அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 71 ,72 & 73 பதிவு 60
அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 71 , 72,73 பதிவு 60👌👌👌 கேள்வி பதில் நேரம் பதிவு 60 🥇🥇🥇 கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான் . பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் . கேள்வி 71 நான் : ஐயனே .... நமஸ்காரம் . இறைவி அபிராமி எங்கும் வியாபித்தவள் என்று சொல்லுகிறீர்கள் .இதை தாங்கள் என்னைப்போன்ற அறிவிலிகளுக்கு புரியும் மாதிரி சொல்ல முடியுமா ? பட்டர் .. தகுதி இல்லாமல் இருப்பது தான் தகுதி என்று சொன்னேன் ஒருமுறை ... நீ அறிவிலி என்று நீயே ஒப்புக்கொண்டாய் ... பரவாயில்லை சொல்கிறேன் ... 🙌🙌🙌 பட்டர் பிரகஸ்பதி எனப்படும் தேவகுருவை மூன்று இளைஞர்கள் தேடிவந்தனர். முனிசிரேஷ்டரே! உம் சீடராக எங்களை ஏற்க வேண்டும், என்றனர். ஆளுக்கொரு கிளியைக் கொடுத்த குரு, யாரும் இல்லாத இடத்திற்குச் சென்று இந்த பறவையைக் கொன்று விட்டு வாருங்கள், என உத்தரவிட்டார். முதல் இளைஞன் கிளியை எடுத்துக் கொண்டு, காட்டுக்குச் சென்றான். ஆளே இல்லாத அந்த காட்டில், கிளியைக் கொன்று விட்டு குருவிடம் திரும்பினான். குரு