ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 40 பூதனை மோக்ஷம்
तदनु नन्दममन्दशुभास्पदं नृपपुरीं करदानकृते गतम्।
समवलोक्य जगाद भवत्पिता विदितकंससहायजनोद्यम: ॥१॥
தத₃நு நந்த₃மமந்த₃ஶுபா₄ஸ்பத₃ம் ந்ருபபுரீம் கரதா₃நக்ருதே க₃தம்|
ஸமவலோக்ய ஜகா₃த₃ ப₄வத்பிதா விதி₃தகம்ஸஸஹாயஜநோத்₃யம: || 1||
1. நந்தகோபன், கப்பம் கட்டுவதற்காக மதுரா நகரம் சென்றார். அசுரர்களின் முயற்சியை வசுதேவர் நந்தகோபனிடம் கூறினார்.
अयि सखे तव बालकजन्म मां सुखयतेऽद्य निजात्मजजन्मवत् ।
इति भवत्पितृतां व्रजनायके समधिरोप्य शशंस तमादरात् ॥२॥
அயி ஸகே₂ தவ பா₃லகஜந்ம மாம் ஸுக₂யதே(அ)த்₃ய நிஜாத்மஜஜந்மவத் |
இதி ப₄வத்பித்ருதாம் வ்ரஜநாயகே ஸமதி₄ரோப்ய ஶஶம்ஸ தமாத₃ராத் || 2||
2. “உனக்குப் பிள்ளை பிறந்ததைக் கேட்டு எனக்குப் பிறந்ததைப் போல மகிழ்ச்சி அடைகிறேன்” என்று வசுதேவர் அன்புடன் நந்தகோபனிடம் கூறினார்.
इह च सन्त्यनिमित्तशतानि ते कटकसीम्नि ततो लघु गम्यताम् ।
इति च तद्वचसा व्रजनायको भवदपायभिया द्रुतमाययौ ॥३॥
இஹ ச ஸந்த்யநிமித்தஶதாநி தே கடகஸீம்நி ததோ லகு₄ க₃ம்யதாம் |
இதி ச தத்₃வசஸா வ்ரஜநாயகோ ப₄வத₃பாயபி₄யா த்₃ருதமாயயௌ || 3||
3. மேலும், “சில கெட்ட சகுனங்கள் காணப்படுகிறது, ஆகையால் நீ விரைந்து கோகுலத்திற்குச் செல்வாய்” என்று கூறினார். நந்தகோபனும் உனக்கு ஆபத்து வருமோ என்று கவலை கொண்டு விரைந்து சென்றார்.
अवसरे खलु तत्र च काचन व्रजपदे मधुराकृतिरङ्गना ।
तरलषट्पदलालितकुन्तला कपटपोतक ते निकटं गता ॥४॥
அவஸரே க₂லு தத்ர ச காசந வ்ரஜபதே₃ மது₄ராக்ருதிரங்க₃நா |
தரலஷட்பத₃லாலிதகுந்தலா கபடபோதக தே நிகடம் க₃தா || 4||
4. கபடக் குழந்தை வேடம் பூண்டவனே! கோகுலத்தில், அழகிய பெண் ஒருத்தி, வண்டுகள் மொய்க்கும் கூந்தலுடன் உன் அருகே வந்தாள்.
सपदि सा हृतबालकचेतना निशिचरान्वयजा किल पूतना ।
व्रजवधूष्विह केयमिति क्षणं विमृशतीषु भवन्तमुपाददे ॥५॥
ஸபதி₃ ஸா ஹ்ருதபா₃லகசேதநா நிஶிசராந்வயஜா கில பூதநா |
வ்ரஜவதூ₄ஷ்விஹ கேயமிதி க்ஷணம் விம்ருஶதீஷு ப₄வந்தமுபாத₃தே₃ || 5||
5. எல்லாக் குழந்தைகளுடைய உள்ளத்தையும் கவரும் அவளைக் கண்டு கோபியர்கள் “இவள் யார்?” என்று யோசித்தனர். அவளும் உன்னைக் கையில் எடுத்தாள்.
ललितभावविलासहृतात्मभिर्युवतिभि: प्रतिरोद्धुमपारिता ।
स्तनमसौ भवनान्तनिषेदुषी प्रददुषी भवते कपटात्मने॥६॥
லலிதபா₄வவிலாஸஹ்ருதாத்மபி₄ர்யுவதிபி₄: ப்ரதிரோத்₃து₄மபாரிதா |
ஸ்தநமஸௌ ப₄வநாந்தநிஷேது₃ஷீ ப்ரத₃து₃ஷீ ப₄வதே கபடாத்மநே || 6||
6. தன் நடவடிக்கைகளால் அனைவரின் மனதையும் கவர்ந்தாள். வீட்டின் உள்ளே அமர்ந்து, உன்னை மார்போடு அணைத்து, உனக்குப் பாலூட்டினாள்.
समधिरुह्य तदङ्कमशङ्कितस्त्वमथ बालकलोपनरोषित: ।
महदिवाम्रफलं कुचमण्डलं प्रतिचुचूषिथ दुर्विषदूषितम् ॥७॥
ஸமதி₄ருஹ்ய தத₃ங்கமஶங்கிதஸ்த்வமத₂ பா₃லகலோபநரோஷித: |
மஹதி₃வாம்ரப₂லம் குசமண்ட₃லம் ப்ரதிசுசூஷித₂ து₃ர்விஷதூ₃ஷிதம் || 7||
7. குழந்தைகளைக் கொன்றதால் கோபமடைந்த நீ, பயமின்றி அவள் மடி மீது ஏறி விஷம் நிறைந்த அவளுடைய முலையில் வாய் வைத்து, பெரிய மாம்பழத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சத் தொடங்கினாய்.
असुभिरेव समं धयति त्वयि स्तनमसौ स्तनितोपमनिस्वना ।
निरपतद्भयदायि निजं वपु: प्रतिगता प्रविसार्य भुजावुभौ ॥८॥
அஸுபி₄ரேவ ஸமம் த₄யதி த்வயி ஸ்தநமஸௌ ஸ்தநிதோபமநிஸ்வநா |
நிரபதத்₃ப₄யதா₃யி நிஜம் வபு: ப்ரதிக₃தா ப்ரவிஸார்ய பு₄ஜாவுபௌ₄ || 8||
8. பால் சாப்பிடுவது போல அவளுடைய உயிரையும் சேர்த்துக் குடித்தாய். அவள், இடி போலக் கூச்சலிட்டுக் கொண்டு, ராக்ஷஸ உருவத்துடன் இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு கீழே விழுந்தாள்.
भयदघोषणभीषणविग्रहश्रवणदर्शनमोहितवल्लवे ।
व्रजपदे तदुर:स्थलखेलनं ननु भवन्तमगृह्णत गोपिका: ।।९॥
ப₄யத₃கோ₄ஷணபீ₄ஷணவிக்₃ரஹஶ்ரவணத₃ர்ஶநமோஹிதவல்லவே |
வ்ரஜபதே₃ தது₃ர:ஸ்த₂லகே₂லநம் நநு ப₄வந்தமக்₃ருஹ்ணத கோ₃பிகா: || 9||
9. அக்குரலைக் கேட்ட அனைவரும் நடுங்கினர். உயிரற்ற அவள் மார்பின்மீது விளையாடிக் கொண்டிருந்த உன்னைக் கோபிகைகள் வாரி எடுத்துத் தூக்கினார்கள்.
भुवनमङ्गलनामभिरेव ते युवतिभिर्बहुधा कृतरक्षण: ।
त्वमयि वातनिकेतननाथ मामगदयन् कुरु तावकसेवकम् ॥१०॥
பு₄வநமங்க₃லநாமபி₄ரேவ தே யுவதிபி₄ர்ப₃ஹுதா₄ க்ருதரக்ஷண: |
த்வமயி வாதநிகேதநநாத₂ மாமக₃த₃யந் குரு தாவகஸேவகம் || 10||
10. மங்கலங்களைக் கொடுக்கும் உன் நாமங்களைக் கொண்டே அவர்கள் உனக்கு ரட்சை செய்தார்கள். குருவாயூரப்பா! நீ என் நோய்களைப் போக்கி, உன் பக்தனாக ஏற்க வேண்டும்.



Comments
பார்க்கும் மழலை எல்லாம் தன் வயிற்றில் பூத்த குவலைகள் என்றே அந்த பெண் நினைத்தாள் ...
அங்கிங்கே கேட்கும் மழலை ஒலியில் ஓம்கார நாதம் கேட்டு மகிழ்ந்தான் தந்தை
வரும் சிவனடியாருக்கு வயிறு முட்ட அன்னம் இட்டாள் அந்த அன்னம் ....
தேடி கூட்டி வர அவனோ தேவாரம் பாடி நின்றான் ....
எவ்வளவு சிவனடியார்கள் உணவு அருந்தி இருப்பார்கள் ...
ஒருவரது ஆசிர்வாதம் கூடவா பலிக்காது என்று கொஞ்சமும் எண்ண வில்லை அந்த தம்பதிகள் ...
பலனை எதிர்பார்த்து செய்யும் தானம் அல்லவே அவர்களுடையது ...
பரமன் கரம் பிடித்தாள் உலகம் ஈன்ற உமை ....
குழந்தை பாக்கியம் அந்த தம்பதிகளுக்கு தரவேண்டி ....
பரமன் கரம் வழக்கத்திற்கு மாறாய் மிகவும் ஜில் என்று இருந்தது ...
என்ன பிரபோ ... ஏன் இந்த அச்சம் யோசனை நடுக்கம் ?
தந்து விடுவேன் வரம் அதை ... பிறகு பெற்றுக்கொள்வது சரியோ ? ...
உமைக்கு புரியவில்லை ...
ஊமையாக இருந்தாள் ஓர் நிமிடம் ...
ஈசன் நடத்தும் லீலைகள் ஈசன் இன்றி வேறு யார் அறிவார் ... ?
அன்று ஓர் சோதனை ...
வேதனை துடைக்கும் வேத நாயகன் தன் மனம் தனை கல்லாக்கிக் கொண்டான் ...
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம் அவன் ஏற்பானோ ?
நட்ட கல்லும் பேசுமோ? ...
நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
தன் மனதை கல்லாக்கி சிறுத் தொண்டர் மனம் தனை உருக வைத்தான் ஈசன்
இறை தந்தான் மழலை
சீராட்டினார்கள் தம்பதிகள் ...
சீராளன் எனும் பெயர் வைத்தே
சோதனை இரவு நேரமதில் கதவை தட்டியது ...
நாள் முழுவதும் கிடைக்காத சிவனடியார் ஒருவர் வீடு தேடி வந்தார் ...
வந்தவர் கண்டார் சீராளனை...
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் சுமந்து வந்தே நமஸ்கரித்தான் சீராளன் ..
தன்னையும் மீறி அந்த சிவனடியார் சொன்னார் *ஆயுஷ்மான் பவ !*
பசிக்கிறது வேண்டும் எனக்கு வேறு உணவு ...
காய்கறிகள் எனக்கு கசக்கும் ...
பச்சடி பாயாசங்கள் என்னை வதைக்கும் ...
வேண்டும் பிள்ளை கறி ... என்றான் பிள்ளை வரம் தந்தவன் ...
முதல் பிள்ளை கறி உங்களுக்கு முக்தி தரட்டும் ...
கண்ணீர் சிந்தாமல் ரத்தம் தரையில் படராமல் அறுத்து சமையல் செய்ய வேண்டும் ...
ஏலக்காயில் எண்ணிக்கை தெரியக்கூடாது
முந்திரியில் வறுத்த சிவப்பு குடி கொள்ள வேண்டும் ...
உப்பு சற்றே கம்மி ...
மிளகாய் தூக்கல் ...
நெய் ஓட வேண்டும் அங்கங்கே
அதன் ஓட்டத்தை முற்றிய திராட்சை தடை செய்ய வேண்டும் ...
வாயடைத்து போனார்கள் தம்பதிகள் வாய்க்குள் நம சிவாய தடை இன்றி சுழன்றது ....
சீராளன் மனம் மகிழ்ந்து தன்னை வெட்ட கெஞ்சினான் ...
தந்தையோ தாயோ தவிப்பின்றி வெட்ட முன் வந்தனர் ...
தாய் இரு பாதம் பற்ற தந்தை அறுத்தான் தன் பிள்ளை பந்தத்தை ...
குருதி விழாமல் பாத்திரங்கள் ஏந்தின ...
வெட்டும் முன் சீராளன் கன்னங்களில் முத்தமிட ஆசை இருவருக்கும் ...
எச்சில் பட்டு படைக்கும் பிரசாதம் கெட்டு விடுமே என்றே உதடுகளை வற்ற வைத்தனர் தம்பதிகள் !
செஞ்சடையினைக் காளமேகம் போன்று கருமயிர்த்திரளாக முடித்திருந்தவன்
அக்கருங்குஞ்சியிலே தும்பைப் பூக்கள் சூடியிருந்தவன்
திருச்சடையிலுள்ள இளம்பிறையைத் திருநீற்றுப் பொட்டாக நெற்றியிலிட்டு கொண்டிருந்தவன்.
செக்கர் வானத்தை அந்தி இருள் மறைப்பது போல, செம்மேனியை மூடிக் கருஞ்சட்டை அணிந்திருந்தவன்
இடக்கையிற் சூலம் ஏந்தியவன் உணவு அருந்த அமர்ந்தான் ...
தலைக் கறி முதலில் போடு என்றான் ...
தலையை மட்டும் சிதைக்காத தம்பதிகள் கறி சமைத்து இட்டனர் முதல் உணவாய் ...
சரி உன் மகனை கூப்பிடு
அவனும் என்னுடன் சேர்ந்து உணவருந்தட்டும் என்றான் பித்தன் என்றே பேர் எடுத்தவன் ....
சுவாமி அவன் உங்கள் இலையில் பதார்த்தமாக இருக்கிறான்
வருவது எங்கனம் என்றாள் தாய் ...
கூப்பிடு வருவான் என்றான் கூப்பிடும் குரலுக்கு ஓடி வருபவன்
தந்தை துக்கம் மீறி அழைத்தான் சீராளா...
வந்த சிவனடியார் உணவு அருந்த வேண்டும் ஓடி வா என்றே ...
கதவு தட்டும் சப்தம் ... மகன் நின்றிருந்தான் அழகு இன்னும் கூடியே ... ...
பிரிந்தவர் சேர அங்கே நிசப்தம் குடி கொண்டது ...
அந்த நிசப்தத்தில் மறைந்தான் சப்தம் தந்தவன்
எதை நாம் பெரிது என்று நினைத்து பாராட்டுகிறோமோ அதனிலும் பெரியதாய் அவன் தருவான் அவன் தந்ததே எல்லாம் என்றே நினைப்போர்க்கு .... 🙏
Born in the quiet cradle of the Himalayas,
You flow toward the land where Rama’s name resounds,
Rocking Ayodhya in a mother’s lullaby—
River of grace, O Maa Sarayu.
Upon your sacred banks fell Rama’s footsteps,
In your waters Sita’s devotion blossomed,
Lakshmana’s vigil turned to the living stream—
Are you not the pathway of pure bhakti?
You carry in silence the tears of sages,
The dreams of devotees are blessed by a single glance,
Bearing all with gentle strength—
A current made of compassion.
Sins dissolve within your waters,
Fears are burnt away by your waves;
Stand once upon your shore,
And the heart itself becomes Ayodhya.
Though your depths seem calm and gentle,
Your flow is rich with meaning;
Quiet in movement, yet mighty in spirit,
You rule the soul without command.
🌼 Rama’s name is your eternal sound,
Dharma your chosen direction,
Moksha your destined end—
Flow forever in our hearts,
O Maa Sarayu. 🌼
இமயத்தின் மௌன மடியில் பிறந்து,
இராம நாமம் ஒலிக்கும் திசை நோக்கி
அயோத்தியைத் தாலாட்டி ஓடும்
அருள் நதியே —
மா சரயுவே!
ராமன் காலடி பட்ட புனித கரை,
சீதையின் நெஞ்சம் துளிர்த்த நதி,
லக்ஷ்மணன் காத்த அன்பின் ஓடை,
பக்தியின் பாதை நீயல்லவா?
தவம் செய்த முனிவர் கண்ணீரையும்
தரிசனம் கண்ட பக்தர் கனவையும்
மெளனமாய் தாங்கி செல்லும்
கருணையின் ஓடமே!
உன் நீரில் சிந்திய பாவங்கள் கரைந்து,
உன் அலைகளில் பயம் கருகி,
உன் கரையில் நின்றால் கூட
உள்ளம் அயோத்தியாகும்.
ஆழமில்லை என நினைத்தாலும்
அர்த்தம் நிறைந்த ஓட்டம் உனக்கு,
அமைதியாய் ஓடினாலும்
ஆன்மாவை ஆளும் சக்தி உனக்கு.
🌼 ராம நாமம் உன் ஓசை,
தர்மமே உன் திசை,
மோக்ஷமே உன் முடிவு—
எங்கள் உள்ளங்களில் என்றும் ஓடு,
மா சரயுவே! 🌼💐
இமயத்தின் மௌன மடியில் பிறந்து,
இராம நாமம் ஒலிக்கும் திசை நோக்கி
அயோத்தியைத் தாலாட்டி ஓடும்
அருள் நதியே —
மா சரயுவே!
ராமன் காலடி பட்ட புனித கரை,
சீதையின் நெஞ்சம் துளிர்த்த நதி,
லக்ஷ்மணன் காத்த அன்பின் ஓடை,
பக்தியின் பாதை நீயல்லவா?
தவம் செய்த முனிவர் கண்ணீரையும்
தரிசனம் கண்ட பக்தர் கனவையும்
மெளனமாய் தாங்கி செல்லும்
கருணையின் ஓடமே!
உன் நீரில் சிந்திய பாவங்கள் கரைந்து,
உன் அலைகளில் பயம் கருகி,
உன் கரையில் நின்றால் கூட
உள்ளம் அயோத்தியாகும்.
ஆழமில்லை என நினைத்தாலும்
அர்த்தம் நிறைந்த ஓட்டம் உனக்கு,
அமைதியாய் ஓடினாலும்
ஆன்மாவை ஆளும் சக்தி உனக்கு.
🌼 ராம நாமம் உன் ஓசை,
தர்மமே உன் திசை,
மோக்ஷமே உன் முடிவு—
எங்கள் உள்ளங்களில் என்றும் ஓடு,
மா சரயுவே! 🌼💐
மேற்குத் தொடர்ச்சி மலை மடியில்
மெளனத் தாலாட்டில் பிறந்தவளே,
தலைக்காவேரி எனும் தாயின் கருவறையில்
தெய்வநதியாய் உருவானவளே—
மா காவேரியே, உனக்கு நமஸ்காரம்.
பாறைகளைப் பணிவுடன் தழுவி,
பசுமையைப் பால் போலப் பொழிந்து,
விதையின் கனவுக்கு உயிர் கொடுத்து
விவசாயியின் வியர்வையை துடைப்பவளே.
ஸ்ரீரங்கம் உன் மார்பில் மாலை போல,
திருச்சி உன் நெஞ்சில் தீபம் போல,
தஞ்சை உன் அடியில் தங்கம் விளைய—
சோழரின் சுவாசமாய் ஓடினவளே.
வறட்சியில் கூட வாக்கு தவறாதவள்,
வெள்ளத்தில் கூட கருணை மறவாதவள்,
கண்ணீரை கனியாக மாற்றி
கருணையை பயிராக்கும் தாயே.
பெண்மை உன் ஓட்டம்,
பொறுமை உன் கரை,
புனிதம் உன் நுரை—
பாரதத்தின் அன்னமே, மா காவேரியே!
🌼 அன்னபூரணி நீ,
அறத்தின் ஆறு நீ,
அருளின் ஓடை நீ—
என்றும் ஓடிக் கொண்டே இரு,
எங்கள் உயிரோட்டமே… 🌼
Born in the cradle of the Western Ghats,
Hummed into life by the hush of hills,
From Talakaveri, the mother’s womb,
You rise— a river, a divinity.
O Maa Kaveri, I bow to you.
You embrace the rocks with quiet grace,
Pouring green like milk upon the land,
Breathing life into a seed’s dream,
Wiping the farmer’s tired brow.
Srirangam rests like a garland on your breast,
Trichy glows like a lamp upon your heart,
Thanjavur blooms as gold at your feet—
You flow as the very breath of the Cholas.
Even in drought, you never break your promise,
Even in floods, compassion leaves you not;
You turn tears into harvest,
And mercy into grain.
Womanhood is your flow,
Patience your banks,
Purity your foam—
Mother of the land, Maa Kaveri!
🌼 You are Annapurna,
The river of righteousness,
The stream of grace—
Flow on forever,
Pulse of our lives. 🌼
நெருப்பில் ஒளியும் நீரோ நீ ?
நித்தம் தவம் செய்யும் உமையோ நீ ...
நேரில் வரும் ரதமோ நீ
நெஞ்சில் ஒளி வீசும் கதிரோ நீ
நேற்று இன்று நாளை என்றும் முடிவில்லா முதலோ நீ
முத்தமிழில் கவி பாடும் கடல் முத்தோ நீ ... மூகர் வழி வந்த முக்கனி சுவையோ நீ
யார் என்றே அறியேன் ... யாதும் அறிய வைத்தே ஆதவனாய் மிளிர செய்தாய் ...
நடமாடும் தெய்வம் நீ ..
நடப்பதெல்லாம் உன் செயல் என்றால் தர்மம் ஓங்கச் செய்வாய் ...
தரணி தனில் தெய்வம் தனை தவழ வைப்பாய் ..
தீபம் ஏற்றி இருள் அகலச் செய்வாய் ...
தீவினைகள் எல்லாம் கல்லறையில் உறங்க செய்வாய் !!!
காஞ்சி மாவட்டம் திருப்போரூர் செம்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபாலா ஒளஷத லலிதா திரிபுர சுந்தரி கோவில். இந்த கோவிலின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருபோரூர் (OMR) - செங்கல்பட்டு சாலையில் உள்ளது வட திருவானைக்கா என அழைக்கப்படும் செம்பாக்கம். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட தெய்வச்சிலைகள் வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது பல வருடங்களுக்குபிறகு காஞ்சி மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் செம்பாக்கத்தில் (ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஆலயம் அருகில்) ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தான ஆலயத்தில் 9 அடி உயரத்தில் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்பிகையை வணங்கினால் நோயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை
இந்த திருமேனி பல மூலிகைகள் மரப்பிசின், மரப்பட்டைகள் மற்றும் வேர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கசாய கலவைக் கொண்டும் (இரசாயனப் பொருட்கள் ஏதும் இல்லாமல்) எண்ணற்ற பாணலிங்கங்கள், சாளகிராமங்கள், வலம்புரி சங்குகள் நவரத்தினங்கள் நமது உடம்பிலுள்ள நாடிநரம்புகளை குறிக்கும் விதமாக வெள்ளிக்கம்பிகள் முதலியன உச்சந்தலை முதல் பாதம் வரை பதிக்கப்பட்டும் வளர்பிறை காலங்களில் மருந்து சாற்றப்பட்டு பலஆயிரமாயிரம் முறை மூலமந்திர ஜபம் செய்து உருவேற்றி சுமார் ஏழரை ஆண்டுகள் உழைப்பில் லலிதாம்பிகை திருமேனி வடிவமைக்கப்பட்டுள்ளது. தாந்திரீக முறையில் இந்த அம்பிகை மந்திர, யந்திர, தந்திர, அஸ்திர, ஸஸ்த்திரம என்ற முறையில் அமையப்பெற்றவளாவாள்.
திதி நித்யா தேவதைகளை படிகளாக கொண்டு ஆலயத்தின் மேல்தள மாடியில் (கட்டுமலை கோவில்) கருவறையில் பிரதிஷ்டையாகியுள்ளது. நின்ற கோலத்தில் அங்குச, பாசம் இரண்டும் பிரயோகத்தில் இருக்க, கீழ்க்கையில் மலர் (புஷ்பபாணம்) மற்றும் கரும்பும் ஏந்தி அம்பிகை மகா சௌத்தரய ரூபத்துடன் அருள்பாலிக்கின்றாள்.
மூலிகை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் அஷ்டகந்ததால் உருவாக்கபட்ட லேபனம் (தைலம்) குறிப்பிட்ட சில காலங்களில் பூசப்படும் என்றும் மாதம் ஒருமுறை மட்டும் பிரத்யேகமாக தறியில் நெய்யப்பட்ட 51 முழுபுடவை அணிவிக்கப்படும் என்று பீடத்தின் ஸ்தாபகர் தெரிவிக்கின்றார். தினசரி பாதபூஜை உண்டு.
தாய் மருந்து உண்பது போல கலிதோஷத்தை நீக்கி செளபாக்யம், ஆனந்தம், ஆரோக்யம் தந்திட நம் நலன் பொருட்டு மகாசக்தி சித்த மருத்துவச்சியாக அனுக்கிரகம் புரிகின்றாள். நோயற்ற வாழ்வு பெறுவதே இந்த அம்பிகையின் தரிசன பலனாகக் கூறப்படுகிறது. சிதம்பரத்தை நடராஜ சபை என்றும் ஸ்ரீ ரங்கத்தை அரங்கம் என்றும் அழைப்பதுபோல் இங்கு அம்பிகை கோயில் கொண்டிருக்கும் ஆலயம் ஸ்ரீசக்ரசபை என்று போற்றப்படுகிறது. ஏனென்றால் இங்கு அம்பிகை வாராகி, மாதங்கி பரிவாரங்களுடன் தர்பாரில் கோலோச்சி பரபாலனம் செய்வதாக ஐதீகம். ஹரி, ஹரன், அம்பிகையை வழிபட்ட பலனைத்தரும் மூம்மூர்த்தி சொரூபிணி.
ஒளஷத லலிதாவிற்கு நந்தவன புஷ்பங்கள் மட்டுமே சாற்றப்படுகிறது. பச்சை கற்பூர ஆரத்தி மட்டுமே. திதி நித்யா படிவழியே ஏறிச்சென்று அம்பிகையை தரிசித்துவிட்டு அதே படி வழியே இறங்காமல், எதிர்திசைபடி திதி நித்யா படிவழியே இறங்கவேண்டும். பெளர்ணமி திதியில் மட்டுமே சர்வ அலங்கார விசேஷ 27 வகை மகா தீபாராதனையை தரிசிக்க முடியும், மூலிகை பிரசாதம் வழங்கப்படும்
ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி
கீழ்த்தளத்தில் குரு மண்டல அசாத்ய ஸ்ரீசக்ர பிரதிஷ்டையுடன் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை தரிசிக்கலாம். ஸ்ரீபாலா - அவள் நல்லவர்க்கு நடுவே விளையாடுவாள் வல்லவர்கெல்லாம் வல்லலளாய் ஆட்சி செய்வாள், அவளை விட அரியதான சூட்சமம் ஏது? என்கிறார் சித்தர் கருவூரார்.
சித்தமெல்லாம் சிவ மயமாய் திளைத்திருந்த ஆதி சக்தியின் அருளும் பூரணமாக தேவை என்பதை சித்தர்கள் உணர்ந்திருந்தனர். அத்தகையை ஆதிசக்தியின் அம்சம் தான் ஸ்ரீ பாலா தெய்வம் அவளையே போற்றி அகத்தியர், போகர், திருமூலர்,கெங்கனார், கரூரார் போன்ற சித்தர்கள் வணங்கி பூஜித்தனர். இந்த அம்சம் ஒரு சின்னஞ்சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சரியமான ஒன்று. நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று. தமிழில் வாலை வாலாம்பிகை என்றும் சித்தாந்தம் வணங்குகிறது.
வருடம்தோறும் 4 நவராத்திரி விழாக்கள் நடைபெறும் ஆலயம்.
* ஆடி : மகா வாராகி ( ஆஷாட) நவராத்திரி உற்சவம் (ஆடி அமாவாசை திதி முதல் தசமி திதி) வரை
* புரட்டாசி : ஸ்ரீ சாரதா நவராத்திரி உற்சவம் (புரட்டாசி அமாவாசை திதி முதல் தசமி திதி வரை) விஜயதசமி அன்று காலை ஏககால இலட்சாரச்சனை
* தை : ஸ்ரீ இராஜ மாதங்கி நவராத்திரி உற்சவம் (தை அமாவாசை முதல் தசமி திதி வரை)
* பங்குனி : ஸ்ரீ லலிதா மஹா (வசந்த) நவராத்திரி மகோற்சவம்.
ஸ்ரீ வித்யா நவாரண மகாயாகம், திருக்கல்யாணம், ஸ்ரீ லலிதா பட்டாபிஷேகம், பண்டாசூரசம்ஹாரம், அற்புத திருமஞ்சனம், புஷ்பாஞ்சலி.
* மஹா சிவராத்திரி மகோற்சவம் ( Massi_4 Kala SiavaLinga Pooja)
பிரதி மாதம் பௌர்ணமியில், மாலை மகா அபிஷேக சர்வ அலங்காரம், பாலா உற்சவர் ஊஞ்சல் சேவை, நவஆவரண பூஜை, மூலிகை அம்பாளுக்கு 27 ஆர்த்தி திபாராதனை.
காலை 8 மணி முதல் 1 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 வரை.
அமைவிடம்:
திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது செம்பாக்கம்.
ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீசக்ரராஜசபை - ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயம்,
திருப்போரூர் (OMR)- செங்கல்பட்டு சாலை,
செம்பாக்கம், திருப்போரூர் தாலுகா
காஞ்சிபுரம் மாவட்டம்-603 108.
தொடர்புக்கு: 9789921151 , 9445359228.
உதிக்கும் கதிரவன் சுட்டெரிக்கும் தீச் சுடர் உவமை இல்லா தீபங்கள்
மண்ணுக்குள் சிரிக்கும் வையிரங்கள் உன்னிடம் தானே ஒளி பெற்றன ...
ஓடும் நதிகள் போல் இரைச்சல் இடும் மானிடம் உன்னிடம் அன்றோ சரண் புகும்
நடமாடி நடமாடி மண்ணுக்கு புனிதம் தந்தாய் ...
தேனிலும் இனிய குரல் தந்தே வாணீயின் கச்சபியை மூட வைத்தாய் ...
காமாக்ஷியை கண் எதிரே காண்பித்தாய் ..
கருணைக்கு ஓர் உருவம் தந்தே ஈசனுக்கே பாடம் சொன்ன சுவாமி நாதனுமாய் ஆனாய் ...
பூத உடல் மறைந்தும் உயிர் வாழும் அதிசயமே... !!
பலமுறை அழைக்கின்றோம் ...
மீண்டும் ஒரு முறை இம்மண்ணில் பிறவாயோ ...
கள் உண்ணும் கயவர்கள் கதை முடிப்பாயோ !!💐💐
Today’s Satsang was truly well received.
Everyone chanted the Vishnu Sahasranamam straight from their hearts, filled with devotion and bhakthi bhava.
When both of you asked me to lead the chanting this time, I could literally feel a chill run down my spine.
I kept wondering how I could ever be a worthy substitute for two such great veterans and revered chanters of NCP.
But with His divine grace and your blessings, I managed to conduct the session reasonably well.
Wishing you and your family a very Happy Makara Sankranti 🎊🙏
thanks a tonne for leading it so well 🙏🏼
அக்னியின் நாக்கு பட்டரை தீண்ட துடித்த்துக்
கொண்டிருந்தது... 🔥
வானம் காமாக்ஷியின் கரும் கூந்தல் போல்
அடர்த்தியாக இருள் சூழ்ந்து இருந்தது ...
எங்கும் ஓர் பதட்டம் ... பரிதவிப்பு ...
சரபோஜி ராஜா வின் முகத்தில் ஓர் கேலி புன்னகை ...
இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த பைத்தியக்காரனின் வாழ்வு தீக்கு இரையாகி விடும் ..
இறை இறை என்று பிதற்றியவன் தீக்கு இரையாகப்
போகிறான்....
நாம் பட்டரின் இடத்தில் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்போம் ?
😢அம்மா ... நீ சொல்லித்தானே திதி இன்று பௌர்ணமி என்றேன் ...
என்னை பலியாக்கி விட்டாயே நீ ஓர் தாயா ?
😢78 பாடல்கள் முத்து முத்தாய் பாடினேன் ...
முக்கண்ணி உனக்கு மூன்று கண்களும் குருடோ ?
என்று இப்படியெல்லாம் பிதற்றி இருப்போம் ..
பட்டர் மேலும் மேலும் சொல் அலங்காரத்தில் அபிராமியை வர்ணித்துக் கொண்டிருந்தார் ...
எரியும் நெருப்புக்குள் கை விட்டு அபிராமியின் பாதங்களை தீண்டும் சுவையை அனுபவித்துக் கொண்டிருந்தார் ...
கீழே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீ கொஞ்சும் நிலவாய் அவருக்குத் தெரிந்தது ...
தீ எழுப்பிய புகை மண்டலம் நிலவை தாங்கி வரும் மேகங்கள் எனும் பணிப்பெண்களாய் தெரிந்தது ...
ஓடி வந்து விழும் சொற்கள் பாரிஜாத மலர்களாய் தெரிந்தது ...
இதோ நெருப்பு, யார் கொடுத்த தயிரமோ பட்டரை தொட்டு விட அருகில் வந்து நின்றது ...
வானில் வெள்ளை நிற ஹம்சங்கள் தேரில் பூட்டப்பட்டு வந்து கொண்டிருந்தன ..
அதில் அமர்ந்து பவனி வருவது யார் தெரியுமா ?
அபிராமியின் அழகிய காதணிகள் ...
*அம்மா* கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்...
எனக்கு கிடைத்த இந்த பாக்கியம் இங்கே இருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ..
உன் அஷ்டமி சந்திர திருமுகத்தை எல்லோருக்கும் காட்டு அம்மா 🌝
விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே!!
வானில் வான வேடிக்கை ...
மின்னல் போன்ற மேனி
இடி போல் சிரித்தது ...
அவள் திரு முகத்தின் நிழல் வானில் நிலவாய் ஜொலித்தது ...
ஒருவரின் உண்மை பக்தியால் பலர் பாக்கியம் பெற்றனர் ...
அந்தாதி அங்கே துள்ளி விளையாடியது நிலவை கண்ட குவளைப் பூக்களாய் ... 💐💐💐💐💐
(உலக நதிகளுக்கான பிரார்த்தனை — )
பூமியின் நதிகளே, உமக்கு நமஸ்காரம்,
உயிரின் ஓசையாய் ஓடும் தாய்மார்களே,
மலையிலும் மேகத்திலும் பிறந்து
மண்ணுக்கு உயிர் அளிப்பவளே!
வயல்கள் வளம் பெற, வனங்கள் சிரிக்க,
மனிதன் வாழ வழி காட்டும் தாய்மார்களே,
துயரங்களை கழுவி
நம்பிக்கையை விதைப்பவளே!
பனிமலையிலிருந்து பெருங்கடல்வரை
இடைநிறுத்தமின்றி பயணிக்கும்
தியாகத்தின் வடிவமே —
நீங்களே கருணையின் முகம்!
உங்கள் நீர் தூய்மையாக இருக்கட்டும்,
உங்கள் வழி சுதந்திரமாக ஓடட்டும்,
உங்கள் அருள் உலகத்தை காக்கட்டும்!
🙏 அனைத்துத் தாய்நதிகளுக்கும் நமஸ்காரம்
🙏 உயிர்தரும் தேவியர்க்கு வணக்கம்
வேதத் தீயிலிருந்து தோன்றிய தாயே,
தவத்தின் வடிவாய் விளங்கும் வேதவதியே,
அமைதியான ஓட்டத்தில் ஞானம் பொழியும்,
உமக்கு என் பணிவான நமஸ்காரம்.
உமது கரையில் மலர்ந்தது தவம்,
சீதையின் உறுதி ஒளி வீசியது,
தர்மத்தின் ஒலியை காலங்கள் முழுதும்,
உமது நீர் உலகிற்கு கூறியது.
வடிவில் எளிமை, அர்த்தத்தில் பேரம்சம்,
சத்தமின்றி வலிமை போதிப்பவளே,
மந்திரம் போல் மென்மையாக,
மனதை வடிக்கும் அன்னை நீயே.
காடுகளும் கற்களும் கடந்து ஓடி,
முனிவர், ஞானி பிரார்த்தனைகள் சுமந்து,
காலம் உமது ஓட்டத்தை மறைத்தாலும்,
உமது புனிதம் என்றும் உலராது.
துங்கபத்ரையுடன் சங்கமிக்கும் போது,
ஹம்பியின் புனித மண்ணை அலங்கரித்து,
அரசரும் சாதகரும் பணிந்தனர்,
உமது நித்ய ஓட்டத்தின் முன்.
துறவின் நதியே, தூய்மையின் கண்ணாடியே,
அகந்தை, பயம், கலக்கம் அகற்றுவாயாக,
பொறுமையும் பணிவும் கற்றுத் தரும்,
உமது பாதையில் எம்மை நடத்துவாயாக.
எங்கள் மனம் உமது நீரைப் போல் தெளிவாக,
எங்கள் வாழ்க்கை
உமது தவம் போல் ஒழுங்காக,
வேதவதி அன்னையே
கருணை
மிகுந்தவளே,
முயற்சியிலிருந்து மோக்ஷம் வரை வழிகாட்டுவாயாக.
மீண்டும் மீண்டும் உமக்கு நமஸ்காரம்,
வேத நதியே, மௌன குருவே, தாயே,
எங்கள் நினைவில் என்றும் வாழ்வாயாக,
நம்பிக்கையாக, ஓட்டமாக, அருளாக.
இன்ஸ்டன்ட் தயாரிப்புகள் கிடைக்கிற மாதிரி
நினைத்த உடன் கவிதை மழை பொழிய...
உன்னால் மட்டுமே முடியும் தம்பி...
உனக்குள் ஒளிந்திருக்கிறது
நிறைய கவிகள்( கவின்) மழைகள்...
வாழ்க!!!! வளர்க!!! வாழ்த்துக்கள்!!!
*அன்னை பெண்ணையாறு –* 🌊
நந்தி மலையின் நெற்றியில்
நீ பிறந்த முதல் நிமிடம்,
மண்ணுக்கே தாகம் இருந்தது
உன் வருகையை அறிந்தபின்.
அருணாசலன் பாதம் தொட்டு,
அவன் மௌனத்தைச் சுமந்து,
வயல், வீடு, உயிர் அனைத்திலும்
அருளாய் நீ பயணிக்கின்றாய்.
வளைந்து செல்லக் கற்றுத் தந்தாய்,
விட்டுக் கொடுக்கக் கற்றுத் தந்தாய்,
இழந்தபோதும் இழக்காத
வாழ்க்கை தத்துவம் – நீ தானே!
கடலில் கலந்தாலும்,
உன் தன்மை மாறாத
தாயே
பெண்ணையாறே,
நீயே நம் வழிகாட்டி. 🙏
🌊 *Śrī Śarāvatī Nadī* 🌊
Salutations to Śarāvatī, forest-crowned Mother,
Born in the Ghats where silence is prayer.
From hidden springs to the ocean’s vast altar,
You carry the earth’s breath, gentle and fair.
Through emerald canopies your footsteps whisper,
Awakening roots, moss, and ancient stone.
You teach the seeker the art of patience,
Flowing unmapped, yet perfectly known.
O River of rhythm, of measured grace,
You gather the rain in your cupped green hands.
In your clear mirror the hills see their face,
Time kneels softly where your stillness stands.
Then sudden as thunder, as sacred decree,
You leap as Jog in white-roaring might.
Mist becomes a mantra, roar turns to OM,
As the sky bows low to your plunging light.
Strength without anger, power without pride,
You fall only to rise in deeper calm.
Teaching the soul that surrender is stride,
And breaking is part of the healing psalm.
O Nourisher of forests, fields, and flame,
Guardians of beasts and birds unseen,
You weave one life through many a name,
Binding the wild and the human between.
Invisible temples line your course,
Where wind is priest and leaves are bell.
Each ripple chants of a timeless force,
Where Śiva’s pulse and Nature dwell.
Mother Śarāvatī, cleanse our sight,
Wash away haste, awaken care.
Let us flow true, like you, in light—
Strong in depth, and pure in prayer.
— Śarāvatī Nadīyai Namaḥ
🌸 *ஸ்ரீ ஸராவதி நதி*🪷
1
மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் பிறந்தவளே,
காடுகளின் மௌனமே உன் முதல் மந்திரம்.
மறை ஊற்றிலிருந்து மகாசமுத்திரம் வரை,
பூமியின் மூச்சைச் சுமக்கும் தாயே வணக்கம்.
பச்சை வனங்களின் இடையே மென்மையாய் பாய்ந்து,
வேர், பாசி, பாறைகளை எழுப்பும் நீ.
வரைபடமின்றி பயணம் செய்தாலும்,
அறிவால் அறியப்படும் நதி நீ.
தாளமும் அமைதியும் ஒருங்கே கொண்டவளே,
மழையைத் தழுவும் கருணைக் கரங்கள் உனது.
உன் தெளிந்த முகத்தில் மலைகள் தங்களைப் பார்க்கும்,
காலமே உன் கரையில் மௌனமாய் நிற்கும்.
அதோ— ஜோகமாய் கர்ஜித்து குதிக்கும் போது,
வெண்மைப் பேரொலி விண்ணைத் தொட்டிடும்.
மூடுபனி மந்திரமாய் மாறி,
ஓம் எனும் ஓசை வானில் ஒலித்திடும்.
கோபமில்லா வலிமை,
அகந்தையில்லா ஆற்றல்,
வீழ்ச்சியிலும் உயர்வு உன் பாடம்.
விடுதலையே முன்னேற்றம் எனக் காட்டி,
உடைதலும் சிகிச்சை எனும் வேதம்.
காடு, வயல், உயிர் அனைத்தையும் போஷிக்கும்,
பறவையும் மிருகமும் உன் பாதுகாப்பில்.
பல பெயர்களில் ஓடும் ஒரே உயிர்,
இயற்கையும் மனிதனும் உன் சங்கிலியில்.
உன் பாதையில் மறை கோவில்கள் பல,
காற்றே பூசாரி, இலைகளே மணி.
ஒவ்வோர் அலைக்கும் நித்திய தாளம்,
சிவ ஸ்பந்தனமும் இயற்கையும் அணி.
தாய் ஸராவதி,
எங்கள் பார்வையைத் தூய்மைப்படுத்து,
அவசரத்தை கழுவி கருணை அளி.
உன்னைப் போல நாங்களும் ஓட அருள் புரி—
ஆழத்தில் வலிமை, பிரார்த்தனையில் ஒளி.
— ஸராவதி நதியே நம:
மகர வார் குழை மேல் அடர்ந்து, குமிழ் மீதினில் மறைந்து, வாளைத் துறந்து, மைக் கயலை வென்ற நின் செங்கமல விழி அருள் வரம் பெற்ற பேர்கள் அன்றோ- செகம் முழுதும் ஒற்றைத் தனிக் குடை கவித்து, மேல் சிங்க ஆதனத்தில் உற்றுச், செங்கோலும், மனு நீதி முறைமையும் பெற்று, மிகு திகிரி உலகு ஆண்டு, பின்பு புகர் முகத்து ஐராவதப் பாகர் ஆகி, நிறை புத்தேளிர் வந்து போற்றிப் போக தேவேந்திரன் எனப் புகழ விண்ணில் புலோமசையொடும் சுகிப்பர்; அகர முதல் ஆகி வளர் ஆனந்த ரூபியே! ஆதி கடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி! அபிராமியே !
*பொருள்*
முன் பதிகத்தில் சொன்னது போல் மாதர் மயக்கத்தினை தவிர்த்து, அவர்களின் கண்களில் கட்டுப் பட்டு இல்லாமல், அருள் பொழியும் அபிராமி அன்னையின் விழியின் அருட் பார்வையில் தோய்ந்து நிற்பதே நமக்கு நன்மை தருவதாகும்.
அவ்வாறு அருள் பார்வையில் அகப்பட்டவன் இம்மண்ணில் இந்த புவி முழுவதையும் தன் ஒற்றைக் குடையின் கீழ் ஆள்பவனாக, பேரரசனாக, சிங்காசனத்தில் அமர்ந்து நீதி செலுத்துபவனாக, கீர்த்தியுடன் வாழ்வான்.
பின்னர் விண்ணுலகில் தேவர் கோனாக வெள்ளை யானை ஆகிய ஐராவதத்தின் மீது ஊர்வலம் வருவான்.தேவர்களால் துதிக்கப் படுவான். மேலுலகின் எல்லா வளங்களையும் பெறுவான்.
அ முதல் க்ஷ வரையிலான 51 அக்ஷரங்களின் ( மாத்ருகைகள்) முழு உருவமான, முடிவில்லாத ஆனந்த வடிவினளே! ஆதி கடவூரின் தலைவியே! அமுதீசரின் பிரிய நாயகியே, அபிராமி அன்னையே, எங்களுக்கு அருள்வாய்.
[26/01, 17:57] +91 94443 87748: *அபிராமி அன்னை பதிகம் - 7*
நன்று என்று, தீது என்று நவிலும் இவ் இரண்டனுள், நன்றதே உலகில் உள்ளோர் நாடுவார் ஆதலின், நானுமே அவ்விதம் நாடினேன்; நாடினாலும் இன்று என்று சொல்லாமல், நினது திரு உள்ளம் அது இரங்கி, அருள் செய்குவாயேல் ஏழையேன் உய்குவேன், மெய்யான மொழி இ•து; உன் இதயம் அறியாதது உண்டோ? குன்றம் எல்லாம் உறைந்து, என்றும் அன்பர்க்கு அருள் குமார தேவனை அளித்த குமரி! மரகத வருணி! விமலி! பைரவி! கருணை குலவு கிரி ராச புத்ரி! மன்றல் மிகு நந்தன வனங்கள், சிறை அளி முரல, வளர் திருக் கடவூரில் வாழ்வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!
*பொருள்*
அபிராமி பட்டர் அம்பாளின் அருள் பார்வை ஒன்றே நாம் உய்வதற்கான வழி என்று கூறுகின்றார். உலகில் உள்ளவர்கள் இது நல்லது இது தீயது என்று அவர்களே பகுத்து வைத்து உள்ளனர். இதுவே நடைமுறை. தானும் இது போன்றே நடந்து வந்ததாகவும், ஆனால் அது சரிவரவில்லை. எனவே, உன் திருவடிகளை சரணடைந்தேன். என்று நீ இறங்கி எனக்கு அருள் செய்வாயோ, அன்று தான் நான் முழுமை அடைவேன் என்பது எனக்கு சற்றும் சந்தேகம் இல்லாமல் தெரிந்தது. இது பொய்யல்ல, என்னுடைய உண்மையான இதய தாகம் என்று நீ அறிவாய். எனவே என்னை இன்றே, இப்போதே, ஆட்கொள்ள வேண்டும், என்று பிரார்த்திக்கிறார்.
அன்னை, குமாரதேவனை ஈன்றவள். குமரனோ குன்றுதோறும் விளையாடும் வள்ளி மணாளன். தன் அடியவர்களுக்கு என்றும் அருள் புரிபவன். அவர்கள் மனக்கோயிலில் குடி இருப்பவன். அப்படிப்பட்ட கருணை தெய்வத்தை உலகுக்கு அளித்த பின்னும் குமரி, அழியாத கன்னி என்று பேசப்படுபவள். மரகத பச்சை நிறத்தவள். விமலை, பைரவி,கருணை நிறைந்த மலைஅரசன் மகள்.
வளமெல்லாம் நிறைந்த திருக்கடவூரில் நந்தவனப் பூக்களால் நறுமணம் சூழ்ந்து உள்ளது. அம்மலர்களின் வாசத்தால் கவரப்பட்டு அவைகளைச் சுற்றும் வண்டுகளின் ரீங்காரம் எங்கும் ஒலிக்கிறது. தாயே அபிராமி, எம்மை ஆதரிப்பாய்.
மறி கடல்கள் ஏழையும், திகிரி இரு நான்கையும், மாதிரக் கரி எட்டையும், மா நாகம் ஆனதையும், மா மேரு என்பதையும், மா கூர்மம் ஆனதையும், ஓர் பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈர் ஏழையும், புத்தேளிர் கூட்டத்தையும், பூமகளையும், திகிரி மாயவனையும், அரையில் புலி ஆடை உடையானையும், முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப், பழைமை முறைமை தெரியாத நின்னை-மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல் மொழிகின்றது ஏது சொல்வாய்?அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே! ஆதி கடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே!
*பொருள்*
அன்னை அன்று இன்று என்று என்பதில்லாத அனாதி சக்தி. அவள் பிறப்பு இறப்பு இல்லாதவள்.என்றும் எங்கேயும் எந்தத் தருணத்திலும் இருப்பவள். அழிவற்றவள். என்றும் இளமையானவள்.
அவள் திறம் தான் என்னே. சப்த சமுத்ரங்களையும் ( ஏழு கடல்கள்)
எட்டு திசைகளையும், இந்தப் புவனத்தை தாங்கி நிற்கும் அஷ்ட கஜங்களையும் (எட்டு யானைகள்) , கடலில் மூழ்கிய உலகத்தை மீட்ட கூர்மத்தையும் ( ஆமை ) ஆதிசேஷன் என்ற ஈரேழு உலகினையும் தாங்கி நிற்கும் பாம்பையும், விண்ணவர்கள் மற்றும் பூமியில் உள்ளோர் கூட்டத்தையும், அவளே படைத்தவள். வெண்தாமரையில் விளங்கும் கலைமகளையும், திருமகள் மணாளன் நாராயணனையும், இடுப்பில் புலித்தோல் உடுத்த சிவபிரானையும், மறுபடியும் மறுபடியும் ( திரும்பத் திரும்ப) அவள் பெற்று எடுக்கிறாள்.
இவ்வாறு இந்த புவனங்கள் அனைத்தையும் அவற்றில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் படைத்தும் காத்தும் அழித்தும் இடைவிடாது செய்துவரும் அவளது அநாதியான, என்று பிறந்தாள் என்ற தன்மையை அறிய முடியாத, இந்த உலகத்தவர், அவளை வாலை, குமரி, நித்யகன்னி என்று கூறுவது நகைப்புக்கு இடமாக உள்ளது. இது வெறும் பிதற்றல் அன்றோ.
திருக்கடவூரில் அருளாட்சி நடாத்தும் அபிராமி தாயே சரணம்.அங்குள்ள அறிஞர் மனக்கடல்களின் ஆனந்த அலைகளாய் இருப்பவளே. என் அன்னை அபிராமியே, நின் தாள் போற்றுகிறேன்.
*பாரதப்புழா (நிலா) –*
மேற்கு தொடர்ச்சி மலையின்
மௌன ஜபமாய் பிறந்து,
நிலா எனும் பெயரில்
நினைவுகளாய் நீ ஓடுகின்றாய்…
வேத மந்திரங்களின்
ஒலியைத் தாங்கி,
மாமாங்கத்தின்
முழங்கலைச் சுமந்து,
திருநாவாயில்
நித்ய பூஜையாய் நின்றாய்.
அக்ரஹார வீதிகளில்
ஞானம் மலர்ந்தது,
உன் கரையில்
கலைக்கும் கவிதைக்கும்
மூச்சு கிடைத்தது.
பனிமூட்டிய காலைகளில்
ஆலய மணி ஒலிகள்
உன் மார்பில்
அலைகளாய் விரிகின்றன.
இன்றோ—
உன் அகலம் குறைந்தாலும்,
உன் அர்த்தம் குறையவில்லை;
நீர் சுருங்கினாலும்,
நினைவு சுருங்காது.
ஓடு நிலா…
கேரளத்தின் ஆன்மாவை
கடலிடம் சேர்க்க,
ஒவ்வொரு மண்துகளிலும்
ஒரு கவிதையை விட்டுச் செல். 🌿
*கோசி* – *ஹிமாலயத்தின் புனித நதி*
பனிமுடி சூடிய இமயத் தாயின் மடியில்
பிறந்தவளே கோசி தாயே,
தவம் செய்த முனிவரின் மூச்சாய்,
தெய்வ அருளின் ஓசையாய் பாய்கிறாய்.
கைலாச வாசனையுடன் கிளம்பி,
சிவன் திருநோக்கில் திளைத்து,
பாறைகளைத் தாண்டி,
பக்தியின் வேகமாய் இறங்குகிறாய்.
கருணையும் கோபமும் ஒன்றாய் கலந்து,
உலகத்துக்கு நீதி போதிக்கிறாய்,
வாழ்வை அளிக்கும் தாயாய் நீ,
அகந்தையை அடக்கும் சக்தியுமாய்.
உன் நீர் தொடும் மண்ணில்
பயிர்கள் புனிதமாய் முளைக்க,
வேதனைக்கும் வளத்துக்கும்
ஒரே தெய்வம் காரணம் என உணர்த்துகிறாய்.
அம்மையே கோசி, எம் பிரார்த்தனை ஏற்க,
மன மாசுகளை கழுவி விடு,
உன் புனிதப் பெருக்கில் எம்மை இணைத்து,
மூலத்தினை நோக்கி அழைத்து செல்.
🙏
அன்னையின் பால் உண்ட மணத்தில் உழல்பவன்
நிறை கண்ட ஈசனின் மகனாம்..
குறை நிறை உண்டு என்னிடம் என்றே என் சிரம் தரை சாய வருகின்றான் ..
போய் சொல் பறை தருவேன் அவனுக்கே வரம் கோடி உண்டு என்னிடம் ...
வயதாகவில்லை அவனுக்கு ...
வாலிபம் தனை கபளீகரம் செய்து விடுவேன் ஓர் நொடியில்
கொக்கரித்தான் சூரன் சேவலாக🐓
சொக்கனின் மகன் அவன் ...
அழகுக்கு ஒப்பில்லா இறைவன் அவன் ...
அவன் பிறக்கும் முன்னமே சூரன் அழிந்தான் .....
உயிர் இல்லா உடம்பில் வேல் வீச்சி என்ன பயன் ?
புன்னகை பொன் நகை போல் ஜொலிக்க ஞானம் மட்டுமே என்னிடம் உண்டு ..
மோகம் இல்லை மூர்க்கம் இல்லை ...
சிவ பக்தன் நீ ...
தந்தேன் உனக்கே சிவஸாயுஜ்யம் என்றான் முருகன் ..
ஹங்காரம் அழிய ஆணவம் ஒழிய மமதை மடிய
வேத மந்திரமானான் சூரன் மயூரம் வடிவெடுத்தே !!🦚
From Vindhya’s quiet heart she slips,
Vetravatī—soft as a whispered hymn.
Stone remembers her silver steps,
where Chandelas carved prayer into rock.
She cradled temples in her bend,
washed the feet of time-worn kings,
Saw bells tremble in morning light
and lotuses open to forgotten names.
Through Orchha’s grace she lingers still,
A veena-string of water and wind,
Singing of vows, of chisels and faith,
of kingdoms bowed to a flowing truth.
O Betwa, mother of measured strength,
not thunder, but an enduring calm—
You teach the land how to remain,
and history how to breathe. 🌿
ஜெய ஜெய கோமதி, கருணை தாயே,
துவாரகை நோக்கி ஓடும் நதியே.
ச்யாமன் திருவடியில் உருகும் நீர்,
உலகப் பாவம் கழுவும் தீர்த் தண்ணீர்.
கோவிந்தா! மாதவா! அலை அலற,
நாம நாதம் நரம்பில் நிறைய நிறைய
சங்கு ஒலியில் ஆகாயம் விழிக்க,
அஹங்காரம் கரைந்து சிதற.
ஓ தாய் நதியே, சரணாகதி,
உன் ஸ்பரிசம் போதும் —
கர்ம நதி.
துவாரகை மண்ணில் கிருஷ்ணன் நிற்க,
உன் அருளால் முக்தி மலர்க.
🙏🦚
விந்திய மலை மடியில் பிறந்து,
அமைதியைச் சுவாசித்தே பயணிக்கும் நீ—
காலம் செதுக்கிய பள்ளத்தாக்குகளில்
தூய்மையின் பாடல் பாடும் நதி.
நகரங்களின் தாகத்தால்
களங்கம் பெறாத உன் ஓட்டம்,
பண்டைய ஒழுக்கத்தை
இன்றும் நினைவூட்டும் புனிதம்.
உன் கரையில் காற்றே மௌனம் ஆகி,
கரியல், டால்பின் உன் தாளத்தில் நடனமாட,
சூரியன் மென்மையாக
உன் மார்பில் சாய்கிறான்.
ஓ சம்பலே,
கடினமும் அமைதியும் கலந்த முனிவன் போல,
குரல் உயர்த்தாமல்
யமுனையை அணைக்கிறாய்.
அதிகமல்ல—ஆழமே,
ஆர்ப்பாட்டமல்ல—அர்த்தமே
என்று சொல்லித் தரும்
உன் சங்கமம்,
பூமிக்கு மீண்டும்
அழகான சமநிலையை நினைவூட்டுமே !!