Posts

ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 2 - ஸ்லோகம் - 1 to 10-திருமேனியின் சௌந்தர்யம்

Image
  தசகம் 2 - ஸ்லோகம் - 1  ஸூர்யஸ்பர்தி⁴கிரீடமூர்த்⁴வதிலகப்ரோத்³பா⁴ஸிபா²லான்தரம் காருண்யாகுலநேத்ரமார்த்³ரஹஸிதோல்லாஸம் ஸுநாஸாபுடம் । க³ண்டோ³த்³யன்மகராப⁴குண்ட³லயுக³ம் கண்டோ²ஜ்ஜ்வலத்கௌஸ்துப⁴ம் த்வத்³ரூபம் வநமால்யஹாரபடலஶ்ரீவத்ஸதீ³ப்ரம் ப⁴ஜே ॥ 2-1॥ சூரியனை விடப் பிரகாசமான கீரிடம் (  பர்தி⁴ = போட்டிப்போடக்கூடிய ) ஊர்த்வ திலகம் விளங்கும் நெற்றிப்பிரதேசம்  கருணை பெருகும் கண்கள் ( காருண்யாகுலநேத்ர) கசிவுடைய புன்னகையின் உல்லாசம்  அழகிய நாசி ( ஸுநாஸாபுடம்) கன்னங்களில் பிரகாசிக்கும் மகர குண்டலங்கள் கழுத்தில் ஒளிரும் கௌஸ்துப மணி (( கண்டோ²ஜ்ஜ்வலத்கௌஸ்துப⁴ம்) வன மாலையும் ( வைஜயந்தி மாலை ) முத்துமாலையும் ஸ்ரீ வத்ஸமும் உடைய மார்பு ( மஹாலக்ஷ்மி உறையும் மார்பு ) இப்படி உமது ரூபம் விளங்க உனை தியானிக்கிறேன் உன் அருளால் குருவாயூரப்பா !! திருமேனியின் சௌந்தர்யம்  With a crown which rivals the Sun (in brilliance) by the upright mark (tilak of sandal paste) whose forehead is made more resplendent, the compassionate eyes, the charming smile, the shapely nose, the cheeks reflecting the ...

ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 1 - ஸ்லோகம் -3 to 10

Image
ஸ்லோகம் -3 வடிவழகு - சத்வ குணம் மட்டுமே கொண்ட மேனி  எங்கும் நிறைந்த பிரபுவே!  மூவுலகிலும் மகிமை மிக்கதை க்  காட்டிலும் மகிமை மிக்கதும் , மனதை கவர்வதைக் காட்டிலும் மேலான கவர்ச்சி படைத்ததும் ஒளிக்குவையைக் காட்டிலும் ஒளி மிக்கதும் , இனிமையிலும், அழகிலும் ஒப்புயர் வற்றதும் , ஆச்சரியத்திலும் ஆச்சரியமானதும் ஆகிய உமது வடிவழகு , உலகில் யாருக்குத்தான் அதில் ஆசையை வளர்க்காது ? ஸத்வம் யத்தத் பராப்⁴யாம்  அபரிகலநதோ நிர்மலம் தேந தாவத்³து பூ⁴தைர் பூ⁴தேன் த்³ரியைஸ்தே வபுரிதி ப³ஹுஶ: ஶ்ரூயதே வ்யாஸவாக்யம் ।  தத்ஸ்வச்ச²த்வாத்³ யத³ச்சா²தி³த பரஸுக²சித்³க³ர்ப⁴ நிர்பா⁴ஸரூபம் தஸ்மின்  த⁴யா ரமன்தே ஶ்ருதிமதிமது⁴ரே ஸுக்³ரஹே விக்³ரஹே தே ॥ 1-3॥ பகவான் திருமேனி ரஜோ குணம் தமோ குணம் தீண்டாத வடிவம் - சுத்த சத்வ த்தமயமான தூய்மையான மேனியைக்கொண்டவர் . நம் உடம்பு உள்ளே இருக்கும் ஜீவாத்மாவை மறைத்துவிடும் - ஆனால் பகவானின் மேனி சுத்த சத்வ குணத்தினால் உருவானதால் அவன் உள்ளே இருக்கும் பரமாத்ம ஸ்வரூபம் மறைக்கப்படுவதில்லை . பகவானின் திருமேனி அவன் ஸ்வரூபத்தையும் காட்டுகிறது .. மஹான்கள் அனுபவித்து மகிழ்க...