ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 41 இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா- பதிவு 48

 41 இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா


காமதேவனின் அம்பறாத்தூணி போன்ற முன்னங்கால்களிருந்து (கால்விரல்களே அம்புகளென வரிக்கலாம்.) இந்திரக்கோபங்கள் சிதறப்பட்டிருப்பது போன்ற சிவந்த மிளிர் நகங்கள் கொண்டவள்.





குறிப்பு


() கூட = மறைக்கப்பட்ட
குல்ஃபா = கணுக்கால்கள்

இந்திரகோபம் ஒரு வகை பூச்சி. 

பூச்சிகள் கவிதைகளிலும் காவியங்களிலும் இடம்பெறுவது மிகவும் அரிது.

சமஸ்க்ருத இலக்கியத்தில் இரு பூச்சி வகைகள் பெரிதும் உவமைக்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று *இந்திரகோபம்* .

சில நேரங்களில் இதன் ஒளிர் தன்மையை மின்மினிப்பூச்சிக்கு இணையாக உருவகப்படுத்துவண்டு.

சஹஸ்ர நாமத்தில் அன்னையின் சிவந்த
நகங்களை இந்திரகோப பூச்சிகள் சிதறியிருப்பதென்ற அழகிய கற்பனைக்கு உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

மின்மினிப் பூச்சிகளை வாரி இறைத்ததுபோல் மினுமினுக்கும் மன்மதனுடைய அம்புறாத்துணிகள் அன்னையின் முழங்கால்களாக உள்ளனவாம்.

சிறிது சிந்தித்தால், தங்கமயமாக சொலிக்கும் அன்னைக்கு, சோடனையாக அமைந்தனவா அவை?அல்ல! அல்ல! மன்மதனைத் தன்பணிக்குக் காமேசுவரியான அன்னை சேர்த்துக்கொண்ட தயை என்றே கொள்ளவேண்டுமன்றோ?

மின்மினிகள் மேலாம்போல்

மின்னுமதன் வட்டில்கள்

தன்முழந் தாளிரண்டாய் தாயுடைத்தாள் –

பொன்மய
அன்னைக்குச் சோடனை அல்லவவை ;

அங்கசனைத்
தன்பணிக்குச் சேர்த்த தயை.

*வட்டில்கள்* – அம்புறாத்துணி

===================================================================

Comments

ravi said…
*ராமா*

சீதையை பிரிந்து நீ துடித்த துடிப்பு யாரே அறிவார் *ராமா*

செடியும் புதரும் கல்லும் முள்ளும்

மரமும் இலையும் இரவும் பகலும்

இளைத்து போனதோ உன் கதறல் கேட்டே *ராமா*

விலங்கும் பறவையும் ஊறும் பாம்பும்

உதவும் அணிலும் தேடும் மயிலும் காடும் கடலும் தேடியதோ *ராமா* ..

வானம் வெடிக்க மின்னல் வெட்ட மேகம் முட்ட பொழிந்த மழையும் உன் கண்கள் சிந்திய கண்ணீருக்கு குறைவோ *ராமா*

ஜீவாத்மா தனித்து நிற்க

பரமாத்மா பதறித் துடிக்க

குருவாய் ஒருவன் அருவாய் இன்றி

எழிலாய் இலங்கை சென்றே கண்டானோ ஜீவாத்மாவை அங்கே

சேர்த்து வைத்தான் பரமாத்மா உன்னுடன் ...

அத்வைதம் இதுவன்றோ *ராமா*

அவன் பெயர் என்றும் அழியா *அனுமன்* அன்றோ *ராமா*
ravi said…
லலிதா ஸஹஸ்ரநாமமும் ஸௌந்தர்யலஹரியும் ஒரு பார்வை.

அம்பாள் கண்களைத் திறந்தாள் ஸ்ருஷ்டி, மூடினால் பிரளயம் (ச்லோ. 55) என்கிறபோது “உந்மேஷ-நிமிஷோத் பந்ந- விபந்ந- புவநாவளீ” என்ற நாமா நினைவு வருகிறது.

ravi said…
லலிதா ஸஹஸ்ரநாமமும் ஸௌந்தர்யலஹரியும் ஒரு பார்வை.

அம்பாள் கண்களைத் திறந்தாள் ஸ்ருஷ்டி, மூடினால் பிரளயம் (ச்லோ. 55) என்கிறபோது “உந்மேஷ-நிமிஷோத் பந்ந- விபந்ந- புவநாவளீ” என்ற நாமா நினைவு வருகிறது.

ravi said…
அம்பாளுடைய உதட்டுக்கு பவளக் கொடியும் (வித்ருமலதாகவும்) ஒப்பாகாது என்று இதில் [ச்லோ. 62] வந்தால், அதில் [ஸஹஸ்ரநாமத்தில்]. அதே அர்த்தத்தில் “நவ வித்ரும-பிம்பஸ்ரீ-ந்யக்காரி-ரதநச்சதா” என்று இருக்கிறது!

“ஸரஸ்வதியின் வீணாகானத்தையும் விஞ்சுகிற சாதுர்யம் அம்பாளுடைய பேச்சுக்கே இருக்கிறது: நிஜ-ஸல்லாப-மாதுர்ய-விநிர்பர்த்ஸித-கச்சபீ” என்று ஸஹஸ்ரநாமத்தில் வருகிற ‘ஐடியா’வையே விபஞ்ச்யாகாயந்தீயில் [ச்லோ-66] ஒரு முழு ச்லோகமாக ஆசார்யாள் ‘டெவலப்’ பண்ணியிருக்கிறார்.

ravi said…
ஒவ்வோர் அவயவத்துக்கும் ஏதாவது உவமை சொல்லி விட்டு, சில இடங்களில் அந்த உவமையும் போதாது என்கிற ஆசார்யாள் அம்பாளுடைய முகவாய்க்கட்டையை மட்டும், “கதம்காரம் ப்ரூம: தவ சுபுகம் ஔபம்ய ரஹிதம்?” “உவமையே இல்லாத உன் மோவாயை எப்படி வர்ணிப்பது?” என்கிறார். [ச்லோ -67] ஸஹஸ்ரநாமத்தைப் பார்த்தால் அங்கேயும் மோவாய்க் கட்டைக்கு மாத்திரம் comparison-ஏ சொல்லாமல் “அநாகலித-ஸாத்ருச்ய-சுபுகஸ்ரீ-விராஜிதா” [ஒப்புவுமையே ஏற்பட்டிராத மோவாயின் அழகால் பிரகாசிக்கிறவள்] என்று இருக்கிறது!

ravi said…
பரமேச்வரனை ஜயிப்பதற்காக மன்மதன் அம்புகளை அடைத்து வைத்த அம்பறாத் தூணியாக அம்பாளின் முழங்கால் இருக்கிறது என்று இங்கே [ச்லோ. 83] வருவதற்கு மூலம் “[இந்த்ரகோப பரிக்ஷிப்த] ஸ்மர தூணாப ஜங்கிகா” என்று ஸஹஸ்ரநாமப் பேரில் இருக்கிறது.

ravi said…
ச்ருதி சிரஸில் – அதாவது வேதமாதாவின் தலையில் – அம்பாளுடைய பாதம் விளங்குகிறது என்று ஆசார்யாள் சொல்கிறார் என்றால் [ச்லோ- 84], ஸஹஸ்ரநாமம் ரொம்பவும் அழகாக, ‘வேதமாதாவின் வகுட்டில் அப்பிய ஸிந்தூரமாக எந்தக் குங்குமம் இருக்கிறதோ அதையே தன் பாததூளியாகப் பண்ணிக் கொண்டவள்: ச்ருதி-ஸீமந்த-ஸிந்தூரி-க்ருத-பாதாப்ஜ தூளிகா” என்று வர்ணிக்கிறது.

ஸஹஸ்ரநாமத்தில் “பத-த்வய-ப்ரபாஜால-பராக்ருத-ஸரோருஹா –– இணையடிகளின் காந்தி ஸமூஹத்தால் தாமரையைப் பழிக்கிறவள்” என்று ஒரு நாமா. ஆசார்யாள் இதையே “ஹிமாநீ ஹந்தவ்யம்” என்ற [87-வது] ச்லோகத்தில் ‘டெவலப்’ பண்ணி எத்தனை விதங்களில் அம்பாளுடைய பாதம் தாமரையைப் பழிக்கிறது என்று காட்டுகிறார். ஒன்று தாமரை பணியில் கருகிவிடும். அம்பாளுக்கோ பிறந்தகம், புக்ககம் இரண்டும் பணிமளையானதால் அவள் பாதத்திற்கு ஸதாவும் அதில்தான் ஆனந்த வாஸம்!
இரண்டு: தாமரை ராத்ரிவேளை தோறும் கூம்பிப்போவது. அம்பாள் பாதமோ எப்போதும் மலர்ச்சியாக இருப்பது. மூன்று: தாமரை லக்ஷ்மியைத் தன்னில் வைத்துக் கொண்டிருக்கிறது. லக்ஷ்மி தாமரைக்குள்ளேதானே உட்கார்ந்திருக்கிறாள்? அம்பாள் பாதமோ அதை வழிபடுபவர்களுக்கே லக்ஷ்மியை [செல்வத்தை] வாரிக் கொடுக்கிறது. ” இப்படியாகத் தாமரையை உன் பாதம் ஜயிக்கிறது” என்று முடிக்கிறார்.

ravi said…
கூர்மப்ருஷ்ட-ஜயிஷ்ணு-ப்ரபதான்விதா’ – ‘ஆமை முதுகை வெல்லும் புறங்காலை உடையவள்’ என்று ஸஹஸ்ரநாமத்தில் வருகிறதையே ஓரிடத்தில் [ச்லோ-88] ‘ப்ரபதம் … கடின கமடீ கர்பர துலாம்’ என்கிறார். கமடம் என்றாலும் கூர்மம்தான். கச்சபம் என்றும் ஆமைக்கு இன்னொரு பேர்.

ஒரு ச்லோகத்தில் [ச்லோ-91] அம்பாளுடைய பாதத்தில் மங்களமான ரத்னச் சிலம்புகள் ஒலிக்கிரத்தை ‘ஸுபக மணி மஞ்ஜீர ரணித …. சரண கமலம்’ என்கிறார். இதில் ஐடியா (கருத்து) மட்டுமின்றி வார்த்தைகள்கூட ஸஹஸ்ரநாமத்தில் உள்ள ஸிஞ்ஜான-மணி மஞ்ஜீர-மண்டித- ஸ்ரீபதாம்புஜா என்பதையே follow பண்ணுவது நன்றாகத் தெரிகிறது.

ஆழ்ந்து அலசிப் பார்த்தால் இப்படி இன்னம் நிறைய அகப்படலாம்.

ஸஹஸ்ர நாமத்தில் சொன்னதையே இப்படி ஆசார்யாள் எடுத்துக் கையாளலாமா என்றால் ஒரு விதத்தில் இதுவும் அவருடைய பெருமையை, விநயத்தைத்தான் காட்டுகிறது.

பிரஸித்தியில்லாத வேறேதோ புஸ்தகத்திலிருந்து அவர் ‘ஐடியா’க்களையோ வார்த்தைகளையோ எடுத்து இதில் போட்டிருந்தால் அப்போது வேண்டுமென்றால் தஸ்கரம் பண்ணிவிட்டார் என்று குற்றமாகச் சொல்லலாம். ஆனால் ஸ்ரீவித்யோ பாஸகர்களுக்கெல்லாம் ரொம்பவும் தெரிந்தது, ரொம்பப் பிரஸித்தி பெற்றது, ரொம்பவும் முக்கியமாயிருப்பது ஸஹஸ்ரநாமம்தான். அப்படிப்பட்ட புஸ்தகத்திலிருந்து எடுத்துக் கொண்டார் என்றால் அதனிடம் தம் பக்தியைத் தெரிவித்துக் கொள்கிறார், அதைவிட அதிகமாகத் தாம் எதுவும் சொல்லிவிட முடியாது என்று விநாயத்தோடு நினைக்கிறார் என்றுதானே அர்த்தம்? கல்பனையில் ஆசார்யாளின் ‘ஒரிஜினாலிடி’ எவ்வளவு உச்சமானது என்பதற்கும் இதே ‘சௌந்தர்யலஹரி’ வர்ணனைகளை விட வேறு வேண்டாம்!

சிவனைப்பற்றி அவர் பண்ணியிருக்கும் பாதாதிகேசாந்த, கேசாதிபாதாந்த ஸ்தோத்ரங்களிலும், ‘விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ர’த்திலும் அப்படியே ஒரிஜினல் கல்பனைகளாகக் கொட்டியிருக்கிறார்.

ஆனபடியால் ‘சௌந்தர்ய லஹரி’ என்று அம்பாளை வர்ணிக்கிரபோதும் அவர் மட்டும் மனஸ் வைத்திருந்தால் ஸஹஸ்ர நாமத்திலிருந்து அங்கங்கே எடுத்துக் கொண்டிருக்கிற இடங்களிலும் புது கற்பனையாக வேறு விதத்தில் அத்புத வர்ணனை செய்திருக்கலாம். ஆனாலும் அப்படி பண்ணாமல் ஸஹஸ்ரநாமத்தைக் கையாண்டார் என்றால் அதனிடம் தம் மதிப்பைக்காட்டி மற்றவர்களும் அதை மதிக்கும்படிப் பண்ணுகிறார் என்றுதான் அர்த்தம்.

இப்படி மநுஷ்யாரீதியில் ரொம்ப விநயமாக அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். அல்லது அவருடைய அவதாரத்தை நினைத்து உசத்தியாகவும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். ஆசார்யாள் யார்? ஸாக்ஷாத் ஈச்வரனும் அம்பாளும் சேர்ந்து பண்ணின அவதாரம்.

அம்பாள் வேறே அவர் வேறே இல்லை. ‘ஸஹஸ்ரநாம’த்தைப் பண்ணினது யார்? வசின்யாதி சக்திகள் என்கிற வாக் தேவதைகள். அவர்கள் அதைப் பண்ணும்படியான சக்தியை அநுக்ரஹித்தது அம்பாளேதான்.

வாக்கு முழுதும் அவள் சொத்துத்தானென்றாலும் அவளே அநுக்ரஹித்து வெளியே கொண்டு வந்ததாக ப்ரத்யக்ஷத்தில் காட்டியவாறு நிச்சயமாக அவளுடையதுதான். வாக் தேவதைகளிடம், “லோக க்ஷேமார்த்தமாக என் நாமாக்களை ஸ்தோத்ரமாகப் பண்ணுங்கள்” என்று அவள் உத்தரவு போட்டு, உத்தரவு போட்டது மட்டுகில்லாமல் அவர்கள் மேலே தன்னுடைய கடாக்ஷத்தை வீசி அந்த ஸ்தோத்ரம் உண்டாகும் படியாகப் பண்ணினால் என்று சொல்லியிருக்கிறது.
அதனால் லலிதா ஸஹஸ்ரநாமம் அவள் சொத்துத்தான். ஆனபடியால் அவளே ஆசார்யாளாக வந்து ஸ்தோத்ரித்துக் கொண்டபோது அதிலிருந்து சில அபிப்ராயங்களை இதில் சேர்த்ததில் எந்தத் தப்புமில்லை. நம்மகத்தில் தோட்டம் போடும்போது நமக்கே சொந்தமான தோப்பிலிருந்து பதியன் கொண்டு வந்து வைத்தால் என்ன தப்பு? ஆசார்யாளே ஸ்தோத்ரத்தை முடிக்குமிடத்தில் “த்வதீயாபி: வாக்பி:” – ‘உன்னுடைய வாக்காலேயே’ – ஆனது இது என்று சொல்லியிருக்கிறார்.

கீதையில் க்ருஷ்ண பரமாத்மா கடோபநிஷத் முதலான ச்ருதி வாக்யங்களையும், அபிப்ராயங்களையும் அப்படியே எடுத்தாண்டிருக்கிறார்.

ஆதியில் அந்த ச்ருதி மந்த்ரங்கள் அவர் மூச்சிலேயேதான் இருந்து, அப்புறம் அவரேதான் ரிஷிகளுக்கு அவை ஸ்புரிக்கும்படிப் பண்ணினார். அதனால் ஸ்வாதீனத்தோடு இப்போது மறுபடி அதுகளையே கீதையில் அங்கங்கே போட்டார். அந்த மாதிரிதான் இதுவும்.

அடுத்த ச்லோகத்தில் [ச்லோ-21] குண்டலிநீ யோக ஸித்தி அடைந்தவர் ப்ரஹ்மானந்த வெள்ளத்தில் ஆழ்ந்து போவதைச் சொல்கிறார். ஆனந்த வெள்ளத்தை ‘ஆஹ்லாத லஹரி’ என்கிறார்.

சௌந்தர்ய லஹரி-ஆனந்த லஹரி ஸ்தோத்ரத்தில் வரும் அநேக லஹரிகளில் இது ஒன்று. அம்பாளின் அழகு லஹரி, ஆசார்யாளின் அநுபவ லஹரி, அருள் லஹரி, கவிதை லஹரி எல்லாம் ஒன்று சேர்ந்ததில் இப்படிப் பல லஹரிகள் ஸ்தோத்ரத்திற்குள் சொல்லப்பட்டிருக்கின்றன. அம்பாளுடைய பக்தன் மனஸின் அழுக்குகளையும், மாயையையும் நசுக்கிப் போட்டவன் — ம்ருதித மல மாயேந மநஸா — என்று இங்கேதான் சொல்கிறார்.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பூர்வபாகம் 28-31, 38 ச்லோகங்களைக் கருத்தில் கொண்டு கூறியதாகத் தோன்றுகிறது.
ravi said…
அருமை கோபி ... We have got 5 நவரத்தினங்கள்

1. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

2. மூகர் பஞ்சசதீ

3. அபிராமி அந்தாதி

4. சௌந்தர்ய லஹரி

5. சிவானந்த லஹரி

எல்லாமே சிவசக்தி ஐக்கியம் தனை பெருமையாய் பேசக்கூடியவை .. பலன் தருவதில் ஒன்றுக்கு ஒன்று சலைத்தது அல்ல 🥇👍
ravi said…
*அந்தரா* = பிரிவு - பிரிவுக்குட்பட்ட -

காலகதிக்கு உட்பட்ட - கால இடைவெளிக்கு உட்பட்ட

❖ *151 நிரந்தரா* = எங்கும் நிறைந்திருப்பவள்
ravi said…
*அம்மா* ...

எவரும் அறியா மறை நீ ...

என் அறிவுக்கும் அளவாய் அழகாய் வந்தே உனை புரிய வைத்தாயே !!

என் சொல்வேன் ...

தேவர்களும் ரிஷிகளும்

கந்தர்வர்களும் மகான்களும்
மும்மூர்த்திகளும்

புரியாத புதிர் என்றே உனை அழைக்க

நான் மட்டும் உனை அறிந்து கொள்ள உதவி செய்தாயே

நாயேனை நல்லவனாக்கி

பேயேன் என்னை பெரும் கவி புனைய வைத்தாயே .

தாயேன் உன் கருணை தமிழுக்கும் உண்டென்றாய் ..

அறிந்து கொள்ளும் அறிவு பெற்றேன்

அறம் பொருள் இன்பம் பெற்றேன் ..

பெறாதது இனி ஒன்றும் இல்லை ...

எனை நீ பிறவாமல் வைப்பதே உன்னிடம் நான் பெற வேண்டிய பாக்கி *அம்மா*
ravi said…
#ஆதி_சங்கரரும்_மூகாம்பிகையும்


ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.

கேரளாவில் காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு எத்தனையோ பகவதி கோவில்கள் இருந்தும் கலைவாணிக்கு ஒரு கோவில் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது.

அவர் மைசூர் சமுண்டீஸ்வரி தாயை நோக்கி தவம் இருந்தார்.

மகனின் தெய்வீக தாகத்தைத் தீர்க்க அன்னை ஆதிசங்கரருக்கு காட்சியளித்தாள்.

தேவியின் திவ்ய ரூபம் கண்டு ஆதிசங்கரருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனந்தக் கூத்தாடினார்.

தேவியோ, ”நீ எங்கு என்னை குடி வைக்க விரும்புகிறாயோ அங்கு கொண்டுபோ.

ஆனால் ஒரு நிபந்தனை.

நான் உன்னைப் பின் தொடர்வேன். நீ என்னை திரும்பி பார்க்கக் கூடாது.

அப்படி திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நின்று விடுவேன்” என்றாள்.

ஆதிசங்கரர் தேவியின் நிபந்தனையை ஒத்துக் கொண்டு தேவியின் கொலுசு ஒலியைக் கேட்டபடி நிம்மதியாக நடந்து சென்றார்.

எப்பொழுதுமே தேவி சித்தாடல் புரிவது தானே இயற்கை. போகும் வழியில் கோல மகரிஷி வழிபட்டு வந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்து நின்று விட்டாள்.

கொலுசு ஒலி கேட்டுக் கொண்டே முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஆதிசங்கரர் கொலுசு ஒலி நின்று விட்டதே எனத் திரும்பிப் பார்க்கிறார்.

அன்னை அருள்வாக்குபடி நீ திரும்பி பார்த்தால் நான் அங்கேயே நின்று விடுவேன் என்ற வரிகள் நினைவுக்கு வந்தன.

எனவே அங்கு ஜோதிர் லிங்கத்தில் தேவி அந்த இடத்திலேயே ஐக்கியமாகிவிட்டாள்.

ravi said…
அவள் குடியேறிய இடம்தான் கொல்லூர் என்ற சக்தியின் புண்ணியத்தலம் ஆகும்.

அடர்ந்த காடு, மலை, ஆறுகள் அமைந்த இடத்தில் சுயம்புவான ஜோதிர்லிங்கம் மட்டும் தான் இருந்தது. அதிலே அரூபமான முப்பெரும் தேவியரும் உடனுறைகிறார்கள்.

ஆதிசங்கரர் வந்தபோது கோல மகரிஷி பூஜித்து வந்த தங்க ரேகை மின்னும் சுயம்புலிங்கம் மட்டுமே இருந்தது.

அம்பாள் சிலை ஏதும் இல்லை. எனினும் அரூபரூபமாய் அந்த லிங்கத்தில் இருப்பதாக எத்தனையோ காலமாய் நம்பப்பட்டு வந்த ஸ்ரீமூகாம்பிகை தேவி என்ற அம்பாளின் முகம் அப்போது எப்படி இருக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூட அறிய முடியவில.

மூகாம்பிகை தேவியின் புகழினையும், பெருமைகளையும், மகிமைகளையும் கூறும் பல நிகழ்ச்சிகளையும், கதைகளையும் பக்தியுடன் பேசிவந்த ஊர் மக்கள் மன்தில் இது ஒரு பெருங்குறையாக இருந்தது.

இந்நிலையில் ஆதிசங்கரர் கொல்லூர் வந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

சக்தியை வழிபடும் சாக்தமார்க்கத்தை வழிபட அருளிய மகான் ஆதிசங்கரர் அரூபரூபமாய் உள்ள ஸ்ரீமூகாம்பிகையின் திரு உருவத்தைக் காட்டுவார் என ஊர்மக்கள் பரவசமடைந்தார்.

கொல்லூரில் ஆதிசங்கரர் தங்கியிருந்து தினமும் தியானம் செய்தது மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள
ஒரு மேடை ஆகும்.

ஏகாந்த வெளியில் ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெக ஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.

ஆதிசங்கரர் தரிசித்த அம்பிகையின் உருவத்தை மனதில் கண்டார்.

அவ்வுருவம் சங்கு சக்கரம் அபயக்கரம் ஏந்திய சாந்த சொரூபியாக பத்மாசனத்தில் அமர்ந்து அருட்கடாச்சம் தந்ததைக் கண்டார்.

அன்னை தானே இத்தனை காலமாக இந்த சொர்ணரேகை மின்னும் சுயம்பு லிங்கத்தில் அரூபரூபமாய் முப்பெருந்தேவி மூகாம்பிகா என அடையாளம் காட்டிக் கொண்டாள்.

ஆதிசங்கரர் மனம் மகிழ்ந்து அம்பாளை துதித்தார். அக்காட்சி அவர் இதயத்தில் தத்ரூபமாக பதிந்தது.

உடனே இச்செய்தியை உரியவர்களிடம் கூறினார். விக்கிரகக் கலையில் விஸ்வகர்மா பரம்பரையில் கைதேர்ந்த ஸ்தபதி ஒருவரை அழைத்து விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

மூலவரின் சிலையும் பஞ்சலோகத்தில் உருவானது. அம்மாளை பிரதிஷ்டை செய்வதற்காக தொடர்ந்து ஒரு வருடம் உட்கார்ந்த நிலையிலேயே பூஜை செய்ததால் ஆதிசங்கரரால் எழ முடியவில்லை.

தவிக்கும் தன் பக்தனைப் பார்த்த அன்னை
தன் கையாலேயே கஷாயம் செய்து சங்கரருக்குக் கொடுத்தாள்.

இன்றும் இந்த தலத்தில் இரவு நேரத்தில்
கஷாயம் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதமாகக்_
கொடுக்கிறார்கள்.

தியானத்திலே கண்ட திவ்ய சொரூபம் ஆதிசங்கரர் கண் முன் நின்று காட்சியளித்துக் கொண்டிருந்தது. விக்கிரகத்தை பார்த்தார். மெய் சிலிர்த்தது!

பத்மாசன தோற்றம் நான்கு கைகள், சங்கு சக்கரம், ஒரு கை அருளையும் ஒரு கை தன் மலர் பாதத்தை சரணடையத் தூண்டும் வகையிலும் இருந்தன.

சாந்த சொரூபியாக சகல கலைகளையும் ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குபவளாக காட்சி தந்தார்.

சுயம்பு லிங்கத்தின் பின்னால் சிறிது இடைவெளி விட்டு மூகாம்பிகா சிலையை பிரதிஷ்டை செய்தார்.

அதனடியில் சக்தி மிகுந்த ஸ்ரீசக்கரத்தை
ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார்.

அச்சக்கரத்தில் ஒன்பது சக்கரம் அடக்கம் அறுபத்து நான்கு கோடி தேவதைகளை ஆவாஹனம் செய்தார்.

ஸ்ரீ சக்கரத்தின் மீது அன்னையின் விக்கிரக ரூபத்தை நிறுவினார்...
ravi said…
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்

மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல

வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே👍👍👍
ravi said…
நஞ்சணிந்த கண்டனும், எந்தையும்,

உமையம்மை யாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான்,

இருள் செறிந்தவன்னி
இலை,

கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து

என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும்.

அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்.👍👍👍👍👍👍👍👍
ravi said…
[24/03, 12:38] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 115*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

98 வது ஸ்லோகம்
[24/03, 12:44] Jayaraman Ravikumar: अन्तरपि बहिरपि त्वं जन्तुततेरन्तकान्तकृदहन्ते ।

चिन्तितसन्तानवतां सन्ततमपि तन्तनीषि महिमानम् ॥98॥

98. Antharapi , bahirapi thwam janthu therantha kantha krudaham they,

Chinthitha santhanavathaam santhathamapi thantha neeshi mahimanam.

அன்தரபி ப³ஹிரபி த்வம் ஜன்துததேரன்தகான்தக்ருத³ஹன்தே ।

சின்திதஸன்தானவதாம் ஸன்ததமபி தன்தனீஷி மஹிமானம் ॥98॥ ---3
ravi said…
மார்க்கண்டேயனை ரக்ஷிக்க, காலனை ஸம்ஹாரித்த காலஸம்ஹார மூர்த்தி,

பரமேஸ்வரனின் மனதில் குடிகொண்ட அம்பாளை அஹந்தா ரூபிணி, அகங்கார ரூபிணி என்ற நாமங்களால் ஸ்தோத்ரம் செய்து நமஸ்கரிக்கிறேன்.🙏🙏🙏
ravi said…
மார்க்கண்டேயனை ரக்ஷிக்க, காலனை ஸம்ஹாரித்த காலஸம்ஹார மூர்த்தி,

பரமேஸ்வரனின் மனதில் குடிகொண்ட அம்பாளை அஹந்தா ரூபிணி, அகங்கார ரூபிணி என்ற நாமங்களால் ஸ்தோத்ரம் செய்து நமஸ்கரிக்கிறேன்.🙏🙏🙏
ravi said…
சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார்.

பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழாவது ரிஷியாக விளங்கினார்.

இன்றும் பரசுராமர் மஹேந்திர மலையில் சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு சிரஞ்சீவியாக தவம் செய்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

ராம அவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன் பரசுராமரால் உயிரிழக்காமல் தப்பி பெண்களால் காப்பாற்றப்பட்டு அவன் வம்சம் தழைக்கிறது.

பெண்களால் காப்பாற்றப்பட்டதால் அவனை '' *நாரி வசன்* '' என்பார்கள்.

மூலகனுக்கு அப்புறம் ஒரு தசரதன், இவன் ராமன் தந்தை அல்ல. அப்புறம் அந்த வம்சத்தில் கடைசியில் இன்னொரு தசரதன் தான் ராமன் தந்தை.🙏🙏🙏
ravi said…
https://chat.whatsapp.com/KIZSxqwsGMN8Sd3SZPFRy5

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மண்டல நதி கணபதி திருக்கோவில் பற்றிய பதிவுகள் :*

கமண்டல கணபதி விக்கிரகத்திற்கு அடியில், வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இந்த ஊரின் அருகில் 'கேசவே' என்ற திருத்தலம் அமைந்துள்ளது.

இங்கு 'கமண்டல நதி கணபதி திருக்கோவில்' இருக்கிறது. உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரமாக, அவசியமாக இருக்கும் ஒரே பொருள், நீர். அந்த நீர் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கும் ஆலயமாக இந்த கமண்டல கணபதி கோவில் திகழ்கிறது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில், விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக உள்ள ஒரு சிறிய துளையில் இருந்து தண்ணீர் பொங்கி வந்த படியே இருக்கிறது.

வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது தாகத்தை தணிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அனைத்து உயிர்களும் பரிதவித்தன.

அப்போது அன்னை உமாதேவி இந்த கோவிலில் வீற்றிருக்கும் தன் மூத்த மைந்தனான கமண்டல கணபதி விக்கிரகத்திற்கு அடியில், வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.

சில நேரங்களில் பொங்கியும், சில நேரங்களில் சாதாரண அளவிலும் இந்த துளையில்இருந்து நீர் வந்து கொண்டே இருக்கிறது.

இந்த சுனை நீரைக் கொண்டு இங்கிருக்கும் தெய்வ விக்கிரகங்கள் அனைத்திற்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனை புனித தீர்த்தமாக கருதி பக்தர்கள் குடுவைகளில் பிடித்துச்செல்கின்றனர்.

விநாயகரின் முன்பாக உற்பத்தியாகும் புனித நீர், அங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி, சற்று தொலைவில் பாயும் துங்கா நதியில் கலக்கிறது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
அம்மா ..பவானீ .. த்வம் தாஸே மயீ என்றேன் ... பவானித்வம் தந்து விட்டாய் ...

என்ன வேண்டும் இனி ?

என்னில் நீ இருக்க எண்ணங்கள் நீயாக இருக்க

இன்னும் அதிக வரம் கேட்பேனோ தாயே ...

உன்னில் கலந்து விட்டபின் இனி பிறவா வரம் என்றே தனி உளதோ அம்மா
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நல்ல ஸங்கீதம்—அதுவும் குறிப்பாக நம்முடைய ஸங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம்—என்றால் அது ஈசுவரனின் பாதத்துக்குத் கொண்டு சேர்ப்பதாகவே இருக்கும். நம் பூர்வீகர்கள் இசையை ஈசுவரனின் சரணங்களிலேயே ஸமர்ப்பணம் பண்ணினார்கள்.
ravi said…
அந்த இசை அவர்களையும், அதைக் கேட்கிறவர்களையும் சேர்த்து, ஈசுவர சரணாரவிந்தங்களில் லயிக்கச் செய்தது. தர்ம சாஸ்திரம் தந்த மகரிஷி யாக்ஞவல்கியரும் “சுஸ்வரமாக வீணையை மீட்டிக் கொண்டு, சுருதி சுத்தத்தோடு, லயம் தவறாமல் நாதோபாஸனை செய்துவிட்டால் போதும் — தியானம் வேண்டாம்; யோகம் வேண்டாம; தபஸ் வேண்டாம்; பூஜை வேண்டாம;. கஷ்டமான சாதனைகளே வேண்டாம் — இதுவே மோக்ஷத்துக்கு வழிகாட்டிவி்டும்” என்கிறார்.

ravi said…
வீணா வாதன தத்வக்ஞ: ச்ருதி ஜாதி விசாரத : |

தாளகஞச்ச அப்ரயதனேன மோக்ஷமார்க்கஸ ஸ கச்சதி ||

இதிலே இன்னொரு விசேஷம் சங்கீத வித்வான் மட்டுமில்லாமல், அவன் கானம் செய்வதை வெறுமே கேட்டுக் கொண்டிருக்கிற அத்தனை பேருக்கும், அவன் ஒருத்தன் செய்கிற சாதனையின் பூரண பலனான நிறைந்த திவ்விய சுகம் கிட்டிவிடுகிறது.

ravi said…
வித்யா தேவதையான சரஸ்வதி எப்போதும் வீணாகானம் செய்கிறாள். லௌகிகமான (secular) பாட்டே கூடாது. பகவானைப் பற்றித்தான் பாட வேண்டும். சரஸ்வதியும் பரமேஷ்வரனின் பலவித லீலைகளைப் பற்றித்தான் பாடுகிறாள் என்று ‘ஸெளந்தர்ய லஹரி’ சுலோகம் சொல்கிறது.

ravi said…
ஆசாரியாள் ‘ஸெளந்தர்ய லஹரியில’ அம்பாள் கழுத்தழகைச் சொல்லும்போது, அவளிடமிருந்து, சங்கீதம் முழுதும் பிறக்கிறது என்பதை வெகு அழகாகச் சொல்லுகிறார் (‘கலே ரேகா; திஸ்ரோ’ என்று ஆரம்பிக்கும்) கழுத்திலே மூன்று ரேகைகள் இருப்பது உத்தம ஸ்திரீ லட்சணம். புருஷ லட்சணம் Adam’s apple என்று இங்கிலீஷில் சொல்கிற நெஞ்சிலே இருக்கப்பட்ட உருண்டையான படைப்பு.
ravi said…
ஈசுவரன் ஆலகாலத்தை தொண்டையில் கோலிக்குண்டு மாதிரி அடக்கிக்கொண்டார் அல்லவா? ஆண்கள் எல்லோரும் அவனது ஸ்வரூபம் என்பதற்கு அடையாளமாகவே உத்தம புருஷர்களின் தொண்டையில் இப்படி உருண்டை இருக்கிறது. அதே மாதிரி ஸ்திரீகள் யாவரும் தேவீ ஸ்வரூபம் என்பதால் அவர்களுடைய பரம மங்கள சின்னமான கழுத்து ரேகைகள் மூன்றும் உத்தமப் பெண்களிடம் இருக்கிறது. இதை ஆசாரியாள் வர்ணிக்கும்போது, “ஸங்கீதத்தில் ஷட்ஜ கிராமம், மத்தியம கிராமம், காந்தார கிராமம் என்று மூன்று வரிசைகள் (Scale, Gamut) உண்டு. இந்த மூன்று தொகுப்பு(கிராமம்)களிலிருந்துதான் மதுரமான நானாவித ராகங்களும் எழுந்திருக்கின்றன. அம்மா, நீயோ ஸங்கீதத்தின் கதிகளிலும், கமகங்களிலும் மகா நிபுணை. அந்த மூன்று ஸங்கீத கிராமங்களும் உன் கண்டத்திலிருந்துதான் பிறந்தன. அதற்கு அடையாளமாகவே அது ஒவ்வொன்றுக்கும் உரிய ஸ்வரங்கள் தொண்டைக்குள் எந்தெந்த இடத்தில் பிறந்து, எந்தெந்த இடத்தில் முடிகின்றன என்று எல்லை வகுத்துக் காட்டுவதுபோல், வெளிப்பட்ட இந்த மூன்று ரேகைகளும் உன் கழுத்தில் காணப்படுகின்றன” என்கிறார்.

அத்வைத பரமாசாரியார்களுக்குச் சங்கீதத்தில் எத்தனை பாண்டித்தியம் இருந்தது என்பதும் இங்கே தெரியவருகிறது. ஸங்கீதமே அத்வைதமாக நம்மை மூலத்தோடு கரைப்பதுதான். சாக்ஷாத் அம்பிகை வீணாதாரிணியான சியாமளாம்பிகையாக விளங்குவதாகக் காளிதாஸர் ‘நவரத்தின மாலிகை’யில் ‘ஸரிகமபதநிரதாம்’ என்று பாடுகிறார். அவள் பாடுகிற சங்கீதத்தால் அவளுடைய மிருதுவான இருதயமும் அதற்கும் உள்ளே இருக்கிற அத்வைதமான சாந்தமும் (சாந்தாம், மிருதுள ஸ்வாந்தாம்) வெளிப்படுகின்றன என்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், எத்தனை உணர்ச்சிப் பரவசங்களைத் தூண்டிவிட்டாலும் சாந்தம்தான் சங்கீதத்தின் முடிந்த முடிவாக இருக்க வேண்டும். சங்கீதத்தினாலேயே அன்பு என்கிற மிருதுவான இருதயம் ஏற்படுவதாகவும் தொனிக்கிறது. தசவித கமகங்களைச் செய்கிற சியாமளாம்பிகையான மீனாக்ஷியை வீணை மீட்டிப் பாடிக்கொண்டே, இந்த அன்போடு அன்பாக, சாந்தத்தோடு சாந்தமாகத்தான் முத்துஸ்வாமி தீக்ஷிதர் கரைந்து போனார். தியாகராஜ ஸ்வாமிகளும், பாஷை தெரியாதவர்களுக்கும் கேட்டமாத்திரத்தில் எல்லையல்லாத விச்ராந்தி தருகிறமாதிரி சாம ராகத்தில் ‘சாந்தமுலேக ஸௌக்கியமு லேது’ என்று பாடியிருக்கிறார். ஈசன் எந்தை இணையடி நீழலில் அப்படியே லயித்துப் போகிற இந்த சாந்தத்தைத்தான் அப்பரும் ‘மாசில் வீணை’ என்பதாக உவமிக்கிறார்.
ravi said…
தாமரை மலர்களை மாலையாய் ஸ்வீகரித்து

இன்முகத்துடன் மயில் தோகைகளின் முன்னே அமர்ந்து

வில்வ இலைகளை சிரஸில் தரித்து கொண்டு

"காமாட்சி வேறு -நான் வேறு இல்லை"என்று சூசகமாக தெரிவிக்கும்

பிரபஞ்ச நாயகனே,

பக்தர்களின் செல்ல குஞ்சலமாக காட்சி கொடுக்கும் சதுர்வேத குருவே

அனந்த கோடி நமஸ்காரங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ravi said…
https://youtu.be/ivBrnTK0fw0

திருமதி உமா மஹேஸ்வரி ஶ்ரீதர் அவர்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் காஞ்சிபுரத்தின் பக்தர்கள். இது வரை ஆறு பாகங்களில் தனது இளவயது கல்லூரி படிப்பு, மகாபாரதத்தின் மேல் உள்ள ஈடுபாடு, மஹா பெரியவா அருள் பற்றிய விபரங்களை கூறியுள்ளார். இந்த பதிவில் சுவயம்வர பார்வதி மந்திர உபதேசம் பெற்றது பற்றியும் மற்ற சுவாரசியமான நிகழ்ச்சிகளையும் பற்றி விவரித்துள்ளார்.
இந்த காணொளியை கண்டு கேட்டு மகிழவும் பகிர்ந்து கொள்ளவும் பயன் பெறவும்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🌹🪷🌺🙏

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
ravi said…
Divine Experiences with Maha Periyava the Sage of Kanchi 🌹🌻🌻🪔🪔🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🪔🙏
His Holiness Jagadguru Pujyasri Chandrasekharendra Saraswati Swamigal of Kanchi Kamakoti Peetham fondly called as Maha Periyava by all, is one of the most venerated personalities of India. His knowledge about various subjects was encyclopaedic. . The status of the devotees never mattered as from monarchs to common people, everyone was treated equally with compassion,care and love.
The experiences presented in this group are an endless sea of gracious waves that draw us to Him. Many inspiring anecdotes of the greatest and most compassionate of saints unfold themselves brilliantly.

We offer our reverential prostrations at the Lotus feet of Pujya Sri Maha Periyava. Blessed were those who had these experiences with Sri Maha Periyava and equally blessed are the readers who have the opportunity to relish these experiences.

https://chat.whatsapp.com/BqZzLLGbuP21TrWYGj0HaO
Millions of Periyava devotees sincerely believe that He is alive even today and is guiding us on the path of dharma. It is our earnest prayer that Sri Maha Periyava bless one and all.
Loka Samastha Sukhino Bhavanthu.
Jaya Jaya Shankara Hara Hara Shankara!!!
https://t.me/+IoCYa6LdVBw5NWQ9
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🪔🙏
KANCHI MAHAPERIYAVA THIRUVADIGALE CHARANAM 🙏🌹🙏🌹🙏🌹🙏


JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA 🙏🌹🙏🌹🙏🌹🙏

Experiences with Maha Periyava: Periyava's word is Veda Vaaku! - Sir P.S. Sivaswamy Aiyer and Smt. Kalyani (Lady Sivaswamy)

Sir P.S. Sivaswamy Aiyer lived as a rich and famous advocate and legal celebrity in Chennai. His wife's name was Kalyani. The name of his house was 'Sudharma'. It was a large bungalow even in those days.

When Sri Maha Periyava was camping in the city, he suddenly visited 'Sudharma' without any prior announcement and made the Sivaswamy couple drown in ecstasy.

The couple did not have the bhagya (fortune) of a child.

Maha Periyava told him, "What if you people don't have your own children? Be the father and mother for several poor children. You act righteously in your profession as an advocate and do jnana danam (the charity of knowledge) by establishing an educational institution with the income earned. Your name will stand protected (be remembered). Similarly, construct a hospital that caters to delivery of children and make your wife's name also stand protected (be remembered)."

Sri Sivaswamy Aiyer carried out that orders completely. He sold the palatial bungalow 'Sudharma' and started living in a smaller house that he purchased for them in Sullivan Garden Road.

He established a hospital that offered free childbirth consultations and treatment. If that divine service continues even today, the main reason is that it has been the grace of Sri Maha Periyava. He also bought out of his own funds the girls' school that was under the administration of Jaipur Maharaja (the school opposite Rasika Ranjana Sabha in the Sundareswarar Street that branches from the Kapaleeswarar Temple East Mada Street) was named 'Lady Sivaswamy Aiyer Girls' High School' and developed it.

Periyava's word is Veda Vakku!

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நல்ல ஸங்கீதம்—அதுவும் குறிப்பாக நம்முடைய ஸங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம்—என்றால் அது ஈசுவரனின் பாதத்துக்குத் கொண்டு சேர்ப்பதாகவே இருக்கும். நம் பூர்வீகர்கள் இசையை ஈசுவரனின் சரணங்களிலேயே ஸமர்ப்பணம் பண்ணினார்கள். அந்த இசை அவர்களையும், அதைக் கேட்கிறவர்களையும் சேர்த்து, ஈசுவர சரணாரவிந்தங்களில் லயிக்கச் செய்தது. தர்ம சாஸ்திரம் தந்த மகரிஷி யாக்ஞவல்கியரும் “சுஸ்வரமாக வீணையை மீட்டிக் கொண்டு, சுருதி சுத்தத்தோடு, லயம் தவறாமல் நாதோபாஸனை செய்துவிட்டால் போதும் — தியானம் வேண்டாம்; யோகம் வேண்டாம; தபஸ் வேண்டாம்; பூஜை வேண்டாம;. கஷ்டமான சாதனைகளே வேண்டாம் — இதுவே மோக்ஷத்துக்கு வழிகாட்டிவி்டும்” என்கிறார்.

ravi said…
வீணா வாதன தத்வக்ஞ: ச்ருதி ஜாதி விசாரத : |

தாளகஞச்ச அப்ரயதனேன மோக்ஷமார்க்கஸ ஸ கச்சதி ||

இதிலே இன்னொரு விசேஷம் சங்கீத வித்வான் மட்டுமில்லாமல், அவன் கானம் செய்வதை வெறுமே கேட்டுக் கொண்டிருக்கிற அத்தனை பேருக்கும், அவன் ஒருத்தன் செய்கிற சாதனையின் பூரண பலனான நிறைந்த திவ்விய சுகம் கிட்டிவிடுகிறது.

ravi said…
வித்யா தேவதையான சரஸ்வதி எப்போதும் வீணாகானம் செய்கிறாள். லௌகிகமான (secular) பாட்டே கூடாது. பகவானைப் பற்றித்தான் பாட வேண்டும். சரஸ்வதியும் பரமேஷ்வரனின் பலவித லீலைகளைப் பற்றித்தான் பாடுகிறாள் என்று ‘ஸெளந்தர்ய லஹரி’ சுலோகம் சொல்கிறது.

ravi said…
ஆசாரியாள் ‘ஸெளந்தர்ய லஹரியில’ அம்பாள் கழுத்தழகைச் சொல்லும்போது, அவளிடமிருந்து, சங்கீதம் முழுதும் பிறக்கிறது என்பதை வெகு அழகாகச் சொல்லுகிறார் (‘கலே ரேகா; திஸ்ரோ’ என்று ஆரம்பிக்கும்) கழுத்திலே மூன்று ரேகைகள் இருப்பது உத்தம ஸ்திரீ லட்சணம். புருஷ லட்சணம் Adam’s apple என்று இங்கிலீஷில் சொல்கிற நெஞ்சிலே இருக்கப்பட்ட உருண்டையான படைப்பு. ஈசுவரன் ஆலகாலத்தை தொண்டையில் கோலிக்குண்டு மாதிரி அடக்கிக்கொண்டார் அல்லவா? ஆண்கள் எல்லோரும் அவனது ஸ்வரூபம் என்பதற்கு அடையாளமாகவே உத்தம புருஷர்களின் தொண்டையில் இப்படி உருண்டை இருக்கிறது. அதே மாதிரி ஸ்திரீகள் யாவரும் தேவீ ஸ்வரூபம் என்பதால் அவர்களுடைய பரம மங்கள சின்னமான கழுத்து ரேகைகள் மூன்றும் உத்தமப் பெண்களிடம் இருக்கிறது. இதை ஆசாரியாள் வர்ணிக்கும்போது, “ஸங்கீதத்தில் ஷட்ஜ கிராமம், மத்தியம கிராமம், காந்தார கிராமம் என்று மூன்று வரிசைகள் (Scale, Gamut) உண்டு. இந்த மூன்று தொகுப்பு(கிராமம்)களிலிருந்துதான் மதுரமான நானாவித ராகங்களும் எழுந்திருக்கின்றன. அம்மா, நீயோ ஸங்கீதத்தின் கதிகளிலும், கமகங்களிலும் மகா நிபுணை. அந்த மூன்று ஸங்கீத கிராமங்களும் உன் கண்டத்திலிருந்துதான் பிறந்தன. அதற்கு அடையாளமாகவே அது ஒவ்வொன்றுக்கும் உரிய ஸ்வரங்கள் தொண்டைக்குள் எந்தெந்த இடத்தில் பிறந்து, எந்தெந்த இடத்தில் முடிகின்றன என்று எல்லை வகுத்துக் காட்டுவதுபோல், வெளிப்பட்ட இந்த மூன்று ரேகைகளும் உன் கழுத்தில் காணப்படுகின்றன” என்கிறார்.

ravi said…
அத்வைத பரமாசாரியார்களுக்குச் சங்கீதத்தில் எத்தனை பாண்டித்தியம் இருந்தது என்பதும் இங்கே தெரியவருகிறது. ஸங்கீதமே அத்வைதமாக நம்மை மூலத்தோடு கரைப்பதுதான். சாக்ஷாத் அம்பிகை வீணாதாரிணியான சியாமளாம்பிகையாக விளங்குவதாகக் காளிதாஸர் ‘நவரத்தின மாலிகை’யில் ‘ஸரிகமபதநிரதாம்’ என்று பாடுகிறார். அவள் பாடுகிற சங்கீதத்தால் அவளுடைய மிருதுவான இருதயமும் அதற்கும் உள்ளே இருக்கிற அத்வைதமான சாந்தமும் (சாந்தாம், மிருதுள ஸ்வாந்தாம்) வெளிப்படுகின்றன என்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், எத்தனை உணர்ச்சிப் பரவசங்களைத் தூண்டிவிட்டாலும் சாந்தம்தான் சங்கீதத்தின் முடிந்த முடிவாக இருக்க வேண்டும். சங்கீதத்தினாலேயே அன்பு என்கிற மிருதுவான இருதயம் ஏற்படுவதாகவும் தொனிக்கிறது. தசவித கமகங்களைச் செய்கிற சியாமளாம்பிகையான மீனாக்ஷியை வீணை மீட்டிப் பாடிக்கொண்டே, இந்த அன்போடு அன்பாக, சாந்தத்தோடு சாந்தமாகத்தான் முத்துஸ்வாமி தீக்ஷிதர் கரைந்து போனார். தியாகராஜ ஸ்வாமிகளும், பாஷை தெரியாதவர்களுக்கும் கேட்டமாத்திரத்தில் எல்லையல்லாத விச்ராந்தி தருகிறமாதிரி சாம ராகத்தில் ‘சாந்தமுலேக ஸௌக்கியமு லேது’ என்று பாடியிருக்கிறார். ஈசன் எந்தை இணையடி நீழலில் அப்படியே லயித்துப் போகிற இந்த சாந்தத்தைத்தான் அப்பரும் ‘மாசில் வீணை’ என்பதாக உவமிக்கிறார்.
ravi said…
*அலகிலா விளையாட்டுடையான்*

ஒரு சமயம் ஸ்ரீமடத்தில் ஸஹஸ்ர போஜனம் செய்ய ஏற்பாடு நடந்தது. ஒரே நாளில் 1000 அந்தணர்களுக்கு போஜனமளிக்க வேண்டும். ஒரே நாளில் அவ்வளவு பேர் கிடைக்காவிடில் பல நாட்களில் கிடைக்கும் அந்தணர்களை வைத்து அன்னமிட்டு 1000 எண்ணிக்கையை நிறைவு செய்வதுண்டு. ஆனால் போஜனத்திற்கு வரிக்கப்படும் அந்தணர்கள் கட்டாயம் வேதவித்துக்களாகவும், ஆசார, அனுஷ்டானம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது சாஸ்திர விதி.

ravi said…
அப்படி நெறி வழுவாமல் நடக்கும் ஸஹஸ்ரபோஜனத்திற்கு ஒருநாள் போதிய அந்தணர்கள் கிடைக்கவில்லை. அதனால் ஸ்ரீமடம் மேனேஜர் மஹாபெரியவாளை அணுகி விபரம் தெரிவிக்க, நிலைமையை உணர்ந்த மஹான் ஸ்ரீமடத்தில் கைங்கர்யம் செய்பவர்களில் சிலரை உபயோகித்துக் கொள்ளும்படி உத்தரவிட்டார்.

ravi said…
அதன்படி மேனேஜர் மடத்தில் உள்ள சிலரை அழைத்து மறுநாள் ஸஹஸ்ர போஜனத்திற்கு வரும்படி உத்தரவிட்டார். மறுநாள் குறிப்பிட்ட அனைவரும் ஸ்நானம் செய்து ஆசாரத்துடன் பெரியவாள் பூஜைக்கு வந்தனர். பூஜை முடிந்ததும் அனைவருக்கும் பெரியவாள் அபிஷேக தீர்த்தம் தருவார்.

ஒரு திரைக்கு பின்னால் ஸ்டூலில் பெரியவர் அமர்ந்து கொண்டு தீர்த்தம் தர, திரைக்கு மறுபுறம் வரிசையில் பக்தர்கள் நின்று கொண்டு சிறிய துவாரத்தின் வழியாக கையை நீட்டி தீர்த்தத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். ப்ரசாத விநியோகம் முதலில் ஸஹஸ்ர போஜனத்திற்கு வரிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதில் வரிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக வந்து கையை நீட்ட, ப்ரசாதம் வழங்கினார் மஹான். இந்த நிகழ்ச்சியின் நாயகனான தொண்டர் வந்து கையை நீட்ட தீர்த்தத்தை அவர் கையில் விடாத பெரியவர் திரைக்கு உள்பக்கம் தன் அருகிலிருப்பவரிடம் 'கை நீட்டுவது யார்?" என்று வினவி 'அவனை சாப்பிட உட்கார வேண்டாம். பரிமாற சொல்' என்று உத்தரவிட்டு தீர்த்தத்தை கையில் விட்டார். இந்த உத்தரவு தொண்டரை கலங்க வைத்தது.

'
ravi said…
மேனேஜர், பெரியவர் சொல்லித்தானே மடத்தில் பணிபுரிபவர்களையே இன்று ஸஹஸ்ர போஜனத்திற்கு நியமித்தார். அதன்படி தானே தனக்கும் இன்று வாய்ப்பு தரப்பட்டது. அப்படி இருக்க, சாப்பிட தயாராக வந்தவர்களில் தன்னைமட்டும் வேண்டாம் என்று பெரியவா விலக்குவது எதனால்? தனக்கு என்ன தகுதி குறைவு? என்பது போன்ற பல எண்ணங்கள் அவர் மனதில் எழுந்து வாட்ட, மனம் ஒடிந்து கண்ணீர் சொரிய நின்றார். எனினும் தன்னை சாப்பிடவேண்டாம் என்று சொன்னாலும், பரிமாறும் கைங்கர்ய பாக்கியத்தையாவது கொடுத்தாரே என்று மனதைத் தேற்றிக்கொண்டு பணியில் ஈடுபட்டார்.

ஸஹஸ்ர போஜனம் நடந்து முடிந்தது. தொண்டருக்கு மன உளைச்சல் அடங்கவில்லை. கண்ணீரும் வற்றவில்லை. ஒரு ஓரமாய் அமர்ந்து தன் நிலைமையையும், தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் எண்ணி எண்ணி வருந்தும் பொழுது மஹானின் அழைப்பு வந்தது.

மிகுந்த மனவருத்தத்துடன் வந்து நின்ற தொண்டரைப் பார்த்து 'ரொம்ப அழுதியோ? என்று வினவ அன்பருக்கு மேலும் தாங்க முடியாமல் கண்ணீர் வந்தது. 'நீ எங்கிட்ட கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே. நீ நன்னா இருக்கனும்னு நான் நினைக்க மாட்டேனா' என்று மஹான் வினவியது அன்பரை மேலும் கரைத்தது. தன்னிடம் கைங்கர்யம் செய்பவர்கள் மட்டுமா, உலகமனைத்துமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மஹாத்மா அல்லவா மஹாபெரியவா.

மனவாட்டம் அடங்கும் முன்பே வந்தது அடுத்த வினா. 'நீ கோயில்களில் நடக்கும் தேர்த்திருவிழா பார்த்திருக்கியோ? அதில் எல்லோரும் கூடி வடம் பிடித்து தேர் இழுப்பார்கள் இல்லையா? அதில் விதவையான சில பாட்டிகளும் கூட வடம் இழுப்பா தெரியுமோ? பொதுவா விதவையானவா எந்த விழாக்களிலும் கலந்துக்க மாட்டா. ஆனா கோயில் ரதோத்ஸவத்தில் மட்டும் கலந்துப்பா. ரத உத்ஸவத்தில் கலந்து கொண்டு யார் தேர் வடம் பிடித்து இழுத்தாலும் அவர்களுக்கு, சொந்த செலவில் ஸ்வாமிக்கு ரதோத்ஸவம் செய்த பலன் வந்துவிடும், தெரியுமோ'? என கேட்க, எதற்கு இந்த கேள்வி நம்மிடம் கேட்க வேண்டும் என்று தொண்டர் திகைக்க நேராக சம்பவ விஷயத்திற்கே வந்தார் பெரியவா.

மடத்துல கைங்கர்யம் பண்றவாளையே ஸஹஸ்ர போஜனத்திற்கு உட்கார வைக்கும்படி சொன்னேன். உனக்கும் அழைப்பு வந்தது. ஆனால் நீ தீர்த்தம் வாங்க வந்த பொழுது தான் தோணித்து. ஸஹஸ்ர போஜனத்தில் சாப்பிட உட்காருபவர்கள் கட்டாயம் வேதம் படித்து அனுஷ்டானங்களுடன் இருக்க வேண்டும் என்ற சட்டம். உன்னால் தவறாமல் சந்தியாவந்தனம் கூட செய்ய முடியரதோ இல்லையோ, செய்யக் கூடாதுங்கற எண்ணம் உனக்கில்லை. மடத்து வேலையா நீ வெளியே போக வேண்டி இருப்பதால், சில சமயம் தவறலாம். எனவே நீ சாப்பிட உட்கார்ந்தா உனக்கு தோஷம் வந்துடப் போறதேன்னு நினைச்சேன். சும்மா இருந்த உனக்கு என்னால் பாபம் வந்துடக் கூடாதுன்னு ஞாபகம் வந்தது. அதனால் தான் உன்னை சாப்பிட உட்கார வேண்டாம் என்றேன். ஆனா சாப்பாடு போடற புண்ணியமாவது உனக்கு வரட்டுமேன்னு தான் உன்னை பரிமாறச் சொன்னேன். ரதோத்ஸ்வத்திற்கு சொன்னது தான் இதுக்கும். நீ ஸஹஸ்ர போஜனம் செய்பவர்களுக்கு பரிமாறினதாலே நீயே செலவழிச்சு ஸஹஸ்ர போஜனம் செய்த பலன் முழுக்க வந்துடுத்து, க்ஷேமமாய் இருப்பே' என்று அருள் வார்த்தை மழையாய் வர்ஷித்தார்.

இதைக் கேட்ட அடியவருக்கு தனக்கு பாபம் வரக் கூடாது என்ற கரிசனத்தோடு பரம புண்ணியமும் பைசா செலவில்லாமல் வரவேண்டும் என்று கருணை கொண்ட பெரியவாளின் தாய் மனதை எண்ணி எண்ணி நெகிழ்ந்தார். இவ்வளவு நேரம் அவமானம் என்றெல்லாம் எண்ணி வாடிய மனது எவ்வளவு பெரிய வெகுமானம் அருளியுள்ளார் இந்த மஹாமுனி என எண்ணி மகிழ்ந்தது.

தன்னை சரண் அடைந்த அன்பர்களுக்கு வாரி வாரி அருளை வழங்குவது மட்டும் அவர் குணமல்ல. கடுகளவு பாபமும் அண்ட முடியாதபடி காத்து நிற்கும் அரண்தான் அந்த ஹரன்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர

*kn*
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 114 started on 6th nov

*பாடல் 35 ...* *விதிகாணும்*

(நற் கதி காண அருள்வாய்)

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?

மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே.
ravi said…
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே

... என 'கெடுவாயாய் மனனே' எனத் தொடங்கும் அநுபூதியில் (7)
கூறுகிறார்.

பல இடங்களில்,

.. வள்ளி பதம் பணியும் ..,

.. வள்ளியின் பொன் அடி மீது நித்த முன்தண்
முடியானதுற்று உகந்து பணிவோனே ..

போன்ற பிரயோகம் வருவதன் உட்பொருள் என்ன? இறைவன்
தானே விளங்கும்பொழுது பிரம்மமாய் செயலின்றி இருக்கிறான்.
இக் கருத்தை நாமும் பேச்சு வழக்கில், 'அவன் சிவனே என
இருக்கிறான்' என்கிறோம். சக்தியுடன் சேர்ந்து செயல்படும்
பொழுது சலனம் ஏற்படுகிறது. அதன் காரணமாக, சிருஷ்டி,
ஸ்திதி, லயம் முதலிய தொழில்கள் ஆரம்பம் ஆகின்றன. இதே
கருத்தையே ஆதி சங்கரரும் செளந்தரிய லஹரியின் முதல்
சுலோகத்திலேயே, 'சிவ சக்தியாய்' என சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆகையால் முருகன் வள்ளியின் பதம் பணிகிறான், தன்னுடைய
சக்தியின் சன்னிதானத்தில் தொழில் படுகிறான், என்பதே
உட்பொருளாகும்.
ravi said…
[24/03, 20:45] Jayaraman Ravikumar: *109. ஸம்மிதாய நமஹ (Sammithaaya namaha)*

வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

ஸமாத்மா *ஸம்மிதஸ்ஸம* : |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[24/03, 20:46] Jayaraman Ravikumar: இல்லை! இல்லை! உங்களைப் போன்ற யோகி இந்தக் காட்டுக்குள் நுழைந்து மிருகங்களுக்கு இரையாவதை
நான் அனுமதிக்கவே மாட்டேன். அத்தகைய மிருகம் இருப்பது உண்மையானால், உங்களுக்காக நான்
அந்த மிருகத்தைத் தேடிப் பிடித்துக் கொண்டு வருகிறேன்!” என்றான் வேடன்.
“இன்று சூரியன் அஸ்தமிப்பதற்குள் அந்த மிருகத்தோடு உங்கள் முன் வந்து நிற்காவிட்டால், என் உயிரை மாய்த்துக் கொள்வேன்.

நீங்கள் காட்டுக்கு வெளியே காத்திருங்கள்!” என்று சொல்லிவிட்டுக் காட்டுக்குள் சென்றான்.
ravi said…
[24/03, 20:36] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*70 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
[24/03, 20:36] Jayaraman Ravikumar: அரஹஸி ரஹஸி ஸ்வதந்த்ர-புத்3த்4யா

       வரிவஸிதும் ஸுலப4: ப்ரஸன்ன-மூர்த்தி: |

அக3ணித-ப2லதா3யக: ப்ரபு4ர்-மே

       ஜக3த2தி4கோ ஹ்ருதி3 ராஜசேக2ரோஸ்தி ||                    
[24/03, 20:43] Jayaraman Ravikumar: தனிமையில் உட்கார்ந்து இருந்த போதிலும் எல்லோருடன் உட்கார்ந்திருக்கும் போதும் சுதந்தரமாய் பேசப்படக் கூடியவர் பரமேஸ்வரன்

பிரசன்ன மூர்த்தி .. கணக்கற்ற வரங்களை தரக்கூடியவர் பிறை சூடிய பெருமான் என் இதயத்தில் என்றும் உறைகிறார் 🙏
ravi said…
அம்மா ..பவானீ .. த்வம் தாஸே மயீ என்றேன் ... பவானித்வம் தந்து விட்டாய் ...

என்ன வேண்டும் இனி ?

என்னில் நீ இருக்க எண்ணங்கள் நீயாக இருக்க

இன்னும் அதிக வரம் கேட்பேனோ தாயே ...

உன்னில் கலந்து விட்டபின் இனி பிறவா வரம் என்றே தனி உளதோ அம்மா
Rajeswari said…
Thanks for sharing this wonderful book. Fully read without keeping it down. Very nice explanations and could learn many new meanings for certain words. 🙏🙏🙏
ravi said…
🌹🌺 "A simple story that explains that our forefathers set up every ritual to realize the truth, know the sublime, and live a virtuous life 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 It is customary to perform aarti at the end of the puja in temples. It is fascinating to examine what its true philosophy is.

🌺 After the decoration is done, the nine-threaded Deepa Aarti is first displayed. This means worshiping the nine planets and then showing them as witnesses.

🌺 Next is the seven-wicked lamp. This means that the cosmic energy must enter through the seven sources within the human body and purify the chakras.

🌺Then the five face lamp. This is to explain that if we control the five senses with the Pancha Buddhas as witnesses, we can get rid of the habit registers and come to the explanatory registers.

🌺Next is the Three Face Deepa Aradhana. This three-faced torch vision is based on the theory that if the mind operates in three different states, arrogance, arrogance, and delusion, if one lives by researching the mind and keeping what is necessary and removing what is not, then the impurities of the mind will be removed.

🌺Next two face lamp. This two mukha deepa darshan is because the ancestors can be left out of the record if the nadis of the Itakalai Bingala are purified.

🌺 Next is a mukha deepa aarti. It is something that exists. That same thing has multiplied and become the object of appearance. The philosophy of Deepa Aarti is the idea that everything, everyone is one and the same.

🌺 Our forefathers have set up every ritual to realize the truth, know the sublime, and live virtuously.

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
[26/03, 12:03] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 116*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

1வது ஸ்லோகம்
[26/03, 12:04] Jayaraman Ravikumar: அன்னையின் திருப்பாதங்களின் எழிலையும்,

அவற்றின் மகிமைகளையும்,

அவற்றில் சரணடைவதன் மூலம் கிட்டும் நற்பயன்களையும் போற்றுகிறது.

மனக் கவலைகள் தீர்ப்பவள் காமாட்சி.

பாதாரவிந்த சதகத்தின் ' *கதா தூரீகர்த்தும்* ' என்று தொடங்கும் 22 வது ஸ்லோகத்தைப் பாராயணம் செய்துவர மனக் கவலைகள் தீரும்.🙏🙏🙏
[26/03, 12:06] Jayaraman Ravikumar: பதாதாரவிந்த சதகம்,அவளுடைய தெய்வீக பாதங்களின் நன்மைகளையும் அழகையும், (ஸ்ருதி,வேதங்கள் தன் பாதங்களைத் தலையால் தேய்த்துக்கொண்டிருப்பதால், இரத்த சிவப்பாக மாறிய பாதங்கள், ‘ *சௌம்யம் ரத்னகட ஸ்த ரக்த சரணம், த்யாயேத் பரமாமம்பிகாம்* – ஸ்ரீ லலிதா. சஹஸ்ரநாம தியான ஸ்லோகம் 1) வர்ணிக்கிறார்..🙏🙏🙏
ravi said…
[26/03, 12:07] Jayaraman Ravikumar: மஹிம்நா பந்தாநம் மদநபரிபந்திப்ரணாயிநீ ப்ரபுர்நிர்ணேதுঃ தே ভவதி

யதமாநோ’பி கதமாঃ । ததாபி ஶ்ரீகாஞ்சீவிஹ்ருதிரசிகே கோபி மனஸோ

விபாகஸ்த்வத்பாதஸ்துதிவிதிஷு ஜல்பகயதி மாம் .
[26/03, 12:07] Jayaraman Ravikumar: அம்மா, மன்மதனை அழித்தவனின் உயிர் சக்தி நீங்கள்:

காஞ்சிபுரத்தில் உலக நலனுக்காக உங்கள் பண்புகளையும் செயல்பாடுகளையும் செயல்படுத்த விரும்புபவர்;
உங்கள் பண்புகளை விவரிக்க யாரும் இல்லை.

இருப்பினும் மனதில் குறிப்பிடப்படாத ஒரு பகுதி, உங்களின் மகிமையான பாதங்களைப் பற்றி என்னை வெளிப்படுத்தத் தூண்டுகிறது👣👣👣
ravi said…
[26/03, 11:48] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 522* 🙏🙏🙏started on 7th Oct 2021

*232 வது திருநாமம்*

*சக்தி ஆலயம்: அவனியாபுரம் ரேணுகாம்பாள்:*
[26/03, 11:49] Jayaraman Ravikumar: *ராமாவதாரத்தில் பரசுராமர்:*

ராமர் சிவ தனுசை ஒடித்து சீதையை மனைவியாக அடைந்து மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் ராமனோடு மோதுகிறார்.

தன் தவவலிமை முழுவதையும் ராமபாணத்திடம் இழந்து '' நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக'' என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர்.🙏🙏🙏
ravi said…
*ராமா*

ராமன் ஒருநாள் கங்கையில் குளிக்க இறங்கி தான் குளிப்பதை குறிக்க நிலத்தில் ஓர் அம்பை ஊன்றினான் ...

அம்பு ஆழமாக சென்று உள் இருந்த தவளையின் உடலை கிழித்தது ...🐸🐸🐸

கங்கை அன்று ராமன் பாவம் தீர்க்க வரவில்லை

பாவம் சேர்க்க வந்தது ...

மூன்று முழுக்கு போட்டான் ராமன் ..

முனகல் சப்தம் மரண ஓலம் தடுத்தது ராமனை ...

எங்கும் எவரும் இல்லை

பிரமை என்றே மீண்டும் முழுகினான் நீரில்

*ரா மா* ... வார்த்தைகள் சிதறி சின்னா பின்னமாய் வெளி வந்தன

ஓடி வந்த ராமன் குரல் வந்த திசை நோக்கி தேடினான் ..

அம்பின் அடியில் கொப்பளிக்கும் குருதியில் உயிர் ஊசலாட தவளை விம்மியது ...

முதுகில் ராம பாணம்... முடிவில் நாவில் அவன் நாமம்

ராமன் கதறினான் ..

ஐயகோ

சொல்லி இருந்தால் உன்னை காப்பாற்றி இருப்பேன் ..

தீமை ஏதும் செய்யா நீ தீமை மட்டுமே இருக்கும் என்னிடம்

கயமை நிறைந்த என்னிடம்

கருணை குன்ற கண்டாயோ ?

தவளை சொன்னது

*ராமா* ... பிறர் செய்யும் தீமை உன் பார்வைக்கு வரக்கூடும் ...

நீ யே தீமை செய்தால் நான் யாரிடம் போவேன் *ராமா* ...

உன் பாணம் சுமக்கும் சுகம் கண்டேன் ..

உன் சேவை என்றே இருமார்ப்புக் கொண்டேன் ...

உன்னால் மடியும் வரம் பெற்றேன் ..

என்னால் இனி பெற ஏதும் உண்டோ *ராமா* ?

கண்கள் கங்கையிலும் அதிகமாய் கண்ணீர் சிந்த ஈமகாரியம் செய்தான் *ராமன்* ..

தசரதன் பெறா பாக்கியம் பெற்றது ஒரு தவளை அன்று ..

கவலை இன்றி வானில் பறந்தது கண்களில் ராம நாமம் சிந்தியே 🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸
ravi said…
ஓர் அழகு படுத்திருந்தது ...

அதில் எல்லா சௌந்தர்யமும் அடங்கி கிடந்தது ...

கால் மேல் கால் போட்டு காலனுக்கு கட்டளை இட்டது ..

சங்கரா என்றே சொல்பவருக்கு சரணம் போட்டு செல்ல வேண்டும் ...

சண்டி ஏதும் செய்தால்

ஒரு காலும் மறு காலும் சேர்த்து கன்னம் சிவக்க ஓர் அறை விழும்

அரங்கனுக்கும் இவ்வளவு அழகில்லை ...

கள்ளழகனுக்கும் இவ்வளவு கனிவு இல்லை ..

சொக்கனுக்கும் இந்த பொலிவில்லை

சொக்கிக்கும் இந்த காரூண்யம் இல்லை ..

எல்லாம் சேர்ந்த *கலவை*

கள்ளமில்லா சிரிப்புடன் சதுரங்கம் ஆடியதே 👍👍👍
ravi said…
களங்க = மாசு - கறைபடிதல்

*❖ 153 நிஷ்களங்கா =* குறைபாடற்ற முழுமைத்தன்மை உடையவள்
ravi said…
குறை ஒன்று உளதோ அம்மா உனக்கு ...

நிறை குறை காண இயலுமோ ..

மறை தேடும் உன்னை

சடை கொண்டவன் தனதாக்கி கொண்டான் ...

விடை ஏறும் நீ

விரும்பி ஏற்ற மணவாளன்

குறை ஏதும் வைத்தானோ உனக்கு ?

கொற்றவளே சொல் ...

பன்னிரண்டு விழியோன் பங்கம் ஏதும் செய்தானோ ...

வேழமுகத்தோன் விளையாட்டாய் ஏதும் செய்தானோ ..

புலிப்பால் உன் நினைப்பால் கொண்டு வந்தவன் குற்றம் ஏதும் புரிந்தானோ ...

பாலா ஏதும் தவறு செய்தாளோ ...

குறை உண்டோ அம்மா உனக்கு ??

வீனர்கள் எங்களை படைத்தே குறை கொண்டாய் ...

வீண் பாசம் செலுத்தி பழி கண்டாய் ..

உனை மறக்கும் மனம் தந்தாய்

உன் நாமம் கசக்கும் *நா* தந்தாய்

நாங்கள் உன் குறை தான் *அம்மா* ...

அதனால் நீயும் களங்கம் கொண்டனையோ எங்களை ஈன்றவளே !! 💐💐💐
ravi said…
*_கம்ப இராமாயணம் - தம்பியா? சேவகனா?_*

தசரதன் இராமனை காட்டுக்குப் போகச் சொன்னான், இராமன் அரசன் வார்த்தைக்கு கட்டுப் பட்டு போனான்.

அவன் மனைவி சீதை, இராமன் கூட போனதும் புரிந்து கொள்ளக் கூடியதே.

லக்ஷ்மணன் போக வேண்டிய அவசியம் இல்லை. "நான் இங்கேயே இருந்து பரதனுக்கு உதவியா இருக்கேன்" என்று சொல்லி இருந்தால், யாரும் ஒன்றும் சொல்லி இருக்க முடியாது.

லக்ஷ்மணன் செய்தது மிகப் பெரிய தியாகம்.

இராமன் கானகம் போகப் புறப்பட்டு விட்டான், லக்ஷ்மணன் நானும் கூட வருகிறேன் என்று கிளம்பினான்.

லக்ஷ்மனனின் தாயிடம் (சுமித்திரை) விடை பெறச் செல்கிறான். மொத்த கம்ப ராமயணத்தில் அவள் இரண்டே இரண்டு பாடல் தான் சொல்லுகிறாள். அந்த இரண்டாவது பாடல் இது.
.
"நீ இராமன் கூட போ. தம்பியாக இல்ல, ஒரு அடிமை மாதிரி போ. அவன் திரும்பி வந்தால் வா, இல்லை என்றால் அவனுக்கு முன் நீ முடி" என்றாள்.
.
தம்பி என்ற உறவு இருந்தால், ஒரு வேளை அண்ணனிடம் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்.

அண்ணனையே கொஞ்சம் வேலை வாங்கலாம். "எனக்கு இன்னைக்கு ரொம்ப கால் வலிக்குது, நீயே போய் சாப்பிட ஏதாவது கொண்டு வா" என்று சொல்லலாம். அது எல்லாம் கூடாது, நீ ஒரு அடிமை மாதிரி கூடப் போ என்கிறாள்.
.
பின்னால் வரும் பாடல்களில், இராமன் லக்ஷ்மணன் பாசப் பிணைப்பை கம்பன் பல இடங்களில் சொல்லுகிறான். சீதையை பிரிந்த போது இராமன் அழவில்லை. லக்ஷ்மணன் போரில் மூர்ச்சை ஆனபோது அழுது புலம்புகிறான். "வாள் வித்தை, வில் வித்தை எல்லாம் கற்றாய், இந்த குடிசை போடும் வித்தையை எங்கு கற்றாய்" என்று இராமன் நெகுழுகின்ற இடங்களும் உண்டு.
.
லக்ஷ்மணனை இராமனுடன் கானகம் போகச் சொன்ன அந்தப் பாடல்....
’பின்னும் பகர்வாள் ‘மகனே இவன்பின் செல்; தம்பி
என்னும்படியன்று; அடியாரின் ஏவல் செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடில் வா அன்றேல்
முன்னம் முடி’என்றாள் வார் விழி சோர நின்றாள்’’

போகும் போது அவன் பின்னாடி போ.

அவனுக்கு ஒரு ஆபத்து என்றால் அவனுக்கு முன்னாடி போ. (இறந்து போ என்று சொல்லவில்லை, "முடி என்றாள்" . அது தான் கம்பன்).
ravi said…
*அணில் ஆழ்வார்*

பாலம் கட்ட பலமான யோசனை ...

நீலன் நளன் கொடுக்கும் பலமான போதனை

வருணன் வரம் அளித்தான் போடும் கற்கள் மிதக்கும் என்றே ...

மிதக்கும் கற்கள் சுமந்தன ராமன் நாமத்தை மின்சாரமாய் சிரித்தன ...

மின்னல் போல் வேலை ..

மிரட்டும் இடி போல் சேவை ..

கொட்டும் மழை போல் குவிந்தன வானர படை ...

அங்கும் இங்கும் ஓடின மானும் மயிலும்

அன்னமும் குயிலும் புலியும் சிங்கமும்
கரடியும் யானையும் ...

எல்லாம் பாலத்தில் தன் சேவை பொறித்தன

ஒரே ஒரு அணில் கண்களில் சமுத்திரம் தாங்கியே இங்கும் அங்கும் ஓடியது ...

இடைவிடாமல் ராம நாமம் ஜெபித்தது ...

*ராமா*

நானோ பொடியன் என் செய்வேன்..

கல்லை தூக்க சக்தி இல்லை

கடலை கடக்க திராணி இல்லை ..

கண்களில் நீர் வடியும் உன் முகம் துடைக்க கரங்கள் போத வில்லை ...

ஏன் பிறந்தேன் என்றே புரியவில்லை ..

ராமசேவை செய்ய வரம் கிடைக்க வில்லை ...

வாழ்ந்து என்ன பயன் *ராமா* ..

பாலம் கட்ட பலி கொடுக்க வேண்டுமாமே ...

அதற்கு நான் தகுந்தவன் அன்றோ *ராமா*?

ராமன் காதில் ஓர் சின்ன அணுவின் ஓலம் கேட்டது ...

ஓடி வந்தான் வேலைகளை விட்டு விட்டு

சீதை போல் மார்பில் அணைத்து க்கொண்டான் ...

அன்புக்கு இல்லை அடைக்கும் தாழ் ..

உன் பண்புக்கும் ஒப்பில்லை பரந்தாமன் தாள்

என் சேவை செய்யும் எண்ணமே போதும் ..

கண்ணில் நீர் வழிய நெஞ்சில் அன்பு முட்ட

பக்தியுடன் என் நாமம் ஒரு முறை சொன்னால்

காசியும் உன் வசம் பாற்கடலும் காணுமே உன் பரவசம் ..

முதுகில் வரைந்தான் மூன்று கோடுகள் ..

அவன் இடும் திருமண்ணாய் அணில் முதுகில் நிலைத்து நின்றதே ..

அணிலும்
*அணில் ஆழ்வார்* ஆனதே
ravi said…
https://chat.whatsapp.com/KIZSxqwsGMN8Sd3SZPFRy5

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து துர்க்கை அம்மனின் கைகளில் உள்ள ஆயுதங்களும் அதன் அர்த்தங்களும் பற்றிய பதிவுகள் :*

*வில்லும், அம்புகளும் :*

துர்க்கை அம்மன் கையில் வில்லும் அம்புகளும் அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் கட்டுப்படுத்துவதை குறிக்கும்.

*இடியேறு :*

துர்க்கை அம்மன் கையில் இருக்கும் இடியேறு அவரின் திடத்தை குறிக்கும்.

*பாதி மலர்ந்த தாமரை :*

துர்க்கை அம்மன் கையில் இருக்கும் பாதியாக பூத்த தாமரை, சேறுக்கு மத்தியில் பூப்பதை போல் உலகத்தில் உள்ள பல சுகங்களுக்கு மத்தியில் மனித மனது ஆன்மிகத்தை நாட வேண்டும் என்பதை குறிக்கும்.

*வாள் :*

துர்க்கை அம்மன் கையில் இருக்கும் வாள் அறிவை குறிக்கும். அறிவே இவ்வுலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது என்பதை குறிக்கிறது.

*சுதர்சன் சக்ரா :*

உலகம் தன் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்குகிறது என்பதை கடவுளின் ஆள் காட்டி விரலில் அழகாக சுழலும் சக்கரம் குறிக்கிறது.

*திரிசூலம் :*

திரிசூலம் என்பது சத்வா, ராஜாஸ் மற்றும் தாமாஸ் என்ற மூன்று அம்சங்களை குறிக்கும்.

*அபய முத்திரை :*

துர்க்கை அம்மனின் ஒரு கை எப்போதும் தன் பக்தர்களை ஆசீர்வதிக்கும் அபய முத்திரையை கொண்டிருக்கும். தன் பக்தர்களை பயத்திலிருந்து எப்போதும் காப்பதை இது குறிக்கும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
உபாதி = தகுதி - நிர்ணயம் - வரம்பு - பண்பு - ஏற்றிக்கூறல்

*❖ 154 நிரூபாதி* = வரையரையற்றவள் -

எல்லையற்று எல்லாமாகவும் விளங்குபவள்🙏🙏🙏
ravi said…
தரையை தொட்ட வானதைக்கேட்டேன் உன் பரப்பு என்ன என்றே

சிவந்த வானம் சிரித்து சொன்னது ... ஒரு பெண்ணின் மனம் எவ்வளவு பரந்து விரிந்தது என்றே தெரியுமோ ...

முதலில் அதை கண்டுபிடி பின் எனை அளக்கலாம் என்றது

அலைகள் திரும்பும் ஆழ்கடல் கேட்டேன் ... உன் ஆழம் எவ்வளவு ... ?

பெண்ணின் மனம் எவ்வளவு ஆழம் அறிவாயோ ... ?

ஆழம் அளந்து வா பின் பார்ப்போம் என்றது

வானில் சுத்தும் தாரகைகள் தனை கொஞ்சம் நிறுத்தி கேட்டேன் ...

மொத்தம் நீங்கள் எவ்வளவு என்றே ..

சிரித்த விண்மீன்கள் மின்னல் போல் வெட்டி சிரித்தன ..

படைத்த பிரம்மனும் அறியான் ..

அம்பாளை தொழுவோர் எண்ணிக்கை சொல் நாங்கள் எவ்வளவு என்று சொல்கிறோம் ...

கடற்கரை மண்ணில் கல் எண்ணினேன் ... சிரித்த கல் கள் உண்டதைப் போல் சொன்னது ....

வெட்டி வேலை இது ... அம்பாளின் நாமங்கள் போல் நாங்கள் எண்ணில் அடங்காதவர்கள் ...

காணும் பெண்ணெல்லாம் நீ வேண்டும் சக்தி என்றே உணர்ந்தால்

எதையும் எண்ணி விடலாம் அளந்தும் விடலாம்

எல்லாம் கிடைக்கப் பெற்றேன் ...

அவள் கருணைதனை மட்டும் அளக்க முடியாமல் ....

அவள் அன்பை மட்டும் ஓர் வரையரைக்குள் கொண்டு வர முடியாமல் தவித்தேன் ...

சிரித்தாள் சிங்காரி ... சிரிப்பின் அர்த்தம் உணர்ந்தே சிற்பி செத்துக்கா சிலையானேன் 🙏🙏🙏
ravi said…
*🔹🔸"இன்றைய சிந்தனை"..*

*_✍️ 27, Monday, Mar., 2023_*

https://srimahavishnuinfo.org

*🧿''எல்லா உயிர்களிடம் அன்பு செலுத்துவோம்''*


*♻️அன்பு என்பது நம்மிடமே இருந்தும், ஆனால் நாம் அறியாமல் இருக்கும் சொத்தாகும். அன்பின் முதல் அலையை நாம் நம்மிடம் இருந்து தான் தோற்றுவிக்க வேண்டும்.*

*♻️அன்பு, பெறுபவரைக் காட்டிலும் கொடுப்பவருக்கே அதிக மகிழ்வைத் தரும் சொத்தாகும். நம்மிடமே இருந்தும் நாம் அறியாமல் இருக்கும் சொத்து.*

*♻️காலமெனும் பாதையில் அன்பின் காலடிச் சுவடுகள் என்றென்றும் அழியாமல் பதிந்திருக்கும்.*

*♻️அது மிகவும் பலம் வாய்ந்த எதிரியையும் வெற்றி கொள்ளவல்ல ஆயுதம் ஆகும்.*

*♻️அன்பு ஒன்று மட்டுமே அனைத்து நாடுகளிலும் செல்லுபடியாகும் நாணயம்.*

*♻️அன்பு என்பது சட்டைப் பையில் ஒளித்து வைக்கக் கூடியது அல்ல. நம் செயல்களின் மூலம் அதை ஒளிரச் செய்ய வேண்டும்.*

*♻️நாம் அன்புமயமாக மாறும் போது, நமது புலன்கள் அனைத்தும் அன்பின் பாலங்களாக மாறுகின்றன.*

*♻️எவரது கர்வத்தாலும் வெல்ல முடியாததாக அன்பு ஒன்று மட்டுமே உள்ளது.*

*♻️அது துன்பத்தைத் தீர்க்கக்கூடிய அருமருந்தாகும். அது தனிமையின் ஊன்றுகோலுமாகும்.*

*♻️நம் வாழ்வின் அனைத்து வெற்றிகளுக்கும் சரியான அளவுகோலும் அன்பு ஒன்று மட்டுமேயாகும்.*

*😎ஆம்.,நண்பர்களே..,*

*🏵️அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக இருப்பது தான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும்.*

*⚽மனம் நிறைந்த அன்பு மட்டுமே நல்ல பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மனமகிழ்வை தரும்.*

*🏵️ஆகவே., அனைத்து உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவதன் மூலம் நம் வாழ்க்கையும் பிரகாசமாகும்...*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
 ★  *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*     
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*"தெலுங்கு தெரிந்த சந்யாசியா?"*

தாடேபள்ளி ராகவநாராயண சாஸ்திரி என்பவரின் அனுபவம் இது. அவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தெனாலி விஜயம் செய்தபோது போய் தரிசித்தார். சாஸ்திரிகளின் தகப்பனார் தெலுங்கில் ராமாயணம் இயற்றியதைப் பற்றி ஸ்ரீ பெரியவாள் கேட்டபோது இவருக்கு அது எப்படி ஸ்ரீ பெரியவாளுக்குத் தெரிந்திருக்கிறது என்று அதிசயமாக இருந்தது.

தந்தை இயற்றிய ராமாயணத்திலிருந்து சில பாடல்களை ஸ்ரீ பெரியவா இவரிடம் பாடச் சொல்லிக் கேட்டார். சாஸ்திரிகளும் சில பதியங்களைப் பாடினார். அதை மூன்று முறை திரும்பப் பாடச் சொல்லி கேட்டார் ஸ்ரீ பெரியவா.

ravi said…
பின் “நான் சமஸ்கிருதம் போன்ற பலமொழிகளில் சுமார் 80 ராமாயண புஸ்தகங்களை பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான காவ்ய விசேஷம், இனிமை ஆகியவை உள்ளன” என்று சிலாகித்துவிட்டு, “உங்கள் தகப்பனார் இயற்றிய ராமாயணத்தின் ஒரு பிரதியை எனக்குக் கொண்டு வந்து கொடுங்கள்” என்றார்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்குத் தெலுங்கு எங்கே தெரியப் போகிறது என்று எண்ணிய சாஸ்திரிகள் “அதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டுவிட்டார்.

எல்லாமுமறிந்த மேன்மையான தெய்வம் அதற்கும் பவ்யமாக “எனக்கு தெலுங்கு படிக்கத் தெரியுமா தெரியாதான்னு யோசனை செய்ய வேண்டாம், இங்கே ராமாயணத்தை வைச்சுட்டுபோ. நான் தினமும் ஏதாவது இரண்டு புஷ்பங்களையாவது போட்டுட்டு போறேன்” என்றார் ஸ்ரீ பெரியவா.

இது நடந்து பல வருடங்கள் ஓடின.

பின் ஸ்ரீ பெரியவாளை செகந்திராபாத் நகரில் பல வருடங்கள் கழிந்து சாஸ்திரிகள் தரிசிக்க போனபோது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சாஸ்திரிகளின் தந்தை அந்த ராமாயணத்திலிருந்து விரும்பி அடிக்கடி பாடும் ஒரு சுலோகத்தை அவர் தந்தை பாடிய அதே ராகத்தில் அவர் தந்தையின் குரலிலேயே பாடிக் காண்பித்தபோது சாஸ்திரிகளுக்கு மெய்சிலிர்ப்பு உண்டாயிற்று.

“என் தந்தையை ஸ்ரீ பெரியவா பார்த்ததில்லை. அவர் இறந்து போய் பல ஆண்டுகளாகின்றன. அவர் இஷ்டப்பட்டு பக்தியுடன் பாடி வந்த இந்தப் பாட்டு மட்டும் எப்படி ஸ்ரீ பெரியவாளால் அப்படியே அந்த ராகத்தில் பாட முடிந்தது” என்று அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை நோக்கினார்.

தெலுங்கு என்ற பாஷை தெரியுமோ என்று சந்தேகப்பட்ட சாஸ்திரிகளுக்கு இப்போது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சர்வக்ஞனாக உணரமுடிந்ததில் அந்த ஸ்ரீராமசந்திரமூர்த்தியே எதிரில் தரிசனம் தந்து கொண்டிருப்பதாகவும் தோன்றியிருக்கலாம்.

சங்கடம் நீக்க சடுதியில் வந்திடும் சங்கரர்.

சித்தமல்லி சீனிவாசன் என்பவர் தனக்கு ஸ்ரீ பெரியவா அருளியதை விவரிக்கிறார்.

1972 வருடம் ஜீன் மாதம் அவர் பெண்ணிற்கு விவாகம் நடந்தது. ஸ்ரீ மஹாபெரியவா கல்யாணத்தை நாலு நாட்கள் சாஸ்திர முறைப்படி ஓளபாஸனம் செய்யும்படி உத்தரவிட்டதால் அதன்படியே செய்து முடித்தார். மடத்திலிருந்து பிரசாதங்கள் வழக்கம்போல் வந்து விவாகம் நன்றாக நடந்தது.

https://chat.whatsapp.com/KFU2iNJm2Rr3HvTcwN9rAX
கல்யாணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம். மாப்பிள்ளை ஜானவாசம் முடிந்து அழைத்து வரப்பட்டு நிச்சயதார்த் தத்திற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. எல்லோரும் காத்திருக்க சாஸ்திரிகள் கல்யாணப் பத்திரிக்கை, புடவை மற்றும் சீர் வகையறாக்களை கொண்டுவரச் சொன்னார்.

சீனிவாசன் அவைகளை எடுக்க பீரோவை நோக்கி ஓடினார். பீரோவில் அவைகளை வைத்து பூட்டிவிட்டு சாவியை வைத்துக்கொண்டிருந் தார். இப்போது அதை திறக்க சாவியைத் தேட சாவி காணவில்லை. கையில் ஜாக்கிரதையாக வைத்திருந்த சாவியைக் காணவில்லை. அதற்கு மற்றொரு சாவியும் கிடையாது என்று மற்றவர்கள் சொன்னார்கள்.

அந்த சமயத்தில் என்ன செய்வதென்று புரியவில்லை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை மனதில் தியானம் செய்துக் கொண்டார். எல்லாம் தயார் நிலையிலிருக்க அவசரமாக தேவையான மங்களப் பொருள்களை எடுக்காமல் என்ன செய்ய முடியும்? ஸ்ரீ பெரியவாளே சட்டென ஒரு வழிகாட்ட மாட்டீர்களா என்று மனமுருக வேண்டுவதேயின்றி மற்றேதும் தெரியவில்லை.

அப்போதுதான் ஒரு அதிசயம் நடந்தது. யாரோ முன்பின் தெரியாத ஒரு ஐந்து வயது பையன் ஓடி வந்தான்.

“என்ன மாமா தேடறீங்க?“ என்று கேட்டான்.

“பீரோ சாவி” என்றார்.

“இந்தாங்கோ” என்று பால் வடியும் முகத்தில் ஒரு தெய்வீகப் புன்னைகையோடு அவன் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான். அந்த அவசரத்தில் சாவி கிடைத்த மகிழ்ச்சியில் நிச்சயதார்த்த சாமான்களை எடுத்து வைபவத்தை முடிப்பதில்தான் இவர் முனைப்பு இருந்தது.

பீரோவைத் திறந்து பொருள்களை எடுத்தவுடன் அந்த பையன் எங்கே என்று இவர் தேட அவனை சுற்றிலும் எங்குமே காண முடியவில்லை. நெடுக தேடியும் பார்க்க முடியவில்லை. யாரைக் கேட்டாலும் தெரியவில்லை.

சங்கடம் போக்க சடுதியில் வந்த பாலகன் சாட்சாத் சங்கரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளே என்று சீனிவாசனுக்கு நிச்சயமாக உறுதிப்பட்டது.

இப்படி இடர்களைப் போக்கி என்றென்றும் எல்லோருக்கும் சகல சந்தோஷங்களையும், சர்வ மங்களங்களையும் அள்ளித்தரக்காத்திருக் கும் கண்கண்ட தெய்வமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளை பற்றிக் கொண்டு நலமடைவோமாக!
மஹா பெரியவா சரணம் 🙏
Dr. வெங்கட் ND
ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர!!

https://chat.whatsapp.com/KFU2iNJm2Rr3HvTcwN9rAX
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ராமராஜ்யம் ஏற்படவேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்தவரின் வார்ஸுகள் இப்போது ஜனநாயகம் ஸ்ருஷ்டி செய்துகொண்டிருக்கிறார்கள். ராமர் புதுசாக ராஜநீதி எதுவும் செய்து ராஜ்ய பாரம் நடத்தவில்லை. தன் அபிப்ராயம், தன் கார்யம் என்று ஸொந்தமாக எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க சாஸ்த்ரத்தைப் பார்த்து, பூர்விகர்களின் வழியைப் பார்த்து அந்தப்படியே பண்ணினவர் ஒருவருண்டு என்றால் அது ராமசந்த்ர மூர்த்திதான் மநு மாந்தாதா காலம் முதலாக தசரத சக்ரவர்த்திவரை எந்த தர்மசாஸ்த்ர ஆட்சி முறை நடந்ததோ அதையேதான் ராமரும் பின்பற்றி, நடத்திக்காட்டினார்.

ravi said…
தசரதர் அவருக்குப் பட்டாபிஷேகம் செய்ய உத்தேசித்த போது தன் குமாரன் ஸர்வஜன அபிமானத்தையும் பரிபூர்ணமாகப் பெற்றவன், ஸகல யோக்யதாம்சங்களையும் ஸம்பூர்த்தியாகப் பெற்றவன் என்று தெரிந்திருந்த போதிலும், ஸபை கூட்டி ஜனங்களின் பல தரப்புக்களைச் சேர்ந்த எல்லா ப்ரதிநிதிகளின் அபிப்ராயத்தையும் கேட்டார் என்று சொல்லியிருக்கிறது. அதிலே வைதிக தர்மத்துக்கு வேறாக இருந்த ம்லேச்சர்களுடைய ப்ரதிநிதிகளைக்கூட வரவழைத்து ஆலோசனை கேட்டாரென்று இருக்கிறது. அதுதான் நிஜமான ஜனநாயகம். அதாவது அபிப்ராயங்களைக் கேட்பதில் அவர் இவர் என்ற பேதமில்லாமல், யோக்யதாம்சம் பார்க்காமல் எல்லாருடைய ப்ரதிநிதிகளையும் கலந்து கொள்ளத்தான் வேண்டும். இங்கேயும்கூட referendum என்பதாக அத்தனை ஜனங்களையும் அபிப்ராயம் கேட்பது என்றில்லாமல் அவர்களுடைய பல ப்ரதிநிதிகளைத்தான் கேட்டிருக்கிறாரென்பது கவனத்துக்கு உரியது. ஏராளமான பாமர ஜனங்களை நேராக ராஜீய விஷயங்களில் கொண்டு வருவதில் அநேக தப்பு தண்டாக்கள், ஏமாற்று மோசடிகள் நடந்துவிடலாம் என்பதை அலக்ஷ்யம் செய்வதற்கில்லை.

ravi said…
இப்படி ஸகல ஜன ப்ரதிநிதிகளிடமும் அபிப்ராயம் கேட்ட பின், தசரதர், ராமர் முதலான அரசர்கள் எப்படி முடிவு எடுத்தார்கள் என்று பார்க்கவேண்டும். Policy making (கொள்கை வகுப்பது) , அநேக திட்டங்களைப் போடுவது என்பதாக முடிவுகள் செய்யும்போது அங்கே ஜனநாயக ஸமத்வத்துக்கு இடம் தரவில்லை. ஞான, சீல, வயோவ்ருத்தர் என்று சொன்னேனே அப்படிப்பட்ட அநேக யோக்யதாம்சங்களைப் பெற்ற பரம தர்மிஷ்டர்களான மந்த்ரிகளையே மூலஸ்தம்பமாகக் கொண்டுதான் தசரதரும், அவருக்கு முன்னாலிருந்த ரகுவம்ச ராஜாக்களும், பின்னால் வந்த ரகுராமனும் முடிவுகள் எடுத்திருக்கிறார்கள்.

பலவகை ஜனங்களின் பலவித அபிப்ராயங்களையும், அவர்களில் யார் வாயையும் அடைக்காமல் உள்ளது உள்ளபடி கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். பொது ஜன அபிப்ராயத்தை ராமர் எப்படி வெகு முக்யமான விஷயமாகக் கேட்டறிந்து வரச் செய்தார், அதற்காக எப்படித் தன்னுடைய ப்ரிய பத்னியையே த்யாகம் செய்தாரென்பது நமக்குத் தெரிந்ததுதானே? இப்போதுள்ள ஜனநாயகவாதிகளில் யாராவது அப்படி ஜன அபிப்ராயத்துக்கு மதிப்புத் தருவார்களா என்று தெரியவில்லை. இதிலிருந்து அக்காலத்தில் ஜனங்களுக்கு ராஜா – ராணியைப் பற்றிக்கூட எவ்வளவு ஸ்வதந்த்ரமாக வாய்விட்டு அபிப்ராயம் சொல்ல உரிமை இருந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. அதுதான் உண்மை ஜனநாயகம்.

ஒரு நாய்கூட ராமரிடம் ந்யாயம் கேட்க நேராகத் தானே வழக்குக் கொடுத்திருப்பதாக உத்தர காண்டத்தில் வருகிறது. மநு தர்மப்படி பரிபாலனம் செய்த மநுநீதிச் சோழன் திருவாரூரிலிருந்து கொண்டு ஆட்சி நடத்திய போது ஒரு மாடு ஆராய்ச்சி மணியை இழுத்துத் தன் கஷ்டத்தை விண்ணப்பித்துக் கொண்டது என்று கேட்டிருக்கிறோம். இப்படித் தங்கள் மனஸிலிருப்பதை எவரும் ராஜாங்கத்தின் உச்சஸ்தானத்துக்குத் தெரிவிக்க இடம் தருவதுதான் ஜனநாயகம்.

ஆனால் இந்த அபிப்ராய ஸ்வதந்த்ரத்துக்கும், அதைச் சொல்லிக்கொள்ளும் ஸ்வதந்த்ரத்துக்கும் அதிகமாக ஜனங்களுக்கு உரிமை கொடுப்பது தேசநலமல்ல ஆனபடியால் நிஜமான ஜனநாயகமும் அல்ல. ஜனங்களுக்கு வித்யாஸம் பார்க்காமல் நல்லது செய்வதற்குத்தான் ஜனநாயகம், ஜனஸமூஹம் முழுதும் சேர்ந்தே அமைந்த தேசத்துக்கு நன்மை செய்வதுதான் ஜனநாயகம் என்றால், அவர்கள் அபிப்ராயத்தை அறிவதோடு நிற்காமல், அந்த அபிப்ராயங்களின் மேல் முடிவு எடுக்கிற தகாத பாரத்தையும் விஷயம் தெரியாத அவர்கள் மேலோ அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விஷயம் தெரியாத ப்ரதிநிதிகளின் மேலோ போடுவது ஜனநாயகமே ஆகாது. இதனால்தான் ஸகல ஜனங்களின் அபிப்ராயங்களையும் ஒளிவு மறைவில்லாமல் தெரிந்துகொண்டபின், முடிவு எடுப்பது என்பதற்கு நிரம்பத் தகுதி வாய்ந்தவர்களை மட்டுமே ராமராஜ்யத்துக்கு, தர்ம ராஜ்யத்துக்கு அடிகோலியவர்கள் துணை கொண்டார்கள்.

முடிவெடுக்கும் நிர்வாஹிகள் உள்பட எவருக்கும் தகுதியே நிர்ணயிக்காமல் அரசியல் நிர்ணயச் சட்டம் என்று ஒன்றைச் செய்து அதில் ஒவ்வொரு விதியாக கான்ஸ்டிட்யுவென்ட் அஸெம்ப்ளியில் பாஸ் செய்துகொண்டிருக்கிற இப்போது நான் செய்யக்கூடியது பழைய முறையை எடுத்துக்காட்டுவதுதான். ‘ராமாயணமா? அந்த த்ரேதாயுகத்து ஸமாசாரம் இப்போது ஸரிப்படாது’ என்று ஒதுக்கி விட்டுப் போகாமலிருக்கத்தான், ‘இது த்ரேதா யுக ஸமாசாரம் மட்டுமில்லை. ஆயிரம் வருஷம் முந்திகூட சரித்ர ஆசிரியர்களெல்லாம் பாராட்டும்படி சிறந்த அரசியலறிவுடன் ஆட்சி நடத்திய சோழர் காலத்திலும் அந்த மாதிரியே ஜனநாயக தத்வம், திறமையான தூய்மையான நிர்வாஹம் என்ற இரண்டையும் எந்த அளவில், எந்த விதத்தில் இணைக்கலாமோ அப்படிச் செய்திருக்கிறார்கள்’ என்று காட்ட ஆசைப்பட்டேன். வெள்ளைகாரர்கள் தங்களுடைய எழுதப்படாத சட்ட சாஸனத்தை (unwritten constitution) ப் பற்றி பெருமைப்படுகிறார்களென்றால், இந்தத் தமிழ் தேசத்தில் பிறந்த நமக்கோ ஆயிரம் வருஷத்துக்கு முன்பே உருவான எழுதப்பட்ட சட்ட சாஸனம்) (written constitution) இருக்கிறது, நன்றாகக் கல்லிலேயே பொறிக்கப்பட்ட சிலா சாஸனமாக இருக்கிறது என்று அதைவிடப் பெருமையாகக் காட்டமுடியும் என்பதற்காகக் கதை சொன்னேன்.

அது பழம் பெருமையாக மட்டும் நின்றுவிடாமல், ஆயிர வருஷத்துக்கு முந்திய சாஸனமே இன்றைய சாஸன கர்த்தர்களுக்கும் வழிகாட்டியாவதற்கு ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தி க்ருபை செய்வாராக!
ravi said…
28.03.2013:
"Gita Shloka (Chapter 2 and Shloka 22)

Sanskrit Version:


वासांसि जीर्णानि यथा विहाय
नवानि गृह्णाति नरोऽपराणि।
तथा शरीराणि विहाय जीर्णा
न्यन्यानि संयाति नवानि देही ।। 2.22 ।।

English Version:

vaasaamsi jiirNaaNi yaThaa vihaaya
navaani grunhaati naroparaaNi |
taThaa sharIraaNi vihaaya jiirNaa
nyanyaani samyaati navaani dehii ||

Shloka Meaning

Just as a man casts off his worn out clothes and puts on new ones so also the self
throws away its worn out bodies and takes other fresh bodies.

Here the bhagawan uses similes to drive his point home.

Krishna likes the body to a garment worn by a man and just as these garments are
changed from time to time, even so the Jiva goes on changing the physical
body birth after birth.

No one grieves when he casts off dirty and torn clothes and puts on other fresh garments.
No one grieves when the autumn withered leaves fall off from the branches.
There is always the reason that the fresh leaves come with the arrival of spring.

The Lord points out that the death is no more than the rejection of the old and decayed body.
The Jiva drops off the decayed body by death and adopts a fresh one. So there is no reason to grieve.

To destroy the past karma by supreme jnana and escape from the cyle of birth and death
is the reward of the highest realisation.

Bodies
------

Here the word is used in plural form bodies. Which means that the man has to pass through
innumerable bodies, birth after birth, so long as he remains ignorant of his real nature.

Worn out
--------

We have to interpret this word as bodies whose karmic force is exhausted.

We have seen people die in child and youth. When the physical body is not supposed to be old or won out.
In such cases, the karmic force for th e particular body is exhausted and it falls of accordingly.

The Vedantic doctrine is that the self remains deathless, passing from one body to another,
according to the force of Karma done with the body. These bodies (upadhis) continue to change
but the rel man, Atma, remains unaffected and challenged.

Jai Shri Krishna 🌺
ravi said…
26.03.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 21)

Sanskrit Version:

वेदाविनाशिनं नित्यं य एनमजमव्ययम्।
कथं स पुरुषः पार्थ कं घातयति हन्ति कम्।।2.21।।


English Version:

vedaavinaashinam nityam
ya yenamajamavyayam |
kaTham sa purushah: paarTha
ka, Ghaatayati hanti kam ||

Shloka Meaning

O Arjuna| He who knows that the the Atma is birthless, deathless, real and imperishable,
whom can be slay or cause to be slain?

The idea is emphasized that since the Atma is eternal the man who knows Him,
cannot slay any one, nor even cause to slay by any means.

Jai Shri Krishna 🌺
ravi said…
*கல்லும் கணிந்ததே*

*ராமா*

வருவாய் நீ என்றே காத்திருந்தேன் ..

வந்த புயல் மழை பொறுத்திருந்தேன்

காலம் ஓடி காற்றில் வாடி காட்டில் தனித்திருந்தேன்

கல் என்றே எனை மிதித்தவர் பலர் ..

துவைத்தவர் பலர் உளி கொண்டு சிதைத்தவர் பலர் ...

கிடைத்த சாபம் படைத்தவனும் மாற்றவில்லை

கொடுத்தவனும் சிந்தை கலங்க வில்லை

காமன் விடும் அம்புக்கு எதிராய் கணை ஏதும் உளதோ ராமா ...

பெண் என்றே எனை களங்கம் சொன்னவர் தன் பங்கு இதில் ஏதும் இல்லை என்றது சரியோ *ராமா*

எப்போ வருவாரோ என்றே ஏங்கி நின்றேன் ராமா

என் சென்னி மட்டும் முதுமை அடையவில்லை

உன் முத்து பாதங்கள் அங்கே பதியவேண்டி

முதல்வனே நானும் ஒரு தாய் என்றே வருவாயோ ...

என் மடியில் கொஞ்சம் துயில் கொள்வாயோ

அதோ அதோ என் ராமன் வந்து விட்டான் ..

என் பாவங்கள் சாபங்கள் ஓடி போயினவே

எடுத்த பாதம்
வைத்த பாதம்
கண்ட பாதம்
கார்குழலால் மேனி செதுக்கியதே

மீண்டும் பிறந்தாள் அகல்யை அங்கே ராமனின் தாயாகவே
👣👣👣👣👣👣👣👣
ravi said…
ஈஷ்வர = தலைவன் - முதலானவன் - இறைவன்

❖ *155 நிரீஷ்வரா* = தனக்கு அப்பாற்பட்ட தலைமை இல்லாதவள்🪷🪷🪷
ravi said…
*அம்மா*

உனக்கும் மேலே ஒருவர் உண்டோ ...

உண்டு என்றால் அதுவும் நீயே அன்றோ *அம்மா*

நிஜம் கண்டு நிழல்கள் நாங்கள் ரீங்காரம் இடுகிறோம்

சுற்றி சுற்றி பறந்தாலும் தூயவளே

சுவைப்பது உன் நாமம் எனும் தேன் ஒன்றையே *அம்மா*

நீரில் தோன்றும் குமிழிகள் நீண்ட நாள் வாழுமோ *அம்மா* ... ?

தொலைவில் தெரியும் கானல் நீர் தாகம் தீர்க்க உதவுமோ *அம்மா*?

உன் துணையின்றி அருள் இன்றி வாழுதல்

நெருப்பில் மலர் தூவி அதில் படுப்பது போல் அன்றோ *அம்மா*

நிஜம் நீயே ..

நிழல் எங்களை மன்னித்தே

நிஜம் வசம் சேர்ப்பாயே *அம்மா*🪷🪷🪷🪷🪷
ravi said…
[28/03, 12:13] Jayaraman Ravikumar: *காமாக்ஷி சரணம், அறம் பொருள் இன்பம் வீடும் பயக்கும்*🥇🥇🥇
[28/03, 12:13] Jayaraman Ravikumar: मरालीनां यानाभ्यसनकलनामूलगुरवे
दरिद्राणां त्राणव्यतिकरसुरोद्यानतरवे ।
तमस्काण्डप्रौढिप्रकटनतिरस्कारपटवे
जनो‌sयं कामाक्ष्याश्चरणनलिनाय स्पृहयते ॥
[28/03, 12:14] Jayaraman Ravikumar: மராலீனாம் யானாப்⁴யஸனகலனாமூலகு³ரவே

த³ரித்³ராணாம் த்ராணவ்யதிகரஸுரோத்³யானதரவே ।

தமஸ்காண்ட³ப்ரௌடி⁴ப்ரகடனதிரஸ்காரபடவே

ஜனோயம் காமாக்ஷ்யாஶ்சரணனலினாய ஸ்ப்ருஹயதே ॥3॥🥇
ravi said…
ஹம்ச பட்சிகளுக்கு நடை சொல்லித்தரும் மூல குரு நீ தானே அம்மா

தரித்திரர்களின் வறுமையை போக்கும் கற்பக விருட்சம்

இருள் கூட்டம் .. எவ்வளவு வேகமாக இருள் பரவினாலும் இருள் நீக்கும் ஒளி உன் சரணம்

அறம் பொருள் இன்பம் மூன்றும் பெறக்கூடிய ஒரே இடம் உன் திருப்பாதங்கள் . 🪷🪷🪷
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 118*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 3
ravi said…
[28/03, 12:01] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 523* 🙏🙏🙏started on 7th Oct 2021

*232 வது திருநாமம்*
[28/03, 12:03] Jayaraman Ravikumar: *232* महेश्वरमहाकल्पमहाताण्डवसाक्षिणी -

*மஹேச்வர மஹாகல்ப மஹா தாண்டவ சாக்ஷிணே.* --

ஊழித்தாண்டவம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பிரபஞ்ச ஆரம்பத்திலும் அப்புறம் ஒவ்வொரு யுக முடிவிலும் பிரளயம் தோன்றி எல்லாம் அழிந்து மீண்டும் புனருத்தாரணம்,
புது யுகம் பிறக்கும்.

அந்த நேரத்தில் அதை விளைவிப்பது ஈஸ்வரனின் சங்கல்பம்.

அந்த நேரத்தில் அவன் அருகே இருப்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை மட்டுமே.

பிரபஞ்சத்தில் சிவனும் சக்தியுமன்றி வேறெதுவும் இல்லாத நிலை அது.

எல்லாமே சிவனும் ஐக்கியமாகி மீண்டும் துவங்கும் நேரம்.

அம்பாள் *காலராத்ரி* என்று ஒரு பெயர் கொண்டவள்.🥇🥇🥇
ravi said…
My answer

*Ramayana Quiz*
*Day 7 (28-03-23)*

Q 31. Name the three women whom Lord Hanuman encounters on his journey to Lanka?

*Surasa* is one of the three women who encounter Hanuman on his journey to Lanka; the other two are the rakshasi *Simhika* and *Lankini* , the guardian goddess of Lanka.

Q 32. Name the one eyed shapeless demon who was killed by Rama & Lakshmana and regains his gandharava form after death and advises Rama to go to Rishyamukha mountain to meet Sugriva.

*Kabanda*

Q 33. Name the mountain on which Rama & Lakshmana were staying after crowning Sugriva as the king of vanaras?

*Malyavanta hill* where Lord Rama and Lakshmana stayed for four months during rainy season after crowning Sugreeva as King of Vanaras..

Hanumar offered the Choodamani given by Mother Sita to Lord Sri Ramar at this place- *Malyavanta hill* .

Q 34. Name the Rakshasha who briefly kidnaps Sita in Dandarkaranya but was over powered and killed by Rama & Lakshmana.

*Virādha* is minor character from the Aranya Kanda of the Ramayana.

He is a rakshasa living in Dandaka forest who briefly kidnaps Sita

He was a celestial Gandharva in his previous birth and became a Rakshasha due to a curse by Kubera.

He had, in a previous life, been a celestial being named *Tumburu* , and had been cursed by Kubera to live as a fearsome monster until he be killed by Rama.

The brothers bury him, and he apparently goes back to his former celestial abode.

Q 35. Name the two asura brothers (who hatched a plan to kill all brahmins) who were killed by Sage Agastya?

*Atapi and Vatapi*

Name the wife of Sage Agastya

*Lopamudra*
ravi said…
[27/03, 17:39] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 116 started on 6th nov

*பாடல் 36 ... நாதா, குமரா நம* 🪷🪷🪷

(சிவபெருமானுக்கு உபதேசித்த பொருள் எது?)

நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?

வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்

பாதா குறமின் பத சேகரனே.👆👏
[27/03, 17:41] Jayaraman Ravikumar: *வேதா முதல் விண்ணவர் ...*

பிரம்ம தேவன் முதலிய தேவர்கள்,

*சூடும் மலர் பாதா* ... தங்கள் தலையில் சூடிக் கொள்ளும்
தாமரைபோன்ற பாதங்களை உடையவனே,

*குற மின் பத சேகரனே ..* . மின்னல் கொடிபோன்ற வள்ளி
பிராட்டியின் பாதங்களை தமது தலையில் சூட்டிக் கொண்டவனே,

*அரனார்* ... சிவ பெருமான்,

*நாதா* ... நாதனே,

*குமரா நம* ... குமரனே போற்றி என உன்னை வணங்கி,

*ஓதாய் என* ... எனக்கு உபதேசி என விளம்ப,

*ஓதியது எப் பொருள் தான்? ...* நீ அவருக்கு உபதேசித்த
பொருள் எது?

(அதை நீ எனக்கு உபதேசித்து அருள் புரிய வேண்டும்).
ravi said…
[27/03, 17:35] Jayaraman Ravikumar: *109. ஸம்மிதாய நமஹ (Sammithaaya namaha)*

வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

ஸமாத்மா *ஸம்மிதஸ்ஸம* : |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[27/03, 17:37] Jayaraman Ravikumar: உடனே அதைக் கயிற்றால் கட்டினான்.

பத்மபாதரின் இருப்பிடத்துக்கு அழைத்து வந்தான்.

“ஐயா! சொன்னபடி மிருகத்துடன் வந்து விட்டேன் பாருங்கள்.

கழுத்துக்கு மேல் சிங்கம், கழுத்துக்குக் கீழே மனிதன்!” என்றான் வேடன்.

பத்மபாதரின் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை.

“எங்கே அப்பா மிருகம்?” என்று கேட்டார்.

“இதோ என் கண்களுக்குத் தெரிகிறதே! உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?” என்றான் வேடன்.
ravi said…
[27/03, 17:25] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*71 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍

ஆரூ4-பக்தி-கு3ண-குஞ்சித-பா4வ-சாப

       யுக்தை: சிவஸ்மரண-பா3ணக3ணை-ரமோகை4: |

நிர்ஜித்ய கில்பி3ஷ-ரிபூன் விஜயீ ஸுதீ4ந்த்3ரஸ்-

       ஸாநந்த3-மாவஹதி ஸுஸ்தி2ர-ராஜலக்ஷ்மீம் ||                         71

எவன் சிறந்த பக்தியென்னும் நாண்கயிற்றினால் வளைக்கப்பட்ட பாவனை யென்ற வில்லில் தொடுக்கப்பட்ட வீணாகாத சிவத் தியானம் என்ற அம்புகளால் தீவினைகளென்கிற பகைவர்களை அழித்து வெற்றி கொள்கிறானோ

அவனே சிறந்த அறிவாளியாகிறான்; என்றும் நிலைத்த (மோக்ஷ) ஸாம்ராஜ்ய ஸம்பத்தை அடைகிறான்.👍👍👍
[27/03, 17:29] Jayaraman Ravikumar: 70 வது ஸ்லோகம் பெரியவா அவர்களுக்கே எழுதிய மாதிரி இருக்கிறது ...

அப்படி ஒரு ஒத்துமை .... சந்திரசேகர் எனும் திருநாமம் இருவருக்கும் பொருந்தும் கணக்கற்ற வரங்களை தருபவர் இருவரே ...

பூஜை பண்ணுவதற்கு மிகவும் சுலபமானவர் இருவரும் பிரசன்ன மூர்த்தி இருவரும் எந்த நேரத்திலும் அனுக்கிரகம் தருபவர்கள்
[27/03, 17:32] Jayaraman Ravikumar: பக்தியின் உச்ச நிலையை அடைதல் ..

உத்தம பக்தி எனும் நாண் கயிற்றால் வில்லை வளைத்து

சிவ சமரணம் எனும் அம்புக்களை கொண்டு அசுத்தம் தனை கொல்ல முடியும் ...

பாவங்கள் அழிந்து முக்தி பெறுகிறான் அப்படிப்பட்ட பக்தன் 🙏
ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை..*

*_✍️ 28, Tuesday, Mar., 2023_*

*🧿''தலைக்குனிவு''.*

https://srimahavishnuinfo.org

*♻️போராடத் துணிந்தவர்களுக்குத் தான் ஒளிமயமான எதிர்காலம் படைக்கப்பட்டு இருக்கின்றது. அத்தனைக்கும் தேவை, 'நான் வாழ வேண்டும், சாதித்துக் காட்ட வேண்டும்' என்ற அந்த வெறி மனதில் இருக்க வேண்டும்..*

*♻️அந்த உந்துதல் உங்களுக்கு எப்போது அதிகம் தேவை தெரியுமா? தலைக்குனிவும், அவமானமும் ஏற்படுகிற போது தான். அதனால் அவமானத்தைச் சேமித்து வைக்க வேண்டும்.*

*♻️அதுதான் வெற்றிக்கான உந்து சக்தி. அவமானத்தைப் போற்ற வேண்டும். அதுதான் உங்கள் லட்சியக் கனவுகளைத் திறக்கும் சாவி.*

*♻️அவமானம் ஒரு தீ.அதை அணைய விடக் கூடாது. ஒவ்வொரு அவமானமும் ஒரு போதிமரம். அதுதான் வெற்றி என்ற கனியைத் தரும்.*

*♻️ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு அரசு அதிகாரி ஒருவர், சில அதிகாரிகள் முன்னிலையில் அவரை குரங்கு மூஞ்சி என்று திட்டி விட்டார்.*

*♻️ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியான பிறகு தன்னைத் திட்டியவரைக் கடுமையாகத் தண்டிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.*

*♻️ஆனால் அதற்கு மாறாக அவருக்கு பல நல்ல பொறுப்புகளைக் கொடுத்தார் லிங்கன்.*

*♻️இதற்கு என்ன காரணம் என்று கேட்க, அவர் என்னை அவமானப்படுத்தியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. எனினும் அது என்னுள் காயத்தை ஏற்படுத்தியது.*

*♻️காயத்தை ஆற்ற என்னை மேலும் தகுதியுள்ளவனாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.*

*♻️அதற்கான முயற்சியைத் தொடங்கினேன். உழைத்தேன். அந்த முயற்சியாலும், உழைப்பாலும் இந்தப் பதவியை இப்போது அடைந்து உள்ளேன்.*

*♻️இந்தப் பதவியை அடைய அவரும் ஒரு காரணம். என் நன்றிக் கடனை அவருக்குச் செலுத்த ஆசைப்பட்டு இந்தக் கூடுதல் பதவிகளை வழங்கினேன் என்றார்.*

*😎ஆம்.,நண்பர்களே..,*

*🏵️எவ்வளவு பெரிய கரிய இருட்டையும் ஒரு சின்ன விளக்கின் வெளிச்சம் நீக்கி விடும். அந்த விளக்கின் வீரியத்தை நாம் கொள்ள வேண்டும்.*

*இனியும் அவமானத்தைக் கண்டு ஏன் சோர்ந்து போக வேண்டும்?*

*⚽சாதனைகளுக்கு எண்ணங்கள் தான் எரிபொருள். அவமானங்களை சேமியுங்கள். அதுவும் வெற்றிக்கான மூலதனம் தான்..*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
👆👆👆👆👆👆👆👆
சில்பி”யின் மனைவி பரமாச்சார்யரின் பக்தை. உடல் உபாதையால் காஞ்சிக்கு செல்லமுடியாத நிலையில் கணவனை கேட்டாள் :
”எனக்கு பெரியவா படம் ஒன்று நீங்க வரைந்து கொடுங்கோ, அதை பார்த்து பூஜை பண்ணிண்டிருக்கேன்”
1956ல் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்ய பெரியவாளின் படம் வரைய அனுமதி கேட்டார். முதல் முறையாக மஹா பெரியவாளை சந்திக்க ”சில்பி” க்கு அனுமதி கொடுத்தார் பெரியவர்.
”ராத்திரி வா எல்லா வேலையும் முடிஞ்சப்புறம் ”
பெரியவாளை படம் வரைவது கடினம். ”கொஞ்சம் அசையாமல் அப்படி இருங்கள் என்று அவரிடம் சொல்லமுடியுமா?” எப்படியோ சில்பி அவரை ”பிடித்து” விட்டார். அதை இணைத்திருக்கிறேன்.
அந்த இருட்டறையில் ஒரு எண்ணெய் தீபம் மட்டும் ஒளி வீசியது. எதிரே ஞான ஒளி அமர்ந்திருந்தது. அந்த ஞானப் பிழம்பின் கண்களில் ஆன்ம ஒளி. பயபக்தியோடு கைகள் சற்று பக்தியால் மரியாதையால் நடுங்க சில்பி கண்ணால் அவரை படம் பிடித்து மனதில் இருத்திக் கொண்டார்.
”ஸ்ரீநிவாஸா, நீ பல ஜென்மங்களில் ஈஸ்வரனை பூஜித்தவன். சிறந்த ஸ்தபதியாக சில்பியாக பல கோவில்களை, மூர்த்திகளை கல்லில் வடித்தவன். சாதாரண கல்லை தெய்வீகம் பொருந்திய தெய்வங்களாக மாற்றிய புண்யசாலி. இதுதான் உனக்கு கடைசி ஜென்மம். இனி பிறவி கிடையாது தெரியுமோ உனக்கு? இனிமே தெய்வங்களைத் தவிர வேறே எதையும் படம் எழுத மாட்டேன் என்று விரதமாக வைத்துக்கொள். நீ சில்ப சாஸ்திரம், சிலா சாஸ்திரம், ஆகமம், எல்லாம் தெரிந்தவன். புதுசா ஒண்ணும் தெரிஞ்சுக்கவேண்டாம். நாளைக்காலை சூரியன் உதயம் ஆனதிலிருந்து முழு மூச்சா ஒவ்வொரு வீட்டிலேயும்.

பகவானை, கோவில்களை, காகிதத்தில் கொண்டு சேர்க்கிற வேலை உனக்கு. நீ வரையும் ஆலயங்கள், மூர்த்திகள் சித்திரம் தத்ரூபமாக இருக்கு. நீ நன்னா இருப்பே !”
மகா பெரியவா ஆசிர்வதித்தார். சில்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.
1953ல் மஹா பெரியவாளை காஞ்சிபுரத்தில் பார்த்தது முதல் அவர் முற்றிலும் மாறிவிட்டார். பெரியவாளுக்கு தெரியாதா யாராலே என்ன ஆகணும் என்று!
பெரியவாளை தனது இல்லத்துக்கு அழைத்து பாத பூஜை பண்ண சில்பிக்கு ஒரு ஆசை. சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம். பெரியவாளை வேண்டிக்கொண்டே இருந்தவர்க்கு ”சரி அதுக்கென்ன அப்படியே ஆகட்டும்” என்று சிரித்து தலையசைத்தார் பெரியவா.
ஒரு நாள் அதிகாலையில் சாந்தோம் கடற்கரையில் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு, பெரியவா மைலாப்பூர் கச்சேரி ரோடில் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென்று அருண்டேல் ரோடு திருப்பத்தில் நின்று, ‘இங்கேதானே ‘சில்பி’ வீடு எங்கியோ இருக்கிறது?’ என்று கேட்க அதை உறுதி செய்து கொள்ள, அந்தத் தெருவில் திரும்பி, ‘அவன் வீடு எங்கேயிருக்கு ? விசாரி ‘ என்று கூறவே, பரணீதரனும் மற்றவர்களும் ஒவ்வொரு வீடாக சென்று விசாரித்தனர் .
.
அதற்குள் பெரியவா ஒரு வீட்டுக்கு முன் வந்து நின்று ‘இதுவா பாரு ?’ என்றதும், உள்ளே சென்று விசாரித்ததில்
ஆம். அதுவேதான்! அப்போது ‘சில்பி’யின் குடும்பத்தினர் மட்டுமே வீட்டில் இருந்தனர். ‘சில்பி’ எங்கோ கோவில்களுக்கு படம் வரைய வெளியூர் சென்றிருந்தார்.
சில்பியின் வயதான அம்மாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பெரியவா நேரே பூஜையறைக்குச் சென்றார். பின்னர், கூடத்தில் வந்து அங்கு மாட்டியிருந்த படங்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்து விட்டு புறப்பட்டார். அப்போது ‘சில்பி’யின் அம்மா, ‘எனக்கு ஆஸ்துமா தொந்தரவு அதிகமா இருக்கு. ரொம்பக் கஷ்டப்படறேன்’ என்று கூறினார்.
‘தினம் இரண்டு வில்வ தளம் சாப்பிட்டுண்டு வாங்கோ’ என்று பெரியவா வைத்தியம் சொன்னார்.
சில்பி ஊரிலிருந்து திரும்பியதும், ‘பெரியவா வீட்டுக்கு வந்த போது தாம் இல்லாமல் போய்விட்டோமே’ என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். பெரியவாளைத்தரிசித்தபோது,
”பெரியவா, இந்த சிறியேன் கிரகத்துக்கு வந்திருந்தீர்கள் என்று கேட்டு பரம சந்தோஷம் எனக்கு. ஆனால் எனக்கு பாக்யம் இல்லை நான் வீட்டிலே இல்லாம போய்ட்டேனே ”
அப்போது பெரியவா சிரித்துக் கொண்டே, ‘நீ ஆத்துக்கு வரணும், ஆத்துக்கு வரணும்’ னுதானேடா கூப்பிட்டுண்டிருந்தே. ”நான்” ஆத்திலே இருக்கறப்ப வாங்கன்னு கூப்பிட நீ இல்லையே ’ என்றார்.

ஓவியர் சில்பி வரைந்த ஓவியம் இது தான்....
👆👆👆
ravi said…
🌹🌺 "A simple story explaining about Sri Krishna devotee who asked "I also want to see Kannan who cuts threads with baby hands" 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 An brahmin used to go from house to house begging for food singing 11th Bhava of Krishna bhajan everyday ,,,,One day no one gave him alms but he was walking and singing Krishna bhajan while hungry.

🌺 Then an 8 year old girl held his hand and called him Swami ,,,,brahmin stood and looked at the girl who was black but beautiful ,,,

ravi said…
There she had changed and sewn the torn clothes beautifully,,,,She called him Swami with a blooming face,,,,,,,brahmin asked the girl, what do you want? Who are you?

🌺That girl replied ---Swami I live in a hut nearby,,I enjoy listening to your Kannan song every day and I have memorized your entire song.

🌺So I am calling you as my Guru. She called him lovingly asking if you are coming to my house for dinner,,brahmin who was hungry also mesmerized by her kind words went to her house for dinner.,,

🌺 (The girl's house----The small hut was clean, there was a loom inside the house, the girl's mother and father were weavers, they had gone to the market at that time)

🌺The girl who brought brahmin inside the house washed his feet with water and made him sit on a board, then took the milk and fruit she had kept and gave it to him.

🌺Having dined blissfully in her loving hospitality, he then looked around the house with his eyes,,a big loom,,a clean and waxed floor,,,a small loom by the back window,,,

🌺Near it-- he saw some intricate threads lying in the garbage,,,, while looking at that, he looked at the little girl and asked, why have you kept so many chopped threads like garbage in this clean house?

🌺 To that the little girl said oh Swami those are not garbage threads but all the threads that Kannan had cut and thrown away with his baby hands.

🌺the girl said--Swami I am a poor girl and I have no friends to play with, so to pass the time I will sing the Kannan song that you sang every day,- I will go around this small wheel of mine--

🌺Then after listening to that song, Kannan will come here as a small child, listening to my song and enjoying it, he will cut these threads with his small hands and throw them away, he will disappear when I finish singing----

🌺 surprised brshmin thought, Kannan, who had not come to the song I sang for so long, came to this little girls song. Thinking to see it by himself, he said, will you sing rotating the wheel for me.

🌺 I also want to see Kannan, who is cutting threads with his baby fingers,,,,,,,The girl also went near her wheel and started singing in a sweet voice,,,,she Screamed in a moment.

🌺she said, Swami Kannan has came, see,,,,brahmin replied, where? my eyes did not see anyone,,The girl asked Kannan why you are not visible to my guru's eyes,,,

🌺for that Kannan said, friend, your Gurunath sings my kirtans only for his stomach survival,,there is no devotion,,,sin,,love... then why should I be seen by him.,

🌺I will get him the food every day as he wants,,that is enough for him, you sing,Kannan looked at the little girl and said. the little girl told brahmin exactly what Kannan said.,,

🌺 Hearing that, brahmin said to the girl, "I am your guru, you will make me see Kannan." Hearing what he said, Maya Kannan replied, friend you sing, I will enjoy it and cut these threads and throw them away.

🌺ask him to Look at that and tell him to enjoy,,,,This is also according to what you asked---I am doing this because he is your guru, Kannan said brahmin after hearing this asked the girl to sing while crying

🌺 The little girl sang and he saw the threads falling by themselves fell down and bowed down. He greeted the little girl and went down the street. He went on singing now his hands did not begged for food

🌺My God Shri Krishna...Narasimha...Don't make me ask for anything anymore Just make me surrender to you with true love and that is enough --

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -28.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-1

மூலம்:

சீர்மகள் கேள்வனும், நான்முகத் தேவும், தினம்பரவும்
கார்மகள் பாகத் தமர்ந்தான் குருபரன் காவல்கண்டீர்!
நீர்மகள் ஆடை யெனச்சூழ வாழும் நிறைபொறுமைப்
பார்மகள் சென்னிக் கலங்கார மான் பழனிவெற்பே (1).

பதப்பிரிவு:

சீர்மகள் கேள்வனும், நான்முகத் தேவும், தினம் பரவும்
கார்மகள் பாகத்து அமர்ந்தான் குருபரன் காவல் கண்டீர்!
நீர்மகள் ஆடை எனச் சூழ வாழும் நிறை பொறுமைப்
பார்மகள் சென்னிக்கு அலங்காரமான பழனி வெற்பே!! (1).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

சீர்மகள் கேள்வன்- திருமகள் நாயகனான திருமால்;
கார்மகள் -உமையவள்;
நீர்மகள்- கங்கை;
பார்மகள்- பூமிதேவி/பூமாதேவி;

சீர்மகள் கேள்வன், அதாவது, திருமகள் நாயகனான திருமாலும், நான்முகத் தேவு ஆன பிரம்மாவும், தினம் போற்றித் துதித்துப் பரவும் கார்மகள் ஆன உமையவள் பாகத்து அமர்ந்தான் ஆன சிவபெருமானுக்கே குருபரன் ஆன சிவகுருநாதன் ஆட்சி செய்யும் தலம், நீர்மகள் ஆன கங்கையானக் கடலை உடையாய் உடுத்தியுள்ள, நிறைந்த பொறுமையின் சிகரமான பூமிதேவியின் சிரசுக்கு அணி செய்யும் அலங்காரமான, அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை எனக் கொள்க! அப்பழனி மலையே எமக்கு என்றும் உற்ற துணை மற்றும் காவல் எனக் கொள்க!

உயிருக்குக் காவல் மா பழனி வெற்பு! எத்துணை முறை கண்டாலும் ஆவல் தீருமோ? செப்பு!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம்

7.தஸ்யோத்தரே ஸமீரண
யோஜந தூரே தரங்கிதச் சாய:
கடயது முதம் த்விதீயோ
கண்டாஸ்வந ஸார நிர்மித: ஸால:

(மேருவின் தெற்கில் உலகங்களனைத்தும் உள்ளன. உலகிலிருந்து மேருவினுள் நுழைபவன் வடக்கு நோக்கிச்
செல்கிறான்.) அதனுள்
இடைவெளிவிட்டு வடக்கே
ஏழுயோஜனை நிழலைப் பரப்புகிற வெண்கலத்தாலான இரண்டாவது கோட்டை உள்ளது
அது மகிழ்ச்சியைத் தரட்டும். (7)
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

8.உபயோரந்தர ஸீமன்யுத்தாம ப்ரமர ரஞ்ஜிதோ தாரம் | உபவனமுபாஸ்மஹே வயம்
ஊரீக்ருத மந்தமாருத ஸ்யந்தம் ||

இவ் வெண்கல இரும்பி கோட்டைகளின் நடுவில் ஸ்வதந்திரமாக திரிந்து கொண்டிருக்கும்
வண்டுகளின் ரீங்காரத்தால் இனியதும் மென்காற்று எங்கும் பரவி இதமாயிருப்பதுமான
பூங்காவை வழிபடுவோம்.(8)
ravi said…
*ராமா*

காகம் நான் ..

கண்ட இடத்தில் உண்பவன் நான் மேனி உன் போல் கருத்தவன் ...

*கா கா* என்றே அன்னை கலைவானியையும் காமாக்ஷியையும் தினம் நினைப்பவன் நான்

சொந்தம் பந்தம் பங்கம் காணா உறவு காண்போம் .

சுழலும் உலகில் என்றும் சுழலா மனம் கொண்டவர்கள் நாங்கள் ..

அசுத்தம் தின்று சுத்தம் தருபவர் நாங்கள்

உன்போல் அதர்மம் அழித்து தர்மம் காப்பது போல்

*ராமா* தவறு செய்தான் முன்னோர் ஒருவன்
ஒருநாள்

என் குல சாபம் இன்னும் மறையவில்லையே *ராமா* ...

தர்பை எடுத்து பிரம்மாஸ்திரம் விடுத்தாய் ...

பிரம்மம் நீயே என்றே உன் திருவடி சேர்ந்தபின்

ஓர் கண் எடுத்தே கருணை புரிந்தாய் ...

உன் நாமம் தினம் சொல்லும் நாங்கள் ஒரு கண் இன்றி இரவில் இருள் சூழ வாழ்கிறோம் ...

உன் தண்டனை இன்னும் தொடருமோ *ராமா* ...

கிளி போல் கூண்டில் அடைப்பதில்லை .

பேச வாயில் சுட்ட பூண்டையும் சிவந்த மிளகாயையும் பாவம் வைப்பார்கள் கிளிக்கே பேச சொல்லி 🦜

உன் நாமம் நாங்கள் சொல்வதால் தர்ப்பணம் செய்யும் அனைவரும் கூப்பிட்டு கொடுப்பார் அன்னம் அதை ...

திருநள்ளாறு செல்வோர் அனைவரும் த்ருப்தியாய் எங்களை சேவிப்பார் ..

இத்தனை வரம் யார் பெற்றார் *ராமா* ..

உன் நாமம் சொல்வோரே அன்றோ

ஒர் கண் போயினும் ஒருகால் மரியுனும் உன் கால் பதியும் நேரம் வந்திடுமே ..

அதுவரை தொடர்ந்து சொல்வோம் *கா கா* வென்றே தினமும் *ராமா*
👣👣👣👣👣👣👣👣
ravi said…
சாம்பேய கௌரார்த சரீரகாயை
கர்பூர கௌரார்த சரீரகாய
தம்மில்லகாயை ச ஜ்டாதராய
நம:சிவாயை ச நம:சிவாய

கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை
சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய
க்ருதஸ்மராயை விக்ருதய்மராய
நம:சிவாயை ச நம:சிவாய

ஜணத் க்வணத் கங்கண நூபுராயை
பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய
ஹேமாங்கதாயை புஜகாங்கதாய
நம:சிவாயை ச நம:சிவாய

விசால நீலோத்பல லோசனாயை
விகாஸி பங்கேருஹ லோசனாய
ஸமேக்ஷனாயை விஷமேக்ஷணாய
நம:சிவாயை ச நம:சிவாய

மந்தார மாலா கலிதாலகாயை
கபால மாலாங்கித கந்தராய
திவ்யாம்பராயை ச திகம்பராய
நம:சிவாயை ச நம:சிவாய

அம்போதர ச்யாமல குந்தலாயை
தடித் ப்ரபா தாம்ரஜடாதராய
நிரீச்வராயை நிகலேச்வராய
நம:சிவாயை ச நம:சிவாய

ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய காயை
ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய
ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே
நம:சிவாயை ச நம:சிவாய

ப்ரதீப்த ரத்னோஜ்வல குண்டலாயை
ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய
சிவான்விதாயை ச சிவான்விதாய
நம:சிவாயை ச நம:சிவாய

ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம் யோ
பக்த்யா ஸ மான்யோ புவி தீர்கஜீவீ
ப்ராப்னோதி ஸெளபாக்ய மனந்தகாலம்

ஆக்கம்: ஆதி சங்கரர்
ravi said…
[29/03, 20:44] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 117 started on 6th nov

*பாடல் 36 ... நாதா, குமரா நம* 🪷🪷🪷

(சிவபெருமானுக்கு உபதேசித்த பொருள் எது?)

நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?

வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்

பாதா குறமின் பத சேகரனே.👆👏
[29/03, 20:46] Jayaraman Ravikumar: வள்ளிப் பிராட்டியார் மேற் கொண்ட தீவிர அன்பு நெறி, வள்ளி
சன்மார்க்கம் எனப்படுகிறது. சிவனாருக்குக் கிடைத்த இந்த
விளக்கமே தனக்கும் உபதேசிக்கப்பட்டது. இதை, 'கின்னம் குறிச்சி .. '
எனத் தொடங்கும் 24ம் அலங்காரத்தில் குறிப்பிடுகிறார்.

தனது சுற்றத்தாரை எல்லாம் விட்டு நீங்கி இதயமாகிய பரண் மீது
நின்றுகொண்டு,

காம குரோதாதிகளாகிய பறவைகள் வந்து தனது
பக்திப் பயிரை பறித்துப் போகாத வண்ணம், நாவாகிய கவுணில்
முருகா முருகா' எனும் சொற்களாகிய கற்களை எறிந்து அந்தப்
பறவைகளை ஓட்டி, தவம் செய்து வந்தாள் வள்ளி.

முருகன் தானே
வலிய வந்து ஆட்கொண்டான். இதுவே வள்ளி சன்மார்க்கம்.🥇🥇🥇
ravi said…
[29/03, 20:17] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*72வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
[29/03, 20:17] Jayaraman Ravikumar: த்4யானாஞ்ஜனேன ஸமவேக்ஷய தம்: ப்ரதே3சம்

       பி4த்வா மஹாப3லிபி4-ரீச்வரநாம-மந்த்ரை: |

தி3வ்யாச்ரிதம் பு4ஜக3 பூ4ஷண-முத்3வஹந்தி

       யே பாத3பத்3ம-மிஹ தே சிவ தே க்ருதார்தா2: ||
ravi said…
ஏ பரமேஸ்வரா ! கண்கள் மீது மை தடவி பலர் புதையல் எங்கிருக்கிறது என்று தேடுவார்கள் ?

உண்மையான புதையல் எது தெரியுமா ?


உன் திருவடிகளான பத்ம நிதியை சுற்றி பாம்புகள் உள்ளது ... அந்த புதையலை எப்படி எடுப்பது ?

சிவ ஞானம் எனும் மையை உன் கண்களில் தடவிக்கொள் ... சிவ நாமத்தை சொல்லிக்கொண்டே இருந்தால் சுற்றி உள்ள எல்லா பாம்புகளும் பூதங்களும் விலகி போகும் ..

ஈஸ்வர நாமம் எனும் பெரும் பலியை புதையலை காக்கும் நாகங்களுக்கும் பூதங்களுக்கும் கொடுத்து

விலை மதிக்க முடியாத முப்பது முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் கந்தர்வர்களும் அயனும் திருமாலும் வணங்கும் பாத நிதியை நீ எடுத்துக்கொள்ளலாம் ... பூமியில் உள்ள புதையல் அழியக்கூடியது ஆனால் இந்த பத்ம நிதி என்றும் அழியாது விலை மதிக்க முடியாதது ..

மூகபஞ்சதீ யில் பாதாரவிந்த சதகத்தில் 25வது ஸ்லோகம் இதே கருத்தை சொல்கிறது 🥇🥇🥇
ravi said…
[29/03, 20:15] Jayaraman Ravikumar: 109
வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

ஸமாத்மா *ஸம்மிதஸ்ஸம* : |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[29/03, 20:16] Jayaraman Ravikumar: ஒரு வேடனுக்கு இருக்கும் நம்பிக்கை வேதம் கற்ற தனக்கு இல்லையே என எண்ணி வருந்தினார் பத்மபாதர்.

இந்தச் சரித்திரத்தின் மூலமாகத், திருமால், தன் மேல் திடமான நம்பிக்கை கொண்ட பக்தர்கள்,
மேதா விலாசமில்லாத பாமரர்களாக இருந்தாலும் கூட, அவர்களுக்கும் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் காட்டுகிறார்,

அவர்களின் பக்திக்குக் கட்டுப்படுகிறார் என்பது புரிகிறது.
அதனால் அவர் ‘ *ஸம்மித* :’என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் *109* -வது திருநாமம்.
“ *ஸம்மிதாய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பக்திக்குக் கட்டுப்பட்டு எம்பெருமான் தன்னை முழுமையாகக் காட்டியருளுவான்.🪷🪷🪷
ravi said…
எடமலைப்பட்டி புதூர், நெல்லை மாவட்டத்தில் உள்ளது. அங்கு செல்வராணி என்ற பெண்மணியின் வீட்டில் திருவாசகம் முற்றோதல் இன்று (27-3-2023) நடைபெற்றது. மாணிக்கவாசகரின் "அச்சோப் பதிகம்" கூறப்பட்டது. அதன் கடைசி பாடல் (பத்தி) "செம்மை நலம் அறியாத . . ." பாடலைப் பாடும்போது அந்த அற்புதம் நிகழ்ந்தது. எம்பெருமான் இடது கையில் உண்மையாகவே ஒரு ஜோதி தோன்றியது. தொடர்ந்து அது எரிந்தது. ஆனால் படத்தில் உள்ள நடராஜருக்கு ஒன்றும் ஆகவில்லை. எரியவில்லை. இந்த விஞ்ஞான காலத்தில் இதை நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் நடந்த சம்பவம் உண்மை. அனைவரும் பார்த்தது. நீங்களும் பாருங்கள்.
ravi said…
[29/03, 12:51] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 119*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 4
[29/03, 12:52] Jayaraman Ravikumar: வஹன்தீ ஸைன்தூ³ரீம் ஸரணிமவனம்ராமரபுறீ-

புரன்த்⁴ரீஸீமன்தே கவிகமலபா³லார்கஸுஷமா ।

த்ரயீஸீமன்தின்யா: ஸ்தனதடனிசோலாருணபடீ
விபா⁴ன்தீ காமாக்ஷ்யா:
பத³னலினகான்திர்விஜயதே ॥4॥
ravi said…
அருமையான ஸ்லோகம்

எல்லா தேவஸ்திரீகளும் தங்கள் மனோரதம் நிறைவேறும் பொருட்டு தங்கள் தலைகள் அம்பாள் பாதங்களில் படும் படி வந்து வணங்கும் போது பாதங்களின் சிவந்த காந்தியானது அவர்களுடைய வகுடுகளில் எப்பொழுதும் மங்களார்த்தமாக தடவப்படும் சிந்தூரம் போல் இருக்கிறது

பாலசூரியனைக் கண்டு தாமரைகள் மலர்வது போல் அம்பாளின் பாதங்களை நினைத்ததும் கவிகளின் உள்ளங்களும் ஞானமும் மலர்கின்றன ...

*த்ரயீ- ரிக்* என்று பத்ய ரூபமாயும் , யஜூஸ் என்ற கத்ய ரூமாயும் , ஸாம என்று கீதரூபமாயுள்ள மூன்று வேதங்களும் இங்கே *த்ரீயி* எனப்படுகின்றன

அம்பாளின் பாதங்களை அண்டினால் வேதங்களுடைய பரம போக்யமான அர்த்தங்களும் தெள்ளென புலப்படும் 🥇🥇🥇
ravi said…
[29/03, 12:49] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 522* 🙏🙏🙏started on 7th Oct 2021

*233 வது திருநாமம்*
[29/03, 12:50] Jayaraman Ravikumar: *233 महाकामेशमहिषी - மஹாகாமேச மஹிஷீ* -

சர்வமும் மீண்டும் புத்துயிர் பெற உதவுபவள் காமேஸ்வரி, பரமேஸ்வர காமேஸ்வர பத்னி.👍👍👍
ravi said…
*Ramayana Quiz*

*Day 8 (29-03-23)*

Q 36. Name the asura who Challenged Vali but hid himself inside a cave and Vaali killed him after a long battle.


Q 37. Name the celestial nymph who was the caretaker of a cave in which Hanuman,Angada & others were trapped while looking for food & water during their search for Sita.


Q 38. Name the Rakshashi who was guarding SIta in Ashok Vatika and who had a dream that Sita would unite with Rama after his victory over Ravana.

Q 39. Name the demon warrior ( son of Ravana’s military commander) who was sent to fight Hanuman by Ravana in Ashok Vatika but was killed by Hanuman. Name Ravana’s military commander .


Q 40. After killing a lot of demons, Hanuman was finally subdued and was taken to the court of Ravana. Name the missile which was used and who shot it to subdue Hanuman?
ravi said…
*ராமா*

காகம் நான் ..

கண்ட இடத்தில் உண்பவன் நான் மேனி உன் போல் கருத்தவன் ...

*கா கா* என்றே அன்னை கலைவானியையும் காமாக்ஷியையும் தினம் நினைப்பவன் நான்

சொந்தம் பந்தம் பங்கம் காணா உறவு காண்போம் .

சுழலும் உலகில் என்றும் சுழலா மனம் கொண்டவர்கள் நாங்கள் ..

அசுத்தம் தின்று சுத்தம் தருபவர் நாங்கள்

உன்போல் அதர்மம் அழித்து தர்மம் காப்பது போல்

*ராமா* தவறு செய்தான் முன்னோர் ஒருவன்
ஒருநாள்

என் குல சாபம் இன்னும் மறையவில்லையே *ராமா* ...

தர்பை எடுத்து பிரம்மாஸ்திரம் விடுத்தாய் ...

பிரம்மம் நீயே என்றே உன் திருவடி சேர்ந்தபின்

ஓர் கண் எடுத்தே கருணை புரிந்தாய் ...

உன் நாமம் தினம் சொல்லும் நாங்கள் ஒரு கண் இன்றி இரவில் இருள் சூழ வாழ்கிறோம் ...

உன் தண்டனை இன்னும் தொடருமோ *ராமா* ...

கிளி போல் கூண்டில் அடைப்பதில்லை .

பேச வாயில் சுட்ட பூண்டையும் சிவந்த மிளகாயையும் பாவம் வைப்பார்கள் கிளிக்கே பேச சொல்லி 🦜

உன் நாமம் நாங்கள் சொல்வதால் தர்ப்பணம் செய்யும் அனைவரும் கூப்பிட்டு கொடுப்பார் அன்னம் அதை ...

திருநள்ளாறு செல்வோர் அனைவரும் த்ருப்தியாய் எங்களை சேவிப்பார் ..

இத்தனை வரம் யார் பெற்றார் *ராமா* ..

உன் நாமம் சொல்வோரே அன்றோ

ஒர் கண் போயினும் ஒருகால் மரியுனும் உன் கால் பதியும் நேரம் வந்திடுமே ..

அதுவரை தொடர்ந்து சொல்வோம் *கா கா* வென்றே தினமும் *ராமா*
👣👣👣👣👣👣👣👣
ravi said…
🌹🌺" *பரந்தாமா* .... ‘ *தாங்கள் உலகைக் காக்க மேற்கொண்ட அனைத்து அவதாரங்களையும் எனக்கு காட்டி அருள வேண்டும்’* *என* *வேண்டிய மகரிஷி* .. *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹கலியுகத்தின் தொடக்கத்தில், சடமர்ஷனர் என்ற மகரிஷி வடநாட்டில் தவமிருந்து வந்தார்.

🌺ஒரு கட்டத்தில் அப்பகுதி முழுவதும் அமைதி குலைந்து, போர்ச்சூழலும் அதர்மமும் தலைதூக்கியது.

🌺எனவே அந்த மகரிஷி அமைதி வேண்டி தெற்கு திசை நோக்கி வந்தார்.
இப்போதைய விழுப்புரம் அருகில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் பஞ்ச கிருஷ்ண ஆரண்யம் எனும் வனத்துக்கு வந்தார் மகரிஷி.

🌺அப்போது நீர் வற்றியிருந்த கருட நதியைக் கண்டார்.
நீரின்றி வெப்ப மணல் எதிரொலித்து தகித்துச் சுட்டது.

🌺இந்த வெப்பம் தாளாமல் தவித்தார்.
அந்த நேரத்தில் தென்கரை ஓரமாக நீரூற்று தோன்றியது.
அதில் தன் காலை நனைத்து வெப்பத்தைத் தணித்துக் கொண்டார் சடமர்ஷன மகரிஷி.

🌺அதன் பாதையிலேயே பயணத்தைத் தொடர்ந்தார். அந்தப் பாதையானது, தில்லைவனத்தின் வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது.

🌺அங்கே சென்ற மகரிஷிக்கு ஆனந்தமும் அமைதியும் உள்ளே நிலவியது. அந்த இடம் எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார்.

🌺தவத்தால் மகிழ்ந்த திருமால், ஸ்ரீலட்சுமிதேவியோடு மகரிஷிக்கு காட்சி கொடுத்தார்.

🌺அதில் மகிழ்ந்த முனிவர், பரந்தாமா.... ‘தாங்கள் உலகைக் காக்க மேற்கொண்ட அனைத்து அவதாரங்களையும் எனக்கு காட்டி அருள வேண்டும்’ என நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்து வேண்டினார்.

🌺மகரிஷி கேட்டுக்கொண்டபடி மகாவிஷ்ணுவும் அவ்வாறே காட்சி தந்து அருளினார்.

🌺பின்னர் மகரிஷி, ‘தாங்கள் இந்த திருத்தலத்தில் நின்ற கோலத்திலும், கிடந்த கோலத்திலும் நிரந்தரமாய் தங்கியிருந்து, பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அளித்து அருள் செய்ய வேண்டும்’ என்று பணிந்தார்.

🌺அதன்படியே வரமளித்த பெருமாள், இங்குள்ள ஆலயத்தில் ஸ்ரீருக்மிணி- ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபாலராகவும், ஆதிசேஷன் பாம்பணையில் பள்ளி கொண்ட ராமராகவும் காட்சி தருகிறார்.

🌺ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே...சஹாஸ்ரநாம தத்துல்யம் ராமநாமவரானனே

🌺சிறப்பு வாய்ந்த இந்த ராம மந்திரத்தை மனனம் செய்யவும் மனம் ஒருமித்து லயிக்கவும் ஒரு சிறப்பான கோவில் உண்டு என்றால் அது வேங்கடாம்பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீவேணுகோபால சுவாமி மற்றும் ஸ்ரீஅனந்தசயனராமர் திருக்கோயில் என்பதில் ஐயமில்லை.

🌺இத்திருக்கோவிலில்
ஸ்ரீராமர் மிகவும் அழகாக மலர்ந்த முகத்துடன் ஏழு தலை ஆதிசேஷன்
மீது சயன கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*அம்மா* ...

புலன்கள் புலன்விசாரனை செய்யுமோ உன்னிடம் *அம்மா*

இந்திரியங்கள் ஆட்சி செய்யுமோ உன் சிம்மாசனத்தில் *அம்மா*

ஐம் பெரும் கள்வர் நுழைவாரரோ உன் நெஞ்சம் அதில் *அம்மா*

பெரும் உடல் தனை சுமந்து

சிறு குடல் தனில் அன்னம் இட்டு

நாவிற்கு நான்சுவை தந்து அடிமையாக்கி அரசாள்கிறோம் ...

சுற்றி நிற்கும் எதிரிகள் இந்திரியங்கள் ,

ஐம்பெரும் கள்வர் புலன்கள் எல்லாம் எங்களை ஏப்பம் விடும் நாள் எந்நாளோ ...?

*அம்மா* ... *நிராகா* ... உன் வைராக்கியம் அதில் கொஞ்சம் பிச்சிப் போட்டால் கச்சி ஏகாம்பரனும் மகிழ்வானே ..

அவன் உச்சி குளிரும் படி செய்வாயோ ...

உள்ளமெல்லாம் நிறைவாயோ 🥇🥇🥇
ravi said…
ராக = ஆசைகள் - அபிலாஷைகள் - புலனின்பத்திற்கு உரியவை

*❖ 156 நிராகா =* புலன்களின் இச்சைகளுக்கு கட்டுப்படாதவள்
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”

(கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14)

ஸ்ரீ ராமநவமியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் கம்பராமாயணத்தில் ஸ்ரீ ராமாவதார கட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பாக்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

வேய்புனர் பூசமும் விண்ணுளோர்களும்

தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே

சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்

வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும்

நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத்

தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஓங்கவே.

ஒருபகல் உலகெலாம் உதரத்துட் பொதிந்

தருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக்

கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்

திருவுறப் பயந்தனள் திறங்ககொள் கோசலை.

(கம்ப ராமாயணம் : பாலகாண்டம் – திரு அவதாரப் படலம்)

இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நிதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அக்ஷரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றி வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிஷம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்ப ராமாயணத்தில்) ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக உள்ள கீழ்க்காணும் பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிஷம் பஜனை செய்து, ஊர்ப் பொதுச் செலவில் ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.

மங்கள கீதம் பாட

மறையொலி முழங்க வல்வாய்ச்

சங்கினம் குமுறப் பாண்டில்

தண்ணுமை யொப்பத் தாவில்

பொங்குபல் லியங்கள் ஆர்ப்பப்

பூமழை பொழிய விண்ணோர்

எங்கள் நாயகனை வெவ்வேறு

எதிர் அபிடேகஞ் செய்தார்.

மாதவர் மறைவ வாளர்

மந்திரக் கிழவர் முற்று

மூதறி வாளர் உள்ளஞ்

சான்றவர் முதனீ ராட்டச்

சோதியான மகனு மற்றைத்

துணைவரும் அனுமன் தானும்

தீதிலா இலங்கை வேந்தும் – பின்

அபிடேகஞ் செய்தார்.

சித்தமொத் தனன்என் றோதுந்

திருநகர்ச் செல்வ மென்ன

உத்தமத் தொருவன் சென்னி

விளங்கிய உயர்பொன் மௌலி

ஒத்துமெய்க் குவமை கூர

ஒங்குமூ வுலகத் தோர்க்குந்

தத்தம் உச்சியின்மேல் வைத்தது

ஒத்தெனத் தளர்வு தீர்ந்தார்

(கம்ப ராமாயணம் : யுத்த காண்டம் திரு அபிடேகப் படலம்)

‘ராம பிரானின் சிரத்தின் மேல் பொன்கிரீடம் விளங்கியது கண்டு, மூவுலகிலும் உள்ள மக்களும் தத்தம் சிரமேல் பொற்கிரீடம் வைக்கப்பட்டது போலவே எண்ணி மகிழ்ந்தார்கள் என்பது கடைசிச் செய்யுளின் கருத்து.

நாட்டில் உள்ள எல்லா மக்களிடையேயும் தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று எல்லோரும் ஸ்ரீ ராமநவமியன்றும், மறுநாள் புனர் பூஜையிலும், ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பிரார்த்தித்து கொள்ள வேண்டும்.
ravi said…
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்... 1
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வரும் 30.03.2023 ஸ்ரீ ராம நவமி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவது வேதங்கள். அத ன் படி வாழ்வது சாத்தியம் அல்ல என்று மக்கள் நினைத்த தருணத்தில் மக்களுள் ஒருவராக இருந்து வேதங்களின் சாரத் தை, தினசரி வாழ்க்கையில் வாழ்ந்து, உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம்.

ravi said…
ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகி ற்கு வாழ்ந்து காட்டிய ராமர் பங்குனி மாத ம் புனர் பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதி யில் தான் ராம அவதாரம் நிக ழ்ந்தது. ராமர் அவதரித்த நாள் ராம நவமி யாக கொண்டாடு கிறோம். இந்த நன்னா ளில் ராமனின் பெருமைகளை அறிந்து கொள்வோம்.

தர்மம் அழிந்து, அதர்மம் தலை எடுக்கும் போதெல்லாம் மண்ணுலகையும் மக்க ளையும் காக்க மகாவிஷ்ணு அவதாரங்க ள் எடுத்தார் என்கின்றன புராணங்கள்.

இதில் ஏழாவதாக அவதரித்த ராம அவ தாரம் மனித அவதாரமாக இருந்ததால் சிறப்பு வாய்ந்ததாக கருதப் படுகிறது. மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ஹ, வாமன, மற்றும் பரசுராம அவதாரம் முதல் ஆறு அவதாரங்கள்.

இந்த ராமாவதாரத்தில் மனிதர்கள் படும் அனைத்து இன்னல்களையும் இறைவ னும் அனுபவித்து அதன் மூலம் மக்களு க்கு பாடம் புகட்டியிருக்கிறார்.

ravi said…
ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மக னாக உதித்த ராமன், சீதையை மணந்து ஏகபத்தினி விரதனாக இருந்தார் தந்தை செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பா ற்றினார். அரக்கன் ராவணனை சம்ஹா ரம் செய்து மக்களை காத்தார். இவரது சிறப்புகளை விளக்கும் ராமாயணம் நமது இதிகாசங்களில் ஒன்றாக போற்றப்படுகி றது. இதில் ராமாவதாரத்தைப் பற்றியும், அவர் செய்த சாதனைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது..

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், 14 ஆண்டுகள் கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போது தாகத்திற்கு நீர் மோரும் பானகமும் பருகினார் என்பதை நினை வுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராம பிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக் தர்களுக்கு வழங்கப் படுகிறது. வைஷ்ண வ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபி ஷேக விழா சிறப்பாக நடைபெறும்.

ராம நாமமானது அஷ்டாட்சரமான 'ஓம் நமோ நாராயணாய' என்பதில் உள்ள 'ரா' என்ற எழுத்தையும், பஞ்சாட்சரமான 'நமச்சிவாய' என்ற எழுத்தில் 'ம' என்ற எழுத்தையும் சேர்த்து 'ராம' என்றானது.

சாஸ்திரம் படித்திருக்காவிட்டாலும் வேத ங்கள் தெரியாமல் போனாலும், மந்திர உபதேசங்கள் அறிந்திருக்காவிட்டாலும் , ‘ராம’ நாமத்தை பாராயணம் செய்தாலே அவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும், சௌகரியங்களும் அடைந்து சந்தோஷமா கவும், நிம்மதியாகவும் வாழ்ந்திடுவார் என்பது உண்மை. அந்த ராம நாமம் நமக் கு சுபிட்சம் தரும் என்பது வேதவாக்கு.

" இராமனை நினைவு கொள்வாய் மனமே-அந்த
கோசலை மகனை துதி செய்வாய் தினமே!
சித்திரை நவமியில் புனர்பூசத்தில் பிறந்து
இத்தரை மாந்தர் வாழ்வில் உய்யவே அவதரித்த அந்த......"

இவ்வளவு எளிமையான இனிமையான இலகு வான ராமமந்திரம் வாழ்வைக் கடைத்தேற்ற இருக்கையில் நாம் அதை அனுசரித்து கடைப் பிடித்து வாழ்வில் வெற்றியடைவோமாக.

ஸ்ரீ ராம நாமத்தின் மகிமை பற்றி கூற வேண்டும் என்றால் பல ஆயிரம் கதைகள் கூறலாம். ஆனாலும், ஒரு சிறு கதையை உங்களுக்கு கூறுகிறேன்.

ஒரு ஊரிலே ஒரு வயதான ஏழை பிரம்மச் சாரி இருந்தான், அவனுக்கு கண்கள் குருடு ஆனால் ராமபக்தன். அவனுடைய பக்தியினை கண்டு இரங்கி ராமபிரான் காட்சியளித்தான். ‘ஒரே கேள்வியைக் கேட்டு வரம் பெற்றுக் கொள். கண்டிப்பாக மறு கேள்வி கேட்கக் கூடாது என்றான். ’ராமபிரான். கிழவனும் சரியென்று ஒப்புக்கொண்டு ஒரே ஒரு வரம் கேட்டார்.

‘ஏழு அடுக்கு மாளிகையில் தங்க கரண்டி யால் என் பேரன் பாலை குடிப்பதை என் கண்களால் பார்க்க வேண்டும்.’ என்று ஒரே ஒரு வரம் கேட்டார். வரம் கொடுத்து ராமபிரான் சென்று விட்டான்.

வீடு இல்லாதவனுக்கு வந்து விட்டது பெரி ய மாளிகை. பேரன் பிறக்க வேண்டுமா னால், கல்யாணம் முடிக்க வேண்டும் அல் லவா? கிழவனுக்கு யார் பெண் கொடுப்பா ர்கள்? வர பலத்தால் இளமையும் வந்துவி ட்டது. பால் குடிக்கும் கரண்டியே தங்கமா னால் எவ்வளவு செல்வம் வரவேண்டும்? அவ்வளவு செல்வமும் வந்துவிட்டது. பேர னைப் பார்ப்பதற்குக் கண்கள் வேண்டும ல்லாவா?கண்களும் வந்து விட்டன.

கிழவன் ராம நாம ஜெபத்தின் மகிமையா ல் தெளிவான ஒரே கேள்வி கேட்டதின் பயனால், மாளிகை, இளமை, செல்வம், கண்கள், இல்லற வாழ்வு இத்தனையும் பெற்றான். பக்தி நெறியிலீடுபட்டால் தெளிவான கேள்விகள் உதயமாகி, அறிவு தெளிவடையும்.

பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணை யானது ராம நாமம். ஸ்ரீராம நவமி அன்று ராம நாமம் சொல்வதும், ராம நாம ம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவா ன் நாமம் இதயத் தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக் கிறது. ஞானத்தைத் தூண்டுகிறது. அறி யாமை, காமம், தீய இயல்பு களைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராம லோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ராம நாமத்தை சொல்லி கொண்டாடுவோம். தசரத மைந்தனின் அருள் பெறுவோம்.

" ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே"

ஜெய் ஸ்ரீ ராம்...
ravi said…
https://chat.whatsapp.com/KIZSxqwsGMN8Sd3SZPFRy5

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சூரிய திசை மற்றும் சூரிய புத்திக்கான பரிகாரங்கள் பற்றிய பதிவுகள் :*

சூரியனுக்கான திதி சப்தமி திதி ஆகும். இந்த சப்தமி திதி ஞாயிற்றுக்கிழமை சேர்வது மிகவும் சிறப்பு. மேலும் வளர்பிறையில் ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி சேர்வது அளவற்ற நன்மைகளை கொடுக்கும்.

மேலும் பிரதி தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய சதகம், ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதாலும் சூரிய தோஷங்கள் விலகி நன்மைகள் ஏற்படும்.

*விரத முறை :*

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை பகலில் 11:00 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் சிகப்பு மலர்களால் சூரிய பூஜை அல்லது சிவபூஜை செய்து கோதுமை பண்டங்களால் ஆன பலகாரங்களை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கி தானும் எடுத்துக் கொள்ள சூரிய தோஷங்கள் விலகும்.

*சூரியனுக்கான சிறப்பு விரத நாட்கள் :*

1. வளர்பிறையிலும் தேய்பிறையிலும் சப்தமி திதி உள்ள நாட்கள்.

2. சப்தமி திதியும் ஞாயிற்றுக்கிழமையும் கூடும் பானு சப்தமி நாட்கள்.

3. சப்தமி திதியும் ஞாயிற்றுக்கிழமையும் வளர்பிறையில் வரும் கல்யாண அல்லது விஜய சப்தமி நாட்கள்.

4. சைத்ர சுத்த சப்தமி அன்று வரும் கமல சப்தமி ,சந்தான சப்தமி பாஸ்கர தமனம் உள்ள நாள்.

5. யுகாதி புண்ணிய தினங்கள், யுகாந்தப் புண்ணிய தினங்கள், மன்வாதி புண்ணிய தினங்கள், கல்பாதி புண்ணிய தினங்கள், வைதிருதி சிராத்த தினங்கள், வியதீபாத சிராத்த தினங்கள், திஸ்ரோஸ்டகா, அஷ்டகா, அன்வஷ்டகா ஆகியவற்றில் தில ஹோமங்கள், பித்ரு பூஜைகள் செய்வது.

6. வைசாக சுக்ல திருதியையில் நிகழும் அக்ஷய திருதியை நாள்.

7. வைசாக சுக்ல சப்தமி அன்று வரும் கங்கோத் பத்தி, கங்கா சப்தமி நாள்.

8. பாத்ரபத சுக்ல சப்தமி அன்று வரும் அமுக்தாபரண சப்தமி மற்றும் அமுக்தாபரண விரத நாள்.

9. மார்க சிர சுத்த சப்தமி அன்று வரும் சூரிய விரதம், பல சப்தமி விரதம்.

10. மார்கசிர கிருஷ்ண சப்தமி அன்று வரும் சர்வ சப்தமி நாள்.

11. மாக சுத்த சப்தமி அன்று வரும் ரத சப்தமி, சூரிய ஜெயந்தி, அசோக சப்தமி, விரத நாட்கள்.

12. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் மாத பிறப்பு நாட்கள்.

13. உத்திரம் நட்சத்திரம் உள்ள நாட்கள் விஷு புண்ணிய காலங்கள், விஷ்ணுபதி புண்ணிய காலங்கள், தக்ஷாயன மற்றும் உத்தராயன புண்ணிய காலங்கள், ஷடசீதி புண்ணிய காலங்கள் ஆகிய இந்த நாட்களில் பிற்பகல் 18 நாழிகைக்கு மேல் 24 நாழிகைக்கு இறந்த முன்னோர்களுக்கான பூஜைகள் செய்து சூரிய பூஜை செய்ய பித்ரு சாபங்கள் விலகும்.

*சூரிய பகவானுக்கான பரிகார ஸ்தலம் :*

வளர்பிறையிலும் தேய்பிறையிலும் சப்தமி திதி உள்ள நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் உங்கள் நட்சத்திரத்திற்கு தார பலன் உள்ள நாளில் கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோயில் சென்று அங்கு முறைப்படி தீப வழிபாடு செய்து வர சூரிய தோஷங்கள் விலகும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
29.03.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 23)

Sanskrit Version:

नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः।
न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः।।2.23।।

English Version:

nainam Chindanti shastraaNi
nainam dahati paavakah: |
na chainam kledayanti
aapo na shoshayati maarutah: ||


Shloka Meaning

Weapons cannot cut, fire cannot burn, water cannot wet, wind cannot dry up the Atma.

The Jiva is the combination of three factors, body, mind and Atma. One is, subtler than the other.
The five material elements can affect the body only, because the composed of five elements.

They cannot affect the mind, the subtle body, because the subtle body is finer than the gross body.

Gross matter can break up or destroy only a gross object.

The sword can cut through a plant or human body, but it cannot cut the air or the other.

Finer and finer objects are not touched or affected by gross things.

Atma, being the most subtlest element, nothing can touch or affect it in any way.

From a spiritual point of view, the gross and subtle bodies are false creations caused by ignorance
(avidya), like the snake in the rope. So the superimposed mind and body do not in any way interfere
with or change Atma, which remains always the underlying substratum.

The creation of the body and mind are like the water in a mirage. They appear to exist, but they have
no existence in reality. What exists is the atma and atma alone.

If a seeker contemplates the eternal and immortal self, he acquires boundless courage and firmness.

Jai Shri Krishna 🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -29.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-2

தண்டாயுதத்தின் சிறப்பு

மூலம்:

அண்டர் பரவு பழனா புரிவெற் பமர் குகன்கைத்
தண்டம் எளிதென் றிகழேன்மி னோ? வன் சரபம்அடும்
சண்டவல் வேகம் உறுகண்ட பேரண்டம் சாய்த்ததென
முண்டகத் தான்மறை வல்லோர் அறிய மொழிந்ததுவே (2).

பதப்பிரிவு:
அண்டர் பரவு பழனாபுரி வெற்பு அமர் குகன் கைத்
தண்டம் எளிது என்று இகழேன் மினோ? வன் சரபம் அடும்
சண்டவல் வேகம் உறு கண்ட பேரண்டம் சாய்த்தது என
முண்டகத்தான் மறை வல்லோர் அறிய மொழிந்ததுவே!! (2).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

என் பெருமான் கைத் தண்டாயுதத்தின் சிறப்பு என்ன? என மொழியும் ஒரு அற்புத அலங்காரம். தண்டாயுதமே காவலடி! இது சேனாபதியின் கோவிலடி! என்ற கண்ணதாசனின் நான் நித்தம் அசை போடும் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

தேவர்கள் போற்றி பரவும் பழனாபுரி மலையில் வீற்றிருந்து அருளும் பழனிக் குகன் கையில் உள்ள தண்டம்/ தண்டாயுதம் வெறும் ஊன்றுகோல் அன்று! அதை மிக எளிது என்று இகழ்தல் கூடாது! எம் பெருமான் கையில் அமரும் பெரும் பேறு உடைய தண்டாயுதம், எட்டுக் கால்களை உடைய சரபத்தைக் கொல்லும் வலிமை உள்ள, கண்ட பேரண்டப் பறவையையே மோதி வெற்றி பெறும் பேராற்றல் உடையது என்று தாமரைப் பூவாதனப் பிரம்மனின் வேதம், வல்லோர், நல்லோர் என்று உலகோர் அனைவரும் அறியும் பொருட்டுக் கூறிற்று! எம் பெருமான் கையில் சேர்வதாலே இத்துணை வல்லமை பெறும் தண்டாயுதத்தின் பெருமை, பேராற்றல் அறிவோம்! பழனி தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள் பணிவோம்!

*தண்டின்றி அருளும் எம் ஞான தண்டபாணி சுவாமியின் தண்டாயுதம் துணை இருக்க, வேறு ஆயுதம் வேண்டுமோ எமைக் காக்க?
*தண்டு- வரம்பு;

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

8.உபயோரந்தர ஸீமன்யுத்தாம ப்ரமர ரஞ்ஜிதோ தாரம் | உபவனமுபாஸ்மஹே வயம்
ஊரீக்ருத மந்தமாருத ஸ்யந்தம் ||

இவ் வெண்கல இரும்பி கோட்டைகளின் நடுவில் ஸ்வதந்திரமாக திரிந்து கொண்டிருக்கும்
வண்டுகளின் ரீங்காரத்தால் இனியதும் மென்காற்று எங்கும் பரவி இதமாயிருப்பதுமான
பூங்காவை வழிபடுவோம்.(8)
ravi said…
லலிதா ஸ்தவ ரத்னம் !

9.ஆலிங்க்ய பத்ரகாளீம்
ஆஸீநஸ் தத்ர ஹரிசிலாச்யாமாம் மநஸி மஹாகாலோ மே
விஹரது மதுபான விப்ரமந்நேத்ர: ||

அங்கே இந்த்ர நீலம் போல் கருநிறமுள்ள பத்ரகாளியை
ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பவரும் மதுபானத்தினால் சுழல்கின்ற கண்களை
உடையவருமான மஹாகாளர், என் உள்ளத்தில் விளையாடட்டும். (9)
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

🌞🌞🌞🌞🌞🙏🌞🌞🌞
".ராமா ராமான்னு சொல்லு !

"யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன; தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம;"
"எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையோ, எந்த மஹானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ, அந்த சந்த்ரிகா மௌளியான என் குருநாதரை நமஸ்கரிக்கிறேன்" -பண்டிதர்

"பல வருஷங்களுக்கு முன்னே,காஞ்சி மஹா ஸ்வாமிகள், மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த ஆனந்ததாண்டவபுரத்தில் எழுந்தருளி இருந்தார். அப்போது, ஆந்திராவைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் மஹானைதரிசிப்பதற்காக அங்கேசென்றிருந்தார்.
அப்போது அங்கு வந்திரு ந்த சிறுவர்களிடம் நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்து,அதில் ராம நாமம் எழுதிக் கொண்டு மாலையில் வரும்படி சொல்லியனுப்பினார் மஹான். அதேபோல், மாலையில் அந்தச் சிறுவர்கள் ராம நாமம் எழுதிக்கொண்டு வந்து மஹானிடம் தந்தனர்.
அங்கிருந்த சிறுவர்களில் ஒருவனைப் பார்த்து ராம நாமம் சொல்லுமாறு பணித்தார் மஹான். பக்கத்தில் இருந்தவர்கள் தயங்கியவாறு, "அவனால் பேசமுடியாது ஸ்வாமி"என்றனர் . அவர்களைக் கையமர்த்தித் தடுத்த மஹான், மீண்டும் அந்தச் சிறுவனைப் பார்த்து," ம்...நீ ராம நாமம் சொல்லு!" என்று பணித்தார். என்ன ஆச்சரியம்! வாய் பேச இயலாத அந்தச் சிறுவன் முதலில் சற்று திணறிவிட்டு,பின்பு படிப்படியாக தெளிவான உச்சரிப்பில் ராம நாமம் சொல்லத் தொடங்கிவிட்டான்.
இதை நேரில் பார்த்து அனுபவித்த அந்த பண்டிதர் பின்னர் ராமாயண உபன்யாசம் தொடங்கியபோது, பிரார்த்தனை ஸ்லோகமாக,
"எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையோ, எந்த மஹானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ, அந்த சந்த்ரிகா மௌளியான என் குருநாதரை நமஸ்கரிக்கிறேன்" என்று பொருள்படும் வகையில்....
"யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன;
.தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம;"
என்று பாடினார்.
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞



ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
ravi said…
After travelling long through a forest, *Kalidasa reached a village. He felt very thirsty and looked around for water.*

He saw an old woman drawing water from a well.

He went up to her and asked her for water. *She agreed to give him water, but asked him to first introduce himself,*

WHO ARE YOU ?
"Introduce yourself.”

Now Kalidasa, who was a renowned and revered scholar of his time, thought that *an ordinary and old village woman was not worthy of knowing who great Kalidasa was.*

So he said,
*I am a traveller*

But the old lady replied, “No, *you cannot be a traveller.* In this world there are only 2 travellers – *the Sun and the Moon. Both Rise and Set every day and keep travelling perpetually.*

WHO ARE YOU ?

Thirsty Kalidasa said, *“Alright then, treat me as a guest.”*

Old lady promptly replied, *“No you cannot be a guest,* son.
In this world there are *only 2 guests – Youth and Wealth … both are temporary and do not stay even if you plead with them a million times, and hence can only they be called as guests.”*

WHO ARE YOU ?
Thirsty but now quite intrigued with the profoundness of this old lady, Kalidasa said, *“I am a TOLERANT Person, mother*

Now the old lady replied, *“You don’t quite look tolerant,* young man.

In this world *only 2 truly know the meaning of Tolerance*

*Bhoomi (Earth) and Tree*. How much ever you stamp the earth or throw stones at the tree (for the fruits), both continue to nurture us.”

So,
WHO ARE YOU ?

With unquenched thirst, Kalidasa was increasingly becoming irritable. He said, *“Fine then, consider me a Stubborn Person*

The lady smiled and said, *“No my child, you are not that stubborn.*

There are only 2 truly stubborn personalities *our nails and our hair. We keep cutting them non-stop, but they continue to grow.”*

So
WHO ARE YOU ?

Kalidasa had been patient so far, but now in anger he said, *“Alright, I am a Fool”.*

Now the lady gave a wide smile and said, *“There are only 2 kinds of fools* in this world

*A King who rules without having any capability or knowledge & a Minister* who is a sycophant to such a King and lavishes praises on such a useless king.”

WHO ARE YOU ?
Kalidasa realised that *he had been outsmarted by an old illiterate village woman.*
In complete awe and humility, he fell at the feet of the lady, saying,

*“O mother! How ignorant I was to think that I know myself.*

I am ashamed of myself. Pardon my ignorance.

Show mercy, and grant me water, I beg of you.
When he touched her feet and then got up,

whom did he see?...

*Mata Saraswati the Goddess of Learning and Wisdom.*

She said, “Kalidasa, you are wise. *But only if you know yourself do you become a true Manushya (human being).*

Your *EGO* has overshadowed your achievements.

You are *educated, but you are _also given to arrogance*.

Hence, I had to come to guide you.

The mark of a true human being is *not his knowledge, but his humility.*

_*Your Intellect*_
_*Your Education is of...*_
_*NO USE IF IT...*_
_*ONLY FEEDS YOUR*_
_*E G O.*_🙏🏿
ravi said…
🌹🌺 "Pharandama.... Show me all the incarnations you have undertaken to save the world and show me grace" Maharishi .. A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹At ​​the beginning of the Kali Yuga, a Maharishi named Sadamarshan came from penance in Vadanad.

🌺 At one point, peace was disturbed in the entire region and war and lawlessness prevailed.

🌺So that Maharishi came towards the south direction seeking peace.
Maharishi came to the forest called Pancha Krishna Aranyam in Tirukovilur area near present day Villupuram.

🌺 Then he saw the river Garuda which was dry.
The waterless hot sand reverberated and burned.

🌺 He suffered from this heat.
At that time a spring appeared on the south bank.
Sadamarshana Maharishi dipped his leg in it to relieve the heat.

🌺 He continued his journey on its path. The path ended at Tirthavanam, on the northern border of Thillaivana.

🌺 Maharishi who went there felt bliss and peace inside. As the place appeared peaceful and serene, he sat there and began to do penance.

🌺 Delighted by the penance, Tirumal presented Maharishi with Sri Lakshmi Devi.

🌺 The sage who was pleased with that, Parantama .... 'Show me all the incarnations that you have undertaken to protect the world' and prayed profusely.

🌺 As requested by Maharishi, Mahavishnu also gave the same vision and blessed him.

🌺Then Maharishi bowed down saying, 'You should stay permanently in the standing and lying Kolam in this temple and grant the blessings requested to the devotees.'

🌺Perumal, who has been blessed accordingly, presents Sri Rukmini-Sreesathyabhama Sametha Srivenugopalar in the temple here, and Rama with a school in Adishashan Pambani.

🌺 Sri Rama Rama Ramedhi Rame Rame Manorame...Sahasranama Tattulyam Ramanamavaranane

🌺If there is a special temple to meditate and unite the mind with this special Rama mantra, it is without doubt Srivenugopala Swamy and Sri Ananthasayanaram temple in Venkatampettai.

🌺 In this temple
Sri Rama is a seven-headed Adhisana with a very beautiful flowery face
He has risen in Sayana Golam.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
இன்று இராம நவமி
சுந்தர காண்டம் ஐந்து நிமிட பாராயணம்

சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.
ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கண்டு, அரக்கர் மேல் கோபம்
கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் பெயர் சொல்ல
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே
இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்
அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்
"கண்டேன் சீதையை” என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்
கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை
மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்
அதர்மத்தை. அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்
அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.
எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை
பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ராமன்’ என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆனந்தமாகவே இருந்தான்.

ravi said…
சுக துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவது தான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வது தான். சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனஸின் சஞ்சலம் குறைந்து, அது தெளிய ஆரம்பிக்கும். இந்தத் தெளிவால் மனசு எப்போதும் ஆனந்தமாக, லேசாக இருக்கும். இந்த சித்த சுத்தி மோக்ஷத்திலேயே கொண்டு சேர்த்துவிடும்.

ravi said…
ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந் நாராயணனே ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், ‘இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். ‘ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்படவேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக் கொண்டு வாழ்ந்தான்.

ravi said…
“ராவணன் ஸீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ராமனுக்கு ஸீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?” என்று கேலி செய்து கேட்டவர்கள், எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ராமனாக இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மநுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.

ravi said…
ஒரு நாடகம் நடக்கிறது. ராமாயண நாடகம்தான். அதில் லவ குசர்களை வால்மீகி ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ராமராக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து ‘இந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, ‘இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள் தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்? வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும். ஸ்ரீ ராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது, இப்படித்தான் மநுஷ்ய வேஷம் போட்டுக் கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக் கொண்டு வாழ்ந்தார்.

ravi said…
வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லியிருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைதான் கட்டிக் கொடுத்தாள். ‘ராகவா, நீ எந்த தர்மத்தை த்ருதியோடு, அதாவது தைரியத்தோடு, நியமத்தோடு அநுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.

ravi said…
நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான். ‘அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக் கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா’ என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.

சாக்ஷாத் ஸ்ரீ ராமனை லட்சியமாகக் கொண்டு “ராம ராம” என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.
ravi said…
https://chat.whatsapp.com/KIZSxqwsGMN8Sd3SZPFRy5

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீராம நவமி நாளின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :*

பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் ஸ்ரீ ராமனின் பிறந்த நாள். இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.

இந்த ஆண்டு ராம நவமி திருவிழா இன்றைய தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஸ்ரீராம அவதாரமும், ஸ்ரீகிருஷ்ண அவதாரமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ravi said…
ஜென்மாஷ்டமியாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதை போல ஸ்ரீராம நவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

*ராம அவதாரம்*

ராவணனின் கொடுமைகளால் துன்பமுற்ற தேவர்கள் மஹாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தார்கள். மஹாவிஷ்ணு அவர்களிடம், ' கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் அயோத்தி மன்னன் தசரதன் பெற்ற வரப்பயன் காரணமாக அவனுக்கு மைந்தனாக நாம் அவதரிக்கப் போகிறோம். அந்த நேரத்தில் ராவணனை அழித்து, உங்கள் துன்பம் துடைப்போம் என்று கூறினார்.

*அயோத்தி மன்னன் மகன்*

அயோத்தி மன்னனாகிய தசரதனுக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால், ரிஷ்யசிருங்க முனிவர் தலைமையில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அந்த யாகத்தின் பயனாக, தசரதச் சக்கரவர்த்தி நான்கு மைந்தர்களைப் பெற்றெடுத்தார்.

அவர்களுள் முதல் மைந்தனாக அவதரித்தார் ஸ்ரீ ராமன். அடுத்ததாக பரதன், சத்துருக்கன், லட்சுமணன் ஆகியோர் அவதரித்தனர்.

*ஸ்ரீ ராம நவமித் திருநாள்*

ஸ்ரீ ராமன் அவதரித்த நன்னாளே ' ஸ்ரீ ராம நவமித் திருநாள். மகிமை தரும் ராம நவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையைச் சுத்தம் செய்து, அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்துக்குப் பூச் சூடி, நைவேத்தியங்களைப் படைத்து, ஸ்ரீ ராம நாமம் சொல்லிப் பூஜிக்க வேண்டும்.

*ராம நாமம்*

'நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சன்மமும் மரணமு மின்றித் தீருமே
இன்மையே ராமவென் றிரன் டெழுத்தினால்'

என்பது கம்பரின் வாக்கு. ராம நவமியில் மகிமைமிகு ராம நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதால் இல்லத்தில் நற்காரியங்களும், செல்வ வளமும் வளர்ந்தோங்கும். நாம் செய்த பாவங்கள் கரைந்து புண்ணியங்கள் கூடும்.

*ராம நவமியில் தானம் கொடுங்கள்*

ராம நவமியில் ராமனுக்கு நைவேத்தியமாக நீர்மோர் படைப்பது மிக முக்கியமாகும். ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்த போதும், அதன்பின், 14 ஆண்டுகள் வனவாசத்தின் போதும், ராமபிரான் நீர்மோரையும், பானகத்தையும் தாக சாந்திக்காக அருந்தினார். அதன் நினைவாகவே நீர்மோரும், பானகமும் ஸ்ரீ ராமனின் அவதார தினமான ஸ்ரீராம நவமி அன்று நிவேதன பொருட்களாக படைக்கப்படுகின்றன.

இதைத் தவிர பொங்கல், பருப்பு வடை போன்றவற்றையும் நிவேதனம் செய்து, பகிர்ந்து உண்பார்கள். ஸ்ரீ ராமன் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால், அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் வழங்குவதையும், விசிறி தானம் செய்வதையும் வழக்கமாக அமைத்தனர்.

*ராமனின் அருள் கிடைக்கும்*

பெரிய அளவில் நைவேத்தியம் படைக்க முடியாவிட்டாலும் ராமர் பட்டாபிஷேக படத்தின் முன்பாக வாழைப்பழம், பால் போன்ற எளிய பொருட்களை அர்ப்பணித்தும், ஸ்ரீ ராம நாமம் சொல்லியும் ஸ்ரீ ராமனை வணங்கி அருள் பெறலாம். ஆலயத்திலும் சரி, இல்லத்திலும் சரி, பூஜையின்போது, ராமபிரானை வணங்கிய பிறகு, பூஜையில் கலந்து கொள்ளும் பெரியோர்களையும், ராம பக்தர்களையும் கூட வணங்கி அவர்களின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.

*அனுமன் அருள் கிடைக்கும்*

ராம நவமியன்று ராம நாமம் உச்சரிக்கப்படும் இடங்களிலும், ராமாயணம் படிக்கப்படும் இடங்களிலும் அங்குள்ள அடியவர்கள் மீது ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருள் செய்து ஆனந்திபாராம். எனவே, அடியவர்களை வணங்குவதன் மூலம் அனுமானின் அருளையும் பெறலாம்.

ஸ்ரீ ராம ராம ராமேதி ராமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

என, எந்நாட்டவர்க்கும் இறைவனாம் ஈசனே, ஸ்ரீ ராமரை போற்றி புகழ்ந்து, உமையாளுக்கு உபதேசம் செய்து மகிழ்ந்த மந்திரம் ராம நாம மந்திரமாகும். அதாவது, அழகிய முகத்தவளே, ஸ்ரீ ராம ராம ராம என்று, மனதுக்கு இனியவனாகிய ராமன் இடத்தில் நான் ஆனந்தம் அனுபவிக்கிறேன். அந்த ராம நாமம், சஹஸ்ர நாமத்துக்கு சமமானது 'என்று பார்வதி தேவியிடம் ராம நாமத்தின் மகிமையை சிவபெருமான் கூறி மகிழ்ந்தாராம். ஆகவே, நாமம் ஸ்ரீ ராம நாமம் கூறி உயர்வடைவோமாக.

*எட்டு நாட்கள் விழா*

ராம நவமியை வட இந்தியாவில் தொடர்ந்து எட்டு நாட்கள் விழாவாக கொண்டாடுகின்றார்கள். நாமும், ஸ்ரீ ராம நவமிக்கு முன் ஒன்பது நாட்கள் வீட்டில் பூஜை செய்து பெரியவர்கள் மூலமாக ராமாயணம் படித்து, கடைசி ஸ்ரீ ராம நவமி நாளான பத்தாம் நாளன்று ராமாயண பாராயணத்தை நிறைவு செய்வதால் நம் பாவங்கள் அகன்று மோட்ச பேரு கிடைக்கும் என்பது நிச்சயம்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*இனியவை நாற்பது* - பாடல்: *32*
---------------------------------------------------------------
*கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே*
*பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே*
*தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்*
*பத்திமையிற் பாங்கினியது இல்.*

உரை சுருக்கம்:
கற்றறிந்தார் கூறும் கருப்பொருள் இனிது
ஈடுபாடில்லா அரசன்கீழ் வாழாதல் இனிது
அறியாது கெடுதல் செய்தவருக்கு தீங்கு
செய்யாது அன்பு செலுத்தும் பண்பு இனிது.
ravi said…
ரக்ஷாகரீ *ராக்ஷஸக்⁴னீ* ராமா ரமணலம்படா🙏🙏
இரக்கம் இன்றி சுய நலத்திற்காக இம்சை செய்பவர்களை அழித்து அருள்பவள
ravi said…
https://chat.whatsapp.com/KIZSxqwsGMN8Sd3SZPFRy5

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீராம நவமி நாளின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :*

பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் ஸ்ரீ ராமனின் பிறந்த நாள். இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.

ravi said…
இந்த ஆண்டு ராம நவமி திருவிழா இன்றைய தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஸ்ரீராம அவதாரமும், ஸ்ரீகிருஷ்ண அவதாரமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஜென்மாஷ்டமியாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதை போல ஸ்ரீராம நவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

*ராம அவதாரம்*

ராவணனின் கொடுமைகளால் துன்பமுற்ற தேவர்கள் மஹாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தார்கள். மஹாவிஷ்ணு அவர்களிடம், ' கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் அயோத்தி மன்னன் தசரதன் பெற்ற வரப்பயன் காரணமாக அவனுக்கு மைந்தனாக நாம் அவதரிக்கப் போகிறோம். அந்த நேரத்தில் ராவணனை அழித்து, உங்கள் துன்பம் துடைப்போம் என்று கூறினார்.

*அயோத்தி மன்னன் மகன்*

அயோத்தி மன்னனாகிய தசரதனுக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால், ரிஷ்யசிருங்க முனிவர் தலைமையில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அந்த யாகத்தின் பயனாக, தசரதச் சக்கரவர்த்தி நான்கு மைந்தர்களைப் பெற்றெடுத்தார்.

அவர்களுள் முதல் மைந்தனாக அவதரித்தார் ஸ்ரீ ராமன். அடுத்ததாக பரதன், சத்துருக்கன், லட்சுமணன் ஆகியோர் அவதரித்தனர்.

*ஸ்ரீ ராம நவமித் திருநாள்*

ஸ்ரீ ராமன் அவதரித்த நன்னாளே ' ஸ்ரீ ராம நவமித் திருநாள். மகிமை தரும் ராம நவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையைச் சுத்தம் செய்து, அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்துக்குப் பூச் சூடி, நைவேத்தியங்களைப் படைத்து, ஸ்ரீ ராம நாமம் சொல்லிப் பூஜிக்க வேண்டும்.

*ராம நாமம்*

'நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சன்மமும் மரணமு மின்றித் தீருமே
இன்மையே ராமவென் றிரன் டெழுத்தினால்'

என்பது கம்பரின் வாக்கு. ராம நவமியில் மகிமைமிகு ராம நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதால் இல்லத்தில் நற்காரியங்களும், செல்வ வளமும் வளர்ந்தோங்கும். நாம் செய்த பாவங்கள் கரைந்து புண்ணியங்கள் கூடும்.

*ராம நவமியில் தானம் கொடுங்கள்*

ராம நவமியில் ராமனுக்கு நைவேத்தியமாக நீர்மோர் படைப்பது மிக முக்கியமாகும். ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்த போதும், அதன்பின், 14 ஆண்டுகள் வனவாசத்தின் போதும், ராமபிரான் நீர்மோரையும், பானகத்தையும் தாக சாந்திக்காக அருந்தினார். அதன் நினைவாகவே நீர்மோரும், பானகமும் ஸ்ரீ ராமனின் அவதார தினமான ஸ்ரீராம நவமி அன்று நிவேதன பொருட்களாக படைக்கப்படுகின்றன.

இதைத் தவிர பொங்கல், பருப்பு வடை போன்றவற்றையும் நிவேதனம் செய்து, பகிர்ந்து உண்பார்கள். ஸ்ரீ ராமன் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால், அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் வழங்குவதையும், விசிறி தானம் செய்வதையும் வழக்கமாக அமைத்தனர்.

*ராமனின் அருள் கிடைக்கும்*

பெரிய அளவில் நைவேத்தியம் படைக்க முடியாவிட்டாலும் ராமர் பட்டாபிஷேக படத்தின் முன்பாக வாழைப்பழம், பால் போன்ற எளிய பொருட்களை அர்ப்பணித்தும், ஸ்ரீ ராம நாமம் சொல்லியும் ஸ்ரீ ராமனை வணங்கி அருள் பெறலாம். ஆலயத்திலும் சரி, இல்லத்திலும் சரி, பூஜையின்போது, ராமபிரானை வணங்கிய பிறகு, பூஜையில் கலந்து கொள்ளும் பெரியோர்களையும், ராம பக்தர்களையும் கூட வணங்கி அவர்களின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.

*அனுமன் அருள் கிடைக்கும்*

ராம நவமியன்று ராம நாமம் உச்சரிக்கப்படும் இடங்களிலும், ராமாயணம் படிக்கப்படும் இடங்களிலும் அங்குள்ள அடியவர்கள் மீது ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருள் செய்து ஆனந்திபாராம். எனவே, அடியவர்களை வணங்குவதன் மூலம் அனுமானின் அருளையும் பெறலாம்.

ஸ்ரீ ராம ராம ராமேதி ராமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

என, எந்நாட்டவர்க்கும் இறைவனாம் ஈசனே, ஸ்ரீ ராமரை போற்றி புகழ்ந்து, உமையாளுக்கு உபதேசம் செய்து மகிழ்ந்த மந்திரம் ராம நாம மந்திரமாகும். அதாவது, அழகிய முகத்தவளே, ஸ்ரீ ராம ராம ராம என்று, மனதுக்கு இனியவனாகிய ராமன் இடத்தில் நான் ஆனந்தம் அனுபவிக்கிறேன். அந்த ராம நாமம், சஹஸ்ர நாமத்துக்கு சமமானது 'என்று பார்வதி தேவியிடம் ராம நாமத்தின் மகிமையை சிவபெருமான் கூறி மகிழ்ந்தாராம். ஆகவே, நாமம் ஸ்ரீ ராம நாமம் கூறி உயர்வடைவோமாக.

*எட்டு நாட்கள் விழா*

ராம நவமியை வட இந்தியாவில் தொடர்ந்து எட்டு நாட்கள் விழாவாக கொண்டாடுகின்றார்கள். நாமும், ஸ்ரீ ராம நவமிக்கு முன் ஒன்பது நாட்கள் வீட்டில் பூஜை செய்து பெரியவர்கள் மூலமாக ராமாயணம் படித்து, கடைசி ஸ்ரீ ராம நவமி நாளான பத்தாம் நாளன்று ராமாயண பாராயணத்தை நிறைவு செய்வதால் நம் பாவங்கள் அகன்று மோட்ச பேரு கிடைக்கும் என்பது நிச்சயம்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.


ஓம் நமசிவாய
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

ஶ்ரீ ராம நவமி சிறப்பு பதிவு.

30-03-2023
ராமநவமி

*************************
வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார்.
எதிரே ஒரு வயதான தம்பதி அருகே, கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன். மெல்லிய குரலி ல் அந்த முதியவர் பேச ஆரம்பித்தார்.
'' ஸ்வாமி, நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலி ருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணி ட்டு வரோம். நாளை ராமேஸ்வரம் போகணும். இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க இடத்துல தங்கிவிட்டு , காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம்.
தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யணும்.."'
மெல்லிய குரலில் , பேசினார் அவர்; வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்று ம், பேச்சில் தெரிந்த ஆயாசம் இவையெல்லா வற்றையும் தாண்டி , அம்மூவரின் முகலாவண் யமும் , தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது.
ஒருகணம் நிலை தடுமாறியவர் பின், மெலிதா ன புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார் ;
''
ravi said…
அதற்கென்ன பேஷாய் தங்கலாம். இரவு போ ஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ"
அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின், அடுக்களையை நோக்கி, உரத் த குரலில் ,
'' கமலா,குடிக்க தீர்த்தம் கொண்டு வா ..''
என்றார் ; அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள், அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பி ல் விரிந்தன.
' யார் இவர்கள் ?'
ravi said…
'' கமலா ...'' தியாகராஜரின் குரல் அவளை தட்டியெழுப்பியது ;
''கமலா இவர்கள் நமது விருந்தாளிகள். இன்று நமது கிருஹத்தில் தங்க போகிறார்கள் ..இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய்''
தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவா றே இயல்பாய் பேசினார் அவர் ;
' அடடா, வீட்டில் இரண்டு பேர்களுக்கு போது மான அரிசியே இல்லை .இப்போது, ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானா ல் அரிசிக்கு என்ன செய்வது ? பக்கத்து வீட்டு க்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான் '
ravi said…
உள்ளுக்குள் எண்ணியவள் , பின் எதையும் வெளிக்காட்டாமல், புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு , அடுக்களையை நோ க்கி விரைந்தாள் ; போன வேகத்திலேயே, அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்தவள், பின் அதை யார் கண்ணிலும் படாமலிருக்க புடவையால் மறைத்தவாறு அங்கிருந்து வெளியே வந்த அக்கணம் அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவ ரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது ;
''
ravi said…
அடடா, எங்கே செல்கிறீர்கள் அம்மா?எங்களு க்காக சிரமப்பட வேண்டாம். எங்களிடம் , வே ண்டிய அளவு தேனும், தினை மாவும் இருக்கி றது. இரண்டையும் பிசைந்து ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம்.'' அவ ளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை, வியப்புடனும் , தர்மசங்கடத்துட னும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராத கையில் , தேனும் , தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை அவளிடம் நீட்டினார் அந்த முதியவர்.
தயக்கத்துடனும், சங்கோஜத்துடனும் அதனை பெற்று கொண்ட அவள், உணவுத்தயாரிக்க அடுக்களையை நோக்கி விரைந்தாள்.
அன்று இரவு, அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற தியாகராஜர், அவர்களுட ன் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு , பின், ஒரு கட்டத்தில் உறங்கி போனார்.
பொழுது விடிந்தது, காலைக்கடன்களை முடித்து விட்டு, கூடத்தில் அமர்ந்து, வழக்கம் போல கண்களை மூடியவாறு, ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு கண்களை திறந்தார..
"
ravi said…
ஸ்வாமி .." எதிரே புன்னகையுடன் அந்த முதியவர். அருகே, அவரின் பார்யாளும், மற்று ம் அந்த இளைஞனும் . அந்த முதியவர் தொடர்ந்தார்.
'' ரொம்ப சந்தோஷம், நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே கிளம்பறோம் இரவு தங்க இடம் கொடுத்து வாய்க்கு ருசியா ய் ஆகாரமும் கொடுத்து அன்பாய் உபசரித்தத ற்கு மிக்க நன்றி ..''
கூப்பிய கரங்களுடன் அந்த முதியவர் பேச,
அருகே அந்த மூதாட்டியும், இளைஞனும் அவரி ன் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று தலையசைத்தவாறு நின்றிருந்தனர சொல்லி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்ப, தியாகரா ஜரும் அவர்களை வழியனுப்பும் நிமித்தமாய் , அவர்களுடன் வாசலுக்கு வந்தார்.
ravi said…
அவர்கள் மூவரும் வாசலை கடந்து , தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க, அவர்கள் செல்வ தை கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிரு ந்த தியாகராஜரின் கண்களில் ' சட்டென்று ' ஒரு தெய்வீக காட்சி இப்போது அந்த வயோதி கர் ஸ்ரீ ராமனாகவும் அந்த மூதாட்டி, சீதையாக வும், அந்த இளைஞன் அனுமனாகவும் தோற்ற மளிக்க அவருக்குள் இனம் புரியாத ஒரு பதை பதைப்பு.

ravi said…

கண்கள் பனிசோர நா தழுதழுக்க தன்னை மற ந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார்.
'' என் தெய்வமே, தசரதகுமாரா, ஜானகி மணா ளா, நீயா என் இல்லத்துக்கு வந்தாய்?. என்னே நாங்கள் செய்த பாக்கியம் அடடா, வெகு தூரத் திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே , உன் காலை பிடித்து அமுக்கி, உன் கால் வலி யை போக்குவதை விடுத்து , உன்னை தூங்க விடாமல் விடிய விடிய பேசிக்கொண்டே இருந் தேனே. மகாபாவி நான், என் வீட்டில் தரித்திரம் தாண்டவ மாடற துன்னு தெரிஞ்சு , ஆகாரத்தை யும் கொண்டு வந்ததுடன், ஒரு தாய் தகப்பனா யிருந்து எங்கள் பசியையும் போக்கினாயே ! உனக்கு அநேக கோடிநமஸ்காரம்''
ravi said…
நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கதறி அழுதார்


தியாகராஜர். அப்போது அவர் திருவாயினின்று, அனிச்சையாய் ,
'' சீதம்ம.....மாயம்ம...''
என்கிற கீர்த்தனை பிறந்தது...

ஸ்ரீ ராம் ஜெய ராம். ஜெய ஜெய சீதாராம்.

பெரியவா சரணம்


கடன் அனைவருக்கும் தீங்கு: தெய்வத்தின் குரல்

ravi said…
சிக்கனம் தன் சேமிப்புக்காக அல்ல, பரோபகாரத்துக்காகவே என்பது போலவே, கடன் வாங்காமலிருப்பதும் தன் நன்மையைக் கருதி மட்டுமில்லாமல் பரோபகார உத்தேசத்தின்மீதே இருக்க வேண்டும். கடன் பட்டுவிட்டால் அதை அடைப்பதற்கே பாடுபடுவது; ஒரு கடன் அடைந்த பிறகு ஏற்கெனவே கடன் வாங்கின பழக்கத்தில் மறுபடி மறுபடி கடனுக்குப் போவது என்றுதான் அனர்த்தமாகப் போய்க்கொண்டிருக்கும். இப்படி தனக்கே இல்லாத நிலையை உண்டாக்கிக் கொண்டால் பிறருக்கு எப்படிச் செய்வது?

ravi said…
சிக்கனம் தன் சேமிப்புக்காக அல்ல, பரோபகாரத்துக்காகவே என்பது போலவே, கடன் வாங்காமலிருப்பதும் தன் நன்மையைக் கருதி மட்டுமில்லாமல் பரோபகார உத்தேசத்தின்மீதே இருக்க வேண்டும். கடன் பட்டுவிட்டால் அதை அடைப்பதற்கே பாடுபடுவது; ஒரு கடன் அடைந்த பிறகு ஏற்கெனவே கடன் வாங்கின பழக்கத்தில் மறுபடி மறுபடி கடனுக்குப் போவது என்றுதான் அனர்த்தமாகப் போய்க்கொண்டிருக்கும். இப்படி தனக்கே இல்லாத நிலையை உண்டாக்கிக் கொண்டால் பிறருக்கு எப்படிச் செய்வது?

ravi said…
ஆசார்யாள் ‘ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா’ என்று கேள்வியும் பதிலுமாக ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார். அதிலே ஒரு கேள்வி, ”உலகத்தில் தீட்டாக ஆவது எது? ” என்பது: ”கிமிஹ ஆசௌசம் பவேத்?”

சுசி என்றால் சுத்தம். அசுசி [என்றால்] அசுத்தம். அசுசியுள்ளது ஆசௌசம். தேவ கார்யங்களுக்கு உதவாத படி ஆக்குகிற சாவுத் தீட்டு, பிரஸவத் தீட்டு முதலானவற்றையே சாஸ்திரங்களில் ஆசௌசம் என்று சொல்லியிருக்கிறது. இங்கே, சிஷ்யன் ”ஆசௌசம் எது?” என்று கேட்பதாகவும், அதற்கு குரு பதில் சொல்வதாகவும் ஆசார்யாள் சொல்லுகிறார். அந்தப் பதில் என்ன?

ருணம் ந்ருணாம்

”ந்ருணாம்” என்றால் ”மநுஷ்யனுக்கு”, ”மநுஷ்யனாகப் பிறந்த எல்லாருக்கும்” என்று அர்த்தம். ”ருணம்” என்றால் ‘கடன்’, ”மநுஷ்ய ஜன்மா எடுத்தவனுக்குப் பெரிய தீட்டு கடன் படுவதுதான்” என்று ஆசார்யாள் சொல்கிறார். ஏன் அப்படிச் சொன்னார்?
https://chat.whatsapp.com/D9M1VuKAVeJ99KywBlS4mK

தீட்டு வந்தால் என்ன பண்ணுகிறோம்? இந்தக் காலத்தில் ஒன்றும் பண்ணுவதில்லை. ”தீட்டாவது, துடக்காவது? எல்லாம் ஸூபர்ஸ்டிஷன்” என்று ஆலய ஸந்நிதானம் உள்பட எல்லா இடத்திலும் ஆசௌசங்களைக் கலந்து கொண்டிருக்கி றோம். பலனாகத்தான் துர்பிக்ஷம், நூதன நூதன வியாதிகள், மஹாக்ஷேத்ரங்களிலேயே விபத்துக்கள் என்று ஏற்பட்டுக் கொண்டிருக் கின்றன. ஆகையால் ஐம்பது வருஷத்துக்கு முன்வரை இருந்த நடைமுறையை வைத்தே, ஆசார்யாள் எழுதினதற்கு அர்த்தம் சொல்கிறேன். இரண்டாயிரம் வருஷம் முந்தி அவர் இருந்தபோதும், அவருக்கும் எத்தனையோ ஆயிரம் வருஷம் முந்தியும் இதே ஆசார–ஆசௌசங்கள்தானே அநுஷ்டானத்தி லிருந்திருக்கின்றன? ஒருத்தனுக்குத் தீட்டு ஸம்பவித்துவிட்டால் அந்த நாளில் என்ன பண்ணுவார்கள்? மற்றவர்கள் அவன் கிட்டேயே வரமாட்டார்கள். மேலே பட்டு விடப்போகிறான் என்று தள்ளித் தள்ளியே போவார்கள். கடனாளியாக இருக்கிறவனைக் கண்டும் பயந்து, ”எங்கே நம்மைக் கேட்டு விடுவானோ?” என்று மற்றவர்கள் ஒதுங்கித் தானே ஓடுகிறார்கள்! இவனும் கடன் கொடுத்தவன் எங்கே எதிர்ப்பட்டு விடுவானோ என்று பயந்துகொண்டு ஜன ஸமூஹத்தின் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டுதான் போவான். தலையில் துணியைப் போட்டுக்கொண்டு போவது என்பார்கள், அடையாளம் தெரியாமலிருப்பதற்கு தன்னைத்தானே இப்படிப் பெரிய ஆசௌசம் ஏற்பட்டு விட்டதுபோலக் கடனாளி ஸமூஹ ப்ரஷ்டம் செய்து கொண்டுவிடுகிறான்.

ஒருத்தன் கடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதால் அத்தனை பேருக்கும் கஷ்டம். ”கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான்” என்று கம்பரே சொன்னபடி, கடன் வாங்கிவிட்டவன் கொடுத்தவனை நினைத்து எப்போதும் பயந்துகொண்டு கஷ்டப்படுகிறான்; தப்பித்துக்கொள்வதற்காகப் பொய் சொல்கிறான்; மிஞ்சினால் கடனை அடைப்பதற்காகத் திருடவும் துணிகிறான். கடன் பட்டாரைப் போல, அல்லது அதை விடவும், ”கடன் கொடுத்தார் நெஞ்சமும்” கலங்கிக் கொண்டுதான் இருக்கம் – பணத்தை அழுதவன் இவன் தானே? அது திரும்பி வருமா வராதா என்று எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பான். கடன் கொடுத்தவனான இவனுக்கு எத்தனை எரிச்சலும் மனக் கொதிப்பும் உண்டாயிருக்கிறது என்பது ”கடன்காரன், கடன்காரி” என்று வசவு ஏற்பட்டிருப்பதிலிருநந்தே தெரிகிறது.


கடன்காரன் என்றால் கடன் கொடுத்தவன், வாங்கினவன் என்று இரண்டு தினுஸாகவும் அர்த்தம் பண்ணிக் கொள்ள இடமிருக்கிறது!வளர்ந்த குழந்தைகள் செத்துப்போனால், ”கடன்காரன் (கடன்காரி) போயிட்டானே (போயிட்டாளே) ”என்று தாயாக இருக்கப்பட்டவள் மனஸ் நொந்து பிரலாபிப்பதுண்டு. இங்கே கடன்காரன் என்றால் பூர்வ ஜன்மத்தில் நமக்குப் பணமாகவோ உழைப்பாகவோ கொடுத்தவன் என்று அர்த்தம். அப்படிக் கொடுத்ததை, கடனைத் திருப்பி வாங்கிக் கொள்கிற மாதிரி வாங்கிக் கொள்ளவே இப்போது பிள்ளையாகப் பிறக்கிறான். பெற்றவர்களுக்குச் செலவு, தேஹ ச்ரமம் எல்லாம் வைக்கிறான். இவற்றில் தான் முன் ஜன்மாவில் கொடுத்த அளவுக்குத் திரும்ப அவர்களிடம் வாங்கிக் கொண்டவுடன் கடன் தீர்ந்தாயிற்று என்று கண்ணை மூடிக்கொண்டு போய்விடுகிறான்.

”ஜன்மாந்தர கடன்காரன்” என்று சொல்கிற போதும் பூர்வஜன்மத்தில் நாம் ஒருத்தனால் பெற்றதைத் திரும்ப நம்மிடமிருந்து வாங்கிக்கொள்ள அவன் வந்திருக்கிறான் என்றே அர்த்தம்.

दरिद्रो‌உस्म्यभद्रो‌உस्मि भग्नो‌உस्मि दूये विषण्णो‌உस्मि सन्नो‌உस्मि खिन्नो‌உस्मि चाहम् ।
भवान्प्राणिनामन्तरात्मासि शम्भो ममाधिं न वेत्सि प्रभो रक्ष मां त्वम् ॥ 16 ॥

நான் தரித்திரன், க்ஷேமத்தையிழந்தவன், மனமுடைந்தவன், சோகத்தால் வாடியவன், நொடித்தேன், துடித்தேன். தாங்கள் சர்வ பிராணிகளிடத்திலும் அந்தர்யாமியாக விளங்குபவர். என் மனத்துயரை நீர் நன்கறிவீர். ஆதலின் என்னை ரக்ஷிப்பீராக



ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
ராவணன் பெரிய ஈசுவர பக்தன் .உலகுக்கு காமியாக மஹாலட்சுமியை சிறைப்படுத்தியவனாகத் தோன்றினாலும் அதன் த்த்துவம் வேறு. அவன் பெரிய அபச்சாரத்தைப் பண்ணினவன்.அவனாவது ஈஸ்வர பக்தனாக இருப்பதாவது! என்று நமக்கு சந்தேகம் வரும்.அதற்கு ஒரு சமாதானம் உண்டு.
ravi said…
ராமாயணங்கள் அநேகம் இருக்கின்றன.துளசி ராமாயணம்,வால்மீகி ராமாயணம், ஆனந்த ராமாயணம், துர்வாச ராமாயணம். இப்படிப் பல ராமாயணங்கள். இவைகளில் ஏதோ ஒன்றில் கீழ்கண்டவாறு சொல்லியிருக்கிறதாம்.
ravi said…
ராமனுடைய வர்ணம் பச்சை வர்ணம். அம்பாளுடைய வர்ணமும் பச்சை வர்ணந்தான்.’ஈஸ்வரி ராமனாக வேஷம் போட்டுக்கொண்டு வந்தாள்.ஈஸ்வரன் சீதையாக வேஷம் போட்டுக்கொண்டு வந்தான்’என்று சொல்லியிருக்கிறது.
ravi said…
அந்தக் காலத்தில் மிகவும் சின்ன வயசில் குழந்தைகளுக்குக் கல்யாணம் பண்ணுவார்கள்.பெண்ணுக்குப் பிள்ளை வேஷம் போட்டும் பிள்ளைக்கு பெண் வேஷம் போட்டும் கல்யாணம் பண்ணி ஊர்வலம் விடுவார்கள்.
ravi said…
அதுபோல ஈஸ்வரனும் அம்பாளும் சீதையும் ராமனுமாக வந்தார்களாம்.பராசக்திதான் விஷ்ணு.ஈஸ்வரனை அசோக வனத்தில் வைத்து பூஜிக்க வேண்டும் என்பது ராவணனுடைய எண்ணம்.
ravi said…
முன்பே அடிக்கடி கைலாசத்திற்கு போய்கொண்டிருக்கலாகாது என்று அதை பெயர்த்துக் கொண்டு வரப்பார்த்தான். மலை ஆடினபோது அம்பாள் பய்நது கொண்டு ஈஸ்வரனைக் கட்டிக் கொண்டாள். இவன் முயற்சி வெற்றி பெறவில்லை. இதற்கு என்ன பண்ணுவது ? மோடசம் வேண்டுமென்றால் ஈஸ்வரனுடைய அனுக்கிரஹம் , பராசக்தியின் அனுக்கிரஹம் வேண்டுமே. இதற்கு ஓர் அபச்சாரம் பண்ணினாலும் பரவாயில்லை; என்ன பண்ணலாம்? என்று யோசித்துப்கொண்டு இருந்தான்.
ravi said…
ஈஸ்வர பக்தி-பிரேமை அவனுக்கு அதிகமாகி விட்டது. ஈஸ்வரன் சீதையாகவும்பராசக்தி ராமனாகவும் அவதாரம் பண்ணியிருக்கிறார்கள் என்பது அவனுக்கு தெரிந்து விட்டது.
வால்மீகி ராமாயணத்தில்கூட ஓர் இடம் வருகிறது.ராமன் நான் தனியாக காட்டுக்குப் போகிறேன் என்று சொன்னபோது சீதை நானும் வருகிறேன் என்று சொல்கிறாள். ‘ நீ வரக்கூடாது .ஆபத்து சம்பவிக்கும் ‘ என்று சொல்கிறான் ராமன். சீதை அதற்கு விடையாக ஒன்று சொல்கிறாள். “நீ யார் பெண்பிள்ளையா?பெண்பிள்ளையா இப்படி வேஷம் போட்டு வந்திருக்கிறாய்? “ என்று சூட்சும்மாக வெளிப்படுத்தினாளாம். ஆஞ்சநேயர் யார் ந்ந்திதான்.
‘கிமேஷ பகவான் ந்ந்தி? ‘ என்று ஓர்இடத்தில் இருக்கிறது. ராமனும் சீதையும் ஆஞ்சநேயருமாக வேஷம் போட்டு வந்தாலும் இவர்கள் பார்வதியும் பரமேஸ்வரனும் ந்ந்தி பகவானுமே.ஈஸ்வரனை இலங்ஙகைக்கு கொண்டுபோக முதலில் பண்ணின முயற்சி தோற்றுவிட்டது. இப்போது உலகுக்குக் காமியாக பெரிய அபச்சாரத்தை பண்ணினவன் போல தூக்கிக்கொண்டு போய்விட்டான். சாட்சாத் பராசக்திதான் ஶ்ரீராமன்.
இப்படி தேவாரத்தில்கூட சொல்லியிருக்கிறார்கள்.அப்பர் சுவாமிகள் ‘ அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே’ என்கிறார். ஐயாறு என்றால் ஐந்து ஆறு. பஞ்ச ந்தி ஷேத்திரம்.திருவையாற்றில் இருக்கும் ஈஸ்வரனுடைய தேவி விஷ்ணு தான் என்கிறார்.
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

ஆஞ்ஜநேயரால்தான் தாங்கள் காப்பாற்றப் பட்டது போல் ராமரும் சீதையும் சொல்லிக் கொண்டார்கள். ஸீதையின் ப்ராணனை ரக்ஷித்துக் கொடுத்தது, ஸீதைக்கும் மேல் தமக்கு ப்ரியமான லக்ஷ்மணன் மூர்ச்சையாய் விழுந்தபோது ஸஞ்ஜீவி கொண்டுவந்து அவனை எழுப்பினது முதலானவற்றுக்காகத் தாம் ஆஞ்ஜநேயருக்குத் தீர்க்கமுடியாத நன்றிக்கடன் பட்டிருப்பதாகவே ராமர் எப்போதும் சொல்வார். “ஆஞ்ஜநேயருக்கு எப்படி என்ன ப்ரத்யுபகாரம் பண்ணுவோம், பண்ணுவோம்?” என்றே ஸீதைக்கும் ஸதா இருந்தது.

ravi said…
இரண்டு பேருமாகச் சேர்ந்து என்ன பண்ணினார்களென்றால்:

அயோத்திலே கோலாஹலமாகப் பட்டாபிஷேகம் ஆனவுடன், ராமர் பல பேருக்குப் பல பரிசு தரும்போது ஒரு முக்தாஹாரத்தை ஸீதைக்குப் போட்டார். அவள் அதைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு, சுற்றியிருந்த அத்தனை பரிவாரங்களையும் பார்த்துவிட்டு ராமரையும் அர்த்த புஷ்டியோடு பார்த்தாள். இரண்டு பேரும் பரிபூர்ண ஐகமத்யம் [ஒரே சித்தம்] கொண்ட தம்பதி. அதனால் அவர்கள் மனஸுக்கு மாத்திரம் தெரிகிற மாதிரி ஆஞ்ஜநேயரை அந்தப் பெரிய ஸதஸிலே கொண்டாடுவதற்கு ஒரு ப்ளான் போட்டுக் கொண்டார்கள்.

ஸீதை ராமரைப் பார்த்த பார்வையாலேயே முக்தாஹாரத்தை அந்தப் பரிவாரத்திலே யாருக்குக் கொடுக்கலாம் என்பதற்கு அவருடைய அபிப்ராயத்தைக் கேட்டுவிட்டாள். உடனே ராமர், “பராக்ரமம், புத்தி, பணி எல்லாம் எவனுக்குப் பூர்ணமாக இருக்கிறதோ, அவனுக்கே கொடு” என்றார். பாராட்டிதழ் (‘ஸைடேஷன்’) படித்தவுடன் ‘அவார்ட்’ கொடுக்கிற மாதிரி, பேரைச் சொல்லாமலே ராமர் இப்படிச் சொன்னவுடன் ஸீதை மாலையை ஆஞ்ஜநேயருக்குக் கொடுத்துவிட்டாள்!

“ஹநுமானுக்குக் கொடு” என்று ராமர் நேராகச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் ‘அவருக்கு மட்டுமென்ன ஸ்பெஷல் அவார்ட்?’ என்று மற்றவர்களுக்குத் தோன்றலாம். ஆனால் இன்னார் என்று பெர்ஸனலாகப் போகாமல், ஆப்ஜெக்டிவ்-ஆகப் பல உசந்த யோக்யதாம்சங்களைச் சொல்லி அவற்றை உடையவனுக்கு அவார்ட் கொடுத்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது. அதனால்தான் உத்தமமான யோக்யதை எல்லாம் ஹநுமாரொருத்தரிடமே பூர்ணமாக ரொம்பியிருந்ததால் ராமர் இப்படி ஸாமர்த்யமாகச் சொன்னது.

பட்டாபிஷேக கட்டத்திலே இப்படி ஆஞ்ஜநேயருக்கு இரண்டு பேருமாகச் செய்ததற்கு ஈடு எதுவும் இல்லை.

ஒரு பெரிய மலைக்கு மேலே சந்திரிகையில் தாவள்யமாயிருக்கும் ஒரு மேகம் படிந்தால் எப்படியிருக்குமோ அப்படி அந்த முத்து மாலை ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பெரிய சரீரத்திலே புரண்டது.
ravi said…
தன் மனைவியை மாற்றான் ஒருவன் மனதாலும் நினைப்பதா?

ஒற்றை அம்பில் தாடகை வீழ்ந்தாள்! ஒரே அம்பு வாலியைத் துளைத்தது!

அப்படி இருக்க ஏன் ராவணனுக்கு மட்டும் இத்தனை அம்பு?

மண்டோதரி வாயிலாக பதில் வருகிறது!

ராவணன் போர்க்களத்தில் மாண்டு கிடக்கிறான்! அவன் உடல் முழுதும் - எள் கூட இருக்க இடமின்றி - ஆயிரக்கணக்கான அம்புகள் துளைத்துத் துளைத்து துளைத்து....

ஏன்? ஏன்? ஏன்?

"வெள் எருக்கம் சடைமுடியான் வெற்பு எடுத்த திருமேனி" - எருக்கம் பூக்களை சூடிக் கொள்ளும் சிவபெருமானின் வெற்பு - இமயம் - அதையே தூக்கிய உடல்வலிமை மிக்க ராவணனின் திருமேனி...

அதில்...

"எள் இருக்க இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறே..."- ஆம்! ராவணனின் உடலை மட்டும் நாடவில்லை ராமனின் அம்பு! அவனுடைய உயிரை நாடி உள்ளே சென்று இழைத்தது!

ஏனாம்?

"கள் இருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை மனச்சிறையில் கரந்த காதல் - உள் இருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?" - என்று புலம்புகிறோள் மண்டோதரி.

என் மனைவியை நீ இச்சித்தாய் அல்லவா? அந்த இச்சை உன் உடல் முழுவதும் பரவி நின்றதல்லவா? அதற்குதான் - நீ சீதையை இச்சித்த பாவத்துக்குத்தான்...

ஆயிரம் அம்புகளை உன் உடல் புகுந்து "தடவி" (சட்டைப் பைக்குள் ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பதற்கும் பாக்கெட்டை தடவிப் பார்க்கிறோமே அப்படி) - உடலின் எந்த மூலையிலாவது இன்னமும் உள்ளதா என்று "தடவி" தேடியதாம் ராமனின் அம்பு!

இதைத்தான் கண்ணதாசன் அழகாகச் சொன்னார்:-

"கள்ளிருக்கும் கூந்தலினாள் உள்ளிருப்பாள் என்று சொல்லிப் - பள்ளமிடும் ராகவனின் அம்பு - அது பாடல் அல்ல உண்மை என்று நம்பு!"

வாரணம் பொருத மார்பும், வரைவினை எடுத்த தோளும், நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த தாவும், தார் அணி மௌலி பத்தும்... - இத்தனையும் போய் நிராயுதபாணியாக நின்ற ராவணனை - "இன்று போய் நாளை வா!"- என்று ராமன் கூறிய போது தெய்வமாகிய திருமால் அவதார ராமனின் உள்ளிருந்து பேசிய அறக் கருணை!

"எள் இருக்க இடமின்றி உடல் புகுந்து அம்புகளால் தடவியது"- மனித அவதாரமாகிய ராமன் ஒரு சராசரிக் கணவனின் நிலையில் நின்று தன்னுடைய மனைவியை மனதில் இச்சித்தவனை - கூறு கூறாக வெட்டிச் சாய்த்த மறக் கருணை!

தனது அம்பின் பலம் எத்தகையது என்பதை சுக்ரீவனுக்கு - இலக்குவன் மூலம் சொல்லி அனுப்பியவன் ராமன்.

மாரிக்காலமும் முடிந்தது - ராஜ்யமும் வாலியிடமிருந்து ராமனின் துணையுடன் மீட்டாயிற்று - ஆனால் அனுப்பி வைப்பதாக வாக்குறுதியளித்த வானர சேனைதான் இன்னமும் வந்து சேரவில்லை!

"லஷ்மணா! போய்ச் சொல்! என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறான் சுக்ரீவன்? என்னுடைய ஒரு அம்பு எப்படித் துளைக்கும் என்று அறியாதவன்... போய்ச்சொல்!"

நஞ்ச மன்னவரை - விஷம் போன்ற கொடிய அரசர்களை...

நஞ்சம் அன்னவரை - விஷம் போன்ற மனிதர்களை...

நலிதல் என்பது வஞ்சம் அன்று - மனு வழக்கு! (அப்படிப் பட்டவர்களைக் கொல்லுதல் மானிட வழக்கமே).

"அஞ்சிலம்பதில் ஒன்றறியாதவன் - நெஞ்சில் சென்று நிலை நிறுத்துவாய்"

அருமையான மலையில் (அம் சிலம்பு) அமர்ந்தபடி பதில் ஒன்று அறியாதவன்!

அஞ்சு இல் அம்பு அதில் ஒன்று அறியாதவன் - அஞ்சிலம்பதிலொன்றறியாதவன்!

நம்புடைய அம்பு யாருக்கும் அஞ்சாது! அதில் ஒன்று எப்படி இருக்கும் என்று அறியாதவன்!

அஞ்சிலம்பதில் ஒன்று அறியாதவன் - நம்மிடம் இருக்கும் அம்புகளின் எண்ணிக்கை அஞ்சு இல்லை - அம்பது இல்லை - அஞ்சு இல்! அம்பது இல்! (ஆயிரக்கணக்கில் உண்டு) - அதில் ஒன்று அறியாதவன்!

இப்படித் தனது ஒரு அம்பின் வலிமை பற்றி விதந்தோதிய ராமன்தான் ராவணனைத் துளைக்க - பிறன் மனை இச்சித்த குற்றத்துக்காக ....

எள் இருக்க இடமின்றி - உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறு உடல் புகுந்து வாளியைத் "தடவ" ச் செய்தான்!

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்!
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

ஆஞ்ஜநேயரால்தான் தாங்கள் காப்பாற்றப் பட்டது போல் ராமரும் சீதையும் சொல்லிக் கொண்டார்கள். ஸீதையின் ப்ராணனை ரக்ஷித்துக் கொடுத்தது, ஸீதைக்கும் மேல் தமக்கு ப்ரியமான லக்ஷ்மணன் மூர்ச்சையாய் விழுந்தபோது ஸஞ்ஜீவி கொண்டுவந்து அவனை எழுப்பினது முதலானவற்றுக்காகத் தாம் ஆஞ்ஜநேயருக்குத் தீர்க்கமுடியாத நன்றிக்கடன் பட்டிருப்பதாகவே ராமர் எப்போதும் சொல்வார். “ஆஞ்ஜநேயருக்கு எப்படி என்ன ப்ரத்யுபகாரம் பண்ணுவோம், பண்ணுவோம்?” என்றே ஸீதைக்கும் ஸதா இருந்தது.

ravi said…
இரண்டு பேருமாகச் சேர்ந்து என்ன பண்ணினார்களென்றால்:

அயோத்திலே கோலாஹலமாகப் பட்டாபிஷேகம் ஆனவுடன், ராமர் பல பேருக்குப் பல பரிசு தரும்போது ஒரு முக்தாஹாரத்தை ஸீதைக்குப் போட்டார். அவள் அதைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு, சுற்றியிருந்த அத்தனை பரிவாரங்களையும் பார்த்துவிட்டு ராமரையும் அர்த்த புஷ்டியோடு பார்த்தாள். இரண்டு பேரும் பரிபூர்ண ஐகமத்யம் [ஒரே சித்தம்] கொண்ட தம்பதி. அதனால் அவர்கள் மனஸுக்கு மாத்திரம் தெரிகிற மாதிரி ஆஞ்ஜநேயரை அந்தப் பெரிய ஸதஸிலே கொண்டாடுவதற்கு ஒரு ப்ளான் போட்டுக் கொண்டார்கள்.

ஸீதை ராமரைப் பார்த்த பார்வையாலேயே முக்தாஹாரத்தை அந்தப் பரிவாரத்திலே யாருக்குக் கொடுக்கலாம் என்பதற்கு அவருடைய அபிப்ராயத்தைக் கேட்டுவிட்டாள். உடனே ராமர், “பராக்ரமம், புத்தி, பணி எல்லாம் எவனுக்குப் பூர்ணமாக இருக்கிறதோ, அவனுக்கே கொடு” என்றார். பாராட்டிதழ் (‘ஸைடேஷன்’) படித்தவுடன் ‘அவார்ட்’ கொடுக்கிற மாதிரி, பேரைச் சொல்லாமலே ராமர் இப்படிச் சொன்னவுடன் ஸீதை மாலையை ஆஞ்ஜநேயருக்குக் கொடுத்துவிட்டாள்!

“ஹநுமானுக்குக் கொடு” என்று ராமர் நேராகச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் ‘அவருக்கு மட்டுமென்ன ஸ்பெஷல் அவார்ட்?’ என்று மற்றவர்களுக்குத் தோன்றலாம். ஆனால் இன்னார் என்று பெர்ஸனலாகப் போகாமல், ஆப்ஜெக்டிவ்-ஆகப் பல உசந்த யோக்யதாம்சங்களைச் சொல்லி அவற்றை உடையவனுக்கு அவார்ட் கொடுத்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது. அதனால்தான் உத்தமமான யோக்யதை எல்லாம் ஹநுமாரொருத்தரிடமே பூர்ணமாக ரொம்பியிருந்ததால் ராமர் இப்படி ஸாமர்த்யமாகச் சொன்னது.

பட்டாபிஷேக கட்டத்திலே இப்படி ஆஞ்ஜநேயருக்கு இரண்டு பேருமாகச் செய்ததற்கு ஈடு எதுவும் இல்லை.

ஒரு பெரிய மலைக்கு மேலே சந்திரிகையில் தாவள்யமாயிருக்கும் ஒரு மேகம் படிந்தால் எப்படியிருக்குமோ அப்படி அந்த முத்து மாலை ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பெரிய சரீரத்திலே புரண்டது.
ravi said…
அன்பும் அடக்கமும் பண்புடன் வீரமும்

அவசியம் கற்றிட வேண்டியதே

தொண்புகழ் இராமர் கதை தினம் படித்திட

தோன்றிடும் செல்வமும் மாண்பு மிகும்

அத்தகை கதையினை எத்தனை முறையினும்

இனிதுற படித்திட இன்பமிகும்

பல்கலி தீர்த்திடும் இராமப் பிரபுவது
பாதம் பணிந்துமே பயன் பெறுவோம்

🍇🍓🍉🍎🍊🥭🫐😊
ravi said…
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 1 ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*
ravi said…
ஆஞ்சநேயர் கடலைத்தாண்டி இலங்கை சென்றது

( பேய் , பிசாசு , பில்லிசூனியம் நீங்குவதற்கு ).
ravi said…
||" ததோ ராவண நீதாயா: ஸீதாயா ; ஸத்ருகர்சன ;|

இயேஷ பதமன் வேஷ்டும் சாரநா சரிதே பதி ||

ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்து இருந்தார் ஸ்ரீ ஆஞ்சநேயர் -

நேரம் ஓடிக்கொண்டே இருந்தது -

ராம நாமம் உதடுகளை இறுக்க கட்டிக்கொண்டது -

நெஞ்சிலே ஏக்கம் - எங்கே ஐயனின் வருத்தத்தை தீர்க்காமல் போய் விடுவேனோ என்ற பயம் -

பயத்தையே பந்தாக செய்து காலால் எட்டி உதைக்கும் அந்த ஆஞ்சநேயருக்கு அன்று பயம் விசுவரூபம் எடுத்து மிரட்டியது..

தன்னம்பிக்கை அவரைவிட்டு தயங்கி தயங்கி வெளியே சென்று கொண்டிருந்தது -

சற்று தூரத்தில் ஜாம்பவான் ஆஞ்சநேயரையே பார்த்துக்
கொண்டிருந்தார் 

மெதுவாக அவரிடம் சென்று

"வாயு புத்திரா -- இன்னும் ஏன் மௌனம் சாதிக்கிறாய் --?

உன்னால் முடியாது என்று ஒன்று இருந்தால் அது ஒன்றே ஒன்றுதான் --

ராமபிரானின் கவலையை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது --

அவர் தோல்வி அடைவதை உன்னால் சகித்துக்கொண்டு இருக்க முடியாது --

அவன் துணைவி சீதாபிராட்டியை இலங்கையில் இருந்து உடனே அழைத்து வராமல் இங்கு அமைதியாக உட்க்காந்து இருக்க முடியாது ...  

எழுந்திரு! உன் பலம் இமயமலையைப்
போன்றது ---

உன் விவேகம் இந்த கடலின் அகலத்தை விட அதிகம் -

உன் சக்தி மூவுலகத்திலும் காண முடியாத சக்தி -

மற்றவர்களின் கண்ணீரை துடைக்க வந்தவனே -

உன் கண்ணீரில் ஏன் கரைந்துகொண்டிருக்கிறாய் ----- 

ஜாம்பவான் சொல்ல சொல்ல அனுமாரின் உருவம் விஸ்வரூபம் எடுத்துக்
கொண்டிருந்தது  --

தேவர்கள் தூவிய மலர்களை தன்  வளர்ந்த 
கைகளாலே பெற்றுக்கொண்டார்

---  அங்கே இருந்த மகேந்திர மலை அவரின் பாதங்களில் அடிப்பட்டு உடைந்துக்கொண்டிருந்தது -

உடல் அவர் மனம் போல பெருகியது -

ராம நாமம் இரண்டு பக்கமும் அவருக்கு சிறகுகளாக மாறின --

மலைகளில் இருந்த விலங்குகள் , பறவைகள்  

*ராமா ராமா* --  உன் திருநாமத்தை சொல்வதில் தான் எத்தனை சக்தி பிறக்கிறது என்று சொல்லிக்கொண்டே ஓடின ---

வீறிட்டு எழுந்தார் ஆஞ்சநேயர் --

அடுத்த நிமிடம் வானமே அவருக்கு ஒரு பாயாக மாறியது .

மைநாகம் என்ற மலை கடலில் உருவாகி அவரை தடுத்தது ;

தன்  மீது தங்கி இளைப்பாற கெஞ்சியது -

அவரின் கடமை தடுத்தது --

எவ்வளவு தடைகள் , எவ்வளவு துன்பங்கள் எடுத்த காரியத்தில் --- அனைத்தும் அவரிடம் சரணடைந்தன -

ராம நாமம்  நெஞ்சிலே - உண்மை அன்பு கண்களிலே ,  உயரிய நோக்கம் செல்லும் பாதையிலே ---- *சுரஸை* என்ற அரக்கியும் அனுமாருக்கு வாழ்த்து சொன்னாள்

--- 100 யோஜனை தூரமான கடலை , ராமரை பற்றிய யோசனையில் மட்டுமே கவனம் செலுத்தி கடலை கடந்தார் -

இலங்கை அவரை வரவேற்றது .....

|ஸ ஸாகரம் தானவ - பன்ன காயுதம் 
பலேன விக்ரம்ய மஹோர் மிமாலினம் 
நிபத்ய தீரே ச மஹோத தேஸ் ததா 
ததர்ச லங்காம் அமராவதீ மிவ ||🥇🥇🥇
ravi said…
முதல் முறையாக அனுமாரின் வருகை கண்டு

தென்றல் தையிரியமாக வெளிவந்தது

அவர் பாதங்களை நமஸ்க்கரித்தன.. பறவைகள்  எல்லாம்

*ராம் ராம்* என்று சொல்ல ஆரம்பித்தன

- வருணன் தன் பங்கிற்கு ஓடிவந்து அவர் பாதங்களை அலம்பிவிட்டான் --

ஓடிக்கொண்டிருந்த விலங்குகள் சந்தோஷமாக இலங்கைக்கு இனி விடிவு காலம் என்று பெருமைப்
பட்டுக்கொண்டன -

முதல் முறையாக , முறையாக மெல்லிய இசையில் அங்கே ருத்திரமும் , சாம வேதமும் ஒலித்துக்
கொண்டிருந்தன -

எப்பேர் பட்ட சிவ பக்தன் இந்த இராவணன் -

ஏன் இவன் புத்தி இப்படி கீழ்த்தரமாக போகவேண்டும் -----

எல்லாம் விதி --

ஒரே ஒருமுறை அவன் காதுகளில் என் நாயகன் பேரைச்சொன்னால் அவன் திருந்திவிடக்கூடும் --

அவன் நன்றாக வாழ நாம் ஏன் உதவி பண்ணக்கூடாது ---?

இப்படியெல்லாம் நினைத்துக்
கொண்டே

அந்த வீதிகளை வலம் வந்தார்.

அங்கே பார்ப்பவர்கள் எல்லோருமே பயங்கரமாக இருந்தாலும்,

வேதம் படித்தவர்களாகவும், மற்ற இசைகளின் ஞானம் உள்ளவர்களாகவே காணப்பட்டார்கள் ---

இலங்கை மிகவும் அழகாக திரிகூட மலையின் மேல் கட்டப்பட்ட நகரம் -

அந்த இலங்கைக்கு அழகு எப்படி வந்தது என்பது தெரியுமா?

சிவநாமத்தை ராம நாமம் போல ஒவ்வொரு நாழிகையும் ஜெபித்துக்கொண்டு இருப்பவன் இராவணன் --

காம்போதி ராகத்தினால் அந்த ஈசுவரனையே மயக்கியவன் --

எங்கே சிவம் இருக்கிறதோ அங்கே அன்பும், அழகும் கூடவே வந்துவிடும் என்பதை இலங்கை மூலமாக நிரூபித்தான் இலங்கை வேந்தன் இராவணன்--

விஸ்வகர்மாவினால் குபேரனுக்காக கட்டப்பட்ட இலங்கை நகரத்தை குபேரனிடம் இருந்து பிடுங்கிக்
கொண்டவன் இராவணன்

குபேரனனின் ஐஸ்வரியங்களும் , சேனா பலமும் இராவணனிடம் வந்து விட்டன

சிறிய சிறிய உருவங்களாகவும் , கண்ணுக்கே தென் படாத உருவங்களாகவும் இரவில் சந்திரனின் துணையுடன் அன்னை இருக்கும் இடத்தை தேட ஆரம்பித்தார் அந்த அஞ்சனி மைந்தன் --

ராம நாமம் அவரை ஒரு கவசமாக இருந்து காப்பாற்றிக்
கொண்டு வந்தது -

உதடுகளில் ராம நாமம் -

கண்களில் அன்னையின் பிம்பம் ,

நெஞ்சிலே அன்னையை கண்டு பிடித்துவிடுவோம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை

கால்களில் ஒரு புத்துணர்ச்சி -

வாலிலே ஓம் என்ற பிரணவம் ,

கைகளிலே பணிவான அடக்கம்

இவை அனைத்தையும் தனக்குள் அடக்கிக் கொண்டு மரத்திற்கு மரம் தாவினார் -

அவர் தாவின ஒவ்வொரு மரமும் தங்கள் பிறவிப்பயனை அடைந்தன -

பிறவியே இல்லாத ஒரு பெரும் பாக்கியம் அந்த மரங்களுக்கு கிடைத்துக்கொண்டு வந்தன அந்த சங்கர சுவன , கேசரி நந்தனின் திருப்பாதங்கள் பட்டதின்  மூலம் ---

||சங்க ப்ரபம் க்ஷீரம்ருணா லவர்ண
முத்கச்சமானம் வ்யவாபாஸ மானம் |

|| ததர்ச சந்த்ரம் ஸ கபிப்ரவீர 
போப் லூய மானம் ஸரஸீ வ ஹம்சம் ||👍👍👍
ravi said…
*_சீதையும் சிவதனுசும்_* 🏹

தோழிகள் உறுதி மொழி தந்தனர்

மாட வீதியில் நடந்த மன்மதன் நாளை முறிப்பான் சிவ தனுசுவை

சீதை காதில் விழுந்தது ...

சீறி பாய்ந்தது மடை திறந்த வெள்ளம் எனக் கண்ணீர் ...

ஓடினாள் சிவதனுசு இருக்கும் இடம் நோக்கி

*அண்ணா* ...

உண்மை இதுவெனில் என் பெண்மை தீ குளிக்கும் ...

வேண்டாம் எனக்கு திருமணம் ..

உனைக் கொன்று என் வாழ்க்கை மலர வேண்டாம்

உடன் பிறந்தோம் உயிர் கலந்தோம்

பிரிக்க முடியுமோ நம்மை ...

காலனுக்கு சக்தி உண்டோ .. கதிருக்கு அழிவுண்டோ ...

*சிவதனுசு பேசியது* 🏹

*சீதே*

உண்மை நம் உறவு பிரிக்க ஊரார் ஒருவர் உண்டோ ...

உனக்காக பிறந்தேன் .. உன்னுடன் வளர்ந்தேன் ...

நீ வாழ வேண்டும் ...

நீ சிந்தும் கண்ணீரில் ஆனந்தம் ஒன்றே நான் காண வேண்டும்

வாழும் வாழ்க்கையில் அர்த்தம் ஒன்று வேண்டும் ..

பிறருக்கு வாழும் வாழ்க்கை அதற்கு ஈடு உண்டோ ...

கற்பூரம் தனை அழித்து தீபம் காட்டுமே

ஊதுபத்தி மணம் தந்து பிறர் மனம் புகுமே

மெழுகுவர்த்தி தனை அழித்து அழியாமல் வாழுமே !!

கதிரவன் பிறர் புகழ்ச்சி கேட்க தினம் உதிப்பதில்லையே !!

*_சீதை_*

உனை இழந்து உயிர் வாழ்வேன் என்றே நினைத்தாயோ ?

*சிவதனுசு* 🏹

நான் போவது எங்கே *சீதா* ...

உனை பிரியினும் உயிர் வாழ்வேன் உன்னுடனே ...

*சீதை*

எப்படி இது முடியும் *அண்ணா*?

*சிவதனுசு* 🏹

உன் கணவன் உத்தமன்

அவன் நாமம் அவனிலும் உத்தமம் ...

முறிந்த பின் அவன் கோதண்டம் ஆவேன் ..

அதில் கட்டும் மணி தனில் உன் மணி சிரிப்பை ரசித்திடுவேன் ...

கண்ணில் மணி போல

மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோம்

இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியமா ?

நம்
உறவைப் பிரிக்க முடியமா ?

எந்த சக்தி கொண்டும் ??

*சீதை* ...

அண்ணா

உனை பெற்றேன் ராமன் கிடைத்தான் ...

ராமன் இருக்க சிவ நாமம் மறைவது சாத்தியம் இல்லை என்றே உணர்கிறேன் ...

சாய்ந்தாள் கோதை சிவ தனுசுவின் தோளில்

இல்லை இல்லை பிறவா அண்ணன் மார்பில்

தெறித்து கங்கை என ஓடியது அவள் சிந்திய ஆனந்த கண்ணீர்
மிதிலை எங்குமே 💐💐💐💦💦💦🏹🏹🏹
ravi said…
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
அறம்புகும் மறைமிகும் ஆண்மை நிறைந்திடும்

அழகிய மாநகர் மன்னவராம்

திசையது பத்திலும் தேரை செலுத்திடும்
தூய்மை மிகுந்தவன் தசரதனாம்

அத்தகை மன்னவன் புத்திரர் இன்மையால் அறம் தரும் வேள்விகள் ஆற்றினரே

பல்கலி தீர்த்திடும் இராமப் பிரபுவது

பாதம் பணிந்துமே பயன் பெறுவோம்
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 2 ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*
ravi said…
*இலங்கையின் நகர தேவதையை ஜெயித்தல்🐒*
ravi said…
ஸலம்ப சிகரே லம்பே லம்ப தோயத ஸந்நிபே |

ஸத்வமாஸ்தாய மேதாவீ ஹனுமான் மாருதாத்மஜ: ||

ஆஞ்சநேயரை பிரிய அந்த நிலவிற்கு மனமே இல்லை,

மரங்களும் அதில் வாழும் பறவைகளும் அவர் அங்கேயே தங்கிவிட மாட்டாரா என்று ஏங்கின ...  

இரவு நகர்ந்து
கொண்டிருந்தது --

ஆஞ்சநேயரோ அந்த இலங்கையின் அழகில் தன்னை இழந்து
கொண்டிருந்தார் 

பெருத்த இடியோசை அங்கே⚡⚡

வானைப்பிளக்கும் அளவிற்கு எதிரொலித்தது --

அந்த சப்தத்தில் பல பறவைகள், விலங்குகள் இந்த விண்ணை விட்டு பரலோகம் சென்றன --

*யாரடா வானரமே நீ? எங்கு வந்தாய்? எதற்க்காக வந்தாய்? எந்த நோக்கத்துடன் வந்தாய்?* *யாரைப்பார்க்க வந்தாய்??  -*

கேள்விக்கணைகள் ஆஞ்சநேயரை சிறிது நேரம் மௌனமாக்கியது -  

" *தாயே* என் பெயர் அனுமன் என்பர் --

இலங்கையில் என் ராமனின் துணைவி சீதாப்பிராட்டி அடைக்கப்
பட்டுள்ளாள் -

அவளைத்தேடியே வந்துள்ளேன் -

உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும் ""

பணிவுக்கு பணிவை சொல்லிக்
கொடுத்துக்
கொண்டிருந்தார். 

"என்ன தையிர்யம் உனக்கு? என் அனுமதி இல்லாமல் இந்த நகரத்தில் ஒரு புழு பூச்சி நுழைய முடியாது?  

எனக்கு கோபம் வருவதற்குள் ஓடிப்போய் விடு -

பார்த்தால் என் விரல் அளவிற்கு கூட நீ இல்லை -

உன்னை மன்னித்து விட்டேன் -

நீ வந்த வேளை நல்லவேளை என்று உணர்ந்துகொண்டு ஓடிப்போய் -

இனி உன்னை நான் எங்குமே பார்க்கக்கூடாது ---"  

*தாயே*

பெண்களுக்கு உரிய அத்தனை சாமுகா லக்க்ஷணங்களும் 
உங்களிடம் இருக்கிறது

(அனுமான் தனக்கு நிறைய நகைச்சுவை திறமை உள்ளது என்பதை இந்த இடத்தில் எடுத்துக்காட்டுகிறார்)

தாங்கள் யார் என்பதை இந்த சிறுவன் தெரிந்து
கொள்ளலாமா?

"டேய் பொடியனே -- முதலில் நீ இவ்வளவு நேரம் என்னிடம் பேசிக்
கொண்டிருப்பதே தவறு -

நான் இலங்கையின் காவல் தேவதை --

என்னை வெல்ல நானே பிறந்து வந்தால் தான் முடியும் --" 

" *தாயே*

சீதை அன்னை எங்கிருக்கிறாள் 
என்பதை மட்டும் தாங்கள் சொல்லிவிட்டால்

அந்த தாயை பார்த்துவிட்டு ஓடி விடுகிறேன்". 

ஒரே அடி -- ஆஞ்சநேயர் கீழே சுருண்டு விழுந்தார் --

இவ்வளவு சொல்கிறேன் -

இன்னும் ஓடாமல் கேள்விகளைக்
கேட்டுக்கொண்டு இருக்கிறாய் --- 

சமாளித்து எழுந்து ஜய  ஸ்ரீராம் என்றே சொல்லிக்கொண்டே 

அந்த அரக்கியை மெதுவாக ஒரு குத்து குத்தினார் --

கதறிக்கொண்டு கீழே சாய்ந்தாள் இலங்கையின் காவல் நாயகி -

பிரம்மன் கொடுத்த சாபம் நினைவிற்கு வந்தது -

ஒரு வானரத்தால் எப்போ அடிப்பட்டு விழுகிறோமோ அன்று முதல் இலங்கை நிலை குலைய ஆரம்பித்துவிடும் என்று -

அனுமனை ஆசீர்வதித்துவிட்டு மறைந்துபோனாள் ... 

|| ப்ரவிச்ய சாபோப ஹதாம் ஹரீஸ்வர 
புரீம் சுபாம் ராக்ஷ ஸ ராஜ பாலிதாம் |
யத் ருச்சியா த்வம் ஜனகாத் மஜாம் ஸதீம் 
விமார்க்க ஸர்வத்ர கதோ யதாஸூ கம் ||

🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
ravi said…
🌺🌺🌺🌺🌺🌺🌺
When Valmiki completed his Ramayana, Narada wasn't impressed. 'It is good, but Hanuman's is better', he said.

'Hanuman has written the Ramayana too!', Valmiki didn't like this at all, and wondered whose Ramayana was better.

So he set out to find Hanuman.

In Kadali-vana, grove of plantains, he found Ramayana inscribed on seven broad leaves of a banana tree.

He read it and found it to be perfect.

The most exquisite choice of grammar and vocabulary, metre and melody. He couldn't help himself. He started to cry.

'Is it so bad?' asked Hanuman

'No, it is so good', said Valmiki

'Then why are you crying?' asked Hanuman.

'Because after reading your Ramayana no one will read my Ramayana,' replied Valmiki.

Hearing this Hanuman simply tore up the seven banana leaves stating
"Now no one will ever read Hanuman's Ramayana.'"

Valmiki was shocked to see this action of Hanuman and asked him why he did this,

Hanuman said, 'You need your Ramayana more than I need mine.

You wrote your Ramayana so that the world remembers Valmiki;

I wrote my Ramayana so that I remember Ram.'

At that moment he realized how he had been consumed by the desire for validation through his work.

He had not used the work to liberate himself from the fear of invalidation.

He had not appreciated the essence of Ram's tale to unknot his mind.

His Ramayana was a product of ambition;

but
Hanuman's Ramayana was a product of pure devotion & affection.

That's why Hanuman's Ramayana sounded so much better.

That is when Valmiki realized that "Greater than Ram .... is the name of Ram!"

There are people like Hanuman who don't want to be famous.

They just do their jobs and fulfill their purpose.

There are many unsung "Hanumans" in our life too, our spouse, mother, father, friends, let's remember them and be grateful to all.

In this world, where everyone is highlighting his work and seeking validation, let just do our karma because he who matters, the almighty God, knows without telling him and in the end, it is actually just he who matters.

Stay Blessed.
சந்திரமௌலி said…
A wonderful story and nice message 🙏. Many times in life, in school, in corporate world whether we like or not, we look for others' feedback . Thanks for this story, now I feel I am ok 😊🙏
சவிதா said…
அருமை
பாசமலரை இனைத்தது அற்புதம்🌷🌷🌷🌷🌷🙏🏻
அமிர்தவல்லி said…
நமஸ்காரங்கள் ! புல்லரித்தது மிகவும் அருமை
ravi said…
[30/03, 13:41] Sowmya Balasubramanian: 👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
[30/03, 14:16] V Rajeswari: Very divine. Thanks for sharing
[30/03, 14:37] Deepa Srinivasan: மிக அருமையாக இருந்தது🙏🙏🙏🙏🙏
[30/03, 14:51] Subha W: நன்றாக இருந்தது
ravi said…
மதன = அழித்தல் - நாசமாக்குதல்

*❖ 157 ராகமதனீ =* லோகாபிலாஷைகளை அழித்து ரக்ஷிப்பவள்
ravi said…
குங்குமத்தின் நிறத்தை ஒத்து உதிக்கும் சூரியனைப் போன்ற திருமேனி கொண்டவள் அன்றோ நீ

முக்கண்ணனுக்கு மூன்று கண்ணாய் இருப்பவளும் நீ ,

சிவந்த மாணிக்கத்தை சிரசிலும்,

நட்சத்திரத்தின் தலைவனான சந்திரனை

உச்சியில் தரித்தவளும் நீ

மந்தஹாச புன்னகை சிந்துபவளும்,

திண்மையான நெஞ்சை உடையவளும்,

கைகளில் தேன் நிரம்பிய ரத்ன கிண்ணத்தையும்,

சிவந்த மலர்களையும் கொண்டவளும் நீ

சிவந்த பாதத்தை ரத்னக்குடத்தில் இருத்தி வீற்றிருப்பவளும்,

சௌந்தர்யம் பொருந்தியவளும் நீ

சூரிய அருணோதயத்தின் நிறத்தையொத்தவளும்,

அருட்கண்களால் கருணை அலையை தவழ விடுபவளும்,

பாசம், அங்குசத்தை தரித்தவளும் நீ

புஷ்பத்தாலான அம்புகளையும்

கரும்பு வில்லையும் சுமந்தவளும்,

அஷ்டமாசித்திகளால் சூழப்பட்டவளும்,

ஒளிக்கதிரென மிளிர்பவளும் நீ

பெரும் மஹத்துவத்தையுடையவளும்

பத்மத்தில் வீற்றிருப்பவளும்,

ஒளிரும் திங்களென முகமுடையாளும் நீ

தாமரை இதழ்களையொத்த கண்களைக் கொண்டவளும்,

பொன்னென ஜொலிப்பவளும்,

பிராகாசிக்கும் பட்டாடை தரித்தவளும்,

கைகளில் மிளிரும் தங்கத் தாமரையை பிடித்திருப்பவளும் நீ

சகலவித ஆபரண அலங்காரத்துடன் பூரித்திருப்பவளும்

பத்மத்தில் வீற்றிருப்பவளும்,

ஒளிரும் திங்களென முகமுடையாளும் நீ

தாமரை இதழ்களையொத்த கண்களைக் கொண்டவளும்,

பொன்னென ஜொலிப்பவளும்,

பிராகாசிக்கும் பட்டாடை தரித்தவளும்,

கைகளில் மிளிரும் தங்கத் தாமரையை பிடித்திருப்பவளும் நீ

சகலவித ஆபரண அலங்காரத்துடன் பூரித்திருப்பவளும் நீ

நீயின்றி நான் வாழ்தல் முடியுமோ அம்மா

உன் நினைவின்றி வாழுதல் உயிர் இன்றி வாழும் உடல் அன்றோ அம்மா 👍🙏
ravi said…
[02/04, 10:48] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 120*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 8
[02/04, 10:50] Jayaraman Ravikumar: விராவைர்மாஞ்ஜீரை: கிமபி கத²யன்தீவ மது⁴ரம்

புரஸ்தாதா³னம்ரே புரவிஜயினி ஸ்மேரவத³னே ।

வயஸ்யேவ ப்ரௌடா⁴ ஶிதி²லயதி யா ப்ரேமகலஹ-

ப்ரரோஹம காமாக்ஷ்யா:
சரணயுக³லீ ஸா விஜயதே ॥8🍓🍓🍓
[02/04, 10:51] Jayaraman Ravikumar: யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
[02/04, 10:51] Jayaraman Ravikumar: विरावैर्माञ्जीरैः किमपि कथयन्तीव मधुरं
पुरस्तादानम्रे पुरविजयिनि स्मेरवदने ।
वयस्येव प्रौढा शिथिलयति या प्रेमकलह-
प्ररोहं कामाक्ष्याः चरणयुगली सा विजयते ॥
[02/04, 10:56] Jayaraman Ravikumar: காமாக்ஷியின் இரு பாதத் தாமரைகள் ... பரமசிவன் உன் பாதங்களை அன்றோ தன் நெஞ்சில் வைத்துக்
கொள்கிறான் ...!!

உன் பொய் கோபத்தை ஒன்றுமே இல்லாமல் பரமேஸ்வரன் செய்து விடுகிறான் ...

உங்கள் ஊடல் என்பது அதி சுந்தரம் ...

இதைக்கான சமாதானம் செய்கின்ற சாக்கில் எல்லா தேவர்களும் அங்கு வந்து உங்கள் சுந்தர நாடகத்தை ரசிக்கிறார்கள் 🙏🙏
ravi said…
[02/04, 10:30] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 526* 🙏🙏🙏started on 7th Oct 2021

*237 வது திருநாமம்*
[02/04, 10:32] Jayaraman Ravikumar: *64 கலைகள் என்னவா?*

அது இவை தான். 1 கீதம், 2. வாத்தியம், 3 நிருத்யம், 4. நாட்யம், 5. ஆலேக்யம் .6.விசேஷக சேத்யம். 7. தண்டூல குஸும பலிவிகாரா,8, புஷ்பாஸ்தரணம் 9. தசாநா வாசனங்காரகா-கர்மா, 10. மணி பூமிகா கர்மா, 11 சயன ரசனம் 12. உதக வாத்யம் 13 உதக கடம் , 14. சித்ர யோகா, 15. மால்ய கிரந்தன விகல்பா, 16, கேஸாசேகரா பீடயோஜனம் 17 நேபத்ய யோகா 18. கர்ண பத்ர
பங்கா 19. கந்தயுக்தி 20. பூஷணயோஜனம் 21. இந்த்ரஜாலம் 22 கௌசுமாரா யோகம் 23 ஹஸ்த
லாகவம் 24 சித்ர சாகாபூப பக்ஷ்ய விகார க்ரியா 25. பானகர சராகாசவ யோஜனம்
26. சூசி வாபகர்மா 27.வீணா டமருக சூத்ர கிரீடா, 28. ப்ரஹெலிகா 29.ப்ரதிமா 30. துர்வசகயோகா 31. புஸ்தகவாசனம் 32 நாடகாக்யாயிக தர்சனம் 33 காவ்ய ஸமஸ்யாபுராணம். 34 பட்டிகாவேத்ர பாண விகல்பா 35 தர்க்கு கர்மாணி 36 தக்ஷணம், 37. வாஸ்து வித்யா, 38 ரூப்ய ரத்ன பரிக்ஷா 39 தாது வாதம் 40 மணிராக ஞானம் 41 ஆகார ஞானம் 42 வ்ருக்ஸாயுர்வேத யோகம் 43 மேஸ குக்குட லாவக யுத்தவிதி . 44 சுகசாரிக ப்ரலாபனம் 45 உத்ஸாடனம் 46 கேச மார்ஜன கௌசலம் 47 அக்ஷர முஷ்டிகாக தனம் 48 ம்லேச்சிதக விகல்பா. 49 தேசபாஷா ஞானம் 50. புஷ்ப சகதிகா நிமித்த ஞானம் 51 யந்த்ரமாத்ரிகா 52 தாரண மாத்ரிகா 53 சம்பாத்தியம் 54 மானசி காவ்ய க்ரியா 55 க்ரியா விகல்பா 56 சலிதகயோகம் . 57 அபிதான கோசச்சந்தோ ஞானம். 58. வஸ்திர கோப னானி.
59. த்யுத விசேஷம் 60. ஆகர்ஷண கிரீடா 61. பாலகிரீடன கானி 62. வைணாயி கினாம் வித்யானாம் நானம் 63.வைஜயகீனாம் 64 வித்யானாம் ஞானம்.

ஒரு விஷயம்.

இந்த 64ம் ஆளுக்கு ஆள் மாறுகிறது என்பது ஞாபகம் இருக்கட்டும்.

தமிழில் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் என்று கம்பர் சொல்லும்போது அந்த 64 கொஞ்சம் வேறுபடும்,

உதாரணமாக பிள்ளையாருக்கே தமிழ் மாநிலத்தில் இருக்கும் பெயர் வடக்கே வேறே மாதிரி இல்லையா?
ravi said…
*ராமனும் குகனும்*

உன் பாதம் என் படகில் பட்டே கங்கையினிலும் அதி புண்ணியம் பெற்றதே *ராமா* ...

கரை சேர்ப்பவன் நீ எனை அக்கரை சேரக் கேட்டாய் ...

அக்கறைக் கொண்டே எக்குறையும் இல்லா உனை
அக்கரை சேர்த்தேன் *ராமா*

சர்க்கரை போன்று சொன்னாய் ஒரு வார்த்தை

உன்னுடன் சேர்த்தே நாம் *ஐவர்* என்றாய்

உதவி பெரிதாய் ஒன்றும் செய்யா என்னுடன்

உன் உயிரை வைத்தாய் ...

உலகம் போற்றும் குணங்கள் என்னுள் பொதித்தாய் *ராமா*

தினை மாவும் மலைத் தேனும் பொறித்த மீனும் தந்தேன்

சிரித்து கொற்றவனாய் ஏற்றுக்கொண்டாய் ...

வேட்டை மட்டுமே ஆடும் எனை

இன்று நீ வேட்டை ஆடி விட்டாய் ..

விலங்காய் இருந்த என்னை

விலங்கு அணிந்து உன் நெஞ்சமதில் சிறை செய்தாய் ...

இப்பிறவி ஒன்றே போதும் ராமா ...

நான் செய்த பாவம் இன்னும் ஒர் பிறவி தரும் என்றால்

உனை மறவா பிறவி வேண்டும் ...

உன் சேவை புரிந்திட வேண்டும்

உன் நாமம் ஒன்றே என் நாவை தாலாட்ட வேண்டும் *ராமா* ..

வேண்டிலேன் வேறொன்றும் ...

*ராமன்* *சிரித்தான்*😊 ...

ஐவரில் ஒருவன் நீ என்றேன் ..

*நம சிவாய* வில் எல்லா எழுத்தும் முக்கியம் அன்றோ ..

நீ என் முக்கியம் என்றால்

உன் முக்திக்கு பின் வேறு பிறவி உண்டோ சொல் *குகனே* என்றான் ...

சாய்ந்தான் குகன் ராகவன் மடியில் ...

தாயின் மடி சுகம் கண்டான் அங்கே 🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
ravi said…
[01/04, 17:33] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 119 started on 6th nov

*பாடல் 36 ... நாதா, குமரா நம* 🪷🪷🪷

(சிவபெருமானுக்கு உபதேசித்த பொருள் எது?)

நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?

வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்

பாதா குறமின் பத சேகரனே.👆👏
[01/04, 17:36] Jayaraman Ravikumar: சிவம் என்கிற பரம் பொருள் தனது
சொரூப நிலையில் அருவாய் நிர்விகாரமாய் இருக்கும்.

அதற்கு
நான் என்கிற தன்மையே இல்லை.

வேதாந்தத்தில் பிரம்மம்
மாயையின் பிரதிபலிப்பாய் ஈஸ்வரன் என்கிற நிலைக்கு
வருகிறது.

பிரம்மப் பொருள் தன்னோடு அபின்னமாய் இருக்கும்
சக்தியின் அதிஷ்டானத்தால் உருவம் பெறுகிறது.

அபின காளி தானாட .. ' என்று அருணகிரியார் குறிப்பது
இதைத் தானோ?

சிவம் சிவன் ஆகிறது. இந்த சக்தியின்
தன்மைக்கு சலன ரூபமாய் (vibrations) இருக்கும்.

அசைவு
இருந்தால் ஓசையும் வரும்.

சிவத்திலிருந்து சக்தி பிரியும்போது
உண்டாகும் அசைவே பிந்து என்றும் அதன் ஓசையே நாதம்
என்றும் கூறப்படுகிறது.

இந்த ஓசையே பிரணவம்.

கிரேக்க
தேசத்தவரும் இதையே (sphota) என்கிறார்கள்.

இதன்படி
நிர்விகாரமாய் இருந்த பிரம்மம் சலனமாகும்போது எழும் நாதமே
பிரணவம்.

முருகன்தான் அந்த நாதத் தத்துவம்.

'நாதத்
தொனியோனே' என்பார் அருணை முனிவர்.👍👍👍
ravi said…
[01/04, 17:29] Jayaraman Ravikumar: வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

ஸமாத்மா
ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏

110
[01/04, 17:30] Jayaraman Ravikumar: அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து,

“சுவாமி! மன்னிக்க வேண்டும். தாங்கள் சொல்வதை அடியேனால் ஏற்கமுடியவில்லை.

ஆண்டாள் நாச்சியார் சாட்சாத் பூமாதேவியின் அவதாரம்.

அவளுடைய பக்தி என்பது பெரிய சிகரம் போல.

எங்களுடைய பக்தியெல்லாம் வெறும் கூழாங்கல் போலத்தான்.

அவ்வாறிருக்க, மிகவுயர்ந்தவளான
ஆண்டாளுக்கு அருள்புரிந்ததைப் போலவே,
மிகத்
தாழ்ந்தவர்களான எங்களுக்கும் திருமால் அருள் புரிவார்
என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?” என்று கேட்டார்.🍇
ravi said…
[01/04, 17:18] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*73வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
[01/04, 17:18] Jayaraman Ravikumar: பூ4தா3ரதா-முத3வஹத்3-யத3பேக்ஷயா ஸ்ரீ-

       பூ4தா3ர ஏவ கிமதஸ் ஸுமதே லப4ஸ்வ |

கேதா3ர-மாகலித-முக்தி-மஹௌஷதீ4னாம்

       பாதா3ரவிந்த3-ப4ஜனம் பரமேச்வரஸ்ய ||                                 73

       
[01/04, 17:26] Jayaraman Ravikumar: என் நல்ல புத்தியே !

திருமால் வராஹ அவதாரம் எடுத்து பரமேஸ்வரனின் பாதங்களை காணச் சென்றார் .

உலகமே விரும்பும் முக்தி எனும் செடி வளரும் விலை நிலம் அதாவது பரமேஸ்வரனின் திருப்பாதங்கள்

இதை அடையதான் நீ முயற்சி செய்ய வேண்டும் ..

23 வது ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் சொல்கிறார் சுவாமி எனக்கு பிரம்மத்தவம் விஷ்ணுத்தவம் தந்து விடாதே

அப்படி கிடைத்தால் ஹம்ச பறவையின் மீது அமர்ந்தோ இல்லை வராக ரூபம் எடுத்தோ உன் திருவடிகளை தேட வேண்டியிருக்கும் ...

உன் அருகில் இருந்து உன் திருவடிகளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் 👍
ravi said…
[01/04, 12:40] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 121*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 7
[01/04, 12:40] Jayaraman Ravikumar: நயன்தீ ஸங்கோசம் ஸரஸிஜருசம் தி³க்பரிஸரே

ஸ்ருஜன்தீ லௌஹித்யம் நக²கிரணசன்த்³ரார்த⁴க²சிதா ।

கவீன்த்³ராணாம் ஹ்ருத்கைரவவிகஸனோத்³யோகஜ³னநீ
ஸ்பு²ரன்தீ காமாக்ஷ்யா:

சரணருசிஸன்த்⁴யா விஜயதே ॥7॥
[01/04, 12:41] Jayaraman Ravikumar: नयन्ती सङ्कोचं सरसिजरुचं दिक्परिसरे
सृजन्ती लौहित्यं नखकिरणचन्द्रार्धखचिता ।
कवीन्द्राणां हृत्कैरवविकसनोद्योगजननी
स्फुरन्ती कामाक्ष्याः चरणरुचिसन्ध्या विजयते ॥
ravi said…
இந்த ஸ்லோகத்தில் அம்பிகையின் பாத கமலங்களின் செம்மை நிறம், சிவந்த தாமரையின் காந்தியையும் வெல்லக் கூடியதாக விளங்குகிறது என்று கவிதை நயம் பட உரைக்கிறார் கவி !

நகங்களின் காந்தி பிறை சந்திரனுக்கு ஒப்பிட்டுச்
சொல்கிறார் !

மாபெரும் கவிகளின் இருதயம் என்னும் செவ்வல்லிப் பூக்களை மலரச் செய்வதும்,

மிக்க ஒளியுடையதாகவும் தேவியின் பாதங்கள் வர்ணிக்கப்படுகிறது !

அந்த ஒளி சந்தியா காலத்துக்கு ஒப்பிடப் பட்டிருப்பது பொருத்தம் அல்லவா?

அதனால்தான் பட்டர் பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே என்று சொன்னாரோ!


ஸதா பாத தியானம், சில நிமிஷங்கள் சங்கரா கோஷம், நாமா ஜெபம்.

இவையெல்லாம்.சுலபமா இந்தக் காலத்தில் எளிதாகச் செய்ய முடிந்த பகவத் சேவை !

நாளடைவில் மனம் ஒடுங்கி ஞானம் பிறக்க எளிய சாதனம்.

மனம்.ஒருமைப்பட ஹேது !

பெரியவா சரணங்களும் அவ்வாறே அல்லவா,,?

ஶ்ரீ சரணாலயம் அவரே அல்லவா,?
அம்பாள் சரணம்..🍇🍇🍇
ravi said…
[01/04, 12:38] Jayaraman Ravikumar: கலா-மயீ - கலைகளை உள்ளடக்கியவள்

❖ *236 சது:ஷஷ்டி கலா-மயீ =*

அறுபத்தி-நான்கு கலைகளின் அம்சமாக வியாபித்திருப்பவள்
[01/04, 12:38] Jayaraman Ravikumar: அறுபத்துநான்கு என்பது ஒரு விசேஷ எண்.

அம்பாள் ஸ்ரீ லலிதை 64 வித தந்த்ர சாஸ்திரம் சொல்லும் கலைகளின் ரூபம் கொண்டவள்.

பஞ்சதசி சொல்லும் மந்திரங்களில் இந்த கலைகள் பற்றியும் வரும்.

அடிக்கடி 64 கலைஞானம் என்கிறேனே .

அவை என்ன என்று தெரியவேண்டாமா?
ravi said…
வேள்வியின் பயனதில் வேந்தனின் மனைவியர்

உண்டிட பாயசம் அதன் விளைவில்

கேள்வியில் கல்வியில் சிறந்தவன் இராமனும் கூடவே மூவரும் பிறந்தினரே

உலகினில் ஒரு சில இடங்களில் நடந்திடும் வீணரின் செய்கையை வீழ்த்திடவே

பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம்
ravi said…
[31/03, 19:00] Jayaraman Ravikumar: வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

ஸமாத்மா
ஸம்மிதஸ்ஸம: |

*அமோக* : புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏

110
[31/03, 19:02] Jayaraman Ravikumar: 110. ஸமாய நமஹ (Samaaya namaha)

பராசர பட்டர் என்னும் ஆச்சாரியர், மார்கழி மாதம் திருவரங்கத்தில் திருப்பாவையைப் பற்றித் தொடர்ச்சொற்
பொழிவு ஆற்றி வந்தார்.

தொடர்ச்சொற்பொழிவின் நிறைவு நாளில் திருப்பாவையின் முப்பது பாசுரங்களைக் கேட்பவர்கள் பெறும் பலன் என்ன
என்பதை விவரிக்கையில்,

“அன்று ஆண்டாளுக்குத் திருமால் எவ்வாறு அருள்புரிந்தாரோ,
அதைப் போலவே ஆண்டாள் அருளிய இந்த முப்பது பாசுரங்களையும்
தினமும் சொல்லும் அனைத்து பக்தர்களுக்கும் அருள்புரிவார்!” என்று கூறினார்.🙏
ravi said…
[31/03, 18:53] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 118 started on 6th nov

*பாடல் 36 ... நாதா, குமரா நம* 🪷🪷🪷

(சிவபெருமானுக்கு உபதேசித்த பொருள் எது?)

நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?

வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்

பாதா குறமின் பத சேகரனே.👆👏
[31/03, 18:56] Jayaraman Ravikumar: நான், எனது' என்கிற பற்றுகளை விட்டு முருகனிடம் பரிபூரண
சரணாகதி அடையும்போது முருகன் தனது உயர் நிலையைவிட்டு
நம் நிலைக்கு வலிய வந்து ஆட்கொள்வான் என்பதே இந்த
ரகசிய உபதேசம்.

இனி சிவபெருமான் முருகப் பெருமானிடம் பிரணவ உபதேசம்
பெற்றார் என்பதின் தத்துவத்தை ஆராய்வோம்.

சிவனாருக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததா?

'அம்பொத்த
விழி' எனத் தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழில் (பாடல் 24),

.. கொன்றைச் சடையருக்கு ஒன்றைத்தெரிய
கொஞ்சித் தமிழில் பகர்வோனே ..

... என தமிழிலேயே உபதேசம் செய்தார் என்று கூட கூறியுள்ளார்.

இதன் உண்மை என்ன? 🤔
ravi said…
*திருவடி பெருமை* 👣

*ராமா*

என்ன தவம் செய்தேன் உன் பாதம் தொட்ட வுடன் பஞ்சு மெத்தை ஆனேன் ..

கல்லும் முள்ளும் என்னுடன் கலந்து உறவாடக்கண்டேன்

தூசிகள் தேடிவரக் கண்டேன் ..

உன் பாதம் பட்டே அவை வீபுதி ஆகும் அதிசயம் கண்டேன்

வேதங்கள் வேண்டி நின்று கை தொழக்கண்டேன்

காலச் சக்கரம் உன் பாதம் தொட்டே அச்சு மாத்தக் கண்டேன்

மாசில்லா வீணை தனில் மகிழம்பூ ராகம் வரக் கண்டேன்

வற்றாத ஜீவ நதிகள் வந்து வட்டமிடும் வண்ணம் கண்டேன்

உன் பாதுகை ஆனேன் ...

இதனிலும் உயர்ந்த பதவி என ஒன்று உண்டோ *ராமா* ?

காடு வந்த என்னை நாடாள வைத்தாய் ..

நாடாளும் என்னை நான்கு புறம் நின்றே காவல் புரிந்தாய் ...

கங்கை உறங்கும் உன் கமல பாதங்கள் பரிசம் பெற்றே பாரிலே பார் போற்றும் மன்னன் ஆனேன் நந்தி கிராமத்தில்

பரதன் தன் புந்தியில் எனை பொறுத்தியே நீங்கா பேர் பெற்றானே *ராமா* 👣👣👣👣👣👣👣👣
ravi said…
[01/04, 10:50] Jayaraman Ravikumar: *சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 3 ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*
[01/04, 10:51] Jayaraman Ravikumar: ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*இலங்கையில் சீதையைத் தேடல் -*

*புஷ்பக விமான தரிசனம்* -

ராவணனைப்
பார்த்தல். 

||ஸ நிர்ஜித்ய புரீம் ஸ்ரேஷ்டாம் லங்காம் தாம் 
காம ரூபிணீம் | 

விக்ரமேண மஹா தேஜா ஹனுமான் கபிஸத்தம:||

அழகான இலங்கை அனுமனின் பாதங்களினால் இழந்த புண்ணியத்தையும் திரும்ப பெற்றுக்கொண்டது -

எங்கும் திருவிழா - எல்லா வீடுகளும் வானத்தை தொட்டன

ஏழைகளே இலங்கையில் இல்லை -

அதனால் அங்கே பிச்சை எடுப்பது என்னவென்று யாருக்குமே தெரியாமல் இருந்தது

- குறைந்த சம்பளம் உள்ளவர்களும் அணிந்து
கொண்டிருப்பது பட்டினால் நெய்த ஆடைகள் --

வைரத்தோடுகளும் , வைர நெக்ல்ஸ்ம்  எல்லாருமே அணிந்து இருந்தனர்

வசதி சற்று குறைந்தவர்கள் சில கற்கள் குறைத்தே வையிர மாலைகளை வாங்கினார்கள் -

வீட்டில் வளரும் நாய்களுக்கும் உணவாக தங்க பிஸ்கட் தான் போட்டார்கள் -----

அசந்தே போனார் அனுமார் -

எப்படிப்பட்ட வசதியான மக்கள், அவர்களது வாழ்க்கைத்தரம் மிகவும் உயர்வாகவே இருக்கின்றனவே -

இவர்களில் யார் அசுரர்கள் என்றே தெரியவில்லையே -

ஜாம்பவான் -- இராவணன் ஒரு என்று அரக்கன் என்றாரே!

இங்கு எல்லோர் நெற்றியிலும் புனிதமான திருநீறல்லவா இருக்கிறது -

எங்கு திரும்பி பார்த்தாலும் சிவாலயங்கள் -

ஐந்து காலமும் அபிஷேகம், ஆராதனைகள், வீதி வழிபாடு , வேத கோஷங்கள் -

அதிகார நந்தியின் ராஜ நடை ---  

ஒரு வேலை இராவணன் இருப்பது இதே பெயர் உள்ள வேறு இலங்கையாக இருக்குமோ , 🤔🤔🤔

நான் தான் தவறுதலாக இங்கே வந்து விட்டேனோ ?🤔

ஒன்றுமே புரியவில்லை அவருக்கு --- 

அங்கே அவர் பார்த்தது சரியான இலங்கை தான் இது என்று நிரூபித்தது -- அன்னையை சுமந்து வந்த புஷ்ப்பக விமானம் -
ravi said…
அனுமனை பார்த்த வினாடியில் தன் செய்கைக்கு வருந்தி தலை குனிந்தது -- 

குபேரனின் சொத்து இந்த விமானம் -

இன்று இராவணனிடம் -- அனுமானைப்பார்த்து கெஞ்சியது 

"கேசரி நந்தனா! -- என்னை கோபமாக பார்க்காதே!

நான் சாம்பலாகி விடுவேன் -

சீதையை இங்கு கொண்டு வந்தவன் இராவணன் -

அவனுக்கு உதவி செய்ய வேண்டிய
துர் பாக்கிய நிலைமை எனக்கு -

தயவு செய்து என்னை புரிந்துக்கொள்ளவும் -

இந்த பாவத்திற்கு பரிகாரமாக, இந்த இராவணன் இறந்த பிறகு ஸ்ரீ ராமரையும், சீதா பிராட்டியையும், லக்ஷ்மணனையும் நான் சுமந்து கொண்டு அயோத்தியில் பத்திரமாக கொண்டு சேர்க்கிறேன் -

இது சத்தியம் ---

அனுமான் அந்த விமானத்தை புன் முறுவலுடன் தடவி கொடுத்தார்.

அதோ பாட்டும் கூத்துமாக இருக்கிறதே -- அதுதான் இராவணனின் அறையாக இருக்கும் -

ம்ம் போய்த்தான் பார்ப்போமே ---

பெரிய அறை -- எங்கும் எதிலும் அழகிய பெண்கள்

-எல்லா இசைகளையும் மயக்கிக்கொண்டிருந்தார்கள் --

அதோ நடுவே படுத்திருக்கும் அந்த ஆஜான பாகுவான உருவம் -

சந்தேகமே இல்லை இராவணன் தான் --

ஆகா என்ன அழகு - என்ன கம்பீரம் -

முகத்தில் அந்த தில்லைநாதனின் ஆனந்தநடனத்தை அல்லவா தரிசிக்க முடிகிறது --

இவனா நம் அன்னையிடம் தவறாக நடந்துகொண்டான்?

ஞானமும், அழகும் மிகுந்த இவன் எப்படி இந்த மாபெரும் தவறை செய்திருப்பான்??? --- 

அதோ என் அன்னை சீதை ---

இராவணனின் பள்ளி அறையில் அல்லவா இருக்கிறாள் -

ராமனை பிரிந்த வருத்தமே இல்லாமல் தூங்குகிறாளே --

தவறு தவறு --

என்ன பாவம் செய்து விட்டேன் - 😞

இது இராவணனின் 
மனைவி மண்டோதரி அல்லவா??

என்ன கருணையான முகம் --

இவளை விட்டு விட்டு ஏன் இவன் மனம் ஒரு குரங்காக தாவி அன்னையை நாடுகிறது --?? 

ஒரு ஞானி ஒரு குரங்கின் வடிவத்தில் இருந்தார்

- ஆனால் குரங்காக இருக்கும் ஒருவனோ ஞானி என்ற போர்வையில் இலங்கையில் அரசனாக இருந்தான்.

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இது ---- 🍇🍇🍇

||ஸ பூயஸ்து பரம் ஸ்ரீமான் மாருதிர் -யத்ன மாஸ்தித பான பூமிம் ஸமுத்ஸ்ருஜ்ய தாம் விசேதும் ப்ரசக்ரமே || 
ravi said…
வித்தையும் வீரமும் மெத்தவும் கற்கவே

வளர்ந்திட நால்வரும் உத்தமராய்

எத்தவமும் செரி கோசர அரக்கரை அழித்திட இராமனை அனுப்பிட கேட்டனரே

மன்னர் மறுத்திட பின்னர் வசிஷ்டரால்
பின்னவர் சேர்ந்திட போந்தனரே

பல்கலி இராமப் பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் 🙏
ravi said…
[02/04, 08:06] Jayaraman Ravikumar: ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
[02/04, 08:12] Jayaraman Ravikumar: *மாருதியின் மனக்கலக்கம்*😞
[02/04, 08:12] Jayaraman Ravikumar: ||ஸ தஸ்ய மத்யே பவனஸ்ய மாருதிர் 
லதாக்ரு ஹாம்ச் சித்ரக்ரு ஹான்| 

ஜகாமஸீதாம் ப்ரதிதர் சனோத்ஸூகோ 
ந சைவதாம் பச்யதி சாருதர்சனாம் |
ravi said…
மாருதி கொஞ்ச நேரம் தேடட்டும்.

அதனால் இலங்கை பூரிக்கட்டுமே கொஞ்சநேரம் - 

இங்கே இலங்கை வேந்தனின் மனைவி மண்டோதரியைப்
பற்றி கொஞ்சம் சொல்லியே ஆகவேண்டும்.

கம்பன் தன் இராமாயணத்தில் மண்டோதரியை மிகவும் அழகாக வர்ணிக்கிறான் -

அவள் எப்படி தூங்குகிறாளாம் -

ஒரு கேள்விக்
குறியைப்போல --

கால்களை மடக்கிக்கொண்டு, உடம்பை குறுக்கிக்கொண்டு கைகளை தலையணையாக வைத்துக்கொண்டு தூங்குகிறாளாம் --

அது ஒரு கேள்விக்
குறியைப்
போல இருக்கிறதாம் - ?

இதற்கு கம்பர் இன்னொமொரு அர்த்தமும் சொல்கிறார் --

அவள் வாழ்க்கையும் வெகு சீக்கிரத்தில் ஒரு கேள்விக்குறியாக மாறப்போகிறது --

அவள் உறங்குவது, இலங்கை வேந்தனின் முடிவை காட்டுவதாக இருந்ததாம்.

இங்கே நாம் தெரிந்துக்கொள்ளவேண்டுவது,

தூங்குவதிலும் மங்களகரமாகத் தூங்கவேண்டும் என்பதே!!🙏

மண்டோதரி மிகவும் அழகானவள் -

சீதைக்கு நிகராக சொல்லலாம் -

அப்படி ஒரு அழகி மனைவியாக கிடைக்கப்பட்ட 

ஒருவன் ஏன் நிழலுக்கு ஆசைப்பட்டான்?

கம்பருக்கு புரியவில்லையாம் ---

நிஜத்தை விரும்பாதவனா இராவணன்?

அங்கே தான் அவன் தங்கை ரூபத்தில் விதி விளையாடுகிறது --

பல தடவைகள் இராவணனே யோசிப்பானாம் -

தவறு செய்துவிட்டோம் - மாற்றான் மனைவியின் மேல் ஆசைப்பட்டது பெரும் தவறு --

ஆனால் நானோ ஒரு அரசன் ,

எல்லாம் தெரிந்தவன்

- நானாக எப்படி சீதையை ராமனிடம் சேர்ப்பேன் ???

கம்பனாலும் இராவணனை அரக்கன் என்று நினைத்துப்பார்க்க முடியவில்லை -

தான் என்ற கர்வம் அவனுடைய விவேகத்திற்கு அணைப்போட்டது -

படித்த கல்வி, பெற்ற ஞானம் அவனுக்கு உதவ முன் வரவில்லை -

மமதையின் முன் இவைகளால் போட்டிப்போட்டு வெற்றி பெற முடியவில்லை....

பாவம் இங்கே அனுமான் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறார் --

அன்னை கிடைக்காவிட்டால், என் மீது நம்பிக்கை வைத்த ஸ்ரீ ராமன், ஜாம்பவான், சுக்ரீவன் எல்லோரையும் ஏமாற்றப்
போகிறேனா??

அதற்குப்பிறகும் நான் வாழ்வதா?? புலம்பினார் மாருதி --

இங்கே நாம் ஒன்றை கவனிக்கவேண்டும் --

எல்லாம் தெரிந்த ஞானி இவர் -

ஒரு மிக சாதாரண வானரமாகத்தான் தன்னை காட்டிக்கொண்டார் --

ஒரு போதும் தனக்கு எல்லாம் தெரியும், நான்தான் எதிலும் வல்லவன்,

சீதையை கண்டுபிடிப்பது எனக்கு ஒரு பெரிய சவால் இல்லை என்று சொல்லிக்
கொள்ளவே இல்லை -

இவருடைய தன்னடக்கம் இவரை மலைபோல் உயர்த்தியது -

அங்கே *தான்* என்ற கர்வம் இராவணனுக்கு -

இங்கே *தான் இல்லை* என்ற அடக்கம் ஆஞ்சநேயருக்கு -

இங்கும் ஒரு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். 

அவதீர்ய விமானச்ச ஹனுமான் மாருதாத்மஜ 
சிந்தா முபஜகாமாத சோ கோபஹத சேதன 🙏🙏🙏🍇🍇🍇
ravi said…
*🔹🔸'இன்றைய சிந்தனை."*

*_✍️ 02, Sunday, April.,2023_*

https://srimahavishnuinfo.org

*🧿''நிகழ்காலம் மட்டுமே...''*

*♻️யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ, படித்தவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம்.*

*♻️இந்த பூமியில் ஒவ்வொரு மனிரும் சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே..*

*♻️இச்சமூகத்தால் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்கள், இச்சமூகத்தில் பெரிதாய் மதிக்கப்படாத ஏழைகள், படிக்காத பாமரர்கள்,*

*♻️வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்துக் களைப்பவர்கள் (ஆண், பெண்) யாவருக்கும்,* *எல்லோருக்கும் உள்ளதைப் போல்,*
*சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி,பசி, உறக்கம்,இழி சொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு.*

*♻️மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச்சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள்.*

*♻️உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள்.*

*♻️டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள்.அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார்.*

*♻️மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய்,*
*"உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார்.*

*♻️அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள்*

*♻️உலகப் புகழ் பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் வெட்கப்பட்டார்..*

*😎ஆம்.,நண்பர்களே..,*

*🏵️மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம். உயர்ந்தவர்,* *தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர்,, ஏழை,*
*பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்..*

*⚽சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம்..இனி ஒரு புதிய உலகம் அமைப்போம்..*
*சக மனிதர்களை மதிப்போம்.. மனிதனாக வாழ்வோம்..*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
 ★  *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*     
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*🔹🔸"இன்றைய சிந்தனை"..*

*_✍️ 01,Saturday, April.,2023_*

https://srimahavishnuinfo.org

*🧿'அமைதியைத் தேடி.."*

*♻️நம்மைச் சுற்றி எங்கும் அமைதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண். அது இயற்கையில் சாத்தியமில்லை.*

*♻️தொடர் நீர்வீழ்ச்சியைப் போல அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது ஓய்வதில்லை.*

*♻️அந்த வேலைகளுக்கு இடையேயும், அமைதியான உறக்கம் போல, நம் உள் மனம் அமைதியாக இருக்குமானால் அதை விடப் பெரிய சாதனை வேறெதுவும் இருக்க முடியாது.*

*♻️அந்த அமைதியின் முத்திரை நாம் செய்கின்ற செயலின் சிறப்பில் கண்டிப்பாக வெளிப்படும்.*

*♻️அனைத்து வசதிகளும் அமையப் பெற்று எந்தவித தொந்தரவும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதி அல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல..*

*♻️ஆயிரம் துன்பத்திற்கு நடுவே,நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று தினசரி உழைத்துக் கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.*

*♻️எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், எனக்கு நேரும் மான அவமானங்களை விட,*

*♻️'நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்குப் பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டு இருக்கிறார்களே…அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி...*

*♻️சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி. அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!!*

*😎ஆம்.,நண்பர்களே.*

*🏵️தொல்லைகளும் துன்பங்களும், பிரச்னைகளும் சூழ்ந்து இருக்கும் தருணத்தில் அவைகளைக் கண்டு பதற்றம் அடையாமல் எதிர்கொள்வதே ''உண்மையான அமைதி''*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
 ★  *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*     
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…

பழனிக் கடவுள் துணை -02.04.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-6

அன்பர்கள் பலர்!!

மூலம்:

கோரவன் பேயொன்று கொன்றும், தமிழ்ச் சொல் கொளும் பழனிக்
காரண தேசிகன் பாற்சென்று மாதர் கவின் உரைத்துப்
பாரகத் தோர்களும் வானோரும் போற்றும் பயனடைந்த
நாரத மாமுனி போல்வாரும் பற்பலர் நானிலத்தே (6).

பதப்பிரிவு:

கோர வன் பேய் ஒன்று கொன்றும், தமிழ்ச் சொல் கொளும் பழனிக்
காரண தேசிகன் பால் சென்று மாதர் கவின் உரைத்துப்
பார் அகத்தோர்களும் வானோரும் போற்றும் பயன் அடைந்த
நாரத மாமுனி போல்வாரும் பற் பலர் நானிலத்தே!!! (6).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

எல்லாம் வல்ல எம் பெருமான் பழநியாண்டவனிடம் சென்று வரையறைக்க முடியாத பலன் அடைந்தோர் அநேகர் என்றும் அவர்களில் சிலரை நமக்கு நினைவும் படுத்தும் ஒரு அற்புத அலங்காரம்.

கோரமான, வலிமை பொருந்திய கற்கிமுகி என்னும் பேய் ஒன்று நக்கீரரைச் சிறை செய்து அவரைத் மீளாத துயரில் ஆற்றிய பொழுது, அவரை ஆட்கொண்டு, திருமுருகாற்றுப்படை என்னும் அற்புதமான தமிழ்ச் சொல் அவர் நாவில் இருந்து கொண்டு, அவரைக் காத்தப் பழனிக் காரண தேசிகன் ஆன எம் பெருமான் பழநியாண்டவன் பால் சென்று, அழகில் சிறந்த வள்ளி நாயகியின், சொல்லொணா அருமை பெருமைகளை உரைத்து, அவன் அருளுக்குப் பாத்திரமான, பூவுலகத்தில் உள்ளோரும், வானோரும், போற்றும், மிகுந்த பயனை அடைந்த நாரத மாமுனி போன்றோரும், குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்னும் நான்கு வகை நிலமுடைய பூமியில் பற்பலர் உளர் என்று உணர்க!! எம் பெருமான் பழனித்தாயின் அருளைப் பெறுக!

*சம்புமகனை, சம்பு மெச்சும் மருகனை, சம்புவைச் சிறைப்பிடித்த சம்பு தோற்கும் ஒளியுடையனை, நித்தமும் ஐயமின்றி, நம்பிக் கும்பிட்டால், எங்கிருந்து வரும் வம்பு? அவன் மாறா அன்பே என்றும் வரும் நம் முன்பு! அதுவே என்றும் நமது தெம்பு! அவன் தாளே என்றும் நமது துணை என நம்பு!

*சம்பு- சிவன், திருமால், பிரம்மன், சூரியன்.

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…

பழனிக் கடவுள் துணை -01.04.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-5

சிவன் தவமாகத் தோன்றியவன் முருகன்!!

மூலம்:

அங்கையிற் றண்டொன் றணிந்து வெண்ணீறு முற்றாடியணிக்
கொங்கைமின் னாரைக் கவர்ந்தே பழனிக் குவட்டில்நிற் போன்,
செங்கையி னால்அறம் முப்பத் திரண்டும் தினம் வளர்க்கும்
மங்கையைப் பங்கில்வைத் தோன்நெடு நாள்செய்தமா தவமே (5).

பதப்பிரிவு:

அங்கையில் தண்டு ஒன்று அணிந்து வெண்ணீறு முற்றாடி அணிக்
கொங்கை மின்னாரைக் கவர்ந்தே பழனிக் குவட்டில் நிற்போன்,
செங்கையினால் அறம் முப்பத்து இரண்டும் தினம் வளர்க்கும்
மங்கையைப் பங்கில் வைத்தோன் நெடு நாள் செய்த மாதவமே!! (5).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

எம் பெருமான் பழநியாண்டவனின் ஜனனத்தின் காரணம், சிறப்பு பற்றி நம் சுவாமிகள் எடுத்து இயம்பும் அலங்காரம். எப்படி தோன்றியவன் எம் பெருமான்? எல்லாம் வல்ல ஈசன் செய்த தவத்தின் மூலம் தோன்றியவன் என்று பறைசாற்றும் ஒரு அலங்காரம்.

தன் திருமேனி முழுதும் திருநீறு பூசித் தன் அழகிய கையில் சகல வல்லமை பொருந்திய தண்டம் அணிந்து, தவக்கோலமுடைய ஸ்ரீ ஞான தண்டபாணியாக, பழனி மலையில், தவக் கோலத்தில் நிற்பவன் என் பழனாபுரித் தாய். ஆனால், பக்குவமாதர்கள், அதாவது, புண்ணியத் தொண்டர்கள் பலரைத் தன் அன்பால் இழுத்து, தன் அருளால் வசப்படுத்தி ஆள்பவன் அவன். அப்படிப்பட்ட எம் பெருமான், தன் செவ்விய கரங்களால் அறம் முப்பத்திரண்டும் நித்தமும் வளர்க்கும் அறச்செல்வி உமையவளைத் தன் பங்கில் வைத்த, உமை கேள்வனான, சிவபெருமான் நெடுநாள் செய்த மாதவத்தின் பெரும் பயனாயத் தோன்றிய ஒப்பில்லா சிறப்பை உடையவன் என்று உணர்க! எம் பழனித்தாயின் திருவடியே சேர்க!

மூப்பு, ஒப்பு இல்லாப் பழனிப் பிரானே! உன் அருளால், உன்னை நித்தம் தொழும் வாய்ப்பு உள்ள உன்னடிமை எனக்கு, ஒருபொழுதும் ஏய்ப்பு இன்றிக் காக்கும் உன்னையன்றி வேறு யாரு உளரோ காப்பு?

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
02.04.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 26)

Sanskrit Version:

अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम्।
तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हसि।।2.26।।

English Version:

aTha chainam nityajaatam
nityam vaa manyase mrtam |
taThaapi tvam mahabaho
naivam shochitumarhasi ||

Shloka Meaning

O mighty armed Arjuna ! Even if you think that the self is constantly born and constantly dies,
you should not grieve in this way.

Mighty Armed
------------
Additional explanation;

The Lord addresses Arjuna as 'mighty armed'. Arjuna was endowed wih enormous physical strength and energy.
But his physical strength was not sufficient to address the mental turmoil which Arjuna is going through.
Krishna implies that Arjuna should acquire spiritual light and knowledge, besides physical strength and energy.

Krishna argues out the point fromthe lower level of ordinary human understanding, in order to comfort
Arjuna and lift him up to the higher levels of spiritual insight.

Krishna advises Arjuna to get spritual knowldge besides physial strenght and energy. Even if the self of a man
goes through a constant cycle of birth and death, there is no need to grieve. For the reason, whatever dies comes
to life again.

The ordinary human mind who cannot comprehend the Atma, sees that the body dies. When it dies, it triggers a birth again.
It is the process of endless cycle of punarapi jananam punarpi maranam (as Shankara Bhagadpada puts so beautifully in
his Bhaja Govindam). So why grieve when bodies are destroyed?

Jai Shri Krishna 🌺
ravi said…
01.04.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 25)

Sanskrit Version:

अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते।
तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि।।2.25।।

English Version:

avyaktoyamachintyoyam
avikaaryoyamuchyate |
tasmaadevam viditvainam
naanushochitumarhasi ||

Shloka Meaning

This self is unknowable by the senses, unthinkable by the mind and is not subject to any kind of change.
Knowing this, you should not grieve.

An object made up of the gross elements can be seen by the eye. Atma is not such an object.
So the eye cannot see it.

Since Atma is beyond thought, the mind is powerless to know it. Atma is the eternal substratum that exists
after the mind vanishes. When the mind is purified, it merges in the atma and disappears.
When the mind disappears the whole of the objective world disappears and only the Atma remains in its own state.

How the mind can understand the Atma?

Every object in the world goes through the various process of change such as birth, growth, death etc.
Atma is not born, so it does not die, it does not change at all and it is eternal, ever present.


It is the external subject, the seer, that is an eternal witness of the universe.

It is the very essence of existence, knowledge and bliss. It is the final cause of the universe.

Ultimately the universe will dissolve into the atma.

You should not grieve
---------------------

The root cause of all sorrows in main is the ignorance of his real nature, and his identification with the body and mind.

Sorrow (shoka) is the direct consequence of ignorance (moha).

By study of the scriptures (shastras) and th e grace of God and Guru kadaksham, man comes to know that he is not the body
but atma, all sorrow leaves him once.

Man should know and establish himself firmely in the self. Even the slightest separation between the atma and individual being,
fear and sorrow will enter one way or other. When the union with the self is complete, what is left is only bliss all around.

Bhagwan Krishna exhorts Arjuna to know the truth and trascend sorrow and delusion.

What is the only way to be free from eveils of ignorance and sorrow (moha and shoka).
Realization of the self.
Knowledge alone is the pure light to dispel the darkness of samsara.
"
Jai Shri Krishna 🌺
ravi said…
மதா = தற்பெருமை - ஆணவம் - கர்வம்

*158 நிர்மதா* = செருக்கு அற்றவள்

இதற்கு எதிர்மறை *அதிகர்விதா*
ravi said…
*அம்மா*

*கர்வம் உண்டோ உனக்கு ?*

சர்வமும் உனதே என்றே ஆனபின்

*கோபம் வருமோ உனக்கு ?* 😡

பாவங்கள் அழிக்கும் ஒருவன் பதியானபின்

*செருக்கு உண்டோ உனக்கு ?*

நறுக்கு என்று உன் நாமம் சொல்வோர் கோடி இருக்க

*மமதை உண்டோ உனக்கு ?*

யாவரும் உன் மழலை என்றானபின்

*மமகாரம் உண்டோ உனக்கு* ?

ஓம்காரம், உன் நாமம் உரைக்கும் போது

*அஹங்காரம் உண்டோ உனக்கு?*

அன்னை உனக்கு ஒருவரும் நிகரில்லா போது ...

*நிர்மதா* என்றே உன் நாமம் சொன்னேன் ..

*நர்மதா* ஓடி வந்து என்னை அணைக்கக்
கண்டேன்...

சங்கை எடுத்து உன் நாதம் ஓதினேன்..

*கங்கை* யில் மூழ்கி எழுந்த இன்பம் பெற்றேன்

கை வைத்தேன் கண்களில் உன் பாதம் தொட்டு

*வைகை* அங்கே வந்தே வரவேற்க கண்டேன் 🙏🙏🙏
ravi said…
*ராவணனை அழித்த பிறகு போர்க்களத்தில் ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்*

*அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது*

*அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண்*

*அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை*

*ராமபிரான் நிழலின் அசைவின் மூலம் புரிந்து கொண்டார்*

உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்....!!

*நீ யாரம்மா?” என்றார்*

“நான் ராவணனின் மனைவி மண்டோதரி....!!

என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!!

ஆனால்,
அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால்,

அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்.....!!

மேலும்.
சத்திரிய குல தர்மப்படி,

கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் ,
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.....!!

ஆனால் நீ என்னிடம் வரவில்லை....!!

ஆச்சரியப்பட்டேன்.....!!

இங்கே நீ ,
என் நிழல் உன் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும் போது,

உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்......!

என் கணவரிடம் கூட ,

ரகு குலத்தில் உதித்த ராமன் ,
மனிதன் அல்ல.....!!
உலகைக் காக்கும் பரம்பொருள்...!!
விஸ்வரூபன்.....!!
அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கவல்லது.....!!

அவன் வேதத்தின் சாரம்.....!!

ராமன் சாட்சாத் தெய்வ வடிவம்....!!

அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன்.....!!

அவர் கேட்கவில்லை.....!!

உன் வெற்றிக்கு காரணம்,

என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உங்களிடத்தில் இருந்தது தான்....!!

அதுதான் தங்களின் ஏகபத்தினி விரதத்தன்மை.....!!

அதனால் தான் நீ வென்றாய்,” என்றாள்.....!!

அனைத்தும் கேட்ட ராம பிரான் சிறு புன்னகை புரிந்தார்.....!!

தன் சுயவடிவான ' நாராயணனாக' அவளுக்கு 'விஸ்வரூப தரிசனம்' கொடுத்தார்.....!!

ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதரி.....!!

அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற போது,

மண்டோதரி ஒழுக்கமான உடை அலங்காரத்தை கண்டு,

' இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம் கொண்டான் அனுமன்....!!

அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான்,

கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் மண்டோதரிக்கு ' நாராயணின் விஸ்வரூப தரிசனம்' பெற்றாள்....!!

*உயர்ந்த சாதியில் பிறந்தவன்*

*வசதியில் உயர்ந்தவன்*

*அரச பதவியில் இருப்பவன்*

*என இறைவன் பார்ப்பதில்லை*

*நம்முடைய பயபக்தி*
*அன்பு*
* ஒழுக்கம்*
*இறைச்சேவை*
*அப்பழுக்கற்ற தூய உள்ளம்*
* என இவையே இறைவனின்* *அருள் தரிசனம் பெறும்* *வழிமுறையாகும்*

*ஆகவே தான் அசுரகுலத்தில் பிறந்தாலும்*

*தன் ஒழுக்க குணத்தால்*

'இராவணனின் மனைவி' மண்டோதரிக்கு ஸ்ரீராமபிரானின்
விஸ்வரூபம் காணும் பாக்கியம் கிடைத்தது.......!!

ஸ்ரீ ராம ஜயம்..!!
ஸ்ரீ ராம ஜயம்....!!!
ஸ்ரீ ராம ஜயம்......!!!!

*ஸ்ரீ ராமன் திருவடிகளே சரணம்*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இம்மாதிரி, பேர், புகழ், பணம், ஆதரவு எதையும் எதிர்பார்க்காமல் அநேக குடும்பங்களில் வித்யைகளுக்கே தங்களை அர்ப்பணித்துக்கொண்டு வருபவர்களையும் நான் ஒன்று, இரண்டு இடத்தில் பார்த்திருக்கிறேன். நான் எத்தனையோ ஊர் சுற்றி எவ்வளவோ பார்த்திருப்பதில் இப்படியும் பார்த்தது எனக்குச் சொல்லி முடியாத ஸந்தோஷமாயிருந்தது.

ravi said…
இவற்றில் ஒன்று எங்கே எப்போது என்றால் 1927-28 வருஷங்களில் மலையாள தேசத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். அங்கே திருவஞ்சிக்களம் என்று ஒரு ஸ்தலம். (திரு அஞ்சைக்களம் என்பதே ஸரியான பெயர்.) பழைய காலத்தில் அதுதான் மலையாள தேசத்துக்குத் தலைநகரமாயிருந்தது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரப் பெருமாள், அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் (இரண்டு பேரிலும் ‘பெருமாள்’ இருக்கிறது.)
ravi said…
ஆகிய ராஜ – பக்தர்கள் இருவரும் திருவஞ்சிக்களத்திலிருந்துதான் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். தேவாரத்தால் போற்றப்பட்டுப் ‘பாடல் பெற்ற ஸ்தலம்’ என்று கூறப்படுகிற க்ஷேத்ரங்களில் “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” என்பதாக மலையாளத்திலிருக்கும் க்ஷேத்ரம் இதுதான். இதே மலையாள தேசத்தில் (ஆழ்வார்களின் பாசுரங்களைப் பெற்றவையான) நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் பதின்மூன்று இருக்கின்றன. திருவஞ்சிக்களத்துக்குப் பக்கத்தில் ப்ரஸித்தமான பகவதி க்ஷேத்ரம் ஒன்று இருக்கிறது. கொடுங்கலூர் என்று பெயர். வெள்ளைக்காரர்கள் அதைத்தான் ‘ரோங்கனூர்’ என்று ஆக்கியிருக்கிறார்கள் அந்த ஊரிலும் அதைச் சுற்றியுள்ள சில ஊர்களிலுந்தான் நான் சொன்னபடி அநேக வித்வான்கள் வெளியுலகத்தின் ஆதரவைப்பற்றி நினைக்காமல் அநேக சாஸ்திரங்களை அப்யஸித்துக் கொண்டிருப்பது.

ravi said…
கொடுங்கலூரிலும், இந்தச் சுற்றுப்புற ஊர்கள் ஒவ்வொன்றிலும் ராஜா என்று ஒருத்தர் இருக்கிறார்.

மலையாளத்திலேயே பொதுவாக ராஜாக்கள் அதிகம். அங்கே பெரும்பாலும் “மருமக்கத் தாயமுறை” என்ற முறைப்படியே ராஜ்யமோ, மற்ற ஸொத்தோ அடுத்த தலைமுறைக்குப் போய்க் கொண்டிருந்தது. அதாவது அப்பா – பிள்ளை என்று பிதுரார்ஜிதமாக மற்ற இடங்களிலெல்லாம் ஸொத்து, ராஜ்யம் ஆகியவை போகின்றனவென்றால், மலையாளத்தில் மட்டும் அம்மா வழியில் மாதுரார்ஜிதமாகப் போவதாகவும் இருந்தன. ஆனாலும் அம்மா என்றால் அவள் ஸ்த்ரீ. அவள் எப்படி ஸொத்துப் பரிபாலனம் செய்வாள்? அதனால் அவளுடைய அண்ணா – தம்பிக்கு ஸொத்துப் போகும். ஆனால் இந்த அண்ணாவோ தம்பியோ கண்ணை மூடுகிறபோது தங்கள் பிள்ளைக்கு (ஸொத்தை) எழுதிவைக்க முடியாது. அந்த ஸஹோதரியின் பெண்ணுக்குத்தான் ஸொத்துப் போகும். முன்னே சொன்ன மாதிரியே அதை இந்தப் பெண்ணுடைய ஸஹோதரன்தான் பரிபாலனம் செய்வான். இவன் இதற்கு முன் ஸொத்தை நிர்வஹித்தவனுக்கு மருமான் (மருமகன்) தானே? இப்படி மாமா – மருமகன் என்று ஸொத்து நிர்வாஹம் போவதாலேயே இதற்கு “மருமக்கத் தாயமுறை” என்று பெயர். “தாய” என்றால் தாயார் ஸம்பந்தப்பட்டது என்று அர்த்தமில்லை. Taaya இல்லை, Daaya ‘தாயம்’ என்பது ஸம்ஸ்க்ருத வார்த்தை. அதற்கு ‘ஸொத்தின் பாகம்’ என்று அர்த்தம். இப்படி பிதுரார்ஜிதத்தில் பங்கு உடையவர்களுக்குத்தான் “தாயாதி” என்று பேர்.

கொடுங்கலூர்ப் பகுதியில் இருந்த அநேக ராஜாக்கள் இவ்வாறு மருமக்கத் தாயமுறையில் ராஜாவாக இருந்தவர்கள். பேர்தான் ராஜா. நாம் ‘மிடில் – க்ளாஸ்’ (மத்யதர வகுப்பினர்) என்று சொல்பவர்களைவிடவும் அந்த ராஜாக்களின் வருமானம் ஸ்வல்பமாகவே இருக்கும். நம் ஊரில் பரம ஏழைக்குத்தான் கஞ்சி ஆஹாரமென்றால், அங்கே இந்த ராஜாக்களின் முக்ய ஆஹாரமே கஞ்சிதான்! நம் ஊரில் கஞ்சி சாப்பிடுகிற கலயம், கப்பரை என்று ஏழை மண்ணிலோ, சுரைக் குடக்கையிலோ ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறானென்றால், அந்த ராஜாக்களோ இந்தக் கலயம் – கப்பரைகூட வைத்துக்கொள்வதில்லை. அந்த ப்ரதேசங்களில் பலாமரம் செழிப்பாக வளரும். அந்தப் பலா இலைகள்தான் இந்த ராஜாக்களுக்குப் பாத்திரம் பொருளாதார சூழ்நிலை இப்படியிருந்தாலும் வித்வத்திலே அவர்கள் அத்தனை பேரும், அவர்களைச் சேர்ந்தவர்களுங் கூட, ஆச்சர்யப்படும்படியான தேர்ச்சி பெற்றிருந்தார்கள். புருஷாள் மட்டுமின்றி ஸ்த்ரீகளும் இப்படியே ஏதாவதொரு சாஸ்திரத்தில் நல்ல யோக்யதை ஸம்பாதித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். இவர்களாக வெளியிலே ப்ராபல்யத்துக்கு ப்ரயாஸைப் படாவிட்டாலும், தானாகவே இவர்களில் ரொம்பவும் தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் பெயர் வெளியில் பரவியிருக்கிறது. இப்படி ஒரு ராஜா மஹாமஹோ பாத்யாயா பட்டம்கூட வெள்ளைக்கார ராஜாங்கத்திடமிருந்து பெற்றிருக்கிறார். பெயரளவில் ராஜாக்களாக இருந்துகொண்டு கஞ்சியைக் குடித்துக் காலங்கழிப்பவர்களாக நம்முடைய வேத சாஸ்திரங்களையும் மற்ற பூர்விகக் கலைகளையும் வ்ருத்தி பண்ணிக்கொண்டு வந்த இவர்களை வித்வத் ஸமூஹம் முழுதும் ‘ஐடியலாக’க் கொள்ளவேண்டும்.
1 – 200 of 511 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை