Posts

Showing posts from September, 2021

அபிராமி அந்தாதி - பாடல் 69`(1) - தனம் தரும் கல்வி தரும் -

Image
                           பச்சைப்புடவைக்காரி -511 அபிராமி அந்தாதி  பாடல் 69(1) இன்றைய பாடல் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பாடல் ..  அபிராமி அந்தாதியில் இரண்டு பாடல்களை நாள் தோறும் சொல்லி வந்தால் நமக்கு மனக்குறை என்று ஒன்றுமே இருக்காது .  இந்த பாடலும் பாடல் 52 ம் ... எல்லாம் தருபவள் என்பதை கண் கூடாக அனுபவிக்கலாம்  பாடல் 52 வையம்,  துரகம்,  மதகரி,  மாமகுடம்,  சிவிகை பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,  பிறைமுடித்த ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.🙏🙏🙏 பட்டருக்கு சம்ஸ்கிருதம் நன்றாக வரும் ஆனால் பிறரை போல் அதிலேயே பாடாமல் நமக்காக சுத்த தமிழில் பாடியுள்ளார் ..  கடாக்ஷம் , கனம் இவைகள் சம்ஸ்கிருத வார்த்தைகள் .. கடாக்ஷம் என்பதை * விழியின் கடை * என்று தமிழில் அழகான சொல்லாய் மாற்றினார் ..  கண்ணோட்டம் என்றாலும் கடாக்ஷம் என்று பொருள் தரும் ...  இந்தக்காலத்தில் மாண்புமிகு என்று ஒருவரை அழைக்கிறோம் ...  அந்த காலத்தில் கனம் பொருந்திய ... என்று அழைப்பார்கள்...  அதாவது பெருமை பொருந்திய என்று அர்த்தம் ... கனபாடிகள் என்று இதிலிருந்து

அபிராமி அந்தாதி - பாடல் 68 - சிவகாமசுந்தரி சீறடிக்கே சாரும் தவம் வேண்டும்--

Image
                           பச்சைப்புடவைக்காரி -510 அபிராமி அந்தாதி  பாடல் 68 இந்த பாடலில் மீண்டும் சாந்தமாக பட்டர் ஒரு நல்ல செய்தியை தெரிவிக்கிறார்...  நேற்றைய கோபம் இல்லை ..  இன்றைய பாடலும் நாளைய பாடலும் அபிராமி என்னவெல்லாம் தருவாள் என்பதை பற்றிய பாடல்கள் ... இப்படி ஒரு கருணை தெய்வத்தை வணங்காமல் இருக்காதீர்கள் என்று ஒரு தாபத்துடன் சொல்கிறார்  *சிவகாமசுந்தரி சீறடிக்கே சாரும் தவம் வேண்டும் (பாடல் 68)* பாரும்  புனலும்  கனலும்  வெங்காலும் படர்விசும்பும் ஊரும்  முருகுசுவை  ஒளி ஊறு  ஒலி ஒன்றுபடச் சேரும் தலைவி  சிவகாம சுந்தரி சீறடிக்கே சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே👏👏👏🤝🤝🤝 அருஞ்சொற்பொருள்  :  *பார்* - உலகம்  *புனல்* - நீர்  *கனல்* - நெருப்பு  *கால்* - காற்று  *விசும்பு* - ஆகாயம்  *முருகு* - நறுமணம்  *ஊறு* - உணர்வு (தொடுதல், ஸ்பரிசம் ,  உணர்வு)  *சீறடி* - சிறிய அழகிய திருவடி தமிழில் நாம் எப்பவோ மறந்து போன சொற்கள் 👆👆👆 பூதங்கள் ஐந்து ..  ஒவ்வொன்றுக்கும் சில தன்மைகள் ( தன் முத்திரைகள் உண்டு )  முதலில் தோன்றியது *வானம்* .. ஒரே ஒரு தன்மை மட்டுமே .. ஒலி எழுப்புவது  பிறகு *காற்று* .

அபிராமி அந்தாதி - பாடல் 67 - மின்னல் போலும் உன் திருவுருவம்-

Image
                                பச்சைப்புடவைக்காரி -509 அபிராமி அந்தாதி  பாடல் 67 இன்றைய பாடல் கொஞ்சம் கடுமையான பாடல் ...  அபிராமியை வணங்குபவர்களுக்கு  என்னவெல்லாம் கிடைக்கும் ?  அவர்களின் சின்னங்கள் என்ன என்ன வென்று இது வரை சொல்லிக்கொண்டு வந்தவர்  இந்த பாடலில் எதிர்மறையான பாடல் ஒன்றை வைக்கிறார் ..  அம்பிகையை அந்த மின்னல் கொடியாளை  ஒரு மாத்திரை ( வினாடி) கூட நினைக்காதவர்கள் எதையெல்லாம் வாழ்க்கையில் இழப்பார்கள் என்பதை கோபத்துடன் சொல்கிறார் 😡😡😡😡😡 பாடலுக்குள் போகும் முன் கொஞ்சம் துணைக்கு பட்டினத்தாரையும் , அருணகிரியையும் அழைப்போம் ... * பட்டினத்தார் * ஆற்றொடு தும்பை அணிந்தாடும் அம்பல வாணர் தம்மைப் போற்றா தவர்க்கு அடையாளம் உண்டே  இந்தப் பூதலத்தில் சோற்றாவி அற்றுச் சுகமற்றுச் சுற்றத் துணியும் அற்றே ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற் றிருப்பர்களே.🔥🔥 * அருணகிரி *  சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்      தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த      தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு      கயிலைமலை நாதர் பெற்ற ..

அபிராமி அந்தாதி - பாடல் 66- நின் நாமங்கள் தோத்திரமே!-

Image
                           பச்சைப்புடவைக்காரி -508 அபிராமி அந்தாதி  பாடல் 66 இன்றைய பாடல் ஆன்மிகத்தில் முதல் படியில் இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு ..  இறைவனைப்பற்றி ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டுமென்றால்  அதில் குறைந்தது ஆறு அம்சங்கள் இருக்க வேண்டும் .  1. நமஸ்கரித்தல்  2. ஆசி கூறல் / வேண்டுதல்  3. சித்தார்ந்தத்தை எடுத்துக்கூறல்  4. பராக்கிரமத்தை எடுத்துக்கூறல்  5. பெருமைகளை எடுத்துச் சொல்லுதல்  6. பிராத்தனை செய்தல்  ஆனால் முதல் படியில் இருக்கும் என்னைப்போன்றோர் 6 அம்சத்தில் ஒன்றுமே தெரிந்துகொள்ளாதவர்கள் ...  எதோ எதோ உளரும் போது நடு நடுவே அம்பாளின் பெயரை சொல்பவர்கள் ...  இவர்களுக்காகவும் பட்டர் வேண்டிக்கொள்கிறார் .. எவ்வளவு உயர்ந்த உள்ளம் அவருக்கு என்று பாருங்கள் ....  அம்மா அர்த்தம் இல்லாமல் நான் சொல்லும் எதிலும் தப்பித்தவறி  உன் பெயர் வந்து விட்டால் அதை ஒரு ஸ்தோத்திரமாக எடுத்துக்கொண்டு எனக்கு ஆசி வழங்கு தாயே என்று கேட்க்கிறார் 🥇🥇🥇 கம்பரை ஏன் நீங்கள் ராமாயணம் எழுதினீர்கள் என்று கேட்டால் பல காரணங்கள் சொல்லுவார் .  மஹா பாரதம் எழுதிய வில்லிப்புத்தாரை கேட்டால் ... ஏதோ உளறினேன் ஆனால் நடு ந

அபிராமி அந்தாதி - பாடல் 65- ஆறுமுகன் மூதறிவின் மகன் -

Image
                            பச்சைப்புடவைக்காரி -507 அபிராமி அந்தாதி  பாடல் 65 இன்றைய பாடல் ஒரு இலக்கிய சுவை கொண்டது ..  திருமுருகன் அவதார பெருமையை சொல்லும் பாடல் ... *மாரன்* என்றால் மன்மதன் *...கு* மாரன் என்றால் ஞானம் கொண்டவன் ... காமத்தை விரட்டுபவன் ...  இதன் தாத்பரியங்களை இன்னும் அலசும் போது பார்க்கலாம் ...🥇🥇🥇 பரமேஸ்வரன் தியான நிலையில் தக்ஷிணாமூர்த்தியாய் அமர்ந்திருக்கிறான் .  குமார சம்பவம் நிகழ்ந்தால் தான் சூரனை கொல்ல முடியும் .. நடக்கும் எல்லா  அக்கிரமங்களுக்கும்  ஒரு முற்றுப் புள்ளி வைக்க முடியும் ....  யார் தியானத்தை கலைப்பார்கள் யாருக்கு அவ்வளவு தையிரியம் இருக்கிறது ?  கலைப்பது மட்டும் வேலை இல்லை .. அங்கே ஆசையை ஈசன் மனதில்  உருவாக்க  வேண்டும் ....  யாருக்கு வல்லமை இருக்கிறது ?  முப்பது முக்கோடி தேவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர் ..  பிரம்மன் சத்திய உலகத்தை பாயாக சுருட்டிக்கொண்டு  ஆதார் , PAN ஒன்றையும் மாத்தாமல்  யார்கிட்டேயும் சொல்லிக்கொள்ளமல் ஓடி ஒளிந்து கொண்டார் ...  அரங்கன் உரக்க குறட்டை விட்டுக்கொண்டு நன்றாக தூங்குவதைப்போல நடித்தான் ...  🥇🥇🥇🥇🥇 அம்பாளே ஒரு யோசனை தந்தாள் ..