Posts

Showing posts from September, 2019

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 4

Image
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 4 பரமதத்தனுக்கு பயம் வந்து விட்டது ..  ஒரு பெண் தெய்வத்தையா மணந்து கொண்டோம் ..?. அந்த உலக மாதாவுடனா நான் இவ்வளவு நாட்களாக குடும்பம் நடத்தினேன் ?  ஐயோ இந்த பாவத்தை எவ்வளவு பிறவிகள் எடுத்து தீர்க்கப் போகிறேன் ...? எவ்வளவு முட்டாள் நான் .... புலம்பினான் .. கதறினான் ...  பிராயச்சித்தம் உடனே  செய்யவேண்டும் என்றே வியாபாரம் செய்வதாக சொல்லி வீட்டை விட்டு அதாவது புனிதவதியை விட்டு விட்டு கிளம்பினான் ...  கால்கள் அவனை எங்கோ இழுத்துச் சென்றது ... முகத்தில் பரிதாபத்துக்குரிய தாடி முல்லை கொடி போல் படர்ந்தது ...  செடியில் வளர்ந்த பஞ்சு அவன் கண்களில் வந்து அமர்ந்து கொண்டது ...  செவிகள் கொஞ்சம் கேட்க்கும் சக்தியை இழந்தன ... வயிறு பசி எனும் வார்த்தையை மறந்து போயின ...  நெஞ்சம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்றே சொல்லிக்கொண்டது...  வெளி வரும் மூச்சும்  உள்ளே போகும் காற்றும் ஐந்தெழுத்தின் நறுமணத்தை பரப்பியது உள்ளும் வெளியும். போன கணவன் திரும்பி வந்து விடுவான் என்றே புனிதவதி காத்திருந்தாள் ... நாட்கள் பல நகர்ந்தன ...

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 3

Image
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 3 ஈசன் வந்து அமர்ந்து உணவு அருந்திய இடம் தகதகதக வென்று பொன் போல் ஜொலித்தது ..  பரமதத்தன் நடுப்பகலிலே வீட்டுக்கு வந்து போசனம் பண்ணும் பொழுது, புனிதவதி எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து, கலத்திலே வைத்தார்.  பரமதத்தன் மிக இனிய அந்தக்கனியை உண்டு அதன் இனிய சுவையினாலே திருத்தியடையாமல் மனைவியை  நோக்கி, "மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை" என்றான்.  ஒன்றுமே புரியாமல் தவித்தாள் புனிதவதி .. கணவனுக்கு பிடிக்காத ஒன்று இந்த சிவனடியார்களை உப்சரிப்பது , அவர்களுக்கு அமுது படைப்பது அதுவும் தான் சாப்பிடுவதற்கு முன்னால் ....  உண்மை சொன்னால் கணவன் மனம் புண் படும் .. மிஞ்சி இருந்த பழம் ஒன்றுதான் .. அதையும் அவனுக்கே தந்தாகி விட்டது ...  கணவனோ இன்னோர் பழம் வேண்டும் என்கிறான் .... கண்களை மூடினாள் ..  காதலை கண்ணீராக கசிந்து உருகினாள்.. ஓதுவார் தம்மை நன்னெறி படுத்தும் நமச்சிவாய நாமத்தை , அந்த நாதனின் நாமத்தை வேண்டினாள் ...  அவள் கரங்களில் வந்து விழுந்தது முக்தி எனும் மாம்பழம் ... அது வெறும் பழம் அல்ல ... அவள் பக்தியின் உச்சம் . சரன

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 2

Image
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 2 நாளொரு வண்ணமாக நாதன் தாள் பணிந்த அவளை  நாகப்பட்டணத்தில் இருக்கின்ற நிதிபதி என்பவனுடைய புத்திரனாகிய பரமதத்தனின் தாள் பாடிய அவள் தந்தை ஆசை கொண்டான் .  அழியும் மேனி மீது என்றுமே மோகம் இல்லை புனிதவதிக்கு ... காலனை காலால் உதைத்து , காமனை கண்ணால் எரித்தவன் அவளை மேலாக கொஞ்சம் இல்லற வாழ்க்கையில் பேருக்காக கொஞ்சம் திளைக்க வைத்தான் ...  புனிதவதியின் தந்தை பரமதத்தனுக்கு  விவாகஞ்செய்து கொடுத்துத் தனக்கு வேறு பிள்ளையின்மையால் அவரை நாகபட்டணத்திற்குப் போகவிடாமல், தன்னுடைய வீட்டுக்கு அருகிலே ஒருவீடு கட்டுவித்து, அளவிறந்த திரவியங்களையும் கொடுத்து, கணவனோடும் அதிலிருத்தினான். இல்லறம் எனும் நல்லறத்தை சிவ சொல்லறம் வைத்து நடத்தினாள் ... கண்ணில் கணவனை தாங்கி நெஞ்சில் கணவனை தாங்கி சொல்லில் கணிவை தாங்கி , உதடுகளை சிவா எனும் மதுரத்தை தெளித்து வாழ்க்கை எனும் தேரில் கணவனுடன் பவனி வந்தாள் ..  தம்முடைய வீட்டுக்குச் சிவனடியார்கள் வரின், அவர்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டியபடி பொன் இரத்தினம் வஸ்திரம் முதலாயின உதவுவார். இப்படி நிகழுங்காலத்தில் ஒரு

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 1

Image
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 1 நம்பன் றிருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டு மும்பர் மிசைத்தலை யானடத் தேற வுமைநகலுஞ் செம்பொன் னுருவனென் னம்மை யெனப்பெற் றவள் செழுந்தேன் கொம்பி னுகுகாரைக் காலினின் மேய சூலதனமே. தங்குபுகழ்க் காரைக்கால் வணிகன் மிக்க     தனதத்தன் றரும்புனித வதியார் மாவின் செங்கனிக டிருவருளா லழைப்பக் கண்டு     திகழ்கணவ னதிசயித்துத் தேச நீங்க வங்கவுட லிழந்துமுடி நடையா லேறி     யம்மையே யெனநாத னப்பா வென்று பொங்குவட கயிலைபணிந் தாலங் காட்டிற்     புனிதனட மனவரதம் போற்றி னாரே💐 சோழமண்டலத்திலே, காரைக்காலிலே வைசியர்குலத்திலே, தனதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். பிள்ளை வரம் வேண்டி பெண் ஒன்றை பெற்றான் ஈசன் அருளால் ... குழந்தை அது சிரித்தது ...  சிரித்த ஒலியில் சிவ நாமம் அங்கே தெளித்தது .... வளர்த்தாள் கோதையாக ... அவள் கால் பதியாத சிவ ஆலயங்கள் இல்லை ... சிவனை நினைக்காத நேரம் அங்கே அவளுக்கு பிறக்க வில்லை ... உமையவள் தன் பதியை கூட கொஞ்ச நேரம் மறந்திருக்கலாம் ஆனால் இந்த புனிதவதி ஒரு வினாடி கூட ஈசனை நினைக்காத நேரம் இல்லை ...  கனிகொண

அடியார்க்கு அடியோன் 3

Image
அடியார்க்கு அடியோன் 3 இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனை வழிவிடட்டும் என்று சொல்லச் சொன்னார், என் சாப்பாட்டை வயிறாரச் சாப்பிட்ட உங்கள் பக்தர்,  அவர் சொன்னதைச் சொன்னேன், இந்தப் பாழும் நதி அந்தப் பொய்க்கு உடன்பட்டு வழிவிட்டிருக்கிறது,  இந்த நதியை என்ன செய்தால் தகும்?'' "வா! உண்மையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த நதியை மலர்தூவி வழிபடுவோம்!''  "நீங்களுமா அதை உண்மை என்கிறீர்கள்? அப்படியானால் என் கண்ணால் பார்த்தது பொய்யா?'' "கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்யாக இருக்கலாம். தீர விசாரிப்பதுதான் மெய்,  துர்வாசர் உபவாசமிருந்தார் என்பது சத்தியம் தான்!  நதிகள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்கும்'', அது எப்படிச் சத்தியமாகும்?'' ராதை வியப்போடு விசாரித்தாள், கண்ணன் சொல்லலானான்: "அன்பே ராதா! எனக்குப் பசிக்கிறது என்றேன், ஆனால், ஒரு தட்டு உணவே போதும் என்றேன்,  நீ துர்வாசருக்கு உணவு படைத்தாய், அந்த முனிவர், தன் இதயத்தின் உள்ளி

அடியார்க்கு அடியோன் 2

Image
அடியார்க்கு அடியோன் 2 துர்வாச மகரிஷி ஞானதிருஷ்டியால் வந்திருப்பது யார் என்று உணர்ந்துகொண்டார். "கண்ணக் கடவுள் மேல் அழியாப் பிரேமை கொண்ட என் தாய் ராதா மாதாவா? என்னைத் தேடித் தாங்களே வந்தீர்களா தாயே?'' "உங்களுக்குப் பசிக்கிறதென்று அவர் சொன்னார், என்னைத் தாய் என்கிறீர்கள் நீங்கள்!  பசிக்கும் குழந்தைக்கு உணவு தரவேண்டியது தாயின் பொறுப்பல்லவா?''  "எனக்குப் பசிப்பதைப் பற்றி மட்டும்தானா சொன்னார்? கண்ணனுக்கும் பசிக்குமே? அதைப் பற்றிச் சொல்லவில்லையா?'' "அதையும் தான் சொன்னார், ஆனால், நீங்கள்தான் முதலில் பசியாற வேண்டும். கணவர் காத்திருக்கலாம், குழந்தை காத்திருக்கக் கூடாது!'' ராதை இலைவிரித்து வெகுபிரியமாக உணவு பரிமாறினாள்,  பசியின் வேகமோ உணவின் சுவையோ எது காரணமோ தெரியவில்லை.  பார்க்க ஒல்லியாக இருந்த அந்த மகரிஷி, ஒரு பயில்வான் சாப்பிடுவதுபோல் வயிறாரச் சாப்பிட்டார்.  இந்தச் சாப்பாட்டு வேளையில் நடந்த இன்னொரு விஷயத்தை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை/  யமுனையில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்திருந்தது, வெள்ளத்தைப் பா

அடியார்க்கு அடியோன் 1

Image
அடியார்க்கு அடியோன் யமுனைக் கரையில் கண்ணனும் ராதையுமாக அமர்ந்திருந்தார்கள், சிலுசிலுவென்று சுகமான காற்று வீசிக் கொண்டிருந்தது, கண்ணன் தலையில் சூடியிருந்த மயில்பீலி காற்றில் படபடக்கும் அழகை ராதை ரசித்தவாறிருந்தாள், ஆனால், கண்ணன் அக்கரையையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான், ""என்மேல் ஒருசிறிதும் அக்கறையில்லாமல் அக்கரையில் என்ன பார்வை?'' கேட்டாள் ராதை, ""எனக்குப் பசிக்கிறது!'' ராதை பதறினாள், ""அடடா! இதோ உடனடியாக நானே சமைத்து உங்களுக்கு உணவு எடுத்து வருகிறேன்,அதற்கு அக்கரையைப் பார்ப்பானேன்?'' "" அக்கரையிலும் ஒருவருக்குப் பசிக்கிறது!'' ""யார் அவர்?'' ராதை கூர்மையாகத் தானும் அக்கரையைப் பார்த்தாள், அங்கே ஆலமரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பது தெரிந்தது, ""துர்வாச மகரிஷி!'' என்றான் கண்ணன், ""அறிவேன்! கோபத்திற்கும் அதனால் தாம் கொடுக்கும் சாபத்திற்கும் பெயர்பெற்றவர்!'' ""ராதா! என் மனத்தில் நீ இருக்க

அளவே இல்லா அழகன் 3

Image
அளவே இல்லா அழகன் 3  வழக்கம்போல் "கிருஷ்ண கிருஷ்ண!' என்று ஜபித்தவாறே அம்புகளைக் கண்ணனை நோக்கி எய்தான் அர்ஜுனன்.  அவனது கிருஷ்ண பக்தி காரணமாக அம்புகள் அனைத்தும் கண்ணன் கழுத்தில் பூமாலையாக விழுந்தன! கண்ணன் எய்த அம்புகளும், அர்ஜுனனின் கிருஷ்ண பக்தி அவனைக் கவசம்போல் காத்ததால், அவன் கழுத்தில் மாலையாக விழத் தொடங்கின.  இப்படிப் போர்க்களத்தில் கடவுளும் பக்தனும் மாற்றி மாற்றி மாலை மரியாதை நிகழ்த்திக் கொள்வதைப் பார்த்து நாரதர் திகைத்தார். ""கண்ணா! சூரியாஸ்தமனம் நடக்கப் போகிறது. உன் பக்தர் காலவர் சாபம் பலிக்குமாறு செய்வதாக நீ வாக்குறுதி கொடுத்திருக்கிறாய்.  அர்ஜுனனுடன் எதற்குப் போர்? நேரடியாக ஓர் அஸ்திரத்தை கந்தர்வன் கழுத்தை நோக்கி வீசு! தாமதம் வேண்டாம்!'' நாரதர் கூற்றை ஏற்ற கண்ணன் நேரடியாக கந்தர்வனை நோக்கி அம்பு வீச, அந்த அம்பு அவன் கழுத்தை அறுத்துத் தலையை ஒரே கணத்தில் மண்ணில் வீழ்த்தியது.  கந்தர்வன் மனைவி ஓடோடி வந்து அர்ஜுனன் காலில் விழுந்தாள். சுவாமி! என் கணவர் உயிரைக் காப்பதாக வாக்குறுதி தந்தீர்களே? இப்படி நடப்

அளவே இல்லா அழகன் 2

Image
அளவே இல்லா அழகன் 2.  அவர் புறப்பட்டுப் போனதை உறுதி செய்துகொண்ட பின் நாரதர் "நாராயண! நாராயண' என்றவாறு பாதிக்கப்பட்ட கந்தர்வனை நோக்கிப் புறப்பட்டார். காலவர் சொன்னது முழுவதையும் கேட்டுக் கொண்டான் கண்ணன். பக்தர்களைக் காப்பது தான் தன் லட்சியம் என்றும், அன்று மாலைக்குள் கந்தர்வன் தலையைத் தான் வீழ்த்துவது நிச்சயம் என்றும் வாக்குறுதி தந்தான். காலவரிஷி நிம்மதியாக ஆஸ்ரமம் போய்ச் சேர்ந்தார். நடந்த அனைத்தையும் நாரதர் மூலம் கேட்டறிந்த கந்தர்வன் பதறினான். ""அறியாமல் செய்த பிழைக்கு மரணதண்டனையா? கண்ணனே என்னைக் கொல்லப் போகிறானா?'' கண்ணீர் விட்டுக் கதறினான்.  கந்தர்வனின் மனைவியும் உரத்த குரலெடுத்து அழலானாள். நாரதர் அவர்களை அமைதிப்படுத்தினார்.  கந்தர்வனின் மனைவியை உடனடியாக சுபத்திரையிடம் சரணடையுமாறு வற்புறுத்தினார்.  சுபத்திரை கண்ணனின் சகோதரி மட்டுமல்ல! மாவீரன் அர்ஜுனனின் மனைவியும் கூட!  அவளைச் சரணடைந்தால் நல்லதே நடக்கும் என்றார் நாரதர். முந்தானையை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்ட கந்தர்வனின் மனைவி, விறுவிறுவெ

அளவில்லா அழகன்

Image
அளவில்லா அழகன்  அதிகாலை நேரம். தகதகவென வானில் தங்கப் பழம்போல் கதிரவன் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.  யமுனை நதிக் கரையில் சந்தியாவந்தனம் செய்துகொண்டிருந்தார் காலவ முனிவர்.  அர்க்கியம் விடுவதற்காக யமுனையின் புனிதநீரை இருகைகளிலும் அள்ளி எடுத்தார்.  கண்ணனை  மனத்தில் தியானித்து "கேசவம் தர்ப்பயாமி! நாராயணம் தர்ப்பயாமி' என்று விழிமூடி பக்தியுடன் அவர் அர்க்கிய மந்திரங்களை ஜபித்துக் கொண்டிருந்தபோது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.  அர்க்கியம் சமர்ப்பிப்பதற்காக அவர் கைகளில் எடுத்த புனித நீரில், மேலிருந்து ஏதோ வந்து விழுந்தது. கண்திறந்து பார்த்தார். அது எச்சில் தாம்பூலம்! வெற்றிலையை மென்றுவிட்டு இப்படித் தன் கைகளில் துப்பியவர் யார் என்று ஆகாயத்தைப் பார்த்தார்.  உயரத்தில் புஷ்பக விமானத்தில் மனைவியோடு உல்லாசமாகப் பறந்துபோய்க் கொண்டிருந்தான் ஒரு கந்தர்வன்.  காலவர் மனத்தில் சுறுசுறுவெனக் கோபம் பொங்கியது. ""கையிலெடுத்த புனித நீரை அசுத்தப்படுத்தினானே! இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்குள் அந்த கந்தர்வன் தலை அறுபடட்டும்,'' வாய்விட்டு சபித்தார்.

வையிர அட்டிகை

Image
வையிர அட்டிகை கோவையில் ஒரு செல்வந்தர் இருந்தார்.  அவருக்குத் திடீரென்று மிகுந்த கைவலி ஏற்பட்டது. பல டாக்டர்களிடம் காண்பித்தும் பலனில்லை.  அவர் அவஸ்தைப்படுவதைக் கண்ட அவர் மனைவியும் மிகுந்த கவலையுற்றாள். ஒரு நாள், அவர்கள் இருவரும் சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் நிகழ்த்திய 'நாராயணீய உபன்யாசம்' கேட்கச் சென்றிருந்தார்கள்.  ஸ்ரீ குருவாயூரப்பனின் பெருமைகளைக் கேட்ட அவர்கள், வீடு திரும்பியதும் அவர் மனைவி அவரிடம், கை வலி நீங்கினால் தன்னுடைய கழுத்தில் இருக்கும் வைர அட்டிகையை காணிக்கையாகச் செலுத்துவதாக வேண்டிக் கொள்ளச் சொல்ல, அவரும் அவ்வாறே வேண்டிக் கொண்டார்.   சிறிது காலத்திலேயே, அவர் கைவலி படிப்படியாகக் குறைந்தது. வேண்டிக்கொண்டபடி குருவாயூர் சென்று அட்டிகையைக் காணிக்கை செலுத்த முடிவு செய்தார்கள். அந்த அட்டிகை அவரது தாத்தா கொடுத்தது.  இதற்கிடையில், செல்வந்தர் வைர வியாபாரிகள் சிலரிடம் அதை மதிப்பீடு செய்யச் சொன்னார்.  அவர்களும் மதிப்பீடு செய்து விலையைச் சொன்னார்கள்.  குருவாயூர் சென்றார்கள். அங்கு சென்றதும், அவருக்கு தாத்தா அளித்ததைக் காணிக்கையாக்

வாழைக்கு மோக்ஷம்

Image
வாழைக்கு மோக்ஷம்  குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர்.  மலையாள மொழியில் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லும் ஞானப்பான என்னும் பாடல்களை எழுதியவர் பூந்தானம். சிறந்த கவிஞர்.  பாகவத பாராயணம், ப்ரவசனம் செய்து கொண்டே இருப்பார். முன் வரிசையில் பார்வதியும் பரமேஸ்வரனும் வந்து அமர்ந்து கேட்பார்கள் ...  கண்ணனின் குழல் ஓசை அங்கு கேட்டுக்கொண்டே இருக்கும் ...  வண்ண மயில்கள் தோகை விரித்து ஆடும் அழகில் அங்கே கண்ணனும் ஆடி வருவான் ...  மாடுகளும் அவர் ப்ரவசனம் கேட்க கூட்டம் கூட்டமாக வரும் ...  கோகலத்தை பார்க்காதவர்கள் அவர் சொற்பொழிவில் கோகலத்தையும் அங்கே துள்ளி விளையாடும் கண்ணனையும் பார்ப்பார்கள் ...  துவாரகையை  அறியாதவர்கள் கண்ணன் அரசாள்வதை பார்ப்பார்கள் , மதுரா , பிருந்தாவனம் குருஷேத்திரம் எல்லாமே அவர் சொற்பொழிவை கேட்டப்பவர்களுக்கு கண்ணெதிரே  தெரியும் ...  எல்லோரையும் பூந்தானம் கோபியர்காளாக்கி கண்ணா கண்ணா என்றே கூப்பிட வைத்து கண்ணீரில் கரைய வைப்பார் . ஒருநாள் பூந்தானம் உறங்கும்போது, அவருக்கு ஒரு கனவு வந்தது.  கனவில், வானரதம