Posts

Showing posts from February, 2022

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 43 & 44 பதிவு 37

Image
         அபிராமி பட்டரும்                         அடியேனும்  கேள்வி பதில் 43 & 44                                              பதிவு 37 கேள்வி பதில் நேரம்  பதிவு 37🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது  நான் .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது  பட்டர்.   கேள்வி 43 நான்  நமஸ்காரம் பட்டரே!! முதல் மூவர் என்று சொன்னீர்கள்.. மூன்று தொழில் என்று தானே சொல்கிறோம் .. அம்பிகை ஐந்து தொழில் செய்கிறாள் என்று எங்கிருந்து வந்தது ... ? விட்டுப்போன அந்த இரண்டு தொழில்களுக்கும்  அதிபதி யார் ? கேள்வி 44 ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் எந்த தாத்பரியத்தில் அமைந்துள்ளது ? பட்டர்  உண்மை இரண்டு தொழில்கள் விட்டுப்போயின . இந்த இரண்டு தொழில்களும் நம் சொல்லுக்கும் வாக்குக்கும் எட்டாமல் இருப்பவை ...  ஜகத் வியாபாரம் என்றால் உனக்கு என்ன என்று தெரியுமா ?  புணரபி ஜனனம் என்பது போல் திருப்பி திருப்பி ஏதோ ஜென்மம் எடுத்துக்கொண்டு இந்த பூமியில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம் ... ஓவ்வொரு உயிர்களும் தன் கர்ம வினைகள் முழுவதும் நீக்கி மீண்டும் பிறவிகள் எடுக்காத நிலையை அடையவேண்டும் ...  எவ்வளவோ யுகங்கள் ஆகலாம

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 42 பதிவு 36

Image
          அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 42                                           பதிவு 36 பதிவு  36🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான்  .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .    கேள்வி 42 நான்  ..  ஐயனே வணக்கம் .. இன்று என் கேள்வி கொஞ்சம் இசுகு பிசகாக இருக்கலாம் .. கோபிக்காமல் தாங்கள் பதில் சொல்ல வேண்டும் ... பட்டர்  உன் கேள்விகள் எனக்கு பழக்கமாகி விட்டன .. தையிரமாய் கேள் .. கோபிக்க மாட்டேன்  நான்  ... ஐயனே ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் பல நாமங்கள் அவள்  மதுவை விரும்புபவள் ... மஞ்சள் சாதம் , வெல்லம் கலந்த சாதம் சாப்பிடுபவள் என்று வருகிறது ...  இவைகள் நாமங்களாக தெரியவில்லை  மேலும் அன்னையின் விருப்பங்களாக தெரிகின்றன ..  அவள் விருப்பு வெறுப்பு இவைகளை கடந்தவள்  அல்லவா ? இப்படி பிரசாதம் அவளுக்கு படைப்பதால்  பீரிதி அடைபவளா ? பட்டர் இதன் தாத்பரியமே வேறு ...  கந்தர் சஷ்டி கவசம் தெரியுமா உனக்கு ...??  முருகனிடம் ஓவ்வொரு அங்கமாக சொல்லி உன் வேல் காக்கட்டும் என்று சொல்கிறோம் ...  அதுபோல் நம் உடலே 6  ஆதார சக்கரங்

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 41 பதிவு 35

Image
            அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 41                     பதிவு 35 கேள்வி பதில் நேரம் பதிவு 35 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான் .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்..   கேள்வி 41 பட்டர்  என்ன ரவி ஒன்றும் கேள்வி இல்லையா இன்று ... நான் போகட்டுமா  நான்  ஐய்யயோ போவதாவது .. கொஞ்சம் யோசித்துக்கொண்டிருந்தேன் ...  ஐயனே சிவசக்தியின் தத்துவத்தை மிகவும் அழகாக எடுத்து சொன்னீர்கள்  ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் பல இடங்களில் ஒருவரை ஒருவர் ரசிப்பதாக நாமங்கள் வருகின்றன ...  தங்களுக்கு பிடித்த அப்படிப்பட்ட சில நாமங்களை கொஞ்சம் விளக்க முடியுமா ? பட்டர்   ஒரு இடம் என் நெஞ்சை தொட்ட இடம் ... நீயே நாமத்தை கண்டு பிடி ..  அம்பாளின் கன்னங்கள் கண்ணாடி மாதிரி இருக்கின்றனவாம் ...  காமேஸ்வரன் தன் அழகை அவள் கன்னங்களில் பார்க்கிறான் ...  கண்ணாடியை கொஞ்சம் இந்த பக்கம் அந்த பக்கம் அசைந்து சரி தன் சிங்காரத்தை சரி செய்து கொள்ள வேண்டுமே ..  உடனே காமேஸ்வரனுக்கு ஒரு யோசனை பிறந்தது ...  அம்பாளின் மோவாய் கட்டையை கண்ணாடியின் பிடியாக வைத்து

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 40 பதிவு 34

Image
            அபிராமி பட்டரும்                              அடியேனும்              கேள்வி பதில்                        பதிவு 34 கேள்வி பதில் நேரம் பதிவு 34 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான்   பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்..     கேள்வி 40 நான் ... ஐயனே ... அம்பாளை நினைப்பவர்களுக்கு இனிய சொற்றொடர்கள்  சித்திக்காமல் போகுமா ? பட்டர்  ... என்ன உளருகிறாய் ரவி யார் சொன்னது அப்படி ?  சரத்கால நிலவைப்போல் நிர்மல வடிவினளும்,  சந்திரனுடன் கூடிய சடைமுடியும் கிரீடமும் உடையவளும்,  வரம், அபயமுத்திரை, ஸ்படிகமாலை, புஸ்தகம் இவற்ரைக் கையில் கொண்டவளுமான அவளை  ஒருமுறை நமஸ்கரித்துவிட்டால்,  அப்படிப்பட்ட நல்லவர்களுக்கு தேனும், பாலும், திராக்ஷையும் சேர்ந்தாற்போன்ற இனிய சொற்றொடர்கள் எப்படித்தான் சித்திக்காமல் போகும் ? ரவி  வாக்கின் பிரவர்த்தகர்களும் சந்திரகாந்தக் கல்லைப் பிளந்தால் தோன்றுவது போன்ற காந்தியுடையவர்களும்  வசினீ முதலிய வாக்தேவதைகளுடன் கூடியிருப்பவளாக அன்னையை  எவன் சிந்திக்கிறானோ  அவன் மகான்களுடைய காவியங்களைப்போல் பிரகாசிப்பனவும் ஸரஸ்வதி தேவியின் முக கமலத

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 39 பதிவு 33

Image
             அபிராமி பட்டரும்                           அடியேனும்            கேள்வி பதில்                  ம்பதிவு 33 கேள்வி பதில் நேரம் பதிவு 33  🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான் .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் .    கேள்வி 39 நான்  தாங்கள் அபிராமி அந்தாதியில் நிறைய இடங்களில் தாமரையை கொண்டு வருகிறீர்கள் .. உண்மையில் தாமரைப்பூ அபிராமிக்கு  உவமையாக சொல்ல முடியுமா ? பட்டர்  எதனால் அப்படி சொல்கிறாய் .. தாமரைப்பூவின் மேன்மை  , மென்மை மிகவும் உயர்ந்தது .. அதனால் எல்லாவற்றுக்கும் உயர்ந்தவளான அவளுடன் சம்பந்தப்படுத்தினேன் ..  என்ன தவறு கண்டாய் ... அவர் குரலில் கொஞ்சம் உஷ்ணம் தெளித்தது நான்  ... மன்னிக்க வேண்டும் .. தவறு என்றும் சொல்லும் தகுதி எனக்கேது ... ஆனால் சில காரணங்களால் ஒப்பிடுவது கொஞ்சம் சரியாக படவில்லை பட்டர்  .. சரி விவரமாக சொல் .. உண்மை இருந்தால் ஒப்புக்கொள்கிறேன் நான் ஐயனே தாமரைக்கும் பனிக்கும் என்றுமே ஒத்துப்போகாது .. பனி தாமரையில் விழுந்து விட்டால் கோபம் கொண்ட தாமரை தன்னை கூம்பிக்கொள்ளும் .. அன்னையோ இமவான்  புத்திரி , இருப்பதோ இமயம