Posts

Showing posts from May, 2021

பச்சைப்புடவைக்காரி -மாமனும் மருமானும் 2 -416

Image
  பச்சைப்புடவைக்காரி🙏🙏🙏     மாமனும் மருமானும் 2  *416* 🏆🏆🏆 எல்லாத் திருக்கோவில்களிலும் வேல் ஏந்தி நிற்கும் முருகப்பெருமான், *ஆவூர்ப் பசுபதீசுரம், திருச்சாய்க்காடு, திருக்கொள்ளிக்காடு, திருவையாறு*  போன்ற தேவாரப்பாடல் கண்ட திருத்தலங்களில் வில் ஏந்தும் பெருமானாக நிற்கிறார்.  எல்லாவற்றையும் விட மாமனைப் போல சங்கு சக்கரம் ஏந்தி, *அரிசில்கரைப் புதூர்* என்ற ஆலயத்தில் காட்சி தருகிறார்,  முருகக்கடவுள்.  மாலவன் போலவே மருமகனும் என்பதாகக் காட்டுகிறது.🙏🙏🙏 மாமன் திருமாலையும், மருமகன் முருகனையும் ஒப்பிட்டும் பல பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.  அருணகிரிநாதர் வடித்த திருப்புகழ் முதல் பல பாடல்களில்..  குறிப்பாக கந்தர் அலங்காரச் செய்யுள்கள் அதனை மெய்ப்பிக்கின்றன. ‘.......மாவலிபாய் மூவடி கேட்டன்று, மூதண்ட கூட முகடு முட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே’ என்கிறது ஒரு பாடல். அதாவது.. ‘மகாபலி மன்னனிடம் மூன்று அடி களைக் கேட்டு உலகளந்து, இப்பெரிய அண்டத்தின் உச்சியைத் தொடும் அளவுக்கு திரிவிக்கிரக அவதாரம் எடுத்து கால் வைத்த மகாவிஷ்ணுவின் மருமகனாகிய முருகனின் திருவடி, தேவர்கள் தலைமீது பட்டது’  என

பச்சைப்புடவைக்காரி --மாமனும் மருமானும் -415

Image
  பச்சைப்புடவைக்காரி🙏🙏🙏     மாமனும் மருமானும்   *415* 🏆🏆🏆 ரவி ... நினைத்து பார்த்திருப்பாயா நீ ... இன்றுடன் முருகனின் 99 படை அகலும் வீடுகளை பார்த்து வந்துள்ளோம் .. இன்று 100வது படை அகலும் வீடு .. இந்த புனித பயணம் ஒரு அசுவமேத யாகம் செய்ததற்கு ஈடாகும் .. பதிவுகளை படிக்கும் உங்கள் எல்லோருக்கும் புண்ணியங்கள் பொங்கி வழியும் அளவிற்கு சேர்ந்துள்ளது ...  உண்மை தாயே ... பாலோடு பழம் சேர்ந்ததை ப் போல் தாங்களே வந்து விளக்கமும் தருகிறீர்கள் ... இல்லை என்றால் புண்ணியங்கள் இப்படி பால் போல் பொங்கி வழிய வாய்ப்பே இல்லை ...  சிரித்தாள் .. சேவடி கோமளம் .. சிதறி தெளித்தன மனோன்மணிகள் பாதை எங்கும் 🙏🙏🙏 அம்மா இந்த நல்ல சமயத்தில் திருமாலையும் முருகனையும் இணைத்து அருணகிரி பாடியுள்ளதை போல கொஞ்சம் விளக்கி சொல்ல முடியுமா ?  சொல்கிறேன் ..ரவி .. சில இடங்களில் சொல்லியுள்ளேன் . இருப்பினும் நீ கேட்பதால் தொகுத்து வழங்குகிறேன் உங்கள் எல்லோருடைய நன்மைக்காகவும் .. 👍👍👏 மாமன் மாலவனுக்கும், மருமகன் வேலவனுக்கும் உன்னதமான ஒற்றுமைகள் பல இருக்கின்றன. ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் நமது பார்வையில், வள்ளி- தெய்வானை சூழ ந

பச்சைப்புடவைக்காரி-தென்சேரிகிரி 414 & 396 - post 78 contd

Image
 * பச்சைப்புடவைக்காரி* 🙏🙏🙏  *414* 🏆🏆🏆 see post 78 / 396  *தந்தைக்கு உபதேசம் செய்தவன் தந்தையிடமே உபதேசம் பெற்றான்*   1 தென்சேரிகிரி மைந்தன் முருகன் தந்தை சிவனுக்கு பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் சொன்னது சுவாமிமலையில்.  அதே மகனுக்கு தந்தை மந்திர உபதேசம் செய்தது, மந்திராசலம் என்றழைக்கப்படும் *தென்சேரிகிரியில்!*  பன்னிரண்டு கரங்களோடு போர்த் தளபதியாக, மனைவியர் சமேதராக மூலவர் முருகன் காட்சி தருகிறார்.  இடது கரத்தில் சேவற்கொடிக்கு பதிலாக சேவலையே ஏந்திய சிறப்பான அமைப்பு வேறெங்கும் காணக் கிடைக்காதது.🙂🙂🙂 கயிலையில் நந்தியம்பெருமான் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.  தேவர்கள் சூழ, முனிவர்கள் எதிரே அமர்ந்திருக்க,  அவர் எம்பெருமானின் திருவிளையாடல்கள் நடந்தேறிய தலங்களைப் பற்றியும், கோயில்கள், தீர்த்தங்களின் மகாத்மியங்களையும் விரிவாகக் கூறலானார்.  அவற்றில் ஒன்றுதான் தென்சேரிகிரியின் பெருமை. ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த ஞானப் பிழம்பான முருகப் பெருமான், சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார்.  பிறகு, தாய்-தந்தையரை சென்றடைந்தார்.  கந்தனின் அவதார காரணத்தை தகப்பன் ஈசன்

பச்சைப்புடவைக்காரி -பொள்ளாச்சி 413 -பகையை வெல்லும் 93

Image
 * பச்சைப்புடவைக்காரி* 🙏🙏🙏 ப கையை வெல்லும்   93 *413* 🏆🏆🏆 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி👍👍👍👌👌👌 1🙏🙏🙏 மூலவர் –  *சுப்பிரமணிய சுவாமி*  அம்மன் –  *வள்ளி, தெய்வானை*  பழமை –   *1000 வருடங்களுக்கு முன் ஊர் –*  பொள்ளாச்சி மாவட்டம் – கோயம்புத்தூர் மாநிலம் – தமிழ்நாடு   விவசாய வளம் கொழிக்கும் செழிப்பான ஊர் பொள்ளாச்சி.  இவ்வூரின் பெயர்க் காரணங்களை இரண்டு விதமாகக் கூறுகின்றனர்.  தமிழகத்தில் உள்ள வாரச் சந்தைகளில் பொள்ளாச்சி வாரச்சந்தை பெயர் பெற்ற சந்தையாகும்.  சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டும் அல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் வருவர்.  அப்படிப் பொருட்களின் புழக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் “ *பொருள் ஆட்சி”* என்ற பெயர் ஏற்பட்டு அது நாளடைவில் மருவி “பொள்ளாச்சி” என வழங்கலாயிற்று.  இவ்வூரில் மரம், செடி, கொடிகள் செழித்து வளர்ந்து சோலைகளாக பரிமளித்தது.  சோலைகள் பொழில்கள் என வழங்கப்பட்டன. சிற்றூர்களை வாய்ச்சி என அழைப்பர்.  பொழில்களுக்கு இடையில் அமைந்த வாய்ச்சி “ *பொழில்வாய்ச்சி* ” என வ

பச்சைப்புடவைக்காரி -  அழகு குமரன் - 412

Image
 * பச்சைப்புடவைக்காரி* 🙏🙏🙏            என் எண்ணங்கள் அழகு குமரன்  - 412   *412* 🏆🏆🏆 ரவி இன்று எந்த ஆலயமும் நாம் போகப்போவதில்லை .. குமரனின் பெருமைகளைப் பற்றி பேசுவோம் ஒரு மாறுதலுக்காக... சொல்லுங்கள் தாயே .. கொடுத்து வைத்திருக்க வேண்டும் ..உங்களிடம் இருந்து கேட்க 🦁🦁🦁 *முருகன்* -  *அழகுக் குமரன்*  அவனை நாளும் தரிசிக்கக் குறையொன்றும் இல்லையே..! கந்த சஷ்டியில், 'மாறுபடு சூரர்'களை வதைத்த திருமுகத்துக்கு உரியவரான குமரனின் தரிசனம் காண்போமே...  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பார்கள். தெய்வம், தன்னை அன்புடன் கொண்டாடி போற்றுபவர்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே, அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் வரமாகத் தருவது போலவே- குழந்தையும் தன்னிடம் அன்பு காட்டி கொஞ்சுபவர்க்கெல்லாம், தன்னிடமுள்ள எது ஒன்றையும் கேட்காமலேயே கொடுக்கக்கூடியது. 'இதனால்தான் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்று கூறியிருக்கிறார்கள். 👍👍👍 அந்த தெய்வமே குழந்தை வடிவில் இருந்துவிட்டால்..? அங்கே அன்புக்கும் அருளுக்கும் பஞ்சமே இல்லை. அப்படிக் குழந்தை வடிவத்தில் நம்மால் கொண்டாடப்பெறும் தெய்வங்

பச்சைப்புடவைக்காரி பாகை மேவிய தோகை மயில் முருகன்!🦚🦚🦚 பகையை வெல்லும் 92 -411

Image
 பச்சைப்புடவைக்காரி🙏🙏   பகையை வெல்லும் 92 🏆🏆🏆 பாகை மேவிய தோகை மயில் முருகன்!🦚🦚🦚 411 சூரர்களை வாகை சூடிய வடிவேலன் பகையை மாற்றி *பாகை* என்ற திருத்தலத்தில் அருளாட்சி செய்கிறான்.  அங்குள்ள குமரப் பெருமான் திருக்கோயிலின் திருக்கதவம் எப்படி பிரகாசிக்கிறது தெரியுமா? செந்நிறமான பவளம், பச்சை நிற மரகதம், மஞ்சள் நிறப் பொன், வெண்ணிறமான வைரம் முதலான மணிகளை அதில் பதித்துள்ளார்கள்.  அற்புதமான உயர்ந்த கோபுரம், மதில்கள் சூழ அழகு முருகனின் அருள் தரும் திருக்கோயில் காட்சியளிக்கிறது.  அங்கே குமரேசப்பெருமானை பிரம்மனும், திருமாலும், சிவபிரானும் நாள்தோறும் அன்றலர்ந்த மலர்களை அணிவித்துப் போற்றுகிறார்களாம்.  இப்படி ஓர் அரிய காட்சியைப் பார்த்து அனுபவிக்கிறார் அருணகிரி நாதர்.🦚🦚🦚 பாடு நான் மறையோனும் தாதையாகிய மாலும் பாவை பாகனும் நாளும் தவறாதே பாக நாண் மலர் சூடுஞ் சேகரா மதில் சூழ்தென் பாகை மாநகர் ஆளும் குமரேசா!’ வளம்மிக்க வயல்களும், சோலைகளும், வாவி களும், நிறைந்து விளங்கும் இந்தத் தலம் ` *தட்சிண சிவகங்கா நதி'* எனும் குசஸ்தலை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.🌸🌸🌸 பாகசாலை என்றழைக்கப்படும் இவ்வூர்,  சென்னை