Posts

Showing posts from October, 2020

பச்சைப்புடவைக்காரி - ஸ்ரீ ருத்ரம் கூறும் சிவலீலை-2 - 221

Image
                                                         பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்                      ஸ்ரீ ருத்ரம் கூறும் சிவலீலை-2                                     (221) 👍👍👍💥💥💥 ‘‘அப்பனே ஈஸ்வரா, நீயோ உள்ளம் கவர் கள்வன்,என் மனமோ பிறர் பொருளை திருடும் திருடன். ஆகையால் நீ இவனை ஆட்கொண்டு, இவனை திருத்து’’ என்று ஈசனிடம் வேண்டுகிறார் சங்கரர். (சிவானந்த லஹரி - 22)   அடுத்து வேத நாயனார் பரமனை சபாபதியாக தரிசிக்கிறார். சபாபதி என்றாலே சிதம்பரநாதர் தான் மனக் கண் முன் வருவார். மனம் என்னும் மேடை, தூய்மை ஆகி வெற்றிடமானால், அதில் ஈசன் நர்த்தனம் ஆடுவான். இதுவே சிதம்பர ரகசியம். சரி சித்தம் வெற்றிடம் ஆவது எப்படி?. அது யோகத்தாலும் சாத்தியம் பக்தியாலும் சாத்தியம்.  அதைக் காட்டவே யோகத்தில் சிறந்த பதஞ்சலிக்கும், பக்தியில் சிறந்த வியாக்ரபாதருக்கும் சமமாய் அவன் ஆனந்தத் தாண்டவத்தை காட்டுகின்றான் நடராஜன்.  அவன் மட்டும் ஆட வில்லை. அவன் அடியவரையும் ஆடவும் பாடவும் விட்டுப் பார்க்கிறான். தந்தை மகனைக் கண்டு களிப்பது போல தானும் களிக்கிறான். மாணிக்கவாசகரை திருவாசகம் பாட விட்டு தானே அதை எழுதவும் செய்தா

பச்சைப்புடவைக்காரி - ஸ்ரீ ருத்ரம் கூறும் சிவலீலை 1 - 220

Image
                                                         பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்                      ஸ்ரீ ருத்ரம் கூறும் சிவலீலை-1                                     (220) 👍👍👍💥💥💥 ஓம் நமஸ்தே அஸ்து பகவன் Ōm Namashtēshtou Bhagavan விஸ்வேஸ்வராய, மஹாதேவாய, Vishvēshvarāya Mahādēvāya த்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய, Trayambakāya Tripourāntakāya த்ரிகாக்நி-காலாய Trikāgni– Kālāya காலாக்நி - ருத்ராய நீல - கண்டாய ம்ருத்யுஞ்ஜயாய Kālāgni– Roudrāya Nīl – Kandāya Mroutyougnjayāya ஸர்வேஸ்வராய ஸதாஸிவாய Sharvēshvarāya Sadāshivāya ஸ்ரீமன் மஹாதேவாய நம: Srīman Mahādēvāya Namaha ! என்னப்பா ருத்ரம் சொல்கிறாய் போலிருக்கே --- ஆமாம் தாயே புரியாமல் ஏதோ உளறுகிறேன் - எல்லாம் புரிந்தவள் நீ - ஒன்றுமே புரியாமல் வாழும் எனக்கு புரிந்தவள் கொஞ்சம் புரியும் படி சொல் அம்மா ....  சொல்கிறேன் அவசியம் எல்லோருமே தெரிந்துகொள்ளவேண்டியது ருத்ரம் - இதில் வேதம் அந்த தில்லைக்கூத்தனைப்போல் ஆனந்த நடனம் புரிவதை தரிசிக்கலாம்  சரி உனக்கு புரியும் படி சொல்கிறேன் - வரி வாரியாக சொல்வதைக்காட்டிலும் ருத்திரத்தில் இறைவன் புரிந்த லீ

பச்சைப்புடவைக்காரி - பாஸ்கர ராயர்-5 - 219

Image
                                                                பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்  பாஸ்கர ராயர்-5                                     (219) 👍👍👍💥💥💥 காசியில் இவர் இருந்தபோது இவர் ஒரு யாகம் செய்தார். அப்போது பல சாஸ்திர விற்பன்னர்கள் அங்கே வந்திருந்தார்கள். இவரிடம் பொறாமைகொண்ட பலர் இவரை அணுகிப் பல கேள்விகளைக் கேட்டார்கள்.  அவற்றிற்கெல்லாம் தக்கபடி இவர் விடையிறுத்தார். வேதம், சாஸ்திரம், மந்திர சாஸ்திரம் முதலிய பலவற்றில் அவர்கள் வினா எழுப்பினார்கள். அவற்றுக்கெல்லாம் இவர் உடனுக்குடன் விடையிறுத்து வந்தார். அவற்றைக் கேட்டுப் பலரும் இவரை வணங்கி வழிபட்டனர். லலிதா ஸஹஸ்ரநாமத்தில் "மஹாசதுஷ்ஷஷ்டிகோடி யோகினீ கண ஸேவிதா" என்பது ஒரு திருநாமம்.  "அறுபத்து நான்கு கோடி யோகினிக் கூட்டத்தினரால் போற்றி வழிபடப்படுகிறவள்" என்பது அதன் பொருள்.  ஒரு பொறாமைக்காரர் இவரை அணுகி, "அந்த அறுபத்து நான்கு கோடி யோகினிகளப் பற்றிய விவரங்களைச் சொல்வீர்களா"? என்று கேட்டார். "சொல்லுகிறேன். நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள்" என்றார் இவர். உடனே அவர் ஏடும் எழுத்தாணியும் கொண்டு வ

பச்சைப்புடவைக்காரி - பாஸ்கர ராயர்-4 - 218

Image
                                                            பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்  பாஸ்கர ராயர்-4                                              (218) 👍👍👍💥💥💥 பாஸ்கர ராயரின் வாழ்க்கையில் மற்றொரு நிகழ்ச்சியும்  உண்டு.  மாலை வேளையில் தம்முடைய இல்லத்தில் வாசல் திண்ணையில் இவர் அமர்ந்திருப்பார். தம் காலைத் தூணில் உதைந்துகொண்டு திண்ணையில் சாய்ந்தபடியே இருப்பாராம்.  திருவிடைமருதூரில் எழுந்தருளிய ஶ்ரீமகாலிங்க சுவாமியைத் தரிசித்து வருவதற்காக மாலை வேளையில் அந்த வீதிவழியே ஒரு சந்நியாசி போவாராம். அப்போதும் பாஸ்கர ராயர் தம் காலை மடக்காமல் தூணில் உதைந்தபடியே அமர்ந்திருப்பாரம். துறவியாகிய தமக்கு இல்லறத்தாராகிய இவர் மரியாதை தரவில்லையே என்று அந்தச் சந்நியாசிக்குக் கோபம். ஒருநாள் பாஸ்கர ராயர் திருவிடைமருதூர்த் திருக்கோயிலுக்குச் சென்றார். அப்பொது அந்தத் துறவியும் வந்திருந்தார். அவை இவரை கண்டதும் தம் கோபத்தை வெளிபடுத்த எண்ணிணார். அருகிலிருந்த சிலரிடம், "இவர் அகங்காரியாக இருக்கிறார். சந்நியாசியைக் கண்டால் எழுந்து நின்று வணங்குவது இல்லரத்தாருக்கு முறை. இவர் வாசல் பக்கம் காலை நீட்டிக்கொண

பச்சைப்புடவைக்காரி - பாஸ்கர ராயர்-3 - 217

Image
                                                         பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்  பாஸ்கர ராயர்-3                                              (217) 👍👍👍💥💥💥 ரவி ! இவரை பற்றி இன்னும் தெரிந்து கொள்வோம் ... ஒரு முறை இவர் திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன் முன் நின்று லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தார்.  இவர் பாராயணம் செய்ததை கேட்டு மகிழ்ந்த அம்பாள், இவர் முன் தோன்றி, இவருக்கு ஆசிர்வாதம் தந்து இதற்கு விளக்கவுரை எழுதும் படி கூறினாள்.  அம்மன் கூறியதை சிரமேற்கொண்ட பாஸ்கரராயர் திருக்கோடிக்காவல் என்ற கோயிலில் லலிதா சகஸ்ர நாமத்தின் விளக்க உரையை அரங்கேற்றி அதற்கு சௌபாக்ய பாஸ்கரம்  என்ற நாமம் சூட்டினார்.  அவர் இந்த பாஷ்யத்தைப் பன்னிரெண்டு பாகங்களாப் பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் சூரியனுடைய பன்னிரண்டு கலைகளின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  தமது பாஷ்யத்தின் முன்னுரை சுலோகம் ஒன்றில் பாஸ்கரராயர்,  கிழக்கில் பிரம்ம புத்திரா நதி ஓடும் காமரூபம்  என்ற அஸ்ஸாம்,  மேற்கில் சிந்து நதி ஓடும் காந்தார தேசம் தெற்கில் ராமரால் கட்டப்பட்ட சேது,  வடக்கில் பனி மூடிய கேதாரம்,

பச்சைப்புடவைக்காரி - பாஸ்கர ராயர்-2 ----- 216

Image
                                                              பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்  பாஸ்கர ராயர்-2                                              (216) 👍👍👍💥💥💥 அம்மா நவராத்திரி தங்கள் அருளால் இனிதே நடந்து முடிந்தது ... உங்கள் அருள் வெள்ளம் பல ஞானிகளையும் அறிந்து கொள்ள முடிந்தது ...  அந்த வரிசையில் நாம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்திற்கு உரை எழுதிய *பாஸ்கரராயரைப்* பற்றி தாங்கள் சொல்ல கேட்டுக்கொண்டு வருகிறோம் ...  மேலே சொல்ல வேண்டும் தாயே ....  நாங்கள் இன்னும் கேட்கக்கூடிய பாக்கியத்தைக் கொடு  சொல்கிறேன் ரவி ... விஜய தசமி நேற்று. என் நல்வாழ்த்துக்கள் எல்லோருக்கும் ...  தச முகனை என் அண்ணன் அழித்தான் ...  திரிபுரத்தை ஈசன் அழித்தான் ...  நான் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தேன் ..  மூவரும் நீக்கல் வேலையை அழகாக செய்தோம் ...  இந்த  மூன்று சம்பவங்களும் எதை குறிக்கிறது தெரியுமா ?  அளவுக்கு மீறிய அகம்பாவம் இராவணன் ...  உங்களுக்கு தரப்பட்ட  இந்திரியங்கள் பத்து.... அதில் ஐந்து கர்மேந்திரியங்கள் ஐந்து  ஞானேந்திரியங்கள்-வாக்கு, கை , கால் ,குதம், குறி இந்த 5 கர்மேந்திரியங்கள்.-ஞானஇந்திரியங்கள்(5)- க