Posts

Showing posts from February, 2021

பச்சைப்புடவைக்காரி - கந்தன் குடிகொண்ட கந்தன்குடி -2 - 336 -26 வது படை

Image
                                                                            ப ச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள்        பகையை வெல்லும்   26 வது  படை  கந்தன் குடிகொண்ட கந்தன்குடி -2 (336 ) 👍👍👍💥💥💥 அம்மா ... கந்தன்குடியை உங்கள் பாணியில் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேட்க ஆசைப்படுகிறேன் - கருணை கூர்ந்து விவரமாக சொல்ல முடியுமா ? சொல்கிறேன் ரவி ....  திருவாரூர் மாவட்டத்தில் ஒரு காட்டுப் பிரதேசம். அங்கே மரங்கள் அடர்ந்திருக்க, அவற்றை மலர்க்கொடிகள் தழுவ, அக்கொடிகளில் பூத்து சிரித்த மலர்கள் தேன் சிந்தி மகிழ... அந்த ரம்மியமான வனத்தை ஒட்டி ஒரு குக்கிராமம்.  அக்கிராமத்து மக்களின் நிறை செல்வம் ஆநிரைகள். காட்டுப் பகுதியில் அவை மேய்ச்சலுக்குச் செல்வதும், அந்தியில் வீடு திரும்புவதும் வழக்கமாயிருந்தது. ஒரு செல்வந்தர் வீட்டுப் பசு மட்டும் பின் தங்கித் தாமதமாய் வீடு திரும்பிற்று. பால் கறந்த நேரத்தில் இப் பசுவின் மடி மட்டும் வற்றிக் காணப்பட்டது. இந்த வினோதம் ஏன் என்று விசாரிக்கப் புறப்பட்ட ஆட்கள், பசுமாடு வனத்திடையே இருந்த பல புற்றுகளுள் குறிப்பாக ஒன்றினை நெருங்கி, அதன் மீது மடியிலிருந்த பாலைச் சொரிந்துவிட்ட

பச்சைப்புடவைக்காரி - கந்தன் குடிகொண்ட கந்தன்குடி -1 - 335 26 வது படை

Image
                                                                        ப ச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள்        பகையை வெல்லும்   26 வது  படை  கந்தன் குடிகொண்ட கந்தன்குடி -1 (335 ) 👍👍👍💥💥💥 கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய்த் திகழும் கந்தக்கடவுள் கோயில் கொண்டருளும் திருத்தலங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கது கந்தன்குடி. திருவாரூர் மாவட்டம்,  நன்னிலம் அருகே அமைந்திருக்கிறது இந்தத் திருத்தலம். பசுமை தவழும் நெல்வயல்கள், பண்பாடும் வண்டினங்கள் நிறைந்து இயற்கை எழில் மிகுந்து திகழும் கந்தன்குடி திருத்தலத்தில் உறையும் முருகப்பெருமானைத் தமது திருப்புகழால் பாடிப் பரவியிருக்கிறார் அருணகிரிநாதர்.  சோழ தேசத்தின் அரிசிலாற்று தீரத்தில் வான் வழியே சென்றுகொண்டிருந்தார் துர்வாச முனிவர். சிவபெருமானைத் தரிசித்து வணங்க வேண்டும் என்பதே அவரது பயணத்தின் நோக்கம்.  வழியில், மதலோலை என்ற அசுரகுலப் பெண்ணொருத்தி அவரை வழிமறித்தாள். அவர் மூலம் தனக்குப் பிள்ளைப்பேறு வேண்டும் என்று கேட்டாள்.   இறைவனை வணங்கச் செல்லும்போது வழிமறித்து இவ்விதம் பேதமைச் சொற்களைச் சொல்கிறாளே என்று கோபம் கொண்டார் துர்வாசர். ‘‘அழிக

பச்சைப்புடவைக்காரி -அருள்மிகு சிவன்மலை சுப்பிரமணியர் திருக்கோவில் – 334 - 25 வது படை

Image
                                                                   ப ச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள்        பகையை வெல்லும்   25  வது  படை அருள்மிகு சிவன்மலை சுப்பிரமணியர் திருக்கோவில் – காங்கேயம் சிறப்புகள் 2 & 3 (334 ) 👍👍👍💥💥💥 மலை மேல் சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார்.  சிவ சிவ என்ற சிவ வாக்கியர் சிவவாக்கியர் என்பவர் ஒரு சித்தர். பதினெண் சித்தர்களில் ஒருவராக இவர் எண்ணப்படுகிறார்.  அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது.  அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. இவருடடைய பாடல்களே மிக அதிகம் என்போரும் உண்டு.  இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்பதாலும் இக்கதைகளுக்குத் தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர்.  அவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. அவரது காலம