருயிரே !

திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே !

குலதொல் அடியேன் உன பாதம் கூடும் ஆறு கூறாயே.

(திருவாய்மொழி - 6.10.1) - *நம்மாழ்வார்*🙌
ravi said…
உலகம் உண்ட பெருவாயா !

உலப்பில் கீர்த்தி அம்மானே !

நிலவும் சுடர் சூழ் ஒளிமூர்த்தி !

நெடியாய் ! அடியேன் ஆருயிரே !

திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே !

குலதொல் அடியேன் உன பாதம் கூடும் ஆறு கூறாயே.

(திருவாய்மொழி - 6.10.1) - *நம்மாழ்வார்*🙌
ravi said…
(பிரளய காலத்தில்) பூவுலகை விழுங்கி (திருவயிற்றில் வைத்துக்) காத்த அகண்ட வாயனே

நிகரில்லாத புகழ்/பெருமை வாய்ந்த இறையவனே

நிலவும் சுடர் சூழ் - மாறாத/மங்காத பிரகாசம் கொண்ட
ஒளிமூர்த்தி ! -

சோதி வடிவானவனே

வடிவத்திலும், குண
பெருமைகளிலும் உயர்ந்து நிற்பவனே

என் உயிருக்கு ஒப்பானவனே

உலகுக்கு ஒரு திலகம் போல வாய்த்திருக்கும்
திருவேங்கடத்து எம்பெருமானே ! -

திரு
வேங்கடமலையில் நின்று அருளும் அண்ணலே

பல தலைமுறைகளாக உனக்குத் தொண்டு செய்யும் குலத்தில் பிறந்த நான்

உனது திருவடிகளை வந்தடையும்
வழி வகையை உரைப்பாயா *கண்ணா* 🦜
ravi said…
❖ *101 மணிப்புராந்தருதிதா* = மணிபூரக சக்கரத்தில் எழுபவள்

(மணிபூரகம் தொப்புளுக்கு மேல் அமைதிருக்கிறது)
ravi said…
மணியே மாணிக்கமே
மரகதமே மாதுளமே
மயிலே உயிலே ஊர்வலமே

துணையே தோப்பே தூயவளே தூங்கா விளக்கே

தூய்மைக்கும் வாய்மைக்கும் துணை போகுபவளே

இவை எல்லாம் என் வர்ணனை என்றே நினைத்தாயோ *அம்மா*??

இல்லை இவை எல்லாம் உன் நாமம் சொல்லும் அர்த்தங்கள்

முடிவுண்டோ சர்க்கரைக்கு அதன் தித்திப்பு ...

குன்றி விடுமோ தேன் அதன் சுவை தனில் ...

கற்கண்டு கசக்குமோ

பால் பாயசம் உப்பு கரிக்குமோ

உன் நாமம் சொல்லும் நா இதில் தேனும் பாலும் பாகும் ஓடுவது என்றும் நிற்குமோ தாயே
ravi said…
நான் நேத்தி நினைச்சேன்.

இந்த ஸ்லோகம் யாராவது ஒரு பக்தர் இந்த குலசேகராழ்வாரைப் பத்தி சொல்லி அவரால இந்த ஸ்தோத்ரம் இயற்றப்பட்டதுன்னு சொல்றார்னு.

ஏன்னா அப்படி இருக்கு.

குலசேகரர் என்ற அரசரால் இந்த பிரபந்தம் இயற்றப்பட்டது ன்னு meaning வர்றது.

ஆனா குலசேகர ஆழ்வாரே கூட இதை சொல்லியிருக்கலாம்.

மஹான்கள் அந்த மாதிரி ரொம்ப எளிமையா இருப்பா. தன்னைப் பத்தி straight forward introduction.

அப்படி குழந்தை போல இருப்பா.

அதுமாதிரி நண்பர்களை நினைச்சு எப்பவுமே நன்றி பாராட்டுவா.
ravi said…
இந்த மஹான்கள் குலசேகர கவி, ஆதி சங்கரர், கிருஷ்ண சைதன்யர், மஹாபெரியவா, சிவன் சார்,கோவிந்தா தாமோதர ஸ்வாமிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண பகவன், அப்படி அந்த அடியார் கூட்டம் எல்லாருமே ஒருத்தர் தான்.

அவா எல்லாமே பவக்கடலை தாண்டிட்டா. ஒரு கோடு மாதிரி.

அதை தாண்டிட்டா அவா.

தாண்டின உடனே அடியார் கூட்டத்துல சேர்ந்து, பகவானோட அனுபவம் அவாளுக்கு கிடைச்சு, அந்த பேரானந்தத்துல மூழ்கி, அதுல சில பேர், நம்மோட சிலதை பகிர்ந்துக்கறா.

அந்த ஸ்தோத்திரங்களை படிக்கற பாக்கியம் நமக்கு கிடைச்சிருக்கு.

*நாமும் என்னிக்காவது ஒரு நாள் பகவானோட அடியார் கூட்டத்துல சேரணும்னு வேண்டிக்கணும்.*

நமக்கு பகவானோட அனுபவம் கிடைக்கறதோ இல்லையோ, அது வேணும் என்று, அதுக்கு motivation இருக்கோ இல்லையோ, இந்த அடியார்கள் பெற்ற பேறு, அவாளுடைய கதைகள் எல்லாம் படிக்கும் போது நானும் அடியார் கூட்டத்துல சேரணும் என்கிற பிரார்த்தனைக்காகவாது, அவா சொன்னதைக் கேட்டு அந்த பக்தி மார்க்கத்துல போகணும்.

நாமும் பக்தி பண்ணனும். நாம ஜபங்கள் எல்லாம் பண்ணனும்.🙌🙌🙌
ravi said…
02.02.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 24)

Sanskrit Version:

सञ्जय उवाच
एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत।
सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम्।।1.24।।

English Version:

sanjaya uvaacha

evamukto hrishikeshah:
gudaakeshena Bharatha |
senayorubhayormadhye
sthaapayitva rathotamam ||


Shloka Meaning

Sanjaya says

Arjuna goes by many names. Gudaakeshah is one of the names of Arjuna.
Gudaakeshah means one who has conquered sleep. That is a literal meaning.
The philosophical meaning is one who has conquered tamo guna
and one who is always wakeful and alert.

Additional details:

(Three gunas which will read later. Tamo guna, Rajo Guna and Satva guna)

Concentration of mind and avoiding mistakes and errors are essential while listening
to spiritual teaching.

The term Gudaakeshah implies that Arjuna is capable of receiving wisdom which
the Lord is going to reveal down the line.

In one of the previous shlokas, Arjuna had requested his sarathy (Krishna)
to place his chariot between the two armies for him to have a good look at
the battle line up.

Krishna goes by Arjuna's instructions and lines the chariot in between the
two competing armies (The equivalent of army in sanskrit is sena).

Here the ratham is decorated with the adjective uttamam. Uttamam means great, grand etc.
It is a grand chariot.

Jai Shri Krishna 🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -02.02.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-47

மூலம்:

அறிவுமறி யாமையுதீர்ந்(து) ஆனந்தம் எய்திக்
குறிகடந்து நிற்பதென்று கொல்லோ – மறியணிகைச்
சங்கரன்கட் பாலா தமிழ்ப்பழனிக் காவலவா!
ஐங்கரத்தோன் தோழாசொல் லாய் (47).

பதப்பிரிவு:

அறிவும் அறியாமையும் தீர்ந்து ஆனந்தம் எய்திக்
குறி கடந்து நிற்பது என்று கொல்லோ! – மறி அணி கைச்
சங்கரன் கண் பாலா! தமிழ்ப்பழனிக் காவலவா!
ஐங்கரத்தோன் தோழா! சொல்லாய்!! (47).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

மரி- மான்; மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள். சிவபெருமான்தாம் வேதப்பொருளாக உள்ளவர். இதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே மானை கையில் ஏந்தினார். வேதநாயகன் ஈசன் என்பதை அவரின் கையில் உள்ள மான் உணர்த்துகின்றது.

மானைக் கையில் ஏந்தி தான் வேதநாயகன் என்பதை உணர்த்தும் சங்கரனின், நெற்றிக்கண்ணில் உதித்த பாலனே! ஓர் ஆண் ஈன்ற அதிசயமே! தமிழின் உறைவிடமான பழனியின் காவலனே! ஐங்கரத்தோன் என்னும் உன் அண்ணனின் அன்புத் தோழனே! அறிவு, அறியாமை எல்லாம் தீர்ந்து, நிறைந்த ஆனந்தம் பெற்றுக் காலம் எல்லாம் கடந்து நிற்பது என்று நீயே சொல்லாய் பழனிப் பெருமானே! அருள்வாய் பழனித் தலைவனே!

பேராண்மையுடை ஆண் சிவன்; அவன் கண் பெற்ற ஆண்-எம் பழனிப் பெம்மான்! மண், விண் அனைத்திலும் அவன் பெயரே பண்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺" 🌺"Vithala Devotee who Said He Will Go to Bandaripuram Pandurangan Temple - A Simple Story to Explain 🌹🌺

-------------------------------------------------- ------


🌹🌺Senai is a hairstylist, a devotee of Vitalan. In his hut he keeps beautiful Pandurangan Rukmini idols and performs Pandurangan bhajan day and night.


🌺 It is customary for other devotees to perform Akanda Bhajan along with him. Isn't it the time when the Mughals ruled our country? A Nawab was the representative of the Mughal Emperor at Bhandaripuram, who was in charge of Bhandarpur and many other towns.


🌺He needs a special Navidan. An announcement was made that if a good man was found, he would be given a place to stay near his mansion, bear all the family expenses and keep him comfortable. A Nawab's apprentice should not work for anyone else.


🌺 What is this difficulty? Work left for work, plenty of money, . Nawab will provide the house and all the necessities. Work for Nawab for half an hour every day, is that all?


Many aspirants competed for this job. Senai doesn't know this and there is no attempt or competition to find out.


🌺Vithalan Arul got this job only for Senai. What makes him happy is that he only works for a short time in the morning. Don't you have a lot of time to chant Vittalan at home with Panduranga and other devotees all the rest of the time??

🌺 If you are born as a human, you will be free of competition, envy and heartburn? To the other navigators, "Have you seen the life that came to Senai? Whenever we did not get it, they were looking for a way to somehow get him out of this job.

🌺One day on Ekadasi, Senai saw a large number of Banduranga devotees walking towards Bhandaripuram Vithalan with bhajans from outside. Their vivacity impressed him.

🌺Unbeknownst to him, his head, feet and hands all swayed in that bhaktirasam and made him forget himself, Senai left with them for Bandaripuram.

🌺 The door of the house, the Nawab and the work of the day were completely forgotten for him.
Will one who observes this, miss the good time? He went straight to the Nawab.

🌺 Sir!! who are you? What is the matter..
"Sir, Senai will not come today"

Why? "You said that you will go to Banduripuram Pandurangan Temple".. So I will not go and see the Nawab today.

🌺 Nawab's anger rose from the soles of his feet to the top of his head.

🌺 It wasn't even a few minutes. In front of him, Senai was standing for service with his hands tied as usual. It seemed to the Nawab that someone had deliberately misinformed him.

🌺 As he sat in front of him and shaved Senai as usual, the Nawab felt a happiness unlike today. Every time he touched and looked directly at the Nawab while working, he was filled with peace and unspeakable joy, the Nawab was flying in pleasure.

🌺 "Senai, your work today is amazing. As he was asking, "What's special today?" Vitalan's beautiful face appeared and disappeared in front of him for a moment.

🌺Magnetic eyes, phunmuruval, sentamarai face, musk tilakam all made him ravishing.

🌺 At that time, the servants tied up Senai and brought him to a stop.

🌺 Stunned Nawab!! When I looked for Senai, who was in front of me, he was not there.

🌺Meanwhile, when Senai was leaving for work, Banduranga saw devotees on the way, he forgot his work and went with them to Bandaripuram. Halfway, the servants caught him and dragged him, but the Nawab's ears only heard this, but he understood that Banduranga himself appeared before him as an idol and did the work of his devotee.

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹Valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இடமாகவுள்ள ‘திச்’சை வைத்தே ‘தேசம்’ என்ற வார்த்தை உண்டாயிருக்கிறது. தேசம் என்பது நாலு திசைகளும் வரையறுக்கப்பட்ட இடப்பரப்புதானே? ‘ப்ரதேசம்’ என்பதும் இதேபோல் உண்டான வார்த்தை.

செய்யவேண்டியதைச் சொல்லிக் கொடுக்கும் ‘திச்’சிலிருந்து ஆதேசம், ஸந்தேசம், உபதேசம் என்ற வார்த்தைகள் வந்திருக்கின்றன. பொதுவாக எல்லா ஜனங்களுக்குமுள்ள திசைகளில் குறிப்பிட்ட ஜனங்களுக்கு மாத்திரம் உடைமையாக எல்லை கட்டித் தரும் பகுதி ‘தேசம்’. ஆகையால் உடைமைகளையே பிரதானமாக நினைக்கும் மநுஷ்ய மனப்பான்மையின்படி அந்த வார்த்தை இடப்பரப்புக்கு மட்டுமே உரியதென்று ஆகிவிட்டது. வினைச்சொல்லாகவும், நல்வினையில் ஒருவரைச் செலுத்தும் உத்தரவாகவும் உள்ள ‘திச்’சிலிருந்து ‘தேசம்’ என்று இன்னொரு வார்த்தையைக் கொண்டு வராமல் ‘தேச’த்திற்கு, ‘ஆ’, ‘ஸம்’, ‘உப’ என்று அடை போட்டு ஆதேசம், ஸந்தேசம், உபதேசம் என்ற வார்த்தைகளையே கொண்டு வந்திருக்கிறார்கள்.

ravi said…
ஆதேசம் என்றால் அதிகாரபூர்வமான உத்தரவு. தெய்வக் கட்டளையாக வெளிப்படவோ மனஸுக்குள்ளேயோ ஒன்று தோன்றுவதைக்கூட ஆதேசம் என்றே சொல்வது.

ஸந்தேசம் என்றால் தகவல், செய்தி. ‘உத்தரவு’ என்பதன் அதிகாரம் ஒட்டிக் கொள்ளாமல் ஸாதாரணமாக அனுப்பும் எல்லா ‘மெஸ்ஸேஜு”மே ஸந்தேசந்தான்.

ஒன்றைச் சொல்லிக் கொடுப்பது என்பதன் ஸம்பந்தமில்லாமல், ‘உத்தேசம்’, ‘ஏகதேசம்’ என்றும் ‘தேசம்’ போட்டுக் கொண்டு இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன.

ravi said…
உத்தேசம்’ வெளியிலே உத்தரவாகவோ, ஸாதாரண செய்தியாகவோ சொல்லாமல் மனஸுக்குள்ளேயே ஒன்றை நினைப்பது. நிச்சயமாகத் தெரியாததை ஒரு குறிப்பாக அநுமானித்துச் சொல்லும்போதும், “எத்தனை என்று ஸரியாகத் தெரியாது; உத்தேசமாகச் சொன்னேன்” என்கிறோம். பகவானே ‘விபூதி யோக’த்தில் தாம் ஒவ்வொரு வர்க்கத்திலும் ச்ரேஷ்டமான எது எதுவாக இருக்கிறாரோ அதையெல்லாம் அடுக்கிக்கொண்டே போய்விட்டு, முடிவில், “இத்தனை சொன்னதுங்கூட என்னுடைய அகண்ட விபூதிகளைப் பூராவாக அடக்கிவிடவில்லை;இவ்வளவுங்கூட ஒரு குறிப்புக் காட்டுவதாகச் சொன்னது தான்” என்னும்போது “உத்தேசத: ப்ரோக்த:” என்றே சொல்லியிருக்கிறார். இங்கே ‘உத்தேசம்’ என்பதை ஆசார்யாள் ‘ஏகதேசம்’ என்று [தம்முடைய பாஷ்யத்தில்] அர்த்தம் பண்ணியிருப்பதால் ஏகதேசம் என்ற வார்த்தைக்கும் ‘குறிப்பாகத் தெரிவிப்பது’ என்ற அர்த்தமிருப்பதாகத் தெரிகிறது. முழுசான ஒன்றில் ஒரு பங்காக இருப்பதை ‘ஏகதேசம்’ என்பது. பேச்சு வழக்கில் மற்றவர்களுக்குப் பங்கு தராமல் ஒருத்தரே முழுசையும் செய்தால் ‘ஏகதேசமாக அவரே பண்ணிட்டார்’ என்கிறோம்.

ஆகக்கூடி, உத்தேசம், ஏகதேசம் என்ற வார்த்தைகளில் நம் ‘டாபிக்’கான ‘வழி’ ஸமசாரமில்லை. ‘உத்தேசம்’ வேண்டுமானால் ஒரு வழியை யோசிப்பதாகவும் இருக்கலாம். ‘ஸந்தேச’த்தில் கூட வழி சொல்வது இருந்துதானாக வேண்டுமென்றில்லை. ‘ஆதேசம்’ ஏதோ ஒரு வழியில்தான் போகணுமென்று கட்டாயமாகவே கட்டளை போட்டு விடுகிறது.

பாக்கி இருக்கிற வார்த்தை ‘உபதேசம்’ – அதைச் சொல்லத்தான் இத்தனை பீடிகையும் போட்டது!

‘உபதேசம்’ என்றவுடன் குரு-சிஷ்யர்கள் நினைவு வந்து விடுகிறது. உபதேசம் கொடுக்க குருவும், பெற சிஷ்யனும் இல்லாமல் உபதேசம் என்பதே கிடையாது.

எவரும் எவருக்கும் எதையும் சொல்வது ஸந்தேசம். கேட்பவனுக்கு நல்லதோ இல்லையோ அவன் கேட்டுத்தானாக வேண்டும் என்று ராஜா மாதிரி உயர்ந்த ஸ்தானத்திலிருப்பவன் ப்ரஜை மாதிரி கீழ் ஸ்தானத்திலிருப்பவனுக்குச் சொல்வது ஆதேசம். கேட்பவனின் நல்லதற்காகவே குரு என்பவர் சிஷ்யனுக்குச் சொல்வது உபதேசம்.

ஸ்தானத்தில் ராஜாவுக்கும் ப்ரஜைக்கும் இருப்பதை விடவும் குரு சிஷ்யர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு ஜாஸ்தி. குரு என்பவர் ஈச்வரனின் ஸ்தானத்திலேயே வைக்கப் பட்டிருப்பவர். ஒரு ப்ரஜை ராஜாவுக்குக் கட்டுப்பட்டிருப்பதை விடவும் சிஷ்யன் குருவிடம் அடங்கிக் கட்டுப்பட்டிருக்க வேண்டியவன்.

ஆனாலும் ‘ஆதேசம்’ என்பதன் கண்டிப்பு இல்லாமல், குரு செய்வதற்கு ‘உபதேசம்’ என்று மாதுர்யத்தை, ப்ரேமையை (மதுரம் மதுரம் என்றால் தேனும், சர்க்கரையுந்தானா மதுரம்? எல்லாவற்றையும் விட மதுரம் ப்ரேமைதான். அப்படிப்பட்ட ப்ரேமையை)த் தெரிவிப்பதாகப் பெயர் கொடுத்திருக்கிறது.
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு உரிய சிறப்புகள் பற்றிய பதிவுகள் :*

வடஇந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்று கூறுவது உண்டு. அந்த வகையில் மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது. தென்னிந்தியாவில் செவ்வாயோ வெறும் வாயோ என்ற வழக்கு உள்ளது.

எனவே, அன்றைய தினம் தெய்வ வழிபாடு சிறந்தது எனக் கூறுவர். மேல்நோக்கு நாள், நல்ல நட்சத்திரம் இருந்து அமிர்தயோகமான செவ்வாய்க்கிழமையில் வீடு/மனை வாங்க முன்பணம் அளிப்பதுடன், ஒப்பந்தமும் போடலாம், வியாபாரம் துவங்கலாம்.

செங்கல் தொழில், கட்டிட கட்டுமானம் ஆகிய தொழில்கள் துவங்கவும் உகந்தது. பொதுவாகவே, மருந்து உண்பதற்கும், ரத்த தானம் செய்வதற்கும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் செவ்வாய்க்கிழமை உகந்தது.

வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்று கூறுவர். அன்றைய தினம் இறைவனை வழிபட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும். இறந்தவரை எழுப்புவிக்கும் சஞ்சீவி மந்திரம் அறிந்தவர் சுக்கிராச்சாரி என ஜோதிட கூறுகிறது. சூட்சும சக்தி உடையவராக சுக்கிரன் கருதப்படுகிறார்.

எனவே, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இறைவனை வணங்கினால் காரிய சித்தி கிடைக்கும். தோஷக் குறைகளும் நிவர்த்தியாகும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
[02/02, 16:39] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ ஸர்வாதி
அச்யுத : |

*வ்ருஷாகபிரமேயாத்மா*
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[02/02, 16:39] Jayaraman Ravilumar: *102. வ்ருஷாகபயே நமஹ (Vrushaakapaye namaha)*
[02/02, 16:42] Jayaraman Ravilumar: செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.

“ *க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்”* என்று அதனால் தான் சொல்கிறோம்.

அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும்
முரண்பாடு வருகையில் விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய்.

அதனால் தான் அழிந்தாய்.

தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம் தான்.

அதற்காக இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா?

நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான்!
ravi said…
[02/02, 16:34] Jayaraman Ravilumar: சிவானந்தலஹரி 62வது ஸ்லோகம் பொருளுரை
[02/02, 16:36] Jayaraman Ravilumar: முந்தைய ஸ்தோத்திரத்தில் பக்தியினுடைய இலக்கணத்தை விரிவாகச் சொன்னார். இந்த ஸ்தோத்திரத்தில் பக்தியை தாயாக உருவகித்து, பக்தனை குழந்தையாக வர்ணிக்கிறார்.🙏🌸

ஒரு தாயானவள் தன் குழந்தைகளுக்கு பணிகளை செய்யும்போது பக்தி உணர்வை ஊட்டி ஊட்டி வளர்க்க வேண்டும் என்பதை இந்த ஸ்தோத்திரத்தின் மூலம் மிக அழகாக வலியுறுத்துகிறார்.🙏🌸
ravi said…
இது பக்தியின் சிறப்பை எடுத்துக் காட்டும் ஒர் சிறப்பான ஸ்லோகம்!

பக்தியாகிற தாய் பக்தனாகிற குழந்தையை ரக்ஷிக்கிராள் எப்படி?

ஈஸ்வரதியானமாகிற தொட்டிலில் பக்தனான குழந்தையைத் தூங்கப் பண்ணுகிறாள்.

குழந்தையிடம் உள்ள அன்பால் ஆனந்தக் கண்ணீர் பெருகி அது குழந்தையின் உடம்பை நனைக்கும்,

அதனால் மயிர் கூச்சல் உண்டாகும் !

அது போல் பக்தனுக்கு மயிர்கூச்சல் உண்டாகி உடல் சிலிர்க்கும்!

எண்ணங்களாகிற சுத்தமான வஸ்த்ரத்தால் பக்தன் உடலைப் போர்த்துகிராள்!

அதனால் ஈ எறும்பு, குளிர் இவற்றின் உபாதியால் துன்பம் விளைவிக்கக் கூடிய துன்பம் விளைவிக்கும் எண்ணங்கள் பக்தனை அணுகாமல் காக்கிறது !

வேதம் எனப்படும் சங்கத்தில் உள்ள பரமேஸ்வர் சரித்ரமாகிய பாலை பக்தனுக்கு ஊட்டுகி ராள்.

ருத்ராக்ஷம், விபூதியால் ரக்ஷா பந்தன் செய்கிறாள் !

தாயின் மேன்மையையும் வெளிப்படுத்துகிறது ! தாயிற் சிறந்த ஒர் கோயில் இல்லை அல்லவா?
ravi said…
முந்தைய ஸ்தோத்திரத்தில் பக்தியினுடைய இலக்கணத்தை விரிவாகச் சொன்னார். இந்த ஸ்தோத்திரத்தில் பக்தியை தாயாக உருவகித்து, பக்தனை குழந்தையாக வர்ணிக்கிறார்.🙏🌸

ஒரு தாயானவள் தன் குழந்தைகளுக்கு பணிகளை செய்யும்போது பக்தி உணர்வை ஊட்டி ஊட்டி வளர்க்க வேண்டும் என்பதை இந்த ஸ்தோத்திரத்தின் மூலம் மிக அழகாக வலியுறுத்துகிறார்.🙏🌸
ravi said…
[02/02, 16:31] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 77 started on 6th nov

*பாடல் 25* ...💐💐💐
[02/02, 16:31] Jayaraman Ravilumar: *பாடல் 25 ... மெய்யே என*

(வினை மிகுந்த வாழ்வை நீக்கு முருகா)

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?

கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.🪷
ravi said…
இவ்வாழ்வு ஏற்படக் காரணம் நாம் முன் பிறவிகளில் செய்த வினைகளே.

வினைகள் மூன்று வகைப்படும். பல பிறவிகளில் சம்பாதித்த மூட்டையே
சஞ்சிதம்.

இதிலிருந்து ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவித்து
வருகிறோம்.

இதுவே பிராப்தம். இந்தப் பிறவியில் பல செயல்களைச்
செய்து, புதிய வினைகளைச் சம்பாதிக்கிறோம்.

இவ்வாறு உயிர்கள்
வினைகளை புசிக்க உதவுகின்ற சக்திக்கு *திரோதானம்* என்று பெயர்.

இந்த திரோதான சக்திதான் பொய்யான உலக வாழ்க்கையை மெய் என
நினைக்கச் செய்கிறது.

இவ் உலக வாழ்வுதான் மெய் என நினைக்கும்
வரையில், வினை நாசம் ஆகாது.

அது திருப்ப திருப்ப பிறவியைக்
கொடுத்துக்கொண்டேதான் இருக்கும்.

இந்த வினைச் சுழலில் அகப்பட்ட
உயிர், ஒரு துரும்புபோல் வருவதும் போவதுமாய் சுழன்று கொண்டேதான்
இருக்கும்.

இதைத்தான் அலைதல் என்று இப்பாட்டில் கூறுகிறார்
ravi said…
இவ்வாழ்வு ஏற்படக் காரணம் நாம் முன் பிறவிகளில் செய்த வினைகளே.

வினைகள் மூன்று வகைப்படும். பல பிறவிகளில் சம்பாதித்த மூட்டையே
சஞ்சிதம்.

இதிலிருந்து ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவித்து
வருகிறோம்.

இதுவே பிராப்தம். இந்தப் பிறவியில் பல செயல்களைச்
செய்து, புதிய வினைகளைச் சம்பாதிக்கிறோம்.

இவ்வாறு உயிர்கள்
வினைகளை புசிக்க உதவுகின்ற சக்திக்கு *திரோதானம்* என்று பெயர்.

இந்த திரோதான சக்திதான் பொய்யான உலக வாழ்க்கையை மெய் என
நினைக்கச் செய்கிறது.

இவ் உலக வாழ்வுதான் மெய் என நினைக்கும்
வரையில், வினை நாசம் ஆகாது.

அது திருப்ப திருப்ப பிறவியைக்
கொடுத்துக்கொண்டேதான் இருக்கும்.

இந்த வினைச் சுழலில் அகப்பட்ட
உயிர், ஒரு துரும்புபோல் வருவதும் போவதுமாய் சுழன்று கொண்டேதான்
இருக்கும்.

இதைத்தான் அலைதல் என்று இப்பாட்டில் கூறுகிறார்
ravi said…
❓❗❓❗❓❗❓❗
சோனியா காந்தி நாட்டிற்கு செய்த தொண்டு என்னென்ன?
தெரியுமா?

❓❗❓❗❓❗❓❗

*ஆட்டமா?*

*'சதி'ராட்டமா*❓

"நாளை நான் சண்டிகரை அடைந்த பிறகு...

'போஃபர்ஸின்' அனைத்து ரகசியங்களையும் வெளியிடப் போகிறேன்..."

- கியானி ஜைல் சிங் (முன்னாள் ஜனாதிபதி.)

அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு இருந்தது.

இருப்பினும், டெல்லி-சண்டிகர் சாலையில்...

ravi said…
ஒரு லாரி சப்தமிட்டு வந்து ஜெயில் சிங்கின் காரை நசுக்கியது.��

*அங்கேயே அவர் இறந்தார்* ��

*எந்த விசாரணையும் நடக்கவில்லை*❗

❓❓❓❓❓❓❓❓

"காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை வேட்புமனு தாக்கல் செய்வேன்..."

- ராஜேஷ் பைலட்

(காங்கிரஸ் தலைவரின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளாமல் அறிவிப்பு செய்தார்.)

எதிரே வந்த பேருந்து அவரின் காரை நசுக்கியது.��

*அங்கேயே இறந்தார் ராஜேஷ் பைலட்* ��

*எந்த விசாரணையும் நடக்கவில்லை*❗

❓❓❓❓❓❓❓❓

ravi said…
மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களிலும் செயல்பாட்டின் முறை ஒன்று தான்.

மூன்றாவது சம்பவத்தில் செயல்பாட்டின் முறை வேறுபட்டது...��

*ஸ்ரீமந்த் மாதவராவ் ஷிண்டே (சிந்தியா)*

காங்கிரஸின் மிகவும் பிரபலமான தலைவர்.

கடின உழைப்பாளி...

தொடர்ந்து ஒன்பது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார்.

அப்போது நடத்த மக்களவை தேர்தலுக்கு முன்பு...

உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவரிடம், காங்கிரஸின் தலைவர்,

"நான் பிரச்சாரத்திற்கு வருகிறேன்!" என்றார்.

மாநிலத் தலைவரோ அச்சமின்றி சொன்னார், "நீங்கள் வராதீர்கள்...

மாதவராவ் ஜியை அனுப்புங்கள்...

அவரால் மட்டுமே வாக்குகளைப் பெற முடியும்." என்று.

அதன் பிறகு இரண்டாவது சிந்தனை இல்லை!

மாதவராவ்ஜியிடம், "நீங்கள் உங்கள் தனிப்பட்ட விமானத்தில் செல்ல வேண்டாம்...

இந்த விமானத்தில் செல்லுங்கள்..."
என்று கூறப்பட்டது.

பின்னர்...

ravi said…
*விமான விபத்தில் மாதவராவ் சிந்தியா உயிரிழந்தார்.* ��

விபத்தை நேரில் பார்த்த விவசாயி ஒருவர் அளித்த வாக்குமூலம் :-

"முதலில் விமானத்தில் வெடிகுண்டு வெடித்தது...

பின்னர் தீ விபத்து ஏற்பட்டது."

விமானத்தில் இருந்த எட்டு பேரும் கொல்லப்பட்டனர்.

சிறிது நேரத்தில்...

*காங்கிரஸ் மாநிலத் தலைவரும் இறந்து கிடந்தார்*��

*ஒன்றன் பின் ஒன்றாக திகில் மரணங்கள்...*

*ஆனால் எந்த விசாரணையும் இல்லை* ❗

(டாக்டர் ஈஸ்வர் சந்திர கர்கரேவின் பேனாவிலிருந்து உபயம்)

����������������

■ *ராஜீவ் காந்தி தனது வாழ்நாளில் மொத்தம் 181 பேரணிகளை நடத்தினார்.*

அதில் 180ல் சோனியா காந்தியும் அவருடன் இருந்தார்.

ராஜீவ் காந்தியின் வாழ்க்கையின் கடைசிப் பேரணி நடந்த அன்று மட்டும்...

*அவருடன் இல்லை!*

ராஜீவ் காந்தி படுகொலையின் போது 14 பேர் இறந்தனர்.

ஆனால், இறந்த 14 பேரில்...

*ஒரு காங்கிரஸ் தலைவர் கூட இல்லை.*

*'சோனியா காந்தியும் தலைவலி காரணமாக அன்று ஹோட்டலில் தங்கினார்...'* என்று அதிகாரப்பூர்வ அறிக்கை சொன்னது.

இறந்தவர்கள் அனைவரும் சாதாரண தொண்டர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் தான். ��

*பின்னர்...*

*பிரியங்கா காந்தி தனது தந்தையை கொலை செய்தவருக்கு மன்னிப்பு வழங்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டார்* ❗

❓❓❓❓❓❓❓❓

பாராளுமன்றம் மீது தாக்குதல் நடந்த அன்றும் கூட...

*சோனியா மற்றும் ராகுல் காந்தி பாராளுமன்றம் செல்லவில்லை!*

❓❓❓❓❓❓❓❓

ஆக...

*இத்தாலியைச் சேர்ந்த 'சோனியா மயினோ'...*

*நேரு குடும்பத்துக்கு மருமகளாக வந்ததிலிருந்து...*

இதுவரை ஒருத்தருக்கும் 'இயற்கை மரணம்' என்ற பாக்கியம் கிடைக்கவில்லை!

அனைவரும் *படுகொலை...*
மற்றும்
*விபத்தில்!*
தான் இறந்தார்கள்.��

❓❓❓❓❓❓❓❓

■ *சஞ்சய் காந்தி விமானம் விழுந்து! இறந்தார்.*

■ *இந்திரா காந்தி தனது சொந்த பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்!*

■ *ராஜீவ் காந்தி வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படுகிறார்!*

■ சஞ்சய் காந்தியின் மாமனார் கர்னல் ஆனந்த்...

தனது சொந்த பண்ணை வீட்டில் இருந்து சற்று தொலைவில் *தோட்டா காயத்தால் இறந்து கிடந்தார்.*

■ பிரியங்கா காந்தியின் மாமனார் ராஜேந்திர வதேரா...

*டெல்லியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இறந்து கிடந்தார்*

■ பிரியங்கா காந்தியின் அண்ணி...

*ஜெய்ப்பூர் டெல்லி நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.*

■ பிரியங்கா காந்தியின் மைத்துனர்...

*மொராதாபாத்தில் உள்ள ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்டார்.*

❓❓❓❓❓❓❓❓

ராஜீவ் காந்தி மற்றும் மிகவும் நெருங்கிய நண்பர்களான மாதவராவ் சிந்தியா, ராஜேஷ் பைலட், ஆகியோர்கள்...

திருமணத்திற்கு முன்பு சோனியா நடன கலைஞராக இருந்த பீர் பாருக்கு ஒன்றாகச் செல்வார்கள்.

■ *ராஜேஷ் பைலட் ஒரு சாலை விபத்தில் கொல்லப்பட்டார்!*

■ *மாதவ்ராவ் சிந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்டார்!*

(தொடர் கொலைகள் நிறைந்த மர்ம நாவல் படிப்பது போலுள்ளதா??)

■ *நம்பி நாராயண் கேரளாவில் சிறையில் அடைக்கப்பட்டார்!*

■ *கோத்ரா மற்றும் மாலேகான் சம்பவங்களில் இந்துக்கள் சிக்கி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர்!*

■ *'இந்து பயங்கரவாதம்' என்ற சொல் பிறந்தது*

■ *காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்களை வெளியேற்றுவது*

■ *கோடிக்கணக்கான ஊழல்கள், நாட்டை பலவீனப்படுத்தியது.*

■ *இராணுவ தளவாடங்கள் எமர்ஜென்சி ஸ்டாக் 40 முதல் 7 நாள் மட்டுமே இருந்தது.*

■ *ராணுவத்திற்கு வெடிமருந்து மற்றும் புல்லட் புரூப் ஜாக்கெட் கொடுக்கப் படவில்லை.*

■ *போர் விமானம் வாங்கப் படவில்லை.*

■ *26/11 மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை.*

■ *வங்கிகள் மறுத்த பின்னரும்...*

*'கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு' பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியது*

இதனை,
*லண்டன் நீதிமன்றம் அம்பலபடுத்தியுள்ளது.*

ஆக...

முதலில் இருந்து எல்லாவற்றையும் கூட்டி கழித்து பாருங்கள்...

இப்போது புரிகிறதா...?

*சோனியா காந்தி நாட்டிற்கு செய்த தொண்டு என்னென்ன?* என்று...

*இப்படி பட்ட நேரு குடும்பம் இந்தியாவிற்கு தேவையா?*

*ஈரோடு மக்களே யோசியுங்கள்...* ��
ravi said…
*அருமையான இரண்டு நரசிம்மர் திருத்தலங்கள்....*

*மாங்கல்யம் கூடி வர வழிபட வேண்டிய கோவில் ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள்*

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியர்கள் என்ற இனத்தவர் இப்பகுதியில் அமைந்துள்ள பாறைப்பகுதியில் ஒட்டி வாழ்ந்துள்ளனர். நாளைடைவில் குஜிலியர் என்ற இனத்தவரின் பெயரோடு அவர்கள் வாழ்ந்து வந்த பாறைப்பகுதியையும் சேர்த்து 'குஜிலியம்பாறை' என இவ்வூர் அழைக்கப்பட்டது. (திண்டுக்கல் மாவட்டம் ) குஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் ராமகிரி என்ற ஊர் உள்ளது. இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.

திருமணக்கோலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும். தனி சன்னதியிலுள்ள கமலவல்லி தாயாரை வணங்கினால் வறுமை நீங்கி பொருள் சேர்க்கை, தொழில் அபிவிருத்தி ஏற்படும். இங்குள்ள விஷ்ணு, துர்க்கையை வணங்கினால் பாவங்கள் அகன்று தோஷங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாசலில் உள்ள ஆஞ்சநேயரை வடை மாலை, துளசி மாலை, நெய்வேத்யம் செய்து வழிபட்டால் எக்காரியமும் வெற்றியடையும். இங்கு வேதநாயகனாக விளங்கும் பெரிய திருவடியான கருட பகவானுக்கு 16 மோதகம், தயிர், அன்னம் வைத்து பூஜித்தால் நாகதோஷம், பட்சி தோஷம் விலகி சுகம் உண்டாகும்.

*ஒரே கருவறையில் 3 நரசிம்மர்கள்...*

தன் பக்தன் பிரகலாதன், அவனது தந்தை இரணியனால் கொடுமைப்படுத்தப்படுவதை அறிந்த திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார். அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

அவரது கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர். இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். நரசிம்மர் கைகளில் பிரயோக சக்கரம், குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவற்றை ஏந்தியுள்ளார். மற்ற கைகள் இரணியனை வதம் செய்த நிலையில் உள்ளது.

*இது போன்ற விஷ்ணுவின் ஆன்மீக தகவல்களை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி நமது குழுவில் இணையுங்கள்*
👇👇
https://chat.whatsapp.com/CI5Bj32nY6rJ34WCW5PIjL
ravi said…
*சங்க இலக்கியம்*

*மூதுரை-ஔவையார் பாடல்கள்*

*பாடல் 3 :*

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.

*பொருள்:*

இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும்
பெற்றால் அதனால் துன்பமே. அனுபவிக்க முடியாது. அது
பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது. அதைப்போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
[03/02, 07:22] +91 96209 96097: *வாயு வாஹனாய நமஹ* 🙏
எல்லோருக்கும் உயிர் மூச்சு அளிப்பவர்
[03/02, 07:22] +91 96209 96097: ஸுப்தா ப்ராஜ்ஞாத்மிகா துர்யா *ஸர்வாவஸ்தா²விவர்ஜிதா*

எந்த நிலையிலும் கட்டுப்படுத்த முடியாத ஆற்றல்
உடையவள் 🙏
ravi said…
🌹🌺" *திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா அனைத்தும் உயர் நிலைக்கு அழைத்து செல்லப்படுகிறது. - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பௌர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.

🌺பௌர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம்,
நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது.வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வந்தால் பலன்
இரட்டிப்பாகும்.

🌺திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம்.

🌺இந்த லிங்கம் கிழக்கே பார்த்து
அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

🌺இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம்.
இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. வாழ்க்கையில் வரும்
இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது.

🌺மூன்றாவது அமைந்துள்ள லிங்கம் எமலிங்கமாகும்.
இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது எமதர்மனால்
நிறுவப்பட்ட லிங்கம். இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதை
வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.

🌺நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம்.இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.

🌺ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம்.இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருண தேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த
லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

🌺ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம்.இந்த லிங்கம் வடமேற்கு திசையை
நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த
லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை
வழிபட்டு வந்தால் இருதயம், வயிறு,
நுரையிரல், மற்றும் பொதுவாக வரும்
நோய்களிலிருந்து காத்துகொள்ளலாம்.

🌺ஏழாவது லிங்கம் குபேர லிங்கம்.
வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது.பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

🌺கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம்.
வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால் பக்தர்கள் மன
அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.

🌺பூதநாராயணப்பெருமாளிடம் நமது பொருளாதாரப் பிரார்த்தனைகளை வைக்க வேண்டும். இங்கிருந்தும் திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இந்த தரிசனத்திற்கு சத்தியநாராயண தரிசனம் என்றுபெயர்.

🌺 இவ்வாறு பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது என்பது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது. கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா அனைத்தும் இனம் புரியாத உயர் நிலைக்கு அழைத்து செல்லப்படுகிறது.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*📚இன்றைய சிந்தனை..( 03.02.2023)..*
*……………………………………………*

*‘’வாழ்க்கை கணக்கு...’’*
*…………………………………………..*

கணிதம் இந்த உலகத்தில் அக்காலத்திலும் இக்காலத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அறிவு சார்ந்த எல்லா இடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் கணிதம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த உலகத்தில் நடைபெறும் அனைத்து அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கும் நுணுக்கத்திற்கும் கணிதமே முக்கிய வழி காட்டுதலாகத் திகழ்கிறது.

கணிதம் விஞ்ஞானிகளுக்கு மட்டுமே உரியதல்ல. அது நம் அனைவருக்கும் அவசியமானது.

ஷாப்பிங் செய்கையில், வீட்டை அலங்கரிக்கையில் அல்லது தினசரி வானிலை அறிக்கையைக் கேட்பதில் நீங்கள் கணிதத்தை உபயோகிக்கிறீர்கள் அல்லது அவற்றில் இருந்து பயன் அடைகிறீர்கள்.

கணிதம் உப்பு சப்பில்லாதது, அன்றாட வாழ்க்கைக்கு உதவாதது என்று அநேகர் நினைக்கின்றனர். நீங்களும் அப்படித் தான் நினைக்கிறீர்களா?

கணிதம் எந்தளவுக்கு உபயோகமானதாக, எளியதாக, கவர்ச்சியானதாக இருக்க முடியும் என்பதை இப்போது ஆராயலாம்.

"கணிதம் என்பது பொதுவானதொரு மொழியாகும்"
நாம் அன்றாட வாழ்வில் சந்திப்பவர்களின்
நடவடிக்கைகளைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் ஏதோ ஒன்றில் திறைமைசாலியாகவே, அல்லது ஏதேனும் ஒன்றில் சிறிதளவாயினும் திறைமைசாலியாகவோ இருப்பதை நாம் காணலாம்.

ஆனால்,பொதுவாக கணிதக் கலையானது அனைவரின் அன்றாட வாழ்வில் இணை பிரியாததாக உள்ளது,

கணிதத்தின் அடிப்படைத் தத்துவமானது,

• கூட்டல்
• கழித்தல்
• பெருக்கல்
• வகுத்தல்

இந்த நான்கு தத்தவத்தை விழிப்புடன் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக் கனியாகவே வைத்துக் கொள்ளலாம்.எப்படி என்று பார்ப்போம்..

கூட்டல்-

நல்ல பழக்க வழக்கங்களை
மேற்கொள்ளுங்கள்.,

கழித்தல்-

கெட்ட செயல்களைத் தவிருங்கள்..

பெருக்கல்-

நியாய முறையில் பணத்தை ஈட்டுங்கள். (இதனால் மனமகிழ்ச்சிக்குக் குறைவு இருக்காது..

வகுத்தல்-

காலத்திற்கு ஏற்றாற் போல் நேரத்தைத் திட்டமிடுங்கள்.

இந்த நான்கு கணித அடிப்படையின் விடைகளை சமன் மூலம் வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி தோல்விகளை சமன் செய்யுங்கள்..

*ஆம்.,தோழர்களே..,*

*இக்கணித இலக்கணத்தை நல்ல வியூகத்துடன் வாழப் பழகிக் கொண்டால், எந்நாளும் பொன்னான நாளாக மாற்றிக் கொள்ளலாம்.✍🏼🌹*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
https://srimahavishnuinfo.org
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

ஒரு முட்டாள் தன்னுடன் வாழ முடியாமல்  விட்டுப் போனவர்களை நினைத்து வருத்தப்படுவான்...

ஒரு புத்திசாலி தன்னை விட்டுப் போனவர்கள் வருத்தப்படும்படி வாழ்ந்துக் காட்டுவான்...!!!!?????

*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
🌹🌺 "By coming to Tiruvannamalai our body, mind and soul are taken to a higher level. - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹If moonlight falls on us, knowledge will be strengthened. Confusion will disappear. Mountains with divine power will have increased power on the full moon than on any other day.

🌺God's grace by full moon, health by herbal air,
Moonlight brings clarity of mind. It is beneficial if the pilgrims come quietly chanting the Lord's Name.
Doubled.

🌺Indralingam is the first thing that appears on the way to Krivalam in Tiruvannamalai.

🌺 This lingam faces east
is set up. Gives long life and abundant wealth to the devotees.

🌺The second lingam is Agnilingam.
This lingam faces south-east direction. comes in life
Has the power to delete emails.

🌺 The third situated linga is the Emalinga.
This Linga is facing South direction by Emadharman
Established lingam. It is the lingam under Mars. This
Aspirants can live happily without financial stress.

🌺 The fourth lingam is Nriti Lingam. Its direction is South East. Its planet is Rahu. Devotees who want this can live peacefully without any problems.

🌺 The fifth lingam is Varuna lingam. Its direction is west. This linga was established by the mountain god Varuna. This is to progress in the society and escape from deadly diseases
Devotees should pray to the lingam.

🌺 The sixth lingam is Vayu Lingam. This lingam is in the north-west direction
towards Lord Vayu is this
The lingam was established. This lingam
If worshiped, the heart, stomach,
Foamy, and usually comes
Protect from diseases.

🌺The seventh lingam is Kubera Lingam.
This lingam facing the north direction has Guru as the ruling eclipse. Devotees should pray to this lingam to be blessed with wealth and prosperity.

🌺The last lingam is the Esaniya lingam.
This north-east facing lingam was established by Esaniya Deva. Mercury rules this Linga. By worshiping this lingam, devotees are mentally
Peaceful and successful in all matters.

🌺We should place our financial prayers to Bhootanarayanaperumal. From here also visit Thiruvannamalai. This darshan is called Sathyanarayana darshan.

🌺 It has been a tradition in Thiruvannamalai to visit Krivalam for centuries. As Krivalam comes, our body, mind and soul are taken to an incomparably higher level.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
No one will come & save you, or take your hand & guide you to a better life.

You must leave something or someone completely, leaving that space empty & aching, in order to open up space for something new.

Don’t hold on to things that are over. Let them go.

*🌹Good Morning🌹*
*💐OM NAMAH SHIVAYA💐*
ravi said…
கிரிவாய் விடுவிக்ரம வேல் இறையோன்

பரிவா ரமெனும் பதமே வலையே

புரிவாய் மனனே பொறையா மறிவால்

அரிவா யடியோடு மகந்தையையே

ன்னு கந்தர் அனுபூதியில ஒரு பாட்டு இருக்கு

*கிரிவாய் விடுவிக்ரம வேல் இறையோன் –*

கிரௌஞ்ச கிரியில வேலை விட்ட அந்த இறைவன் முருகப் பெருமானுடைய பரிவாரம் எனும் பதம் மேவலையே – அந்த பரிவாரத்தை சேர்ந்தவர்கள்,

அடியார் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், என்ற பதம் அந்த பதத்தை அடைய வேண்டும்.

அந்த பதத்தை மேவ வேண்டும். ‘ *பதம் மேவலையே புரிவாய் மனமே’* – மனமே அதுக்கு மட்டும் நீ ஆசை படு.

உன்னுடைய ‘ *பொறையாம் அறிவால்’ –*

பொறைன்னா பொறுமை. பொறையாம் அறிவால் ‘ *அரிவாய் அடியோடும் அகந்தையே’ –*

உங்களுடைய ego வை அடியோட வெட்டிப் போட்டுடு.

அந்த வாளை வெச்சுண்டு ‘பொறையாம் அறிவால் அடியோடும் அரிவாய் ன்னா வெட்டிப் போடறது.

‘அரிவாய் அடியோடு அகந்தையையே’ ன்னு சொல்றார்.

அப்படி அந்த அகந்தையை அகற்றி அந்த அடியார் கூட்டத்துல சேர்ந்துட்டோம்னா அப்புறம் நம்ம ஜன்மா ஸார்த்தகம் ஆயிடும்.

அதுக்கு ப்ரார்த்தனை பண்ணுவோம்
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 72*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
मूकोऽपि जटिलदुर्गतिशोकोऽपि स्मरति यः क्षणं भवतीम् ।
एको भवति स जन्तुर्लोकोत्तरकीर्तिरेव कामाक्षि ॥ ५७॥

57. Mookopi jatila durgathi , sokopi smarathi ya kshanam bhavatheem,

Yeko bhavathi sa janthur lokothara keerthiriva Kamakshi.

மூகோ‌உபி ஜடிலதுர்கதிஶோகோ‌உபி ஸ்மரதி யஃ க்ஷணம் பவதீம் |

ஏகோ பவதி ஸ ஜன்துர்லோகோத்தரகீர்திரேவ காமாக்ஷி ||57||
ravi said…
அம்மா, உன் மஹிமையை என்னவென்று சொல்வேன்?

வாய் பேசாத ஊமையை, அஞ்ஞான இருளில், இருண்ட காட்டில், வாடி துன்பமுற்று தவிக்கிறதோ,அதைக்கூட,

ஒரு கணம் மனதில் உன்னை நினைத்தால் பேசவைத்து, சகல கஷ்டங்களிலிருந்தும் விடுவித்து,

உலகில் மென்மையோடு புகழோடு வாழவைப்பவள் அல்லவா நீ!

உன்னை தியானிக்கிறேன். நமஸ்கரிக்கிறேன்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 476* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*200 सर्वमङ्गला - ஸர்வமங்களா -*

Ultimate என்று ஆங்கிலத்தில் சொல்வோமே அது தான் இந்த திருநாமம் .. இதற்கு மேல் உயர்ந்த நாமம் இல்லை ...

சுபிக்ஷம் , சுபம் நல்வரவு மங்களம் ,

இப்படி தமிழில் பல வார்த்தைகள் இருப்பினும் அன்னைக்கு இந்த நாமம் சேர்த்த அழகை போல எந்த நாமமும் சேர்க்க வில்லை ..

அவளை நினைப்பது ஸர்வ மங்களம்

அவளை வணங்குவது நித்ய மங்களம்

அவளைப் பற்றி எழுதுவது ஜய மங்களம்

அவள் நாமங்கள் சொல்வது தன மங்களம்

அவள் புகழ் பாடுவது கால மங்களம்

அவள் நினைவில் கண் மூடுவது முக்தி மங்களம் 🪷🪷🪷
ravi said…
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!
ravi said…
மானிடப்பிறவியில் பெருகும் தன்மை கொண்ட கொடிய பாவங்களை
தீர்க்கும் திருமாலே -

உயர்ந்து நிற்கும் திருவேங்கடத்து அண்ணலே

உனது (திருமலைக்) கோயில் சன்னதியின் வாசலில்

அடியாரும் வானவரும்
அரம்பையரும்
ஏறிக் கடந்து செல்லும்
படியாய்க் கிடந்து

உனது பவளச் செவ்வாய் அழகை (எப்போது) கண்டு மகிழ்வேனே !🪷🪷🪷
ravi said…
*❖ 102 விஷ்ணுக்ரந்தி விபேதினி =*

விஷ்ணுக்ரந்தி நாடி முடிச்சுத் தளைகளை உடைத்தெழுபவள்

(யோக சாஸ்திரத்தின் படி, மணிபூரகத்திற்கும் அனாஹத சக்கரத்திற்கும் நடுவில் அமைந்திருப்பது விஷ்ணுக்ரந்தி)
ravi said…
*அம்மா* ...

உன்னால் பலருக்கும் நஷ்டம்...

என் புதிர் புரியுமோ உனக்கு ...

எல்லாம் தெரிந்தவளே

நானே அவிழ்க்கிறேன் என் புதிரை இன்று ...

🪷 கமலங்கள் வெட்கி தலை குனியும் உன் மென்மை கண்டு ...

🪷 இரவிலும் மலரும் உன் தாமரை திருவடிகள் கண்டே தோல்வி தனை இதர கமலங்கள் தழுவும்

🪷 தேன் உண்ணும் வண்டுகள் உன் அதரத்தின் சுவை கண்டு மயங்கி தேன் தனை வெறுக்கும்

🌝 காயும் நிலவு உன் முகம் கண்டு மேகங்களை மறைக்க சொல்லும் தன் அழகை

🌞 உதிக்கும் செங்கதிர்கள் உன் திலகம் தனை கண்டு மேற்கில் மறைய துடிக்கும்

🦌 துள்ளும் மான்கள் உன் விழிகளின் மிரட்சி கண்டு துவண்டு போகும்

🐅 பாயும் புலிகள் உன் வீரம் கண்டு படுக்கையை விரித்து படுக்கும்

🦢 அன்னங்கள் நடை இழந்து உடை கலைந்து தன் படை கொண்டு விடை கொள்ளும் இனி நடை வேண்டாம் என்றே

🐋 ஓடும் மீன்கள் சாடும் தன் வேகம் கண்டு உன் விழிகள் எனும் மீன்களை கண்டு

🦅 பாடும் பறவைகள் ஆடும் 🦚 மயில்கள் சிலை கொள்ளும் உன் குரல் எழில் கண்டு

⛅⛅ கார் மேகங்கள் கவலை கொள்ளும் உன் கருமேனி கண்டு

⛈️⛈️ சூல் கொண்ட மேகம் தோற்று போகும் நீ
பிரசவிக்கும் கருணை மழை கண்டு

*அம்மா* ... உன்னால் எவ்வளவு நஷ்டம் எல்லோர்க்கும் ...

ஆனால் அதுவே லாபம் உன் போல் தாய் ஈன்ற எங்கள் வாழ்விற்கு 🙌🙌🙌
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

59 –
நெக்கு நெக்கு உருகி யான் புக்கிட உனைப்புகல்
நக்கனா நின்றனை அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா*

உருகி உருகி பாடுகிறேன் விலகி விலகி செல்கிறாய்

எதுவும் வேண்டாம் வேண்டாம் என்கிறேன் ...

வேண்டத்தக்கது முழுதும் தருகிறாய்

சிலைதானே நீ என்றே பலமுறை சொன்னேன் ..

நீ கலை வண்ணம் என்றே உணர வைத்தாய்

நீ காந்தம் என்றே சொல்வோர் பலர்

இந்த துரு பிடித்த இரும்பினை உன் பக்கம் இழுக்க கடினமோ *அருணாசலா*

உன் பக்கம் சேர்வோர் நாட்பக்கம் வெல்வோர் அன்றோ

விலகி விலகி சென்றாலும் இளகி இளகி கரைபவன் நீ அன்றோ

எல்லையற்ற பரம்பொருளே

உனை அன்றி யாரிடம் செல்வேன் ...

தாயுக்கு குழந்தை பாரமோ ...

நான் உனக்கு ஏளனமோ *அருணாசலா*??💐💐💐
ஹேமலதா said…
அமைதியாக படிக்கிறேன் பதிவுகளை👍😊
Valliammai said…
வாழ்க வளமுடன் சிவா திருச்சிற்றம்பலம் முருகா சரணம்,
அருமையா எழுதுறீங்க நீங்க ஆனால் அடியேனுக்குத் தங்களுக்கு என்ன எழுதுறதுன்னே தெரியல.
தொடர்ந்து அனுப்புங்க
தாங்கள் அனுப்புறத நிச்சயம் படிப்பேன் மற்ற குழுக்களில் பதிவு செய்கிறேன் இது உறுதி.
சிவாய நம
Kowsalya said…
மங்களம், ஜய மங்களம், சுப மங்களம், லலிதேஸ்வரி...பாஹி பாஹி, மோஹி தேஹி, க்ஷேமளாப தாயகி.....மங்களம் லலிதேஸ்வரி...🙇‍♀️🙇‍♀️🪷🪷🙏🙏
Savitha said…
அற்புதம்
1 – 200 of 354 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை