ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பதிவு 4 பாடல் 2

ரமணரின்

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 

பதிவு 4


2 –
அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று
அபின்னமாய் இருப்போம் அருணாசலா! (அ)

ரமணரின் தாயார் பெயர் அழகம்மை - தந்தையின் பெயர் சுந்தரம் --

தன் தந்தை தாயின் உயர்ந்த தாம்பத்தியத்தை அதைப்போல் ஒரு அன்னியோனத்தை ரமணர் வேறு எங்கும் பார்த்ததில்லை

 ---அருணாசலா என் தாய் தந்தையர் எப்படி ஒன்றாக இருவர் அல்ல ஒருவராக வாழ்ந்தாரோ அதைப்போல் என் மனமும் நீயும் அபின்னமாய்         (ஒன்றாக ) இருப்போம் அருணாசலா 🙏

அழகு, சுந்தரம் என்ற இரு சொற்களும் வெவ்வேறாக இருந்தாலும், அவை குறிக்கும் பொருள் ஒன்றுதான்.

அதுபோல, அருணாசலா, நீயும் நானும் வெவ்வேறாகத் தோன்றினாலும், உண்மையில் ஒன்றே!


இதே கருத்தை வலியுறுத்தும் இன்னொரு பாடலும் உண்டு.

அதில், ‘நீ வேறு, நான் வேறு என்ற வித்தியாசமே இல்லாதபடி என்னை அணைத்துக்கொள், வாழ்வில் பேரானந்தத்தைப் பெருக்கு’ என்று வேண்டுகிறார் ரமணர்.



Comments

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 48.மஹா லாவண்ய ஷேவதி & 49ஸர்வாருணா பதிவு 52