ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 28. மந்த-ஸ்மித-ப்ரபாபூர-மஜ்ஜத்- காமேச-மானஸா பதிவு 35

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 35

28 மந்த-ஸ்மித-ப்ரபாபூர-மஜ்ஜத்- காமேச-மானஸா



28 मन्दस्मितप्रभापूरमज्जत्कामेशमानसा மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேசமாநஸா |-

அழகிய நெளிந்து ஓடும் காட்டாறுகளை பெரிய மலைகளில் படத்திலாவது பார்த்திருப்பீர்கள். 

மன்மதனின் நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகு அது. 

அதே தான் அம்பாளின் புன்னகையின் அழகும்💐💐😊😊😊

மந்த ஸ்மித = நளின புன்னகை, கனிவான சிரிப்பு 

ப்ரபா = பிரகாசம் 

பூர = பொங்கும் பிரவாக நதி அல்லது கடல் 

மஜ்ஜத்= மூழ்குதல் 

காமேஷ மானஸா = காமேஷ்வரனின் மனம் 

தன் மென்னகையின் ஒளிப்பிரவாகத்தில் காமேஷ்வரனின் மனதை லயிக்கச்செய்பவள்🙂🙂🙂

தன்னுடைய மென்மையான மந்தஹாஸப் புன்சிரிப்பால், காமேச்வரருடைய மனத்தை மூழ்கடிப்பவள். 



பின்னால் ஒரு நாமம் வரும். காமேச்வரருடைய முகத்தைப் பார்த்துப் புன்சிரித்து அதன் வழியாகவே கணேசரைத் தோற்றுவித்தவள் என்று அந்த நாமம் சொல்லும். '
மஜ்ஜத்' என்று கூறப்பட்டிருக்கிறது. அம்பாளிடம் மூழ்கிப் போவதற்கு அவருக்கு அவ்வளவு சந்தோஷம்; 

அதிலிருந்து வெளியே வர இஷ்டமில்லாமல் அப்படியே இருக்கிறாராம். 

அம்பாள், காமேசீ; அவர் காமேசர். லலிதாம்பிகையாகப் பராசக்தியாக குண்டத்திலிருந்து தோன்றியவுடன், பரம்பொருளும் சிவகாமேச்வரராக அங்கே தோன்றினாராம். 

காமேச்வரரும் காமேச்வரியுமான அவர்களுக்கு விவாஹம் நடத்தி, ஸ்ரீ புரத்தில் கொண்டுபோய் கொலு வைத்தார்கள். இருவரும் ஒரே வகையாக, ஒரே மாதிரியான விஷயங்களோடு இருப்பார்கள். 

இருவரும் சிவப்பு நிறம்; பிறைமதி கொண்டவர்கள்; முக்கண் உள்ளவர்கள்; 

பாசாங்குச இக்ஷு கோதண்ட புஷ்ப பாணங்களையும் தாங்கிக் கொண்டிருப்பார்கள். ச்ருங்கார ரஸப் பிரதானிகள். 

காமேச என்கிறபோது, காமகலா ராஜராஜேச்வரியின் பதியாக இருப்பதற்கு அவர் பெருமை கொள்கிறார் என்றும் சொல்லலாம்.



மூகர் 100 ஸ்லோகங்கள் அன்னையின் மந்தஸ்மிதம் பற்றி பாடி இருக்கிறார் . 

அவருக்கு 500 பாடல்களையும் மந்தஸ்மிதம் பற்றி பாடவே முதலில் விரும்பினாராம் ... 

அன்னை வந்து ஏன் என்  செவிகள் , பாதங்கள் என்ன பாவம் செய்தன? 
அவைகளை பாடாமல் இருக்கிறாயே என்றதும் 

அதற்கு மூகர் "அம்மா எதை வர்ணிப்பது தாயே எதை வர்ணித்தாலும் அங்கேயே என் சொற்கள் நின்று விடுகின்றன ... நான் என் செய்வேன்" என்று கண்ணீர் விட 

அம்பாள் புன்னகை பூத்து சரி உன் மனம் படி  பாடு உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றாளாம் ... 

வடுவூர் ராமனின் மந்தஸ்மிதமும் இப்படித்தான் , சொக்கனின் புன்னகையைப்போல் நம்மை சொக்க வைத்து விடும் 🙂🙂🙂



சரி சௌந்தர்ய லஹரியில் 100 ஸ்லோகங்கள் .. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை அடிப்படையாக கொண்டது ... 

ஒவ்வொரு ஸ்லோகமும் எப்படி அம்பாளை வர்ணிக்கின்றது என்று சுருக்கமாக பார்ப்போமா ?

1.      பராசக்தியின் ஏற்றம்

ஸர்வ விக்ன நாசமும் ஸகலகார்ய ஸித்தியும்

2.      பாத தூளி மகிமை

ஸர்வலோக வசியம்

3.      பாத தூளி முக்தியளிப்பது

ஸர்வ வித்யா ப்ராப்தி

4.      பாத கமலங்களின் நிகரற்ற சக்தி

ஸகல பய நிவ்ருத்தி, ரோக நிவ்ருத்தி

5.      தேவி பூஜையின் மகிமை

ஸ்த்ரீ புருஷ வசியம்

6.      கடைக்கண் பார்வை

புத்ர ஸந்தானம்

7.      தேவியின் ஸ்வரூபம்

தேவியின் ஸாக்ஷாத்காரம், சத்ருஜயம்

8.      தேவியின் சிந்தாமணிக்ருஹம்

ஜனனமரண நிவ்ருத்தி

9.      ஆதார சக்கரங்கள்

தேசாந்திரம் சென்றவர் திரும்பிவருதல், அஷ்டைச்வர்ய ஸித்தி


10. மூலாதாரம்

சரீர சுத்தி, வீர்ய விருத்தி

11. ஸ்ரீ சக்கர வர்ணனை

ஸத்ஸந்தானம், ஜன்ம ஸாபல்யம்

12. உவமையற்ற ஸௌந்தர்யம்

சிவஸாயுஜ்யம், ஊமையும் பேச

13. கடைக்கண்ணின் கிருபை

காமஜயம்

14.  ஆதார சக்கரங்களின் கிரணங்களும் அப்பாலும்

பஞ்சம், கொள்ளை நோய் நிவிருத்தி

15. தேவியின் சுத்த ஸத்வ வடிவம்

கவித்துவமும் பாண்டியத்துவமும்

16. அருணா மூர்த்தி

வேதாகம ஞானம்

17. வாக் தேவதைகளால் சூழப்பெற்றவள்

வாக்விலாஸம், சாஸ்திர ஞானம்

18. அருணரூப த்யானம்

காமஜயம்



                                                   💐💐💐💐💐💐💐👌👌👌👌








Comments

ravi said…
Respect is the most important element of our personality. It is like an Investment - whatever we give to others, it is returned to us with profit.



The best way to cheer yourself up is to try to cheer somebody else up.



If you want to win, you need discipline. If you want to win big, you need discipline & confidence. If you want to create history in any game, you need discipline, confidence & consistency.



Tell my mistakes to me, not to others. Because my mistakes are to be corrected by me not by others.



Hard work doesn’t guarantee success. But it gives us a better chance to succeed.



A lot of people are afraid to say what they want. That’s why they don’t get what they want.



An amazing family life sets you up for a glorious business life as well.





ravi said…
WHO AM I


The son of an emperor had become spoilt. He had fallen in the wrong company. The father was upset. One day the father became very angry and in a fit of rage he said to the son, "You will be thrown out of the palace. Either rectify yourself or leave my palace."
The emperor had not thought that the prince would actually leave the palace. But the prince left the palace in his fury.

The emperor's son was as stubborn as emperor. The father searched a lot, but could not find him. Years passed by. The old father's eyes had blurred now, as he wept so much. He had only one son. The entire empire was for him. The father used to repent a lot, that in what unfortunate moment did I utter such words that I will throw you out!

Nearly 20 years passed waiting like this.

ravi said…
One day a beggar was begging outside the emperor's palace. The king looked at him, and he felt that it was a familiar face. The old father's heart immediately recognized him. There was light in his eyes again. His heart said, "This is my son!!"

But in twenty years, the son had completely forgotten that he was the son of the emperor. Who will not forget that in twenty years of poverty! For twenty years, he went from door to door, village to village asking for pieces of bread. Twenty years of beggary! The layers piled up over and over, and he forgot that he was once the son of the emperor.

To go from place to place and be reprimanded everywhere; people behaving badly; being told at every door, "move ahead” – if the inner emperor had remained aware, he would have pulled out the sword. So the inner emperor had to fade away, he had to be forgotten. That was the right thing, it was practical to forget about him. And how could he remember? When twenty-four hours he was being reminded of only one thing from all sides, that you are a beggar. No one allowed him to stay at the door, no one let him sit under a tree, no one let him stay – “Take the bread, and move ahead” – hardly he would get some bread.

Broken pot! Torn clothes! Couldn't even buy new clothes in twenty years. His body smelled foul. Forgotten were the days - of fragrance, of the palace, of pride, of comfort, of glory and dignity. They were all forgotten. Twenty years of dust settled so much on the mirror that now no image could be formed in the mirror.

So the son did not know anything, he came to this village begging in the same way as he had gone to other villages. This too is a village like other villages. But when the father's eyes saw him, he recognized that this was his son.

The features, the face are all recognizable. No matter how much dust settles, the eyes of the parents cannot be deceived. The son may forget, but the father cannot. The original source cannot forget.

Seeing this condition of the son, the king seemed to go numb and lifeless. He called his vizier and asked, "What should I do?" The vizier said, "Be careful and act wisely. If at once you say that you are a prince, then it will be so big for him that he will not believe it. He will doubt you. So you have to move slowly. He has really forgotten everything, otherwise he would not even have come to this door to beg. He doesn't remember anything."

When the emperor called him inside the palace, he started running outside the palace. When the servant ran after him, he said, "No brother, I don't want go inside. Leave me, I am a poor man. It was a mistake that I came to the palace, to the king's court. I just beg. I don't need to go inside."

He was so scared that he thought that he might get punished, that he might get jailed, he did not know what problems would arise if he went inside. But the servants explained that the master wants to give you a job, he feels pitiful. So he went inside. The king hired him for sweeping there.

Then gradually when he started doing sweeping and getting a little familiar with the palace, then he was promoted a little, and then later a little more promotion was done. Then he started coming inside the palace as well. Soon his clothes were also changed. Then he was also given a bath. And slowly he started agreeing.

ravi said…
In such a way, as the years went by, he was brought to the post of vizier. And when he came to the position of vizier, then one day the emperor called and said, "You are my son." And he agreed. Then he was convinced, since he had to climb so many stairs. This could have been said on the first day as well, but then he would not have been able to accept it!

If somebody tells us that we are God, we can't believe it. We say that it may be a matter of principle; but me and God!!! That is why it is said that meditate, be engrossed in devotion. Come on, start with the sweeping and cleaning. Although it can be done right now, but we will not agree to that. Although there is no need to lose a single moment, there is no need for gradual development. It can happen in one leap. But we do not believe, so let's do the sweeping and cleaning. So, gradually there will be promotion. And we have to progress slowly, gradually.

Then one day, when the last moment comes, we will come to the position of the vizier, when a little glimpse of samadhi starts coming near, meditation starts sparking, then in a single moment we will accept the same thing. Then we will have faith in this.
ravi said…
🌹🌺"‘“ *அப்பனே* .... *இந்த பட்டு வேஷ்டியை பாண்டுரங்கனுக்கு சாற்றினால் அவனை கண்ணாரப் பார்க்கலாம்* .. *என்ற விட்டல பக்தன்* ......... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹பாண்டு ரங்கனின் மீது கொள்ளை பிரேமை கொண்டவர் யோகி ப்ரேமானந்தர்

🌺அவருடைய வழக்கமான வேலை என்ன தெரியுமா விடிகாலை எழுந்ததும் நதிக்கு செல்வது. நீராடுவது. விட்டலனுக்கு பிரார்த்தனை. பிறகு ஷோடசோபசாரம் செய்து 700 நமஸ்காரம் பண்ணுவது.

🌺நம்மால் நினைத்துப் பார்க்கவாவது முடியுமா? அதற்கப்புறம் பகவத் கீதை பாராயணம். மறுபடியும் நமஸ்காரம்.
பிறகு தான் இலையில் சோறு. என்ன பக்தி பார்த்தீர்களா?
ravi said…

🌺எங்கெங்கோ புண்ய நதி, ஸ்தலம்,
கோவில் குளம் என்று தேடி ஓட வேண்டாம். உட்கார்ந்த இடத்திலேயே ஸ்ரீ கிருஷ்ணனை, பாண்டுரங்கனை, இராமனை நினைத்தால் அந்த சகல புண்ய பலனும்
கிட்டும்நாம ஜபம் தான் கலியுகத்தில் கண் கண்ட மருந்து. இது ரகசியம் இல்லை. யாவரும் அறிந்தது. பின் ஏன் மனம் அதில் செல்லவில்லை

🌺அவர் மனத்தில் பாண்டுரங்கன் சதா சர்வகாலமும் இருந்தான். இன்பம் தந்தான். ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு பட்டுத்துணி வியாபாரி வந்தான். விட்டலன் கோவிலுக்கு சென்றான்.

🌺அந்த நேரம் பார்த்து திடீரென்று விடாத இடி இடித்து பெரிய மழை.
வானம் பொத்துக்கொண்டது. சள சள வென்று பெய்த மழையில் தரை மண்ணெல்லாம் சேரும் சகதியுமாகியது.

ravi said…
🌺வியாபாரியின்
பார்வை தூரத்தில் இதெல்லாம் சற்றும் லக்ஷியம் செய்யாத ஒரு சாமியார் மேல் சென்றது. நமது ப்ரேமானந்தர் தான்.

🌺பாண்டுரங்கனை நோக்கி கோவில் வாசலில் நமஸ்காரம்
செய்துகொண்டிருந்தார். ஒன்றா இரண்டா. வழக்கமான 700 ஆச்சே.

🌺''அடடா என்ன பக்தி இவருக்கு? மழை, சேர் சக்தி
எதையுமே லட்சியம் செய்யவில்லையே! சந்தோஷத்தோடு
அல்லவா நமஸ்காரங்கள் விடாமல் பண்ணிக் கொண்டிருக்கிறார்?!''

🌺மழை விட்டது. கையில் வைத்திருந்த மூட்டையிலிருந்து ஒரு நல்ல
விலையுயர்ந்த பட்டு வேஷ்டியை எடுத்தான் வியாபாரி. அதை
யோகியிடம் கொடுத்தான்.

🌺"சுவாமி, தாங்கள் இதை உடுத்திக் கொள்ளுங்கள்" என்றான். நமஸ்காரம் பண்ணினான். அவர் பார்த்தார். தலையை ஆட்டினார்.
ravi said…

🌺"எனக்கெதற்கு இதெல்லாம்? கிழிசல் துணி ஏதாவது இருந்தால் கொடு. அது போதுமே. நான் அன்றாடம் பிக்ஷை எடுத்து அதில் கிடைப்பதை உண்பவன். அது தொந்தரவு இல்லாமல் என்னுடைய வேலையை செய்ய உதவும்.''

🌺''இல்லை சுவாமி, இது நீங்கள் உடுத்திக்கொள்ள வேண்டும் என்று
எனக்கு ஆசை."

🌺"தப்பு... அப்பனே....இந்த பட்டு வேஷ்டியை பாண்டுரங்கனுக்கு சாற்றினால் அவனை கண்ணாரப் பார்க்கலாம்.. அவன் உனக்கு சர்வ மங்களமும் தருவான்."

🌺வியாபாரி காதில் இது ஏறவில்லை. பக்தி மிகுதியால், தானே அவர் இடுப்பில் அந்த பட்டு வேஷ்டியை கட்டிவிட்டான். அவனுக்குத் தெரியவில்லை,

🌺யோகி திரு திருவென்று விழித்தார். அந்த பள பள துணியை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டார். நமஸ்காரம் பண்ணும் போது மண் பட்டு அழுக்காகாமல் பார்த்து கொள்வது
கஷ்டமாக இருந்தது. வழக்கமாக சுலபமாக சந்தோஷத்தோடு பண்ணும் நமஸ்காரம் இப்போது தடை பட்டது.

🌺வெயில் ஏறியது. வியர்த்துக் கொட்டியது. பசியை அடக்கிக் கொண்டு பண்ண வேண்டிய நமஸ்காரங்களை பண்ணினார்.

🌺முடியவில்லை. எண்ணம் பட்டு வேஷ்டி மீது சென்றது இடைஞ்சலாக இருந்தது. நமஸ்காரம் முடியாமல் சாப்பாடு கிடையாதே! வியர்த்து களைத்தார்.

🌺"எனக்கு இன்று ஏன் இப்படி ஒரு தண்டனை? புரியவில்லையே? அடேடே எப்படிப்பட்ட சர்வ முட்டாள் நான்? இந்த பட்டு வேஷ்டிஅல்லவோ என்னை நிலை குலைய வைத்து விட்டது. காரியம் கெட்டு குட்டிச் சுவராகி விட்டதே!

🌺பூரண சந்திரனை ராகு பிடித்து கவ்வியது போல் இந்த வேஷ்டி என்னை விழுங்கி விட்டதே! எனக்கும் விஷ்ணுவுக்கும் இடையே ஒரு வேஷ்டியா எதிரியானது?

🌺இந்த வேஷ்டிக்கு இடம் கொடுத்த இந்த உடம்புக்கு ஒரு சரியான தண்டனை உடனே கொடுத்தாக வேண்டுமே என்ன செய்யலாம்?" என்று யோசிக்கும்போது, "சரி காட்டுக்கு செல்வோம்.

🙏🏼நிறைய காய்ந்த கட்டைகளை தீ மூட்டி தீக்குளித்தால் தான் சரியாகும். இல்லை பேசாமல் ஏதாவது புண்ய நதியில் மூழ்கி இந்த உடலை விடலாமா? விட்டலன் அப்போதுதான் மன்னிப்பான்." கோவில் வாசலில் அமர்ந்து எதைச் செய்யலாம் என்று யோசித்தார்.

🌺அந்தப் பக்கமாக ஒரு ரெட்டை மாட்டு வண்டிக்காரன் வந்தான். அவனை நிறுத்தினார்.

🌺"உனக்கு ஒரு விலை உயர்ந்த இந்த பட்டு வேஷ்டி தரேன். உன் ரெட்டை மாட்டையும் அவற்றை பிணைத்திருக்கும் கழுத்தில்
இருக்கிற கட்டையோடு தருகிறாயா?"

🌺தனது தொத்தல் மாட்டால் இவ்வளவு பெரிய வருமானம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆச்சர்யத்தோடு ஒப்புக்கொண்டான்.

🌺"என் கால் இரண்டையும் இந்த கட்டையில் கட்டு." அவன் யோசிக்க, "சொன்னதைச் செய்" என்றார் யோகி.

🌺கால்கள் இரண்டையும் ரெண்டு மாட்டுக்கும் இடையே
கட்டையில் பிணைத்தான்.

🌺"மாட்டை விரட்டு!"
சுளீர் என்று சாட்டை யடி விழுந்ததும் ரெண்டு மாடுகளும் ஓடின. இடையே கட்டையில் யோகி புரண்டு கொண்டு தொடர்ந்தார். மாடுகள் தலைதெறிக்க ஓடின. நிற்கவே இல்லை. யோகியின்
உடல் கிழிந்தது.

🌺ரத்தம் ஆறாக பெருக சதை பிய்ந்து கொண்டே வந்து கடைசியில் வெறும் எலும்புகள் மட்டும் தேயும் நிலை. அவர் உயிர் கொஞ்சம் இன்னும் ஊசலாடிக் கொண்டிருந்தது.

🌺மனம் பூரா "விட்டலா!" என்றே நினைவில் ஆழ்ந்தது. மாட்டுக்காரன் ஓடி வந்தான். அவன் கண்களில் நீர் ஆறாக வழிந்தது. "என்ன காரியம் செய்தீர்கள்? இதை ஏன் என்னைச் செய்யச் சொன்னீர்கள்?" என்றான்.

🌺அவர் கடைசி நிமிஷ நினைவில் இருந்தார். மாட்டுக்காரன் முகம் லேசாக தெரிந்தது. பேச்சு வரவில்லை. மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக அடங்க முயன்றது.

🌺காலை கட்டையில் இருந்து அவிழ்த்தான் மாட்டுக்காரன். அவரை விடுவித்து மடியில் போட்டு புண்களையும் ரணங்களையும் அந்த பட்டு வேஷ்டியாலேயே துடைத்தான்.

🌺"ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று மீண்டும் அவன் அவரைப் பார்த்து கேட்டபோது, அவன் கண்களில் கண்ணீர் ஆறாக இன்னும் ஓடிக்கொண்டிருந்தது. யோகி அவனைப் பார்த்தார்.

🌺"அவன்.... அவன்... விட்டலா .. நீயா நீயா?'' என்றார்.
அவன் அவரை அணைத்துக் கொண்டான்."என்னுடன் வாருங்கள்!" என்று அழைத்த அவனோடு வைகுண்டம் ஏகினார் யோகி ப்ரேமானந்தர்🌹🌺

---------------------------------------------------------- 🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

“குலம், கோத்ரம் பார்க்கணும்” என்ற ஒரு வாக்யம் நம்மிடையே அடிபடுகிறது. (இந்தக் கொள்கையையே அடித்துப் போட்டுவிட வேண்டுமென்பதுதான் நம்முடைய நவீன நாகரிகக்காரர்களின்அபிப்ராயம்.) ஒரே ரிஷியின் வம்சத்தினுடைய பல கிளைப் பரம்பரைகளைச் சேர்ந்த எல்லோரும் ஒரு ‘கோத்ரம்’. ‘குலம்’ என்றால் இப்படி ஒரே கோத்ரமாக இருக்கிறவர்களில் கிட்டின உறவாக ஒன்று சேர்ந்திருக்கிறவர்கள். இந்தக் ‘குல’த்தில்தான் ஆதிகால ஸ்கூல் ஏற்பட்டதாக நான் சொன்னது. அப்போது ‘குருகுலம்’ என்ற பெயரைவிட ‘ரிஷிகுலம்’ என்ற பெயரிலேயே அது அதிகம் பேசப்பட்டது. குரு – சிஷ்யன் என்கிற போது ரக்தபாந்தவ்யம் (ரத்த உறவு) அதில் தெரியாமல், உறவுக்காரராக இல்லாத இருவர்களில் ஒருவர் சொல்லிக்கொடுப்பதாகவும், இன்னொருவர் கற்றுக் கொள்வதாகவுந்தான் தோன்றுகிறது. ஆரம்பகால ஸ்கூலோ ரக்தபாந்தவ்யமுள்ளவர்களிடையே அமைந்த ஒன்றாக இருந்தது. ஆதியில் பிதாதான் குரு என்று சொன்னேனல்லவா? தங்கள் மூதாதையான ஒரு ரிஷி கண்டுபிடித்த – அல்லது கண்டு கொண்ட ஒரு வித்யையைத் தங்களுக்குள் அவர்கள் பரப்பிக் கொண்டதால் அது ரிஷிகுலம் என்று பேர் பெற்றது.

ravi said…
அப்புறம் இப்படி அநேக ரிஷிகள் கண்டு கொண்ட வித்யைகளையும் மந்த்ரங்களையும் ரிஷிகுலங்கள் பல ஒன்றொடொன்று தொடர்பு கொண்டு பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் காலம் வந்தது. இப்படிக் கூட்டுச் சேர்ந்த அநேக குல கோத்ரர்கள் ஒரே விதமான ஆசரணைகளை மேற்கொண்டனர். அங்கங்கேயும் இப்படி வேறு வேறாகப் பல வேறு ரிஷிகளுடைய மந்த்ரங்களை ஒன்றாகத் திரட்டி ஒவ்வொரு பிரிவினர் அதை அத்யயனம் செய்வதாக ஏற்பட்டது. இப்படிக் கொஞ்சம் கொஞ்சம் வித்யாஸத்துடன் ஒரே வேதத்தில் ஏற்பட்ட பிரிவுகளைத்தான் சாகை (கிளை) என்பது. சரித்ர ரீதியாக வித்யாசாலை என்பது வளர்ச்சி கண்டதைப் பார்க்கும்போது, ரிஷிகுலங்களுக்கு அப்புறம் வருவது ஒவ்வொரு சாகையைச் சொல்லிக் கொடுத்த குருகுலங்களேயாகும். இங்கே ரக்த பந்துக்களிடமிருந்து கல்வி ப்ரசாரம் விரிவடைந்து, ஒரே வேதப் பிரிவைச் சேர்ந்த, ஒரே ஆசரணைகளைக் கொண்ட எல்லாரிடமும் பரவலாயிற்று. அப்புறந்தான் ஒரு வேதத்தின் ஒரு சாகை மாத்திரமில்லாமல் பல வேதங்கள், மற்றும் பல வித்யைகள் ஆகியவற்றையும் கற்றுக்கொடுப்பதாக குருகுலம் விரிவு பெற்றது.

ravi said…
மாணவன், வித்யார்த்தி, சிஷ்யன் என்றெல்லாம் நாம் சொல்லும் பையனுக்கு ‘சாத்ரன்’ என்று அக்காலத்தில் பேர் இருந்திருப்பதாகப் பாணினியின் வ்யாகரணத்திலிருந்து தெரிகிறது. ‘சத்ரம்’ என்றால் ‘குடை’ என்று தெரிந்திருக்கலாம். ஒரு குடை ஒருத்தன் தலைக்கு மேலே கவிந்துகொண்டு அவனை வெயில், மழைகளிலிருந்து காப்பாற்றுகிற மாதிரி, குரு என்பவரால் நன்றாக அரவணைக்கப்பட்டுக் கெடுதல்களிலிருந்து காப்பாற்றப்படுவதாலேயே சிஷ்யனுக்கு ‘சாத்ரன்’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து குருவுடைய உத்தமமான குணமும் அவருடைய அன்புப் பணியும் தெரிகின்றன. அதாவது கல்வி என்பது அறிவு ஸம்பந்தப்பட்டதாக மட்டும் இன்றைக்குப் போலில்லாமல், நல்ல குணத்தின் ஸம்பந்தமுள்ளதாகவும் இருந்தது என்பதறகாகச் சொல்கிறேன்.

ravi said…
வித்யாசாலைக்கு அப்போது சரணம் என்றே பேர் இருந்ததாகவும் பாணினீயத்திலிருந்து தெரிகிறது*. ‘சரணம்’ என்றால் கால். பாதம், பதம் என்று காலைச் சொல்கிறோம். ‘பரமபதம்’ என்று மிகவும் உயர்ந்த ஸ்தானத்தைச் சொல்லும்போதும் ‘பதம்’ என்ற வார்த்தை வருகிறது. கால் நம் உடம்பைத் தாங்கி நிற்கச் செய்வதுபோல, நம் உயிரைத் தாங்கி நிலைத்து நிற்கும்படி செய்யும் பெரிய ‘ஸப்போர்ட்’ தான் பதம். ‘சரணம்’ என்று இதே அர்த்தத்தில்தான் குருகுலத்துக்குப் பெயர் கொடுத்திருக்கிறது.

ravi said…
அத்யாபகர் என்று பொதுவாகச் சொல்லப்பட்ட டீச்சர் வேத அத்தயயன – அத்யாபனங்களில், அதாவது வேத text -களைச் சொல்வதிலும் சொல்லிக் கொடுப்பதிலும் ‘கனம்’ என்னும் முடிவு வரை போனவராக இருந்தால் அவரை “ச்ரோத்ரியர்” என்பதாகவும்; இப்படி மூலநூலான text – இல் தேர்ச்சி பெற்றிருப்பது மட்டுமில்லாமல் அதன் அர்த்தங்கள், தாத்பர்யங்கள் ஆகியவற்றை நன்றாக விளக்ககிக் கூறவும் வல்லவராயிருந்தால் ‘ப்ரவக்தா’ என்பதாகவும் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. ‘ப்ரவசனம்’ பண்ணுபவர் யாரோ அவர் ‘ப்ரவக்தா’

கொஞ்ச காலத்துக்குப் பிற்பாடு முதலிலே சொன்ன ஆசார்யர், உபாத்யாயர் என்ற இரண்டு விதமான டீச்சர்கள் உண்டானார்கள்.

ravi said…
ஒரே குருகுலத்தில் படிப்பவர்களை “ஸப்ரஹ்மசாரிகள்” என்றும் “ஸதீர்த்யர்கள்” என்றும் பாணினி சொல்லியிருக்கிறார். இதே பேர்கள் பிற்காலத்திலும் நீடித்தன. இங்கிலீஷில் class – mates என்கிறோம். வடக்கே “குருபாயிக்கள்” என்கிறார்கள்.
ravi said…
உன் கடன் மனைவிக்குப் பணி செய்து கிடப்பதே!

மனைவி மேல் கடும் புகார் கூறிய பக்தருக்கு. பெரியவாளின் நீண்ட அறிவுரையும், அருளும்.

இப்படி எத்தனை குடும்பங்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள்! கணக்கே இல்லை. அருளுக்குக் கணக்கே இல்லை!

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

"என் மனைவிக்கு எப்போதும் உடம்பு சரியில்லை. தலைவலி என்று படுத்துக் கொண்டே கிடக்கிறாள். சமையல் செய்வதில்லை. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில்லை" சொல்லிக் கொண்டே போனார், நடுத்தர வயது பக்தர்.

கொஞ்ச நேரத்துக்குப் பின் பெரியவாள் சொன்னார்கள்;

"இதையே உன் சிநேகிதர்களிடம் சொல்லிப் பார்.'சம்சாரத்தை டைவர்ஸ் பண்ணு'ன்னு உபதேசம் பண்ணுவா.

உன் பந்துக்களிடம் சொல்லு,'அவள் கிடக்கிறாள்,கழிசடை, பிறந்தகத்துக்கு அனுப்பிவிட்டு, வேற நல்ல பெண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கோ' என்பார்கள்.

ஜோஸ்யரிடம் போய்க் கேட்டுப் பார். 'ராகு தசை,கேது தசை பரிகாரம் பண்ணணும்' என்பார்.

டாக்டரிடம் போ. எக்ஸ்-ரே,ரத்தப் பரிசோதனை,இஸிஜி,டெஸ்ட் எடுக்கச் சொல்லி, ஒரு பக்கம் நிறைய மருந்து எழுதிக் கொடுப்பார்.

சொந்தக்காரப் பாட்டியைக் கேள்,'உனக்குத் திருஷ்டி தோஷம்,செய்வினை,ஆபிசாரம் இருக்கு. மந்திரவாதியிடம் போ' என்பாள்.

சரி என்னிடம் வந்தே, 'என் சம்சாரத்துக்கு உடம்பு குணமாகணும்னு'' என்னைக் கேட்கல.'அவளுக்கு உடம்பு சரியில்லை. அடிச்சு விரட்டத் தயாராயிட்டேன்'னு சொல்ல வந்திருக்கே. அப்படித்தானே..."-பெரியவா.

பக்தர் மென்று விழுங்கினார். சரீரத்தின் உள் உறுப்புகளைத்தான் எக்ஸ்-ரே எடுக்க முடியும். நெஞ்சில் ஓடும் எண்ணங்களைக் கூட அப்படி படம் எடுக்க முடியுமா,என்ன?

"இதோ பார்! சம்சாரம் என்பவள், வாழ்க்கைத் துணை. அவளுக்கு உடம்புக்கு வந்துவிட்டால், அவளைக் கவனிப்பது உன் கடமை.இத்தனை நாள், உனக்குச் சோறு வடித்துப் போட்டிருக்காளே?உன் சுக- துக்கங்களில்.பங்கு கொண்டிருக்காளே? அவளும் ஒரு ஜீவன்தானே? உனக்குக் கொஞ்சமும் பச்சாதாபமே இல்லையே! எத்தனை கல் நெஞ்சு உனக்கு? நீ இனிமேல் தரிசனத்துக்கு வர வேண்டாம்"---பெரியவா.

பக்தர் தலையைக் குனிந்து கொண்டார். அவருக்குள்ளே, ஏதோ ரசவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

"என்னை மன்னிக்கணும். எனக்கு இவ்வளவு, கடுமையான தண்டனை கொடுக்கப்படாது. பத்தினியை நல்லபடியா கவனிச்சுக்கிறேன். தரிசனத்துக்குத் தடை போடக்கூடாது" என்று தேம்பினார்.

பெரியவாளுக்கு மனம் உருகிற்று.....

"உன் சம்சாரத்தை, கோட்டக்கல் ஆயுர்வேத வைத்தியரிடம் அழைத்துக் கொண்டு போய், டிரீட்மெண்ட் கொடு. க்ரானிக் ஹெட்-ஏக் ஆனதால் இரண்டு மூணு மாதம் வைத்தியம் செய்ய வேண்டியிருக்கும். க்ஷேமமா இரு."---பெரியவா.

இப்படி எத்தனை குடும்பங்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள்! கணக்கே இல்லை. அருளுக்குக் கணக்கே இல்லை!

Jaya Jaya Shankara hare hare shankara
ravi said…
லலிதா ஸஹஸ்ரநாமம் !

ஸ்ரீ மாதா லலிதா மகா திரிபுரசுந்தரி, சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்க முடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.
ravi said…
சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள், தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.
ravi said…
லலிதா தேவியின் ஆயிரம் நாமங்களில் திரும்ப வராமல், ஒரு முறை மட்டுமே வரும் பெருமை கொண்டது லலிதா சகஸ்ரநாமம். லலிதாதேவியின் கட்டளையின் பேரில் வஸினி, காமேஸ்வரி, அருணா, விமலா,ஜெயினீ, மோதினீ, சர்வேஸ்வரீ, கௌலினி என்ற எட்டு வாக்தேவதைகளால் (வாக்கை அருள்பவர்கள்) உருவாக்கப்பட்ட இந்த ஸ்லோகம் பாராயணம், ஹோமம், அர்ச்சனை போன்ற முறைகளில் வழிபடப்படுகிறது.
ravi said…
தேவியின் தலை முதல் பாதம் வரை
லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தில், அன்னை லலிதாதேவி மகாமேருவில், ஸ்ரீ நகரத்தில், மகாபத்ம வனத்தில், சிந்தாமணி கிரகத்தில் அனைத்து கடவுளரையும் தனக்குள் கொண்டவளாக, அதியற்புத அழகுடன், ஆற்றலுடன், அனைவரையும் அபயம் அளித்துக் காப்பாற்றும் சர்வானந்தமயி தேவி, லலிதா திரிபுர சுந்தரியாக, மகாசக்தி தேவதையாக அமர்ந்து அருள்பாலிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ravi said…
தேவியின் தலை முதல் பாதம் வரை கேசாதிபாத வர்ணனையாக, பஞ்ச க்ருத்தியங்களான ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதானம், அனுக்கிரகம் இவற்றை, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், சதாசிவன் இவர்களின் தன்மையைத் தன்னுள் கொண்டு தானே பஞ்ச பிரம்ம ரூபிணியாக இந்தப் பிரபஞ்சத்தை நடத்துவதாக வர்ணிக்கப் படுகிறாள்.
ravi said…
தேவியின் ஒவ்வொரு நாமமும் தேனாய் இனிக்கும் பொருள்களைக் கொண்டவை.
பிரம்மாண்ட புராணத்தில், குடந்தைக்கு அருகிலுள்ள திருமீயச்சூரில் விஷ்ணுவின் அவதாரமான சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர், அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளைப் பின்வருமாறு கூறுகிறார்:

ravi said…
தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப் போக்கும். செல்வத்தைஅளிக்கும். அகால மரணம் ஏற்படாது. நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்குப் பிள்ளைச் செல்வம் தரும். கங்கை முதலிய புண்ணிய நதிகளில் முறைப்படி பல தடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்டைசெய்தல், க்ரஹண காலத்தில் கங்கைக் கரையில்அசுவமேத யாகம் செய்தல், பஞ்சகாலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம்செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்த புண்ணியமானது லலிதா சகஸ்ரநாமப் பாராயணம்.” அனைத்துக் கடவுளையும் வழிபட்ட புண்ணியம்
ravi said…
இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைத் தவிர வேறு உபாயம் இக்கலியுகத்தில் இல்லையென்று கருதப்படுகிறது. பவுர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில், சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகள் நல்லிணக்கத்திற்கு வருவார்கள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான் என்று கூறப்படுவதுண்டு.
இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும். ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.

ravi said…
பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீ வித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது” என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.
ravi said…
லலிதா சகஸ்ரநாமத்தின் இன்னொரு சிறப்பு, இதைப் பாராயணம் செய்யும்போது அனைத்துக் கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்குச் சேரும்.
வெள்ளிகளில் மட்டுமன்றி அனைத்து கிழமைகளில் மற்றும், தேவிக்கு உகந்த நாட்களில் லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள்,

ravi said…
எதை அடைய விரும்புகிறோமோ அது தானாய் வந்து சேரும். தேவி எப்பொழுதும், எந்த கஷ்டம் வந்தாலும் நம்மைக் கவசமாய் நின்று காப்பாள். அன்னை லலிதா திரிபுர சுந்தரியின் அழகிய நாமங்களை அனுதினமும் சொல்வோம். அவள் அருளைப் பெறுவோம்.
ravi said…
லலிதா சகஸ்ரநாமம் – பலன்கள்….

(ஹயக்ரீவர் – அகத்தியர் உரையாடல்)

இரகசியங்களிலும் பரம ரகசியமான இந்த 1000 திருநாமங்கள் லலிதைக்கு மிகவும் பிரீதியானது.
இது போன்றதொரு துதி முன்பும் இல்லை, இனி வருங்காலங்களிலும் இருக்க போவதில்லை.
இது அனைத்து விதமான வியாதிகளையும் ஒழித்து நற்செல்வத்தை வழங்க வல்லது.
இது விபத்துகளையும், அகால மரணத்தையும் தடுக்க வல்லது.
ravi said…
இது அனைத்து விதமான ஜீரங்களையும் போக்கி தீர்க்காயுளை வழங்குகிறது.
இது அனைத்து புருஷார்‍த்தங்களையும் வழங்க வல்லது.

இது அம்பிகையை போற்ற சிறந்த துதியாகும். இதனை அனுதினமும் லலிதையை வணங்கி பாராயணம் செய்தல் வேண்டும்.
ravi said…
இது அம்பிகையை போற்ற சிறந்த துதியாகும். இதனை அனுதினமும் லலிதையை வணங்கி பாராயணம் செய்தல் வேண்டும்.

காலையில் எழுந்து நித்ய கர்மங்களை முடித்த பின் ஸ்ரீசக்கரத்தை முதலில் பூஜிக்க வேண்டும்.

அதன் பிறகு அன்னையின் மந்திர ஜபம் செய்தல் வேண்டும். பிறகு இந்த 1000 நாமங்களை துதிக்க வேண்டும்.

ஓ கும்பத்தில் உதித்தவனே ! இந்த 1000 நாமங்களை வாழ்வின் மத்தியில் பாராயணம் செய்வதன் பலன்களை அறிவாயாக !!!
ravi said…
இதை பாராயணம் செய்யும் பக்தன் கோடி பிறவிகளில் கங்கை போன்ற பல புனித நதிகளில் நீராடிய புண்ணியத்தை அடைகிறான்.

மேலும் கோடி லிங்க பிரதிஷ்டை செய்த பலனையும் அடைகிறான்.

மேலும், குருக்ஷேத்திரத்தில் கிரகண காலத்தில் எண்ணற்ற ஞானிகளுக்கு ஸ்வர்ண தானம் செய்த பலனையும் அடைகிறான்.
மேலும், கங்கை கரையில் கோடி அஸ்வமேத யாகம் செய்த பலனையும்,

வறண்ட பூமியில் கோடி நீர்நிலைகள் அமைத்த புண்ணியத்தினையும் அடைகிறான்.
மேலும், பஞ்ச காலத்தில் எண்ணற்றவர்களுக்கு உணவளித்த புண்ணியத்தையும், 1000 பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்த புண்ணிய பலனையும் அடைகிறான்.

மேற்கூறிய அனைத்து புண்ணிய காரியங்களையும் கோடி முறை செய்தால் ஏற்படும் புண்ணியத்தினை இந்த 1000 திருநாமங்களில் ஏதேனும் ஒன்றை பக்தியுடன் கூறுவதாலேயே அடைவாய் !!!
ravi said…
இந்த 1000 திருநாமங்களில் ஏதேனும் ஒன்றை பக்தியுடன் கூறுவதாலேயே, சந்தேகத்துக்கிடமின்றி ஒருவன் அது வரை செய்த பாகங்களிலிருந்து விடுதலை அடைகிறான்.

ஒருவன் தினசரி தனது நித்ய கர்மங்களை செய்யாத பாவத்திலிருந்து கூட மிக துரிதமாக விடுதலை அடைகிறான்.

ஓ கும்பத்தில் உதித்தவனே !! 14 லோகங்களிலும் எப்படி உயிர்கள் தங்கள் சக்திக்கேற்ப பாவங்களிலிருந்து விடுதலை அடைவார்கள் என்று செவி மடுப்பாயாக
ravi said…
பாவங்களிலிருந்து விடுபட நினைக்கும் ஒருவன் இந்த துதியை விடுத்து வேறு மார்க்கம் தேடுவது, ஜலதோஷத்திற்கு மருந்து தேடி இமாலய சிகரம் செல்வதற்கு சமமானதாகும்.

இந்த 1000 திருநாமங்களை தினசரி பாராயணம் செய்யும் ஒருவன், லலிதையின் பூரண அருளால் அவனது அனைத்து விருப்பங்களும் நிறைவேறப் பெறுகிறான்.

இவ்வளவு பெருமை வாய்ந்த திருநாமங்களை பாராயணம் செய்யாதவன் எப்படி பக்தன் ஆக முடியும்?
ravi said…
தினசரி பாராயணம் செய்ய முடியாத ஒருவர் விசேஷ நாட்களில் மட்டுமாவது பாராயணம் செய்ய வேண்டும். மாதத்தில் முதல் நாள், ஆண்டின் முதல் நாள், 3 பிறந்த நாட்கள் (தன்னுடையது, தனது மனைவி, மற்றும் மகன்/மகள்)

நவமி, சதுர்த்தசி, வளர்பிறை வெள்ளி கிழமை, மற்றும் பௌர்ணமியில் பாராயணம் செய்தல் மிகவும் விசேஷமானது.

பௌர்ணமி தினத்தன்று சந்திர பிம்பத்தில் லலிதாம்பிகைக்கு பஞ்ச உபசாரங்களால் பூஜை செய்து இந்த 1000 திருநாமங்களை பாராயணம் செய்க !!
ravi said…
இதனால் ஒருவன் நோய், நொடிகள் நீங்கி தீர்க்காயுளை அடைகிறான்.

ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவன் தன் தலையில் கை வைத்து இந்த 1000 திருநாமங்களை உச்சரிக்க, ஜுரம் நீங்கி சுகம் அடைவார்.

எந்த ஒரு நோயிலிருந்தும் விடுபட, திருநீற்றின் மீது கை வைத்து இந்த 1000 திருநாமங்களை உச்சரித்த பின்னர் அதனை பூசிக் கொள்ள நோய் நீங்கி சுகம் அடைவார்.

ஓ கும்பத்தில் உதித்தவனே ! ! பாத்திரத்தில் நீரை நிரப்பி அதன் மீது கை வைத்து இந்த 1000 திருநாமங்களை உச்சரித்த பின்னர் அந்த நீரில் குளித்தால் அனைத்து விதமான கிரக தோஷத்திலிருந்தும் விடுபடலாம்.

ravi said…
அமிர்த கடலின் மத்தியில் அன்னை லலிதாம்பிகையை தியானித்து இந்த 1000 திருநாமங்களை உச்சரிக்க, அனைத்து விதமான விஷமும் மறைந்து போகும்.
மகப்பேறு இல்லாத தம்பதிகள், அம்பிகைக்கு நவநீதம் (புதிய வெண்ணெய்) படைத்து, இந்த 1000 திருநாமங்களை உச்சரிக்க, நன்மக்களைப் பெறுவர்.

அரசனை வசீகரிக்க, அரசனின் மாளிகையை நோக்கி அமர்ந்து
தேவியை இந்த 1000
திருநாமங்களால் துதித்தால் அந்த அரசன் யானை மீது அமர்ந்து உன்னை நோக்கி வருவான்.

வந்தவன் தேவியின் பக்தனை வணங்கி நிற்பான்.
மேலும், அவன் கூறினால் நாட்டையே காலடியில் சமர்ப்பிக்கவும் காத்திருப்பான்.
தினசரி இந்த 1000 திருநாமங்களை உச்சரிப்பவனின் முகத்தினை கண்ட மாத்திரத்தில் ஞானிகளும் அவனை கரம் கூப்பி வணங்குவர்.

தினசரி இந்த 1000 திருநாமங்களை உச்சரிப்பவனின் எதிரிகளை சரபேஸ்வரர் தனது அம்புகளால் வீழ்த்துவார்.
ravi said…
இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்யும் பக்தனுக்கு எதிராக எவனொருவன் தீய அபிசார பிரயோகம் செய்கிறானோ, அவனை பிரத்யங்கிரா தேவி அழித்தொழிப்பாள்.

இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்யும் பக்தனை எவனொருவன் வஞ்சகம் மற்றும் பொறாமை கண் கொண்டு காண்கிறானோ (தீய திருஷ்டி) அவனது கண் பார்வை மார்த்தாண்ட பைரவரால் பறிக்கப்படும்.

இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்யும் பக்தனின் செல்வத்தினை எவனொருவன் அபகரிக்கிறானோ, அவன் எங்கு சென்று மறைந்தாலும் அவனை க்ஷேத்ரபாலர் வதைப்பார்.

இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்பவரிடம் எவனொருவன் வீண் விதண்டாவாதம் செய்கிறானோ, அவனது பேசும் சக்தியை நகுலீஸ்வரி பறித்து விடுவாள் (வாக் ஸ்தம்பனம்).

இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்பவரிடம் எந்த அரசன் பகை கொண்டு அவரை துன்பம் செய்தால், அவனது சேனைகளையும், அவனையும் தண்டினி தேவி (வாராஹி) கணப் பொழுதில் துவம்சம் செய்து விடுவாள்.
ravi said…
எவனொருவன் இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் இடைவிடாது 6 மாதம் பாராயணம் செய்கிறானோ அவனது இல்லத்தில் லக்ஷ்மி தேவி நிரந்தர வாசம் செய்வாள்.

எவனொருவன் இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் இடைவிடாது 1 மாதம் (அ) 3 வாரம் பாராயணம் செய்கிறானோ அவனது நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனமாடுவாள்.
எவனொருவன் இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் வாழ்வின் மத்தியில் பாராயணம் செய்கிறானோ அவனது பாவங்களிலிருந்து அவனுக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

எவனொருவன் இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் தனதாக்கிக் கொள்கிறானோ, அவன் அறிவில் சிறந்தவனாக ஆவதோடு, அன்னம், வஸ்திரம், தனம், தானியம் என அனைத்து சுகங்களையும் குறைவின்றி பெறுவான்.

எவனொருவன் தனது பக்தியினாலும், பயிற்சியினாலும் “மந்திர ராஜம்” எனப்படும் மந்திரத்தினை அடைந்து அதனால் ஸ்ரீசக்கரத்தை பூஜிக்கிறானோ அவனை தெய்வீகமானவனாக இந்த உலகம் போற்றும்.
ravi said…
இந்த ரகசியமான திருநாமங்களை சிறுபுத்தி உள்ளவர்களிடம் அளிப்பதில் எந்த பயனும் இல்லை. இதனை தகுதி வாய்ந்தவர்க்கு மட்டுமே அளித்தல் வேண்டும்.

ஓ அகத்தியா !! இவ்வுலகில் மந்திர ராஜத்திற்கு நிகரான மந்திரமும் இல்லை, லலிதைக்கு நிகரான தெய்வமும் இல்லை.
பிரார்த்தனைகளில் இந்த திருநாமங்களுக்கு இணையானது ஏதுமில்லை.

இந்த திருநாமங்களை புத்தகமாக எழுதி,
அந்த புத்தகத்தை அன்னைக்கு சமர்ப்பிப்பதால், லலிதை மிகவும் பிரீதி அடைகிறாள். மேலும், இதை பற்றி கேட்பாயாக ! !

தந்திரங்களில் இது போன்றதொரு சிறந்த துதி வேறொன்றுமில்லை.

எனவே, தந்திரம் பயில்பவர்கள் இதனை தினமும் துதிக்க வேண்டும்.
ravi said…
49, 50, 51. இந்த திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்து,

ஸ்ரீசக்கரத்தை அம்பிகைக்கு பிரீதியான செந்தாமரை, துளசி மலர்(இலைகள் அல்ல), கல்ஹாரம்(அல்லி மலர்), கடம்ப மலர்,

செண்பக மலர், ஜாதி புஷ்பம், மல்லிகை, கரவீர புஷ்பம் (அலரிப்பூ), உத்பலம்(கருங்குவளை), வில்வ இலை, தும்பைப்பூ, கேசரம், பாதிரி

மற்றும் தாழம்பூ, வசந்தமல்லி(குருக்கத்தி) போன்ற நறுமணம் மிக்க மலர்களைக் கொண்டு அர்ச்சித்து வணங்குவதால் உண்டாகும் பலனை அந்த மகேஸ்வரனாலும் முழுமையாக விவரிக்க முடியாது.
ravi said…
அவளது சக்கரத்தை வணங்குவதால் உண்டாகும் பலனை பற்றி லலிதையால் மட்டுமே கூற முடியும்.

பிரம்மன் போன்ற மற்றவர்களால் அற்ப அளவிலேயே கூற முடியும்.

மிகவும் ரகசியமான இந்த துதிக்கு நிகரானது ஒன்றுமில்லை. இதனை துதிக்கும் மனிதன் போகம், மோட்சம் இரண்டையும் ஒரு சேர பெறுகிறான்.

வாழ்வின் 4 நிலைகளிலும் இத்துதியை இடைவிடாது ஜபித்துக் கொண்டே அவனது கடமைகளை செய்து வருவானேயாயின், அவன் அவனுடைய லட்சியத்தை எந்த விதமான சிரமமுமின்றி அடையப் பெறுவான்.
கலியுகத்தில் அனைத்து தர்மங்களும் வலுவிழந்து போனாலும், அந்நேரத்தில் கூட ஒருவர் இத்துதியை பாடி எளிதில் முக்தியை அடைய முடியும்.

லௌகீக வாழ்க்கையில் வெற்றி பெற விஷ்ணு நாம கீர்த்தனை மிக முக்கியம்.

ஆனால், விஷ்ணுவின் 1000 நாமங்களை துதிப்பது, ருத்ரனின் 1 நாமத்திற்கு ஈடானது.

ஆனால், ருத்ரனின் 1000 நாமங்களை துதிப்பது, தேவியின் 1 நாமத்திற்கு ஈடானது.

ஓ அகத்தியா !! மேற்கண்டதை விட, தேவியின் 1000 திருநாமங்களை துதிப்பது கோடி முறை சிறந்தது.
ravi said…
இந்த 1000 திருநாமங்களிலும், 10 நாமங்கள் மிக முக்கியமானதும்,

போற்றுதலுக்குரியதுமாகும். அவை :
கங்கா
பவானி
காயத்ரி
காளி
லக்ஷ்மி
சரஸ்வதி
ராஜராஜேஸ்வரி
பாலா
சியாமளா
லலிதா

(1000 நாமங்களை தினமும் துதிக்க இயலாதோர், இந்த 10 துதிகளையேனும் 3 முறை துதித்தல் வேண்டும்)
ravi said…
இந்த 10 நாமங்களையேனும் தினமும் துதிக்க கலியின் பாவங்களிலிருந்து விடுபடலாம்.
மேலும், இந்த 1000 திருநாமங்களிலும் “ஸ்ரீமாதா” என்ற நாமம் மிகவும் முக்கியமானது மற்றும் மறக்க கூடாதது.

ravi said…
விஷ்ணுவின் நாமங்களை விட, சிவ நாமம் உயர்ந்தது. ஆனால், மூவுலகிலும் லலிதையின் நாமத்தை விட உயர்வானது ஏதுமில்லை.

மந்திர ராஜத்தினை கொண்டு ஸ்ரீசக்கரத்தை ஆராதித்து , இந்த 1000 திருநாமங்களை துதிப்பது தவத்திற்கு ஈடானது.

இந்த திருநாமங்களை துதிப்பதை விடுத்து அன்னையை மகிழ்விக்க வேறு மார்க்கம் தேடுவது, கண் பார்வையற்ற ஒருவன் உருவத்தினை காண நினைப்பது போன்று முட்டாள் தனமானது.

கோடி பிறவிகளில் மற்ற அனைத்து தெய்வங்களையும் பாடி வணங்குவது, லலிதையின் 1000 திருநாமங்களை ஒரு முறை சிரத்தையாக பாடுவதற்கு ஈடானது.

இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்து, தகுந்த குருவின் மூலமாக ஸ்ரீவித்யா உபாசனையில் வெற்றி பெற்றால் இதுவே அவரது கடைசி பிறவியாக இருக்கும்.

இவ்வுலகில் இந்த ரகசியமான திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்யும் ஸ்ரீவித்யா உபாசகரை காண்பது அரிது.

ravi said…
மந்திர ராஜத்தினை கொண்டு ஸ்ரீசக்கரத்தை ஆராதித்து , இந்த 1000 திருநாமங்களை துதிப்பது தவத்திற்கு ஈடானது.
இந்த திருநாமங்களை துதிப்பதை விடுத்து அன்னையை மகிழ்விக்க வேறு மார்க்கம் தேடுவது, கண் பார்வையற்ற ஒருவன் உருவத்தினை காண நினைப்பது போன்று முட்டாள் தனமானது.

இந்த திருநாமங்களை விடுத்து , வேறு மார்க்கத்தில் சித்திகளை அடைய நினைப்பது உணவை நிராகரித்து விட்டு, பசியை போக்க உபாயம் தேடுவது போலாகும்.
ravi said…
லலிதையை மகிழ்விக்க ஒரு பக்தன் இந்த ரகசியமான 1000 திருநாமங்களை உச்சரித்தாலே போதுமானது. மற்ற முறைகளை விட இதில் தான் அவள் மிகவும் பிரீதி அடைகிறாள்.

அன்னையை மகிழ்விக்க இந்த ரகசியமான 1000 திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டும்.

ஓ அகத்தியா ! ! ஆனால் இப்போது நான் உனக்கு உபதேசித்த திருநாமங்கள் மிகவும் ரகசியமானவை ஆகும்.

அனைத்து வேதங்களையும் கற்ற ஒருவன் ஒரு முறையாவது இந்த திருநாமங்களை உச்சரிக்கவில்லை என்றால், ஸ்ரீவித்யை அவர்களுக்கு புலப்படாது ரகசியமாக வைக்கப்படும்
ravi said…
80, 81. இந்த ரகசியமான திருநாமங்களை பாராயணம் செய்யாத மூடனிடம் ஸ்ரீவித்யையை அளித்தால் அது தவறாக பயன்படுத்த படும் அபாயம் உள்ளது ,

அதனால் தான் இது வெளியுலகுக்கு தெரியா வண்ணம் ரகசியம் காக்கப்படுகிறது.

அதனால் அப்படிப்பட்டவனுக்கு ஸ்ரீவித்யையை அளித்தவன் யோகினிகளின் சினத்திற்கு ஆளாக நேரிடும்.
ravi said…
ஓ அகத்தியா !! இப்போது நான் உனக்கு உபதேசித்த திருநாமங்கள் நானே எனது விருப்பத்தின் பேரில் உனக்கு அளிக்கவில்லை.

அன்னையின் அருளாசியினாலேயே உனக்கு இது கிடைத்திருக்கிறது.

எனவே, இதனை பக்தியுடன் துதித்து, அன்னையை மகிழ்வித்தால், அவள் உனது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவாள்
ravi said…
சூதர் கூறினார் :

இப்படி கூறி முடித்த ஹயக்ரீவர், அன்னையை வணங்கி பரவசத்தில் ஆழ்ந்தார்.
பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் ஸ்ரீ ஹயக்ரீவருக்கும் அகத்தியருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் இடம் பெற்ற ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் பலன்கள் நிறைவடைந்தது.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மட்டுமே தேவதைகளால் இயற்றப்பட்டு, தெய்வத்தினால் பூமிக்கு கொண்டு வரப்பட்டது.
இயற்றியவர்கள் – வாக்தேவதைகள். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு :

வசினி
காமேஸ்வரி
மோதினி
விமலே
அருணே
ஜயினி
சர்வேஸ்வரி
கௌலினி
இவர்கள் ஸ்ரீசக்கரத்தின் எட்டாவது ஆவரணத்தில் விளங்குபவர்கள்.

பூமிக்கு முதலில் அளித்தது – பகவான் ஹயக்ரீவர்

புராணத்தில் சேர்த்தது மட்டுமே வியாசர் பெருமான்.
ravi said…
புராணத்தில் சேர்த்தது மட்டுமே வியாசர் பெருமான்.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மட்டுமே “சகஸ்ரநாமம்” என்ற பெயருக்கேற்ப சரியாக 1000 திருநாமங்களைக் கொண்டதாகும்.
சமஸ்கிருதத்தின் அனைத்து இலக்கணங்களும் சரிவர அமையப் பெற்ற ஸ்தோத்திரம் இது என்ற பெருமையை உடையது.
சஹஸ்ரநாமங்களில் சொற்களின் தொடர்ச்சிக்காகவும், பாடல் சுவைக்காகவும் து, ச்ச, அபி போன்றவற்றை பயன்படுத்துவர்.
ஆனால், அப்படிப்பட்ட பொருள் இல்லா சொற்கள் ஏதுமின்றி அமையப்பெற்ற ஸ்தோத்திரம் இதுவே.

மேலும், இந்த ஸ்தோத்ரம் முழுவதும் மந்திரங்களுக்கு நிகரானது. ஆகையால், இதனை துதியாகவே படிக்க வேண்டும். இசையாக ராகம் சேர்த்து பாடுதல் கூடாது.
மேலும், இந்த ஸ்தோத்ரத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இதில் ஒவ்வொரு நாமத்தினையும் தனிப்பட்ட முறையில் பார்த்தாலும் சரி, ஸ்தோத்திரம் முழுவதும் சேர்த்து படித்தாலும் பொருள் தரும்.
ravi said…
(எ-கா) :
ஸ்ரீசக்ரராஜ நிலயா ஸ்ரீமத் திரிபுரசுந்தரி

ஸ்ரீசக்ரராஜ நிலயா – ஸ்ரீசக்கரத்தை இருப்பிடமாகக் கொண்டவள்.
ஸ்ரீமத் திரிபுரசுந்தரி – திரிபுரரின் மனைவி.

ஸ்ரீசக்கரத்தினை இருப்பிடமாகக் கொண்ட திரிபுரரின் மனைவி.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதியவர் “பாஸ்கரராயர்” என்ற ஸ்ரீவித்யா உபாசகர். அன்னையின் பரிபூரண அருளைப் பெற்றவர்.
சாக்ஷாத் அன்னையே இவரது தோளில் அமர்ந்து இவருக்கு அருள் புரிந்து உலகப் புகழ் அடையச் செய்தாள் என்றால் இவரது பெருமை எப்படிப்பட்டது என்று நாம் உணர வேண்டும்.

இவர் எழுதிய உரையின் திருப்பெயர் “சௌபாக்கிய பாஸ்கரம்”

இன்றும் இவருக்கு தஞ்சை மன்னன் பரிசளித்த ஊர் இவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. அந்த ஊரின் பெயர் “பாஸ்கரராஜபுரம்”
Hemalatha said…
Sir 🙏🙏🙏you should not say like this.You're feeding people through all means,which we can't like studies,giving money for unknown person marriage,carrier what not.Baba's blessings to you and your family always sir🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நம் தேசத்தில் மட்டும் என்றில்லை; லோகம் முழுக்க துர்ப்பிக்ஷம் அதிகமாகி வருகிறது. மெஷின்கள் நிறையச் செய்து விடலாம். ஃபாக்டரிகள் நிறைய வைத்து விடலாம். ஆனால் பயிர் பச்சைகள் வளர்வது நம் கையில் இல்லாமல் இருக்கிறது. தானிய ஸம்ருத்தி (செழிப்பு) இருந்தாலொழிய, வயிறு நிரம்பினால் அன்றி, பாக்கி என்ன சுபிக்ஷம் செய்து கொண்டாலும், மொத்தத்தில் துர்பிக்ஷமாகத்தான் இருக்கிறது. பயிர் பச்சை விளைச்சலுக்கு நம்முடைய அகட விகட சாமர்த்தியங்களால் பிரயோஜனமில்லை. என்ஜினீயர் அணை கட்டலாம். ஆனால், மழையை பெய்விக்க அவரால் முடியாது. ஜகன்மாதாவான அன்னபூர்ணேசுவரியை எல்லோரும் மனஸாரப் பிரார்த்தித்துக் கொண்டால்தான் விமோசனம் உண்டு. அவளே நாம் செய்கிற மகாபாபங்களை க்ஷமித்துத் தானிய ஸம்ருத்தியை அநுக்கிரஹிப்பாள். துர்பிக்ஷம் போக அவளே பிச்சை போடுவாள்.

ravi said…
நம்முடைய ஆசார்யாள் ஸ்ரீசங்கர பகவத் பாதாள் காசியில் இருந்தபோது, அன்னபூர்ணி மீது ஒரு ஸ்தோத்திரம் பாடியருளினார்.

அதில் சுலோகத்துக்குச் சுலோகம் முடிவிலே, “கருணையின் பற்றுக்கொம்பாக இருக்கிற அம்மாவே, அன்னபூர்ணேசுவரியே பிச்சை போடு” என்று உருக்கமாக வேண்டிக் கொள்கிறார்.

‘பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ

மாதா அன்னபூர்ணேச்வரீ’

ravi said…
தேஹி – போடு’ என்றால் அவருக்கில்லை. அவருக்குப் பிக்ஷை ஜாம் ஜாம் என்று நடந்துகொண்டிருந்திருக்கும்! தவிரவும் நம் ஆச்சார்யாளுக்குச் சரீராபிமானம், உதரபோஷணம், தான் என்கிற எண்ணம் லவலேசம்கூடக் கிடையாது. கிரகசன் என்ற காபாலிகன் அவரிடம், “ஒரு சக்கரவர்த்தி அல்லது சந்நியாசியின் தலையைப் பலிக் கொடுத்தால் தனக்குக் கபாலியின் தரிசனம் கிடைக்கும்” என்றான். உடனே ஆச்சார்யாள், “சக்கரவர்த்தியின் தலைக்கு ஆசைப்பட்டால் உன் தலையே போய்விடும். சந்நியாசியின் தலை வேண்டுமானால் இதோ இந்தத் தலையை எடுத்துக் கொள்” என்று தனது சிரசையே தொட்டுக் காட்டினார். அப்புறம் ஈஸ்வர சங்கல்பத்தால் கதை மாறிப்போயிற்று.
ravi said…
அது வேறு விஷயம். இப்போது நான் அந்தத் கதையைச் சொல்ல வரவில்லை. ஆச்சாரியாளுக்குக் கொஞ்சம்கூட அஹங்கார மமகாரமே கிடையாது. தேகாபிமானமே கிடையாது என்பதற்காக இதைச் சொன்னேன். அப்படிப்பட்டவர் “பிக்ஷாம் தேஹி – பிச்சை போடு” என்றால் என்ன அர்த்தம்?

இந்த ஸ்தோத்திரத்தின் கடைசி சுலோகத்தைப் பார்த்தால் அர்த்தம் புரியும். அதில், ‘எனக்குப் பார்வதியே அம்மா; பரமேசுவரனே அப்பா! சிவபக்தர்கள் எல்லாம் பந்துக்கள்; மூவுலகமும் வீடு’ என்கிறார். எனவே தேஹி – பிச்சை போடு என்று இவர் கேட்கிறபோது, திரிலோகங்களுக்கும் பிச்சை போடு என்று பிரார்த்தித்ததாகவே அர்த்தமாகிறது.

அதோடு, தனக்கு என்றே வேண்டிக்கொள்கிற நம் மாதிரி இருக்கப்பட்டவர்கள், பாராயணம் செய்வதற்குப் பொருத்தமாக இப்படிப் பிரார்த்தனை செய்திருக்கிறார்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 359*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
இந்த மூகபஞ்சசதி பாதாரவிந்தத்துல ஒரு ஸ்லோகம் வரும். 72வது ஸ்லோகம்.
दधानैः संसर्गं प्रकृतिमलिनै: षट्पदकुलैः
द्विजाधीश श्लागाविधिषु विदधद्भिर्मुकुलताम् ।
रजोमिश्रै: पद्मैर्नियतमपि कामाक्षि पदयोः
विरोधस्ते युक्तो विषमशरवैरिप्रियतमे ॥72||
த³தா⁴னை꞉ ஸம்ʼஸர்க³ம்ʼ ப்ரக்ருʼதிமலினை: ஷட்பத³குலை꞉
த்³விஜாதீ⁴ஶ ஶ்லாகா³விதி⁴ஷு வித³த⁴த்³பி⁴ர்முகுலதாம் .
ரஜோமிஶ்ரை: பத்³மைர்நியதமபி காமாக்ஷி பத³யோ꞉
விரோத⁴ஸ்தே யுக்தோ விஷமஶரவைரிப்ரியதமே ||72||
ravi said…
இந்த விரோதம் *“பத³யோ꞉*
*விரோத⁴ஸ்தே யுக்தோ” –* பொருத்தமானது தான்.

ஏன் தெரியுமா. இந்த தாமரை “ *த³தா⁴னை꞉ ஸம்ʼஸர்க³ம்ʼ* *ப்ரக்ருʼதிமலினை: ஷட்பத³குலை꞉”* எப்பவும் மலினமாம். “ *ஷட்பத³குலை꞉”-* வண்டுகளின் கூட்டத்தோடு இந்த தாமரை “ஸம்ʼஸர்க³ம் த³தா⁴னை꞉” Friendship வச்சுண்டிருக்கு. ..

“ *த்³விஜாதீ⁴ஶ ஶ்லாகா³விதி⁴ஷு” – த்³விஜாதீ⁴ஶ:* அப்டினா சந்திரன். “ *ஶ்லாகா³விதி⁴ஷு” –* சந்திரன் நன்னா உதிக்கும் போது

*“முகுலதாம் வித³த⁴த்³பி” –* தாமரை வாடிவிடுகிறது.

*“ரஜோமிஶ்ரை* :” – தாமரைல மகரந்தம் இருக்கு இப்படி ரஜஸோடு கூடியதாக இருக்கிறது.💐💐💐
ravi said…
*86. ஸுரேசாய நமஹ (Sureshaaya namaha)*

**அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 356* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

*ஸுரேச* ’:ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
குருகுலத்தை விட்டு வெளியேறிய மந்தன், தனது தவறுக்கு வருந்தினான். அதற்குப் பிராயச்சித்தம் தேடும் விதமாகப்
பெருமாள் கோயில்களில் புல் செதுக்குதல், தூய்மைப் படுத்துதல் உள்ளிட்ட தொண்டுகளைச் செய்துவந்தான்.
அதன் விளைவாக அடுத்த பிறவியில் தாந்தன் என்ற பெயருடன் விந்திய மலைப்பகுதியில் பிறந்தான்.
விந்திய மலை அடிவாரத்தில் உள்ள ஒரு ஆலமரத்தடியில் தவம் புரிந்தான்.
ravi said…
*கந்தர் அலங்காரம் 75* 🐓🦚🙏

*அலங்காரம்-16*

💐💐💐💐
ravi said…
தாவடி, ஓட்டும் மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாஅடி ஏட்டிலும் பட்டது அன்றோ! படி மாவலி பால்,
மூவடி கேட்டு, அன்று மூது, அண்ட கூட முகடு முட்ட,
சேவடி நீட்டும் பெருமான் மருகன்! தன் சிற்றடியே!
ravi said…
தாவடி = மாமனைப் போலவே, மருகனுக்கும் தாவி வரும் அந்தத் தாவடிகள்

ஓட்டும் மயிலிலும் = அவன் ஓட்டும் மயில் மேல் பாதம் பட
தேவர் தலையிலும் = தேவர்கள் தலையில் பாதம் பட
என் பா அடி ஏட்டிலும் = என் பாக்களான திருப்புகழ் ஏட்டிலும் பாதம் பட
பட்டது அன்றோ = அவன் திருவடி சம்பந்தம் பட்டவன் ஆனேனே!

இங்கே அருணகிரியார் தன்னைத் தானே மாவலிக்கு ஒப்பிட்டுக் கொள்கிறார் என்றும் சிலர் சொல்லுவர்! //மாவலியும் அருணகிரியாரும் மேலே உள்ள தேவர் சாட்சியாகத் தத்தம் ஆணவம் கீழ் அடக்கப்பட்டு, இறைவன் திருவடி முத்திரைப் பெற்று ஏற்று கொள்ளப்பட்டனர்// - என்பது சைவ சித்தாந்த நூல்களில் இருந்து வாரியார் சுவாமிகள் காட்டுவது!

மாவலி போல் செல்வம் நிரம்பிய அருணகிரி, உடல் தனதே என்ற ஆணவத்தில் அழுந்திப் பாவங்களே புரிய, உடல் சுகம் என்னும் ஆணவம் அடக்கி, தன் அடிக்கீழ் அழுத்திக் கொண்டான் முருகன்!

மாவலித் தலைமேல் மாமன் வைத்தாற் போல், அடியேன் தலைமேல் மருகன்-முருகன் வைத்தானே என்று கொண்டாடுகிறார் திருமுருகச் செம்மல், அருணகிரிநாதர்!
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 366* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*136 * नित्या - நித்யா -*
சாஸ்வதமானவள். நிலைத்து நின்று அருளுபவள். அழிவற்றவள்.
ravi said…
திதி நித்யா தேவிகள் என்று பலர் உண்டு அம்மாவாசை முதல் பௌர்ணமி வரை 15 நித்யா தேவிகள் உண்டு .

பௌர்ணமி மட்டும் இன்னொரு நித்யா தேவி வருவாள்

ஆக 16 நித்யா தேவிகளும் நிறைந்து நிற்கும் நாள் பூரண பௌர்ணமி அன்று மட்டுமே ...

சந்திர கிரகணங்கள் படும் எந்த இடமும் அன்று அமுதமாகும் இனிய நாள்

அன்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொன்னால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் ...

இந்த 16 நித்யா தேவிகளின் தேவதைகள் திதி நித்யா தேவி ..

அவளுக்கும் மேலே அம்பாள் .. மஹா நித்யா தேவி நிரந்தரமானவள் 🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 363* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
*96 தேவியின் பாதிவ்ரத்ய மகிமை*

ஸரஸ்வதீ கடாக்ஷம், லக்ஷ்மீ கடாக்ஷம்

கலத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:

ஶ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:

மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா மசரமே

குசாப்யா மாஸங்க: குரவக தரோ ரப்யஸுலப: 96😊😊😊
ravi said…
சதிதேவி என்றழைக்கப்படும் பதிவிரதைகளின் தெய்வமே!,

பிரம்மாவின் மனைவியை எத்தனையோ கவிகள் தங்களது மேதா விலாசத்தால் அடைவதில்லையா?,

சிறிதளவே செல்வத்தை கொண்டிருந்தாலும் எவனோ ஒருவன் கூட *லக்ஷ்மி-பதி* என்று கூறப்படுவதில்லையா?.

பதிவிரதைகளில் முதன்மையானவளே!,

உனது நகில்களது சம்பந்தமோ மஹாதேவனையன்றி ஒரு மருதோன்றி மரத்திற்குக் கூட கிடைத்ததில்லயே!.🙏🙏🙏
ravi said…
கண்ணா* ...

வான் கலந்த மன்னா மண் தின்ற வண்ணா

மூன்றடி அளந்த முகுந்தா

ஈரடி என் சென்னி தனில் பதித்தவனே

ஓரடி வரிகளிலும் ஒய்யாரமாய் வருபவனே

நின் நாமம் அதை
நான் கலந்து பாடுங்கால்:

நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து

ஊன் கலந்து என் உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

தொல்லையிரும்பிறவிச் சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே உன் நாமம் –

எல்லை
மருவா நெறியளிக்கும் அரங்கோன் எங்கோன்
நாமம் என்னும் தேன்
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 86*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
பருகியோடி உம்முளே பறந்துவந்த வெளிதனை

நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அதாகுமே

உருகியோடி எங்குமா யோடும்சோதி தன்னுள்ளே

கருதுவீர் உமக்கு நல்ல காரணம் அதாகுமே. 86🪷🪷🪷
ravi said…
மூச்சுக் காற்றைப் பருகி, ஞானம் பழகி வரும்போது நம்முள்ளே பறந்துவந்த ஆகயவெளியில் நிலைத்து, நினைந்து கூர்ந்து நோக்கில் உன் மலங்களாகிய பாவங்கள் அழியும்.

உருகிய நெய்போல் எங்குமாய் ஓடிக் கலந்துள்ள சோதி தன்னுள்ளும் உள்ளது.

அப்படியுள்ள அருட்பெரும் சோதிக்குள் கலக்கவேண்டும் எனக் கருதி உள்நோக்கிச் செல்வதே உங்களுக்கு நல்ல வழியாகும்.💪💪💪
ravi said…
ஐயம் தீர்ந்து போனதே தாயே அச்சம் ஒழிந்து போனதே ..

மிச்சம் இருக்கும் மேனி உன் தஞ்சம் எனக்கொண்டதே

கருணை எனும் மச்சம் கொண்டவளே ..

மச்ச லோசனீ என்றே காப்பவளே

உச்சம் தொட வைத்தாய் ..

இச்சம் தனை களைந்தே

இச்சா சக்தி என்றே கிரியா சக்தியாய் உள்ளம் வந்தே ஞான சக்தியாய் ஆண்டு கொண்டாய்

உன்னிலும் ஒர் குறை உண்டு ..

காரணம் ஏதும் இன்றி இப்படி கருணை மழை ஏன் பொழிகிறாய் ...

வரம்பின்றி ஏன் வரம் தருகிறாய்??

அளவின்றி ஏன் அள்ளித் தருகிறாய் . பவானீ என்றால் உன்னையே ஏன் தருகிறாய் ..

கொட்டி கிடந்தாலும் குறைய குறைய நிறைந்தாலும்

அளந்து தர ஏன் மனம் கொள்வதில்லை ...?

ஆண்டியாய் ஆனான் உன் பதி

மலை சென்றான் உன் புதல்வன் ..

மூன்றடி பிச்சை கேட்டான் உன் சகோதரன் ...

அள்ளி அள்ளி கொடுப்பதால் அன்றோ வீதிக்கு வந்தனர் மூவரும் ..

தெரிந்தும் அருள் செய்வது உன் குறை அன்றோ அம்மா ..

திருத்திக்கொள்..

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் அம்மா ?

உன் நினைவின்றி மாளிகையில் சிலர் வாழ்தல் சரி அன்றோ தாயே ?💐💐💐
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 135* 💐💐💐

முகுந்தமாலைல நேத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம்.

वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्

औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |

सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:

प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: ||

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்

ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |

ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:

ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||
ravi said…
ஓ சரி’ ங்கறா பெரியவா. அடுத்த நாள் பத்திரிகைல, IAS பரிக்ஷைக்கு வயசு கூட்டி இருக்கா, IAS officers நிறைய இல்லைங்கறதுனால, IAS பரிக்ஷை இருபத்திரண்டு வயசு வரைக்கும் எழுதலாம். யார்லாம் வேணுமோ application form கொடுங்கோ அப்படீன்னு சொல்லி, பெரியவா இதை பாரு form போடு, அவர் அதை வந்து சட்டை பண்ணல, நமக்கு என்னத்துக்கு IAS அப்படீன்னு நினைக்கிறார் ஸ்வாமிநாதன்,

அப்போ Delhi-லேருந்து C.S. ராமச்சந்திரன்னு ஒருத்தர் வரார், அவர் கிட்ட “இந்த பையன் collector பரிக்ஷை எழுத போறான், நீ போய் அவன்கிட்ட form வாங்கிக்கோ”, அப்படீன்னு அவர் கையால formஅ fill பண்ண வெச்சு அதை வாங்கிண்டு போய், அவர் collector-ஆகி, அப்பறம் அம்பது வருஷம் கேரளால இருந்து, அவரை முதல்ல பீகார்ல போடறா, பெரியவா “நம்முடைய ஆச்சார்யாள் அவதாரம் பண்ண கேரள தேசத்துல நீ இருந்தேன்னா, நன்னா இருக்குமேனு நினைச்சேன்” அப்படீன்னு பெரியவா சொல்றா.

உடனே அடுத்த வாரம் order மாத்தி அவரை கேரளால போட்டுடறா. கேரளால இருந்ததுண்டு, மடத்துக்கு நெறய service பண்ணி இருக்கார் இந்த ஸ்வாமிநாதன்.

அந்த மாதிரி பெரியவா, collector பதவி கொடுத்தா.
ravi said…
🌹🌺"‘ *ஸ்ரீமந் நாராயணன் எல்லா உயிர்களுக்கும் ஒவ்வொரு நியதி கொடுத்து உள்ளான் என்பதை* ......... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹ஒரு காட்டில் கரையான்கள் ஒன்று
கூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன. அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து புற்றை கட்டத்தொடங்கின.

🌺அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. அன்றிலிருந்து கரையான்கள் வேலை செய்யும் இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும் வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு. இப்படியே ஒரு வருடகாலம் சென்றது. கரையான்கள்
புற்றை கட்டி முடித்தன. பாம்பு பேசியது.

🌺''கரையான்களே! நீங்கள் கட்டிய புற்று அருமையாக இருக்கிறது. நான் ஒருமுறை உள்ளே சென்று பார்க்கட்டுமா?'' என்று கேட்டது.

🌺கரையான்களும் சம்மதித்தன. பாம்பு புற்றுக்குள்ளே சென்று பார்த்தது. பாம்பு வெளியேவரும் என்று கரையான்கள் காத்திருந்தன. அது வெளியே வரவில்லை. கரையான்கள் வெளியிலிருந்து பாம்பை கூப்பிட்டன.

🌺''புற்று வசதியாக இருக்கிறது. இனி இது என்னுடையது. வேண்டுமென்றால்,
நீங்கள் இன்னொரு புற்றை கட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் இங்கிருந்து கிளம்புங்கள், இல்லையென்றால் என் விஷத்துக்கு இரையாவீர்கள் என்று மிரட்டியது பாம்பு.

🌺சோகத்தோடு கிளம்பின கரையான்கள். வழியில் சாது சிவாவை சந்தித்து நடந்தவற்றை சொல்லி வருத்தப்பட்டன. சாது சிவா பாம்பிடம் பேசினார்.

🌺''பாம்பே! புற்றை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் உனக்கில்லை. அடுத்தவன் உழைப்பை திருடுகிறாயே, அடுத்தவன் உழைப்பை பலத்தால் பெறுவது நியாயமல்ல என்றார்.

🌺பாம்பு பேசியது.
சாதுவே! உலகத்தில் பலசாளிகள் வைத்ததுதான் சட்டம் என்பது உங்களுக்குத் தெரியாதா? பலசாளியிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தது.

🌺கரையான்கள் அழுதுகொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தன. சாது சிவாவும் நகர்ந்தார். சில மாதங்கள் சென்றன.
பாம்பு தனது குடும்பத்தோடு புற்றில் வசதியாக வசித்து வந்தது.

🌺ஒரு நாள் பாம்பு தனது குட்டிகளோடு புற்றிற்கு வெளியில் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த பருந்து பாம்பை கொத்திக்கொண்டு பறந்தது. குட்டிகள் கதறின. வானத்தில் பறந்து கொண்டிருந்த பருந்து பொத்தென்று பாம்பை கீழே போட்டது.

🌺பாம்பு விழுந்த இடம் சாது சிவாவின் ஆசிரம வாசல். உயிர் பிரியும் தருவாயில்
சாதுவிடம் பேசியது பாம்பு.

🌺சாதுவே! நான் இல்லாமல் குட்டிகளால்
வாழ முடியாது. ஆகவே என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியது.

🌺அதற்கு சாது சிவா 'பாம்பே! விதி சொல்லிக்கொடுக்கும் பாடம் ஒன்றைத் தெரிந்துகொள். வலிமை, பலம் என்பது என்றும் நிரந்தரமல்ல. இன்று எவற்றையெல்லாம் பலமாக உணர்கிறாயோ, அவற்றையெல்லாம் நாளை பலவீனமாக உணர்வாய்.

🌺அதே போல, இன்று பலவீனமாக பார்க்கப்படுபவை நாளை பலமாக மாறும் காலமும் வெகு தொலைவில் இல்லை.

🌺ஆகையால், பலவானாக இருக்கும்போது பக்குவமாகவும், பிறருக்கு கெடுதல் செய்யாமலும் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் நீ அப்படி வாழவில்லை.

🌺கரையான் என்ற வலிமையில்லாத எதிரியை நீ தேர்ந்தெடுத்தாலும், பருந்து என்ற பலமான எதிரிக்கு பதில் சொல்லும் நிலைக்கு காலம் உன்னை தள்ளியிருக்கிறது''.

🌺''பாம்பே! நிதர்சனமான ஒரு உண்மையைத் தெரிந்துகொள். ஸ்ரீமந் நாராயணன் எல்லா உயிர்களுக்கும் ஒவ்வொரு நியதி கொடுத்து உள்ளான், அடுத்தவனை வருத்தி, அதை ரசிக்கும் உன் குணத்தை இந்த
உலகம் வேண்டுமானால் மறந்து போகலாம்.

🌺ஆனால், நீ கீழே விழும்போது ஸ்ரீமந் நாராயணன் அதை உன் நினைவில் கொண்டு வருவான். ஸ்ரீமந் நாராயணன் என்றுமே கருணையின் வடிவுதான், ஆனால் எங்கு கருணை காட்டப்படவில்லையோ அங்கு அவன் நரசிம்ம அவதாரம்தான்...

🌺நியாபகம் கொள்..அப்போது அதை தாங்கும் சக்தி உனக்கோ, உன் சந்ததிகளுக்கோ இருக்காது. உன் சந்ததிகள் உன் பாவத்தை பங்காக பிரித்துக்கொள்வார்கள்'' என்று சொல்லிவிட்டு சாது சென்றார்.

🌺அதற்குப் பிறகு பாம்பு என்ன செய்தது என்பது நமக்கு முக்கியமல்ல. காரணம் காலம் அதை தன் பிடியில் எடுத்துச் சென்றுவிட்டது. பலம் பொறுந்திய ஒருவனின் அராஜகம், அகந்தை, கோபம் ஆகியவற்றை காலம் ஒருநாள் எடுத்துச் சென்றுவிடும்.

🌺அப்போது உணர்ந்து பார்க்கலாம் என்றால் காலம் அதற்கு இடம் தராது.

🌹🌺திருக்குறள் 🌹🌺
*நன்று கருது நாளெல்லாம் வினைசெய் நல்லதே நடக்கும். அன்றேல் ஆய துன்பம் யாவும் விடாது விடாது* ....!🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 "'Sriman Narayana has given every niyati to all living beings ......... a simple story 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹One of the termites in a forest, They got together and decided to build a tent. They chose the place for it, selected the suitable soil for the cancer and started building the cancer.

🌺A snake came to that place. Saw the termites hard at work. Since then the termite used to visit the place of work and have fun with the snake. A year passed like this. Termites
The tumor was closed. The snake spoke.

🌺'' Karayans! The cancer you built is fantastic. Shall I go inside and see?''

Ants also agreed. The snake went into the crab and looked. The termites were waiting for the snake to come out. It didn't come out. The termites called the snake from outside.

🌺''Cancer is comfortable. It's mine now. if desired,
You get another cancer. The snake threatened you all to leave here or else you will fall prey to my poison.

🌺 The termites left with sadness. Sadhu met Shiva on the way and told them what had happened. Sadhu Siva spoke to the serpent.

🌺'' Bombay! You don't have the ability to make cancer. He said that it is not fair that the next person steals the labor and the other takes the labor by force.

🌺 The snake spoke.
Sadhu! Don't you know that law is what many people put in the world? It was foolish to expect justice from Balasali and moved on.

🌺 The ants moved away from the place crying. Sadhu Siva also moved. A few months passed.
The snake lived comfortably in the tent with his family.

🌺 One day the snake was wandering outside the camp with its cubs. Then the hawk that came there picked up the snake and flew away. The cubs screamed. The hawk that was flying in the sky suddenly dropped the snake.

🌺The place where the snake fell is the ashram gate of Sadhu Shiva. At the end of life
The snake spoke to Sadhu.

🌺 Sadhu! By the cubs without me
can't live So I begged you to save me.

🌺 To that Sadhu Siva said 'Bombay! Learn a lesson from fate. Strength, strength is not permanent. Whatever you feel strong today, you will feel weak tomorrow.

🌺Similarly, what is seen as weak today will become strong tomorrow.

🌺Therefore, when you are strong, you should live maturely and not harm others. But you don't live like that.

🌺Though you have chosen a weak enemy called the ant, time has forced you to answer the strong enemy called the hawk.

🌺'' Bombay! Know a real truth. Shriman Narayan has given every law to all living beings, this is your quality of regretting the other and enjoying it.
The world can forget.

🌺 But when you fall down Sriman Narayana will bring it to your memory. Sriman Narayan himself is the embodiment of mercy, but wherever mercy is not shown, he is Narasimha avatar...

🌺🌺 Take Niyabagam..then neither you nor your descendants will have the power to bear it. "Your descendants will share your sin," said Sadhu and left.

🌺It doesn't matter to us what the snake did after that. Because time has taken it in its grip. Time will one day take away the anarchy, arrogance and anger of someone who depends on strength.

🌺 If you can feel it then time will not give it space.

🌹🌺Thirukural 🌹🌺
*Think good and act good things will happen. On that day, all suffering will never go away* ....!🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
ஒன்றாய் இருப்பவள் ஒருபாகம் கவர்ந்தவள்

உள்ளம் நிறைந்தவள் உதடுகள் தனில் வண்டுகள் கூடு கட்ட கருணை புரிபவள்

ஓம்கார நாயகி உலகம் அனைத்தும் பூத்தவள்

பூத்த வண்ணம் காப்பவள்

காத்த வண்ணம் கரப்பவள்

கரந்த வண்ணம் கருணை பொழிபவள்

பொழிந்த வண்ணம் புன்னகை பிரசவிப்பவள் ..

பிரசவித்த வண்ணம் வேண்டும் வரம் தருபவள் 🙏🙏🙏
ravi said…
கண்ணா*

கருமை நிறம் கொண்டாய் ..

பொறுமை நிறை கொண்டாய்

என் வறுமை மறைய கண்டேன் ..

வெறுமை உள்ளம் உன் நாமம் நிரம்பக் கண்டேன்

அருமை உன் நாமம் என்றே உணர்ந்தேன்

பெருமை எனை தேடி வரக்கண்டேன்

சிறுமை என்றே எதையும் மறந்தேன்

புலமை பெற்றே சொல்லும் வார்த்தைகள் கவியாய் பொழியக்கண்டேன்

கண்ணன் எனும் நாமம் கரும்பாய் இனிக்க கண்டேன் ..

வேண்டேன் இனி எதுவும் உன் நாமம் தினம் சொல்லும் வரம் தவிர 💪
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 367* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*137 * निराकारा -நிராகாரா -*

தனக்கென ஒரு உருவ மற்றவள். பக்தர்கள் வேண்டும் நாம ரூபத்தில் தெரிபவள்.

நிர்குணப்ரம்மம்.🙏🙏🙏
ravi said…
அம்பாள் எல்லா உருவங்களிலும் இருப்பதால் அவளுக்கு என்று எந்த தனி உருவமும் இல்லை .. உருவ வர்ணனைக்கு அப்பாற்பட்டவள் ... குழந்தையாய் பார்த்தார் குமர குறுபரர் ... குமரி யாய் பார்த்தார் அபிராமி பட்டர் ...

தேவர்கள் சித்கனி குண்ட சம்பூதாவாய் பார்த்தார்கள் ..

நாம் ஸ்ரீ மாதாவாய் பார்க்கிறோம் ..

எப்படி பார்த்தாலும் உண்மை பக்தியில் பார்க்கும் போது அதில் வந்து உறைபவள் ... 🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 364* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
96 தேவியின் பாதிவ்ரத்ய மகிமை*

ஸரஸ்வதீ கடாக்ஷம், லக்ஷ்மீ கடாக்ஷம்

கலத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:

ஶ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:

மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா மசரமே

குசாப்யா மாஸங்க: குரவக தரோ ரப்யஸுலப: 96😊😊😊
ravi said…
ஊக்கமது
💐💐💐💐💐
கை விடேல்🙏
💐💐💐💐💐
ஊகத்தால்
நிரந்தரமாய் உயர்ந்தோர் எவருமில்லை!

ஊக்கமே உயர்வென்று
உள்ளுவதெல்லாம்
உயர்வுள்ளி
வக்கணையாய்
வாழுகின்ற
மதி நிறை மாந்தர்க்குத்
திக்கெட்டும்
திரண்ட வளம்
தப்பாமல்
வந்து சேரும் !

எனவே,
ஊக்கமது கைவிடேல்🙏

💐💐💐💐💐💐💐
ravi said…
*இனியவை நாற்பது*

பாடல் - 11

அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோற் பீடுடையது
இல். . . . .[11]

விளக்கம்:

தவறான வழியிற் சென்று வாழாதிருப்பது இனிது. தவறான வழியிற் பொருள் தேடாமை மிக இனிது. உயிரே சென்றாலும் உண்ணத்தகாதார் இடத்து உணவு உண்ணாதிருத்தல் மிக இனிது


*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
மஹா கவிஞர்கள் மற்றும் மந்த்ர ஜபம் போன்றவற்றின் மூலமாக சரஸ்வதி கடாக்ஷ்த்தைப் பெற்றவர்களை ' *சரஸ்வதி வல்லபர்கள்* ' என்றும்,

இதேபோல தன-தான்ய செல்வங்களை வசமாக்கிக் கொண்டிருப்பவர்களை ' *லக்ஷ்மி-பதி'* என்றும் கூறுவது வழக்கம்.

ஆனால் பார்வதீ பதி என்றோ, ஸதி-பதி என்றோ யாரையும் கூறுவதில்லை.

வித்தையையும், செல்வத்தையும் மனிதர்கள் வசப்படுத்திக் கொண்டாலும், மனத்துக்கும், வாக்குக்கும் எட்டாத பரதேவதையை எவரும் வசப்படுத்த இயலாது.

அவள் பரமசிவனுக்கே வசப்பட்டவள் என்று கூறுகிறார் லக்ஷ்மீதரர்.🙏🙏🙏
ravi said…
மதுரையிலிருந்து சென்னை செல்ல விமானத்தில் அமர்ந்திருந்தேன். பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. விமானம் கிளம்பும் முன்பே துாங்கிவிட்டேன். சில நிமிடங்களில் துாக்கம் கலைந்தது.

பக்கத்து இருக்கையில் ஒரு
நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்தாள்.

''மனதில் பெரிய கேள்வியை வைத்துக் கொண்டு ஏன் இப்படி சம்பந்தமில்லாத ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறாய்?''
திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.

பக்கத்து இருக்கைக்காரி பச்சைப்
புடவைக்காரியாக மாறியிருந்தாள்.
''உன் கண்களுக்கு மட்டும்தான் தெரிவேன். உன் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியைக் கேள்.''

''தாயே மதுரையில் மீனாட்சியாகவும், காஞ்சியில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும், நெல்லையில் காந்திமதியாகவும், திருக்கடையூரில் அபிராமியாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் விரும்பி உறையும் இடம் என்ன?''
''முட்டாளே! நான் மதுரையிலும், காஞ்சியிலும், காசியிலும் இல்லை. மதுரை, காஞ்சி, காசி இவை எல்லாம் தான் என்னுள் இருக்கின்றன. நான் உலகத்தில் இல்லை. இந்த உலகம் தான் என்னுள் இருக்கிறது.''

''
ravi said…
தாயே தத்துவம் வேண்டாம். உங்களுக்குப் பிடித்த இடம்?''
''வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவியடா நான்.''

''மீண்டும் தத்துவமா? பிடித்த இடம் என்னவென்று சொல்வீர்களா அதை விட்டு விட்டு..''

''அங்கே நடக்கும் காட்சியைப் பார்''

இடம் மும்பை. ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் முன்னிலையில் ஒரு ஆறு வயதுச் சிறுமி அமர்ந்திருக்கிறாள். மறுநாள் அவளுக்கு ஒரு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவளுடைய பெற்றோர் வெளியே காத்திருக்கிறார்கள்.

''பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லைம்மா. நீ எதுக்கும் கவலைப்படாத. நான் இருக்கேன். பாத்துக்கறேன்.''

''ஐயையே! நான் பயப்படல டாக்டர். எனக்கு ஒரு விஷயம் தெரியணும்.''
''சொல்லும்மா.''

''நீங்க என் இதயத்த திறந்து பாப்பீங்கஇல்லையா?''
''ஆமாம்மா. இது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி. இதயத்தைத் திறந்து தான் செய்யணும்.. ஆனா உனக்கு வலிக்கவே வலிக்காது.''

'அதைப் பத்தி எனக்குப் பயமில்லை டாக்டர். எங்கம்மா தினமும் சாமி கும்பிடுவாங்க. ஒரு நாள் சாமி எங்க இருக்காருன்னு கேட்டேன். உன் இதயத்துக்குள்ள இருக்காருன்னு சொன்னாங்க. நீங்க என் இதயத்தைத் திறந்தா சாமியப் பாப்பீங்கல்ல? சாமி எப்படி இருக்காருன்னு எனக்குச் சொல்றீங்களா?''

திகைத்துப் போன அறுவை
சிகிச்சை நிபுணர் சிறுமியை இறுக அணைத்துக் கொண்டார்.

மறுநாள் அதிகாலை. அறுவை சிகிச்சை தொடங்கியது. அவர் நினைத்ததைவிட சிக்கல்கள் அதிகமாகவே இருந்தன. ஒரு கட்டத்தில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது. அறுவை சிகிச்சை தொடங்கி நாற்பத்தியைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இதயத்திற்குச் சென்று கொண்டிருந்த ரத்தம் நின்று
விட்டது.

இனி மேல் அந்தச் சிறுமி பிழைக்க மாட்டாள் என்று தோன்றியது... அறுவை சிகிச்சை செய்த இடத்தைத் தைத்த பின் சிறுமியின் உடலை அவளுடைய பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். சே, என்ன வாழ்க்கை இது!

அப்போதுதான் முதல் நாள் அந்தச் சிறுமி சொன்னது நினைவிற்கு வந்தது. தன் இதயத்திற்குள் கடவுள் இருக்கிறார் என்று நம்பினாளே அவள்!

கழற்றத் தொடங்கிய முகமூடியை மீண்டும் அணிந்து கொண்டார். பலவீனமாகத் துடித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு இதயத்தைப் பார்த்துக் கைகூப்பினார்.

''இறைவா நீ இந்த இதயத்தில் இருக்கிறாய் என்று இந்தக் குழந்தை நம்புகிறது. இந்த உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் தோற்றுவிட்டேன். இனி இந்தக் குழந்தை உன் கையில். இவள் வாழ்வதும் சாவதும் உன் கையில். நான் கற்ற கல்வி, இத்தனை ஆண்டுகளில் பெற்ற திறமை அனைத்தையும் உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன். இந்தக் குழந்தை இனி உன்னுடையவள்.'' அவர் கண்களில் நீர்.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவருடைய உதவியாளர் அலறினார்.
''டாக்டர் இதயம் நல்லாத் துடிக்க ஆரம்பிச்சிருச்சி. பாருங்க ரத்த அழுத்தம் கடகடன்னு ஏறுது.'' அறுவை சிகிச்சையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் நிபுணர். அதன் பின் நான்கரை மணி நேரம் சிகிச்சை தொடர்ந்தது. குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. இப்போதெல்லாம் அந்த நிபுணர் கோயிலுக்குச் செல்வதில்லை. எப்போதெல்லாம் குருதியில் அமிழ்ந்திருக்கும் மனித இதயத்தைப் பார்க்கிறாரோ அப்போது எல்லாம் கைகூப்பி வேண்டிக் கொள்கிறார். ஒவ்வொரு முறையும் தன் கல்வி, திறமை அனைத்தையும் இறைவனின் திருவடி சமர்ப்பணம் செய்து
விட்டுப் பதட்டமில்லாமல் சிகிச்சை செய்கிறார்.

'இன்னும் பத்து நிமிடங்களில் விமானம் சென்னையில் தரையிறங்கும்' என்ற அறிவிப்பு வந்தது.

''இப்போது உனக்கே தெரியுமே, எனக்குப் பிடித்த இடம் எதுவென்று?''

''ஆம் தாயே. உங்கள் அன்பில்
நம்பிக்கை உள்ளவர்களின் இதயங்கள்தான் சிறந்த திருக்கோவில்கள்.
என் செயலாவது யாதும் இல்லை. எல்லாம் அவள் செயல்' என்று அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரியும் அந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் போன்றவர்களின் திருக்கரங்களில் நீங்கள் ஜொலிக்கிறீர்கள்.

யாராவது அடுத்தவர்களுக்காக உருகிக் கண்ணீர் சிந்தினால் அந்த உப்புத் திரவத்தில் இந்த உமா மகேஸ்வரி இருப்பாள்.''

''இந்தப் பாடத்தை என்றும் மறவாதே!''
விமானம் தரையைத் தொடும் சமயத்தில் பச்சைப் புடவைக்காரி மறைந்து விட்டாள்.

வரலொட்டி ரெங்கசாமியின் இந்தச் சிறு கதை படித்த கணந்தொட்டு என் நெஞ்சில் என்றென்றும் நிலைத்து நிற்கிறது
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 359*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏

"காஃபி வாங்கிக் கொடு!"

(கெடுதல் என்று அடிக்கடி வலியுறுத்தும் பெரியவா

ஒரு காஃபி அடிமைக்கு வழங்கச் சொன்ன கருணை)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-39
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

மயிலாப்பூரிலிருந்து டி.எஸ். ராமஸ்வாமி ஐயர்என்ற பக்தர் பெரியவாளின் தரிசனத்துக்கு வந்தார். அவர் 'பத்மபூஷண்'' என்ற அரசாங்க விருது பெற்ற பெரிய மனிதர்.

அவர் வந்திருப்பது தெரிந்து ஸ்ரீ பெரியவாள், "அவரைக் கூப்பிடு" என்றார்கள்.அவர் வந்ததும் "காலை நன்றாக நீட்டிக்கொண்டு உட்கார்ந்து பேசு" என்றார். அங்கிருந்த மற்றவர்களுக்கு அது ஆச்சர்யமாக இருந்தது. ஒன்றும் புரியவில்லை.

"சின்ன வயதில் அவர் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. அதனால் அவரால் அதிக நேரம் காலை மடக்கிக் கொண்டு உட்கார முடியாது" என்று அதற்குவிளக்கம் அளித்தார்கள் ஸ்ரீ பெரியவாள்.

இதெல்லாம் ஸ்ரீ பெரியவாளுக்கு எப்படித் தெரிந்ததோ தெரியவில்லை.

பிறகு பெரியவா சொன்னார்கள் ஒரு தொண்டரிடம்.

"ராமஸ்வாமி ஐயரை அழைச்சுப் போய் சின்ன காஞ்சிபுரத்தில் ஸ்ரீமடம் பக்தர் வீட்டில் நல்ல காஃபி வாங்கிக் கொடு" என்றும் உத்தரவிட்டார் கள். "அவரால் காஃபி சாப்பிடாமல் இருக்க முடியாது" என்றும் தெரிவித்தார்கள்.

உடனே நமக்கு என்ன தோன்றும்?

"பெரியவாளே காஃபி வாங்கிக் கொடுக்கச் சொல்கிறார்களே என்று ஆச்சரியமாக இருக்கும்.

காஃபி சாப்பிடுவர்கள் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். அது இல்லா விட்டால் அவர்களுக்கு ஒரு வேலையும் ஓடாது.

அது எவ்வளவு கெடுதல் என்பதையும் பல நேரங்களில் நமக்குச் சுட்டி காட்டுகிறார்கள். அதே சமயம் பெரியவாளின் கருணையும் இச்சம்பவத்தால் வெளிப்படுகிறது.


ravi said…
*புரட்டாசி ஸ்பெஷல் !*

#அமானவன்
------------
'அமானவன்'...இப்படி ஒரு பெயர் கேள்விப்பட்டதில்லையே...! இது கடவுளின் பெயரா... இல்லை ஏதாவது புராணப் பாத்திரமா...!

இவனை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுவும் இறப்புக்கு பின்னரே பார்க்க முடியும். இவனது இருப்பிடம் வைகுண்டம்.

அங்கு பெருமாளின் இருப்பிடத்திற்கு முன்னால் துவார பாலகர்கள் இருப்பார்கள்.

பெருமாள் கோயிலில் ஜெயன், விஜயன் என்ற பெயரில் சிலை வடிவாக பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு சற்று முன்னால் அமானவன் நின்றிருப்பான்.

சரி...இவனுக்கு அங்கு என்ன வேலை!

நீங்கள் தினமும் காலையில் எழும்போதே சுவாமி படத்தின் முன் விழித்திருக்கலாம்.

'ஹரி.. ஹரி..., நாராயணா... கோவிந்தா...பத்மநாபா' என்றெல்லாம் பெருமாளின் பெயர்களைச் சொல்லியபடியே எழலாம்.

எந்நேரமும் பிறரது நலம் பற்றி சிந்தித்திருக்கலாம்.

என்ன கஷ்டம்
வந்தாலும், “பெருமாளே! எனக்கு எல்லாம் நீயே.. இந்தக் கஷ்டத்தையும் நீ தந்த பரிசாக ஏற்கிறேன்'' பாசிட்டிவ்' ஆக நினைக்கலாம். புரட்டாசி சனி விரதம் இருந்திருக்கலாம்.

இப்படிப்பட்ட நல்லவர்கள் இறந்த பிறகு, வைகுண்ட வாசலுக்கு செல்வார்கள்.

அங்கே அமானவன் காத்திருப்பான்.

அவர்களைக் கண்டதும், கையைப் பிடித்து அழைத்துச் செல்வான்.

இவனுடன் வருவோரை துவார பாலகர்கள் தடுக்க மாட்டார்கள்.

பெருமாள் முன் நிறுத்தி மகாலட்சுமி தாயாரோடு பெருமாளைத் தரிசிக்க செய்வான்.

இவனுக்கு ஏன் அமானவன் என பெயர் வந்தது?

'மானவன்' என்றால் 'மனிதன்'. 'அமானவன்' என்றால் மனிதன் அல்லாதவன். அதாவது தேவபுருஷன். புண்ணியம் செய்தவர்களை பெருமாளிடம் அழைத்துச் செல்வது இவனது புண்ணிய பணி.

'அமானவன் கரத்தாலே தீண்டல் கடன்' என்கிறார் வைணவ ஆச்சாரியார் மணவாள மாமுனிகள்.

அதாவது, 'அமானவன் என்னை கைப்பிடித்து பெருமாளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்' என்கிறார்.

நம் கைகளையும் அமானவன் பிடிக்க இன்றே நல்லதை செய்யத் தொடங்குவோம்...

கோவிந்தா ஹரி கோவிந்தா !
☸️💐☸️💐☸️💐☸️💐

#mahavishnuinfo
ravi said…
🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️

*இறுதி விசில்*

நான் ஒரு பள்ளி மைதானத்தில் உள்ளூர் கால்பந்து போட்டியைப் பார்த்து கொண்டிருந்தேன்.


நான் அருகில் அமர்ந்திருந்த ஒரு பையனிடம் உங்கள் அணியின் ஸ்கோர் என்ன? என கேட்டேன்.

அந்த பையன் புன்னகையுடன், நாங்கள் 0 எதிரணி 3 என்றான்.


நீ சோர்வடைய வேண்டாம் தம்பி என்று நான் சொன்னென்.

சிறுவன் குழப்பமான பார்வையுடன்,
என்னை, என்
மன உறுதியை சந்தேகிப்பவன் போல ஒரு ஆழமான பார்வை பார்த்து விட்டு,

*நடுவர் இறுதி விசில் அடிக்காத போது, நான் ஏன் மனம் தளர வேண்டும் அங்கிள் ?* என தீர்க்கமான கேள்வி ஒன்றை கேட்டான்.

*எங்கள் அணி மற்றும் பயிற்சியாளர் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது.*

*நாங்கள் நிச்சயமாக வெல்வோம் என உறுதியாக சொல்லிவிட்டு ஆட்டதை கவனித்தான்*.

உண்மையாகவே, போட்டி 5 - 4 என சிறுவன் அணிக்கு சாதகமாக முடிந்தது.

வெற்றியை அறிவித்ததும்,
அவன் என்னை நோக்கி உற்சாகமாக கை அசைத்தான்.

பின் ஒரு அழகான புன்னகையுடன் விடைபெற்றான்.

நான் ஆச்சரியப்பட்டேன், அவனுடைய நம்பிக்கையை நினைத்து வாய் அடைத்துப் போனேன்.

அவனது நம்பிக்கை அவ்வளவு அழகான, ஆழமான நம்பிக்கை. என்னை யோசிக்க வைத்தது.

அன்று இரவு வீடு திரும்பியதும், அவன் என்னை கேட்ட கேள்வி எனக்குள் வந்து கொண்டே இருந்தது.

*நடுவர் இறுதி விசில் அடிக்காத போது நான் ஏன் மனம் தளர வேண்டும்*?
என்ற அவன் கேள்வி என்னை உறங்க விடவிலை.


வாழ்க்கை ஒரு விளையாட்டு போன்றது....

வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, நாம் ஏன் பல சமயம் சோர்வடைகிறோம்?.

நமக்கான இறுதி விசில் ஒலிக்காதபோது நாம் ஏன் சோர்வடைய வேண்டும்?.

*உண்மை என்னவென்றால், நம்மில் பலர் இறுதி விசிலை நாமாகவே ஊதிக்கொள்கிறோம்.*
*ஆட்டம் முடியும் முன், மைதானத்தை விட்டு வெளியேறுகிறோம்.*

ஆனால், வாழ்க்கை நம்மிடம் இருக்கும் வரை, எதுவும் சாத்தியம் இல்லாமல் இல்லை.,

நம்மிடம் இருக்கும் காலம் பாதியாகவோ, முக்கால் வாசியாகவோ முழுதாகவோ இருக்கலாம்....
அது முக்கியம் அல்ல....

*ஆனால், காலம் முடியும் முன், நாமே விசில் அடிக்க கூடாது..*

*நம் ஆட்டதின் நடுவர் கடவுள்..*

*அவர் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள்.....*

*எனவே, இன்னும், நடுவர் இறுதி விசிலை அடிக்கவில்லை என்பதை உணர்ந்து, வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் உற்சாகமான விளையாட்டைப் போல ரசிப்போம்...*

✒️✒️✒️✒️✒️✒️✒️
ravi said…
🌹🌺 '“ *இந்த மனித உடலை நாம் பக்குவமாக பயன்படுத்தி ஸ்ரீ கிருஷ்ணனை சரணடைய வேண்டும்-- விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹நம் முதுமை என்பது இறப்பிற்கு சமம் .அந்த உடலை கொண்டு எதுவும் செய்ய முடியாது .இளமையில் அனுபவிச்சிட்டு முதுமையில் பக்தி செய்யலாம் என நினைப்பவர் பலர் .நாம் எந்த நொடியிலும் இந்த உடலை விட்டு மறு உடல் ஏற்க தயாராக இ௫க்க வேண்டும் ...

🌺மாயா நம்மை நல்லா அனுபவி. பிறகு பக்திக்கு போகலாம் என்ற புத்தியை கொடுக்கும்.நாம் பெண்டு பிள்ளை என்ன ஆவது .என்ன புத்தியை கொடுத்தாலும். நாம் பகவான் இடத்தில் சரண் அடைய பக்தர்கள் சங்கம் நாடி செல்ல வேண்டும் ... இது முதல் படி....

🌺நாய் பூனை பறவை விலங்கு உடலை கடந்து 80 லட்சம் உடல் தாண்டி இந்த மனித உடல் கிடைத்து உள்ளது.இந்த மனித உடலை நாம் பக்குவமாக பயன்படுத்தி ஸ்ரீ கிருஷ்ணனை சரணடைய வேண்டும் ..

🌺நாம் ஏதோ ஒன்றை நேசிக்கிறோம் .சமுதாயம் நட்பு அன்பு ஆகியவை இந்த காலத்தில் திரிப்படைந்த நிலையில் உள்ளது .நிறைய ஆண்கள் பெண்கள் தன் குடும்பத்தை உதறி விட்டு தங்களின் அன்பை நாய் பூனைகளிடம் செலுத்து கின்றனர் .

🌺எங்கோ செலுத்தபடும் அன்பை கி௫ஷ்ணரிடம் மாற்றி அமைப்பதே நம் க௫த்து . இதுவே​ கி௫ஷ்ண உணர்வு . இதுவே​ பக்குவநிலை ...

🌺ஆன்மீக வாழ்வு கடினம் தான் .நெ௫ப்பு போன்றது.
பிரஹலாதர் 6 வயதில் இ௫ந்தே ஆன்மீக வகுப்பு பயிற்சி குழந்தைகளுக்கு கற்று கொடுக்க சொல்கிறார் .6 இல் இ௫ந்து 15 வரை மதிப்பு மிக்க காலம் ...

🌺குடும்ப வாழ்வை சாஸ்திரம் நிந்திக்கபடுவதில்லை.. ஆன்மீகத்தை மறந்து உலக வாழ்வில் பிணைக்க படுபவன் அழிந்து போய்விடுகிறான் .அவனது வாழ்வின் குறிக்கோள் இழக்கப்பட்டது .

🌺குடும்ப வாழ்வை 50 வ௫டம் வரை அனுபவித்ததால் மேற்படி நாட்களில் உலக வாழ்வை விட்டொழித்து விட்டு ஒ௫வன் மனைவியுடன் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டும் ..

🌺இந்த மனிதன் பற்றின்மையால் முதிர்ச்சி பெற்றவுடன் பக்திபாதையில் தொடக்கம் காண்கிறான் . குருவை அடைகிறான் பக்தர்களின் சங்கம் கொள்கிறான். பக்தியை வளர்க்க ஹரியின் நாமத்தை சொல்கிறான்.

🌺வெற்றி தோல்வி இன்பம் துன்பம் லாபம் நஷ்டம் மேடு பள்ளம் அனைத்தையும் சம நோக்கில் காண்கிறான் ..தூய பக்தனாகி பகவானின் லோகத்தை அடைந்து அவரின் பாதங்களில் சரண் அடைகிறான்.. மீண்டும் அவன் கீழே இறங்கி எந்த லோகத்துக்கும் வர வாய்ப்பே இல்லை. பரமனின் இடத்தில் இருப்பதால் அவன் பரமானந்தம் அடைகிறான்🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 '“We should use this human body maturely to surrender to Sri Krishna-- A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹 Our old age is equal to death. We can't do anything with that body. Many people think that we can experience in youth and do devotion in old age. We should be ready to leave this body and accept another body at any moment...

🌺Maya enjoy us well. Then it will give the intellect that we can go to Bhakti. Naam Bendu Pillai. Whatever wisdom is given. We have to go to devotees' association to surrender at the place of God...this is the first step....

🌺 This human body is available beyond 80 lakh bodies of dogs, cats, birds and animals. We should use this human body maturely and surrender to Shri Krishna..

🌺 We love something. Society, friendship and love are in a distorted state in these times. Many men and women leave their families and give their love to dogs and cats.

🌺 Our goal is to transfer the love that is being given somewhere to Krishna. This is Krishna Consciousness. This is maturity...

🌺Spiritual life is difficult. Like fire.
Prahladhar says to teach spiritual training to children at the age of 6. From 6 to 55 is a valuable period...

🌺 Shastra does not condemn family life.. He who forgets spirituality and tries to bind himself in worldly life will perish. The purpose of his life is lost.

🌺 Having enjoyed family life for 50 years, on these days one should renounce worldly life and go on pilgrimage to holy places with his wife..

🌺This man finds initiation on the path of devotion once he matures through detachment. He attains the Guru and joins the devotees. He recites Hari's name to develop devotion.

🌺Success, failure, pleasure, suffering, profit, loss, hill, valley, he sees everything equally..Becoming a pure devotee, he reaches the world of Bhagavan and surrenders at his feet.. Again he descends and has no chance to come to any other world. Being in the place of Paramaman, he attains ecstasy 🌹🌺
-------------------------------------------------- --------

🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺🌻
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 368* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*137 निराकारा -நிராகாரா -*

தனக்கென ஒரு உருவ மற்றவள். பக்தர்கள் வேண்டும் நாம ரூபத்தில் தெரிபவள்.

நிர்குணப்ரம்மம்.🙏🙏🙏
ravi said…
அபிராமி பட்டர் பாடும் போது என் அறிவுக்கும் அளவானவளே என்கிறார் ...

அண்ட சராசரங்களை படைத்தவள்

கோடானு கோடி உயிர்களை படைத்தவள்

சூரியனையும் அக்னியையும் சந்திரனையும் தன் கண்களாக கொண்டவள்..

நான் விரும்பும் பார்க்கும் புரிந்துகொள்ளும் உருவம் கொண்டு வருகிறாள் .

சின்ன பெண்ணாக சிற்றாடை அணிந்து கொண்டு

இரட்டை ஜடை போட்டுக்கொண்டு அதில் பிச்சி பூவையும் கதம்ப மலரையும் அணிந்து கொண்டு

பட்டு பாவாடை போட்டுக்கொண்டு

இரு கால்களில் கொலுசு சத்தம் போட

சர்வ ஆபரணங்களையும் அணிந்து கொண்டு

நெற்றியில் அழகிய மகிழம்பு குங்குமம் வைத்துக்கொண்டு

இரு செவிகளில் ஸ்ரீ வித்தையை எனும் தாடங்கம் போட்டுக்கொண்டு

நாசியில் மின்னும் மாணிக்க மூக்குத்தி அணிந்து கொண்டு

உதடுகளில் இமய மலையில் கிடைத்த தேனை சுரக்க வைத்து

தாம்பூலம் போட்டுக்கொண்டு

எந்த நகை போட்டாலும் என் புன்னகைக்கு ஈடாகுமோ என்றே கேள்வி கேட்ட வண்ணம்

இடுப்பில் காஞ்சி எனும் ஒட்டியாணம் அணிந்து கொண்டு

நெஞ்சில் சிவ ஸ்வரூபத்தை பொறுத்திக்கொண்டு

அன்னம் நாணும் நடையுடன்

மீன்கள் துள்ளும் விழிகள் கொண்டு

மான்கள் போல் குதித்துக்கொண்டு

மயில் போல் தோகை விரித்துக்கொண்டு கச்சபீ எனும் வீணையின் நாதத்திலும் கோடி இனிமை கொண்ட குரலுடன்

என்னிடம் தாய்மை எனும் மொழியில் உரையாட வருகிறாள்

என் தாயே நிராகாரா உன்னிலும் எவரிலும் நிர்குண ப்ரம்மம் உண்டோ ??💐💐💐
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 365* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
*96 தேவியின் பாதிவ்ரத்ய மகிமை*

ஸரஸ்வதீ கடாக்ஷம், லக்ஷ்மீ கடாக்ஷம்

கலத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:

ஶ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:

மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா மசரமே

குசாப்யா மாஸங்க: குரவக தரோ ரப்யஸுலப: 96😊😊😊
ravi said…
*குரவகதரோ* : என்றால் மருதோன்றி (மருதாணி) மரம்.

முன்பு அசோக மரம் புஷ்பிக்க அன்னையின் பாதத்தால் தீண்டப்படவேண்டும் என்று 85 ஆம் ஸ்லோகத்தைல் இங்கே சொன்னது போல,

மருதோன்றி மரம் புஷ்பிக்க என்பதற்காகக் கூட அன்னை அதனை ஆலிங்கனம் செய்யமாட்டாளாம்.

ஏனெனில் அவளால் ஆலிங்கனம் செய்யப்படுபது ஸ்ரீ பரமேஸ்வரன் ஒருவனே என்றுகூறி அவளது பதிவிரதா சிறப்பை கூறியிருக்கிறார் பகவத்பாதர்.💪💪💪
ravi said…
கண்ணா*

அந்தரங்கம் அனைத்தும் அறியும் அந்த ரங்கன் நீயன்றோ

மனம் எனும் அரங்கம் தனில் மயிலாட மான் ஆட நீயாடும் காட்சி தினம் தினம் நான் செய்யும் பாக்கியம் அன்றோ

கணம் கணம் உனை நினைப்பது க்ஷணம் க்ஷணம் நீ செய்யும் அருள் அன்றோ ..

குலம் தந்தாய் செல்வம் தந்தாய் நான் படும் துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்தாய்

நீள் விசும்பும் அருளினாய்

அருளொடு பெரு நிலம் அளித்தாய்


வலம் தந்தாய் மற்றும் தந்தாய்

பெற்ற தாயினும் ஆயின செய்தாய்

நலம் தரும் சொல்லை நான் கண்டுகொள்ள வைத்தாய்

கண்ணா என்னும் நாமம் தனில் என் நாவில் வைத்தே 👌👌👌
ravi said…
https://chat.whatsapp.com/HjRTSDmw4CY1ThPJ6MYHck

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஈசன் உபதேசம் செய்த ஆலயங்கள் பற்றிய பதிவுகள் :*

கடலூர் மாவட்டம் ஓமாம்புலியூர் என்ற ஊரில் துயர்தீர்த்தநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பார்வதி தேவிக்கு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை, சிவபெருமான் உபதேசம் செய்ததாக தல வரலாறு சொல்கிறது.

மேலும் இத்தல இறைவனை வியாக்ரபாதர் வழிபாடு செய்துள்ளார். எனவே இங்குள்ள இறைவனுக்கு ‘பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. இந்த ஆலயத்தில் அருள்புரியும் அம்பாளின் திருநாமம், ‘பூங்கொடிநாயகி’ என்பதாகும்.

ராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருஉத்திரகோசமங்கை திருத்தலம். இங்கு மங்களநாயகி உடனாய மங்களநாதர் திருக்கோவில் இருக்கிறது. இது ராமாயண காலத்திற்கும் முற்பட்ட ஆலயம் என்று சொல்லப்படுகிறது. இந்தத் திருத்தலத்தில் பார்வதிதேவிக்கு, வேதாகமங்களின் ரகசியங்களை சிவபெருமான் உபதேசம் செய்ததாக தல வரலாறு சொல்கிறது. ‘திரு’ என்பது ‘அழகு’ அல்லது ‘சிறப்பு’ என்று பொருள்படும். ‘உத்திரம்’ என்பதற்கு ‘ரகசியம்’ என்றும், ‘கோசம்’ என்பதற்கு ‘சொல்லுதல்’ என்றும் அர்த்தம். ‘மங்கை’ என்பது அம்பாளைக் குறிக்கும். இவையனைத்தையும் சேர்த்தே, இத்தலம் ‘திருஉத்திரகோசமங்கை’ என்று வழங்கப்படுகிறது.

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் சாலையில் உள்ளது, புளியஞ்சேரி என்ற ஊர். இங்கிருந்து வடக்கே 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் ‘இன்னம்பர்’ திருத்தலம் இருக்கிறது. ‘இனன்’ என்பது சூரியனைக் குறிக்கும். சூரியன் இத்தல ஈசனை நம்பி வழிபட்ட காரணத்தால் இது ‘இனன்நம்பூர்’ என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘இன்னம்பூர்’ என்று மருவியதாக சொல்கிறார்கள். இங்கு எழுத்தறிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. வடமொழியில் இவரை ‘அட்சரபுரீஸ்வரர்’ என்கிறார்கள். தமிழுக்கு முதன் முதலில் இலக்கணம் வகுத்துக் கொடுத்தவராக அகத்திய முனிவர் அறியப்படுகிறார். ஆனால் அந்த அகத்தியருக்கு, தமிழ் இலக்கணத்தை உபதேசித்தவர், இத்தல ஈசன் என்று தல புராணம் சொல்கிறது.

இந்திரனின் வாகனமான வெள்ளை யானைக்கு ‘ஐராவதம்’ என்று பெயர். இந்த யானை, துர்வாச முனிவரின் சாபம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டது. இதனால் இங்குள்ள இறைவனுக்கு ‘ஐராவதேஸ்வரர்’ என்றும் பெயர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது, கோவிலூர். இதன் புராணப் பெயர் ‘திருவுசாத்தானம்’ என்பதாகும். இங்கு மந்திரபுரீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இத்தல இறைவன் ‘மந்திரபுரீஸ்வரர்’, ‘சூதவனப் பெருமான்’ என்று அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ‘பெரியநாயகி’, ‘பிருகந் நாயகி’ என்பதாகும்.

சீதையை மீட்பதற்காக ராமன், இலங்கை செல்ல வேண்டியிருந்தது. இடையில் உள்ள கடலைக் கடக்க வேண்டும். இலங்கை செல்வதற்காகவும், ராவணனுடனான போரில் வெற்றி காணவும், வேதாரண்யம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய மூன்று இடங்களில் பாலம் அமைத்தார். ஆனால் அந்த பாலங்களை கடல் அலைகளும், கடல் ஜீவராசிகளும் சேதப்படுத்திவிட்டன. இதை அடுத்து தடைகளை நீக்க வேண்டி ராமன், இந்த ஆலயம் வந்து, சிவபெருமானிடம் மந்திர ஆலோசனை பெற்றார். அதன்பிறகே ராமேஸ்வரம் கடலில் பாலம் கட்டியதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் லிங்க வடிவிலும், உற்சவர் தட்சிணாமூர்த்தியாகவும் அருள் பாலித்து வருகிறார்கள். அம்பாளின் திருநாமம் ஏலவார்குழலி என்பதாகும். தட்சிணாமூர்த்தி இங்கு குருவாக அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்வதாக தல புராணம் சொல்கிறது. மேலும் சுந்தரருக்கு, இத்தல மூர்த்தியானவர் பஞ்சாட்சரம் உபதேசம் செய்ததாகவும், ஆதிசங்கரர், இத்தல ஈசனை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றதாகவும் சொல்கிறார்கள்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*இனியவை நாற்பது*

பாடல் - 12

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
சுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது. . . . .[12]

விளக்கம்:

குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது


*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இப்போது ‘ஹிந்து மதம்’ என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ‘ஹிந்து’ என்றால் ‘அன்பு’ என்று அர்த்தம். ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், ‘ஹிந்து மதம்’ என்கிற வார்த்தையே கிடையாது.


ravi said…
ஆனால் ஹிந்து என்பது நமது பூர்வீகப் பெயர் அல்ல. வைதிக மதம், ஸநாதன தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே, அவைதான் பெயரா என்றால், அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும்போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை.

இதைப் பற்றி நினைத்தபோது எனக்கு ரொம்பவும் குறையாக இருந்தது.

இது இப்படி இருக்கட்டும்.

 
ravi said…
ஒருநாள் யாரோ ‘ராமு வந்திருக்கிறான்’ என்று என்னிடம் சொன்னார்கள். உடனே நான் ஏதோ நினைவில் “எந்த ராமு!” என்று கேட்டேன். “எந்த ராமுவா? அப்படியானால் ‘ராமு’க்களில் பல ராமுக்கள் இருக்கிறார்களா?” என்று எதிர்க் கேள்வி கேட்டார்கள். அப்போதுதான் எனக்குப் பழைய ஞாபகத்தில் இப்படிக் கேட்டுவிட்டோம் என்று தெரிந்தது. எங்கள் ஊரில் ராமு என்ற பெயரில் நாலு பேர் இருந்தார்கள். எனவே, அவர்களுக்குள் வித்தியாசம் தெரிந்து கொள்வதற்காகக் ‘கறுப்பு ராமு’, ‘சிவப்பு ராமு’, ‘நெட்டை ராமு’, ‘குட்டை ராமு’ என்று சொல்வது பழக்கம். அதே நினைவில்தான் ஒரே ஒரு ராமு இருந்த ஊரிலும் ‘எந்த ராமு?’ என்று கேட்டுவிட்டேன். ஒரே ராமு இருக்கிற இடத்தில் எந்த அடைமொழியும் போட வேண்டியதில்லை.

ravi said…
நம் மதத்திற்கு ஏன் பெயரில்லை என்பது உடனே புரிந்து விட்டது. பல்வேறு மதங்கள் இருக்கிறபோதுதான் ஒன்றிருந்து இன்னொன்றுக்கு வித்தியாசம் தெரிவதற்காகப் பெயர் கொடுக்கவேண்டும். ஒரே மதம்தான் இருந்தது என்றால் அதற்குப் பெயர் எதற்கு?

ravi said…
நமது மதத்தைத் தவிர மற்ற மதங்கள் ஒரு மஹா புருஷரின் பெயரில் ஏற்பட்டவை. அந்தப் பெரியவருக்கு முன் அந்த மதம் இல்லை. புத்த மதம் என்றால் அது கௌதம புத்தரால் ஸ்தாபிக்கப்பட்டது. எனவே அவருக்கு முன் அது இல்லை என்கிறது. ஜைன மதம் என்றால் அது மஹாவீரர் எனப்படும் ஜீனரால் ஸ்தாபிக்கப்பட்டது. கிறிஸ்து மதம் என்றால் கிறைஸ்டினால் (இயேசு கிறிஸ்து) ஸ்தாபிக்கப்பட்டது – என்றிப்படி ஒவ்வொரு மதமும் ஒரு பெரியவரால் உண்டாக்கப்பட்டது என்று தெரிகிறது. அந்தப் பெரியவர் இதை ஏற்படுத்தினார் என்னும்போதே அவருக்கு முன்னால் இது இல்லை என்று தெரிகிறது. இவ்வளவு மதங்களும் உண்டாவதற்கு முன்பே நம் மதம் இருந்திருக்கிறது. இந்த ஒரு மதமே உலகமெல்லாம் பரவி இருந்தது. இதைத் தவிர வேறு மதம் இல்லாததால் இதற்குப் பெயர் குறிப்பிட வேண்டிய அவசியமே இருக்கவில்லை. இதை அறிந்தவுடன் முன்பு எனக்கு இருந்த குறை மறைந்தது. அதோடு இந்த மதத்தை பற்றிக் கௌரவ புத்தியும் உண்டாயிற்று.

ravi said…
சரி, இந்த மதம்தான் ஆதி மதம் என்றே இருக்கட்டும். அந்த ஆதி காலத்தில் இதை ஸ்தாபித்தவர் யார் என்ற கேள்வி வரும். பெயர் இல்லாத நம் மதத்தை யார் ஸ்தாபித்தார் என்று பார்த்தால், எத்தனை ஆராய்ச்சி செய்து பார்த்தாலும், அப்படி ஒரு ஸ்தாபகரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பிரம்ம சூத்திரம் செய்த வியாசரைச் சொல்லலாமா, கீதை சொன்ன கிருஷ்ண பரமாத்மாவைச் சொல்லலாமா என்றால், அவர்களும் தங்களுக்கு முன்னரே இருக்கிற வேதங்களைப் பற்றிச்சொல்கிறார்கள். சரி, இந்த வேத மந்திரங்களைச் செய்த ரிஷிகளை ஸ்தாபகர்கள் என்று சொல்லலாமா என்று பார்த்தால், அவர்களோ ‘நாங்கள் இந்த வேதங்களைச் செய்யவில்லை’ என்கிறார்கள். ‘பின்னே உங்கள் பேரில் தானே மந்திரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன? ஒவ்வொரு மந்திரத்தையும் உபாசிக்கிறபோது அவற்றுக்கு உங்களில் ஒரு ரிஷியின் பெயரைச் சொல்லித்தானே தலையைத் தொட்டுக் கொள்கிறோம்?’ என்று கேட்டால், அந்த ரிஷிகள், எங்கள் மூலம்தான் இந்த மந்திரங்கள் லோகத்துக்கு வந்தன என்பது வாஸ்தவம். அதனால்தான் எங்களை மந்திர ரிஷிகளாகச் சொல்ல்யிருக்கிறது. எங்கள் மூலம் வந்ததே ஒழிய, நாங்களே அவற்றைச் செய்யவில்லை (Compose பண்ணவில்லை). நாங்கள் அப்படியே மனம் அடங்கித் தியான நிஷ்டையில் இருக்கிறபோது இந்த மந்திரங்கள் ஆகாயத்தில் எங்கள் முன்னே தெரிந்தன. நாங்கள் அவற்றைக் கண்டவர்கள்தான் (மந்த்ரத் ரஷ்டா): செய்தவர்கள் (மந்திர கர்த்தா) அல்ல’ என்கிறார்கள்.

ravi said…
சகல சப்தங்களும் ஆகாசத்திலேயே பிறக்கின்றன. அவற்றிலிருந்தே த்ருஷ்டி உண்டாயிற்று. இதைத்தான் Space-ல் ஏற்பட்ட vibration-களால் பிரபஞ்சம் உண்டானதாக ஸயன்ஸில் சொல்கிறார்கள். ரிஷிகள் தங்களது தபோ மகிமையால் இந்த சிருஷ்டியிலிருந்து ஜீவர்களைக் கடைத்தேற்றுகிற சப்தங்களை ஆகாசத்தில் மந்திரங்களாகக் கண்டார்கள். ஆனால் அவர்கள் செய்ததல்ல இம்மந்திரங்கள். புருஷர் எவரும் செய்யாத அபௌருஷேயமாக  இந்த வேதங்கள் ஆகாச ரூபமான பரமாத்மாவிலேயே அவரது மூச்சுக் காற்றாக இருந்தவை. அவற்றையே ரிஷிச்ரேஷ்டர்கள் கண்டு உலகுக்குத் தந்தார்கள்.

ravi said…
இப்படித் தெரிந்து கொண்டால் நம் மதத்தில் ஸ்தாபகர் யார் என்று தெரியவில்லையே என்பதும் ஒரு குறையாக இல்லாமல் அதுவே பெருமைப்படுகிற விஷயமாக இருக்கும். பரமாத்மாவின் சுவாசமாகவே இருக்கப்பட்ட வேதங்களை அனுஷ்டிக்கிற அநாதி மதத்தின் வாரிசுகளாக வந்திருக்கும் மகா பாக்கியம் நமக்குக் கிட்டியிருக்கிறது என்று பூரிப்பு அடைவோம்.
ravi said…
🌹🌺 *என் மீதுள்ள அன்பாலும் பக்தியாலும் தொடுத்த அந்த மாலையை ஏன் எனக்கு அணிவிக்க மறந்தீர்கள்* ? '' *என்ற ஜெகந்நாதன்.......... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹ஒரு ராம பக்தர் பெயர் ரகுதாசர், அவருக்கு ரொம்ப பொருத்தமான பெயர். ஒருநாள் அவர் ஜெகன்நாதன் கோவிலுக்கு தரிசனம் செய்ய அவன் முன் நிற்கும்போது அவர் கண்ணெதிரே தோன்றியது ராமர்,

🌺அந்த கணம் முதல் ஜெகந்நாதன் வேறுயாருமில்லை ராமர் தான் என்று எங்கும் சொல்லிக்கொண்டே போனார்.

🌺ஒருநாள் நிறைய பூக்களை பறித்துக்கொண்டு வந்து பூமாலை தொடுத்தார் ரகுதாஸர்.

🌺''பட்டாச்சார்யாரிடம் ஐயா இதை ஜெகநாதனுக்கு அணிவியுங்கள்'' என்று மாலையை கொடுத்தபோது அதை அந்த பட்டர் வாங்கி ஒரு ஓரமாக வைத்து விட்டார்.

🌺மாலையை ரகுதாஸர் வாழைநாரில் தொடுத்திருந்தார். இந்த பழக்கம் அப்போது ஜகந்நாதர் கோவிலில் இல்லை.

🌺''ஜெகன்னாதா, எவ்வளவு ஆசை ஆசையாக நான் இந்த மாலையை மணிக்கணக்காக உனக்கு என்று தொடுத்தேன். நீ ஏற்றுக்கொள்ள மறுத்தாயே'' என்று வருத்தம். கண்களில் தாரை தாரையாக நீர். மெதுவாக வெளியே நடந்தார்.

🌺கோவிலில் வழக்கம்போல் சாயந்திரம் ஆரத்தி நேரம். ஜெகந்நாதனுக்கு வழக்கம்போல் ஸ்ரிங்கார அலங்காரம். பட்டர் ஆடை அணிவித்து மேலே மலர்மாலைகள் சாற்றிக்கொண்டிருந்தார்.

🌺எந்த புஷ்பத்தை ஜெகந்நாதன் மேல் சாற்றினாலும் அது தானாகவே கீழே விழுந்து கொண்டே இருந்தது. பட்டருக்கு திகைப்பு. நடுக்கமாகியது.

🌺''எங்கேயோ ஏதோ அபச்சாரம் நடந்திருக்கிறது. இல்லாவிட்டால் ஜெகந்நாதன் இப்படி செய்ய மாட்டானே''.ஓடினார் மற்ற பட்டாச்சார்யர்களிடம் விஷயம் சொல்லி அழுதார்.

🌺என்ன நடந்திருக்கும் என்று எல்லோரும் சிந்தித்தார்கள். காரணம் புரியவில்லை.
'' நாம் எல்லோரும் இன்று உபவாசம் இருந்து இங்கேயே படுப்போம்.

🌺ஜெகந்நாதன் கனவில் நமக்கு அறிவுறுத்தட்டும். நிச்சயம் நமது தவறை எடுத்துக் காட்டுவான்'' என்று தீர்மானித்தார்கள் . நம்பிக்கை வீண் போகவில்லை.

🌺''எழுந்திருங்கள் , என்ன காரியம் செய்தீர்கள்'' என்று ஜெகந்நாதன் தலைமை பட்டாச்சார்யரை கனவில் எழுப்பினான் ''
''ஜெகன்னாதா. க்ஷமிக்கணும். என்ன நடந்தது. நான் பொறுப்பேத்துக்கறேன். எனக்கு தண்டனை கொடு '' என்று கெஞ்சினார் தலைமை பட்டர்.

'🌺'எனக்கென்று எவ்வளவு பக்தியோடு என் பக்தன் நண்பன் ரகுதாசன் ஒரு மாலை தொடுத்து வந்தான். நானும் அதை நீங்கள் எனக்கு அணிவிக்க காத்திருந்தேன்.

🌺வாழை நாரால் தொடுத்தது என்று அதை உதாசீனம் செய்தாய். என் மீதுள்ள அன்பாலும் பக்தியாலும் தொடுத்த அந்த மாலையை ஏன் எனக்கு அணிவிக்க மறந்தீர்கள்? ''என்றான் ஜெகந்நாதன்.

🌺அந்த மாலையை எடுத்துக்கொண்டு சென்று எதிரே வைத்து அதை பார்த்து கண்ணீர் சிந்திக்கொண்டு அன்ன ஆகாரமில்லாமல் உறக்கமுமின்றி என் பக்தன் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்திருப்பது தெரியுமா உங்களுக்கு? .

🌺நீங்கள் எனக்களித்த மற்ற மலர்மாலைகளை நான் எவ்வாறு ஏற்பேன்? என் பக்தனின் விருப்பம் நிறைவேறினால் தான் இனி எனக்கு மலர் மாலை''

🌺திடுக்கிட்ட தலைமை பட்டர் மற்றவர்களை எழுப்பி ஜெகந்நாதன் கூறியதை சொன்னார். ''ஆமாம் அவ்வாறு தான் நடந்தது என்று குறிப்பிட்ட பட்டர் அழுதுகொண்டே ஒப்புக்கொண்டார்.


🌺நடுநிசி என்றும் பாராமல் எல்லோரும் ஓடிச் சென்று ரகுதாஸர் தங்கி இருந்த ஒரு குடிசையை தேடி கண்டுபிடித்து கதவை இடித்து தொபுக்கடீர் என்று அவர் காலில் விழுந்தார்கள்.

🌺ஜெகநாதனின் கருணையை காதாரக் கேட்ட ரகுதாஸர் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினார்.

🌺மாலையை எடுத்துக்கொண்டு எல்லோரும் ஆலயம் சென்று ஜெகந்நாதனுக்கு பட்டர் அந்த மலையை சூட்டியபிறகு தான் மற்ற மலர்மாலைகளை அவன் ஏற்றான். புன்னகைத்தான் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺"""Why did you forget to put on me that garland that you touched with love and devotion for me?" Jagannathan..........a simple story explaining 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹A Rama devotee named Raghudasa, a very suitable name for him. One day when he was standing in front of Jagannath to visit the temple, Rama appeared before his eyes.

🌺 From that moment, Jagannathan went everywhere saying that there is no one else but Rama.

🌺One day, Raghudasar came and picked a lot of flowers and touched the flower garland.

🌺 When he gave the garland to Bhattacharya, sir, put it on Jagannathan, the butter took it and kept it aside.

🌺Raghudasar had touched Malai in Vazainaar. This practice did not exist in the Jagannath temple then.

🌺''Jagannatha, how longingly I touched this garland for you for hours. If you refuse to accept it'' regret. Tears in the eyes. He walked out slowly.

🌺 Evening Aarti time as usual in the temple. Jagannathan is dressed in Sringara as usual. Buttar was dressed up and garlanded.

🌺Whatever Pushpam was sprinkled on Jagannath, it kept falling down automatically. Butter is stunned. Trembling.

🌺''Somewhere there has been some scandal. Otherwise, Jagannathan would not have done this.

🌺 Everyone wondered what would have happened. I don't understand the reason.
We will all fast today and lie down here.

🌺 May Jagannath instruct us in dreams. They decided that he will definitely point out our mistake. Hope is not in vain.

🌺 "Wake up, what have you done?" Jagannathan woke up Chief Bhattacharya in his dream.
"Jagannada. Apologize. What happened. I will take responsibility. Punish me,'' pleaded Chief Butter.

'🌺' With such devotion my devotee friend Raghu Dasan brought a garland for me. I was also waiting for you to wear it for me.

🌺 You ignored it because it was touched by banana fiber. Why did you forget to wear that garland that you touched with love and devotion for me? Jagannathan said.

🌺 Do you know that my devotee is sitting somewhere in a corner without food and without sleep, after taking that garland and putting it in front of him, crying tears? .

🌺How can I accept the other garlands you have given me? Only if my devotee's wish is fulfilled will I have a flower garland.''

🌺 The startled Chief Buttar woke up the others and told what Jagannathan had said. ``Yes, that's what happened,'' admitted Butter, crying.🌹🌺

-------

🌹🌺Sarvam Shri Krishnarppanam 🌹🌺
ravi said…
கடவுளின் புகழைப் பாடி, அதை ஒரு தொழிலாகக் கொண்டிருந்த ஒரு பாகவதர், அன்று பாகவதத்தின் கதையை ஒரு வீட்டில் பிரவசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டிற்குள் திருட வந்த ஒரு திருடன் நுழைந்து, மூலையில் மறைந்து, (வேறு வழியில்லாமல்) பிரவசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"
ravi said…
ஸ்ரீமத் பாகவதம்", பகவான்
ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் மற்றும் மாய லீலைகள் நிறைந்த ஒரு புனித நூலாகும். திருடன் இக் கதைகளைக் கேட்கும் கட்டாயத்தில் இருந்தான். பாகவதர் அச்சமயம் பால கிருஷ்ணர் அணிந்திருந்த ஆபரணங்களை பிரமாதமாக வர்ணித்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணரை பசுக்களுடன் அனுப்புவதற்கு முன், தாயார் யசோதை அவருக்கு அணிவித்து மகிழ்ந்த நகைகளை பாகவதர் விவரித்தார். இக் கதைகளைக் கேட்டு பரவசம் அடைந்த திருடன், எப்படியாவது அப் பாலகனின் நகைகள் எல்லாவற்றையும் கொள்ளை அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான், தினமும் சிறு சிறு பொருட்களைத் திருடுவதை விட, இது மேல் என்று எண்ணினான். பிரவசனம் முழுவதும் முடியும் வரை திருடன் காத்திருந்தான். இப்பாலகன் இருக்கும் இடத்தை திருடன் அறிய விரும்பினான். நிகழ்ச்சி முடிந்த பின் அவன் பாகவதரைப் பின் தொடர்ந்து சென்று அவரை வழி மறித்தான். தட்சிணையாகக் கிடைத்த தனது சிறு செல்வமும் தொலைந்து விடுமோ என பாகவதர் பயந்து, தன்னிடம் ஒன்றும் இல்லை என்று திருடனிடம் கூறினார்.

ravi said…
திருடன், பாகவதரின் பொருளில் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், அவர் வர்ணித்த மாடு மேய்க்கும் பாலகனின் ஆபரணங்கள் பற்றிய விவரம் தனக்கு வேண்டும் என்றான். தன்னை அவ்விடத்திற்கு அழைத்துச் செல்லும்படி திருடன் அவரைக் கேட்டான். பாகவதர் குழப்பம் அடைந்தார். அவர் திருடனிடம்,(தப்பிக்க) “யமுனை நதிக் கரையில் உள்ள பிருந்தாவனம் என்னும் நகரத்தில், பச்சைப் புல்வெளியில் காலை வேளையில் வருவான். அவன் மேகங்களின் நிறத்தைப் போல் நீல வர்ணமாகவும், கையில் புல்லாங்குழலுடனும், பட்டாடைகளுடனும் இருப்பான். நான் வர்ணித்த நகைகளை அந்த நீல வர்ண பாலகன் அணிந்திருப்பான்” என்று கூறி சமாளித்தார்.

ravi said…
பாகவதர் கூறியதை நம்பிய திருடன் பிருந்தாவனத்திற்கு உடனடியாகக் கிளம்பினான். அந்த அழகான இடத்தை அவன் கண்டு பிடித்து, ஒரு மரத்தின் மீது ஏறி, ஸ்ரீகிருஷ்ணன் வரும் வழியை எதிர்பார்த்து, நம்பிக்கையுடன் காத்திருந்தான். சூரியோதயம் ஆனது. காற்றுடன் புல்லாங்குழலின் இனிமையான ஓசை மிதந்து வந்தது. அந்த இசை நெருங்கி, ஓசை சற்று வலிதானதும், திருடன் பால கிருஷ்ணனைக் கண்டான். மரத்திலிருந்து இறங்கிய அவன், ஸ்ரீகிருஷ்ணனை நெருங்கினான். பால கிருஷ்ணரின் மனோகரமான ரூபத்தைக் கண்டதும், அவன் தன்னை மறந்து அவரை கை கூப்பி வணங்கினான். அவனையும் அறியாமல் ஆனந்தக் கண்ணீர் அவன் கண்களிலிருந்து வழிந்தது. இக் கண்ணீர் அவன் உள்ளத்திலிருந்து வந்ததால், தன்மையாக இருந்தது. இந்த அழகான சிறுவனை எந்தத் தாயார் அனுப்பி இருப்பார்கள் என எண்ணி அவன் வியந்தான். கண்களை அகற்றாமல் ஸ்ரீகிருஷ்ணனை பார்த்தான்..! அவனுள் ஒரு மாற்றம் ஏற்பட தொடங்கியது!!

அவன் கிருஷ்ணனை நெருங்கி “நில்” என்று கூச்சலிட்டபடி கிருஷ்ணரின் கையைப் பிடித்தான். அக்கணமே, பஞ்சு மூட்டை நெருப்பில் எரிவது போல், அவனது பழைய கர்மாக்கள் அழிந்தன. அவன் கிருஷ்ணரை நெருங்கி மிக அமைதியாக “யார் நீ” என்று கேட்டான்.

கிருஷ்ணர் அவனைப் பார்த்து, ஏதுமறியாதது போல் ‘உன் பார்வை என்னை பயமூட்டுகிறது. தயவு செய்து என் கைகளை விட்டு விடு’ என்றார். திருடன் அவமானத்துடன் “என்னுடைய கெட்ட எண்ணம் என் முகத்தில் பிரதிபலிக்கிறது; எனவே நீ பயந்து கொள்கிறாய். நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். ஆனால் உன்னை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. நான் உன்னை விட்டு விட வேண்டும் என்று மட்டும் தயவு செய்து கூறாதே” என்றான்.

குறும்புக்கார கிருஷ்ணன் திருடனிடம், அவன் வந்த காரணத்தை நினைவு படுத்தி, சிரித்தபடி, “நீ விரும்பியது போல் இதோ, இந்த ஆபரணங்களை எடுத்துக் கொள்” என்றார். குழப்பமடைந்த திருடன் “அனைத்து ஆபரணங்களையும் நீ கொடுத்து விட்டால், உன் தாயார் உன்னை கோபித்துக் கொள்ள மாட்டாரா?” என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணர் புன்சிரிப்புடன், “நீ அதைப் பற்றி கவலைப் படாதே. என்னிடம் அதிக அளவில் ஆபரணங்கள் இருக்கின்றன. நான் உன்னை விடப் பெரிய திருடன்; ஆனால் நம் இருவரிலும் ஒரு சிறு வித்தியாசம் இருக்கிறது. நான் எவ்வளவு திருடினாலும், எவரும் என்னைப் பற்றி புகார் கூற மாட்டார்கள். என்னை அன்புடன் ‘சித்த சோரா’ என்று அழைப்பார்கள். உனக்கே தெரியாமல், உன்னிடம் பழைய ஆபரணம் ஒன்று இருக்கிறது; உனது சித்தம் (உள்ளம்). அதை நான் இப்போது திருடி எடுத்துச் செல்லப் போகிறேன்” என்று கூறிய உடனே, மாயகிருஷ்ணன் திருடன் கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டார்.

திருடன் வியக்கும் வகையில், ஆபரணங்கள் நிறைந்த ஒரு பை அவன் தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அதை பாகவதரின் வீட்டுக்கு எடுத்து வந்து, அவன் நடந்த அனைத்தையும் அவருக்கு விவரித்தான். பாகவதர் இப்போது மிகவும் பயந்து, திருடனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, பையைத் திறந்து பார்த்தார். அவர் திகைக்கும் வகையில், பாகவதத்தில் அவர் விவரித்தபடி, கிருஷ்ணர் அணிந்திருந்த அத்தனை ஆபரணங்களும் அப்பையில் இருந்தன.

ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி பாகவதர் திருடனிடம், கிருஷ்ணரை அவன் கண்ட இடத்திற்கு, தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார். திருடன் ஒப்புக் கொண்டு, தான் முந்தைய தினம் கிருஷ்ணரை கண்ட இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றான்.

திடீரென திருடன் ஆச்சரியத்துடன் "அதோ, அங்கே அவன் வருகிறான்" என்று கூறினான். ஆனால் பாகவதர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஏமாற்றம் அடைந்த அவர், “மாய கண்ணா ஒரு திருடனுக்கு நீங்கள் தரிசனம் அளித்தீர்கள்; ஆனால் எனக்கு ஏன் காட்சி தரவில்லை?”என்று கண்ணீருடன் கேட்டார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மிகுந்த பரிவுடன் இவ்வாறு பதிலுரைத்தார். நீங்கள் ஸ்ரீமத் பாகவதத்தை, மற்ற கதைகளைப் போல படிக்கிறீர்கள். திருடனோ நீங்கள் என்னைப் பற்றி கூறியதை நம்பி, என்னைத் தேடி உண்மையாக வந்தான். என்னிடம் பூரண நம்பிக்கை வைத்து சரணாகதி அடைபவர்களுக்கே நான் தரிசனம் அளிக்கிறேன்.

நீதி:
ஆன்மீக நூல்களை, நம்பிக்கை இல்லாமல் ஒப்புக்கு படிப்பதால் ஒரு பயனும் கிடையாது. தீவிர நம்பிக்கை இருந்தால், மலைகள் கூட அசையும்..!

ஓம் நமோ நாராயாணா..!
ravi said…
https://chat.whatsapp.com/HjRTSDmw4CY1ThPJ6MYHck

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவாவரண ரகசியம் பற்றிய பதிவுகள் :*

ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியானவள் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.

எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.

சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் அன்னை மூன்று ஸ்வரூபமாக அதாவது குழந்தை, குமரி, தாயாக வீற்றிருக்கிறாள்.

ஸ்ரீசக்கரத்துக்கு குங்கும அர்ச்சனை நடத்தப்படும் அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள்.

இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக் குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

பௌர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும்.

9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு ஆராதனைகள் நடைபெறும். இதுதான் நவாவரண பூஜை ஆகும்.

இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். மேலும் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடும் நடத்தப்படும்.

நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை , அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும்.

அப்படி இருக்கும் போது புனிதமான பௌர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுகளிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

எனவே ஸ்ரீ சக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. ஸ்ரீவித்யை ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை தந்திர ஆலயங்களில் பிரதி பௌர்ணமி மற்றும் விசேஷ திதி நாட்களில் ஸ்ரீமாதா லலிதாம்பிகை அருளை பெற்றுத்தரும் ஆவரண வழிபாடு மிக சிறப்பாகும். நவாவரண பூஜை சகல தோஷங்களை நீக்கி, சகல மங்களங்களை அருள்வது நிச்சயம்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏


'நான் தரிசனம் பண்ண வரிசைல நின்னேன். எக்கச்சக்கக் கூட்டம். அவர் அருகே நான் வந்தப்போ என்னால எதுவுமே பேச முடியலே. அவர் திருமுகத்தையே பார்த்தபடி மனசுல நம் பிரச்னையை நெனச்சுப் பிரார்த்தனை பண்ணினேன். வாய்திறந்து சொல்லத்தான் நெனச்சேன். அதுக்குள்ள பின்னாலிருந்து நகரச் சொல்லி நெருக்கினர். குங்குமப் பிரசாதத்தை வாங்கிண்டு வந்துட்டேன்... -கணவர்.

''எதுக்கு வாய்விட்டுச் சொல்லணும்? மனசில நெனச்சுண்டாலே போதும்.

பகவான்னா அவர்! பகவான் நம்ம கிட்டப் பேசறாரோ? ஆனால் நாம மனசுல வேண்டிண்டா நம்ம பிரார்த்தனையை நிறைவேத்தறார் இல்லையா? அது மாதிரிதான். சீக்கிரமே நல்லது நடக்கும்.''-மனைவி

மே 06,2017,தினமலர்.-தேடி வந்த மாப்பிள்ளை-திருப்பூர் கிருஷ்ணன்

காஞ்சிப் பெரியவரைத் தரிசித்து, சென்னை திரும்பிய அந்த ஓவியர், வீடு வந்தார். சாய்வு நாய்காலியில் சோர்வோடு அமர்ந்தார். அவர் மனைவி ஆவலோடு கேட்டாள்:

'பெரியவாளை தரிசனம் செஞ்சேளா?

28 வயசாகியும் நம்ம பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் கூடி வரலியேங்கற கவலையைச் சொன்னேளா? பொருளாதார பிரச்னை தான் நம்ம பெண் கல்யாணத்தைத் தாமதப் படுத்தறதுன்னு தெளிவாச் சொல்லச் சொன்னேனே? பெரியவர் ஆசீர்வாதம் பண்ணினாப் போதும். நம்ம பெண் கல்யாணம் வெகுசீக்கிரம் நடந்துடும்.''

மனைவிக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவர் அமைதி காத்தார். அவருக்குச் சம்பளம் குறைவு. அன்றாடச் செலவுக்கே கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். இதில் கல்யாணத்திற்குப் பணம் சேர்ப்பது எப்படி?

மாப்பிள்ளை வீட்டார் கேட்கிற வரதட்சணையைப் பார்த்தால் மனம் மலைக்கிறது. வரதட்சணை வாங்கக் கூடாது என்று பெரியவர் ஓயாமல் சொன்னாலும் யார் கேட்கிறார்கள்?

ஓவியர் பெருமூச்சுடன், ''நான் தரிசனம் பண்ண வரிசைல நின்னேன். எக்கச்சக்கக் கூட்டம். அவர் அருகே நான் வந்தப்போ என்னால எதுவுமே பேச முடியலே. அவர் திருமுகத்தையே பார்த்தபடி மனசுல நம் பிரச்னையை நெனச்சுப் பிரார்த்தனை பண்ணினேன். வாய்திறந்து சொல்லத்தான் நெனச்சேன். அதுக்குள்ள பின்னாலிருந்து நகரச் சொல்லி நெருக்கினர். குங்குமப் பிரசாதத்தை வாங்கிண்டு வந்துட்டேன்...

இப்படி ஆயிடுத்தேன்னு மனசு கலங்கறது.' மனைவி தன்னைக் கோபித்துக் கொள்ளப் போகிறாள் என்று அவர் நினைத்தார். ஆனால் மனைவியின் எண்ணம் வேறு மாதிரி இருந்தது.

''எதுக்கு வாய்விட்டுச் சொல்லணும்? மனசில நெனச்சுண்டாலே போதும். பகவான்னா அவர்! பகவான் நம்ம கிட்டப் பேசறாரோ? ஆனால் நாம மனசுல வேண்டிண்டா நம்ம பிரார்த்தனையை நிறைவேத்தறார் இல்லையா? அது மாதிரிதான். சீக்கிரமே நல்லது நடக்கும்.''

அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது யாரோ கதவைத் தட்டினர். ஓவியரின் மனைவி கதவைத் திறந்தார். கணவனும் மனைவியுமாக இருவர் வீட்டினுள் நுழைந்தார்கள்.

வந்தவர்கள், ''நாங்க இதே வீதில குடிவந்து ஆறுமாசம் ஆச்சு. எங்க பையன் தினமும் உங்க பெண் போறப்போ வறப்போ பாத்திருக்கான். அவளோட அடக்கம் அவனைக் கவர்ந்திருக்கு. நீங்க சம்மதிச்சா உங்க பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பறான். அவன் வரதட்சணை வாங்காம கல்யாணம் பண்ணிக்கறதுன்னு உறுதியா இருக்கான். கல்யாணத்தை எங்க செலவிலேயே நடத்துவோம். அவன் கிட்ட எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. நிறையச் சம்பாதிக்கி றான். தான் நெனச்ச மாதிரிப் பெண் தனக்கு மனைவியா அமைஞ்சா, அவன் நம்பற ஒரே தெய்வமான பெரியவர் கிட்ட, தம்பதி சமேதரா ஆசீர்வாதம் வாங்கிக்க ணும்னு மட்டும் சொல்றான்..'' அவர் பேசிக்கொண்டே போனார்.

ஓவியரின் மனைவி அளவற்ற மகிழ்ச்சியோடு தன் கணவரைப் பார்த்தாள். அவர் விழிகளில் கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது.


ravi said…
கோவில் முதலைக்கு இறுதி மரியாதை ...!!!
.
கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலையாழ்வார்"பபியா"...

பூஜை நேரங்களில் குளத்திலிருந்து கோவிலுக்கு வந்து ஸ்வாமியை தரிசித்து விட்டு ப்ரஸாதம் பெற்றுவிட்டு பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தாது அமைதியாக குளத்திற்கு திரும்பிவிடுவார்! என்னதான் குளத்தில் வசித்தாலும் குளத்திலுள்ள மீன்களை உட்கொள்ளாது கோவில் ப்ரஸாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்ததால் இவருக்கு "சைவ முதலை" என்ற மற்றொரு பெயருண்டு...

நேற்று இந்த முதலையாழ்வார் உடல்நலக் குறைவால் வைகுந்த ப்ராப்தம் அடைந்தார் . திருக்கோவில் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்த பிறகு , அடக்கம் செய்யப்பட்டது.
.
சனாதன தர்மத்தில் பக்தியுள்ள விலங்குகளுக்கு கூட தனி மரியாதை உண்டு ...

தமிழகத்தில் பக்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனித மிருகங்களுக்கு இந்த செய்தியை தெரிவிக்க ஆசைப்படுகிறேன் ...
ravi said…
இந்த கோயிலுக்கு சென்றிருக்கிறேன் .

நாராயணா நாராயணா என்றால் மட்டுமே தண்ணீரில் இருந்து முதலை தலையை வெளிக்காட்டும் ..

இரவில் சுவாமி அருகில் வந்து உறங்கும் .

யாரும் தடுப்பதில்லை இங்கே இறைவன் அமர்ந்த கோலம் ..

Original பத்ம நாப சுவாமி .

இங்கே ஒரு கண்ணன் கோயில் இருக்கிறது ..

பூஜாரி கண்ணன் குழந்தையாய் வந்து விஷமம் செய்யும் போது அவனை கண்ணன் என்று அறியாமல் அடிக்க போக கண்ணன் இனி நான் இங்கு வரமாட்டேன் என்னை பார்க்க வேண்டும் என்றால் திருவனந்தபுரம் வா என்றானாம் ..அங்கே அனந்த சயன கோலம்

Thanks to Savitha who recommended me to visit this temple .
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 369* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*138 ' निराकुला - நிராகுலா -*

மனதில் சஞ்சலம், சந்தேகம் இருந்தால் அடைய முடியாதவள்.

மாயை தான் தடுக்கிறது.

பவித்ரமான சாதகனின் நெஞ்சுக்கு அவளைத் தெரியும்.🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 366* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
*96 தேவியின் பாதிவ்ரத்ய மகிமை*

ஸரஸ்வதீ கடாக்ஷம், லக்ஷ்மீ கடாக்ஷம்

கலத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:

ஶ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:

மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா மசரமே

குசாப்யா மாஸங்க: குரவக தரோ ரப்யஸுலப: 96😊😊😊
ravi said…
கலைமகளும் பொது மடந்தை கமலையும் மற்றவளே

மலைமகள் நீ கற்புடைய வனிதையெனப் பகரும்

குலமறைகள் எதிர் கொடும் நின் குரவினையும்

அணையா
முலை குழையப் புணர்வது நின் முதல்வர் அலது இலையால்.🙏🙏🙏
ravi said…
கண்ணா*

மூவர் பாடினரோ உன் முத்து பல் ஒளியை கண்டே

வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக -

செய்ய சுடராழியான் அடிக்கே சூட்டினேன்

சொல்மாலை இடராழி நீங்குகவே என்று

நால்வர் பாடினரோ உன்னையும் அதில் சேர்த்தே

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா -

நன்புகழ்சேர் ஞானச்சுடர் விளக்கேற்றினேன்

நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்

ஐவர் பாடினரோ

உனையும் உன் தேவியையும் சேர்த்தே

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் -

செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்

புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பால் இன்று.

கண்ணா நானும் பாடுகின்றேன் பாசுரம் என்றே எடுத்துக்கொள்

அருவாய் என் அறிவாய்
அறுவராய் ஆனந்தமாய் அனந்தமாய் ஆருயிராய் கண்டேன்

கோவிந்தா காணா பொற்கிழி ஒன்றை
தேடாமல் என்னிடம் சேர்ந்தே பாடாத நாவை பாட வைத்ததே

ஓடாத இடமெல்லாம் ஓடி ஓய்ந்தேன் கண்ணா

உள்ளே நீ இருக்க இந்த ஓட்டம் ஏனோ .

ஓடி முடியும் முன் ஒளிந்திருக்கும் நீ என் கண் முன் வாராயோ

கண்களினால் உன்னை கட்டி அணைக்க 🙏🙏🙏
கௌசல்யா said…
அற்புதம்.....அந்த காளியன் கண்ணனை யமுனையில் அடியில் கண்டதும் கண்ணனின் திருமேனி அவனுடைய மாணிக்கதினால் மின்னுகிறது ஆயிரம் தாமரை பூக்கள் குவியலாய் காண அவன் தன் பாம்பு மேனியால் கண்ணனை அணைத்து கொண்டுவிட்டானாம்..அப்போது தலை முதல் திருவடி வரை அணைத்து கொண்டதால்( by mistake) அவனை மன்னித்து விட்டுவிட்டான் நம் காருண்ய மூர்த்தி...அவ்வாறு இருக்க நீங்கள் இப்படி அருமையான வரிகளில் அவனை துதித்தால் உங்களிடம் ஏன் வரமாட்டான்.....🙏🙏🙇‍♀️🙇‍♀️🌹🌹🪷🪷
ravi said…
*ஔ*

*ஔஷத பூஷனி .. திருக்கடவூர் அபிராமி*
ravi said…
மூவருக்கும் அம்மே அபிராமி எனும் அரும் மருந்தே என்னே இனி உனை யான் மறவாமல் ஏத்துவனே என்றார் சுப்ரமணியம்

மருந்தாகி பிணி தீர்கின்றாய் .. பிணி தந்தே உன் பக்கம் திருப்புகின்றாய் ..

பூக்கின்றாய் .. காக்கின்றாய் கரக்கின்றாய் மறைக்கின்றாய் பின் அருள்கின்றாய் ..

எல்லாம் நீயே எதிலும் நீயே என்றே அறிந்தபின்னும் உன்னில் மனம் செல்லாமல் பொருளில் செல்கின்றதே ..

என் அறிவுக்கும் அளவாய் ஆவாயோ தாயே 🙏🙏🙏
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 89*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
நெஞ்சிலே யிருந்திருந்து நெருக்கியோடும் வாயுவை

அன்பினா லிருந்துநீ ரருகிருத்த வல்லீரேல்

அன்பர்கோயில் காணலா மகன்று மெண்டிசைக்குளே

தும்பியோடி யோடியே சொல்லடா சுவாமியே. 89
ravi said…
நெஞ்சிலே இருந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணவாயுவை யோகப் பயிற்சியினால் நிறுத்தி

அன்பெனும் பக்தியுடன், தியானம் செய்து,

வாசியை உங்களுக்குள்ளேயே இருத்த வல்லவர்கலானால்

அவ்வாசி யானது நம் பிராணனில் கலந்து இறைவன் இருப்பிடத்தை காட்டும்.

செய்த பாவவினைகள் யாவும் அகலும்.

எண்திசைகள் யாவிலும் இயங்கும் ஈசனை அறிந்துணர்ந்து, தும்பியானது ரீங்காரம் இடுவதைப் போல உனக்குள்ளே வாசியை ஓட்டி தியானம் செய்து இறைவனை அடையுங்கள்.👍👍👍
ravi said…
This comment has been removed by the author.
ravi said…
*கந்தர் அலங்காரம் 76* 🐓🦚🙏

*அலங்காரம்-17*

💐💐💐💐
ravi said…
தடுங்கோள் மனத்தை!

விடுங்கோள் வெகுளியை!

தானம் என்றும்
இடுங்கோள்!

இருந்தபடி இருங்கோள்!

எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூருடன், குன்றம் திறக்க, தொளைக்க வை வேல்
விடுங்கோன்

அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!
ravi said…
மனத்தை அடக்குங்கள்! கோபத்தை விடுங்கள்!

தானத்தை இடுங்கள்! இருந்தபடி அமைதியாக இருங்கள்!

இப்படி இருந்தால்...
ஏழு உலகம் உய்யும் பொருட்டு, கோபச் சூரனையும், மாயத் தாருகனையும், வேல் வீசிப் பிளந்தானே! அந்த முருகனின் அருள் உங்களுக்குத் தானாகவே வந்து வெளிப்படும்!
ravi said…
*86. ஸுரேசாய நமஹ (Sureshaaya namaha)*

**அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 357* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

*ஸுரேச* ’:ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
குருகுலத்தை விட்டு வெளியேறிய மந்தன், தனது தவறுக்கு வருந்தினான். அதற்குப் பிராயச்சித்தம் தேடும் விதமாகப்
பெருமாள் கோயில்களில் புல் செதுக்குதல், தூய்மைப் படுத்துதல் உள்ளிட்ட தொண்டுகளைச் செய்துவந்தான்.
அதன் விளைவாக அடுத்த பிறவியில் தாந்தன் என்ற பெயருடன் விந்திய மலைப்பகுதியில் பிறந்தான்.
விந்திய மலை அடிவாரத்தில் உள்ள ஒரு ஆலமரத்தடியில் தவம் புரிந்தான்.

ஒருநாள் வானில் தென்திசையிலிருந்து பேரொளி ஒன்று தெரிவதைக் கண்டான். அதைப் பின் தொடர்ந்தபோது,
அது தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆதிநாதப் பெருமாளிடமிருந்து வருவதைக் கண்டு, அவ்வூரை அடைந்து, அந்தப் பெருமாளை வழிபட்டான்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 359*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
*ப்ரக்ருதி மலினை:” –* ரொம்ப பாபத்தில் மலிந்திருக்கும் பேரோடு உன்னுடைய பாதம் என்னைக்கும் தொடர்பு வச்சுக்காது..

ப்ராமணர்களுடைய .. “ *த்³விஜாதீ⁴ஶ:”* — அப்டிங்க்ரதுக்கு ப்ராமணர்களுடைய பெருமையை கண்டு அவாளுக்கு நன்மை ஏற்படுவதை கண்டு ரொம்ப சந்தோஷ படும்..

இது மாதிரி வாடாது.. “ *ரஜோமிஶ்ரை* :” –ரஜஸ் என்பது காம க்ரோதத்துக்கு காரணமான அந்த ரஜோ குணத்தை உன்னுடைய பாதம் வெறுக்கும்.

எப்பவுமே சத்வ குணம் இருக்கறவா தான் உன்னுடைய பாதத்துக்கு பக்கத்துல வர முடியும்.👣👣
ravi said…
சிலைகளைக் கும்பிடுவது சரியா? என்ற முஸ்லிம் அன்பரின் கேள்விக்கு ரமணமஹரிஷி பதில்


ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர்.

அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது.

பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா?

மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது?

பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா?

மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம். ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர்.
உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?

பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு;
பெயர் உண்டு.

மஹரிஷி: அப்படி என்றால் உடல் அங்கங்களைக் கொண்ட ஒரு மனிதர் நீங்கள். ஆறடி உயரம், தாடி கொண்டவர். சரி தானே!

பக்தர்: நிச்சயமாக அப்படித்தான்!

மஹரிஷி: சரி, அப்படியானால் தூங்கும் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?

பக்தர்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது தெரிகிறது.

ஆகவே, அநுமானத்தின் மூலமாக நான் இப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறேன் என்பது தெரிய வருகிறது.

மஹரிஷி: நீங்கள் உடல் தான் என்றால் இறந்த பிறகு சவத்தை ஏன் புதைக்க வேண்டும்?

உடல் தன்னைப் புதைப்பதை எதிர்க்க அல்லவா வேண்டும்?

பக்தர்: இல்லை, நான் பரு உடலில் உள்ளே இருக்கின்ற உள்ளுறை ஜீவன்.

மஹரிஷி: ஓ! அப்படி என்றால் உண்மையிலேயே நீங்கள் உருவம் இல்லாதவர் என்றாகிறது.

ஆனால் இப்போது உடல் மூலமாக உங்களை அடையாளம் கண்டு சொல்கிறீர்கள்.

இப்படி உடலுடன் இருக்கும் போது அடையாளம் காணும் நீங்கள், உருவம் இல்லாத கடவுளை உருவமாகக் காண்பதில் என்ன தவறு இருக்கிறது?

கேள்வி கேட்டவர் திகைத்து விட்டார்.🙏🙏🙏
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

பகவான் லோக வியாபாரத்தை தேவர்களும் மனுஷ்யர்களும் பரஸ்பரம் சகாயம் பண்ணிக்கொண்டு நடத்தவேண்டும் என்று ப்ளான் போட்டு அந்த ப்ளான் ரிஷிகளுக்கு ஸ்புரிக்குமாறு செய்திருக்கிறான்.இதன்படி ரிஷிகள் தேவர்களுக்கு ப்ரீதி அளிப்பவையான யஜ்ஞங்களை வகுத்தார்கள்.இதற்கு ப்ரீதியாக தேவர்கள் நமக்கு மழை முதலியவற்றை தந்து , இயற்கை சக்திகள்என்று சொல்லப்படுபவை மனுஷ்யனுக்கு சாதகமாக இருக்குமாறு அனுக்கிரஹத்தார்கள்.
ravi said…
இப்படி தேவ ப்ரீதி செய்யும்போதுதான் அவர்களுக்கு பிடித்தமான பலிகளை ஆஹுதி பண்ண வேண்டி வருகிறது. நமக்கு நல்லது செய்யக்கூடிய தேவரகளுக்குப் பலியில் ப்ரியம் இருக்கும்படி பகவன் படைப்பானா என்று கேட்டால் சரியில்லை.அவன் ஸருஷ்டி விசித்திரம் நமக்குப் புரியாத து. எத்தனையோ அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிற சி்ஙகத்துக்கும் கருடனுக்கும் ஏன் மாம்சத்தில் ப்ரியம் இருக்கும்படி வைத்திருக்கிறான்?கமகம என்று புஷ்ப்பிக்கிற செடிகள் தங்களுக்கு ஆகாரமாக துர்கந்தம் எடுக்கும் புழுக்கை மாதிரியான எருக்களை கேட்கவில்லையா?இப்படி நல்லது செய்யும் தேவர்களுக்கும் மந்திர பூதமாகி (மந்திரத்தால் சுத்திகரிப்பட்டு )அக்னி முகமாக அளிக்கப்படுகிற பலியானது ஆகாரமாக வேண்டியிருக்கிறது.
ravi said…
வேட்டை நாய்களைக்கொண்டு ராஜ்ஜியத்தில் திருட்டு புரட்டு தொல்லையில்லாமல் ரட்சிக்கவேண்டும் என்று ராஜா நினைத்தால் , அப்போது அந்த வேட்டை நாய்களுக்கு வேண்டிய மாம்சத்தை அதுகளுக்குப் போடத்தானே வேண்டும்? இப்படித்தான் தேவர்களால் லோகத்துக்கு நல்லது பண்ணனும் என்னும்போது அவர்களுக்குப்ரீதியான வபா ஆஹுதி கொடுத்துத்தான் ஆகவேண்டும்.இதில் இன்னொரு முக்கியமான விஷயம் :யஜ்ஞபசு (பசு என்றால் மாடு என்று அர்த்தம் இல்லை;பலியாகிற எந்தப்பிராணியும் யஜ்ஞ பசு என்றுதான் சொல்லப்படும்)வேட்டை நாயின் வயிற்றுக்குள் போன பிராணியைப்போல் வெறுமே செத்துப்போய் அங்கேயே ஜெரித்து விடுவதில்லை.யஜ்ஞபசுவின் ஜீவன் புண்ய லோகத்தையே சென்றடையும்.
400 வருஷம் முந்திதான் அப்பய்ய தீட்சதர் இருந்தார்.அவருக்கு ரொம்ப கருணை உள்ளமானபடியால் ‘நான் இப்படி பிராம்மண ஜன்மா எடுத்ததால் வாயில்லா ஜீவன்களை வதைத்து யஜ்ஞம் பண்ண வேண்டியதாக இருக்கிறதே!’ என்று துக்கப்பட்டாராம்.’பரமேச்வரா, இந்தப்பிராணிகள் உன் பாதார விந்தத்தை அடைகின்றன என்ற நம்பிக்கையிலேயே இவற்றை யஜ்ஞத்தில் கொடுக்கிறேன்.இப்படி சொல்லும் வேதவாக்கிலே ஜனங்களுக்கு நம்பிக்கையை நீ தான் உண்டாக்கவேண்டும்’என்று சொல்லி வாஜபேய யாகம் பண்ணினாராம்.அப்போது சகல ஜனங்களும் பாரக்கும்படி ஆகாசத்தில் இருந்து விமானம் வந்து இறங்கிற்றாம்.அக்னியிலே எந்தப் பசுக்களின் வபை ஹோம ம் பண்ணப்பட்டதோ அவை திவ்ய சரீரத்தோடு எழும்பினவாம்.விமானத்துடன் வந்த காந்தர்வ ,அப்ஸரசுகள் அந்தப் பசுக்களை உபசரித்து அதிலே ஏற்றிக்கொள்ள விமானம் மேலே ஏறி மறைந்தே போயிற்றாம்.புராணங்களிலும் இப்படி கதைகள் வருகின்றன.இன்றைக்கு லாபரட்டரிகளில் மனுஷ்யனுக்கு மருந்து கண்டுபிடிப்பதறகாக எலிக்கும் முயலுக்கும் ஊசி போட்டு அவற்றைக் கொல்வது நியாயமானால் யஜ்ஞத்தில பசு பலியும் நியாயம்தான்! அத்வைதமே மோக்ஷம் என்று ஸித்தாந்தம் செய்த அப்பைய தீக்ஷிதர் பரமேச்வரனை ஸ்தோத்ரம் பண்ணும்போது, ‘ஏதோ ரெண்டு எருக்கம்பூ, தும்பைப் பூவைப் பறிச்சு உன் மேலே போட்டுட்டா போறும், அதுக்குப் பலனா மோக்ஷ ஸாம்ராஜ்யம் கிடைச்சுடறது’ என்பதாக பக்தி பண்ணிப் பரம ஸுலபத்தில் ஈச்வர ப்ரஸாதத்தால் முக்தி அடைந்துவிட முடியுமென்கிறார்.
(இன்று அப்பைய தீட்சிதர் ஜெயந்தி)
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 360*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
ப்ராமணர்களுடைய .. “ *த்³விஜாதீ⁴ஶ:”* — அப்டிங்க்ரதுக்கு ப்ராமணர்களுடைய பெருமையை கண்டு அவாளுக்கு நன்மை ஏற்படுவதை கண்டு ரொம்ப சந்தோஷ படும்..

இது மாதிரி வாடாது.. “ *ரஜோமிஶ்ரை* :” –ரஜஸ் என்பது காம க்ரோதத்துக்கு காரணமான அந்த ரஜோ குணத்தை உன்னுடைய பாதம் வெறுக்கும்.

எப்பவுமே சத்வ குணம் இருக்கறவா தான் உன்னுடைய பாதத்துக்கு பக்கத்துல வர முடியும்.

அப்படி அந்த… யாரோட சேரலாம்.. யாரோட விரோதம் பாராட்டணும் அப்டின்னு இந்த ஸ்லோகத்துல சொல்லிகுடுக்குறார் மூக கவி.👍
ravi said…
*86. ஸுரேசாய நமஹ (Sureshaaya namaha)*

**அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 358* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

*ஸுரேச* ’:ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
ஆனால், அவ்வூரைச் சேர்ந்த அந்தணர்கள் தாழ்ந்த குலத்தில் பிறந்த அவன் கோவிலுக்குள் வருவதை எதிர்த்தனர்.

அதனால் தாந்தன், தாமிரபரணியின் வடக்குக் கரையில் தனியாக ஒரு கோவிலை அமைத்து அங்கே ஆதிநாதனை வழிபட்டான்.
(இன்றும் அவ்வூர் அப்பன் கோவில் என்று வழங்கப்படுகிறது.)👍👍👍
ravi said…
*கந்தர் அலங்காரம் 77* 🐓🦚🙏

*அலங்காரம்-17*

💐💐💐💐
ravi said…
தடுங்கோள் மனத்தை!

விடுங்கோள் வெகுளியை!

தானம் என்றும்
இடுங்கோள்!

இருந்தபடி இருங்கோள்!

எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூருடன், குன்றம் திறக்க, தொளைக்க வை வேல்
விடுங்கோன்

அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!
ravi said…
*தடுங்கோள் மனத்தை* =

மனசைத் தடுக்கணும்! யாரேனும் தற்கொலைக்கு முயன்றால் தடுப்போம்-ல?

அதே போல், தன்னைத் தானே கொல்லும் நம் மனசைத் தடுக்கணும்!

*விடுங்கோள் வெகுளியை* = வீண் கோபத்தை விடணும்!

உள்ளியது எல்லாம் உடன் எய்தும், உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்!

*தானம் என்றும் இடுங்கோள் =*

கெடுவாய் மனனே கதி கேள்! கரவாது இடுவாய்! வடிவேல் இறைதாள் நினைவாய்! -ன்னு அனுபூதியிலும் தானம் இடச் சொல்லுவாரு!

ஐயமும் பிச்சையும் ஆந் தனையும் கைகாட்டி, உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்தேலோ ரெம்பாவாய்!👍👍👍
ravi said…
கண்ணா*🦚🦚🦚

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்

சொல்லு
சொல்லென்று சுற்றுமிருந்து

ஆர்வினாவிலும் வாய் திறவாதே

அந்தக்காலம் அடைவன் முன்னம் மார்வம் என்பதோர்
கோவில் அமைத்து

மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூ விடவல்லார்

அரவதண்டத்தில் உய்யலுமாமே

பெரியாழ்வார் பாடிய பாசுரம் அன்றோ உண்மை நிலையை படம் போல் காண்பிக்கும் ...

ஒன்றும் உதவா நேரமதில் உறவுகள் கூடி உயில் கேட்கும் நேரமதில்

உயிர் மூச்சு நிற்கட்டுமா என்றே கேட்கும் வேளை தனில்

உன் நினைவு வந்திடுமோ கண்ணா ... உதடுகள் உன் நாமம் தனை உரைத்திடுமோ கண்ணா ...

கண் நாசி காது வாய் எங்கும் இயந்திரங்கள் வேலை செய்யும் நேரமதில் உன் காட்சி கிடைக்குமோ கண்ணா ...

உதவிய நேரமெல்லாம் உன் நினைவு வரவில்லை ...

காலன் உதவா நேரம் மட்டும் உன் நினைவு ஒன்றே வரவேண்டும் கண்ணா .. வேறு ஒன்றும் வேண்டிலேன்
ravi said…
*இனியவை நாற்பது*

பாடல் - 14

குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான் ஆகல் இனிது. . . . .[14]

விளக்கம்:

சின்னஞ்சிறு குழந்தைகளின் தள்ளாடும் நடையைக் காண்பது பெற்றோர்க்கும் உற்றோர்க்கும் இனியது. அக்குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்பது தேவாமிர்தத்தினை விட இனியது. தீய செயல்களைச் செய்தவன் அதன் பயனாகத் துன்பம் வந்து அவன் மனம் நொந்து வருந்தும் போதும் மனம் அஞ்சாது இருப்பது இனியது.


*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
🌹🌺 "How did this cart break when the child fell on his foot? I don't understand"! The interlocutors who marveled at that -- a simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹Child Kannan grew mane day by day and color by day. It has been three months since he was born. He started to roll over. Yasoda organized a festival to celebrate it.

🌺Meanwhile, another Rakshasa named Sakadasura, sent by Kamsa, took the form of a chariot and approached Yasoda's house in Gokulam. He was waiting to kill the child.

🌺 For the ceremony, Yasoda and Nandagopar had invited everyone in Gokulam. Yasoda bathed and dressed the child well. The child was sleepy.

🌺So, she built a cradle under the big cart nearby, put the baby in it, and was engaged in cooking.

🌺 After a while the child's eyes woke up and started to look deep. Yasoda could not hear the cry of the child because of the abundance of work and the chatter of the assembled people.

🌺 The child kicked its legs rapidly and cried. At that time, we heard the sound of trees breaking nearby and the cries of the middle children assigned to look after the child.

🌺Hearing that great noise, the middle girls came running shaking. There, they found the cart lying broken, with the child in the middle of it.

🌺 The Elders, Adyars and Nandagopar came running scared to see what had happened to the child. They were relieved to see Yasoda holding the baby.

🌺 "How did this cart break when the child was kicked? I don't understand anything"! They were surprised. At that time, the middle children assigned to take care of Kannan said, "This child was crying to eat milk and kicking his leg, his leg broke and this cart broke, we saw."

🌺 "Will the carriage break if the child's foot falls? No," the intercessors refused to believe it. Some who witnessed the end of the battle suspected that it might be.

🌺Thus, Sakadasura, who came in the form of a chariot, was slain by Kannan and became united with the Sattva form of Parantham. Not even a small part of his body was found there!

🌺 Injured lotus feet? Did Pinjuk get hit on the hands? The middle girls lifted Kannan and looked at him.

🌺 Nandagobar lifted the child and embraced him with a flutter of hair. Then the scribes blessed the child. Kannan also pleased Gokula with his leelas.🌹🌺
-------------------------------------------------- -------- 🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 " *குழந்தை கண்ணன் கால் பட்டு இந்த வண்டி எப்படி முறிந்தது?* *ஒன்றும் புரியவில்லையே* "! *என்று அதிசயித்த இடையர்கள் -- விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹குழந்தை கண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அவன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. குப்புறக் கவிழ்ந்து கொள்ள ஆரம்பித்தான். யசோதை, அதைக் கொண்டாட ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தாள்.

🌺இதற்கிடையே கம்ஸன் அனுப்பிய சகடாசுரன் என்ற மற்றொரு ராக்ஷஸன், வண்டியின் உருவெடுத்து, கோகுலத்தில் யசோதையின் வீட்டிற்கு அருகே. குழந்தையைக் கொல்வதற்காகக் காத்திருந்தான்.

🌺விழாவிற்கு, யசோதையும் நந்தகோபரும், கோகுலத்தில் உள்ள அனைவரையும் அழைத்திருந்தார்கள். யசோதை, குழந்தையை நன்கு குளிப்பாட்டி, அலங்கரித்து விட்டாள். குழந்தைக்குத் தூக்கம் கண்ணைச் சொருகியது.

🌺அதனால், அருகில் இருந்த அந்தப் பெரிய வண்டியின் அடியில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து, சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.

🌺சிறிது நேரத்தில் கண் விழித்த குழந்தை கண்ணன் ஆழ ஆரம்பித்தான். வேலையின் மிகுதியாலும், கூடியிருந்தவர்களின் பேச்சு சத்தத்தாலும் யசோதைக்கு, குழந்தையின் அழுகைக் குரல் கேட்கவில்லை.

🌺குழந்தை கால்களை வேகமாக உதைத்துக் கொண்டு அழுதது. அப்போது, அருகே மரங்கள் முறியும் சப்தமும், குழந்தையைப் பார்த்துக் கொள்ள நியமித்திருந்த இடைச்சிறுவர்களின் கூக்குரலும் கேட்டது.

🌺அந்தப் பெருஞ்சத்தத்தைக் கேட்டு, இடைப்பெண்கள் உடல் குலுங்க ஓடி வந்தனர். அங்கே, வண்டி முறிந்து கிடக்க, அதன் நடுவே குழந்தையைக் கண்டனர்.

🌺பெரியோர்களும், இடையர்களும், நந்தகோபரும், குழந்தைக்கு என்ன நேர்ந்ததோ என்று பயந்து ஓடி வந்தனர். யசோதை குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சமாதானம் அடைந்தனர்.

🌺" குழந்தை கண்ணன் கால்ப்பட்டு இந்த வண்டி எப்படி முறிந்தது? ஒன்றும் புரியவில்லையே"! என்று அதிசயித்தனர். அப்போது, கண்ணனைப் பார்த்துக் கொள்ள நியமித்திருந்த இடைச்சிறுவர்கள், “இக்குழந்தை பால் சாப்பிட அழுதுகொண்டு காலை உதைத்துக் கொண்டது, அதன் கால் பட்டு இந்த வண்டி உடைந்தது, நாங்கள் பார்த்தோம்” என்று கூறினார்கள்.

🌺"குழந்தையின் கால் பட்டு வண்டி முறியுமா? இருக்காது" என்று இடையர்கள் அதை நம்ப மறுத்தனர். பூதனையின் முடிவை நேரில் கண்டிருந்த சிலர் அப்படியும் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

🌺இவ்வாறு, வண்டியின் உருவில் வந்த சகடாசுரன், கண்ணனால் வதம் செய்யப்பட்டதால், ஸத்வவடிவான பரந்தாமனுடன் ஐக்யமடைந்துவிட்டான். அவனுடைய உடலின் சிறு பாகம்கூட அங்கு காணப்படவில்லை!

🌺தாமரைப் பாதங்களில் காயம் பட்டதா? பிஞ்சுக் கைகளில் அடி பட்டதா? என்று இடைப்பெண்கள் கண்ணனைத் தூக்கித் தடவிப் பார்த்தனர்.

🌺 நந்தகோபர், மயிர்க்கூச்சலுடன் குழந்தையைத் தூக்கித் தழுவிக் கொண்டார். பிறகு வேதமறிந்தவர்கள் குழந்தையை ஆசீர்வதித்தார்கள். கண்ணனும் தனது லீலைகளால் கோகுலத்தை மகிழ்வித்தான்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*ஆயுதம் சூழ் சகலகலாவல்லி* *கூத்தனூர்*🦚🦚🦚
ravi said…
ஆயுத எழுத்தே 64 கலைகள் எனும் ஆயதங்கள் சூழ்ந்தவளே ...

அறமே சியாமள மேனி சகலகலா வல்லியே

உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக எனையும் சித்தாக்கினாய் என் புண்ணியம் செய்தேன் இவ்வரம் பெறவே ...

இணை உண்டோ உனக்கு

இனி உண்டோ என் ஊழ்வினைகள் ..

உன் பதி செய்த சூழ்ச்சி என் தலை எழுத்தில் சிக்குண்டதே ..

மாற்றி அமைக்க உன் போல் ஒரு பதிவிரதை உண்டோ ... உண்டார் எனில் அதுவும் நீயே அன்றோ 🪷🪷🪷
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 90*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
தில்லையே வணங்கிநின்று தெண்டனிட்ட வாயுவை

எல்லையைக் கடந்துநின்று ஏகபோக மாய்கையோ

டெல்லையைக் கடந்துநின்று சொர்க்கலோக வெளியிலே

வெள்ளையுஞ் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே. 90🙏🙏🙏
ravi said…
தில்லையில் ஆடும் ஈசன் நம் உடலில் இடங்கொண்டு ஆகாய எல்லையில் ஆடி நம்மை ஆட்டுவிக்கின்றான்.

வாசிக் காற்றை மேலேற்றி செய்யும் பயிற்சியினால் அவ்வாசியானது ஈசனை வணங்கி அவனுடன் சேர்க்கின்றது.

மனமெனும் எல்லையைக் கடந்து ஏகமாக நின்று எல்லா இன்ப போகங்களையும் அடையச் செய்வது மாயையே.

மனமே வாசியாகி எல்லையாகவிருக்கும் ஆகாயத்தையும் கடந்து இறையைச் சேர்வதுவே ஆனந்தம்.

அவ்விறையையே உயிராக வெள்ளையும் சிகப்புமாக நம் உடலில் மெய்ப்பொருளாக நின்றது.🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 370* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*138 ' निराकुला - நிராகுலா -*

மனதில் சஞ்சலம், சந்தேகம் இருந்தால் அடைய முடியாதவள்.

மாயை தான் தடுக்கிறது.

பவித்ரமான சாதகனின் நெஞ்சுக்கு அவளைத் தெரியும்.🙏🙏🙏
ravi said…
கலக்கமோ , துன்பமோ இல்லாதவள் ... ஆகுலம் என்றால் கலக்கம் , துன்பம் . அது இல்லாதவள் . இது எப்படி சாத்தியமாகும் ? அவள் ஸ்ரீ மாதா என்கிறதே ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ...

ஒரு தாய்க்கு எப்படி கலக்கமோ துன்பமோ இல்லாமல் இருக்க முடியும் குறிப்பாக நம்மை போல் குழந்தைகளை பெற்ற பின் ... ??

கருணா ரஸமாக இருந்தாலும் அவள் எதிலும் பற்று இல்லாதவள் ...

பாசம் அறுப்பவளுக்கு எங்கிருந்து கலக்கமும் துன்பமும் வரும் ...

ஒரு பிரபஞ்சத்திற்க்கே மஹாராணியாக இருக்கும் போது how SHE could permit HER heart rules HER head .. கண்டிப்புடன் பொங்கி வரும் கண்ணீரை மறைத்துக்கொண்டு நம் கஷ்டங்களை களைகிறாள் ...

ஆனால் அவைகளை தனதாக்கிக் கொள்ளாமல் அடியோடு அழித்து விடுகிறாள் ...

அதனால் தான் அவளை தஞ்சம் அடைபவர் கள் மீண்டும் பிறப்பதில்லை ... மரணம் பிறவி இரண்டுமே அவள் தன் அடியார்க்கு தருவதில்லை ..

இன்னொரு பிறவி எடுத்து மீண்டும் நம்மை ஒரு தாயின் கர்பையில் நுழைய விடுவதில்லை 🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 367* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
*97 தேவியே ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் பார்வதியும்*

ஜீவன்முக்தி👍👍👍
ravi said…
கிராமாஹுர் தேவீம் த்ருஹிணக்ருஹிணீ மாகமவிதோ

ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ மத்ரிதநயாம்

துரீயா காபி த்வம் துரதிகம நிஸ்ஸீம மஹிமா

மஹாமாயா விஶ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி 97
ravi said…
பரப்பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியே !

வேதத்தை அறிந்தவர்கள் – உன்னையே – பிரம்மாவின் பத்தினியான வாக் தேவதையாக கூறுகிறார்கள். –

உன்னையே ஹரியினுடைய பத்தினியான லக்ஷ்மியாகவும்,

சிவனுடைய பத்தினியான பார்வதியாகவும் – கூறுகிறார்கள்.

நீயே இம்மூவருக்கும் அப்பாற்பட்டவளாக அடைவதற்கு அரியதும் எல்லையில்லாத மகிமை உடையவளாக – *மகாமாயை* எனப் பட்டவளாக உலகு அனைத்தையும் ஆட்டி வைக்கிறாய். 👍👍👍
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 138* 💐💐💐

முகுந்தமாலைல நேத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம்.

वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्

औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |

सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:

प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: ||

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்

ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |

ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:

ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||
ravi said…
முகுந்தமாலா 21, 22 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
இப்படி க்ருஷ்ணனையே த்யானம் பண்ணிண்டு இருந்தா அதுவே ஒரு மருந்தாகி இந்த *ப்ரஸூதி மரண வ்யாதே: சிகிச்ஸாம் இமாம்*

பெரிய யோகிகள் எல்லாம் சொல்றா.

இந்த ஜன்மம், மரணம் என்ற வியாதிக்கு இந்த கிருஷ்ணன் எங்கற நாமம் தான், கிருஷ்ண த்யானம்தான் ரொம்ப பரம ஓளஷதம்ன்னு சொன்னார்.

இன்னிக்கு திரும்பவும் ‘ *ஹே மர்த்யாஹா* ’ ன்னு கூப்பிட்டு *மர்த்யாஹா* ன்னா இறப்பவர்கள். மனிதர்கள்ன்னு தான் அர்த்தம்,

ம்ருத்யு யாருக்கு வருமோ அவா மர்த்யாஹா.

அதனால இந்த ம்ருத்யுவிலிருந்து மீளரத்துக்கு, மீண்டும் மீண்டும் பிறந்து இறக்காமல் இருக்க வேண்டுமானால் நான் உங்களுக்கு ஒரு வழி சொல்றேன்.
ravi said…
*இதுதாண்டா தர்மம்*

மதுரை திருநகரைச் சேர்ந்த அந்த தம்பதிகளின் பெயர் *ஜனார்த்தனன்-ஜலஜா* .மத்திய அரசு ஊழியர்களாக இருந்த இவர்கள் தொண்டு செய்வதற்காகவே விருப்ப ஒய்வு பெற்றனர்.

ஒய்வு பெற்ற போது கிடைத்த பணத்தைக் கொண்டு திருநகரில் ஐந்து கிரவுண்டு இடத்தை வாங்கிப்போட்டனர்.
அதன் இன்றைய மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேலாகும். அதில் முதியோர் இல்லம் நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தனர்.ஜனார்தனனுக்கு திடீரென பார்வைக் கோளாறு ஏற்படவே தாம் முதியோர் இ்ல்லம் நடத்தமுடியாது நடத்துபவர்கள் யாருக்காவது இடத்தை கொடுத்துவிடலாம் என முடிவு செய்தனர்.

ravi said…
அந்த நேரத்தில் டாக்டர் பாலகுருசாமி உள்ளீட்ட சில இளம் டாக்டர்கள் ஒன்று சேர்ந்து *‛ஐஸ்வர்யம் அறக்கட்டளை'* என்ற அமைப்பினை துவங்கி ஆதரவில்லாமல் தெருவில் வீசப்பட்ட வயதானவர்களை காப்பாற்றி தகுந்த மருத்துவமும் உணவும் கொடுத்து காப்பாற்றி வந்தனர்.ஆனால் போதுமான இடவசதி இல்லாமல் சிரமப்பட்டனர் இதனைக்கேள்விப்பட்ட ஜனார்த்தனன்-ஜலஜா தம்பதியினர் தங்களது இடத்தை தானமாக கொடுத்தனர்.

ravi said…
ஆனாலும் மருத்துவர்கள் குழு தானமாக இடத்தைப் பெற சிறு தயக்கம்காட்டினர் , இடத்தை பதிவு செய்ய *இரண்டரை லட்ச ரூபாய்* தேவை என்பதுதான் அந்த தயக்கத்திற்கு காரணம். இதைக் கேள்விப்பட்ட தம்பதியினர் இடத்தை தானமாக கொடுத்ததுடன் நி்ற்காமல் தங்களது சேமி்ப்பில் இருந்த பணத்தை எடுத்து இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்து இடத்தை பதிவும் செய்து கொடுத்தனர்.

ravi said…
இடம் கிடைத்துவிட்டது இனி இதில் கட்டிடம் கட்டவேண்டுமே என்ற நிலை வந்த போது மீண்டும் இதே தம்பதியினர் தங்களது வெளிநாட்டு உள்நாட்டு உறவுகள் நட்புகளிடம் விஷயத்தைச் சொன்னதும் நிதி வந்து சேர்ந்தது, இரண்டு மாடி கட்டிடமும் கட்டப்பட்டது.

ravi said…
கட்டிடம் கட்டியாகிவிட்டது நோயாளிகள் படுக்க படுக்கை வேண்டுமே என்ற சூழ்நிலையில் கொஞ்சமும் தயங்காமல் ஐம்பது கட்டில்கள் வாங்கி கொடுத்தனர். இதை எல்லாம் நிர்வாகம் செய்ய இரண்டு கம்ப்யூட்டர்கள் வேண்டும் என்ற போது இந்தாருங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அதையும் வாங்கிக் கொடுத்தனர்.

ravi said…
இப்படி *இதுவும் கொடுப்பான் இன்னமும் கொடுப்பான்*
என்ற கர்ணனைப் போல தர்ம காரியத்திற்கு கொடுத்துக் கொண்டே இருக்கும் இந்த தம்பதியினர் பெரிய பணக்காரர்கள் அல்ல மத்திய அரசு வழங்கும் பென்ஷன் பணத்தில் வாழ்க்கையை நடத்துபவர்கள்தான் எங்காவது போகவேண்டும் என்றால் கால் டாக்சியில் போனால் கூட காசு செலவாகும் என்று நினைத்து டவுன் பஸ்சில்தான் இப்போதும் போய்வந்து கொண்டு இருக்கின்றனர்.

ravi said…
வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது தங்களது வேலைகளை தாங்களேதான் செய்து கொள்கின்றனர் அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளை அழைத்து மாலை நேரங்களில் தங்களது அறிவை பகிர்ந்து கொண்டு இலவச ட்யூஷன் எடு்க்கின்றனர் பிறகு நேரம் கிடைக்கும் போது ஐஸ்வர்யம் அறக்கட்டளைக்கு விசிட் செய்து அங்குள்ளவர்களிடம் அன்பாக பேசி ஆறுதலளித்துவிட்டு வருகின்றனர்.தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரிடம் பேசினாலும் தர்மம் செய்யச் சொல்லி வலியுறுத்தி அந்த தர்மத்தை ஐஸ்வர்யம் அறக்கட்டளை உள்ளீட்ட தொண்டு நிறுவனங்கள் பெறச் செய்கின்றனர்.

இவர்களின் தயவால் இப்போது வாழ்வின் விளிம்பு நிலையில் மரணத்தின் வாசலில் இருப்பவர்கள் என்று யாருமே கவனிக்காமல் குப்பையாக வீசியெறியப்பட்ட ஆண்,பெண் முதியவர்கள் 39 பேர் ஐஸ்வர்யம் அறக்கட்டளையில் தங்கி கடைசி காலத்தை நிம்மதியாக கழித்துவருகின்றனர்.

அவர்கள் மட்டுமல்ல நீங்களும் நிம்மதியாக வாழ்க்கைகை கடக்கவேண்டும் என்றால் தர்மம் செய்வதை சிறு வயதில் இருந்தே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் வீட்டில் உள்ள சிறு வயது குழந்தைகளையும் தர்மம் செய்யவைத்து பழக்குங்கள்,தேவைக்கு மேல் அல்ல தேவைகளை கூட குறைத்துக்கொண்டு கொடுத்து பாருங்கள் அதன் சுகமே தனி என்று சொல்லும்.......

*இதுதான் தர்மம்* ⛱️⛱️
ravi said…
கண்ணா*

தன்னுளே திரைத்தெழும் தரங்கவெண் தடங்கடல்

தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல்

நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்

நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே🪷

--- *திருமழிசை ஆழ்வார்*💐💐💐

*கண்ணா* எல்லாம் உன்னுள் அடக்கம் என்றே சொன்னார் ஆழ்வார் அன்று ...

உனக்குள் பிறந்து உன்னில் வளர்ந்து உன்னில் முடிவும் பெறுகிறோம் ...

அலைகள் போல் கரை வந்து மீண்டும் கடலுக்குள் செல்கிறோம் ...

முடிவில்லா வாழ்க்கை இது .

மாயையை நிஜம் என்றே நம்பி உனை நிழல் என்றே நினைக்கிறோம் .

நிஜம் நீ அன்றோ *கண்ணா !*

நிழல் நாங்கள் அன்றோ ..

நிழல் வெற்றி பெருமோ நிஜம் தனை ?

புரிந்து கொண்டால் எவர்க்கும் உண்டோ அகங்காரமும் மம காரமும் *கண்ணா* 💐💐💐
ravi said…
*கந்தர் அலங்காரம் 78* 🐓🦚🙏

*அலங்காரம்-17*

💐💐💐💐

தடுங்கோள் மனத்தை!

விடுங்கோள் வெகுளியை!

தானம் என்றும்
இடுங்கோள்!

இருந்தபடி இருங்கோள்!

எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூருடன், குன்றம் திறக்க, தொளைக்க வை வேல்
விடுங்கோன்

அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!
ravi said…
*இருந்தபடி இருங்கோள் =* முன்னேறாம அப்படியே இருந்தபடியே இருங்கோ-ன்னா சொல்றாரு அருணகிரி?

இல்லை இல்லை!
* முன்னேறுவதற்கு முன், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இருந்தியே!

* முன்னேறிய பின்னும், அதே போல், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இரு!

முன்பு இருந்தபடி, இருங்கோள் என்கிறார்!

*இப்படி இருந்தாக்கா...*
*எழு பாரும் உய்ய* =

*ஏழ் உலகும் உய்ய*
*கொடும் கோபச்* *சூருடன்* = கோபச் சூரனையும்
குன்றம் திறக்க =

அவன் தம்பி தாரகன், கிரெளஞ்ச மலையாய் நின்றானே! அவனையும் தொளைக்க =

அவர்களைத் துளைக்க
வை வேல் விடுங்கோன் =

கூர் வேலை விட்டவன், முருகன்!💐💐💐
ravi said…
*86. ஸுரேசாய நமஹ (Sureshaaya namaha)*

**அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 359* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

*ஸுரேச* ’:ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
இதற்கிடையில், தாந்தனை வெறுத்த அந்தணர்கள் அனைவருக்கும் பார்வை பறிபோனது.

தங்கள் தவறை உணர்ந்து
அவர்கள் தாந்தனிடம் வந்து மன்னிப்பு கோரினார்கள்.

அப்போது ஆதிநாததேவியோடு ஆதிநாதப்பெருமாள் காட்சி தந்து,
பார்வை இழந்தோர்க்கு மீண்டும் பார்வை தந்துவிட்டு, தாந்தனை வைகுந்தத்துக்கு அழைத்துச் சென்றார்.

அன்று முதல் அவ்வூர் ‘ *தாந்த க்ஷேத்ரம்’* என்றழைக்கப்பட்டது. விந்திய மலையடிவாரத்தில் தாந்தன் தவம் புரிந்த ஆலமரத்தடியில்
ஒரு வேடன் சில நிமிடங்கள் ஓய்வெடுத்தான்.

அந்தப் புண்ணியத்தின் விளைவாக சங்கன் என்ற முனிவராக அடுத்த பிறவியில் பிறந்தான்.🦚🦚🦚
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 361*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
வேதத்தையும், தர்ம சாஸ்திரத்தையும், இதிகாச புராணங்களையும் கேலி பேசறது பாவம்.

அப்பேர்பட்ட பாவிகள் ப்ராமணர்கள்ட்ட த்வேஷம் பண்றவா, எப்பவும் காமக்ரோதத்துலயே மூழ்கி காமினி காஞ்சனத்துல இருக்கறவாளோடு தொடர்பு வச்சுக்க கூடாது..

அவாளோடு விரோதம் பாராட்டறதுல தப்பு இல்லை. விரோதம்னா நம்ப போய் அவாகிட்ட முட்டி மோத வேண்டாம்..

அவாள்ட்டேர்ந்து விலகி இருக்கணும். நம்ப அம்பாளோட சரணம் கிடைக்கணுமானால், நாம் நம்மை அம்பாளுக்கு ஆட்ப்பட்டவனாக அம்பாளுக்கு மட்டுமே அடிமையாக, அதனால என்ன வரதோ அது போதும்..
*பாதய வா பாதாளே ஸ்தாபய வா சகல* *புவன சாம்ராஜ்யே |*
*மாத: தவபதயுகளம்* *நாஹம் முஞ்சாமி நைவ முஞ்சாமி ||*

அப்டின்னு உன்னுடைய திருவடிகளை நான் விட மாட்டேன் அப்டின்னு அம்பாளையே சரணம் பண்ணிண்டு பரமேஸ்வரனையே தலைவனாக நினைக்கணும் அப்டின்னு இந்த சிவானந்த லஹரி ஸ்லோகத்திலேர்ந்தும் இந்த மூக பஞ்சசதி ஸ்லோகத்திலேர்ந்தும் நமக்கு தெரியறது.

மத்தவாளை பத்தின சர்ச்சையே நமக்கு வேண்டாம்.

அது எப்படியோ போகட்டும். நம்ப விடாம பகவானுடைய பஜனத்தையே பண்ணிண்டு பகவானையே நம்பி இருக்கணும். அப்டின்னு இந்த 39வது ஸ்லோகம் சிவானந்தலஹரியுடைய பொருள்.
ravi said…
*கோவிந்தா கோவிந்தா என்றால் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் !*

http://www.srimahavishnuinfo.blogspot.com

கோவிந்தா கோவிந்தா என்றால் கொடுத்தது திரும்பவராது என்னும் தவறான கருத்தை கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.

கடவுளின் திருநாமத்தில் ஏமாற்றம் எப்படி அடையமுடியும். கடவுளின் திருநாமத்தை தவறான செயலுக்கு அர்த்தம் வருமாறு சொல்லலாமா? கோவிந்தா என்னும் திருநாமத்தைப் பற்றி சொல் வதற்கும் கேட்பதற்கும் கால அவகாசம் போதுமா என்ன? அவ்வளவு சிறப்புக்கள் பெற்றது கோவிந்தா கோவிந்தா என்னும் திருநாமம்.

காக்கும் கடவுளான ஸ்ரீ வேங்கடமுடையானை பக்தர்கள் கோவிந்தா என்று அழைத்தால் ஓடோடி வந்து அருள் புரிந்துவிடுவார். கோ என்றால் உலகம். விந்தன் என்றால் காப்பாற்றுபவன் என்று பொருள். ஆக கோவிந்தன் என்றால் உலகையெல்லாம் உலகில் உள்ள ஜீவராசிகளையெல்லாம் காக்கும் கடவுள் என்று பொருள்.

பெருமாளுக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமத்தில் ஆயிரம் நாமங்கள் உண்டு. அவற்றிலும் சிறப்புமிக்க நாமங்கள் பன்னிரண்டு. அவற்றிலும் சிறப்பு மிக்க நாமம் கோவிந்தா என்னும் நாமம். ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் கோவிந்த நாமத்தைதான் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.

கோவிந்தா என்றால் போனால் திரும்ப வராது என்னும் அர்த்தத்தையும் கொண் டது. அதாவது பூவுலகில் மனிதப்பிறவியாய் அவதரித்து அவதிப்படுபவன் இத் திருநாமத்தை விடாது பற்றிக்கொண்டால் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்க மாட்டான் என்பதையே குறிக்கும். கோவிந்த நாமம் சொல்ல சொல்ல போன உயிர் மீண்டும் திரும்பாது என்பதே இதன் பொருள். அதாவது மறுபிறவி யில்லாத நிலை என்று சொல்லலாம்.

கோ என்றால் பசு என்பதை குறிக்கும். இது அனைவருக்கும் தெரிந்ததே. விந்தன் என்றால் காப்பவன். ஆக பசுக்களின் தலைவன் என்று பொருள்படும். தானத்தில் சிறந்த பசுதானம் செய்த புண்ணியத்தைத் தருவது கோவிந்தா என்று சொல்லக் கூடிய திருநாமம்.

பக்தர்கள் அபயம் வேண்டி மனம் முழுக்க வேங்கடவனை நினைத்து கோவிந்தா என்று முழங்கினால் செய்யும் பணிகளை விடுத்து தேடிவருவான் கோவிந்தப் பெருமாள். மகாபாரதத்தில் திரெளபதியின் சேலையை துரியோத னன் துகிலுரிந்த போது அதைப் பார்த்து பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், விதுரர், பாண்டவர்கள் தலைகுனிந்தார்கள். ஒன்றும் செய்ய இயலாமல் அமைதியாக இருந்தார்கள். செய்வதறியாமல் திகைத்தார்கள். ஆனால் திரெளபதி கோவிந்தனை மட்டுமே நம்பினாள். கோவிந்தனின் திருநாமத்தை உச்சரித்தாள். இருகைகளையும் மேலே எழுப்பி கோவிந்தா கோவிந்தா என்னை காப்பாற்று என்றாள். கோவிந்தனின் திருநாமத்தால் அவளது ஆடையின் அளவும் நீண்டுக் கொண்டே சென்றது. அவ்வளவு சக்தியைக் கொண்டது கோவிந்தனின் திருநாமம்.

வைணவத்தலங்கள் எங்கு சென்றாலும் அங்கு கோவிந்தா என்ற குரல் உரக்க முழக்கமிடுவதை கேட்கிறோம். கோவிந்தா கோவிந்தா என்னும் முழக்கம் திருமலையில் ஸ்ரீ வேங்கடமுடையானின் தலத்தில் மட்டுமல்லாமல் திருமலை முழுக்க எதிரொலிக்கிறது. கேட்கும் நமக்கு அளவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் தரும் திருநாமமாய் ஜொலிக்கிறது.

ஒருவர் இவ்வுலக வாழ்வை விட்டு செல்லும் இறுதி நேரத்தில் சுற்றி இருப்ப வர்கள் கோவிந்தா கோவிந்தா என்று சொல்வார்கள். இப்படி சொல்வது அவருக்கு நாம் செய்யும் ஆத்மார்த்தமான ஆன்மிக உதவி. இறந்தவர்களுக்கு மோட்சத்தை தருவது கோவிந்தப்பெருமாள் மட்டுமே தரமுடியும்.

*ஓம் நமோ நாராயணா.... நீயே கதி உன் திருவடிகளே சரணம் ஐயா....*

*கோவிந்தா ஹரி கோவிந்தா.... கோகுல நந்த கோவிந்தா...*🙏🙏🙏🙏🙏

@mahavishnuinfo
ravi said…
காமாக்ஷீ! உனது கடைக்கண் பார்வையானது நல்ல கருநெய்தல் மலரின் நட்பாலே சுருதியாம் வேதவழியை அடைகிறது. ஆயினும், புருவக்கொடியின் பரிச்சயத்தால் குடிலமாயுமிருக்கிறது.

ஏஷா தவாக்ஷிஸுஷமா விஷமாயுதஸ்ய
நாராசவர்ஷ லஹரீ நகராஜகன்யே |
ஶம்கே கரோதி ஶததா ஹ்ருதி தைர்யமுத்ராம்
ஸ்ரீகாமகோடி யதஸௌ ஶிஶிராம்ஶு மௌலே: ||93||
ravi said…
🌹🌺 '“On Karthikai Poornami, Shri Krishna himself worships Tulsi Devi with the following mantra.-- A simple story to explain 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹Asta-Nama-Stava
Eight Names of Goddess Tulsi-----Vruntavani, Vrinda, Visvapoojita, Pushpasara, Nandini, Krishna-jeevani, Visva-bhavani, Tulsi.

🌺 1. Vrndavani - She who first appeared in Vrndavana. Vrinda - Goddess of all plants.

🌺 2. Vishvabhujita - One whom the entire universe worships.

🌺 3. Puspasara - The foremost of all flowers, Krishna does not like to see other flowers without her.

🌺 4. Nandini - Brings happiness to everyone.

🌺 5. Kṛṣṇa-jivani - the life and soul of Kṛṣṇa.

🌺 6. Visva-bhavani - Purifier of the three worlds.
Tulsi - Incomparable.

🌺 7. While worshiping Goddess Tulsi, one who performs Aswamedha Yagya, on the day of Karthikai Poornami (the day of appearance of Goddess Tulsi) chanting this mantra will get similar benefits.

🌺8.Birth and death in this miserable world, and very soon to reach Koloka Vrndavana. Lord Krishna himself worships Tulsi Devi with this mantra on Kartika Poornami.

🌺One who remembers this mantra will soon attain devotion to the lotus feet of Krishna🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
இன்று புதன்கிழமை. மதுரை, ஒத்தக்கடை, திருமோகூர், பெண் வடிவத்தில் அருளும் அருள்மிகு காளமேகப் பெருமாள் திருநாமம் போற்றுவோம். இனிய விடியல்..

+ திருமால், மோகினி அவதாரத்தில் இருப்பதால், அவருக்கு மரியாதை தரும் விதமாக, தாயார் மோகனவல்லி, சன்னதியை விட்டு வெளியே வராததால், இச் சன்னதியில் சடாரி, தீர்த்தம் தரப்படுவதில்லை;

++ மிகப் புராதனமான சக்கரத்தாழ்வார், 154 மந்திரங்களும், அதற்குரிய 48 அதி தேவதைகளுடன் தலையில் அக்னி கிரீடத்தை அணிந்து, "பக்தா, உன் கண்ணின் குறை, என் கண்ணில் புரை" என உடன் ஓடி வரும் நிலையில் பக்தர்களின் குறையை தீர்க்க வருவது போல் பொறிக்கப்பட்டுள்ள காட்சி மலைத்து மகிழ்விக்கும்!
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 139* 💐💐💐

முகுந்தமாலைல நேத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம்.

वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्

औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |

सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:

प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: ||

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்

ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |

ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:

ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||
ravi said…
முகுந்தமாலா 21, 22 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
हे मर्त्याः परमं हितं श्रुणुत वो वक्ष्यामि सङ्क्षेपतः

संसारार्णवमापदूर्मिबहुलं सम्यक् प्रविश्य स्थिताः ।

नानाज्ञानमपास्य चेतसि नमो नारायणायेत्यमुं

मन्त्रं सप्रणवं प्रणामसहितं प्रावर्तयध्वं मुहुः ॥ २१ ॥

ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸங்க்ஷேபத:
ஸம்ஸாரார்ணவமாபதூ³ர்மிப³ஹுலம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்தி²தா: ।
நானாஜ்ஞானமபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்⁴வம் முஹு: ॥ 21 ॥

ன்னு ஒரு ஸ்லோகம்,
ravi said…
மனிதர்களே இந்த ரொம்ப அபாயகரமான சம்சாராணார்வம் *ஆபதூர்மி பஹுலம்*

ஆபத்துங்கற அலைகள் நிறைத்து இருக்கும், தீடீர்ன்னு ஒரு நாள் விடிஞ்சா flood வர்றது.

தீடீர்ன்னு பலவிதமான ஆபத்துகள் வாழ்க்கையில ஒவ்வொண்ணா வந்துண்டே இருக்கு.

மேலும் மேலும் அலை மாதிரி ஆபத்துக்கள் வரக் கூடிய இந்த சம்சார சாகரத்துல ரொம்ப உள்ளுக்குள்ள போய் நீங்க மாட்டிண்டு இருக்கேள்.

உங்களுக்கு மீள்றதுக்கு நான் ஒரு உபாயம் சொல்றேன். *வக்ஷ்யாமி சம்க்ஷேபத* :

சுருக்கமா சொல்லிடறேன்ங்கறார்.🙏🙏🙏
ravi said…
*தர்ப்பணம் - தர்ப்பயாமி பற்றிய ஒரு ரகசியம்*

தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு
சந்தோஷமடைதல் என்று பொருள்.

தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது
சந்தோஷமடையுங்கள் என்று பொருள்
கொள்ளலாம்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ
என்ற ஆராய்ச்சியாளர் நீர்ல் நேர்மறை
சொற்களை பிரயோகித்தபொழுது நீரில்
உள்ள மூலக்கூறுகள் ஒரு
முறைமையுடனும் ஒழுங்குடனும்
வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.
அதேசமயம், எதிர்மறை சொற்களை
அந்த நீரில் பயன்படுத்தியபொழுது
அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக
அமைந்ததைகண்டார்.

இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின்
அடித்தளம்.

தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை
அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்ய
வேண்டும் என்று கூறுவார்கள்.
அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது
முன்னோர்களை முன்னிட்டு கூறும்
பொழுது அந்த சொற்கள் நீரின்
மூலக்கூறுகளை சென்று அடைகின்றது.
நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள்
வளிமண்டலத்தில் கலக்கின்றன.
அதாவது, சந்தோஷமடையுங்கள்
என்று நாம் கூறிய எண்ண அலைகள்
ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன்
வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.

அதீத உளவியல் (Para psychology)
என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள்
மரணத்தின் பின் மனிதனின் நிலை
பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். அந்த
ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின்
ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக
நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.

மேலே கூறிய இந்த நிகழ்வை
மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை
கொல்வேன் என்று சபதம் செய்து
நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும்
சிகண்டியாக பிறந்து பீஷ்மரை கொன்றாள்
என்று கூறும் நிகழ்விலிருந்து புரிந்து
கொள்ளலாம். அதாவது மனம் மற்றும்
எண்ண அலைகள் மறைவதில்லை
என்று புரிந்துகொள்ளலாம். ஆத்மா
சாவதில்லை என்ற கருத்து இந்த
இடத்தில் நினைவு கூறத்தக்கது.
நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளை
பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது
என்பது நமது கோட்பாடு.

ஜடபரதர் என்ற முனிவர் சித்தி
அடையும் தருவாயில் ஒரு மான் படும்
வேதனையை நினைத்தார் என்பதினால்
அவர் ஒரு மானாக பிறந்தார் என்று
யோகவாசிஷ்டம் கூறுகின்றது.

இதனால்தான் மனமிறக்க வாயேன்
பராபரமே என்று பாடினார் தாயுமான
சுவாமிகள்.

உடல் உகுத்தவர்கள் ஆழ்மன
எண்ணங்கள் மறைவதில்லை என்றும்
அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன
என்றும் அதீத உளவியல்
ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சில மகான்களின் சமாதி அருகிலோ
அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ
நாம் செல்லும்பொழுது நமது மனதில்
ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச
உணர்சிசி அவர்களின் ஆன்மீக
எண்ணங்கள் தரும் அதிர்வுகள்
காரணமாக இருக்குமென்று
ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு
தர்ப்பணம் செய்யும்பொழுது
சந்தோஷமடையுங்கள் என்று நாம்
திரும்ப திரும்ப சொல்லும் எண்ண
அலைகள் நீரின் மூலக்கூறுகளில்
சென்றடைந்து நமது முன்னோர்களின்
எண்ண அதிர்வுகளை சென்றடைகின்றது
என்று நம்புவதற்கு இமொட்டோவின்
ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.

சிரார்த்த காரியங்கள் செவ்வனே
செய்தால் வம்ச விருத்தி அதாவது
குலம் தழைக்கும் என்று தர்ம
சாஸ்திரம் கூறுகின்றது.

சந்தோஷமடையுங்கள் என்று கூறி
தர்ப்பணம் செய்வதால் நமது
முன்னோர்கள் சந்தோஷமடைந்து
நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல்
மீண்டும் நமது குடும்பத்தில்
பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு
இடமுண்டு.

நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம்
சொல்லுகின்ற வார்த்தையினை
உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்
தான் நமது சடங்குகளில் நீர் ஒரு
முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக
கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி
போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.

இந்த ஆராய்ச்சயின் முடிவை அன்றே
நமது முனிவர்கள் தமது தவ
வலிமையினால் கண்டு தெளிந்து
நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை
கண்டு நாம் மெய்சிலிர்த்து
போகின்றோம்.☝️🙄🕉️💪🛕👌🪷👍🚩🙏🇮🇳
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 371* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*138 ' निराकुला - நிராகுலா -*

மனதில் சஞ்சலம், சந்தேகம் இருந்தால் அடைய முடியாதவள்.

மாயை தான் தடுக்கிறது.

பவித்ரமான சாதகனின் நெஞ்சுக்கு அவளைத் தெரியும்.🙏🙏🙏
ravi said…
அம்பாள் நம் மனதில் வந்து அமர்ந்துள்ளாள் என்று எப்படி தெரிந்து கொள்வது ?

🪷 முதலில் அவளை பற்றிய செய்திகளை அவளை பற்றிய விஷயங்களை பதிவுகளை படிக்க ஆசை வரும்

🪷 மனம் மிருதுவாகி பிறரை பாராட்டும் குணம் வரும்

🪷 மனதில் பொறாமை கல்லாமை அறியாமை படி படியாக குறைந்து கொண்டே வரும்

🪷 எல்லோருக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று மனம் துடிக்க ஆரம்பிக்கும்

🪷 என் வீடு என் கணவன்/ மனைவி என் பிள்ளைகள் என்ற ஒரு குறுகிய சுயநலம் மிக்க வட்டத்துக்குள் இருந்து வெளி வந்து எல்லாருக்காகவும் பிராத்தனை செய்யும் மனம் வரும்

🪷 பொன் பெண் மது போன்ற பொருள்கள் மீது இருக்கும் மாயை விலகும்

🪷 எல்லாம் அவளே எதிலும் அவளே அவள் இன்றி அணுவும் அசையாது என்ற உண்மை புரியும்

🪷 கவித்துவம் பெற்று எப்பொழுதும் அவளைப்பற்றியே சிந்தனை மனதில் சுழலும்

மொத்தத்தில் அவர்கள் சொல்வது நடக்கும் . நல்லதே நடக்கும் 👍👍👍
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 368* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*97 தேவியே ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் பார்வதியும்*

ஜீவன்முக்தி👍👍👍

கிராமாஹுர் தேவீம் த்ருஹிணக்ருஹிணீ மாகமவிதோ

ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ மத்ரிதநயாம்

துரீயா காபி த்வம் துரதிகம நிஸ்ஸீம மஹிமா

மஹாமாயா விஶ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி 97
1 – 200 of 307 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை