Posts

Showing posts from January, 2023

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 37 -அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ --பதிவு 44

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  44 அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ  இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் வஸ்திரத்தைக் (ஆடை) கொண்டு இடையை-இடைச்சரிவை அலங்கரித்தவள்  என்று பார்த்தோம் .. அருணா எனும் அடை மொழி அடிக்கடி வருகிறது .. அதை இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம் இன்று சிந்தூ அருண விக்ரஹாம் இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியான ஸ்லோகத்தில் வருகிறது என்று முன்பே பார்த்தோம்  . சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம். இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியதால் உண்டானது.  அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான். அப்பொழுதே அம்பாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள். ஏன் உருவத்தோடு தோன்றினாள். அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு. ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ?  அவள் எப்படியிருப்பாள் ? " "தாம் அக்னி வ

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 36 -பதிவு 43

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  43 36.स्तनभारदलन्मध्यपट्टबन्धवलित्रया - ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா - அம்பாளின் இடையில் வயிறு பாகம் என்று ஒன்று இருக்குமானால் அதில் மூன்று வரிகள் போல் சுற்றிக் கொண்டிலிருக்கும் கொடிகள் போல் காணப்படுமாம். அதிலிருந்து ஓஹோ இடை என்று ஒன்று இருக்கிறது அம்பாளுக்கு என புரிந்துகொள்ளலாம் ஸ்தனபார = கனக்கும் மார்பகங்கள் தலன் = ஒடிவது மத்ய = வயிற்றுப்பகுதி - இடை பட்டபந்த = ஒட்டியானம் வலித்ரயா = மூம்மடிப்புகள் ❖ 36 ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா = கனத்த மார்பகத்தை தாங்குவதால் வயிற்றுப்பகுதியில் மும்மடிப்பும், மார்பகத்தின் பாரத்தால் ஒடியும் மெல்லிய இடைக்கு ஒட்டியானமும் கொண்டு திகழ்பவள். ஸ்தனங்களின் அழகையும் பாரத்தையும் குறிப்பிடும் இடங்களில் பிரபஞ்சத்திற்கே அமுதூட்டும் கனத்த மார்பகத்தின் அழகை, உலகன்னையின் பரந்த அன்பின் அம்சமாகக் காணலாம். பதிவு  44 37 . அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ; இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் வஸ்திரத்தைக் (ஆடை) கொண்டு இடையை-இடைச்சரிவை அலங்கரித்தவள் 🌷🌷🌷 என்று பார்த்தோம் .. அருணா எனும் அடை மொழி அ

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 34 & 35

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  41 34 नाभ्यालवालरोमालिलताफलकुचद्वयी - நாப்யாலவாலரோமாலி லதாபலகுசத்வயீ -- அற்புத பெண்ணுக்குரிய உடலமைப்பு கொண்டவள் அம்பாள்.  பெண்மை தாய்மை. அம்பாள் அழகிய  சர்வலோக மாதா.💐💐💐 நாப்யாலவால  = தொப்புள்கொடியிலிருந்து  ரோமாலி  = முடி  லதா  = கொடி ஃபல = கனிகள்  குச த்வயீ  = இரு மார்பகங்கள்  தொப்புளியிலிருந்து தோன்றிய படர்கொடியினின்று விளைந்த இரு கனிகளென  விளங்கும் மார்பகங்களைக் கொண்டவள் 👏 👏👏       👌👌👌👌👌👌👌👌👌 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  42 35   लक्ष्यरोमलताधारतासमुन्नेयमध्यमा  லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய மத்யமா | இல்லையோ என்னும்படியாக  ஓடிவது போல் இடை கொண்ட ,  கொடியிடையாள் லலிதாம்பிகை என்கிறார் ஹயக்ரீவர், கடலையே குடித்த பெரிய தொப்பைகாரர்  அகஸ்தியரிடம். அவரும் தொப்பையை தடவிக்கொண்டே  ஆமாம் என்கிறார்.💐💐💐 லக்ஷய = கண்ணுக்கு புலப்படும் ரோம  = முடி  லதா = கொடி  தாரத  = புறப்படுதல்  சமுன்னேய  = முடிவுக்கு வருதல்  மத்யமா  = இடுப்புப் பகுதி - இடை  35 லக்ஷயரோம லதா தாரத சமுன்னேய மத்யமா* = கொடி போன்ற இடுப்பில் புலப்படும் மெல்லிய ரோம