அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 8- பதிவு 5
அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 8 பதிவு 5 கேள்வி பதில் நேரம் பதிவு 5 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* . பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . கேள்வி 8 * நான் * : பட்டரே! காலை வணக்கம் .. * பட்டர் * காலை வணக்கம் ...அலர் கதிர் ஞாயிறும் திங்களுமாய் அபிராமியை நினைப்பவர்கள் வாழ்க்கை அமையும் .. இன்று என்ன கேள்விகள் ? * நான் * ஐயனே .. மன்மதனின் கரும்பும் கனை அம்புகளும் அன்னை அபிராமியின் கரங்களுக்கு எப்படி வந்தன .. ?? மன்மதன் அம்பாளிடன் போர் செய்யவில்லையே தன் ஆயுதங்களை அவள் பாதங்களில் சரணடைய ... ஈசன் கரங்களில் தானே கரும்பு வில்லும் கனை அம்புகளும் இருக்க வேண்டும் .... ?? 🙏🙏🙏 * பட்டர் * அருமையான கேள்வி ... தீவிரவாதிகள் தோற்றுப்போனால் அவர்கள் தங்கள் ஆயுதங்களை முதலில் கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் . உண்மையான இரண்டு தீவிர வாதிகள் இருக்கிறார்கள் . ஒன்று காமன் .. பிறவியை தருபவன் .. காமத்தீயை வளர்ப்பவன் . குண்டலியை மூலாதாரத்தில் இருந்து எழும்புவதை தன் மலர் கனைகளால் தடுப்பவன் ... இன்னொரு