ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 44 நக தீதிதி& 45 பதத்வய பதிவு 50

 ❖ 44 : நக தீதிதி ஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா

நகங்களின் காந்தியாலேயே மண்டியிருக்கும் இருளென்ற அஞ்ஞானத்தை போக்க வல்லவள்  

(பக்தர்களின் புத்தியை மூடி,  நரகத்தில் மூழ்கச் செய்யும் அஞ்ஞானம்) 

நக = நகங்கள் 

தீதிதி = மினுமினுப்பு 

ஸஞ்சன்ன = மறைந்திருக்கும் 

ந = அல்லாத 

மஜ்ஜன = மூழ்குதல் - நரகத்தில் மூழ்குதல் 

தமோ = இருள் / அஞ்ஞானம் 

குணா = குணம்


The rays of Her nails remove the ignorance of those who bow before Her.  When Deva-s and asura-s (demons) pay their reverence to Her by bowing, the rays of the gems emanating from their crowns are in no comparison to the rays emanating from the nails of Her feet.  

The rays that come out of Her nails destroy the tamo guṇa (inertia) and ignorance of those who worship Her.

It is also said that She does not bless with Her hands, but with Her feet.  She does not have abhaya and varada hands.  

Normally one can notice that most of the Gods have four hands, out of which one is meant for blessings and another for giving boons.  Lalitai does not have these two hands as She has four powerful goddesses (nāma-s 8, 9, 10 and 11) in Her four hands.  The two acts of blessings and granting boons are done by Her lotus feet


❖ 45 பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா;

தாமரைகளை இகழக்கூடியதாய் திகழும் ஒளிர்மை பொருந்திய பாதங்கள் கொண்டவள் 

பத = பாதம் 

த்வய = இரு - இரண்டு 

ப்ரபா = பளபளப்பு 

ஜால = பிணைப்பு - வலை 

பராக்ருத = எள்ளி நகையாடுதல், ஒதுக்குதல் 

சரோருஹ் = தாமரை ❖ 45 பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா; = தாமரைகளை இகழக்கூடியதாய் திகழும் ஒளிர்மை பொருந்திய பாதங்கள் கொண்டவள்



The beauty of Her feet is much more than a lotus.  Generally lotus flower is compared to the eyes and feet of gods and goddesses.  In Saundarya Laharī (verse 2) says “Gathering tiniest speck of dust from your lotus feet, Brahma creates the worlds, Viṣṇu sustains them and Śiva pulverising them into ashes besmears His body with them.”  

There are opinions that She has four feet.  They are known as śukla, rakta, miśra and nirvāna. The first two rest in ājña cakra, the third on the heart cakra and the fourth on the sahasrāra.  

Each of these feet is ruled by BrahmaViṣṇu, Rudra and Sadāśiva.  They stand for creation, sustenance, dissolution and the last one for liberation (or recreation).

In Hindu mythology, every act of Nature is represented by a god or goddess.  For example, water is represented by lord Varuṇa, fire is represented by Agni, wealth by Kubera, death by Yama etc.  It is nothing but worshiping the Nature and the cosmos.  Since there are so many forces and energies in the universe, each of them is represented by a god. 

Saundarya Laharī (verse 3) says, “The particles of dust at your feet serve to remove the inner darkness of the ignorant.”    


        

                ===💐💐💐💐💐



Comments

ravi said…
காலையில் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும்
🙏🏽🕉️🙏🏽

ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு.

அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள்
பெண்வடிவில் உள்ளது.

15. மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு கோபுரங்கள் கிடையாது.

16. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோமளவல்லி தாயாருக்கு படி தாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு - பெருமாளோடு எக்காலத்திலும் வெளியே வராத காரணத்தால்.
ravi said…
மண்ணுக்கு அரசி அவள் மதுரைக்கு மதுரம் அவள் ...

அரவிந்தங்கள் எல்லாம் அணி வகுத்து அவள் பாத தாமரையை வேண்டிடுமே கதிரவன் தினம் மலர 🌞

குவளைகள் பவளங்கள் கோடி சுமந்து அவள் பாதம் தனை

இன்னும் செந்நிறம் ஆக்கி வேண்டிடுமே
திங்கள் தினம் வானில் வந்திடவே 🌝

அவள் வெல்லாதது ஒன்றும் இல்லை ..

யாரும் வெல்லா காமனையும் காலனையும் வென்றவனை வென்றவள் வீரத்திருமகள் எங்கள் தமிழ் மகள்

நாணம் எனும் சேலைக்கட்டி

அச்சம் மடம் , பயிர்ப்பு தோழிகள் படை சூழ

எங்கள் சொக்கனை சொக்க வந்தாள் அன்னம் எனும் நடை தனில்

அம்பாய் தெறித்த விழிகள் அஞ்சலம் தீட்டி அமைதி காத்ததே ..

மீன் என சுழலும் கண்கள் கடை ஓரம் சுந்தரனை ரசித்துக்கொண்டு இருந்ததே ...

அழகன் இவன் போல் உண்டோ என்று மேனி சிலிர்க்க கண்கள் விசாலம் கொண்டதே ...

மாதாரார் எல்லோருக்கும் மகளாய் தெரிந்தவள்

மண்ணிற்கு மகாராணி என வந்தவள்

பேசும் கிளி என பேசினாள் தனக்குள் சிவாய நம என்றே

கட்டினான் காமேஸ்வரன் திருமாங்கல்யம் ... மங்களம் நிரந்தரமாய் அங்கே குடி புகுந்ததே சௌபாக்கியம் செங்கோல் பிடித்ததே

மண்ணும் செழித்தது வானும் பொழிந்தது

விண்ணும் குளிர்ந்தது

வியக்கும் வண்ணம் எங்கும் பசுமை

அதுவே எங்கள் பச்சைப் புடவைக்காரியின் பெருமை
அருமை
மென்மை
மேன்மை

🦜🦚🦜🦚🦜🦚🦜🦚
ravi said…
🎊🎉மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண பாடல்🎉🎊

💐போஜனம் செய்ய வாருங்கள்!
ராஜ போஜனம்
செய்ய வாருங்கள்!
மீனாட்சி சுந்தரேசர் கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்!!
நவசித்ரமானதோர் கல்யாணம் மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்!!

💐வாழை மரத்துடன்,
வெட்டி வேர்க்
கொழுந்து,
மாவிலை தோரணம்,
பவள ஸ்தம்பம்,
நாட்டிய கூடம்,
பச்சை மரகதம் பதித்த சுவர்களும்,
பசும் பொன் தரையில்,
பல வர்ண பொடியினால்,
பதித்த கோலத்தில்,
நட்ட நடுவே,
குத்து விளக்கேற்றி,
தூண்கள் தோறும்,
தூண்டா விளக்கும்,
சுற்றிலும் தீபங்கள்
மணிகளும் அசைய,
பந்தி பந்தியாய்,
பாயை விரித்து,
உத்திரணியுடன்
ஜல பாத்திரங்களும்,
தலை வாழை இலை போட்டு
தப்பாமல் இடம் பண்ணி!
(போஜனம் செய்ய...)

💐மும்மூர்த்திகளுடன் முனிவர்கள்,
தேவர்கள்,
யட்ஷ கிண்ணரர் கந்தவர்களும்,
அஷ்டதிக்கு பாலர்கள்,
சூழ அந்தணர்களும்,
முன் பந்தியிலே,
அணி அணியாக அவரவர் இடத்தில்,
அழகாய் இருந்தார்
அகல்யை,
துரெளபதி,
சீதா,
தாரை,
மண்டோதரியுடன்,
பந்தடித்தார் போல்
பட்டுகள் கட்டி,
கெஜ்ஜை மெட்டிகள் கிளு கிளுங்கவே,
முத்திரை மோதிரம் விரலில் கொண்டு,
பசும் பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து,
பார்த்து,பார்த்து பரிமாறவே வந்தார்!
(போஜனம் செய்ய...)

💐மாந்தளிர் பச்சடி,
தேங்கா பூ
கோசுமல்லி,
நீரங்கிகாய் கிச்சடி,
பரங்கிக்காய் பச்சடி,
வித விதமாகவே!
வத்தல்,
அப்பளம்,
பாங்குள்ள கூட்டு,
டாங்கர் பச்சடி,
சில் சில கறியும்,
பலா பிஞ்சு கறியும்,
பாவக்காய் கசக்கல், கத்தரிக்காய் துவட்டல்,
வாழைப்பூ வறுவல்,
வாழைப்பூ துருவல்,
குங்குருக்கு சுகமான சம்பா அரிசி என்ன,
மொத்த பருப்பும்
புத்துருக்கு நெய்யும்!
(போஜனம் செய்ய...)

💐பொரிச்ச குழம்பு,
பூசணிக்காய் சாம்பார்,
வெண்டக்காய்,
மோர்கடி,
வெங்காய சாம்பார் வாய்க்கு மிக ருசிக்கும்!
மிளகு ஜீரா ரசமும்,
மதுரமா இருக்கும்!
மைசூர் ரசமும்,
பருப்புகள் சேர்ந்த பன்னீர் ரசமும்,
வேண்டுவோர்க்கெல்லாம்
வேப்பம் பூ ரசமும்,
குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்,
சூர்ய உதயம் போல் சீரும் அப்பளமும்,
சுக்ல உதயம் போல் ஜவ்வரிசி கருவடாம்,
அக்கார வடசல் சர்க்கரை பொங்கல்,
என்னென்ன சுண்டல்,
வகையான வடை
மசாலா வடை,
வெங்காயா வடை,
சொஜ்ஜி வடையுடன்,
பால் போலிகளும்,
அனாரசம்,
அதிரசம் புதிர் பேணியுடன்,
சேமியா அல்வா,
ஜிலேபி,
லட்டு,
முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு,
ரம்யமாயிருக்கும்
ரவா லாடு,
பேஷா இருக்கும் பேசரி லாடு,
குண்டு குண்டா இருக்கும் குங்சா லாடு,
பல பலவென இருக்கும் பயத்தமா லாடு,
மைசூர் பாகுடன் பர்பியும் சேர்த்து!
(போஜனம் செய்ய...)

💐பூரி,
கனி வகைகள்,
பச்சை நாடாம் பழம்,
தேன் கதலி பழம்,
செவ்வாழைப் பழம்,
நேந்திரம் பழத்துடன்,
மாம்பழ தினுசுகள்,
பலாப் பழத்துடன்,
வாடை பரிமளிக்கும்,
அடை தயிர் வெண்ணெய் தங்காமல் சேர்த்து,
பகாளாபாத்து,
பல தினுசான,
சித்ரன்னங்களும்,
ரஞ்ஜித்தாகிய இஞ்சி ஊறுகாய்,
வெடுக்கென்று கடிக்கும் மாவடு ஊறுகாய்,
ஆவக்காய் ஊறுகாய்,
வேப்பிலை கட்டி,
கொத்தமல்லி சட்னி,
மிளகாய் பொடியுடன்
மிளகாய் பச்சடி,
பந்தியில் பரிமாறினாள்!!

💐#மீனாட்சி #சுந்தரேசர் கல்யாண மண்டப்பத்தில் பார்த்து பரிமாறினாள்!!

🙏🎊ௐ நமசிவாய🎊🙏
🙏💞 #அன்பே #சிவம்💞🙏
ravi said…
*துர்கம = தொடர்வதற்கு சிரமமானது*

*❖ 189 துர்கமா =* அணுகுதற்கு கடினமானவள்🦚🦚
ravi said…
ஆதாரம் நீயே *அம்மா*

என் அகம் உன் கோவில் *அம்மா*

நான் வாழும் உந்தன் பாதம் பனித் தூங்கும் மலரே *அம்மா*

பாதாதி கேசம் யாவும் பாலாபிஷேகம் வேதம்
ஓதாத ஞானம் யாவும்
ஒரு பார்வை மலராய் தூங்கும்

நீ தாகம் சாடும் கங்கை நிறம் ஒன்றும் இல்லா வெண்மை .. உனை இன்றி வேறு ஏது உண்மை ?

உன் நெஞ்சில் நான் வாழும் போது என் நெஞ்சில் துன்பம் ஏது ?

கண்ணார காணும் போது கனவேது நினைவும் ஏது

தாயே உன் மடி மீது தவம் ஏது வரம் தான் ஏது ? தான் என்ற தனிமை ஏது ?

கண் என்ன கள்ளின் குளமா ?

கன்னங்கள் மின்னல் களமா ?

வண்ணங்கள் ராகத்தின் வடிவா ?

வார் குழல் வானின் முடிவா ?

அபிராமி நீ வரும் போது இருள் ஏது?

ஆதாரம் நீயே *அம்மா*

என் அகம் உன் கோவில் *அம்மா* ....🙏🙏🙏
ravi said…
[03/05, 11:20] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 550* 🙏🙏🙏started on 7th Oct 2021

*257 வது திருநாமம்*
[03/05, 11:22] Jayaraman Ravikumar: *257 * जागरिणी -*
*ஜாகரிணீ -* -

சதா சர்வகாலமும் விழித்திருப்பவள்.

நமக்கெல்லாம் மூன்று நிலை, விழிப்பு, கனவு, அயர்ந்த உறக்கம்.

சகல உயிர்களின் விழிப்பு நிலைக்கே அவள் தான் காரணி.

இதை தான் சிவ சூத்ரம் (I.8) ' *ஞானம் ஜாக்ரத்''* என்று கூறுகிறது.

ராத்திரி எல்லாம் நாம் உறங்கும் போது நம்மை
பாதுக்காக் கிறவன் தூங்காமல் ரோந்து சுற்றி வரும் கூர்க்கா என்று ஒருவனுக்கு காசு கொடுக் கிறோம் .

அம்பாள் எப்படி சகல ஜீவராசிகளையும் தான் உறங்காமல் காசு கேட்காமல்
பாதுகாக்கிறாள்!💐💐💐
ravi said…
[03/05, 11:17] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 147*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 19
[03/05, 11:17] Jayaraman Ravikumar: शिवे पाशायेतामलघुनि तमःकूपकुहरे दिनाधीशायेतां मम हृदयपाथोजविपिने ।

नभोमासायेतां सरसकवितारीतिसरिति त्वदीयौ कामाक्षि प्रसृतकिरणौ देवि चरणौ ॥

சிவே பாசாயேதாம் அலகுநி தம:கூப குஹரே

தினாதீசாயேதாம் மம ஹிருதய பாதோஜ விபிநே |

நபோமாஸாயேதாம் ஸரஸகவிதா ரீதி ஸரிதி

த்வதீயௌ காமாக்ஷி ப்ரஸ்ருத கிரணௌ தேவி சரணௌ ||
[03/05, 11:18] Jayaraman Ravikumar: அம்மா, உன்னுடைய கடாக்ஷம் என்கிற அகஸ்திய முனிவர் என்னுடைய கர்மா என்கிற கடலை குடித்து, அகஸ்தியர் கடலை குடித்தார்.

அது போல “ *கர்ம ஜலதேஹே கலஷீஸுதென”* என் பூர்வ கர்மா கடல் போல உள்ளது.

கர்மத்தினால் தான் இந்த பாசம். இந்த மூன்று விதமான பாசங்களிளிருந்தும் என்னை விடுவிக்க வேண்டும் 👍👍👍
ravi said…
*ராமரும் அங்கதனும்*

*ராமா* ...

கண் போல் , பொன் போல் இருந்த தந்தைக்கு சிதை வைத்தேன் நெய் ஊற்றி ...

நீர் குடம் உடைத்து வெளி வந்தேன்

என் தந்தைக்கு நீர் குடம் உடைத்து வழி அனுப்புகிறேன் *ராமா* ...

தவறுகள் செய்தான் வாலி என்றார்கள் ...

என் மேல் உயிரை அன்றோ வைத்தான் ...

நான் உறங்கிய பின்னும் முழித்திருப்பான்

கண் திறந்த பின்னும் காத்திருப்பான் ..

சுமந்தவள் தாரை எனினும்

சுமந்தவன் தன் நெஞ்சில் என் தந்தை மட்டுமே

மன்னித்திருந்தால் மாணிக்கமாய் வாழ்ந்திருப்பானே *ராமா*

தரம் கெட்டவன் நிலை உயர்ந்திட ஏன் தடை செய்தாய் *ராமா*

*அங்கதா* ...

நானும் தந்தையை இழந்தேன் ..

தாரம் பல உண்டு ஆனால் தரம் கெடவில்லை அவன் ...

தாரம் உள்ளவர்கள் பாரம் அது என்றே நினைத்தால் அவர்கள் சோரம் போனவர்களே ...

மன்னித்திருப்பேன் அவன் தன் தம்பியை மன்னித்திருந்தால் ...

அணைத்து கொண்டிருப்பேன் அரவணைத்து போக அவன் கற்றிருந்தால்

புன்னகைத்
திருப்பேன் பாதி ராஜ்யம் தம்பிக்கு தந்திருந்தால் ...

என் வில்லுக்கு ஏனோ வேலை வைத்தான்

என் அம்புக்கு ஏனோ பொங்கல் வைத்தான்

தந்தை இல்லை என்றே நினையாதே என் பிள்ளை நீ என்று ஆனபின் ..

*ராமா*

தந்தை பெற்றான் மோக்ஷம் உன் அம்பில் மடிந்து

நான் பெற்றேன் மீண்டும் அவனை உன் நாமம் கொண்டு ...

தன் தோளில் சாய்ந்த அங்கதனை அணைத்துக் கொண்டான்

*ஒரு தந்தையாய் ராமன் தான் பெறாமலேயே* 👍
ravi said…
*14*

*தாடை*

செவ்வாழைப் பூபோன்ற முன்வாயின் கீழாகச்
செய்வித்த சூலாயுதம்

சிவானரும் சிலநேரம் சுகமாக விளையாடச் செய்கின்ற ஓராயுதம்

கொவ்வைப் பொன் இதழுக்கு முத்துக் கொடுக்கின்ற குளிர் தாடை ஓரற்புதம்

கோடானு கோடிப்பெண் கூட்டத்தில் வைத்தாலும் குறிப்பாகக் காட்டும் திறம்

எவ்வாறு நான் சொல்ல நேராகப் பார்போர்க்கு

இளந்தாடை கலையாகுமே !

இசை பாடும் வேகத்தில் அசைகின்ற நேரத்தில் எல்லாமும் நகையாகுமே !!💐💐💐
ravi said…
மண்ணுக்கு அரசி அவள் மதுரைக்கு மதுரம் அவள் ...

அரவிந்தங்கள் எல்லாம் அணி வகுத்து அவள் பாத தாமரையை வேண்டிடுமே கதிரவன் தினம் மலர 🌞

குவளைகள் பவளங்கள் கோடி சுமந்து அவள் பாதம் தனை

இன்னும் செந்நிறம் ஆக்கி வேண்டிடுமே
திங்கள் தினம் வானில் வந்திடவே 🌝

அவள் வெல்லாதது ஒன்றும் இல்லை ..

யாரும் வெல்லா காமனையும் காலனையும் வென்றவனை வென்றவள் வீரத்திருமகள் எங்கள் தமிழ் மகள்

நாணம் எனும் சேலைக்கட்டி

அச்சம் மடம் , பயிர்ப்பு தோழிகள் படை சூழ

எங்கள் சொக்கனை சொக்க வந்தாள் அன்னம் எனும் நடை தனில்

அம்பாய் தெறித்த விழிகள் அஞ்சலம் தீட்டி அமைதி காத்ததே ..

மீன் என சுழலும் கண்கள் கடை ஓரம் சுந்தரனை ரசித்துக்கொண்டு இருந்ததே ...

அழகன் இவன் போல் உண்டோ என்று மேனி சிலிர்க்க கண்கள் விசாலம் கொண்டதே ...

மாதாரார் எல்லோருக்கும் மகளாய் தெரிந்தவள்

மண்ணிற்கு மகாராணி என வந்தவள்

பேசும் கிளி என பேசினாள் தனக்குள் சிவாய நம என்றே

கட்டினான் காமேஸ்வரன் திருமாங்கல்யம் ... மங்களம் நிரந்தரமாய் அங்கே குடி புகுந்ததே சௌபாக்கியம் செங்கோல் பிடித்ததே

மண்ணும் செழித்தது வானும் பொழிந்தது

விண்ணும் குளிர்ந்தது

வியக்கும் வண்ணம் எங்கும் பசுமை

அதுவே எங்கள் பச்சைப் புடவைக்காரியின் பெருமை
அருமை
மென்மை
மேன்மை

🦜🦚🦜🦚🦜🦚🦜🦚
ravi said…
[02/05, 16:41] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 78*💐💐💐💐🙏🙏🙏

ஸது3பசார-விதி4ஷ்-வனுபோ3தி4தாம்

       ஸவிநயாம் ஸுஹ்ருத3ம் ஸது3பாச்ரிதாம் |

மம ஸமுத்3த4ர பு3த்3தி4-மிமாம் ப்ரபோ4

       வரகு3ணேன நவோட4-வதூ4மிவ ||                                       78
[02/05, 16:42] Jayaraman Ravikumar: ஸீதா கல்யாணத்தின் போது, ஜனகர், சீதையின் கைகளை எடுத்து, ராமரின் கைகளில் வைத்து,

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீ தவ |
ப்ரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம் க்ருண்ஹீஷ்வ பாணிநா ||
பதிவ்ரதா மஹாபாகா சாயேவானு கதா ஸதா|

“இந்த சீதை, என் மகள், பதிவ்ரதை, இவள் நிழல் போல உன்னை எங்கும் பின் தொடர்வாள், இவள் ரொம்ப பாக்யவதி, இவளை ஏற்றுக் கொள்” என்று சொல்வது நினைவு வருகிறது.
ravi said…
[02/05, 16:38] Jayaraman Ravikumar: *113. வ்ருஷகர்மணே நமஹ (Vrushakarmane namaha)*
[02/05, 16:40] Jayaraman Ravikumar: ராமாநுஜர், “இறைவனிடத்தில் ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள், அவன் சாஸ்திரங்களில் இட்ட கட்டளைகளை
அப்படியே பின்பற்றுபவர்கள்,

அவனைத் தவிர இன்னொன்றை நினைக்காதவர்கள்,

அவனது லீலைகளையே எப்போதும் சிந்தித்திருப்பவர்கள்,
அவனை விட்டுப் பிரிந்தால் தரிக்க முடியாதிருப்பவர்கள் இத்தகைய மெய்யடியார்களே சாதுக்கள்.

‘பரித்ராணாய ஸாதூநாம்’ என்றால் அத்தகைய அடியார்களைக் காப்பதே அவதாரத்துக்கு முக்கிய நோக்கம் என்று பொருள்.🪷🪷
ravi said…
[02/05, 16:36] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 143 started on 6th nov
[02/05, 16:37] Jayaraman Ravikumar: குறியை ... தியானிக்கப் படுகின்ற பொருளை,

குறியாது குறித்து ... காலம், இடம் முதலியன பற்றி நினைக்காமல்
தியானிக்கப்படும் பொருளைப் பற்றியே எண்ணிக்கொண்டு,

அறியும் நெறியை ... பசு, பாச ஞானங்களை விட்டு, பதி ஞானத்தால்
அறியும் உண்மை வழியை,

தனி வேல் ஐ நிகழ்த்திடலும் ... ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய
கடவுள் மெளன குருவாய் வந்து உள் நின்று உணர்த்திய உடனே,

உலகோடு செறிவு அற்று ... உலகத்தாறோடு நெருங்கும் உறவு நீங்கி,

உரை அற்று ... வாக்கும் அற்று,

சிந்தையும் அற்று ... நினைவும் அற்று,

அறிவற்று ... சுட்டி அறிகின்ற அறிவும் அற்று,

அறியாமையும் அற்றதுவே ... அறியாமையும் முற்றிலும் நீங்கிவிட்டன.
Hemalatha said…
அடியாளின் ஒரு விண்ணப்பம் இன்று அதிகாலை கனவில் ஒரு பெரிய கோயில் அரங்கில் தங்களுடைய சொற்பொழிவை நான் நேரில் கேட்பதுபோல அப்ப உதயமான ஒரு தலைப்பு அம்பாளின் ஸ்லோகங்களும் அதை சொல்வதனால் உண்டாகும் நன்மைகளும்
Hemalatha said…
சார் அப்படி சொல்லாதீங்க என் கனவு ஒரு நாள் படித்தே தீரும் எனக்கு உங்க பேச்சு பிடிக்கும் மிக எளிமையானது.
ravi said…
*ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்,*

*ஸ்தோத்ரம்*

சரிதம் ரகு⁴னாத²ஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம் ।

ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக நாஶனம் ॥ 1 ॥

த்⁴யாத்வா நீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம் ।

ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மண்டி³தம் ॥ 2 ॥
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 35*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐

*வாலி வதம்*

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
வாலியின் கண்களில் சுக்ரீவன் பாசக்கயிறை கண்டான் --

அவன்   கையிலிருந்த கதாயுதம் கைநழுவி வாலியின் பாதங்களை பற்ற ஓடிச்சென்றது... 

"என்னடா கேட்டாய்? என் உடம்பில் ஓடுவது உன் தாயின் இரத்தம் தானா?

உன்னை அன்றே ஒழித்திருக்கவேண்டும் -

உயிர் பிழைத்து போ என்று சொன்னேனே,

எவ்வளவு பெரிய தப்பு அது என்று இப்பொழுதுதான் புரிகிறது.

பரவாயில்லை அன்று செய்த தப்பு இன்றுடன் நீங்கட்டும்

- உன் மனதில் உள்ள இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள் -

இன்று நீ இந்த மண்ணில் இருக்கும் கடைசி நாள்.

"கதாயுதத்தை சுழற்றினான் வாலி -

அந்த சப்தம் சுக்கிரீவனை மயக்கம் போட வைத்தது -

மயக்கமானான் சுக்ரீவன் -

அவனை பந்தாக தூக்கினான் வாலி -

ஒழிந்து போ - எனக்கு இனி தம்பியே இல்லை -

ஒருவனாக பிறந்தேன் என்றே இருந்து
விட்டுப்போகட்டும் --

தூக்கிய வாலி தூர எறிந்தான் சுக்ரீவனை -

அவன் விழுந்த இடம் நகருக்கு வெளியே -- 

ராமர் பாதங்களில் விழுந்தான் சுக்ரீவன் -

பலத்த அடி - உடம்பெங்கும் ---

அவன் பேசியது ராமருக்கு தொலைவில் உள்ள கிணற்றில் இருந்து யாரோ பேசுவதைப்போல இருந்தது --

ரா --மா ----- காப்பாத்துவேன் என்றாயே ---

நான்தான் தவறாக கேட்டுவிட்டேனா?

உன்னால் முடியாது என்று சொல்லி இருந்தால் நாங்கள் இதுதான் விதி என்று சும்மா இருந்திருப்போமே ---

வலி உயிர் போகிறது *ராமா* ----- 
ravi said…
ஜாம்பவான், நடமாடும் மருத்துவராக பச்சிலைகளை முன்கூட்டியே சுக்ரீவனுக்காக கையில் எடுத்து வைத்திருந்தார் --

அதன் சாறை அவன் உடம்பெங்கும் தெளித்து வலியை இன்னும் அதிகப்படுத்தினார்.... 
அனுமான் சுக்ரீவனை தன் மடியில் போட்டுக்கொண்டான் --

அவரின் பரிசங்கள் பட்டதுமே சுக்ரீவனுக்கு மீண்டும் சக்தி கிடைத்தது -
வலி குறைந்தது - வீக்கங்கள் தணிந்தன..  

ராமர் சொன்னார் "சுக்ரீவா -

அவனை இங்குதானே அழைத்து வரச்சொன்னேன்

-- உன்னை அவனுடன் அங்கேயே சண்டை போடவா 
சொன்னேன்? 

பிரபோ!  நான் என் கதாயுதத்தை எடுக்கவே இல்லை -

அந்த நன்றி கெட்ட கதாயுதம் அவன் எனக்கு பரிசாக தந்த ஒரே காரணத்தினால் அவன்  பாதங்களை வருட போய்  விட்டது -

பிறகு என்ன நடந்தது என்றே தெரியாது -

என் கண்கள் முழுவதும் கரும் மேங்கங்கள் --

என் நெஞ்சை யாரோ சுத்தியல் வைத்து அடிப்பதைப்போல் இருந்தது -

நான் நின்று கொண்டிருந்த  தரை என்னை விட்டு நழுவதைப்போல் தெரிந்தது ....

மரணத்தை நான் சந்தித்து விட்டேன் பிரபோ -

இனி எனக்கு மரண பயமே இல்லை -

இனி வாலி என்னைக்கொன்றால் அது செத்த பாம்பை கொன்றதற்கு ஈடாகும் .. 🐒🐒🐒
ravi said…
🌹🌺" *குருவாயூரப்பன் பொருட்களில் உயர்வு* , *தாழ்வைப் பார்ப்பதில்லை* , *அன்புடன் சமர்ப்பிக்கும் எதையும் ஏற்பான் . ... என்பதை பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹ஒரு ஏழைப் பெண்மணி சத்யா தென்னை மட்டையிலிருந்து கயிறு பிரித்து வியாபாரம் செய்து வந்தாள். அவளுக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. மிகவும் வருந்திய அவள் குருவாயூரப்பனிடம் தனக்குக் குழந்தை உண்டானால் கயிற்றுப் பிரியால் துலாபாரம் செய்வதாய் வேண்டிக் கொண்டாள்.

🌺சிறிது நாட்களிலேயே அவள் கருவடைந்தாள். வியாபாரமும் செழிக்கத் தொடங்கியது. குழந்தைக்கு ஆறு மாதமானதும் பிரார்த்தனையை நிறைவேற்ற குருவாயூர் சென்றாள். இப்போது வசதியாய் இருப்பதால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று முடிவு செய்தாள்.

🌺குழந்தையைத் துலாபாரத் தட்டில் கிடத்தி, மற்றொரு தட்டில் கதலிப் பழத்தை வைத்தார்கள். குழந்தையின் எடையை விட பத்து மடங்கு கதலியை வைத்தும், தட்டு சமநிலையை அடையவில்லை. கோவில் சிப்பந்தி அவளிடம், “ஏதோ தப்பு நடந்திருக்கிறது, என்ன பிரார்த்தித்தாய்?” என்று கேட்டனர்.

🌺அவளும், “ஏழையாய் இருக்கும் சமயம் கயிறு வேண்டிக் கொண்டேன், இப்போது அவன் அருளால் வசதி பெருகிவிட்டது, அதனால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று செய்தேன்” என்று கூறினாள். கோவில் சிப்பந்திகள்,“ உன்னிடம் எவ்வளவு கோடி இருந்தாலும், பிரார்த்தித்த வேண்டுதலையே அப்பன் ஏற்பான்” என்று கூறினார்கள்.

🌺பழங்களை இறக்கிவிட்டு கயிற்றை ஏற்றினார்கள், என்ன ஆச்சர்யம்! தராசு கீழே இறங்கியது. குருவாயூரப்பன் பொருட்களில் உயர்வு, தாழ்வைப் பார்ப்பதில்லை, அன்புடன் சமர்ப்பிக்கும் எதையும் ஏற்பான் என்பதற்கு இந்த லீலை உதாரணம்🌹🌺

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 "A simple story explaining that Guruvayurappan does not see high or low in things, He accepts anything offered with love. . . 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹A poor woman Satya was doing business by splitting rope from coconut shell. She was childless for a long time. Feeling very sorry, she prayed to Guruvayurappan that if she had a child, he would do the Dulaparam with a rope.

She conceived within a few days. Business also began to flourish. When the baby was six months old, she went to Guruvayur to perform the prayer. Now that she is comfortable, she decided that if she does rope dulaparam, she will do Kevalam and Katali dulaparam.

🌺The child was placed on a Tulabar plate and a Kathalip fruit was placed on another plate. Even with a katali ten times the weight of the child, the plate did not balance. The temple attendant said to her, “Something has gone wrong, what did you pray for?” They asked.

🌺She also said, "When I was poor, I prayed for a rope, and now with his grace I have increased my comfort, so if I do rope dulaparam, I made it so that I can do kavala and kadalit dulaparam." The temple workers said, "No matter how many crores you have, Father will accept the prayer you have prayed for."

🌺 They dropped the fruits and put up the rope, what a surprise! The scale went down. This leela is an example of how Guruvayurappa does not look high or low in things and accepts anything offered with love 🌹🌺

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan 🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
03.05.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 51)

Sanskrit Version:

कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः।
जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम्।।2.51।।

English Version:

karmajam buddhiyuktaa hi
phalam tyaktvaa manishiNah: |
janmabandhavinirmuktaah:
padam gachaantyanaamayam ||


Shloka Meaning

Wise men endowed with equanimity, having abandoned the fruits of action, go to the abode
beyond all sorrows and evils.

Manishaa means knowledge. He who possesses discrimination and true knowledge has not concern or use
for the fruits of work. It follows that discrimination is necessary to understand the principle
of right action. The man who has properly understood the bondage arising from work done with desire and attachment, and the great good arising from doing work without attachment and desire, is alone fit to ascend the abode of peace and blessedness beyond all evil and sorrow.

Jai Shri Krishna 🌺
ravi said…
*Dialogue between Lord Krishna and Karna*

Karna tells Krishna, "Lot of unfairness has happened to me. Is it my fault that I am born illegitimate? My mother left me the moment I was born.

"I, who should have been brought up in palace, was brought up in 'sutha's house. I did not get full education (in war science) from Dronacharya because I was considered as a 'Sutha'.

"Even though Parasurama taught me in full, he gave me a curse that I should forget everything, since I was a Kshatriya. Is it my fault? I didn't even know I was a Kshatriya.

"Some boy came running and was hit by my chariot. It was not my fault; it was an accident. Even then the boy's father cursed me.

"Even in Draupadi's 'swayamvara', I was disgraced for being a 'sutaputra', even though I was 'suryaputra'.

"Kunti had affection only for her other children. She never told me the truth, and when she finally did tell me, she asked me not to use any weapon on her son's second time. Even though she never behaved like a mother to me, I gave her whatever she asked.

"I should have got the throne of 'Kurukula', but am ruling a kingdom I got because of Duryodhana's charity.

"Bhismacharya never gave me any respect as a worthy person and he also disgraced me and disallowed me to fight in the army under his Generalship.

"I am whatever I am because of my friendship Dhuryodhana. You all might think that he is a villain, but he has done only good to me. Even when the Gods left me Duryodhana stood by me. So what is wrong in my being in his side?"

Krishna replies: "Karna, I was born in a jail. Death was waiting for me even before my birth.

"The night I was born, I was separated from my mother. At least you had some education in 'sutha' house.

"From childhood, you grew up hearing the noise of swords, chariots, horses, bow and arrows.

"For me, I got only cowherd's shed. No swords, no chariots, but only cattles, cow dung, milkmaids with attempts on my life by Kamsa.

"No army, no education. At an young age, I was accused of killing my own uncle. In fear of Jaradandha, I had to move my whole community from the banks of Yamuna to far of seashore - a very new place.

"I could hear people saying I am the reason for all their problems. I was also called a coward for running away. When all of you were being appreciated for your valours by your teacher (guru), I had not even joined a Gurukula. I joined the gurukula of Rishi Sandipani only at the age of 16.

"You have a kingdom, but what about me? When girls whom I don't even know, want me to protect them by marrying them, I have to rush there leaving whatever I am doing. I never got the girl I loved, but anyone who loves me, get me.

"If Duryodhana wins the war, you will get lot of credit and will become more famous. I am just a Sarathi (charioteer). What do I get if Dharmaraja wins the war? Already I am being blamed for the war and all problems. This blame will not vanish if Dharmaraja wins or loses.

"Remember one thing, Karna: Everybody has challenges in life. Life is not fair to anybody. Duryodhana has lots and lots of unfairness in life. So too Yudhishtra.

"But what is Right (Dharma) is known to your mind (conscious). How much unfairness we got? How many times we were disgraced? How many times we were denied? What is due to us, is not important. What is important is how you REACTED at that time decides your personality. Stop whining, Karna. Learn to walk the path of consciousness (विवेका). Life's unfairness does not give you license to walk the wrong path (अधर्मा)."

🙏🕉🙏
ravi said…
https://chat.whatsapp.com/JGsa4x9TMosCpfQapJIJm9

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹா காயத்ரி மந்திரம் பற்றிய பதிவுகள் :*

காயத்ரி மந்திரம், மந்திரங்களில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது விசுவாமித்திரர் என்ற முனிவரால் இயற்றியதாகக் கூறப்படுகிறது.

காயத்ரி மந்திரமானது அக இருளை நீக்கி ஞான ஒளியைத் தந்தருளும்படி இறைவனை வேண்டும் மந்திரமாகும்.

*மந்திரம் :*

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமி
தியோ யோந ப்ரசோதயாத்

*விளக்கம் :*

பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம்.

நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

*காயத்ரி மந்திரத்தின் மகிமைகள் :*

தோராயமாக 2500-3000 ஆண்டுகளுக்கு முன், முதன் முறையாக வேதங்களில் தான் காயத்ரி மந்திரம் இயற்றப்பட்டது. இதுவே முதன்மையான மந்திரமாக கருதப்படுகிறது.

இந்த மந்திரம் மிகவும் ரகசியமாக பல வருடங்களாக காத்து வந்தனர் யோகிகளும் ரிஷிகளும். அதற்கு காரணம் இந்த மந்திரத்தில் உள்ள கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிலான சக்திகளே.

இந்த குறிப்பிட்ட மந்திரத்தின் அதிர்வுகளால் உங்கள் வாழ்க்கையில் பல பயன்கள் இருக்கும்.

1. தடைகளை நீக்கும்

2. ஆபத்தில் இருந்து பாதுகாக்கும்

3. அறியாமையை போக்கும்

4. எண்ணங்களை தூய்மைப்படுத்தும்

5. உங்கள் தொடர்பு திறன்களை மேம்படுத்தும்

6. மனித மனம் சார்ந்த பார்வையை திறக்கும்.

காயத்ரி சக்தி என்பது ஒரு ஆற்றல் தளமாகும். இங்கே மூன்று ஆற்றல்கள் உச்சத்தை அடைகிறது. காயத்ரி மந்திரத்தில் ஓதும் போது இந்த ஆற்றல்கள் உங்களுக்குள் உட்புகும். இதனால் அருளக்கூடிய சக்தியை உங்களுக்கு அளிக்கும்.

காயத்ரி மந்திரத்தின் குணப்படுத்தும் சக்திகள் காலையில் சூரியன் விடியும் நேரமோ அல்லது மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரமோ நான் காயத்ரி மந்திரத்தை ஓதுவதற்கான சிறந்த நேரம் ஆகும். இந்நேரத்தில் காயத்ரி மந்திரத்தை ஓதினால், நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, அதனை உயர்த்த மற்றும் ஆற்றல் மிக்க நிலையில் பராமரித்திடும்.

காயத்ரி மந்திரம் ஜெபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜெபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்கு தான் முதலிடம். காயத்ரி ஜெபம் செய்யாத எந்த ஜெபமும் ஆராதனையும் பயனற்றது.

*காயத்ரி மந்திரத்தின் பலன்கள் :*

காயத்ரி மந்திரத்தினை தினசரி உச்சரித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும்.

காயத்ரி மந்திரத்தினை உச்சரித்தால் எல்லாவித ஆபத்துகளும் நீங்கும், மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. இதனை ஜெபித்தால் இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும்.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்திரிக்காகவும் நடு பகலில் சாவித்திரிக்காகவும், மாலையில் சரஸ்வதிக்காகவும் சொல்லப்படுகிறது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

மீநாக்ஷிக்கும் மீனுக்கும் இன்னொரு ஸம்பந்தம். வைகைக்குப் பூர்வத்தில் க்ருதமாலா என்று ஸம்ஸ்க்ருதப் பேர் இருந்திருக்கிறது. இங்கே இருந்த வைவஸ்வத மநுவுக்காகத்தான் பகவான் மத்ஸ்யாவதாரம் பண்ணினார். இதைச் சொல்லி நீலகண்ட தீக்ஷிதர் ‘சிவலீலார்ணவ’த்தில் வேடிக்கை பண்ணியிருக்கிறார். “பிரளயத்தில் மாட்டிக் கொண்ட வேதத்தை மீட்பதற்காக மஹா விஷ்ணு மீனாய் அவதரித்துத் தேடித் தேடிப் பாடுபட்டார். மீநாக்ஷியான உன் சரணாரவிந்தத்தையோ அந்த வேதமே தேடிக் கொண்டிருக்கிறது” என்கிறார்!

ஆவிஷ்ய கிந்நம் நிகமாந் அசேஷாந்

அமீ ந மீநம் ப்ரதமம் ஸ்மராம: |

ஆவிஷ்யமானம் நிகமை-ரசேஷை:

அம்ப ஸ்நுமஸ்தே வயமாக்ஷி மீநம் ||

மதுரையிலே வேதம் நிரம்பியிருக்கிறது. “சேரர் தலைநகரான வஞ்சியில் உள்ளவர்களும், சோழர் தலைநகரான உறையூரில் உள்ளவர்களும் கோழி கூவி எழுந்திருப்பார்களென்றால், பாண்டியர் தலைநகரான மதுரையிலுள்ள நாங்கள் வேத ஒலி கேட்டே எழுந்திருப்போம்” என்று ‘பரிபாடலி’ல் இருக்கிறது.

நான் மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப

ஏம வின்றுயில் எழுதல் அல்லதை

வாழிய வஞ்சியும் கோழியும் போலக்

கோழியின் எழாதெம் பேரூர் துயிலே.

அம்பாள் இங்கே பெரிய கோபுரம் கட்டிக் கொண்டிருக்கிறாள். கோபுரம் என்பதென்ன? ஸநாதன தர்ம விருஷத்தின் பழம். அதற்கு வேர் எது? வேதம்தான். இத்தனை உயர கோபுரப் பழமென்றால் அதற்கேற்க அத்தனை ஆழமாக வேத வேரும் போயிருக்கிறது மதுரையில்! அம்பாள் அங்கே வேத ஸ்வரூபிணியாக ஜ்வலிக்கிறாள், நாத ஸ்வரூபிணியாக, ஸங்கீத ஸ்வருபிணியாக இருப்பதோடு.

ravi said…
மீநாக்ஷியின் அம்ருத கடாக்ஷம் படுகிற இடமெல்லாம் மதுரமாகிறது. மதுரத்துக்கு, இனிமைச் சுவைக்கு பெயர் போனது அம்ருதம்தானே? ஜீவஜந்துகள் மதுரம் ஆவது என்றால் என்ன? அன்பு மயமாவது என்றுதான் அர்த்தம். பரிபூர்ணத்வம் அடைவதே ஜீவனுக்கு மதுரம். கட்டைக் கசங்காய் கடைசியில் பக்குவமாகிற போது கனிந்து மதுரமாவதுபோல், அநேக துர்குணங்கள் கொண்ட நாம் கனிந்து மாறிக்கொண்டேபோய்ப் பக்குவமாகிப் பெறுகிற பூர்ண நிலைதான் நமக்கு மதுரம். அப்படிப்பட்ட பூர்ணத்வ மதுரத்தை நமக்குத் தருவது மீநாம்பிகையின் கடைக்கண். லோகத்தில் இருக்கிறபோதே நிறைவைத் தந்து, அப்புறம் இந்த லோகம், ஸம்ஸார பாசம் இல்லாமல் மோக்ஷானந்தம் தருகிறது.

ravi said…
முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு அப்பேர்ப்பட்ட அநுக்ரஹத்தை மீநாம்பிகை செய்தாள். தீபாவளி அமாவாஸ்யை அன்று அம்பாளுக்குப் பூஜை பண்ணிவிட்டு ‘மீநாக்ஷி‘ என்று அவர் மனமுருகிப் பாடிக் கொண்டே போனார். பச்சைப் பசேல் என்று பரம குளிர்ச்சியாகப் பிரகாசிக்கிற அம்பாளின் ஸ்வரூபத்தை ‘மரகதச் சாயே’ என்று சொல்லி, ‘மீனலோசனீ, பாசமோசனீ‘ என்ற வார்த்தைகளை அவர் கானம் பண்ணிக் கொண்டிருக்கிறபோதே அவருடைய ஸம்ஸார பாசத்தை அம்பாள் நீக்கித் தன் பாதாரவிந்தத்தில் சாச்வதமாகச் சேர்த்துக் கொண்டு விட்டாள். ஸங்கீதத்துக்கே அதிதேவதையாக இருக்கப்பட்ட மீநாக்ஷி தீக்ஷிதரின் நாதோபாஸனைக்குப் பலன் தந்துவிட்டாள்.

ravi said…
இப்படிப் ஜீவனுக்குப் பூர்ணத்வம் என்ற மதுரத்தைத் தரும் மீநாக்ஷியின் மதுரகடாக்ஷம் விசேஷமாகப் பரவியிருப்பதால்தான் அவளுடைய க்ஷேத்ரத்துக்கே மதுரை என்று பெயர் இருக்கிறது. அம்பாளின் கடைக்கண் அமுது அலை அலையாகப் பரவியிருப்பதால் அது மதுரையாகிறது. அலையடித்துப் பரவுகிறதென்றால் அப்போது அவளுடைய காடக்ஷத்தை அநுக்ரஹ ஸமுத்ரம் என்று சொல்லவேண்டும். முதலில், ஸமுத்ரத்தில் மீன் இருக்கிற மாதிரி அம்பிகையின் முக காந்திக் கடலில் கண் மீன்கள் துள்ளுகின்றன என்று பார்த்தோம். இப்போது பார்த்தால் முகலாவண்ய ஸமுத்ரத்துக்குள் இருக்கிற இந்த நேத்திர மீனுக்குள்ளும் ஒரு ஸமுத்ரம் – அருட்கடல் – இருக்கிறதென்று தெரிகிறது!

அவள் எங்கேயோ இருக்கிறாள், கடாக்ஷம் மட்டும் நம் மேலே படுகிறது என்று இல்லை. தாய் தன் மடியில் குழந்தையை அன்பாகப் போட்டுக் தாலாட்டிக் கொண்டிருப்பதுபோல அவளுடைய கடாக்ஷத்திலேயே அவளுடைய மடியில் கிடப்பதான ஆறுதலும் அவளுடைய வாத்ஸல்யம் நிறைந்த வாக் அமுதத்தை கேட்பதான தாபசாந்தியும் குழந்தைகளான நம் இத்தனை பேருக்கும் கிடைக்கிறது. மீனின் கடாக்ஷமே மீன் முட்டைக்குத் தன்னை அடைகாக்கிற அணைப்பு ஸ்பரிசமாகவும், தாயார் ஊட்டும் க்ஷீரமாகவும் இருக்கிறமாதிரி மீநாக்ஷியின் கடாக்ஷமே நம்மை அணைத்து ரக்ஷித்து ஞானப்பால் ஊட்டிவிடுகிறது. அவள் ஒரு மூர்த்தியாக நின்று, அவளுக்குக் கிட்டே ஸ்தூலமாக இருக்கும் மதுரை வாஸிகள் பாக்யசாலிகள்.

என்னை ‘தர்சனம்’ என்று எதுவோ ஒன்று பண்ணுவதற்காக மீநாக்ஷி நகரவாஸிகளான நீங்கள் இவ்வளவு பேர் வந்து ஸந்தோஷப்படுகிறீர்களென்றால், அவளுக்குக் கிட்டவே வாழ்கிற உங்கள் இத்தனை பேரையும் தர்சனம் பண்ணுவது எனக்கும் ஆனந்தமாக இருக்கிறது*3. இப்படி நாம் பரஸ்பரம் மனம் கனிந்து பிரீதியோடு இருப்பது ஸாக்ஷாத் மீநாம்பிகை வர்ஷிக்கும் பேரானந்தத்தில் ஒரு துளிதான். இது லோகம் முழுக்க, எல்லையில்லாத அவளுடைய மாத்ருத்வத்தில் அடங்கியுள்ள அத்தனை உயிர்களுக்கும் பரவி, லோகம் முழுவதும் அவளுடைய கடாக்ஷாம்ருதம் பூர்ணமாகப் பொழிந்து, அதனால் எங்கேயும் பேரானந்தம் நிரம்பியிருக்கும்படியாக அவளுடைய சரணாவிந்தங்களிலேயே பிரார்த்தனை செய்வோம்.

மதுராபுரி நாயிகே நமஸ்தே

மதுராலாப சுகாபிராம ஹஸ்தே |

மலயத்வஜ பாண்ட்ய-ராஜகந்யே

மயி மீநாக்ஷி க்ருபாம் விதேஹி தந்யே ||

(மதுராபுரிக்கு நாயகியே! மதுரமாகக் கூவும் கிளியை ஏந்தி எழிலுற்ற கரத்தை உடையவளே! மலயத்வஜ பாண்டிய மன்னன் மகளே! ஸகல ஐச்வர்யமும் நிறைந்தவளே! உனக்கு நமஸ்காரம். எனக்கு உன் க்ருபையை அருளுவாய்!)

மீநாக்ஷியின் புகழை இப்படிப் பாடிப் பாடியே, லோகம் முழுவதும் அவள் குழந்தைகள் என்பதில் ஒரு பேதம், ஒரு த்வேஷம் இல்லாமல், அத்தனை பேரும் சிந்தனையிலும் செயலிலும் ஒற்றுமையுடன் வாழ்க்கையை ஆனந்தமாய் நடத்துவோம்.
ravi said…
*PROFOUND DEPTH IN INNOCENCE*

I bet everyone will love to read this...

Every day early morning a little girl would come to the temple and stand before the idol, close her eyes and with folded hands, murmur something for a couple of minutes, then open her eyes, bow down, smile and go out running. This was a daily affair.

The temple Poojari was observing her and was curious about what she was doing.

He realised that she was too small to know the deeper meaning of religion & that she would hardly know any prayers. But then what was she doing every morning in the temple?

A few days passed and the Poojari now couldn’t resist but to find out more about her behaviour.

One morning, the Poojari reached there before the girl and was waiting for her to complete her ritual.

He placed his hand on her head and said, “My child, I have been seeing you since the last few days. You come here regularly. What do you do?”

“I pray,” She said spontaneously.

“Do you know any prayers?”asked the Poojari with some suspicion in his voice.

“No,” replied the girl.

"Then what are you doing closing your eyes every day?” he smiled.

Very innocently the girl said, “I do not know any prayer, *but I know ‘a,b,c,d….up to z.’ I recite it five times* and tell God that I don’t know your prayer, but it cannot be outside of these alphabets. Please arrange the alphabets as you wish and that is my prayer.”

And she ran, jumping on her way out.

The Poojari stood there dumbstruck, staring at her for a long time as she disappeared running in the wilderness.

This is kind of belief in God that we should have when we pray. 🙏
ravi said…
[04/05, 07:24] +91 96209 96097: *ப⁴க்திமத்கல்பலதிகா* பஶுபாஶவிமோசினீ🙏🙏
அவளிடத்தில் பக்தி கொண்டவருக்கு நினைத்தது அனைத்தையும் அளிப்பவள்
[04/05, 07:24] +91 96209 96097: *உக்ராய நமஹ* 🙏🙏
உக்ரமானவர்
ravi said…
*CHARACTER*

He is moments away from death.

Ravana is felled by Rama’s arrow.

Its all over for the ten headed demon as he bites the dust.

With great reverence, Rama approaches the fallen foe who is at a loss for words at the unexpected turn of events.

“Oh Rama, I was ahead of you in every department of the game.

My army was far superior to the Vanaras who helped you.

I am well versed in the Shastras and Vedas. I am a brahmin by birth whereas you are a Kshatriya.

I have mastered the 64 arts and had appeased Lord Shiva on more than one occasion.

I was the only one who could secure the ‘Atma Linga’ or the soul of Shiva himself.

I am a great scholar and a musician par excellence who played the Veena.

I have also authored books like Samhita and Arkaprakasha explaining the concepts of astrology and medicine.

No human could ever compose the Shiva Tandava hymn in praise of Lord the way I did.

Despite all these qualities, why did I end up like this"?

“The only thing you lacked is character”, replies Rama.

Happens against us with prospective clients as well or in job interviews.

You work on it day in and day out.

When you are ready and call them, they don’t pick up or answer your call.

You have invested days if not weeks which gets watered down in a second.

For some reason, if it is not going through, perfectly fine! Just drop a line and inform.

Character is informing us that there is a problem.

Character is calling the person and telling him/her that the program is not on.

Character is giving respect to a person who has put his heart and soul into it.

Character is apologizing for the inconvenience caused.

Character is not becoming a barrier between the learner and the learned.


That is *CHARACTER* .🙏🙏🙏
ravi said…
very nice . Amazing perspective and definition of Character. 👌👍🙏
Its so true .
ravi said…
*அம்மா*

துர்க்கை உனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும் அன்றோ

தர்மம் காக்கும் தாயானாவளே

உன் தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் அன்றோ

பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும்
பகை விரட்டும் அன்றோ *அம்மா*

நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும் அன்றோ

ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி நீ பெரியவள் அன்றோ

ஆயிரம் நாமங்கள் கொண்டவள் நீ அன்றோ

தாய் என நம்மை காப்பவள் அன்றோ

சங்கு சக்கரமும் வில்லும் அம்பும்

மின்னும் வாளும் வேலும் சூலமும்

தங்க கைகளில் தாங்கி நிற்பவளே *அம்மா* ..

சிங்கத்தின் மேல் வீற்றிருப்பாய்

திங்களை முடிமேல் சூடி நிற்பாய்

மங்கள வாழ்வும் தந்திடுவாய்

மங்கையர்கரசியும்
நீ அன்றோ

அங்கையர்ககண்ணியும் நீ அன்றோ *அம்மா*🙏🙏🙏
ravi said…
*15*

*கழுத்து*

பாரதப் போர்தனில் அண்ணன் திருக்கண்ணன்

ஒலித்தோர் பாஞ்ச சன்யம்

பக்தர்கள் கயிலாய மலையிலே தினந்தோறும்

படைக்கின்ற பொங்கல் வண்ணம்

நாரதப் பாவாணன் இசைக்கின்ற யாழுக்கு
நரம்புகள் தந்தலாலே

நாள்தோறும் வீணை போல் ஒலிக்கும் கழுத்துக்கு நலமான ஈடு யாரே ?

பாரதி மாதவிப் பூங்கொடி பைரவி பார்வையும் உல காளுமே !

பல நகைகள் விளையாடும் அழகு மயில் மேனியே
பதமான நகையாகுமே
ravi said…
துர்க = கோட்டை- அரண் - வலிமை வாய்ந்த பெண் தெய்வம்

*❖ 190 துர்கா* = பாதுகாப்பவள் - (பக்தர்களுக்கு) கவசமானவள்; - துர்கா தேவி
ravi said…
*சிவாயநம*

நாளை சித்திரை 22 (05-05-2023) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உலகத்தில் சிறந்த பரிகாரங்களுள் ஒன்று மனித மனதை குளிர்விப்பது ஆகும். ஒருவருக்கு பொன்னாலும், பணத்தினாலும் திருப்தி படுத்த முடியாவிட்டாலும் நாம் உணவு அளிக்கும்போது அவர் மனதை திருப்திபடுத்திவிடலாம். அதனால் அன்னதானம் செய்வது மிகப்பெரிய தர்மம் ஆகும்.

அன்னதானம் வழங்க விரும்புவோர்
அன்னதானத்திற்கு தங்களால் இயன்ற நிதி உதவியை கீழே குறிப்பிட்டுள்ள நமது அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 👇
____________________________

*அறக்கட்டளை வங்கி விவரம் :*

Name : Om Namasivaya Charitable Trust

Account Number : *39740686917*

IFSC Code : SBIN0002197

Bank Name : State Bank of India

Branch Name : Aramboly

____________________________

*G-Pay number 8300845263*

*Phonepe number 8300845263*

மேலும் விபரங்களுக்கு :👇

அறக்கட்டளை தொலைபேசி எண் : 8300845263

தொடர்ந்து நமது அறக்கட்டளைக்கு நிதி உதவிகள் வழங்கி வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

*ஓம் நமசிவாய🙏*
ravi said…
திரௌபதிக்கு தனது வயது
80 ஆனது போல இருந்தது...

உடல் ரீதியாக
மற்றும் மனரீதியாகவும் கூட

அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி
விதவைகள் அதிகமாக இருந் தனர்.

ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர்.

அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் அரசி திரௌபதி,
அஸ்தினாபுரம் அரண்மனை யில் அசையாமல் வெற்றிடத் தைப் பார்த்துக்கொண்டிருந் தாள்.

பிறகு,

ஸ்ரீ கிருஷ்ணர்
அறைக்குள் நுழைய

திரௌபதிகிருஷ்ணரைப் பார்த்ததும்ஓடி வந்து அவனிடம் ஒட்டிக்கொண்டாள்...

கிருஷ்ணா அவள் தலையை தடவிக்கொடுக்கிறார்.அவளோ அழத்தொடங்கினாள்.

நேரம் மெல்ல நகருகிறது.
அவளிடமிருந்து விலகி
பக்கத்து படுக்கையில் உட்கார்ந்த கிருஷ்ணன் கேட்டார்.

"திரௌபதி,என்ன நடந்தது?"

"ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா"

கிருஷ்ணர்: விதி மிகவும் கொடூரமானது பாஞ்சாலி..
நாம் நினைப்பது போல் வேலை செய்யாது!"

அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது.

முடிவுகளையும் மாற்றுகிறது.

நீ பழிவாங்க நினைத்தாய், வெற்றி பெற்றாய், திரௌபதி!

உன் பழிவாங்கல் முடிந்தது...
துரியோதனனும்துச்சாதனனும் மட்டுமல்ல, கௌரவர்கள் அனைவரும் மடிந்துவிட்டனர்.

நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!

திரௌபதி:" சகோதரா,
என் காயங்களைத் ஆற்ற வந்தீர்களா அல்லது அதன்மீது உப்பு தூவ வந்தீர்களா?"

கிருஷ்ணர்: இல்லை, திரௌபதி உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்துள் ளேன்.

எல்லாம் நமது தொலை நோக்கு பார்வையற்ற செயல் களின்விளைவுஎன்பதைஉணர்த்த வந்தேன்.


திரௌபதி: அதனால் என்ன?
இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பு கிருஷ்ணா?

கிருஷ்ணர்: இல்லை, திரௌ பதி நீ மட்டுமே காரணம் என்று
கருதாதே...

ஆனால்,

உன் செயல்களில் நீ கொஞ் சம் தொலைநோக்கு பார்வை யைக் கொண்டிருந்திருப்பாயே ஆனால், நீ இவ்வளவு துன்பங் களை அனுபவித்திருக்க மாட் டாய்..

திரௌபதி: நான் என்ன செய் திருக்க முடியும் கிருஷ்ணா?

கிருஷ்ணர் : நீ நிறைய செய்திருக்கமுடியும்.

உனது சுயம்வரம் நடந்தபோது
கர்ணனை அப்படி அவமானப் படுத்தாமல், போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்ப ளித் திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந் திருக்க கூடும்!

அதற்குப் பிறகு குந்தி உன் னை ஐந்து கணவர் களுக்கு மனைவியாக்கும்படி கட்டளை யிட்டதை...

அப்போது ஏற்றுக் கொள்ளா திருந்தாலும் முடிவு வேறுவித மாக இருந்திருக்கும்.

அதற்கு பிறகு உன் அரண் மனையில் துரியோதனனை அவமானப்படுத்தினாய்...

பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள் என்று.

அவ்வாறு நீ சொல்லாதிருந் திருந்தால் நீ மானபங்கப் பட்டிருக்க மாட்டாய்...

அப்போதும், ஒருவேளை, சூழ்நிலைகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.

"நம் வார்த்தைகள் கூட
விளைவுகளுக்கு பொறுப்பு திரௌபதி...

"நீ பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுதல் மிகவும் முக்கிய மானது"...

இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டு மல்ல, உனது சுற்றுப்புறத் தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்..

பற்களில் விஷமில்லை, ஆனால் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே...

எனவே வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்.
அதாவது, யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.

ஏனென்றால் மகாபாரதம் நமக்குள் மறைந்திருக்கிறது......
ravi said…

பழனிக் கடவுள் துணை -04.05.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-38

வாய் பாடுவது அருளை வேண்டி!!

மூலம்:

திடர்க்கல்எங் கெங்கும் திரிவான் பழனிச் சிறப்பிலங்கப்
படர்க்கையும் தன்மையும் பாடத் துவக்கினும்; பாவகன்மத்(து)
இடர்க்கடல் மூழ்குமென் வாய், இன்பவாரிதி எய்திஅருட்
சுடர்க்கண்ஒன் றும் படிக்(கு) ஆம்கவி யேமிகச் சொல்கின்றதே (38).

பதப்பிரிவு:

திடர்க்கல் எங்கெங்கும் திரிவான், பழனிச் சிறப்பு இலங்கப்
படர்க்கையும் தன்மையும் பாடத் துவக்கினும், பாவ கன்மத்து
இடர்க் கடல் மூழ்கும் என் வாய், இன்ப வாரிதி எய்தி அருள்
சுடர்க் கண் ஒன்றும் படிக்காம் கவியே மிகச் சொல்கின்றதே!! (38).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

இந்த 38வது அலங்காரத்தில் நம் சுவாமிகள் கற்பனையைப் பாடாது எல்லாம் வல்ல பழனிப்பரமன் புகழைப் பாடுவது அவன் திருவருளை வேண்டியே என்று எடுத்து இயம்புகிறார்.

திடர்க்கல், அதாவது குன்றங்கள் எங்கும் திரியும் பழனாபுரியிறைவனையும் , அவன் தன் சொல்ல ஒண்ணாத அருளை, எழிலை, மற்றும் அவன் படர்ந்து நின்று அருள்மழை பொழியும் பழனியம்பதியின், வரையறைக்குள் உட்படாத சிறப்புகளையும், பாவ கன்மத்தில், துன்பக் கடலில் மூழ்கும் அடியேனுடைய வாய் பாடத் துவக்குவது, அவன் என்றும் மாறாத அன்பு என்னும் இன்பக் கடலில் மூழ்கி , அவன் அருள்கடல் என்னும், என்றும் வற்றாத கடலில் திளைத்து, அவன் ஞானஒளிச் சுடரில் என்றும் ஒன்றும்படிக்கே! எம் பெருமானே! உன் அருளால், வெறும் கற்பனையையே பாடாது, எல்லாம் வல்ல என் பழனிப்பரமன் உன்னை, உந்தன் பெரும்புகழைப் பாடுவது உன் திருவருளை வேண்டியே, நாடியே என்று நீ உணர்வாய்! எனக்கு அருள்வாய்!

தாறுமாறாய் எத்துயர் என்னை எப்படி இழுக்கினும், வீறுபுழகுடை பழனியப்ப, வற்றா அருளூறும் உன்திருவடி பணியுமெனக்கு எந்த ஊறும் நேருமோ கூறு?

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
தாறுமாறாய் எத்துயர் என்னை எப்படி இழுக்கினும், வீறுபுகழுடை* பழனியப்ப, வற்றா அருளூறும் உன்திருவடி பணியுமெனக்கு எந்த ஊறும் நேருமோ கூறு? *வீறுபுகழுடை என்று படிக்கவும். முருகா சரணம் !!
ravi said…
தாறுமாறாய் எத்துயர் என்னை எப்படி இழுக்கினும், வீறுபுகழுடை* பழனியப்ப, வற்றா அருளூறும் உன்திருவடி பணியுமெனக்கு எந்த ஊறும் நேருமோ கூறு? *வீறுபுகழுடை என்று படிக்கவும். முருகா சரணம் !!
Chandra said…
வெகு நாட்களுக்கு பிறகு துர்க்கையை துதிக்க வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி🙏🙏
ravi said…
https://chat.whatsapp.com/JGsa4x9TMosCpfQapJIJm9

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நவமி திதி பற்றிய பதிவுகள் :*

நவமி ஆனது சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் ஆகும்.

அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள்.

அமாவாசை நாளுக்கு அடுத்து வரும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும். நவமி திதியில் தான் ஸ்ரீராமர் அவதரித்தார். அவர் அரியணை ஏற்கும் நேரத்தில் காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதுமட்டும் இல்லாது சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்தது தான் காரணம்.

எனவே, நவமி திதியில் நல்ல காரியங்கள் தொடங்கப்படுவதில்லை. ஆனால், தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற நாளாகும்.

பொதுவாக அஷ்டமி, நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும். அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால் நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

நவமியில் தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவற்றை செய்யலாம்.

இந்த நவமி திதி வரும் நாளில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தால் நமக்கு வெற்றி நிச்சயம். மேலும், இந்த திதி நாளில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கினால் வேலையில் அனைத்து காரியமும் சுபமாக நடைபெறும்.

*நவமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் :*

நவமி திதியில் பிறந்தவர்கள் கீர்த்தி கொண்டவர்களாக இருப்பார்கள். எதிர்ப்பாலின நபர்களின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். புகழ் பெறுவதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். எதிர்ப்பை கண்டு அஞ்சாதவராக இருப்பார்கள். கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள். விருப்பம் போல வாழக்கூடியவர்கள். இது பொதுவான பலன்கள்.

*நவமி திதியில் என்ன செய்யக்கூடாது :*

நவமி திதியில் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். உதாரணமாக அடுத்தவரை தாக்குவது. பழி வாங்குவது, பதிலடி கொடுப்பது போன்ற எண்ணங்கள் ஏற்படலாம்.

எனவே அன்றைய தினங்களில் இறை வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை வரும் நவமி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தூணுக்கும் தாய்மை தந்தாய் ,

துகில் தந்து பெண்மை காத்தாய் ...

நெஞ்சத்தில் தாரம் வைத்து

வையத்தின் பாரம் குறைத்தாய்

ஒர் கல்லையும் கன்னியாக்கினாய் ...

நாடகம் செய்வோர்க்கு தாடகை கதை சொன்னாய்

மூன்றடி மண் கேட்டே கள்வனே மேல் என்று காட்டினாய் ...

பரசு கொண்டு அரசு அதர்மம் தணித்தாய் ..

ஏர் கொண்டு பேர் பெற்றாய்

வேதம் தேடும் உன்னை நீ தேடியது வியப்பன்றோ ...

பாதம் கழுவிய கங்கை

நூதனம் கொண்டது அழகன்றோ

தங்கைக்கு பெருமை சேர்த்தாய் ... கள்ளழகனாய் ...

தாரையின் கண்ணீர் துடைத்து

தடாதகை தனை தரை வார்த்துக்
கொடுத்தாய் சொக்கும் சொக்கனுக்கு ஏற்ற துணையாய் ...

கடமை எல்லாம் முடிந்தது என்றே சயனம் கொள்ள சென்றாயோ காவேரி தரும் தாலாட்டிலே

தர்மம் மீண்டும் ஸ்தாபிக்க என்று வருவாய் கோவிந்தா ...?

தவிக்கின்றோம் நாங்கள் தாய் பசுவை தேடும் கன்றைப்போல 🐄🐄🐄

பொன்னியின் செல்வன் கல்கி எழுதினார் ...

கல்கியாய் எங்கள் தலை எழுத்தை மாற்றி எழுத என்று வருவாய் ரங்கனே 🙏🙏🙏
ravi said…
துர்க = கோட்டை- அரண் - வலிமை வாய்ந்த பெண் தெய்வம்

*❖ 190 துர்கா* = பாதுகாப்பவள் - (பக்தர்களுக்கு) கவசமானவள்; - துர்கா தேவி
ravi said…
*அம்மா*

துர்க்கை உனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும் அன்றோ

தர்மம் காக்கும் தாயானாவளே

உன் தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் அன்றோ

பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும்
பகை விரட்டும் அன்றோ *அம்மா*

நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும் அன்றோ

ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி நீ பெரியவள் அன்றோ

ஆயிரம் நாமங்கள் கொண்டவள் நீ அன்றோ

தாய் என நம்மை காப்பவள் அன்றோ

சங்கு சக்கரமும் வில்லும் அம்பும்

மின்னும் வாளும் வேலும் சூலமும்

தங்க கைகளில் தாங்கி நிற்பவளே *அம்மா* ..

சிங்கத்தின் மேல் வீற்றிருப்பாய்

திங்களை முடிமேல் சூடி நிற்பாய்

மங்கள வாழ்வும் தந்திடுவாய்

மங்கையர்கரசியும்
நீ அன்றோ

அங்கையர்ககண்ணியும் நீ அன்றோ *அம்மா*🙏🙏🙏
ravi said…
*15*

*கழுத்து*

பாரதப் போர்தனில் அண்ணன் திருக்கண்ணன்

ஒலித்தோர் பாஞ்ச சன்யம்

பக்தர்கள் கயிலாய மலையிலே தினந்தோறும்

படைக்கின்ற பொங்கல் வண்ணம்

நாரதப் பாவாணன் இசைக்கின்ற யாழுக்கு
நரம்புகள் தந்தலாலே

நாள்தோறும் வீணை போல் ஒலிக்கும் கழுத்துக்கு நலமான ஈடு யாரே ?

பாரதி மாதவிப் பூங்கொடி பைரவி பார்வையும் உல காளுமே !

பல நகைகள் விளையாடும் அழகு மயில் மேனியே
பதமான நகையாகுமே
ravi said…
04.05.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 52)

Sanskrit Version:

यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति।
तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च।।2.52।।

English Version:

yadaa te moha kalilam
buddhir vyatitarishyati |
tadaa gantaasi nirvedam
shrotavyasya shrutasya cha ||


Shloka Meaning

When your mind croses the mire of delusion, the mind will become indifferent to what has been heard
and what will be heard.

The aim of human individual is to cross that mire of delusion, the darkness of ignorance.
Ignorance and delusion is called as Maya. Beyond darkness is Atma - full of effulgence.

To reach this world of light, one has to cross the ocean of darkness and go beyond sorrow and delusion (shoka and moha).

Performing nishkama karma, hearing the truth, meditating on the truth one can realize the light of the
atma. When one realizes the atma, one has no further need to hear or think of the shastras.

Jai Shri Krishna 🌺
ravi said…
*ராமனும் ருமாவும்*🥇🥇🥇

*ராமா* ... மீண்டும் சேர்த்தாய் என்னை என் உளம் கவர்ந்தவனிடம் ...

எம்மான்
உனை தேடி வரும் உன் பெண்மான் ..🦌

காட்டு மான் என உன் துயரங்கள் இனி துள்ளி ஓடும் ... 🦌🦌

இதுவே நான் வேண்டும் சன்மான் *ராமா*

பெண் என்றே பிறந்தோம் ...

கண் என்றே நம்பி கரம் பிடித்தோம் ...

போராட்டம் என்றும் சீராட்டும் ஒன்று பெண்மை அன்றோ *ராமா* ...

தாலாட்டு பாடும் நாள் இருந்து தனியாக போகும் நாள் வரை

தவறாமல் பழி சுமப்பது பெண்மை அன்றோ ..

கண்ணில் நீரை சுமந்து

நீர் குடம் உடைத்து நீராய் ஓடும் பெண்மை தனை நெருப்பில் நிற்க வைத்து

*தூயவளோ நீ* என்று கேட்கும் கூட்டம்
உன் அம்புக்கு இரை ஆகாதோ *ராமா*

*தாயே ருமா* ...

பெண்மை பெருமைக்குரியது

அதில் தாய்மை தமிழ் போல் தேன் போன்றது ...

கருமை படும்
சில சமயம் வெறுமை தெரியும்
சில நேரங்களில் பொறுமை அதிகம் வேண்டும் ..

நெருப்பை நெருப்பு சுடுமோ தாயே ... ?

நீரை நீர் விழுங்குமோ தாயே ... ?

தூய்மை பெண்மை அதில் பிறப்பது தாய்மை

தாய்மை தருவது நம்மை ...

அது கட்டி காப்பது உண்மை ...

அக்னியை சுட்டு எரிக்கும் உங்கள் தூய்மை என் அம்புக்கும் இல்லையம்மா ...

சொன்னவன் தலை குனிந்தான்

சீதையை சோதிக்கும் நாள் வருமோ என்றே சிந்திய கண்ணீர் எதிரே எரியும் நெருப்பை ஓடி அணைத்தது 😢
ravi said…
*நரசிம்ம ஜெயந்தி...*

உக்கிர வடிவமாக இருந்தாலும் அதிகமானவர்களால் வணங்கப்படும் ரூபம் நரசிம்ம ரூபமாகும்.

நரசிம்மர் அவதரித்த தினமான நரசிம்ம ஜெயந்தி, 2023 ம் ஆண்டில் மே 04 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த சமயத்தில் நரசிம்மரை பற்றி பலருக்கும் தெரியாத அரிய விஷயங்கள் சிலவற்றை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

நரசிம்ம பெருமாள் வருடத்திற்கு ஒரு முறை கண்திறப்பதும், அவருக்கு படைக்கப்படும் பானகத்தை குடிப்பதும் இந்த கலியுகத்திலும் நடந்து வரும் அற்புத நிகழ்வுகளாகும். கலியுகத்திலும் பக்தர்களை காக்க ஓடோடி வரும் தெய்வமாக நரசிம்மர் விளங்குகிறார். மனித உடலும், சிம்ம முகமும் கொண்ட நரசிம்ம ரூபம், பெருமாளின் அற்புத வடிவங்களில் ஒன்றாகும்.
நரசிம்மர் :

நரசிம்மர் :

திருமாலின் தச அவதாரங்களில் மிகவும் தனித்துவமானது நரசிம்ம அவதாரம். தாயின் கருவில் இருந்து தோன்றாமல், தனது பக்தனை காப்பதற்காக தூணை பிளந்து கொண்டு வெளிப்பட்டவர் நரசிம்மர். தாயின் கருவில் உருவாகி, வளர்ந்து வருவதற்கு தாமதமாகி விடும். அதுவரை தனது பக்தன் துன்பப்படுவானே என்பதற்காக, பக்தனை காப்பதற்காக அடுத்த கனமே ஓடோடி வந்தவர் நரசிம்மர்.

நரசிம்மர் ஜெயந்தி :

அதனால் தான் தீராத துன்பத்தில் இருந்து உடனடியாக மீள வேண்டும் என்றால் நரசிம்மரின் காலை பிடிக்க வேண்டும் என சொல்வார்கள். உக்ரமான வடிவங்கள் என வணங்குவதற்கு அஞ்சும் நரசிம்மர், காளி போன்ற தெய்வ ரூபங்கள், தன்னை சரணடைந்த பக்தர்களை காப்பதற்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும் எடுக்கப்பட்ட வடிவங்களாகும். நரசிம்மர் பல இடங்களில் உக்ர வடிவத்துடன் காட்சி தந்தாலும், சில இடங்களில் சாந்த சொரூபமாக, யோக நிலையில் காட்சி தருகிறார். இன்னும் சில இடங்களில் லட்சுமியை தனது தொடை மீது அமர வைத்து, ஆளிங்கனம் செய்த படி, புன்னகையுடன் லட்சுமி நரசிம்மராக காட்சி தருகிறார். அப்படிப்பட்ட நரசிம்மரை பற்றி பலரும் அறியாத 18 அரிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

நரசிம்மர் பற்றிய அரிய தகவல்கள் :

1. நரசிம்மரை வழிபடுபவர்களை எந்த தீய சக்திகளும் நெருங்க முடியாது.

2. நரசிம்மருக்கு விருப்பமான சிவப்பு அரளி, செம்பருத்தி பூக்கமால் அர்ச்சித்து, நைவேத்தியமாக பானகம் படைக்க வேண்டும்.

3. நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் கணவன் - மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

4. நரசிம்ம ஜெயந்தி நாளில் நரசிம்மரை எந்த ரூபத்திலும் வழிபடலாம். கலசம் வைக்க வேண்டிய அவசியமில்லை.

5. பெண்களும் நரசிம்மரை விரதமிருந்து வழிபடலாம். ஆனால் உடல் தூய்மையும், மனத்தூய்மையும் அவசியம்.

6. வீட்டில் நரசிம்மரை வழிபடுவதாக இருந்தால் வடமேற்கு திசையில் வைத்து வணங்க வேண்டும்.

​'பொன்னியின் செல்வன் 2'ல் வெளியான ஆதி சங்கரரின் சிவோஹம் பாடலின் சிறப்பு என்ன? இதற்காக தான் மணிரத்னம் பயன்படுத்தியுள்ளாரா?​

நரசிம்மர் வழிபாடு :
7. நரசிம்ம ஜெயந்தி அன்று குழந்தைகளுக்கு நரசிம்ம அவதாரம் பற்றிய கதையை கூறினால், பிரகலாதனுக்கு கிடைத்த நரசிம்மரின் அருள், அந்த குழந்தைகளுக்கும் கிடைக்கும்.

8. நரசிம்மருக்காக விரதம் இருக்கும் போது கண்டிப்பாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

9. நரசிம்மரின் அருளை சீக்கிரம் பெற விரும்புபவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

10. வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் நரசிம்மரை வழிபட்டு விட்டு சென்றால் வெற்றி கிடைக்கும்.

11. பிரகலாதனை போல் உறுதியான பக்தி கொண்டவர்களுக்கு நரசிம்மர் அருளை வாரி வழங்குவார்.

12. நரசிம்மரை வழிபட்டு வந்தால் பெயர், புகழ் ஆகியவை கிடைக்கும்.

13. நரசிம்மரை, மருத்யுவேஸ்வாகா என கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

நரசிம்ம அவதார நோக்கம் :

14. பக்தியுடன் தன்னை சரணடையும் பக்தர்களை எப்படி நரசிம்மருக்கு பிடிக்குமோ அது போல, உரிமையுடன் இதை எனக்கு செய்து கொண்டு என கேட்கும் பக்தனையும் நரசிம்மருக்கு பிடிக்கும். அவர்கள் கேட்டதை உடனடியாக நிறைவேற்றி வைப்பார்.

15. நரசிம்மர் கோவில் கொள்ளும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

16. நரசிம்மர், பிரகாதனுக்காக அந்திப்பொழுதில் அவதரித்த தினம் வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி ஆகும். அதனால் தான் இந்த நாள் நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

17. இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார், பக்தன் உண்மையான பக்தியுடன் அவரை அழைத்தால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக எடுக்கப்பட்டதே நரசிம்ம அவதாரம் ஆகும்.

18. ராமருக்கு அடுத்த படியாக வைணவர்களால் அதிகம் வணங்கப்படும் திருமாலின் ரூபமாக நரசிம்மர் உள்ளார்.🙏

*விஷ்ணுவின் ஆன்மீக தகவல்களை தொடர்ந்து நீங்கள் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி குழுவில் இணையலாம்*

ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை.*

*_✍️ 04, Thursday, May, 2023_*

*✶⊶⊷⊶⊷❍ ✍️ ❍⊶⊷⊶⊷✶*

https://srimahavishnuinfo.org

*🧿'உங்களின் சிறந்த நண்பர்’*


*♻️உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு.*
*ஒருவரின் வெற்றிக்கு உழைப்பு எந்த அளவுக்கு அவசியமோ,அதே அளவு நல்லவர்களின் நட்பும் அவசியம்..*

*♻️நமது பெற்றோர்களையும், சகோதரிகளையும் நம்மால் தீர்மானிக்க முடியாது.ஆனால் நண்பனாக யார் வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.*

*ஒருவரின் வாழ்க்கையையே திசை மாற்றும் வல்லமை கொண்டது நட்பு.,*

*♻️நல்ல செயல்கள் மீது உங்கள் எண்ணங்களை ஊன்ற வைக்கும்படி ஓர் உண்மையான நண்பரால் செய்ய முடியும்.*

*♻️துன்பத்தில் இருக்கும் போது அவர் உங்களை உற்சாகப்படுத்தி தூக்கி விடுவார். உங்கள் துக்கத்திலும் பங்கு கொள்வார்.*

*♻️எல்லா துன்பங்களிலும் தோள் கொடுத்து, இன்பங்களில் பங்கு பெற்று, தோல்வியில் தேற்றி விட்டு, வெற்றியை உற்சாகப்படுத்தி, மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் ஒருவனே உண்மையான நெருங்கிய நண்பன்.*

*♻️பணம் வரும் போது வருபவனும், பதவிக்காக உடன் இருப்பவனும் நண்பன் இல்லை. உண்மையான நட்பு உங்கள் வாழ்க்கையை உயர்த்தும், பொய் மற்றும் தவறான நட்பு உங்களை அழித்து விடும்*

*♻️இளைஞன் ஒருவன் கயிற்றுப் பாலத்தில் நடந்து வந்தான்., அது மிகுந்த உயரத்தில் இருந்தது, அவன் மிகுந்த பயத்துடன் அந்தப் பாலத்தை கடக்க முடியாமல் தவித்தான்.*

*♻️அந்த நேரத்தில் தான் அவனுடைய நண்பன் அந்த பாலத்தில் மறு முனையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். அந்த இளைஞன் தன் நண்பனை தன்னிடம் வருமாறு கூவினான்..*
*ஆனால் அவன் வரவில்லை. பல முறை அந்த இளைஞன் அழைத்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.*

*♻️மிகுந்த கோபம் அடைந்த அந்த இளைஞன் பாலத்தை ஒரு வழியாக கடந்து மறுபுறம் வந்து சேர்ந்தான்..பல முறை அழைத்தும் உதவிக்கு வராத தன் நண்பனைக் கொட்டித் தீர்த்தான்*

*♻️ஆனால் அவன் அதற்கும் சிரித்துக் கொண்டு தான் இருந்தான். அப்போது அந்த இளைஞன் எதேச்சையாக தன் நண்பனின் கைகளைப் பார்த்தான்.*

*♻️அந்த உடைந்த, பழுதடைந்த கயிற்றுப் பாலத்தை தன் நண்பன் கைகளால் பிடித்துக் கொண்டு இருந்ததால் கையில் இரத்தம் வழிந்தது...தன் நண்பனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டான்..*

*♻️நண்பனுக்குத் துன்பம் வந்தால் தொலைவில் நின்று வேடிக்கை பார்க்காமல் உடனே உதவக் கூடியது தான் நட்பு.*

*♻️நல்ல நட்பு வளர்பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளரும். உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது அதை இழந்து விடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதே இல்லை.*

*😎ஆம்.,நண்பர்களே..,*

*🏵️தீய நட்பு தேய்பிறை போன்றது. அது சிறிது சிறிதாக தேய்ந்து பின்னர் மறைந்து போகும்.*

*எனவே நல்ல நட்பை நேசிப்போம்!*

*நல்ல நட்பை வாசிப்போம்!!*

*நல்ல நட்பையே சுவாசிப்போம்!!!*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
  ★  Mahavishnuinfo ★
   ஆன்மீக வழிகாட்டி       
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் 10*

ஸ்ரீ பீஷ்ம உவாச:
ஜகத் ப்ரபும் தேவ தேவம் அநந்தம் புரு÷ஷாத்தமம்:
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித:

ஸ்ரீ பீஷ்மர் கூறலானார்:
அசைபவை, அசையாதவை ஆகியவற்றைக் கொண்ட உலகத்துக்குத் தலைவனும், தேவர்களுக்கெல்லாம் தேவனும், அளந்து காணமுடியாத பெருமை உடையவனுமாகிய வள்ளல்களில் சிறந்தவனை இடைவிடாத முயற்சியுடன் அவனது ஆயிரம் திருநாமங்களைச் சேதனன் துதி செய்தும்.

ஓம் நமோ நாராயணா !

ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_


உடன் வருபவர்கள்
எல்லாம் உற்றவர்கள் இல்லை..

விழும் நொடி விழுதாய் தாங்கும்
கரங்களே நமக்கானவர்கள்...

கலங்க வைக்கும் கவலை காணாமல் போகட்டும் உறங்க வைக்கும் நிம்மதி உடனே கிடைக்கட்டும்..

நமக்கு தூக்கம்
வரலனா
நாம யாருடைய
கனவுலயோ
முழிச்சுகிட்டு
இருக்கோம் னு அர்த்தம்


*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*


ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை..*

*_✍️ 03, Wednesday, May, 2023_*

*✶⊶⊷⊶⊷❍ ✍️ ❍⊶⊷⊶⊷✶*

https://srimahavishnuinfo.org

*🧿''இலட்சியம் இல்லா வாழ்க்கை''*


*♻️"வாழ்க்கைன்னா லட்சியம், குறிக்கோள் வேணும்!" இப்படிச் சொல்வதில் உண்மை இருந்தாலும், நமது லட்சியம் எப்படி இருக்க வேண்டும் என்பது பலருக்கும் பிடிபடாத ஒன்றாகவே உள்ளது.*

*♻️லட்சியம் வைப்பது என்றால் ஏதோ ஒன்றைப் பற்றி வெறுமனே கனவு காண்பதோ,ஏதோ ஒன்றுக்காக ஆசைப்படுவதோ அல்ல.*

*♻️உண்மையான இலட்சியம்,திட்டமிடுவது, அதை அடைய கடினமாக வேலை செய்வது ஆகியவை உட்படுகின்றன*

*♻️நாம் அடைய வேண்டிய எல்லையும், நாம் கடக்க வேண்டிய இடைவெளியும் தெரியாவிட்டால் நாம் குறிப்பிட்ட இலட்சியத்தை அடைய முடியாது.*

*♻️நாம் ஒரு இலட்சியத்தை வைக்க வேண்டும், உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை அடைய நாம் திட்டங்கள் தீட்டி வழி முறைகளை உருவாக்கிக் காலத்தைக் கணக்கிட்டுச் செயலில் இறங்க வேண்டும்.*

*♻️உங்கள் இலட்சியத்தை இன்றே முடிவு செய்யுங்கள். கடந்து போன காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். காலம் கடந்து போனது போனது தான், இனி திரும்ப வரப்போவது இல்லை.*

*இனி இருக்கின்ற காலத்தையாவது சரியாகப் பயன்படுத்துவோம்.*

*இலட்சியத்தை முடிவு செய்வதை சாதாரணமாக நினைக்காதீர்கள்.*

*♻️இலட்சியம் உங்கள் வாழ்க்கைப் பிரச்சனை. இலட்சியத்தை முடிவு செய்வதைத் தள்ளிப் போடப் போட நீங்கள் அடைய வேண்டிய வெற்றிகளும் அனுபவிக்க வேண்டிய சுகங்களும் தள்ளிக் கொண்டே போகும்.*

*♻️இலட்சியத்தை ஒரே நாளில் முடிவு செய்ய முடியாது தான். ஆனால் ஒரு சில நாட்களில், ஓரிரு வாரங்களில் அல்லது ஓரிரு மாதங்களுக்குள் முடிவு செய்து விடலாம்.*

*♻️தனி மனித, சமுதாய இலட்சியங்கள் ஆசைகளே இலட்சியங்களாக வளர்கின்றன. மலர்கின்றன. தனிமனிதன் தனக்கு என்று தேடிக் கொள்பவைகளும் இலட்சியங்கள் தாம்.*

*♻️ஆனால் இந்த நாட்டில் வறுமை ஒழிய வேண்டும், சாதி வேறுபாடுகள் களையப்பட வேண்டும், ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும் என்று தன்னை மறந்து இந்த நாட்டுக்காகவும் உலகுக்காகவும் பாடுபடுகின்றவர்களின் ஆசைகளும் இலட்சியங்கள் தாம்.*

*♻️தனிமனிதன் இலட்சியம் சிறப்பானவை என்றால் சமுதாய இலட்சியங்கள் மகத்தானவை என்று கூறலாம்.*

*♻️ஒரு நாட்டிற்கு இந்த உலக சமுதாயத்திற்கு இந்த இரு வகையான இலட்சியங்களும் தேவை தான்*

*♻️உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக் கொள்ளுங்கள் வெறுமனே ஒரு மொபைல் போன் வாங்குவதையோ,டிவி வாங்குவதையோ, கம்ப்யூட்டர், பைக், கார், அழகான வீடு போன்றவற்றை வாங்குவதையோ லட்சியமாகக் கொள்ளாதீர்கள்.*

*♻️அவைகள் லட்சியத்தின் சிறு பகுதியாகவே இருக்கட்டும். நீங்கள் இதை விடவும் பெரிய லட்சியத்தைக் கொண்டிருங்கள்.*

*♻️ஏனைனில், பெரும்பாலும் கார், பங்களா போன்ற இவைகளெல்லாம் தன்னம்பிக்கையினால் கிடைப்பதாக இருக்காது. அளவு கடந்த ஆசையின் வேகத்தினாலே கிடைப்பதாகவே இருக்கும்.*

*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️வாழ்வின் இலட்சியத்தை அடைய முயலுகிறவர்கள் வாழ்வே நீண்டதாகும்.*

*⚽லட்சியத்தை அடைய செயல்கள் செய்தால் மட்டும் போதாது.*

*🏵️செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு இலட்சியமாக இருத்தல் வேண்டும்.*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
  ★  Mahavishnuinfo ★
   ஆன்மீக வழிகாட்டி       
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
ஓம் நமோ ஸ்ரீநாரஸிம்ஹாய நம 🙏🏻🙏🏻

|| ஸ்ரீநரஸிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் ||

||சிம்ஹாசலம்
விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீநரஸிம்ஹ சேஷத்ரம்||

||பிரகலாதர் ஆராதித்த நரஸிம்ஹர்||

பல ஆண்டுகளாக புற்றினுள் இருந்த இந்த ஸ்ரீலக்ஷ்மி நாராயண நரஸிம்ஹர்,

ஒரு பக்தரின் கனவில் தன் இருப்பிடத்தைத் தெரிவித்து, சிம்ஹாசலத்தில் தன்னை ப்ரதிஷ்டை செய்ய நியமித்ததாக வரலாறு!

பின்பு, குளிர் அதிகமாக இருந்ததால், மீண்டும் புற்றினுள்ளேயே தன்னை விடுமாறும், அந்த சீதோஷணத்தை சந்தனம் கொண்டு புற்றை உருவாக்கிவிடவும், வருடத்திற்கு ஒரு நாள் புற்றிலிருந்து வெளியே வந்து தரிசனம் அருளுவதாகவும் நரஸிம்ஹர் ஸங்கல்பிக்க, அன்று முதல் இப்போதும் 500 கிலோ சந்தனத்துடன் மற்ற கலவைகள் 200 கிலோ என 700 கிலோ புற்றினுள் இருக்கிறார் இந்த நரஸிம்ஹர்!

அக்ஷய த்ரிதியை அன்று புற்றினை நீக்கி சேவை சாதிக்கிறார் நரஸிம்ஹர்.

பின் மீண்டும் 700 கிலோ சந்தனக் கலவை புற்றினுள் புகுந்து புற்றாகவே சேவை சாதிக்கிறார்.

ஸ்ரீ ராமானுஜர் சிம்ஹாசலம் வந்தபோது, அங்கு சில நாட்கள் விஷயார்த்தங்களை உபந்யாஸமாக சாதிக்க, அதை அனுதினமும் கேட்டுக் கொண்டிருந்த இரண்டு அன்னபறவைகள், காலட்ஷேப முடிவில் பறவை சரீரத்தை துறந்து
ravi said…
- *ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்*

ஸாஸிதூண த⁴னுர்பா³ண பாணிம் நக்தம் சரான்தகம் ।

ஸ்வலீலயா ஜக³த்த்ராது மாவிர்பூ⁴தமஜம் விபு⁴ம் ॥ 3 ॥

ராமரக்ஷாம் படே²த்ப்ராஜ்ஞ: பாபக்⁴னீம் ஸர்வகாமதா³ம் ।

ஶிரோ மே ராக⁴வ: பாது பா²லம் (பா⁴லம்) த³ஶரதா²த்மஜ: ॥ 4 ॥

👍👍👍
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 36*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐

*வாலி வதம்*

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
ராமர் தன் சிரிப்பை மறைத்துக்
கொண்டார் --

இருந்தாலும் அவர் முகத்தில் பரவிய புன்னகை அவரை காட்டிக்
கொடுத்துவிட்டது --

சுக்கிரீவன் 
வலியினால் ராமர் சிரிப்பதை பார்க்கவில்லை -

ஜாம்பவான் இதை பார்த்துவிட்டார் -

அவர் சிரிக்காமல் தன் வாயினை மூடிக்கொண்டு ராமர் காதுகளில் பேசினார்

" எதற்காக சிரிக்கிறீர்கள் பிரபோ , நான் தெரிந்து கொள்ளலாமா ? "  

ராமர் அவரிடம் சொன்னார் " ஜாம்பவானே வாலியை கொன்று இவனுக்கு அரச பதவியை வாங்கித்தரலாம் என்று நினைத்திருந்தேன் -

ஆனால் இவனோ தன்னை ஒரு செத்த பாம்பு என்று சொல்கிறான் -

செத்துப்போன சுக்கிரீவனை நான் எப்படி உங்கள் எல்லோருக்கும் ஒரு ராஜாவாக ஆக்க முடியும்?

இதை நினைத்தேன், எனக்கு சிரிப்பு வந்துவிட்டது --- 

கலக்கமாக இருக்கும் ஆஞ்சநேயரை பார்த்தவுடன் ராமர் சொன்னார் "

சுக்ரீவா - நாளை அவனை மறு படியும் உன்னுடன் சண்டை போட இங்கே கூப்பிடு

- மற்றவற்றை நான் பார்த்துக்
கொள்கிறேன் -

இப்படி சொல்லிக்கொண்டே ஜாம்பவானை பார்த்தார் "

பிரபோ நாளைக்கும் வேண்டி போதிய பச்சிலைகள் கைவசம் இருக்கிறது - சுக்ரீவனை நாளைக்கும் 
காப்பாற்றி விடலாம் " என்றார் -- 

சுக்ரீவன் தள்ளாடிக்கொண்டே எழுந்தான் -

ராமா!!!- நாளை உன்னை இப்படி மீண்டும் கூப்பிடுவேனா என்று தெரியாது -

உன்னை நம்பியவர்களை நீ என்றுமே கைவிட மாட்டாய் என்பது மட்டும் எனக்குத் தெரியும் --

நாளை அவனை அழைக்கிறேன் -

ஒன்று நான் இருக்க வேண்டும் இல்லை அவன் இருக்க வேண்டும் இந்த பூமியில் -----

வாலியே தான் தூக்கி எறிந்த சுக்ரீவனை தேடி கண்டு பிடித்து இன்னும் உதைத்து கொல்ல அவன் இருக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தான் -

அவனை அழைத்து வந்தது அவனுடைய வீரம் அல்ல, அவன் விதி.🐒🐒🐒
ravi said…
[04/05, 12:56] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 148*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 19
[04/05, 13:00] Jayaraman Ravikumar: ஈஸ்வரனின் பத்நியும், மங்கள ஸ்வரூபினியுமான.காமாக்ஷியின் சரணங்கள் அஞ்ஞானம் , அறியாமை எனும் இருள் நிறைந்த ப்பாழுங்
கினற்றிலிருந்து கரையேற உதவும்

தாம்புக்கயிரு போலும்,,

இதயம் என்ற தாமரைக் காட்டில் விளங்கும் சூர்யனாகவும், ரசம் ததும்பும் கவிதை வெள்ளத்தைப் பெருகச் செய்வதில் மழைக் காலமான ஆவணி மாதமாக வும் விளங்குகிறது !👍👍👍
ravi said…
[04/05, 12:53] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 551* 🙏🙏🙏started on 7th Oct 2021

*258 வது திருநாமம்*
[04/05, 12:55] Jayaraman Ravikumar: *258 *स्वपन्ती - ஸ்வபந்தீ* --

உறக்கநிலையிலும் நாம் அவளை தான் நம்பியிருக்கிறோம்.

அவளே நமது உறக்கம் கூட..

எது அவளில்லை? வெளியே கண் பார்ப்பது தான் மனதில் எண்ணமாக பதிவாகிறது.

பல யுகங்கள் கூட அது நினைவாகிறது.

அதுவே சில நேரம் கனவாகிறது.

கனவு என்பதே எண்ணத்தின் பெட்டகம்.

இதில் புலனுக்கோ, இந்திரியங்களுக்கோ இடமில்லை.

கனவுகள் எப்போதுமே நமக்கு என்றோ எப்போதோ, எவருடனோ நிகழ்ந்த சம்பவத்தையையே சுற்றி சுற்றி வரும்.

ஆத்மா அமைதியாக ஒரு சாட்சியாக மனம் நிகழ்த்திடும் காட்சியை பார்க்கும் அனுபவம் கொண்டது..

ஜீவன் சூக்ஷ்ம சரீரமாக அந்த காட்சிகளில் பங்கேற்கிறான்.🙏🙏🙏
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 11*

தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம்
த்யாயந் ஸ்துவந்ந மஸ்யம்ஸ் யஜமா நஸ் தமேவ ச:

ஸஹஸ்ரநாமத்துக்குப் பொருளாக உள்ள - மாறுபாடில்லாத அந்தப் பரம்பொருளையே இடைவிடாத நினைவின் தொடர்ச்சியாக - தைல தாரையைப் போல் பக்தியுடன் அர்ச்சித்தும், எனதாவியும் உனதே என்று தாளும் தடக்கையும் கூப்பிக் கோல் போல் விழுந்து வணங்கியும் மேலும் தியானித்தும் வணங்கியும் வழிபடுபவன்.

ஓம் நமோ நாராயணா !

ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை.*

*_✍️ 05, Friday, May, 2023_*

*✶⊶⊷⊶⊷❍ ✍️ ❍⊶⊷⊶⊷✶*

https://srimahavishnuinfo.org

*🧿"பகைமை மறப்போம்'*


*♻️இப்போதெல்லாம் சிறிய செயலுக்குக் கூட பொறுமை இல்லாமல் கொதித்துப் போகிறோம். இதனால் பகைமை வளர்ந்து விடுகிறது.*

*♻️இந்த பகைமை நாளாவட்டத்தில் நம் உறவுகளையும் நட்புகளையும் இழந்து ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது.*

*♻️உங்களை திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது உங்கள் இதயத்தில் எந்த விதமான பகைமை உணர்ச்சியையும் கொள்ளாதீர்கள்.*

*♻️வெளிப்படையாக கோபத்தை காட்டுவதை விட இது மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்று நோய். பகைமையை வளர்க்காதீர்கள். மறந்து விடுங்கள். மன்னியுங்கள்.*

*♻️இது ஏதோ ஒரு வெறும் லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியை பாதுகாக்க ஒரே வழி இது தான்.*

*♻️உள்ளே பகைமை வளர்ப்பது என்பது ஒருவனுக்கு மிகுந்த கெடுதி யைச் செய்யும். உங்களுக்கு தூக்கம் போய் விடும். உங்கள் இரத்தத்தை நீங்கள் நஞ்சு ஆக்குகின்றீர்கள். இரத்தக் கொதிப்பும், படபடப்பும் உங்களிடம் அதிகரிக்கும்*

*♻️மாவீரன் அலெக்சாண்டரின் தந்தை பிலிப் சிறந்த அறிவாற்றல் மிக்கவர். பலம் பொருந்திய மன்னராக ஆட்சி செய்து வந்தார். அவரது பகுதிக்கு உட்பட்ட ஜமீன்தார் ஒருவர் மன்னரைப்பற்றி எப்போதும் குறை கூறிக் கொண்டு இருப்பார்.*

*♻️இது மன்னரின் காதிற்கு எட்டியது. அந்த நாட்டு வழக்கப்படி அது தேசவிரோதம். அந்த ஜமீன்தார் ஆர்க்கீடியஸ் இருக்கும் பகுதிக்கு சென்ற மன்னர் தன் அதிகாரிகளிடம் அந்த ஆர்க்கீடியஸை அழைத்து வரும்படி கூறினார்*

*♻️தன் மந்திரியிடம் ஆர்க்கீடியஸ் என்னிடம் கொண்டுள்ள பகைமைக்கு இன்று முடிவு கட்டுகின்றேன் என்றார்.*

*♻️விபரம் அறிந்த ஆர்க்கீடியஸ் மிகவும் பதற்றம் அடைந்தார். தன் ராஜதுரோகச் செயலுக்கு மரணதண்டனைதான் கிடைக்கும் என்ற கலவரத்தில் புறப்பட்டுச் சென்றார்.*

*♻️அவர் வந்ததும் மன்னர், எல்லா அதிகாரிகளையும் வெளியில் அனுப்பி விட்டு தனிமையில் சந்தித்தார்.*
*மன்னரின் தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் வெளியில் தயாராக காத்து இருந்தனர்.*

*சிறுது நேரம் கழித்ததும் மன்னரும் ஆர்க்கீடியஸும் கைக்கோர்த்துக் கொண்டு புன்முறுவலுடன் வெளியில் வந்தனர். எல்லோருக்கும் அதிர்ச்சி.*

*♻️மந்திரி, ‘மன்னா பகைவனை ஒழித்துக் கட்டுவேன் என்றீர்கள்’ என ஆச்சரியத்தின் விழிம்பில் கேட்டார்.*
*அதற்கு மன்னர், ‘ஆம், பகைவனை ஒழித்து கட்டிவிட்டு அவனிடத்தில் ஒரு புதிய நண்பனை உருவாக்கி விட்டேன்.*

*♻️ஆர்க்கீடியஸ் நல்ல மனிதர், என்னைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு இருந்துள்ளார். நேரில் பேசியதில் அது புரிந்து எங்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கியது. என்னைச் சரியாக புரிந்து கொண்டதால் அவர் என்மீது கொண்டிருந்த பகை உணர்வுகள் நீங்கி நட்பு மலர்ந்து உள்ளது’ என்றார்..*

*♻️பகைவனை அழிப்பது என்றால் பகைமையை அழிப்பது என்று தான் அர்த்தம், பகைவனைக் கொல்வதல்ல! அப்படிசெய்தால் பகைமை அழியாது. வம்ச வம்சமாகத் தொடரும் என்றார்...*
.
*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️“நம்மை வெறுப்பவர்கள் நமக்கு பகைவர்கள் இல்லை, நம்மால் வெறுக்கப்படுபவர்களே நம் பகைவர்கள் பகைமை மறப்போம் . அன்பை செலுத்துவோம்..*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
  ★  Mahavishnuinfo ★
   ஆன்மீக வழிகாட்டி       
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
🌹🌺“ *அழகனான கண்ணனுக்குத் நான் ஏற்றவளாக இருக்கிறேனா என்ற சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள்*
.... *பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺"பாண்டிய நாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஒரு நந்தவனம் அமைத்து, அதைப் பராமரித்து வந்தார். அதிலிருந்து பூக்களைப் பறித்து மாலை தொடுத்து திருமாலுக்கு அணிவித்துத் தொண்டு செய்து வந்தார்.

🌺ஒருநாள் பெரியாழ்வார் நந்தவனத்தில் மலர்கொய்து கொண்டிருந்தபோது ஒரு குழந்தை அழும் குரல் கேட்டு திடுக்கிட்டார். துளசிச் செடிகளின் நடுவிலிருந்து குரல் வந்தது. அங்குச் சென்று பார்த்தபோது துளசிச் செடிகளின் நடுவில் மிக அழகான ஒரு பெண் குழந்தை இருக்கக்கண்டார்.

🌺தாம் செய்த புண்ணியத்தின் பயனாகத் தனக்கு இந்தக் குழந்தை கிடைத்தது என்று எண்ணிய பெரியாழ்வார் குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

🌺சிறுவயது முதலே கோதை கண்ணனிடம் மாறாத காதல் கொண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரை கண்ணனின் ஆயர்பாடி எனவும், தன்னை ஒரு கோபிகை எனவும் கருதினாள்.

🌺ஆழ்வார் மாலைதொடுத்து வைக்கும் போது சிறுமியான கோதை அவருக்குத் தெரியாமல் அதை எடுத்து அணிந்து கொள்வாள். பின்னர் அழகனான கண்ணனுக்குத் நான் ஏற்றவளாக இருக்கிறேனா என்ற எண்ணத்துடன் கண்ணாடி முன் நின்று அழகு பார்ப்பாள். பின்னர் ஆழ்வார் வருவதற்குள் மாலையைக் கழற்றி விடுவாள். இந்த ஒத்திகை பல காலம் நடந்து வந்தது.

🌺இவை ஏதும் அறியாத பெரியாழ்வார் மாலையைப் பெருமாளுக்கு வழக்கம்போல் அணிவித்து வந்தார். பெருமாளும் மிகுந்த ஆனந்தத்துடன் அதை ஏற்றுக் கொண்டான். ஒருநாள் ஆண்டாள் வழக்கம்போல் மாலையை அணிந்து அழகு பார்த்துக் கொண்டிருக்கும்போது அதை நேரில் பார்த்துவிட்டார் பெரியாழ்வார்.

🌺மிகவும் மனம் நொந்த அவர் தனது மகளைக் கடிந்துகொண்டார். தான் நெடுங்காலம் செய்துவந்த தொண்டில் குற்றம் ஏற்பட்டு விட்டதே என்றும் தன் மகளே அதற்குக் காரணமாகி விட்டாளே என்றும் எண்ணி அவர் மிகவும் வருந்தினார்.

🌺அன்றிரவு எம்பெருமான் அவர் கனவில் தோன்றி கோதை சூடிக்கொடுத்த மாலையைத் தான் விரும்பி ஏற்பதாகக் கூறியருளினான். அதைக் கேட்டு மிகவும் ஆனந்தமடைந்த ஆழ்வார், 'சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! எம்மை ஆள வந்த ஆண்டாளே!' * என்று அழைத்துத் திருமாலின் உள்ளத்தை அவளுக்குத் தெரிவித்து மகிழ்ந்தார்.

🌺 *ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்* !🌹

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 “Am I suitable for the beautiful Kannan, Sudark Khodi Andala asked
A simple story explaining about .... 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 "At Srivilliputtur in the Pandya country, Periyalvar built and tended a Nandavana. He used to pluck flowers from it and make garlands and wear them to Tirumal and give charity.

🌺 One day while picking flowers in Periyazwar Nandavan, he was startled by hearing the sound of a child crying. A voice came from among the basil plants. When he went there, he saw a very beautiful girl among the basil plants.

🌺Believing that he got this child as a result of his good deeds, Periyazwar named the child Gothai and brought him up.

🌺She had an undying love for Gothai Kannan since childhood. She considered Srivilliputhur as Kannan's ayrabadi and herself as a gopi.

🌺When Alvar puts the garland on her, the little girl Gotha takes it and wears it without his knowledge. Then she would stand in front of the mirror and look at the beauty with the thought that I am suitable for the beautiful Kannan. Then she will remove the garland before Alvar comes. This rehearsal went on for a long time.

🌺Periyazhwar, who did not know anything about this, used to wear the garland to Perumal as usual. Perumal also accepted it with great joy. One day when Andal was wearing a garland as usual and looking at her beauty, Periyalvar saw it with his own eyes.

🌺He was very upset and scolded his daughter. He was very sorry to think that the charity he had been doing for a long time had become a crime and that his daughter had become the cause of it.

🌺That night Lord appeared in his dream and told him that he wanted to accept the garland that Kotha had lit. Hearing that, Alvar was very happy and said, 'O fire flag given by Soodik! You are the one who came to rule us!' He was happy to tell her about Thirumal's heart by calling *.

🌺Sri Andal Thiruvadi sharanam !🌹

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
Shriram

5th May

*Do Your Duty without Pride of Doership*



The first step in the process of learning anything, whether in the material field or spiritual, is the assumption of ignorance. We go about, however, with a vainglorious pride that we know everything.

In spirituality, there is no greater enemy than such pride. To say that it is like the pernicious weed to a field would be underrating its evil efficacy; for, the weed makes itself apparent and can be uprooted, whereas this pride is subtle, unnoticed, and usually unadmitted by a person.


There is no telling when it will crop up and make itself felt. It is the main obstruction to purification of the heart. Nothing would be sillier, and more doomed to failure, than to imagine that one could surmount it with one’s own prowess. The only way to overcome it is to go into utter unquestioning surrender to the Sadguru, and constantly to pray him to deliver you from its clutches.

A heart thoroughly purged of doubt and desire is like a pit which is filled with good soil and proper manure for planting a tree. The next step is to sow a seed of best quality and perfect purity. Even with all such care, it may happen that the final product is not up to the mark, and the hopes entertained at the beginning are belied. It may happen, besides, that after a certain age, the tree becomes unproductive, or gets a rot of one kind or another. Altogether, a time comes when it ceases to give the pleasure expected in the beginning, and actually proves a nuisance. It would have been better to select a seed which would grow into a tree yielding pleasant fruit for endless time.

Now, does our experience show anything which provides uncloying, unperishing pleasure? The answer must inevitably be in the negative. We are driven to conclude that anything done for a perishable objective is predestined to failure in ultimate fulfillment. Consequently, we realize that the only way to everlasting pleasure and bliss is to do one’s duty with no sensate object in view.

We should fervently pray God to ask of Him the gift of devotion without any objective but Himself, and our effort should be directed to that end. We use the sifting fan to blow away the rotten grain and retain only the pure; similarly we should practice to discard all desire but that for God, and resort to devotion with no object but Him.

* * * * *
ravi said…
Successful people are successful because they never judge anyone even after knowing them completely.

Some people will never be highly successful not because of their lack of competence but because of the lack of welcoming new ideas and new people into their lives.

*🌹Good Morning🌹*
*🪷OM NAMAH SHIVAYA🪷*
ravi said…

பழனிக் கடவுள் துணை - 05.05.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-39

வேல்-மயில்-இருப்பு!!

மூலம்:

கொல்வாரும், கொன்றதைத் தின்பாரும் ஏனைக்குணம் பொருந்த
வெல்வான் முயலும் கவுமாரர்ச் சூழ்ந்து, மிகப்புரப்ப
நல்வாழ்க்கைத் தொண்டர் பலர்வாழ் பழனி நகர்க் குகன்பால்
மல்வாய்ந்த வேற்படை ஒன்றும் கலாபமயிலும் உண்டே (39)


பதப்பிரிவு:

கொல்வாரும், கொன்றதைத் தின்பாரும் ஏனைக் குணம் பொருந்த
வெல்வான் முயலும் கவுமாரர்ச் சூழ்ந்து, மிகப் புரப்ப
நல்வாழ்க்கைத் தொண்டர் பலர் வாழ் பழனி நகர்க் குகன்பால்
மல்வாய்ந்த வேற்படை ஒன்றும் கலாபமயிலும் உண்டே!! (39)

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

இந்த 39வது அலங்காரத்தில் நம் சுவாமிகள், எம் பெருமான் பழனாபுரியானிடம் உள்ள வேற்படையையும் நீலச்சிகண்டியையும் அவன் கையிருப்பு என்று எடுத்து இயம்புகிறார்.

ஜீவகாருண்யத்திற்கு எதிராய் பல உயிர்களைக் கொல்வாரும், கொன்றதைத் தின்பாரும் போன்ற கொடிய குணம் பொருந்தியோரை வெல்ல முயலும் கவுமாரர் குழுமத்தை, நமரை, என்றும் எப்பொழுதும் தன் மாறா அன்பால் சூழவும், அவர்களை முழுவதுமாகக் காக்கவும், அத்தொண்டர் குழாம் நல்வாழ்க்கை வாழவும் அருளுமுகத்தான், பழனி நகரில் வாழும் எம்பெருமான் பழனிக்குகன்பால், வலிமை பொருந்திய, வெற்றியையே வாடிக்கையாய் உடைய வேல் படை ஒன்றும், அவன் எந்த நொடியிலும் ஏறி வந்து அடியாரைக் காக்க, வண்ணக் கலாபம் பொருந்திய நீலச்சிகண்டியும் உண்டு என்று தெளிவாய் உணர்க!! எம்பெருமான் திருவடி பணிக!

வேலுடை விக்ரமவேள், வேல்வேந்தன் வசமென்றாயினவென் வினையெல்லாமொழித்தென்னையவன் விழியில்வைத்துக்காக்கும் விழியீன்றவனுண்டேயெனக்கு!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
*16*

*கழுத்துக் கோடுகள்*

கல்யாணச் சீர்களில் ஏதோ குறைவந்து

கழுத்திலே மூன்று கோடு

கண்மூன்று கொண்டவன் நெற்றிக்குத்
தோதாக காலமே இட்ட ஏடு

பல்கால வாழ்க்கைக்குத் திருமணப் பெண் கொள்ளும்

பணிவான மூன்று முடிகள்

பாவையர்கள் யாருக்கும் கற்பென்றும் அறமென்னும்
பணி என்றும் மூன்று வழிகள்

செல்வாக்கு எங்குமே சொல்வாக்கு வெல்லுமே
ஜயங்கொள்ளும் வழி யாகுமே !

தேவியவள் திருமேனிக் கோவிலில் ஓவ்வொன்றும்

திருமிக்க நகையாகுமே
ravi said…
*ராமரும் சுஷேணனும்*

*ராமா* ...

மாப்பிள்ளை அல்ல வாலி எனக்கு என் பிறவா பிள்ளை

கிள்ளை என தவறு செய்தான் ,

வில்லை வளைத்தே விண் உலகம் போக வைத்தாய் ...

என் உலகம் அவன் என்றே தாரை தனை கன்னிகா தானம் செய்தேன் ...

வானம் புகழ வாழ்ந்தான் ..

உன் பாணம் ஓர் முற்றுப்புள்ளி வைத்து விட்டதே *ராமா* ....

வாலி இன்று நீ காலி என்றே கத்தினான் சுக்ரீவன் ..

போலி வீரம் வெல்லுமோ என்றே நினைத்தேன்

வேலி என நீ பின் இருந்தே தாரை தன் தாலி தரையில் விழ வைத்தாயே *ராமா*

மருத்துவன் நான் மாந்திரீகன் நான் ... மாயங்கள் தெரிந்தவன் நான் ...

இன்று நான் எதுவுமில்லை *ராமா*

சிரித்தான் ராமன்

"மரணத்தை எண்ணிக் கலங்கிடும் சுஷேணரே!

மரணத்தின் தன்மை சொல்வேன்...

மானிடர் ஆன்மா மரணமெய்தாது...

மறுபடி பிறந்திருக்கும்

மேனியைக் கொல்வாய்
மேனியைக் கொல்வாய்

வீரத்தில் அதுவும் ஒன்று

நான் விட்டு விட்டாலும்

வாலியின் மேனி
வெந்து தான் தீரும் ஓர் நாள்...

என்னை அறிவாய் எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொள்வாய்

ராமன் மனது கல் மனதென்றோ

கடும் சொல்லால் என்னை குளிர வைத்தாய் ?

மன்னரும் நானே மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே

சொன்னவன் ராமன் சொல்பவன் ராமன்

துணிந்து நில் தர்மம் வாழ...

புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்...

அந்தப் புண்ணியம் *ராமனுக்கே*

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் *ராமனுக்கே*

*ராமனே* காட்டினான் *ராமனே* சாற்றினான்

*ராமனே* கொலை செய்கின்றான்

உன் மருத்துவம் எழுக

நின் கை வன்மை எழுக

உதவி செய்வாய்

போரில் உயிர் ஊசலடும் வீரர்களுக்கே

இதுவே வாலிக்கு நீ சேர்க்கும் பெருமை

சுஷேணன் சொக்கிப்போனனான் ராமன் சொன்ன வார்த்தைகளில் ..

ராவண யுத்தமதில் ஜாம்பவனுக்கு உயர் காக்கும் சஞ்சிவினியைப் பற்றி சொல்லியே

வாலியின் ஆத்மா சாந்தி அடைய செய்தான் ...💐💐💐
ravi said…
*ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்*

கௌஸல்யேயோ த்³ருஶௌபாது விஶ்வாமித்ரப்ரிய:
ஶ்ருதீ ।

க்⁴ராணம் பாது மக²த்ராதா முக²ம் ஸௌமித்ரிவத்ஸல: ॥ 5 ॥

ஜிஹ்வாம் வித்³யானிதி⁴: பாது கண்ட²ம் ப⁴ரதவன்தி³த: ।

ஸ்கன்தௌ⁴ தி³வ்யாயுத:⁴ பாது பு⁴ஜௌ ப⁴க்³னேஶகார்முக: ॥ 6 ॥
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 37*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐

*வாலி வதம்*

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
காலை புலர்ந்தது -- பறவைகள் இறை தேட கிளம்பின -

கதிரவன் தன் கதிர்களை மலர் போல தூவி ராமனுக்கு தன் 
நமஸ்காரங்களை தெரிவித்தான் -

அன்றைய பொழுது ஏனோ தெரியவில்லை தாரைக்கு இருட்டாகவே தெரிந்தது --

மன்னிக்க தெரிந்த உள்ளங்கள் தானே மாணிக்க கோயில்களாக இருக்க முடியும்? ---

வாலி மன்னிக்கத்
தெரியாமல் தன் வாழ்வை முடித்துக்கொள்ளப்போகிறானே!

தெரிந்தே எவனாவது சிங்கத்தின் வாயில் தலையை கொடுப்பானா -

ராமர் எதிரில் நின்று சண்டை போடுவானா? -

அவன் குணம் என்ன, தரும எண்ணங்கள் என்ன என்று என்னைத் திட்டினாரே

- ராமனுக்குத் தெரியாத ராஜ தந்திரமா?

மறைந்திருந்து வாலியை த் தாக்கினால் வாலியால் என்ன செய்ய முடியும்?   -

ராமனைத் திட்ட முடியும் -

அதற்கு மேல் என்ன செய்யமுடியும்?

போன உயிரை ராமனால் மீண்டும் பெற்றுத் தர முடியுமா?

ஏன் வாலி ஒரே கோணத்தில் சிந்திக்கிறான்?

முடிவு ஒருவனை நெருங்கினால் முதலில் வேலை நிறுத்தம் செய்வது நம் மூளையாகத்தான் இருக்கும்.

தாரை சிந்திப்பதைப்போல் வாலி சிந்தித்து இருந்தால், வாலி இன்னும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருப்பான். 

அங்கே வந்து சேர்ந்தான் வாலி --

சுக்ரீவன் வாலியைப்
பார்த்தான் ---

வாலி கோஷமிட்டான் -- ஏ சுக்ரீவா! நீ இன்னுமா உயிருடன் இருக்கிறாய்?

வா -- நீ என் தம்பியாக இருந்தாய் ஒரு காலத்தில் -

இன்று நீ என் பரம எதிரி -

என்னை நீ உன் வார்த்தைகளால் கொன்றாய் -

இன்று நான் என் கதாயுதத்தால் உன்னை கொல்ல போகிறேன் -

அண்ணன் என்று பார்க்காதே ,

எடு உன் கதாயுதத்தை -

இன்று இருக்கப்போவது நீயா , நானா என்று உலகம் தெரிந்து
கொள்ளட்டும் ....🙏🙏
ravi said…
சுக்ரீவன் குதித்தான் போர் களத்தில் --

இரத்தம் பீறிட்டு வந்து
கொண்டிருந்தது இருவர் மேனியில் இருந்தும் --

கட்டிப்புரண்டார்கள் - அதிலே பாசம் இல்லை --

கோபம் இருந்தது -

ஒருவருக்கு ஒருவர் குத்திக்கொண்டனர் -

அதிலே அன்பு இல்லை -

பகைமை இருந்தது.


ஒருவர் தோள் மீது இன்னொருவர் ஏறினர் -

அதிலே தோழமை இல்லை -

அழிக்கும் எண்ணம் இருந்தது. 

வாலி என்று கத்தினான் சுக்ரீவன்

-- சுக்ரீவா என்று கர்ஜித்தான் வாலி -

அதிலே கூடப்பிறந்த பாசம் இல்லை - தானே நிரந்தரம் என்ற ஒரு மாயை இருந்தது. 

கீழே ஓடியது ஒரே தாயின் இரத்தம் --இருந்த கர்ப்ப அறை ஒன்றே!  

அன்று அந்த கர்ப்பப்பையை 
இருவருமே இரண்டாக பிரித்தனர். 

காலையில் ஆரம்பித்த யுத்தம் சூரியன் மறையும் வரை நீடித்தது -

ராம பாணம் வரும் அறிகுறியே இல்லை -

அன்றும் சுக்ரீவனை அடித்து தோய்த்தான் வாலி --

உன்னோடு சண்டை போடுவதே என் பலத்திற்கு இழுக்கு --

மரணத்தின் வலியை இப்பொழுது நன்கு உணர்த்திருப்பாய்! --

இன்று போதும் இது உனக்கு -

நாளை நல்ல நாள் உன்னை இந்த உலகத்திலிருந்து வழி அனுப்ப -- தயாராக இரு. கிளம்பி செல்!! ---

வாலி சற்றே ஓய்வெடுக்க சென்றான் 

சுக்ரீவனுக்கு ராமர் மேல் கோபம் கோபமாக வந்தது --

"ராமா வேண்டுமென்றால் என்னை ஒரே அடியாக கொன்று விடு,

கொஞ்சம் கொஞ்சமாக நான் இறப்பதை விரும்பவில்லை -

போகும் உயிர் உன் கையினால் போகட்டும் -

அந்த வாலியின் கைகளினால் போகவேண்டாம் ...."

ராமருக்கு இந்த திட்டுக்கள் புதியது அல்லவே -

அவருக்கு வந்தது ஒரே ஒரு சந்தேகம் "

இவன் என்னை நம்புகிறானா இல்லையா -

ஒரு தடவை உன்னையே நம்புகிறேன் என்கிறான் -

கொஞ்ச வினாடிகளுக்குள் என்னை கொன்று விடு ராமா என்று புலம்புகிறான் ...

இவன் எப்படி ராஜ பரிபாலனம் செய்ய போகிறான்?  

ஜாம்பவான் ராமரிடம் வந்தார்

"ராமா சுக்ரீவனை நீ சோதித்தது போதும் - பாவம் உடம்பெல்லாம் காயம் -

அதிகமாக இரத்தத்தை வேறு இழந்து விட்டான் --

அவனை காப்பாற்று ராமா ---" 

ராமர் ஆஞ்சநேயரையும், ஜாம்பவானையும் அருகில் அழைத்தார் "

சுக்ரீவனின் நம்பிக்கையை நான் பறிக்கவில்லை -

வாக்கு கொடுத்தது கொடுத்ததுதான் ---அவனை சற்றே சோதித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது ------" 🤔🐒🐒
ravi said…
சங்கராம்ருதம் - 499

ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

கார்வார் வெங்கட்ராமய்யரின் புத்ரனை பெரியவா ஆட்கொண்ட விதம் ...

தஞ்சாவூர் உத்தமதானபுரத்தை சேர்ந்தவர் கார்வார் வெங்கட்ராமய்யர். இவருடைய புத்ரன் பெயர் ஸ்ரீநிவாஸன். அப்போது அவனுக்கு ஸுமார் 18 வயஸுதான்.

ravi said…
1958-ல் அம்பிகையின் அருள்வெள்ளம் ஶ்ரீநிவாஸனை கவிமழையாய் பொழிய வைத்தது. ஒருநாள் ராத்ரி தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீநிவாஸன், திடீரென்று பாதி ராத்ரியில் முழித்துக் கொண்டான். காமாக்ஷியை போற்றும்படியாக 1000 அகவல் அவனுடைய உள்ளத்திலிருந்து துள்ளிக்கொண்டு, அக்ஷரமாக ஒரே மூச்சில் வெளியில் வந்தது. உடனே அவனுடைய அப்பாவான கார்வாருக்கு இதைப்பற்றி லெட்டர் எழுதினான்.

அப்போது பெரியவா மெட்ராஸ் ஸம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம். கார்வார், தன் மகனின் 1000 அகவல் பற்றி சொன்னார்.

“ஸ்ரீநிவாஸனை இங்க வரச் சொல்லு…”

உத்தரவை ஏற்று, மெட்ராஸ் வந்து பெரியவாளை வந்து தர்ஶனம் செய்தான் ஸ்ரீநிவாஸன்.

கையில் அவன் எழுதிய 1000 அகவல்……

“படிடா…… ”

வரிஸையாக ஒவ்வொரு போற்றியாக படித்துக் கொண்டே வந்தபோது…….

“64-வது பீடத்து அரசியே போற்றி……”

“நிறுத்து நிறுத்து..! டேய்! அந்த கதவை சாத்து!…”

பாரிஷதர் அந்த அறையின் கதவை சாத்தினார்.

ஒரு மூங்கில் தட்டில், பூர்ணபலமாக தேங்காய், ஒப்புயர்வற்ற குருவின் பாதுகை, ஸ்ரீ மேருவில் பதித்த சந்தன உருண்டை, ஸ்ரீசக்ரம் இவற்றின் மேல் வில்வத்தையும் போட்டார்…..

“இந்தா…! எடுத்துக்கோ!.. பஞ்சாயதன மூர்த்தி….!”

இப்படியொரு அனுக்ரஹமா!

எதுவும் புரியாமல் பார்த்தான் ஸ்ரீநிவாஸன்.

“பெரியவா….. இத… நா… என்ன செய்யணும்? எனக்கு பூஜா நியமம் எதுவுமே தெரியாதே!…”

“ஓஹோ! இத்தனை… போற்றி போற்றி-ன்னு அகவல் மட்டும் எப்டி எழுதினியாம்?…”

“நானா….. எழுதல! அது…. தானா வந்துது பெரியவா…”

“வந்துதோன்னோ? அப்டியேதான்… பூஜா மொறையும் தானாவே வந்துடும்! எடுத்துக்கோ! லோக க்ஷேமார்த்தம் பூஜை பண்ணிண்டு வா.! ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து-ன்னு எல்லாரும் நன்னா இருக்கணும்-னு வேண்டிண்டு… பூஜை பண்ணு…”

கண்களை கண்ணீர் மறைக்க, பெரியவாளின் அனுக்ரஹத்தை அப்படியே அள்ளிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் ஸ்ரீநிவாஸன்.

அதே வர்ஷம் தேவகோட்டையில் ஸ்ரீமடத்தின் பக்தரான ஒரு செட்டியார் வீட்டுக் கல்யாணம். மெட்ராஸில் இருந்த பெரியவா, ஸ்ரீநிவாஸனை கூப்பிட்டனுப்பினார்.

“சீனு! தேவகோட்டைக்கு போயி, இந்த ப்ரஸாதத்தை செட்டியார்கிட்ட குடுத்துட்டு வா!…”

ஸ்ரீநிவாஸனுக்கோ தனியாக முன்னேபின்னே தெரியாதவர் வீட்டுக்கு எப்படி செல்வது என்ற தயக்கம்.

“நீ…. தனியா போகவேணாம்! ஒங்கூட ஏழெட்டு பேர் வருவா….”

“ஸரி பெரியவா…..”

சிவப்புக் குஞ்சலம் கட்டிய ஸ்ரீமுக பிரம்பையும், ப்ரஸாதத்தையும் எடுத்துக்கொண்டு தேவகோட்டை சென்றார்கள். செட்டியாருக்கோ பரம ஸந்தோஷம்!

“பெரியவங்க நம்ம வீட்டு கல்யாணத்துக்கு மடத்துலேந்து ப்ரஸாதம் அனுப்பின கருணையை என்ன சொல்லறதுங்க?…”

மடியாக பண்ணி, ஸம்ருத்தியான கல்யாண ஸாப்பாடு போட்டு, ஸ்ரீநிவாஸன் கையில் 108 ரூபாய் ஸன்மானமாக தந்தார்.

ஶ்ரீநிவாஸன் மெட்ராஸ் வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணினான்.

“செட்டியாருக்கு ரொம்ப ஸந்தோஷம் பெரியவா! நன்னா ஸாப்பாடு போட்டார். 108 ரூவா குடுத்திருக்கார்…”

பெரியவா முன் இருந்த தட்டில் அதை வைக்கப்போன ஸ்ரீநிவாஸனை தடுத்தார்…….

“நீயே… இத… வெச்சுக்கோ…! ஒன்னை எதுக்காக அங்க போகச்சொன்னேன்னு தெரியுமோ?…..”

“தெரியாது….. பெரியவா.”

“செட்டியாருக்கு ரொம்ப வர்ஷமா கொழந்தையே இல்ல… காமாக்ஷியை ப்ரார்த்தனை பண்ணிக்க சொன்னேன்…. கொழந்த பொறந்தது…! அதுக்கு காமாக்ஷி-ன்னு பேர் வெக்கச் சொன்னேன். நீதான் காமாக்ஷி பேர்ல…. அகவல் ஆயிரம் பாடியிருக்கியே!…. அதான், ஒன்னை அவர்கிட்ட அனுப்பினேன்….”

அப்போதே காமாக்ஷிதாஸன் ஆனார்….. ஸ்ரீநிவாஸன்!

அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ravi said…
ஹந்த்ரீ = அழித்தல்

*❖ 191 துக்க ஹந்த்ரீ* = துயர் தகர்ப்பவள்
ravi said…
*அம்மா*

நீயிருக்க

துக்கங்கள் சூழ்ந்திடுமோ

சூழல் காற்று வீசிடுமோ

கடல் வீச்சு பொங்கிடுமோ

வான் நிலா பொசுங்கிடுமோ

இருள் அது பகலவனை விழுங்கிடுமோ

சந்தனம் தான் சேறாகுமோ ?

தேவை இல்லா கவலைகள் தேக்கி வைக்கும் மனமிதில்

நான்மாட கூடல் அரசி நல்லாட்சி புரிய வருவாயோ ...

நாட்புறமும் சுவர் எழுப்பி நான்கு வகை சேனை பூட்டி நான் காவல் நிற்பேன் ...

நல்லாட்சி நீ செய்ய நல்ல துணை நான் ஆவேன் ...

துயர் முழுதும் துடைப்பவளே தூங்க வேண்டும் உன் மடியில் நான் என்னாளுமே
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

பரமேச்வரனையேதான் ஸங்கீதத்துக்கு மூலமாகச் சொல்லியிருக்கிறது. மௌன தக்ஷிணாமூர்த்தி மாதிரியே வீணாதர தக்ஷிணாமூர்த்தி என்று உண்டு;விக்ரஹங்களில் பார்த்திருக்கலாம். ‘நாததநும் அநிசம் சங்கரம்‘ என்று தியாகராஜ ஸ்வாமிகள் செய்திருக்கிற க்ருதியில் பரமேஸ்வரனுக்கு நாதமே சரீரம் என்கிறார். ‘தநு’ என்றால் சரீரம். இதிலே ஈச்வரனின் ஸத்யோஜாதம் முதலான ஐந்து முகங்களிலிருந்தே ஸப்த ஸ்வரங்களும் வந்திருக்கின்றன என்று சரணத்தில் சொல்லியிருக்கிறார்*1. ஐந்து முகத்திலிருந்து ஏழு ஸ்வரமென்றால் எப்படி என்று புரியாமலிருந்தது. வாஸுதேவாச்சார், (காரைக்குடி) ஸாம்பசிவய்யர், மஹாராஜபுரம், செம்மங்குடி முதலிய இத்தனை பேரையும் விசாரித்துப் பார்த்தேன். முதலில் அவர்களுககும் புரியாமல் தானிருந்தது. அப்புறம் ஸங்கீத சாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்ததில், ஷட்ஜமும் பஞ்சமும் (‘ஸ’வும் ‘ப’வும்) பிரக்ருதி ஸ்வரங்கள் என்பதாக ஈஸ்வரனைப் போலவே ஸ்வயம்புவாக இருப்பவை என்றும், விக்ருதி என்ற செயற்கை ஸ்வரங்களான மற்ற ஐந்துமே பரமேஸ்வரனின் ஐந்து முகங்களில் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொன்றாகத் தோன்றின என்றும் அர்த்தம் த்வனிக்கும் படிப் பிரமாணங்கள் அகப்பட்டன.

ravi said…
விக்ருதிகளான ரி, க, ம, த, நி-களில் ஒவ்வொரு ஸ்வரத்திலும் இரண்டு திநுஸு இருக்க ப்ரக்ருதியான ஸ, ப-வில் ஒவ்வொன்றேதான் இருக்கிறது.

ஷ்டஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பனவற்றின் முதல் எழுத்துக்களை வைத்தே ஸ-ரி-க-ம-ப-த-நி என்பது. ஏழு ஜந்துக்கள் இயற்கையாகப் போடும் சத்தத்தை வைத்தே இந்த ஏழு ஸ்வரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஷட்ஜம் என்பது மயிலின் நாதம். இந்த ‘ஸ’வுக்கு அடுத்த ‘ரி’யாக வருவது ரிஷபத்தின் கர்ஜனை. ‘க’ – ஆடு போடும் சத்தம். ‘ம’-க்ரௌஞ்ச பக்ஷியின் கூவல். ‘ப’-குயிலின் ஒலி. ‘த’ – குதிரைக் கனைப்பு. ‘நி’ -யானையின் பிளிறல்.

ravi said…
சீக்ஷா சாஸ்த்ரத்தில் மூச்சு எந்தெந்த அவயவங்களில் பட்டு வேத அக்ஷரங்கள் உண்டாக வேண்டுமென்று சொல்லியிருப்பது போலவே, ஸங்கீத சாஸ்த்ரங்களில் ஒவ்வொரு ஸ்வரமும் அடி வயிற்றிலிருந்து உச்சந்தலைவரை எப்படியெப்படி ச்வாஸ சலனத்தால் உண்டாக வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. இப்படி ஆறு அவயவங்கள் ஸம்பந்தத்தில் பிறப்பதே ‘ஷட்-ஜம்’. நாபி, ஹ்ருதயம், கண்டம், ரஸனம் (நாக்கு) , நாஸி ஆகிய ஐந்திலே ஸப்த ஸ்வரத்தின் ஸுந்தர தேவதைகள் பிரகாசிப்பதாக தியாகையர் ‘சோபில்லு‘க்ருதியில் சொல்கிறார்.

நாதோபாஸனை என்பது ஒரு பெரிய மந்த்ர சாஸ்த்ர, யோக சாஸ்த்ர ஸாதனை. ஸ்வச்சமான நாதோபாஸனை என்பது ஓம்கார உபாஸனையேயாதலால் இது பரம வேதாந்த ஸாதனையுந்தான். நாதம், பிந்து, கலை என்று மூன்று பெரிய தத்வங்கள், “நாத விந்து கலாதீ நமோ நம” என்று திருப்புகழ் பாடுகிறோம். அந்தப் பெரிய விஷயங்களுக்கு நாம் இப்போது போகவேண்டாம். இதிலே நாதம் சிவ ஸ்வரூபம், பிந்து சக்தி ஸ்வரூபம், சப்தத்துக்கு மூலம் நாதம், ரூபங்களுக்கு மூலம் பிந்து – அதாவது ஒலி, ஒளி என்பதில் ஒலிக்கு மூலம் நாதம், ஒளிக்கு மூலம் பிந்து என்ற அளவுக்குத் தெரிந்து கொண்டால் போதும். முடிவில் ரூபங்களும் சப்தங்களிலிருந்து உண்டாகிறவைதான்*2. நாதம், சப்தம் என்கிறவற்றுக்கிடையே வித்யாஸமுண்டு. சப்தம் என்பது வெளியிலே வருகிற ஒலிகள் அவற்றிலே பல உண்டு. நாதம் என்பது எந்த சப்தமானாலும் அதற்கு ஆதாரமாயிருப்பது;அதுவே சப்தம் ஒடுங்கிறபோதும் சேர்கிற ஸ்தானம்.

வியாகரண சாஸ்த்ரத்தில் சப்தத்தையே ப்ரம்மமாக நிலைநாட்டியிருக்கிறது. இதற்கு சப்த ப்ரம்மவாதம் என்று பேர். பாஷை இலக்கணத்தைச் சொல்லும்போது இப்படி வையாகரணிகள் (வியாகரண சாஸ்திரக்காரர்கள்) அதை பிரம்ம ஸ்வரூபமாகச் சொல்லியிருப்பதையே இன்னொரு விதத்தில் ஸங்கீத சாஸ்திரக்காரர்களும் ஸ்தாபித்திருக்கிறார்கள். ஸங்கீதத்திலே நாதப்பிரம்ம உபாஸனை, நாதோபாஸனை என்கிற இடத்திலும் நாதம் என்பது வெறும் ஆதார சப்தம் மட்டுமில்லை. பாடுகிறவன் ஒரு ஸ்வர ஸ்தானத்தை ச்ருதியோடு சுத்தமாக தீர்க்கமாகப் பிடித்து அது பூர்ணமாக ஓங்கி முடிந்து விழுந்து லயிக்கிற இடத்தில் அது ச்ருதியோடு கவ்வி அத்வைதமாகக் கரைந்து, நிறைந்து போகிறதே அதைத்தான் நாதம் என்பது. இந்த இடத்திலே பாடுகிறவனும் அதோடு கரைந்து நிறைந்து விடுவான். அவன் மட்டுமில்லை. கேட்கிற ஸஹ்ருதயர்களானவர்களும் அப்படியே சொக்கித் தன்னை மறந்து அந்த நாதத்தில் ஐக்யமாயிருப்பார்கள். இதிலே பெறுகிற ஆனந்தந்தான் ஆத்மானந்தம், பிரம்மாநந்தம் என்று மத சாஸ்திரங்களின் உச்ச லக்ஷ்யமாய் சொல்லியிருப்பது. நாதம் பிரம்மத்துக்குக் கொண்டுபோகிறது, சப்தம் நாதத்துக்குக் கொண்டுபோகிறதென்றால் இதில் ஒன்றின் தன்மை இன்னொன்றுக்கு இல்லாவிட்டால் எப்படி முடியும்? அதனால்தான் சப்தமே பிரம்மம் என்று சொல்வதாக சாஸ்த்ரம் ஏற்பட்டிருக்கிறது. சப்த பிரம்ம வாதத்தில் சப்தம் நித்யமானது, பூர்ணமானது என்று இரண்டு லக்ஷணங்கள் சொல்லியிருக்கிறது. Time என்கிற காலத்துக்குக் கட்டுப்படாமல் இருப்பதுதான் ‘நித்யம்’. Space என்னும் இடக் கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் பரவியிருப்பதுதான் ‘பூர்ணம்’. இப்படி எக்காலத்திலும் எவ்விடத்திலுமாக நிறைந்திருப்பது சப்தம் என்று நம் பூர்விகர்கள் சொன்னதை இப்போதுதான் ஸயன்ஸ் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. பதினாயிரம் மைலுக்கு அந்தண்டை பாடுவதை இங்கே நாம் ரேடியோவில் கேட்கிறோமென்பதால், சப்தம் space-ல் எங்கும் வியாபகமாயிருப்பது prove ஆகிறது. இதோ இப்போது நான் பேசுவதை ஒருத்தர் டேப்-ரிக்கார்ட் பண்ணுகிறார்; க்ராமஃபோன் என்று ரிகார்ட் பண்ணுகிறார்கள். எத்தனையோ வருஷத்துக்கு அப்புறம் இந்த ரிகார்ட்களைப் போட்டாலும் சப்தங்கள் மாறாமலே ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்ன prove ஆகிறது? சப்தம் காலத்தால் நசிக்காமல் நித்யமாய் இருக்கிறது என்று நிரூபணமாய் விடுகிறதோல்லியோ?

பூர்விகர்களின் அதீந்த்ரிய சக்தியும் போய், நவீன ஸயன்ஸும் வராத காலத்திலே, ‘சப்தம் நித்யமானது, பூர்ணமானது’என்றால் “இதென்ன பேத்தல்?நாம் எழுப்புகிற ஒலி இதோடு தீர்ந்துபோனதுதான். இதெப்படி நித்யம்? மிஞ்சினால் அது நூறு, இருநூறு கஜம் போகட்டும். பெரிய இடி இடித்தால்கூட நாலைந்து மைலுக்கு மேல் ஓசை போகிறதில்லை. இதை பூர்ணம் என்றால் எப்படி?” என்றுதான் தோன்றியிருக்கும். இப்போது ஸயன்ஸ் வந்து நம் சாஸ்த்ர அபிப்ராயத்தைக் காப்பாற்றிக் கொடுக்கிறது!

Time- space concept களுக்கு அதீதமாக இப்படி நித்யமாயும் பூர்ணமாயும் இருப்பதுதான் விபுத்வம்.
(இன்று தியாகராஜ சுவாமிகள் ஜெயந்தி)
ravi said…
*சரவணபவ சிவராம கோவிந்த நாராயண மகாதேவா*

பெரியவா நாம் எல்லாம் தினமும் சொல்லவேண்டும் என்று சொன்ன மந்திரம் இது .. எல்லா பிணிகளையும் தீர்க்க வல்லது
Sujatha said…
Beautiful narrative 💐no words to express a billion namaskarams to Ambal 🙏🏼🙏🏼
ravi said…
[05/05, 10:29] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 149*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 19
[05/05, 10:31] Jayaraman Ravikumar: எல்லாருக்கும் க்ஷேமத்தை அருளும் உன் கடை கண் பார்வைக்கும் கரம் கூப்பி வழி படுகிறேன்.

மன்மதன் வரும் நேரம் இரவு !

இருள் நிறைந்த நேரத்தில் யாவரும் வயப்படும் வேலை அல்லவா?

அந்த நேரம் வரும் வரை நான் உன் நாம ஜபம் செய்து, உன் கடாக்ஷம் , ஞானம் அடைகிறேன் என்ற. கருத்துக் கொண்ட ஸ்லோகம் பக்தியின் மேன்மை, நாமா ஜெபத்தின் மகிமை இவற்றை விளக்குகிறது,,!🥇
ravi said…
[05/05, 10:25] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 552* 🙏🙏🙏started on 7th Oct 2021

*259 வது திருநாமம்*
[05/05, 10:27] Jayaraman Ravikumar: *259 * तैजसात्मिका - தைஜஸாத்மிகா --*

மேலே சொன்ன கனவில் ஜீவன் பங்கேற்பதை தான் *தைஜஸம்* என்பது. அம்பாள் இந்த பெயர் கொண்டவள்.

ஜீவனின் எண்ணங்கள், வாசனா, ஸ்தூல சரீரரத்தை விடுத்து, சூக்ஷ்ம சரீரமாகி அவற்றில் லயிப்பது தான் கனவு.

கனவில் அடையாளம் தெரியும் ஸ்தூல சரீரம் சம்பந்தப்படாமல் எங்கோ படுத்து கிடக்கிறது.

சூக்ஷ்ம சரீரம் காஷ்மீரில் குதிரை மேல் வேகமாக பறக்கிறது.

பள்ளத்தில் விழுகிறது.

மலை ஏறுகிறது. என்னன்னவோ செய்து ஸ்தூல சரீர நடவடிக்கையை நடிக்கிறது.

நிஜம் போல காட்டுகிறது.🪷
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

காஞ்சீபுர மத்தியில் ராணியாக இருக்கிற அம்பாளையும் கஞ்சி ஸம்பந்தப்படுத்தி ஒரு இருசொல்லங்காரக் கவிதை இருக்கிறது.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அதற்கு அர்த்தம் என்னவென்றால்: காமாக்ஷியம்பிகை கஞ்சி குடிக்க மாட்டாள். ஏதோ கம்பைப் பொங்கிச் சோறாகப் போட்டாலும் சாப்பிடமாட்டாள். காய்கறி, அவியல், கூட்டு, ஊறுகாய் என்று ஏதாவது வியஞ்ஜனங்களையாவது இஷ்டப்பட்டு சாப்பிடுவாளா என்றால் அதுவும் மாட்டாள். அஞ்சு தலை பாம்புக்கு (பாம்புக்கு மரியாதை கொடுத்து ‘பாம்பார்’ என்று சொல்ல வேண்டும்.
ravi said…
ஏனென்றால் செய்யுளில் ‘அரவம்’ என்றில்லாமல் ‘அரவார்’ என்று வருகிறது. இப்படிப்பட்ட ஐந்துதலைப் பாம்புக்கு அம்பாள்) ஆறாவது தலையாக மானஸிகமாக ஆகிறாளாம்!

கஞ்சி குடியாளே கம்பஞ்சோ றுண்ணாளே

வெஞ்சினங்க ளொன்றும் விரும்பாளே – நெஞ்சுதனில்

அஞ்சுதலை யரவாருக் (கு) ஆறுதலை யாவாளே

கஞ்சமுகக் காமாட்சி காண்

கஞ்ச முகம் என்றால் தாமரைப் பூப்போலவுள்ள முகம். அம்பாள் முகம் அப்படி இருக்கிறது. கஞ்சி குடிக்காதவள், எதுவும் சாப்பிடாமல் கஞ்சத்தனமாயிருக்கிறாள் என்கிற மாதிரியும் த்வனிக்கிறது!

ஸரி, அம்பாளைப் பற்றி இப்படி ஏதோ அல்ப விஷயங்களைச் சொல்லி அப்புறம் ஆறுதலைப் பாம்பு என்று விஷமாக முடித்தால் என்ன அர்த்தம்?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே புரிந்து விடும் – சிலதாவது.

ravi said…
கஞ்சி குடியாள்’ என்றால் காஞ்சீபுரத்தில் குடி கொண்டிருப்பவள் என்று அர்த்தம். ‘கம்பஞ்சோறு உண்ணாள்’ என்றால் ஏகம்பன் என்றும் கம்பன் என்றும் சொல்லப்படும் ஏகாம்ரநாதனுக்கு நைவேத்யமாகிற சோற்றை உண்ணாதவள் என்று அர்த்தம். சிவாலயங்களில் முதலில் ஈஸ்வரனுக்கு நைவேத்யம் பண்ணிவிட்டு அப்புறம் அதையேதான் அவன் பிரஸாதமாக அம்பாள் முதலான மற்ற எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் செய்வார்கள். மதுரையிலே மட்டும் மீனாக்ஷிக்கு முதலில் செய்துவிட்டு அப்புறந்தான் ஸுந்தரேஸ்வரர் உள்பட மற்ற எல்லோருக்கும்! காஞ்சிபுரத்திலே நூற்றெட்டு சிவலாயங்கள் இருந்தபோதிலும் ஒன்றிலாவது அம்பாள் ஸந்நதியில்லாமல், அந்தப் பராசக்தி எல்லா மூர்த்திகளுக்கும் மேற்பட்ட பரப்ரஹ்ம ஸ்வரூபிணியாக காமாக்ஷி என்று தனிக்கோயிலில் வாஸம் செய்கிறாள்*. அங்கே அவளுக்கென்றே தயார் செய்கிற நைவேத்யம்தான் அவளுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. ஏகாம்ரேச்வரர் நைவேத்யம் அவளுக்கு வருவதில்லை. இதனாலே அவள் “கம்பஞ்சோறுண்ணாளே!”

அவள் பரம ப்ரேமையே ஒரு ரூபமாக ஆனவள். நாம் பண்ணுகின்ற தப்புகளுக்கு, அபசாரங்களுக்கு நம் மேல் அவளுக்கு எத்தனையோ கோபம் கோபமாக வர வேண்டும். ஆனால் அவளுக்குக் கோபித்துக் கொள்வது என்றால் கொஞ்சங்கூடப் பிடிப்பதில்லை. ‘வெஞ்சினங்கள் ஒன்றும் விரும்பாளே’ என்றது இப்படி வெம்மையாக, அதாவது ரொம்ப உஷ்ணமாக, சினம் கொள்வதில் அவளுக்கு இஷ்டமே இல்லை என்று, அவளுடைய தயையை, க்ஷமையை (மன்னித்தருளும் மனப்பான்மையை) தெரிவிக்கிற வாசகமாக ஆகிறது. ‘வ்யஞ்ஜனம்’ என்பதை தமிழ்ப் பாட்டில் ‘வெஞ்சினம்’ என்று சொல்லலாம்.

அப்படிச் சொல்லும்போது, கஞ்சி காமாக்ஷிக்கு வியஞ்ஜனமில்லாமல் சுத்தான்னம் மட்டும் நிவேதிக்க வேண்டுமென்று இருக்கிற அபிப்பிராயத்தை இந்தப் பாட்டு சொல்லுவதாகவும் ஆகும். அரவார் என்றால் ஹரனான சிவனைச் சேர்ந்த அடியார் என்று அர்த்தம். சிவபெருமானுக்குத் ஐந்து முகங்கள் உண்டு. அதனால் அவர் ‘அஞ்சுதலை அரன்’ ஆகிறார். அவரை மனஸிலே வைத்து உபாஸிக்கிறவர்கள் ‘நெஞ்சுதனில் அஞ்சுதலை யரவார்’. ‘ஆறுதலையாவாள்’ என்றால் ‘ஆறுதலை அளிக்கிறவள்’, “ஆறுதலாக இருப்பவள்” என்று அர்த்தம். நெஞ்சத்தில் ஈஸ்வரனை உபாஸிக்கிறவர்களுக்கு ஸம்ஸாரக் கஷ்டம் தெரியாமல் ஆறுதலாக இருப்பவள் அம்பாள்.

‘நெஞ்சுதனில் அஞ்சுதலை அறிவார்க்கு’ என்கிற பாடத்தை வைத்துக்கொண்டால் ‘மனஸிலே பயத்தை உடையவருக்கு ‘அம்பாள் அதைப் போக்கி ஆறுதல் தருகிறாள் என்று ஆகும். “அஞ்சுதலை”- அஞ்சுதல், அச்சப்படுதல் என்பதை.
Kowsalya said…
அதி அற்புதமான மந்தஸ்மித வர்ணனை....🙇‍♀️🙇‍♀️🙏🙏🪷🪷ஶ்ரீ லலிதாம்பிகே சரணம் சரணம் சரணம் 🙏🙏
ravi said…
வைகையில் எழுந்தருளும் கள்ளழகர் சிலை* *அபரஞ்சி தங்கத்திலானது!*
*********************************************
*அபரஞ்சி என்பது தேவலோகத் தங்கம்.*
*உலகிலேயே அபரஞ்சி தங்கத்திலான சிலைகள் 2 இடங்களில் தான் உள்ளது.*

*சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கி அருள்வதற்காக கள்ளழகர் மதுரை நோக்கி வருகிறார். இவ்வாறு வரும் கள்ளழகர் உற்சவ சிலை மிகவும் அரிய வகை அபரஞ்சி என்னும் தங்கத்திலான சிலை ஆகும்.*

*இந்த அபரஞ்சி என்பது தேவலோகத் தங்கம் என்பதால் கள்ளழகரும் தேவலோக பெருமாளாக வணங்கப்படுகிறார்*.

*உலகிலேயே அபரஞ்சி தங்கத்திலான சிலைகள் 2 இடங்களில் தான் உள்ளதாக* *கூறப்படுகிறது. அதில் ஒன்று கள்ளழகர்* *உற்சவர் சிலையாகும். மற்றொன்று* *திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த* *பத்மநாபசுவாமி சுவாமி கோவிலில் உள்ள* *சிலையாகும்*.

*திருமாலிருஞ்சோலை அழகர் விக்ரகத்துக்கு கோவிலின் மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.*

*#சர்வம்_ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்*

➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️
ravi said…
குடமாக வருவாள் குடம் குடமாய் தருவாள் ...

படம் வைத்து வணங்குவோர்க்கும் கடம் நிறை அமுதம் தருவாள் ...

தடம் புரண்டு வழி மறந்தவர்க்கும்

தடம் பதிக்க அருள் செய்வாள் ...

வடம் பிடித்து தேர் இழுத்தால் , நேரில் வந்தே நடம் புரிவாள்

அடம் பிடித்து அவள் இல்லை என்போற்கும்

திடம் கொள்ளும் நெஞ்சம் தருவாள்

விடம் மட மட வென்றே இறங்க இடம் தருவாள் ...

பிணி தீர்க்கும் மருந்தும் அவளே என்பதால் 🙏🙏🙏
ravi said…
[05/05, 20:20] Jayaraman Ravikumar: மதுரைக்கு அருகே இருக்கும் திருமோகூர் என்னும் திவ்யதேசத்தில் காளமேகப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

அந்தப் பெருமாள் முன் அகஸ்திய மகரிஷி நடனமாடுவது வழக்கம்.

ஒரு முறை அந்தப் பெருமாளைத் தரிசிப்பதற்காக தேவ லோகத்திலிருந்து தேவேந்திரன் பூமிக்கு வந்தான்.

பெருமாள் முன்னே நடனமாடும் அகஸ்தியரின் முதுகு தான் அவனுக்குத் தெரிந்தது.

ஆனாலும் அவரது குள்ளமான தோற்றத்தைக் கண்டு அகஸ்திய ரிஷி என்று அறிந்தான் இந்திரன்.

அவரது உயரத்தை எண்ணிக் கிண்டல் செய்து சிரித்து விட்டான்.

சடக்கெனத் திரும்பிப் பார்த்தார் அகஸ்தியர்.
[05/05, 20:21] Jayaraman Ravikumar: *பாடல் 42 ... குறியைக் குறியாது*

(எவ்வேளையும் செவ்வேளையே நினை)

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே
[05/05, 20:22] Jayaraman Ravikumar: மானிடப் பிறவியின் லட்சியம் (குறி), இறைவனைச் சேர்தல்.
உயிர்களின் குறிக்கோள் மெய் உணர்தல். உண்மை அறிவு
உதித்தவுடன் உலகம் கெடும்.

.. நிர்க்குணம் பூண்டு என்னை மறந்திருந்தேன் இறந்தே
விட்டது இவ்வுடம்பே ..

... கந்தர் அலங்காரம் (19).

இம்மையிலேயே இறைவனோடு கலந்த ஜீவன் முத்தர்களான
ஞானிகளுக்கு உடல், உலகம், சுற்றம், செல்வம் போன்ற
விஷயாகார விருத்திகள் யாவும் அற்றுப் போகும்.

பிரம்மாகார
விருத்தி தழைக்கும். அப்போது அதுவே தானாய் ஆகி அமருவர்.
இந்நிலையே ' *தத்வமசி* ' என்கின்ற மகா வாக்கியத்திற்கு ஓர்
எடுத்துக்காட்டு.
ravi said…
[05/05, 20:19] Jayaraman Ravikumar: *114. வ்ருஷாக்ருதயே நமஹ (Vrushaakruthaye namaha)*
[05/05, 20:20] Jayaraman Ravikumar: மதுரைக்கு அருகே இருக்கும் திருமோகூர் என்னும் திவ்யதேசத்தில் காளமேகப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

அந்தப் பெருமாள் முன் அகஸ்திய மகரிஷி நடனமாடுவது வழக்கம்.

ஒரு முறை அந்தப் பெருமாளைத் தரிசிப்பதற்காக தேவ லோகத்திலிருந்து தேவேந்திரன் பூமிக்கு வந்தான்.

பெருமாள் முன்னே நடனமாடும் அகஸ்தியரின் முதுகு தான் அவனுக்குத் தெரிந்தது.

ஆனாலும் அவரது குள்ளமான தோற்றத்தைக் கண்டு அகஸ்திய ரிஷி என்று அறிந்தான் இந்திரன்.

அவரது உயரத்தை எண்ணிக் கிண்டல் செய்து சிரித்து விட்டான்.

சடக்கெனத் திரும்பிப் பார்த்தார் அகஸ்தியர்.
ravi said…
[05/05, 20:14] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 79*💐💐💐💐🙏🙏🙏
[05/05, 20:15] Jayaraman Ravikumar: நித்யம் யோகி3மனஸ்-ஸரோஜத3ல-ஸஞ்சார-க்ஷமஸ்-த்வத்கரம்:

       சம்போ3தேன கத2ம் கடோ2ர யமராட்3வக்ஷ: - கவாடக்ஷதி: |

அத்யந்தம் ம்ருது3லம் த்வத3ங்க்4ரியுக3லம் ஹர மே மனச்-சிந்தயத்-
       யேதல்லோசன-கோ3சரம் குரு விபோ4 ஹஸ்தேன ஸம்வாஹயே ||   79
ravi said…
சம்போ! தங்களுடைய மிகமிக மென்மையான அடிவைப்பு, யோகிகளது மனமாகிய தாமரை இதழ்களின் மேலேயே எப்போதும் ஸஞ்சரிக்கத் தக்கது.

அதைக்கொண்டு மிக முரடான யமதருமராஜனது கதவு போன்ற மார்பை எங்ஙனம் பிளந்தீர்?

ஐயோ! (இதை நினைத்து) என் மனம் வியாகுலப்படுகிறது. விபுவே!

அவ்வடியை எனது கண்களுக்குத் தோன்றச்செய்யும். என் கைகளால் பிடித்துவிடுகிறேன்.🥇🥇🥇
Kousalya said…
அடடா...கடகட என்று சிரிக்கும் என் கௌமாரியே... பட பட என்று அழகு வரிகளில் உன்னை வர்ணிக்க, மட மட வென்றே அருளை வாரி வழங்குபவள் எனதன்னை லலிதாம்பிகையே சரணம் சரணம் சரணம்..🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
"திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே...."

(பாடல் பிறந்த கதை)

(கண்ணதாசனின் 'மேகவர்ண' சந்தேகத்துக்கு பெரியாவாளின் செயல்முறை விளக்கம்)

கட்டுரை :
13-09-2016 தேதியிட்ட சக்தி விகடன். (ஒரு பகுதி-பெரியவா சம்பந்தப்பட்ட பகுதி மட்டும்)

மகா பெரியவாளை தரிசிக்கச் சென்ற கண்ணதாசன் பெரியவாளிடம், "ஸ்வாமி, பகவான் மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பாதாகச் சொல்கிறார்கள் பாற்கடல் என்றால், வெண்மை நிறமாகத்தானே இருக்கவேண்டும்?ஆனால்,பாற்கடல் மேகவர்ணமாக அல்லவா காட்சி தருகிறது" என்று கேட்டார்.அவருடைய கேள்வியில் சற்றே குதர்க்கம் இருப்பதாகச் சுற்றிலும் இருந்தவர்கள் நினைத்தனர்.

ஆனால் கண்ணதாசன் கேட்டதற்கு மகா பெரியவா பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாகவே புன்னகைத்தார். அன்றைக்கு மதியம் கண்ணதாசன் கேள்விக்கு விடை கிடைக்கும் என்றும், அதுவரை கண்ணதாசன் காத்திருக்கவேண்டும் என்றும் உத்தரவாகியது.

அன்று பிற்பகல் உம்மிடி செட்டியார், மகா பெரியவாளை தரிசிப்பதற்கு வந்தார்.மகா பெரியவாளை நமஸ்கரித்து எழுந்த உம்மிடியார், தான் கொண்டு வந்திருந்த பெரிய மரகதக்கல்லை பெரியவாளுக்குச் சமர்ப்பித்து, ஏற்றுக்கொள்ளுமாறு பிரார்த்தித்துக் கொண்டார்.

மகா பெரியவா பதில் ஒன்றும் சொல்லாமல், மடத்துச் சிப்பந்தியிடம் ஒரு பாத்திரத்தில் பால் கொண்டு வருமாறு பணித்தார்.பால் வந்ததும் உம்மிடியார் கொடுத்த மரகதக்கல்லை அந்தப் பாலில் போடுமாறு செய்தார். அதைப் பார்த்த உம்மிடியார், தான் கொடுத்த மரகதத்தின் தரத்தைதான் அப்படிச் சோதித்துப் பார்க்கிறாரோ என்று நினைத்தார்.மரகதத்தின் தரத்தை அப்படிப் பாலில் போட்டுச் சோதித்துப் பார்ப்பது வியாபார ரகசியம். மகா பெரியவாளுக்கு எப்படித் தெரிய வந்தது என்ற வியப்பும் உம்மிடியாருக்கு ஏற்படவே செய்தது.

மகா பெரியவா தம்முடைய அத்யந்த பக்தரான உம்மிடியாரை சந்தேகிப்பாரா என்ன? அவர் அப்படிச் செய்ததற்குக் காரணமே வேறு.மரகதக் கல்லை பாலில் போடச் செய்த மகா பெரியவா, கண்ணதாசனை அழைத்து மரகதக்கல் போடப்பட்டிருந்த பாலை பார்க்குமாறு கூறினார்

கண்ணதாசன் அந்தப் பாத்திரத்தைப் பார்த்தார். பாத்திரத்தில் இருந்த பால் பச்சை நிறத்துக்கு மாறி இருந்தது மரகதக் கல்லின் நிறம் பாலில் பிரதிபலித்தது. இதழ்களில் குறுநகை தவழ கண்ணதாசனைப் பார்த்த மகா பெரியவா,

"மரகதப் பச்சை பாலோட நிறத்தை எப்படிப் பச்சையா மாத்திடுச்சு பார்த்தியோ? அப்படித்தான் மேகவர்ணம் கொண்ட மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டதும், அவருடைய நிறமே பாற்கடலில் பிரதிபலிக்குது. அதனால்தான் பாற்கடல் மேகவர்ணத்துல தெரியறது" என்றார்.

மகா பெரியவாளின் செயல்முறை விளக்கம் கண்ணதாசனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.அவருடைய மனதில் தெளிவும் ஏற்பட்டது.அந்த சம்பவத்தை வைத்து கண்ணதாசன் எழுதிய பாடல்தான், 'திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே..' என்ற பாடல்.

பின்னர்,உம்மிடியாரிடம் திரும்பிய மகா பெரியவா, அவர் தமக்குச் சமர்ப்பித்த மரகதக் கல்லை வரதராஜ பெருமாள் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்குமாறு பணித்து அவருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.
ravi said…
https://chat.whatsapp.com/JGsa4x9TMosCpfQapJIJm9

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சித்ரா பௌர்ணமி பற்றிய சிறப்பு பதிவுகள் :*

இந்த ஆண்டு சித்ரா பூர்ணிமா மே - 04 இரவு 11:44 மணிக்கு தொடங்கி மே - 05 இரவு 11:03 மணிக்கு முடிவடைகிறது.

அதாவது சித்திரை 21 இரவு 11:44 மணிக்கு தொடங்கி சித்திரை - 22 இரவு 11:03 மணிக்கு முடிவடைகிறது.

மேஷ ராசியில் சூரியன் இருக்கும் போது, புத்தாண்டின் தொடக்கத்தை அறிவிக்கிறது. புத்தாண்டின் முதல் முழு நிலவு சித்ரா நட்சத்திரத்தில் பிரகாசிக்கும் போது, ​​அது சித்ரா பௌர்ணமி அல்லது சித்ரா பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது.

*சித்ரா பூர்ணிமாவின் முக்கியத்துவம் :*

துலாம் ராசியில் உள்ள சித்திரை முழு நிலவு “கர்மாவை சமநிலைப்படுத்தும்” சந்திரன். இந்த ஆற்றலுடன், சித்ரா நட்சத்திரம் "மிகுதி" மற்றும் "மீளுருவாக்கம்" ஆற்றல்களை சேர்க்கிறது.

எனவே, இந்த நாளில் பூமியில் பிரகாசிக்கும் சந்திரன் நேர்மறை மற்றும் ஆக்கபூர்வமான ஆற்றல்களால் நிரம்பி வழிகிறது.

செல்வம், ஆரோக்கியம் மற்றும் உறவுகளை அனுபவிப்பதில் இருந்து உங்களைத் தடுக்கும் எதிர்மறை கர்மாவை அகற்றுவதில் பயனுள்ள ஆற்றல்கள். இந்த நாளில் நீங்கள் தியானம் மூலம் ஆன்மீக விழிப்புணர்வை அனுபவிக்க முடியும்.

குறிப்பாக, உங்கள் நுட்பமான மனித உடலில் கிரீடம், சக்ரா மற்றும் இதய சக்கரத்திற்கு இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துவதை உள்ளடக்கிய மத்தியஸ்த பயிற்சி.

*சித்ரா பூர்ணிமாவின் சடங்குகள் :*

சித்ரா பூர்ணிமாவில் , தெய்வீகத்திற்கான உங்கள் பிரார்த்தனைகள் உங்களை உயர்ந்த தெய்வீக ஆற்றலுடன் இணைக்கும்.

இந்த நாளில் தியானம் மற்றும் புனித சடங்குகளில் பங்கேற்பது உங்களை கடவுளிடம் நெருங்கி, ஆசீர்வாதங்களைப் பெறவும், மன்னிக்கவும் உங்களை அழைத்துச் செல்லும்.

எனவே, உங்கள் கடந்த கால கர்மாவைக் கலைக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்தால், நீங்கள் புத்துணர்ச்சி பெறுவீர்கள் மற்றும் வாழ்க்கையில் புதிய ஆற்றல்களைப் பெறுவீர்கள்.

எதிர்மறை ஆற்றல்கள் அகற்றப்பட்டு, உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவதில் இருந்து உங்களைத் தடுக்கும் உங்கள் வழியில் உள்ள தடைகள் நீங்கும்.

இந்நாளில் சித்ரகுப்தன், தெய்வீக கணக்காளர்/புத்தகக் காப்பாளர் மற்றும் சிவபெருமானை தூபம், கற்பூரம், மலர்களால் வழிபடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது .

ஏழைகள் மற்றும் ஏழைகளுக்கு உணவளிப்பது அவர்களின் தெய்வீக ஆசீர்வாதங்களை உங்களுக்கு வழங்கலாம்.

*சித்ரா பௌர்ணமியின் புராண முக்கியத்துவம் :*

சித்ரா பூர்ணிமா என்பது தெய்வீக கணக்காளரான சித்ரகுப்தரின் பிறந்த நாளாக கருதப்படுகிறது.

பிரம்மா அவரை சூரிய கடவுள் மூலம் படைத்தார். அவர் மரணத்தின் கடவுளான யமாவின் இளைய சகோதரராகவும், அவரது உதவியாளராகவும் கருதப்படுகிறார்.

மனிதர்களின் நல்ல மற்றும் கெட்ட செயல்களை பதிவு செய்ய சித்ரகுப்தர் பூமியில் விழிப்புடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஒரு நபர் இறந்தால், சித்ரகுப்தர் உடனடியாக அந்த நபரின் கெட்ட மற்றும் நல்ல கர்மாக்களின் பட்டியலை முழுமையாக சரிபார்க்கிறார் என்றும் நம்பப்படுகிறது.

பின்னர் அவர் அந்த நபரின் ஆன்மாவின் விதியின் இறுதி முடிவை எடுப்பதற்காக யமனுக்கு செய்தியை அனுப்புகிறார்.

இந்த நாளில், தாராளவாதியாக மாறுகிறார். மேலும் அவர்களின் கர்மாவிலிருந்து விடுபட பரிகாரங்களை செய்பவர்களின் பாவங்களை அழிக்க உதவுவார்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
[06/05, 07:23] +91 96209 96097: *ஸம்ஹ்ருதாஶேஷபாஷண்டா³* ஸதா³சாரப்ரவர்திகா🙏🙏
தன்னை உபாசனா செய்கையில் ஏற்படும் இடையூறுகளை தகர்த்து மனத்தை ஒழுங்கு படுத்தி அருள்பவள்
[06/05, 07:23] +91 96209 96097: *தக்ஷய நமஹ* 🙏🙏
விரைந்து செயல் படுபவர்
ravi said…
🌹🌺 “Sri Chaitanya Mahaprabhu who took his life while embracing the small idol of Puri Jagannath is a simple story explaining 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 "One of the foremost poets of Bhakti literature and a lifelong preacher of love and devotion, Caitanya Mahaprabhu was born in the village of Nadia in East Bengal (1486).

Father is a learned scholar. Vishambar is his birth name. They nicknamed him Nimayi. When this child cries, if someone claps hands and chants holy names, the crying will stop immediately.

🌺Amazed by this, the women in the neighborhood would deliberately make the child cry and then chant the Lord's names and take joy in stopping its crying.

🌺Rama used to sing devotional songs to Lord Krishna in his infancy. Father passed away at a young age. He started and ran a Sanskrit school. He took care of his mother and took care of the family till the age of 24.

🌺 In 1509 he met a saint named Ishwarpuri at Gaya in Bihar. The Sri Krishna mantra he preached changed his life.

🌺 He did asceticism. Sri Krishna Caitanya was called Mahaprabhu. From that day Sri Krishna forgot himself in devotion.

🌺 That day, thinking of Lord Krishna, thinking of herself as Radha, she sang devotional songs in love with him. He composed many hymns on Radha-Krishna.

🌺 Although he took up asceticism, he complied with his mother's wishes and worked for a long time with Sri Jagannath Puri as his headquarters.

🌺 He gave the 16-word kirtan 'Hare-Krishna, Hare-Krishna, Krishna-Krishna, Hare-Hare, Hare-Rama Hare-Rama Rama-Rama Hare Hare', which is now being praised as a Mahamantra.

🌺 Sri Krishna Chaitanya Mahaprabhu passed away in 1534 embracing a small idol of Jagannath. He was 48 years old then

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
People tell you the world looks a certain way, and how to think, and what to think. And then at a certain point, if you’re lucky, you realize you can make up your own mind. Nobody sets the rules but you. You can design your own life.

*🌹Good Morning🌹 🪷Om Namah Shivaya🪷*
ravi said…
*மாலை நேர சிந்தனை🤔*


குத்திக் காட்டும் மனிதர்களுக்கும்

சுட்டி காட்டும் மனிதர்களுக்கும்

இடையில் சிரித்துக் கொண்டு

வாழ்ந்து காட்டுவது தான்

சவாலான வாழ்க்கை

*நிதம் நிதம் பூக்கும் மலர்களை போல் சந்தோஷகளும் பூக்கட்டும்*


🌷🌷

https://srimahavishnuinfo.org
ravi said…
🌹🌺“பூரி ஜகன்னாதரின் சிறிய மூர்த்தியை அரவணைத்தவாறே உயிர் நீத்த ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ... பற்றி விளக்கும் எளிய கதை 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺"பக்தி இலக்கியத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவரும் தனது வாழ்நாள் முழுவதும் அன்பையும், பக்தியையும் போதித்தவருமான சைதன்ய மகாபிரபு கிழக்கு வங்காளத்தில் நாதியா என்ற கிராமத்தில் பிறந்தார் (1486).

🌺தந்தை நன்கு கற்றறிந்த வித்வான். விஷம்பர் என்பது இவரது இயற்பெயர். நிமாயி என்று செல்லப் பெயரிட்டு அழைத்தனர். இந்தக் குழந்தை அழும்போது யாராவது கைகளைத் தட்டிக்கொண்டே புனித நாமங்களை பாடினால் உடனே அழுகையை நிறுத்திவிடுமாம்.

🌺இதைக் கண்டு அதிசயித்துப் போன அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் குழந்தையை வேண்டுமென்றே அழவைத்து பிறகு இறைவனின் நாமங்களைப் பாடி அதன் அழுகையை நிறுத்துவதில் ஆனந்தம் கொள்வார்களாம்.

🌺பாலப் பருவத்திலேயே ராமர், கிருஷ்ணர் மீது பக்தி பாடல்களை மனமுருகிப் பாடுவார். இளம் வயதிலேயே அப்பா காலமாகிவிட்டார். சமஸ்கிருத பாடசாலை ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார். அம்மாவைக் கவனித்துக்கொண்டு, 24 வயதுவரை குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்.

🌺 1509-ல் பீகாரில் கயா என்ற இடத்தில் ஈஷ்வர்புரி என்ற துறவியை சந்தித்தார். அவர் போதித்த ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் இவரது வாழ்க்கையை மாற்றியது.

🌺துறவறம் மேற்கொண்டார். ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகாபிரபு என அழைக்கப்பட்டார். அன்று முதல் ஸ்ரீகிருஷ்ணர் பக்தியில் தன்னையே மறந்தார்.

🌺அன்றாடம் கிருஷ்ண பகவானை நினைத்து தன்னை ராதாவாக எண்ணிக்கொண்டு அவர் மீது மோகம் கொண்டு பக்திப் பாடல்களைப் பாடினார். ராதா-கிருஷ்ணன் மீது ஏராளமான பாடல்களை இயற்றினார்.

🌺துறவறம் மேற்கொண்டாலும் தன் தாயாரின் விருப்பத்துக்கு இணங்கி வெகுகாலம் ஸ்ரீ ஜகந்நாத் பூரியையே தலைமையிடமாக கொண்டு செயல்பட்டார்.

🌺தற்போது உலகம் முழுவதும் மகாமந்திரமாகப் போற்றப்பட்டு வரும் ‘ஹரே-கிருஷ்ண, ஹரே-கிருஷ்ண, கிருஷ்ண- கிருஷ்ண, ஹரே- ஹரே, ஹரே-ராம ஹரே-ராம ராம-ராம ஹரே ஹரே’ என்ற 16 வார்த்தைகள் கொண்ட கீர்த்தனை இவர் வழங்கியதுதான்.

🌺ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகாபிரபு, 1534-ல் ஜகன்னாதரின் சிறிய மூர்த்தியை அரவணைத்தவாறே உயிர் நீத்தார். அப்போது அவருக்கு வயது 48தான்

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
05.05.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 53)

Sanskrit Version:

श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला।
समाधावचला बुद्धिस्तदा योगमवाप्स्यसि।।2.53।।


English Version:

shrutivipratipanna te
yadaa sThaasyasi nishchalaa |
samaaDhaavachalaa buddhih:
tada yogamavaapsyasi ||

Shloka Meaning

When your intellect which is perplexed by hearing the various shastras becomes
steady and immovable in concentration, then you shall attain union with the supreme being.

The seeker, in the initial stages is distracted by the rituals as prescribed in the Vedas for the purpose of acquiring material pleasures and prosperity.

These distractions prevent from achieving self realisation.

By discrimination and performing nishkama karma, these distractions slowly go away.

The mind is then calm and collected because it has overcome the tendency to run after material
things. It is gradually fixed in the self state and the man experiences the bliss of self
realization. This is yoga. Yoga means the union of the individual self with that of the supreme being.

The ego, which keeps up the delusion of being a separate entity is merged into the self and then
there remains only one Atma. The ego dissolves itself in the ocean of sat-chit-anand.

Jai Shri Krishna 🌺
ravi said…
*ராமரும் இந்திரனும்*

ராமா வாலி என் அம்சம் எனத்தெரிந்தும் காலி செய்ய ஏன் உளம் கொண்டாய் ?

வானரங்கள் அறியுமோ ஏக பத்தினி விரதம் தனை ... ??

நீ கொண்ட விரதம் அனைவரும் பெற வேண்டும் என்று நினைப்பது ராஜ நீதியோ *ராமா* ?

உன் தந்தை மணந்தார் பலரை ...

சம நிலை யாரே அடைந்தார் .. ??

ஒரு தாரம் உயர்வடைய மறுதாரங்கள் தனை மறந்து போனார் ...

இதுவும் பெண் கொடுமை தான் அன்றோ *ராமா* ?

பெற்றவன் நான் பேதலித்து கேட்கிறேன் ...

ஏன் கொன்றாய் என் மகனை ?

ராமன் சிரித்தான் ...

அமரர்தங்கோன் நீ அறியா மானிடன் ஆனாய் நீ ...

பிள்ளை பாசம் கண்ணை மறைக்க விழும் கண்ணீர் கொண்டு அம்பெய்துகிறாய் என் மீதே ...

என் தந்தை பல தாரம் கொண்டவன் தான்

ஆனால் பிறர் தாரம் கவர்ந்தவன் அல்ல ...

ஓர் தாரம் வரம் பெற்றாள் ...

மற்றவர் தரம் பெற்றனர் ... தன்னிகரில்லா புகழ் பெற்றனர்

பிறர் மனைவி நோக்கா பண்பு உனக்குண்டோ தேவேந்திரா ... ??

உன் ரத்தம் தனை வாலியின் நெஞ்சம் கிழித்து வெளி எடுத்தேன் ...

வினைப்பயன் முடிய வைகுண்டம் சேர்ந்தான் ...

இன்னும் உன் கோபம் தீர வில்லை எனில் இரு வரம் தருகிறேன் உனக்கே

உன் மகனை காப்பேன் எது வரினும் கண்ணனாய் சாரதியாய் கீதை எனும் போதை தருவேன் ...

சூரிய புத்திரன் சுக்ரீவன் தனை இந்த அவதாரம் காத்து நின்றது ...

அடுத்த என் அவதாரம் உன் மகனை வைத்து அவனை அழிப்பேன் .

இப்பிறவி கண்டது சுக்ரீவன் தர்மத்தின் பக்கம்

அடுத்த பிறவி அதர்மத்தில் விழுந்தால் அவனை வீழ்த்துவேன்.

இரண்டாவது வரம் பெற்றுக்கொள் இந்திரா ...

உன் மகன் வாலியை மறைந்திருந்து கொன்றேன் ...

என்னை அவனும் வேடனாய் மறைந்திருந்து கொல்ல கண்ணன் அவதாரம் வாய்ப்பளிக்கும்

போதுமா இந்திரா ?

ஐயனே சிறுபிள்ளைத் தனமாய் கீரிப்பிள்ளை போல் கிளிப்பிள்ளை போல் பேசி விட்டேன் ...

நீ எது செய்யினும் அது தர்மமே நியாயமே

இனி ஒரு வரம் வேண்டேன் ...

வாலி புண்ணியம் பல செய்துள்ளான் உன் கீதை கேட்க ...

சீதையை நீ மீண்டும் பெற வாழ்த்துகிறேன் *ராமா* ..🪷🪷🪷
ravi said…
*17*

*தோள்கள்*

ஏழேழு பூமியும் ஏற்றிச் சுமக்கின்ற ஈடற்ற பச்சை வேய்கள்

ஏழ்கடல் நாதனும் அடியவர் கோடியும் இன்மாலை சூட்டும் தோள்கள்

வாழ்வாங்கு வாழ்கின்ற மங்கையர் துன்பத்தை வாங்கியே வைக்கும் நிலைகள்

வஞ்சத் தரக்கரின் நெஞ்சத்திலே வீழ்ந்து
மடிக்கின்ற தூய மலைகள்

வீழ்வார்க்குப் புண்ணியம் விடுவோர்க்குப் பாவமாய்
விளை கின்ற தள மாகுமே !!💐

வேதநெறி ஓதுசிவ நாதனது தேவி இவள் மேனியே நகையாகுமே !👌
ravi said…
*ஶ்ரீ ராம ரக்ஷா* *ஸ்தோத்ரம்*

கரௌ ஸீதாபதி: பாது ஹ்ருத³யம் ஜாமத³க்³ன்யஜித் ।

மத்⁴யம் பாது க²ரத்⁴வம்ஸீ நாபி⁴ம் ஜாம்ப³வதா³ஶ்ரய: ॥ 7 ॥

ஸுக்³ரீவேஶ: கடிம் பாது ஸக்தி²னீ ஹனுமத்-ப்ரபு⁴: ।

ஊரூ ரகூ⁴த்தம: பாது ரக்ஷ:குல வினாஶக்ருத் ॥ 8 ॥ 💐💐💐
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 38*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐

*வாலி வதம்*

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
சுக்ரீவன் அடி வாங்கினதற்கு கூட காரணம் இருக்கிறதா பிரபு?

அடியேனுக்கு விளக்கவும் என்றார் ஜாம்பவான்.

ராமர் சொன்னார்,

"ஜாம்பவான், சுக்ரீவன் பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிட்டான்.

என்னதான் வாலி கெட்டவனாக இருந்தாலும் அவன் மூத்தவன்.

ஒரு காலத்தில் தன் தம்பியை மார்பிலும் தோளிலும் போட்டு வளர்த்தவன்.

ஓரு வகையில் பார்த்தால் வாலி அவனுக்கு ஒரு தந்தை ஸ்தானம். 

அதனால் சுக்ரீவன் கண்டிப்பாகத் தண்டிக்கப்
படவேண்டும். ".

இனி அவனை நான் கை விடமாட்டேன்.

இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்.

குழப்பமாக இருக்கிறது.

என் பாணம் தவறாக சுக்ரீவணை தாக்கி விட்டால் ...

அதனால் இதோ இந்த துளசி மாலையை சுக்ரீவனுக்கு போடுங்கள்.

என்னால் இனி சுக்ரீவனை சுலபமாக அடையாளம் கண்டு பிடிக்க முடியும் .🪷🙏
ravi said…
அவர்கள் சண்டை போடும் இடத்தை ஒரு முறை பார்வை இட்டார் ராமர்.

600 மீட்டர் தூரத்தில் ஒர் அழகான ஆலமரம்.

மறைந்துகொள்ள சரியான இடத்தையும் நோட்டமிட்டார்.

அங்கிருந்து 1:40 inclination தேவை

அம்பு நேராக வாலியின் மார்பில் பாய.

60 டிகிரி angle தேவை.

மாறிமாறி சண்டை போடும் போது, வாலி மேல் கொஞ்சம் களைப்பாக இருக்கும் அந்த ஒரு வினாடியில் அம்பு அவன் மார்பில் ஏற வேண்டும்.

தான் ஒளிந்திருக்கும் இடத்தில் 5mt radius இல் ஒரு வட்டம் போட்டார் ராமர்.

தான் நிற்கும் தூரம், அம்பின் வேகம், அவர்கள் சண்டை போடும் விதம் எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தார்.

அந்த கணக்கில் அவர் செய்யும் மாறுதல்களைக்
கண்டு லக்ஷ்மணன், ஜாம்பவான், ஆஞ்சநேயர் அனைவரும் அசந்து விட்டனர்.

கையில் இருக்கும் measuring wheel யை வைத்து அவர் போட்ட வட்டத்தில் அழகாக ஒரு grinding செய்தார்

-- Cantilever போன்று நின்று கொண்டிருந்த ஆலமரம் அவருக்கு ஒரு பறவையின் spine and wing போன்று தெரிந்ததாம்.

ஜாம்பவானை கூப்பிட்டார் -- ராமனின் அம்பு குறைந்த பட்சம் 200kmph வேகத்தில் 
செல்லலாம் என்று ஒரு அத்தாட்சி (speed certificate) தந்தார் .

Collectively all Monkeys ராமரின் பாதங்களில் Surrender ஆயின (CMRS)

இதுவரை ராமர் எதிரிகளை கொல்ல இவ்வளவு தன்னை வருத்திக்
கொண்டதே இல்லை.

சுக்ரீவனுக்கு அவர் கொடுத்த வாக்கு ராமரையே ஒருதடவை ஒத்திகைப் பார்க்க தூண்டியது.

ராமர் சொன்ன படி சுக்ரீவன் துளசி மாலையை அணிந்தான்.

வாலி அணிந்து இருந்ததோ ருத்திராட்ச மாலை.

துளசி ருத்திராட்சத்தை வெல்ல முடியுமா?

ராமருக்கு இந்த சந்தேகம் வந்தது.

பரமேஸ்வரனை மனதார வேண்டிக்கொண்டார்,

கொஞ்சம் துளசிக்கு விட்டு கொடுக்கும் படி.

அந்த 
காமேஸ்வரனும் தலை அசைத்தான்.   💐💐💐 
ravi said…
பொழுது துலர்ந்தது. வாலி நன்றாக குளித்தான்.

தாரா அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள்.

பல இடங்களில் காயம்.

நெற்றி புடைத்திருந்தது.

வாயில் இன்னும் ரத்தம் கசிவது நிற்கவில்லை.

கண்களில் ஆக்ரோஷம் பொங்கி வழிந்தது.

மங்கல ஆரத்தியை 
அவனுக்கு காண்பித்தாள்.

நெற்றியில் வீரத் திலகம் இட்டாள்.

வாலி தாராவை அணைத்துக்
கொண்டான்.

பல வருடங்கள் அவர்களுக்குள்ளே இருந்த தாம்பத்தியம் அந்த ஒரு அணைப்பில் விடை பெற்றது. ...

ஓடி வந்த அங்கதனை தூக்கி கன்னமெங்கும் முத்தமிட்டான்.

அதிலே பல தவறிப்போய் தாராவின் கன்னங்களில் விழுந்து

அவள் கன்னங்களையும் 
அவளுடைய கண்கள் போல் சிவக்க வைத்தன. 

தாராவின் கண்களில் கெஞ்சல் தொடர்ந்தது.

வாலி அதைக்கண்டு கொள்ளவேயில்லை.

அவள் இன்னும் இதைப்பற்றி பேசக்கூடாது என்பதற்காக

அவள் உதடுகளுடன் தன் உதடுகளை பதித்து

அவள் கோரிக்கைகளை கொஞ்சம் உறங்க வைத்தான் கொஞ்சும் வேளை தனில் 🙏
Babu said…
Superb sir
As usual I bow to your imagination/ creativity and connect to the real life at real time
You would have earned much in reel life
Hahaha
ravi said…
ப்ரதா = அளித்தல் ❖

*192 சுகப்ரதா =*

ஆனந்தம் வழங்குபவள்

*குறிப்பு* :

நிர்குணப் பெயர்கள், அம்பாளின் உன்னத ‘பரப்ரம்ம’ இருப்பை உணரந்து சொல்லக்கூடியவை.

அவளே பரப்ப்ரம்ம ரூபிணி,

காரண காரியமாக விளங்குபவள் என்ற நிலையில் உணரப்படுபவை.👍
ravi said…
*ஏக நாயகி பதங்கள் போற்றி*👣

அம்மா பெண் ஆசை மண் ஆசை பொன் ஆசை மனதில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ?

ஆத்ம நாயகி நீ உள்ளிருக்க

வெளி நிற்கும் மனம் என் செய்யும் *தாயே* .. ?

நீ வசிக்கும் இடம் நன்னிலம் அன்றோ ?

ஏக நாயகி உன் பாதங்கள் துணை இருக்க

வெளி காற்று விஷக் கற்றாயினும் எனை என் செய்யும் *தாயே* ?

உடைப்பாய் அன்றோ இந்த வஞ்சப் பிறவிதனை...

உள்ளம் உருகும் அன்பு என்னில் படைப்பாய் அன்றோ ?

உன் பாதத்தாமரைக்கு பணி செய்யும் பணி எனக்கே படைப்பாய் அன்றோ ?

என் நெஞ்சத்து அழுக்குகளை உன் அருட்புனலால் துடைப்பாய் அன்றோ?

*அம்மா*

உன் அருள் ஏதென்று சொல்ல எழுத்தும் சொல்லும் புவியில் உண்டோ *அம்மா*?💐💐💐💐💐💐💐💐
கௌசல்யா said…
Ohhh...Metro - வாலி வதம் அருமை
ravi said…
Shriram

6th May

*Restraining Selfishness Strengthens Mutual Love*


Doing certain things is indispensable for augmenting mutual love. One has to connive at minor matters and to be accommodating to one another’s idiosyncracies; this will eliminate the possibility of mutual dislike or animosity. Next, there should be overruling regard for someone venerable to all, whereby one overlooks minor irritation by others. Thirdly, suggestions should not be direct and personal, nor offensive in content or manner, and should be couched in sweet and winning language. Fourthly, and this is of paramount importance and partly includes all the foregoing, selfishness should be absolutely subordinated, eliminated. In other words, one should feel that one lives more for others than for one’s own self. To conduct oneself on these lines makes a substantial contribution to increasing mutual love. One who lives thus, with an unselfish heart, may never feel want in his life, because God is bound to make up genuine needs and deficiencies where selflessness motivates a person.

Talking of selfishness, most people will refuse to concede that they are selfish at all; they will plead, also, the exigencies of practical life. But this does not prove the point. Selfishness, like self-pride, is subtle and compelling. Its ramifications are deep and imperceptible.

Selfishness may pertain to three different fields – the body, speech, and the mind. To behave with care to see that the body does not have to exert or suffer for others, is one kind. To expect others to agree to what I say, or not to take offence whatever I say, is another kind. To expect everyone never to dispute what I say, and to accept my view as the correct one, is the third kind of selfishness.

Now, if we base our thought on the concept that I am even more for others than for myself, we shall have to concede that we should accept the policy ‘do as you would be done by’, and should allow more latitude to others than to ourselves. This, indeed, is the essence of good behaviour, the essence of true duty. We cannot have or expect love from the world unless we give ours to it whole-heartedly. Only he can be said to live for God who lives for others. One who bestows his love on others freely, selflessly, earns true bliss, lasting and unalloyed.

* * * * *
ravi said…
[06/05, 20:11] Jayaraman Ravikumar: *பாடல் 42 ... குறியைக் குறியாது*

(எவ்வேளையும் செவ்வேளையே நினை)

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே
[06/05, 20:11] Jayaraman Ravikumar: மானிடப் பிறவியின் லட்சியம் (குறி), இறைவனைச் சேர்தல்.
உயிர்களின் குறிக்கோள் மெய் உணர்தல். உண்மை அறிவு
உதித்தவுடன் உலகம் கெடும்.

.. நிர்க்குணம் பூண்டு என்னை மறந்திருந்தேன் இறந்தே
விட்டது இவ்வுடம்பே ..

... கந்தர் அலங்காரம் (19).

இம்மையிலேயே இறைவனோடு கலந்த ஜீவன் முத்தர்களான
ஞானிகளுக்கு உடல், உலகம், சுற்றம், செல்வம் போன்ற
விஷயாகார விருத்திகள் யாவும் அற்றுப் போகும். பிரம்மாகார
விருத்தி தழைக்கும். அப்போது அதுவே தானாய் ஆகி அமருவர்.
இந்நிலையே 'தத்வமசி' என்கின்ற மகா வாக்கியத்திற்கு ஓர்
எடுத்துக்காட்டு.
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 147 started on 6th nov
ravi said…
[06/05, 20:04] Jayaraman Ravikumar: *114. வ்ருஷாக்ருதயே நமஹ (Vrushaakruthaye namaha)*
[06/05, 20:07] Jayaraman Ravikumar: கோபத்துடன்,
“இந்திரா! என்னால் திரும்பிப் பார்க்க முடியாது என்று நினைத்துத் தானே பின்னால் இருந்தபடி என்னை ஏளனம் செய்தாய்?

இந்தத் தவறுக்குத் தண்டனையாக நீ மயிலாகப் பிறக்க வேண்டும்!” என்றார்.

(பறவைகளுள் மயிலால் முகத்தைத் திருப்பிப் பின்னால் பார்க்க இயலாது என்பதால் அவ்வாறு சபித்தார்.)

தன்னை மன்னித்து விடும் படி இந்திரன் அகஸ்தியரிடம் மன்றாடினான்.

மனம் இரங்கிய அகஸ்தியர்,
“இந்திரா! கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற இயலாது.

எனினும் நீ இவ்வளவு தூரம் மன்றாடுவதால் சாபத்தைக் கொஞ்சம் மாற்றுகிறேன்🦚🦚🦚
ravi said…
[06/05, 19:46] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 79*💐💐💐💐🙏🙏🙏
[06/05, 19:46] Jayaraman Ravikumar: நித்யம் யோகி3மனஸ்-ஸரோஜத3ல-ஸஞ்சார-க்ஷமஸ்-த்வத்கரம்:

       சம்போ3தேன கத2ம் கடோ2ர யமராட்3வக்ஷ: - கவாடக்ஷதி: |

அத்யந்தம் ம்ருது3லம் த்வத3ங்க்4ரியுக3லம் ஹர மே மனச்-சிந்தயத்-
       யேதல்லோசன-கோ3சரம் குரு விபோ4 ஹஸ்தேன ஸம்வாஹயே ||   79
[06/05, 20:03] Jayaraman Ravikumar: பரமேஸ்வரன் பாதங்கள் யோகிகளின் மனத் தாமரையில் மிருதுவாக அமர்ந்துள்ளது ஆனால் அந்த மிருதுவான பாதங்கள் எப்படி யமனை உதைத்துக்
கொன்றது? உனக்கு நிறைய வலிக்குமே .. அந்த பாதங்களை எனக்கு காட்டினால் வலி தீர்க்க நான் ஒத்தடம் தந்து பிடித்து விடுவேனே ...

👍👍👍
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
லோகத்திலே ஒரு விஷயம் பாக்கியில்லாமல் எல்லாவற்றையும் பற்றி இப்படி அநேக கவிதைகள் சமத்காரமாக இருக்கின்றன. பரமாத்மாவிலிருந்து ஆரம்பித்து ஒரு சின்னக் கொசுவரையில் எதைப்பற்றியும் அர்த்த சித்ரமாகவும் சப்த சித்ரமாகவும் கவிகள் விநோத விநோதமாகப் பண்ணியிருக்கிறார்கள்.

பரமாத்மா, கொசு இரண்டையும் குறிப்பிடுவதாகச் சிலேடை செய்துகூடக் கவி இருக்கிறது. ஒரு அர்த்தப்படி ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவைக் குறிக்கும்; இன்னொரு அர்த்தப்படி கொசுவைக் குறிப்பிடும்:

சக்ர-ப்ரமண-கரத்வாத்

குத்ருஷ்டிபிர்-தூரவர்ஜ்யமாநத்வாத் |

ச்ருத்யந்த-கேலநத்வாத்

மசக த்வாமேவ மாதவம் மந்யே ||

‘சக்ர ப்ரமண கரத்வாத்‘ – சுற்றிக்கொண்டேயுள்ள சக்ரத்தைக் கொண்ட கரத்தை உடையவர் மஹாவிஷ்ணு. சக்கரவட்டமாகச் சுற்றும் காரியத்தை ஓயாமல் செய்வது கொசு. ‘கர’ என்பது விஷ்ணுவைக் குறிக்கும் போது ‘கை’ என்று பொருள்படும். கொசுவைக் குறிப்பிடும் ‘செய்வது’ என்று பொருள்படும்.

ravi said…
குத்ருஷ்டிபி: தூர வர்ஜ்யமாநத்வாத்’ – கெட்ட நோக்குடையவர்களால் நெருங்க முடியாமல் தூரத்தில் விலகியிருப்பவர் பகவான். ‘குத்ருஷ்டிபி: ‘என்றால் ‘கண் வலிக்காரர்களால்’ என்றும் இன்னொரு அர்த்தம். கொசு என்றாலே கண்நோவுள்ளவர்கள் தூர ஓடி விடுவார்கள்.

‘ச்ருத்யந்த கேலநத்வாத்’ – ‘ச்ருதி’ என்றால் வேதம். ‘ச்ருத்யந்தம்’ என்றால் வேதாந்தமாகிற உபநிஷத். உபநிஷத்திலே பகவான் ஆனந்தமாக விளையாடுகிறார். கொசுவைக் குறிப்பதாகக் கொள்ளும்போது, ‘ச்ருதி’ என்றால் காது. காதுநுனி ‘ச்ருத்யந்தம்’. கொசு நம்முடைய காதோரத்தில் வந்து ‘ஒய்ங்’ என்று சப்தம் பண்ணிக் கொண்டு விளையாடி ஹிம்ஸை பண்ணுகிறது!

‘மசக! த்வாம் ஏவ மாதவம் மந்யே’ – ‘ஏ கொசுவே! உன்னையே நான் மாதவனாக நினைக்கிறேன்’ என்று முடிக்கிறார்.

‘சக்ர ப்ரமணம் பண்ணுவது, குத்ருஷ்டிக்காரர்களை தூரப்போகப் பண்ணுவது, ச்ருத்யந்தத்தில் விளையாடுவது என்ற காரியங்களை நீ செய்கிறபடியால், ஏ கொசுவே! உன்னையே மஹாவிஷ்ணுவாக நினைக்கிறேன் – ‘மசக! த்வாமேவ மாதவம் மந்யே!’

இப்போது இங்கேயும் கொசு பாட ஆரம்பித்து விட்டது. எல்லாருக்கும் தூக்கமும் வந்துவிட்டது. இது வரையில் வேடிக்கை கேட்டதில் இரண்டும் தெரியவில்லை. இப்போது தூங்க வேண்டும் என்று படுத்துக் கொண்டால் கொசு ஹிம்ஸைதான் தெரிய ஆரம்பிக்கும். அனந்த சயனமாகப் படுத்துக்கொண்டு தூங்குகிற பகவான்தான் அந்த கொசு ரூபத்தில் வந்து காதிலே ரீங்காரம் பண்ணுகிறார் என்று நினைத்துக்கொண்டால் கொஞ்சம் ஹிம்ஸையை மறக்கலாம். கொசுத் தொல்லையில் தூக்கம் வராவிட்டால் இந்த கவித்வ விசித்ரங்களை நினைத்துக் கொண்டு கொஞ்சம் நிம்மதி பண்ணிக் கொள்ளலாம்.
ravi said…
[07/05, 07:22] +91 96209 96097: *விச்ராமாய நமஹ*🙏🙏
இளைப்பாறும் இடமாக இருப்பவர்
[07/05, 07:22] +91 96209 96097: ஸம்ஹ்ருதாஶேஷபாஷண்டா³ *ஸதா³சாரப்ரவர்திகா*🙏🙏
தன்னை குறித்து உபாசனை செய்பவருக்கு எல்லா ஒழுக்க நெறிகளையும் அருள்பவள்
ravi said…
*ஆதவனும் ஆபத்பாண்டவனும்*🌞🌞😇😇

*ராமா* என்ன புண்ணியம் செய்தேன்
என் மகன் உன் சேவை செய்ய ...

கொடுத்து வைத்தவன் *சுக்ரீவன்* ..

பெற்று எடுத்தவன் இந்த கதிரவன் ...

தொட்டு அணைத்துக் கொண்டவன் நீ ...

பாட்டும் பரதமும் போல்
பிரியா தோழர்கள்

நாதமும் இசையும் போல் என்றும்
நீங்கள் பிரியாமல் இருக்க வேண்டும் ..

*ராமா* கேள்விப்பட்டேன்
நேற்று

அடுத்த அவதாரம் அவன் உயிர் கொல்லும் என்றே ... *ராமா* ...

உன் உயிர்த் தோழனை கொல்ல முடியுமா *ராமா*?

உன் மனம் இசைக்குமா ராமா ?

சொல்லையும் பொருளையும் பிரிக்க முடியுமோ *ராமா*?

*பகலவனே* ...

சுக்ரீவன் கர்ணனாய் பிறப்பான் ..

பிறப்பால் பெரும் வேதனை கொள்வான் ...

எடுப்பார் கை பிள்ளை என அதர்மம் பக்கம் செல்வான் ..

அழிப்பது என் கடமை அன்றோ ?

அவன் உயர்ந்து நிக்க என்றும் புவி மறக்கா செயல் ஒன்று செய்வேன் ...

யாசகம் கேட்பேன் அவன் செய்யும் கொடையின் புண்ணியத்தை ...

நான் கொடுக்க பிறந்தவன் .

கர்ணனிடம் மட்டும் என்றும் கேட்டே நிற்பவன் ...

*ஐயனே* ...

நட்பின் சுடர் நீ ...

உன் லீலை யார் அறிவார் ...?

இறை என்றாலும் பந்தமும் பாசமும் பிரிவதில்லை..

என் செய்வேன் ... ???

*ராமா* என் ஹ்ருதயம் தொட்டாய் இன்று 🪷🌞

*ஆதவனே* போரில் நான் வெற்றி கொள்ள மீண்டும் உன் ஹ்ருதயம் தொடுவேன்

அதுவே *ஆதித்ய ஹ்ருதயம்* ஆகும் ...

சொல்லும் எல்லோரும் வெல்வார் அனைத்தையுமே

கதிரவன் தன் ஆயிரம் கரம் கொண்டு

தன்னால் மலர்ந்த அம்புயங்களை அள்ளி தெளித்தான் ராமன் பாதங்களில் 👣🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
*18*

*கரங்கள்*

வாழைக்கு மென்மையும்

முல்லைக்கு வாசமும்
வளமாகத் தந்த கரங்கள்

வானத்தைப் பூமியைத் தானத்தை தருமத்தை வலுவோடு காக்கும் திறங்கள்

ஏழைக்கும் செல்வர்க்கும் ஒன்றே என் சக்தி என்று எப்போதும் நிற்கும் அணிகள்

ஈசனின் தோள் மீது பாசத்திலே சேர்ந்து எழிலாடும் வண்ண மணிகள்

ஊழுக்கும் ஊழான மாணிக்க வல்லியின்
ஒளிக்கைகள் மலராகுமே !

உடல் முழுதும் பரவி வரும் அழகுமணிப் பிரகாசம் ஒவ்வொன்றும் நகையாகுமே !
ravi said…
*ஶ்ரீ ராம ரக்ஷா* *ஸ்தோத்ரம்*

ஜானுனீ ஸேதுக்ருத்-பாது ஜங்கே⁴ த³ஶமுகா²ன்தக: ।

பாதௌ³ விபீ⁴ஷணஶ்ரீத:³ பாது ராமோகி²லம் வபு: ॥ 9 ॥

ஏதாம் ராமப³லோபேதாம் ரக்ஷாம் ய: ஸுக்ருதீ படே²த் ।

ஸ சிராயு: ஸுகீ² புத்ரீ விஜயீ வினயீ ப⁴வேத் ॥ 1௦ ॥
,
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 39*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐

*வாலி வதம்*

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
இணைந்த உதடுகளை பிரித்தெடுக்க வாலிக்கும், தாராவிற்கும் மனமே வரவில்லை -

சுவைத்த உதடுகள் தான் என்றாலும் அன்று அதிகப்படியாக சுரக்கும் தேனின் சுவையை அவர்கள் அனுபவித்தனர்.

தன் கைகளை வாலியின் கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு "

சுவாமி உங்களை தடுக்கும் சக்தி இனி எனக்கில்லை - போய் வாருங்கள் -

நீங்கள் வென்றாலும், தோற்றாலும் இந்த யுத்தம் உங்களுக்கு என்றும் மங்காத புகழைத் தரட்டும்! 

வாலி தாரையின் கண்களிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து
கொண்டிருந்தான் -

அவன் மெதுவாக பார்வையில் இருந்து மறைந்து
கொண்டிருக்கும் போது

அதிகமாக வாலியைப்பற்றிய 
நினைவலைகள் அவளிடம் தஞ்சம் புக ஆரம்பித்தன ...

இனி நாங்கள் தான் உனக்கு சொந்தம் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டன ----
சுக்ரீவன் ஜாம்பவான் கால்களில் சாஷ்ட்டாங்கமாக விழுந்தான் "

ஐயனே இன்றாவது ராம பாணத்தை நான் பார்க்க வேண்டும் --

இந்த யுத்தத்தில் நான் வெற்றி பெற உங்கள் பரிபூர்ண ஆசி தேவை

"கட்டி அணைத்தார் ஜாம்பவான் --

ராமரின் அன்பை நீ என்றோ பெற்று விட்டாய் -

தயிரமாய் போரிடு - இன்று வாலி வைகுண்டம் செல்லும் நாள் --" 🐒🐒
ravi said…
சுக்ரீவன் அடுத்த படியாக ஆஞ்சநேயரை கட்டிக்கொண்டான் -

மாருதியே இன்றும் ராம பாணம் வெளி வரவில்லை
என்றால் நான் என் உயிரை விடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதாக இல்லை -

ஒரு வேலை நான் போரில் தோற்று, மடிந்துவிட்டால்

நீ தான் ஜாம்பவானையும், என் மற்ற வானரங்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும் -

இந்த பெரிய பொறுப்பை உன்னிடம் தான் ஒப்படைக்க முடியும். 

தொலைவில் நின்றுகொண்டிருந்த லக்ஷ்மணனை வணங்கினான் -

அவனுடைய ஆசியையும் பெற்றுக்கொண்டான்

- முடிவில் அந்த அனந்த ராமனை சந்தித்தான் ---

"சுவாமி இன்று யுத்தத்தின் கடைசி நாள் --

இன்று  எங்களில்  ஒருவர் இல்லாமல் போய் விடுவர் -

உன் பாணத்திற்கு வேலை இல்லாமல் செய்துவிடாதீர்கள் -

உங்களையே நான் நெஞ்சைத்தில் சுமப்பதாக எண்ணிக்கொண்டு இந்த துளசி மாலையை அணிந்துகொண்டு செல்கிறேன் -

ராகவா இன்னும் உங்கள் சோதனையை சந்திக்கும் திறனோ, சக்தியோ எனக்கில்லை --  

இன்றும் உன் பாணம் வெளிப்படவில்லை என்றால் - நான் என் உயிரை மாய்த்துக்கொள்வது உறுதி -

ஜாம்பவானும் , ஆஞ்சநேயரும் , என் வானரப்படைகளும் கண்டிப்பாக சீதாப்பிராட்டியை நான் இல்லாமலேயே கண்டுபிடித்து உங்களிடம் சேர்த்துவிடுவார்கள் - இது சத்தியம் ..." 🐒🐒
ravi said…
ராமர் சிரித்தார்

---சுக்ரீவா சென்று வா - இன்று வெற்றி உனக்கே!" என்றார் ..

சுக்ரீவன் இன்னும் அதிகமாக ராம நாமத்தை சுமந்துகொண்டு வாலியை எதிர்க்க புறப்பட்டான் -----

வாலி, சுக்ரீவன் ஒருவிதமான திருப்தியுடன் வருவதைப்பார்த்து ஆச்சரியப்பட்டான்.

இவ்வளவு அடிகள் வாங்கியும் எப்படி மலர்ந்த  முகத்துடன் ஒருவன் போருக்கு வரமுடியும் ? --

மரணம் ஒருவரை நெருங்கும் போது முகத்தில் இப்படித்தான் ஒரு திருப்தி ஏற்படுமோ -

பல சிந்தனைகள் அவன் மனதில் போராட்டம் நடத்தின --  
சுக்ரீவன் வாலியின் பாதங்களில் தன் கண் பார்வையை செலுத்தி அவனிடம் மானசீகமாக ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டான்

- வாலியை அன்று சுக்ரீவன் பார்க்கும் போது அவனை கொல்லவேண்டும் என்ற ஆசை எங்கோ ஓடி ஒளிந்துகொண்டு விட்டது.🐒🐒
ravi said…
Shriram

7th May

*Get Rid of the ‘Body-Am-I’ Conviction*


The root of the desire of public esteem and respect lies in vanity. It arises when the mind creates an impression of one’s own greatness. It is this vanity that stands between us and God and obscures Him. The remedy is complete surrender to the Sadguru, implicit obedience to him, and wholehearted performance of the sadhana prescribed by him. Further, it is important to perform the sadhana without any feeling of doership, to avoid the cropping up of vanity, which may be dormant but ever watchful for a chance to raise its head and become active. Indeed, even apparently innocent words like ‘I obey the master implicitly,’ ‘I scrupulously perform sadhana,’ ‘there is now not even a trace of vanity in me,’ or suchlike, are a sign of the presence of pride. Honestly speaking, what is it for which we may feel proud? Are there not others in this world who possess more money, or more strength, more intelligence, more authority, more celebrity, than us?

If we look into the genesis of this feeling of self-importance, the basic cause is seen as the identity one feels with the body. Consequently, we have to eradicate this ‘body-am-I’ conviction. Now if we want a tree to die, we must stop nourishing it with manure and furnishing it with water. To desire that others should not blame me or find fault with me, or that they should appreciate me or hold me in esteem and respect me, is like nourishing my basic pride. What we should do, therefore, is to ascribe all doership to Him; and to pass on to Him all the resultant fruit, good or bad, pleasant or unpleasant, without letting the mind be affected either way. The pragmatic world does, it is true, call for a little sense of doership, but it should be assumed only temporarily, for the purpose required. We can achieve this by submitting entirely, unreservedly, to the Sadguru. We should at least force ourselves to do it until, eventually, it becomes ingrained in our nature. The Sadguru will certainly eradicate the pride, or the ‘body-am-I’ feeling in course of time, without your being aware of it. To give up ‘I-ness’ and the pride which is its by-product, is true yajnya or sacrifice.

* * * * *
ravi said…
*தித்திப்பும் தேன் சொரியும் சங்கரசுவனனும்*🐒

ராம பட்டாபிஷேகம் முடிவடைந்தது ...

எல்லோருக்கும் உணவு பரிமாறல் ...

எல்லோரும் ஆஹா இது போல் உணவை கண்டதில்லை ..

இனியும் காண்போமா என்பது சந்தேகமே ...

வானவர்களும் தானவர்களும் இந்த உணவை சாப்பிட்டிருந்தால் பாற்கடலில் அமுதம் தேடியிருக்க மாட்டார்களே என்று பரிமாறிய பதார்த்தங்களை வாயார உண்டு அதே வாயால் புகழ்ந்து தள்ளினர் ...
ravi said…
இனிப்பில் ஆயிரம் வகை ...

கொழுப்பு சேராத எண்ணெயில் பண்ணிய இனிப்புக்கள் ஏராளம் ..

வடாம் அப்பளம் அது ஒரு கோடி ...

பாயசம் அது வசிக்கும் பல கோடி அண்டாக்கள் ..

லக்ஷ்மணன் தன் கை படச் செய்த *அக்கார* *அடிசில்* ..

ஆஹா ஓஹோ பிரமாதம் என சொல்லாதவர்களே இல்லை

முந்திரி, பாதாம் திராட்சை கற்கண்டு வெல்ல பாகு , சர்க்கரை இப்படி சமையல் அறையில் எங்கு கால் வைத்தாலும் தடுக்கி விழத்தான் வேண்டும் இவைகளின் மீது ...

பாலும் தேனும் கை அலம்ப அங்கே அண்டாக்களில் வைக்கப் பட்டது ...

சொர்க்கத்தில் மட்டுமே கிடைக்கும் சோமபானம் தண்ணீருக்கு பதில் அங்கே வைக்கப்பட்டது ...
ravi said…
உணவு உண்டபின் கை துடைக்க காஞ்சி தூய பட்டுக்கள் அங்கங்கே தொங்க விடப்பட்டன ...

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மூன்றும் சாப்பிட்ட எல்லோரையும் கவனித்துக்
கொண்டன...

மொய் எழுதிய, எழுதாத அனைவருக்கும் பொற்கிழிகள் தரப்பட்டது ..

அங்கே சுக்ரீவன் , ஜாம்பவான் , அங்கதன் , தாரா , ருமா என அனைவரும் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர் ...

*அருகில் அனுமார்.....*🐒

இலையில் பறமாரப்பட்ட இனிப்புகளை ஒவ்வொன்றையும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு துப்பினார் தன் இலையில் ..

அருகில் அமர்ந்து சாப்பிட்டுக்
கொண்டிருந்தவர்கள் முகம் சுளித்து கொஞ்சம் தள்ளி அமர்ந்தனர் ...

சிலர் அனுமார் காது பட "வானரம் என்பது சரியாகத்தான் இருக்கிறது" என்று முணுமுணுத்தனர் ...

எல்லோருக்கும் கேள்வி குறி ...

ஏன் அனுமார் இப்படி செய்கிறார் ...

பக்கத்தில் அமர்ந்தவர்கள் சாப்பிட வேண்டாமா ?

பண்பு உள்ளவன் செய்யும் செயலா இது ?

எல்லோரும் அவரை புகழ்ந்தது அவருக்கு கர்வமாய் ஆகி இப்படி அசட்டுத் தனம் செய்ய வைக்கிறதோ ?
ravi said…
அனுமார் எதையும் காதில் வாங்கிக்கொள்ள வில்லை ..

அவர் பாட்டு இலையில் போட்ட எல்லா இனிப்புக்களையும் ( லக்ஷ்மணன் தன் கை படச் செய்த அக்கார அடிசிலையும் சேர்த்துதான் )
கொஞ்சம் தின்றுப்பார்த்து துப்பிக்
கொண்டிருந்தார் ..

வேண்டாம் என்றால் இலையில் பரிமாறும் முன்னமேயே வேண்டாம் என்று சொல்லாமல் இப்படி துப்பிக் கொண்டே இருந்தால் .....

ராமரும் சீதையும் எல்லோரும் சரியாக சாப்பிடுகிறார்களா என்று பார்க்க வந்தனர் ..

அனுமனைத் தவிர எல்லோரும் மெய் மறந்து ரசித்து ஆஹா ஓகோ என்று சப்தம் போட்டுக்கொண்டே சாப்பிட்டனர் ...
ravi said…
இனிப்புகள் பரமாறுபவன் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தான்

சீதை ராமனைப் பார்த்தாள்

ராமன் அனுமனை பார்த்தான் ..

லக்ஷ்மணனுக்கு மூக்கு மேல் கோபம்...

தன் கை படச் செய்த அக்கார அடிசிலை கூட துப்பி விட்டாரே என்று ....

ஜாம்பவான் தலையை சொறிந்த வண்ணம் தேனை மட்டும் வாங்கி வாங்கி சாப்பிட்டுக்
கொண்டிருந்தார் ...

சுக்ரீவன் தன் இலையில் விழுந்த இனிப்பை யாரும் பார்க்காத போது ருமாவின் வாயில் ஊட்டி விட்டான் ..

தாரை மட்டும் கவனித்து விட்டாள் ..

வாலியின் நினைவுகள் கண்களில் கண்ணீரை வரவழைத்தன....
ravi said…
ராமர் சத்துருக்கனை தனியாக கூப்பிட்டு அவன் காதில் மட்டும் விழும் மாதிரி ஏதோ சொன்னார் ...

உடனே அவன் ஓடிப்போய் ஒரு ஜாடியை கொண்டு வந்தான் ..

ராமர் அதை திறந்து அதில் எதையோ போட்டார் ...

" *சத்துருக்கனா*

இதில் மிகவும் இனிப்பான அனுமன் தேடும் சுவை உள்ளது ..

உடனே அனுமனிடம் போய் கொடு" என்றார்

அனுமன் அவசர அவசரமாய் கிடைத்த ஜாடியின் மூடியை எடுத்து விட்டு உள்ளே கை விட்டான் ..

அதில் ஒரு இனிப்பு பதார்த்தமும் இல்லை ..

ஒரு சிறிய ஓலைச் சுவடி மட்டும் இருந்தது ...

அதை பிரித்து பார்த்தார் அனுமான் ...

அடுத்த வினாடி சாப்பிட்டு கொண்டிருந்த அனைவரும் பதறி அடித்துக்கொண்டு ஓடும் மாதிரி ஆனந்தத்தில் கத்தினார் ...

இதுவன்றோ தேவாம்ருதம் ...

கொம்புத் தேன் .. இதன் இனிப்பு எதற்கு உண்டு என்று சொல்லி நடம் புரிய ஆரம்பித்தார் ...

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை ...

லக்ஷ்மணனுக்கும் சத்ருகர்னனுக்கும் சீதைக்கும், ஜாம்பவானுக்கும் மட்டுமே கொஞ்சம் புரிந்தது ...
அந்த ஓலையில் ராமர் தன் கை பட எழுதிய எழுத்து ... *ராமா* வென்று 🐒🐒🐒🙏🙏🙏🪷🪷🪷👍
ravi said…
*மஹா பெரியவா அருள்வாக்கு*
ஒரே தெய்வத்தையே இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபடுவது மன ஒருமைப்பாட்டுக்கு உதவும்.

நல்லவிஷயம் தான் என்றாலும், மற்ற தெய்வ வழிபாடுகளை ஒருபோதும் தாழ்வாக எண்ணுதல் கூடாது.

ஒரே தெய்வமே பல வடிவங்களில் இருக்கிறது என்ற தெளிவும் நமக்கு இருக்க வேண்டும்.

யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதே முற்பிறவியிலும், இப்பிறவியிலும் துன்பங்களைப் போக்குவதற்கான வழியாகும்.

தானம் கொடுப்பது மிகவும் நல்ல செயல் தான்.

ஆனால் நான் ஏழை எளியவர்களுக்கு தானம் அளித்தேன் என்ற எண்ணத்தை தியாகம் செய்து
விடவேண்டியது மிகவும் அவசியம்.

திருமணங்களில் நடக்கும் ஆடம்பரங்களும், வரதட்சணை வாங்குவதும் நமது சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு விரோதமானவை தான்.

வரதட்சணை நாமாகக் கேட்டாலும், பெண் வீட்டாரே கொடுத்தாலும் அது திருட்டுச் சொத்து மாதிரித் தான் என்பதை உணரவேண்டும்.

சைவ உணவு சாப்பிடுவதால் நமக்கு சாந்தகுணம் உண்டாவதோடு, இன்னொரு உயிருக்கு நம்மால் இம்சை ஏற்படாமல் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

*ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்*
ravi said…
இந்த அருள் வாக்கை படிக்கும் போது தாண்டவராய சுவாமிகள் அருளிய
கைவல்ய நவநீதத்தில்

பாயிரம் 2 வது பாடல் நினைவுக்கு வருகிறது

தெய்வம் ஒன்றே பல இஷ்ட்டப்பட்ட பெயர்களில் நாம் அழைக்கிறோம் என்றே இந்த பாடல் சொல்கின்றது

*பாடல் 2: ஆன்மசொரூப நமஸ்காரரூப மங்கலம்*

ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலாம்,
ஆன்றவீ சனுமாய்த்

தானே யநந்தமூர்த்தியுமாய் நிற்கும்,

பூன்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனாய்

நாளும்,
தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின் றேனே!

ஈன்று அளித்து அழிக்கும் செய்கைக்கு ஏதுவாம்

அயனாய் மாலாய், ஆன்ற ஈசனுமாய்த் தானே

அநந்தமூர்த்தியுமாய் நிற்கும்,

பூன்றமுத் தனுமாய் இன்பப்புணரி ஆதவனாய்

நாளும், தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின்றேனே!🙏🙏🙏
ravi said…
*சித்திரை 24*
*ஞாயிற்றுக்கிழமை*
07.05.23
***
*இன்றைய கோபுர தரிசனம்* ....
இன்று, இருபத்திமூன்றவதாக,
63 நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக்கலய நாயனாரைப் பற்றிப் பார்க்கும் முன் அவரது *அவதார மற்றும் முக்தி தலமாகிய*
*மயிலாடுதுறை மாவட்டத்தில்*
மயிலாடுதுறையிலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் சீர்காழியிலிருந்து
30 கி.மீ. தொலைவிலும்
அமைந்துள்ள ....
*சம்பந்தர், அப்பர், சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகிய* ...
அமிர்தமே சுயம்பு லிங்கமாக அமைந்துள்ள....
மார்க்கண்டேயனுக்காக
எமனின் உயிரை எடுத்து, உயிரைக் கொடுத்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான...
அபிராமி அந்தாதி பாடல் பெற்ற...
51 சக்தி பீடங்களில் காலசக்தி பீடமாக அமைந்துள்ள...
ravi said…
சிவபெருமான் பிரம்மாவுக்கு ஞான உபதேசம் செய்த...
கருவறையிலிருக்கும் லிங்கத்தை உற்று நோக்கினால் இன்னொரு லிங்கம் பிம்பமாகத் தெரியக்கூடிய....
குங்கிலியக்கலய நாயனார் மற்றும் ...
காரி நாயனாரின் அவதார மற்றும் முக்தித்
தலமாகிய...
*அபிராமி அம்பாள்* *உடனுறை*
*அமிர்தகடேஸ்வரர்*
( உற்சவர்: கால சம்ஹாரமூர்த்தி)
எழுந்தருளி அருள்பாலிக்கும்
திருத்தலம்
*அருள்மிகு*
*அமிதகடேஸ்வரர்*
*திருக்கோயிலின்*
*கோபுர தரிசனம்* பெற்று... மேலும் தொடர்வோம்..
*
*நாயன்மார்கள்* ...
நாயன்மார்கள்
என்போர் *பெரிய புராணம்* *எனும்* *நூலில் குறிப்பிடப்படும்*
*63 சைவ அடியார்கள்* *ஆவர்* . சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலை மூலமாகக் கொண்டு *சேக்கிழார் பெரிய புராணத்தை* *இயற்றினார்* . அதில் திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.
ravi said…
நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு *அறுபத்து மூவர்* *திருவீதி உலா* என்று பெயர்.
நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் *மிகச் சிறந்த பக்தர்கள்* மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்
வாழ்ந்தவர்கள். *இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.*
ravi said…
*நாயன்மார்கள்* செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முறையில் (குருவருளால் ,
சிவலிங்கத்தால் ,
அடியாரை வழிபட்டமையால் )
*முக்தி அடைந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன* .
🙏
*குங்கிலியக்கலய* *நாயனார்*
இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.
*குலம்:*
அந்தணர்
*பூஜை நாள்* :
ஆவணி மூலம்
*அவதார மற்றும்*
*முக்தித் தலம் :*
திருக்கடவூர் எனும்
திருக்கடையூர்
*
ravi said…
பெருமைமிக்க திருகடவூரில் தோன்றி வசித்து வந்த குங்கிலியக்கலய நாயனாரின் இயற்பெயர் கலயனார் என்பதாகும்.
இவர் திருக்கடவூரில் அருள்புரியும் அமிர்தக்கடேஸ்வரரின் மேல் பேரன்பு கொண்டு,தினமும் குங்கிலியத்தால் தூபம் காட்டி வழிபாடு நடத்தி வருவதைத் தொண்டாகச் செய்து வந்தார். ஆதலால் இவரை எல்லோரும் குங்கிலியக் கலயனார் என்று அழைத்தனர்.
ravi said…
குங்கிலியம் என்பது சாம்பிராணியைப் போன்றே தணலில் இடப்படும் வாசனைப் பொருள். தணலில் குங்கிலியம் இடப்படும் போது அது நறுமணப் புகையை வெளியேற்றும்.
சிவபெருமான் குங்கிலியக்கலய நாயனாருக்கு அருள்புரிந்து அவரது பெருமையை உலகறியச்செய்ய சித்தம் கொண்டார். கலையனாருக்கு வறுமையை வழங்கினார். கலயனாரும் வறுமையை வழங்கிய இறைவனுக்கு பிரதிபலனாக தன்னுடைய உடைமைகளான நிலங்கள், கால்நடைகள், வீடு முதலியவற்றை விற்று குங்கிலிய தூபவழிபாட்டால் நன்றியை தெரிவித்தார்.
ravi said…
காலப்போக்கில் அவருடைய செல்வவளம் முழுவதும் கரைந்தது. அவருடைய குழந்தைகள், மனைவியும் உண்ண ஆகாரமின்றி பட்டினி கிடந்தனர்.
குழந்தைகளின் நிலைமைக் கண்டு மனம் நொந்த மனைவியார், தன்னுடைய பொன்னாலான திருமாங்கல்யத்தை கணவரிடம் தந்தார். திருமாங்கல்யத்தை விற்று அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கி வருமாறு கூறினார்.
கலயனாரும் திருமாங்கல்யத்தைப் பெற்றுக் கொண்டு வீதியில் செல்கையில் ‘இன்றைய தூப வழிபாட்டிற்கு குங்கிலியம் இல்லையே என்ன செய்வது?’ என்று யோசித்துக் கொண்டே சென்றார்.
ravi said…
அப்போது வணிகன் ஒருவன் பொதிமூட்டை ஒன்றுடன் வந்தான். அவன் அருகே சென்ற கலயனார் பொதிமூட்டையில் என்ன பொருள் உள்ளது என்று விசாரித்தார். அது குங்கிலியப்பொதி என்று வணிகன் கூறியதும் பேரானந்தம் கொண்டார்.
பொன்னை கையில் கொடுத்து குங்கிலியத்தையும் அனுப்பி வைத்த இறைவனின் கருணையை எண்ணிப் பேரானந்தம் கொண்டார் கலயனார்.
அவர் பசியோடிருக்கும் குழந்தைகள், மனைவியையும் மறந்தார். மனைவி எதற்காக தன்னுடைய திருமாங்கல்யத்தை தந்து அனுப்பினார். என்பதையும் மறந்து, வணிகனிடம் பொன்னைப் பெற்றுக் கொண்டு குங்கிலியத்தை கொடுக்க‌ வேண்டினார். வணிகனும் பொன்னைப் பெற்றுக் கொண்டு குங்கிலியத்தைக் கொடுத்தான்.
நேராக அமிர்தகடேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று சேமிப்பறையில் குங்கிலியத்தைப் பத்திரப்படுத்தினார். கோவிலிலேயே தங்கிவிட்டார்.
கலயனாரின் மனைவி மற்றும் குழந்தைகள் அவரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். இரவுதான் வந்தது. கலயனார் இல்லம் திரும்பவில்லை. பசி மயக்கத்தால் குழந்தைகளும், மனைவியும் உறங்கினர்.
அப்போது இறைவனுடைய அருளால் அவ்வீட்டில் உணவுப்பொருட்களும், செல்வங்களும் குவிந்தன. இதனை கலயனாருடைய மனைவியின் கனவில் இறைவனார் தெரிவித்தார். கலயனாரின் மனைவி எழுந்ததும் இறைவனுடைய கருணையை எண்ணி வியந்தார்.
அதிகாலையில் உணவு தயாரிக்கும் பணியைத் தொடங்கினார். கலயனாரின் கனவில் தோன்றிய இறைவனார் ‘நீ உன் இல்லம் சென்று அறுசுவை உணவை உண்’ என்று கட்டளையிட்டார்.
இறைவனின் கட்டளையை ஏற்று கலயனார் தன் இல்லம் சென்றார். அங்கியிருந்த செல்வ வளங்கள் அனைத்தும் இறையருளால் கிடைத்தது என்பதை மனைவி மூலம் அறிந்ததும் பெரும் மகிழ்ச்சி கொண்டார்.
அதன்பின் கலயனாரும், மனைவியாரும் சிவனடியார்களுக்கு திருவமுது அளிக்கும் திருதொண்டையும், குங்கிலிய தூபத் திருத்தொண்டையும் தொடர்ந்து செய்து வந்தனர்.
திருப்பனந்தாள் என்னும் திருக்கோயிலில் சிவலிங்கத் திருமேனி சாய்ந்திருந்தது. அதற்கு காரணம் தாடகை என்னும் சிறுமி. தாடகையின் தந்தை தினமும் திருப்பனந்தாள் சிவபெருமானுக்கு பூசனைகள் செய்வித்து வழிபட்டு வந்தார்.
ஒருநாள் தாடகையின் தந்தை வெளியூர் சென்றமையால் பெருமானுக்கு பூசனை செய்விக்க தாடகை செல்ல நேர்ந்தது. இறைவனுக்கு மங்களநீராட்ட தாடகைக்கு உயரம் போதவில்லை. குழந்தை இறைவனை நோக்கி அப்பனே எமக்கு உயரம் போதவில்லை. எனவே சற்று சாய்ந்து நில்லுங்கள் நீராட்டி விடுகிறேன் என்று சொல்லியது. இறைவனும் சாய்ந்து நின்றார்.நீராட்டு முடிந்ததும் நிமிர்ந்து கொண்டார்.
பின்னர் பொட்டிட்டு பூச்சூட்ட உயரம் போதவில்லை. குழந்தை மீண்டும் அப்பனே சற்று சாய்ந்து நில்லுங்கள். பொட்டிட்டு பூ மாலை சூட்டவேண்டும் எனவும் மீண்டும் சாய்ந்து நிமிர்ந்தார். இப்போது நிவேதனம் முடிவுற்றது. ஆராதனையும் முடிந்தது. தாம் கொண்டுவந்த அக்காரஅடிசலை உண்ண இறைவனை சாய்ந்து நிற்க சொல்ல இறைவன் சாய்ந்தவர் அதன் பின் நிமிரவே இல்லை.
குழந்தையின் மீது இறைவன் கொண்ட அன்பு எவர்க்கும் வணங்கி அறியாத ஈசனை சாயவைத்தது. இந்த சாய்ந்த இறைவன் திருமேனியை சீராக்க அந்நாட்டு அரசர் இரும்பு சங்கிலியின் ஒரு நுனியை இறைமேனியில் இறுகக்கட்டி மறுநுனியை யானையோடு இணைத்து இழுக்கப்பட்டு சங்கிலி துண்டானது யானை மயக்கமுற்றது. திருமேனி நிமிரவில்லை.
இச்சேதி கலயனாருக்கு தெரியவர நேராக ஆலயம் செல்கிறார். பூசனை செய்து குங்கிலிய தூபம் காட்டி ஐந்தெழுத்து மந்திரம் ஓதியவாறு ஒரு கயிற்றின் ஒரு நுனியை இறைவனோடும் மறுநுனியை தம் கழுத்திலும் கட்டியவாறு இழுக்கின்றார். இறைமேனி சீரானது.
பின்னர் ஓர்நாள் ஞானசம்பந்த பெருமானும் நாவரச பெருமானும் அடியாரது இல்லம் எழுந்தருளி இன்னமுது செய்து தாங்களும் சிறப்புற்று அடியாரையும் சிறப்புறச்செய்தனர்.
கலயனார் குங்கிலியக் கலயனார் என்று அழைக்கப்படலானார்.
பின்னர் இறைவனால் திருவடிபேறும் சிவபுரம் சாரும்பேறும் பெற்றார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகும் வாய்ப்பினையும் இறையருளால் பெற்ற அருளாலர் ஆனார் குங்கிலியக்கலய நாயனார்.
குங்கிலியக்கலய நாயனார் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.

🙏 *ஓம் நமசிவாய* 🙏
🙏 *ஓம்* *குங்கிலிக்கலய*
*நாயனார்* *போற்றி* 🙏
ravi said…
*இன்றைய சிந்தனை*❤️

(07.05.2023)
………………………………………………...

https://srimahavishnuinfo.org

*‘’மன வலிமை...!"*
……………………………………........

தோல்விகளைக் கடந்து வந்தால் தான், அங்கே வெற்றி நம்மை வரவேற்கக் காத்திருக்கும்...

வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன் வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு...

தோல்வியைக் கண்டு மிரண்டுப் போய் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம்...?

தோல்விக்குப் பின் வெற்றி என்ற கருத்து பொய்யா!, மெய்யா?, என்று பொறுத்திருந்துப் பார்க்கலாமே...!

இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள்...

எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் துயரத்தின் எல்லைக்கே போய் விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற மெய்யியல் (தத்துவம்) அவர்களுக்குப் புரிவதில்லை...

நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த நேர்மறை எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்...

நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போது தான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறி விடுவோம்...

🔹  நம்மை விட உடலில் வலிமை யானை..,

🔹 நம்மை விட வேகத்தில் சிறந்தது குதிரை..,

🔹 நம்மை விட உழைப்பில் சிறந்தது கழுதை...,

இப்படி மிருகங்கள் நம்மை விடப் பல மடங்கு வலிமையாக இருந்தாலும், நாம் தான் அவைகளை அடக்கி ஆள்கிறோம், காரணம்!, மனிதன் மட்டுமே மனவலிமை கொண்டவன் என்பதால்...

ஆம் நண்பர்களே...!

🔴 நமக்கு ஏற்படுகிற சிக்கல்களும் அப்படித் தான். அதனை அடக்கியாளும் திறன் நம்மிடம் உள்ளது...!

⚫ சிக்கல்களை நயமாக எதிர்கொள்வோம். வெற்றிப்படியை விரைந்து  அடைவோம்...!

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
  ★  Mahavishnuinfo ★
   ஆன்மீக வழிகாட்டி       
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 13*

ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்த நம்:
லோக நாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம்!!

வேதத்தினிடமும் தவத்தினிடமும் நட்பு கொண்டவனும், எல்லாத் தருமங்களையும் அறிபவனும், உலகங்களால் கொண்டாடப்படும் புகழை வளர்ப்பவனும், எல்லா உலகங்களுக்கும் தலைவனும், உயர்ந்த ஐஸ்வர்யங்களை இயல்பாக உடையவனும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே கருணை காட்டுபவனும், பரம்பொருளாக இருந்து எல்லா உயிர்களுக்கும் பிறப்பு இறப்பினைக் கூட்டுவிப்பவனுமாகிய பிரம்மத்தையே ஒருவன் போற்றி வருவானாயின், அவன் எல்லாத் துன்பங்களையும் கடந்து செல்பவன் ஆவான்.

ஓம் நமோ நாராயணா !

ravi said…
*இரவு சிந்தனை.🤔*

*வாழ்க்கையில் யோசனை அவசியம் தான்*

*ஆனால் அது அளவோடு இருக்க வேண்டும்.*

*அளவுக்கு அதிகமாக யோசித்தால், அந்த யோசனை உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் குழப்பி விடும்.*

*இரவு இனிதாகட்டும்*
*விடியல் நலமாகட்டும்.*

https://srimahavishnuinfo.org
ravi said…
*இன்றைய சிந்தனை*

(06.05.2023)
………………………………………………...

*‘’மன வலிமை...!"*
……………………………………........
https://srimahavishnuinfo.org

தோல்விகளைக் கடந்து வந்தால் தான், அங்கே வெற்றி நம்மை வரவேற்கக் காத்திருக்கும்...

வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன் வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு...

தோல்வியைக் கண்டு மிரண்டுப் போய் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம்...?

தோல்விக்குப் பின் வெற்றி என்ற கருத்து பொய்யா!, மெய்யா?, என்று பொறுத்திருந்துப் பார்க்கலாமே...!

இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள்...

எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் துயரத்தின் எல்லைக்கே போய் விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற மெய்யியல் (தத்துவம்) அவர்களுக்குப் புரிவதில்லை...

நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த நேர்மறை எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்...

நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போது தான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறி விடுவோம்...

🔹  நம்மை விட உடலில் வலிமை யானை..,

🔹 நம்மை விட வேகத்தில் சிறந்தது குதிரை..,

🔹 நம்மை விட உழைப்பில் சிறந்தது கழுதை...,

இப்படி மிருகங்கள் நம்மை விடப் பல மடங்கு வலிமையாக இருந்தாலும், நாம் தான் அவைகளை அடக்கி ஆள்கிறோம், காரணம்!, மனிதன் மட்டுமே மனவலிமை கொண்டவன் என்பதால்...

ஆம் நண்பர்களே...!

🔴 நமக்கு ஏற்படுகிற சிக்கல்களும் அப்படித் தான். அதனை அடக்கியாளும் திறன் நம்மிடம் உள்ளது...!

⚫ சிக்கல்களை நயமாக எதிர்கொள்வோம். வெற்றிப்படியை விரைந்து  அடைவோம்...!

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
  ★  Mahavishnuinfo ★
   ஆன்மீக வழிகாட்டி       
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 12*

அநாதி நிதநம் விஷ்ணும் ஸர்வ லோக மஹேஸ்வரம்
லோகாத்யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வ துக்காதிகோ பவேத்

ஆதியும் அந்தமும் இல்லாமல் எல்லாக் காலங்களிலும் இருப்பவனும், எங்கும் நிறைந்துள்ளவனும், எல்லா உலகங்களுக்கும் மேலான தலைவனும், எல்லா நடப்புகளையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவனுமாகிய விஷ்ணுவை எப்போதும் போற்றிவருபவன் எல்லாத் துன்பங்களையும் கடந்து எம்பெருமானைச் சேர்ந்து பகவத் அநுபவமான எல்லையற்ற ஆனந்தத்தை அநுபவிப்பான்.

ஓம் நமோ நாராயணா !

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
https://srimahavishnuinfo.org
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈
TV Ganesh said…
ஆலயம் செல்வது சாலவும் நன்று என்றார் ஔவையார்.

இதோ நம் JRK கட்டிய மகா பெரியவா கவிதை என்ற
ஆலயம்

காலடி நாயகன்
காஞ்சியின் கருணைக் கடல்
நேரில் வந்த தெய்வத்தின்

திவ்ய தரிசனம்
இன்று
“பெரியவா” group அல்ல

பக்திக்கு பஞ்சம் வந்த வேளையில்
பஞ்சமி பூஜை செய்கிறாய்

காமாட்சியை
நினைத்து
காஞ்சி நாயகனுக்கு
வளையலும்
மாங்கல்யமும் கவிதையின் மூலம்
சாற்றுகிறாய்

அவரே கடாக்ஷ நாயகன்
என
பறைசாற்றுகிறாய்

உன்னுள்
உயிர்த்து
உணர்வாய்
தரித்து
உன் உலகமாய்
உயர்ந்து

அவருக்கான
கவிதையை அவரே அமைத்துக்
கொண்டார் உன் மூலமாக

காரணம்

அவர் ஆசீர்வாதம்
அனுதினமும்
உங்களை
அணைத்துக் கொண்டிருப்பதால்

இது பெரியவா தொண்டு

இது பெரிய தொண்டு

கற்றோருக்கு சென்ற இடம்எல்லாம் சிறப்பு...
உலகம் முழுவதும் அவர் புகழை உரக்க சொல்கிறாய்

அவர் ஆசியால்
உன் புகழ் உலகம் முழுக்க பறக்கும்

இதற்கு நிச்சயம் அவரின் அனுக்கிரகம் உண்டு

🙏🙏🙏🙏🙏
ravi said…
[07/05, 12:43] Metro Kowsalya: அதி அதி அற்புதமாக இருக்கிறது...ராம நாம பாயசம் மிக அருமை...ஜெய் ஶ்ரீ சீதா ராம்..🙏🙏
[07/05, 12:47] Metro Ad Vipul: அஹா அருமையான இனிப்பு வகைகள்
ravi said…
தினம்்ஒரு(தெய்வத்தின்)குரல்

உபநிஷத்தில் 'வழிகாட்டி' குரு
வழி தெரியாதவனுக்கு அதைச் சொல்பவர் என்பதைக் கதாரூபமாகவே ஒரு உபநிஷத் கொடுத்திருக்கிறது- சாந்தோக்யோபநிஷத். 'கண்ணைக் கட்டிக் காட்டிலே விடறது' என்கிறோமே, அதையே ஸம்பவமாகச் சொல்கிற கதை.

கந்தார தேசம் ( Gandhara ) என்று ஒன்று. காந்தாரம் என்று சொல்வதுண்டு. அந்த தேசத்தைச் சேர்ந்தவன் தான் த்ருதராஷ்ட்ரனின் பத்னியான காந்தாரி - Gandhari ; Kandhari இல்லை. இங்கே நாம் தப்பாக ரீணீ-வை ளீணீ-ஆக்கின மாதிரி அப்புறம் அந்த தேசத்திலேயே பண்ணித்தான் Gandhara -த்தை Kandahar (காண்டஹார்) ஆக்கி விட்டார்கள் என்கிறார்கள்.
ravi said…
அப்படியானால் அது Partition -க்கு (பாகிஸ்தான் பிரிவினைக்கு) முன்னாலிருந்த முழு இந்தியாவுக்கு வெளியிலே உள்ள ஆஃப்கானிஸ்தான் என்றாகிறது. சில ஆராய்ச்சிக்காரர்கள், அது இல்லை கந்தாரம், தற்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்ட வடகோடிப் பகுதியான பெஷாவரைச் சுற்றியிருக்கும் பிரதேசந்தான் ஆதி கால கந்தாரம் என்கிறார்கள். அது இருக்கட்டும்.

ravi said…
அந்த தேசத்தில் ஒரு பணக்காரன். அவனை ஒரு கொள்ளைக்காரன் 'கிட்னாப்' பண்ணி அவனுடைய கண்ணைக் கட்டிக் காட்டுக்கு இழுத்துக்கொண்டு போய்க் கொள்ளை அடிக்கிறான். கொலை பண்ணாமல் கொள்ளையாடு நிறுத்திவிடுகிறான். அப்புறம் அவனை அந்த நடுகாட்டில் விட்டுவிட்டு ஒடியே விடுகிறான். எந்தப் பக்கம் போனால் ஊர் வரும் என்றே தெரியாத பணக்காரன் - பணத்தைப் பறிகொடுத்து இப்போது 'பாப்ப'ராகி விட்டவன் -நாலு திசையும் திரும்பித் திருப்பி, ஸஹாயத்க்கு யாராவது வரமாட்டார்களா என்று, பாவம், லபோ லபோ என்று கத்துகிறான். "என்னைத் திருட்டுப்பய கண்ணைக் கட்டி இங்கே இழுத்துண்டு வந்து விட்டுட்டுப் போய்ட்டானே!காப்பாத்த யாருமில்லையா, இல்லையா?" என்று கத்துகிறான்.

ravi said…
அப்போது ஒரு வழிப்போக்கன் அநத்ப் பக்கம் வருகிறான். அவன் அந்த ஆஸாமியுடைய கண்கட்டை அவிழ்த்துவிட்டு, கந்தார தேசத்திற்கு அவன் திரும்பிப் போவதற்கு இன்ன திசையிலே போய் அப்புறம் இன்ன, இன்ன திசையிலே திரும்பணும் என்று தீர்க்கமாக எடுத்துச் சொல்கிறான். அதைக் கேட்டு ஆஸாமியும் வழி தெரிந்து கொள்கிறான்.

அந்தப்படியே போய், காடு முடிந்துவிட்டு நாட்டுப் பகுதியை அடைகிறான். நாட்டுப் பகுதியில் கிராமங் கிராமமாக விசாரித்துக்கொண்டே நடையைக்கட்டி முடிவாக கந்தாரம் போய்ச் சேருகிறான்.

"இந்த மாதிரிதான் ஆசார்யனைப் பெற்ற ஒருவன் அறிவு பெறுகிறான்" என்று உபநிஷத்தல் முடித்திருக்கிறது. "ஆசார்யனைப் பெற்றவன்தான் அறிவு பெறமுடியும்" என்பது உள்ளர்த்தம் என்று தெரிந்துகொள்ளும்படியாக வாசகம் இருக்கிறது.

இப்படி உபநிஷத் கதை - Parable; அதாவது படிப்பினை உள்ள கதை.

கதையில் 'இந்த மாதிரி' என்று சொன்னது எதை? அந்த மாதிரி வாழ்க்கையில் ஆசார்யனால் அறிய உண்டாகிறது என்றால் எப்படி?

உபநிஷத் அதை விளக்கிச் சொல்லவில்லை. கதை சொல்லிவிட்டு, 'அந்த

மாதிரி ஆசார்யவான் அறிவு பெறுகிறான்' என்று மட்டும் 'க்ரிப்டிக்'காகச் சொல்லி முடிந்து விடுகிறது.

நான் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிப் பார்க்கிறேன்:

'எந்த மாதிரி' என்றால் கிட்னாப் ஆன ஆஸாமி அப்புறம் வழிப்போக்கன் ஊருக்கு வழி சொல்லத் தெரிந்துகொண்டு அங்கே திரும்பிப் போய்ச் சேர்ந்தானல்லவா, 'அந்த மாதிரி' ப்ரஹ்மமாக இருக்கப்பட்ட நிலையிலிருந்து மாயையினால் கிட்னாப் செய்யப்பட்டு ஒரு ஜீவன் ஸம்ஸாரக் காட்டிற்குக் கடத்தப்படுகிறான். கொள்ளைக்காரன் பணத்தைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி மாயை இவனுடைய ஞானத்தைப் பறிமுதல் பண்ணிவிடுகிறது. அஞ்ஞானத்தினால் இவனுடைய அறிவுக் கண்ணைக் கட்டிப்போட்டுவிடுகிறது. ஆனால் ஒரு பெரிய வித்யாஸம் - அதோடு திருட்டுப் பயல் ஓடிவிட்ட மாதிரி மாயை ஓடாது!

'ஸம்ஸார காட்டிலிருந்து மீண்டு மறுபடி எப்படி மோட்ச பதம் - அதுதான் கதையில் வந்த சொந்த ஊரான கந்தாரம் - சேர்கிறது? வழி தெரியவில்லையே!இதற்கு யார் வழி சொல்லுவார்கள்?' என்று ஜீவன் நாலா திசையிலும் முயற்சி பண்ணிப் பார்க்கிறான். புத்தியால் பலவிதமாகவும் யோஜித்துப் பார்க்கிறான் என்று அர்த்தம். மோட்ச தாஹம், ஞான தாஹம் ஜீவனுக்கு வந்துவிட்டதோ இல்லையோ? அப்படி வந்தாலும் அவன் ஸ்வய புத்தியால் அதைத் தணித்துக்கொள்வதற்கு ஈச்வரன் விடுவதில்லை. தன்னுடைய அநுக்ரஹத்திற்கே, Channel என்கிறார்களே அப்படி வடிகாலாக குரு என்னும் ஒருத்தரை அனுப்பி வைத்தே அந்த தாஹத்தைத் தணிப்பான்.

உபநிஷத் கதையில் காட்டிலே போன வழிப்போக்கன்தான் அந்த குரு.

குரு - ஆசார்யர் - வருகிறார். அஞ்ஞானக் கண் கட்டை அவிழ்த்துவிட்டு, ஜீவன் ப்ரஹ்மமாகவே இருந்த ஸ்வஸ்தானமான, சொந்த ஊரான, மோட்சத்திற்கு ஞானமார்க்கம் என்ற வழியைச் சொல்கிறார்.
(இன்றுஅனுஷம்)
ravi said…
🌹🌺“ *தம் இனிய பாடல்களின் மூலமாக இறைவன் சிவபெருமானைத் தம்முடைய நண்பராக்கிக் கொண்ட பக்தன்* .... *பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺"சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்

🌺சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர்.இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.

🌺நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.

🌺சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.

🌺மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

🌺மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார்.

🌺திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி".. என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார்.

🌺தம் இனிய பாடல்களின் மூலமாக இறைவன் சிவபெருமானைத் தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று, தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார்.

🌺இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

🌺"நீள நினைந்தடியேன்".. என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான்பெற்ற நெல்லைத் தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 “A simple story explaining about a devotee who made Lord Shiva his friend through his sweet songs 🌹🌺

-------------------------------------------------- ------

🌹🌺 “Sundaramurthy Nayanar is one of the four venerated Samayakuras in Saivism and one of the sixty-three Nayanmars.


🌺 Sundaramurthy Nayanar was born in Tirunavalur in Tirumunapapady to a Sadianar-musician couple. He belongs to Adi Saiwar clan. His birth name is Nambiaruran.


🌺 Nambiaruran is shortened to Aruran. He is known by that name because Lord Shiva called him Sundarar after seeing his beauty.


🌺 When Sundarar was playing in the street as a child, he saw King Narasinghamuniyarayar of Tirumunapadi. The boy took Sundaran to the palace and taught him all the arts like a prince.


🌺When he reached marriageable age Sundarar was arranged to marry the daughter of Satangavi Sivacharya in Puttur.


🌺 On the day of the wedding, the Lord came there in the form of an old man, showed him a scroll said to have been written by Sundar's father, and said that Sundar and his descendants were his slaves.


🌺 When the marriage was interrupted, Vayothikar entered the temple with Sundarar and suddenly disappeared. Sensing that the Lord himself had come and saved him, Sundar sang his first Devara Padhikam, "Pittha Parai Sudi".


🌺 Lord Shiva made Lord Shiva his friend through his sweet songs. He went to every place of Shiva and worshiped the Lord by chanting Devara Padhikams.

🌺 Lord with devotion depended on the way of companionship called "Saka Margam". Considering the Lord as his companion, he asked for and received everything he needed.

🌺 In the Devara padikam which he sang beginning with "Neeela Ninandadiyen", we can see him asking the Lord for help in bringing the paddy that he had born in Kundalur to his village.

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 152*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 20
ravi said…
கருணை என்னும் வாரிதியே

காஞ்சி நகர் பெரும் தவமே

காமகோடி பீடமதன் கதிரொளியே

கண்ணொளியால் அருள் வழங்கும் அத்புதமே

அருமறைத்தேன் பொழிமுகிலே

ஆனந்தப் பெருவெளியில் ஆடுகின்ற பூரணமே

தருணமதை நோக்காமல் காரணமும் கருதாமல்

தண்ணளியால் காமாக்ஷி தாயார் போல்

முகமலர்ந்து
பரிவுடனே அபயகரம் காட்டும் ஒரு கற்பகமே

பதமலரே தஞ்சமென்று வந்தடைந்தேன், ஏற்றருளே !!🙏🙏🙏
ravi said…
[08/05, 10:47] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 555* 🙏🙏🙏started on 7th Oct 2021

*260 வது திருநாமம்*
[08/05, 10:51] Jayaraman Ravikumar: *சென்னை காளிகாம்பாள் தொடர்கிறாள்*

ஆரம்பத்தில் சென்னை அம்மன் என்றும், கிழக்கிந்திய கம்பெனி வெள்ளைக்காரர்கள் கோவிலை கோட்டைக்குள் நகர்த்திய போது கோட்டை அம்மன் என்றும்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் கட்டிய விஸ்வ கர்மா சிற்பிகள் திருவண்ணாமலையிலிருந்து கல் கொண்டு வந்து காளிகாம்பாள் கோவில் உருவாகியது என்றும் பல செய்திகள் உள்ளன

காளிகாம்பாள் ஆலய குங்குமப்பிரசாதம் வாழ்வில் உயர்வும், மோட்சமும் தரும் சக்தி படைத்தது.

கிடைக்கும் காளிகாம்பாள் மகாலக்ஷ்மியையும், ஸரஸ்வதியையும் ரெண்டு கரங்களாகப் பெற்றவள்.

ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும்.

காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள்.

அதில் ஒரு அம்சம், காஞ்சீபுரத்தில் காமாக்ஷி 🙏🙏🙏
ravi said…
*ராமனும் வானர சேனைகளும்*🐒

ராமா என் தவம் செய்தோம்
உன் சேவை செய்ய ஏழ் பிறவி காணா இப்புண்ணியம் ...

ராவணனுக்கு நன்றி சொல்கிறோம்

சீதையை கவர்ந்து போனதால் அல்ல ..

உனக்கு சேவை செய்ய ஓர் வாய்ப்பு அவன் தந்தன்றோ ...

நாங்கள் மரம் தாவும் வானரங்கள்

வழி முறை தெரியாதவர்கள்

வான வித்தைகள் அறியோம்

மாயாஜாலங்கள் புரியோம் .

பல் கொண்டு பாறை தூக்குவோம்

வால் கொண்டு வாள் சண்டை புரிவோம்

வேல் கொண்டு வேந்தர்களை அழிப்போம்

மரம் கொண்டு தேர் கொடி தனை சாய்ப்போம் ...

*ராமா* ...

அம்புகள் தைத்தினும் அடி பணியோம் ..

குருதி கொட்டினும் புழுதி எழும்பினும் *மாருதி* வழி நடப்போம் ...

*ராமா*

இவன் பேர் பீமன் இதோ இவன் பகலவன்

இவள் அந்தரி அதோ அவள் சுந்தரி ...

இளம் வயதில் களம் புகுந்தோர் ...

இணையில்லா உன் சேவை தேவை என்றே படையில் சேர்ந்தோர் ....

*ராமன்* சிரித்தான் ...

வானரங்கள் கொண்டு தானவன் அவனை அழிப்பேன் ...

தசமுகம் கொண்டோன் அவன் எழில் முகம் மண்ணில் சாய்ப்பேன் ...

என்ன பாக்கியம் செய்தேன் உங்கள் சேவை பெற ...

இனி ஓர் பிறவி எடுப்பினும் காண்பேனோ இதுபோல் பக்தியின் உச்சம் ...

*ராமா* ... திசை எங்கும் செல்வோம் . தசமுகனை தேடியே

திசை எட்டும் ஆடையாய் அணியும் ஈசனை வணங்கியே ...

உன் நாமம் சொல்வோம்

அதுவே நற்
கருப்பஞ்சற்றினிலே

தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,

எங்கள்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதன்றோ *ராமா* ”-

ராமா எனும் நாமம் ஓங்கி வளர

அதிலே ராமன் சொன்னான்

இக்கவி தனை கபி கூட்டம் களிக்கவே

உடையாள் உந்தன் நடு இருக்கும்! உடையாள் நடுவுள் நீ இருத்தி!

அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால், அடியேன் உன்

அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்!

பொன்னம்பலத்து எம்
முடியா முதலே!

ஏன் கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே!

களித்தது வானர கூட்டம் களி குடித்த மனம் போல்

கலி தின்றவன் அங்கே கலித் தீர்த்தே களிநடம் புரிந்தான்

எல்லாம் இனி வெற்றியே என்றே 🙏
ravi said…
என்னகவி பாடினால் உன்மனது மாறுமோ
என் மீது கருணை வருமோ

எவர்மூலம் அணுகினால்

யான் செய்யும் விண்ணப்பம்
எளிதாக நிறைவேறுமோ

சொன்னபடி கேளாமல் துயர்செய்யும் என்மனம்
தூய்மைபெற வழியுமுண்டோ

சோதித்து வாட்டுவது போதுமென் உன்னிடம்
சொல்லுபவர் யாருமிலையே

சின்னமலர் என்றாலும் தேன்துளி சுமந்து தவம்
செய்துவரும் மலரல்லவோ

செப்புவது பிழைபடினும் செவி இன்பம் தரவல்ல
சேய்மழலை மொழியல்லவோ

இன்னபடி நான் பெற்ற பிள்ளை துயர் எய்துகையில்
இளகாத தாயுமுண்டோ

இறைவி எனை ஆண்டருளும் இராஜராஜேச்வரி
இமயமலை வாழும் உமையே!🙏🙏🙏
ravi said…
*19*

*நகைகள்*

சிங்கார மாலையுடன் நவரத்ன கண்டியும்
சீர்மணிப் பொற் கோலமும்

திருவுடைய அட்டிகை எழிற்காக மாலையும்
செம்மணிப் பூவாரமும்

மங்காத வைரமும் மாணிக்க மாலையும்
மார்புக்கு நடு விலோட

மாதுசிவ காமிஉமை நாயகியின் வண்ணமே

மழைமின்னல் போல மாற
சங்கீதப் பண்களும் சிவனோடு சரஸமும்
தழுவிடும் கலையாகுமே !

தள்ளாடும் நகையோடு தங்க மயில் மேனியும்
தரமான நகை யாகுமே !!💐💐💐
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 40*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐

*வாலி வதம்*

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*ஶ்ரீ ராம ரக்ஷா* *ஸ்தோத்ரம்*

பாதால்த-³பூ⁴தல-வ்யோம-சாரிண-ஶ்சத்³ம-சாரிண: ।

ந த்³ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபி⁴: ॥ 11 ॥

ராமேதி ராமப⁴த்³ரேதி ராமசன்த்³ரேதி வா ஸ்மரன் ।

நரோ ந லிப்யதே பாபைர்பு⁴க்திம் முக்திம் ச வின்த³தி ॥ 12 ॥
🥇🥇🥇
ravi said…
வாலி அங்கே ஒரு ஜோதியாக சுக்ரீவனனின் கண்களுக்குத் தெரிந்தான் --

அன்று வாலி அளவுக்கு மிகுந்த அழகுடனும், பொலிவுடனும் அந்த பரமேஸ்வரனே தன் எதிரில் வந்து நின்றதைப்போல் சுக்ரீவன் உணர்ந்தான் -

இந்த ஞானியையா ராமன் இன்று கொல்லப்போகிறான்?

ஓடிப்போய் ராமனிடம் வாலியைக் கொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிடலாமா??

எனக்கு வேண்டாம் இந்த ராஜ்யம் -

வாலியே ஆண்டுகொண்டு போகட்டும் -

நான் இப்படியே ராம நாமத்தை ஜெபித்துக்கொண்டு போய் சேரும் இடத்திற்கு புண்ணியம் சேர்த்துக்
கொள்கிறேன் ......

சுக்ரீவனனின் நல்ல சிந்தனைகளை களைத்தான் வாலி ---  

*ஏய் சுக்ரீவா* -

இன்றுடன் உன் கதை முடிவடைகிறது என் கதையால்....

எந்த கொம்பனாலும் என்னை வெல்வது என்பது முடியாத காரியம் -

நீ மட்டும் அல்ல , உனக்கு பின்னால் யாராவது உனக்கு உதவி செய்வதாக நீ நம்பிக்கொண்டிருந்தால்

அவர்களையும் இங்கு எனக்கு முன் அழைத்துவந்து என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள் -

முதலில் உனக்கு உயிர் பிச்சையே கொடுக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன் -

என் மனம் இப்பொழுது சற்றே மாறி விட்டது ...

ஒரே ஒரு வினாடி உனக்காக, என்னுடன் நீ கூடப்பிறந்த ஒரே பாவத்திற்காக ஒதுக்குகிறேன் -

மன்னிப்பு கேட்டுக்கொள் , பிறகு என் கண்ணிலே முழிக்காமல் ஓடி விடு ----- 

இந்த கடும் சொற்கள் மீண்டும் சுக்கிரீவனை ஒரு வானரமாகிக்கியது. 🐒🐒🐒
ravi said…
மன்னிப்பா - உன்னிடமா? என்ன தவறு செய்துவிட்டேன் என்று நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்?

மரணம் யாருக்குமே இன்றியமையாத ஒரு வரம் ...

ஒரே நிமிடம் , அது உனக்கும் வாய்த்திருக்கலாம் என்று எண்ணி குகையின் வாயிலை மூடினேன் -

உன்னிடம் பலமுறை மன்றாடினேன் என்னை மன்னித்துவிடு , ராஜ்யத்தில் ஆசைப்பட்டு நான் குகையை மூடவில்லை என்று கதறினேன் -

மாறாக நீ என்னை ஓட ஓட விரட்டினாய் -

ஒளிந்திருக்கும் இடங்களுக்கெல்லாம் உன் ஆள்களை அனுப்பித்து எங்களை தேடினாய் கொல்வதற்கு -

நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு உன்னால் வரமுடியாத ஒரு சாபத்தினால் நாங்கள் இன்னும் உயிர் தப்பித்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம் -

என் மனைவி என்ன தவறு செய்தாள் ?

அவள் செய்த ஒரே தவறு இந்த பாவியை திருமணம் செய்து கொண்டதுதான் --

அதற்காக அவளை என்னிடம் இருந்து பறித்துக்கொண்டு அவளை எத்தனை துன்பத்திற்கு ஆளாக்கினாய்

உன்னை ஒரு தந்தையாக நினைத்தாளே --

நீ தான் அவள் குரு, தெய்வம் என்று உன்னிடம் பக்தி செலுத்தினாளே -

அவளை உன் தாசியாக நினைக்க உனக்கு எப்படி மனம் வந்தது -

வேதம் படித்தவன் என்று மார்தட்டிக்
கொள்கிறாய் -

அந்த வேத நாயகனின் பக்தன் என்று திருநீறை உடம்பெங்கும் பூசிக்கொள்கிறாய் -

*படிப்பது திருவாசகம் -- இடிப்பது சிவன் கோயிலையா?*

எடு உன் கதாயுதத்தை - காட்டு உன் வீரத்தை -----  

வாலி அசந்தே போய்விட்டான் -

தன் தம்பியின் பேசும் அழகை முதன் முதலாக ரசித்துக்
கேட்டுக்கொண்டிருந்தான் -

அவன் திட்டுக்கள் வாலியின் காதுகளில் ஏறவேயில்லை -

இளமையில் வாலியின் முதுகில் ஏறிக்கொண்டு குழந்தை சுக்ரீவன் " அண்ணா இதை வாங்கிக்கொடு - அதோ அது எனக்கு வேண்டும்! " என்று அடம் பிடித்து அழும் ஒரு குழந்தையாகத்தான் சுக்ரீவன் வாலியின் கண்களில் தெரிந்தான்.... 

ராமருக்கு கொட்டாவியே வந்துவிட்டது --

இவர்கள் ஒன்று சேரப்போகிறார்களா? இல்லை சண்டை போடப்
போகிறார்களா ?

இல்லை இப்படி பேசிக்கொண்டே மற்றவர்களின் காதுகளை செவிடாக ஆக்கப்
போகிறார்களா??

எடுத்துக்கொண்ட வில்லை கீழே வைக்கவும் முடியாமல், கண்களை அசதியில் கொஞ்சம் மூடிக்கொள்ளவும் முடியாமல் தவித்தார்.

இவர்கள் பேசிக்
கொண்டிருக்கும் சத்தத்தை விட அதிகமான சத்தம் ராமரை முழித்துக்கொண்டே இருக்க வைத்தது --
அருகில் நின்றுகொண்டிருந்த ஜாம்பவான், பிறகு உட்கார்ந்த நிலை -

இப்பொழுது படுத்துக்கொண்டதும் அல்லாமல் தூங்கவும் ஆரம்பித்தார் -

தனியாக தூங்காமல் குறட்டையையும் துணைக்கு அழைத்து வந்தார் -

அது எழுப்பிய ஒலி அந்த இடத்தையே அதிர வைத்துக்
கொண்டிருந்தது. 🐻🐻🐻🐻🐻🐻🐻🐻🐻
ravi said…
[08/05, 07:41] Metro Ad Vipul: படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் என்பதை மாற்றியது அற்புதம்🙏🏻🙏🏻🙏🏻
[08/05, 07:42] Chandramouli: ஜாம்பவானுக்கு தமிழ் புரியாது போலும் 😆😊
ravi said…
90 வயதில் அங்கப்பிரதிட்சணம் செய்த காஞ்சி மஹான்!

""90 வயதில் அங்கப்பிரதிட்சணம் செய்த காஞ்சி மஹான்!"" ---ஸ்ரீ மடம் பாலு

காஞ்சீபுரத்தில் காமாக்ஷி அம்மனுக்கு கும்பாபிஷேகம்….கோவிலிருந்து பெரியவாளை அழைத்தார்கள். ஸ்ரீ ஜயேந்திர பெரியவாளும் வந்து கூப்பிட்டார். ஆனால் பெரியவா வரவில்லை என்று சொல்லி விட்டார்.

நான் பெரியவாளிடம் "நம் காமாக்ஷி அம்மனுக்குஅபிஷேகம் பெரியவா போகாமல் இருக்கலாமா?" என்று கேட்டேன்.

ravi said…
அதற்கு பெரியவா, "இல்லை ஸ்ரீ ஜயேந்திர பெரியவா என் குழந்தை...மடத்தை நிர்வாகம் செய்கிறார் பூஜை செய்கிறார். அவர் தான் செய்ய வேண்டும். அது தான்முறை" என்று சொல்லி விட்டார்.

கும்பாபிஷேகம் ஆன மறு நாள் கோவிலிலிருந்து, தீர்த்தம்,சால்வை, புடவை எல்லாம் வந்தன. பெரியவா விபூதி ப்ரசாதத்தை இட்டுக் கொண்டார். சால்வையைப் போர்த்திக் கொண்டார். புடவையையும் மேலே போட்டுக் கொண்டார்.

என்னைப் பார்த்து, "என்ன கோவிலுக்குப் போகலாமா? நேற்றைக்கு கும்பாபிஷேகம் ஆகிவிட்டது. நான் போக வில்லை எனக்குக் காமாட்சியைப் பார்க்க வேண்டும்.. போகலாமா?" என்று கேட்டார்.

"ஒரு குழந்தை தன் தாயைப் பார்க்க எப்படி ஆவலாக இருக்குமோ, அப்படி ஓர் ஆவல்!"

"என்னை ஏன் கேட்கிறீர்கள் நீங்கள் விரும்பினால் போகலாம் என்றேன்."

"நீதானே என்னை எங்கும் போகக் கூடாது என்று இங்கு கலவையில் உட்கார வைத்தாய்.." என்று நான் மூன்று வருஷங்களுக்கு முன், அவர் கால் சக்கரங்கள் அழியாமல் இருப்பதற்காகச் சொன்ன வார்த்தைகளை மீற முடியாமல் என்னிடம் கேட்டார்.

"அன்று மாலை நான்கு மணிக்கு நடக்க ஆரம்பித்து மறு நாள் மாலை நான்கு மணியளவில் காஞ்சி போய்ச் சேர்ந்தோம்."

கோவிலில் சென்று அம்பாளை தரிசித்துப் புஷ்பம் போட்டு மாலை சார்த்தி புடவை சாத்தி அழகு பார்த்தார். பின் எங்களுக்குப் ப்ரசாதம் கொடுத்து, ஆச்சார்யாள் சன்னிதிக்கு வந்து தரிசித்து, அங்கேயே வாய் திறந்த வாறு படுத்து விட்டார்.. அவ்வளவு அசதி.

அப்போது அவருக்கு தொண்ணூறு வயசு... பின் பழமும் பாலும் கொடுத்து சாப்பிடச் சொன்னேன். மூன்று பழத்துண்டுகளும் பாலும் சாப்பிட்டு துயில் கொண்டார்.

"மறு நாள் கொட்டகைக்குச் சென்று ஸ்னானம் செய்து, ஈரத்துணியுடன் காமாக்ஷிக்கு அங்கப்ரதக்ஷிணம் செய்தார். உடம்பெல்லாம் ரத்தப் புள்ளியாக தோற்றம். முதல் முதலாக காமாக்ஷியை அங்கப்ரதக்ஷிணம்செய்தவர் மஹாபெரியவா தான்!"

அதே வேகத்தில் கிளம்பி 25 கிலோ மீட்டர் நடந்து கலவை சென்றுவிட்டார்!

"இந்தத் தென்பும் மனோ திடமும் நம்மில் யாருக்காவது வருமா? சாக்ஷாத் ப்ரத்யக்ஷ பரமேச்வரன்!"

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஜன ஸமூஹத்துக்குப் பொதுவாக அநுபவங்களை நானாவிதமான ருசி பேதங்களில் நுகர்வதுதான் இயற்கை குணம். ஆஹாரம் பல சுவைகளில் இருக்கணும். ஒன்றே இருந்தால் திகட்டிப் போகிறது. கதை, நாடகம் என்றாலும் பல ரஸங்கள் இருக்கணும். பாட்டு என்றால் பல ராகங்களில், தாளங்களில் இருக்கணும்; விறுவிறுப்பாகவும் வேணும், விளம்பமாகவும் வேணும். உபாஸனை என்று வரும்போதும் இப்படி நானா தினுஸாக உள்ள வைசித்ரியம் (விசித்ரத் தன்மை) வேண்டும். முடிவிலே ஸமாதி யோகம், வேறே கலப்பேயில்லாமல் ஒரே ஒரு உணர்வாக, ‘ஏகப் பேருணர்வாக’ என்பார்கள், அப்படி மனஸின் ஆட்டமே இல்லாமல் ஆகவேண்டுமென்றாலும், அது எங்கேயோ எப்போதோ எவருக்கோதான் லபிக்கிற ஸ்திதி. அந்த ஸ்திதிக்குப் போவதற்கே, அலை பாய்கிற இந்த மனஸை வைத்துக் கொண்டுதான் உபாஸனையை ஆரம்பிக்கும்போது அலை அலையாகப் பாய்ந்தாலும், பாய்கிறதெல்லாம் நம்மை ஸம்ஸாரத்தில் முழுக்கடிக்கிற அலைகளாக இல்லாமல்,
ravi said…
ஏதோ ஒரு தினுஸில் ஏதோ ஒரு அளவில் ஈச்வர ஸ்மரணத்தில் நனைப்பதாக இருக்கட்டும் என்றுதான் வைசித்ரிய ருசி கொண்ட மனஸுக்குப் பிடித்த மாதிரியே ஏக பரமேச்வரன் பல திவ்ய ரூபங்கள் எடுத்துக்கொண்டு பல விதமான பலன் தருவது; பூஜா பத்ததியையும் பல விதமாகக் கொடுத்து, ஒன்றுக்கு (ஒரு தெய்வத்துக்கு) வில்வம், ஒன்றுக்குத் துளஸி, ஒன்றுக்கு வெல்லச் சீடை, ஒன்றுக்குக் கொழுக்கட்டை என்று வைத்திருப்பது எல்லாம். இதுதான் பெரும்பாலான ஜனங்களுக்கு அதாவது ‘வழக்கு’ என்பது.

ravi said…
ஈச்வரனின் விளையாட்டில் இதற்கு ‘விலக்கு’ ம் கொஞ்சம் கொஞ்சம் உண்டு. சிலபேருக்கு இஷ்ட தெய்வம் என்று ஒன்று, அதனிடமே அத்யந்தமான பக்தி என்று ஏற்படுகிறது. விதவிதமாக தெய்வ பேதங்களைப் பூஜிக்க வேண்டுமென்று தோன்றாமல் இவர்களுக்கு இஷ்ட தெய்வத்திடமே முழு பக்தியுமாக இருக்கிறது. இன்னொன்றைப் பூஜிப்பதில்லை என்ற அநன்ய பக்தியோடு, ஏகாந்த பக்தியோடு ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்டு ஆராதிக்கிறார்கள். இவர்கள் ஏகமான பரமாத்ம சைதன்யத்தின் பரிபூர்ண விலாஸமாகவும் தங்கள் இஷ்ட தெய்வமே இருக்கிறது, அதுவே முழுமுதற் கடவுள் என்று கொண்டு எல்லாவிதமான பலன்களையும் அதனிடமே கோருகிறார்கள். அதை ஏதோ ஒரு குறிப்பிட்ட பலன் தருவதாக மட்டும் நிறுத்திவிடுவதில்லை.
ravi said…
இப்படி முருக பக்தர்கள், தேவி பக்தர்கள், விஷ்ணு பக்தர்கள், அந்த விஷ்ணுவிலும் ஏதோ ஒரு அவதாரமான ராமனை மட்டும் தான் பக்தி பண்ணுபவர்கள், க்ருஷ்ணனை மட்டும்தான் பக்தி பண்ணுகிறவர்கள் என்று ஒரே மூர்த்தியை பிடித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். பூர்ண ப்ரஹ்ம சக்தியான பரமாத்மாவும் அந்த ஒரு மூர்த்தியின் மூலமே இந்த பக்தர்களுக்கு ஸகல விதமான பலன்களையும் அநுக்ரஹிக்கிறது.

ஆனால் இப்படி சிவோபாஸனைதான், அம்பாள் உபாஸனைதான், ராமனோ க்ருஷ்ணனோ எவரோ ஒருத்தருக்குத்தான் மனஸைப் பூர்ணமாகக் கொடுத்து பக்தி பண்ணுவது என்று இருக்கிறவர்கள்கூடப் பிள்ளையாரை மட்டும் தள்ளிவிட முடிவதில்லை. ‘சுக்லாம்பரதரம்’ குட்டிக்கொள்ளாமல் அவர்களும் இஷ்ட தெய்வ உபாஸனை பண்ண முடிவதில்லை. இஷ்ட தெய்வத்தைத் தவிர ஏனைய தெய்வங்களில் எதுவும் வேண்டாமென்று மற்ற தெய்வங்களை விட்டு விட்டாலும் பிள்ளையாரை மாத்திரம் அப்படி விடமுடிவதில்லை.

இப்படிப்பட்ட அநன்ய பக்திக்காரர்கள் குறைச்சல் தான். பொதுவாக பலவேறு தெய்வங்களையும் அது அது தருகிற பலன்களுக்காக வழிபடுவதாகத்தான் காணப்படுகிறது. ஒரு கோவிலுக்குப் போனால் எத்தனை ஸந்நிதி? ஒவ்வொரு ஸந்நிதிக்கும்தான் போய் தர்சனம் பண்ணி வணங்குகிறோம். சிவன் கோவிலில் உள்ள ஸந்நிதிகள் பெருமாள் கோவிலில் இருக்காது; அதே மாதிரி அங்கேயிருக்கிற ஸந்நதிகள் இங்கே இருக்காது. நாம் என்ன பண்ணுகிறோமென்றால் ஈச்வரன் கோவிலுக்குப்போய் தரிசனம் பண்ணினபிறகு பெருமாள் கோவிலுக்கும் போகிறோம். காஞ்சீபுரம் மாதிரிப் பல தெய்வங்களில் ஒவ்வொன்றையும் மூல மூர்த்தியாக வைத்துப் பல ஆலயங்கள் உள்ள ஊர்களில் நாம் காமாக்ஷி, ஏகாம்ரேச்வரர், வரதராஜா ஆகிய ஒவ்வொருவருடைய கோவில்களுக்கும், இன்னும் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கான குமரக் கோட்டம்,- சித்ரகுப்தனுக்குக் கோவிலிருக்கிறதா? ஸரி, அதற்கும் போய்- இப்படி எல்லா தெய்வங்களையும்தான் தர்சிக்கிறோம். எந்தக் கோவிலுக்குப் போனாலும் அங்கே இந்த விக்நேச்வரர் மட்டும் இல்லாமலிருக்கமாட்டார். பெருமாள் கோவிலானாலும் விஷ்வக்ஸேனர் என்ற பெயரில் நாமத்தைப் போட்டுக்கொண்டு வந்து நிற்பார்! நம்முடைய நமஸ்காரத்தை வாங்கிக்கொண்டு விடுவார்!
(இன்று சங்கடஹரசதுர்த்தி)
ravi said…
🌹🌺“.. *எல்லா திவ்ய தேசங்களிலும் திருவாய்மொழி சேவிப்பதற்கு முன் மதுரகவியாழ்வார் பாசுரங்களை பாடியே தொடங்குவார்கள்* ... *என்பதை பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺"ஒரு முறை நம்மாழ்வாருக்கும் பகவானுக்கும் யார் பெரியவன் என்ற விவாதம் நடக்கிறது.நம்மாழ்வார், “பகவானே உன்னை விட நான் தான் பெரியவன்.

🌺காரணம், நீ இரண்டு உலகங்களையும் (விண், மண்) உன்னிடம் வைத்திருக்கிறாய்.அப்படி வைத்திருக்கும் உன்னையே நான் என்னுள் வைத்திருப்பதால் நானே பெரியவன் என்பதை ஒப்புக்கொள்” என்று விவாதம் வைத்து இறைவனின் கருணை பெறுகிறார் நம்மாழ்வார்

🌺பெருமானை விட நம்மாழ்வார் பெரியவர் என்றால்,
அவரை தன் உள்ளத்தில் வைத்திருக்கும் மதுகவியாழ்வார் பெரியவருக்கு பெரியவரல்லவா.
இதைத்தான் ராமானுஜ நூற்றந்தாதியில் பாடுகிறார்.

🌺பெருமாள் கோயில்களில் நம் சிரசில் வைத்து அருளப்படும்,
‘சடாரி’ என்பது பெருமாளின் திருவடி நிலைகளாகும்.
நம்மாழ்வாரே பெருமாளின் திருவடிகளில் இருப்பதால் அவரது பெயரான’ சடகோபன்’ என்னும் பெயரே சடாரி என்று மருவியது.

🌺“மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே”என்று பாடிய மதுரகவிகள் நம்மாழ்வாரின் திருவடிகளாக இருப்பவர்.

🌺எனவே கோயில்களில் நம்மாழ்வார் சந்நதியில், சென்னியில்,
சாதிக்கப் படும் திருவடிகள் ‘மதுர
கவிகள்’என்று போற்றப்படுகின்றன.

🌺மதுரகவி ஆழ்வார் பாடிய பிரபந்தம் *கண்ணிநுண் சிறுத் தாம்பு* என்று தொடங்குவதால், கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

🌺மதுரகவியாழ்வார் பெருமாளைப் பாடவில்லை. பெருமாளைப் பாடிய நம்மாழ்வாரின் பெருமையைப் பாடியதால் *கண்ணிநுண் சிறுத்தாம்பு ஆசாரிய பிரபந்தம்* என்று போற்றப்படுகிறது.

🌺எல்லா திவ்ய தேசங்களிலும் வைணவ வீடுகளில் நடக்கும் வழிபாடுகளிலும், திருவாய்மொழி சேவிப்பதற்கு முன் மதுரகவியாழ்வார் பாசுரங்களை பாடியே தொடங்குவார்கள்

🌺நம்மாழ்வார் பாடிய பாசுரங்களின் பொருள்களையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறி, நல்வழிப்படுத்தி நெடுங்காலம் மதுரகவி ஆழ்வார் வாழ்ந்து, இறுதியில் ஆசாரியன் திருவடியை அடைந்து, பரமபதத்திலும் ஆசார்யனுக்கு நித்ய கைங்கர்யம் செய்ய விழைந்தார்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 14*

ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ திகதமோ மத:
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை ரர்ச்சைந் நர: ஸதா

செந்தாமரைக் கண்ணனான பகவானை, மனிதனாகப் பிறந்தவன் எப்போதும் பக்தியுடன் அவனது பெருமைகளைச் சொல்லும் தோத்திரங்களால் வழிபாடு செய்யக் கடமைப் பட்டிருக்கிறான். இவ்வாறு வழிபாடு செய்யும் தருமத்தையே எல்லாத் தருமங்களிலும் சிறந்த தருமமாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஓம் நமோ நாராயணாய !

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
https://srimahavishnuinfo.org
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈
ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை..*

*_✍️ 08, Monday, May, 2023_*

*✶⊶⊷⊶⊷❍ ✍️ ❍⊶⊷⊶⊷✶*

https://srimahavishnuinfo.org

*🧿'' தீர விசாரிக்காமல் எதையும் நம்பாதீர்கள்..''*


*♻️ஒரு நிகழ்வை நாம் நம்புகின்றோம் என்பதற்க்காகவும், விரும்புகின்றோம் என்பதற்க்காகவும், அப்படி நடக்க வேண்டும் என்று நம் எதிர்பார்ப்பு என்பதற்க்காக, மட்டும் அது உண்மையாகி விடாது.*

*♻️எதையும் கேள்வி கேட்கின்ற,தீர விசாரித்து பரிசோதனை செய்து தெரிந்து கொள்கின்ற அறிவு நமக்கு அவசியம் இருக்க வேண்டும்..*

*♻️யார் எதைச் சொன்னாலும் அது உண்மை தானா? என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அறிவார்ந்த மனிதனாக வளர அதுவே வழி*

*♻️நம் அய்யன் திருவள்ளுவர் கூட மிக அழகாகச் சொல்லி உள்ளார்.*

*♻️எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப் பொருள்மெய்ப் பொருள் காண்பதறிவு என்று.*

*அதாவது.,*

*♻️எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல், உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவது தான் அறிவுடைமையாகும்..*

*♻️‘இவ்வளவு ஏன்? புத்தரே ’என் போதனைகளை யாரும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். ஒவ்வொரு வார்த்தையையும் கடுமையாச் சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தான் அவரே சொல்லி இருக்கிறார்.*

*♻️வேட்டையாடச் சென்ற ஒருவரின் கையில், பறவை ஒன்று சிக்கியது. அந்தப் பறவை, அவரிடம், உனக்கு நான் மூன்று அறிவுரைகள் தருகிறேன், என்னை விட்டு விடு என்று கெஞ்சியது.*

*சரி, அந்த அறிவுரைகளைச் சொல் என்று கேட்டார் அவர்.*

*♻️அதற்கு அந்தப் பறவை, உன் கையிலிருந்து என்னை விட்டு விட்டதற்குப் பிறகு முதல் அறிவுரை சொல்கிறேன் என்றது.*

*♻️நான் மரத்தில் போய் உட்கார்ந்த பிறகு, இரண்டாவது அறிவுரையையும், நான் அதிலிருந்து பறந்ததற்குப் பிறகு மூன்றாவது அறிவுரையையும் சொல்கிறேன் என்று சொன்னது பறவை.*

*அவரும் அந்தப் பறவையை, தனது பிடியிலிருந்து விட்டார்.*

*♻️அப்போது அந்தப் பறவை, முதலில் உன் கடந்தகாலத் தவறுகளையும், நீ இழந்தவைகளையும் எண்ணி சுமைகளாக்கி, உன் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாதே என்று சொன்னது.*

*♻️பின்னர்,அருகில் இருந்த மரத்திற்குச் சென்று உட்கார்ந்த பின், யார் எதைச் சொன்னாலும், அதை உன் அறிவு கொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பி விடாதே. உன் அறிவு கொண்டு நீ சிந்தனை செய்தால் தான், எதையும் நீ சரியாகச் செய்ய முடியும் என்று தனது இரண்டாவது அறிவுரையைச் சொன்னது பறவை.*

*♻️இவ்வாறு சொன்ன அந்தப் பறவை, வேடரைப் பார்த்து, ''பைத்தியக்காரா, என் உடலுக்குள் இரண்டு அற்புதமான பெரிய வைரங்கள் இருக்கின்றன, என்னை கொலை செய்திருந்தால் அவற்றை நீ அடைந்து இருக்கலாம்.உன் பிடியிலிருந்து என்னை விட்டு விட்டாயே என்று சொன்னது.*

*♻️அதற்கு அந்த மனிதர், ''சரி இப்ப என்ன, விட்டு விட்டேன், வேதனை தான், பெரிய இழப்பு தான், பெரிய தவறு தான் என்று சிறிது நேரம் புலம்பி விட்டு, அந்த மூன்றாவது அறிவுரையைச் சொல் என்றார்.*

*♻️அதற்கு அந்தப் பறவை,உன் கடந்த காலத் தவறுகளையும்* *நீ இழந்தவற்றையும் எண்ணி நொந்து போகாதே என்று,* *நான் உனக்கு முதலில் சொன்னது நினைவு இருக்கிறதா, ?*
*நீ அதைத்தான் இப்போது செய்கிறாய் என்று சொன்னது.*

*♻️அடுத்து, இரண்டாவது அறிவுரையாக, யார் எதைச் சொன்னாலும், அதை உன் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பி விடாதே என்று சொன்னேன்.*

*♻️இவ்வளவு சிறிய பறவையாகிய என் வயிற்றில் இவ்வளவு பெரிய இரண்டு வைரங்கள் இருக்கின்றன என்று, நான் சொன்னால் அதை நீ நம்பிய உனது அறிவற்றதனத்தை என்ன சொல்வது?*

*♻️எனவே உனக்கு எது சொன்னாலும் பயன்படாது என்பதே மூன்றாவது அறிவுரை என்று சொல்லி விட்டுப் பறந்தது, அந்த அறிவாளிப் பறவை.*

*😎ஆம்.,நண்பர்களே !*

*🏵️தீர விசாரிக்காமல் எல்லாவற்றையும் நாம் கண்ணை மூடிக் கொண்டு நம்பிக் கொண்டு இருக்கிறோம். எதையும் அறிவு கொண்டு சிந்திப்போம்..*

*⚽தீர விசாரித்து எது உண்மை,எது பொய் என்று அறிந்து வாழ்க்கைப் பாதையிலே நடைபோட்டு முன்னேறுவோம்.. வெற்றி பெறுவோம்.*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
  ★  Mahavishnuinfo ★
   ஆன்மீக வழிகாட்டி       
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
08.05.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 54)

Sanskrit Version:

अर्जुन उवाच

स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव।
स्थितधीः किं प्रभाषेत किमासीत व्रजेत किम्।।2.54।।

English Version:

Arjuna Uvacha

sThithaprajnasya kaa bhaashaa
samaadhisthasya keshava |
sthiradhidh kim prabhasheta
kim aasita vrajeta kim ||


Shloka Meaning

Arjuna proceeds to enquire Bhagvan on the characteristics of the man of steady wisdom.

O Krishna ! (Krishna is addressed as Keshava). What are the characteristics of a man of steady wisdom? How does the man merged in the super conscious state sit and move ?

Arjuna was anxious to know the characteristics of the man of steady wisdom, the man of self realization, the Jivanmukta.

Shri Krishna proceeds to explain the qualities of sthithaprajna upto the completion of the second chapter.

Jai Shri Krishna 🌺
ravi said…
#ஸ்ரீலலிதாஸ்தவரத்னம்

காதம்ப விபினவாடீம் அநயோர் மத்யபுவி கல்பிதாவாஸாம் கலயாமி ஸூநகோரக
கந்தளிதாமோத துந்தில ஸமீராம் ||

வெள்ளி - தங்கக் கோட்டைகளிடையே, இருக்கை கொண்ட கடம்புத் தோட்டம் பூக்களும் மொட்டுகளும் வெளியிடுகிற கனத்தமணம் நிரம்பிய காற்றுடன் உள்ளது. அதனைத் தியானம் செய்கிறேன். (26)
ravi said…


பழனிக் கடவுள் துணை - 08.05.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-42

வேற்படையின் புகழ்!!

மூலம்:

சூலா யுதக்கைப் பெருமான்கண் ஈன்ற சுதன், தொனிக்கும்
கால யுதக் கொடி ஆடும் பழனிக் கடவுள், நெடு
மாலா யுதந்திரும் பச்செயல் ஆதிய வண்புகழ்தோய்
வேலா யுதத்தைத் தொழுதே உய்ந் தாரும் வெகுதொண்டரே (42)

பதப்பிரிவு:

சூலாயுதக்கைப்பெருமான், கண் ஈன்ற சுதன், தொனிக்கும்
காலயுதக் கொடி ஆடும் பழனிக் கடவுள், நெடு
மால் ஆயுதம் திரும்பச் செயல் ஆதிய வண் புகழ் தோய்
வேலாயுதத்தைத் தொழுதே உய்ந்தாரும் வெகு தொண்டரே!! (42)

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

எம் பெருமான் பழனியாண்டவனின் வேல்படையின் சிறப்பைப் பற்றிப் பேசும்முகமாய் இந்த 42 வது அலங்காரத்தை சுவாமிகள் புனைந்துள்ளார்.

சூலாயுதம் என்ற ஆயுதம் கையில் ஏந்திய பெருமான், சிவபெருமானின் நெற்றிக்கண் ஈன்ற மைந்தன், ஒலிக்கும் சேவலைக் கொடியாய்க் கொண்டு, அக்குக்குடக் கொடி ஆடும் எம் பெருமான் பழனிக் கடவுள் திருக்கையில் விளங்கும், திருமாலின் சக்ராயுதம் திரும்பப் பெற உதவியதும் ஆகிய சொல்லவொண்ணா பெரும்புகழ் உடைய வேலாயுதத்தைத் தொழுதே உய்ந்தாரும் அநேக தொண்டரே!!

காலநேரம் கருதாது, கண்ணிமைக்கும் கணத்தில் காக்கும் கண்ணீன்ற கடவுள்கையாயுதமும், காலாயுதமுண்டேயெமைக் காக்க! வேல், சேவல், மயில் இருக்குக் காவலுக்கு! காலா, உனக்கென்ன இங்கே வேலையிருக்கு?

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! 🙏
ravi said…
🌹🌺 “A simple story explaining about a devotee who made Lord Shiva his friend through his sweet songs 🌹🌺

-------------------------------------------------- ------

🌹🌺 “Sundaramurthy Nayanar is one of the four venerated Samayakuras in Saivism and one of the sixty-three Nayanmars.


🌺 Sundaramurthy Nayanar was born in Tirunavalur in Tirumunapapady to a Sadianar-musician couple. He belongs to Adi Saiwar clan. His birth name is Nambiaruran.


🌺 Nambiaruran is shortened to Aruran. He is known by that name because Lord Shiva called him Sundarar after seeing his beauty.


🌺 When Sundarar was playing in the street as a child, he saw King Narasinghamuniyarayar of Tirumunapadi. The boy took Sundaran to the palace and taught him all the arts like a prince.


🌺When he reached marriageable age Sundarar was arranged to marry the daughter of Satangavi Sivacharya in Puttur.


🌺 On the day of the wedding, the Lord came there in the form of an old man, showed him a scroll said to have been written by Sundar's father, and said that Sundar and his descendants were his slaves.


🌺 When the marriage was interrupted, Vayothikar entered the temple with Sundarar and suddenly disappeared. Sensing that the Lord himself had come and saved him, Sundar sang his first Devara Padhikam, "Pittha Parai Sudi".


🌺 Lord Shiva made Lord Shiva his friend through his sweet songs. He went to every place of Shiva and worshiped the Lord by chanting Devara Padhikams.

🌺 Lord with devotion depended on the way of companionship called "Saka Margam". Considering the Lord as his companion, he asked for and received everything he needed.

🌺 In the Devara padikam which he sang beginning with "Neeela Ninandadiyen", we can see him asking the Lord for help in bringing the paddy that he had born in Kundalur to his village.

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
Shriram

9th May

*A Sacred Atmosphere and Moral Conduct*



See that the atmosphere in your home is pure, peaceful, and holy. It should altogether be so agreeable and surcharged with affection that a visitor should feel reluctant to leave it. Acquire learning, all types of amenities, a good house, and all kinds of prosperity, live in royal comfort if you can afford it; but believe firmly all the while that it is all the will of God; keep your heart overflowing with love and gratitude for Him. Never waste time in futile argument. Public esteem is highly dangerous; one easily gets addicted to it and pursues it; in course of time, the action which gave rise to that esteem stops, and the esteem dies down, but not the hankering for it. Even the bravest of warriors is a victim of some passion or desire which ultimately leads him to ruin. He may outshine others in his particular prowess or skill, but to his particular weakness he falls an easy prey. Do not be trapped by sensuous love, nor succumb to envy and hatred; such love is as pernicious as hatred.

To forget God is always harmful, whether caused by comfort in life or by misery. Never play the hypocrite; I would by far prefer your doing nothing to indulging in hypocrisy; indeed, I would implore you never to pose as a saint.

Do your duty towards everyone, and always remember Nama, and be ceaselessly aware of His presence and power. The company of the saintly is necessary for this purpose. Many of us assert being in saintly company; but, then, how can we justify our being no better than other, common people, in our behaviour? The obvious answer is that we have not devoted ourselves to what they love, namely, nama.

After imparting the Supreme knowledge, Lord Krishna directed Uddhava to go and meet the gopis (milkmaids) of Gokul. On seeing how indissolubly their identity was merged into God, he was so convinced of the ease, simplicity, charm and efficacy of the love for Nama, that he returned to the Lord, praying for the grant of that love, in place of dry, harshly logical Knowledge. So I would urge you to implore Rama for nothing but true, intense love for His name. Love for Nama should, indeed, be the sole and last desire of any person.

* * * * *
ravi said…
[09/05, 07:24] +91 96209 96097: *விஸ்தாராய நமஹ*🙏🙏
தரமத்தை பரவ செய்பவர்
[09/05, 07:24] +91 96209 96097: *தருணீ* தாபஸாராத்⁴யா தனுமத்⁴யா தமோபஹா🙏🙏
இளமை தோற்றத்துடன் தடைகளை நீக்கி காம்ய பலனை அருள்பவள்
ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை.*

*_✍️ 09, Tuesday, May, 2023_*
*✶⊶⊷⊶⊷❍ ✍️ ❍⊶⊷⊶⊷✶*

https://srimahavishnuinfo.org

*🧿'' பிறரை மகிழ வைத்து மகிழுங்கள்''*

*♻️வாழ்க்கைப் பற்றிய புதிர்கள் ஏராளம் உள்ளன. அதில் ஒன்று மகிழ்ச்சியைத் தேடி மனிதனின் நீண்ட போராட்டம்.*

*♻️ஏழை, பணக்காரன், அதிகாரம் படைத்தவர், பாமரன், அறிவாளி என எத்தனை விதமானவர்களை அழைத்து வந்தாலும் அவர்களுக்குள் எவ்வளவு வேறுபாடுகள் இருப்பினும் மகிழ்ச்சியை அவர்கள் தேடி அலைவது மட்டும் ஒரே பொதுக்காரணியாக இருந்து வருகிறது.*

*♻️வாழ்க்கையின் அழகு என்பது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை.*

*♻️உங்களால் அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதிலே தான் இருக்கிறது...*

*மகிழ்ச்சி என்பது போய் சேரும் இடம் அல்ல. அது ஒரு பயணம்...*

*மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை. அது நிகழ்காலம்...*

*மகிழ்ச்சி என்பது ஏற்றுக் கொள்வது அல்ல. அது ஒரு முடிவு...*

*♻️ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச் சென்றாள்.*

*♻️அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு..எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணருகின்றேன். அர்த்தமே இல்லாமல், இலக்கே இல்லாமல் வாழ்க்கை போய்க் கொண்டு இருக்கிறது.*

*♻️என்னிடம் அளவு கடந்த பணமும்,சொத்தும் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும், மகிழ்ச்சியும் மட்டுமே. என் மகிழ்ச்சிக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்றாள்.*

*♻️"கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலகத்தில் தரையை கூட்டிக் கொண்டிருந்த ஒரு பணிப்பெண்ணை அழைத்தார்.*

*♻️அந்த பணக்காரப் பெண்ணிடம், " நான் இப்பொழுது பணிப்பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் அவர் பேசுவதை மட்டும் கேளுங்கள் என்றார்.*

*♻️பணிப்பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்லத் தொடங்கினாள்..*

*♻️"என் கணவர் இறந்த மூன்றாவது மாதம் என் ஒரே மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்லை. யாரிடமும் சிரிக்க முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.*

*♻️இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் போது ஒரு பூனை என்னைப் பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று மழை பெய்துக் கொண்டு இருந்தது , எனக்கு பூனையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வரச் செய்தேன்.*

*♻️மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனைப் பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது.*

*கடந்து போன மூன்று மாதத்தில் நான் முதல் முதலாகப் புன்னகைத்தேன்.*

*♻️நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு செயல் என்னை மகிழ்ச்சி அடையச் செய்கிறது எனில், ஏன் இதைப் பலருக்கு செய்து நான் ஏன் மனநிலையை மாற்றிக் கொள்ளக் கூடாது என யோசித்தேன்.*

*♻️அடுத்த நாள் நோய் வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன்.*

*♻️இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி, அவர்தம் மகிழ, நானும் பெரு மகிழ்வு உற்றேன். இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா? என்பதே ஐய்ப்பாடு தான்..*

*♻️மகிழ்ச்சி என்பது, அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை இந்த செயல்கள் கண்டு கொண்டேன்."*

*♻️இதைக் கேட்ட அந்தப் பணக்காரப் பெண் ஓலமிட்டுக் கத்தி அழுதாள். அவளிடம் பணத்தைக் கொண்டு வாங்கக் கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத மகிழ்ச்சி மட்டும் அவளிடம் இல்லை.*

*😎ஆம்.,நண்பர்களே..,*

*🏵️மரங்கள் கனிகளை தருவது போல, தங்களிடம் உள்ளதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.*

*"பிறரை மகிழ வைத்து நாம் மகிழ வேண்டும்.*

*உலகம் உங்களைக் கண்டு மகிழும்"*

*உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்கும்.*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
  ★  Mahavishnuinfo ★
   ஆன்மீக வழிகாட்டி       
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 15*

பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப:
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம்!

சிறந்ததும் பெரியதுமாகிய ஒளி எதுவோ, சிறந்ததும் பெரியதுமாகிய தவமே வடிவாக உள்ளது எதுவோ, சிறந்ததும் பெரியதுமாகிய பிரம்மம் எதுவோ, சிறந்த புகலிடம் எதுவோ ஒப்பற்றதாகிய அதுவே அடையத் தக்க புகலிடம்.

ஓம் நமோ நாராயணா !

ravi said…

பழனிக் கடவுள் துணை - 09.05.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-43

ஆட்டு வாகனத்தின் வீரம்!!

மூலம்:

நாதவிந் துக்கும்அப் பால்உள்ள தாம்சுத்த ஞானம் நல்கிக்
கோதகற் றுங்குரு வான பழனிக் குகன், குதிரை
மாதவர் பற்பலர் அஞ்சவெந் தீயிடை வந்துநெடும்
சீதரன் ஊர்வரை போய்வந்த தாம் ஒரு செந்தகரே (43).

பதப்பிரிவு:

நாத விந்துக்கும் அப்பால் உள்ளதாம் சுத்த ஞானம் நல்கிக்
கோது அகற்றும் குருவான பழனிக் குகன், குதிரை
மாதவர் பற் பலர் அஞ்ச வெந் தீயிடை வந்து நெடும்
சீதரன் ஊர் வரை போய் வந்ததாம் ஒரு செந்தகரே!! (43).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

எம் பெருமான் பழனியாண்டவனின் மற்றொரு வாகனமான ஆட்டுக்கிடாவின் வீரம் பற்றிப் பறைசாற்றுவதற்காக இந்த 43 வது அலங்காரம் சுவாமிகளால் பாடப்பட்டுள்ளது.

லிங்கம் மற்றும் பீடம், அதாவது சிவ சக்தி ஆகிய தத்துவங்களுக்கு எல்லாம் அப்பால் உள்ள, யாருக்கும் எளிதில் எட்ட முடியாத சுத்த ஞானம் என்னும் ஞான உச்சத்தைத் தன் அன்பர்களுக்கு நல்கி, அவர்களைக்
குற்றமற்றவர்களாக்கும் ஞான குருவான எம் பெருமான் பழனிக்குகன், பழனியம்பதி உறையும் ஸ்ரீ ஞான தண்டாயுதபாணியின் மற்றொரு வாகனமான ஆட்டுக்கிடா வாகனமானது, முனிவர்கள் ஏராளமானோர் அஞ்ச, வெம்மையான நெருப்பினிடை வந்து, நெடியவனான மாயவன், அவன்தன் ஊரான வைகுண்டம் வரை போய் வந்த மாண்பை உடையது என்று உணர்க!

வீணனானவென் ஈனமகற்றி ஞானமருளும் ஞானவானே! உருவில்லாவென் மருவகற்றியென்னையும் உருப்படவைக்க அரும்பாடுபடுமென் ஒரே குருவே! ஆட்டுக்கிடாவாகனரே! எவ்வினையிலும் நான் மாட்டாது உன் அருள் காட்டு!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺 “A simple story explaining about Perumal who wanted to free Maharishi from his curse 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 "Once upon a time Sage Sudhapas was bathing in Nupura Ganga on Alaghar Hill. He did not notice Sage Durvasa passing by. Enraged by this, Durvasa cursed Sage Sudhapas to turn into a frog.

🌺 Sundararaja Perumal, known as Kallazhagar, incarnated and disappeared saying that he would restore Sage Sudhapas from Ichapa. Sage Sudhapas, known as 'Manduga Maharishi' due to his frog form, performed penance on the banks of river Vaigai known as Vegavathi in Thenur.

🌺Perumal came down from his abode on Alaghar Hill to free Manduka Maharishi from his curse.

🌺Kallagar Koil is a Perumal (Vishnu) temple in the village of Alagar Koil in the Madurai district of the southern Indian state of Tamil Nadu.

Built in the Dravidian style of architecture, this temple is glorified in the Divya Prabandham of the Azhwars of the 6th-9th centuries. It is one of the 108 Divyadeshas of Lord Vishnu.

🌺 In this temple, Perumal is called Kallazhaka and his wife Lakshmi Thirumal. In the Sangha literature and Nalayira Divya Prabandham sung by Alwars, this temple is referred to as Tirumaliruncholai.

🌺 The black stone wall surrounding the temple surrounds all the shrines of this temple. The temple has seven Rajagopurams and is surrounded by a large fort. Part of it is ruined.

🌺Perumal appeared as Kallazhaga to remove the curse received by Sage Sudhapava from Sage Durvasa. The temple follows the South style of worship. Daily six-day puja and many annual festivals are held in the temple.

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
-----------------------------------------

🌹🌺 Sarvam Shri Krishnarppanam 🌹🌺
ravi said…
🌹🌺“ *மகரிஷியினை சாபத்திலிருந்து விமோசனமளிக்க எண்ணிய பெருமாள் ... பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺"ஒரு சமயம் சுதபஸ் முனிவர் அழகர் மலையில் உள்ள நூபுர கங்கையில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாகச் சென்ற துர்வாச முனிவரைக் அவர் கவனிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், சுதபஸ் முனிவரை தவளையாக மாறுமாறு சபித்தார்.

🌺கள்ளழகர் என்று அழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள் அவதரித்து இச்சாபத்தில் இருந்து சுதபஸ் முனிவரை மீட்டெடுப்பார் என்றும் கூறி மறைந்தார். தவளை வடிவம் காரணமாக ‘மண்டூக மகரிஷி’ என்று பெயர் பெற்ற சுதபஸ் முனிவர், தேனூரில் வேகவதி என்று அழைக்கப்படும் வைகை நதிக்கரையில் தவம் செய்தார்.

🌺மண்டூக மகரிஷியினை சாபத்திலிருந்து விமோசனமளிக்க எண்ணிய பெருமாள் அழகர் மலையில் உள்ள தனது உறைவிடத்திலிருந்து இறங்கி வந்தார்.

🌺கள்ளழகர் கோயில் என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் கோவில் என்னும் கிராமத்தில் உள்ள பெருமாள் (விஷ்ணு) கோயிலாகும்.

🌺திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோவில், 6-9-ஆம் நூற்றாண்டுகளில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தில் போற்றிப் பாடப்பட்டுள்ளது. இது விஷ்ணுவின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.

🌺இக்கோயிலில் பெருமாள் கள்ளழகர் என்றும் அவரது மனைவியான லட்சுமி திருமகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.சங்க இலக்கியங்களிலும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் இக்கோயில் திருமாலிருஞ்சோலை என்று குறிக்கப்படுகிறது.

🌺கோயிலைச் சுற்றியுள்ள கருங்கல்லாலான மதில் சுவர் இக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் சூழ்ந்துள்ளது. ஏழடுக்கு ராஜகோபுரத்தைக் கொண்ட இக்கோயில் ஒரு பெரிய கோட்டையால் சூழப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி பாழடைந்துள்ளது.

🌺துர்வாச முனிவரிடமிருந்து சுதபவ முனிவர் பெற்ற சாபத்தைப் போக்க பெருமாள் கல்லழகராகத் தோன்றினார். இக்கோயில் தென்கலை வழிபாட்டு முறையை பின்பற்றுகிறது. கோயிலில் தினசரி ஆறுகாலப் பூஜையும் ஆண்டு விழாக்கள் பலவும் நடத்தப்படுகின்றன.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


*
ravi said…
*ஶ்ரீ ராம ரக்ஷா* *ஸ்தோத்ரம்*

ஜகஜ³்ஜைத்ரைக மன்த்ரேண ராமனாம்னாபி⁴ ரக்ஷிதம் ।

ய: கண்டே² தா⁴ரயேத்தஸ்ய கரஸ்தா²: ஸர்வஸித்³த⁴ய: ॥ 13 ॥

வஜ்ரபஞ்ஜர நாமேத³ம் யோ ராமகவசம் ஸ்மரேத் ।

அவ்யாஹதாஜ்ஞ: ஸர்வத்ர லப⁴தே ஜயமங்க³ல்த³ம் ॥ 14 ॥
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 41*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐

*வாலி வதம்*

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
ஆஞ்சநேயர் மெதுவாக எழுந்து சென்று ஜாம்பவானை தட்டி எழுப்பினார்

"சுவாமி, யுத்தம் ஆரம்பிக்கப்
போகின்றது -

வாலி வீர மரணம் எய்துவதை நீங்கள் பார்க்க வேண்டாமா? 

ஜாம்பவான் துள்ளிக்குத்தித்து எழுந்தார் --

அடடா ராமர் முன்னிலையில் தூங்கி விட்டேனே

"வெட்கத்துடன் நெளிந்தார். 

சுக்ரீவன் கதாயுதத்தை சுழட்டி வாலியின் மீது எறிந்தான் -

வாலி சிரித்தபடியே அதை கையில் வாங்கி அதையே திரும்பி சுக்ரீவனிடம் அனுப்பினான் -

மீண்டும் சுக்ரீவனுக்கு அடி  பலமாக பட்டது -

இந்த தடவை அவன் சோர்வடையவில்லை

- ஒவ்வொரு அடிக்கும் ராம நாமத்தை உச்சரித்தான் -

விழுந்த அடிகள் அவனை அசத்தவில்லை,

மயில் இறகினால் தன்னை யாரோ  வருடுவதைப்போல் சுக்ரீவனுக்கு பட்டது -

பஞ்சினால் அவனுக்கு யாரோ மாலை தொடுத்து போட்டதைப்போன்ற உணர்வு ...

முகத்தில் தெளித்த இரத்தங்கள் ராம நாமத்தை உச்சரிக்கும் உதடுகளை தேன் போல் சுவைக்க வைத்து ஓடின . 

நேரம் ஆக ஆக சுக்ரீவனனின் உடல் பலத்தில் பாதி வாலிக்கு சென்று கொண்டிருந்தது,

ஆனால் அவன் மன பலமோ எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ராம நாமத்தை சொன்னதால் உயர்ந்து நின்றது.

இன்னும் ஒரே ஒரு அடி, வாலி அடித்திருந்தால் சுக்கிரீவன் இந்த உலகத்தை விட்டு பிரிந்திருப்பான் --

வாலி சுக்ரீவனனின் மார்பில் அமர்ந்து அவன் கழுத்தை வேகமாக அமுக்கினான் -

திண்டாடும் சுக்ரீவனனின் மூச்சிலே திணறாமல் வெளி வந்தது ராம நாமம். 

சுக்ரீவா - இதோ இந்த அடியுடன் உன் கதை முடிந்தது -

இதோ வாங்கிக்கொள் -

கையை மேலே உயர்த்தினான் வாலி

-- உயர்ந்த கைகள் - "ஐயோ அம்மா" என்று கத்திய வாலியை கட்டிக்கொண்டது --

வாலியின் மார்பிலே ஆழ பதிந்தது ராம பாணம் -

துடித்தான் வாலி ,

துவண்டான் மணல் மீது , கதறினான் வலியினால் ---  

ஒரு பெரிய மலை அவன் மார்பின் மீது அமர்ந்ததைப்
போன்று உணர்ந்தான் -

மார்பில் தாரா தவழ்ந்து தவழ்ந்து பூசிய சந்தனம் சிவப்பு நிறத்தில் மண்ணில் கொட்டியது .... 🐒🐒🐒
ravi said…
வாலியின் கதறல் அந்த காட்டையே கலக்கியது -

மரத்தில் அமர்ந்து இருந்த பறவைகள் திக்குத் தெரியாமல் பறந்தன --

பூமியில் தான் நில நடுக்கம் ஏற்பட்டதோ என்று நினைத்த விலங்குகள் தங்கள் உயிரைக்
காப்பாற்றிக்கொள்ள எல்லா திசைகளிலும் தெறிக்கட்டு ஓடின -

மற்ற வானரங்கள் எங்கே தொங்கிக்
கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் கிடைத்த பொருட்களில் தலை கீழாக தொங்கி கிடந்தன 

ஆஞ்சநேயரும் ஜாம்பவானும் வாலியின் கதறலை கேட்க முடியாமல் தங்கள் காதுகளை பொத்திக்
கொண்டனர் -

ஜாம்பவான் தனக்குள் சொல்லிக்கொண்டார்

" வாலி உன்னை அழிக்க இந்த ராமனாலும் முடியாது,

ஆனால் நீயே உன்னை அழித்துக்கொண்டாய்

– உன் அழிவிற்கு காரணம் நீதான் -

உன்னை சரணடைந்தான் சுக்ரீவன் -

நீயே கதி என்று கதறினான் --

உன்னை சரணடைந்தவனை நீ உதாசீனப்
படுத்தினாய் --

அதுவே உனக்கு அழிவை தேடித்தந்தது .." 

ஆஞ்சநேயர் முதல் முதலாக கதறி கதறி அழுதார் --

வாலி உன் வீரம் என்ன? பக்தி என்ன? ஞானம் என்ன?

எல்லாவற்றையும் பெற்றுருந்தும் பேராசை, பெண் ஆசை என்ற கொடிய ஆசைகளுக்கு அடிமையாகி போனாயே --

உன் அழிவுக்கும் ராம பாணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

---- நீ அழிந்து நாங்கள் வாழவேண்டுமா??? 

தாரா ஓடி வந்தாள் -- விழுந்து கிடந்த வாலியை தன் மடியில் சாய்த்துக்
கொண்டாள் -

முகத்தில், மார்பில் கொட்டிக்
கொண்டிருந்த இரத்தத்தை தன் புடவையை கிழித்து அவனுக்கு கட்டுப்போட முயற்சித்தாள் -

இரத்தம் அவள் அறிவுரைகளை கேட்காமல்

விழுந்து கிடந்த வாலியைப்போல அவள் போட்ட கட்டுக்களை மதிக்காமல் பீறிக்கொண்டு வெளி வந்து கொண்டே இருந்தது -----

*ஆவும் அழ அதன்* *கன்று அழ அன்று* *அலர்ந்த*
*பூவும் அழ....."*

வாலியைக் கண்டு அழாத உயிர்கள் அங்கு ஒன்றுமே இல்லை 🐒🐒🐒
ravi said…
*வேண்டும் அம்மா* 🙏

அன்பு மிக நிறைந்த மனம் வேண்டும்

அன்னையுன் திருவடி நிழல் வேண்டும்

சின்ன இதழில் குறு நகை வேண்டும்

உன்றன் அருட்பார்வை யென்றன் திசை வேண்டும்

சுவாசத்துடன் உன்நினைவே ஓட வேண்டும்

நெஞ்சத்தின் துடிப்பு உன்னைப் பாட வேண்டும்

எந்த நிலையிலும் உன்னை நாட வேண்டும்

உன்றன் அருளையே என்றும் தேட வேண்டும்

வந்தவினை வருவினை போக வேண்டும்

வெந்த மனம் உன் நினைவில் ஆற வேண்டும்

நெஞ்சம் உன்றன் கஞ்சப் பதம் தாங்க வேண்டும்

கொஞ்சு தமிழ் கொண்டு உன்னைப் போற்ற வேண்டும்
ravi said…
*20*

*இடை*

மாதேவன் ஆடாமல் அசையாமல் செய்கின்ற மகத்தான நூலானது

வண்டாடும் பூங்காவைக் கண்டாரும் காணாத வடிவான கொடியானது

மாதேவி சக்திக்கும் மணவாளன் சக்திக்கும் மடல்போடும் இடையானது

மலையேறும் ஞானிக்கு இருகாலும் சறுக்காமல் வழிகாட்டும் துணையானது

ஆதார உமையாளின் இடையென்ற ஓரங்கம் அகிலத்தின் கலையாகுமே !

அடி வான நிறம்போல ஒளிகாட்டும் திருமேனி அருள் பொங்கும் நகையாகுமே !💐💐💐
ravi said…
வர்ஜிதா - இல்லாமலிருத்தல்
*❖ 195 தோஷ வர்ஜிதா* = மாசற்றவள்
ravi said…
வர்ஜிதா - இல்லாமலிருத்தல்
*❖ 195 தோஷ வர்ஜிதா* = மாசற்றவள்
Chabdramouli said…
மிகவும் நன்றி. அபிராமியின் கடைக்கண் பார்வையும் பரிபூர்ண அருளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்🙏🙏🙏
ravi said…
[09/05, 07:50] Chandramouli: 😢
[09/05, 07:53] Metro Ad Vipul: 🙏🏻🙏🏻🙏🏻அருமையான பதிவு
ravi said…
You could have given it a try .... Anyhow my views are as follows

🪷 Hanuman 's is also equally blessed like Vali but accepted in all humility HE wanted to serve as an army chief to Sukreeva .

🪷 Secondly Sukreeva was defeated badly by Vali and if Hanuman kills Vali , nobody would accept Sukreeva as their King .

He could fight as a representative but not as a replacement .

🪷 Normally Jambavan plays a pivotal role in bringing out the inner strength of Hanuman .

But he also chose to be quiet for the reasons best known to him

💐Above all Vali was very pious knew Vedas and also Sama Gana to please lord Shiva .

💐Hanuman felt such a noble soul should be won by a person superior to him and grant mukthi to Vali hence he preferred not to fight directly with Vali

Yes it is debatable and no conclusive answer is possible but the above are crossing my mind when the question was raised .

🙏🙏🙏
1 – 200 of 701 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை