அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 30 பதிவு 26
அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 30 பதிவு 26 கேள்வி பதில் நேரம் பதிவு 26 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * . பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * . * கேள்வி 30* * நான் * : ஐயனே ... அன்னையின் தரிசனம் கிடைத்தபின்னும் கொஞ்சமும் கர்வமே இல்லாமல் தன்னடக்கத்துடன் தம்மையே இன்னும் தாழ்த்திக்கொண்டு எப்படி உங்களால் இருக்க முடிகிறது ... ?? கூட்டம் இல்லாமல் ஒருமுறை அம்பாளை கோயிலில் போய் பார்த்துவிட்டால் நாங்கள் அதையே கோடி தடவை சொல்லிக்கொள்வோம் ... அருமையான தரிசனம் இன்று ... என்னவோ மற்ற நாட்களில் அருமை இல்லாத மாதிரி .... * பட்டர் * சிரித்த வண்ணம் .... ரவி ... இறைவனை வணங்குவதில் மட்டும் த்ருப்தியே வரக்கூடாது .. பக்தி செய்வதிலும் நிறைவு வந்து விடக்கூடடாது .. இதுவும் ஒரு வகையில் தலைக்கனம் தான் .... நீ ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் இருந்து பல கேள்விகளை கேட்கிறாய் என்பதினால் மீண்டும் அதை ஒரு முறை படித்தேன் .. நான் பல பாடல்களில் சொல்ல வந்ததை முதல் மூன