Posts

Showing posts from April, 2020

பச்சைப்புடவைக்காரி-நடமாடும் தெய்வம்

Image
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் நடமாடும் தெய்வம் பெரியவா கை தூக்கி ஆசிர்வாதம் செய்யும் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன் .  -- ஏனோ இனம் புரியாத துக்கம் தொண்டையை அடைத்தது -  _ கண்கள் என் அனுமதி பெறாமல் அணை போட்ட கண்ணீரை திறந்து விட்டன _ --  எவ்வளவு பெரிய மகான் , நடமாடும் தெய்வம் நம்மிடையே வாழ்ந்தார் என்பதை நினைக்கும் பொழுது மேனி சிலிர்த்தது -  உடம்பெல்லாம் புல்   அரித்தது ---  எவ்வளவு சாதனைகள் , எவ்வளவு ஆச்சரியங்கள் , எவ்வளவு அதிசயங்கள் அவர் நமக்கு காண்பித்தார் -  இறைவனுக்கு நடுவில் நந்திகேஸ்வரர் இருப்பதைப்போல் நமக்கும் இறைக்கும் நடுவே பாலமாக இருந்து தெய்வத்தை உணர வைத்தார் -  அன்று   அருமை பெருமைகள் பலரை எட்ட வில்லை ஆனால் இன்று நமக்கு எட்டுகிறது அவரோ எட்டிப்பிடிக்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார் ....  இருக்கும் போது என்றுமே எவருடைய அருமை பெருமைகளை நாம் உணர்வதும் இல்லை - பாராட்டுவதும் இல்லை ....  இதை நாம் ஒரு பெரும் கொள்கையாகவும் ,  பரம்பரை