ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 38.-ரத்ந கிங்கிணிகாரம்ய ரசநாதாமபூஷிதா -பதிவு 45

 **38* . रत्नकिङ्किणिकारम्यरशनादामभूषिता - ரத்ந கிங்கிணிகாரம்ய ரசநாதாமபூஷிதா -





நமது பெண்கள் அக்காலத்தில் ஒட்டியாணம் என்று ஒரு பட்டை யான தங்க ஆபரணம் அணிவார்கள். பயமுறுத்துவார்கள். 

அம்பாள் அணியும் விதமே வேறு. 

மெல்லிய நூல் மாதிரி மெலிந்த பொன் கயிறு அவள் இடுப்பை அலங்கரிக்கும். 

அதில் சுநாதம் எழுப்பும் சிறிய மணிகள் அசைந்து அழகும் ஒளியும் ஒலியும் சேர்க்கும்.

*ரத்ன* = ரத்தினங்கள் பதிந்த 

 *கிண்கிணிகா* = 
சிறு மணிகள் 

 *ரம்யா* = ரம்யமாக - இதமாக 

 *ரஷனா* = ஒட்டியானம் - 

அதை அணியும் *இடை தாம* = மாலை - சங்கிலி 

 *பூஷிதா* = அணிந்திருத்தல் - அலங்கரித்திருத்தல் 

 *38 ரத்ன கிண்கிணிக ரம்ய ரஷனா தாம பூஷிதா; =* 

சிற்றிடையில் சிறுமணி கிண்கிணிக்கும் ரத்தினங்கள் பதித்த ஒட்டியானத்தை அலங்காரமாக அணிதிருப்பவள் ...

Comments

ravi said…
🌹🌺 "The use of eyes is to see sri maya Kannan glorious eyes. - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 If Kannan is coming to bathe, nature prepares the forest for him.

🌺 Green grass has sprouted everywhere after the rainy season. The trees and vines are in full bloom and their fragrance wafts throughout Vrndavana.

🌺 What would be the fragrance of millions of flowers blooming at the same time? It is carried by a gentle gentle breeze and spread everywhere.

🌺Beetles sitting on flowers and crawling is like singing Arohanam Avarohanam with Sruti.

🌺Birds are chirping in preparation for mating. Streams and waterfalls echo them.

🌺 Hearing all this, Gopiyar Kannan started to describe how he would play beautifully.

🌺 Peacock flutters in the head. A Vajjayanthi garland made of five kinds of flowers and leaves swings around the neck.

🌺 Surrounded by a crowd of angry children, fingers like mulberry blossoms playing the flutes, Kannan enters the Brindavan walking very wet.

🌺 Having meditated on him like this, the gopis mentally embraced Kannan.

🌺 The benefit of having eyes is to see sri maya Kannan glorious eyes . The benefit of birth is that His eyes fall on us and stick to Him like a flute.

🌺All the animals that move by listening to Kannan's trumpet stand as statues, the trees and mountains that don't move are grassy. Isn't that weird and weird?

After seeing Kannan going out to graze in the morning until his eyes disappeared,
Gopis took turns singing his singing beauty.

🌺🌹
Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *நாம் கண் பெற்றதன் பயன் இந்த மாயக் கண்ணனைக் காண்பதேயாகும்* . - *என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺 கண்ணன் குழலூதுவதற்காக வரப்போகிறான் என்றால் இயற்கை அவனுக்காக வனத்தைத் தயார் படுத்திவிடுகிறது.

🌺மழைக்காலம் முடிந்து எங்கும் பசும்புற்கள் முளைத்திருக்கின்றன. மரங்களும் கொடிகளும் நன்கு பூத்து அவற்றின் நறுமணம் ப்ருந்தாவனம் முழுதும் வீசுகிறது.

🌺ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான பூக்கள் மலர்ந்தால் அவற்றின் நறுமணம் எப்படி இருக்கும்? அதைச் சுமந்து கொண்டு மெல்லிய இதமான காற்று வீசி‌ எங்கும் பரப்பிவிடுகிறது.

🌺வண்டுகள் பூக்களின் மீது அமர்ந்து ரீங்காரமிடுவது ஸ்ருதி சேர்த்து ஆரோஹணம் அவரோஹணம் பாடுவது போல் உள்ளது.

🌺பறவைகள் சேர்ந்திசைக்குத் தயாராக கூவிப் பார்த்துக்கொள்கின்றன. நீரோடைகளும் அருவிகளும் அவற்றை எதிரொலிக்கின்றன.

🌺இவை அனைத்தையும் கேட்ட கோபியர் கண்ணன் எப்படி அழகாகக் குழலூதுவான் என்று வர்ணிக்கத் துவங்கினர்.

🌺தலையில் மயில்பீலி அசைகிறது. காதுகளில் கொன்றைப்பூ, ஐந்து விதப் பூக்கள் மற்றும் இலைகளால் ஆன வைஜயந்தி மாலை கழுத்தில் அசைகிறது.

🌺சுற்றி கோபச் சிறுவர் கூட்டம், முல்லைப்பூப் போன்ற விரல்கள் புல்லாங்குழலின் துவாரங்களில் விளையாட மிக ஒயிலாக நடந்து கண்ணன் ப்ருந்தாவனத்தில் நுழைகிறான்.

🌺இவ்வாறாக அவனை தியானம் செய்த கோபிகள் மானசீகமாக கண்ணனை அணைத்துக்கொண்டனர்.

🌺நாம் கண் பெற்றதன் பயன் இந்த மாயக் கண்ணனைக் காண்பதேயாகும். அவனது கடைக் கண் பார்வை நம் மேல் விழுவதும், புல்லாங்குழலைப் போல் அவனோடு ஒட்டுவதுமே பிறவி எடுத்ததன் பயன்.

🌺கண்ணனின் குழலிசை கேட்டு அசையும் விலங்குகள் எல்லாம் சிலையாகி நிற்க, அசையாத மரங்களும், மலைகளும் புல்லரித்து நிற்கின்றன. இது விந்தையிலும் விந்தை அல்லவா?

காலையில் மாடு‌மேய்க்கக் கிளம்பும் கண்ணனைக் கண்‌மறையும் வரை கண்டபின்,
அவன் குழலூதும் அழகை கோபியர் மாற்றி மாற்றிப் பாடிக்கொண்டிருந்தனர்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
சிவப்பு நிற அழகன் நான்
இப்போது அதிகம் கவனிக்கப் படாத
கிழவனாகிப் போனேன்

தெருவோரத்தில்
உங்களுக்காகவே
மழையிலும் வெயிலிலும்
மகிழ்ச்சியுடன் நின்றவன் நான்

இன்று
விஞ்ஞான வளர்ச்சியால்
தூக்கி எறியப்பட்டுக் கொண்டிருக்கும்
துர்பாக்கியசாலி நான்

ஓடாமல்
ஓரிடத்தில் நின்று கொண்டே
உங்களுக்காக தூது சொன்ன
தூயவன் நான் .

துன்பங்களையும் துயரங்களையும்
கண்ணீர்க் கறையோடு
பார்த்தவன் நான்


உங்கள் காதலை தேக்கி வைத்து
அனுப்பியவனும் நான்

சாலை ஓரம் எனது இருப்பிடம்
என்றாலும்
வேலை தேடுபவர்களுக்கு
வாசலாய் இருந்திருக்கிறேன்.

வேலை கிடைத்தாலும்
எனக்குத்தான் முதலில் தெரியும்
வேலை இழந்தாலும்
எனக்குத் தான் தெரியும்

கண்டுகொள்ளாமல்
போகிறீர்களே!கனவான்களே!

உங்கள் மகிழ்ச்சியையும்
வாங்கி இருக்கிறேன்
கோபத்தையும்
தாங்கி இருக்கிறேன்

உங்கள் வீட்டு திருமணம்தான்
ஆனால்
முதல் அழைப்பிதழ் எனக்குத்தான்

எத்தனையோ பேருக்கு
மகிழ்ச்சியை
மனமார பகிர்ந்தளித்திருக்கிறேன்
பாசத்தை பல்லாண்டுகளாய்
சுமந்திருக்கிறேன்

நெருப்பு வார்த்தைகளயும் அறிவேன்
நெகிழ்ச்சி மொழிகளையும் அறிவேன்


ஐயா! மஞ்சள்பை கராரே
உங்களுக்கும் நினைவில்லையா?
நான் யாரென்று

இளைஞர்கள்தான் என்னை
இகழ்ச்சியுடன் பார்க்கிறார்கள்
நீங்களுமா?

இனிவரும்
காலங்களில்
அருங்காட்சியகத்தில்தான்
அழகாய் அமர்ந்திருப்பேன்.

உங்கள் முன்
ஆச்சர்யக் குறியாய் நிற்கும்
என்னை தெரிகிறதா?

வாயும் வயிறும் இருந்தும்
வாழ்விழக்கப் போகும் என்னை
கவனிக்கவா போகிறீர்கள்
பரவாயில்லை!
ravi said…
[10/02, 07:26] +91 96209 96097: *தாரய நமஹ*🙏🙏🙏
பிறவி பெருங்கடலை நீந்த செய்பவர்
[10/02, 07:26] +91 96209 96097: ஸம்ஹாரிணீ ருத்³ரரூபா *திரோதா⁴னகரீஶ்வரீ*|🙏

பிரச்சினைகளை தவிர்த்து, அழிக்கும் வழி காட்டியாக இருப்பவள்
ravi said…
🌹🌺 "Ema dharma....you should be one of my weight lifter" is a simple story explained by a devotee who recited Sri Rama Naam 🌹🌺 -------------------------------------------------- ------

🌹🌺Rama Nama Sankeerthanam on the street
A bhajan group sings
was going
To Kathiresan who neglected it,
The sage who preached the name of Rama
One should never sell this
Soulfully at least once
He said tell me.

🌺Kathiresan also did the same.
He died in time.

🌺 He dragged away the soul
Stopped in front of Yamadharmaraj.
He, his father, is holy
Consider the account, once
You are chanting Rama's name
Ask whatever you want
said.

🌺 The sage who preached the name of Rama
It was said not to sell it
I remembered. So, to that
Refusing to quote the price, in the name of Rama,
What do you want to give?
If you think, give it
He said.

🌺Amazed Yamadharma King Rama
How we value the name
Indra thought to put
You have to decide this
He said come let's go to Indra.

🌺'If I am coming, I will come in Pallak and also, Ema Dharma....my Pallak
You are one of the lifters
should be. He said yes.

🌺 Let him lift us up too
If he says, Rama's name,
It is very glorious
to be; That is why
That he talks like this
King Yamadharma said to that
Agreed, put him on a palanquin
Seated and carried
He went to Indra.

🌺 Indra or Rama name by me
You can't put weight on Brahma
Let's ask; He said come.

🌺Indra along with Yamadharman
I will come only if I raise my teeth
That is his condition again
Fate.

🌺 Indra also agreed to that.
carrying the palanquin,
They went to Brahma.
He also glorified Rama's name,
I can't go to Vaikundam,
Let's ask for that gem
To say come, he too
It became a burden.

🌺 Everyone goes to Maha Vishnu and the soul in this palanquin chants the name of Rama once
has said; For that,
What a blessing to him
You have to say. By us
They said they could not.

🌺 Put this life on the palak,
All of you are carrying... Don't you see the glory of Rama's name from this?? Saying that..the Lord took the soul that came on the palanquin with Him!!

🌺Jai Shriram!🌹 🌺Jai Shriram!🌹

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *எம தர்மா.* ... *என்னுடைய பல்லக்குத் தூக்குபவர்களில்* , *நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்ற ஸ்ரீ ராம நாமம் சொன்ன பக்தன் விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺வீதியில் ராமா நாம சங்கீர்த்தனம்
பாடியபடி பஜனை கோஷ்டி ஒன்று
சென்று கொண்டிருந்தது.
அதை அலட்சியம் செய்த கதிரேசன் என்பவனுக்கு,
ராம நாமத்தை உபதேசித்த ஞானி
ஒருவர் இதை ஒரு போதும் விற்காதே
ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது
சொல்லிப் பார் என்றார்.

🌺கதிரேசனும் அப்படியே செய்தான்.
காலகிரமத்தில் இறந்து போனான்.

🌺அவன் ஆத்மாவை இழுத்துப் போய்
யமதர்மராஜன் முன் நிறுத்தினர்.
அவரும், அவனுடைய பாப, புண்ணிய
கணக்கை பரிசீலித்து, ஒருமுறை
ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய்
அதற்காக என்ன வேண்டுமோ கேள்
என்றார்.

🌺ராம நாமத்தை உபதேசித்த ஞானி
அதை விற்காதே என்று கூறியிருந்தது
நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு
விலை கூற மறுத்து, ராம நாமத்திற்கு,
நீங்கள் என்ன தர வேண்டுமென
நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்
என்றான்.

🌺திகைத்த யமதர்ம ராஜா ராம
நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு
போடுவது என்று எண்ணி இந்திரன்
தான் இதை தீர்மானிக்க வேண்டும்
வா இந்திரனிடம் போகலாம் என்றார்.

🌺'நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன் அத்துடன், எம தர்மா....என்னுடைய பல்லக்குத்
தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக
இருக்க வேண்டும். சம்மதமா என்றான்.

🌺இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச்
சொல்கிறான் என்றால், ராம நாமம்,
மிகுந்த மகிமை உடையதாகத் தான்
இருக்க வேண்டும்; அதனால் தான்
இப்படி எல்லாம் பேசுகிறான் என்று
எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு
சம்மதித்து, அவனை பல்லக்கில்
உட்கார வைத்து, சுமந்து கொண்டு
இந்திரனிடம் போனார்.

🌺இந்திரனோ ராம நாமத்தை என்னால்
எடை போட முடியாது பிரம்மதேவரிடம்
கேட்போம்; வாருங்கள் என்றார்.

🌺யமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து
பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்
என்று மீண்டும் அவன் நிபந்தனை
விதித்தான்.

🌺அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான்.
பல்லக்கை சுமந்து கொண்டு,
பிரம்மாவிடம் சென்றனர்.
அவரும் ராம நாம மகிமை சொல்ல,
என்னால் ஆகாது வைகுண்டம் போய்,
அந்த பரம்பொருளையே கேட்கலாம்
வாருங்கள் என்று சொல்ல, அவரும்
பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.

🌺அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா ஒருமுறை ராம நாமத்தை
சொல்லியிருக்கிறது; அதற்காக,
இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை
தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால்
முடியவில்லை என்றனர்.

🌺இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து,
நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே... இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா ?? என்று சொல்லி ..பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான் !!

🌺 *ஜெய் ஸ்ரீராம்!🌹 🌺ஜெய் ஸ்ரீராம்* !🌹

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*சூராய நமஹ*🙏
எதிரிகளின் உள்ளங்களையும் வெல்பவர்
ravi said…
ஸம்ஹாரிணீ ருத்³ரரூபா திரோதா⁴னகர *ஈஶ்வரீ*|🙏

தன்னிச்சையாக, பாவங்களை அழித்து அருள்பவள்
ravi said…
பெரியவா விடம் ஒருவர் தயங்கி தயங்கி கேள்வி கேட்டார் ...

பெரியவா சிரித்துக் கொண்டே என்ன கேள்வி ஏன் இவ்வளவு தயக்கம் என்றார் ..

பெரியவா நீங்களே ஒரு அவதார புருஷர் .

இருந்தும் நான் இந்த கேள்வியை கேட்கக் கூடாது தான் ..

இருந்தாலும் தங்கள் திருவாய் மூலம் மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில் கேள்வி கேட்கிறேன் .

அதிகபிரசங்கித் தனமாய் இருந்தால் பெரியவா க்ஷமிக்கணும் அடியேனை

சரி கேள்வி கேள் . பதில் தெரிந்தால் சொல்கிறேன்

பெரியவா ....

கீதையில் கிருஷ்ணன்

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்-பவதி பாரத |

அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||

பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |

தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || (IV. 7-8)

என்கிறார் தர்மத்திற்கு அழிவு ஏற்படும் போது தன்னையே தான் மீண்டும் மீண்டும் படைத்துக்
கொள்கிறேன் என்கிறார் ...

ஆனால் நாட்டில் உலகத்தில் அதர்மம் தலை விரித்து ஆடுகிறது ...

எங்கும் பதவி மோகம் பண மோகம் ...

ஏன் கிருஷ்ணன் சொன்னபடி அவதாரம் எடுக்க வில்லை

கிருஷ்ணன் எடுத்த அவதாரம் தான் பெரியவா என்று உணர்ந்து கொள்ளாமல் அவர் கேள்வி கேட்டு விட்டார் ..

பெரியவாளும் தானே ஒரு அவதாரம் என்று சொல்லிக்கொள்ள வில்லை ...

சிரித்து க் கொண்டே பதில் சொன்னார் ...

யுகங்களை நான்காக பிரிக்கலாம்

*1. கிருத யுகம்*

இதில் எல்லோரும் நல்லவர்கள் ...

எங்கோ ஏதோ ஒரு மூலையில் யார் கண்ணுக்கும் புலப்படாமல் அங்கே அதர்மம் வாழ்ந்தது ...

பகவானுக்கு இந்த யுகத்தில் வேலையே இல்லை

எனவே ஒரு அவதாரமும் எடுக்க வில்லை

*2. திரேதா யுகம் ...*

இங்கே வானவர் தானவர் என்று தங்கள் தங்கள் உலகத்தில் வாழ்ந்தார்கள் ...

சண்டை எப்பவாவது வலிமை பெறும் ...

அதர்மம் இளமை பருவம் கண்டது ...

இறைவன் அவதாரம் எடுத்து அதர்மத்தை கிள்ளி எறிந்தார்

*3. துவாபர யுகம் ...*

இங்கு நல்லவர்கள் கெட்டவர்கள் உறவிலேயே இருந்தார்கள்

வெளியில் இல்லை..

அதர்மம் தலை தூக்கியது ...

இறைவன் அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டினான்

*4 கலி யுகம்*

தங்களுக்கு ஒரு இடம் என்று வாழ்ந்த அசுரர்களும் தேவர்களும் ஒரே நிலப்பரப்பில் வந்து பிறகு

ஒரே குடும்பத்தில் வாழ தொடங்கிய பின்

கலி யுகத்தில் ஒருவரிடத்தில் பாதி மனதில் மிருகமாகவும் மீதி மனதில் தேவர்களாகவும் இருக்கும் போது

இறைவன் குழம்பி போய் விட்டான் எப்படி அவனை அழிப்பது என்று

அதனால் என்ன அவதாரம் எடுப்பது என்று ஒரு முடிவுக்கு அவனால் வர முடியவில்லை

வந்தவர் வாயடைத்துப் போனார் ...

கண்ணதாசனின் பாடல் வரிகள் அவர் மடத்தை விட்டு வெளியே வரும் போதி செவியில் வந்து விழுந்தது

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா

மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா

ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா

ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா

அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா...

நம் முழு மனமும் கோயில் ஆகிவிட்டால் நாம் எல்லோரும் மீண்டும் கிருத யுகத்திற்கே திரும்பி போய் விடலாம் ....அங்கு இறைவன் நேராக நம்மிடம் உரையாடுவான் .... 🙌🙌🙌🙌
ravi said…
*அகிலாண்டேஸ்வர்யை* -

ராகம் ஆரபி தாளம்

*ஆதி பல்லவி*

அகிலாண்டேஸ்வர்யை நமஸ்தே,

அணிமாதி சித்தீஸ்வர்யை நமஸ்தே,

*அனுபல்லவி* :

நிகிலாகம ஸன்னுத வரதாயை

நிர்விகாராயை நித்ய முக்தாயை

ஸம்ஸார பீதி பஞ்சனாயை

சரத் சந்திரிகா ஸீதளாயை

ஸாகர மேகலாயை த்ரிபுராயை (அகிலா)

யாரவது பாடி அனுப்புங்கள் எல்லோரும் கேட்போம்.

இதில் வரும் அம்பாளின் நாமங்களை தான் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அறிந்து வருகிறோம்🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 483* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*204 सर्वमन्त्रस्वरूपिणी - ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ -*

எல்லா மந்திரங்களுக்கும் உருவம் கொடுத்தால் அது அம்பாளின் உருவமாகத்தான் தோன்றும்.

சமஸ்க்ரிதத்தின் 52 அக்ஷரங்களையும் தொடுத்து மாலையாக அணிபவள் அம்பாள்
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 79*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
यूना केनापि मिलद्देहा स्वाहासहायतिलकेन ।

सहकारमूलदेशे संविद्रूपा कुटुम्बिनी रमते ॥ ६४॥

64. Yoonaa kenapi milad, dehaa swaahaa sahaya thilakena,

Sahakara moola dese, samvid roopaa kutumbhinee ramathe.

யூனா கேனாபி மிலத்தேஹா ஸ்வாஹாஸஹாயதிலகேன |

ஸஹகாரமூலதேஶே ஸம்வித்ரூபா குடும்பினீ ரமதே ||64||
ravi said…
அம்பாள் நெற்றிக்கண்ணாக ஸ்வாஹா எனும் அக்னியை உடையவள்.

ஹோமத்தில், யாகத்தில் அக்னிக்கு வஸ்துக்களை அற்பணிக்கும்போது அதனால் தான் ''ஸ்வாஹா ஸ்வாஹா'' என்று அவள் பெயரை மந்திரமாக சொல்கிறோம்.

காமேஸ்வரன் எனும் பரமேஸ்வரனின் மேல் எல்லையற்ற விருப்பமுடையவள்.

அவனுக்காக, அவனை அடைய காஞ்சியில் ஏக ஆம்ரம் எனும் ஒற்றை மாங்கனி மாமரத்தின் அடியில் தவமிருப்பவள். அழகிய பாலா.
ravi said…
என் கண்ணனை கண்டீரோ ?

எப்படி இருப்பான் உன் கண்ணன் ... அங்க அடையாளங்கள் சொல் ..

சொல்கிறேன் கேளுங்கள்

அணைத்த வேலும், தொழுத கையும்,

அழுந்திய திருநாமமும்,
ஓம் என்ற வாயும்,

உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,

பரந்த விழியும், பதித்த நெற்றியும்,

நெறித்த புருவமும்
சுருண்ட குழலும்,

வடிந்த காதும் அசைந்த காது காப்பும்,

தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும்,

அகன்ற மார்பும்,
திரண்ட தோளும்

நெளித்த முதுகும், குவிந்த இடையும்,

அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும்,

தூக்கிய கருங்கோவையும்
தொங்கலும்

தனி மாலையும், தளிருமிளிருமாய்

நிற்கிற நிலையும்

சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்,

தஞ்சமான தாளினையும்,

குந்தியிட்ட கனைக்காலும்.....

நிறுத்து நிறுத்து இவை கண்ணனைப் போல் இல்லையே திருமங்கை ஆழ்வாரை பற்றி அல்லவா இருக்கிறது ?

ஆமாம் ... அவனைப் பற்றி சொல்ல விழைந்தால் அவன் அடியவர் முன் வருகிறார் ... என் செய்வேன் ?

----1
ravi said…
சரி அவன் வரும் போது எழும் அழகை சொல் ... கண்டு பிடித்து தருகிறோம் ...


🌹🌺 கண்ணன் குழலூதுவதற்காக வரப்போகிறான் என்றால் இயற்கை அவனுக்காக வனத்தைத் தயார் படுத்திவிடுகிறது.

🌺மழைக்காலம் முடிந்து எங்கும் பசும்புற்கள் முளைத்திருக்கின்றன.

மரங்களும் கொடிகளும் நன்கு பூத்து அவற்றின் நறுமணம் ப்ருந்தாவனம் முழுதும் வீசுகிறது.

🌺ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான பூக்கள் மலர்ந்தால் அவற்றின் நறுமணம் எப்படி இருக்கும்?

அதைச் சுமந்து கொண்டு மெல்லிய இதமான காற்று வீசி‌ எங்கும் பரப்பிவிடுகிறது.

🌺வண்டுகள் பூக்களின் மீது அமர்ந்து ரீங்காரமிடுவது ஸ்ருதி சேர்த்து ஆரோஹணம் அவரோஹணம் பாடுவது போல் உள்ளது.

🌺பறவைகள் சேர்ந்திசைக்குத் தயாராக கூவிப் பார்த்துக்கொள்கின்றன.

நீரோடைகளும் அருவிகளும் அவற்றை எதிரொலிக்கின்றன.

🌺இவை அனைத்தையும் கேட்ட எவரும் கண்ணன் எப்படி அழகாகக் குழலூதுவான் என்று வர்ணிக்கத் துவங்குவர்..

🌺தலையில் மயில்பீலி அசைகிறது.

காதுகளில் கொன்றைப்பூ, ஐந்து விதப் பூக்கள் மற்றும் இலைகளால் ஆன வைஜயந்தி மாலை கழுத்தில் அசைகிறது.

🌺சுற்றி கோபச் சிறுவர் கூட்டம், முல்லைப்பூப் போன்ற விரல்கள் புல்லாங்குழலின் துவாரங்களில் விளையாட மிக ஒயிலாக நடந்து கண்ணன் ப்ருந்தாவனத்தில் நுழைகிறான்.

🌺நாம் கண் பெற்றதன் பயன் இந்த மாயக் கண்ணனைக் காண்பதேயாகும்.

அவனது கடைக் கண் பார்வை நம் மேல் விழுவதும், புல்லாங்குழலைப் போல் அவனோடு ஒட்டுவதுமே பிறவி எடுத்ததன் பயன்.

🌺கண்ணனின் குழலிசை கேட்டு அசையும் விலங்குகள் எல்லாம் சிலையாகி நிற்க,

அசையாத மரங்களும், மலைகளும் புல்லரித்து நிற்கின்றன.

இது விந்தையிலும் விந்தை அல்லவா?

காலையில் மாடு‌மேய்க்கக் கிளம்பும் கண்ணனைக் கண்‌மறையும் வரை கண்டபின்,
அவன் குழலூதும் அழகை கோபியர் மாற்றி மாற்றிப் பாடிக்கொண்டிருந்தனர். அவர்களில் நானும் ஒருவர்

கண்டுபிடித்து தாரீரோ என் கண்ணனை ....

தருகிறோம் தருகிறோம் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ...🪷🪷🪷🙌🙌🙌👏👏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அம்பாளிடம் நாம் இன்னின்ன வேண்டும் என்று சொல்லிப் பிரார்த்திக்க வேண்டிய அவசியமே இல்லை. “உனக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? ஆனாலும் மலயத்வஜ பாண்டியனின் புத்திரியான ஹே மீனாக்ஷி! மனஸில் உள்ள குறையை வாய்விட்டுச் சொல்லாவிட்டால், அது உள்ளுக்குள்ளே உறுத்திக் கொண்டேயிருக்கிறது. அதனால்தான் இப்படிப் பிரார்த்தனைப் பண்ணுகிறேன். உனக்குத் தெரியாததைத் தெரியப்படுத்துவதற்காக அல்ல; எனக்கு உள்ளே கருணைக்கிழங்கு மாதிரி அரிப்பதைக் கொஞ்சம், சமனப்படுத்திக் கொள்ளவே பிரார்த்தனை பண்ணுகிறேன்” என்று நீலகண்ட தீக்ஷிதர் ‘ஆனந்த ஸாகர ஸ்தவம்’ என்கிற ஸ்தோத்திரத்தில் சொல்கிறார்.

ravi said…
நாம் கேட்காவிட்டாலும், அம்பாளை உபாஸித்து விட்டால் அவளே அநேக அநுக்கிரஹங்களைப் பண்ணுகிறாள். முதலாவதாக நல்ல புத்தி உண்டாகிறது. மனஸில் நல்ல எண்ணங்களே உண்டாகின்றன. நல்லதைச் செய்வதற்கான வழி புத்தியிலே பளீரென்று பிரகாசிக்கிறது. லோக க்ஷேமத்தைச் செய்வதற்கான திரவிய பலமும் தானே கிடைக்கிறது. எல்லோரிடத்திலும் சமமான அன்பு உண்டாகிறது. மனஸில் இந்த அன்பு ஊறாமலே வாய்ப்பேச்சில் இன்று ‘சகோதர சகோதரிகளே’ என்று பிரசங்கம் பண்ணி சமத்துவத்தைப் பற்றி நிறையப் பேசுகிறோம். அம்பாளிடம் பக்தி பண்ணாத வரையில் இது அநுபவத்தில் வராத வாய்ச் சவடால்தான்; புரளிதான். சாக்ஷாத் ஜகன்மாதாவைத் தெரிந்துகொண்டாலே, ‘உண்மையாக அவள் ஒருத்திதான் இத்தனை பேருக்கும் அம்மா; லோகத்தில் உள்ள பசு, பட்சி உட்பட நாம் இத்தனை பேரும் அவள் குழந்தைகள்தான்; அதனால் நாம் எல்லோரும் வாஸ்தவமாகவே சகோதர சகோதரிகள்” என்ற உண்மையான அன்பு உணர்ச்சி உண்டாகிறது. அவளைத் தெரிந்துகொண்டால் அதன்பின் நமக்குள் வெறுப்பு, துவேஷம் வரவே வராது. தப்புக் கண்டுபிடிக்க வராது. தப்பு நடக்கிறபோதுகூட அதைப் பரிவோடு திருத்துகிற மனப்பான்மை வருமே தவிர, தப்பைத் பிரகடனம் பண்ணிச் சண்டையில் இயங்கத் தோன்றாது. அம்பாளை உபாஸிப்பதால் லோகம் முழுக்க ஒரே குடும்பம் என்ற அன்பு உணர்ச்சி உண்டாகிறது. சத்துரு, சிநேகிதன் என்கிற வித்தியாசமே காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு இராது என்கிறார் மூகர்.

ravi said…
எல்லாம் சமமாகத் தெரிகிற ஞானநிலையின் உச்சிக்கே அம்பாளின் அநுக்கிரஹம் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. ‘அவள் அம்மா; அவளுடைய குழந்தைகளே நாம் எல்லோரும்’ என்பதற்கு மேலே ஒரு படி போய் – அம்மா, குழந்தை என்கிற வித்தியாசம்கூடப் போய் – எல்லாமே அவள்தான் என்று தெரிகிறது. ‘ஒரு சக்திதான் இத்தனை ஆகியிருக்கிறது; ரூபங்களில்தான் பேதம், உள்ளே இருக்கிறது ஒன்றுதான்’ என்கிற பரம அத்வைத ஞானம் சித்திக்கிறது. இதைத்தான் மூகர் சொல்கிறார் – “சிவ சிவ பச்யந்து ஸமம்” என்கிற சுலோகத்தில், காமாக்ஷியின் கருணா கடாக்ஷ வீக்ஷண்யம் பெற்றவனுக்குக் காடும் வீடும் சமமாகத் தெரிகின்றன; சத்துருவும் மித்ரரும் சமமாகத் தெரிகின்றனர் என்கிறார்.

ravi said…
அம்பாளைத் தாயாராகவும் நம்மைக் குழந்தையாகவும் வைத்துக்கொண்டு உபாஸிக்க ஆரம்பித்தாலும் அவளே காலக்கிரமத்தில் இந்த இரண்டும்கூட ஒன்றேதான் என்கிற பரம ஞானத்தை அநுக்கிரஹம் செய்கிறாள். இதை ஆசாரியாள் ஒரு ச்லேஷை (சிலேடை) மூலம் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் சொல்கிறார்.

“பவானி, உன்னுடைய அடிமை நான்” என்று பக்தன் துதிக்க ஆரம்பிக்கிறானாம். ‘பவானித்வம் –’, “பவானி உன்னுடைய”, (‘த்வம்’ என்றால் ‘உன்’) என்று இவன் சொல்லுகிறபோதே, அம்பாள் இவனுக்கு ‘பாவானித்வம்’ என்கிற நிலையை அநுக்கிரஹித்து விடுகிறாள் என்று சிலேடை பண்ணுகிறார். முதலில் இவன் பிரார்த்திக்கிறபோது ‘பவானி’ என்றால் அம்பாள். பரமசிவனுக்கு முக்கியமான எட்டுப் பெயர்களில் ஒன்று பவன் என்பது. பவனின் பத்தினி பவானி. மறுபடி, பவானித்வம் என்ற இந்த இரண்டு வார்த்தைகளை இவன் சொன்ன மாத்திரத்தில், அம்பாள் ‘பவானித்வம்’ என்ற நிலையை அநுக்கிரஹம் செய்வாள் என்னும்போது, ‘பவானி என்றால் ஆகிவிடுகிறேன்’ என்று அர்த்தம். ‘தீர்க்க ஸுமங்கலி பவ’ என்கிறோமே, இங்கே ‘பவ’ என்றால் ‘ஆவாய்’ என்று அர்த்தம். ‘பவானி’ என்றால் ‘ஆகிறேன்’. ‘பவானித்வம்’ என்றால் ‘நீயாவே நான் ஆகிவிடுகிறேன்’; எல்லாம் பிரம்மம் என்ற அத்வைத ஞானம் உண்டாகி இப்படிச் சொல்கிறான் பக்தன். தாஸனாக இருக்கப் பிராத்தித்தவனைத் தானாகவே ஆக்கிக்கொண்டு விடுகிறாள் அம்பிகை. “பவானி, உன் தாஸனாக என்னைத் துளி கடாக்ஷியம்மா” என்று பிரார்த்திக்க ஆரம்பித்த பக்தன் மூன்றாவது வார்த்தையைச் சொல்லக்கூட அவகாசம் தராமல், “பவானி உன்” (பவானித்வம்) என்று அவன் சொல்லும்போதே அம்பாள் இடைமறித்து, “ஆமாமப்பா பவானித்வம்தான்; அதாவது நானும் நீயும் ஒன்றேதானப்பா” என்கிற பரம ஞானத்தை வழங்கி விடுகிறாள். ‘பவானித்வம்’ என்றால் ‘பவானியின் தன்மை’ என்றும் அர்த்தம். பக்தனே பவானித்வம் பெற்று பராசக்தியோடு தன்மயமாகி விடுகிறான்.
ravi said…
79.வினம்ராணாம் சேதோ பவன வலபீ ஸீம்னி சரண-
ப்ரதீபே ப்ராகாஸ்யம் தததி தவ நிர்த்தூத தமஸி
அஸீமா காமாக்ஷி ஸ்வயமலகு துஷ்கர்ம லஹரீ
விகூர்ணந்தீ சாந்திம் ச'லப பரிபாடீவ பஜதே

காமாக்ஷி! உன் முன்பு வணங்கிநிற்கிறவருடைய மனமாகிய மாளிகையின் மேல் மாடத்தின் ஓரத்தில், உன் திருவடியாகிற தீபம்
இருளை நீக்கி ஒளியைப் பரப்பும் போது, எல்லை அறிய இயலாத பெருந்தீவினையலை, விட்டில் பூச்சிக்கூட்டம் போல் சுற்றிச் சுற்றி வந்து விழுந்து அடங்கிவிடும்.
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

💐💐💐
ravi said…
*❖ 110 குண்டலினீ =* குண்டலினீ சக்தியின் வடிவாகியவள் (மூலாதாரத்தில் இருப்பவள்)
ravi said…
*அம்மா*

பாம்பு எனும் பாயில் சயனம் கொள்கிறான் உன் சோதரன் ...

பாம்பின் தலையில் பஞ்சால் நெய்த பாதம் சிவக்க நடம் புரிந்தான் உன் தமையன்

பாம்பை தன் மேனி தனில் தவழ விட்டான் உன்னவன்

அது கக்கிய விஷம் தனை நாவல் பழம் என்றே உண்டான் உன் பாதி கொண்டவன்

பாம்பு தனில் வேல் கொண்டு விளையாடல் புரிந்தான் குமரன் ...

பாம்பை இடுப்பில் ஒட்டியாணம் போல் அணிந்து கொண்டான்
ஏக தந்தன் ...

அம்மா நீயோ பாம்பென சுருண்டு உள்ளாய் மூலாதாரம் அதில் ..

பாம்பாய் நீ படம் எடுக்கும் முன்னே

உன் உருவம் உள்ளமதில் உறைய வைத்தேன் ..

பக்தி எனும் மகுடி கொண்டே உனை மயங்க வைத்தேன் ..

சரண் எனும் பால் கொடுத்து வளர்த்து விட்டேன் ...

நீ கக்குவது விடமே ஆனாலும் அது அமுதாகும் என்றே அறிந்து கொண்டேன்

*அம்மா* .. ஆயிரம் தாமரை உன் இதழ் ஆனால் அங்கு சிந்துவது என்றும் அமுதமே அன்றோ 🙏🙏🙏🪷🪷🪷🪷🪷
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

67 –
பீதிஇல் உனைச் சார் பீதியில் எனைச்சேர்
பீதி உந்தனக்கு ஏன் அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா* ...

நீ பயமற்றவன்...

நடு நிசியில் வெண்காட்டில் நடம் ஆடும் நீ பயம் கொண்டவனாய் எப்படி இருக்க முடியும் ?

உன் சரண் புகுந்தேன் என் பயம் எல்லாம் நீங்கியதே *அருணாசலா*

பயம் அற்றுப் போன என்னை உன் வசம் இன்னும் இழுத்துக் கொள்ளாதது ஏனோ *அருணாசலா* ... ?

எதனால் நீ பயப்படுகிறாய் *அருணாசலா ?*

பயத்திற்கு பயம் விளைத்த நீ என் மீது பயம் கொள்ளுதல் முறையோ *அருணாசலா* ...

பயம் ஒன்றும் இல்லை என்றே நீ சொன்னாலும்

உன் மேனி சிலிர்க்கும் மாயம் என்ன *அருணாசலா* ... ?

பேயினும் நான் பேயனோ ...?

மூடனிலும் நான் மூடனோ ... ?

இன்றே ஒரு முடிவுக்கு வருவாய் *அருணாசலா* ..

பயம் வேண்டாம் ... உன் தயை வேண்டும்

பொன் பொருள் வேண்டாம்

உன் புன்சிரிப்பு ஒன்று போதும்

ஒன்றும் வேண்டாம் என்ற வரம் தர ஏன் பயப்படுகிறாய் இன்னும் *அருணாசலா* ?💐💐💐
ravi said…
வேதங்கள் உபநிஷதங்கள் கூட அம்பாளை இப்படி வர்ணிக்குமா என்று தெரியவில்லை .. வேதங்களுக்கும் வேதமாய் திகழ்வது பெரியவாவின் தெய்வத்தின் குரல் .. நாம் வேறு எதுவுமே படிக்க தேவை இல்லை ������
ravi said…
*அம்மா*

உன் கண் எனும் மேகம் சூல் கொண்டே கருத்துப்போனதோ..

அதில் கருணை மழை உன் பிரசவம் கண்டே களித்ததோ ..

வேண்டுவது நான் அமிர்தவர்ஷிணி ராகம் அதில் அல்ல

முகாரியில் முகவரி தொலைத்தே உன் புகழ் பாடுகிறேன்

நீயோ கருணை மழை பொழிகின்றாய்
தவறான ராகம் என்றே அறிந்தும்

*அம்மா அம்மா* என்றே தினம் தினம் ஒப்பாரி வைக்கின்றேன்

அதையும் நீ குயில் பாடும் பாட்டு என்றே தாம்பூலம் போட்டு சுவைத்து *பேஷ் பேஷ்* என்கிறாய் ..

தெரியாத வீணை தனில் தெரிந்த பாடல்களை தெரியாமல் மீட்டுகின்றேன் ...

நீயோ கச்சபீ தோற்றது என்கிறாய் ..

நான் செய்வது எதுவும் சாதனை அல்ல

ஆனால் நீயோ என் உச்சி முகர்ந்து உன் கர்வம் தனை ஓங்கி வளர்க்கின்றாய் ..

என் சொல்வேன் தாயே ...

குப்பையில் இருக்க வேண்டி பிறந்தவனை

கோபுர கலசமாக்கினாய்...

உன் போல் தாய் உண்டோ ..

உண்டு என்போர் பேய் அன்றோ ... ������
ravi said…
🌹🌺 "Ema dharma....you should be one of my weight lifter" is a simple story explained by a devotee who recited Sri Rama Naam 🌹🌺 -------------------------------------------------- ------

🌹🌺Rama Nama Sankeerthanam on the street
A bhajan group sings
was going
To Kathiresan who neglected it,
The sage who preached the name of Rama
One should never sell this
Soulfully at least once
He said tell me.

🌺Kathiresan also did the same.
He died in time.

🌺 He dragged away the soul
Stopped in front of Yamadharmaraj.
He, his father, is holy
Consider the account, once
You are chanting Rama's name
Ask whatever you want
said.

🌺 The sage who preached the name of Rama
It was said not to sell it
I remembered. So, to that
Refusing to quote the price, in the name of Rama,
What do you want to give?
If you think, give it
He said.

🌺Amazed Yamadharma King Rama
How we value the name
Indra thought to put
You have to decide this
He said come let's go to Indra.

🌺'If I am coming, I will come in Pallak and also, Ema Dharma....my Pallak
You are one of the lifters
should be. He said yes.

🌺 Let him lift us up too
If he says, Rama's name,
It is very glorious
to be; That is why
That he talks like this
King Yamadharma said to that
Agreed, put him on a palanquin
Seated and carried
He went to Indra.

🌺 Indra or Rama name by me
You can't put weight on Brahma
Let's ask; He said come.

🌺Indra along with Yamadharman
I will come only if I raise my teeth
That is his condition again
Fate.

🌺 Indra also agreed to that.
carrying the palanquin,
They went to Brahma.
He also glorified Rama's name,
I can't go to Vaikundam,
Let's ask for that gem
To say come, he too
It became a burden.

🌺 Everyone goes to Maha Vishnu and the soul in this palanquin chants the name of Rama once
has said; For that,
What a blessing to him
You have to say. By us
They said they could not.

🌺 Put this life on the palak,
All of you are carrying... Don't you see the glory of Rama's name from this?? Saying that..the Lord took the soul that came on the palanquin with Him!!

🌺Jai Shriram!🌹 🌺Jai Shriram!🌹

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -12.02.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-57

மூலம்:

நிலமுதலாம் பூதங்கள் நீடறிவிற் கூடிக்
குலமுகங்க ளாம்பழனிக் கோமான் – இலகுநுதற்
கண்ணிலன் என் பாரிற் கடையாகி, நானிறந்தால்
விண்ணின்முத்தி யுண்டெனும்சொல் வீண் (57).

பதப்பிரிவு:

நிலம் முதலாம் பூதங்கள் நீடு அறிவில் கூடிக்
குல முகங்களாம் பழனிக் கோமான் – இலகு நுதல்
கண்ணிலன் என்பாரில் கடையாகி, நான் இறந்தால்
விண்ணின் முத்தி உண்டு எனும் சொல் வீண்!!! (57).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

இந்தப் பாடலின் மையக்கருத்து நாம் ஏற்கனவே சிந்தித்த ஒன்று. ஆறுமுகப் பெருமானுக்கு அக்கினிக் கண் உண்டு மீண்டும் ஒரு முறை நம் சுவாமிகள் பறைசாற்றும் வெண்பா. இந்த நிகழ்வை நாம் ஏற்கனவே, எம் பெருமான் அருளால் பார்த்து உள்ளோம்.

நிலம்,நீர், நெருப்பு, காற்று, வெளி என்ற ஐம்பூதங்கள் ஐந்தொடு இணைந்து தன்முகம் ஒன்றும் சேர்ந்து ஆக ஆறுமுகமாக உள்ளவன் என் பெருமான் பழனிக் கோமான், பழனி ஆளும் ராஜராஜன்; அவனுக்கு அக்கினிக் கண் நெற்றியில் இல்லை என்று பிதற்றும் அறியா மக்களில் முடிவாகி, நான் இறந்தால், இறந்த பின் விண்ணின் முத்தி உண்டு எனும் சொல் வீண் என்றே கொள்க!

ஆசையெல்லாம் ஆறுமுகமுகத்தின் ஒருமுகப்பார்வை என்மேல் விழக் கூட இல்லை; அவன் ஓரப்பார்வை மட்டுமே போதும் என்ற எனக்கு, ஆறுமுகத்துடனும் என்னை ஆசீர்வதித்து, ஏறுமுகம் தந்தான் பழனியறுமுகப் பரம்பொருள்; முற்றா இளம்பூரணனின் வற்றாக் கருணைக்கு ஆர் நிகர்?

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
कुमारेशसूनो गुह स्कन्द सेना_
पते शक्तिपाणे मयूराधिरूढ ।
पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन्
प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥

प्रशान्तेन्द्रिये नष्टसंज्ञे विचेष्टे
कफोद्गारिवक्त्रे भयोत्कम्पिगात्रे ।
प्रयाणोन्मुखे मय्यनाथे तदानीं
द्रुतं मे दयालो भवाग्रे गुह त्वम् ॥

सहस्राण्डभोक्ता त्वया शूरनामा
हतस्तारकः सिंहवक्त्रश्च दैत्यः ।
ममान्तर्हृदिस्थं मनःक्लेशमेकं
न हंसि प्रभो किं करोमि क्व यामि ॥

अपस्मारकुष्टक्षयार्शः प्रमेह_
ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं
विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥

दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्दकीर्तिः
मुखे मे पवित्रं सदा तच्चरित्रम् ।
करे तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं
गुहे सन्तु लीना ममाशेषभावाः ॥

मृगाः पक्षिणो दंशका ये च दुष्टाः
तथा व्याधयो बाधका ये मदङ्गे ।
भवच्छक्तितीक्ष्णाग्रभिन्नाः सुदूरे
विनश्यन्तु ते चूर्णितक्रौञ्चशौल ॥

नमः केकिने शक्तये चापि तुभ्यं
नमश्छाग तुभ्यं नमः कुक्कुटाय ।
नमः सिन्धवे सिन्धुदेशाय तुभ्यं
पुनः स्कन्दमूर्ते नमस्ते नमोऽस्तु ॥
ravi said…
It is subramanya bhjangam selected slokas, where Adi Shankarachya asks Murugan, Skandan, Kartikeyan, Saravanan, kumaran our velavan to be with us in all times and to relieve us from all diseases and difficulties.
ravi said…
🌹🌺"🌺"I was pleased to see your Aditi (guest) pooja by Lord Sriman Narayanan - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 A poor family lived on the banks of river Ganges. The four members of that family are mother, father, son and daughter-in-law.

🌺They collected the wet grains lying in the fields without asking anyone for prayer, dried them, crushed them and made them into four balls and spent the days eating them. They are great devotees of Sriman Narayan.

Pleased by their service, Lord Sriman Narayanan came to them in the form of an old man who was panting with hunger and fell down before them with his eyes closed and his mouth panting.

🌺 The mistress of the house, who felt sorry for him and wanted to support the guest, gave him a ball of her share, thinking that it was okay even though she had been starving for ten days without food.

🌺 The old man who ate it looked as if he wanted more. Immediately the daughter-in-law said that she will give her share too.

🌺 After being without food for ten days, the old master was very sad to see that everyone had given their share of food today.

🌺 However, the daughter-in-law also said that it is dharma and gave her share of the ball to the guest.

🌺The old man Narayanamurthy appeared in the middle of the family who had sacrificed and performed Aditi Puja and said, "I am happy to see your Aditi (guest) Pooja.

🌺 My Pushpaka Vimana is ready for you. Everyone come to my world" and took them to Vaikunda.

🌺Let us treat our guests as Lord Sriman Narayan forever and receive the grace of Srimate Leshminarayan.

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹Valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*செளரியே நமஹ*🙏
சூரனாகிய வாசு தேவரின மகனாக பிறந்தவர
ravi said…
*ஸதா³ஶிவா*(அ)னுக்³ரஹதா³ பஞ்சக்ருத்யபராயணா🙏
மங்கள ஸ்வரூபமாக சர்வ காலமும் இருப்பவள்
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

67 –
பீதிஇல் உனைச் சார் பீதியில் எனைச்சேர்
பீதி உந்தனக்கு ஏன் அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா* ...

நீ பயமற்றவன்...

நடு நிசியில் வெண்காட்டில் நடம் ஆடும் நீ பயம் கொண்டவனாய் எப்படி இருக்க முடியும் ?

உன் சரண் புகுந்தேன் என் பயம் எல்லாம் நீங்கியதே *அருணாசலா*

பயம் அற்றுப் போன என்னை உன் வசம் இன்னும் இழுத்துக் கொள்ளாதது ஏனோ *அருணாசலா* ... ?

எதனால் நீ பயப்படுகிறாய் *அருணாசலா ?*

பயத்திற்கு பயம் விளைத்த நீ என் மீது பயம் கொள்ளுதல் முறையோ *அருணாசலா* ...

பயம் ஒன்றும் இல்லை என்றே நீ சொன்னாலும்

உன் மேனி சிலிர்க்கும் மாயம் என்ன *அருணாசலா* ... ?

பேயினும் நான் பேயனோ ...?

மூடனிலும் நான் மூடனோ ... ?

இன்றே ஒரு முடிவுக்கு வருவாய் *அருணாசலா* ..

பயம் வேண்டாம் ... உன் தயை வேண்டும்

பொன் பொருள் வேண்டாம்

உன் புன்சிரிப்பு ஒன்று போதும்

ஒன்றும் வேண்டாம் என்ற வரம் தர ஏன் பயப்படுகிறாய் இன்னும் *அருணாசலா* ?💐💐💐
ravi said…
[11/02, 18:19] Jayaraman Ravilumar: *சிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரை*
[11/02, 18:19] Jayaraman Ravilumar: मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते

गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।

किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते

भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ||63||

மார்கா³வர்திதபாது³கா பஶுபதேரங்க³ஸ்ய கூர்சாயதே

க³ண்டூ³ஷாம்பு³நிஷேசனம்ʼ புரரிபோர்தி³வ்யாபி⁴ஷேகாயதே |

கிஞ்சித்³ப⁴க்ஷிதமாம்ʼஸஶேஷகப³லம்ʼ நவ்யோபஹாராயதே

ப⁴க்தி꞉ கிம்ʼ ந கரோத்யஹோ வனசரோ ப⁴க்தாவதம்ʼஸாய
ravi said…
இந்த ஸ்லோகம் சிவானந்த லஹரியில 63 வது ஸ்லோகம்.

கண்ணப்ப நாயனாரோட கதையை சொல்றார்.

*ப⁴க்தி꞉ கிம்ʼ ந கரோதி* – பக்தி எதை தான் செய்யாது?

*அஹோவனசர* : – ஒரு வேடன்

*ப⁴க்தாவதம்ʼஸாயதே* – எல்லா பக்தர்களுக்குள்ளும் மிகச்சிறந்தவனாக .. பக்தஸ்ரேஷ்டனாக ஆயிட்டானே …அப்டின்னு சொல்றார்.
ravi said…
[11/02, 18:15] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 84 started on 6th nov

*பாடல் 27* ...💐💐💐
[11/02, 18:16] Jayaraman Ravilumar: *பாடல் 27 ... மின்னே நிகர்*

(வினையால் வருவது பிறவி)

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்

என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?

பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே.
[11/02, 18:17] Jayaraman Ravilumar: யாவராலும் விரும்பப்படுகிற தங்கத்தைப் போன்றவனே,

சுயப்
பிரகாசம் பொருந்திய நவரத்தினமானவனே

இவ்வுலக வாழ்விற்கு
ஆதாரமான செழுமைமிக்க பொருளே,

அருள் வடிவமானவனே, சர்வ
லோக சக்ரவர்த்தியே,

மயில் ஏறிய மாணிக்கமே,

உன் அடிமையாகிய
அடியேன்

மின்னலைப் போன்று தோன்றி மறையும் இவ்வுலக
வாழ்வை ஆசையோடு மேற்கொண்டது என் பிராப்தமோ?
ravi said…
[11/02, 18:12] Jayaraman Ravilumar: *103. அமேயாத்மநே நமஹ (Ameyaathmane namaha)*🦚🦚🦚
[11/02, 18:12] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ ஸர்வாதி
அச்யுத : |

*வ்ருஷாகபிரமேயாத்மா*
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[11/02, 18:14] Jayaraman Ravilumar: தானே இரணியனைப் போல வடிவம் எடுத்துக் கொண்டு பிரகலாதனிடம் வந்தார்.

தன்னை இறைவன் என்று காட்டிக் கொள்ளாமல், மனம் மாறிய இரணியனாகவே அவனிடம் காட்டிக் கொண்டார்.

தந்தையின் அன்பை முழுவதுமாக அவன் மேல் பொழிந்தார்.

தினமும் அவனுடன் இணைந்து திருமாலுக்குப் பூஜை,
நாம சங்கீர்த்தனம் அனைத்தும் செய்து, அவனைப் போலவே பக்தனாக வாழ்ந்து அவனை மகிழ்வித்து வந்தார்.🙌🙌
ravi said…
Today's thought 🌺

A valuable lesson is taught by a Traffic Signal.

Every problem is like a Red Signal.

If you wait for sometime, it will turn Green.

Enjoy life 💐
Be happy 😊
*🌹Good Morning🌹 💐Om Namah Shivaya💐*
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

பிறர் செய்த உதவி,
கடமை தவறாமை,
உண்மை, இம்மூன்றும்
என்றுமே வாழ்வில்
மறக்கக் கூடாதவைகள்..

மனம் திறந்தப்
பாராட்டுத் தக்க சமயத்தில் உதவி
ஆறுதலான பேச்சு
இவைகளை
மற்றவர்களுக்கு
நீங்கள்
கொடுத்துப் பாருங்கள்.

ஏனெனில் மனித வாழ்வே ஒரு தவம் தானே...


*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ரொம்பவும் ஸுலபமாகச் சொல்லிவிட்டேன், கர்மாவால் சித்த சுத்தியும் பக்தியால் அதன் ஐகாக்ரியமும் என்று. ஆனால் நாம் உள்ள நிலையில் எது ஸரியான கர்மா, எது ஸரியான பக்தி என்றே தெரியாமல் ஏதோ பண்ணிக் கொண்டு போவதில் அப்படியெல்லாம் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லையே என்றுதான் தோன்றும். ஆகையினால் இப்போதே சொல்லிவிடுகிறேன்;
ravi said…
இதெல்லாம் ரொம்ப ரொம்ம்ம்ப காலம் பிடிக்கிற ஸாதனைதான்: ரொம்ப ரொம்ப ஸ்லோவாகத்தான் முன்னேற முடியும். ஆகையினால், ‘முடியலையே, முடியலையே! நாம ஸரியாப் பண்ணலையோ? நமக்கு உய்வு கிடையவே கிடையாதோ?’ என்று யாரும் அழ வேண்டாம், அதைர்யப்பட வேண்டாம், அவநம்பிக்கைப் படவேண்டாம். ‘போறும் ஸாதனை! ஸாதனையுமாச்சு, இன்னூணுமாச்சு!
ravi said…
நமக்கு அதெல்லாம் பலிக்காது’ என்று கைவிட்டுவிட வேண்டாம்.
“முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார்” மனஸு தளராமல், நம்மால் முடிந்த முயற்சியை விடாமல் பண்ணிக் கொண்டே போனால், எத்தனை காலமானாலும் ஸரி, முறையான முன்னேற்றம் காண ஆரம்பித்து முடிவிலே லட்சியத்தைச் சேர்ந்து விடலாம். நம்பிக்கை முக்கியம். ச்ரத்தை என்பது அதைத்தான். ‘ஸ்வாமி கைவிட மாட்டார். சாஸ்திரமும் குருவும் காட்டும் வழி வீணாய்ப் போகாது’ என்ற த்ருடமான நம்பிக்கைக்குத் தான் ச்ரத்தை, ச்ரத்தை என்று பெயர்.
நாம் பேச்சு வழக்கில் ‘ச்ரத்தையாக ஒன்றை ஒருத்தர் பண்ணினார்’ என்று சொல்லும்போது ‘ஸின்ஸியராக, மனப் பூர்வமாக’ என்ற அர்த்தத்திலேயே அந்த வார்த்தையை உபயோகிக்கிறோம், வாஸ்தவத்தில் அது ‘நம்பிக்கை’ என்பதைத்தான் முக்யமான அர்த்தமாகக் கொண்டது. ஆழ்ந்த நம்பிக்கையால் ஏற்படுகிற ‘ஸின்ஸிரிடி’யோடு ஒருத்தர் ஒன்றைப் பண்ணுவதே ‘ச்ரத்தையோடு பண்ணுவது’.
நேராக நமக்கு ப்ரூஃப் கிடைக்கும் விஷயங்களில் ‘நம்பிக்கை’ என்பது தேவையில்லை.
ravi said…
ஆனால் மத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கும் அநேக விஷயங்களுக்கோ இப்படி ப்ரத்யக்ஷப்ரூஃப் இருக்காது; சிலது ப்ரத்யக்ஷத்திற்கு நேர்மாறாகக்கூடத் தோன்றும். ‘புண்யம் பண்ணினால் நல்லது கிடைக்கும் பாபம் பண்ணினால் கெட்டது கிடைக்கும்’ என்று எல்லா மதங்களிலும் இருக்கிறது. ஆநால் ப்ரத்யக்ஷத்தில் அநேக பாபங்கள் பண்ணுபவர்கள் நல்லபடி வாழ்வதையும், புண்ய கர்மாக்கள் பண்ணுபவர்கள் கஷ்டப்படுவதையும் பார்க்கிறோம். இப்படியிருக்கிறதே என்றால், அதற்கு நம் ஹிந்து சாஸ்திரத்தில், ‘ஒரு ஜன்மாவுக்குள்ளேயே பாப-புண்ய பலன்கள் தெரிந்தாக வேண்டுமென்றில்லை. அநேக ஜன்மாக்களில் பலன்கள் தொடரும். இன்றைக்கு ஒரு பாவி ஸுகப்படுகிறான், புண்யவான் கஷ்டப்படுகிறான் என்றால் ஜன்மாந்தரத்தில் இந்த பாவி புண்யம் பண்ணியிருக்கிறான், அந்தப் புண்யவான் பாவம் பண்ணியிருக்கிறான் என்று அர்த்தம்’ என்று சொல்லியிருக்கிறது. இதை நாம் ப்ரூவ் பண்ணிக் கொள்ள முடியாது. இங்கேதான் நம்பிக்கை – அதாவது ச்ரத்தை – தேவைப்படுகிறது. இதே மாதிரி இன்னும் அநேகம் ச்ரத்தையின் மேலேயே ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.
ஆஸ்திகர், நாஸ்திகர் என்ற இரண்டு பேர் பிரித்துச் சொல்கிறோமே, அதில் ஆஸ்திகர் என்றால் வெறுமனே ஸ்வாமி உண்டு என்று நினைக்கிறவர் மட்டுமில்லை. வெறுமனேக்காக, ஸகலத்துக்கும் காரண மூலசக்தியாக ஸ்வாமி என்று ஒருத்தர் இருக்கத்தான் வேண்டுமென்று நினைப்பதால் என்ன ப்ரயோஜனம்? அந்த ஸ்வாமி நம்முடைய கார்யங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்து அதன்படி புண்ய-பாப பலன்களைக் கொடுக்கிறார்; அதோடு மாத்ரமில்லாமல் க்ருபா மூர்த்தியாக இருந்து கொண்டு நம்மை நல்லதிலேயே போகச் செய்வதற்காக ரிஷிகள் மூலம் சாஸ்திரங்களைக் கொடுத்திருக்கிறார்; போதாதென்று ஆசார்ய புருஷர்களை அனுப்பி வைத்தும், தானே அவதரித்தும் நல்லதற்கு வழி காட்டுகிறார்; ஆனபடியால் அவருடைய தீர்ப்புக்கு பயந்தும், சாஸ்த்ரப்படி ஆசார்யரின் உபதேசப்படி நடந்துகொண்டும் நாம் கடைத்தேற வேண்டும் என்ற நம்பிக்கை உறுதியாக இருந்து அந்தப்படி செய்தால்தான் ப்ரயோஜனமாகும். இந்த நம்பிக்கையைதான் ஆஸ்திகம் என்பது. அதாவது ச்ரத்தைதான் ஆஸ்திகம் என்பதே. சாந்தோக்ய உபநிஷத்தில் ச்ரத்தை இருக்கிறவன்தான் ஆத்ம சிந்தனை பண்ணுவான் என்ற மந்த்ரத்திற்கு1 ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போது ஒரே சின்ன வாக்யத்தில் “ஆஸ்திக்ய புத்தி:-ச்ரத்தா” என்று இரண்டையும் ஒன்றுபடுத்திச் சொல்லி முடித்திருக்கிறார்.
இங்கே நம்மைவிட வெள்ளைக்காரர்கள் ஒரு படி மேலே போயிருக்கிறார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. எப்படியென்றால் – நாம் ‘மதம்’ என்று சொல்கிறோமே அதற்கு அர்த்தம் ‘மதியினால் பெறப்பட்டது’ என்பது. மதி நன்றாக ஆய்ந்து ஓய்ந்து பார்த்து ப்ரூவ் பண்ணி முடிவு கண்ட கொள்கையும் மதம்தான்; அது, ‘நம்மால் ப்ரூவ் பண்ணிப் பார்த்துக் கொள்ள முடியாவிட்டாலும் சாஸ்திரங்களும் பெரியவர்களும் சொல்வதால் ஒன்று ஸரியாகத்தான் இருக்க வேண்டும்’ என்று நம்புவதும் மதம்தான். இருந்தாலும், மதி, அதாவது ஒரு மனித புத்தி, தானே சிந்தித்துப் பார்த்து கன்வின்ஸ் ஆகிற கொள்கை என்பதுதான் மதம் என்பதற்கு முக்யமான அர்த்தம். பிறத்தியார் வார்த்தையில் நம்பிக்கையால் இல்லை. அதற்குத்தான் ச்ரத்தை என்ற தனி வார்த்தை இருப்பது. ஆனால் இங்கிலீஷ்காரர்களோ ‘Religion’ என்பதையே ‘ Faith’ என்றும் சொல்கிறார்கள்! நம்பிக்கைக்கு அத்தனை முக்யத்வம் மத விஷயத்தில் கொடுத்திருக்கிறார்கள்! பிற்காலத்தில் அவர்கள்தான் மதத்திலும் ‘ரீஸ’னுக்கு [பகுத்தறிவுக்கு] ரொம்பவும் இடம் கொடுத்து நம்மவர்களையும் அப்படி இழுத்துவிட்டவர்களென்றாலும் பூர்வத்தில் அவர்கள் சாஸ்திர நம்பிக்கையே மதம் என்று நினைத்துத்தான் அதை faith என்று சொல்லியிருக்க வேண்டும்.
Hemalatha said…
நினைத்தாலே முக்தி தரும் அருணாச்சலத்தை தினமும் எங்களை நினைக்கச் செய்யும் தங்களுக்கு திருவடி வணக்கங்கள் சார்🙏
Kousalya said…
Wow.wow...கண்ணன் குழலோசை வந்து காதில் மெல்ல கேட்குதே, குக்கூக் என குயில்கள் கூவ மானும் மயிலும் ஆடுதே....கடகட என இடியும் முழங்க மேகம் சதிராடுதே, ராதையோடு கண்ணன் ஆட ராச லீலை ஆனதே....கண்ணா...........கண்ணா...............கண்ணா.....🙏🙏🪷🪷🙇‍♀️🙇‍♀️
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 485* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
சர்வேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகை எனும் காமாக்ஷி கையில் ஏன் கரும்பை வைத்துக் கொண்டிருக் கிறாள். ?

அம்பாள் எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை கூட சாதகமாக்கிக்கொள்கிறாள் என்று புரிய வைக்கும் சம்பவம் அது.

மன்மதன் காதல் கடவுள். காமன்.

அவன் சிவன் தியானத்தில் இருக்கும்போது தனது கரும்புவில்லில் ஐந்து புஷ்ப பாணங்களைத் தொடுத்து சிவன் மேல் எய்துகிறான்.

மற்றவர்களாக இருந்தால் காமன் கணைகளால் அவன் வசப்பட்டு மதி மயங்குவார்கள்.

சிவன் தியானம் கலையவே யார் கலைத்தது என்று நெற்றிக்கண்ணால் (ஞானக்கண்) மெதுவாக எதிரே நோக்க அந்த ஞானத்தீ காமனை எரித்து சாம்பலாக்க,

அவன் மனைவி ரதி ஓடிவந்து அம்பாளிடம் கதறுகிறாள்.

கணவனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டு கெஞ்சுகிறாள்.

அம்பாள் யார்? சிவை. தனது கணவன் இட்ட தண்டனை அவள் இட்டது தானே?

மீற முடியாதே. அதே நேரம் தாய் அல்லவா? பாசத்தோடு ரதிக்கு அருள்கிறாள்?

எப்படி?
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 81*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
दग्धषडध्वारण्यं दरदलितकुसुम्भसम्भृतारुण्यम् ।
कलये नवतारुण्यं कम्पातटसीम्नि किमपि कारुण्यम् ॥ ६६॥

66. Dhagdha shadadwaranyam dhara dalitha kusumba sambhoothaarunyam,

Kalaye nava tharunyam kampa thata seemni kimapi karunyam.

தக்தஷடத்வாரண்யம் தரதலிதகுஸும்பஸம்ப்றுதாருண்யம் |

கலயே னவதாருண்யம் கம்பாதடஸீம்னி கிமபி காருண்யம் ||66||
ravi said…
மிக உயர்ந்த ஜகத் காரண தத்வம் இந்த ஸ்லோகத்தில் அடங்கியுள்ளது.

காம க்ரோத, மத, மோக, லோப, மாத்சர்யம் என்ற ஆறு ஈர்ப்புகளை ஷட்வாரண்யம் என்பார்கள்.

ஆரண்யம் என்றால் காடு..மரங்கள் தாவரங்கள் ஒன்றை ஒட்டி இன்னொன்று கூடவே வளர்ந்து அடர்ந்த காடாகுமே அது போல் இந்த ஆறு குணங்கள் மனதை ஆட்கொள்வதாக உபமானம்.

இன்னொரு உள்ளர்த்தம், ஆறு விஷயங்கள் .

அதில் வாக்கு சம்பந்தப்பட்ட மூன்று வர்ணம், பதம், மந்த்ரம். அர்த்தத்தை சேர்ந்தவை மூன்று கலா, தத்வம், புவனம் என்பவை.

அந்த ஆறு, ஷட்வாக்களால் ஜகத் உருவாகிறது.. .

காமாக்ஷி அம்பாள் இந்த ஆறுக்கு, ஷட்வாக்களுக்கு, அப்பாற்பட்ட குங்குமப்பூ நிறக்காரி.

கம்பா நதி தீர கருணாசாகரி என்கிறார்.🪷🪷🪷
ravi said…
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்

படியே இது என்று உரைக்கலாம்

படியன் அல்லன் பரம் பரன்!

கடிசேர் நாற்றத்துள் ஆலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஒடியா இன்பப் பெருமையோன்

உணர்வில் உம்பர் ஒருவனே

--- திருவாய்மொழி (நம்மாழ்வார்)
ravi said…
என் ஆன்மாவில் கலந்து இருப்பவனும்

என் தேகத்திலும் இருப்பவனும்

அண்டத்து உயிர்கள் அனைத்தின் உள்ளும் இருப்பவனும்

அவற்றுக்கு வெளியிலும் உறைபவனும்

அவன் குணநலன்கள் இவையே
என்று உரைக்கலாம் - என்று நாம் கூறினாலும்

என்றும் நமது வரையறைக்கு உட்படாதவனும்
திருமால் எனும் முழுமுதற்கடவுளும்

மிகுந்த / உவப்பளிக்கும்

வாசனை உடைய கருப்பஞ்சாறு போன்றவனும்

இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்ட

நுண்மை மிக்கவனும்

குறைக்க/மாற்ற முடியாத
ஆனந்த மயமானவன் /

பேருவகை அளிக்க வல்லவன் /அருள் ஓளி வடிவானவனும்

ஞானத்தில் மிக உயர்ந்து நிற்பவனும்
ஒருவனே - 🙏🙏🙏
ravi said…
*❖ 111 பிஸதந்து தனீயஸீ* = தாமரை இழை போன்ற நுண்மையும் மென்மையும் சிறந்த தன்மையும் கொண்டிருப்பவள்
ravi said…
பனி மலையில் தாமரை மலருமோ ... ?

கதிரவன் கருணை அங்கு பிறக்குமோ ?

மலரடிகள் கமல இதழ்கள் ஒன்று சேர்ந்த குவியல் என்றால்

மலரவைக்கும் சூரியன் யார் அம்மா ?

குளிர் நிரம்பி வழியும் இமய சாரலிலே இமை மூடா விழி சுற்றி காப்பவளே ..

இதய கமலத்தில் ரீங்காரம் இடும் இனிய வண்டே ...

உன் முக காந்தியின் கதிர் பட்டு உன் பாத கமலம் மலர்கிறதோ

இல்லை

உன் புன்னகை ஒளி பட்டு பங்கஜம் பரந்து விரிகின்றதோ

இல்லை

உன் பதி ஜதி போட்டு ஆடும் நடன ஒலி கேட்டும் அரவிந்தம் அழகை கொட்டுகிறதோ

இல்லை

உன் கருணை ரஸம் கண்டு தண்டை சுற்றும் வண்டு போல் தாமரை தவழ்ந்து மலர்கிறதோ ...

கூம்பாமல் சிரிக்கும் உன் பாதங்கள் சூரிய கிரகணம் காணா எழில் ஓவியம் ...

என் சென்னி எனும் தடாகத்தில் என்றும் மலரட்டும் அம்மா ...
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

68 –
புல்லறிவு ஏது உரை நல்லறிவு ஏது உரை
புல்லிடவே அருள் அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா* ... அறிவு தந்தாய் ஆனந்தப்பட்டேன் ...

நாவில் வாணீ யை அமர வைத்தாய் நன்றி கொண்டேன்

எழுத்தும் சொல்லும் எண்ணமும் தந்தாய் ஏடுகள் பல படைத்தேன் ...

சித்தம் எல்லாம் சிவ மயம் ஆக்கினாய்

உனை சேவிக்கும் கரங்கள் பயம் காணாமல் செய்தாய்

ஆராயும் ஞானம் தந்தாய்

அதில் உனை செய்தேன் தினம் பாராயணம் ...

*அருணாசலா* ஒன்றும் மட்டும் புரியவில்லை ..

எது பொய் அறிவு எது மெய் அறிவு என்று

உனை புரிதல் ஒன்றே மெய்யறிவு என்றால்

உனை புரிந்து கொள்ளும் ஞானம் தனை ஏன் மறைத்தாய் *அருணாசலா*? 🙌🙌🙌
Hemalatha said…
தில்லானா மோகனாம்பாள் படத்துல ஆச்சி கேட்பது போல😂சார் உங்க பேனாவால் மட்டும்தான் இப்படி எழுதுவீங்களா இல்லை எந்த பேனா கொடுத்தாலும் இப்படி எழுதுவீங்களா🤔
Hemalatha said…
வார்த்தைகளோட அப்படியே விளையாடுறீங்க.என்னால மனப்பாடம் செய்தால் கூட இப்படி எழுதமுடியாது.சாய்ராம்🙏🙏
ravi said…
சங்கராம்ருதம் - 423

பன்னிரண்டு வயது பாலகிருஷ்ணனுக்கு நல்ல சகவாசம் இல்லை. யார், யாருடனோ பழகுகிறான். வேறு மதஸ்தர் வழிபாட்டுத் தலங்களில் அவர்களுடன் சேர்ந்து பிரேயர் செய்கிறான், .சந்த்யாவந்தனம் செய்வதில்லை. விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதில்லை.

ravi said…
இப்படி ஒவ்வொரு முறை வரும்போதும் சொல்லிக் கண் கலங்கினார் அன்பர்.

சில நாள்கள் சென்றதும் பதறிக் கொண்டு வந்தார்கள் பெற்றோர்,

"பாலகிருஷ்ணனைக் காணவில்லை.."

பெரியவாள் சொன்னார்கள்;

"அவன் வெகுதூரம் - வடக்கே - போயிருக்க மாட்டான். பொறுமையாக அவன் இருக்குமிடத்தை யுக்தி பூர்வமாகக் கண்டு பிடியுங்கள்.."

இரண்டு மாதம் கழித்து திரும்ப வந்தார்கள் பெற்றோர். தாயார் கண்களில் வெள்ளம்.

"வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அநாதை இல்லத்தில் தங்கியிருந்து பள்ளிக்கூடம் போய் வருகிறானாம்

சில நிமிடங்களுக்குப் பின் பெரியவாள் கூறினார்கள்.

"அவன் தங்கியிருக்கும் ஹாஸ்டல் வாசலில் நின்று கொள்ளுங்கள். அவன் பள்ளிக்கூடத்துக்குப் போவதற்காக வெளியே வரும்போது சங்கரா. என்று மூன்று முறை குரல் கொடுங்கள்...."

அவ்வாறே செய்தார்கள்.

என்ன ஆச்சர்யம்! ஈசுவரன் பெயரைக் கேட்டதும் திரும்பிப்பார்த்தான்.

அப்பா - அம்மா !

ஓடி வந்து கட்டிக்கொண்டு அழுதான்.

வீட்டுக்குத் திரும்பினான்.

"நீ என்ன பீட்டரா? பாலகிருஷ்ணனா?" பெரியவா

பையன் நிலை தடுமாறிப் போனான். 'அந்தப் பெயர்' பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? ஏதாவது ரிக்கார்டைப் பார்த்திருப்பாரோ? ஏதாவது இல்லை. எல்லா ரிக்கார்டும் பெரியவாளுக்குத் தெரியும்!.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ravi said…
சங்கராம்ருதம்

காஞ்சிபுரம் சமீபம் கீழம்பி என்னும் கிராமம்.

வயல் வரப்புகளின் மேல் நடந்து செல்ல வேண்டிய நிர்பந்தம்.

பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராசாரியாரும் உடன் வந்து கொண்டிருந்தார். அவர் மிகப் பெரிய வைணவத் தலைவர். வைணவ சம்பிரதாயங்களைக் குறைவில்லாமல் அனுஷ்டிப்பவர். பெரியவாளிடம் இமாலய பக்தி வைத்திருந்தார்.

வரப்பின்மேல் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்த போது,அண்ணங்கராசார்ய ஸ்வாமி, கைகளை கூப்பிக்கொண்டு,

"
ravi said…
தேவரீர், ஒரு நிமிஷம் அப்படியே நிற்கணும்..."

என்று வேண்டினார்.

பெரியவாள் நின்று விட்டார்கள்.

வரப்பை ஒட்டி, வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. இரு கைகளாலும் அந்தத் தண்ணீரை எடுத்து, பெரியவாளின் திருப்பாதங்களில் விட்டார், அண்ணங்கராசாரியார்.

பெரியவாள் அப்போது அசையாமல் நின்றார்கள்.

பெரியவாளின் பாத தீர்த்தத்தைத் தன் தலையில் தெளித்துக்கொண்டு, சிறிதளவு அருந்தினார்.

"இது, பிரத்யட்ச நாராயணனுடைய பாததீர்த்தம்!.. இன்றைக்குத் தான் நான் தன்யனானேன்.." என்று மனம் நெகிழக் கூறிவிட்டு, "தேவரீர் மன்னிக்கணும் ..தாமதப்படுத்தி விட்டேன்" என்று உளமாரக் கூறினார்.

அண்ணங்கராசாரியார், எப்பொழுதும் பெரி
ravi said…


*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள மஹா சிவராத்திரி தோன்றிய வரலாறு பற்றிய பதிவுகள் :*

*நீலகாந்தா*

புராணங்களின்படி, சமுத்திர மந்தன் என்று அழைக்கப்படும் பாற்கடலை வாசுகி என்ற பாம்பை கொண்டு தேவர்கள் கடைந்த போது விஷம் கடலில் கலந்தது. இது முழு உலகையும் அழிக்கக்கூடும் என்று தேவர்கள் நம்பியதால் பயந்துபோனார்கள்.

இதனையடுத்து அவர்கள் சிவபெருமானிடம் உதவிக்காக ஓடியபோது, ​​அவர் கொடிய விஷத்தை குடித்தார், ஆனால் அதை விழுங்குவதற்கு பதிலாக தொண்டையில் வைத்திருந்தார். இதனால் சிவ பெருமானின் தொண்டை நீலமாக மாறியது.

இதன் காரணமாக, அவர் நீல நிற தொண்டையான ‘நீல்காந்தா’ என்று அறியப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற தினமே சிவராத்திரி என கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.

*
ravi said…
பிரம்மா-விஷ்ணு போட்டி*

மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தி யார் என்று பிரம்மனும், விஷ்ணுவும் வாதிட்டனர். அந்த வாத்திற்கு பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை விளக்கிட சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார்.

தனது ஆதியும், அந்தமும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார். அந்த சோதனையை ஏற்று வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமியைத் தோண்டி சென்றார் விஷ்ணு.

ravi said…
அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார். இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை. தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு திரும்பினார். உயர உயரப் பறந்து முயன்ற பிரம்மன் களைப்படைந்திருந்த நிலையில், வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார்.

எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மன் கேட்க, நான் சிவனின் தலைமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். யுகம், யுகமாய் பயணித்தும் பூமியை அடையவில்லை என்று கூறியது. தான் சிவனின் தலை முடியைக் கண்டதாக அவரிடம் சாட்சி கூறுமாறு பிரம்மன் கேட்க, தாழம்பூ அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே சிவபெருமானிடமும் உரைத்தது.

பிரம்மனுக்காக தாழம்பூ பொய் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று ஜோதி வடிவாய் இருந்தவர், அக்னிப் பிழம்பாக மாறினார். இதனால் இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட பாலகர்கள் எட்டு பேரும் மற்றும் தேவர்களும் அமைதி பெற வேண்டினர்.

அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர்.அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

*சிவ-சக்தி*

சிவன் மற்றும் சக்தியின் திருமணத்தின் புராணக்கதை மகாசிவராத்திரி பண்டிகை தொடர்பான மிக முக்கியமான புராணக்கதைகளில் ஒன்றாகும். சிவன் தனது தெய்வீக மனைவியான சக்தியுடன் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டதை கதை விவரிக்கிறது. சிவன் மற்றும் சக்தியின் புராணங்களின்படி, சிவன் பார்வதியை மணந்த நாள் சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.

*வில்வ இலைகள்*

சிவராத்திரி நாளில் ஒரு காட்டில் பல பறவைகளைக் கொன்ற வேட்டைக்காரன் ஒருவனை பசியுள்ள சிங்கம் ஒன்று துரத்தி சென்றுள்ளது. சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தன்னை காப்பாற்ற வேட்டைக்காரர் வில்வ மரத்தில் ஏறினார். சிங்கம் மரத்தின் அடிப்பகுதியில் இரவு முழுவதும் காத்திருந்தது.

மரத்திலிருந்து தூக்கத்தில் விழுவதை தவிர்ப்பதற்காக விழித்திருக்க வேட்டைக்காரர் வில்வ மரத்தின் இலைகளை பறித்து கீழே இறக்கி போட்டுக் கொண்டே இருந்தார். அப்போது மரத்தின் அடிப்பகுதியில் அமைந்திருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது இலைகள் விழுந்தன.

வில்வ இலைகளை வழங்குவதன் மூலம் மகிழ்ச்சி அடைந்த சிவன், பறவைகளை கொல்வதன் மூலம் வேட்டைக்காரன் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து வேட்டைக்காரனை காப்பாற்றினார். இந்த கதை சிவராத்திரியில் வில்வ இலைகளுடன் சிவனை வழிபடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

*சிவலிங்கம்*

சிவலிங்கத்தின் புராணக் கதை மஹா சிவராத்திரி உடன் ஆழமாக தொடர்புடையது. மஹா சிவராத்திரி நாளில் தான் சிவன் முதலில் ஒரு லிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்தினான் என்று நம்பப்படுகிறது. அப்போதிருந்து, இந்த நாள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது மற்றும் சிவனின் மகத்தான இரவு மஹா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.

இந்த நாளை கொண்டாட, சிவபெருமானின் பக்தர்கள் பகலில் விரதம் இருந்து இரவு முழுவதும் இறைவனை வணங்குகிறார்கள். சிவராத்திரியில் சிவபெருமானை வணங்குவது ஒருவருக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருகிறது என்று கூறப்படுகிறது. எனவே இன்று இரவு சிவனுக்கு பால், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று நான்கு கால பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெறும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

ravi said…
*❖ 112 பவானீ =* நல்-வளத்தை, சுபீட்சத்தை (ஜீவாத்மாவிடம்) ஏற்படுத்துபவள்

*பாவனா* = சிந்தனை - ஒருமுகப்படுத்துதல் -கற்பனை

*கம்யா* = அடையக்கூடியது - சாத்யமாவது🪷🪷🪷
ravi said…
அம்மா *பவானீ த்வம் தாஸே மயீ* என்றே வேண்டி நின்றேன் ...

உனையே எனக்கு தந்து விட்டாயே ...

*பவானீத்வம்* பெற்ற நான் இனி ஏதும் பெற உண்டோ உலகில் எதுவும் ...

எதுவும் வேண்டி நில்லேன் ...

எல்லாம் உன் மயம் என்றே அறிந்த பின் ...

ஒன்று கேட்பேன் உரிமையுடன் ...

*பவானீத்வம்* அனைவரும் பெறவேண்டும் ...

எங்கள் சுவாசம் அதில் நீ தினம் வந்து வாசம் செய்ய வேண்டும் ..

பாசம் அறுத்து உன் மேல் பாசம் கொள்ள வேண்டும் ..

மனம் எனும் கரும்பை உன் கரங்களில் திணிக்க வேண்டும்

இந்திரியங்கள் உன் பாதம் தொழவேண்டும் ..

அந்தகரணங்கள் மெய் உறுகி உன் வசம் சேர வேண்டும் ..

உன் அங்குசம் நேர்வழியில் செல்ல உதவ வேண்டும் ..

உன் திருவடிகள் விழுதுணையாய் என்றும் வீறு கொண்டு முன்னே செல்ல வேண்டும் ...

முப்புரை உனை மறவா வரம் வேண்டும் ...

மறந்தால் அகல்யை போல் கல்லாய் சமைய வேண்டும் ...

அந்த கல்லுக்குள் உன் கருணை எனும் தேரை வாழ வேண்டும் ...

கல்லுருகி உன் சிவை அதில் எழ வேண்டும் ..

காண்பதெல்லாம் சக்தி ஒன்றே என்று என் கண்கள் சொல்ல வேண்டும் ...

*பார்க்கும் பெண்கள் எல்லாம் நான் வணங்கும் நீயாக வேண்டும் ...*

இவை தர ஏதும் தடை உளதோ தாயே உனக்கு 🙏🙏🙏
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

69 –
பூமணம் மா மனம் பூரண மனம் கொளப்
பூரண மனம் அருள் அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா*

புவியின் மணம் கண்டு மீண்டும் மீண்டும் வந்து பிறக்கின்றேன் *அருணாசலா* ...

எடுத்த பிறவிகள் அது இருக்கும் ஒரு கோடி ...

கோடிகள் குவிந்ததால் கோமகன் உனை மறந்து போனேனோ *அருணாசலா* ?

கோடிகள் என்னை பேடி ஆக்கியதோ அறியேன் *அருணாசலா* ... ?

குவிந்த செல்வம் எனை கொடி போல் சுற்றிக் கொண்டதோ *அருணாசலா* ...?

உண்மை செல்வம் ஏது என்று அறியாமல் காகிதம் எனை ஏமாற்றியதோ *அருணாசலா* ... ?

அந்த காகித பணத்தில் கப்பல் செய்து கடல் நடுவே மிதக்க விட்டேனோ *அருணாசலா* ... ?

கரை இன்னும் சேரவில்லை *அருணாசலா*

குறை நிறைந்து போனேன்

முறையான உனை பறை சாற்ற மறந்தேன் *அருணாசலா*

இருந்தும் *பறை* நீ எனக்கு தருவாயோ *அருணாசலா* ...

புவி மணம் அறுத்தே என் செவி தனில் உன் மணம் தருவாய் ..

என் மனம் இனி உன் மணம் பரவட்டும் ...

அங்கே நம் *திருமணம்* நடக்கட்டும் *அருணாசலா*🙏🙏🙏🙏🙏
ravi said…
தினம் ஒரு பாசுரம் 🙏🙏🙏

கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும், உந்தன்

மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான், நிரயத்

தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள் நீ

செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங் கொண்டலே!

- ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)
ravi said…
[12/02, 16:51] Jayaraman Ravilumar: *103. அமேயாத்மநே நமஹ (Ameyaathmane namaha)*🦚🦚🦚
[12/02, 16:51] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ ஸர்வாதி
அச்யுத : |

*வ்ருஷாகபிரமேயாத்மா*
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[12/02, 16:53] Jayaraman Ravilumar: மற்றொரு புறம், நிஜ இரணியனின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே,

தூணைப் பிளந்து கொண்டு
நரசிம்மராகத் தோன்றி அந்த இரணியனை வதம் செய்தார்.

இவ்வாறு திருமாலே பிரகலாதனை மகிழ்விக்க இரணியனாகவும்,

இரணியனை வதைக்க நரசிம்மராகவும்

இரு அவதாரங்கள் எடுத்தார் என்று விஷ்ணு புராணத்தில்
பராசர மகரிஷி மறைமுகமாக வர்ணித்துள்ளார்
[12/02, 16:55] Jayaraman Ravilumar: பிரகலாதனை மகிழ்விக்கும் பொருட்டு நரசிம்மராக மட்டுமல்ல, இரணியனாகக் கூட திருமால் அவதாரம் செய்தார் என்பதை
நோக்குகையில்

தன் அடியவர்கள் மேல் அவர் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

இவ்வாறு எல்லையில்லாத கருணையைத் தன் அடியார்கள் மேல் காட்டுவதால் திருமால் ‘ *அமேயாத்மா* ’ என்று போற்றப் படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் *103-வது திருநாமம்.*

“ *அமேயாத்மநே நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் பக்தர்கள் திருமாலின் அளவற்ற கருணைக்குப் பாத்திரமாவார்கள்.
ravi said…
[12/02, 16:48] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 85 started on 6th nov

*பாடல் 27* ...💐💐💐
[12/02, 16:48] Jayaraman Ravilumar: *பாடல் 27 ... மின்னே நிகர்*

(வினையால் வருவது பிறவி)

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்

என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?

பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே.
[12/02, 16:49] Jayaraman Ravilumar: அநித்யம் என்று அறிந்தும் பிரபஞ்ச வாழ்வில் பற்று வைக்க காரணம்
விதியின் பயன்தான் என்கிறார்.

அதற்கு மூல காரணம் விஞ்ஞானம்
அல்லது அவித்யை.

முன்பு செய்த வினையின் காரணம் பின்பு
விளையும் வினையின் நியதியே விதி.

முன்பு செய்த நல்வினையின் பயனாக இப்பிறவியில் கிடைக்கும் அறிவு,
செல்வம், முயற்சி, பெருங்குடிப்பிறப்பு கிடைப்பது.

இதை வள்ளுவர்
*ஆகூழ்* ' என்பர்.

தீவினையின் பயனாக சோம்பல், அஞ்ஞானம்,
அறிவின்மை உண்டாகும்.

இதை ' *போகூழ்* ' என்பர்.
ravi said…
[12/02, 16:44] Jayaraman Ravilumar: *சிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரை*
[12/02, 16:44] Jayaraman Ravilumar: मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते

गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।

किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते

भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ||63||

மார்கா³வர்திதபாது³கா பஶுபதேரங்க³ஸ்ய கூர்சாயதே

க³ண்டூ³ஷாம்பு³நிஷேசனம்ʼ புரரிபோர்தி³வ்யாபி⁴ஷேகாயதே |

கிஞ்சித்³ப⁴க்ஷிதமாம்ʼஸஶேஷகப³லம்ʼ நவ்யோபஹாராயதே

ப⁴க்தி꞉ கிம்ʼ ந கரோத்யஹோ வனசரோ ப⁴க்தாவதம்ʼஸாய
[12/02, 16:46] Jayaraman Ravilumar: இந்த ஸ்லோகம் சிவானந்த லஹரியில 63 வது ஸ்லோகம். கண்ணப்ப நாயனாரோட கதையை சொல்றார்.

*ப⁴க்தி꞉ கிம்ʼ ந கரோதி* – பக்தி எதை தான் செய்யாது?

*அஹோவனசர* : – ஒரு வேடன்

*ப⁴க்தாவதம்ʼஸாயதே* – எல்லா பக்தர்களுக்குள்ளும் மிகச்சிறந்தவனாக .. பக்தஸ்ரேஷ்டனாக ஆயிட்டானே …அப்டின்னு சொல்றார்.

பக்தி னா என்னனு சொல்லிக் கொடுத்தார்.

அந்த பக்தியை எப்படி வளர்க்கறது அப்டின்னும் சொல்லிக்
கொடுத்தார்.

அந்த மாதிரி என்னத்துக்கு பக்தியை வளர்த்துக்கணும் அப்டின்னா….

அப்படி உத்தம பக்தி வந்துடுத்துன்னா பகவான் நம்பளோட குறைகளெல்லாம் நிறையாக்கி நம்பளை ஏத்துக்கறார்

அப்டின்னு புரிய வைக்கறதுக்காகவும், போன ஸ்லோகத்துல ஸ்வாமிகளுடைய கதைகளை பேசுவதால் பக்தி வளரும்னு சொன்னார்.

இங்க ஒரு சிவபக்தனுடைய உத்தம பக்தனுடைய கதையை சொல்றார்.

இதை பேசுவதாலயும் நமக்கு இது மாதிரி பக்தி நமக்கும் வராதா அப்டின்னு எத்தனையோ மஹான்கள் வேண்டிக்கறா������
ravi said…
உற்சாகமான திங்கட்கிழமை வணக்கம்🙏

*_இன்றைய நலம் தரும் தகவல்_* 😊🙏

*வேம்பு மருத்துவ குணங்கள்:*

*_வேப்பம் பூவை நிழலில் உலர்த்தி சம்பிராணியுடன் சேர்த்து தூபம் போட்டால் காற்றில் உள்ள கிருமிகளை அழித்து விடும். அதே போன்று இலைகளை உலர்த்தி தூபம் போட்டால் கொசு போன்றவை வீட்டிற்குள் வராது. வேம்பு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், மாதம் ஒருமுறை வேப்பம் பூ ரசம், துவையல் போன்றவை செய்து சாப்பிடலாம். காலில் பித்த வெடிப்பு உள்ளவர்கள் வேப்பிலையுடன் மஞ்சளைச் சேர்த்து மைபோல் அரைத்து, அதைனை வெடிப்பின் மேல் நன்றாகத் தடவி மறுநாள் காலையில் தேய்த்துக் கழுவிவிட வேண்டும். இப்படி செய்து வந்தால் பித்த வெடிப்புகள் மறையும். வேப்பம் பழத்தில் செய்யும் சர்பத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், ரத்தம் சுத்தமடையும். தோல் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சொறி, சிரங்குகளை உற்பத்திச் செய்யும் நுண்கிருமிகள் அழியும். வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் ஆறிய தண்ணீரை கொண்டு முகம் மற்றும் கை, கால்கள் கழுவி வந்தால் சரும பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். வேப்பம் விதையுடன் வெல்லம் சேர்த்து காலை மற்றும் மாலை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உள் மூலம், வெளி மூலம் தீரும். மாதம் ஒரு முறை வேப்பிலையை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும். வாந்தி, மயக்கம் போன்றவை குணமாகும்._*



தங்களின் நட்புகளுக்கும், உறவுகளுக்கும் பகிரவும்..

என்றும் அன்புடன் 🙂,

*_நலம் நாடுபவர்களின் நாடி_*
ravi said…
*மூதுரை*

*ஔவையார் பாடல்கள்*

*பாடல் 13 :*

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்–சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்.

*பொருள்:*

கிளைகளோடும், கொம்புகளோடும் காட்டில் நிற்பவை
மரங்கள் அல்ல. சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில்
எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை அறியாதவனுமே மரம் போன்றவன்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
[13/02, 07:30] +91 96209 96097: *ஜனேஷ்வராய நமஹ*����
தன் ஆளுமை எல்லோர் மீதும் பிரகாசிக்கும்படி திகழ்பவர்
[13/02, 07:30] +91 96209 96097: ஸதா³ஶிவா *அ)னுக்³ரஹதா* பஞ்சக்ருத்யபராயணா��சர்வ காலமும் அனுபவப் பூர்வமாக
அருளை வாரி வழங்குபவள்
ravi said…

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் – Odi Odi Utkalantha Jothiyai Lyrics in Tamil
சிவன் பாடல்கள்

சிவவாக்கிய சித்தரால் இயற்றப்பட்ட மிக முக்கிய சிவவாக்கியம் பாடல்களின் தொகுப்பு உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓம் நம : சிவாய ஓம் ஓம் நம : சிவாய
ஓம் நம : சிவாய ஓம் ஓம் நம : சிவாய

சரியை விலக்கல்

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)

ஞான நிலை

என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே ( ஓம் )

ravi said…
இதுவுமது

நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராமவென்ற நாமே ( ஓம் )

யோக நிலை

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே ( ஓம்)

விராட்சொரூபம்

இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூலமான மழு
எடுத்தபாதம் நீண்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல் கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரோ ( ஓம்)

தெய்வ சொரூபம்

உருவுமல்ல வெளியுமல்ல வொன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாகி நின்ற நேர்மையாவர் காணவல்லரோ ( ஓம் )

ravi said…
தேகநிலை கூறல்

மண்கலங்கவிழ்ந்தபோதுவைத்துவைத்து அடுக்குவார்
வெங்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நம்கலங்கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண் கலந்து நின்ற மாயமென்ன மாய மீசனே ( ஓம் )

அக்ஷர நிலை

ஆனவ ஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவ ஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவ ஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவ ஞ்செழுத்துளே அடங்கலாவ லுற்றதே ( ஓம்)

இதுவுமதி

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே ( ஓம்)

ravi said…
ஞானநிலை

பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை( ஓம்)


ஞானம்

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செம் பொன்னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே ( ஓம்)

ravi said…
அக்ஷர நிலை

அவ்வென்னும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உவ்வென்னும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வென்னும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்)

பிரணவம்

மூன்று மண்டலத்திலும் முட்டிநின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்
ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே (ஓம்)

ravi said…
பஞ்சாட்சர மகிமை

நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரை செய் நாதனே (ஓம்)

ravi said…
கடவுளின் உண்மை கூறல்

இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகான
இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லை யல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டோரினிப் பிறப்பதிங்கில்லையே (ஓம்)

ravi said…
இராம நாம மகிமை

கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த சீர்
ராம ராம ராம ராம என்னும் நாமமே( ஓம் )

அத்துவிதம்

விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே ( ஓம் )

ravi said…
அம்பலம்

அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே ( ஓம் )

பஞ்சாட்சரம்

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்)

பஞ்சாட்சர மகிமை

ஓம் நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம் நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம் நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம் நம சிவாயமே உட்கலந்து நிற்குமே ( ஓம் )

ravi said…
*What is maturity? by Adi Shankaracharya*

1. Maturity is *when you stop trying to change others, ...instead focus on changing yourself.*

2. Maturity is when you
*accept people as they are.*

3. Maturity is when you
*understand everyone is right in their own perspective.*

4. Maturity is when you
*learn to "let go".*

5. Maturity is when you are
able to *drop "expectations" from a relationship and give for the sake of giving.*

6. Maturity is when you
*understand whatever you do, you do for your own peace.*

7. Maturity is when you *stop proving to the world, how intelligent you are.*

8. Maturity is when you *don't seek approval from others.*

9. Maturity is when you *stop comparing with others.*

10. Maturity is when you *are at peace with yourself.*

11. Maturity is when you *are able to differentiate between "need" and "want" and are able to let go of your wants.*

*& last but most meaningful !*

12. You gain Maturity when you *stop attaching "happiness" to material things !!*

_*Wishing all a happy matured life.*_

💐💐🌹🌹🙏🙏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 82*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
काञ्चि वर्धमानामतुलां करवाणि पारणामक्ष्णोः ।

आनन्दपाकभेदामरुणिमपरिणामगर्वपल्लविताम् ॥ ६७॥

67. Adhi Kanchi vardhamaanam athulaam karavani paaranaam akshno,

Aananda paka bhedhaam arunima parinaama garva pallavithaam.

அதிகாஞ்சி வர்தமானாமதுலாம் கரவாணி பாரணாமக்ஷ்ணோஃ |
ஆனந்த பாகபேதாமருணிமபரிணாமகர்வபல்லவிதாம் ||67||
ravi said…
அம்பாள், காஞ்சி, கம்பாதீரத்தில் யௌவன பாலையாக, அதிரூப சுந்தரியாக, தன்னிகரில் லாதவளாக, காருண்ய, மணம் வீசும் மலர்க் கொடியாக எனக்கு காட்சி தருகிறாள்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 486* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
மன்மதா, எழுந்திரு. உன் மனைவியிடம் சேர்.

உன் கரும்பு வில் இனி என் கையில் இருக்கட்டும்.

உன் புஷ்ப பாணங்கள் இனி உன் கரும்பு வில்லிலிருந்து புறப்படாது.

அவை என் வசம் இருக்கும்.

இனி நீ உன் மனைவிக்கு அன்பு கணவன்.

அவள் கண்களுக்கு மட்டுமே தெரிவாய். உலகத்துக்கு பிரபஞ்சத்துக்கு நீ கரும்பு வில்லேந்தி கணைகள் வீசும் காமன் இல்லை.

தேகம் இல்லாதவன். *அநங்கன்* .''

ரதி மகிழ்ந்து வணங்கி மதனோடு செல்கிறாள்.

மன்மதன் நமக்கெல்லாம் அநங்கன்.

உடல் இல்லாதவன். பஞ்ச இந்திரியங்களை கட்டுப்படுத்தும் மன்மதன் பாணங்கள் அம்பாளிடமிருந்து அவ்வளவு சுலபமாக வெளியேறாது.

இனி அம்பாளின் நாமங்களை தொடர்வோம்.🙌🙌🙌
ravi said…
உள்ளங்கையில் (நெல்லிக்)கனி எனும் அளவுக்குத் தெளிவாக.

கண்ணனான திருமாலை (என் முன் வரவழைத்துக்) காட்டிப் புரியவைத்தாலும்

மேன்மை மிக்க (கல்யாண) குணங்களை அனுபவிப்பதை விடுத்து

நான் (உன்னிடம்) வேண்ட மாட்டேன்

நரகச் சேற்றில் உழன்றாலும்

சோதி வடிவ பரமபதத்தைச் சென்றடைந்தாலும்

இது ஒன்றை மட்டும் (அடியேனுக்கு) நீ அருள வேண்டும்.

அளித்தால் நான் மிக்க மகிழ்வோடு என்றும் அபிமானித்து நிலைத்திருப்பேன்

எம்பெருமானாரே!
மழை நீர் தாங்கிய

செழுமையான மேகம் போன்றவரே!🙏🙏🙏
கௌசல்யா said…
ஒவ்வொரு முறை படிக்கும் போதும் கேட்கும் போதும் ஒரு புதுவிஷயம் தெரிகின்றது..மிகவும் அருமை... எங்களின் நன்றிகள் பல....ஈஸ்வர, ஜெகதீஸ்வர, சர்வேஸ்வர, பரமேஸ்வரா, ஶ்ரீகிருஷ்ணா, முகுந்தா....ஆயிரம் ஆயிரம் நாமங்கள்...சரணம் சரணம் 🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

ஒரு உறவை சிதைப்பதற்கு ஆயுதங்கள் எதுவும் தேவையில்லை..

சிறு சிறு பொய்களே போதுமானது.!

*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
🌹🌺 "Fool....I will never accept the food prepared by one who lacks devotion and faith like you" Alaranath Jagannath - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌺 Once upon a time, a devotee named Sri Ketanar, who was engaged in the service of preparing food for Lord Alar Nath, had to go out of town to beg for the necessary materials for preparing food.

🌺 So he entrusted his son named Madhusudhana with the responsibility of preparing food in his absence. He instructed him to place food before Bhagavan and pray to him to accept it.

🌺 When it was time to offer food to the Lord, Madhusudhana, who brought food to the Lord, left it and said, “O Lord, accept this offering.

🌺As I am a boy, I don't know the proper way of dedicating the regiment," he prayed.

🌺After that, Madhu went out to play with his friends. When he came back he found the food still there

🌺 “Lord, why did you not eat? If my father hears this, he will be angry with me. Please eat,” he pleaded.

🌺 Madhusuthanan went out again and came back, he saw that the food was still on the plate. He again tearfully begged the Lord to eat it.

🌺When Madhu returned for the third time, the plate placed before Bhagavan was empty. Madhu happily took the shoe to his mother.

🌺 “Where is the offering?” she asked.
"Alarnathar has eaten everything!" Madhu replied.

Madhu and his family were starving for three consecutive days; Because whenever Madhu prepared food, Bhagavan used to eat it whole.

🌺 When Sri Ketanan came back and came to know what was happening, he scolded his son.
"What did you do with Lord Alarnath's offering?"

🌺 “He is eating, father. I prepared for him as you told him.” “He could not have eaten. He is a stone,” replied Sri Kethanan.

🌺However, Sri Ketanan wanted to know what was going on. So, when his son prepared food for Bhagavan, he hid behind a pillar.

🌺After Madhusudhana left, Sri Kedanan watched from the vantage point as Bhagavan stooped down and picked up the bowl containing Payasam. Sri Ketanan, emerging from behind the pillar, took hold of Bhagavan's hand, and Lord Payasam, which was hot, poured on Tirumeni. “Stop!” cried Sri Ketanan.

🌺 What are you doing? Has anyone heard of Vigraham eating food? If you eat everything yourself, how can we survive?”

🌺Lord Alarnathar replied: “You fool in the guise of a devotee....I never accept the food prepared by a person who lacks devotion and faith like you.

🌺I accepted the food given by the wine because of the simple loving dedication.”

🌺The people in the temple still show us the scars on Lord Alarnath's body due to the hot bath.🌹🌺

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -14.02.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-59

மூலம்:

குக்குடப்புள் ஓசை குறிக்கும் தொறும்வினவும்
பக்குவமென்(று) யானடையப் பாலிப்பாய் – அக்குவடம்
இட்ட களத்தார்க் கெளியாய்! எழில்வயலூர்
வட்ட மலைக்கா வலா (59).

பதப்பிரிவு:

குக்குடப் புள் ஓசை குறிக்கும் தொறும் வினவும்
பக்குவம் என்று யான் அடையப் பாலிப்பாய்!– அக்குவடம்
இட்ட களத்தார்க்கு எளியாய்! எழில் வயலூர்
வட்ட மலைக் காவலா!! (59).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

அக்குவடம்- உருத்திராட்சமாலை;

குக்குடப் புள் என்னும் சேவலின் ஓசை குறிக்கும் தோறும் என் பழனி மன்னன் உன் வருகையை வினவும் பக்குவம் என்று நான் அடைய பாலிப்பாய் எம் பெருமானே? உருத்திராட்சமாலை அணிந்த களத்தார்க்கு எளிய பெருமாளே! அழகான பழனி வயலூரின் பழனி மலைக்குக் காவலான பெருமாளே!

சிந்தை எல்லாம் எந்தைப் பழனிக் கந்தன் நிறைந்தால் எங்கிருந்து நிந்தை வரும்?

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 487* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*205 सर्वयन्त्रात्मिका --ஸர்வ யந்த்ராத்மிகா* -

எந்த செப்பு, பித்தளை, தங்க வெள்ளி உலோக தகடாக, வேண்டுமானாலும் இருக்கட்டும்,

எந்தெந்த தெய்வத்தின் சக்தியை ஆகர்ஷிக்கும் யந்த்ரமாக இருந்தாலும் இருக்கட்டும்.

அது ஸ்ரீ லலிதாம்பா வின் சக்தியாகவே தான் மிளிர்கிறது.🙏🙏🙏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 83*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
बाणसृणिपाशकार्मुकपाणिममुं कमपि कामपीठगतम् ।

एणधरकोणचूडं शोणिमपरिपाकभेदमाकलये ॥ ६८॥

68. Bana sruni pasa karmuka kamapi Kama peeta gatham,

Yena dhara kona choodam sonima pari paka bhedhamakalaye.

பாணஸ்றுணிபாஶகார்முகபாணிமமும் கமபி காமபீடகதம் |

ஏணதரகோணசூடம் ஶோணிமபரிபாகபேதமாகலயே ||68||
ravi said…
பூர்ணச்சந்திரனில் கருப்பாக இருப்பதை களங்கம் என்பார்கள்,

முயல் குட்டி, தோசை வார்க்கும் பாட்டி, என்றெல்லாம் சொல்லி வா வா என்று கையாட்டி இடுப்பிலுள்ள குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவது ஒரு வழக்கம்.

சந்திரன் சூடிக்கொண்டிருக்கும் மான் அது என்கிறார் மூகர் .

மானைச் சூடிக்கொண்டிருக்கும் ''மூன்', சந்திரனை, தன்னுடைய சிரசில் சூடிக்கொண்டிருப்பவள் அம்பாள்.

அதுதவிர கரங்களில் புஷ்ப பாணங்கள், அங்குசம், பாசம், கரும்பு தனுசு, அது தான் கோதண்டம்,

அதெல்லாவற்றுடனும் காமகோடி பீடத்தில் அமர்ந்து தரிசனம் தருபவளே வணங்குகிறேன்🙌
ravi said…
செழுந்திரைப் பாற்கடல் கண் துயில் மாயன் திருவடிக்கீழ்
விழுந்திருப்பார்

நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப் பாதன்

இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந்து இரைத்து ஆடும் இடம்

அடியேனுக்கு இருப்பிடமே

- ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)
ravi said…
அழகிய அலைகள் (ஆர்பரிக்கும்) திருப்பாற்கடலில்

யோக நித்திரையில் பள்ளி கொண்டிருக்கிற (உலக ரட்சகனான) திருமாலின்

திருவடிகளில் சரண் புகுந்த அடியவரின்

உள்ளத்தில் பொருந்தி அமைந்த சிறந்த ஞானியும்,

சிறந்த குணங்கள் கொண்ட வேதியர்களால்
தொழும் திருப்பாதன் -
போற்றி வணங்கப்படும் திருவடிகளை உடையவராயும் இருக்கும்
இராமானுசனைத் தொழும் பெரியோர் -

களிப்புடன் (அவரைத் துதி பாடியபடி)

கூத்தாடும் இடம் (மட்டுமே)

அடியேனுக்கு இருப்பிடமே -
ravi said…
*❖ 113 பாவனாகம்யா* =

ஒருமுகப்படுத்திய தியானத்தால் உணரப்படுபவள்,

புத்திக்கு புலப்படுபவள்

பவ = உலக வாழ்வு - சம்சார சாகரம்

ஆரண்ய = பெருங்காடு

குடாரிகா = கோடாரி
ravi said…
அம்மா

அசையா பிரம்மம் அசைந்து நின்றதே அன்று ...

வாரா உயிர்கள் வளர் பிறை போல் மலர்ந்ததே அன்று

தேடா இன்பங்கள் தேடி சூழ்ந்ததே அன்று

அசையாத பிரம்மத்தை ஆடல் அரசனாக்கினாய் ...

இனிய முகமதில் உன் இதழ் பதித்தே அழகுக்கு அழகு செய்தாய் ...

உத்தம உதடுகளில் உன்னத புன்னகை பூட்டினாய் ...

அசையாத சிலை சொக்க வைக்கும் சொக்கனானது உன் கருணை ரஸம் அன்றோ ?

அவன் எண்ணங்கள் யாவும் எழில் கொண்டு உனை வெளி கொண்டு வந்ததோ ??

உனை புகழும் போது அதில் ஈசன் நிழல் தெரிவது ஒரு ஆச்சரியமோ அம்மா ??

அவனே நீயாக இருக்கும் போது

இருவர் என்றே சொல்வது நியாமோ அம்மா ... ?

தாயுமானவன் ஒருவனே

அதில் கோலோச்சி சிரிப்பவள் நீ ஒருத்தியே !!

இதை உணர்ந்தோர் உயர்ந்தோர் ...

இருவர் என்றே சொல்வார் அரிச்சுவடி இன்னும் கற்பவரே !!!💐💐💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

70 –
பெயர் நினைத்திடவே பிடித்து இழுத்தனை உன்
பெருமை யார் அறிவர் அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா* ...

காத்திருந்தாயோ உன் நாமம் என் நாவில் தெறித்திட

க்ஷண நேரமும் தயங்காமல் ஓடி வந்தனையோ உன்னிடம் எனை இழுக்க

ஒரு தடவை மட்டுமே உன் நாமம் உரைத்தேன்

ஓராயிரம் பட்டாம் பூச்சிகள் உள்ளமதில் ஓம்காரம் உரைக்கின்றதே

தேன் நாடும் வண்டுகள் தேன் குடம் குடமாய் நெஞ்சமதில் ஆறன கொட்டுகிறதே

கோடி கோடி மயில்கள் தோகை விரித்து வானம் தனை மூடுகின்றதே

பிறை சூடும் மான்கள் துள்ளி துள்ளி குதிக்கின்றனவே

ஓடி ஆடி பாடி ஒய்யாரமாய் செல்லும் மீன்கள்
விழிகளில் நீந்த விண்ணப்பம் இடுகின்றதே

வானும் கடலும் நெருப்பும் நிலமும் காற்றும் என்னிடம் வேலை செய்ய ஏங்குகின்றதே

அன்ன நடை எனக்கு தந்து விட்டு அண்ணாமலை என்றே உனை தேடி அன்னங்கள் ஓடுகின்றதே 🦢🦢🦢

கண்கள் கண்ணீரை விற்று சந்தோஷம் தனை மூட்டை மூட்டையாய் சேர்க்கின்றதே

துன்பம் துயரம் தோல்வி ஊழ்வினை

வெண்புறாவை வானில் வீசி என்னிடம் சமாதானம் கேட்கின்றதே🕊️🕊️🕊️

ஒரே ஒரு தடவை சொன்னதற்க்கே அண்டங்கள் எனக்கு அடிமை செய்தாய் ...

ஓராயிரம் சொல்லி இருந்தால்

இந்திரன் இன்று சந்திரனுடன் கலந்து எனக்கு வெண்சாமரம் வீச மாட்டானோ *அருணாசலா* ?💐💐💐
ravi said…
🌹🌺" *முட்டாளே....உன்னைப் போன்ற பக்தியும் நம்பிக்கையும் இல்லாதவன் படைக்கும் உணவை நான் ஒருபோதும் ஏற்பதில்லை என்ற அலர்நாத் ஜகந்நாதர் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺ஒருசமயம், பகவான் அலர்நாதருக்கு உணவு படைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ஸ்ரீ கேதனர் என்ற பக்தர் , உணவு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை யாசிப்பதற்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.

🌺அதனால் அவர் மதுசூதனன் என்னும் தனது மகனிடம் தான் இல்லாதபோது உணவு படைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். பகவானின் முன்பு உணவை வைத்துவிட்டு அதனை ஏற்குமாறு அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவனுக்கு அறிவுறுத்தி விட்டுச் சென்றுவிட்டார்.

🌺முதன்முதலாக பகவானுக்கு உணவு படைக்கும் நேரம் வந்தபோது, பகவானுக்கு உணவு கொண்டு வந்த மதுசூதனன், அதனை படைத்து விட்டு, “எனதன்பு பகவானே, இந்த படையலை ஏற்றுக் கொள்ளுங்கள்.

🌺நான் சிறுவன் என்பதால் படையலை அர்ப்பணிக்கும் முறை எனக்குச் சரியாகத் தெரியாது” என்று கூறி பிரார்த்தித்தான்.

🌺அதன் பிறகு, மது தனது நண்பர்களுடன் விளையாடு வதற்காக வெளியே சென்றுவிட்டான். அவன் திரும்பி வந்த போது உணவு அப்படியே இருப்பதைக் கண்டான்

🌺“பெருமானே, நீங்கள் ஏன் சாப்பிடவில்லை? இதை எனது தந்தை கேள்விப்பட்டால், அவர் என் மீது கோபப்படுவார். தயவுசெய்து சாப்பிடுங்கள்,” என்று அவன் வேண்டினான்.

🌺மீண்டும் வெளியே சென்று திரும்பி வந்த மதுசூதனன், தட்டில் உணவு இன்னமும் அப்படியே இருப்பதைக் கண்டான். அதை உண்ணுமாறு அவன் மீண்டும் பகவானை கண்ணீர் மல்க வேண்டினான்.

🌺மூன்றாவது முறையாக மது திரும்பி வந்தபோது, பகவானின் முன்பு வைக்கப்பட்டிருந்த தட்டு காலியாக இருந்தது. அந்த காலித்தட்டை மது மகிழ்ச்சியுடன் தனது தாயாரிடம் எடுத்துச் சென்றான்.

🌺“பிரசாதம் எங்கே?” அவள் கேட்டாள்.
“அலர்நாதர் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார்!” என்று மது பதிலுரைத்தான்.

🌺தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மதுவும் அவனது குடும்பத்தினரும் பட்டினியாக இருந்தனர்; ஏனெனில், மது எப்போது உணவு படைத்தாலும் பகவான் அதனை முழுவதுமாக சாப்பிட்டு வந்தார்.

🌺ஸ்ரீ கேதனன் திரும்பி வந்து நடப்பவற்றை அறிந்தபோது, தனது மகனைக் கடிந்து கொண்டார்.
“பகவான் அலர்நாதரின் பிரசாதத்தை நீ என்ன செய்தாய்?”

🌺“அவர் சாப்பிட்டு விடுகிறார் தந்தையே. தாங்கள் சொல்லித் தந்தபடியே நான் அவருக்குப் படைத்தேன்.”“அவர் சாப்பிட்டிருக்க முடியாது. அவர் ஒரு கற்சிலை,” என்று ஸ்ரீ கேதனன் பதிலுரைத்தார்.

🌺இருப்பினும், என்னதான் நடக்கிறது என்பதை அறிய ஸ்ரீ கேதனன் விரும்பினார். எனவே, தனது மகன் பகவானுக்கு உணவு படைத்தபோது, அவர் ஒரு தூணிற்குப் பின்னால் மறைந்து கொண்டார்.

🌺மதுசூதனன் சென்ற பின்பு, பகவான் கீழே குனிந்து பாயாசம் இருந்த கிண்ணத்தை எடுப்பதை ஸ்ரீ கேதனன் மறைந்தபடி பார்த்தார். தூணின் பின்னாலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ கேதனன், பகவானின் கையைப் பிடிக்க, சூடாக இருந்த பாயாசம் பகவானது திருமேனியில் சிந்தியது. “நிறுத்துங்கள்!” என ஸ்ரீ கேதனன் கூக்குரலிட்டார்.

🌺நீங்கள் என்ன செய்கிறீர்கள்? விக்ரஹம் உணவு உண்பதாக யாரேனும் கேள்விப்பட்டதுண்டா? நீங்களே எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டால், நாங்கள் எவ்வாறு வாழ முடியும்?”

🌺பகவான் அலர்நாதர் பதிலுரைத்தார்: “பக்தனின் போர்வையில் உள்ள முட்டாளே....உன்னைப் போன்ற பக்தியும் நம்பிக்கையும் இல்லாத மனிதனால் படைக்கும் உணவை நான் ஒருபோதும் ஏற்பதில்லை.

🌺எளிமையான முறையில் அன்புடன் அர்ப்பணித்த காரணத்தினால், மது கொடுத்த உணவை நான் ஏற்று வந்தேன்.”

🌺சூடான பாயாசம் பட்டதால், பகவான் அலர்நாதரின் உடலில் ஏற்பட்ட தழும்புகளை கோயிலில் உள்ளவர்கள் இன்றும் நமக்குக் காட்டுகின்றனர்.🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
பாதாரவிந்த சதகம் !

81.ஸமஸ்தை: ஸம்ஸேவ்ய: ஸததமபி காமாக்ஷி விபுதை:
ஸ்துதோ கந்தர்வஸ்த்ரீ ஸுலலித விபஞ்சீ கலரவை:
பவத்யா பிந்தானோ பவகிரி குலம் ஜ்ரும்பித தமோ
பலத்ரோஹீ மாத: சரண புருஹூதோ விஜயதே

காமாக்ஷி ! தாயே | உன் சரணமாகிற இந்திரன், எல்லா 'விபுதர்'களாலும் எப்போதும் வழிபடத்தக்கவர், கந்தர்வமாதர்களின் இனிதழகிய வீணையொலியால் துதிக்கப்பெற்றவர், பிறப்பிறப்புத் தொடராகிய பவ மலையைப் பிளப்பவர், பொருமுகிற அஜ்ஞானமாகிற பலாஸுரனை எதிர்த்தவர், அவர் நன்கு
விளங்குகிறார்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
https://chat.whatsapp.com/KqC06JZZKO4EEMBqXvrB59

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :*

சைவமக்கள் கடைப்பிடிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரியாகும். மகாசிவராத்திரி தினத்தில் சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு மயங்கிக் சாய்ந்தார். அப்போது சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி. பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின் அன்னையான அகிலாண்டேஸ்வரி, ஈசனை சிவராத்திரி அன்று நான்கு ஜாமத்திலும் பூஜை செய்தார்.

மகாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நெய்வேதியமாக படைத்து வணங்கி, ஓம் நமசிவாய - ஹர ஹர மஹாதேவ என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான் என்பது நம்பிக்கை

மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசியில் கடைபிடிப்பது மகா சிவராத்திரி எனப்படும். மஹா சிவராத்திரி அன்று இரவில் உலகிலுள்ள எல்லா லிங்கங்களிலும் சிவன் தோன்றுகிறார் என்பது ஐதீகம்.

மகா சிவராத்திரி தினத்தில் நான்கு கால பூஜைகள் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும், இதில் பங்கேற்று இறைவனை வழிபட பலன்கள் கிடைக்கும்.

சிவராத்திரி தினத்தன்று சிவாலயம் சென்று பஞ்சாட்சரம் அல்லது சிவ நாமத்தை ஜெபிக்க வேண்டும். சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்து சிவாலயத்தில் நடைபெறும் நான்கு ஜாமப் பூஜை வழிபாடுகளின் போது லிங்க தரிசனம் செய்தல் மற்றொரு

*இரவில் கண் விழித்தால் புண்ணியம்:*

அறிந்தோ அறியாமலோ கூட ஒருவன் சிவராத்திரி அன்று விழித்திருந்தால் புண்ணியம் கிடைக்கும். மகாசிவராத்திரியன்று சிவன் கோயில்களிலோ மற்றைய கோவில்களிலோ நான்கு ஜாமமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டும் தான தருமங்கள் செய்தும் சிவபெருமானின் புகழ் பாடியும் சிவபுண்ணியம் அடையலாம்.

முருகப்பெருமான், சூரியன், இந்திரன், யமன், அக்கினி, குபேரர் போன்றவர்கள் மகாசிவராத்திரி பூஜை செய்து பலன் அடைந்தார்கள். அதுபோல பிரம்ம தேவன், மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்ததால் சரஸ்வதி தேவி பிரம்ம தேவனுக்கு மனைவியாக அமைந்தார். ஸ்ரீமகாவிஷ்ணு இந்த சிவராத்திரி விரதத்தை கடைபிடித்ததால் சக்ராயுதத்தை பெற்றார். அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியை மனைவியாக அமையப் பெற்றார் என்கின்றன புராணங்கள்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*சடாரி தத்துவம்!*
*************************
பெருமாள் கோவில்களில் சடாரி சாத்துவதும் சிறப்பு. சடாரியின் மேல் இறைவனின் திருவடி பொறிக்கப்பட்டிருக்கும்.

இதனால் இறைவன் நம்மை ஆள்கிறான் என்ற பவ்யமும் குடிகொள்ளும். அஹங்காரமும் மட்டுப்படும். நம்மாழ்வார் பெருமாள் திருவடிகளை அடைந்தவர் அவரே குருவாக இறைவனின் பாதத்தை நம்மிடம் சேர்பித்து நம்மை உய்விக்கிறார் என்று நம்பிக்கை.

நம்மாழ்வாருக்கும் சடகோபன் என்று பெயர்.

சடாரிக்கும் சடகோபம் என்று வழங்குகிறார்கள்.

'சடை' என்ற தேவையற்ற விஷயங்களை விலக்குவது, தீர்ப்பது என்று பொருள்.

பெருமாளுக்கு ஆதிசேஷனை பாதரக்ஷையாக பார்ப்பதால் இதை ஆதிசேஷம் என்றும் சொல்வார்கள்.
ravi said…
சடாரியை பற்றி மேலும் கூறும் போது
--------------------------------------------------------
சடாரி அல்லது சடகோபம்;

அதைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்க;

ஏதோ ஒரு கிரீடம் போல இருக்கும்.

அதன் மேலே இரு பாதங்கள்!

இறைவனின் திருப்பாதங்களை நாம் தேடிப் போகா விட்டாலும் கூட, அவை நம்மைத் தேடி வருகின்றன!

நம்மைக் கடைத்தேற்ற! கோவிலுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, இந்த சடாரி கூடவே பயணிக்கும்!

அறியாத சீடன், குருவை மட்டும் எப்படித் தனியாக அறிந்து விட முடியும்?

அவன் குருவை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை!

சீடனை நோக்கிக் குரு தானே வருவார், சீடன் கற்க விழையும் போது!

அது போல் ஒரு குரு வருகிறார் நம்மைத் தேடி!

நம்மாழ்வாரின் இயற்பெயர் மாறன் சடகோபன்!

சடாரிக்குப் பெயரும் சடகோபம் தான்!

வைணவ மரபில் அவர் தான் ஆதி குரு!

அவர் தான் சடாரியாக வருகிறார் நம்மிடம்!

அவரே இறைவனின் சடாரியாக இருந்து, அவன் பாதங்களை, நம்மை நோக்கிக் கொண்டு வந்து கொடுத்து, நம்மை உய்விக்கிறார்! -

இதுவே சடாரியின் தத்துவம்! சரி, அதற்கு ஏன் கிரீடம் போல ஒரு அமைப்பு?
ravi said…
நம்மைச் சிறப்பித்து, நமக்கு்த் தலையில் சூட்டினா, உச்சி குளிர்ந்து விடாதா?

வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், உள்ளே கொஞ்சமாச்சும் புளகாங்கிதம் அடைவோம் அல்லவா? :-)

"தலை" மேல தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறான், "தலை" கால் தெரியலை அப்படி-ன்னு பேச்சு வழக்கில் கூட, எண்சாண் உடம்புக்கு "தலையே" பிரதானம்!

என்னா "தல", செளக்கியமா-ன்னு தான் நாமளும் கேக்கறோம்!

"தலை"யாய ஒன்றுன்னு தானே இலக்கியங்களும் சொல்கின்றன!

இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!
ravi said…
இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!

ஆனா கிரீடம் தான் உண்மையான அணிகலனா?

இல்லை! - அதுக்கு மேலேயும் ஒன்னு இருக்கு!

உலகத்தில், தலை மேல் வைத்துக் கொண்டாட வேண்டிய ஒரே பொருள் எது? -

இறைவனின் திருப்பாதங்கள் தான்!

எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்பது தான் வள்ளுவம்!

அவன் மலரடிகளைச் சூட்டிக் கொள்வதை விட பெரும்பெருமை வேறெதுவும் இல்லை!👣👣
ravi said…
[14/02, 18:09] Jayaraman Ravilumar: *104. ஸர்வ யோக விநிஸ்ருதாய நமஹ (Sarvayogavinisruthaaya namaha)*
[14/02, 18:09] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ ஸர்வாதி
அச்யுத : |

வ்ருஷாகபிரமேயாத்மா
*ஸர்வயோக வினிஸ்ருத:* ||11
ravi said…
பூரி ஜகந்நாதரைப் போலவே திருவரங்கத்திலும் ஒரு ஜகந்நாதர் கோவில் இருப்பதை அறிந்த மகாபிரபு,

ஜகந்நாதரை வழிபட அந்தக் கோயிலுக்குச் சென்றார்.

அங்கே ஹிமாம்சு என்பவர் ஜகந்நாதப் பெருமாளுக்கு நித்திய பூஜைகளைச் செய்து வந்தார்.

அவருக்கு வடமொழியோ, ஆகமங்களோ எதுவுமே தெரியாது.

அவரது தந்தை நிசாகர் தாஸ் என்பவர் வேத சாஸ்திரங்களை நன்கு கற்றவர்.

ஜயதேவரின் அஷ்டபதி பாடுவதில் வல்லவர்.
ravi said…
பல வருடங்கள் அதே கோயிலில் ஜகந்நாதப் பெருமாளுக்குப் பூஜை செய்து வந்தார்.

அதனால் நிசாகர் தாஸுக்குப் பின் அவரது மகனான ஹிமாம்சுவையே அர்ச்சகராக நியமித்து விட்டார்கள்.

சீடர்கள் புடைசூழ சைதன்ய மகாபிரபு கோயிலுக்கு வந்தபோது, ஹிமாம்சு பக்தியுடன் அவரை வரவேற்றார்.

மகாபிரபுவின் சீடர்கள் ஹிமாம்சுவிடம் பெருமாளுக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்யும்படி கூறினார்கள்.

அர்ச்சனையைத் தொடங்கிய ஹிமாம்சு “விச்வாய நமஹ”, “விஷ்ணாய நமஹ” என்றார்.

“நிறுத்துங்கள்!” என்றொரு ஒலி. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் ஹிமாம்சு.
ravi said…
[14/02, 18:04] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 86 started on 6th nov

*பாடல் 27* ...💐💐💐
[14/02, 18:04] Jayaraman Ravilumar: *பாடல் 27 ... மின்னே நிகர்*

(வினையால் வருவது பிறவி)

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்

என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?

பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே.
ravi said…
எனக்கே தெரிந்து படைத்தனனே என்பதை நன்றாக ஊன்றி உணர
வேண்டும்.

நாம் முன் பிறவிகளில் செய்த வினைகளுக்கு தக்கபடி,
அதற்கு ஈடாக தக்க கரணங்களை நமக்கு பிரமன் கொடுத்தருக்கிறான்

அதனால் அவனைச் சொல்லி குற்றமில்லை.

குருங்கச் சொன்னால்,
முன் பிறவியில் நல்ல வினைகளைச் செய்த ஆத்மாக்களே செக
மாயையில் மோகம் கொள்ளாமல் இறைவனை அடைய வழி தேடும்
என்பதே கருத்து.

இவ்வுலகில் பிரபஞ்ச மாயையில் அகப்பட்ட உயிர்கள்
விரும்பும் பொன், மணி, பொருள் எல்லாம் முருகனே. இவற்றுக்கும்
மோலாக அருள் வடிவமாக இருப்பவனும் அவனேதான்.

இவ்வளவு
அரிய மெய்ப் பொருளாய் அவன் இருந்தாலும், அவனே சகல
சிருஷ்டிக்கும் அதிபதியாய் இருந்தாலும், அவன் அடியார்களுக்கு எளிய
பெருமாளாய் மயிலேறி வந்து ஆட்கொள்வான் என்பதைக் குறிக்கும்
வகையில் மயிலேறிய வானவனே என்கிறார்.
ravi said…
[14/02, 18:02] Jayaraman Ravilumar: *சிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரை*
[14/02, 18:02] Jayaraman Ravilumar: मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते

गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।

किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते

भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ||63||

மார்கா³வர்திதபாது³கா பஶுபதேரங்க³ஸ்ய கூர்சாயதே

க³ண்டூ³ஷாம்பு³நிஷேசனம்ʼ புரரிபோர்தி³வ்யாபி⁴ஷேகாயதே |

கிஞ்சித்³ப⁴க்ஷிதமாம்ʼஸஶேஷகப³லம்ʼ நவ்யோபஹாராயதே

ப⁴க்தி꞉ கிம்ʼ ந கரோத்யஹோ வனசரோ ப⁴க்தாவதம்ʼஸாய
ravi said…
அதே மாதிரி பட்டிணத்தடிகளும்….

நாளாறில் கண்இடந்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று

ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே?

அப்படின்னு கண்ணப்பர் பெருமையை சொல்றார்.

அப்படி கண்ணப்பர் பக்தியை எல்லாரும் சொல்றா.

நாமும் கண்ணப்பன் கதையை சொல்வோம்.

குழந்தைலேர்ந்து பல முறை கேட்டாலும் அவ்வளவு அற்புதமான சிவனடியார் சரித்திரம்.
ravi said…
பாதாரவிந்த சதகம் !

82.வஸந்தம் பக்தானாமபி மனஸி நித்யம் பரிலஸத்
கனச்சாயா பூர்ணம் சு'சிமபி ந்ருணாம் தாபச'மனம்
நகேந்து ஜ்யோத்ஸ்னாபி: சி'சி'ரமபி பத்மோதயகரம்
நமாம: காமாக்ஷ்யா: சரண மதிகாச்'சர்யகரணம்

பக்தர்களின் மனத்தில் எப்போதும் (வஸந்த ருதுவாக) லபிப்பது, சூழ்ந்து அடர்ந்த இருள் கொண்டதாகி (வர்ஷருதுவாகி) தூய்மைதருவது, நகமாகிற நிலவொளியால் (சரத்காலமாகி) மாந்தரின் தாபத்தைத் தணிப்பது. சிசிர (பனி)ருதுவானாலும் தாமரையை மலரச் செய்வது, இத்தகைய பெரும் வியப்பைத்தருகிற காமாக்ஷியின் சரணத்தை வணங்குகிறோம்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
குளிகை என்றால் என்ன:

தொட்டத துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..?

இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான்.யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் கேட்டுக் கொண்ட இராவணன்,அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்.
அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும்நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்..”என்று யோசனை கூறினார். உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டான் இராவணன். ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர்.இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரை கடிந்தும் கொண்டனர். தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டனர்.
அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள்.வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை.இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று இராவணன் தண்டிப்பானோ என்று அச்சம் கொண்டனர்.இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். “இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொருபுதியவன் ஒருவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும். அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும்.நீங்களும் இராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம்"என்றார்.சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால்,தனது மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும் படி செய்தார்.
சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு 'குளிகன்' என்று பெயரிடப்பட்டது.குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தது.குழந்தை பிறந்து முதன்முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளான் என்பதைக் குறிக்கும் வகையில் இடி, மின்னலுடன் அடர்மழை பெய்தது.அதனால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான்.அவனே இராவணனின் தவப்புதல்வனான மேகநாதன்.பின்னாளில் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று, இந்திரனையே வென்று இந்திரஜித் என்று அழைக்கப்ட்டான்.இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம் எனப்படுகிறது. தான் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்ததால், குளிகன் நவக்கிரகங்களால்பாராட்டப்பட்டார்.குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது. குளிகை நேரத்தை, “காரிய விருத்தி நேரம்” என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார். அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமேசெழிக்கும் என்றும் கூறப்பட்டது. குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப்பட்டான்.குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம். சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம்.இராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்களோ, அதேபோல குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்ற நம்பிக்கை வெகு காலமாக இருந்து வருகிறது.இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும்,ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது
பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது.குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது,பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும்.ஆனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில்செய்யக் கூடாது.ஆக..தொட்டதைத் துலங்கச் செய்யுமாம் குளிகன் என்ற மாந்தனின் நேரம்.

குளிகன் என்பது தமிழ்நாட்டில் மாந்தி என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் மாந்திக்கு உள்ள முக்கியத்துவம் தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், மாந்தியை வைத்து பலன்கள், பல உரைக்க முடியும்.
ravi said…
83.கவீந்த்ராணாம் நாநா பணிதி குண சித்ரீ க்ருதவச:
ப்ரபஞ்ச வ்யாபார ப்ரகடன கலா கௌஸலவிதி:
அத: குர்வந்நப்ஜம் ஸனக ப்ருகு முக்யைர் முனிஜநை:
நமஸ்ய: காமாக்ஷ்யா: சரண பரமேஷ்டீ விஜயதே

காமாக்ஷியின் திருவடியாகிற பிரும்மா ஸனகர், பிருகு முதலான முனிவர்களால் வணங்கத்தக்கவராக, கவியரசர்களின்
பல்வகை சிறப்புகளால் வியப்பூட்டுகிற சொல்லாற்றலாகிய உலகை
வெளிப்படுத்துகிற கலைத்திறமை நிரம்பியவராக,
தாமரையைத் தனக்கு அடியில் அமைத்துக்கொண்டு விளங்குகிறார்.
ravi said…
*பத்மினே நமஹ*🙏🙏
தாமரையை ஏந்தியவர்
ravi said…
பா⁴னுமண்ட³லமத்⁴யஸ்தா² *பை⁴ரவீ* ப⁴க³மாலினீ |🙏🙏
க்ரியா சக்தியாக பைரவரை திகம்பரளாக இயக்குபவள்
ravi said…

பழனிக் கடவுள் துணை -16.02.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-61

மூலம்:

தீரகுண மில்லாத் திருட்டுத் தவசிஎனப்
பாரறியக் காதல்வலைப் பட்டேனை – நாரணன் போல்
வாழச்செய் வானோ மடியக் கடிவானோ
வேழத் திரட்பழனி வேள் (61).

பதப்பிரிவு:

தீர குணம் இல்லாத் திருட்டுத் தவசி எனப்
பார் அறியக் காதல் வலைப்பட்டேனை – நாரணன் போல்
வாழச் செய்வானோ? மடியக் கடிவானோ?
வேழத்திரள் பழனிவேள்!! (61).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

தவம் செய்வதற்கு, வைராக்கிய சிந்தனை மிக முக்கியம். வைராக்கியமானது, பொறி, புலன்கள் வழி மனதை விடாமல் இருப்பது. இப்படியின்றி, வேடம் மட்டும் தவம் உடையார் போலிருப்பதால், திருட்டுத்தவசி எனப் பிறர் கூற்றாகக் கூறினார் நம் சுவாமிகள் இந்தப் பாடலில்.

ஆண்யானைகள் திரளாக வாழும் பழனியை ஆளும் என் பெருமான் பழனாபுரி வேந்தன், உறுதியான வைராக்கிய தவச் சிந்தனை அற்ற, வேடம் மட்டும் தவம் உடையார் போல் இட்டுத், திருட்டுத் தவசி என இந்த உலகம் அறிய, பொறி, புலன்கள் வழி மனதைச் செலுத்திக் காதல் வலைப்பட்டேனை – திருமகள் கேள்வன் நாராயணன் போல் வாழச் செய்வானோ? இல்லை மடிய ஒடுக்கி விடுவானோ? இந்த உலகின் ஒட்டுமொத்த ஆண் யானைகளும் திரளாக வந்தாலும் எம் பழனிமன்னன் வீரத்தின் ஒரு சிறு பகுதிக்குக் கூட நிகர் ஆகா பழனிவேள் என்னை ஆள வேண்டும்! வாழச் செய்ய வேண்டும்! அருள் கூர வேண்டும்!

தீரக்குணமற்றவனை, தீதெனறியாயென் தீவினையெல்லாம் தீர, தீர, தீராதிப்பெருமாளே! (பழனித்)தீரனே! தீர்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺"🌺 *உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த மகான் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர்.
இவர் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார்.

🌺அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரமராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார்.

🌺உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த மகான் திருவாதவூரார்(மாணிக்கவாசகர்) சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.

🌺ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான்.

🌺மாணிக்கவாசகர், பொன்னோடு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே, இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்தார்.

🌺குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று மாணிக்கவாசகர் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.(இது மெய்கண்டார் எழுதிய "சிவஞான போதம் அன்று)

🌺'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்' என்றார் பக்குவமடைந்திருந்த மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்குப் போதித்துத் திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.

🌺தன் மந்திரி கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர்.

🌺'குருமூர்த்தியின் (சிவனின்) திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி மாணிக்கவாசகர் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார்.🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺" *என் கணவருக்கு செய்யும் பணிவிடை உண்மையானால், இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்.." - என்ற பதிவிரதை - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர்.

🌺கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள்.

🌺இதனை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர்.

🌺அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளது குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் யோசனை தெரிவித்தனர்.

🌺எப்படியும் இந்த சோதனையில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி கேட்டனர்.

🌺அவள் உணவுடன் வரும் போது, “ பெண்ணே... நீ பிறந்தமேனி நிலையில் உணவிட்டால் தான், நாங்கள் அதை ஏற்போம்", என்றனர் மூவரும்.

🌺அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதா தன்மையின் மீதும் அதீத நம்பிக்கையுண்டு. “கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, நான், என் கணவருக்கு செய்யும் பணிவிடை உண்மையானால், இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்.." எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள்.

🌺உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளாகிவிட்டனர்.
தனக்கு பால் சுரக்கட்டும் என, அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. பிறந்தமேனி நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள்.

🌺வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார்.

🌺வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.

🌺அத்திரி மகரிஷியின் புதல்வரானதால் ஆத்ரேயன்என்றும்; விஷ்ணுவால் தத்தம் செய்யப்பட்டதால்தத்தாத்ரேயன் என்றும் அழைக்கப்படுகிறார்.

🌺அன்னையின் பாசத்தையும் தந்தையின் ஞானத்தையும் பெற்று, உலகில் உள்ள அனைத்துக் கலைகளையும் கற்று, பெரும் ஞானியானார்.

🌺ஸ்ரீதத்தாத்ரேயர், மிகச் சிறு வயதிலேயே தம் இல்லம் விட்டு வெளியேறி, பிரம்ம ஞானத்தை அடைவதற்காக, பல்வேறு இடங்களுக்குச் சென்றார்.

🌺கர்நாடகாவில் உள்ள கங்காபுரம்(Gangapur) என்னும் ஊரில் பிரம்ம ஞானத்தை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

🌺இவரது பத்தினி அனகா தேவி. ஆந்திர மாநிலத்தில் , அனகாதேவி. விரதம் மிகப் பிரபலமானது.
இதைக் கடைபிடிக்கும் தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

🌺தத்தாத்ரயேரைவிட சிறந்த அவதாரம் இல்லையென்பது வியாசர் வாக்கு. தத்தாத்ரேயர் அருளிய ஜீவன் முக்த கீதையும் அவதூத கீதையும் ஒப்புயர்வற்றவை.

🌺கும்பகோணம்- திருவாரூர் வழித்தடத்தில் உள்ள சேங்காலிபுரத்தில் அமைந்துள்ள தத்தகுடீரத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீ தத்தாத்ரேயர் ஜெயந்தி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺"🌺Mahan realized that despite having high position, wealth and influence, these are not the ultimate goal of life - A simple story to explain 🌹🌺

-------------------------------------------------- ------


🌹🌺Manikavasaka is one of the four saints of Saivism.

He was born in the Pandyan country as the son of Sambupada Charitar and Sivajnanavati. He excelled in educational matters and became a minister to King Arimardhana Pandyan.


🌺 Arimardhana Pandian settled in Madurai. He also earned the title "Tennavan Brahmarayan" for his erudition.


🌺 Mahan Thiruvadavoorar (Manikavasakar) realized that despite having high position, wealth and influence, these are not the ultimate goal of life, he studied Shaivism and worshiped Shiva.


🌺Once the Pandya king heard that the king had received good horses from Cholanath and gave gold to the minister Manikkavasakar to buy those horses.


🌺Manikavasaka reached Tirupperundurai (Avudaiyar temple near Aranthangi) from Ponnodu. Lord Shiva himself was seated under the Kurunda tree there. Manikkavasagar went before him and bowed down.


🌺When Manikavasaka asked what was in Guru's Thirukaram, he said Shivajnana Bodham.

🌺 'What is Shiva, wisdom and Buddha? If you teach these things to a servant, I will become your slave,' said the matured manikavasaka. Lord Shiva in the form of Gurumurthy taught him the knowledge of Shiva and gave him Tiruvadi Deeksha.

🌺 Manikavasaka, who had removed his ministerial robe and stood in front of the Vaipoti Guru, was called by the king's soldiers who accompanied him. Manikkawasaka refused to go along.

🌺 Manikavasagar gave it to the Guru saying, 'The eye that has seen the face of Gurumurthy (Shiva) will never see another face'.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 "If the work done to my husband is true, let these monks be children..." - A simple story explaining the phrase 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺Atri Maharishi and his wife Anusuya lived in the forest.

🌺Anusuya's only job is to do chores for her husband. Childless, she wanted triplets to be born to her as godchildren.

🌺 Knowing this, the trio also asked their goddess for advice.

🌺 The three goddesses suggested that if Anusuya passes the test, she can be born as her child.

🌺 Their prediction is that she will lose this test anyway. Accordingly Brahma, Vishnu and Shiva came to Anusuya's hut in the form of monks and asked for food.

🌺 When she came with the food, the three said, "Girl... we will accept it only if you eat in the state of birth mani".

🌺 Anusuya is not disturbed. She has great faith in her chastity and chastity. She sprinkled them saying, "If I take the tirtha of foot puja for my husband, and the work I do for my husband is true, let these saints be children."

🌺Immediately the three goddesses became children.
Anusuya made her next request to let him secrete milk. She nursed the children in postnatal mania.

🌺Sage Athiri, who had gone outside, came to know what had happened through his wisdom.

🌺 When he came home, he hugged the children together. The child joined with one body, three heads, two legs and six arms. He named it Dattatreya.

🌺 Athreyan because he is the son of Athiri Maharishi; Also called Dattatreyan as he was adopted by Vishnu.

🌺 Having received the affection of his mother and the wisdom of his father, he learned all the arts in the world and became a great sage.

🌺 Sridattatreya left his home at a very young age and went to various places to attain Brahman enlightenment.

It is also said that Brahma attained enlightenment in a town called Gangapur in Karnataka.

🌺 His sister Anaka Devi. Anakadevi in ​​Andhra Pradesh. Fasting is very popular.
It is believed that couples who observe this will live in harmony.

Vyasa says that there is no better avatar than Dattatreya. Jeevan Mukta Gita and Avadutha Gita blessed by Dattatreya are incomparable.

🌺Shri Dattatreya Jayanti is celebrated annually at Dattagudeeram located at Sengalipuram on the Kumbakonam-Tiruvarur route with much fanfare.

🌺🌹valga Vayakam 🌹🌺 valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺"🌺Mahan realized that despite having high position, wealth and influence, these are not the ultimate goal of life - A simple story to explain 🌹🌺

-------------------------------------------------- ------


🌹🌺Manikavasaka is one of the four saints of Saivism.

He was born in the Pandyan country as the son of Sambupada Charitar and Sivajnanavati. He excelled in educational matters and became a minister to King Arimardhana Pandyan.


🌺 Arimardhana Pandian settled in Madurai. He also earned the title "Tennavan Brahmarayan" for his erudition.


🌺 Mahan Thiruvadavoorar (Manikavasakar) realized that despite having high position, wealth and influence, these are not the ultimate goal of life, he studied Shaivism and worshiped Shiva.


🌺Once the Pandya king heard that the king had received good horses from Cholanath and gave gold to the minister Manikkavasakar to buy those horses.


🌺Manikavasaka reached Tirupperundurai (Avudaiyar temple near Aranthangi) from Ponnodu. Lord Shiva himself was seated under the Kurunda tree there. Manikkavasagar went before him and bowed down.


🌺When Manikavasaka asked what was in Guru's Thirukaram, he said Shivajnana Bodham.

🌺 'What is Shiva, wisdom and Buddha? If you teach these things to a servant, I will become your slave,' said the matured manikavasaka. Lord Shiva in the form of Gurumurthy taught him the knowledge of Shiva and gave him Tiruvadi Deeksha.

🌺 Manikavasaka, who had removed his ministerial robe and stood in front of the Vaipoti Guru, was called by the king's soldiers who accompanied him. Manikkawasaka refused to go along.

🌺 Manikavasagar gave it to the Guru saying, 'The eye that has seen the face of Gurumurthy (Shiva) will never see another face'.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*❖ 115 பத்ரப்ரியா =*

அனுகூலமான யாவற்றிற்கும் அபிமானி

*பத்ர* = மகிழ்ச்சியான - மங்களமான

*மூர்த்தி* = வடிவம்🙏🙏🙏
ravi said…
*அம்மா*

பத்திரம் எடுத்தே ஒரு பாத்திரம் சமைத்தாய்

பிறவி எனும் சத்திரம் தந்தே வாழ்வில் சரித்திரம் படைக்க வைத்தாய்

சாஸ்திரங்கள் ஏதும் அறியேன் சமரசங்கள் ஏதும் புரியேன் ...

சந்தர்ப்பங்கள் நீ தந்தே சாகசங்கள் புரிய வைத்தாய் ...

ஏதும் என்னால் முடியும் என்றே இறுமார்ப்பு கொண்டோர்க்கு சரித்திரத்தில் சறுக்க வைத்தாய் ...

எல்லாம் நீயே என்றே நினைப்போர்க்கு நிலவை தொட வைத்தாய் ...

நெஞ்சில் நிறைந்தே நிர்குணம் பெற வைத்தாய் ...

உன் குணம் பெற வேண்டி நின்றேன் ...

உனையே எனக்குத் தந்தாய் ...

பெற்றது கோடி

நீ பெற்றதும் கோடி ...

கற்றதும் மற்றதும் உன் கருணை நாடி

அதுவே நான் தினம் வணங்கும் காமகோடி

🙏🙏🙏👣👣👣⛅⛅
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

72 –
பைங்கொடியா நான் பற்றின்றி வாடாமல்
பற்றுக் கோடாய்க் கா அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா*

வித்தாயாய் விளைத்தாய் எனை நீ *அருணாசலா* ...

செடியாய் கொடியாய் மலர்ந்தேன் *அருணாசலா* ...

உன் நாமம் எனும் வேலி நான்கு புறமும் நட்டு வைத்தாய் நீயே *அருணாசலா*

கோழி வந்து கொத்தாமல்

மழை வந்து கொட்டாமல்

ஆடு மாடு மேயாமல்

அண்டவர் அருகே நெருங்காமல்

இமை சற்றும் மூடாமல்

எனை காத்தாய் *அருணாசலா* ...

கொடி படர கொம்பு ஒன்றை நாடினேன்

பற்றிக் கொண்டேன் பந்த பாசங்களை ...

அவை பற்றல்ல எனை பற்றிக்கொள் என்றே எனக்கு உரைத்தாய் *அருணாசலா* ...

உனை சிக்கென பற்றிக்கொண்டேன்

சீரும் சிறப்புமாய் கொத்து கொத்து மலராய்

அதில் பொத்தி பொத்தி மலர்ந்த பழமாய்

என் வாழ்வு தனை இனிக்க வைத்தாய் *அருணாசலா* ...

*இனி என்ன வேண்டும் ..?*

எவ்வளவு யோசித்தும் ஒன்றும் பாக்கி இல்லை எனும் பதிலே பெறுகிறேன் *அருணாசலா* 💐💐💐
ravi said…
*சங்க இலக்கியம்*

*மூதுரை*
*ஔவையார் பாடல்கள்*

*பாடல் 16 :*

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா–மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

*பொருள்:*

நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக்
கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக்கொண்டிருக்கும். எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை. அதைப் போலவே அறிஞர்களின் அடக்கமும். அதைக் கண்டு அவர்களை அலக்ஷ்யம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
உங்கள் பாதங்களின் அடிப்பகுதியில் *தேங்காய் எண்ணெயை* பயன்படுத்திப் பாருங்கள்....

என் தாத்தா தனது 87 வயதில் இறந்துவிட்டார், முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை ....

ஒரு முறை அவர் பெங்களூரில் வசித்தபோது ஒரு முதியவரின் அறிமுகம் கிடைத்ததாகக் கூறினார். அம்முதியவர் "நான் தினமும் தூங்கும் முன் என் கால்களில் எண்ணெயை தடவி மசாஜ் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்" என்று கூறி இருக்கிறார். மேலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது என்றும் கூறியிருக்கிறார் .

ravi said…
ஒரு நாள் என் தாத்தா அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கிய போது இரவில் தூங்க முடியாமல் அறைக்கு வெளியே சென்று அங்குமிங்குமாக நடந்து கொண்டிருப்பதை பார்த்த, வெளியே உட்கார்ந்திருந்த முதிய காவலாளி ஒருவர், "என்ன விஷயம்?" என்று கேட்க, என்னால் தூங்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்! அவர் சிரித்துக்கொண்டே, "உங்களிடம் *தேங்காய் எண்ணெய்* இருக்கிறதா?" என்று கேட்டிருக்கிறார். இல்லை என்று சொன்னதும், அவர் சென்று தேங்காய் எண்ணெயைக் கொண்டு வந்து, "உங்கள் கால்களின் பாதங்களை இதைக் கொண்டு இரண்டு மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்" என்றிருக்கிறார். அவ்வாறே அவர் செய்த பின்னர் நன்றாக தூங்கி விட்டாராம்.

அவர் சொன்னபடி நானும் இரவில் தூங்குவதற்கு முன் என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்து பார்த்தேன். *உண்மையாகவே நன்றாக தூங்கவும் சோர்வு நீங்கவும் செய்கிறது*.

எனக்கு *வயிற்று பிரச்சினை* இருந்தது. என் *கால்களில் தேங்காய் எண்ணெயுடன் மசாஜ்* செய்த பிறகு, எனது வயிற்று பிரச்சினை *2 நாட்களில்* குணமாகியது.

உண்மையில்! இந்த செயல்முறை *ஒரு மந்திர விளைவை* கொண்டுள்ளது

நான் பல ஆண்டுகளாக இந்த தந்திரத்தை கையாண்டு வருகிறேன். இது எனக்கு *மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என் இளம் குழந்தைகளின் கால்களை தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்கிறேன், இது அவர்களை மிகவும் புத்துணர்வுடனும் ஆரோக்கியமாகவும்* வைத்திருக்கிறது.

இரவில் தூங்குவதற்கு முன் தினமும் 2 நிமிடங்கள் தேங்காய் எண்ணெயுடன் என் கால்களின் பாதங்களை மசாஜ் செய்ய ஆரம்பித்ததிலிருந்து
என் கால்களில் எப்போதும் இருந்த வீக்கத்தினால் ஏற்பட்ட வலியும் சோர்வும் நீங்கின,

தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்யும் இந்த செயல்முறையை கடைபிடிக்க ஆரம்பித்த *2 நாட்களில், என் கால்களின் வீக்கம் மறைந்தது.*

இது ஒரு அற்புதமான விஷயம்.

�� *நிதானமான தூக்கத்திற்கான தூக்க மாத்திரைகளை விட இந்த முனற சிறந்தது.*�� இப்போது நான் ஒவ்வொரு இரவும் என் கால்களில் தேங்காய் எண்ணெயுடன் தூங்குகிறேன்.

என் தாத்தாவின் *காலில் இருந்த எரிச்சல் உணர்வும், தலைவலியும்* ​​நீங்கின.

*தைராய்டு பிரச்சனை* இருந்த ஒருவர் கூறுகையில், என் கால்கள் எல்லா நேரத்திலும் வலித்துக் கொண்டே இருக்கும். தேங்காய் எண்ணெயை மசாஜ் செய்ய ஆரம்பித்தபின் அவ்வலி நீங்கி இப்போது தான் நிம்மதியாக இருக்கிறேன்" என்றார்.

வேறொருவர் கூறுகையில் "எனக்கு *பன்னிரண்டு அல்லது பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூல நோய்* இருந்தது. என் நண்பர் என்னை ஒரு முதியவரிடம் அழைத்துச் சென்றார். தேங்காய் எண்ணெயை கைகளின் உள்ளங்கைகளிலும், விரல்களுக்கிடையில், விரல் நகங்களுக்கு இடையிலும், நகங்களிலும் தேய்க்க அவர் பரிந்துரைத்தார்: *நான்கு முதல் ஐந்து சொட்டு தேங்காய் எண்ணெயை தொப்புளில்* விட்டு தூங்கச் செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார்.

அவர் கூறியபடி பின்பற்றத் தொடங்கிய பின் எனது *மலச்சிக்கல்* பிரச்சினையையும் தீர்த்தது. என் உடல் சோர்வு நீங்கி, நான் நிம்மதியாக உணர்கிறேன். *குறட்டையை* கூட தடுக்கிறது.

கால்களில் *கொப்புளங்கள், முழங்கால்களில் வலி, முதுகுவலி* கூட இந்த மசாஜால் குறைகிறதாம்.

எல்லா இடங்களிலும் அனைவருக்கும் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடியது தேங்காய் எண்ணெய்.
"நீங்கள் *தேங்காய் எண்ணெயை* மட்டுமே பயன்படுத்த வேண்டும் எஎன்பதில்லை.... மாறாக *கடுகெண்ணெய், நல்லெண்ணெய்* போன்றவற்றை கூட கால்களிலும் பாதங்களில் தடவலாம். குறிப்பாக மூன்று நிமிடங்கள் இடது கால், மூன்று நிமிடங்கள் வலது காலின் பாதங்களிலும் மசாஜ் செய்யவும். அதே வழியில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யுங்கள்.

உங்கள் *வாழ்நாள்* முழுவதும் இதை ஒரு வழக்கமாக ஆக்குங்கள். பின்னர் *இயற்கையின்* அற்புதத்தை பாருங்கள்.

நம் கால்களின் பாதங்களில்.
*பண்டைய சீன மருத்துவத்தின் படி, கால்களுக்கு அடியில்* *சுமார் 100 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன.*
*ஒவ்வொன்றும் மனித உறுப்புகளுடன் சம்மந்தப்பட்டுள்ளன. பாதங்களை அழுத்தி மசாஜ்* செய்வதன் மூலம் அவ்வுறுப்புகளும் ஆரோக்கியம் அடைகின்றன.

*கால் ரிஃப்ளெக்சாலஜி* என்றும்
இது கூறப்படுகிறது. *கால் மசாஜ் சிகிச்சை உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.*

தயவுசெய்து இந்த தகவலை *உங்கள் நண்பர்களுடன்* முடிந்தவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.
படித்ததில் பிடித்தது.
ravi said…
சுமார் 60 வருஷங்களுக்கு முன்பு என்று எனது நினைவு. பரமாச்சாரி யார் தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்து கொண்டிரு ந்த நேரம். மாயவரத்தில் பரமாச் சாரியாரின் பட்டணப் பிரவேசத்தி ற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் என்று சொன்னால் யானை, குதிரை எல்லாம் முன்னால் ஊர்வலமாக வரும். பரமாச்சாரியார் பல்லக்கில் வருவார்.

தருமபுரம் மடம் வழியாக பரமாச் சாரியாரின் பல்லக்கு வந்தது. அங்கே பூர்ணகும்ப மரியாதை யுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார் அவர். பண்டார சந்நிதி அவரை கெளரவம் செய்து மடத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு மயிலாடுதுறைக்குள் நுழைந்தது பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேச ஊர்வலம்.

நாதசுவரம் சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பெயரில் மட்டுமல்ல, நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். அவருடைய லெட்டர்பேடில் அகில உலக நாதசுவரம் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் என்றுதான் அச்சிடப்பட்டிருக்கும். கப்பல் போன்ற ஸ்டுடிபேக்கர் காரில் தான் பயணிப்பார். இந்த சந்தர்ப்பத்தில் வெளியூரில் கச்சேரி செய்துவிட்டு திருவாவடுதுறை திரும்பிக் கொண்டிருந்தார் டி.என்.ஆர்.

அந்த நாளில் மாயவரத்தில் பிரபலமான காளியாக்குடி ஹோட்டல் அருகில் உள்ள மணிக்கூண்டு வழியாக சென்று கொண்டிருந்த டி.என்.ஆர். கூட்டத்தைப் பார்த்துவிட்டு என்ன விசேஷம்? என்று வினவினார். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் வந்து கொண்டிருக் கிறது என்றும் அடுத்த தெருவில் இருக்கிறது என்றும் கேள்விப் பட்டவுடன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தச் சொன்னார். சட்டையைக் கழற்றினார். அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார். மணிக்கூண்டு அருகில் நின்று கொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

ravi said…
இவரது நாயன சங்கீதம் காதில் விழுந்தவுடன், ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே, அங்கே போங்கோ என்று பரமாச்சாரியார் உத்தரவிட்டு, பட்டணப் பிரவேச ஊர்வலத் துடன் பல்லக்கு மணிக்கூண்டை நோக்கி நகர்ந்தது.இதைத்தானே ராஜரத்தினம் பிள்ளை எதிர் பார்த்தார்! அவருக்கு பரம சந்தோஷம். உற்சாகம் தாங்க வில்லை. அடுத்த ஒன்றரை மணி நேரம் மணிக்கூண்டு அருகில் நின்றபடியே வாசித்துக் கொண்டி ருந்தார் டி.என்.ஆர். மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது.

பரமாச்சாரியார் ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பை மெய்மறந்து கேட்டு ரசித்தார். அவருக்கு ஒரு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். *சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டு நாதசுவரம் சக்ரவர்த்தி சொன்னார்- இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது.*

*Jaya Jaya Shankara, hare hare Shankara*
ravi said…
உத்தரணி அல்ல, அதனை #ருத்ரணி என்று சொல்லவேண்டும். பஞ்ச என்றால் ஐந்து என்று மட்டுமல்ல, அகலமான என்ற பொருளும் உண்டு. பஞ்ச பாத்திரம் என்றால் ‘வாய் அகன்ற பாத்திரம்’ என்று பொருள். நீங்கள் நினைப்பது போல் ஐந்து பாத்திரங்களோ அல்லது ஐந்து விதமான உலோகங்களின் கலவையோ அல்ல. அதேபோல அதனுடன் இணையாக இருக்கும் சின்னஞ்சிறு கரண்டிக்கு ருத்ரணி என்று பெயர். ருத்ரனின் அணிகலனான பாம்பின் உருவினைக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கும். பாற்கடலை பாம்பைக் கயிறாகக் கொண்டு கடைந்துதானே அமிர்தத்தை எடுத்தார்கள்!

அதுபோல பஞ்சபாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தை எடுக்கும் போது அது அமிர்தமாக வேண்டும் என்பதால் பாம்பின் உருவில் அதனை வடிவமைத்தார்கள்.

பஞ்சபாத்திரம்-ருத்ரணி என்பதே சரி. இறைவனை முறைப்படி பூஜை செய்து வழிபடும்போது, முதலில் அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லி தியானிப்பார்கள்.
உதாரணத்திற்கு பிள்ளையார் பூஜை செய்யும்போது ‘விநாயகாய நமஹ: த்யாயாமி’ (விநாயகப்பெருமானே உம்மை தியானிக்கிறேன்), ‘ஆவாஹயாமி’ (ஆவாஹனம் செய்கிறேன்), ‘ஆஸனம் சமர்ப்பயாமி’ (உட்காருவதற்கு ஆசனம் அளிக்கிறேன்) என்று சொல்லி அழைப்பார்கள்.

விநாயகப் பெருமான் வந்து ஆசனத்தில் அமர்ந்துவிட்டதாக எண்ணி அடுத்து, பஞ்ச உபசாரம் என்ற பூஜைகளைச் செய்வார்கள். அதாவது ஒரு விருந்தினர் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவர்களை ‘வாருங்கள், வாருங்கள்’ என்று வரவேற்று, ‘உட்காருங்கள், தண்ணீர் குடியுங்கள்,’ என்று முதலில் உபசாரம் செய்வோம் அல்லவா, அதே போல இறைவன் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவருக்கு பாதபூஜை செய்யும் விதமாக

‘பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி’ (உம்முடைய பாதத்தில் தீர்த்தம் விட்டு அலம்புகிறேன்), ‘
ஹஸ்தயோ: அர்க்யம் சமர்ப்பயாமி’ (கைகளை அலம்பிக்கொள்ள தீர்த்தம் விடுகிறேன்),
‘முகே ஆசமனீயம் சமர்ப்பயாமி’ (முகம் வாய் அலம்ப தீர்த்தம் தருகிறேன்),
‘சுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி’ (நீராட சுத்தமான தண்ணீரை விடுகிறேன்),
‘ஸ்நான அனந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி’ (இறுதியாக மீண்டும் ஜலம் விடுகிறேன்)

என்று ஐந்து முறை ருத்ரணியினால் தீர்த்தம் விடுவார்கள்.

இந்த ஐந்து விதமான பஞ்ச உபசாரத்தினைச் செய்வதற்கு துணையாக இந்த பாத்திரம் பயன்படுவதால் ஐந்து என்ற அர்த்தத்தோடு இதனை பஞ்சபாத்திரம் என்று அழைப்பதாகவும் கொள்ளலாம்.

Courtesy : Shivarama Subramanian Sankaraiyer
ravi said…
‘வெங்கட்ராமா.. நீயே பெரிய மந்த்ரவாதிடா.....

“தாத்தா நீ யாரிடம் மந்திரிக்கக் கத்துண்டே?” என்று என் தாத்தாவிடம் ஒரு நாள் கேள்வியைப் போட்டேன்…
தாத்தாவுக்கு நல்ல மந்த்ர ஸித்தி உண்டு..
தேள்கடி, பாம்புகடி, இன்னதென்று தெரியாத விஷக்கடி, சுளுக்கு, மஞ்சட்காமாலை, ஜ்வரம், பயந்த கோளாறு என்று யாராவது நாலு பேர் தினமும் காலையிலிருந்தே அவரைப் பார்க்கக் காத்துக் கொண்டிருப்பார்கள்..
அப்படி வருபவர்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கும்…
தாத்தா யாரிடமும் மந்திரிப்பதற்குக் காசு பணம் வாங்க மாட்டார்.. மஞ்சட்காமாலைக்கு மந்திரித்துக் கொள்பவர்கள் மட்டும் திருவாரூர் காகிதக்காரத் தெரு மகமாயி கோவில் திருப்பணிக்காக இருக்கும் உண்டியலில் ஒரு ரூபாய் காசு போட்டுவிட்டுப் போகச் சொல்லுவார்..
கடுமையான வைதீக அனுஷ்டானம்.. ஆசாரம்.. பூஜைகள்... ஜபம்.. என்றெல்லாம் அதிகம் வைத்துக் கொள்ளாதவர்.. மிகவும் எளிமையாக இருப்பார்… எண்பது வருஷங்களுக்கு முன்பே தஞ்சாவூர் ஜில்லாவில் முதல் ஆடிட்டராகத் தொழில் செய்ய ஆரம்பித்தவர்..
தாத்தாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.. சிறு வயதில் என்னை தனியாக உட்கார வைத்து க்ரந்தாக்ஷரம் மற்றும் அனேக மந்த்ரங்களைக் கற்று கொடுப்பார்..
எப்போது பேசினாலும் ஸ்ரீபெரீவாளின் மஹிமை பற்றியும் ஸ்ரீமடத்து ஸம்ப்ரதாயங்கள் பற்றியும் சொல்லாமல் இருக்க மாட்டார்..
தாத்தா ஸ்ரீபெரீவாளின் மீளா அடிமை.. ஸ்ரீமடத்தின் உப முத்ராதிகாரி.. சாதாரண குடும்பத்தில் பிறந்து மிகவும் ச்ரமப்பட்டு முன்னுக்கு வந்தவர்..
மிகச் சாதாரணமாகத் தோற்றமளிக்கும் இந்த மனுஷர் எப்படி மந்திரிக்கவெல்லாம் செய்கிறார் என்று எனக்கு ரொம்ப நாளாக சந்தேகம்..
ஒருநாள், மெதுவாக அவரிடம் “தாத்தா நீ யாரிடம் மந்திரிக்கக் கத்துண்டே?” என்று கேள்வியைப் போட்டேன்…
தாத்தா சொல்ல ஆரம்பித்தார்..
“ 1941 ம் வருஷம்.. ஸ்ரீபெரீவா நாகப்பட்டணத்ல சாதுர்மாஸ்யம் பண்ணினா.. வ்யாஸபூஜை.. ஸ்ரீநீலாயதாக்ஷி அம்பாளின் ஆடிப்பூர மஹோத்ஸவம்னு அந்த ஊரே கோலாஹலமா இருந்தது..
அந்த சமயத்தில் ஸ்ரீபெரீவாளை தரிசனம் பண்ணப் போயிருந்தேன்..
பூஜை முடிஞ்சு தீர்த்தப் ப்ரஸாதம் கொடுத்த பிறகு, ஸ்ரீபெரீவாளை நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்னேன்..
என்னைப் பார்த்த ஸ்ரீபெரீவா ‘என்ன வேணும்’னு கேட்டா..
நான் தயக்கத்துடன் ‘ஸ்ரீபெரீவா எனக்கு ஏதாவது மந்த்ரோபதேசம் பண்ணணும்’னு கேட்டேன்..
ravi said…
உடனே ஸ்ரீபெரீவா என்னை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு..
‘டேய்.. வெங்கட்ராமா.. நீயே பெரிய மந்த்ரவாதிடா.! ’ என்று அழுத்தமாகச் சொல்லி விபூதி ப்ரஸாதம் கொடுத்தா....
ஸ்ரீபெரீவாளிடம் விபூதி ப்ரஸாதம் வாங்கிண்டு உடனே அங்கிருந்து கிளம்பி திருவாரூர் ஆத்துக்கு வந்துட்டேன்..
அதே சமயத்தில் சொந்த ஊரான நெம்மேலி க்ராமத்திலிருந்து வண்டி கட்டிக்கொண்டு என் சித்தப்பா ஸுப்பையரும் திருவாரூர் ஆத்துக்கு வந்து சேர்ந்தார்...
எங்க சித்தப்பா ஸுப்பையர் நன்னா மந்திரிப்பார்..
‘என்ன சித்தப்பா திடீர்னு இங்கே வந்திருக்கேள்’ னு அவரைக் கேட்டேன்..
‘எனக்குத் தெரிந்த மந்த்ரமெல்லாம் நம்ப ஆத்ல பல தலமுறையா யாராவது ஒருத்தர் வழியா வந்திண்டு இருக்கு..
எனக்கப்பறம் இதயெல்லாம் யாருக்காவது சொல்லி வைக்கணும்னு எனக்கு இத்தனை நாளும் தோணலே...
ஆனா இன்னிக்கு எனக்கு மனசில் உனக்கு இதயெல்லாம் உபதேசம் பண்ண்ணும்னு ஸ்ரீபெரிவா உத்தரவானதாகத் தோணித்து.. அதனால் உடனே வந்துட்டேன்..
..நாளெல்லாம் பார்க்க வேண்டாம்.. ஸ்ரீபெரிவா உத்தரவான நாளே ஸுதினம்’னு சொல்லி எனக்கு உடனே மந்த்ரோபதேசம் பண்ணி வெச்சார்..
அதுக்கப்பறம் நான் பெரீசா மந்த்ர ஜபம் உரு அதிகமாப் பண்ணலை.. எப்பவாவது கொஞ்சமாகப் பண்ணுவேன்..
..ஆனா எப்போதும் யார் கஷ்டத்துடன் வந்தாலும் ஸ்ரீபெரீவாளை மனஸில் நினச்சிண்டு தெரிஞ்சதைச் சொல்லுவேன்.. விபூதி கொடுப்பேன்..
அன்னிக்கு ஸ்ரீபெரீவா ‘வெங்கட்ராமா.. நீயே பெரிய மந்த்ரவாதிடா..’ன்னு சொல்லிக் கொடுத்த விபூதி ப்ரஸாதம்தான் இன்னிக்கும் அத்தனை பேர் கஷ்டத்தையும் தீர்க்கறதுப்பா..!” என்று சொல்லி முடித்தார் தாத்தா.
“ மந்திரமாவது ஸ்ரீபெரீவா திருநீறு..“
ravi said…
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:32)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை.
இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை.
('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: அறம் செய்வதைவிட மேம்பட்ட ஆக்கமும் இல்லை. அதனை மறப்பதைவிடக் கொடிய கேடும் கிடையாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை.

பதவுரை: அறத்தின் -நற்செயலைக் காட்டிலும், அறத்தில்; ஊ(உ)ங்கு-மேற்பட்ட, விஞ்சிய; ஆக்கமும்-வளர்ச்சியும், மேன்மேல் உயர்தலும், செல்வமும்; இல்லை-இல்லை; அதனை-அதை (இங்கு அறத்தை); மறத்தலின்-மறத்தலைவிட; ஊங்கு-மேற்பட்ட; இல்லை-இல்லை; கேடு-அழிவு, தீமை, வறுமை.
ravi said…
16.02.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 36)

Sanskrit Version:

निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन।
पापमेवाश्रयेदस्मान्हत्वैतानाततायिनः।।1.36।।

English Version:

nihatya Dhaartaraashtraantah:
kaa priitih: syaat janaardana |
paapamevaashrayet asmaan
hatvaaitaanaatataayinah ||



Shloka Meaning

What delight may be to us killing these Kauravas? Only sin would take
hold of us having slain these felons.

Who are felons? People who commit the following crimes are felons


1. Sets fire to the house of another person
2. Poisons him
3. Kills and murders with sword in hand
4. Steals his wealth
5. Steals land
6. Steals wife

Such sinners are called as atatayinah.
Duryodhana and his people have committed all these crimes.
Hence they are termed as felons

Jai Shri Krishna 🌺
ravi said…
உனது வேண்டுதல் உண்மை எனில்
இறைவனை ஏன் போலி பொருட்களால் அபிஷேகம் செய்கிறாய்?

அந்த திருமேனியும் உனது உடல் போன்றுதான்
கலப்பட எண்ணெய்
கலப்பட சீயக்காய்
கலப்பட திரவியப்பொடி
கலப்பட பால்
கலப்பட தயிர்
கலப்பட நெய்
கலப்பட தேன்
கலப்பட சந்தனம்
கலப்பட மஞ்சள்
கலப்பட பன்னீர்
கலப்பட விபூதி
கொஞ்சம்கூட மனம் இன்றி இப்படி கலப்பட பொருள்கொண்டு அபிஷேகம் செய்து இறைவனை பிரார்த்தனை செய்தால் - வழிபட்டால் பலன் கிடைக்குமா?

நீ நிஜமாக நடந்துக்கொள்ளாமல் இறைவன் மட்டும் உனக்கு நிஜமாக அருள்புரியவேண்டும் என நினைப்பது நியாயமா?

எவனோ கலப்பட பொருளால் பணம் சம்பாதிக்க நீ ஏன் பாவத்தை சம்பாதிக்கவேண்டும்?

நன்கு யோசி ....!
வெறும் நீர் கொண்டு அபிஷேகம் செய்தாலே போதும்
அல்லது பூஜை இடத்திலேயே ய பிழிந்த பழச்சாறு அல்லது இளநீர் போதும்

அபிஷேகம் நிஜமானதாகவும் தரமான பொருளால் அமைந்தால் அதுவே இறைவனின் மனதுக்கு இதமானதாகும்

கலப்பட பாலியஸ்டர் துணியை தவிர்த்து பருத்தி துணிகளை இறைவனுக்கு சாற்றி அருள் பெறு

பித்தளையை தங்கம் என ஏற்பாயா? உனக்கு ஒரு நியாயம் இறைவன் திருமேனிக்கு ஒரு நியாயமா?

அற்புதமான ஆயிரம் வருடம் தொன்மையான அருள்பாலிக்கும் இறைவன் திருவுருவத்தை உன்சுயநலத்தால் பாழாக்கினால் இறைவன் பொருத்துக்கொண்டு இருக்கமாட்டார்

நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை தீயதை கோவிலுக்கு செய்யாதே!

இறைவனின் அருள் பெற உண்மையாக நடந்துக்கொள்

அனைத்துமே இயற்கையாக கிடைக்கிறது மனம் இருப்பின் தேடினால் கிடைக்கும்

கறந்த பசும்பால், பசுந்தயிர், நல்ல தரமான நெய் இன்றும் கிடைக்கிறது

சந்தன கட்டையை அரைத்து சிறிது சந்தனம் போதும்

நாட்டு ரோஜா, வெற்றிவேரை ஊறவைத்து பன்னீர் தயாரிக்கலாம்

தரமான தேன் கிடைக்கிறது

சீயக்காய், மஞ்சள் வாங்கி அரைத்து பயன்படுத்தலாம்

கண் எதிரில் எள் போட்டு செக்கில் நல்லெண்ணைய் ஆட்டி பெறலாம்

பசும்விரட்டியை எரித்து சாம்பலை நன்கு சல்லித்து வீபூதியை உருவாக்கலாம்

இது அவசர உலகம் என்பதெல்லாம் பொய், சோம்பேரித்தனம் மற்றும் நிஜமான பக்தி இல்லாமல் "பரம்பொருளான" இறைவனை ஒரு “தரும் பொருள்” என நினைப்பதுதான் காரணம்

யாரோ சிலர் முறைகேடாக பணம் சம்பாதிக்க பக்தியை ஒரு கருவியாக்கி, அந்த கலப்பட பொருளை விற்பதும்
அதை இறைவனுக்கு அபிஷேகம் செய்து பலன் தேடும் அப்பாவி பக்தன் பாவத்தை சம்பாதிக்கவேண்டுமா?

சிந்தித்து செயல்படு
சிவசிவ - நாராயணா நாராயணா
Thanks:
Tambaram Balu Saravanan
ravi said…
[16/02, 11:03] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 489* 🙏🙏🙏started on 7th Oct 2021
[16/02, 11:08] Jayaraman Ravilumar: *207 *मनोन्मनी - மநோன்மணீ -*

நமக்கு எத்தனையோ எண்ணங்கள் மனதில் தோன்றுகிறதே அது எல்லாமே குப்பையாக அல்லவோ இருக்கிறது.

ஆனால் அதற்கிடையே அற்புதமான சில எண்ணங்களும் கலந்திருக்கிறது.

நிறைய மண்ணை மலைமலையாக தோண்டினால் தான் ஒரு நூறு கிராம் வைரம் கிடைக்க வழி இருக்கிறது.

அது வேண்டுமானால் குப்பையும் மண்ணும் எறியப்படவேண்டும்.

நல்ல எண்ணங்களே மனத்தில் தோன்றும் மணி.

மனோன்மணி. அதுவே அம்பாள். அவள் தான் மனோன்மணி, உண்மணி, என்கிறார் ஹயக்ரீவர்.

ஸ்ரீ ருத்ரம் சிவனை *மனோன்மனன்* என்கிறது.

ரிஷிகளின் முத்திரைகளில் மனோன்மணி என்று தியான முத்திரை உண்டு.
ravi said…
[16/02, 10:39] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 85*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
[16/02, 11:00] Jayaraman Ravilumar: मञ्चे सदाशिवमये परिशिवमयललितपौष्पपर्यङ्के ।

अधिचक्रमध्यमास्ते कामाक्षी नाम किमपि मम भाग्यम् ॥ ७०॥

70. Manche sadaa shiva maye, para shiva maya lalitha poushpa paryange,

Adhi chakra madhyamaasthe Kamakshi naama kimapi mama bhagyam.

மஞ்சே ஸதாஶிவமயே பரிஶிவமயலலிதபௌஷ்பபர்யங்கே |

அதிசக்ரமத்யமாஸ்தே காமாக்ஷீ னாம கிமபி மம பாக்யம் ||70||
[16/02, 11:01] Jayaraman Ravilumar: லலிதையை, காமாட்சியை உபாசிக்கிறவர்கள் ஸ்ரீ சக்ர பூஜை செய்பவர்கள்.

அதன் நடு நாயகமாக இருப்பது தான் சர்வானந்தமய சக்ர பிந்து.

அதி சக்ர மத்யம் என்று மூகர் அதைத்தான் சொல்கிறார்.

அந்த மஞ்சத்தில், காமேஸ்வரர் மஞ்சத்தில், புஷ்ப மெத்தையில் அமர்ந்திருக்க அவர் இடது பாகத்தில் அம்பாள் வீற்றிருந்து அருள் பாலிக்கிறாள்.

அவரை சதாசிவன் எனும் ஆநந்த ஸ்வரூபனாகவும், அந்த கட்டிலின் நாலு கால்களுமே, ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் , ஈஸ்வரன் ஆகியோர் என்றும் சொல்வதுண்டு. 🙌🙌🙌
ravi said…
எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கு என்று,

எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்,

மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே,

மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?

---திருவாய்மொழி (நம்மாழ்வார்)
ravi said…
எப்போது நாம்
இந்த பூவுலகை, ( அந்த விண்ணுலகையும் தாவி ) அளந்த
திருமாலின் இரு திருவடிகளையும்

காண்பதற்குரிய நாள் (எப்போது அமையும்)

ஒரு நாளும் விடாமல், நின்ற வண்ணம்

பெருங்கூட்டமாய்

வானவர்கள் துதி செய்து, பரம பக்தியுடன் தொழுது

உடல், நா, உள்ளம் என்ற மூன்றையும் கொண்டு

வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே -

மெய் நிலையை நான் அடைந்து

உன் திருவடிக் கீழ் அடியவனான நான் சேர்ந்து அமையும் நாள் என்றைக்கோ?
ravi said…
https://chat.whatsapp.com/KqC06JZZKO4EEMBqXvrB59

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹா சிவராத்திரி நான்கு கால பூஜை முறைகள் பற்றிய பதிவுகள் :*

*முதல் கால பூஜை*

சிவபெருமானை ஶ்ரீசோமாஸ்கந்தராக வழிபட வேண்டும். 'ஸ + உமா + ஸ்கந்தர்' என்பதே இணைந்து சோமாஸ்கந்தராக மாறியது. அதாவது உமை மற்றும் கந்தனுடன் விளங்கும் சிவபிரான் என்பது இதன் பொருள்.

இறைவன், இல்லறத்தானாக - இனிய கணவனாக - பாசமுள்ள தந்தையாக தனயனுடன் காட்சியளிக்கும் இந்தக் கருணை வடிவம், தரிசித்து மகிழ வேண்டியது ஒன்று. சச்சிதானந்தம் என்பதை சத்து - இறைவன்; சித்து - இறைவி; ஆனந்தம் - முருகன் எனலாம்.

இந்த மூன்று இயல்புகளின் அழகிய வடிவே சோமாஸ்கந்தம் என்று தத்துவ நூல்கள் விளக்குகின்றன. இல்லறம் நல்லறமாக விளங்க விரும்புகிறவர்கள், மழலை வரம் எதிர்பார்த்துக்காத்திருப்பவர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய காலம் முதற்காலம்.

*
ravi said…
இரண்டாம் கால பூஜை*

மஹா சிவராத்திரி இரண்டாம் கால பூஜை
தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த வடிவம் சோமாஸ்கந்த மூர்த்தி. நமது நாட்டில் வேறெங்கும் இந்த வடிவம் காணப்படுவதில்லை. சிவன் - சக்தி - முருகன் ஆகிய வழிபாட்டை ஒருங்கிணைத்து பல்லவர் காலத்தில் பிரபலமான வடிவம் இது.

கல்விச் செல்வம் அருளும் இரண்டாம் கால பூஜையில் நாம் ஈசனை ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக வழிபடுவது சிறந்தது. கல்வி, யோகக்கலை, இசை மற்றும் கலைகளைக் கற்பிக்கும் ஞானாசாரியத் திருக்கோலமே ஸ்ரீதட்சிணாமூர்த்தித் திருவடிவம்.

ravi said…
தட்சிணம்’ என்பதற்கு தெற்கு, ஞானம், சாமர்த்தியம், ஆற்றல், ஆளுமை, யோகம் மற்றும் வீரம் என்று பல பொருள்கள் உண்டு. இவை யாவற்றையும் உடையவர் ஆதலால் ஸ்ரீதட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர்.

ravi said…
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் மௌனமாக உபதேசிக்கும் ஞான வடிவம் இது. இந்தத் திருவுருவை மஹாசிவராத்திரி நாளில் வழிபாடு செய்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

*மூன்றாம் கால பூஜை*

'லிங்கம்' என்றால் உருவம். 'உற்பவம்' என்றால் வெளிப்படுதல் என்று பொருள். லிங்கோற்பவம் என்ற சொல்லுக்கு, 'உருவமற்ற இறைவன் வடிவம் கொள்ளுதல்' என்று பொருள். லிங்க பாணத்தின் நடுவில், சந்திரசேகர் திருமேனி போல் அமைந்திருப்பதே லிங்ககோத்பவ வடிவம்.

இரண்டு, நான்கு அல்லது எட்டு கரங்களுடன் சிவபெருமான் திகழ, பிரம்மாவும் திருமாலும் இருபுறமும் வணங்கிய நிலையில் இருப்பர்.

சிவாலயங்களில் கருவறைக்கு பின்புற சுவரில், லிங்ககோத்பவ மூர்த்தியை அமைக்கும் வழக்கம், முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே இருந்துள்ளது.

இறைவனின் இத்திருக்கோலத்தை மூன்றாம் கால பூஜையின் போது நினைத்து வழிபட சகல செல்வங்களும் கிடைப்பதோடு இறைவனின் பரிபூரண ஆசியும் கிட்டும். ஞானமும் மோட்சமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

*நான்காம் கால பூஜை*

சிவபெருமானின் திருக்கோலங்களுள் உன்னத வடிவாக திகழ்வது ரிஷபாரூட மூர்த்தி. திருக்கோயிலில் திருவிழாக்களில் பெருமானின் ரிஷப வாகன காட்சி காண அடியர்கள் காத்து நிற்பார்.

சிவபெருமான் தன் அடியார்களுக்கு ரிஷப வாகனராக திருக்கோலம் காட்டி ஆட்கொண்டு அருளியதை பெரிய புராணத்தில் பல அடியார்களின் வரலாற்றின் மூலம் அறிய முடியும்.

'உலகமும் அதன் உயிர்களும் ஒடுங்கி அழியும் ஊழி காலத்தில் தாமும் அழிய நேரிடுமே!' என்று அஞ்சிய தரும தேவதை, என்ன செய்வதென்று ஆராய்ந்து ரிஷப வடிவம் கொண்டு சிவபெருமானை தஞ்சமடைய சிவபெருமான் அதன் மீது ஏறிக்கொண்டு, அருள் புரிந்த நிலையே ரிஷப வாகனராக காட்சி கொடுத்தார்.

இந்த திருக்கோலத்தில் இறைவனை வழிபட்டு பூஜை செய்ய வேண்டியது நான்காம் காலம். நான்காம் கால பூஜையில் கலந்து கொண்டு வழிபாடுகள் செய்தால் அவர்களுக்கு வேண்டும் செளபாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
[16/02, 17:28] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 87 started on 6th nov

*பாடல் 28* ...💐💐💐
[16/02, 17:29] Jayaraman Ravilumar: *பாடல் 28 ... ஆனா அமுதே*

(நீயும் நானுமாய் இருந்த நிலை)

ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?

யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.
ravi said…
*ஆனா அமுதே ...*

கெடுதலும் அழிவுமில்லாத அமுதம் போன்றவனே,

*அயில் வேல் அரசே ...* கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய
மன்னவனே,

*ஞான ஆகரனே ...* ஞானத்திற்கு இருப்பிடமானவனே,

*யான் ஆகிய என்னை விழுங்கி ..* .

நான் என்னும் ஆணவ
முனைப்பில் அழுந்தி இருக்கும் என்னிடமிருந்து
ஜீவபோதத்தை போக்கி சிவபோதத்துள் அடக்கி,

வெறும் தானாய் ... வேறு ஒன்றும் இல்லாது எல்லாம் தானேயாய்,

நிலை நின்றது ... நிலைத்திருப்பதான,

*தற்பரமே* ... மேலான நிலையை (அனுபவித்து அனுபவத்தில்
காண்பதே அல்லாது பிறருக்கு இந்த அனுபவம் இத்தன்மையது என்று),

*நவிலத் தகுமோ ...* சொல்லத் தக்கதோ? (சொல்ல முடியாது).
ravi said…
[16/02, 17:26] Jayaraman Ravilumar: *சிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரை*
[16/02, 17:26] Jayaraman Ravilumar: मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते

गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।

किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते

भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ||63||

மார்கா³வர்திதபாது³கா பஶுபதேரங்க³ஸ்ய கூர்சாயதே

க³ண்டூ³ஷாம்பு³நிஷேசனம்ʼ புரரிபோர்தி³வ்யாபி⁴ஷேகாயதே |

கிஞ்சித்³ப⁴க்ஷிதமாம்ʼஸஶேஷகப³லம்ʼ நவ்யோபஹாராயதே

ப⁴க்தி꞉ கிம்ʼ ந கரோத்யஹோ வனசரோ ப⁴க்தாவதம்ʼஸாய
ravi said…
சாயங்காலம் ஆனவுடனே போய், ஒரு பன்றியை வேட்டையாடி, அவனுக்கு எப்படி பிடிக்குமோ அது மாதிரி சுடப்பண்ணி அந்த மாம்சத்தை தேன் ஊற்றி கடிச்சு பார்த்து சரியான பக்குவத்துல இருப்பதை சுவைத்து தெரிந்துகொண்டு

அதை நெய்வேத்யமாக ஒரு இலையில் வைச்சுண்டு

அதை எடுத்துக்கறான்.

ஸ்வாமிக்கு அபிஷேகம் பண்ணனும் னு வாய்ல ஜலத்தை ரொப்பிக்கிண்டு – ஏன்னா பாத்திரம் எதுவும் இல்லை..

பூக்களை எல்லாம் பறிச்சு தலையில வச்சுண்டு.. ஏற்கனவே அபிஷேகம் பண்ணினவர் இதெல்லாம் பண்ணிருக்கார் என பார்த்து வச்சுண்டதால, இது மாதிரி எல்லாத்தையும் எடுத்துண்டு வந்து,

ஸ்வாமி மேல முன்ன அபிஷேகம் பண்ணி சாத்தியிருந்த பூவெல்லாம் காலால தள்ளி விட்டுட்டு, வாய்ல இருந்த ஜலத்தால அபிஷேகம் பண்ணிட்டு,

பன்றி மாம்சத்தை நைவேத்யம் பண்ணிட்டு, தலைல இருந்த பூவால அர்ச்சனை பண்றான்.
ravi said…
[16/02, 17:18] Jayaraman Ravilumar: *104. ஸர்வ யோக விநிஸ்ருதாய நமஹ (Sarvayogavinisruthaaya namaha)*
[16/02, 17:18] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ ஸர்வாதி
அச்யுத : |

வ்ருஷாகபிரமேயாத்மா
*ஸர்வயோக வினிஸ்ருத:* ||11
ravi said…
அப்போது குறுக்கிட்ட மகாபிரபு,

“மேதைகள் சரியான விபக்தியுடன் அர்ச்சனை செய்வார்கள்.

பேதைகள் தவறான விபக்தியுடன்
அர்ச்சனை செய்வார்கள்.

ஆனால், இறைவனோ அந்த விபக்தியைப் பார்ப்பதில்லை,

பக்தியைத் தான் பார்க்கிறான்.

உண்மையான பக்தியோடு செய்யும் அர்ச்சனையில் எத்தனை குற்றங்கள் இருந்தாலும் அதை இறைவன் ஏற்றுக் கொள்வான்!” என்றார்.

இதை ஒரு ஸ்லோகமாகவே இயற்றி விட்டார் மகாபிரபு…

“மூர்க்கோ வததி விஷ்ணாய புதோ வததி விஷ்ணவே |

உபயோஸ்து பலம் துல்யம் பாவக்ராஹீ ஜநார்தந: ||”
ravi said…
*தினமும் ஒரு திருவாசகம்* 🪷🪷🪷 18
ravi said…
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்
விளங்கொளியாய்

எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
ravi said…
நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட அதனால் அவன் திரு முன்பு இங்கு வந்தேன்.

சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல் பூண்ட திருவடிகளை தொழுது நின்று, வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும் அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே !

உன் பெரிய பெரிய தன்மைகளை மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.

பாசத்தால் கட்டுண்ட பசுக்களின் உய்வின் பொருட்டு இறைவனால் நுண்ணுடலும் (சூக்ஷ்ம சரீரம்) அவற்றின் வினைக்கேற்ற (பரு) உடல்கள் பின்னும் அருளப்பட்டன என்பது சித்தாந்தம் கூறும் உலகின் துவக்கம்.🙏🙏🙏
ravi said…
தினம் ஒரு (தெய்வத்தின்) குரல்
(நேற்றைய தொடர்ச்சி)

சிவ நாமாவைச் சிறப்பித்து சைவமான புராண ஆகமங்களிலோ, தேவார திருவாசகங்களிலோ சொல்லியிருந்தால் அதில் பெரிய விசேஷமில்லை. வைஷ்ணவ நூலில் சொல்லியிருந்தாலே விசேஷம். சிவ மஹிமையைத் தீவ்ர வைஷ்ணவர் சொல்லியிருந்தால்தான் விசேஷம்.

இந்த இரண்டு விசேஷங்களும் சிவனுக்கும் சிவ நாமத்துக்கும் இருக்கின்றன.

ravi said…
விஷ்ணுவின் மஹிமைகளை, சரித்ரங்களை எல்லாவற்றுக்கும் மேலானவை என்று ஸ்தாபிக்க ஏற்பட்டது பாகவதம். அதில் நடுவிலே தாக்ஷாயணியின் கதை வருகிறது. அந்தக் கதைக்கு நடுவிலேதான் தாக்ஷாயணியின் வாக்கிலேயே சிவ நாமாவின் மஹிமையைச் சொல்லியிருக்கிறார், பாகவதத்தை அநுக்ரஹித்துள்ள சுகாசார்யாள். அவர் ப்ரஹ்ம ஸ்வரூபம். சுகப்ரஹ்மம் எனப்படுபவர். அவர் சொல்வதற்கு தனி மதிப்பு உண்டு. அவர் இப்படி எடுத்துச் சொல்வதற்கு மூலமாக இந்த மஹிமையைச் சொன்னவளோ தாக்ஷாயணியாக வந்த ஸாக்ஷாத் பராசக்தி! அதுவும் எப்படிப்பட்ட ஸந்தர்பத்தில் சொன்னாள்?

ravi said…
தகப்பனார் தக்ஷன் யஜ்ஞம் செய்கிறான் என்ற அபிமானத்தால் அவன் அழைக்காமலே அதற்கு வந்தாள், அவனுடைய புத்ரியானதால் தாக்ஷாயணி என்று அழைக்கப்பட்ட தேவி. ஸதி என்பதுதான் அவளுடைய (இயற்) பெயர். ஹிமவானின் புத்ரியான பார்வதியாக வருவதற்கு முன்னால் அம்பாள் எடுத்த அவதாரம் இது. பரமேச்வரன், “அழையா விருந்தாளியாகப் போக வேண்டாம்” என்று நல்ல வார்த்தை சொல்லியும் கேட்காமல் தாக்ஷாயணி தகப்பனாரின் யாகத்துக்கு வந்தாள்.

ravi said…
பரமேச்வரன் யாரையும் மதிப்பதுமில்லை, அவமதிப்பதுமில்லை என்று தன்பாட்டில் ஞானியாக விலகியிருந்தவர். ‘ப்ரஜாபதி’ என்று ஜனங்களுக்கு நாயகர்களாக ப்ரம்மா ஸ்ருஷ்டித்த ப்ரம்ம புத்ரர்களில் தக்ஷன் ஒருவன். அவனுக்கு எப்போதும் தன் ஆஃபீஸ், அதாரிடிகளைப் பற்றிய கர்வமுண்டு. எல்லோரும் தனக்கு நமஸ்காரம் பண்ணவேண்டும் என்று எதிர்பார்ப்பான். மற்றவர்கள் பண்ணவும் பண்ணினார்கள். ஈச்வரன் பண்ணவில்லை. அதனால் அவரை இவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ப்ரம்மாவின் வாக்குக்குக் கட்டுப்பட்டு ஸதியை அவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்து அவளைக் கைலாஸத்துக்கு அனுப்பி வைத்தான். அதோடு பெண்-மாப்பிள்ளை உறவைக் கத்தரித்து விட்டான். பெரிய யாகம் செய்தபோதுகூட ஒரு தேவர் பாக்கியில்லாமல் முப்பத்து முக்கோடி பேரையும் கூப்பிட்டவன் பெண்ணையும் மாப்பிள்ளையையும் இன்வைட் பண்ணவில்லை.

ravi said…
யஜ்ஞவாடத்தில் ஈச்வரனைத் தவிர அத்தனை பேரையும் கூப்பிட்டு உட்கார்த்தி வைத்திருப்பதைப் பார்த்தவுடனேயே மஹா பதிவ்ரதையான தாக்ஷாயணிக்கு “ஏண்டா வந்தோம்?” என்று பொங்கிப் பொங்கிக் கொண்டு வந்தது. அதற்கப்புறம் தக்ஷன் அவளை ப்ரியமாய் வரவேற்காததோடு, சிவ த்வேஷமாகவே நிந்தை பண்ணிப் பேச ஆரம்பித்தவுடன் அவளால் துக்கத்தையும் கோபத்தையும் தாங்கவே முடியவில்லை.

ravi said…
இங்கேயிருந்து போய்விடலாமா? போவது என்றால் எங்கே? பதியின் க்ருஹத்தைத் தவிர பத்னிக்கு வேறே இடம் ஏது? அங்கே போகலாமா? ஏன், என்ன யோசனை? போகவேண்டியதுதானே? போனால், ‘நான் சொல்லச் சொல்லப் போய் உனக்கும் அவமானத்தை தேடிக் கொண்டு எனக்கும் அவமானம் வாங்கி வைத்து விட்டு இங்கே ஏன் திரும்பி வந்தாய்? ‘என்று பரமேச்வரர் கோபிப்பாரோ என்பதால் யோசனையா? இல்லை. அவர் அன்பே ஒரு ஸ்வரூபமாக வந்திருப்பவர். என்னிடம் பரிவு தவிர எந்த உணர்ச்சியும் காட்டத் தெரியாதவர். அவர் இப்படிக் கேட்கமாட்டார். ஆனால் என் மனஸே கேட்கும்; குத்திக் குத்திக் கேட்கும். இன்னொன்று: அவர் எதுவும் நடக்காதது போல ஹாஸ்யமாக, பரிஹாஸமாக, என்னிடம் ஸல்லாபம் செய்யும் போதே நடுவில் ‘தாக்ஷாயணி’ என்று என்னைக் கூப்பிட்டுவிட்டால்? அதைவிட ஒரு தண்டனை வேண்டுமா? சிவநிந்தை செய்யும் பாபியின் பெண்ணாயிருப்பதால் ஏற்பட்ட பேரல்லவா அது? அவருடைய நாமம் எத்தனை உத்க்ருஷ்டமானதோ அத்தனை நிக்ருஷடமான இவனுடைய பேரைச் சொல்லி, இவனுக்குப் பெண்ணாய் நான் பிறந்தேனென்பதை ஞாபகப்படுத்தும் இந்தப் பேரை நான் வைத்துக் கொள்ள வேண்டியிருப்பதை விடப் பெரிய தண்டனை இல்லை. அதைவிட, இவனால் ஏற்பட்ட இந்த சரீரமே போய்விடட்டும்! எங்கே போவது என்று யோசித்தோமே! இந்த சரீரத்தையே விட்டுவிட்டுப் போய் ஆத்மாவாகிய அவரிடம் கலந்து விடுவோம்!’ என்று தியாக ஸங்கல்பம் பண்ணிக் கொண்டு விட்டாள்.

ravi said…
யஜ்ஞ குண்டத்துக்குப் பக்கத்திலேயே அம்பாள் ஈச்வர த்யானம் பண்ணிக்கொண்டு யோகாக்னியில் சரீரத்தை அர்ப்பணம் செய்து முடிந்து போய்விட்டாள் என்பது பாகவதக் கதை. சைவ புராணங்களில் யஜ்ஞ குண்டத்திலே விழுந்து பஸ்மீகரமாக்கிக்கொண்டு விட்டாளென்று இருக்கிறது.

இப்படி பாதிவ்ரத்யத்துக்காக, அம்பாள் ப்ராணத் தியாகம் செய்கிறதற்கு முந்தி கோபாக்னி கொழுந்து விட்டெரிய தக்ஷனைப் பார்த்துக் கொஞ்சம் பேசினதாக பாகவதத்தில் வருகிறது. அதன் நடுவில்தான், ‘சிவன் என்றாலே இவன் கரிக்கிறானே!’ என்று நினைத்து அவனிடம் அந்த நாம மஹிமையை அம்பாள் சொல்வது வருகிறது.

ravi said…
அம்பாள் வாக்கு என்பதாலேயே அதற்கு மிகுந்த ஏற்றம் உண்டு. அதுவும் இந்த ஸந்தர்ப்பத்திலே சொன்னது என்பதால் இன்னமும் மேலே, இதற்குமேல் ஒன்றில்லை என்ற உச்சிக்கு அந்த வாக்கு போய்விடுகிறது.

முன்காலத்தில் யாராவது உடன்கட்டை ஏறினால் அவளுடைய வஸ்த்ரம் எரியாமலே இருக்கும். ப்ரத்யக்ஷத்தில் பார்த்துப் பலபேர் சொல்லியிருக்கிறார்கள். அந்த வஸ்த்ரத்தை வைத்து ஆராதனை செய்வார்கள். இப்படிப் பல வீடுகளில் தலைமுறைகளாக அந்த வஸ்த்ரம் வந்திருக்கிறது. தன்னையே த்யாகம் பண்ணிக் கொள்வதால் அந்த ஸ்திரீகள் ஆத்ம ஞானியின் நிலையிலிருப்பவர்கள், அம்பாளின் அம்சம் பெற்றவர்கள் என்று பூஜிக்கப்படுகிறார்கள். அப்படியானால் அந்த அம்சங்களுக்கெல்லாம் மூலமான அம்பிகையே பதியை நிந்தை செய்தவனுடைய புத்ரியாக ஏற்பட்ட பெயரும் தேஹமும் இருக்கப்படாது என்ற தீவ்ரமான பதிவ்ரதா பாவத்தில் தன் தேஹத்தை பரித்யாகம் பண்ணிக் கொள்கிற நிலையில் சொன்ன வாக்கு ஸஹகமனம் செய்கிறவர்களின் வஸ்திரத்தைவிட எத்தனை மேலானது?

ravi said…
அம்பாள் இங்கே ஸஹகமனம் செய்யாவிட்டாலும் அப்படிச் செய்வதற்கே ‘ஸதி’- இங்கிலீஷிலே suttee – என்றுதான் அவள் பேரை வைத்திருக்கிறது. ‘பாதிவ்ரத்யத்துக்காக சரீரத்தைப் பொசுக்கிக் கொண்டு விடுவது’ என்ற கொள்கை இரண்டுக்கும் பொதுவாயிருப்பதால் இவ்வாறு பேர் ஏற்பட்டிருக்கிறது.

ஸதி-பதி என்பதாகவே தம்பதியைச் சொல்வதும் ‘ஸதி’என்றாலே ஐடியல் பத்னி என்ற அபிப்ராயத்தில் தான். ஆசார்யாள் “ஸதி ஸதீநாம் அசரமே” என்கிறார்*1. “பதிவ்ரதைகளுக்குள் முதன்மை ஸ்தானம் கொண்ட ஸதியே!” என்று அர்த்தம்.

அப்படிப்பட்டவள் ப்ரணாத்யாகம் பண்ணுகிற ஸந்தர்ப்பத்தில் சொன்னதைவிடப் பெரிய ஸத்யமில்லை. அந்த ஸத்யத்துக்கு விலையே இல்லை என்ன சொன்னாள்?

ravi said…
யத்-த்வயக்ஷரம் நாம கிரேரிதம் ந்ருணாம்

ஸக்ருத் ப்ரஸங்காத் அகம் ஆசு ஹந்தி தத் |

பவித்ர கீர்த்திம் தம் அலங்க்ய-சாஸநம்

பாவந்-அஹோ த்வேஷ்டி சிவம் சிவேதர: || *2

கடைசி வார்த்தை ‘சிவேதர:‘ – ‘சிவனுக்கு இதரமானவர்’. அதாவது சிவனாக இல்லாமல் அதற்கு மாறுபட்டவராக இருக்கிறவர். இப்படி ‘சிவேதரன்’ என்று அம்பாள் சொல்வது தக்ஷனைத்தான். ‘ பவாந் ‘ – ‘தாங்கள்’என்று ரொம்ப மரியாதை த்வனிக்கிறாற்போலவே அவனைக் கூப்பிடுகிறாள். ஈச்வரனே தனக்கு மரியாதை பண்ணவேண்டுமென்று எதிர்பார்ப்பவனாதலால் பரிஹாஸமாக ‘பவாந்’என்று சொல்லி அவனை ‘சிவேதரன்’என்கிறாள். இதில் நிரம்ப அர்த்த புஷ்டியிருக்கிறது.

ravi said…
சிவ என்பதற்கு மங்களமாக, சுபமாக இருக்கிற அத்தனையையும் அர்த்தமாக, synonym -ளாக (ஸம்ஸ்க்ருத நிகண்டுவான) அமர (கோச) த்தில் சொல்லியிருக்கிறது “ச்வ: ச்ரேயஸம், சிவம், பத்ரம், கல்யாணம், மங்களம், சுபம்“. அந்த சிவத்துக்கு இதரனாக ஒருத்தன் இருக்கிறானென்றால் அவன் ஒரு ச்ரேயஸுமில்லாதவன், அமங்கள, அசுப ஸ்வரூபம் என்றுதானே அர்த்தம்?

அப்பைய தீக்ஷிதர் எழுதியுள்ள அத்வைத க்ரந்தமொன்றுக்குப் ‘பரிமளம்’ என்று பேர். அத்வைதத்தை ஆக்ஷேபிக்கிற ஒருவர் இதற்குக் கண்டனம் பண்ணி எழுதினார். இந்த விஷயத்தை அப்பைய தீக்ஷிதர் கேட்டவுடன் மூக்கைப் பிடித்துக் கொண்டாராம். பரிமளம் என்றால் அதற்கு மூக்கைப் பிடித்துக் கொள்ளத்தானே வேண்டும்?

சிவம் – அதாவது பரம மங்களம் – பிடிக்காது என்று தக்ஷன் பெருமைப்பட்டுக் கொண்டால் அவன் ஒரே அமங்களன், அகல்யாணன், அசுபமானவன் என்றுதானே அர்த்தம்? தாக்ஷாயணி என்ற பேரே தண்டனை என்று நினைத்தவள் தக்ஷனுக்கு ‘சிவேதரன்’ என்று பேர் வைத்தே தண்டிக்கிறாள்!

ravi said…
ஐயையோ (‘அஹோ’)! இப்படி சிவனை த்வேஷிக்கிற சிவேதரனாயிருக்கிறாயே! ஒரு தப்புக் கண்டுபிடிக்க முடியாமல் பரம பவித்ரமாயுள்ள கீர்த்தி பொருந்தியவரல்லவா அவர் (பவித்ர கீர்த்திம்)? அவருடைய கட்டளையாலல்லவா ஸகல தேவதைகளும் தங்கள் தங்கள் காரியத்தைச் செய்கிறார்கள்? யாரும் அவர் கட்டளையை மீறினதில்லையே (அலங்க்ய சாஸனம்)! நீதான் அதிசயமாக அவரை மீறிப் போகப் பார்க்கிறவன்” இப்படியெல்லாம் அம்பாள் சொல்கிறாள். இது ஸ்லோகத்தின் பின்பாதி. முன்பாதியில்தான் சிவ நாமாவின் பெரிய பெருமையைச் சொல்கிறாள்,

ravi said…
யத்-த்வயக்ஷரம் நாம கிரேரிதம் ந்ருணாம்

ஸக்ருத் ப்ரஸங்காத் அகம் ஆக ஹந்தி …

‘த்வயக்ஷரம் நாம‘ – ‘இரண்டே இரண்டு அக்ஷரம் உள்ள சிவ நாமா’. பஞ்சாக்ஷரமாக அதற்கு முன்னாடிப் ப்ரணவம், பின்னாடி ‘நம:’ சொல்லணுமென்றுகூட இல்லை. அவ்வளவு ச்ரமம் வேண்டாம். இரண்டெழுத்தைச் சொன்னாலே போதும். ‘சிவ சிவ எனகிலர் தீவினையாளர்‘ என்றுதான் ‘திருமந்திர’த்தில் கூட இருக்கிறது; பஞ்சாக்ஷரமாகச் சொல்லவில்லை. “த்வயக்ஷரம் நாம கிரா” என்றால் ‘இரண்டே அக்ஷரமுள்ள நாமமான வார்த்தை’. இந்த வார்த்தையானது மனிதர்களால் சொல்லப்பட்டால் (‘ந்ருணாம் ஈரிதம்’ – மநுஷ்யர்களால் சொல்லப்பட்டால்) .

ravi said…
எப்படிச் சொல்ல வேண்டும்?ஸ்நானம் பண்ணி, மடி பண்ணிக் கொண்டு, மூச்சை கீச்சை அடக்கி ரொம்பவும் நியமமாகச் சொல்ல வேண்டுமா?

ஊஹும், அதெல்லாம் வேண்டியதில்லை. ‘ஸக்ருத் ப்ரஸங்காத்‘ – ஏதோ ஒரு தடவை பேச்சுக்கு நடுப்பற, எத்தனையோ அரட்டை அடிக்கிறபோது …….

சிவனை நினைத்து, மனஸைச் செலுத்தி புத்தி பூர்வமாக, ‘அவன் பேர்’ என்று சொல்ல வேண்டியதுகூட இல்லை. அகஸ்மாத்தாக ஏதோ பேச்சுக்கு நடுப்பற அந்த இரண்டெழுத்து வந்துவிட்டால்கூடப் போதும்! “சிவப்பு” அரிசி வடாம்’ என்கிற மாதிரி எதையோ சொல்லிக் கொண்டு போகும்போது இந்த இரண்டெழுத்து வந்து விட்டால் கூடப் போதும் …

இவ்வாறு அது அகஸ்மாத்தாக ஒருதரம் சொல்லப்பட்டால்கூட என்ன பண்ணிவிடுகிறது?

அகம் ஆசு ஹந்தி

‘அகம்‘ – பாபத்தை;’ ஆசு‘ – உடனே, தத்க்ஷணமே; ‘ஹந்தி‘ – அழித்துவிடுகிறது.

பேச்சுக்கிடையே ஏதோ ஒரு தரம் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரத்தை அகஸ்மாத்தாகச் சொல்லிவிட்டாலும் அதுவே ஸமஸ்த பாபத்தையும் போக்கிவிடும்.

ஸத்தியங்களுக்கெல்லாம் மேலான ஸத்யமாக, ப்ராண த்யாக ஸமயத்திலே ஸாக்ஷாத் பரதேவதை சொன்னதாக சுகாசார்யாள் வாயினால் வந்திருக்கிற வாக்யம் இது.

‘சிவசிவ என்று சொல்லாதவன் தீவினையாளன்’ என்றால் துஷ்கர்மா பண்ணினவன், அதாவது பாபி என்று அர்த்தம். அப்படியானால், சிவ நாமா சொல்லிவிட்டால் பாபம் போய்விடும் என்றுதானே அர்த்தம்?

தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவோ பாபம் பண்ணி விட்டோம். அதுதான் மேலே போக முடியாதபடி பெரிசாகத் தடை செய்கிறது. சிவநாமா சொல்லி விட்டால் அந்தத் தடை போய்விடும் அப்புறம் மோக்ஷ பர்யந்தம் எல்லாம் ஸித்தியாகிவிடும்.

மற்ற மதஸ்தர்களில் சிலர், “உங்கள் மதத்தில் பாபத்தைப் பரிஹரிக்க வழி இல்லை. எங்களிடம் இருக்கிறது. கொஞ்சம் தீர்த்தம் தெளிக்கிறோம். பாபமெல்லாம் போய்விடும். ஆகையால் எங்களிடம் வாருங்கள்” என்கிறார்கள்.

நம் மதத்தில் பாப பரிஹாரத்துக்கு வழி சொல்லாதது மாதிரி இவர்கள் கூப்பிடுகிறார்கள். நமக்கும் ஒன்றும் மத விஷயம் தெரியாததால் இங்கேயிருந்து அங்கே போகிறவர்களும் இருக்கிறார்கள். வாஸ்தவத்திலோ, நம்முடைய மதத்தில் இத்தனை கர்மாநுஷ்டானம் விதித்திருப்பது பாபம் போகத்தான். “மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா” என்றுதான் எந்தக் கர்மாவுக்கும் முதலில் ஸங்கல்பம் பண்ணுகிறோம். ‘துரிதம்’ என்றால் பாபம்தான். பக்தி மார்க்கம் பாபத்தைப் போக்கத்தான். பக்தி முதிர்ந்து ப்ரபத்தி (சரணாகதி) ஆகும். பகவான் கீதையைப் பூர்த்தி பண்ணும்போது, “சரணாகதி பண்ணு. உன்னை ஸகல பாபங்களிலிருந்து விடுவித்து விடுகிறேன். ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்று ஸத்யம் பண்ணித் தந்திருக்கிறார். அவரை நம்பாமல் நாம் இன்னொருத்தரிடம் போக வேண்டியதில்லை.

தர்மம், ஞானம் எதுவானாலும் பாபத்தைப் போக்குவதே. தர்மேண பாபம் அபநுததி என்று (மஹா நாராயண) உபநிஷத்தே சொல்கிறது (79.7). அந்த உபநிஷத்திலுள்ள ஸூக்தங்களில் அநேகம் பாப நிவிருத்தியைத்தான் திரும்பத் திரும்ப ப்ரார்த்திக்கின்றன. “பாபிகளில் நீ மஹா பாபியானாலும் ஞான ஓடத்தினால் அந்தப் பாபத்தைக் கடந்து விடுவாய்” என்று கீதையில் (4.36) பகவான் சொல்கிறார்.

கர்மாநுஷ்டானம், தர்மாநுஷ்டானம், ப்ரபத்தி, ஞான ஸாதனை எல்லாவற்றையும்விடப் பரம ஸுலபமாக, நாம் தெரிந்தும் தெரியாமலும் ஜன்மாந்தரங்களாகப் பண்ணியுள்ள பாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கே பாகவதம் வழி சொல்லிவிட்டது. சிவ நாமோச்சாரணம்தான் அது.

அதனால் இனிமேல் “உங்கள் பாபத்தைக் கழுவி விடுகிறோம்” என்று நம்மைக் கூப்பிடுபவர்களிடம் “எங்களிடம் பாப பரிஹாரத்துக்கு இருக்கிறது போன்ற ஸுலபமான உபாயம் யாரிடமுமே இல்லை. அதனால் முதலில் நீங்கள் எங்களைக் கூப்பிடும் பாபத்தைப் பரிஹாரம் பண்ணிக்கொண்டுவிட்டு அப்புறம் வாருங்கள்” என்று சொல்லுவோம்!
ravi said…
ஹரே கிருஷ்ணா 🙏
1. ஆன்மீகத்தில் சிறந்தவரான யுதிஷ்டிர மஹாராஜா போரில் தன் எதிரி(கௌரவர்) களை கொன்ற பின் அந்த வெற்றியின் பலனை அனுபவிக்காமல் தன் சகோதரர்களுடன் இணைந்து எவ்வாறு பிரஜைகளை ஆண்டார் என்று சௌனக மஹரிஷி சூதகோசுவாமி இடம் வினவினார்.
2. அவரது ஆட்சியில் மேகங்கள் நன்கு மழை பொழிந்தன. நிலத்தில் விளைபொருட்கள் அதிகமாக உற்பத்தி ஆயின. பசுக்கள் சிறந்த முறையில் பராமரிக்க பட்டன. மனிதனுக்கு பலத்தை தரும் பாலை அதிகமாக உற்பத்தி செய்தன. ஆறுகள், சமுத்திரங்கள், முத்துக்கள் , விலையுயர்ந்த கற்கள் மலைகள் தாது பொருட்கள் காடுகள் மருந்து பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்தன. அரசருக்கு எதிரிகள் இல்லாத காரணத்தால் பிரஜைகளை நோய், மனக்கவலை மற்றும் இயற்கை சீற்றங்களால் (வெப்பம், குளிர்) பாதிக்கப் படாமல் சந்தோஷமாக வாழ்ந்தனர். பகவானின் பிரதிநிதியாக மஹாராஜா யுதிஷ்டரனின் ஆட்சி மிக சிறப்பாக இருந்தது.
பகவானின் கருணையால் தான் இவையெல்லாம் சாத்தியமாயின.
3. மனித சமுதாயத்தின் உண்மையான வளர்ச்சி நில உற்பத்தி மற்றும் பசுக்களின் பராமரிப்பில் தான் உள்ளது. மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை இயந்திரம் மூலம் உற்பத்தி செய்ய இயலாது.
ஹரே கிருஷ்ணா 🙏
ravi said…


*ரவி வெங்கட் ராமனின் அனுபவம் இது!*

சரணடைந்தோரை மிக ஆபத்தான கால கட்டங்களிலும் காப்பாத்துவா பெரியவா என்பது சத்ய வாக்கல்லவா?

ravi said…
சிறு வயது முதலே பெரியவாளிடம் அதீத பக்தி பூண்டவர். குடும்பம் மொத்தமுமே பெரியவாளின் பக்தியில் திளைத்தவர்கள். எந்த ஒரு காரியத்துக்கும் பெரியவா அனுமதியின்றி செய்ததில்லை இவர் குடும்பத்தினர்! இவர் மூத்த சகோதரரை இவர் தாயார் கருவுற்றிருக்கும் போது
பிரஸவத்தை எங்கே வைத்துக் கொள்வது என்பது முதற்கொண்டு அவர் ஆக்ஞையின்படி தான் அவர்கள் இறங்குவார்கள். அது போலவே நிறை மாத கர்ப்பிணியாக இவரைச் சுமந்திருந்த இவர் தாயார் இளையாத்தங்குடியில்
ravi said…
பெரியவா குடி கொண்ட வேளையில் எங்கு
பிரஸவத்தை வைத்துக் கொள்வது என்று கேட்க
திருச்சியில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவாயிற்றாம்.
இப்படிப்பட்ட அனுக்ரஹத்துடன் பிறந்தவர் ரவிசங்கர்
என்ற ரவி வெங்கட் ராமன்! பிலானியில் பொறியியல் படித்து முடித்து வந்த சமயம். 1984 ஆம் ஆண்டு படித்து முடித்து திருச்சி திரும்பினார். விடுமுறை முடிந்து பரீக்ஷை ரிஸல்ட் வந்தவுடன் மறுபடி பிலானிக்கு சான்றிதழ் களை வாங்கச் சென்றார். டெல்லி வரை சென்று அங்கிருந்து பிலானிக்கு பஸ்ஸில் சென்றபோது, ஆபத்தும் உடன் வருவதை அவர் உணரவில்லை. பக்கத்தில் இருந்த இவரது வயது ஒத்த இளைஞனிடம் பேசிக் கொண்டு வந்தார். பின் சீட்டில் இரண்டு வாலிபர்களும் இருந்தனர். அந்த சில மணி நேரத்தில் கள்ளம் கபடு இல்லாமல் தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அவர்களிடம் சொல்லி வந்தார்.

ravi said…
நடு வழியில் அந்த நண்பர்கள் இறங்கிவிட ரவி மட்டும் பிலானி சென்று தன் சர்டிஃபிகேட் எல்லாம் வாங்கிக் கொண்டு அன்றிரவு கல்லூரி விடுதியில் தங்கி மறுதினம் காலையில் டெல்லி செல்லும் பஸ்ஸுக்காகக்
காத்திருந்தார். காலேஜ் லீவானதால் அங்கு கூட்டம் இல்லை. திடீரென முதல் நாள் பார்த்த அதே நண்பர்கள் அங்கே வந்தனர். ரவிக்கு ஆச்சரியம்! வியப்புடன் அவர்களை விசாரித்ததற்கு மௌனமே பதில்!
திடீரென அவர்கள் நடவடிக்கை அச்சமூட்டுவதாக இருந்தது. ''நீ மரியாதையோடு எங்களுடன் வந்து விடு'' புத்திசாலித்தனமா ஏதாவது செய்தால் நாங்க சும்மா விடமாட்டோம் ஜாக்ரதை'' என்ற மிரட்டல்! முதலில் விளையாடுகிறார்கள் என்று நினைத்தவருக்கு பின் அது சீரியசான விஷயம் என்று தெரிந்து மிகவும் பயந்து போனார். முன்பின் தெரியாதவர்க ளிடம் நம்சமாசாரம் எல்லாம் சொல்லி இப்படி மாட்டிக் கொண்டோமே என்ற பயத்துடன் அவர்கள் சொல்படி நடப்பது தவிர வேறு வழியில்லை என அவர்களைப் பின் தொடர்ந்தார். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அவர்கள் ரவியையும் அதில் ஈடுபடுத்த வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். மிகவும் பயந்த நிலையிலும் மஹாபெரியவாளையே
நினைத்து வந்த அவருக்கு அவர் அருளால் ஓர் யோஜனை தோன்றியது! தன் குடும்பத்திற்கு ஒரு கடிதம் எழுதி அவர்களிடமே கொடுத்து போஸ்ட் செய்யச் சொன்னார். அவர்களும் இவருடைய நல்ல காலம், போகும் வழியில் அதனை போஸ்ட் செய்தனர். டெல்லியிலி ருந்து கடத்திக் கொண்டு ஒரு பஸ் ஏறி ரிஷிகேஷ் வந்தடைந்தனர்.
பயந்த நிலையிலும் பெரியவா ஸ்மரணையி லேயே இருந்தார் ரவி. அவர் ப்ரார்த்தனையைக் கண்ட அவர்கள் கேலி செய்தனர்.
அவர்களிடமிருந்து தப்ப நினைத்ததெல்லாம்
வீணாயின. சுமார் 1 1/2 நாட்கள் ஒன்றும் சாப்பிடாமல்
பயணித்தது பசியால் தாங்க முடியாமல் அவர்களிடமே ஏதாவது சாப்பிட வாங்கித் தருமாறு கேட்க வைத்தது. ரவியின் புண்யம்வீணாகவில்லை! அவர்கள் ரவியிடமே அவர் பணத்தைக்
கொடுத்து அவரையே ஏதாவது தமக்கும் சேர்த்து வாங்கி வருமாறு பணித்தார்கள்.
அது அவரது நல்ல காலம்! சாலை குறுகல்! சாலையைக் கடந்து எதிரே இருக்கும் கடையில் வாங்குவதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கலக்க மனத்துடன் பசி உடலை வருத்த கடையை நோக்கிச்செல்கையில் இன்பத்தேனாக தமிழ் மொழி காதில் விழுந்தது! திரும்பிப் பார்க்கையில் ஒரு மிலிடரி ட்ரக் .. அதிலிருந்த இரண்டு சிப்பாய்கள்தான் தமிழில் பேசினது! தான் கடத்திக் கொண்டுபோகப்படுவதை அவர்களிடம் விளக்கிச் சொன்னார் ரவி. பஸ் அந்தப் புறம்! நடுவில் ட்ரக் அதன் பின் கடை அதனால் ரவி பேசியது
அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அந்த ஜவான்கள் ரவியிடம் ''பஸ்ஸில் போய் உட்கார்'' என்று சொல்லவும் ரவிக்குப் பெருத்த ஏமாற்றம்! சரி வேறு வழியில்லை என நினைத்து பெரியவாளை
மனதில் த்யானித்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து விட்டார்!

ஆப்போது திடீரென் அந்த மிலிடரி ட்ரக் பஸ்ஸுக்கு முன்
வந்து வழி மறைத்து நின்றது! அந்த தமிழ் சோல்ஜர்களோடு இரண்டு பேர் வந்து பஸ்ஸை நிறுத்தி ''யார் உள்ளே டெர்ரரிஸ்ட் என்று கேட்க ரவி ஜாடையால் இவர்களைக் காண்பிக்க, அந்த மூவரும் அதிர்ச்சி அடைந்து ஓட ஆரம்பித்த னர்; ஜவான்கள் வழி மறைத்து அவர்களை சிறை பிடித்தனர். அவர்களில் ஒருவர் பெயர் முருகன். முருகனாக ஸ்வாமினாத னாக பெரியவாதான் அங்கு வந்து தன் பக்தரைக் காப்பாற்றினார் என்பதில் எள்ளளவு சந்தேகம் இல்லை! இதற்குள் இவரது பெற்றோருக்கு இவர் எழுதிய கடிதம் கிடைத்து பயத்துடன் பெரியவாளச் சரணடைந்தனர்.
அந்தக் கடிதத்தில் ''நான் இனி திரும்ப முடியாது.. என்ற வாசகம் அவர்களைக் கலங்கச் செய்து சரணாகதியாக ஓடி வந்திருக்கிறார்கள். பெரியவாளிடம் விஷயத்தைச்
சொன்ன போது, ''ரிஷிகேசில் நம் மடத்து ராஜகோபாலைத்
தேடச் சொல்'' என்ற உத்தரவு பிறந்தது! அது மட்டுமில்லாமல்
இவா ஊருக்குப் போகட்டும் என்ற கட்டளை வேறு! அன்று மதியம் உறவினர் வீட்டில் தங்கியபோது ரவி கிடைத்துவிட்டார் என்ற மங்களகரமான தகவல் கிடைத்தது. பெரியவா திருவாக்குப்படி ரவி ரிஷிகேஷிலிருந்தே
மீட்கப்பட்டார்! அதைத் தந்தி மூலம் இவர்களுக்கு
அறிவிக்கப்பட்டது!பெற்றோர்கள் கரங்கள் காஞ்சி நோக்கித் தன் கரங்களைக் குவித்தார் கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

ஹர ஹர சங்கர...
ஜய ஜய சங்கர...

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ravi said…
ஜோசியம் , ஜாதகம் கோள்கள் எங்கே எங்கே சஞ்சரிக்கின்றன ... இப்பொழுது நிலை என்ன ?

பெயர்ச்சி செய்வதால் என்ன பலன் ?

தினமும் நம் ராசி என்ன ...

இப்படி தினமும் அதிக நேரம் செலவிடாதவர்கள் யாருமே இருக்க முடியாது ...

கஷ்டம் வந்தால் முதலில் நாம் தேடுவது பரிகாரங்கள் ....

நம் இயலாமையை பணமாக்கி கொள்பவர்கள் பலர்

அட்டம சனி ... எமனுக்கு பயப்படாதவர்கள் கூட இந்த வார்த்தையை கேட்டு குளிர் ஜுரம் கண்டு ஜன்னி வந்து அவதி படத் தவறாதவர்கள் ...

நம் நாட்டில் மட்டும் அல்ல உலகமே கோள்களில் நம்பிக்கை கொண்டவை ...

ஜூலியஸ் சீசர் ...

இவருடைய ஜோசியர் நண்பர்களை நம்பாதே கவனமாக இரு ...

இவர்களில் எவராவது உன் உயிர்க்கு முடிவு கட்டலாம் என்றார் ... சீசர் கேட்கவில்லை ...

அலெக்சாண்டர் பாபிலோனை வெல்ல நினைத்தார்

கை விட்டு விடும் படி அவர் ஜோசியர் சொல்கிறார் ...

ஆனால் விதி யாரை விட்டது ஆசை யாரை வாழ வைத்தது ...

மரணம் பாபிலோனில் அவரை தழுவியது

சகாதேவன் சிறந்த ஜோசியன் ..

எதிர்காலத்தை அருமையாய் கணிப்பவன் ...

பாரத யுத்தம் முடிந்த பின் சகாதேவன் தன்னிடம் இருந்த சாஸ்திரங்கள் ஜோசிய ஏடுகள் அனைத்தையும் தீயில் போட்டு எரித்தான் ..

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே ஏன் இப்படி செய்தாய்

எதிர்கால சந்ததியினர் உன்னை தூற்றுவார்களே என்றார்

சகாதேவன் ... கிருஷ்ணா என் ஏட்டு ச் சுவடிகள் விபர்த்தி சரியாக சொல்லாதவர்கள் கையில் மட்டிக்கொள்ளக் கூடாது ...

வேறு வினையே வேண்டாம்

*கிருஷ்ணா* !!

இவ்வளவு சாஸ்திரங்கள் நான் அறிந்திருந்தும் என்னால் சரியாக கணிக்க முடியவில்லை

கர்ணன் எங்கள் மூத்த தமையன் என்று ...

எனக்கு என்ன தகுதி இருக்கிறது எதிர்காலம் பற்றி இனி கணிக்க ...

சரியாக சொல்பவர்கள் கரங்களில் நம் ஜாதகம் கிடைத்தால் பரிகாரம் வேலை செய்யும்

இல்லை எனில் பாவங்கள் அதிகமாகும் ...

வாழ்வா சாவா என்பதை நிர்மானிக்கும் அளவிற்கு கோள்களுக்கு சக்தி உள்ளது ...

இவைகள் நம்மை துன்புறுத்தினால் என்ன செய்வது ?

எப்படி இவர்கள் பிடியில் இருந்து தப்பிப்பது ? ....🤔
ravi said…
கோள்களின் வீச்சைப் பார்த்தோம் சரி ஒருவேளை கோள்கள் நம்மை ஒன்றும் செய்யவில்லை என்று வைத்துக்
கொள்வோம் ... நாட்கள் ... ??

தினமும் ராகு காலம் எம கண்டம் வருகிறதே .. குழந்தை பெருவதையும் நவீன விஞ்சானதில் தள்ளி போட்டு நல்ல நேரத்தில் பிறக்க வைக்கிறோம் ..
ravi said…
இப்படி பல மூட நம்பிக்கைகள் நம் வாழ்வை நம்மையும் அறியாமல் ஏலம் போட்டு விற்று விடுகின்றன ...

எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்து ஈடு கொடுத்து நம் வாழ்க்கை மலரும் முன்னே கூம்பி விடுகிறது ..

பல நாட்களில் நாம் சிலவற்றை செய்யக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது . அதே சாஸ்திரம் சில நாட்களில் பலவற்றை செய்யக்கூடாது என்றும் சொல்கிறது ...

நாட்கள் என்ன செய்யும் ... பார்ப்போம்
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 489* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*208 माहेश्वरी -மாஹேஸ்வரீ -*

மஹேஸ்வரனோடு இணைந்த அம்பாள் தான் மஹேஸ்வரி.

பாகம் பிரியாள் . அர்த்த நாரி.
ravi said…
[17/02, 13:59] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 86*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
[17/02, 14:06] Jayaraman Ravilumar: ल क्ष्योऽस्मि कामपीठीलासिकया घनकृपाम्बुराशिकया ।

श्रतियुवतिकुन्तलीमणिमालिकया तुहिनशैलबालिकया ॥ ७१॥

71. Lakshyosmi kama peeti lasikaya gana krupambu rasikayaa,

Sruthi yuvathi kunthalee mani malikaya thuhina saila balikaya.

லக்ஷ்யோ‌ஸ்மி காமபீடீலாஸிகயா கனக்றுபாம்புராஶிகயா |

ஶ்ருதியுவதிகுன்தலீமணிமாலிகயா துஹினஶைலபாலிகயா ||71||
ravi said…
லாசிகா என்றால் நர்த்தகி. காமாக்ஷி காமபீடத்தில் ஆனந்தமாக நர்த்தனமாடுபவள்.

சகல வேதங்களுக்கும் ஆதார பூர்வமான விளக்கம் அவளே.

வியாக்யானமும் அவளே.

கருணா சமுத்ரம் அவள்.

வேதங்களை எல்லாம் யுவதிகளாக கற்பனை செய்துகொண்டு அந்த ஸ்த்ரீகள் அலை அலையான அழகிய கூந்தலில் அணிந்துள்ள நவமணிகளை மாலையாக தொடுத்தால்,

அது தான் அம்பாள். ஸ்த்ரீகளாகச் சொன்ன அனைத்து வேதங்களும் அம்பாளின் திருப்பாதத்தில் விழுந்து நமஸ்கரிக்கும்போது, அம்பாளின் திருவடிகளில் அணிந்துள்ள சிவப்பு செம்பஞ்சு குழம்பு அந்த ஸ்த்ரீகள் சிரசில் நெற்றி நடுவே, வகிட்டில் பட்டு அது '' *சீமந்த* *சிந்தூர* '' மாக காட்சி அளிக்கிறது.

அப்படிப்பட்ட அம்பாளின் பக்தனாக அவள் அருள் வேண்டி நான் அவளை நமஸ்கரிக்கிறேன்.
ravi said…
முனிவன் மூர்த்தி மூவராகி* வேதம் விரித்துரைத்த புனிதன்*

பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர்கோன்*

தனியன் சேயன் தானொருவனாகிலும்* தன்னடியார்க்கு இனியன் *

எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே.

திருமங்கை மன்னன் (பெரிய திருமொழி)
ravi said…
எல்லா உலகங்களையும் படைத்துக் காக்கும் இறைவனும்

நான்முகனையும், சிவனையும் சேர்த்து மூவர் ஆனவனும்

நான்மறைகளை விளங்க உரைத்த தூயவனும

காயாம்பூ நிறம் கொண்ட, சர்வலோக ரட்சகனும்

தர்மத்தின் நாயகனும், வானோர் தலைவனும்

ஆதி அந்தம் இல்லாதவனும்,

தான் ஒருவன் மட்டுமே மிகத் தொலைவில் இருப்பவனும்

தன் அடியவர்களுக்கு (தனது எளிமை குணத்தினால்) இனியவனும்


என் அப்பனும், என் பெருமானும் ஆன திருமால்

திரு எவ்வுள்ளில் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் ஆட்சி புரிகிறான்!
ravi said…
*❖ 116 பத்ரமூர்த்தி =*

வளம் செழிக்கும் நற்பேறுகளின் உருவகமானவள்

பக்த = பக்தர்கள் சௌபாக்ய = வளம் தாயின் = கொடுப்பவள்
ravi said…
மூர்த்தி உன் உருவம் காணப்பெற்றேன் ...

மூவுலகும் வெல்லும் சக்தி பெற்றேன் ...

மூவேந்தர் வந்து வணங்க கண்டேன்

மூவரும் யாவரும் வந்து தொழக்கண்டேன்

மும்மூர்த்திகள் நின்றே அருள் பொழியக்கண்டேன்

இனி என்ன வேண்டும் என்றே கேள்வி கேட்டேன் உள்ளே ஒரு சப்தம் ஒங்காரமாய் எழக்கண்டேன்

அன்னை அவள் கடைக்கண் எப்பவும் என் மேல் படவேண்டும்

அவள் எக்காலமும் தன் திருவடிகள் தனை என் சென்னியில் பதித்தே இருக்க வேண்டும்

எங்கும் சுற்றாமல் என் உள்ளமதில் வாசம் செய்ய வேண்டும்

என் சுவாசம் நின்று போனால் அங்கே அங்கே அவள் சுவாசம் மலர வேண்டும் ..

மண்ணில் மறைந்தாலும் அவள் நாமம் என் நெஞ்சில் மறையாத வரம் வேண்டும்

மீண்டும் பிறந்தால் அவளை எந்நாளும் நினைக்க வேண்டும்

அவள் நினைவு ஒன்றே என்னுள் வாசம் புரிய வேண்டும் ...

எழுந்த ஓங்காரம் *ததாஸ்து* என்றது ...

தரணி தனில் தர்மம் செழித்தது 🪷🪷🪷🪷👏
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

73 –
பொடியான் மயக்கி என் போதத்தைப் பறித்து உன்
போதத்தைக் காட்டினை அருணாசலா (அ)
1 – 200 of 408 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை