Posts

Showing posts from October, 2021

அபிராமி அந்தாதி - பாடல் 85 - என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள்-

Image
                                பச்சைப்புடவைக்காரி -529 அபிராமி அந்தாதி  பாடல் 85 *என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் (பாடல் 85)*🙌🙌🙌 இந்த பாடல் உள்ளத்தில் எழுதிய ஓவியத்தை வெளி உலகக்கு படம் போட்டு காண்பிக்கிறார் .  பட்டர் உள்ளத்தில் அவள் ராஜ மாதாவாக ராஜ ராஜேஸ்வரியாய் நவரத்தின சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாள் ...  பட்டர் விவரிக்க விவரிக்க அவள் அவர் வர்ணித்தப்படி வெளி வருகிறாள் நமக்காக🙌🙌🙌 காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்று தொடங்கி பாரதியார் பாடிய பாடல் நிறைய பேருக்குத் தெரியும்.  வாசுதேவ ஸர்வமிதி ச மஹாத்மா சுதுர்லப  என்று கண்ணன் கீதையில் சொல்லிய படி இறைவனே எல்லாம் இங்கு என்று இருக்கும் மகாத்மாக்கள் ஒரு சிலரேனும் உண்டு இங்கே.  'உண்ணும் சோறும் பருகு நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாமும் கண்ணனே' என்று சொல்லுவார் நம்மாழ்வார்.  பார்க்கும் திசை தொறும் இறைவியின் திருக்காட்சியையே காண்கிறார் அபிராமி பட்டர்.  தான் கண்ட காட்சியை நாம் எல்லாம் காண இந்தப் பாடலில் வடித்துத் தருகிறார்.👏👏👏👑👑👑 அருணகிரி பாடலை முதலில் பார்ப்போம் ..  முருகன் எப்படி தன் முன் வரவேண்டும் என்பதை எவ

அபிராமி அந்தாதி - பாடல் 84 - வஞ்சகர் நெஞ்சு அடையாள்! -

Image
                                பச்சைப்புடவைக்காரி -528 அபிராமி அந்தாதி  பாடல் 84 இன்றைய பாடல் தமிழின் அழகின் உச்சம் இப்படி ஒரே வார்த்தையை மடித்து மடித்துப்போட்டால் அதற்குப் பெயர் *மடக்கடி* என்று பெயர் .  தான் பெரும் இன்பம் பெறுக இந்த வையகம் என்ற பொருளில் பாடியுள்ள பாடல் 🙏🙏🙏 வஞ்சகர் நெஞ்சு அடையாள்! (பாடல் 84) உடையாளை  ஒல்கு செம்பட்டுடையாளை  ஒளிர்மதிச் செஞ் சடையாளை  வஞ்சகர் நெஞ்சு அடையாளை  தயங்கு நுண்ணூல் இடையாளை  எங்கள் பெம்மான் இடையாளை  இங்கு என்னை இனிப் படையாளை  உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே🙌🙌🙌👣👣👣🌷🌷🌷 உடையார் என்று இறைவனைத் தான் கூப்பிடுவோம் ...தஞ்சை  பெருவுடையார் கோயில் ஆவுடையார் கோயில் என்று... அதே போல் கம்பன் தன் முதல் பாட்டில்  அலகி லாவிளை யாட்டுடையா ரவர் என்று பாடுகிறார் ... முதன் முதலில் பட்டர் அபிராமியை * உடையாள் * என்று பாடுகிறார் ...  உடையாளை  - உலகங்களையும் உயிர்களையும் உடைமைகளாகக் கொண்டவளை....🌷🌷🌷 மாணிக்க வாசகர் பாடுகிறார்    உடையாள்  உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால் அடியேன்உன் அடியார் நடுவுள் இருக்

அபிராமி அந்தாதி -பாடல் 83 - இந்திரன் ஆகும் வழி -

Image
                         பச்சைப்புடவைக்காரி -527 அபிராமி அந்தாதி  பாடல் 83 இந்திரன் ஆகும் வழி (பாடல் 83) இந்த பாடலும் , 38 வது பாடலான  பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும்,  பனிமுறுவல் தவளத் திருநகையும்  துணையா எங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள் அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே. ஏறக்குறைய அதே கருத்துதான் .. ஆனால் விளையாடும் தமிழ் சொற்கள் வேறு வேறு ... உலகத்தில் இருக்கும் எல்லா இயற்கை சக்திகளும் தேவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.  அந்த தேவர்கள் தேவர்களின் தலைவனான இந்திரனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.  அப்படிப்பட்ட இந்திர பதவி இந்த உலகத்தில் கிடைக்கும் இன்பங்களுக்கெல்லாம் உயர்ந்த இன்பம் என்பது சொல்லத் தேவையே இல்லை .  அப்படிப்பட்ட இந்திர பதவியை வேண்டி அடைய வேண்டாதபடி என்றைக்கும் உடையவராக ஒருவர் இருந்தால் அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை இந்தப் பாடலில் சொல்கிறார் அபிராமி பட்டர்.👏👏👏 திருவிளையாடலில் நக்கீரரின் தமிழை , புலமையை இறைவன் சோதிக்க வரும் போது பெண்களுக்கு  இயற்கையிலேயே கூந்தலில் மணம் இருந்ததா என்ற கேள்வி  முன்னால் வைக்கப்படும் ... அ

அபிராமி அந்தாதி - -பாடல் 82 - அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே

Image
                           பச்சைப்புடவைக்காரி -526 அபிராமி அந்தாதி  பாடல் 82 இறைவியை பார்த்த அனுபவத்தை பலர் அவரிடம் கேட்டபோது இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது அனுபவித்து உணர வேண்டும் என்று சொன்னவர்  நமக்காக இந்த பாடலில் கொஞ்சம் கோடிட்டு காண்பிக்கிறார் ...  இதை கேட்க்கும் போதே நம் உடம்பு பரவசமாகிறது ..  அவர் தன் முழு அனுபவத்தையும் சொல்லி இருந்தால் நாம் எல்லோருமே மயக்கம் போட்டே விழுந்திருப்போம் ...  உயிருடன் இந்த உடம்பை வைத்துக்கொண்டே ஜீவ முக்தி  அடையலாம் என்று விளக்கும் அருமையான பாடல் 🌷🌷🌷🦚🦚🦚 அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே (பாடல் 82)` அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை  உள்ளுந்தொறும் களியாகி  அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு வெளியாய்விடில்  எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே   அளி என்றால் வண்டு என்றும் கருணை என்றும் பொருள் வரும் அபிராமி என்பதால் வண்டுகள் எல்லாமே கருணை பொங்கியே இருக்கும் . அதனால் இப்படியும் சொல்லலாம்  கருணை மிகுந்த வண்டுகள் தேனினை உண்ண மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகிய பெண்ணே.  இந்த தாமரை பூ தான் எவ்வளவு பாக்கியம் செய்துள்

அபிராமி அந்தாதி - பாடல் 81 - வஞ்சகரோடு இணங்க மாட்டேன்! -

Image
                           பச்சைப்புடவைக்காரி -525 அபிராமி அந்தாதி  பாடல் 81 அபிராமி பட்டரிடம் நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம் ஏராளம் .  அன்னையின் தரிசனம் கிடைத்தபின்னும் ,  சரபோஜி மன்னன் அவர் காலில் விழுந்த பிறகும் ,  நாட்டு மக்கள் அவரை தொட்டு வணங்கிய பிறகும்  பட்டத்து யானை அவரை தன் மேல் ஏற்றிக்கொண்டு ஊர் வலம் வந்த பிறகும்,  கொழுந்து விட்டு எரிந்த தீ அவர் பாதங்களை பூஜித்து சென்ற பிறகும்  அவர் தன்னை அறிவே இல்லாதவன் எளியேன் என்றே சொல்கிறார் ...  அம்மா எல்லாம் உனக்கு சமர்ப்பணம் ..   இப்படி எண்ணாத கூட்டம் எனக்கு வேண்டாம் என்று வரம் கேட்கிறார் ...   *எளிமை , இனிமை,  அபிராமியை மனதில் கொண்டோர்க்கு ஏது மறுமை ??* 🙏🙏🙏 வஞ்சகரோடு இணங்க மாட்டேன்! (பாடல் 81) அணங்கே   அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை  வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும் பிணங்கேன் அறிவு ஒன்றும் இலேன்  என் கண் நீ வைத்த பேரளியே🥇🥇🥇 அணங்கே  - அபிராமி எனும் அழகு தெய்வமே ..  உன்னை பார்த்துவிட்டேன் ..  உன் தரிசனம் கிடைத்து விட்டது .  தேவர்களும் அசுரர்களும் யுகம் யுக