Posts

Showing posts from May, 2020

பச்சைப்புடவைக்காரி-நீயல்லால் தெய்வம் இல்லை*💐💐💐

Image
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் நீயல்லால் தெய்வம் இல்லை* அம்மா -- எவ்வளவோ தவம் நான்  செய்திருந்தால்  குண்டலினி சக்தியை நீயே விளக்கி  சொல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கும்!! ---  குழந்தைகள் கையில் தங்க வளையல்களை கொடுத்து நீங்கள் இதையும் உங்கள் விளையாட்டு பொருள்களில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றால் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காது --  ஏன் என்றால் தங்கத்தின் மதிப்பு அந்த உண்மையான தங்கங்களுக்குத் தெரியாது -  அதைப்போல் வேதங்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காதவள் தினமும் நேரம் தவறாமல் என்னைத் தேடி வந்து என்னை புதுப்பிக்கின்றாயே தாயே  -  உன் அருமையை இன்னும் என்னால் அந்த குழந்தைகளைப்போல் புரிந்து கொள்ள முடியவில்லை அம்மா ---  என்னை மன்னித்துவிடு... கண்கள் அணையை திறந்து விட்ட நீரைப்போல் பாய்ந்து ஓடியது ..... பச்சைப் புடவைக்காரி என்னை தன்  மடியில் சாய்த்துக்கொண்டாள் ---   கண்மூடித்தனமாக இருப்பவர்களுக்கு நான் தெரிவதில்லை - கண்ணை மூடிக்கொண்டு என்னையே நினைப்பவர்களுக்கு மட்டுமே தெரிவேன் ---  சரி இன்று அடுத்த ஆதார சக்கரம் - பார்ப்போமா ?  -- அநாகதம் உங்கள் உடலில் இது நான்காவது ஆதார சக்கரம் ... அநாகதம்

பச்சைப்புடவைக்காரி- என் நெஞ்சே நீ வாழும் எல்லை

Image
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் என் நெஞ்சே நீ வாழும் எல்லை ஆஹா இன்னும் கொஞ்ச நேரத்தில் என் தாய் வந்துவிடுவாள் - இதுவரையில் அவள் சொன்னது மனதில் ஆழமாக பதிந்து விட்டது அவள் அருளால் ---  ஆனாலும் அவள் ஏதாவது கேள்விகேட்டால் எனக்குப்பதில் தெரிய வேண்டுமே - மனதில் வேண்டிக்கொண்டேன் - அம்மா நீ ஏதாவது என்னை கேள்விகேட்டால் பதில் சொல்லும் வரமும் நீதான் எனக்குத் தரவேண்டும் ......  தாழம்பூவின் நறுமணம் - உலகையே ஆளும் மாமேரும் வருகிறாள் பராக் பராக் என்று மதுரை கிளி சொல்ல பாதங்களில்  விழ தயாரானேன் --- சொன்ன நேரத்திற்கு ( என்னுடைய கடிகார நேரம் அல்ல ) வந்துவிட்டாள் பேரழகி அம்மா இன்ற ஆதார சக்கரத்தை சொல்வதற்கு முன் உண்மையான பக்தி அல்லது சரணாகதி எப்படி இருக்க வேண்டும் என்பதை கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா ? என்று கெஞ்சினேன் --- சரி ரவி ஒரு சிறுகதை சொல்கிறேன் - நீயே புரிந்துகொள்வாய் --- ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது புது மனைவியை ஆசையுடன் கப்பலில் வெளிநாட்டுக்கு தேன் நிலவுக்கு அழைத்துச் சென்றார் --- விரும்பி கட்டிக்கொண்ட கல்யாணம் - அந்த புது மணப்பெண்ணுக்கு அவரைப்பற்றி நன்றாகத் முன்பா

பச்சைப்புடவைக்காரி - நம சிவாய எனும் சொல்லும் சக்கரம்

Image
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள்  நம சிவாய எனும் சொல்லும் சக்கரம் அடாடா நேற்று அம்மாவிடம் மூலாதாரத்தைப்பற்றி கேட்டுவிட்டு மற்ற ஆதார சக்கரங்களை கேட்காமல் விட்டு விட்டோமே - விளக்கமாக அவளைத்தவிர வேறு யாரால் சொல்ல முடியும் ? சாவி கொடுத்தபின் கடிகாரம் 7யை எட்டி மீண்டும் நின்று விட்டது -  இந்த கடிகாரம் குண்டலினி மாதிரி மேலே போகவே மாட்டேங்குதே என்று மீண்டும் சரி செய்ய அதை கையில் எடுத்தேன் -  அதை திறந்து பார்த்தால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு அதில் spare parts இருந்தது - வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டபோது வாங்கிய கடிகாரம் - வயதிற்கு மீறிய அனுபவம் --  சரி அருகில் உள்ள கடைக்கு எடுத்து சென்றேன் -- அவன் சார் உயர்ந்த ரக பேரீச்சப்பழம்  - வாயில் போட்டால் கரைந்து போகும் 100கிராம் தரேன் எடுத்துட்டு போங்க என்றான் - என்னப்பா கடிகாரம் ரிப்பேர் செய்ய வந்தால் எதை எதையோ என் தலையில் கட்டுகிறாயே ....  இல்லை சார் - நீங்கள் கொண்டு வந்த இந்த கடிகாரத்திற்கு 100 கிராம் தான் தரமுடியும் என்றான் - கண்களில் கண்ணீர் வந்தது என் அப்பாவையே அவனிடம் கொடுத்துவிட்டு வருவதைப்போல இருந்தது --- அப்படியே திரும்பி கொண்டு வந

பச்சைப்புடவைக்காரி----அமிர்தத்தை பொழியும் பாம்பு

Image
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் அமிர்தத்தை பொழியும் பாம்பு சுவற்றில் அப்பா வாங்கிக்கொடுத்த கடிகாரம் - ஏறி சாவி கொடுக்கவேண்டியது - மிகவும் பழசானாலும் அப்பா ஆசை ஆசையாய் வாங்கிக்கொடுத்தது - தூக்கிப்போட்டு வேறு வாங்கிக்கொள்ள மனம் இல்லை - சரியாக 6 மணி காட்டி விட்டு நின்று விட்டது --- மனம் வேறு விதமான எண்ணங்களில் ஆழ்ந்து போனது. ஆறு என்பது அற்புதமான எண் . பரதேவதையின் ஆளுமைக்குட்பட்ட எண் . சுக்கிர கிரகத்திற்கு அடையாளமாக உள்ள எண் . அம்பிகை மனித உடலில் ஆறு ஆதாரங்களாக விளங்குபவள் . இதனால் தேவி ஷட்சக்ரமாதா எனப் போற்றப்படுகிறாள் . அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றாள் அவ்வை பாட்டி இறைவனோடு ஆத்மாவை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் அறிய வாய்ப்பு இந்த மனித பிறவியில் தான்   கிடைக்கின்றன. இன்று பச்சைப்புடவைக்காரி வந்தால் இந்த ஆறு ஆதார சக்கிரங்களை பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் -- குண்டலினியைப்பற்றி ஒன்றுமே தெரிந்துக்கொள்ளாத ஜடமாக எவ்வளவு நாட்கள் தான் இப்படி வாழ்வது ? கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு ஏன் நெய்க்