Posts

Showing posts from June, 2020

பச்சைப்புடவைக்காரி - ஜொலிக்கும் மாணிக்க மூக்குத்தி

Image
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் ஜொலிக்கும் மாணிக்க மூக்குத்தி  கம்ப ராமாயணம் படித்துக்கொண்டிருந்தேன் ... பச்சைப்புடவைக்காரி அருகில் அமர்ந்ததையும் கவனிக்காமல் - எனக்கு நானே பேசிக்கொள்வதை அன்னை கேட்டு ரசித்துக்கொண்டிருந்தாள் இராவண வதம் முடிந்து இராமன் அயோத்தி நோக்கி வந்து கொண்டிருக்கிறான். வருகிற வழியில் பரத்துவாஜ முனிவரை சந்திக்கிறான். அவர், பரதன் நிலை பற்றி இராமனுக்கு கூறுகிறார். வெயர்த்த மேனியன்; விழி பொழி மழையன்; மூவினையைச் செயிர்த்த சிந்தையன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான்; அயிர்த்து நோக்கினும், தென் திசை அன்றி, வேறு அறியான் பயத்த துன்பமே உருவு கொண்டென்னலாம்  படியான் பொருள் வெயர்த்த மேனியன்;  = வியர்வை வழியும் மேனியை உடையவன். காரணம், சாமரம் வீசக் கூட ஆள் வைத்துக் கொள்ளவில்லை விழி பொழி மழையன் ; = விழிகள் மழை போல் கண்ணீரை சொரிகின்றன மூவினையைச் = மூன்று வினைகளை, மூழுகின்ற வினைகளை செயிர்த்த சிந்தையன்; = கோபித்த சிந்தையன் தெருமரல் = மன மயக்கத்தால் உழந்து உழந்து அழிவான்; = உழன்று உழன்று அழிவான் அயிர்த்து நோக்கினும் = ஐயம் கொண்டு பார்த்தாலும் தென் திசை அன்றி = தென் திசை அல்லாது வேறு அற

பச்சைப்புடவைக்காரி -- அழியாத கோலங்கள்

Image
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் அழியாத கோலங்கள்  மிதிலையே மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. திடுக்கென்று ஒரு லேசான இன்ப அதிர்ச்சியுடன் மக்கள் மனம் பூராவும் ஆனந்தம் பொங்கிக் கொண்டிருந்தது. எதிர்பாராத வகையில் பனித்துளி ஒன்று திறந்த மார்பில் பட்டால் சிலிர்க்குமே, அந்த உணர்வு. இயற்கைக்கு முரணான இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது? ஒட்டு மொத்தமாக அனைத்து உயிரினங்களுக்குமே மனம் உற்சாகமாகத் துள்ளும்படியாகச் செய்தது எது? அதற்குக் காரணமானவனான, அப்போது அந்த ஜனகபுரிக்குள் தன் பொற்பாதங்களைப் பதித்த, ராமனுக்கே அது தெரியாது. மாமுனிவர் விஸ்வாமித்திரர் முன்னே செல்ல, அவர் வழிகாட்டலில் அவருக்குப் பின்னால் அமைதியாக ஆனால், கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான் ராமன். இவனுக்குப் பின்னால் சுற்றுமுற்றும் பார்த்தபடி, அண்ணனுக்கு எத்திசையிலிருந்தும் எந்தத் தீங்கும் நெருங்கிவிடாதபடி, பாதுகாப்பாக வந்து கொண்டிருந்தான் லட்சுமணன். அந்தப் பகலிலும் பளிச்சென்று ஒரு நிலவு தென்பட்டது ராமனுக்கு. சற்றே தலைதூக்கி, நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட அவனது பார்வையில் பட்ட அந்த நிலவும் சட்டென மேலும் ஒளிர்ந்தது.  நான்கு விழிகளின் பார்வை

பச்சைப்புடவைக்காரி - ஒரு மெழுகு வர்த்தி எரிகின்றது

Image
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் ஒரு மெழுகு வர்த்தி எரிகின்றது  ... மாண்டவி--- அதிகம் பேசப்படாத பாத்திரம்  -    கணவன் மேல் மரியாதை இருந்தாலும் இதமாக அவனுக்கு தர்மத்தைப் போதித்தவள். அன்பும், சேவையும் மட்டுமே ராமனுக்குப் பிடித்த விஷயங்கள்,யாரையும் வெறுக்க மாட்டார் என்று உணர்ந்தவள் அவள்  எதிலும் குறைவில்லை -- சங்கீதங்களில் அதிக நாட்டம் உடையவள் - வாணிதான் யாழை எடுத்து வாசிக்கின்றாளோ என்று சந்தேகம் வரும் அளவிற்கு வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவள் -  அவள் குரலின் இனிமை - இதை ரசிக்கவே ஜனகர் தினமும் பாட வைத்து அதை ரசித்த பின் உறங்க செல்வார் - தன் மகள் ஊர்மிளாவை விட அதிகமான பாசத்தை மாதவியின் மீது ஜனகர் வைத்திருந்தார் - ஞானத்தில் அவள் ஜனகரின் அறிவாற்றலையும் விட அதிக அளவு உடையவள் -- இவ்வளவு இருந்தும் அடக்கத்தில் சீதைக்கே சவால் விடும் அளவிற்கு உயர்ந்து நின்றாள்.... ஊர்மிளா, மெதுவாக மாண்டவியுடம் வந்தாள் ---  " மாண்டவி ------  எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாயே !! என்ன விஷயம்???"  -- மாண்டவி சொன்னாள் " இல்லை ஊர்மி -- நம் அக்காவிற்கு இந்த ராமன் கிடைக்கவேண்டும் , உனக்கும் அவனுடைய இளவல்

பச்சைப்புடவைக்காரி---இன்னாருக்கு இன்னார் என்று

Image
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள்  இன்னாருக்கு இன்னார் என்று அம்மா சீதா கல்யாணம் கேள்விப்பட்டிருக்கிறேன் -- ராமரின் தம்பிகளின் திருமணத்தை அதிகம் கேள்விப்படவில்லை -- வால்மீகியாகட்டும் , கம்பர் ஆகட்டும் , துளசி தாசர் ஆகட்டும் சொல்ல மறந்த கல்யாணங்கள் --- அவர்கள் செய்த தியாகங்களும் ஒன்று குறைவில்லையே --- அம்மா தாங்கள் கருணை   கூர்ந்து அவர்கள் திருமண வைபவத்தை சொல்ல முடியுமா ? சொல்கிறேன் ரவி -- ஜானகியின் திருமணம் போல் மிகவும் சிறப்பாக நடந்த திருமணங்கள் தான் அவைகளும் --- ராமர் போல் வில்லை முறித்துதான் ஒவ்வொருவரையும்  கை பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை அதே சமயத்தில் வலுக்கட்டாயமாய் நடந்த கல்யாணங்கள்  இல்லை அவை . முதலில் ஊர்மிளாவின் திருமணத்தை பற்றியும் அவள் செய்த தியாகங்கள் பற்றியும்  சொல்கிறேன் - பிறகு மாண்டவி திருமணத்தையும் சுருட்கிர்தியின் திருமணத்தையும் பார்ப்போம் ராமன் அந்த சிவதனுசுவை நெருங்கிக்கொண்டிருந்தான் -- அந்த சிவனும் ராமனை தழுவ முன்னே வந்துகொண்டிருந்தார் -- அங்கே இரண்டு சங்கமங்கள் உண்டாக போகின்ற தருணத்தில் அந்த மிதிலையே மகிழ்ச்சியில் திக்கு முக்காடிக்கொண்டிருந்தது ----- சீதைக்

பச்சைப்புடவைக்காரி --- நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்தது இல்லை .

Image
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்தது இல்லை ... அம்மா  ராவணன் சிறந்த சிவபக்தன் -- அவன் இசைக்கும் வீணையில் காம்போதியை கலந்து அவன் சாம வேதம் சொல்லும்போது அந்த கையிலாயமே உருகியதாமே அம்மா!   மிகுந்த ஞானமும் படிப்பும், அறிவாற்றலும், 1000 மதம் கொண்ட யானைகளின் பலமும் கொண்டவன் என்று கேள்விப்பட்டேன் - இப்படிப்பற்ற அறிவாற்றல் பெற்ற, தேவர்கள் ஆசிர்வாதங்களைப்பெற்ற ஒருவன் எப்படியம்மா ஒரு அரக்கனாக முடியும் -  நல்ல குணங்களும் சிவ சிந்தனையும் உள்ளவன் ஒரு ராக்ஷஸன் ஆக முடியுமா - அவன் மனதில் தீய எண்ணங்கள் வர வாய்ப்புள்ளதா?  பிறப்பால் சிறந்தவன், படிப்பினால் உயர்ந்தவன், சிவ சிந்தனையால் உயர்ந்த பதவியை அடைந்தவன் கேவலம் இன்னொருவருடைய மனைவிக்கு ஆசைப்படுவானா அம்மா - என்னால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை ---- மேலும் யாரெல்லாம் சிறந்த பாக்கியவானாக இருக்க முடியும் தாயே? ரவி   அரக்கர்கள் பலரை எடுத்துக்கொள் --  சூரபத்மன் ---மேலே பறந்து கீழே செங்குத்தாக வைத்திருந்த கதையில் விழுந்து பிறகு நெருப்புக்கொண்டத்தில் விழுந்து உயிரைவிட்டான் --  அவன் தம்பி மட்டும் காப்பாற்றாமல் இருந்திருந்தால் அ

பச்சைப்புடவைக்காரி - ஜானகீ சோக நாசநம்

Image
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் ஜானகீ சோக நாசநம் ரவி நேற்று ராமரைப்பற்றி நிறைய பேசினோம் ... பலமில்லாதவருக்கு பலம் ஸ்ரீராமசந்த்ரமூர்த்தி தான்: “நிர்பல் கே பல் ராம்”. ஆபத்து வந்து சாய்கிற சமயத்தில் யார் வந்து தாங்கிக்கொண்டு பலம் தர முடியும்? ராமன்தான்!   “ஆபதாம் அபஹர்த்தாரம்”1 என்கிறோம். “அக்ரத ப்ருஷ்டதச்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ”2 – அதாவது, உங்களுக்கு  முன்னேயும் பின்னேயும் இரண்டு பக்கங்களிலும் நம்மைச் சூழ்ந்து கொண்டு சதாவும் உங்களை  ரக்ஷிக்கிற மஹாபலவான் யார்? அந்த ராமன்தான். உங்களுக்கு  துளி ஆபத்து வருகிறதென்றாலும், அம்பை விடுவதற்கு சித்தமாகக் கோதண்டத்தின் நாண்கயிற்றைக் காதுவரை இழுத்தபடி நம்மைச் சூழ்ந்திருக்கிறான். அவனை விட்டு விலகாத லக்ஷ்மணனும் அவனோடேயே இருந்து கொண்டிருப்பான் – “ஆகர்ண பூர்ண தந்வாநௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ”3. ஆனால் இப்படிப்பட்ட புருஷச்ரேஷ்டர், வீரராகவன், விஜயராகவன் என்றே பேர் பெற்ற மஹா வீரர் ஆஞ்ஜநேயரைத் தமக்குப் பக்கபலமாகக் கொண்டதால் தான் அவதார கார்யத்தைப் பண்ண முடிந்ததாகக் காட்டியிருக்கிறார்! அம்மா இறைவன் தான் தன்  அடியார்களை எப்படி உயர்வடைய செய்கிறான் ? அவர்கள் அடையும்

பச்சைப்புடவைக்காரி - எச்சில் அங்கே அமுதமானது

Image
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் எச்சில் அங்கே அமுதமானது  அம்மா ராமாயணத்தில் தாங்கள் விளக்கமாக சொன்ன பின் எல்லா பாத்திரங்களையும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது --- என் மனதை மிகவும் கவர்ந்தவர்களில் சபரியும் ஒருத்தி --  எனக்காக இவளுடைய பக்தியை சரணாகதியை , ராமனின் மீது இவள் வைத்த பிரேமையை அடியேனுக்கு சொல்ல முடியுமா தாயே ? உங்கள் வர்ணனையில் சபரிக்கும் இதனால் கூடுதலாக புண்ணியம் சேரட்டும்  ரவி சொல்கிறேன் --- பக்தி என்பது முதல் படி , சரணாகதி என்பது கடைசி படி - அதற்கப்புறம் படிக்கட்டுக்கள் கிடையாது --- இறைவனின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கும் ...... சபரி நின்று கொண்டிருந்தது கடைசி படியில் - வைகுண்ட கதவுகள் திறக்கவேண்டி ...... அந்த காட்சியைப்பார் --- “ராம்... ராம்... ராம்... ராம்... ராம்...” வனமெங்கும் பரவியது அந்த நாமம். மரங்கள் அசைவற்று நின்றன. காற்று குளுமையாக வீசியது. பறவைகள் பறப்பதை நிறுத்தி விட்டு கிளைகளில் அமர்ந்து, ராம நாமத்தை செவி குளிரக் கேட்டன. குருதிச் சாக்கடையாக ஓடும் பம்பா நதியும் கூட, நிலைத்து நின்று சபரியின் ராம நாமத்தை கேட்டு ஆனந்தம் அடைந்தது. மலைகளின் உச்சிகள் அந்த நாமத்தை விண்ண