ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 40 *மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா* - பதிவு 47

 *40*  माणिक्यमकुटाकारजानुद्वयविराजिता -  *மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா* -




இரு முழங்காலும் மாணிக்கத்தாலான மகுடம் போல் ஜொலிக்கப்பபெறுபவள் 


அம்பாளின் தேஹ லாவண்யம் எவ்வளவு நேர்த்தி என்று சொல்கிறது இந்த நாமம்.

ஜானு = முழங்கால் 

த்வய = இரண்டு , இருமை 

விராஜிதா = எழிலுடன் விளங்குதல் 
               ============================================================

Comments

ravi said…
🌹🌺 A simple story that illustrates Eason's favorite motto - "Service to the people is service to the people" 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺Apputhiyadigal, a devotee of Shiva, lived in Tingalore. His wife was Arulmozhi.*

🌺They have two children.*
Abudiyadis, who were also devotees of Shiva, named their children after Shiva's servant Tirunavukarasar.*

🌺For Elder,*
'Senior Thirunavukarasu'*
For the youngest,*
Ilaya Thirunavukarasu'*
God prefers charity to his servants than to himself.*

🌺 “People's service is the service of the people”*
was Eason's favorite motto.
He set up a school, an Annasatram, and a water pavilion.*

🌺This family, which emphasizes service to people, is present in the form of idols in Tingalore Kailasanathar Temple. In no other temple can you find senior and junior Thirunavukarasars.*

🌺 In this the senior Thirunavukkara was bitten by a snake.*
History has it that Tirunavukarasar saved the child…*

🌺 Let's praise and worship Arulmiku Tingalur Kailasanathar Thiruvadi ..!!* Let's reach Veeduperu

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -10.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-83

மூலம்:

உண்டுறங்கி மாயும் உலகத்தார் போலுனக்காம்
தொண்டுபுரி வேனும் தொலையாமல் – தண்டுபுனை
கையா! பழனிக் கருணா கரா? பகராய்!
ஐயான னற்குரைத்த தை (83).

பதப்பிரிவு:

உண்டு உறங்கி மாயும் உலகத்தார் போல் உனக்காம்
தொண்டு புரிவேனும் தொலையாமல் – தண்டு புனை
கையா! பழனிக் கருணாகரா!! பகராய்!
ஐஆனனற்கு உரைத்ததை!! (83).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

ஐஆனனற்கு- ஐந்து முகப்பரமனுக்கு; ஆனனம்- முகம்;

தண்டு கையில் புனைந்து இந்த அகிலம் காக்கும் ஞான தண்டயுதபாணி சுவாமியே! கருணையே உருவான பழனிக் கருணாகரனே! உண்டு உறங்கி மாயும் இந்த உலகத்து மக்கள் போல், உன் வழி வழி அடிமை, உனக்கே தொண்டு புரிவேனான உன் தொண்டன், நானும் தொலைந்து விடாமல், என்னைக் காத்து, அருளி, ஐஆனனன் ஆன உன் தந்தை, ஐந்து முகப்பரமனுக்கு உரைத்த அந்த ஒப்பற்ற மொழியை எனக்கும் பகராய்!!! என்னைக் காத்து அருளாய்! பழனி ஐயா!

*தண்டாச்சிறப்பினள், தண்டுடை மாயவன், தண்டாயுதன் என பல்லோர் பணி பாணி என் பழனிவாழ் பால தண்டாயுதபாணி! சூரனின் தண்டழித்த கோதண்டன் மருகன்!தண்டற்று அவன் தொண்டாற்றினால் தண்டில்லாத் தண்டாச்சிறப்பு அளிப்பான் தண்டுடை பழனி ஞான தண்டாயுதபாணி!

*தண்டாச்சிறப்பினள்-சரசுவதி; தண்டாயுதன்-வயிரவன்; ஐயனார்; வீமன்;

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺" *மக்கள் சேவையே மகேசன் சேவை”என்பது ஈசனுக்கு பிடித்த பொன்மொழி என்பதை - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺அப்பூதியடிகள் என்ற சிவபக்தர் திங்களூரில் வசித்தார்.இவரது மனைவி அருள்மொழி.*

🌺இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.*
அப்பூதியடிகள் சிவ பக்தராயினும் கூட சிவனின் அடியவரான திருநாவுக்கரசரின் பெயரை தன் குழந்தைகளுக்கு வைத்தார்.*

🌺மூத்தவனுக்கு,*
’மூத்த திருநாவுக்கரசு’*
இளையவனுக்கு,*
இளைய திருநாவுக்கரசு’*
என்று தன்னை விட தன் அடியார்களுக்கு தொண்டு செய்வதையே தெய்வம் விரும்பும்.*

🌺“மக்கள் சேவையே மகேசன் சேவை”*
என்பது ஈசனுக்கு பிடித்த பொன்மொழி.அதைப் பின்பற்றி நாவுக்கரசரின் பெயரால் ,*
கல்விக்கூடம், அன்னசத்திரம், தண்ணீர் பந்தல்’ஆகியவை அமைத்தார்.*

🌺மக்கள் சேவையை வலியுறுத்தும் இந்த குடும்பத்தினர் சிலை வடிவில் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் உள்ளனர்.வேறு எந்தக் கோயிலிலும் மூத்த - இளைய திருநாவுக்கரசர்களைக் காண முடியாது.*

🌺இதில் மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டியது.*
திருநாவுக்கரசர் அக்குழந்தையைக் காப்பாற்றியதாக வரலாறு உள்ளது…*

🌺அருள்மிகு திங்களூர் கைலாசநாதர் திருவடிகளை போற்றி வணங்குவோம் ..!!* வீடுபேரு அடைவோம்

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*கட்டைவிரல் இதயத்தில் கடவுள்!*

பெருமாள் பக்தன் ஒருவன், தன் பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான். பெருமாள் சயனத்தில் இருந்தார். அருகில், லட்சுமி அமர்ந்து அவரது கமலமுகத்தை மகிழ்வுடன் நோக்கியபடியே, திருவடிகளை பிடித்து விட்டுக்கொண்டிருந் தாள்.பக்தன் பெருமாள் முன் நின்று சேவித்தான்.
பூலோகத்தில், அவன் செய்த நன்மைகளைப் பாராட்டிய பெருமாள், பூலோகத்தில் எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் நீ. வைகுண்டத்திலும் இன்பவாழ்வு நடத்து, என்றார்.

பக்தன் அவரிடம்,பெருமாளே! எனக்கு பூலோகத்தில் இன்பமான வாழ்வு கிடைத்தது உண்மை. ஆனால், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை என்ற குறையுடன் இங்கு வந்துவிட்டேன், என்றான்.
அப்படியா! வைகுண்ட பதவியே பெறுமளவு தகுதி பெற்ற உனக்கு குறையேதும் இருக்கக்கூடாதே, சொல்...சொல்.
.உடனே தீர்த்து விடுகிறேன், என்றார்.
ஐயனே! நான் உலகில் வாழ்ந்த காலத்தில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற சர்ச்சையையே மக்கள் மத்தியில் அதிகம் பார்த்தேன்.
பூலோகத்தில் கடல், மலை என்றெல்லாம் பெரிது பெரிதாக இருக்க, இந்த மக்கள் தாங்களே பெரியவர்கள் என்று புகழ்ந்து கொள்கிறார்களே! உண்மையைச் சொல்லுங்கள். பூலோகத்தில் உயர்ந்தவர் யார்? என்றான்.
பெருமாள் சிரித்தார்.
பக்தனே! மக்கள் சொல்வது போல கடலும், மலையும் பெரிது தானே! என்றார்.
சுவாமி! உங்கள் கருத்துக்கு என்னிடம் விடை இருக்கிறது.கடலையே வாரிக் குடித்து விட்டார் குள்ள முனிவரான அகத்தியர். புராணங்களில் இதைப் படித்திருக்கிறேன். கிரவுஞ்ச மலையையே தகர்த்திருக்கிறார் தங்கள் மருமகன் முருகப்பெருமான்.நிலைமை இப்படியிருக்க, இவற்றை எப்படி பெரிதென ஒத்துக் கொள்ள முடியும்! பூலோகத்தில் தானே இவையெல்லாம் நடந்தன. எனவே, பூலோகத்தில் பெரியவர் என்று யாருமில்லை.பகவனாகிய தாங்களே பெரியவர், என்றான்.
இல்லை...இல்லை... நீ சொல்வது சரியல்ல. உலகில் பெரியவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் உன்னைப் போன்ற பக்தர்கள் தான்! அவர்களில் யார் மிக மிக உயர்ந்த பக்தி செலுத்துகிறார்களோ, என்ன நடந்தாலும் கடவுளே கதியென இருக்கிறார்களோ, எவ்வளவு சோகம் வந்தாலும், எல்லாம் என்னால் வந்தது என நினைக்கிறார்களோ அவரே உயர்ந்தவர் என்று பதிலளித்தார் பெருமாள்.
எப்படி? என்று தன் சந்தேகத்தை வெளியிட்ட பக்தன், தாங்கள் சர்வ வியாபி.வாமன அவதாரம் எடுத்த போது, பூலோகத்தை தங்கள் சிறுபாதம் கொண்டு ஒரே அடியால் அளந்து விட்டீர்கள். விண்ணை ஓரடியால் அளந்து உலைகையே வசமாக்கிக் கொண்டீர்கள். அப்படியிருக்க நீங்கள் தானே உயர்ந்தவராக இருக்க முடியும்? என திருப்பிக்கேட்டான்.
உடனே பெருமாள் ஒரு தட்டொளியை (தேவலோகக் கண்ணாடி) எடுத்து வரச்சொன்னார். அதன் முன்னால், அந்த பக்தனை நிறுத்தச் சொன்னார்.பக்தனே! அந்தக் கண்ணாடியில் உன் மார்பைப் பார், என்றார். பக்தன் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
ஏனெனில், பகவான் அவனது மார்புக்குள் சிறுஅளவில் குறுகி நின்றார்.
பார்த்தாயா! உலகையே அளந்த என்னை, உன் பக்தியால் உன் கையளவு இதயத்துக்குள் கட்டைவிரல்வாக மாற்றி வைத்துக் கொண்டாயே! எனவே நீ தான் பெரியவன், என்றார்.
பக்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நாமும் இறைவனை நம் இதயத்துக்குள் நிறுத்துவோம். அவனருள் பெற்று பிறப்பற்ற நிலையை அடைவோம்.
ravi said…
பாதாரவிந்த சதகம் !

98.சிவே ஸம்வித்ரூபே சசிசகல சூடப்ரியதமே
சநைர் கத்யாகத்யா ஜித ஸுர வரேபே கிரி ஸுதே
யதந்தே ஸந்த: தே சரண நலினா லான யுகலே
ஸதா பத்தும் சித்தப்ரமத கரி யூதம் த்ருட தரம்

பேரறிவின் வடிவமே ! சந்திரனின் பிறையைச் சூடியவரின் மிக இனியவளே ! மலை மகளே ! தன் மெதுவான நடையின் போக்குவரத்தால் ஐராவதத்தை வென்றவளே! சிவே ! நல்லோர் உன் தாமரையை ஒத்த திருவடியாகிற கட்டுத்தரி இரண்டில் உள்ளமாகிற மதம்பிடித்தயானையை மிகவும் திடமாக எப்போதும் கட்டமுயன்று வருகின்றனர்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_


நம்மை போலவே மற்றவர்களையும் சமமாக நினைக்கும் நமக்கு தான்

நம்மை ஒதுக்கி
வைக்கும்
சில உறவுகளும்
கிடைத்து விடுகிறார்கள்...

*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*

🎀 mahavishnuinfo.org 🎀
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அவர் எந்த ரூபத்தில் இருந்தாலும்” என்று சொல்கிற போது ஆனை ரூபத்திலில்லாமல் ரொம்பவும் அபூர்வமாக மநுஷ்ய ரூபத்தில் ‘நரமுக கணபதி’ என்றே அவர் இருப்பது நினைவு வருகிறது. சிதம்பரம் தெற்கு வீதியில், தம்முடைய ப்ரஸித்தமான ஆனை முகத்தோடு இல்லாமல், மற்றவர்கள் சொல்லியோ எழுதி வைத்தோதான் ‘இவர் பிள்ளையார்’ என்ற தெரிந்து கொள்ளும்படி மநுஷ்ய மூஞ்சியோடு ‘நரமுக கணபதி’யாக இருக்கிறார். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோவிலிலும் நரமுக கணபதி உண்டு. இதிலே ஒரு வேடிக்கை: யானை முகமில்லாத ஒரு பிள்ளையார் உள்ள கோவிலானாலும் அந்தக் கோவில் ஸ்வாமியை [சிவபெருமானை]ப் பற்றி ஸம்பந்தர் பதிகம் பாடும்போது, ஸ்வாமியின் பல லக்ஷணங்களில் ஒவ்வொன்றையும் சொல்லி, ‘அந்த லக்ஷணத்தை உடையவனை’ என்பதற்கு ‘யானை’,’யானை’ என்றே சொல்லி முடித்திருப்பதுதான்! ‘நன்றுடையானை, உமையொரு பாகம் உடையானை, திருவுடையானை, சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே!’ என்று பாடியிருக்கிறார்!

ravi said…
விக்நேச்வரரின் அநேக ஆவிர்பாகங்களைக் குறித்த கதைகளில் ஒன்றின்படி அவருடைய ஒரிஜினல் ரூபம் நரரூபம்தான். அம்பாள் தன்னுடைய அந்தஃபுரத்திற்கு ஒரு காவலாள் ஸ்ருஷ்டிக்க வேண்டுமென்று நினைத்தாள். தன்னுடைய திவ்ய சரீரத்தையே வழித்து அதிலிருக்கிற மஞ்சள் பொடி, குங்குமம், வாஸனைப் பொடி முதலானதுகளைத் திரட்டிப் பிசைந்து ஒரு பாலனாக ரூபம் பண்ணி அதற்கு உயிரும் கொடுத்துக் காவலாக வைத்து விட்டாள். மநுஷ்யர் மாதிரி (தேவர் மாதிரியுந்தான்) கண், காது, மூக்கு, நாக்கு முதலானவை உள்ள ரூபமே அது. அதாவது நரமுக ரூபந்தான். பிள்ளையார் என்றே பெயர் பெறப்போகிற அந்தப் பிள்ளையை — தன் உடம்பிலிருந்து தானே வழித்துப் பெற்ற அருமைப் பிள்ளையை — அம்பாள் காவல் வைத்து விட்டு ஸ்நானத்துக்குப் போனாள்.

ravi said…
அம்பாள் ஸர்வ மங்களா, அவள் தன்னுடைய மங்கள சரீரத்திலிருந்து மங்கள வஸ்துவான மஞ்சள் பொடியை வழித்து மூலப் பிள்ளையாரை ஸ்ருஷ்டித்ததால் தான் இன்றைக்கும் எந்த சுபகாரியத்தின் ஆரம்பத்திலும் மஞ்சள் பொடியைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்துப் பூஜை செய்கிறோம். ‘மஞ்சள்’ என்பதே ‘மங்கள’ என்பதிலிருந்து வந்திருப்பதுதான். ‘இங்கே, அங்கே’ என்பதைச் சில பேர் ‘இஞ்சே, அஞ்சே’ என்று சொல்கிறார்களல்லவா? இலக்கணத் தமிழிலேயே ‘தூங்கல்’ என்பது ‘துஞ்சல்’ என்றும் வருகிறது. அப்படி, ‘மங்கள’ என்பதே ‘மஞ்சள்’ ஆகியிருக்கிறது. ஸம்ஸ்க்ருதத்தில் மங்களம் என்பதற்கு மஞ்சள் என்பதற்கு மஞ்சள் என்று ஒரு அர்த்தம்.

பரமேச்வரன் அந்தஃபுரத்திற்கு வந்தார். ‘இது யார்டா பத்னியின் அந்தஃபுரத்தில் புருஷப் பிரஜை?’ என்று அவருக்கு ஒரே கோபம் வந்து, ஒன்றும் தெரியாதவர் மாதிரி, அந்தப் பிள்ளையை சிரச்சேதம் பண்ணிவிட்டார். வாஸ்தவத்தில் எல்லாம் தெரிந்துந்தான் லோகோபகாரம் பண்ண வேண்டும், அதையும் விருவிருப்புள்ள நாடகமாகப் பண்ண வேண்டும் என்றே இப்படிச் செய்தார். என்ன லோகோபகாரமென்றால் – கஜமுகாஸுரன் என்ற யானைத்தலை அஸுரன் தன்னே அதே மாதிரி யானைத் தலை படைத்தவர்தான் வதம் செய்ய முடியுமென்றும், அதோடு அப்படி வதைக்கக்கூடிய சத்ரு ஸ்திரீ-புருஷ ஸம்பந்தத்தில் பிறக்காதவனாயிருக்க வேண்டுமென்றும் வரம் வாங்கி வைத்துக் கொண்டிருந்தான். அது ஒரு பக்கத்தில். இன்னொரு பக்கம், நாம் பார்த்த ஸம்பவம் நடந்த ஸமயம், கைலாஸத்திற்குப் பக்கத்தில் லோகத்திற்கு அமங்களம் உண்டாகும்படியாக ஒரு யானை வடக்கே தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தது. இந்த இரண்டையும் ‘கம்பைன்’ பண்ணித்தான் ஸ்வாமி நாடகமாடினார். அம்பாள் ஸ்ருஷ்டித்த அருமைக் குழந்தையைத் தாம் ஸம்ஹாரம் பண்ணியதற்காக அவளிடம் நன்றாக ‘டோஸ்’ வாங்கிக் கொண்டு ஸந்தோஷப்பட்டார். அப்புறம் வடக்கே தலை வைத்திருந்த யானையை சிரச்சேதம் பண்ணி, அந்த சிரஸைக் கொண்டு வந்த இந்தப் பிள்ளையின் முண்டத்தில் பொருத்தி, பிள்ளையாராக உயிர் கொள்ளும்படிச் செய்து அம்பாளை த்ருப்திபடுத்தினார். பிள்ளையார் மூலம் கஜமுகாஸுரன் வதமாகி லோக க்ஷேமம் உண்டாகும்படியும் செய்தார்.
(இன்று சங்கடஹரசதுர்த்தி)
ravi said…
*❖ 137 நிராகாரா =*

வெளிதோற்றத்திற்கு அப்பாற்பட்டவள் - அருவமானவள்🥇🥇🥇
ravi said…
எருவில் பிறந்தேன் உன் அருவில் வளர்ந்தேன் ..

என் கருவில் உன் உரு கண்டேன் ...

கருணை இரு கண்களாய் கண்டேன் ... ...

வெளி உலகம் எப்படியோ அம்மா

உள்ளிருக்கும் நாள் எல்லாம் உன் மடியில் உறங்கும் பாக்கியம்

வெளிக் காற்றில் கிட்டுமோ என்றே கேவி கேவி அழுதேன்

கேள்விக்கு விடை தந்தாய் .

விடையேறும் சடை அவன் நாமம் தினம் சொன்னால்

உள் இருக்கும் இன்பம் வெளியும் தெரியும் என்றாய் ...

வெளி வந்தேன் .. உள்ளிருந்த ஒளி இல்லை ...

வெளி இருந்த இருட்டினிலே வினை சூழ்ந்து வேடிக்கை காணக் கண்டேன்

வேடிக்கை உலகம் இது அம்மா ..

விழுந்தோரை கண்டே சிரிக்கும்

தாழ்ந்தோரை தரை மட்டம் ஆக்கும் ..

பொருள் கொண்டோரை பேதலிக்க வைக்கும் ..

படித்தோரை அகம் வளர்க்க செய்யும் .

பலம் கொண்டோரை மடி பிச்சை ஏந்த வைக்கும் ...

கோயில்களை இடிக்க வைக்கும்

குணம் கொண்டோரை பணம் தந்து மிரட்டும் ...

உனை அழைத்தோரை காட்டு மிராண்டி என்றே அழைக்கும் ...

உனை தினம் நினைப்போரை ஊரில் இருந்து ஒதுக்கி வைக்கும்

கருவறை மீண்டும் வந்தே கண் மூட வேண்டும் .

வெளி வரா வரம் வேண்டும்

வேண்டும் மட்டும் உன் மடி தனில் இமை மூட வேண்டும் ...

தாயே உன் தாலாட்டு கேட்க வேண்டும் .

உன் தமிழால் என் பாராட்டு கேட்க வேண்டும் ...

உன் தாம்பூலம் தனில் வெற்றிலையாய் பிறவி வேண்டும் ..

இது போதும் தாயே ... இனி என் கேட்பேன் நானே !!💐💐💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

94 –
வரும்படி சொலிலை வந்து என்படிஅள
வருந்திடு உன் தலைவிதி அருணசலா (அ)
ravi said…
*அருணாசலா*

நீ வரும்படி அன்று சொன்னாய் ... வரும்படி அதிகம் பெற்றேன் ...

வருவாய் சொன்னபடி என்றே காத்திருந்தேன் ..

என் வருவாய் தடை இன்றி தந்தாய்

பெறுவாய் அதி வரம் என்றாய் ... பெற்றேன் உன் நாமம் ...

அது உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் அன்றோ

தருவாய் பெறுவார் பலர் என்றே நினைத்தேன் ...

கருவாய் பிறந்த உயிர் மறவாய் சொன்ன நாமம்

ஏழு பிறப்பாய் வந்த நாமம்

எளிதில் கிட்டுமோ அனைவர்க்கும் ...

எருவாய் போனாலும் எழுந்து நிற்க வைக்கும் நாமம் அன்றோ ... உன் நாமம் *அருணாசலா*

குருவாய் நீ வரில் குறை உண்டோ எவர்க்கும் *அருணாசலா*

எனை இனி ஆள்வது உன் உருவாய் வந்த ஒளி அன்றோ

அருவாய் தெரினும் ஹரியாய் ஹரனாய் அயனாய் காண்கிறேன்

உன் எழில் இன்றும் என்றும் *அருணாசலா*
ravi said…
*🌻🍁💐 பசும் பாலுக்கும் எருமைப்பாலுக்கும் உள்ள வித்தியாசம் நம்மில் பலருக்கும் புரியாது*

பெரும்பாலான மக்களுக்குத் எதுவுமே தெரியாது.

🐃 எருமை சேற்றை (சகதியை) விரும்புகிறது.

🐂 பசு தன் சாணத்தில் கூட உட்காருவதில்லை. பசு தூய்மையை மட்டுமே விரும்புகிறது.

🐃 எருமையை 2கிமீ தூரம் கொண்டு போய் விட்டு விட்டால். வீடு திரும்ப மாட்டார். நினைவு சக்தி பூஜ்ஜியம்.

🐂 நாம் ஒரு பசு மாட்டை 5 கி.மீ. தொலைவில் விட்டாலும், அது வீட்டிற்குத் தானாக திரும்பும்.

*பசும்பாலுக்கு நினைவாற்றல் சக்தி உண்டு.*

🐃 பத்து எருமை மாடுகளை கட்டி வைத்து விட்டு அதன் குழந்தைகளை விட்டு சென்றால் ஒரு குட்டி கூட தன் தாயை அடையாளம் கண்டு கொள்ளாது.

🐂 ஆனால் பசுவின் கன்று, சில நூறு மாடுகளுக்கு நடுவே தன் தாயை அடையாளம் காணும்.

🐃 பாலை கறக்கும் போது எருமை தன் பால் முழுவதையும் கொடுக்கிறது.

🐂 பசு தன் குட்டிக்காக சிறிது பாலை மறைக்கிறது. குட்டி குடிக்கும் போது தான் சேமித்து வைத்த பாலை வெளியிடுகிறது.

*பசுவின் பாலில் மென்மை உள்ளது*

🐃 எருமையால் வெயிலையோ, அதிகமான வெப்பத்தையோ தாங்க முடியாது.

🐂 பசு மே-ஜூன் சூரியனையும் தாங்கும்.

🐃 எருமை பெரியது மற்றும் சோம்பேறி மற்றும் விரைவாக கத்துவதில்லை. இதன் பால் கெட்டியானது மற்றும் ஜீரணிக்க கடினமாக உள்ளது. அதன் பாலை நாம் உட்கொள்ளும் போது நமக்கும் அதே சோம்பல் மற்றும் அஜீரணம் ஏற்படுகிறது. எருமை பால் கறக்கும் நேரத்தில் உரிமையாளரால் கன்று வளர்க்கப்படுகிறது.

🐂 பசுவின் கன்று தாயிடமிருந்து கன்று பிரிந்தால் அதைக் கையாள்வது மிகவும் கடினம். பால் கறக்கும் நேரத்தில் கன்றுக்குட்டியை கட்டுப்படுத்த முடியாது, அது தன் பங்கு பாலை தாயிடம் இருந்து குடித்து முடித்த பிறகும். அந்த அக்கறையும் மென்மையும் அதன் பாலில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

பசுவின் முதுகில் இருக்கும் "நரம்பு" வெயில் இருக்கும் போது விழித்துக் கொள்ளும். இந்த நரம்பு சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன் மற்றும் பிரபஞ்சத்திலிருந்து "காஸ்மிக் சக்தியை" உறிஞ்சுகிறது. அதனால் நோய்களை நீக்கும் சக்தி பசும்பாலுக்கு உண்டு. பிரபஞ்சத்தில் உள்ள எந்த உயிரினத்திற்கும் அத்தகைய சக்தி இல்லை.

உண்மையில், பசுவின் பால் உட்கொள்ளும் போது உங்கள் உடலை சூடாக்காது. எருமைப்பால் அடர்த்தியானது, உட்கொள்ளும் போது உடல் சூடாகிறது, மேலும் நமது உடலிலும் சர்க்கரை அதிகரிக்கிறது (ஜெர்சி பாலில் அதிகமாக உள்ளது) சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்லதல்ல.

ஆனால் பசுவின் பால் உட்கொள்ளும் போது அதற்கு நேர்மாறாக இருக்கும்.

எல்லாவற்றிலும் கொழுப்பைப் பார்க்கிறோம். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கொலஸ்ட்ராலை உண்டாக்குவதில்லை, அந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறோம் என்ற விளம்பரத்தின் ஆலோசனையைப் பின்பற்றுகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், நாம் பணம் கொடுத்து வீட்டிற்கு வாங்குகிறோம், எருமைப்பாலில் அதிக கொழுப்பு உள்ளது, இது கொலஸ்ட்ராலுக்கும் (கொழுப்பு உள்ளடக்கம்) காரணமாகும்.

🐃 எருமைப் பாலை அடுப்பில் வைத்து சிறிது சூடாக்கும் போது அதில் உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது சத்து ஆவியாகிவிடும்.

🐂 பசும்பாலை எத்தனை முறை காய்ச்சி குடித்தாலும் அதில் உள்ள ஊட்டச்சத்து குணங்கள் அழியாது.

🙏 அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
நாங்கள் உங்களை கவனித்துக் கொள்கிறோம் - பசு..!❤️
ravi said…
[10/03, 13:47] Jayaraman Ravilumar: 💐💐💐

*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 509* 🙏🙏🙏started on 7th Oct 2021

*225 வது திருநாமம்*
[10/03, 13:47] Jayaraman Ravilumar: *225 * महायोगेश्वरेश्वरी - மஹாயோகேஸ்வரேஸ்வரீ* -

எல்லா யோகங்களும் கை வரப் பெற்ற மஹா யோகிகளும் வணங்கி போற்றும் யோகிகளுக்குக் கெல்லாம் யோகியாகிய யோக ஈஸ்வரி ஸ்ரீ லலிதை என்கிறார் ஹயக்ரீவர்..🥇🥇🥇
ravi said…
[10/03, 13:43] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 104*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

*92*
[10/03, 13:44] Jayaraman Ravilumar: विमलपटी कमलकुटी पुस्तकरुद्राक्षशस्तहस्तपुटी ।

कामाक्षि पक्ष्मलाक्षी कलितविपञ्ची विभासि वैरिञ्ची ॥92॥

92. Vimala pati Kamala kuti pusthaka rudraksha Sastha hastha puttee,

Kamakshi pakshmalaakshi kalitha vipanchi Vibhasi Vairinchi.

விமலபடீ கமலகுடீ புஸ்தகருத்ராக்ஷஶஸ்தஹஸ்தபுடீ |

காமாக்ஷி பக்ஷ்மலாக்ஷீ கலிதவிபஞ்சீ விபாஸி வைரிஞ்சீ ||92||
ravi said…
அன்னை காமாக்ஷி இந்த ஸ்லோகத்தில் சாராதாம்பாளாக காட்சி தருகிறாள்.

வெண்ணிற ஆடை, தாமரைப்புஷ்பங்களிடையே வாசம் செய்பவள், கரத்தில் புத்தகம், ருத்ராக்ஷ மாலைகள், வீணையைக் கையிலேந்தியவாறு, அழகிய கண்களில் தயை நிரம்ப முக்குணங்களையும் தாண்டியவளாக, சரஸ்வதி தேவி போல் அல்லவா காண்கிறாள்?🥇
ravi said…
*ராமா*

இந்த பூமாவில் ஆமாம் சொல்லி வாழ்வோர் பலர் ...

*ராமா* என்று உரைப்பதில்லையே

கமா கொண்ட வாழ்க்கை முற்றுப் புள்ளி அடையும் முன்னே

முணுகுவோர் *ராமா* என்றே யாரும் இல்லையே

நாமா தேன் என்றே தெரிந்தும் பருகுவோர் யாரும் வரக்கானேனே

சும்மா போகும் வாழ்க்கை தனில்

சுமை இறக்கி வைப்போர் எவரும் இல்லையே ..

அம்மா அப்பா என்று அழைப்பதும்

*ராமா* என்றே சொல்வதும் இணை என்றே யாரும் இன்னும் உணரவில்லையே

கோமாவில் வாழ்கிறோம் கோலாலம் புரிகிறோம்

தண்டம் எனப்போகும் வாழ்க்கையில் கோதண்டம் நினைவு வாராதோ ... 🥇🥇🥇
ravi said…
✡️��️✡️��️✡️��️��️✡️��️��
*"தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? எதை கேட்க வேண்டும்?"*

*ஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார்.*

பொதுவாக, நாம் "பக்தியோடு" எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார்.

கேட்பதில் உயர்ந்த விஷயங்கள் உண்டு,
கேட்பதில் மிகவும் சாதாரண விஷயங்கள் உண்டு.

பிரார்த்தனை செய்தேன்,
நோய் சரியாகி விட்டது,
பிரார்த்தனை செய்தேன்,
செல்வம் கிடைத்து விட்டது,
பிரார்த்தனை செய்தேன்,
வேலை கிடைத்து விட்டது,

என்று சந்தோஷப்படுவது எல்லாம், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.

ravi said…
✡️🕉️✡️🕉️✡️🕉️🕉️✡️🕉️🔯
*"தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? எதை கேட்க வேண்டும்?"*

*ஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார்.*

பொதுவாக, நாம் "பக்தியோடு" எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார்.

கேட்பதில் உயர்ந்த விஷயங்கள் உண்டு,
கேட்பதில் மிகவும் சாதாரண விஷயங்கள் உண்டு.

ravi said…
பிரார்த்தனை செய்தேன்,
நோய் சரியாகி விட்டது,
பிரார்த்தனை செய்தேன்,
செல்வம் கிடைத்து விட்டது,
பிரார்த்தனை செய்தேன்,
வேலை கிடைத்து விட்டது,

என்று சந்தோஷப்படுவது எல்லாம், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.

முக்கியமாக,

ravi said…
"நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?" என்று வேதம் சொல்கிறது என்று எளிதான ஸ்லோகங்கள் மூலம் நமக்கு தர்மத்தை புரியவைத்தார்.

தெய்வத்திடம் அநேகமானவர்கள் பொதுவாக கேட்பது,
"எனக்கு வேலை கிடைக்க வேண்டும்,
எனக்கு குழந்தைகள் இல்லை குழந்தை வேண்டும்,
ப்ரோமோஷன் வேண்டும்,
நோய் தீரனும்,
என் பையனுக்கு, பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும்"
என்று கேட்டு கொண்டிருப்பார்கள்.

*ஆதி சங்கரர் 'இதையெல்லாம் போய் பகவானிடம் கேட்காதே'என்று சொல்லி, "நீ கேட்க வேண்டியது என்று சில உள்ளது,*

ravi said…
உன் முயற்சியால் கூட அடைய முடியாததை பகவானிடம் கேள்" என்று சொல்லி கொடுக்கிறார்.

நம் புராதன வேதம், நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?

என்று சொல்லி இருக்கிறது என்ற ஆதி சங்கரர் விளக்குகிறார்.

*1. கர்வம்*
தெய்வத்திடம் நாம் முதலில் கேட்க வேண்டியது,
"பகவானே !! முதலில் 'நான் செய்கிறேன்' என்ற என் கர்வத்தை (அஹங்காரம்) என்னிடம் இருந்து விலக்கி விடுங்கள்"
என்று கேட்கவேண்டும்.

நமக்கு முக்கியமாக தேவையானது - விநயம் (அடக்கம்).

இந்த விநயம் (அடக்கம்) நமக்கு வராமல் இருப்பதற்கு காரணம், நம்மிடம் "நான் செய்கிறேன்"என்று இருக்கும் கர்வமே காரணம்.

அனைத்தையும் படைத்த பகவானிடம், நாம் போய் "என் கஷ்டம், என் துக்கம், என் வேலை" என்று நான், என்னுடைய என்று சொல்வதே 'நம் கர்வத்தை' காட்டுவதாகும்.

"எல்லாம் தெரிந்தவருக்கு உன் துக்கம், நோய் தெரியாதா? சொல்லித்தான் அவருக்கு தெரியுமா?



ravi said…
*2. ஆசை*
நாம் செய்யவேண்டிய *இரண்டாவது பிரார்த்தனை,*
'பகவானே! என்னுடைய மனதில் இன்றுவரை நிறைய ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது.

அந்த ஆசைகளை வராமல் செய்து விடு"
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நமக்கு மனதில் எத்தனைக்கு எத்தனை ஆசைகள் உருவாகி கொண்டே இருக்கிறதோ, அந்த ஆசையினால் துக்கங்கள் உண்டாகிறது.

ravi said…
ஒரு ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, இன்னொரு ஆசை மனதில் உண்டாகிறது.

அந்த ஆசையை நிறைவேற்ற முயன்றால்,

அது பலிக்கும் போது, மற்றொரு ஆசை மனதில் உண்டாகிறது.

��முடிவே இல்லாத ஆசைகள், திருப்தி இல்லாதவனுக்கு வந்து கொண்டே இருக்கும்.

திருப்தி இல்லாததால் துக்கம் உண்டாகும்.
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 105*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

*93*
ravi said…
कुङ्कुमरुचिपिङ्गमसृक्पङ्किलमुण्डालिमण्डितं मातः ।

श्रीकामाक्षि तदीयसङ्गमकलामन्दीभवत्कौतुकः
जयति तव रूपधेयं जपपटपुस्तकवराभयकराब्जम् ॥93॥

93. Kunkuma ruche pingam asruk pangila mundaali manditham maathaa,

Jayathi thava roopadheyam japa patas pusthaka varaa abhaya karabhjam.

குங்குமருசிபிங்கமஸ்றுக்பங்கிலமுண்டாலிமண்டிதம் மாதஃ |

ஶ்ரீகாமாக்ஷி ததீயஸங்கமகலாமன்தீபவத்கௌதுகஃ
ஜயதி தவ ரூபதேயம் ஜபபடபுஸ்தகவராபயகராப்ஜம் ||93||
ravi said…
சரஸ்வதியாக சாந்தஸ்வரூபியாங்க இருந்த அம்பாளை வேறு அலங்காரத்தில் எவ்வளவு அழகா காட்டுகிறாள்.

இதில் அவள் திரிபுரா அம்சமாகி விட்டாள். குங்குமத்தை விட சிவந்த தேஹகாந்தி. ரத்தம் சொட்டும் வெட்டப்பட்ட தலைகளை மாலையாக கொண்டவள்.

கரங்களில், ஜபமாலை, புஸ்தகம், ஒரு கரம் அபய ஹஸ்தம், மற்றொன்று வரத ஹஸ்தம் என்று எல்லாம் வல்லவளாக அருள் பாலிக்கிறாள்.
ravi said…
💐💐💐

*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 510* 🙏🙏🙏started on 7th Oct 2021

*226 வது திருநாமம்*
ravi said…
*226 * महातन्त्रा - மஹாதந்த்ரா -*


பூரணமாக தந்த்ர சாஸ்திரங்களின் வெளிப்பாடானவள். வழிபடப்படுபவள் ஸ்ரீ லலிதை.
ravi said…
*ராமா*

நிலைத்த புகழைக் கொண்ட கோசலையின் பெருமை மிக்க வயிற்றில் வாய்த்தவனே!

தென்னிலங்கை அரசனின் மகுடங்கள் தரையில் சிந்தும் படி செய்தவனே!

செம்பொன்னால் அமைக்கப்பட்டு யாராலும் (எந்தப் பகைவராலும்) தொடப்படாத கன்னிநன்மா மதில் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கரிய மாணிக்கமே!

என்னுடைய இனிய அமுதமே!

இராகவனே! தாலேலோ!

தாமரை மலர் மேல் அமர்ந்து இந்த உலகை எல்லாம் பிரமன் உருவில் படைத்தவனே!

மிகுந்த வலிமை கொண்ட தாடகையின் வலிமை எல்லாம் அழியும் படி வில்லை வளைத்தவனே!

உன்னைப் பார்த்தவர் எல்லாம் தங்கள் மனத்தை உன்னிடம் வழங்கும் படி பேரழகுடைய, திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே!

எட்டு திசைகளையும் ஆளும் வல்லமையுடையாய்! இராகவனே!

தாலேலோ!
ravi said…
ஆகுலா = உளக்குழப்பம் - பதட்டம்

*❖ 138 நிராகுலா =* ஆர்பாட்டமற்றவள் - தெளிந்தவள்
ravi said…
பயம் என்ற உடல் எடுத்தேன்

பதட்டம் எனும் ஆடை அணிந்தேன் ..

துயரம் எனும் உறவுகள் சூழக்கண்டேன் ...

ஊழ்வினை எனும் நண்பர்கள் ஓடி வந்து அணைக்கக் கண்டேன் ...

தொட்டதெல்லாம் துன்பங்கள்

விட்டதெல்லாம் உன் நாமங்கள்

சுட்டதெல்லாம் என் ஊழ்வினைகள்

தொடர்வதெல்லாம் என் பிறவிகள்

எட்டியதெல்லாம் நீர்க்குமிழிகள்

எண்ணியதெல்லாம் அசுத்தம் நிறைந்த எண்ணங்கள்

இருப்பதெல்லாம் நிரந்தரம் என்றே அந்தரம் உனை தொழ மறந்தேன்

அந்த ரங்கன் தங்கை நீ

என் அந்தரங்கம் நீ அறிவாய்

அந்தரி சுந்தரி அறிய வைத்தாய் உன் நாமங்கள் பெருமை தனை

சந்தரி மந்திரி சரண் புகுந்தேன்

வீணை என நீ இருந்தால் அதை மீட்க்கும் விரலாய் எனை செய்வாயோ ... ?

பாயு மொளி நீயானால், பார்க்கும் விழி நானாக மாட்டேனோ,?

தோயும் மது நீ யாய் இருந்தால், அதை வணங்கும் தும்பியாய் நான் ஆக மாட்டேனோ ?

வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;

தூயசுடர் வானொளியே!

சூறையமுதே!

என் கண்ணம்மா ..

கண்ணில் உனை வைத்தே

இமை மூடாமல் இம்மியும் நகராமல்

சேவை செய்ய அருள்வாயோ ... சேர்த்த வினைகள் அழிப்பாயோ ? 💐💐💐💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

95 –
வாவென்று அகம் புக்கு உன் வாழ்வு அருள் அன்றே

என் வாழ்வு இழந்தேன் அருள் அருணசலா (அ)
ravi said…
*Meaning*

The day *You* called me to come , then entering my heart You blessed me to live , I lost my illusionary life *Arunachala*
ravi said…
*அருணாசலா*

நீ சம்ஹார மூர்த்தி என்போர் பலர் உண்டு ..

எதையும் அழிப்பாய் என்ற பயம் உண்டு ..

கொடுக்க உன்னிடம் எதுவுமில்லை என்ற உணர்வுண்டு ..

உன் கோயில் பொருள் எதுவும் எடுத்துச் சென்றால் அழிவுண்டு
என்றே அகம் நினைப்பதுண்டு

பாம்பும் புலித்தோலும் மண்டை ஓடுகளும் பட்டை விபூதியும் பயமுறுத்துவது உண்டு ...

உன் தவம் கொஞ்சம் களைந்து விட்டால் தண்டிப்பவன் நீ என்றே மதன் சொல்லி கேட்டதுண்டு

நீ தவறு என்றே சொன்னால் மூன்றாம் கண் திறக்க வழியுண்டு

சொல்லுவோர் பலர் இருக்க

உன் மறுபுறம் எனை பார்க்க வைத்தாய் *அருணாசலா*

மாசில் வீணை நீ மாலை மதியம் நீ

வீசும் தென்றல் நீ
வீங்கிள வேனியும் நீ

மூசு வண்டறை பொய்கை நீ

தவறு என்று உணர்ந்து சரண் புகுந்தால் சிரம் தனில் வைத்து கொண்டாடுபவன் நீ

விடம் முறிப்பவன் நீ எதிர்வினைகள் வந்தால் புலி போல் பாய்ந்து கொல்பவன் நீ

ஆசை அழிப்பவன் நீ அருள் வெள்ளம் நீ ...

உண்மை நீ உத்தமன் நீ உயர்ந்தோன் நீ ...

முடி சார்ந்த மன்னரும் இறுதியில் பிடி சாம்பல் ஆவார் என்றே உணர வைப்பவன் நீ ...

எரியும் தீதனில் உன் நாமம் சொல்ல இனிப்போய் நீ ...

வீபுதி அணிவோர் அனுபூதி கொண்டோர் என்றே உயர்த்துபவன் நீ ...

பொன்னும் நீ பொருளும் நீ

புரிதல் நீ சரிதல் ஏதும் வாரா காப்பவன் நீ ..

காயிலான் கடை சாமான் எனைப் பெற்று உனை தந்தாய் நீயே ...

உன் போல் தெய்வம் உலகில் உண்டோ *அருணாசலா* ?

உணர்ந்தோர் பெரியோர் ...

உள்ளம் உனை நிறைந்தோர் எதையும் அறிந்தோர்

உன் பொருள் எடுத்தால்

என் நாசம் அழியும் அன்றோ

குலம் கொண்ட நாசம்

கும்மி அடிக்கும் ஊழ்வினை

குடி மூழ்கும் பாவங்கள்

பஞ்சாய் பறக்கும் அன்றோ
பஞ்சாக்ஷரம் உரைப்போருக்கே💐💐💐💐👌👌👌
ravi said…
11.03.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 10)

Sanskrit Version:

तमुवाच हृषीकेशः प्रहसन्निव भारत।
सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः।।2.10।।

English Version:

tam uvaacha hrishikeshah:
prahasan iva Bharatha |
senayoruBhayormadhye
vishidantam idam vachah ||

Shloka Meaning

O King Dhritarashtra ! seeing Arjuna lamenting in the middle of the two armies,
Lord Krishna, as if laughing loud, spoke thus to him.

The man of knowledge is generally amused when he hears the talk of ignorant and observers
what they say and do. Arjuna was mired in sorrow and he did not understand the hidden laws of Dharma.
Krishna was all knowledge personified. Seeing the trials and tribulations of Arjuna brought a smile to Krishna."
ravi said…
https://chat.whatsapp.com/CUqqRqLCK4BDxSqNWcy9ax

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீட்சை பற்றிய பதிவுகள் :*

தீ என்றால் அளித்தல் அல்லது கொடுத்தல் என்று பொருள். சை என்றால் அழித்தல் என்று பொருள். அதாவது ஞானத்தை அளித்து, அஞ்ஞானத்தை அழித்தல் தீட்சையாகும். தம் சீடனுடைய ஆன்மாவைச் சார்ந்த அழுக்குகளை நீக்கி, அவனுடைய ஆன்மாவைத் தூய்மைப்படுத்தவும், ஞானம் ஊட்டவும், வேண்டிக் குருவானவர் செய்யும் கிரியை தீட்சை எனப்படும். ஆன்மாவின் அழுக்குகளை அழிப்பதும், இறைமைத் தன்மையைக் கொடுத்தலும் தீட்சையின் பயன்களாகும்.

*
ravi said…
தீட்சையின் வகைகள் :*

தீட்சை ஆதார தீட்சை, நிராதார தீட்சை என இரு வகைப்படும். தீட்சை அளிக்கப்படும் முறைக்கேற்ப ஆதார தீட்சையானது நயனம், பரிசம், வாசகம், மானசம், சாத்திரம், யோகம், ஒளத்திரி என ஏழுவகைப்படும்.

*நயன தீட்சை :*

ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும்.

*பரிச தீட்சை :*

ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும்.

*வாசக தீட்சை :*

குரு மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற்கேற்றவாறும், பொருந்துமாறும் மாணவனுக்கு உபதேசிப்பது வாசக தீட்சை ஆகும். மாணிக்கவாசகருக்கு சிவபொருமான் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் உபதேசித்தமை வாசக தீட்சையாகும்.

*மானச தீட்சை :*

சீடன் ஒருவன் எங்கையோ இருந்து கொண்டு தன்னைத் தியானம் செய்யும் போது, அத்தியான சக்தி குருவை ரூடவ்ர்க்கச் செய்யும். அத்தகைய காலங்களில் குரு தான் இருந்த இடத்திலிருந்து அவனுக்கு மனத்தால் அருள்பாலிப்பது மானச தீட்சை எனப்படும்.

*சாத்திர தீட்சை :*

சீடனுடைய சந்தேகங்களை நீக்க வேண்டி சாத்திரங்களை அருளுதல் சாஸ்திர தீட்சை எனப்படும். அர்ஜுனன் சந்தேகங்களை தீர்க்க வேண்டி கண்ணன் அருளிய பகவத் கீதை சாஸ்திர தீட்சைக்கு உதாரணம்.

*யோக தீட்சை :*

ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். தன் சீடனுக்கு யோகப் பயிற்சிகளை அளித்து பிராணாயாம நுணுக்கங்களை கற்பித்து குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டி தீட்சை அளித்தல், சமாதி நிலைக்கு அவன் முன்னேறி வர உதவுதல் யோக தீட்சை எனப்படும்.

*ஒளத்திரி தீட்சை :*

ஆன்மாக்களாகிய உயிர்களை வீடுபேற்றை அமையும் பொருட்டு, சீடனை ஒரு வேள்விக் குண்டத்தின் முன் அமரவைத்து, சக்கரம் வரைந்து, அக்கினி வளர்த்து, அவனுக்கு ஞானம் ஊட்டுவது ஒளத்திரி தீட்சையாகும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
🌹🌺"🌺 *ஹரே... கிருஷ்ணா....மன்னிக்கவும் என சொல்லிப் பாருங்கள்* ....*
*எதிரில் புன்னகை தவழும்...* - *என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺*மன்னிப்பை அளித்துப் பாருங்கள்.....*
*மனபாரம் குறையும்...*

🌺மன்னிப்பை கேட்டுப் பாருங்கள்....*
*பகையெல்லாம் மறையும்...*
மன்னிப்பை அளந்து பாருங்கள்...*
*மனசு பூவாக மாறும்...*

🌺மன்னிப்பாக வாழ்ந்து பாருங்கள்.....*
*வசந்தம் தாலாட்டி போகும்...*
மன்னிப்பாரோடு இருந்து பாருங்கள்.....*
*குதூகலம் வந்து சேரும்...*

🌺மன்னிப்பை உணர்ந்து பாருங்கள்....*
*மனசெல்லாம் லேசாக தோணும்...*
மன்னிக்க முயன்று பாருங்கள்....*
*முயற்சியெல்லாம் வெற்றி தரும்...*

🌺ஹரே... கிருஷ்ணா....மன்னிக்கவும் என சொல்லிப் பாருங்கள்....*
*எதிரில் புன்னகை தவழும்...*

🌺மன்னியுங்கள் என உரைத்துப் பாருங்கள்....*
*எதிரில் கண்ணீர் வழிந்திடும்...*

🌺மன்னிப்பின் வழியைத் தேடி பாருங்கள்....*
*முட்டுக்கட்டைகள் முடங்கிப் போகும்...*

🌺மன்னித்து வாழ்ந்துப் பாருங்கள்.....*
*வந்த நோயும் கடந்து போகும்...*
மன்னிப்புடன் இணைந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை நம் உள்ளத்தில் பாருங்கள்....*நம் இதயம் களிப்படையும்....*🌹

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 A simple story that illustrates Eason's favorite motto - "Service to the people is service to the people" 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺Apputhiyadigal, a devotee of Shiva, lived in Tingalore. His wife was Arulmozhi.*

🌺They have two children.*
Abudiyadis, who were also devotees of Shiva, named their children after Shiva's servant Tirunavukarasar.*

🌺For Elder,*
'Senior Thirunavukarasu'*
For the youngest,*
Ilaya Thirunavukarasu'*
God prefers charity to his servants than to himself.*

🌺 “People's service is the service of the people”*
was Eason's favorite motto.
He set up a school, an Annasatram, and a water pavilion.*

🌺This family, which emphasizes service to people, is present in the form of idols in Tingalore Kailasanathar Temple. In no other temple can you find senior and junior Thirunavukarasars.*

🌺 In this the senior Thirunavukkara was bitten by a snake.*
History has it that Tirunavukarasar saved the child…*

🌺 Let's praise and worship Arulmiku Tingalur Kailasanathar Thiruvadi ..!!* Let's reach Veeduperu

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
[11/03, 07:27] +91 96209 96097: *தாமோதராய நமஹ*🙏🙏
அனைத்து பிரபஞ்சத்தையும் வயிற்றில் கொண்டவர்
[11/03, 07:27] +91 96209 96097: நாராயணீ *நாத³ரூபா* நாமரூபவிவர்ஜிதா🙏🙏
ஒங்கார வேத நாத ஸ்வரூபமாக விளங்குபவள்
ravi said…
The mystical powers of clothes of Sri Raghavendra swamy ji. Once some scholars wanted to meet Sri Raghavendra swamy ji.On the way they got lost and wanted to ask someone for directions. A washerman with a load of cloth was coming nearby. The Scholars discussed in Sanskrit language whether to ask this washerman or not with regard to the directions. The washerman on his own spoke to them in chaste Sanskrit language and gave them directions. The Scholars were really surprised. They walked in that direction and reached the riverbank ,they found the washerman sitting on a rock .They spoke to him in Sanskrit but he could not understand and gave them rude reply in local language. The scholars had seen the washerman talking to them in chaste Sanskrit some minutes ago but now he was responding differently as illiterate rude person .After some time near Mantralaya entrance they found the same washerman carrying a load of clothes on his head. Again on his own the washerman spoke to the scholars in chaste Sanskrit language with regard to meeting of Sri Raghavendra swamy ji. The scholars got scared and ran into the Math premises. They were thinking whether the washerman was possessed by any spirit . They met a knowledgeable man and informed him about the washerman. The knowledgeable man replied that when the washerman was carrying clothes of Sri Raghavendra swamy ji on his head the clothes spoke to them in chaste Sanskrit language. When the load of clothes were removed from his head it was just the washerman speaking to them. In this way the scholars understood the clothes of Sri Raghavendra swamy ji had mystic powers . Jai Sri Guru Raghavendra swamy ji. 🙏🙏
ravi said…
https://chat.whatsapp.com/CUqqRqLCK4BDxSqNWcy9ax

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகரின் திருநாமங்களும் அதன் விளக்கங்களும் பற்றிய பதிவுகள் :*

விநாயகர் வழிபாடு ஆதிமனித வழிபாட்டின் தொடர்ச்சி என்பதை குறிக்கும் வகையில் விநாயகர் பெயர்களில் ஒன்றான கணபதி திகழ்கிறது.

கணம் என்றால் தனித்தனி குழுவாக வாழ்ந்த ஆதிமனித வாழ்கையை குறிப்பதாகும். பதி என்றால் அரசன், தந்தை, பாதுகாப்பவன் என்பதை குறிப்பதாகும். ஆக கணங்களின் பதி என்றால் குழுத்தலைவன் என்பதை குறிக்கிறது. இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும் யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

திருநாமங்களும் அதன் விளக்கங்களும் :

கணேசன் -

உலக உயிர்களுக்கும், பிரம்மத்துக்கும் தலைவன்.

ஏகதந்தன் -

ஏக எனில் மாயை, தந்தன் எனில் மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று என்றும் ஒரு பொருள் உண்டு.

சிந்தாமணி -

சிந்தை - மனம்; மணி - பிரகாசம். பக்தர் தம் மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் செய்பவன்.

விநாயகன் -

வி - நிகரற்ற, நாயகன் - தலைவன். தனக்கு யாரும் நிகரில்லாத தலைவன்.

மயூரேசன் -

வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்தும், பக்தர்களை மாயை நெருங்காமலும் செய்பவன்.

லம்போதரன் -

உலகினையே உள்ளடக்கியிருப்பதால் பெரிதாகக் காணப்படும் வயிற்றினை உடையவன்.

கஜானனன் -

ஆணவம் எனும் யானையை அடக்கும் வல்லமை உள்ளவன், யானைமுகன்.

ரேம்பன் -

துன்பப்படுவோரைக் காத்து ரட்சிப்பவன்.

மாங்கல்யேசர் -

அழியக்கூடிய உலகில், தான் மட்டும் அழியாமலிருந்து அனைத்தையும் பரிபாலிப்பவர்.

சர்வ பூஜ்யர் -

எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக பூஜிக்கப்படகூடியவர். எல்லோராலும் வணங்கப்படுபவர்.

விக்னராஜன் -

தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் காப்பவர்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*12th March, 2023.*

இனிய ஞாயிறு காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய நல்வாழ்த்துகள். தாங்களும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று நோயின்றி வளமுடன் மனநிம்மதியுடன் நீண்டகாலம் வாழ எங்கள் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்.

பா வேணுகோபாலன் மற்றும் குடும்பத்தினர் திருவிடைமருதூர்.


Good Morning. *Have a Relaxed Sunday*. All Be blessed with good health, wealth and long life.

*नमस्ते जी।. चुभ रविवार ।*
सब लोग और परिवार अच्छी तरह रखने के लिए हम भगवान से प्रार्थना करेंगे।

🙏🙏🙏🙏🙏

बा। वेणुगोपालन। & परिवार।
तिरुविडैमरुदुर।

B.Venugopalan & Family, Thiruvidaimarudur.
ravi said…
[12/03, 07:24] +91 96209 96097: *சஹாய நமஹ*🙏🙏
பக்தர்க‌ள் கட்டிப் போட்டாலும் பொருத்துக் கொள்பவர்
[12/03, 07:24] +91 96209 96097: நாராயணீ நாத³ரூபா* *நாமரூபவிவர்ஜிதா*🙏🙏
நாம ரூப எல்லைகளுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள்
ravi said…
கல்வெட்டுகள்

கி. பி 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் விஜயநகரப் பேரரசு விரிஞ்சிபுரம் பகுதியினை ஆண்டு வந்தது. மணமகன் வீட்டில் இருப்பவர் மணமகள் வீட்டிற்கு பொன்னை வரதட்சணையாக வழங்கும் முறை இருந்து வந்தது. இத்தகைய முறையில் மாற்றம் வேண்டும் என எண்ணிய மணமகன் வீட்டாரினால் விஜயநகரப் பேரரசிடம் முறையிடப்பட்டது. கி. பி. 1426 ஆம் ஆண்டுக் கல்வெட்டின் படி 'பிராமணர்களில் கன்னடம், தெலுங்கு, தமிழ், இலாலர் முதலானோர் திருமணம் செய்யுமிடத்து கன்னிகா தானம் ஆக செய்திட வேண்டும். அப்படிச் செய்யாமல் பொன் வாங்கி பெண் கொடுப்பது, பொன் கொடுத்து திருமணம் செய்வது அரசத் துரோகம் ஆகும். மீறுவோர் சாதியிலிருந்து, சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவர்.' என விஜய நகரப் பேரரசினால் உத்தரவிடப்பட்டது என்பது அக்கல்வெட்டில் உள்ள தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
ravi said…
*சிவசர்மன்* புராண வரலாறு

சிவபெருமானின் திருமுடியைக் காண பிரம்மனும், திருவடியைக்காண திருமாலும் சென்ற வேளை, நான்முகன் சிவனின் திருமுடியினைத் தொட்டதாகப் பொய் ஒன்றைக் கூறினார். அதற்குத் தண்டனையாக மனித உருவத்தினைப் பெற்று விரிஞ்சிபுரம் இறைவனைப் பூசை செய்து வந்த, சிவநாதன் - நந்தினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

சிவசர்மன் எனப்பெயரிடப்பட்ட அவர் தன் ஜந்தாம் வயதில் தந்தையினை இழந்தார்.
பூசை செய்யும் உரிமையினை உறவினர் பறித்துக்கொண்டனர். இதனால் கவலையுற்ற சிவசர்மனின் தாயார், சிவனிடம் மன்றாட சிவன் அவர் கனவில் தோன்றி திருக்கோயிலின் பிரம்ம தீர்த்தத்தில் மகனை நீராட்டிக் காத்திருக்கும் படியும், தாம் வழிகாட்டுவதாகவும் கூறினார். கனவு கண்ட மறுநாள் கார்த்திகை ஞாயிற்றுக் கிழமையன்று, ஒரு முதியவர் உருவில் வந்த அம்பலவாணன் சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து, பிரம்ம, சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்ததாகக் கூறப்படுகின்றது.

இவ்வாறு சிவசர்மன் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் ஆலயத்தினை அடைந்து, பூசைகள் செய்ய அதை ஏற்க சிவன் தலை சாய்த்ததாக உள்ள கூற்றுக்கள் குறிப்பிடத்தக்கது.
ravi said…
*ஹே சங்கரீ* புராண வரலாறு

பண்டைக் காலத்தில் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் ஆலயமானது 'நைமி சாரண்யம்' என்றழைக்கப்பெற்ற முனிவர்/முனிவர்கள் கூடும் புண்ணியத்தலமாக விளங்கியது. சிவபெருமான் கௌரியிடம்.....நீ கறுப்பு நிறமாய் இருப்பதால் உன்னை
'ஹே சங்கரீ' என அழைக்கலாமா என விளையாட்டாகக் கேட்டார். இதனால் கோபமுற்ற கௌரி பாலாற்றின் வடகரையில் பொற்பங்காட்டினுள் ஜந்து வேள்விக் குண்டங்களை அமைத்து அதன் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தார். அத்தவத்தின்போது சிம்மகுளத்தில் நீராடி தனது கருமேனி நீங்கி பொன்மேனி கொண்ட மரகதவல்லியாக மார்க்கசகாயரின் இடப்பாகத்தில் இடம் கொண்டாள் என்பதும் வரலாறு.
ravi said…
தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ள விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இத் திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோயில் ஆம்பூர், குடியாத்தம் பகுதிகளில் செல்லும் பேருந்துப் பயணத்தின் மூலம் சென்று சதுவாலை என்னும் இடத்திலிருந்து நடந்தோ முச்சக்க வாகனத்திலோ சென்றால் அடையலாம். இங்குள்ள கோயில் 1300 வருடங்கள் பழமையானதாகும். இக்கோவிலின் இராஜகோபுரம் மற்றும் கலைநயத்துடன் அமைக்க பட்டுள்ள சிற்பங்கள் நிறைந்த அர்த்த மண்டபம் மகா மண்டபம் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது..இங்கு பிரதான தெய்வம் மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் உள்ளது.
ravi said…
நான் படித்த கதை ஒன்று நீங்களும் படித்துப்பாருங்களேன்.

அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன்..
ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது..

காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்..

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை..

மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன..

எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள்..
யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை..

மன்னனால் தூங்க முடியவில்லை.. உணவும் குறைந்து விட்டது.. மன்னன் பொலிவு இழந்தான்..

மன்னனோடு சேர்ந்து நாடும் களை இழந்தது..

இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி அங்கு வந்து சேர்ந்தார்..

மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்..

"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி.. நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.."

இங்கிருந்து மூவாயிரம் மைல் தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்..

ravi said…
இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன்.. எப்படியும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள்.. அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்.."

மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்..

மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது..

அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது..

மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி..

மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான்.. நன்றாக உண்டான்.. பழைய பொலிவு திரும்பி விட்டது..

அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்..
அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்..

"குருதேவா! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!''

''துறவி புன்னகை பூத்தார்"..

"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?'' மன்னனின் செவிக்குள்..
''அதுதான் இல்லை.. மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம்.. சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும்.. இல்லை, வெளியே வந்திருக்கும்..

அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டது.. அது மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது..

அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்."

"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே.

"மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது!

பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்..

அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்..

தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்."

''அந்த மூலிகை?''

"நம் ஊரில் சாதாரணமாக விளையும் தூதுவளைதான்..
அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்..

பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக் காட்டினேன்.. மன்னன் நம்பி விட்டான்.. அவன் நோயும் தீர்ந்தது.."

இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன..

காதில் நுழைந்த பூச்சி செத்து விட்டது.. மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது..

இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையைத் தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

"எங்கப்பாகிட்ட மட்டும் பணம் இருந்தா நான் பெரிய ஆளாகியிருப்பேன்'' என்று எத்தனை பேர் ஜல்லியடிக்கிறார்கள் பாருங்கள்.
இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும் காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள் தான்..

பிரச்னை நம் பெற்றோரிடமோ, நம் ஆசிரியரிடமோ, நம் பள்ளி-கல்லூரியிடமோ, நம் சூழ்நிலையிலோ இல்லை.. அது நம் மனதில் இருக்கிறது.. பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது..

ஒரு இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு நம் வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம். சரிதானே.Ingersal
ravi said…
பெரும்பாலான வீட்டில் இருக்கும் பெரியோர்கள் தூங்குவதற்கு முன்பாக தலைக்கு அருகில் ஒரு சொம்பில் அல்லது டம்ளரில் தண்ணீர் வைத்துவிட்டு படுப்பார்கள்.

அதற்கு காரணம் இரவில் தாகம் எடுக்கும் போது குடிப்பதற்கு என்றுதான் நினைத்து இருப்போம். ஆனால், உண்மையில்.,

வீட்டில் யாராவது மனஅழுத்தம், மனநோயினால் தொடர்ந்து நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தால் அந்த வீட்டில் தீய சக்தி உள்ளதென்று யாகம், பூஜை போன்றவற்றினை செய்வதை நாம் பார்த்திருப்போம்.

இதற்கான தீர்வாக தான் பெரியவர்கள் தூங்கும் முன்பு தண்ணீர் வைக்கிறார்கள். தண்ணீர் நம் அருகில் உள்ளபோது தீயசக்திகள் நம்மை அண்டாது.

இந்த நீரை மறுநாள் காலை கீழே ஊற்றிவிடவேண்டும். இவ்வாறு செய்தால் தீயசக்திகள் நம்மை நெருங்காது.

இரவில் நாம் வைக்கும் தண்ணீரில் சிறுசிறு குமிழ்கள் காணப்பட்டால் கெட்டசக்திகள் நீக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம். குமிழ்கள் காணப்படவில்லை எனில் அங்கு தீய சக்திகள் இல்லை என்பது முன்னோர்களின் நம்பிக்கை.
ravi said…
🌹🌺" *பாவம் பதினாறும் அகத்திக் கீரை கட்டு* *பசுவிற்கு* *தருவதால் தீரும்*
*என்பது ஐதீகம்* .... *என்பதை* - *விளக்கும்* *எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺அகத்திக்கீரையில் அமிர்தத்தின்
துளி இருப்பதாகச் சொல்வர்.
அதனைப் பசுவுக்கு கொடுப்பதற்கு
கோக்ராஸம் என்று பெயர்.

🌺இதைக் கொடுப்பதன் மூலம்
பிதுர்களின் (முன்னோர்) ஆசி
நமக்குக் கிடைக்கும்.

🌺முன்னோர் வழிபாட்டுக்குரிய
அமாவாசை மட்டுமில்லாமல்,
எந்தநாளிலும் கொடுக்கலாம்.
எல்லோரும் செய்ய வேண்டிய
அடிப்படை தர்மம் இது

🌺மனிதர்களாகப் பிறந்தவர்கள்
செய்ய வேண்டிய மூதாதையர்
களுக்கான திதி, தர்ப்பணம்,
வழிபாடு உள்ளிட்டவை செய்யாமல்
விட்டிருந்தால் ஏற்படக்கூடிய
பாவம் பதினாறும் அகத்திக் கீரை
கட்டு பசுவிற்கு தருவதால் தீரும்
என்பது ஐதீகம்.

🌺கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரித்துக்
கொண்டே அகத்திக்கீரையை வழங்கவும்.

🌺 *மந்திரம்* 🌹

🌺ஸர்வ காம துகே தேவி ஸர்வ
தீர்த்தாபிசோசினிபாவனே
ஸுரபி ஸ்ரேஷ்டே தேவி
துப்யம் நமோஸ்துதே!

🌺 *பொருள்* :
எல்லா தேவைகளையும் பூர்த்தி
செய்பவளே!
எல்லா தீர்த்தங்களாலும்
அபிஷேகம் செய்யப்படுபவளே!
மங்கல வடிவானவளே!
பெருமைக்குரிய காமதேனுவே!
உன்னை வணங்குகிறேன்.🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 "Sixteen sins are cured by giving a bundle of spinach to a cow
A simple story to explain that is faith
-------------------------------------------------- ------

🌹🌺 of nectar in spinach
He will say that there is a drop.
To give it to the cow
The name is Kograsam.

🌺By giving this
Blessings of the Pithurs (ancestors).
We get

🌺 Ancestor worship
Not only the new moon,
Can be given any day.
Everyone should do it
This is the basic dharma

🌺 Born as humans
Ancestor to do
Didi, Darpanam,
Without performing worship
which may occur if left
Bad sixteen is the spinach
Giving bandage to the cow will solve it
is a myth.

🌺 Chant the following mantra
Serve with spinach.

🌺 Mantra🌹

🌺 Sarva Kama Thuke Devi Sarva
Tirthabhisosinibhavane
Surabi Shreshte Devi
Dubya Namostude!

Meaning:
Meet all requirements
Doer!
By all solutions
Anointed One!
Mangal shape!
Proud Kamathenu!
I adore you.🌹🌺

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
[11/03, 20:00] Jayaraman Ravilumar: வஸுர்‌ வஸுமனாஸ் : *ஸத்யஸ்* :

ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏

*107. ஸத்யாய நமஹ (Sathyaaya namaha)*
[11/03, 20:02] Jayaraman Ravilumar: அடுத்தநாள் காலை வந்து பார்த்த மன்னன், மூங்கில் கழிகள் அனைத்தும் காணாமல் போனதையும்,
சிறைச்சாலை முழுவதும் தங்கமயமாக இருப்பதையும் கண்டு வியந்து திருமலையப்பனின் மேன்மையையும்,
நாராயண ரிஷியின் பக்தியின் பெருமையையும் உணர்ந்தான்.

ஜடாதாரி செய்ய நினைத்த யாகத்தை நிறுத்தினான்.

அன்று முதல் தொண்டைமான் திருமலையப்பனின் பக்தனாக மாறினான்.
நாராயண ரிஷி போன்ற உண்மையான பக்தர்களுக்கு ‘ *ஸத்* ’ என்று பெயர்.
ஸத் ஆன பக்தர்களுக்கு எப்போதும் உதவுபவனாகத் திகழ்வதால் திருமால் ‘ *ஸத்ய* :’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 107-வது திருநாமம்.
“ *ஸத்யாய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அடியார்களை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் திருமால் காத்தருள்வார்.
ravi said…
[11/03, 19:56] Jayaraman Ravilumar: *சிவானந்தலஹரி 66வது ஸ்லோகம் பொருளுரை*
[11/03, 19:56] Jayaraman Ravilumar: சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம்…66வது ஸ்லோகம்.

क्रीडार्थं सृजसि प्रपञ्चमखिलं क्रीडामृगास्ते जनाः
यत्कर्माचरितं मया च भवतः प्रीत्यै भवत्येव तत् ।
शम्भो स्वस्य कुतूहलस्य करणं मच्चेष्टितं निश्चितं
तस्मान्मामकरक्षणं पशुपते कर्तव्यमेव त्वया ॥ ६६॥

க்ரீடா³ர்த²ம்ʼ ஸ்ருʼஜஸி ப்ரபஞ்சமகி²லம்ʼ

க்ரீடா³ம்ருʼகா³ஸ்தே ஜனா꞉

யத்கர்மாசரிதம்ʼ மயா ச ப⁴வத꞉ ப்ரீத்யை ப⁴வத்யேவ தத் |

ஶம்போ⁴ ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம்ʼ

மச்சேஷ்டிதம்ʼ நிஶ்சிதம்ʼ

தஸ்மான்மாமகரக்ஷணம்ʼ பஶுபதே கர்தவ்யமேவ த்வயா || 66 ||
ravi said…
உன் கையில் இருக்கற குழந்தை.

நீதான் பாத்துக்கணும் அப்படின்னு ..

இந்த பழமொழிய ஞாபகப் படுத்தறேன்.

எனக்கு வேண்டியது உன் காரியத்த செய்யனும்..

உன்னுடைய அடியாரோட சேரணும்…

அத தவிர வேற எதையும் கண்ணாலக்கூட பார்க்கக்கூடாது.

அப்படி ஒரு அனுக்ரஹம் நீ பண்ணிட்டேனா,

அப்புறம், .சூரியன் கிழக்குல உதிச்சா என்ன மேற்குல உதிச்சா என்ன

அப்படின்னு தன்னை அடைக்கலமா பகவான்கிட்ட ஒப்படச்சிக்கறார்.

இதே பாவத்த ஆசார்யாள் இந்த ஸ்லோகத்துல சொல்றார்🙏🙏🙏
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 107 started on 6th nov

*பாடல் 33 ... சிந்தாகுல*

(பந்தத்தின்று எனைக் காவாய்)

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்

விந்தாடவி என்று விடப் பெறுவேன்

மந்தாகினி தந்த வரோதயனே

கந்தா, முருகா, கருணாகரனே🥇
ravi said…
*மந்தாகினி தந்த ...*

கங்கா நதி தாங்கிக்கொண்டு வந்து கொடுத்த,

*வர உதயனே ...* தேவர்கள் வேண்டியபடி சிவ பெருமானிடத்தில்
தோன்றியவரே,

*கந்தா* ... கந்தப் பெருமானே,

*முருகா* ... முருகப் பெருமானே,

*கருணாகரனே* ... கருணைக்கு இருப்பிடமானவனே,

*சிந்தை ஆகுலம் ...* மனதில் துன்பத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும்,

*இல்லொடு செல்வம்* எனும் ... மனைவி செல்வம் எனப்படும்,

*விந்தா அடவி ...* விந்திய மலைக் காடுபோன்ற இத் துன்பத்தை,

*என்று விடப் பெறுவேன்? ...* அடியேன் என்று விடுவேன்?
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

நாயகர் என்று ஒரு ஜாதிப் பெயர் இருக்கிறது.

ஜாதி முறையினால் தாழ்த்தப்பட்டவர்களும், அவர்களைத் தாழ்த்தி வைப்பவர்களும் வேரூன்றி விட்டார்கள் என்ற அபிப்ராயம் இப்போது இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதில் சலுகைகள், ஆதாயங்கள் கிடைக்கின்றன என்பதால் எல்லாரும் அப்படிச் சொல்லிக் கொள்வதாகவும் இருக்கிறது. ஆனால் முன்னாளில் இப்படிக் கொள்வதாகவும் இருக்கிறது! ஆனால் முன்னாளில் இப்படி இல்லை. அந்தந்த ஜாதியாரும் தாங்கள் ஜன ஸமுதாயத்தில் உயர்ந்த இடம் பெற்றிருப்பதாகவே கருதினார்கள். ஜாதிப் பெயர்களைப் பார்த்தாலே தெரியும். நாலாம் வர்ணத்தைச் சேர்ந்த ஒரு ஜாதிக்காரர்களுக்கு முதலியார் என்ற பேர் இருக்கிறது. ஸமூஹத்தில் முதலிடம் பெற்றவர்கள்தான் முதலியார். அதே மாதிரி வடக்கே ‘அகர்வால்’ என்கிறார்கள். அக்ர ஸ்தானம் என்றால் முதல் இடம். அப்படி ஜன ஸமுதாயத்தில் அக்ரமாக இருப்பவர் அகர்வால். பிள்ளை என்றாலும் மதிப்புக்கு உரியவர் என்று அர்த்தம். ரொம்ப உயர்ஜாதித் தேங்காயைப் பிள்ளைத் தேங்காய் என்பது வழக்கம். ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையைப் பார்த்தால் ப்ராம்மணர்களும் முதலி என்றும், பிள்ளை என்றும் சொல்லப்பட்டிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். சைவ ஸம்ப்ரதாயத்தைப் பார்த்தாலும்-ஸம்பந்தர் வேத ப்ராம்மணர், ஸுந்தரர் ஆதிசைவர், அப்பர் வேளாளர்; இந்த மூன்று பேரையும் சேர்ந்து ‘மூவர் முதலிகள்’ என்று சொல்வது மரபு. ‘ராஜ’ என்ற வார்த்தைதான் ராய, ராவ் என்றெல்லாம் ஆயிற்று.
ravi said…
தமிழ் தேசத்திலிருக்கிற நாம் ‘ராவ்’ என்றால் மாத்வ பிராம்மணரைத்தான் நினைக்கிறோம். ஆனால் மாத்வர்கள் அதிகமுள்ள கன்னட தேசத்திலும், அதே போல ஆந்திராவிலுள்ள நாலாம் வர்ணத்தவர்களும் ‘ராவ்’ போட்டுக் கொள்கிறார்கள். அதுவே வடக்கே ராய், ரே என்றெல்லாம் இருக்கிறது. வைச்யர்களைச் செட்டியார் என்கிறோம். ‘ச்ரேஷ்டி’ என்பதுதான் செட்டி ஆயிற்று. ச்ரேஷ்டமானவர்கள் – உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் – என்று அர்த்தம். ச்ரேஷ்டிதான் வடக்கே ‘ஸேட்’ ஆயிற்று. கன்னட தேசத்தில் அதையே ஷெட்டி என்பார்கள். ‘அவன் உசந்த ஜாதி, இவன் தாழ்ந்த ஜாதி’ என்ற அபிப்ராயங்களும் போட்டிச் சண்டைகளும் இல்லாமல், யாரானாலும் பாரம்பர்யமாக ஏற்பட்ட தொழிலைச் செய்து ஒரு ஜன ஸமுதாயத்திற்கு வேண்டிய எல்லாவிதமான பணிகளையும் போட்டி பொறாமை இல்லாமல் பண்ணிக் கொடுத்ததோடு அவரவரும் முதல் ஜாதிதான், உயர் ஜாதிதான் என்ற pride-ஓடு நம் ஜனங்கள் இருந்து வந்ததை இந்தப் பெயர்கள் காட்டுகின்றன. பல வகுப்புக்காரர்களுக்கிடையில் இருந்து வந்த ஸெளஜன்யமும் இதில் தெரிகிறது. எப்படியென்றால் ஒரு ஜாதிக்காரர்கள் தங்களுக்கு உயர்வாகப் பேர் வைத்துக் கொண்டதை மற்றவர்களும் ஆக்ஷேபிக்காமல், அவர்களுக்கு அந்த pride இருக்கட்டும் என்றே எடுத்துக் கொண்டு, தாங்களும் அவர்களை அப்படித்தான் கூப்பிட்டிருக்கிறார்கள்.

தலைவர் என்ற அர்த்தமுள்ள ‘நாயக’ பதம் எல்லா வர்ணத்தினருக்கும் உரிய பெயராக இருந்து இந்த ஸமத்வத்தை – தற்காலத்தில் சொல்லும் காரிய ஸமத்வத்தை அல்ல; அதைவிட அவசியமான மனோபாவ ஸமத்வத்தை – நன்றாகக் காட்டுகிறது மஹாராஷ்ட்ராவில் ‘நாயக்’ என்று இருப்பவர்களில் பிராம்மணர்கள் இருக்கிறார்கள். தஞ்சாவூர் நாயக வம்சம், மதுரை நாயக வம்சம் என்கிற இடத்தில் நாயகர்கள் ராஜகுலத்தவர்கள். கன்னட தேசத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த நாயக்கர்களும், ஆந்திரத்தில் இந்த ‘நாயக’ தாதுவின் அடியாகவே நாயுடு என்று சொல்லப் படுபவர்களும் நாலாம் வர்ணத்தைச் சேர்ந்தவர்கள்.

‘நாயக’ என்காமல் ‘நாய’ என்றே சொன்னாலும் போதும். ‘பாலன்’ என்பதையே ‘பாலகன்’ என்றும் சொல்கிற மாதிரி அநேக வார்த்தைகளுக்கு ஸம்ஸ்கிருதத்தில் ‘க’ சேர்ப்பதுண்டு. நாயன் என்றாலும் தலைவர்தான். மலையாளத்தில் நாயர் என்கிறார்கள். அவர்களும் நான்காம் வர்ணம்தான். தமிழ் தேசத்தில் உத்தமமான அடியார்களை ‘நாயனார்’ என்கிறோம். ஒருத்தர் நாயனார், பலபேர் நாயன்மார். அறுபத்துமூன்று நாயன்மார்களில் இல்லாத ஜாதியே இல்லை! அறுபத்து மூவரையும் பற்றி ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பாடிய திருவாரூர் கோவிலில் அர்ச்சகர்களுக்கே நயினார் என்றுதான் பேர்.
ravi said…
🌷நாளை சமயபுரம் பூச்சொரிதல் விழா🌷

மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நாளை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் அம்மன் தன்னை நாடிவரும் பக்தர்களின் எல்லாவிதமான நோய்களை தீர்க்கவும் தீவினைகள் அணுகாது சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வதற்காகவும் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்கிறார்.

இந்த விரத நாட்களில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது.

நாளை பூச்சொரிதல் விழா தொடங்குவதை தொடர்ந்து பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் திருச்சி நகரின் பல பகுதிகளில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் படம் மற்றும் உருவ சிலைகளை வைத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து சமயபுரம் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூத்தட்டுகளை சாற்றி வழிபாடு செய்வார்கள்.

ஓம் சக்தி ! பராசக்தி !

தாயே சமயபுரத்தாளே!
எல்லாம் உன் செயலே!
எல்லாம் உன் உடமையே!
எல்லோரும் உன் அடிமையே!
🌹🌻🌺🏵🌷🌼🌸🌹🌻🌷💐
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 106*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

*94*
ravi said…
कनकमणिकलितभूषां कालायसकलहशीलकान्तिकलाम् ।
कामाक्षि शीलये त्वां कपालशूलाभिरामकरकमलाम् ॥94॥

94. Kanakamani kalitha bhooshaam kaalaayasa kalaha seela kanthi kalaam,

Kamakshi seelaye thwaam kapala soolabhiraama kara kamalaam.

கனகமணிகலிதபூஷாம் காலாயஸகலஹஶீலகான்திகலாம் |

காமாக்ஷி ஶீலயே த்வாம் கபாலஶூலாபிராமகரகமலாம் ||94||
ravi said…
காமாக்ஷி இதோ ப்ரத்யங்கராவாகி விட்டாளே .

தங்கம் வைர, நவமணிமாலைகள் அணிந்து,

அவற்றின் ஒளி கண்ணைக் கூச,

இரும்பைக்கூட தோற்கடிக்கும் கரிய நிறம் கொண்டவளாக,

கபாலம், திரிசூலம் ஏந்தியவளாக,

பரமசக்தியாக நிற்கும் தேவி,

உன்னை நமஸ்கரிக்கிறேன் என்கிறார்.🥇🥇🥇
ravi said…
💐💐💐

*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 511* 🙏🙏🙏started on 7th Oct 2021

*227 வது திருநாமம்*
ravi said…
*227 * महामन्त्रा -மஹாமந்த்ரா -*

வேத மந்திரங்களின் உட்பொருள் அம்பாள்.

சிறந்த மந்த்ரங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள்.

எல்லா மந்திரங்களும் ஸமஸ்க்ரிதத்தின் 51 அக்ஷரங்களான கூட்டமைப்பு அல்லவா.

இந்த அக்ஷரங்கள் மாலையாக அம்பாளை அலங்கரிக்கிறதே.

பஞ்சதசி ஷோடசி மந்த்ரங்கள் அவளே அல்லவா.🥇🥇🥇
ravi said…
தேனும் மகரந்தங்களூம் நிறைந்த பூக்களைச் சூடியதால்

அவை நிறைந்த கருங்குழலை உடைய கோசலையின் குலத்தில் உதித்த குழந்தையே!

என்றும் தங்கும் பெரும் புகழ் கொண்ட சனகனின் மருமகனே!

தசரதனின் மகனே தாசரதீ!

கங்கையை விட புனித மிக்க தீர்த்தங்கள் நிறைந்த திருக்
கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே!

எங்கள் குலத்தின் இன்னமுதே!

இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் நான்முகப் பிரமனைப் படைத்தவனே!

தசரதனின் பெருமை மிக்க குழந்தையே!

மிதிலை இளவரசியின் மணவாளனே!

வண்டு கூட்டங்கள் பூக்களில் மது உண்டு இசை பாடும் திருக்
கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே!

வலக்கையில் மிகப் பெரிய வில்லினை ஏந்தியவா!

இராகவனே! தாலேலோ!
ravi said…
[12/03, 07:24] +91 96209 96097: *சஹாய நமஹ*🙏🙏
பக்தர்க‌ள் கட்டிப் போட்டாலும் பொருத்துக் கொள்பவர்
[12/03, 07:24] +91 96209 96097: நாராயணீ நாத³ரூபா* *நாமரூபவிவர்ஜிதா*🙏🙏
நாம ரூப எல்லைகளுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள்
ravi said…
குணா = முக்குணங்களைக் குறிப்பது (சத்வம்- ரஜஸ்- தமஸ்)

*❖ 139 நிர்குணா =*

முக்குணங்களுக்கு ஆட்படாது அதற்கு அப்பாற்பட்டவள்
ravi said…
*அம்மா* ...

*அம்மா*
மணம் கொண்ட உனக்கு

குணம் இல்லை என்றே சொல்வது தகுமோ ?

மனம் கொண்ட தாய்மை குணம் இன்றி வாழுமோ ?

வனம் எங்கும் தவம் செய்யும் உன் பெண்மை சிவம் இன்றி வாழுமோ

சிவமே உன் குணம் என்றால் உனை *நிர்குணா* என்பது பொருந்துமோ *அம்மா*?

தமஸ் குணம் கொண்டேன் .. நிர்குணம் செய்தாய் !

ரஜஸ் குணம் அதி கொண்டேன் ..

உன் கருணா ரஸம் கொண்டு அழித்தாய் !

சத்வ குணம் பெற்றேன் ...

அனைத்துக்கும் மேலே நீ நின்று சிரிப்பதைக் கண்டேன் ..

நிர்குணம் எனும் நாமம் நித்யமாய் பொருந்தக்கண்டேன்

வாக் தேவிகள் தவறு செய்வார்களோ *அம்மா* ?

இல்லை அதை தத்து எடுத்த ஹயக்கீரவரும் தவறு இழைப்பாரோ *அம்மா* ?

கேட்ட அகஸ்தியரும் செவி மந்தம் இல்லாதவரே *அம்மா* ?

உனக்கும் மேலே ஒருவர் உண்டு என்றே சொல்வோர்

பிறப்பில் கலங்கம் கொண்டவரே *அம்மா*!!💐💐💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

96 –
விட்டிடில் கட்டமாம் விட்டிடாது உனை உயிர்
விட்டிட அருள்புரி அருணசலா (அ)
ravi said…
*Meaning*

If You leave me , it will be too difficult to survive . Bless me so that I let go my life without leaving You , *Arunachala*🥇
ravi said…
*அருணாசலா* ...

மதனை சுட்டக் கண்ணால் என் மமதை தனை எரித்தாயே 🔥

*அருணாசலா* ...

காலனை உதைத்த காலினால் என் கர்வம் தனை உதைத்தாயே

*அருணாசலா*

கல் அடிப்பட்ட உடம்பினால் எனக்கு உன் பரிசம் தந்தாயே

*அருணாசலா*

கண் அடிப்பட்ட முகத்தினால் காரூண்யம் மழை பொழிந்தாயே

*அருணாசலா*

பிரம்படி பட்ட முதுகினால் என் மூலாதாரம் தனை எழுப்பினாயே

*அருணாசலா*

அம்படி பட்ட தேகந்தால் அன்பை பொழிந்தாயே

*அருணாசலா* ..

வசைகள் கோடி வாங்கிய செவியினால்

என் பாடல் கேட்டாயே🎼🎼🎼

*அருணாசலா*

எனை விட்டு போக மனம் உளதோ

*அருணாசலா*

மறையட்டும் இந்த பூத உடல்

மறப்பேனோ இந்த மாணிக்கத்தை ..

விட்டில் பூச்சிகள் போல்

கட்டிப்பிடித்து

கரங்கள் கோத்து

களி நடம் புரிவோம்💃💃💃

*அருணாசலா* 🥇🥇🥇
ravi said…
*ஈசனின் ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்*

அட்டவீரட்ட தலங்கள், பஞ்ச ஆரண்ய தலங் கள், பஞ்சபூதத் தலங்கள் என்ற வரிசையில், நம் ஐயன் சிவபெருமான் அருள்புரியும் ஆறு திருத் தலங்கள், ‘ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

வேலூர் மாவட்டம்-ஆற்காடு அருகில், பாலாற்றங்கரையின் வடகரையில் மூன்றும் தென் கரையில் மூன்றுமாக இந்த ஆறு தலங்களும் அமைந்திருக்கின்றன. அவற்றில், காரைக்காடு, எட்டிக்காடு, வேப்பங்காடு ஆகியன ஒரு முக்கோணமாகவும், வன்னிக்காடு, மல்லிக்காடு, மாங்காடு ஆகியன ஒரு (தலைகீழ்) முக்கோண மாகவும் அமைந்துள்ளன.

👇👇👇👇👇
https://youtu.be/ft_SbLyNw3w
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

ஆதி காலத்தில் எப்படிப் படிப்பை ஜாதி ஸம்பந்தமில்லாமல் வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு கொள்கையிலிருந்து தெரிகிறது. கல்வியை, அதாவது விஷய ஞானம் பெறுவதை அந்தப் பூர்வ காலத்தில் எவ்வளவு பெரிதாக மதித்திருக்கிறார்களென்பதும் இதிலிருந்து தெரிகிறது. அதாவது ஒரு ஜாதியார் தங்களிடம் இல்லாத, அல்லது முற்காலத்தில் இருந்து பிறகு நஷ்டப்பட்டுப் போன வித்யைகளை எந்த ஜாதியாரிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாமென்று தர்ம சாஸ்த்ரங்கள் தாராளமாக அநுமதித்திருக்கின்றன.
நல்ல வித்யை ஒன்றையோ, அல்லது உயர்ந்த தர்மப் பண்பு ஒன்றையோ, அல்லது ரொம்பவும் உத்தமமான கன்னிகை ஒருத்தியையோ எந்த ஜாதியாரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாமென்று மநுவே சொல்லியிருக்கிறார்.
ravi said…
ஆனால் இதில் கன்னிகை விஷயம் மாத்திரம் இந்த்ரிய ஸம்பந்தமாகக் காதல் கீதல் என்று போய், அப்புறம் அதற்குச் சப்பைக் கட்டு கட்டவதற்காக அந்தக் கன்னிகைக்கு உத்தமமான ஸம்பத்தைக் கல்பித்து க்ருத்ரிமங்கள் செய்ய இடங்கொடுத்து விடுமென்பதால் பிற்பாடு தர்ம சாஸ்த்ரத்தில் இவ்விஷயத்தில் வர்ண தர்மத்துக்கு விரோதமாகப் போகவே கூடாது என்று வைத்துவிட்டார்கள். .
ravi said…
ஆனால், தர்மம், வித்யை – அதாவது அறம், அறிவு – இரண்டையும் ப்ராம்மணன்கூட அப்ராம்மணரிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ளலாமென்று சொல்லியிருக்கிறார்கள்.
அறமும் அறிவு நூலால் வருவதே, அறிவு நூலின் பயனும் அறத்துக்கு உதவ வேண்டுவதே. ஆகையால் இவற்றைப் பிரித்துக்கூடச் சொல்லக்கூடாது.
அந்நிய தேசத்தினரோ, காட்டுமிராண்டிகளோ ஒரு பிரதேசத்திலுள்ள ப்ராம்மண வித்வான்களையெல்லாம் ஒழித்துவிட்டால், அல்லது வேறே ஏதோ காரணத்தால் ஒரு ப்ரதேசத்தில் ப்ராம்மணர்களுடைய வேதாப்யாஸம் நின்று போய்விட்டதென்றால், இப்படிப்பட்ட ஆபத்துக்காலத்தில் ப்ராம்மணனாகப் பிறந்தவன் அங்கேயுள்ள க்ஷத்ரியர்களிடமோ வைச்யர்களிடமோ வேதத்தையேக்கூடக் கற்றுக் கொள்ளலாம் என்கற அளவுக்கு மநு போயிருக்கிறார்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
ravi said…
மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு.
என்று திருக்குறளில் சொல்லியிருக்கிறது.
எந்த விஷயமாகட்டும், அதை யார்தான் எடுத்துச் சொல்லட்டும், அதன் ஸரியான தாத்பர்யம் என்னவென்று பார்த்து ஏற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என்று அர்த்தம். இப்படிச் சொன்னதால் முதலிலேயே எந்த ஒரு வித்யையும் தப்பு என்று ஒதுக்கி வைத்துவிடாமல் அதிலும் ஏதாவது உசந்த கருத்து இருக்குமா என்று ஆலோசிக்க வேண்டுமென்று ஏற்படுகிறது.
ravi said…
அதேபோல, “போயும் போயும் இவர்களிடமா கற்றுக்கொள்வது? இவர்கள் சொல்லியா கேட்டுக் கொள்வது” என்றெல்லாம் நினைக்காமல், “சொல்வது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; சொல்வதில் தாத்பர்யம் இருந்தால் எடுத்துக் கொள்வோம்” என்று நினைக்க வேண்டுமென்றும் ஏற்படுகிறது. இந்த இரண்டு பண்புகளையும் தர்ம சாஸ்த்ரங்களில் வெகுவாக ஆதரித்து வற்புறுத்தியிருக்கிறது.
ravi said…
விஷயமிருக்கிறதா என்று பார்க்கிறேன்” என்று பொய் ஸமாதானம் சொல்லிக்கொண்டு, கன்னாபின்னா ஸமாசாரங்களைக்கூட ஒருத்தன் படிக்கலாம். அதாவது “எப்பொருளை”யும் படிக்கலாம். ஆனால் உசத்தி தாழ்த்தி பார்க்காமல் “யாரார் வாய் கேட்பது” லேசில் முடியாது. அதனால் இந்த அம்சத்தை சாஸ்த்ரம் நன்றாக அழுத்தம் கொடுத்து எடுத்துச் சொல்லியிருக்கிறது.
கோபத்திலே கொக்கை எரித்த கொங்கண ரிஷி ஒரு ஸ்த்ரீயிடமிருந்து அநேக தர்மங்களைத் தெரிந்துகொண்டு, அப்புறம் அவள் வார்த்தைப்படி பாக்கியிருந்த தர்மங்களை ஒரு கசாப்புக் கடைக்காரனிடம் கேட்டறிந்ததாக மஹா பாரதத்தில் இருக்கிறது. அந்தக் கதையைவிட நம் பூர்விகர்கள் அறிவுக்காக “யாரார் வாய் கேட்க”வும் தயாராயிருந்ததற்குப் பெரிய சான்று வேண்டாம். இவ்வாறு ப்ராமணர்களுக்கும் போதிக்கக் கூடிய அளவுக்கு விஷயமறிந்த நாலாம் வர்ணத்தினர் இருந்திருக்கிறார்கள், “அவர்களிடம் போய் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்” என்று தர்ம சாஸ்த்ரங்களே குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்கு இருந்திருக்கிறார்கள் என்பதிலிருந்து இன்னொரு உண்மையும் தெரிகிறது. தற்காலத்தில் நினைப்பதுபோல ப்ராமணர்கள் அவர்களை ஒரேயடியாக அறிவில் இருட்டு நிலையிலேயே ஒதுக்கி வைத்திருக்கவில்லை என்று தெரிகிறது. நேராக அவர்களுக்கு வேத பாடம் சொல்லித் தராவிட்டாலும், அவர்கள் தங்கள் தொழிலில் சாஸ்த்ரக் கல்வி பெறுவதற்காக வரும்போது, அவர்களுக்கு ப்ராமணர்கள் தொழிற்கல்வியோடு நிறைய தர்மோபதேசமும், ஞானோபதேசமும் செய்திருக்கிறார்கள். முக்யமாகப் புராணங்களின் மூலமே இந்த உபதேசங்களைச் செய்திருக்கிறார்கள். இப்படியாக அவர்களில் நல்ல தார்மிக, ஆத்மிக வித்யா ஸம்பத்தைப் பெற்றுக் கொண்டவர்களாகப் பல பேர் ஏற்பட்டதால்தான், அப்புறம் ப்ராமணர்களிலேயே அவ்வளவு அறிவு பெறாதவர்கள் அவர்களிடம் போய்க் கேட்டுக்கொள்ள இடமேற்பட்டிருக்கிறது.
இதிலே ரொம்பவும் ஆச்சரியப்படத்தக்க த்ருஷ்டாந்தம் முதல் முதலில் அந்தப் புராணங்கள் உபதேசமாகி ப்ரசாரம் செய்யப்பட்டதிலேயே இருக்கிறது. வேதங்களை ப்ராமண சிஷ்யர்கள் மூலம் ப்ரசாரம் செய்த வ்யாஸ பகவான் புராணங்களைச் செய்து அப்ராமணராகிய ரோமஹர்ஷண ஸூதர் என்பவருக்கே அவற்றை உபதேசித்து ப்ரசாரம் பண்ண அனுப்பினார். ஸத்பிராமணர்களாகிய நைமிசாரண்யத்து ரிஷிகள் அந்த ஸூதருக்கு ரொம்பவும் மரியாதை செய்து, அவரைப் பீடம்போட்டு உட்கார்த்தி வைத்து, அவரிடம் புராணங்களைக் கேட்டுக் கொண்டார்கள்
ravi said…
[12/03, 17:48] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 108 started on 6th nov

*பாடல் 33 ... சிந்தாகுல*

(பந்தத்தின்று எனைக் காவாய்)

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்

விந்தாடவி என்று விடப் பெறுவேன்

மந்தாகினி தந்த வரோதயனே

கந்தா, முருகா, கருணாகரனே🥇
[12/03, 17:49] Jayaraman Ravilumar: மனதிற்கு இசைந்த அழகிய மனைவி மக்களுடன் நடத்தும்
இல்வாழ்க்கையை எப்படி சிந்தாகுல இல் என அருணகிரியார் கூறலாம்
என சிலர் எண்ணலாம்.

எவ்வளவுதான் மனைவியும் மக்களும்
சுற்றத்தாரும் மனதிற்கு இசைய வாய்க்கப் பெற்றாலும்

முடிவில்
அவர்களால் கிடைத்த சுகத்தைக் காட்டிலும் அவர்களைக் காப்பாற்ற
நாம் பட்ட கஷ்டமே அதிகம் என்பது கண்கூடு.

மனைவி என்கிற
பந்தம் நீண்டுகொண்டேபோய் மக்கள், பேரன் பேத்திகள் என
வளர்ந்து கொண்டே போகும். இதையே அருணகிரியார்,

இவ்வகையாவுங் கிடைத்துக் கிரஹவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயி ரவமே போம்

... என்கிறார் கதிர்காமத் திருப்புகழில் ('உடுக்கத்துகில்
ravi said…
[12/03, 17:45] Jayaraman Ravilumar: வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

*ஸமாத்மா* ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[12/03, 17:47] Jayaraman Ravilumar: *108. ஸமாத்மநே நமஹ (Samaathmane namaha)*

ஏகாதசி விரதம் அநுஷ்டிப்பதன் பலன்களைப் பற்றி வியாசர் விளக்க அதைப் பாண்டவர்களும் குந்தியும் கேட்டார்கள்.

எப்போதும் உணவருந்திக் கொண்டே இருப்பவனான பீமனுக்கு விரதம் இருப்பது என்பது கற்பனையிலும் முடியாத காரியம்.

அவனை ஏகாதசி விரதம் அநுஷ்டிக்க வைப்பது எப்படி என்று வியாசரிடம் குந்தி வினவ,
வியாசர்,

“ஏகாதசியன்று தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பிருப்பது மிகவும் உயர்ந்தது.

அது முடியாதவர்கள் தண்ணீர், பால், மோர் முதலிய நீர் ஆகாரங்களை உட்கொள்ளலாம்.

அதுவும் முடியாதவர்கள், பழங்களை உட்கொள்ளலாம்.

அதுவும் முடியாதவர்கள், அரிசியால் ஆன பொருட்களை முழுவதுமாக ஒதுக்கி விட்டு மற்ற பொருள்களை உப்பில்லாமல் சாப்பிடலாம்.

அதுவும் முடியாதவர்கள், அரிசியை உடைத்துச் செய்யும் கேசரி உள்ளிட்ட உணவுகளை உட்கொள்ளலாம்.

ஆனால் முழு அரிசியைச் சேர்த்துக் கொள்ளவே கூடாது.

நீங்கள் பீமனை இந்த ரீதியில் படிப்படியாக விரதம் இருக்கச் சொல்லுங்கள்.

நாளடைவில் தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பிருக்கப் பழகிக் கொள்வான்!” என்றார்.
ravi said…
[12/03, 17:40] Jayaraman Ravilumar: *சிவானந்தலஹரி 66வது ஸ்லோகம் பொருளுரை*
[12/03, 17:41] Jayaraman Ravilumar: சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம்…66வது ஸ்லோகம்.

क्रीडार्थं सृजसि प्रपञ्चमखिलं क्रीडामृगास्ते जनाः
यत्कर्माचरितं मया च भवतः प्रीत्यै भवत्येव तत् ।
शम्भो स्वस्य कुतूहलस्य करणं मच्चेष्टितं निश्चितं
तस्मान्मामकरक्षणं पशुपते कर्तव्यमेव त्वया ॥ ६६॥

க்ரீடா³ர்த²ம்ʼ ஸ்ருʼஜஸி ப்ரபஞ்சமகி²லம்ʼ

க்ரீடா³ம்ருʼகா³ஸ்தே ஜனா꞉

யத்கர்மாசரிதம்ʼ மயா ச ப⁴வத꞉ ப்ரீத்யை ப⁴வத்யேவ தத் |

ஶம்போ⁴ ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம்ʼ

மச்சேஷ்டிதம்ʼ நிஶ்சிதம்ʼ

தஸ்மான்மாமகரக்ஷணம்ʼ பஶுபதே கர்தவ்யமேவ த்வயா || 66 ||
[12/03, 17:43] Jayaraman Ravilumar: மிகவும் கவி நயத்துடன் ஆச்சாரியார் பாடிய பாடல்களில் இதுவும் . பெரியவா மிகவும் விரும்பி கேட்கும் ஸ்லோகம் இது
ravi said…
ஐம் வீம் ஹம் க்ஷம் ।
தி⁴ஜாக்³ரம் தி⁴ஜாக்³ரம் த்ரோடய த்ரோடய தீ³ப்தம் குரு குரு ஸ்வாஹா ॥ 12 ॥

பாம் பீம் பூம் பார்வதீ பூர்ணா கா²ம் கீ²ம் கூ²ம் கே²சரீ ததா² ।
ஸாம் ஸீம் ஸூம் ஸப்தஶதீ தே³வ்யா மன்த்ரஸித்³தி⁴ம் குருஷ்வ மே ॥ 13 ॥

குஞ்ஜிகாயை நமோ நம: ।

இத³ம் து குஞ்ஜிகாஸ்தோத்ரம் மன்த்ரஜாக³ர்திஹேதவே ।
அப⁴க்தே நைவ தா³தவ்யம் கோ³பிதம் ரக்ஷ பார்வதி ॥ 14 ॥

யஸ்து குஞ்ஜிகயா தே³வி ஹீனாம் ஸப்தஶதீம் படே²த் ।
ந தஸ்ய ஜாயதே ஸித்³தி⁴ரரண்யே ரோத³னம் யதா² ॥ 15 ॥

இதி ஶ்ரீருத்³ரயாமலே கௌ³ரீதன்த்ரே ஶிவபார்வதீஸம்வாதே³ குஞ்ஜிகாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।
ravi said…
ஸித்³த⁴ குஞ்ஜிகா ஸ்தோத்ரம்

ஓம் அஸ்ய ஶ்ரீகுஞ்ஜிகாஸ்தோத்ரமன்த்ரஸ்ய ஸதா³ஶிவ ருஷி:, அனுஷ்டுப் ச²ன்த:³,
ஶ்ரீத்ரிகு³ணாத்மிகா தே³வதா, ஓம் ஐம் பீ³ஜம், ஓம் ஹ்ரீம் ஶக்தி:, ஓம் க்லீம் கீலகம்,
மம ஸர்வாபீ⁴ஷ்டஸித்³த்⁴யர்தே² ஜபே வினியோக:³ ।
ravi said…
ஶிவ உவாச
ஶ்ருணு தே³வி ப்ரவக்ஷ்யாமி குஞ்ஜிகாஸ்தோத்ரமுத்தமம் ।
யேன மன்த்ரப்ரபா⁴வேண சண்டீ³ஜாப: ஶுபோ⁴ ப⁴வேத் ॥ 1 ॥

ந கவசம் நார்க³லாஸ்தோத்ரம் கீலகம் ந ரஹஸ்யகம் ।
ந ஸூக்தம் நாபி த்⁴யானம் ச ந ந்யாஸோ ந ச வார்சனம் ॥ 2 ॥

குஞ்ஜிகாபாட²மாத்ரேண து³ர்கா³பாட²ப²லம் லபே⁴த் ।
அதி கு³ஹ்யதரம் தே³வி தே³வானாமபி து³ர்லப⁴ம் ॥ 3 ॥

கோ³பனீயம் ப்ரயத்னேன ஸ்வயோனிரிவ பார்வதி ।
மாரணம் மோஹனம் வஶ்யம் ஸ்தம்ப⁴னோச்சாடனாதி³கம் ।
பாட²மாத்ரேண ஸம்ஸித்³த்⁴யேத் குஞ்ஜிகாஸ்தோத்ரமுத்தமம் ॥ 4 ॥
ravi said…
அத² மன்த்ர: ।
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டா³யை விச்சே ।
ஓம் க்³லௌம் ஹும் க்லீம் ஜூம் ஸ: ஜ்வாலய ஜ்வாலய ஜ்வல ஜ்வல ப்ரஜ்வல ப்ரஜ்வல
ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டா³யை விச்சே ஜ்வல ஹம் ஸம் லம் க்ஷம் ப²ட் ஸ்வாஹா ॥ 5 ॥
இதி மன்த்ர: ।

நமஸ்தே ருத்³ரரூபிண்யை நமஸ்தே மது⁴மர்தி³னி ।
நம: கைடப⁴ஹாரிண்யை நமஸ்தே மஹிஷார்தி³னி ॥ 6 ॥

நமஸ்தே ஶும்ப⁴ஹன்த்ர்யை ச நிஶும்பா⁴ஸுரகா⁴தினி ।
ஜாக்³ரதம் ஹி மஹாதே³வி ஜபம் ஸித்³த⁴ம் குருஷ்வ மே ॥ 7 ॥

ஐங்காரீ ஸ்ருஷ்டிரூபாயை ஹ்ரீங்காரீ ப்ரதிபாலிகா ।
க்லீங்காரீ காமரூபிண்யை பீ³ஜரூபே நமோஸ்து தே ॥ 8 ॥
ravi said…
சாமுண்டா³ சண்ட³கா⁴தீ ச யைகாரீ வரதா³யினீ ।
விச்சே சாப⁴யதா³ நித்யம் நமஸ்தே மன்த்ரரூபிணி ॥ 9 ॥

தா⁴ம் தீ⁴ம் தூ⁴ம் தூ⁴ர்ஜடே: பத்னீ வாம் வீம் வூம் வாக³தீ⁴ஶ்வரீ ।
க்ராம் க்ரீம் க்ரூம் காலிகா தே³வி ஶாம் ஶீம் ஶூம் மே ஶுப⁴ம் குரு ॥ 1௦ ॥

ஹும் ஹும் ஹுங்காரரூபிண்யை ஜம் ஜம் ஜம் ஜம்ப⁴னாதி³னீ ।
ப்⁴ராம் ப்⁴ரீம் ப்⁴ரூம் பை⁴ரவீ ப⁴த்³ரே ப⁴வான்யை தே நமோ நம: ॥ 11 ॥

அம் கம் சம் டம் தம் பம் யம் ஶம் வீம் து³ம் ஐம் வீம் ஹம் க்ஷம் ।
தி⁴ஜாக்³ரம் தி⁴ஜாக்³ரம் த்ரோடய த்ரோடய தீ³ப்தம் குரு குரு ஸ்வாஹா ॥ 12 ॥
ravi said…
பாம் பீம் பூம் பார்வதீ பூர்ணா கா²ம் கீ²ம் கூ²ம் கே²சரீ ததா² ।
ஸாம் ஸீம் ஸூம் ஸப்தஶதீ தே³வ்யா மன்த்ரஸித்³தி⁴ம் குருஷ்வ மே ॥ 13 ॥

குஞ்ஜிகாயை நமோ நம: ।

இத³ம் து குஞ்ஜிகாஸ்தோத்ரம் மன்த்ரஜாக³ர்திஹேதவே ।
அப⁴க்தே நைவ தா³தவ்யம் கோ³பிதம் ரக்ஷ பார்வதி ॥ 14 ॥

யஸ்து குஞ்ஜிகயா தே³வி ஹீனாம் ஸப்தஶதீம் படே²த் ।
ந தஸ்ய ஜாயதே ஸித்³தி⁴ரரண்யே ரோத³னம் யதா² ॥ 15 ॥
ravi said…
இதி ஶ்ரீருத்³ரயாமலே கௌ³ரீதன்த்ரே ஶிவபார்வதீஸம்வாதே³ குஞ்ஜிகாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।
ravi said…
பத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்!
ravi said…
அதிமதுரக் கவிராயர் தன் 64 தண்டிகைகாரர்களுடனும், இதர புலவர்களுடனும், பொது மக்களுடனும் தயாராக இருக்க திருமலைராயன் அரியாசனத்தில் அமர்ந்திருக்க அனாயாசமாக யமகண்டம் ஏறினார் கவி காளமேகம்.

அனைவரும் பதைபதைக்க அமர்ந்திருந்தனர்.





சமஸ்யா பூரணம் என்பதைப் பற்றி ஏற்கனவே இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையில் விளக்கியுள்ளார். மீண்டும் அதை இங்கு விவரிக்கவில்லை.



ஈற்றடியாக ஒரு புதிரைக் கொடுத்து அதை விடுவிக்கக் கூறுவது சிறந்த புலவருக்கான ஒரு பரீட்சை – இதுவே சமஸ்யா பூரணம்.

‘குண்டக்க மண்டக்க’ என்று இந்தக் காலத்தில் கூறுவது போல எதிராளியை மடக்குவதற்காகவே எதையாவது கூறி அதை ஈற்றடியாக அமைத்து முதல் மூன்று அடியைப் பூர்த்தி செய்யச் சொல்வது ஒரு பழக்கமாக இருந்தது.



சமஸ்யா என்ற வார்த்தையே தமிழில் சமிசை ஆக ஆகி விட்டது.
ravi said…
முதலில் அதிமதுரக் கவிராயர் எழுந்தார்.

திருமால் அவதாரம் பத்தினையும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள் என்று கூறி விட்டுப் பெருமிதம் தொனிக்க அமர்ந்தார்.

பத்து பெரும் அவதாரங்களை நான்கு அடி கொண்ட வெண்பாவில் அடக்க முடியுமா?



ஆனால் கவி காளமேகமோ கலங்கவில்லை.

பத்து அவதாரத்திற்கு ஒரு வெண்பா வேண்டுமா என்ன? அரை வெண்பா போதுமே என்றார் அவர்.

கூட்டம் அயர்ந்து போனது.

பாடலைப் பாடினார் காளமேகம்:
ravi said…
மெச்சுபுகழ் வேங்கடவா! வெண்பாவிற் பாதியிலென்

இச்சையிலென் சென்ம மெடுக்கவா – மச்சாகூர்

மாகோலா சிங்காவா மாராமா ராமாரா

மாகோபா லாமாவா வாய்
ravi said…
கூட்டம் திகைத்தது. “மாகோலாசிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய்”! என்ன இது?

காளமேகமே விளக்கினார்:
ravi said…
மெச்சு புகழ் – தேவர் முனிவர் ஆகிய அனைவரும் மெச்சுகின்ற பெரும் கீர்த்தியை உடைய

வேங்கடவா – திருவேங்கடம் உடையானே!

வெண்பாவில் பாதியில் – ஒரு வெண்பாவில் பாதியில்

என் இச்சையில் – எனது விருப்பப்படி

உன் சென்மம் எடுக்க – உன் அவதாரம் பத்தையும் எடுத்துக் கூற

வா – வந்து அருள்வாயாக!

மச்சா – மச்சாவதாரத்தைச் செய்தவனே

கோலா – வராஹாவதாரத்தைச் செய்தவனே

கூர்மா – கூர்மாவதாரத்தைச் செய்தவவே

சிங்கா – நரசிங்கனே

வாமா – வாமனனே

ராமா – பரசுராமா!

ராமா – தசரத ராமா!

ராமா – பலராமா!

கோபாலா – கிருஷ்ணா

மா ஆவாய் – இனி கல்கி அவதாரம் செய்யப் போகின்றவனே!

மச்சம் – மீன்; கூர்மம் – ஆமை; கோலம் – பன்றி; வாமனம் – குறள்; மா- குதிரை (இந்த அவதாரம் இனி செய்யப் போகின்றபடியால் ஆவாய் என எதிர் காலத்தில் கூறினார்

சபையோர் ஆரவாரம் செய்ய அதி மதுரம் தலை கவிழ்ந்தார்.
ravi said…
🌹🌺" *அவமானத்தை ஸ்ரீ கிருஷ்ணனை நினைத்து அமிர்தமாக ஏற்க வேண்டும். அப்போது தான் நம் வாழ்வு அர்த்தமுள்ளதாகும்* ... - *என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺ஒரு மரத்தடியில் அமைதியாக அமர்ந்திருந்த மகான் ஆறுசாமி முன்பாக வந்தான் சம்பத் . அவன் முகத்தில் கோபமும், அவமானத்தின் அறிகுறிகளும் நிரம்பியிருந்தன.

🌺''என் நண்பன் சிவா , பேசக் கூடாத வார்த்தை எல்லாம் பேசி என்னை அவமானப்படுத்தி விட்டான். பதிலுக்கு அவனை நான் எதுவும் பேசவும் இல்லை.

🌺போய்த் தொலைகிறான் என அமைதியாகவும் இருக்க முடியவில்லை. என் கவலை தீர வழி சொல்லுங்கள் சுவாமி'' என வேண்டினான் சம்பத்

🌺புன்னகைத்தபடி, ''கவலைப்பட என்னப்பா இருக்கு?'' என்றார்.
''என்ன சுவாமி இப்படி சொல்கிறீர்கள்...? ஒருவர் திட்டினால் வருத்தம் ஏற்படாதா?''

🌺''நமக்கு ஏன் வருத்தம் ஏற்படணும்...?''
''என்ன சுவாமி குழப்புகிறீர்கள்...''
''திட்டுவது என்றால் என்ன? வெறும் ஒலி தானே... நீ ஏன் அதற்கு மதிப்பு கொடுத்து நேரத்தை வீணாக்குகிறாய்...?''

🌺ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்தான் சம்பத்
மகான் ஆறுசாமி,''நீ பெற்ற அவமானம் என்பது வெறும் ஒலி தான். உடல் மீது ஆசை இருக்கும் வரையில் இந்த ஒலி உன்னை சிரமப்படுத்திக்கொண்டு தானிருக்கும்.

🌺'நான் தேகம் இல்லை; ஆத்மா' என்கிற நினைவு எழுந்தால் எந்த அவமானமும் பாதிக்காது. ஞானம் பெற்ற ஒருவன், தனக்கு கிடைக்கும் பாராட்டுக்களை விஷமாக நினைத்து பயப்பட வேண்டும்;

🌺அவமானத்தை ஸ்ரீ கிருஷ்ணனை நினைத்து அமிர்தமாக ஏற்க வேண்டும். அப்போது தான் நம் வாழ்வு அர்த்தமுள்ளதாகும்...

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 "A simple story to explain that shame should be accepted with nectar thinking of Sri Krishna. Only then will our life be meaningful..." 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Sampath came before Mahan Auruswami who was sitting quietly under a tree. His face was filled with anger and signs of shame.

🌺''My friend Shiva insulted me by saying all kinds of unspeakable words. I didn't say anything to him in return.

🌺 He could not keep calm as he was going away. Sampath prayed, "Swami, tell me the way to get rid of my worries."

🌺 With a smile, he said, "What's there to worry about?"
"What are you saying Swami...? Don't you get upset if someone scolds you?''

🌺''Why should we feel sad...?''
"What are you confusing Swami..."
''What is cursing? It's just a sound... why are you wasting your time giving value to it...?''

🌺 Sampath woke up like a woman without understanding anything
Mahan Aurusamy said, "The shame you have received is just a sound. As long as there is desire for the body, this sound will trouble you.

🌺'I'm not Tegam; No shame can affect you if you remember 'atma'. An enlightened person should fear praise as poison;

🌺 Shame should be accepted as nectar by thinking of Sri Krishna. Only then is our life meaningful...

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
ராமநவமி ஸ்பெஷல் !

சாப்பாட்டில் அதிகம் விருப்பம் உள்ளவர்களை "சாப்பாட்டுராமா!" என கேலி செய்வதுண்டு.
ஸ்ரீ ராமருக்கு இந்த சாப்பாட்டுராமன் என்ற பெயர் எப்படி வந்தது?

இலங்கையில் போர் முடிந்து ராவணனை வதம் செய்தபின் ஸ்ரீ ராமர் சீதை லஷ்மணர் சுக்ரீவர் விபீஷணர் மற்றும் வானரப்படைகளுடன் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில், அயோத்திக்கு செல்லு முன்பாக பரதவாஜ முனிவரை தரிசிக்க விரும்பினார்.
ஆனால் அயோத்திக்குச் செல்ல நேரம் தாமதமானால் பரதன் தீமூட்டி அதில் தான் விழுந்துவிடுவதாய் சொன்னதை நினைத்துப் பார்த்தார். 14 ஆண்டுகள் முடிந்த உடனேயே அண்ணன் வராவிடில் தான் தீயில் விழுந்து மாண்டுவிடுவதாக முன்னமே பரதன் சொல்லி இருந்தான். பரதன் சொன்னதை செய்யக்கூடியவன் என ராமர் அறிவார். ஆனாலும் பரத்வாஜ முனிவரை தரிசிக்காமல் செல்ல மனமுமில்லை. முனிவரை விரைந்து சென்று தரிசித்து பின் அயோத்தி செல்ல முடிவுசெய்தார். பரத்வாஜமுனிவர் ஸ்ரீ ராமர் சீதா பிராட்டியயும் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்.

”இரவாணனை வெற்றிகொண்ட ஸ்ரீராமா! என் ஆஸ்ரமத்திற்கு நீ வந்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்று இரவு இங்கே தங்கிவிட்டு நாளை இங்கு நடக்கும் ததீயாராதனையில் கலந்துகொண்டு (திருமாலடியார்க்கிடும் விருந்துணவு) உணவு உண்டு செல்ல வேண்டும்”என்று கேட்டுக்கொண்டார். ராமரால் முனிவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. ஆனால் அதே நேரம் தன் வருகை தாமதமானால் தம்பி உயிர் துறப்பான் என்றும் அஞ்சினார்.ஆகவே அனுமனை அழைத்தார்.

”அஞ்சனைகுமாரனே !என் அருமை பக்தனே! எனக்காக நீ பரதனிடம் சென்று நான் எல்லோருடனும் வந்துகொண்டிருப்பதை சொல்லி விட்டுவா.வாயு புத்திரனான நீ இதை காற்றாய் ஓடிச்சென்று முடித்து உடன் இங்குவரவேண்டும்”. அனுமன் அண்ணல் சொன்ன சொல்லை நிறைவேற்ற இறைப்பொழுதில் அங்கிருந்து அகன்றான்.

மறுநாள்...

விருந்திற்காக இலையினைப் போட்டார் முனிவர் பெருமான். அனைவரும் அமர்ந்துவிட்டனர். அனுமன் பரதனை சந்தித்துவிட்டு வந்துவிட்டான் அனுமன் விருந்துக்குவருவாரென முனிவர் நினைக்கவில்லை.அனுமனுக்கு இலை எதுவும் காலி இல்லை. ராமன் அன்புடன்.அனுமனை தன் இலைக்கு எதிர்ப்புறம் அமரச்சொல்கிறார். அனுமன் காய் பழங்களைத்தான் உண்பார் என ராமருக்குத்தெரியும் ஆகவே பரிமாறுபவர்களிடம் இலையின் மேல்பக்கத்தில்(அனுமன் அமர்ந்த திசையில் அல்லது அவருக்கு அருகிலிருந்த இடத்தில்) காய் பழங்களைபரிமாரச்சொல்கிறார். அரிசி சாதம் மற்ற உணவு வகைகளைத் தன் பக்கம் போட சொல்கிறார். இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டு முடிக்கின்றனர். சாப்பாட்டிற்காக முனிவர் கேட்டுக்கொண்டார் என்று தன் பயணத்தின் இடையே தங்கி சாப்பாட்டினை முடித்துக் கொண்டதால் ராமர் சாப்பாட்டு ராமன் ஆகிறார் ..அப்படியே காலபோக்கில் சாப்பாட்டில் விருப்பம் உடையவர்களை இப்படிப் பெயரிட்டு அழைப்பது வழக்கமாகிவிட்டது.

ஸ்ரீ ராம ஜெயம் !!!!
ravi said…
பாதாரவிந்த சதகம் !

99.யச: ஸூதே மாதர் மதுர-கவிதாம் பக்ஷ்மலயதே
ஸ்ரியம் தத்தே சித்தே கமபி பரிபாகம் ப்ரதயதே
ஸதாம் பாசக்ரந்திம் சிதிலயதிதே கிம்ந குருதே
ப்ரபன்னே காமாக்ஷி ப்ரணதி-பரிபாடீ சரணயோ:

அன்னையே காமாக்ஷியான உனது திருவடிகளில் பணிவதாகிய முறை, உன்னைச்சரணடைந்தவனிடம் எதை எதைத்தான் செய்யவில்லை ? நல்லோருக்குப் புகழைத் தருகிறது. இனிய கவிதையை சிலிர்க்கச் செய்கிறது. செல்வம் தருகிறது. உள்ளத்தில் ஒரு கனிவை வெளிப்படுத்துகிறது.ஆசைச் சிக்கலை தளர்த்துகிறது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…

பழனிக் கடவுள் துணை -13.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-86

மூலம்:

புகலிப் பனவனன்னான் பூதலத்திற் றோன்றி
இகல்முற்ற வென்றிடுதல் என்றோ – தகரிற்
றிரிவானே! தென்பழனிச் சேவகனே! செஞ்சொற்
பரிவானே! உண்மை பகர் (86).

பதப்பிரிவு:

புகலிப் பனவன் அன்னான் பூதலத்தில் தோன்றி
இகல் முற்ற வென்றிடுதல் என்றோ? – தகரில்
திரிவானே! தென்பழனிச் சேவகனே! செஞ்சொல்
பரிவானே! உண்மை பகர்!! (86).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

புகலிப் பனவன்- சீர்காழியில் பிறந்த ஞானசம்பந்தர்; இகல்- பகை;

ஆட்டுக்கிடா வாகனத்தில் வலம் வருபவனே! தென்பழனிச் சேவகனே! செம்மையான தமிழ்ச் சொற்களில் தீராக் காதல் கொண்டோனே! சீர்காழியில் பிறந்த ஞானசம்பந்தர் பெருமான், இந்தப் பூவுலகில் தோன்றி, சமணர்களின் பகையை ஒழித்து, சைவத்தையும் தமிழையும் தழைக்க வைத்தார் என்று சொல்லலாகுமா? அவர் செய்த அதிசயங்கள் எல்லாம், முருகப் பெருமானே! நீ தானே அவராய் அவதரித்துச் செய்தவை? பழனிப் பெருமானே! இந்த உண்மையைச் சொல் ஐயா!

*இகலாரின் இகலொழித்து, இகலாட்டத்தில் எனக்கு இகல் அளித்து, இகலற்றக் கருணை செய்! இகல் பழனியின் இகலோனே!

*இகல்-பகை; போர்; வலிமை; அளவு; இகலார்-- பகைவர்; இகலாட்டம்- போட்டி;

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
*காள மேகம் கவித்திறன் 2* ( முன்பு மடப்பள்ளி வரதன் ....திருவானைக்கோயில்)
ravi said…
ஒரே வெண்பாவில் 12 ராசிகளை அடக்குங்கள்!

இராசிகளின் பெயர்களை ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள்!

அடுத்தாற்போல ஒரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.

ஒரு வெண்பாவில் அனைத்து ராசிகளும் வரவேண்டும்.

முறையும் தொகையும் இருக்க வேண்டும்.

ஆனால் எந்த அடைமொழியும் இருத்தல் கூடாது.

பாடுங்கள் பார்ப்போம் என்றார்.

காளமேகம் சிரித்தார். பாடலைப் பகர்ந்தார்:
ravi said…
பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க

டகஞ்சிங்க கன்னி துலாம்விர்ச் – சிகந்த

நுசுமகரங் கும்பமீ னம்பன்னி ரண்டும்

வசையறு மிராசி வளம்
ravi said…
மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் (சிங்கம்), கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் , மீனம் ஆகியவை பன்னிரெண்டும் ராசி வளம்.

கூட்டம் ஆரவாரித்தது.
ravi said…
[13/03, 09:36] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 107*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

*95*
[13/03, 09:36] Jayaraman Ravilumar: लोहितिमपुञ्जमध्ये मोहितभुवने मुदा निरीक्षन्ते ।

वदनं तव कुवयुगलं काञ्चीसीमां च के‌உपि कामाक्षि ॥95॥

95. Lohihima puncha madhye mohitha bhuvane mudhaa nireekshanthe,

Vadanam thava kucha yugalamKanchi seemaam cha keapi Kamakshi.

லோஹிதிமபுஞ்ஜமத்யே மோஹிதபுவனே முதா னிரீக்ஷன்தே |

வதனம் தவ குவயுகலம் காஞ்சீஸீமாம் ச கே‌உபி காமாக்ஷி ||95||
ravi said…
மூகர் மனதில் அம்பாள் திடீரென்று காமகலா வாக தோன்றிவிட்டதன் விளைவாக அவளை வர்ணிக்க தொடங்கி விட்டார்.

எளிதில் புலப்படாத துரீய ஸ்வரூபம். உருவம்.

அவளது முகம் மார்பகம், வயிறு, அடிவயிறு இவற்றை எல்லாம் பிந்துக்களாக மனதில் கொண்டு அனாகத சக்ரத்தில் அவளைத் தேடி நமஸ்கரிக்கிறேன் என்கிறார். 🙏🙏🙏
ravi said…
[13/03, 09:34] Jayaraman Ravilumar: 💐💐💐

*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 512* 🙏🙏🙏started on 7th Oct 2021

*228 வது திருநாமம்*
[13/03, 09:35] Jayaraman Ravilumar: *228 महायन्त्रा - மஹாயந்த்ரா --*

அம்பாளைதான் சக்தி வாய்ந்த யந்திரங்கள் குறிக்கின்றன.

ஸர்வ யந்த்ராத்மிகே என அவளைத்தானே மந்த்ரங்கள் போற்றுகின்றன.

மகா யந்த்ரம் தான் ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்ரீ சக்ரம்.
ravi said…
[12/03, 17:48] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 108 started on 6th nov

*பாடல் 33 ... சிந்தாகுல*

(பந்தத்தின்று எனைக் காவாய்)

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்

விந்தாடவி என்று விடப் பெறுவேன்

மந்தாகினி தந்த வரோதயனே

கந்தா, முருகா, கருணாகரனே🥇
[12/03, 17:49] Jayaraman Ravilumar: மனதிற்கு இசைந்த அழகிய மனைவி மக்களுடன் நடத்தும்
இல்வாழ்க்கையை எப்படி சிந்தாகுல இல் என அருணகிரியார் கூறலாம்
என சிலர் எண்ணலாம்.

எவ்வளவுதான் மனைவியும் மக்களும்
சுற்றத்தாரும் மனதிற்கு இசைய வாய்க்கப் பெற்றாலும்

முடிவில்
அவர்களால் கிடைத்த சுகத்தைக் காட்டிலும் அவர்களைக் காப்பாற்ற
நாம் பட்ட கஷ்டமே அதிகம் என்பது கண்கூடு.

மனைவி என்கிற
பந்தம் நீண்டுகொண்டேபோய் மக்கள், பேரன் பேத்திகள் என
வளர்ந்து கொண்டே போகும். இதையே அருணகிரியார்,

இவ்வகையாவுங் கிடைத்துக் கிரஹவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயி ரவமே போம்

... என்கிறார் கதிர்காமத் திருப்புகழில் ('உடுக்கத்துகில்
ravi said…
[12/03, 17:45] Jayaraman Ravilumar: வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

*ஸமாத்மா* ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[12/03, 17:47] Jayaraman Ravilumar: *108. ஸமாத்மநே நமஹ (Samaathmane namaha)*

ஏகாதசி விரதம் அநுஷ்டிப்பதன் பலன்களைப் பற்றி வியாசர் விளக்க அதைப் பாண்டவர்களும் குந்தியும் கேட்டார்கள்.

எப்போதும் உணவருந்திக் கொண்டே இருப்பவனான பீமனுக்கு விரதம் இருப்பது என்பது கற்பனையிலும் முடியாத காரியம்.

அவனை ஏகாதசி விரதம் அநுஷ்டிக்க வைப்பது எப்படி என்று வியாசரிடம் குந்தி வினவ,
வியாசர்,

“ஏகாதசியன்று தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பிருப்பது மிகவும் உயர்ந்தது.

அது முடியாதவர்கள் தண்ணீர், பால், மோர் முதலிய நீர் ஆகாரங்களை உட்கொள்ளலாம்.

அதுவும் முடியாதவர்கள், பழங்களை உட்கொள்ளலாம்.

அதுவும் முடியாதவர்கள், அரிசியால் ஆன பொருட்களை முழுவதுமாக ஒதுக்கி விட்டு மற்ற பொருள்களை உப்பில்லாமல் சாப்பிடலாம்.

அதுவும் முடியாதவர்கள், அரிசியை உடைத்துச் செய்யும் கேசரி உள்ளிட்ட உணவுகளை உட்கொள்ளலாம்.

ஆனால் முழு அரிசியைச் சேர்த்துக் கொள்ளவே கூடாது.

நீங்கள் பீமனை இந்த ரீதியில் படிப்படியாக விரதம் இருக்கச் சொல்லுங்கள்.

நாளடைவில் தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பிருக்கப் பழகிக் கொள்வான்!” என்றார்.
ravi said…
நாட்டை ஆளும் உரிமையையும் அதோடு பெரும் செல்வத்தையும் பரத நம்பிக்கே அருளி தீராத அன்பு கொண்ட இளைய பெருமாள் இலக்குவனோடு அரிய காட்டை அடைந்தவனே!

அழகை ஆளும் மலை போன்ற மார்பினை உடையவனே!
திருக்கண்ணபுரத்தரசே!

தார் (மாலை) அணிந்த நீண்ட திருமுடியை பூண்ட என் தசரதன் மகனே! *தாலேலோ* !

சுற்றம் (ஊரார் உறவினர்) எல்லாம் பின் தொடர்ந்து வர

தொன்மையான காட்டை அடைந்தவனே!

வேறு கதி அற்றவர்களுக்கு அரிய மருந்து போன்றவனே

(எல்லாம் தரும் அமுதம் போன்றவனே)!

அயோத்தி நகருக்கு உரிமையானவனே!

கற்றவர்கள் என்றும் வாழும் திருக்
கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே!

சிற்றன்னையாம் கைகேயியின் கட்டளையைத் தலை மேல் கொண்ட சீராமா! *தாலேலோ!*

🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இதனாலேதான் மற்ற எந்த தேசத்திலும் ‘டீச்சர்’ என்பதற்கும், நம் தேசத்தில், ‘குரு’, ‘ஆசார்யர்’ என்று சொல்வதற்கும் மதிப்பு மரியாதைகளிலே அஜகஜாந்தரமாக இருக்கிறது. ‘டீச்சர்’ என்பவன் ஈச்வரனே, அல்லது அவனுடைய பிரதிநிதி, அவனிடம் மாணவன் ஸர்வஸங்க பரித்யாகம் செய்துவிட வேண்டும் என்ற அபிப்ராயங்கள் மற்ற தேசத்துக்காரர்களுக்கு அடியோடு தெரியாது. ஏதோ ‘அவன் ரொம்பக் கெட்டிக்காரன். அநேக விஷயங்கள் தெரிந்து கொண்டிருக்கிறான், தெரிந்துகொண்டதோடு அதைப் பிறருக்கும் அழகாகச் சொல்லிக்கொடுக்கத் திறமை பெற்றிருக்கிறான்’ என்பதோடு நிறுத்திக்கொண்டார்கள்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இதனாலேதான் மற்ற எந்த தேசத்திலும் ‘டீச்சர்’ என்பதற்கும், நம் தேசத்தில், ‘குரு’, ‘ஆசார்யர்’ என்று சொல்வதற்கும் மதிப்பு மரியாதைகளிலே அஜகஜாந்தரமாக இருக்கிறது. ‘டீச்சர்’ என்பவன் ஈச்வரனே, அல்லது அவனுடைய பிரதிநிதி, அவனிடம் மாணவன் ஸர்வஸங்க பரித்யாகம் செய்துவிட வேண்டும் என்ற அபிப்ராயங்கள் மற்ற தேசத்துக்காரர்களுக்கு அடியோடு தெரியாது. ஏதோ ‘அவன் ரொம்பக் கெட்டிக்காரன். அநேக விஷயங்கள் தெரிந்து கொண்டிருக்கிறான், தெரிந்துகொண்டதோடு அதைப் பிறருக்கும் அழகாகச் சொல்லிக்கொடுக்கத் திறமை பெற்றிருக்கிறான்’ என்பதோடு நிறுத்திக்கொண்டார்கள்.
ravi said…
டீச்சராக இருக்கப்பட்டவனும் தன்னை அப்படித்தான் நினைத்துக்கொண்டு அந்த மாதிரி தன்னை வளர்த்துக் கொள்வதோடு நின்றுவிட்டான்.

நம் தேசத்திலோ பொருளுக்காக வித்யோபதேசமில்லை என்பதிலிருந்து, ஆசார்யனாகப்பட்டவன் ரொம்பவும் தூய வாழ்வு வாழ்ந்து ஆத்மாநுபவியாகவே இருக்கவேண்டும்மென்ற அளவுக்கு அவனுடைய யோக்யதாம்சம் ரொம்பவும் உச்சத்துக்குப் போய்விட்டது. புத்திசாலித்தனம், நிறைய விஷயம் தெரிந்துகொண்டிருப்பது, அதை எடுத்துச்சொல்லிப் புரியவைக்கிற ஸாமர்த்யம் எல்லாம் மூளையின் கார்யங்கள். மற்ற தேசங்களைப் போல இந்த மூளைச் சிறப்போடு மட்டும் நம் தேச ஆசார்யன் நின்றுவிடவில்லை. அவன் வாழ்க்கையில் பரிசுத்தனாயிருக்கவேண்டும்; வேதம் சொல்லிக் கொடுக்கிறானே, அதன்படி வழுவாமல் கர்மாநுஷ்டானம் செய்பவனாயிருக்க வேண்டும் என்றும் வைத்தார்கள்.

ravi said…
மூன்று லக்ஷணம் உள்ளவர்தான் ‘ஆசார்யர்’ என்று வைத்தார்கள். ஒன்று, சாஸ்திர ஸித்தாந்தத்தை நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கவேண்டும் (“ஆசிநோதி ஹி சாஸ்திரார்த்தம்”); இரண்டு, தெரிந்ததை வாழ்க்கையில் நடத்திக்காட்டும் ஆசார ஸம்பந்தராக இருக்கவேண்டும் (“ஸ்வயம் ஆசரதே”); மூன்று, இப்படித் தனக்குத் தெரிந்து, அநுஷ்டிக்கும் சாஸ்திரத்தைப் பிறருக்கும் (கற்றுக்கொடுத்து) அவர்களையும் ஆசார வாழ்க்கையில் நிலைநாட்டவேண்டும் (“ஆசாரே ஸ்தாபயத்யபி”). தெரிந்துகொண்டு மட்டுமிருப்பவர் ‘வித்வான்’ – அவருக்கு ‘ஆசார்யர்’ என்ற ஏற்றம் கிடையாது. கற்றுக்கொடுக்காமல் தான் மட்டும் சாஸ்திரோத்தமாய், அதன் தத்தவத்தை உணர்ந்து வாழ்பவரை ‘அனுஷ்டாதா’ என்றும், இன்னம் உயர்ந்தால் ‘அநுபவி’ என்றும்தான் சொல்வார்களே தவிர ‘ஆசார்யர்’ என்று சிறப்பிக்க மாட்டார்கள். வாழ்க்கையில் நடத்திக் காட்டாமல், தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிகொடுப்பவரை ‘பிரசாரகர்’ என்பதற்கு மேல் சொல்வதற்கில்லை. மூன்றும் சேர்ந்தாலே ‘ஆசார்ய’ பட்டம்.

கசடறக் கற்றபின் அதற்குத் தக்கபடி ஒருத்தன் வாழ்க்கை நடத்தவேண்டும்–“நிற்க அதற்குத் தக“– என்று திருவள்ளுவர் சொன்னார். இப்படி, தான் கற்று கற்றவழி நிற்பதோடு பிறருக்கும் கற்பித்து கற்பிப்பதோடு விடாமல் அவர்களும் கற்றவழி நிற்க ‘ட்ரெயின்’ செய்கிறவன்தான் ஆசார்யன். அப்படி அநேகர் இருந்து வந்திருப்பதுதான் நமக்குப் பெருமையிலெல்லாம் பெரிய பெருமை.

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று ரொம்பவும் பெரியவரான அந்த வள்ளுவரே சொல்லி விட்டார். அப்படிப்பட்ட பொருளைப் பொருட்டாக நினைக்காமல், ‘வித்யை வளரணும் என்பதற்காகவே பாடம் சொல்லிக் கொடு’ என்று இவனுக்கு விதி செய்து இவனை த்யாக சிந்தையில் நன்றாக ஊறப் போட்டார்கள். த்யாக சிந்தை வந்து லோகோபாகாரமாகவே நிஷ்காம்ய கர்மா ஒருத்தன் பண்ண ஆரம்பித்துவிட்டால் அப்புறம் அவனிடம் எல்லா ஆத்மா ஸம்பத்துகளும் ஒன்று பாக்கியில்லாமல் வந்துவிடும். “த்யாகத்தினாலேயே பலபேர் அம்ருதத்வத்தை அடைந்திருக்கிறார்கள்” என்று ச்ருதியே சொல்கிறது. 1

நிரம்பக் கர்மாநுஷ்டானங்களைப் பண்ணி அதனால் ஏற்படும் சித்த சுத்தியோடுகூட பொருள்பற்று இல்லாமல் நிஸ்ப்ருஹனாக ஒருத்தன் ஊரான் வீட்டுப் பசங்களைத் தன் பர்ணசாலையிலேயே வைத்துக்கொண்டு ஸதா ஸர்வதா வித்யாதானம் பண்ணி வந்ததனால்தான் அவன் உயர்ந்த ஆத்மா ஸம்பத்துக்களைப் பெற்றுத் தானாகவே நிரம்ப ரெஸ்பெக்ட் கம்மாண்ட் பண்ண முடிந்தது. விஷயம் நன்றாகத் தெரிந்த புத்திமான் என்பதற்காக மாத்திரம் ஒருத்தனை ‘தெய்வமாய் நினை, அவனிடமே ஸர்வ ஸங்க பரித்யாகம் பண்ணு’ என்றால் யார் கேட்பார்கள்? அவனிடம் தூய்மையான வாழ்க்கை, த்யாக புத்தி, ஊரான் வீட்டுக் குழந்தைகளைத் தன் வயிற்றில் பிறந்த குழந்தைகளாக நினைத்துப் பராமரிக்கிற அருளியல்பு முதலானதுகளும் நம் தேசத்தில் இருந்ததால்தான் சிஷ்யர்கள் அவனை ஈச்வரனாக நினைத்து சரணாகதி செய்ய முடிந்தது. இப்படி வேறெந்த நாட்டிலும் பார்க்க முடியாது.(இன்று அனுஷம்)
ravi said…
கலா = முழுமையின் ஒரு கூறு

❖ *140 நிஷ்கலா =*

முழுமையின் வடிவம் - பூரணத்தின் தத்துவமானவள் குறிப்பு:

"நிர்"- நிஷ் போன்ற பதங்கள் முற்சேர்க்கைகளாக (prefix) வரும் பொழுது, தொடர்ந்து வரும் பெயரடை அல்லது வினைச்சொற்களின் பொருளை 'இல்லை' என மறுக்கும் கூற்றாக உணரப்படுகிறது.🥇🥇🥇
ravi said…
*அம்மா*

மதியும் நீயே ... கதிரும் நீயே ...

கதிரின் ஆயிரம் கரங்கள் நீ யே

ஆயிரம் கரங்கள் நீண்டு கோடி வணங்கும் தாயும் நீயே

கோடி தாய்கள் சேர்ந்து

கோடி கோடி ஆனாலும்

தேடி தேடி அலைந்தாலும்

உன் போல் அன்னை காண்பாரோ ...

புயலும் நீயே பொதிகை தென்றலும் நீயே

பூவும் நீயே பூவின் மணமும் நீயே

நாராக நானும் சேர்ந்து நலமடைய வைத்தாயே

நல்லதே எண்ணும் படி உள்ளம் அதை செப்பனிட்டு வைத்தாயே

கல்லாய் சமைத்து நின்றேன்

கல்லில் கனி சுவை சேர்த்து

செதுக்கி உன் பக்கம் சேர்த்தாயே

நன்றி எனும் மூன்று எழுத்தில் மூச்சு முட்ட உனை அழுத்த முடியுமோ அம்மா ..

செய்த தவம் தீர்ந்து போனால் மீண்டும் கோடி தவம் செய்ய அருள்வாய் ஆடலரிசியே 🙏🙏🙏
ravi said…
[13/03, 07:21] Jayaraman Ravilumar: அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

97 –
வீடு விட்டு ஈர்த்து உளவீடு புக்குப் பைய உன்
வீடு காட்டினை அருள் அருணாசலா (அ)
[13/03, 07:23] Jayaraman Ravilumar: *Meaning* :

Making me get out of the house , slowly entering my heart home , You showed me the Real Home *Arunachala*🙏🙏🙏
ravi said…
*அருணாசலா* ...

கல்லால் மண்ணால் சிமெண்டால் , இரும்பு கம்பிகளால் , பனை ஓலைகளால் கட்டிய வீடு நிரந்தரமோ *அருணாசலா*

கட்டிய வீடு ஒரு காற்றினால் அசையாதோ ...

ஒரு சுனாமியினால் அழியாதோ ...

தீயினால் பொசுங்காதோ *அருணாசலா*

உள்ளத்தில் பூசலார் போல் கட்டினேன் ஓர் இல்லம் ...

என் வாயை கோபுர வாசல் ஆக்கினேன்

என் நாக்கை உனை தொழும் நந்தியாக்கினேன் ...

கரங்கள் இரண்டை கோயில் சன்னதி ஆக்கினேன்

கால்கள் இரண்டை வாசல் சுத்தம் செய்யும் காவல் புரிய வைத்தேன் ..

பாமாலை கொண்டு தினம் பூமாலை சாத்தினேன் ...

உண்ணும் உணவை உன் பிரசாதம் ஆக்கினேன் ..

கண்கள் இரண்டும் கொட்டும் கண்ணீரை உன் அபிஷேக நீராக்கினேன் ..

நாசி தனை உன் நாமம் சுவாசிக்கும் அகர் பத்தி ஆக்கினேன் ..

உள்ளமதில் கற்பூரமாய் எரிகின்றாய் ...

மணி அடிக்க ஆரத்தி காட்ட நான்கு கால பூஜை தினம் நடக்கும் அங்கே ...

அதுவே இல்லம் அதுவே நிரந்தரம் ...

உடல் அழியினும் ஆத்மா செய்யும் உனக்கு எந்நாளும் ருத்ர பூஜை *அருணாசலா*🙏🙏🙏
ravi said…
பாதாரவிந்த சதகம் !

100.மநீஷாம் மாஹேந்த்ரீம் ககுபம் இவ தே காமபி தசாம்
ப்ரதத்தே காமாக்ஷ்யா: சரண தருணாதித்ய கிரண:
யதீயே ஸம்பர்க்கே த்ருத ரஸமரந்தா கவயதாம்
பரீபாகம் தத்தே பரிமலவதீ ஸூக்தி நலினீ

காமாக்ஷியின் சரணம் என்கிற இளஞ்சூரிய ஒளிக்கதிர், கிழக்கு திக்கை ஒளியடைவிப்பது போல் என் அறிவை ஒப்பற்றதொரு தனிநிலையை அடையச் செய்கிறது. அதன் தொடர்பால், கவிகளின் கவிதையாகிற தாமரை தேனைப்போல் சுவைகொண்டு நறு மணத்துடன் ஒரு தனிக்கனிவைப் பெறுகிறது .

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺 "About 400 years ago Kannanur Mariamman temple... - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺Trichy Samayapuram Mariamman is believed to be the place where a Chola king built a city and a fort as a gift to his younger sister.

🌺Later, it is said that due to the invasion of the Pandya kings, it was destroyed and turned into a Vembukad, and subsequently the Amman temple was built there.

🌺 Vainavi Mariamman statue was in Srirangam. Unable to bear its ferocity, Jeer Swami ordered the idol to be removed from there. According to his orders, those who came to dispose of the idol of Vainavi went north and rested at the present Inam Samayapuram a little distance away.

🌺Then they took it and came to the southwest and left it on the Kannanur palace mound where the present Mariamman temple is located.

🌺 At that time, the passers-by passing through the forest were amazed to see the image and gathered the villagers from the neighborhood and named it "Kannanoor Mariamman" and started worshiping it.

🌺 At that time the king of Vijayanagara invaded the south and camped at Kannanur. Then they worshiped Mariamman and vowed to build a temple for the Goddess if they were victorious in the south. Accordingly, to win, they built the temple.

🌺Vijayarenga Chokanatha Nayak during the period of B.U. Historical evidence says that they built a separate temple for Amman in 1706.

🌺The Kannanur Mariamman Temple, which was established about 400 years ago, is now famous as "Samayapuram Mariamman" Temple.🌹🌺

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில்* .... *பற்றி* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கருதப்படுகிறது.

🌺பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும், தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது.

🌺வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள்.

🌺பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர்.

🌺அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர்.

🌺அக்காலகட்டத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றி பெறவே, கோயிலைக் கட்டினார்கள்.

🌺விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் பொ.ஊ. 1706-ல் அம்மனுக்குத் தனியாக கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

🌺சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று, ”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது.🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

பூர்த்தம் காதாதி கர்ம யத் என்று ஸம்ஸ்க்ருத டிக்ஷனரியான ‘அமர’த்தில் சொல்லியிருக்கிறது. ‘காதம்’ முதலான கர்மாக்கள் பூர்த்தம் ஆகும் என்று அர்த்தம்.

காதம் என்றால் வெட்டுவது; அதாவது குளமோ, கிணறோ, வாய்க்காலோ வெட்டி உபகாரம் பண்ணுவது. சாஸ்திரங்களில் விசேஷித்துச் சொல்லியிருக்கிற இந்தப் பூர்த்த தர்மத்தை மறந்தால்தான் ஜலக்கஷ்டம் (Water scarcity) என்று ஓயாமல் அவஸ்தைப் படுகிறோம். அந்தக் காலத்தில் இந்தக் கார்யம் ரொம்பவும் முக்யமாகக் கருதப்பட்டதால்தான் நாம் கூப்பிட்டு ஒருத்தன் வரவில்லை என்றால், ”அவன் அங்கே என்ன வெட்டிக் கொண்டிருக்கிறானோ?” என்று கேட்கிற வழக்கம் வந்திருக்கிறது. அதாவது அவன் வெட்டிக் கொண்டிருந்தால் மட்டும் நாம் எத்தனை அவஸரத்தில் கூப்பிட்டாலும் வராமலிருக்கலாம் என்று அர்த்தமாகிறது!

ravi said…
இப்போது வெட்டுகிற கார்யம் போய், தூர்ப்பது தான் முக்யமான கார்யமாக இருக்கிறது! குழாயில் தண்ணீர் நின்றுவிட்டாலோ அல்லது பூச்சியும் புழுவுமாகக் குழாய் ஜலம் வரும்போதோ, ”ஏண்டா குளத்தைத் தூர்த்தோம், கிணற்றை மூடினோம்?” என்று துக்கமாக வருகிறது.

ravi said…
முன்பெல்லாம் ஒரு குளம் என்றால் வாய்க்கால்கள், வடிகால்கள் என்றெல்லாம் போட்டு வெகு சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். கிணறு என்றால் இழுக்கத் தெரிந்த மநுஷ்யனுக்கு மட்டும்தான் அது ப்ரயோஜனமாகும். குளமானாலோ வாயில்லா ப்ராணிகளுக்கும்–காக்காய், குருவி முதற்கொண்டு ஸகல ஜீவராசிகளுக்கும்–அது பயன்படும்.

ravi said…
பாதை போடுவது ஒரு தர்மம். வ்ருக்ஷம் வைப்பது இன்னொரு தர்மம். புதிதாக வைப்பதோடு, இருக்கும் வ்ருக்ஷங்களை வெட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக வைக்கிற செடிக்கு தினம் ஜலம் விட்டு, அது வ்ருக்ஷமாக வளரப் பண்ண வேண்டும். ”வனமஹோத்ஸவம்” என்று இன்றைக்குப் பெரிய மநுஷர்கள் வந்து செடி நட்டுவிட்டு நாளைக்கே அதற்கு ஜலம் விட ஆள் இல்லாமல் அது பட்டுப்போனால் என்ன ப்ரயோஜனம்? இதுமாதிரி டெமான்ஸ்ட்ரேஷன், வெளிவேஷம் நமக்கும் உதவாது, லோகத்துக்கும் உதவாது. இதற்குப் பதில் யாருக்கும் தெரியாமல் ஒருத்தன் ஏதோ ஒரு ஒற்றையடிப் பாதையில் உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால், அதுவே மற்றவர்களுக்கு வழியை சுத்தி பண்ணுவதோடு இவனுக்கும் சித்த சுத்தியைக் கொடுத்துவிடும்.

ravi said…
ஒவ்வோர் அவயவத்தாலும் ஏற்படக்கூடிய தோஷத்தைப் போக்கிக்கொள்ள அந்த அவயவத்தாலேயே செய்யக்கூடிய புண்ய கர்மாக்கள் இருக்கின்றன. குப்பைத் தொட்டியான மனஸை சுத்தம் பண்ண அந்த மனஸாலேயே த்யானம் செய்ய முடிகிறது. கண்டதைப் பேசுகிற நாக்கை சுத்தப்படுத்திக் கொள்ள அந்த நாக்காலேயே பகவந்நாமாவைச் சொல்ல முடிகிறது. குயுக்தி எல்லாம் பண்ணும் மூளையை சுத்தமாக்கிக் கொள்ள அந்த மூளையாலேயே தத்வ ஆராய்ச்சி பண்ண முடிகிறது. இப்படியே, இந்த சரீரத்தால் – கையாலும், காலாலும், உடம்பாலும் எத்தனையோ தப்பு தண்டா பண்ணுகிறோமல்லவா? அதை இந்த சரீரத்தாலேயே தான் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். சரீரப் பிரயாஸையாலேயே பண்ணிக்கொள்ளும் இந்த சுத்திதான் பொதுக்கார்யங்களான பூர்த்த தர்மங்கள்-ஸோஷல் ஸர்வீஸ்-அத்தனையும், சரீரப் பிரயாஸையாலேயே இது சித்த சுத்தியையும் தரக்கூடியது. ஏனென்றால் சரீரத்தால் செய்கிற இந்தக் கார்யங்களுக்கு மூலமாகப் பரோபகாரம் என்ற எண்ணம் நம் சித்தத்தில் இருப்பதுதான்.

ravi said…
தயை என்பது ஒவ்வொருவர் மனஸிலும் இருக்க வேண்டிய உயர்ந்த குணம். அந்த தயைக்கு உருக்கொடுக்கும்படியான ஒரு கார்யத்தை சரீரத்தினாலும் அவசியம் செய்ய வேண்டும்.

* * *

விநோபா ‘ச்ரம்தான்’ (ச்ரம தானம்) என்று சொல்லி வருகிறாரே, இதைத்தான் பூர்த்த தர்மம் என்று நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. வாரத்தில் ஒரு நாளாவது இந்த சரீர கைங்கர்யத்தை ஸகல ஜனங்களும் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. யாராயிருந்தாலும் வாரத்துக்கு ஒரு நாள் ஹாலிடே (விடுமுறை) இருக்கிறதல்லவா? அன்றைக்கு லோகோபகாரமாக சரீரத்தால் ஒரு பொதுப்பணி செய்ய வேண்டும். மனப்பூர்த்தியுடன், அல்லது மனப் பூர்த்திக்காக பூர்த்த தர்மம் பண்ண வேண்டும்.

ravi said…
அவரவருக்கும் எத்தனையோ குடும்பக் கார்யங்கள் இருக்கும் என்பது வாஸ்தவம்தான். இந்தக் கார்யங்களை லீவு நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் வைத்திருப்பார்கள். ஆனாலும் இதோடுகூட பார்வதீ-பரமேஸ்வராளின் பெரிய லோக குடும்பத்துக்கும் தன்னாலானதை ஒரு ‘ட்யூட்டி’யாக செய்யத்தான் வேண்டும். இதற்காக அதையும் விடக்கூடாது. அதற்காக இதையும் விடக்கூடாது. கொஞ்ச நேரமாவது இந்தப் பரோபகாரப் பணி புரிய வேண்டும்.

ravi said…
சரீர கைங்கர்யம் உடம்புக்கே ஒரு நல்ல exercise (அப்யாஸம்) . அதோடு பரோபகாரமாகப் பண்ணுகிற போது மனஸுக்கும் அலாதியான உத்ஸாஹம் இருக்கும். முடிவில் சித்த சுத்தியைத் தரும்.

ஸங்கமாகச் செய்ய வேண்டும். உதிரி உதிரியாக அவரவர்கள் செய்வதைவிட எல்லாரும் சேர்ந்து செய்தால் ஜாஸ்தி உபகாரம் பண்ண முடியும்.

அதுவும் இந்தக் கலிகாலத்தில் பலர் கூடிப் பண்ணுவதுதான் பலன் தரும்- கலௌ ஸங்கே சக்தி: என்றே வசனமிருக்கிறது. முன் யுகங்களில் individual -ஆக ஒவ்வொருத்தனுக்கும் தேஹ, மனோ சக்திகள் அதிகமிருந்தன. இப்போது அது போய்விட்டது. அதனால்தான் நாமும் பார்க்கிறோம், எல்லா mass movement -களாகவே (வெகுஜன இயக்கங்களாகவே) இருப்பதை அநேகமாக, ‘கலி’ என்றாலே சண்டை, சச்சரவு என்று அர்த்தமிருப்பதற்குப் பொருத்தமாக இந்த ஸங்க சக்தி மறியல் ‘ஒழிக’ ஊர்வலம் நடத்துவது, ரயிலைக் கொளுத்துவது முதலான காரியங்களுக்குத்தான் பிரயோஜனப்படுகிறது!

ravi said…
இந்த ஸங்க சக்தியை இனிமேலாவது நாம் நல்லதற்கு channelise பண்ணி ஸமூஹப் பணிகளை விருத்தி செய்ய வேண்டும்.

ஸங்கமாகச் சேர்ந்து தொண்டு செய்கிறவர்களுக்கு அத்யாவசியமாயிருக்க வேண்டிய யோக்யதாம்சங்கள்: அவர்களுக்குக் கட்டுப்பாடு (நியமம்) ரொம்பவும் தேவை. எடுத்துக்கொண்ட வேலையில் கொஞ்சம்கூடப் பொறுப்பு குறையக்கூடாது. ஸத்தியமும், அந்தரங்க சுத்தமும் இதுபோலத் தேவை. அன்போடு மதுரமாகப் பேசவும் பழகவும் வேண்டும். பணத்தைக் கையாளுவதில் அப்பழுக்கில்லாதவர்கள் என்ற நம்பிக்கையை உண்டு பண்ணக்கூடியவர்களாக இருக்கணும். நியாயமாக ஸந்தேஹப்படுபவர்களிடம் பொறுப்பில்லாமலோ, பொறுமையிழந்தோ பதில் சொல்லக்கூடாது. அதே ஸமயத்தில் அநேக ஸந்தேஹப் பிராணிகள் ஏதாவது ரூமர் கிளப்பிக் கொண்டிருக்கிறார்களே என்பதற்காக ”நமக்கென்னத்துக்கு ஊரான் பாடு?” என்று பொதுத் தொண்டை விட்டு விடவும் கூடாது. அதாவது ஸ்வயமான அவமானங்களை பாராட்டிக் கொண்டிராத மனப்பான்மை வேண்டும். நகரமானால் ஒரு பேட்டையில் இருப்பவர்களெல்லாம் சேர்ந்து செய்யலாம். க்ராமமானால் நாலு க்ராமத்து ஜனங்கள் ஒன்றுகூடிப் பண்ணலாம்.

ந ஹி ஜானபதம் து:கம் ஏக: சோசிதும் அர்ஹதி என்று ஒரு வசனம் இருக்கிறது. “ஊர்க் கஷ்டத்தைப் பற்றி ஒருத்தன் விசாரப்பட்டுப் பிரயோஜனமில்லை” என்று இதற்கு அர்த்தம் பண்ணிக்கொண்டு, நம் மதத்தில் ஸமூஹ ஸேவா உணர்ச்சியை இல்லை என்று சொல்கிறார்கள். இது ஸரியில்லை. வாஸ்தவத்தில் இதன் அர்த்தம் இப்படியில்லை. “ஏக : – ஒருத்தன்” என்ற வார்த்தைதான் இங்கே முக்யமானது. தனி ஒருத்தனாக இருந்துகொண்டு ஊர்க் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு இவனும் அவர்களோடு சேர்ந்து அழுவதில் ப்ரயோஜனம் இல்லை; பல பேராகச் சேர்ந்து அந்தக் கஷ்டத்தை நிவ்ருத்தி பண்ணக் கார்ய ரூபத்தில் முயற்சி செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். ஒன்று, வெறுமே விசாரம் மட்டும் படக்கூடாது; கார்யத்தில் இறங்க வேண்டும். இரண்டாவது, தனியாகப் பண்ணினால் எடுபடாது. பலர் ஸங்கமாகச் சேர வேண்டும்.

பிறத்தியானைக் கஷ்டப்படுத்தியாவது ஸ்வயகார்யத்தை ஸாதித்துக் கொள்வதென்பதே பொதுத் குணமாக உள்ள நாம் இப்படிப் பலருக்குமான கார்யத்தைப் பலரோடு சேர்ந்து ஸ்வய ச்ரமத்தைப் பாராமல் அன்பினால் ஒன்றுபட்டுச் செய்கிறபோது அடைகிற தூய ஆனந்தம் தனியானது. கார்யம் நிற்கிறதும் நிற்காததும் ஒரு பக்கம் இருக்கட்டும். அதைச் செய்யும் போது பலர் ப்ரேமையில் ஒன்று கூடும் இன்பம் இருக்கிறதே, அதுவே ஒரு பெரிய பயன்.
ravi said…
சிவ சிவ

ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பதிவு...
====================================================================

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உருளும், அருளும் ஆரூர் அழகுத் தேர்!
********************************************

ஆழியிலே தோன்றிய அலைமகளுக்கு ஆரூர் ஈசன் அருள்புரிந்ததற்கு நன்றி செலுத்துவதே போல், அந்த ஆழியே தேராக வந்துவிட்டதோ என்று சொல்லும்படி, மிகப் பிரம்மாண்டமாக அமைந்ததுதான் திருவாரூர் தேர். பிரமாண்டமான கடலைப் போலவே காட்சி தருவதாலேயே திருவாரூர்த் தேர் ஆழித் தேர் என்ற சிறப்பினைப் பெற்றிருக்கிறது போலும்!

பெரும்பாலான கோயில்களில் தேர்த் திருவிழா நடைபெற்றாலும், திருவாரூர்த் தேர்த் திருவிழாவுக்குத் தனிச் சிறப்பு உள்ளது என்று சொன்னால், அதற்குக் காரணம் ஆழித் தேரின் பிரம்மாண்டம்தான்.

திருநாவுக்கரசர் தம்முடைய தேவாரப் பதிகத்தில், 'ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே!' என்று பாடி இருப்பதில் இருந்து, திருவாரூரில் கி.பி.5-6 ஆம் நூற்றாண்டுக்கும் முன்பிருந்தே தேர்த்திருவிழா நடைபெற்று வந்திருப்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

1748 ஆம் ஆண்டு ஆழித் தேரோட்டம் நடந்தது பற்றிய விவரம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது. மேலும் 1765 ஆம் வருடம் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா ஆழித் தேரோட்டத்தில் கலந்துகொண்டது பற்றிய குறிப்புகளும் உள்ளன.

முதல்முதலில் ஆழித் தேர் யாரால் வடிவமைக்கப்பட்டது என்பது பற்றிய தெளிவான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், கடந்த நூற்றாண்டில் இருந்து ஆழித்தேர் பற்றிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

1927 ஆம் ஆண்டு நடைபெற்ற தேரோட்டத்தின்போது ஆழித்தேர் முற்றிலும் எரிந்துவிட்டது. அதற்குப் பிறகு 1928 ஆம் ஆண்டு புதிய தேர் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டு, 1930-ல் மறுபடியும் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேரோட்டம், என்ன காரணத்தினாலோ தடைப்பட்டுவிட்டது.

பிறகு 1970 ஆம் ஆண்டு கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது, அவருடைய முயற்சியாலும் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் முயற்சியாலும் மறுபடியும் ஆழித் தேரோட்டம் நடைபெறத் தொடங்கியது.

முற்காலத்தில் 10,000-த்துக்கும் மேற்பட்ட பக்தர்களால் தேர் இழுத்துச் செல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள். அப்போது தேருக்கு பத்து சக்கரங்கள் இருந்தன. திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தினர் ஆழித் தேரில் இரும்பு அச்சுகள், சக்கரங்கள், பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினார்கள். 10 சக்கரங்களுக்கு பதிலாக நான்கே சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இந்த மாற்றங்களால் இப்போது மூவாயிரம் பக்தர்கள் இழுத்தால் போதும்... தேர் நகர ஆரம்பித்துவிடும்.

அலங்கரிக்கப்படாத இந்தத் தேர் உயரம் முப்பது அடி. உச்சி விமானம் வரை துணி போன்ற தேர் சீலைகளால் அலங்கரிக்கும் பகுதியின் அடி நாற்பத்தி எட்டு. விமானத்தின் உயரம் பன்னிரண்டு அடி. தேரின் கலசம், ஆறு அடி... என தேரின் மொத்த உயரம் 96 அடி. இரும்பு அச்சுகள், சக்கரங்கள் உள்பட அலங்காரம் அற்ற மரத்தேரின் எடை சுமாராக இருநூற்று இருபது டன்கள். தேர்ச் சிலைகளும் பனஞ்சப்பைகளும், மூங்கில்களும் பயன்படுத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை சுமார் 300 டன்கள் ஆகும்.

ஆழித்தேர் நான்கு நிலைகளையும், பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனபீடம் என 7 அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது.

எண்கோண வடிவத்தில் அமைந்திருக்கும் இந்தத் தேரை இழுத்துச் செல்வதுபோல் அமைந்திருக்கும் குதிரைகளின் நீளம் 32 அடி; உயரம் 11 அடி ஆகும். தேரில் சுமார் 400-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவிளையாடல் புராணம், சிவபுராணம், நாயன்மார்கள் வரலாறு போன்றவற்றை விவரிக்கும் வகையில் அந்தச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆழித் தேர் ஒரு வீதியில் இருந்து மற்றொரு வீதிக்குத் திரும்பும் காட்சியே அற்புதமாக இருக்கும். 8 முதல் 10 இரும்பு பிளேட்டுகளை சிறு வளைவான வரிசையில் வைத்து, அந்த பிளேட்டுகளின் மீது தேர்ச் சக்கரங்கள் ஏறித் திரும்பும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஆழித் தேரோட்டம் காண்பதே ஆனந்தமாக இருக்கும்.
ravi said…
பாரசீகத்தின் மன்னர், இளவரசனுக்கு கல்வி கற்பதற்கு ஒரு ஆசானை நியமித்தார். இளவரசன் பண்புள்ளவர் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். இருந்தாலும் ஒரு நாள் அந்த ஆசான் எந்த தவறும் செய்யாத இளவரசனை கடுமையாகத்திட்டி அவமானப்படுத்திவிட்டார். முதுகில் ஓர் கடுமையான அடியும் விழுந்தது .

அன்றிலிருந்து இளவரசனுக்கு ஆசானின் மீது வெறுப்பு ஏற்பட்டது. அந்த அவமானம் அவர் நெஞ்சில் உறைந்து விட்டது.

இளவரசர் வளர்ந்தார் .தந்தைக்குப் பிறகு சிம்மாசனம் ஏறினார்.

பாதுஷாவாக முடிசூட்டிக்கொண்ட உடனேயே காரணம் இல்லாமல் தன்னை அடித்து ஆசானை வரச்செய்தார் .

அன்று எந்த தவறும் செய்யாமல் ஏன் என்னை அநியாயமாக அடித்தீர்கள் என்று கேட்டார்.

பாதுஷா அவர்களே ஒரு நாள் சிம்மாசனத்தில் அமர போகிறீர்கள் என்பதும் எனக்கு தெரியும். அப்போது நீங்கள் நீதி பரிபாலனமும் செய்வீர்கள். பல வழக்குகள் உங்கள் முன் வரும். ஒன்றும் தவறு செய்யாத அப்பாவிகளும் உங்கள் முன் குற்றம் சுமத்தி நிறுத்தப்படுவார்கள். தவறு செய்யாமல் ஒருவர் தண்டிக்கப்பட்டால் அது எவ்வளவு வலியைத்தரும் என்பதை உணர்ந்தால்தான் அதுபோல தவறான நீதியை வழங்க மாட்டார்கள். எனவே அநீதியின் சுவையை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு செயலை நான் செய்தேன்.

ஒரு நாளும் நீங்கள் மறக்கமாட்டீர்கள் உங்களை எல்லோரும் மன்னர் நீதி தவறாதவர் என்று பாராட்ட வேண்டும் என்று அச்செயலை செய்தேன் என்று குறிப்பிட்டார். மன்னர் வியப்பில் உறைந்து போனார்.

🍀எந்த தவறும் செய்யாத போதும் சில நேரங்களில் உங்களுக்கு இறைவன் கஷ்டங்களை கொடுக்கிறான் என்றால் உங்களை மேன்மை அடையச்செய்ய வேண்டும் என்பதற்காகவே...
ravi said…
*ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்* !

கடவுளைப் பார்க்க முடியுமா?'-
(18 வயது பையன் .பெரியவாளிடம்.)

(கடவுளைப் பார்க்க நானும் .ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!" -என்று மேலோட்டமாகச் சொன்ன பெரியவாளின் அற்புத பதில்)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பதினெட்டு வயதுப் பையன், விவேகானந்தர் போன்ற சில மகான்களின் சரித்திரங்களைப் படித்திருப்பான் போலிருக்கிறது.

'கடவுளைப் பார்க்க முடியுமா?' என்று சுளீரென்று ஒரு கேள்வியைப் பெரியவாளைப் பார்த்துக் கேட்டான்.

'முடியும்' என்ற பதில் வந்தால் 'எங்கே எனக்குக் காட்டுங்கள்' என்று மடக்கி விடலாம் என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டு வந்திருப்பான் போல் தோன்றியது.

ravi said…
கடவுளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவருக்கு எத்தனை முகங்கள், கைகள் புடைவையா,வேஷ்டியா?கறுப்பா,சிவப்பா? என்று வரிசையாகக் கேட்டு, பெரியவாளைத் திக்கு முக்காடச் செய்யலாம் என்ற எண்ணமும் இருந்திருக்கக்கூடும்.

வயதுக் கோளாறு! கொஞ்சம் படித்து விட்டு, எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து விட்டதாக நினைத்துக்கொள்ளும் ஈகோ!

பெரியவாள்.சிரசைத் தூக்கி அவனைப் பார்த்தார்கள்.

"கடவுள் இருக்கிறார்னு மகான்களெல்லாம் சொல்லியிருக்கா. சாஸ்திரம் சொல்றது. இவை இரண்டும் நம்பத்தகுந்தவை என்பதால், நாமும் ஒப்புக் கொள்கிறோம். கடவுளைப் பார்க்க நானும் ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!"

பையனுக்கு வேகம் தணிந்து விட்டது. சுவாமிகள், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன்' என்று சொல்லியிருந்தால் அவர்களைக் குடைந்திருக்கலாம் 'ஒப்புக்கொள்கிறோம்' என்று தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டார்களே? அப்புறம், வாதம் செய்ய என்ன இருக்கிறது?

பெரியவாள் அந்தப் பையனை அருகில் உட்காரச்சொன்னார்கள்.

"உன் மாதிரி புத்திசாலிப் பசங்கள் அந்தக் காலத்திலேயும் இருந்திருப்பார்கள்னு நினைக்கிறேன். நான் கேள்விப்பட்ட ஒரு கதையைச் சொல்றேன். கேட்கிறியா?"--பெரியவாள்.

பையன் அக்கறையில்லாமல் தலையை அசைத்தான்.

அணுக்கத் தொண்டர்களுக்கெல்லாம் உள்ளூர ஆத்திரம்.

உபநிடதங்களில் ஒரு வாக்கியத்தின் ஆழ்பொருளை அறிந்து கொள்வதற்காக, பெரியவாளின் திருமுகத்திலிருந்து விளக்கம் வராதா என்று - அறநூல் விற்பன்னர்கள் தவித்துக் காத்துக் கொண்டிருக்கும் சந்நிதியில், அந்த அஸத்துப் பையனுக்குக் கதை சொல்கிறாரா, கதை!

பெரியவாள் சொல்கிறார் பையனிடம்;

ஒரு முனிவர்கிட்டே, மேதாவியான சிஷ்யன் இருந்தான். ஒருநாள்,'கடவுள் இருக்காரா?'ன்னு ஆசிரியரைக் கேட்டான்.

'இருக்கார்'

"அப்படியானால்,என் கண்ணுக்குத் தென்படலையே'ன்னான்.

"கடவுள் இருப்பதை, அநேக அடயாளங்களால் ஒப்புக் கொள்ளலாமே தவிர, கண்ணாலே பார்க்க முடியாதுன்னார்

."பார்க்க முடியாத பொருளை எப்படி நம்புவது?ன்னான்.

"ஆமாம்..நீ சொல்றது சரிதான்.நீ சிந்திக்கத் தெரிந்த புத்திசாலி நெறையக் கேள்வி கேட்கிறே. நான்,என் குருநாதர் சொன்னதையும், வேத - புராணங்கள் சொன்னதையும் அப்படியே நம்பி ஏத்துண்டுட்டேன்.கண்ணுக்குத் தெரியாத ஒரு பொருளை எப்படி ஒப்புக்கொள்றதுன்னு இப்பதான் எனக்கும் சந்தேகம் வருது.--ஆசிரியர்.

பையன் கொஞ்சம் திமிராக நிமிர்ந்து உட்கார்ந்தான். கடைசியில் சுவாமிகள், கடவுள் இல்லை;இல்லவேயில்லை கட்சியில் சேர்ந்து விடுவார் போலிருக்கிறதே!

பெரியவாள் தொடர்ந்தார்கள்.கதையை

"முனிவர் இருந்த இடம் மரங்கள் அடர்ந்த சோலை. ஒரு பெருங்காற்றில் மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தன. ஜில்லுன்னு காத்து. உடம்புக்கு ரொம்ப இதமா இருந்தது. முனிவர், சிஷ்யனைப் பார்த்து, 'அந்த மரக்கிளைகளெல்லாம் ஏன் இப்படி அசுரத்தனமாக அசைகின்றன?" என்று கேட்டார்.

"சுவாமி! இப்போ பெரிய காற்று வீசித்தே அதனாலதான்"

"காற்றா..அப்படீன்னா வீசித்தா..அப்படீன்னா? நீ பார்த்தாயா? அடாடா...எனக்குக் காட்டியிருக்கப்படாதோ? நானும் ரொம்ப நாளா யத்தனம் பண்ணிண்டிருக்கேன், காற்றைப் பார்க்கணும்னு

"நீயோ,காற்று வீசியது என்கிறாய். நானும் அந்த சுகத்தை அனுபவிச்சேன். ஆனால், அது காற்றின் வேலை என்பதை என்னால ஒப்புக் கொள்ள முடியவில்லை. கண்ணால் பார்க்க முடியாத ஒரு பொருள் இருக்கிறது என்று எப்படி ஒப்புக் கொள்வது' என்றாராம் முனிவர்

உடனே,சிஷ்யன் எழுந்து முனிவர் கால்லே விழுந்து, புரிஞ்சுடுத்து'ன்னு சொல்லி கண்ணாலே ஜலம் விட்டானாம்.

அதி நவீன நாகரிகப் பையனும், மகாப் பெரியவா திருவடிகளில் நான்கு முறை நமஸ்காரம் செய்துவிட்டு,கண்களில் நீர் வழிய நின்றான்.

"உன் அகத்திலே ரேடியோ இருக்கோ? எலெக்ட்ரிக் லைட் இருக்கோ? எலெக்ட்ரிக் ஃபேன் இருக்கோ?"--பெரியவா

"இருக்கு"-நாகரிகப் பையன்.

"இதெல்லாம் எப்படி வேலை செய்யறது?"--பெரியவா

"எலெக்ட்ரிஸிட்டியாலே...."-பையன்

"அந்த ஸிட்டி'யை நீ பார்த்திருக்கியோ?"--பெரியவா

பையன் திக்குமுக்காடிப் போனான்

.பெரியவா பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பினார்கள்.அருகில் இருந்த எல்லோரும் 'இந்தக் குழந்தைக்கு என்ன அதிருஷ்டம்! பெரியவா எத்தனை நேரம் அவனோட பேசியிருக்கா!'  என்று ஆச்சர்யப்பட்டார்கள்.

கடவுள் இருக்கிறார் - இருக்கவே இருக்கிறார்  

ஜய ஜய சங்கர!
ஹர ஹர சங்கர!

காஞ்சி சங்கர!
காமகோடி சங்கர!

ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்!

எல்லாம் வல்ல நம் குருவின் திருவருளால், இன்றைய நாள் இனிய நாளாக அன்பு பிரார்த்தனைகள்!
ravi said…
[14/03, 07:36] +91 96209 96097: ஹ்ரீங்காரீ *ஹ்ரீமதீ* ஹ்ருத்³யா ஹேயோபாதே³யவர்ஜிதா🙏🙏
பீஜாக்ஷர மந்திரத்தை தியானிப்பவர்க்கு லஞ்சையுடன் காட்சி அளிப்பவள்
[14/03, 07:36] +91 96209 96097: *மஹா பாகாய நமஹ*🙏🙏
மஹா பாக்ய சாலி
ravi said…
❖ *141 ஷாந்தா* = சாந்தம் பொருந்தியவள்
ravi said…
அம்மா நாதி இன்றி நதி என ஓடுகின்றோம் ...

சாதி பிரிவுகள் ஆயிரம் ..

சம்பரதாயங்கள் அது இருக்கும் ஓர் கோடி

சந்தேகம் எங்கள் அங்கமெல்லாம் தழுவி செல்லும் ...

ஆசை மீசை முறித்து இன்னும் கேள் இன்னும் கேள் என்றே பல் இலிக்கும்...

பானைகளில் சோறு கண்டே பூனைகளும் சொந்தம் கொண்டாடும்

மனித சாதியில் துயரம் யாவுமே

மனதினால் வந்த நோய் அன்றோ அம்மா

வாழும் நாளிலே வரும் கூட்டம் கை வறண்ட வீட்டில் வருவதுண்டோ அம்மா

பணத்தின் மீது தான் பக்தி என்ற பின் பந்த பாசங்கள் வேண்டுமோ அம்மா

பரி தவிக்கும் நெஞ்சம் தனை அணைக்க

நீ வரவில்லை எனில் இன்னும் வாழ்ந்து என்ன பயன் அம்மா ?💐💐💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

98 –
வெளிவிட்டேன் உம்செயல் வெறுத்திடாது உன் அருள்
வெளிவிட்டு எனைக்கா அருணாசலா (அ)
ravi said…
*Meaning*

I have revealed your actions .

Without hating me , Show me your true state and protect me *Arunachala*🙏🙏🙏
ravi said…
*அருணாசலா*

நீ யார் என்று அனைவர்க்கும் உணர்த்தி விட்டேன் *அருணாசலா* ...

உன் குணம் என்ன உன் கருணை என்ன என்றே யாவரும் அறிந்து கொண்டனர் *_அருணாசலா_* ...

அங்கே சிரிக்கும் சத்தம் ... 🤔🤔🤔🤔

அருணாசலா ஏன் சிரிக்கிறாய் ...

ஓ உனை புரிந்து கொண்டேன் என்பதற்கா

இல்லை .....

ஏதோ இவனால் தான் நீ அறிமுகம் ஆனாய் என்று உளரியதற்காகவா?

அகம் இன்னும் அழியாமல் நான் சாதித்தேன் என்றே சொன்னதற்காகவா?

எதற்கு சிரிக்கிறாய் அருணாசலா ?

அறிந்துகொண்டேன் எவரும் அறியா மறையை ..

இது என் தவறோ *அருணாசலா* ?

அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே *அருணாசலா*

இதுவும் என் தவறோ *அருணாசலா ?*

*திருவே* ! -

வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்...

திருந்தி விட்டதும் என் தவறோ *அருணாசலா*

மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே!

அவர்கள் வேண்டேன் இனி எந்நாளும் என்றே சொன்னதும் தவறோ *அருணாசலா ?*

நீயே வந்து உனை உணர்த்தியப்பின்

சும்மா இருத்தல் சரியோ *அருணாசலா* ..

அகம் இல்லை இது *அருணாசலா* ...

ஆனந்தம் ...

நான் பெற்ற இன்பமும் யாவரும் கிட்டவே உன் பெருமை சொன்னேன் ...

உனை உணர்ந்தவர் அறிந்தவர் யார் உண்டு *அருணாசலா* .. ?

உன் அடியாரைத் தவிர ...

உன் அடியார்க்கும் அடியாராய் சொன்னேன் ...

அகம் என்றே நினைத்து நீ சிரித்திடல் சரியோ *அருணாசலா ?* 💐💐💐
ravi said…

பழனிக் கடவுள் துணை -14.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-87

மூலம்:

பகமயக்கும் பார்மயக்கும் பைம்பொன் மயக்கும்
மிகமெலிந்தேன் என்னை வெறுக்கேல் – சகமுழுதும்
காக்கும் பழனிமலைக் காவலா! காரணம் என்
வாக்கும்பொய் யாதெதிர் நீ வா (87).

பதப்பிரிவு:

பகமயக்கும் பார்மயக்கும் பைம்பொன் மயக்கும்
மிக மெலிந்தேன்! என்னை வெறுக்கேல்!! – சகம் முழுதும்
காக்கும் பழனி மலைக் காவலா! காரணம் என்
வாக்கும் பொய்யாது எதிர் நீ வா!! (87).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பகமயக்கு- பெண்ணாசை; பைம்பொன்- பசும்பொன்; காரணம்- நிமித்தம்; பொருட்டு;

பழனியில் ஓர் தண்டுடன் நின்று விளையாடி, இந்த உலகம் முழுதும் காக்கும் பழனி மலைக் கடவுளே!பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்ற மூவசைகளால், மும் மயக்கால், அடியேன் சிக்கி, தவித்து, உழன்று, மிக மெலிந்தேன்! நீ அறியாததா? எம் பெருமானே! மெலிந்த, நலிந்த என்னை நீ வெறுக்கேல்!! என் வாக்கும், அருளுரையும் பொய்யாக நிமித்தம் என் முன்னே நீ கருணை உகந்து வா! எம் பெருமானே! பழனிக் கோமானே!

*இப்பாரின் ஓர்பாரான ஒப்பாரற்றப் பழனியில் இருந்து இப்பார், எப்பார் முழுதும் எப்பொழுதும் பார்த்து, உன் பாரில்லா அருளால் பாரின்பம்**, பேரின்பம் நல்கும் பழனாபுரி வேந்தே! நான் என்றென்றும் உனை மட்டுமே ***பார்க்க, உன் ஞானத் திருவடியையே ஒன்றையே பார்க்க, நீ என்றென்றும் என் #பாரெல்லாம் நீக்கி என்னைப் பார் பெருமாளே!

*பார்-பரப்பு; பூமி; நாடு; பாறை; வரம்பு;
**பாரின்பம்- earthly enjoyment;
***-பார்க்க-ஆராய, வணங்க;
#பார்- தடை;

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
“ ஶ்ரீ லலிதாம்பிகை”
உண்மை சம்பவம்

அந்த தேவி உபாசகர் ஒரு முறை, செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி , குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பமும் இட்டிருந்தார் ....

ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை !...

ஒரு நாள் அவர் பூஜையறையில் அம்பிகையை தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்த அக்கணம் ..

கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க ....
அந்த தேவி உபாசகர் வெளியே வராததால் ...

கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட. ஆரம்பித்தார் !

அப்போது உள்ளிருந்து அந்த தேவி உபாசகரின்
மனைவி வெளியே வந்து உங்களுக்கு பணம் தானே வேண்டும் ? ..
கூச்சல் போடாதீர்கள்
அரை நொடியில் பணத்துடன் வருகிறேன் ...''
என்று சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தவள் ,
சொல்லி வைத்தாற்போல் அரை நொடியில் வந்தாள் ,

'இதோ பாருங்கள் ..
இந்த பையில் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான , வட்டியும் உள்ளன !..

பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக்கொண்டு ,
பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் என்று,
அந்த அம்மாள் உள்ளே செல்ல ..

சிறிது நேரம் சென்று ,
பிரசாத தட்டுடன் வெளியே வந்த அந்த
தேவி உபாசகர் , அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்பு மேலிட ,
'' அடடே ...உங்களை கவனிக்க வில்லை மன்னியுங்கள் ! 'என்றார்.

நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே ?..'
'பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர் ;

'' உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு ,
பத்திரத்தையும் உங்களிடம் கொடுக்க சொன்னார் !''

ஆச்சரியத்தில் ஆழ்ந்த
தேவி உபாசகர் ,
பின் மனைவியை அழைத்து ,
'' நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே .
உண்மையா ?.....''
என்று வினவ ....

அந்த அம்மையாரோ திகைப்புடன் ,
'' ...நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன்...?..
இது எப்படி சாத்தியம் ? ''
என்று அரற்றிய அக்கணம் ...

பூஜையறையிலிருந்து ஒரு அசரீரி !

'' நான் தான் பணம் கொடுத்தேன் !''

குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைய,அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு எதுவும் இல்லை!

அந்த தேவி உபாசகர்
வேறு யாருமில்லை ..
லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய “பாஸ்கரராயர்” தான் !

அவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது !

தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே ,காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர் இவர் !

தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் ,
பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.!

நம்புங்கள் நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
ravi said…
ஆத்ம பந்துகளுக்கு வேதிக் சந்திரசேகர் சாஸ்திரிகளின் நமஸ்காரங்கள்

*காரடையான் நோன்பு நோற்கும் முறையும், சொல்ல வேண்டிய ஸ்லோகமும்*
*ஸ்ரீ சுபக்ருதுவருடம்*பங்குனி மாதம் *01ம்நாள்புதன் கிழமை 15.03.2023

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.

பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, தலையாயது என்று கூறப்படுவது காரடையான் நோன்புதான். இது காமாட்சி நோன்பு. சாவித்ரி விரதம் என்றும் கூறுவர்.

இந்தாண்டுக்கான காரடையான் நோன்பு *15.3.2023 புதன்கிழமை* கடைப்பிடிக்கப்படுகிறது.

*காரடையான் நோன்புக்கான பூஜை செய்யவேண்டிய நேரம் - அதிகாலை5 மணி முதல் 6 மணி வரை.*

காரடையான் நோன்பு எப்படி நோற்க வேண்டும் ?

ravi said…
இதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால்தான் காரடையான் நோன்பு என்பார்கள்.

இப்போது நம் வீடுகளில் செய்யப்படும் இந்த நோன்பிற்கு, பூஜை செய்யும் இடத்தை நன்கு மெழுகிக் கோலமிட்டு சிறிய நுனிவாழை இலை போட்டு இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவற்றை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும் வெண்ணெய்யும் வைக்க வேண்டும். முதிர்ந்த சுமங்கலிகள் தங்கள் இலைகளில் அம்பிகைக்கு ஒரு சரடும் சேர்த்து வைத்துக் கொள்வார்கள்.

ravi said…
மூன்று இலை போடக்கூடாது. நான்கு இலையாகப் போட்டு சரடு கட்டிக்கொண்ட பின் மீதமுள்ள இலையில் வீட்டிலுள்ள ஆடவர்களைச் சாப்பிடச் சொல்லலாம். தீர்த்தத்தால் இலையைச் சுற்றி நைவேத்தியம் செய்த பிறகு அம்பாள் படத்தில் சரடை அணிவித்த பின் இளைய வயதுப் பெண்மணிகளுக்கு முதிய சுமங்கலிகள் சரடு கட்ட வேண்டும்.

பிறகு தானும் கட்டிக்கொண்டு அம்பிகையை நமஸ்கரிக்க வேண்டும். அப்போது " *உருகாத வெண்ணெய்யும் ஓரடையும் நோற்றேனே. ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேணும்* ' என்று வேண்டிக் கொள்வார்கள். அதுமட்டுமல்ல, மாசி முடிவதற்குள் சரடு கட்டிக்கொள்ள வேண்டும். "மாசி சரடு பாசி படியும்' என்பது சொலவடை. அதாவது பாசி படிய வேண்டும் என்றால் எத்துணை பழைமையாக வேண்டும்....? அத்துனைக் காலம் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர் என்பது ஐதீகம்.

சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டியதும் அவசியம். அடைகளைப் படைக்க வாழை இலை கிடைக்காவிடில் பலா இலைகளைச் சேர்த்து முடைந்து அதில் படைப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

பூஜையை முடிக்கும் வரை பெண்கள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் சிறிதளவு பழம் ஏதேனும் சாப்பிடலாம். ஆனால் மோர், தயிர், பால் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது.

ஏனைய பிற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக்கொள்வது வழக்கமாயிருக்க இந்தக் *காரடையான் நோன்பிற்கு மட்டும் சரட்டில் மஞ்சள் சேர்த்துக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள்*

இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான். இந்த நோன்பின் மிக முக்கியமான பலம் தீர்க்க சௌமாங்கல்யம். அதைவிடப் பெண்களுக்கு வேறு என்ன வேண்டும்...?

*சங்கல்பம்*

*சுபக்கிருது உத்தராயணம் சிசி ரருதௌ மீன மாஸே01தேதி 15.03.2023 பதன்கிழமை காரடையான் நோன்பு (ஸ்ரீ காமாக்ஷி பூஜை*

*ஸ்ரீ காமாக்ஷி பூஜை பூஜா சங்கல்பம்*

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபாப்யாம்
சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்ரூ தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே *உத்தராணாயனே* *சிசிர* ருதௌ *கும்ப உபரி மீன* மாஸே *கிருஷ்* பக்ஷே *அஷ்டம்யாம்* சுபதிதௌ வாஸர: வாஸரஸ்து *ஸௌம்ய* வாஸர யுக்தாயாம் *மூல* நக்ஷத்ர யுக்தாயாம், *ஸித்தி* நாம யோக, *கௌ* கரண, ஏவங்குண விஸேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் *அஷ்டம்யாம்* சுப திதௌ,
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், ஸ்ரீ காமாக்ஷி ஸமேத ஏகாம்பரேஸ்வர ப்ரசாத ஸித்யர்த்தம் தஸ்ய ப்ரஸாதேன , *மம தீர்க்க சௌமாங்கல்ய* *அவாப்த்யர்த்தம்*
*மம பர்த்துச்ச அன்யோன்யப்ரீதி*
*அபிவ்ருத்தியர்த்தம்* *அவியோகார்த்தம்*
*ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் அத்ய கரிஷ்யே*
கிழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லி காமாக்ஷி படம் , அல்லது விளக்கு மற்றும் சரடில் அம்பாளை அக்ஷதை புஷ்பம் போட்டு ஆவாஹணம் செய்யவும்
பின்னர்
*ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம் புவனேஸ்வரீமத்யாயாமி ஹ்ருதயே தேவீம் வாஞ்சி தார்த்த ப்ரதாயிநீம் காமாக்ஷீம் ஆவாஹயாமி*
நோன்புச்சரடு மந்திரம்

*தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்*

*பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா*

ஒம் ஸ்ரீ காமாக்ஷை நமஹ:
ஆசனம் சமர்பயாமி
பாத்யம் சமர்பயாமி
அர்க்யம் சமர்பயாமி
ஆசமனியம் சமர்பயாமி
ஸ்னானம் சமர்பயாமி
வஸ்திர , ஆபரணானி சமர்பயாமி
கந்தம் , குங்குமம் சமர்பயாமி
புஷ்ப மாலாம் சமர்பயாமி
என்று புஷ்ப அக்ஷைதை போட்டு அர்ச்சனை செய்யவும்
ஸ்ரீ காமக்ஷியை நமஹ
ஸ்ரீ காமதாயிந்னை நமஹ
ஸ்ரீ சர்வ மங்களாயை நமஹ
ஸ்ரீயை நமஹ
ஸ்ரீம் புவனேஸ்வர்யை நமஹ
ஹிரீம் ஹரிபிரியாயை நமஹ
கீலிம் மங்கள ரூபின்யை நமஹ
செள: லலிதாயை நமஹ
என அர்ச்சனை செய்து (லக்ஷ்மி அஷ்டோத்திரம் செய்யலாம்)
தூபம் , தீபம் சமர்பயாமி
அடையை வெற்றிலை பாக்கு ,பழத்துடன் வெல்ல அடை , உப்பு அடை நைவேத்யம் செய்யவும்
பின்னர் தீபாராதனை
*சர்வ மங்கள மாங்கள்யே சிவே சர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே* என சொல்லி தீபாராதனை
பின்னர்
பூஜை செய்த மஞ்சள் சரடை கழுத்தில் கட்டி கொள்வது வழக்கம். காரடையும், வெண்ணையும் கையில் வைத்துக் கொண்டு கீழ்க் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

*'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்'*

வேதிக் சந்திரசேகர் சாஸ்திரிகள் விஷ்ணும்பேட்டை... போன் நம்பர் 9952050086
ravi said…
14.03.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 12)

Sanskrit Version:

न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः।
न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्।।2.12।।

English Version:

na tvevaaham jaatu naasam
na tvam neme janaadhipaaha |
na chaiva na bhavishyaamaha
sarve vayamataha param ||

Shloka Meaning

O Arjuna! Myself, yourself and all these kings here never were not in the past, and never would
not be in the future.

Additional Details:

Through this verse, Lord Krishna teaches the mahavakya of 'tat tvam asi'.
I, You and all beings in the world are all forms of the one Supreme Self. So the individual being
and supreme being are not two separate entiries, but one and only one.
This is the one of the important of spiritual secrets.

This is the essence of Brahma Jnana.

Three important facts come out in the Krishna's declaration that all beings are eternal.

1. Atma is eternal
2. Each individual being is the Atma, and not the body with the name and form
3. The one Atma pervades all beings in the world

This teaching inspires tremendous strength and courage. When a man comes to know that he and others
essentially do not perish, there is no cause for grief at all. Death leads to a change of name and form.
When the seed breaks up and grows to a plant, there is no need to grief at all. The seed has gone, but
in its place, a plant has taken place.

From the point of view of the supreme self, there is no separation between God, Guru, and the common man.
All belong to the same eternal existence.

What is an Atma? Atma is the unconditioned self. It exists in the present, thet past and the future. It is deathless and eternal.

What is a Jiva? Jiva is conditioned by thet body, mind and senses.

From the creating Brahma to the meanest insect, it all applies to all beings. All beings without
exception are the Atma and not anything else.

Jai Shri Krishna 🌺
ravi said…
[14/03, 19:17] Jayaraman Ravilumar: *சிவானந்தலஹரி 66வது ஸ்லோகம் பொருளுரை*

சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம்…66வது ஸ்லோகம்.

क्रीडार्थं सृजसि प्रपञ्चमखिलं क्रीडामृगास्ते जनाः
यत्कर्माचरितं मया च भवतः प्रीत्यै भवत्येव तत् ।
शम्भो स्वस्य कुतूहलस्य करणं मच्चेष्टितं निश्चितं
तस्मान्मामकरक्षणं पशुपते कर्तव्यमेव त्वया ॥ ६६॥

க்ரீடா³ர்த²ம்ʼ ஸ்ருʼஜஸி ப்ரபஞ்சமகி²லம்ʼ

க்ரீடா³ம்ருʼகா³ஸ்தே ஜனா꞉

யத்கர்மாசரிதம்ʼ மயா ச ப⁴வத꞉ ப்ரீத்யை ப⁴வத்யேவ தத் |

ஶம்போ⁴ ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம்ʼ

மச்சேஷ்டிதம்ʼ நிஶ்சிதம்ʼ

தஸ்மான்மாமகரக்ஷணம்ʼ பஶுபதே கர்தவ்யமேவ த்வயா || 66 ||
[14/03, 19:20] Jayaraman Ravilumar: பக்திமான்கள் என்னன்னா, இந்த ஞானம் ஒரு ‌ஷணம் வருகிறது, அடுத்த ‌ஷணம் திரும்ப நான்னு நெனைசுண்டு தன் திருப்திக்காக் எதோ பண்ணி அதனால அவஸ்தப்பட்டு அப்படியெல்லாம் பண்ணினா கூட, அப்புற்ம் சரி பகவானே என்னமோ உன்னுடைய ஸ்ருஷ்டி தானே…

இதுவும் உன்னுடைய திருப்தி போல இருக்கு..

என்ன இன்னிக்கு இப்படி ஆட வெச்சியே..

இதையும் உனக்கு அர்ப்பணம் பண்றேன்..

நாளைலேர்ந்து என்ன ? – “மேன்மை தொழிலில் பணியி னையே.” அப்படின்னு சொல்லி..
இதவிட அழகான காரியங்கள், உனக்கு பிடிச்ச மாதிரியான காரியங்கள பண்ண வை, அப்படின்னு சொல்லிக்கலாம்.

ஞானத்துக்கு அது மாதிரி சறுக்கலுக்கு வழியில்ல..
ravi said…
[14/03, 19:13] Jayaraman Ravilumar: வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

*ஸமாத்மா* ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[14/03, 19:15] Jayaraman Ravilumar: அவ்வாறே படிப்படியாக பீமனுக்கு,

உடைத்த அரிசியில் தயாரித்த உணவு, பின் அரிசியல்லாத உணவுகள், பின் பழங்கள்,

பின் திரவங்கள் என ஏகாதசி தினங்களில் கொடுத்துப் பழக்கிய குந்தி,

இறுதியாகத் தண்ணீர் கூட அருந்தாமல்
நோன்பிருக்கும்படி அவனைப் பழக்கினாள்.

அவ்வாறு ஒருநாள் ஏகாதசி நோன்பு நோற்ற பீமன்,
அடுத்த நாள் காலை 7 மணிக்குள் துவாதசி திதி முடிவதால், அதற்குள் பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய
வேண்டுமென எண்ணி, விடியற்காலையிலேயே எழுந்து நீராடத் தயாரானான்.

அப்போது........🤔
ravi said…
[14/03, 19:08] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 109 started on 6th nov

*பாடல் 33 ... சிந்தாகுல*

(பந்தத்தின்று எனைக் காவாய்)

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்

விந்தாடவி என்று விடப் பெறுவேன்

மந்தாகினி தந்த வரோதயனே

கந்தா, முருகா, கருணாகரனே🥇
[14/03, 19:10] Jayaraman Ravilumar: *விவேக சிந்தாமணியில் ஒரு பாடல்:*

ஆ ஈன மழை பொழிய, இல்லம் வீழ,

அகத்தடியாள் மெய் நோவ, அடிமை சாக
மா ஈரம்

போகுதென்று விதை கொண்டு ஓட

வழியில் கடன்காரர் மறித்துக் கொள்ள

கோ வேந்தர் உழுது உண்ட கடமையை கேட்க

குருக்கள் தட்சணைக்கு வழியில் நிற்க

பா வாணர் கவிபாடு பரிசில் கேட்க

பாவி மகன் படும் துயரம் பார்க்க ஒண்ணாதே.

செல்வத்தைத் தேடுவதிலும் கஷ்டம். பின் அதைக் காப்பாற்றுவதிலும்
கஷ்டம்.

விந்தாடவி என்பதற்கு வேறு ஒரு பொருள்.

விந்திய மலைக்
காட்டில் பல துஷ்டர்களும் கொடிய மிருகங்களும் சஞ்சரிப்பது போல்
இல் வாழ்க்கையிலும் சொல்லொணா பல இன்னல்கள் நிரம்பி
இருப்பதால் அதை *விந்தாடவி* என்கிறார்.
ravi said…
[15/03, 07:23] +91 96209 96097: *வேகவனே நமஹ*🙏🙏
வேக மாக தன்னுடைய தெய்வத்தன்மையை வெளிப்படுத்தி பக்தர்களை காப்பவர்
[15/03, 07:23] +91 96209 96097: ஹ்ரீங்காரீ ஹ்ரீமதீ *ஹ்ருத்³யா* ஹேயோபாதே³யவர்ஜிதா🙏🙏
நமது மனதில் அமர்ந்து ஆனந்தத்தை அளிப்பவள்
[15/03, 07:23] +91 96209 96097: *எண்ணங்கள் நன்றாக இருந்தால் செயல்கள் சீராக இருக்கும்*🙏
ravi said…
காரடையான் நோன்பு ஸ்பெஷல் !

ஹூஸூர் என்ற ஊரில் ஒரு அம்பாள் கோவிலில் நம் பெரியவா முகாம்.

ஒருநாள் கோவில் வாசலில் ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஒட்டிக்கொண்டு வந்தவள் ஒரு லம்பாடிப் பெண். அவளுடைய உடையும், அலங்காரமும் வினோதமாக இருந்ததால், எல்லாரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வண்டியிலிருந்து இறங்கியவள், பின் பக்கம் சென்று, எதையோ எடுப்பது போலிருந்தது. அவளுடைய குழந்தையாக இருக்கும் என்று பார்த்தால், உள்ளே படுக்க வைத்திருந்த தன் புருஷனை அப்படியே அலாக்காக ஒரு குழந்தையைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் பார்வையை சுழல விட்டாள்.

பிறகு யாரையும் உதவிக்கு எதிர்பார்க்காமல், தானே அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்!

அவளுடைய புருஷனுக்கு பல நாட்களாக கடுமையான வாந்தி, பேதி, காய்ச்சல். அவர்களுடைய ஊர் டாக்டரோ, அவன் பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்.

பெரியவா அங்கு தங்கியிருப்பதை யார் மூலமாகவோ கேள்விப்பட்டு அவனைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு வந்துவிட்டாள்.

அவளுக்கு பெரியவா யாரென்றே தெரியாது! ஆனால் அந்த ஊருக்கு வந்திருக்கும் "தேவுடு" [தெய்வம்] என்று கேள்விப்பட்டு, புருஷனை தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு வந்துவிட்டாள்!

"தேவுடு....தேவுடு...."

குத்துமதிப்பாக யார் அந்த 'தேவுடு'.... என்று தெரியாமல் கையில் புருஷனோடு நின்றவளை, அங்கிருப்பவர்கள் பெரியவாளிடம் அழைத்துச் சென்றனர்.

புருஷனைப் பெரியவா முன் தரையில் கிடத்திவிட்டு, இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு "காரே-பூரே" என்று அவளுடைய பாஷையில் அழுது, கதறி ப்ரார்த்தித்தாள்.

ஒருவருக்கும் சுத்தமாக ஒன்றும் புரியவில்லை.

எந்த பாஷையானால் என்ன? பகவானுக்கு வெண்ணையாக உருகும் உள்ளத்தின் அழுகுரல் தெரியாதா என்ன?

பெரியவா ஒரு ஆரஞ்சுப் பழத்தை கையிலெடுத்துக் கொண்டு சில நிமிஷங்கள் கண்ணை மூடிக் கொண்டிருந்துவிட்டு, அந்த லம்பாடிப்பெண்ணின் கைகளில் அதைப் போட்டார். கண்களில் கண்ணீரோடு பழத்தைப் பெற்றுக்கொண்டு, விழுந்து ஸாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரத்தையும் பண்ணிவிட்டு, அதே ஜோரில்.... மறுபடியும் புருஷனைத் தூக்கிக் கொண்டு வண்டியில் படுக்க வைத்துக்கொண்டு, சென்றுவிட்டாள்.

பெரியவா, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாரிஷதர்களிடம் சொன்னார்....

"இந்த லம்பாடிக்கி எவ்ளோவ் பதிபக்தி பாரு! ஒரு ஆம்பிளையை, தான்.... ஒர்த்தியாவே தூக்கிண்டு வந்திருக்காளே! பகவான் இவளுக்கு அவ்ளோவ் ஸக்தியைக் குடுத்திருக்கான் !... ஸத்யவான் ஸாவித்ரி கதையை புராணத்ல படிக்கறோம்... இவளும் ஸாவித்ரிதான்! ஆனா...நா.....!!!"

மேலே எதுவும் சொல்லாமல் குஸும்பு வழிய, மெல்லிய புன்முறுவல் பூத்தார்.

அவர் சொல்லவே வேண்டாம்...!

பக்கத்திலிருந்த பாரிஷதர் யுக்திபூர்வமாக பதில் கூறினார்....

"பெரியவா..... ஸத்யமா.... எமன் இல்ல! அந்த எமனுக்கு எமன்! காலகாலனாக்கும்!"

மறுநாள் அந்த லம்பாடிப் பெண்ணும், அவள் புருஷனும் ஜோடியாக நடந்து வந்து பெரியவாளை தர்ஶனம் செய்தார்கள்!

நேற்றுவரை கிழிந்த நாராகக் கிடந்தவன், பிழைப்பானா? என்று கேள்விக்குறியானவன், இன்றோ ஜம்மென்று நடந்து வருகிறான் என்றால்.....

"தேவுடு! தேவுடு!.."

லம்பாடிப் பெண், வாயார தேவுடு நாம உச்சாடனத்தோடு, கண்களில் நன்றிக் கண்ணீரோடு விழுந்து விழுந்து நமஸ்கரித்தாள்.

"உருகாத வெண்ணையும், ஒரடையும் நான் நூற்றேன்

ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்."

ஸத்யவானின் தர்மபத்னியான ஸாவித்ரி தேவி, காட்டில் இருந்த போது, காரடையான் நோன்பு நூற்றாள்.

கணவன் மேல் உள்ள ஆழ்ந்த அன்பால், தன் கணவனையே ஒரே தூக்காகத் தூக்கிக் கொண்டு வந்து, உயிர்ப்பிச்சை கேட்ட அந்த லம்பாடிப் பெண்ணை, பெரியவாளும் தன் திருவாக்கால் ஒரே தூக்காகத் தூக்கி, அந்த ஸாவித்ரி தேவிக்கு ஸமமாக அனுக்ரஹித்தது என்ன ஒரு கருணை!

நம்முடைய காலாந்தக மூர்த்தி, ஸாதாரண ஆரஞ்சுப் பழத்தையா அவள் புருஷனுக்கும், அவளுடைய ஸௌமாங்கல்யத்துக்கும் குடுத்தார்?

"தீர்க்க ஸுமங்கலியா இரு!" என்ற ஆஸிர்வாதத்தை அனுக்ரஹித்த அம்ருதம் அல்லவா அது!

ஹர ஹர சங்கர !
ஜெய ஜெய சங்கர!
🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
9 வது நட்சத்திரம் *ஆயில்யம்*

( அஸ்வனியில் இருந்து கணக்கிட்டால் )

ஒன்பதுடன் ஒன்று (9 +1 =10)= *மகம்*

ஒன்பது ஒன்றோடு ஏழு = 9 + 7 = 16 *விசாகம்*

18 = கேட்டை

6 = திருவாதிரை

உடநாய நாள்கள்

பரணி , கார்த்திகை , ஸ்வாதி , மகம் பூரம் , பூராடம் பூரட்டாதி

இந்த நாட்களில் முன்னோர்கள் எந்த நல்ல காரியங்களையும் செய்ய மாட்டார்கள் வீட்டை விட்டும் வெளி வர மாட்டார்கள் ..

பழைய பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது

ஆதிரை, பரணி, கார்த்திகை ( ஆரல்) ஆயில்யம்,

முப்பூரம், கேட்டை தீதரு விசாகம் ஜோதி சித்திரை மகம் எராரும் மாதனம் கொண்டார் தாரார்

வழிநடைப் பட்டார்

மீளார் பாய்தனில் படுத்தோர்

தேரார் பாம்பின் வாய் தேரைதானே’

என்பது ஒரு பழம் பாடல்.

மேற்கண்ட நட்சத்திரங்களில் பணம் கொடுத்தால் திரும்பக் கிடைப்பது அரிது.

பயணம் செய்தால் பிரச்சினைகள் உருவாகும்.

வியாதியின் காரணமாக படுக்கையில் படுத்தவர்கள் உடல் நலம் பெறுவது கடினம் என்பதாக அந்த பாடல் அமைந்திருக்கிறது.

ஆனால் என் உளமே புகந்தவன் இருக்கையில் இவை ஒன்றுமே செய்யாது . எல்லாம் நல்லதே நடக்கும் நன்மையே கிடைக்கும் 👍👍👍
ravi said…
*காம* = அபிலாஷைகள் - இச்சை

❖ *142 நிஷ்காமா =*

ஆசைகளின் பிடிகளுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள் -

தன்னில் நிறைவு காண்பவள்👍👍👍
ravi said…
*அம்மா* ..

நதிகள் சலனம் காணும் சமுத்திரம் காணுமோ ?

இருள் காணும் காலன் கதிரவன் ஆகும் போது

உயில் எழுதி வைக்க முடியுமோ

பெற்ற கருமை எனும் மக்களுக்கு ?

அமுதம் பொழியும் நிலவு பாற்கடல் அமுதம் நாடுமோ ?

குவளை தன் மனதில் வரைந்த காதலனை கசக்கி எறிய பார்க்குமோ

நிலவிலும் அழகனை பார்க்கும் வேளையில்?

கதிரை தேடும் தாமரை இனியும் எவர் முகமும் கண்டு காதல் கொள்ளுமோ ... ??

ஆதவன் செல்லும் திசைகள் எல்லாம் பன்னீர் சிந்தும் சூரிய காந்தி

பல்லக்கு தூக்குமோ இரவின் ஆட்சி மலர்ந்து விட்டால் ?

அம்மா ஆசை உன்னிடம் அண்டுமோ ?

காமம் உனை சீண்டுமோ ?

தேவை உனை பாவை என்றே கெஞ்சுமோ ?

அதிர்ப்தி அக்கம் பக்கம் நெருங்கிட நினைக்குமோ ?

குறைகள் குனிந்த தலை நிமிருமோ

கோடியில் உன் நாமம் சொல்ல கசக்குமோ

தேடி என்னிடம் வருபவளே தேன் கூடு கட்டி விட்டேன்

உன் நாமம் சொரிந்த மதுரம் அதில்

அம்மா வந்து அமர்ந்து கொள்வாயே ...

வாழ்வில் வளம் சேர்ப்பாயே 💐💐💐
ravi said…
சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதபடுகிறது. அதனாலேயே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று திருமூலர் கூறியுள்ளார்.
ravi said…
God’s particle, Higgs Boson என்று பலவற்றை கண்டாலும் அது நடராஜரை தொடர்புபடுத்துகிறது, திருமூலரும் அப்படியே கூறுகிறார்.
பல பில்லியன் டாலர்கள் செலவில் , செர்ன் (CERN) என்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் , பிரான்ஸ்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே , 574 அடி ஆழத்தில் 27 கி.மி. நீளம் உள்ள சுரங்கப்பாதையில் Large Hadron Collider ஒன்று உருவாக்கப்பட்டது. நடராஜர் தாண்டவமும் அணுவின் செயல்பாடும் சம்பந்தப்பட்டுள்ளது என்று நம்புவதால் அங்கே நடராஜர் சிலை வைத்துள்ளனர்.
நம் சித்தர் பிரான் திருமூலர் இறைவனைப் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்,
“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே”
கடவுளை, அணுவின் அணுவே என்று பாடுகிறார். அதையே சிவமாகப் பார்க்கிறார். இந்த அணுவின் அணுவை இப்போது தான் விஞ்ஞானிகள் நெருங்கியிருக்கிறார்கள்.
விஞ்ஞானிகள் போஸான் என்று அழைப்பதைத் திருமூலர் ஈச(சா)ன் என்று அழைக்கிறார்.
ravi said…
இந்த ஹிக்க்ஸ் போஸானின் உருவம் என்ன?!! சிவனின் அளவைச் சொன்ன திருமூலர் சிவனின் உருவத்தை சொல்லாமலா இருந்திருப்பார்?
“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே”
இறைவனை, “அனைத்திலும் கலந்தும் கலக்காமலும் இருப்பவனே, கண்ணுக்குத் தெரியாமல் இருப்பவனே , பரந்த சடையுடையவனே , பசும் பொன்னிறத்தில் இருப்பவனே , நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவனே , அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவனே” என்கிறார் திருமூலர்.
இணையதளத்தில் உலா வரும் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதைக் சிவமாகக் கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே !!!.
“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே”
சிவனுடைய வடிவைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பசுவின் முடியை எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறுகிறார் திருமூலர்.
ravi said…
அடுத்த தண்டிகைப் புலவர் எழுந்தார்.

*ஈ ஏற மலை குலுங்கப் பாடுங்கள்!*

ஈ ஏற மலை குலுங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.

எங்காவது ஈ ஏற மலை குலுங்குமா?

இது என்ன இடக்கான அடியாக இருக்கிறதே என்று அனைவரும் நினைக்க,

காளமேகம் கவி மழை பொழிந்தார்.எல்லாம் அம்பாள் கடாக்ஷம் அன்றோ 🪷
ravi said…
வாரணங்க ளெட்டு மதமேரு வுங்கடலும்

தாரணியு மெல்லாஞ் சலித்தனவால் – நாரணனைப்

பண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த

புண்வாயி லீமொய்த்த போது

🪰🪰🪰🪰🪰🪰🪰🪰
ravi said…
*பொருளைக் காளமேகமே விளக்கினார்.*

*நாரணனை* –

ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்த நாராயணனை

*பண்வாய் இடைச்சி –*

இசை போலும் சொல் உடைய யசோதை பிராட்டி

*பரு மத்தினால் அடித்த –* பருத்த மத்தினால் அடித்த போது உண்டாகிய

*புண் வாயில் –* புண்ணின் இடத்தில்

*ஈ மொய்த்த போது* – ஈ ஒன்று மொய்த்த போது

*வாரணங்கள் எட்டும்* – எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் எட்டும்

*மாமேருவும்* – மகா மேரு மலையும்

*கடலும்* – ஏழு கடல்களும்

*தாரணியும்* – உலகங்களும் ஆகிய எல்லாம்

*சலித்தன* – அசைந்தன!🪰
ravi said…
(சலித்தனவால் என்பதில் ‘ஆல்’ அசை.

எல்லா உலகங்களும் அவற்றில் உள்ள திக் கஜங்கள் எனப்படும்

திக்கு யானைகள் உள்ளிட்ட அனைத்தும் இறைவனது திரு வயிற்றில் வைத்துக் காக்கப்படுபவை

ஆதலால் கண்ணன் அசைந்த போது அவையும் கூடவே அசைந்தனவாம்!)

எப்படி ஒரு அற்புதமான கற்பனை!

அனைவரும் கை தட்டிப் பாராட்டினார்கள்!!🪷🪷🪷🪷🪷
ravi said…
[15/03, 11:52] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 108*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

*97*
[15/03, 11:53] Jayaraman Ravilumar: सत्कृतदेशिकचरणाः सबीजनिर्बीजयोगनिश्रेण्या

अपवर्गसौधवलभीमारोहन्त्यम्ब के‌உपि तव कृपया ॥97॥

97. Sath kurutha desika charanaa sabheeja nirbheeja yoga nisrenaya,

Apavarga soudha valabhim aarahathyamba kea pi thava krupaya.

ஸத்க்றுததேஶிகசரணாஃ ஸபீஜனிர்பீஜயோகனிஶ்ரேண்யா |

அபவர்கஸௌதவலபீமாரோஹன்த்யம்ப கே‌உபி தவ க்றுபயா ||97||
ravi said…
அம்பாள் உபாசகர்கள் குருவை அணுகி, யோகாப்யாஸம் செய்து, அவள் அனுக்ரஹம் பெற்று மோக்ஷகதி அடைகிறார்கள்.

மோக்ஷம் என்பது பல மாடிகளையுடைய உயர்ந்த மாளிகை என மனதில் காட்டுகிறார் மூகர்.

இதில் மேலே செல்ல மாடிப்படிகள் தான் யோகங்கள் .

படிகளில் முன்னேறும் போது தான் சமாதி நிலை கிட்டுகிறது.

கர்ம ஸம்ஸ்கார விருத்திகளை கடந்தபின், ஸமாதிநிலை அனுபவித்து தான் கைவல்யம் எனும் முக்தி பெறமுடியும்.

அதை அருளும் உன்னை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் மூகர் .👍👍👍
ravi said…
[15/03, 11:47] Jayaraman Ravilumar: 💐💐💐

*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 514* 🙏🙏🙏started on 7th Oct 2021

*230 வது திருநாமம்*
[15/03, 11:49] Jayaraman Ravilumar: *230 महायागक्रमाराध्या -* *மஹாயாக க்ரமாராத்யா --*

பாவன யாகம், சிதாக்னி குண்ட யாகம் போன்ற பெரும் யாகங்களில் வழிபடப்படுபவள் அம்பாள்.

அம்பாளின் பிரதிநிதியாக 64 யோகினிகளை வணங்கி வளர்க்கும் யாகம் மஹா யாகம்.

தந்த்ர சாஸ்திரத்தில் சொல்லப்படும் நவாவரண வழிபாடு. க்ரமா என்பது முறையாக, கிரமமாக அந்த யாகத்தை செய்வது.
ravi said…
*64 யோகினிகள்* *பெயர் தெரியுமா?*

சில பெயர்கள் சில இடங்களில் மாறி வரலாம்:

1. பிராம்மணி 2. சண்டிகா 3. ரௌத்ரி, 4. கௌரி 5. இந்திராணி 6.கௌமாரி 7. பைரவி 8.துர்கா 9. நாரசிம்ஹி,
10. காளிகா

11. சாமுண்டா 12. சிவ தூதி 13.வாராஹி 14.கௌசிகி 15 மகா ஈஸ்வரி 16. சங்கரி 17. ஜெயந்தி 18. சர்வ மங்களா 19 காளி 20.கராளிணி

21 .மேதா 22. சிவா 23. சாகம்பரி 24. பீமா 25.சாந்தா 26 ப்ரமாரி 27.ருத்ராணி 28. அம்பிகா 29. க்ஷமா 30. தாத்ரி

31. ஸ்வாஹா 32. ஸ்வதா 33. பர்ணா 34. மஹௌந்தரி 35. கோர ரூபா 36 , மஹா காளி 37. பத்ரகாளி 38. கபாலினி 39. க்ஷேம கரி 40 .. பிரம்ம சயனி

41. சந்திரா 42. சந்திராவளி 43. பிரபஞ்சா 44. ப்ரளயந்திகா 45. பிசுவக்த்ரா 46. பிசாசி 47. ப்ரியங்கரி 48. பால விகர்மி 49. பால ப்ரமந்தநீ 50. மத நௌன் மந்தணி

51. சர்வ பூதாதமனி 52 உமா 53. தாரா 54 மஹா நித்ரா 55. விஜயா 56. ஜெயா 57. சைலபுத்ரி , 58. ஸாயந்தி , 59. துஸ்ஜயா 60. ஜெயந்திகா

61. பிடாலி 62. கூஸ்மாண்டி 63. காத்யாயனி 64. மஹா கௌரி.
ravi said…
சுருண்டு விழும் நறுமணம் கொண்ட முடியை உடைய தயரதன் தன் குலத்தில் உதித்த குழந்தையே!

வளைந்து நிற்கும் ஒரு வில்லைக் கொண்டு மதிள் சூழ்ந்த இலங்கையை அழித்தவனே!

கழுநீர்ப்பூக்கள் எல்லாத் திசைகளிலும் அலரும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே!

பக்தர்களுக்கு அருள் தருபவனே! இராகவனே! *தாலேலோ!*

தேவர்கள், அசுரர்கள், திசைகள் என்று எல்லாவற்றையும் படைத்தவனே!

எல்லோரும் வந்து திருவடிகளை வணங்க திருவரங்க நகரில் துயில் கொண்டவனே!

காவிரி என்னும் நல்ல நதி பாயும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே!

நெடிய சிறந்த வில்லை வலக்கரத்தில் உடையவனே!

இராகவனே! *தாலேலோ* !🪷🪷🪷
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

99 –
வேதாந்தத்தே வேறு அற விளங்கும்
வேதப் பொருள் அருள் அருணாசலா (அ)
ravi said…
*Meaning*

You are not different from Vedanta ,the essence of Scriptures , Bless me *Arunachala*🪷🪷🪷🪷🪷
ravi said…
*அருணாசலா*

வேதம் நீ வேதத்தின் மெய்ப்பொருள் நீ ..

வேத ஸ்வரூபம் நீ வேதத்தின் வித்தும் நீ

வேதத்தின் சாரமும் நீ .. இலையும் நீ உரமும் நீ

என்னுள்ளே நுழையும் கள்வனும் நீ

ஐம்பெரும் கள்வர்களை பிடிக்கும் காவல் காரனும் நீ ...

ஐம்பூதங்கள் உன் சொத்து அன்றோ *அருணாசலா*

அதில் ஒன்றை அழித்தாலும் அவர் குலம் நாசமாவது நிச்சயமன்றோ *அருணாசலா*

நிலவுக்கு குளிமை தந்தாய் கதிருக்கு ஒளி தந்தாய் ..

விண்மீன்களுக்கு விடியல் தந்தாய்

வானதிற்கு குரல் தந்தாய் ...

நீருக்கு குரலும் சுவையும் தந்தாய்

மண்ணுக்கு மணம் தந்தாய் குரலும் சுவையும் கூடவே தந்தாய் ...

நெருப்புக்கு உணர்ச்சி தந்தாய் ...

குரலும் மணமும் சுவையும் கூடத் தந்தாய் ...

காற்றுக்கு பரிசம் தந்தாய்

காற்று போல் நீ இருப்பதை உணர வைத்தாய்

குரல் , சுவை குணம் மணம் தந்தே

ஏது தரவில்லை நீ இன்னும் கேட்பதற்கு உனை தந்து எனை பெற்றாய் ...

உலகில் பெரும் ஏமாளி எனும் பெயர் ஏன் பெற்றாய் *அருணாசலா ?* 💐💐💐
ravi said…

பழனிக் கடவுள் துணை -15.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-88

மூலம்:

வாரம்வைத்துப் பல்கனவில் வந்துவந்து நீயுரைத்த
காரணங்கள் பொய்த்தாற் கடைத்தேரேன் – பாரகத்திற்
சித்திஎய்தா தாரும் செயவேற் பழனியப்பா!
முத்தி எய்தல் மெய்யாகு மோ? (88).

பதப்பிரிவு:

வாரம் வைத்துப் பல் கனவில் வந்து வந்து நீ உரைத்த
காரணங்கள் பொய்த்தால் கடைத்தேரேன்! – பாரகத்தில்
சித்தி எய்தாதாரும் செயவேல் பழனியப்பா!
முத்தி எய்தல் மெய்யாகுமோ? (88).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

வாரம்- அன்பு; பாரகம்- வையகம்; பூமி;

சித்தி அடையாதவர் முக்தியைப் பெற முடியாது மீண்டும் சுவாமிகள் உரைக்கும் வெண்பா.

என்மேல் மாறாத அன்பு வைத்துப் பல நாள் என் கனவில் வந்து வந்து, நீ உரைத்த காரணங்கள் எல்லாம் பொய்க்குமானால், ஐயா! உன் அடிமை, இந்த அடியேன் கடைத்தேரேன்! நீ அறியாததா? கருணை செய் ஐயா! வெற்றியையே என்றும், எப்பொழுதும் கொள்ளும் பழனியப்பா! வையகத்தில் சித்தி எய்தாதாரும் முத்தி எய்தல் என்பது மெய்யாகுமோ? நீயே புகல்! சித்தி முத்தி அருள் பழனியப்பா!

பாரகத்தில் வாரமன்றி*, பார் முழுதும் அகம் என நாளும் ஆளும் பழனி மன்னா! அருள் கூர்ந்து, என் அகம் வந்தென்னைப் பார்! உன் வாரம் நான் பாட, என் வாரமே நின்று, வாரமற்று எனக்கு உன் வாரம் என்னும் வரமருள்!

வாரம்-வரம்பு, தெய்வப்பாடல்; பக்கம்; பங்கு; அன்பு;

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
15.03.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 13)

Sanskrit Version:

देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा।
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति।।2.13।।


English Version:

dehinosminyathaa dehe
kaumaram yauvanam jaraa |
tathaa dehaantarapraaptih:
dheerastatra na muhyati ||


Shloka Meaning

Just as man in this body passes through the various stages of boyhood, youth and old age, like so,
he passes into another body after death. The wise know it and are not deluded.

Additional Details:
Boyhood, youth, old age and migrating into another body are four stages that are inevitable
for the embedded being.

It is very clear that the physical changes affect only the body and not the atma.
When a boy turns into a youth or a youth turns into a old age man, no one grieves. The Lord
questions, why should one grieve when the body falls and another is taken up by the individual being.

The wise who now the secret remain firm when these changes overtake the body.

The first three changes are visible and can be felt. The fourth change is unseen and it is looked upon
with a feeling of awe and wonder. Krishna points out that even the fourth change is like the three
previous changes and not different from them.

Cycle of the human body

Boyhood - Youth - Old Age - Rebirth

This cycle rotates inevitably so long as the karma force works. When it is neutralized and destroyed,
by knowledge, the man is freed from the cycle of birth and death. This is what every follower
of Sanatana Dharma aspires for. Moksha. Moksha is nothing but a liberation from the endless cycle
of birth and death and unite back into the Brahman.

Every living being will get moksha one fine day, but when that day is driven by one's own prarabdha karma.

Jai Shri Krishna 🌺
ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை..*

*_✍️ 15, Wednesday, Mar., 2023_*

https://srimahavishnuinfo.org

*🧿"சாதித்துக் காட்டுங்கள்.."*

*♻️எதையும் மற்றவர்களுக்கு போதிப்பது எளிது. ஆனால் சாதிப்பது கடினம். ஆனால் சாதனையாளர்களுக்குப் போதிப்பது கூட சற்றுக் கடினம் தான்.*

*♻️ஏனெனில் தங்கள் சாதனைகளை போதனைகளாக வழங்கப்பட்டவர்கள். வீணாக மற்றவர்களுக்கு உபதேசம், அறிவுரை சொல்ல தங்கள் நேரத்தை எப்போதும் வீணாக செலவு செய்வதில்லை.*

*♻️அவர்களின் சாதனைகளை மற்றவர்கள் தான் பதிவு செய்கிறார்கள். வரலாற்றில் பெயர் இடம் பெற வேண்டும் என்றால் ஏதாவது ஒன்றை சாதித்துக் காட்ட வேண்டும்.*

*♻️அந்த வரிசையில் அமெரிக்காவில் ஒரு இளம் பெண்மணி இடம் பிடித்தாள்.*

*♻️அவளின் கணவன் சிறிய வயதிலேயே இறந்து விட்டான். அவளுக்கு இரண்டு மகள்கள். வேலை இல்லை. வறுமை வாட்டியது அவளுக்கு சற்றுப் பாட வரும்.*

*♻️பாடகியாக வேண்டுமென்ற விருப்பமும் கூட. அன்று முதல் தினமும், பாடப் பழகலானாள். இதற்கிடையே ஒரு நாள், வியன்னாவின் பிரபல கலை அரங்கத்தின் சொந்தக்காரர் ஒருவரின் அறிமுகம் ஏற்ப்பட்ட போது, அவர் முன்னிலையில் பாடிக் காட்டினாள்.*

*♻️அவர் பாட்டைக் கேட்டு விட்டு, உன்னிடம் அழகும் இல்லை குரலும் இல்லை; நீ பேசாமல் பாடுவதை மறந்து விட்டு,தையல் மெஷின் ஒன்று வாங்கி தைத்துப் பிழைத்துக் கொள் என்றார்.*

*♻️அதைக் கேட்டதும் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு தையல் மெஸினா வாங்கச் சொன்னாய், நீயே ஒரு நாள் எனக்கு அழைப்பு விடுத்து, என்னை உன் அரங்கில் வந்து பாடும்படி கெஞ்சிக் கேட்க வைக்கிறேனா, இல்லையா என்று பார்'? மனதில் சபதம் செய்து கொண்டாள்.*

*♻️அன்று முதல் தீவிரமாக பாட முயற்சியும், பயிற்சியும் செய்து வந்தாள். மெதுவாக அமெரிக்காவின் பல்வேறு மகாணங்களில் பிரபலமாகி வந்தாள்.பிறகு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அவளைத்தேடி வந்தது.*

*♻️அப்படி ஒரு முறை சென்ற போது, வியன்னாவில் வேறொரு அரங்கில் பாடி முடித்து விட்டு, மேடையை விட்டு கீழே இறங்கியதும், அங்கே ஒருவர், உங்கள் இசை பிரமாதம்; எங்களது அரங்கில் ஒரு முறை நீங்கள் வந்து பாட வேண்டும் ; இது எனது வேண்டுகோள் என்று சொல்லி விட்டு , உங்களை எங்கோ பார்த்த ஞாபகம் என்றார்.*

*♻️பாடகியால் அவரை மறக்க முடியுமா ? அவர் தான் வியன்னா அரங்கின் சொந்தக்காரர்.*

*♻️"தையல் மெசின் ஒன்று வாங்கிப் பிழைத்துக் கொள் என்று சொன்னீர்களே! அதாவது நினைவு இருக்கிறதா ?" என்றாள்.உடனே நினைவுக்கு வந்து ஆச்சரியத்தாலும், வெட்கத்தாலும் தலை குனிந்து நின்றிருந்தார்*

*😎ஆம்.. நண்பர்களே*

*🏵️சாதாரண மக்கள் முதல் சாதனை புரிந்தவர்கள் வரை அனைவரது வாழ்க்கையில், எப்போதேனும் ஒருமுறை இது போன்ற வாய்ப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்.*

*⚽சாதனையாளர்கள் இதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்வதும் இல்லை . சபதம் செய்வதுமில்லை; சவால் விடுவதும் இல்லை; அமைதியாக சாதித்துக் காட்டினார்கள்.*

*🏵️விதண்டாவாதம் பேசியவர்களை எல்லாம் வியக்க வைத்தார்கள். நீங்கள் எந்தக் காரணம் கொண்டும், உங்களை தாழ்வாக மதிப்பு இடாதிர்கள்.*

*⚽மற்றவர்களையும் அப்படிச் செய்ய அனுமதிக்காதீர். உண்மையில் நீங்கள் ஒரு உயர்ந்த மனிதன். உங்களால் எதையும் சாதிக்க முடியும்.; விரும்பியதைப் பெற முடியும். எதிர்பார்த்ததை அடைய முடியும். நம்புங்கள்! நம்புங்கள்!*

*🏵️வைராக்கியத்துடன் வாழ்ந்து பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டுங்கள்! நாளை வரலாறு உங்களைப் பேசும்.*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*இரவு சிந்தனை*

💫பிரச்சனைகள் எல்லாம் நிலவு போல

ஓரு நாள் குறையும் ஒரு நாள் கூடும் ஒருநாள் காணாமலே போய்விடும்...

அதனால் கவலைகளை விட்டுட்டு சந்தோசமா தூங்குங்க நண்பர்களே...


*இன்றைய நாளை இனிமையாக்கி தந்ததற்கு இறைவனுக்கு நன்றிகள்* *பல*

*அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்*

🪷🙏🏼😴
http://mahavishnuinfo.org
ravi said…
பாதாரவிந்த சதகம் !

101.புரா மாராராதி: புரமஜயதம்ப ஸ்தவசதை:
ப்ரஸன்னாயாம் யஸ்ய த்வயி துஹிந-சைலேந்தரதநயே
பரம் தத் காமாக்ஷி ஸ்புரது தரஸா காலஸமயே
ஸமாயாதே மாதர்மம மனஸி பாதாப்ஜ யுகலம்

தாயே ! காமாக்ஷியன்னையே ! பனிமலையரசனின் மகளே !
முன்பு மன்மதனின் எதிரியான சிவனின் நூற்றுக்கணக்கான துதிகளால்
மகிழ்ந்து நீ அருள்புரிந்த போது, முப்புரத்தையும் வென்றார். அதனால்
காலனின் காலம் நெருங்கும் போது என்மனத்தில் உன்திருவடிகள்
வலிவுடன் விளங்கட்டும்.
நூற்றுக்கணக்கான துதிகளால் உன்னைப் பாடிய சிவன் உன் அருள் பெற்றார். நானும் உன்னருளால் இந்த சதகத்தைப் பாடியுள்ளேன். காலன் நெருங்கும் போது உன் திருவடிகள் காப்பாற்றட்டும்.

102.பதத்வந்த்வம் மந்தம் கதிஷு நிவஸந்தம் ஹ்ருதி ஸதாம் கிராமந்தே ப்ராந்தம் க்ருதகர ஹிதானாம் பரிப்ருடே
ஜனானாமாநந்தம் ஜனனி ஜனயந்தம் ப்ரணமதாம்
த்வதீயம் காமாக்ஷி
ப்ரதிதினமஹம் நௌமி விமலம்

மிகச் சிறந்தவளே ! காமாக்ஷி ! தாயே! நடையில் செயற்கையாகத் தோன்றாத வேத வசனங்களின் நடுவே மென்மையுள்ளதும், நல்லோர் உள்ளத்தில் வசிப்பதும், சுற்றிவருவதும், வணங்குகிற மாந்தருக்கு உன் திருவடி
ஆனந்தமுண்டாக்குவதும், அப்பழுக்கற்றதுமான உன் திருவடி(இரட்டை)யைத் தினமும் வணங்குகிறேன்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺" *நம்மை நாமே தெரிந்துக் கொள்ள* ... *நம்மை நாம் ஸ்ரீ கிருஷ்ணனோடு*
*அறிந்துக் கொண்டால் மட்டும் தான்*
*நம்மைத் திருத்திக் கொள்ளமுடியும்* ... - *என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺ஒரு குருகுலத்தில் பாடம் நடந்துக் கொண்டிருந்தது.“யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றார் குரு.

🌺ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே…அனைத்து அறிந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நம்மைச் சோதிப்பது ஏன்? கஷ்டங்களைச் சந்திக்காமல் அவன் அருளைப் பெறவே முடியாதா?” என்றுக் கேட்டான்.

🌺“நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நான் நாளை பதில் அளிக்கிறேன்.” என்றுக் கூறினார் குரு.மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள்.

🌺மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.

🌺“இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” மாணவர்களைக் கேட்டார் குரு.

🌺"இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான். இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.....“தெரியவில்லை."

🌺"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றபடியே மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியைக் கீழே தள்ளி கவிழ்த்தார்.

🌺அதிலிருந்து தேன் வெளியே வந்தது.
மற்றொரு ஜாடியைக் கவிழ்த்தார்.
அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

🌺“ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்குத் தெரியாது. இரண்டும் ஒன்றே என்று நினைத்துக் கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில் தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதைக் கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதைக் காட்டிவிட்டது."

🌺"பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நமக்குத் தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளைச் சந்திக்கும் வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையைச் சந்திக்கும் போது தான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது."

🌺"நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. நமது உண்மையான குணத்தைப் பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளைத் தருகிறான்” என்றார்.

🌺“மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக் கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?”

🌺அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான்!”
“இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே. இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்? சற்று யோசித்துப் பாருங்கள்...

🌺”கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான். ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவி சாய்ப்பதில்லை.

🌺பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நம்மைச் சோதிப்பதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே. அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா என்றுத் தெரியுமே.

🌺அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துக் கொள்ள. நம்மை நாம் ஸ்ரீ கிருஷ்ணனோடு
அறிந்துக் கொண்டால் மட்டும் தான்
நம்மைத் திருத்திக் கொள்ளமுடியும்
இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக் கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்...🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 "To know ourselves... ourselves with Sri Krishna
Only if you know
A simple story to explain that we can fix ourselves... - 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺The lesson was going on in a gurukula. "If anyone has any doubts, they can ask," said the guru.

🌺A student immediately got up and said, “Guru...why is the all-knowing Lord Sri Krishna testing us? Can he not attain grace without going through hardships?” He asked.

🌺 “Good question. I will give you an answer tomorrow.” Said the teacher. The next day the students eagerly come to the class.

🌺There were two jars made of clay in front of the students. Both looked the same.

🌺 “What is here? Do you see any difference?” Guru asked the students.

🌺 "Both the jars are prepared at the same place. They have the same capacity. Do you see any difference between them?" He asked the students....."I don't know."

🌺 "But there is a big difference between the two." He pushed down the first jar in front of the students and overturned it.

🌺Honey came out of it.
He overturned another jar.
Sewage water came out of it.

🌺 “As soon as I pushed down the jar, what was inside came out. You never know what's inside until I push it down. You thought they were the same. The difference was in the material inside. It was out of sight. But when it was pushed down it revealed what was inside."


🌺 "Such are the trials that Lord Sri Krishna gives us. We are usually good until we face trials. But it is only when we face trials that our true nature within us comes out."


🌺 "Our true thoughts and our attitudes are revealed. God gives trials to test our true character."


🌺 “If I allowed you to take one of the above two jars, which would you choose?”


🌺 Everyone said in unison, "It's the jar of honey!"

“Both look the same. Made in one place. But why say you only want the jar of honey? Just think about it...


🌺 “God knows very well that there is no great difference between the bad and the good who do not get a chance. That's why sometimes he doesn't listen to our requests.


🌺 Lord Sri Krishna tests us to know our true character. He didn't know. He knows whether it is sandalwood or sewerage.


🌺 He does so to know ourselves. We are with Sri Krishna

Only if you know

We can correct ourselves

Otherwise we will not get a chance to correct our mistakes...🌹🌺


🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan

🌷🌹🌺

--------------------------------------------------

🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
��உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே. இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது.
ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆலயங்களில் கூட்டம். ஜோதிடர்களிடமும் கூட்டம். எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளிவைத்துவிட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது.

ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள். அந்த இடம்,தான் காசி நகரம். இங்கே மக்கள் இறப்பை கொண்டாடுகிறார்கள். துளி அளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதில்லை. அங்கே உள்ள கோவில்களில் இசையும், மந்திரமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் இறுதி மூச்சும் அதோடு கலந்து காற்றோடு, மண்ணோடு, நீரோடு சங்கமித்துக் கொண்டிருக்கிறது.

,‘
ravi said…
இறப்பு யார் கையிலும் இல்லை, இறப்பு அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் இல்லை’ என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இலட்சங்களை ஆஸ்பத்திரிகளில் செலவிடுபவர்கள் திடீரென்று இறந்து போகிறார்கள். ஆனால் காசியில் இறப்புக்காக காத்திரு ப்பவர்கள், அதைத்தேடி வருடக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள். அதுதான் கிடைத்த பாடில்லை.

ravi said…
காசி, பூமி தோன்றிய போதே உருவான தாக கருதப்படும் புண்ணிய நகரம். உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டம், கங்கை நதிக்கரையில் உள்ளது. 1800 கோவில்களுடன் அது, இந்தியாவிலேயே அதிகமான கோவில்களைக் கொண்ட நகரம் எந்நேரமும் பக்தர்கள் கோவில் களை நோக்கி நடந்து சென்று கொண்டே இருப்பதால் இரவுக்கும், பகலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. எந்நேரமும் வெளிச்சம்! (காசி என்றால் ஒளி தரும் இடம் என்பது புராண அர்த்தம்)

ravi said…
இந்து மதத்தை தழைக்க வைத்த ஞானிகள் பலரின் மூச்சு காற்றோடு கலந்து, அவர்கள் ஒவ்வொருவரின் பாதப் பதிவுகளும் அங்கே மண்ணோடு விரவிக்கிடக்கிறது. இந்த ஞானபூமியின் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு கதை! அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புராணம். காசியைத் தொட்டு ஓடும் புண்ணிய நதி கங்கை! வருணை நதியும், அஸி நதியும் இதன் எல்லைகள். அஸி கங்கையில் சங்கமம் ஆகும் இடம் அஸி கட்டம். காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக 4 மைல்!

ravi said…
அங்கு புகழ் பெற்றிருப்பது விஸ்வநாதர் ஆலயம். இந்த கோவில் ஒரு குறுகிய தெருவில் அமைந்திருக்கிறது. உள் பிரகாரம் வளவளப்பான சலவைக் கல்லில் ஜொலிக்கிறது. மையத்தில் கருவறை, கங்கை நீர், பால், வில்வ இலைகளால் அபிஷேகம் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது. ஆலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடிசைகள்! இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும், நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் முதிய வயதில் வாழ்க்கையில் முழுமையைத் தேடி வந்து இந்த குடிசைகளில் தங்கியிருக்கிறார்கள், மரணத்தை தேடி!

ravi said…
அவர்கள் அதிகாலையிலே எழுந்து கிழக்கில் சூரியன் விழிக்கும் போது கூட்டம், கூட்டமாக வெளியேறி, காசியில் அமைந்திருக்கும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களை நோக்கி நகர்கிறார்கள். தினமும் கங்கையில் குளித்து, ‘இறைவா எங்களை ஏற்றுக் கொள்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள். இவர்கள் காசியைத் தேடிச் சென்று காத்திருப்பதன் நோக்கம், அங்கு கடைசி மூச்சை விட்டால் மோட்சம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை.

ravi said…
இறப்பை மகிழ்ச்சியோடு எதிர்நோக்க காத்திருக்கும் முதியோர்களால் சூழப்பட்டி ருக்கும் இடங்களில் ஒன்று ‘கங்கா லாப் பவன்’! இது மணிகர்ணிகா பகுதி யில் உள்ளது. அவர்கள் மூச்சு முடிவுக்கு வந்த பின்பு தொடர்ந்து அங்கு வந்து தங்கி உயிரைவிட 12 ஆயிரம் முதியோர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து விட்டு, எப்போது அழைப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். கியூவில் நிற்கும் அளவுக்கு இறப்பு மீது எவ்வளவு ஏக்கம் பாருங்கள்.

ravi said…
இன்னொன்று ‘காசி லாப் முக்தி பவன்’ ஜெய்டால் டால்மியா என்ற செல்வந்தர், தன்தாய் காசியில் மரணமடைந்த பிறகு தாயார் நினைவாக இந்த கட்டட த்தை விலைக்கு வாங்கினார். முதலில் வேத மந்திரம் ஓதவும், பகவத் கீதை சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், ஜதீக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அந்த இடத்தை பயன்படுத்தினார். ஆனால் இறப்பை எதிர்நோக்கும் முதியோர்கள் அந்த மையத்தில் வந்து குவிய, இறுதிக்குரிய இடமாக அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இங்கு கூடி இருக்கும் முதியோர்களின் மனம் எப் போதும் இறைவனை நாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வேத மந்திரங்களின் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

ravi said…
நேபாள நாட்டு அரசுக்கும் இந்த மோட்ச நம்பிக்கை இருக்கிறது. அதனால் 30 பேர் தங்கி இருக்கும் இடத்தை நேபாள அரசு பராமரிக்கிறது. அங்கிருப்பவர்களுக்கு உணவு, உடை கொடுத்து இறுதி வழி யனுப்பி வைப்பது வரை நேபாள அரசால் நியமிக்கப்பட்டிருப்பவர்களின் பொறுப்பு.
இந்த மோட்ச பூமி 1891 மற்றும் 1921ம் ஆண்டுகளில் நோயால் துவண்டு மயான பூமியாக மாறி ஒரு இலட்சம் பேரை பலிவாங்கியிருக்கிறது. அப்போது மரணத்தை எதிர்நோக்கி நிறைய பேர் அங்கு செல்ல, அவர்களை கட்டுப்படுத்த ஆங்கிலேயே அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுத்தது, உடனே மனித ரீதியான சர்ச்சைகள் தொடங்கியது, ஆங்கிலேயே அரசு பின்வாங்கி, ‘நமக்கு என்னப்பா...’ என்று விட்டுவிட்டது.

ravi said…
இப்போதும் முடிவைத் தேடி நிறைய மக்கள் அங்கு செல்வதால், அவர்கள் கடைசி காலம் வரை தங்கி இருக்க இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. அதனால் அங்கு வாழும் மக்கள் தங்கள் வீடுகளை அத்தகைய முதியோர்களுக்காக வாடகைக்கு விடுகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோர்களை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டு விட்டு பணத்தைக் கட்டிவிட்டுச் சென்று விடுகிறார்கள். இறுதிக் காலம் வரை பராமரிக்கவும், இறப்புக்குப் பின்புள்ள சடங்குகளை செய்யவும் ஒப்பந்தக்காரர்கள் அந்தப் பபணத்தை பபயன்படுத்துகிறார்கள். எல்லாத்தையும் கடவுள் பார்த்துக் கொள் வார் என்ற நம்பிக்கைத்தான் அவர்களுக்கு!

காசியில் 9 ஆயிரம் ஆண்டுகளாக ‘அணையாத தீபம்’ எரிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தீயை எடுத்துத்தான் அங்கு இறப்பவர்களின் சடலங்களில் வைத்து உடலை எரிக்கிறார்கள். தினமும் அங்கு 350 சடலங்கள் வரை எரிக்கப் படுகின்றனவாம். இங்கு உடல் எரிக்கப்படும் போது, உறவினர்களை அழ அனுமதிப்பதில்லை. யாராவது அழுதால் இறந்தவர் ஆன்மா மோட்சத்திற்கு சொல்லாது என்று கூறி அழுகைக்கு அணை போட்டு விடுகிறார்கள்.

விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து எட்டிப் பார்த்தால், அதே தெருவில் சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது அன்னபூரணி ஆலயம். தமிழ்நாட்டு கலைப்பாணி அதன் தனிச்சிப்பு. தமிழகத்து நாதஸ்வரம் எப்போதும் அங்கு இசையருவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. அங்கு நிகழும் மரணம், எரிப்பு எல்லாவற்றிலும் இசை கலந்து மனித மனங்களில் துக்கம் ஏற்படாமல் இதமாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் இறந்தவரை முழு மனதோடு முழுமையாக வழியனுப்பி விட்டுச் செல்கிறார்கள்.

கங்கை நதி தனது கரைக் கரங்களால் காசி நகரை கிழக்கு- மேற்காக பிரிக்கிறது. மேற்கு கரையில் ‘மணிகர்ணிகா கட்’ உள்ளது. இது தான் பூமியில் முதலில் தோன்றியதாகவும் பூமி முடியும் வரை (இறந்த உடல்கள்) அங்கு எரிந்து கொண்டே இருக்கும் என்பதும் ஐதீகம். வருடத்தின் 365 நாட்களும், முழு நேரமும் ஓயாத தீயுடன் உடல்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.
இயந்திரமயமான உலகில் அங்கேயும், அதிலும் சுறுசுறுப்பு, உடலை கங்கையில் முக்கிவிட்டு ஈரம் சற்று வடிவதற்காக தரையில் கிடத்துகிறார்கள். அதற்குள் உரிமையானவர் மொட்டை அடித்துக் கொள்கிறார். தகனம் செய்பவர் ‘ரெடி’ என்றதும் உடல், தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அணையா தீப மாய் எரியும் தீயில் இருந்து, தீயை எடுத்து சடலத்திற்கு ‘பொட்டு’ வைக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் பிடி சாம்பல். அது அப்படியே கங்கையில் கரைக்கப்படுகிறது. அவ்வளவுதான் வாழ்க்கை என்று உணர்த்தப்படுகிறது. அந்த ஜென்மத்திற்கு அங்கே விழுகிறது முற்றுப்புள்ளி. அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி இறந்து போன தன் மகன் லோகிதாசனின் உடலை தூக்கிக் கொண்டு மயானத்திற்கு வருவாள். அரிச்சந்திரன் அங்கே வெட்டியான்.

அவன் தன் மனைவியையும், மகனையும் அடை யாளம் காண்கிறான். ஆயினும் எரிப்பதற்குத் தேவையான பணத்தைக் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று பொதுநிலை தவறாமல் உண்மை பேசுகிறான். மரணத் தில் கூட மனசாட்சிக்கு பயப்படாமல் உண்மை பேசியதால் அரிச்சந்திரனின் உண்மை, உலகிற்கே உன்னதம் ஆனது. இந்த அரிச்சந்திரன் வெட்டியானாக இருந்து மகன் உடலை எரித்த ‘அரிச்சந்திர கட்’ கங்கை ஓரத்தில் உடல்களுக்காக காத்திருக்கிறது. இங்கு உடலை எரிப்பதை இந்துக்கள் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள்.

ஆனால் இறப்பு என்பது உண்மை’ என்று கருதுகிறவர்களில் ஒரு பகுதியினர் மறுபிறப்பு என்பதை நம்புகிறார்கள். ஒரு மனிதன் முக்தி அடையும் வரை அவன் மீண்டும், மீண்டும் பிறப்பான் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி யுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ‘காசியில் மரணம் முக்தியைத் தரும். அவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்’ என்பது நம்பிக்கை யாக்கப்பட்டிருக்கிறது.



������
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

விவாஹம் என்ற ஸம்ஸ்காரத்துக்குப் பல உத்தேசங்கள் உண்டு. அதிலே முக்யமான ஒன்று, ஸ்திரீகளுக்குச் சித்த பரிசுத்தி ஏற்படப் பதி என்ற ஒரு பிடிப்பை ஏற்படுத்தித் தருவது. அதைப் பிடித்துக் கொண்டே அவர்கள் கடைத்தேறி விடுவார்கள். குருவிடம் பிரம்மசாரி சிஷ்யன் சரணாகதி பண்ணிப் பாப நிவிருத்தியடைந்து சுத்த மனஸோடு இருக்கிற மாதிரி இந்தக் கன்னிகையும் இவனிடம் இருக்க வேண்டும்.

.
ravi said…
நம்முடைய கர்மா, ஜன்மா எல்லாவற்றுக்கும் காரணம் மனஸின் சேஷ்டைதான். இந்த மனஸை வைத்துக் கொண்டு அதனுடைய இச்சைகளைப் பூர்த்தி பண்ணப் பாடுபடுவதில் தான் பாபங்கள் ஸம்பவிக்கின்றன; ஜன்மாக்கள் ஏற்படுகின்றன. மனஸை நிறுத்திவிட்டால் கர்மா இல்லை, ஜன்மா இல்லை, மோக்ஷம்தான். மனஸை நிறுத்துவது மஹாசிரமமான காரியம். அஷ்ட மஹாஸித்திகளைக் கூட அடைந்து விடலாம்; சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பதுதான் முடியாத காரியம் என்று [தாயுமானவர்] பாட்டுக்கூட இருக்கிறது. மனஸை நிறுத்த முடியாவிட்டாலும், அதைச் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக ஆடும்படி விடாமல் இன்னோரிடத்தில் அர்ப்பணம் பண்ணி விட்டால், அப்போது ‘தனக்காகப் பண்ணிக் கொள்வது’ என்பதால் ஏற்படும் பாபமும் ஜன்மமும் இல்லாமல் போகும். இன்னொருத்தர் ஆட்டி வைக்கிறபடி அவரிடம் மனஸை ஸமர்ப்பித்து விட்டோமானால் நமக்கு கர்த்தா என்கிற பொறுப்பில்லை. அதனால் ஏற்படும் பாப புண்யமும் ஜன்மாவில் இல்லை. “என் செயலாவது யாது ஒன்றுமில்லை” என்று ஈச்வரனிடத்தில் இப்படித்தான் மனஸை அர்ப்பிக்கச் சொல்கிறார்கள். ஆனால் அதைச் செய்பவர் கோடியில் ஒருத்தர்தான். இதையே ஒரு பெண்ணுக்குப் பதியை ஈச்வரனாகக் காட்டியிருக்கிற நம் தர்மத்தில் ஏராளமான ஸ்திரீகள் ஸுலபமாகச் செய்து கடைத்தேறியிருக்கிறார்கள். புருஷனை ஈச்வரனாக நினைப்பது கணவனே கண் கண்ட தெய்வம் என்ற கொள்கை, கல்லானாலும் கணவன் என்ற அடக்க ஸ்வபாவம், பாதிவ்ரத்யம் (கற்பு) , ஸெளமங்கலியம் (சுமங்கலித் தன்மை) , ஸுமங்கலியாகவே செத்துப் போக வேண்டும் என்ற தீவிர‌மான‌ பிரார்த்தனை ஆகிய இவைகள் அநாதி காலமாக நம் தேசத்து ஸ்திரீதர்மமாக, நம் தேசத்துப்பெண்களின் உத்தம ஜீவனத்துக்கு உயிர் நிலையாக இருந்து வந்திருக்கின்றது.

ravi said…
எந்தத் தேசத்திலும் உத்தம ஸ்திரீகள் இருந்திருப்பார்கள்தான். எந்த மதத்திலும் உயர்ந்த குணசாலினிகள் தோன்றியிருப்பார்கள். என்றாலும் மேலே சொன்ன விஷயங்கள் நம் தேசத்தின், நம் மதத்தின் நம் கல்ச்சரின் ஜீவாதாரமான ஒரு அம்சமாக இருப்பது போல் மற்ற இடங்களிலே சொல்ல முடியாது. ‘நாகரிகம்’ என்று சொல்லி கொண்டு இதை மாற்ற நினைப்பது நம்முடைய மஹோன்னதமான பண்பாட்டுக்கே ஆதாரமாக இருக்கப்பட்ட ஒரு ஆணிவேரை வெட்டி விடுகிற மாதிரியாகும்.

ravi said…
காதல் கீதல் என்று சித்த விகாரம் ஏற்படாமல், சரீர நினைப்பும் காமமும் வருகிறதற்கு முந்தியே ஒருத்தனை பர்த்தாவாக அடைந்தால்தான் குழந்தை உள்ளத்தில் உண்டாகிற பணிவினால் அங்கே உண்மையான சரணாகதி செய்து, “இவனே நமக்கு குரு; இவனே நமக்கு ஈச்வரன்” என்று இருக்க முடியும்.

ravi said…
ஆந்திர தேசத்திலும் மஹாராஷ்டிரத்திலும் இன்றைக்கும் ஸ்திரீகளுக்கு விரதங்கள் அதிகம். அவற்றில் ஒன்று கன்னிகைகள் பரமேச்வரனையே பதியாக நினைத்துப் பூஜிப்பது. பிறகு ஒருத்தன் பதியாக வருகிறான். அவனையே பரமேச்வரனாகப் பூஜிப்பது, இப்போது பத்னியாகிவிட்ட அந்த கன்னிகைக்கு விரதமாக ஆகிறது. பரமேச்வரனைப் பதியாகப் பூஜித்து, முடிவில் எவன் பதியாக வந்தாலும் அவனே பரமேச்வரன் என்று பாவித்துவிட வேண்டியது.

ravi said…
கேள்வி கேட்காமல், நம்பிக்கையின் பேரில்தான், அதாவது பால்யத்தில்தான் ஒருத்தனைப் பரமேச்வரனாக நினைக்க முடியும். விவரம் தெரியாத போது வந்த இந்த நம்பிக்கை மனஸில் ஊறி ஊறி, நம் ஸ்வாபாவிகமான ஸ்திரீதர்மத்தினால் மனஸில் உறுதிப்பட்டு விடுவதால், விவரம் தெரிந்த பின்னும் பதியே பரமேச்வரன் என்ற பக்தி நிலைத்து நின்றுவிடும். அவனிடத்திலேயே தன் மனஸை அர்ப்பணம் பண்ணித் தனக்கென்று மான அவமானம் எதுவும் இல்லாமல் ஒருத்தி இருந்துவிட்டால் அவளுடைய அஹம்பாவம் கரைந்து போய்விடுகிறது. அதுதான் ஜனன நிவிருத்தி, அது தான் மோக்ஷம். பக்தி, ஞானம், தபஸ், பூஜை, யக்ஞம், யோகம் என்ற எல்லாம் இந்த அஹங்கார நாசத்தைத்தான் உத்தேசமாகக் கொண்டிருக்கின்றன. இது ஒரு ஸ்திரீக்குப் பதிபக்தியால் ஸுலபமாக, இயற்கையாக ஸித்தித்து விடுகிறது.

ravi said…
இப்படி பாவித்து சரணாகதி பண்ணின நளாயினி, அநஸூயை, ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மியான ஸீதாதேவி, ஸதி என்ற பெயர் பெற்ற தாக்ஷாயிணியான பராசக்தி, ஸாவித்ரி, கண்ணகி, திருவள்ளுவரின் பத்தினி வாஸுகி முதலானவர்களைத்தான் நம் தேசத்தில் தெய்வங்களுக்கும் மேலாக வைத்திருக்கிறது. அவர்களை நினைத்தாலே நமக்கு வேறெதிலும் உண்டாகாத பெருமைப் புளகாங்கிதம் உண்டாகிறது- நமஸ்காரம் பண்ணுகிறோம். ஏன் இப்படி இருக்க வேண்டும் என்றால் சொல்லத் தெரியாது! “பதியே ஈச்வரன் என்பது பேத்தல்; ஸூபர்ஸ்டிஷன்; பெண்களை அடக்கி, நசுக்கி வைக்கிற கொடுமை” என்று எத்தனை ஆக்ஷேபித்தாலும், இப்படி இருப்பதுதான் இந்த தேசாசாரம். பாரத தேசம் என்றால் இங்கே ஹிமோத்கிரியும் கங்கையும் இருக்கிறதோ இல்லையோ? ஏன் இருக்க வேண்டும் என்றால் என்ன சொல்வது? அப்படித்தான் நம் தேசத்துக் கற்பரசிகளின் சரணாகதி வாழ்க்கையும். ஆல்ப்ஸ் மலையை ஐரோப்பியர்கள் நினைக்கிற மாதிரிதானா நாம் கைலாஸத்தை நினைக்கிறோம்? மிஸிஸிபியை அமெரிக்காக்காரன் நினைக்கிற மாதிரி தானா நாம் கங்கையை நினைக்கிறோம்? அதற்கெல்லாம் மேலாக இவற்றிலே தெய்விகத்தை அநுபவிக்கிறோம் அல்லவா? அப்படியேதான் அவர்களுக்கு ஒரு குடும்ப ஏற்பாடாக மட்டும் உள்ள தாம்பத்தியத்தில் நம் சாஸ்திரங்கள் ஒரு பெண்ணுக்கு ஆத்மாவையே சுத்தப்படுத்தித் தருகிற பரம ஸாதனமான சரணாகதியைப் பிசைந்து வைத்திருக்கிறது. சமூக ரீதியில் பெண்களுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு இதற்குக் காரணமான பால்ய விவாஹத்தை மாற்றுவதனால் அவர்களுடைய ஆத்மாபிவிருத்திக்கு பெரிய ஹானியை உண்டாக்குகிறோம். சின்ன ஸெளகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹா பெரிய பிரயோஜனத்தை நஷ்டப்படுத்துகிறோம்
ravi said…
🌹🌺 "Arguing with a fool and a fanatic is the worst waste of time.... - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 "A donkey to a tiger,
The color of the grass is blue!”
The tiger got angry and said, "No, the grass is green!"

🌺The argument got heated and both decided to submit the case to the jury, so they went before the king of the jungle, the lion.

🌺The donkey saw the lion sitting on his throne,
"Is it true, O king, that the grass is blue?" asked.

🌺The lion replied, "Truth, the grass is blue." The donkey hurried on. The tiger disagrees with me and contradicts me...! Annoys me, please punish him." That said.

Then the king
You are a tiger for five years
Don't talk to anyone, stay silent. This is your punishment."

🌺The donkey jumped with joy,
"The grass is blue!", "The grass is blue!"
Saying that, it left there.

🌺 The tiger accepted his punishment, but it said to the lion, O king, why have you punished me? "The grass is green."

🌺Lion, you are right - the grass is green."
Tiger, then why did you punish me?".

🌺 The lion replied,
Is the grass blue or green?
This has nothing to do with the question. Why did a brave and intelligent creature like you waste your time arguing with a donkey? That's what worried me. That's what this punishment is for!"

Arguing with a fool and a fanatic is the worst waste of time. They are unconcerned with truth or reality,

🌺But all they want is success in their hypocritical beliefs. Don't waste time on pointless arguments...

No matter how many proofs we give them, they are incapable of understanding.

🌺 They are blinded by their ego, hatred and anger.

🌺Show yourself right to them even if they are wrong.

🌺When ignorance screams, our intelligence should be very quiet towards Lord Sri Krishna. because
"Our peace of mind and silence are worth more."🌹🌺

🌺🌹valga Vayakam 🌹Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -16.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-89

மூலம்:

மோகக் கடலில் முழுகித் தவிப்புறும் நான்
ஏகத் துவம் உணர்தல் எவ்வாறோ – மாகத்தார்
ஏத்தும் பழனிக்(கு) இறைவா! எனைநீயே
காத்துன்உள்ளிற் சேர்க்கை கடன் (89).

பதப்பிரிவு:

மோகக் கடலில் முழுகித் தவிப்புறும் நான்
ஏகத்துவம் உணர்தல் எவ்வாறோ – மாகத்தார்
ஏத்தும் பழனிக்கு இறைவா! எனை நீயே
காத்து உன் உள்ளில் சேர்க்கை கடன்!! (89).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பழனியம்பதியில் இருந்து இன்று- 16.03.2023ல் இந்தப் பாடலுக்கான விளக்கம் எழுத என்ன தவம் செய்தேனோ எம் பெருமானே? என்னே உன் கருணை?

மாகத்தார் - தேவர்;
ஏகத்துவம்-ஏகம் + தத்துவம் = ஏகத்துவம்-பலவாக பிரிந்து காணப்படுகின்ற தத்துவங்களை ஒரே தத்துவமாக அல்லது ஒரே உள்ளமையாக அறிந்து உணர்வதாகும்.

தேவர்கள் நித்தம் போற்றி, வாழ்த்தி, துதிக்கும் பழனிக்கு இறைவா! கருணாசலனே! மோகக் கடலில் முழுகித் தவிப்புறும் நான், பலவாக பிரிந்து காணப்படுகின்ற தத்துவங்களை ஒரே தத்துவமாக அறிந்து உணர்தல் எவ்வாறோ எம் பெருமானே? பழனிவாழ் ஞான தண்டாயுதபாணி சுவாமியே! உன் வழி வழி அடிமை, என்னை நீயே காத்து, உன் பேரருளால், உன் உள்ளில், உன் உள்ளத்தில் என்னை நீ தயவு கூர்ந்து சேர்த்துக் கொள்ள வேண்டும் ஐயா! என்னை உன்னுள்ளில் சேர்த்துக் கொள்ளல் உன் கடமை அல்லவோ எம் பெருமானே? கருணை செய்!

பழனிப் பெருமாளே! உன் அடிமையென்னை *சேரார் வசம் சேர விடாது, உன்னுள்ளிலே சேர்! உன்னை மட்டுமே நான் சார்ந்து, நேர்த்தியான உன் சேர்த்தியே எனக்குச் சேர, உன் கருணைக் கண் கொண்டு பார்! தயை கூர்!

* சேரார்- பகைவர்;

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
[16/03, 07:21] +91 96209 96097: *அமிதாசனாய நமஹ*🙏🙏
எல்லை இல்லாத உணவை அமுது செய்பவர்
[16/03, 07:21] +91 96209 96097: ஹ்ரீங்காரீ ஹ்ரீமதீ ஹ்ருத்³யா *ஹேயோபாதே³யவர்ஜிதா*🙏🙏
எல்லா உயிர்களிடத்தும் காரண காரியமின்றி அருளை அளிப்பவள்
ravi said…
பாதாரவிந்த சதகம் !

103.இதம் ய: காமாஷ்யா: சரண நலிந ஸ்தோத்ர சதகம்
ஜபேந் நித்யம் பக்த்யா நிகில ஜகதாஹ்லாத ஜனகம்
ஸவிச்வேஷாம் வந்த்ய: ஸகல கவி லோகைக திலக:
சிரம் புக்த்வா போகான் பரிணமதி சித்ரூபகலயா

உலகமனைத்திற்கும் பேரானந்தம் தருகிற காமாக்ஷியின் திருவடித் தாமரைப்பற்றிய நூறு துதிகளையும் தினமும் பக்தியுடன் ஜபிப்பவன் உலகினரால் வணங்கத்தக்கவனும், எல்லாக்கவிகளின் உலகிற்கு நெற்றித்திலகமுமாகி நீண்டகாலம் இம்மைச் சுகம்
பெற்றனுபவித்து சித்ரூபிணியின் கலையாக வடிவாக ஆகின்றன்.

சித்ரூபிணியின் கலையாக
திருவடிகளில் வணங்கி நிற்பவன் எல்லா தன்மைகளையும் பெறுகிறான். மமதையும் அகந்தையும் நீங்கி
விருப்பு வெறுப்பின்றி ஸமநோக்குடன் உலகுடன் பழகுவதால் அமைதி பெறுகிறான்.

திருவடியில் வணங்கும் போது சிவபெருமானின் அருகாமையும் கிடைக்கிறது. மங்களம் சூழ ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பாதாரவிந்த சதகம் நிறைவுற்றது.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
1 – 200 of 459 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை