Posts

Showing posts from June, 2022

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 30 காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா -- பதிவு 37

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  37   30 कामेशबद्धमाङ्गल्यसूत्रशोभितकन्धरा  காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா - அ ம்பாளின் கழுத்தில் மின்னுவது எது என்று தெரிந்ததா? மகேஸ்வரன் காமேஸ்வரன் கட்டிய புனித மாங்கல்ய சரடு தான். இதைவிட விலைமதிப்பில்லாத ஆபரணம் ஒன்று இருக்கிறதா?  காளமேகம் ( முன்னாள் மடப்பள்ளி வரதன் ) புலவர் அதிகமாகவே கிண்டலாக பாடுபவர் ..  அவர் ஒரு பாடலில் அம்பாளை கேட்க்கிறார் தாயே!!  நீயோ பரிபூரண தேவதை .. சகல சௌபாக்கியமும் தருபவள் ... அன்ன பூரணீ ...  ஆனால் உன் புருஷனோ கபாலம் ஏந்தி தெருவில் பிச்சை வாங்குகிறார்  அது மட்டுமா ?  அணிய நல்ல ஆடை இல்லாமல் 8 திசைகளையும் ஆடையாக அணிகிறார் ...  அணிந்துகொள்ள ஆபரணங்கள் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் ... உன் மாமியார் வீட்டு சீதனம் என்று ஏதாவது உண்டா   உனக்கு ?  அவரிடம் இருப்பதெல்லாம்  பயமுறுத்தும் பூத கணங்களும் , மண்டை ஓடுகள் மட்டுமே ..  என்ன அப்படி கண்டு விட்டாய் அவரிடம் இப்படி தவசியாய் இருந்து அவர் துணைவியாக ??  இதையே வேறு யாராவது சொல்லி இருந்தால் அம்பாள் கோபத்தால் பொசுக்கி இருப்பாள் ..  சொன்னவனோ தன் மீது அதிபக்தி கொண்டவன் ..  அவன

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 29 அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா -- பதிவு 36

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  36 29  अनाकलितसादृश्यचिबुकश्रीविराजिता  அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா -- அநாகலித-ஸாத்ருச்ய-சிபுகஸ்ரீ- விராஜிதா காமேச-பத்த-மாங்கல்ய-ஸூத்ர- சோபித- கந்தரா 12 ( 29 & 30) 💐 அம்பாளின் முக அழகை ஈசன் ஒரு நாள் ரசிக்க நினைத்தானாம் . .  தினம் ரசிப்பவன் தான் அன்று கொஞ்சம் கூடுதலாக ரசிக்க ஆசைப்பட்டான் .. .  முகத்தை கையில் ஏந்தினால் நாணம் எனும் மேகங்கள் அந்த முழு நிலவை ரசிக்கும் படி விடுவதில்லை . கண்களை பார்த்தால் அங்கே விழிகள் ஒரு இடத்தில் நிற்காமல் மீன் போல அங்கும் இங்கும் அலை பாய்ந்தனவாம் ...  சரி நெற்றியை ரசிப்போம் என்றால் அதுவோ தன் தலையில் உள்ள பிறைச் சந்திரன் போல் இருந்து ஈசனை ப்பார்த்து கேலி செய்ததாம்   புருவங்களை ரசிப்போம் என்றால் அதுவோ மன்மதன் இருக்கும் வீட்டின் வாசல் தோரணமாய் உள்ளது ..  ஈசனுக்கு பரம விரோதி மன்மதன் அதனால் ஈசன் புருவங்களை பார்ப்தை தவிர்த்தானாம் நாசியை ரசிப்போம் என்றால் அதில் வெளி வரும் சுவாசம் உள்ளிழுக்கும் வாசம் தன் பெயரையே சொன்ன வண்ணம் உள்ளது .. அதனால் ஈசனுக்கு வெட்கம் கூடி விட்டதாம்  சரி செவிகள் ... அங்கே சூரியனும்

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 28. மந்த-ஸ்மித-ப்ரபாபூர-மஜ்ஜத்- காமேச-மானஸா பதிவு 35

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  35 28   மந்த-ஸ்மித-ப்ரபாபூர-மஜ்ஜத்- காமேச-மானஸா 28 मन्दस्मितप्रभापूरमज्जत्कामेशमानसा மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேசமாநஸா |- அழகிய நெளிந்து ஓடும் காட்டாறுகளை பெரிய மலைகளில் படத்திலாவது பார்த்திருப்பீர்கள்.  மன்மதனின் நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகு அது.  அதே தான் அம்பாளின் புன்னகையின் அழகும்💐💐😊😊😊 மந்த ஸ்மித = நளின புன்னகை, கனிவான சிரிப்பு  ப்ரபா  = பிரகாசம்  பூர  = பொங்கும் பிரவாக நதி அல்லது கடல்  மஜ்ஜத் = மூழ்குதல்  காமேஷ மானஸா  = காமேஷ்வரனின் மனம்  தன் மென்னகையின் ஒளிப்பிரவாகத்தில் காமேஷ்வரனின் மனதை லயிக்கச்செய்பவள்🙂🙂🙂 தன்னுடைய மென்மையான மந்தஹாஸப் புன்சிரிப்பால், காமேச்வரருடைய மனத்தை மூழ்கடிப்பவள்.  பின்னால் ஒரு நாமம் வரும். காமேச்வரருடைய முகத்தைப் பார்த்துப் புன்சிரித்து அதன் வழியாகவே கணேசரைத் தோற்றுவித்தவள் என்று அந்த நாமம் சொல்லும். ' மஜ்ஜத் ' என்று கூறப்பட்டிருக்கிறது. அம்பாளிடம் மூழ்கிப் போவதற்கு அவருக்கு அவ்வளவு சந்தோஷம்;  அதிலிருந்து வெளியே வர இஷ்டமில்லாமல் அப்படியே இருக்கிறாராம்.  அம்பாள், காமேசீ; அவர் காமேசர். லலிதாம

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 27. நிஜ-ஸல்லாப-மாதுர்ய-விநிர்ப்பர்த்ஸித-கச்சபீ பதிவு 34

Image
 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  34 27   நிஜ-ஸல்லாப-மாதுர்ய-விநிர்ப்பர்த்ஸித-கச்சபீ நிஜ-ஸல்லாப-மாதுர்ய-விநிர்ப்பர்த்ஸித-கச்சபீ மந்த-ஸ்மித-ப்ரபாபூர-மஜ்ஜத்- காமேச-மானஸா 11 (27 & 28)  ‘கச்சபி ’ என்பதாக ஸரஸ்வதியின் வீணைக்குத் தனியாக ஒரு பெயர் உண்டு.  தெய்வங்கள், மஹாபுருஷர்கள் ஆகியோருடைய ஆயுதங்கள், வாத்தியங்கள் முதலியவற்றுக்குத் தனிப் பெயர் உண்டு.  ஈஶ்வர தநுஸுக்குப் ‘ பிநாகம் ’ என்று பெயர்.  அதனால்தான் அவர் பிநாகபாணி . மஹாவிஷ்ணுவின் தநுஸ் ‘ சார்ங்கம் ’. அதனால் அவர் சார்ங்கபாணி .  அர்ஜுனன் வில்லுக்கு ‘ காண்டீவம் ’ என்று பேர் (அவனுக்கும் காண்டீவன்/ காண்டீபன் என்றே பெயர்).   இப்படியே வீணையை எடுத்துக்கொண்டால், நாரதர் கையிலுள்ள வீணைக்கு ‘ மஹதி ’ என்று பெயர். ‘ தும்புரு-நாரத ’ என்று அவரோடு சேர்த்துச் சொல்லப்படும்  தும்புருவின் வீணைக்குப் பேர் ‘ கலாவதி ’. ஸாக்ஷாத் ஸரஸ்வதியுடைய வீணைக்குக் ‘ கச்சபி ’ என்று பெயர்.  ‘ கச்சபம் ’ என்றால் ஆமை. கச்சபி வீணையின் குடம் ஆமை ஷேப்பிலே இருப்பதால் அப்படிப் பேர். இன்றைக்கும் ஃபிலிப்பைன்ஸில் அந்த மாதிரியான வீணை இருப்பதாகவும் அதற்கு “ கட்ஜபி ” என்ற