ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 34 & 35

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 41

34

नाभ्यालवालरोमालिलताफलकुचद्वयी - நாப்யாலவாலரோமாலி லதாபலகுசத்வயீ --


அற்புத பெண்ணுக்குரிய உடலமைப்பு கொண்டவள் அம்பாள். 

பெண்மை தாய்மை. அம்பாள் அழகிய  சர்வலோக மாதா.💐💐💐

நாப்யாலவால = தொப்புள்கொடியிலிருந்து 

ரோமாலி = முடி 

லதா = கொடி ஃபல = கனிகள் 

குச த்வயீ = இரு மார்பகங்கள் 

தொப்புளியிலிருந்து தோன்றிய படர்கொடியினின்று விளைந்த இரு கனிகளென விளங்கும் மார்பகங்களைக் கொண்டவள் 👏👏👏


      👌👌👌👌👌👌👌👌👌

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 42

35  लक्ष्यरोमलताधारतासमुन्नेयमध्यमा 

லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய மத்யமா |


இல்லையோ என்னும்படியாக  ஓடிவது போல் இடை கொண்ட ,  கொடியிடையாள் லலிதாம்பிகை என்கிறார் ஹயக்ரீவர்,

கடலையே குடித்த பெரிய தொப்பைகாரர்  அகஸ்தியரிடம். அவரும் தொப்பையை தடவிக்கொண்டே  ஆமாம் என்கிறார்.💐💐💐

லக்ஷய= கண்ணுக்கு புலப்படும்

ரோம = முடி 

லதா= கொடி 

தாரத = புறப்படுதல் 

சமுன்னேய = முடிவுக்கு வருதல் 

மத்யமா = இடுப்புப் பகுதி - இடை 

35 லக்ஷயரோம லதா தாரத சமுன்னேய மத்யமா* = கொடி போன்ற இடுப்பில் புலப்படும் மெல்லிய ரோமத்தால் மட்டுமே, இடை இருப்பதை உணர்த்துபவள் 👍👍👍



இல்லாத இடையை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள் ?

விசுவாமித்திரன் முன்னே நடக்க, ராமனும் அவன் தம்பி லட்சுமணனும் பின்னால் வருகிறார்கள். 

மிதிலை நகர எல்லைக்குள் கால் பதிக்கிறார்கள்.

அந்த ஊர் மதில்கள்மீது கொடிகள் பறக்கின்றன. 

அவை ராமனை நோக்கிக் கை அசைத்து ‘வா, வா’ என்று அழைப்பதுபோல் தோன்றுகிறதாம்.

ராமன் ஏன் மிதிலைக்குள் வரவேண்டும்?

காரணம் இருக்கிறது. ‘ *மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து செய்யவள் இருந்தாள்’* என்று அந்தக் கொடிகள் சொல்வதாகக் கம்பர் வர்ணிக்கிறார்:

குற்றமில்லாத தாமரை மலரை விட்டு நீங்கிய திருமகள், எங்கள் நகரம் செய்த தவத்தினால் இங்கே சீதையாக வந்து பிறந்திருக்கிறாள்.

ஆகவே, ராமா நீ இங்கே வா, அவளுடைய கைத்தலம் பற்றிக் கொள்!

சீதை அப்பேர்ப்பட்ட அழகியா?



பின்னே?

‘மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை’ என்கிறார் கம்பர். 

அந்த மன்மதனால் கூடச் சீதையின் அழகை ஓவியமாகத் தீட்டமுடியாதாம்.

மன்மதன் யோசித்தான், மற்ற வண்ணங்களெல்லாம் சீதையைப் படமாக வரையை போதாது என்று, அமுதத்தை எடுத்தான், அதில் தூரிகையைத் தோய்த்தான், படம் வரைய நினைத்தான்.

ம்ஹூம், அப்பேர்ப்பட்ட அமுதத்தால்கூட அந்தப் பேரழகைப் பதிவு செய்ய முடியவில்லையாம். 

மன்மதன் திகைத்துப்போய் நிற்கிறான். 

ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கும்!’

இப்படிக் கம்பர் வர்ணித்துக்கொண்டிருக்கும்போதே, ராமரும் லட்சுமணரும் விசுவாமித்திரருடன் மிதிலைக்குள் நுழைந்துவிடுகிறார்கள்


பல காட்சிகளைக் கண்டபடி நடக்கிறார்கள்......

அங்கே ஒரு நடன சாலை. 

அதில் ‘ஐயம் நுண் இடையார்’,* அதாவது இடை இருக்கிறதா, இல்லையா என்று சந்தேகம் வரும்படி நுட்பமான இடுப்பைக் கொண்ட பெண்கள் நடனமாடுகிறார்கள்.

இன்னொருபக்கம், சில பெண்கள் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறார்கள், 

எப்படி? 

மாசு உறு பிறவிபோல் வருவது போவது ஆகி* ’, 

தவறு செய்தவர்கள் மீண்டும் மீண்டும் இந்தப் பூமியில் பிறப்பதைப்போல, அவர்களுடைய ஊஞ்சல் முன்னும் பின்னும் ஆடுகிறதாம். 

அதைப் பார்த்த ஆண்களின் உள்ளமும் அதோடு சேர்ந்து தடுமாறுகிறதாம்.🙏

வேறொருபக்கம், சில பெண்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள், சில பெண்கள் பூப்பறிக்கிறார்கள், பந்தாடுகிறார்கள், குளிக்கிறார்கள்… 

ஆனால் இவர்களில் யாரையும் ராமன் நிமிர்ந்து பார்க்கவில்லை. 

சமர்த்தாக முனிவரின் பின்னே நடந்துகொண்டிருக்கிறான்.

சிறிது நேரத்தில், அவர்கள் அரண்மனையை நெருங்குகிறார்கள். 

அங்கே கன்னிமாடத்தில் சீதை நிற்கிறாள். 

அந்தக் காட்சியைக் கம்பர் இப்படி வர்ணிக்கிறார்:பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்

தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,

கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு

அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்

தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, 

சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… 

இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. 

அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.🌷🌷🌷


சீதையைப் பார்த்த மனிதர்களெல்லாம்

‘அடடா, தேவர்களைப்போல நமக்கும் இமைக்காத விழி கிடைத்தால் இவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே’ என்று ஏங்குகிறார்களாம்.

அந்தத் தேவர்களோ ‘நமக்கு இரண்டு கண்கள்தானே இருக்கிறது, சீதையைப் பார்க்க இவை போதாதே, இன்னும் ஏழெட்டுக் கண் கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று தவிக்கிறார்களாம்.

(’இமையா நாட்டம் பெற்றிலம் என்றார், இரு கண்ணால் அமையாது என்றார் வானத்தவர்’)

கன்னிமாடத்தில் சீதையின் அருகே பல பெண்கள் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் யாரும் சீதையுடைய அழகுக்கு இணையாகமாட்டார்கள்.

‘சதகோடி முன் சேவிக்க, மின் அரசு எனும்படி நின்றாள்’ என்கிறார் கம்பர். 

நூறு கோடி மின்னல்கள் சுற்றிலும் வந்து நின்று வணங்கி நிற்க, நடுவில் அவர்களுக்கெல்லாம் தலைவியாக நின்ற ‘ *மின்னல் அரசி* ’யாம் சீதை!👣👣

இன்னும், சீதையின் அழகைக் கண்டு ‘குன்றும், சுவரும், திண் கல்லும், புல்லும்’ உருகுகின்றன, 

அவள் அணிந்திருக்கிற நகைகளால் சீதைக்கு அழகு இல்லை,

சீதையால்தான் அந்த ஆபரணங்களுக்கு அழகு (’அழகெனும் மணியுமோர் அழகு பெற்றவே’), 

பெண்களே அவளைக் கண்டு காதல் கொள்கிறார்கள்

(’மங்கையர்க்கு இனியது ஓர் மருந்து’)…

இப்படிக் கம்பர் அடுக்கிக்கொண்டே போகிறார்.


அப்பேர்ப்பட்ட சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், 

புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்குகிறது:

எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக்

கண்ணொடு

கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்

நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, 

இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள்.👏👏👏


நோக்கு எனும் பாசத்தால் பிணித்து’, 

கண் பார்வை என்கிற கயிற்றினால் ஒருவரை ஒருவர் கட்டி ஈர்த்துக்கொள்கிறார்கள்

ராமன் மனம் சீதையை இழுக்க, சீதையின் மனம் ராமனைத் தன்னருகே இழுக்க… ’இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்’ என்று முடிக்கிறார் கம்பர்.

என்ன இது? சினிமாவில் வருவதுபோல் முதல் பார்வையிலேயே காதலா?

முதல் பார்வையா? 

யார் சொன்னது?

திருமால் அவதாரம் ராமன், திருமகளின் அவதாரம் சீதை, 

இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்தவர்கள்தான். 

இந்தப் பிறவியில் ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கிறார்கள், அதனால், சட்டென்று காதல் பற்றிக்கொள்கிறது.

‘பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ’ என்று உருகுகிறார் கம்பர்.👍👍👍

இதெல்லாம் முனிவர் விசுவாமித்திரருக்குத் தெரியுமா?

அவர்பாட்டுக்கு நடக்கிறார். 

ராமனும் அவருக்குப் பின்னே சென்றுவிடுகிறான்.

சீதை துடித்துப்போகிறாள். அதைச் சொல்லும் கம்பன் வர்ணனை:

 ‘கண் வழி புகுந்த காதல் நோய், பால் உறு பிரை என எங்கும் பரந்தது.’

பாலில் ஒரு துளி மோரைதான் பிரை ஊற்றுகிறோம். 

அது பால்முழுவதும் சென்று அதனைத் தயிராக மாற்றிவிடுகிறது அல்லவா? 

அதுபோல, கண்களின்வழியே சீதைக்குள் நுழைந்த காதல் நோய், அவளுடைய உடல்முழுவதும் பரந்து வருத்தியது. 

அவள் துடிதுடித்தாள்.

இதைப் பார்த்த தோழிகள் சீதைக்கு ஏதேதோ வைத்தியம் செய்கிறார்கள். 

மலர்ப் படுக்கையில் படுக்கவைக்கிறார்கள், சந்தனம் பூசுகிறார்கள், சாமரம் வீசுகிறார்கள், திருஷ்டி கழிக்கிறார்கள்.🙂🙂🙂


ம்ஹூம், எந்தப் பலனும் இல்லை. 

சீதை பலவிதமாகப் புலம்பத் தொடங்குகிறாள். 

அவற்றுள் ஓர் அருமையான பாட்டு:

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,

சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,

சுந்தர மணி வரைத் தோளுமே அல

முந்தி, என் உயிரை அம் முறுவல் உண்டதே!

என்னை வருத்துவது எது? 

இந்திர நீலம் என்ற உயர்ந்த கல்லைப்போல இருண்ட அவனுடைய தலைமுடியா? 

நிலவைப் போன்ற முகமா? 

நீண்ட கைகளா? 

அழகான ரத்தின மலை போன்ற தோள்களா?’

‘இவை எதுவுமே இல்லை,

எல்லாவற்றுக்கும் முன்பாக, அவனுடைய உதட்டில் பரவிய அந்தப் புன்சிரிப்பு, அதுதான் என்னுடைய உயிரை உண்டுவிட்டது!’

இங்கே ‘தாழ்ந்த கைகளும்’ என்ற பிரயோகத்தைக் கவனிக்கவேண்டும். 

அதாவது, நீண்ட கைகள், அதனை ராஜ லட்சணம் என்று சொல்வார்கள்.

என்னதான் ராஜாவானாலும், காதல் வந்துவிட்டால் அவன் நிலைமையும் பரிதாபம்தான். 

சீதையைப் பார்த்துவிட்டு விசுவாமித்திரருடன் சென்ற ராமனும் அப்படிப்பட்ட ஒரு தவிப்பில்தான் சிக்கிக் கிடந்தான்.👍👍👍

*பொருள் எலாம் அவள் பொன்னுருவாயவே’* என்கிறார் கம்பர்.

‘பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா’ என்று பாரதி பாடியதுபோல, ராமனுக்கு எதைப் பார்த்தாலும் சீதையின் பொன் வடிவம் மட்டுமே தெரிகிறதாம். 

அவளையே நினைத்துக்கொண்டு படுத்துக் கிடக்கிறான்.

திடீரென்று ராமனுக்கு ஒரு சந்தேகம்.

‘ஒருவேளை, அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவளாக இருந்துவிட்டால்?

என்னுடைய காதல் பிழையாகிவிடுமே!’

மறுகணம், அவனே தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்கிறான்.

‘நல் வழி அல் வழி என் மனம் ஆகுமோ?’…

என்னுடைய மனம் எப்போதும் கெட்ட வழியில் போகவே போகாது, ஆகவே, இன்றைக்கு நான் இந்தப் பெண்ணைப் பார்த்துக் காதல் வயப்படுகிறேன் என்றால், அவள் எனக்கெனப் பிறந்தவளாகதான் இருக்கவேண்டும்.🌷🌷🌷

ராமன் இப்படிப் பலவிதமாக யோசித்துக்கொண்டிருக்கையில், பொழுது விடிகிறது. 

விசுவாமித்திரர் அவனை ஜனகரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்துகிறார். 

சிவ தனுசு கொண்டுவரப்படுகிறது. 

யாராலும் தூக்கக்கூடமுடியாத 

அந்த வில்லை ராமன் எடுத்துப் பூட்டி முறித்துவிடுகிறான்.

அந்த ஓசை, மூன்று உலகங்களில் இருந்த எல்லாருக்கும் கேட்டதாம், இதற்குச் சாட்சி, ராமனின் தந்தை தசரதன்!

ராமன் வில்லை முறித்தபோது, தசரதன் ஏதோ ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறான். 

திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்கிறது. ‘என்ன அது?’ என்று குழம்புகிறான்.

பின்னர் ஜனகனின் தூதுவர்கள் அவனை வந்து சந்தித்து விஷயத்தைச் சொன்னபிறகு, தசரதனுக்கு அந்த மர்மம் விளங்குகிறது.

வில் இற்ற பேரொலி கொல் அன்று இடித்தது ஈங்கு’* என்று வியப்பாகச் சொல்கிறான்.

ஆனால், எங்கேயோ அயோத்தியில் இருக்கும் தசரதனுக்குக் கேட்ட இந்த ‘வில் முறியும் சத்தம்’, அதே மிதிலை நகரில் இருக்கும் சீதைக்குக் கேட்கவில்லை. 

காரணம், அவள் ராமனை எண்ணி மயக்கத்தில் இருக்கிறாள். 

ஆகவே, அந்த ராமன் வில்லை முறித்த செய்தியும் அவளுக்குத் தெரியவில்லை.

அப்போது, மிதிலை நகரெங்கும் கொண்டாட்டம். ’இவ்வளவு நாளாக ஜனகனின் சிவதனுசை வளைக்கும் ஆண் மகன் யாருமே இல்லையா என்று ஏங்கினோமே, அப்படி ஒரு பெரிய வீரன் வந்துவிட்டான், சீதையின் திருமணம் நிச்சயமாகிவிட்டது’ என்று எல்லாரும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.

மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும். மணப்பெண் சீதையிடம் செய்தியைச் சொல்லவேண்டாமா?

மாலை’ என்ற தோழி உற்சாகத்துடன் சீதை இருக்கும் இடத்தை நோக்கி ஓடுகிறாள்.

முன்பு சீதையை ‘மின் அரசு’ என்று வர்ணித்த கம்பர், இப்போது அதே உவமையைச் சற்றே மாற்றிப் பயன்படுத்துகிறார், ’ *நுடங்கிய மின் என’,* 

துவண்ட மின்னலைப்போலப் படுக்கையில் கிடக்கிறாள் சீதை.

அப்போது, தோழி உள்ளே நுழைகிறாள். நடந்ததை விவரிக்கிறாள்.


           👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌





Comments

ravi said…
09.01.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 18)

Sanskrit Version:

द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते।
सौभद्रश्च महाबाहुः शङ्खान्दध्मुः पृथक्पृथक्।।1.18।।

English Version:

Drupado Draupadeyaashcha
sarvashah prthvIpate |
sauBhadrashcha mahaabahuh
shankhaandaDhmuh praThakpraThak ||

Shloka Meaning

Shlokas 15, 16, 17 & 18 describe the conch sounds of the various warriors of the Pandava army (sainyam)

Drupada, the sons of Draupadi, Saubhadrah and Abhimanyu all blew their conches separately

Panchajanyam - The conch of Shri Krishna was made from the bones of a demon named Panchajan,
hence called as Panchajanyam

Hrishikesha - Hrishika means sense organs. Esha means ruler. Hrishikesha means the ruler of the sense organs.
Hrishikesha also means th e source of all bliss.

Dhananjaya - Dhanam means wealth. He won wealth from all kings by performing Rajasuya Yaga

Vrukodarah - Vruka means wolf. So the word means wolf bellied. The name also means the one
who has fire 'Vrika' in his stomach and capable of consuming anything

Jai Shri Krishna 🌺
ravi said…
Energy levels during Rudram chanting monitored at Sai Kulwant Hall by Dr Kulkarni with scientific equipment and USA scientists validated his findings....... quite interesting how Science is now slowly discovering Divine vibrations
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 21*

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்

*பொருள்*

பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு நல்ல நீர்வளம், நிழல் தரும் மரங்கள், நெல் வளம், பேரும், புகழும், சிறப்பான வாழ்க்கையும், நல்ல வீடும், தேவையான செல்வமும், நீண்ட ஆயுளும் செந்தாமரையில் அமரும் மஹாலக்ஷ்மி அருளுவாள்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
*25. ஒருத்தி மகன்*

*திருப்பாவை- 25ஆம் பாசுரம்:*

_ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்_
_ஒருத்தி மகனாய் ஒளித்து வளர_
_தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த_
_கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்_
_நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை_
_அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்_
_திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி_
_வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்_ .

பிறந்தான் அவன்-
பெண்ணொருத்தியின் சேயாய்;
பிறகு-
இரவொன்றிலேயே
இடம் மாறி-
இடமளித்தான்
இன்னொருத்திக்குத் தாயாய்!

அந்த ஓரிரவில்-
அரங்கேறிய அனைத்தும் மாயம்;
அங்ஙனம் அரங்கேறியவை-
அம்மான் கம்சனின்
அகத்தை ஆக்கியது காயம்!

சிறைக் காவலர்கள் மயக்கமுற-
சகலருக்கும் நினைவுச்சங்கிலி அறவே அற...

சிறைக் கதவுகள் திறக்க-
சிசுவைத் தலையில் சுமந்து
தந்தையின் கால்கள் பறக்க...

வானம் மின்னலுடன் இடிக்க-
வாடை இடைவிடாது அடிக்க...

பெருமழை இடையறாது பொழிந்திட-
யமுனை நதியோ வழிவிட...

பாம்பு குடையாகிட-
பாலகனை அது அடைகாத்திட...

அடைந்தனன் ஆயர்பாடி;
அடங்கியது தீயோர் நாடி!

அசோதையின் மகவை
அங்கிருந்து எடுத்து-
திரும்பினான் வசுதேவன்
தன் மைந்தனை
அங்கேயே விடுத்து!

இங்ஙனம்-
தாயாரை ஏன் மாற்றினான்?
இதனால் அவன்-
தீயோரை ஏமாற்றினான்!

முன்னவளுக்குக் கிட்டியது-
முகுந்தனைப்
பெற்றெடுக்கும் பேறு;
ஆயினும்-
அந்த ஓரின்பம் தவிர-
அவள் கண்டதில்லை வேறு;
பின்னவளுக்கோ கிட்டியது-
பிள்ளையின்பம் பல நூறு;
அவளைத்தான் தாயாக வரித்தான்-
அச்சுதன் எனும் ஏறு!

இவ்வாறு-
ஒளிந்தே ஓடியது
அச் செவ்வாறு!
அசுரன் கம்சனுக்கு
அறவே ஆகாது
அவ் வாறு;
ஏனெனில்-
அயன் எழுதிவிட்டான்
அவ்வாறு!

கறந்து வளரும்
ஆயர் கூட்டத்தில்- கண்ணன்
கரந்து வளரும் சேதி
கம்சனுக்குக் கிடைக்க-
கோபத்தில் கத்தினான்- தன்
கழுத்து நரம்புகள் புடைக்க!

கண்ணனைக் கொல்ல
கீழோரை ஏவினான்;
அனைவரையும் கொன்று குவித்தான்
திருவரங்கத் தீவினான்!

இங்ஙனம்-
சழக்கனின் வயிற்றில்
சுடுநெருப்பாய் நின்றவனே!
அசுரனின் வாழ்வை
அடிசிலாய்த் தின்றவனே!

பெருமாளே!
ஆருமில்லை இப்புவியில்
உன்னை விட-
பெரும் ஆளே!

உன்னைப் போற்றி வந்தோம்;
உன்புகழ் சாற்றி வந்தோம்;
உள்ளச் செடியில்-
உன் பெயரையே
உதகமாய் ஊற்றி வந்தோம்;
உன் சீர் பரப்புவதையே
உன்னதமான கடமையாய் ஆற்றி வந்தோம்!

நாளும் போதும்-
நீதான் எங்களின் எண்ணம்;
நல்கிடுவாய் பறையை-
நாங்கள் விரும்பிய வண்ணம்!

அதைவிட உளதோ-
அடியாருக்கு வேறு செல்வம்?
அகமகிழ்ச்சியுடன்
அதைப்பெற்று-
அண்ணலே! உந்தன்
அரும்புகழ் பாடிச் செல்வம்!
ravi said…
[09/01, 21:48] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 436* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[09/01, 21:48] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

*ஸித்திஸ்* :‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
யசோதையின் மூச்சு காற்று கொஞ்சம் கொஞ்சமாய் காற்றில் கலந்து கொண்டிருந்தது ...

கண்ணன் எனும் ஒரு மாயனோடு வாழ்ந்த ஒரு வாழ்வும் மாயம் தானோ ....

கண்ணா உனை பார்க்காமல் என் கண்கள் மூடப்போகிறதா ?

அம்மா என்ற உன் குரல் கேட்க்காமல் என் செவிகள் சக்தி இழக்கப்போகின்றதா ?

உன்னை அணைத்து கொள்ளாமல் என் கரங்கள் துவளப்போகிறதா ?

நீ ஓடும்போது உனை தொடர்ந்து ஓடும் என் கால்கள் விரைகப் போகிறதா ?

கண்ணா கண்ணா என்றே துடிக்கும் இதயம் நிற்கப்போகின்றதா ?

இதோ விறகுகள் இதுவே இனி என் அரியணை ஆகப்போகின்றதா ?

பால் கொடுத்த எனக்கு பால் ஊற்ற போகிறாயா ?

உன் நாமம் சொல்லி தீக்குள் விரல் வைத்தால் உனை தீண்டும் இன்பம் கிடைக்குமே ...

உன் நாமம் மட்டுமே சொன்ன என்னை தீ உணவாக திண்ணப்போகிறதா ?

கண்ணா ......

வாசலில் மயில் பீலியின் வாசனை மெதுவாக உள்ளே நுழைந்தது 🦚🦚🦚
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 435*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

ஸ்லோகம் 59.
ravi said…
ஆச்சார்யாள், ரொம்ப இயற்கையோட வனங்கள்லயும் மலைகள்லயும் வாழ்ந்து இருக்கார்னு தெரியறது.

தபஸ் பண்ணிண்டு இருந்திருக்கார்..

அதனால அந்த வாக்குல ரொம்ப அழகான உவமைகள். ரொம்ப crudeஆ காமினி காஞ்சனதத்திலேர்ந்து மனசை எடுக்கணும்,அப்படின்னு சொல்லாம, அதையே ரொம்ப அழகழகான உவமைகள் சொல்றார்.

இந்த 59 ஆவது ஸ்லோகத்துல

ஹம்ʼஸ꞉ பத்³மவனம்ʼ ஸமிச்ச²தி யதா² நீலாம்பு³த³ம்ʼ சாதக꞉
கோக꞉ கோகனத³ப்ரியம்ʼ ப்ரதிதி³னம்ʼ சந்த்³ரம்ʼ சகோரஸ்ததா² |
சேதோ வாஞ்ச²தி மாமகம்ʼ பஶுபதே சின்மார்க³ம்ருʼக்³யம்ʼ விபோ⁴
கௌ³ரீநாத² ப⁴வத்பதா³ப்³ஜயுக³லம்ʼ கைவல்யஸௌக்²யப்ரத³ம் || 59 ||

ஒரு நாலு பறவைகளுடைய உதாரணத்தை சொல்றார்,
ravi said…
[09/01, 21:26] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 55 started on 6th nov

*பாடல் 19* ...💐💐💐
[09/01, 21:26] Jayaraman Ravilumar: *பாடல் 19 ... வடிவும் தனமும்*

(வறுமையை நீக்கி அருள்வாய்)

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.
ravi said…
*அடி அந்தம் இல்லா ...* முதலும் முடிவும் இல்லாத,

*அயில் வேல் ஆரசே ..* . கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய அரசனே,

*மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே ...*

வறுமை என்கிற ஒரு
பாவி வந்து விட்டால்,

*வடிவும்* ... உடல் அழகும்,

*தனமும்* ... செல்வங்களும்,

*மனமும்* ... நல்ல மனமும்,

*குணமும்* ... நல்ல குணநலங்களும்,

*குடியும்* ... பிறந்த வம்ச பரம்பரையின் பெருமையும்,

*குலமும்* ... பிறந்த குலத்தின் பெருமையும்,

*குடி போகியவா ...*

நீங்கி விடுகின்றன. (இது பெரும் வியப்பே).
ravi said…
✨ *பெருமாள் பக்தர் ஒருவர் அதிகாலை நீராடி, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி பெருமாளைத் தரிசிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார்..............*

*"கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா"*

ravi said…
❤️ *இன்றைய சிந்தனை*
*10.01.2023*

**********************************

🙌 *_வாழ்க வளமுடன்_* 🙌

**********************************


நமது பிரபஞ்சம் மிக பிரம்மாண்டமான ஒன்று.

அதில் மனிதப் பிறப்பு மிக மிக சிறப்பானது.

அனுபவிக்க வேண்டிய ஆயிரம் அற்புதங்கள் இந்த பிரபஞ்சத்தில் ஒளிந்து கிடக்கின்றன.

ஆனால் நாமோ துன்பங்களைத் தேடித்தேடி அனுபவிக்க ஆசைப்படுகிறோம்.

மனிதர்களைத் தவிர அனைத்து உயிர்களும் ஒவ்வொரு நாளையும் கொண்டாடுகின்றன.
யாரோடும் தன்னை ஒப்பிடுவதில்லை.

தனக்கு கிடைத்ததை வைத்து சிறப்பான நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றன.

தான் மகிழ்ச்சியாக வாழ யாரையும் சார்ந்து இருப்பதில்லை.

நீங்களும் இந்த அற்புதமான வாழ்க்கையை கொண்டாடுங்கள்.

உங்கள் வாழ்க்கையை யாரோடும் ஒப்பிடாதீர்கள்.

ஒவ்வொருவரின் பாதைகள் வேறு.
பயணங்களும் வேறு.

இறைவன் தந்த அனைத்திற்கும் நன்றி சொல்லுங்கள்.

நிறைவான மனதுடன் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.

*இந்த நாள் இனிய நாள் ஆகட்டும். 💐*

*வாழ்க வளமுடன் நலமுடன்.✍🏼🌹*

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
*( ஆன்மீக வழிகாட்டி )*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நம் உபநிஷத் தத்வங்களில் ஒன்றுதான் இப்படி கதா ரூபமாயிருக்கிறது. அப்படி ஆகும்போது காலம், தேசம் இவற்றின் மாறுபட்டால் குளறுபடியும் உண்டாகியிருக்கிறது, மூல தத்வமே மறைந்து போகிறாற் போல.
உபநிஷத்தில் என்ன சொல்லியிருக்கிறது? ‘
ravi said…
பிப்பல மரத்தில் இரண்டு பட்சிகள் இருக்கின்றன. ஒன்று பிப்பலத்தைச் சாப்பிடுகிறது. இன்னொன்று சாப்பிடாமல் மற்றதைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது’ என்று உபநிஷத்து சொல்கிறது. சரீரம்தான் அந்த விருட்சம். அதில் ஜீவாத்மாவாக ஒருத்தன் தன்னை நினைத்துக் கொண்டு விஷயாநுபவங்கள் என்ற பழத்தைத் தின்று கொண்டிருக்கிறான். இவன் ஒரு பட்சி. இந்த சரீரத்திலேயே பரமாத்மா இன்னொரு பட்சியாக இருக்கிறான். அவன்தான் ஜீவனை ஆட வைக்கிறவன். ஆனாலும் அவன் ஆடுவதில்லை.
ravi said…
சர்வ சாக்ஷியாக அவன் ஜீவனின் காரியங்களைப் பார்த்துக் கொண்டு மாத்திரம் இருக்கிறான். இந்த ஜீவனுக்கு அவனே ஆதாரமானாலும் அவன் விஷயங்களை அநுபவிப்பதோ—பழத்தைச் சாப்பிடுவதோ—அதற்கான கர்ம பலனை அநுபவிப்பதோ இல்லை. இதை உபநிஷதம், பழம்—அதைச் சாப்பிட்ட பட்சி—சாப்பிடாத பட்சி என்று கவித்வத்தோடு சொல்கிறது. சாப்பிடுபவன் ஜீவன், சாப்பிடாதவன் பரம்பொருள்—தன்னை ஆத்மாவாக உணர்ந்திருக்கிறவன்.
இந்த ஜீவன்தான் ஹீப்ரு மதங்களில் ஈவ் ஆகியிருக்கிறான்.
ravi said…
‘ஜீ’ என்பது ‘ஈ’ யாவது ஒரு வியாகரண விதி. ‘ஜ’ வரிசை சப்தங்கள் ‘ய’ வரிசையாக மாறிவிடுவது சகஜம். இப்படித்தான் யமுனா ஜமுனாவாயிற்று. ‘யோகீந்திர்’ என்பது ‘ஜோகீந்தா’ என்றாயிற்று. ‘ஜீவ’ என்பது ‘ஈவ்’ என்றாயிற்று. ‘ஆத்மா’ என்பது ‘ஆதம்’ ஆக மாறிவிட்டது. பிப்பலம் என்பது ஆப்பிள் (apple) என்றாயிற்று; அறிவு விருட்சம் என்பதும் நம் ‘போதி விருட்சம்’ தான். போதம் என்றால் ‘ஞானம்’. புத்தருக்குப் போதி விருக்ஷத்தின் கீழ்தான் ஞானம் உண்டாயிற்று என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே? ஆனால், அவருக்கும் முந்தியே அரச மரத்துக்குப் போதி விருட்சம் என்று பெயர் வந்தது.
ravi said…
உபநிஷதமானது தூர தேசம் ஒன்றில் எத்தனையோ காலத்துக்குப் பிற்பாடு மாறி மாறிப் புது ரூபம் எடுக்கிறபோது மூல தாத்பர்யம் மாறிப்போயிற்று. ஒரு போதும் விஷயாநுபோகத்துக்கு ஆளாக முடியாத ஆத்மாவும் பழத்தைச் சாப்பிட்டதாக பைபிள் கதை திசை திரும்பி விடுகிறது. விஷய சுகம் எல்லாம் அடிபட்டுப் போகிற அறிவை நம்முடைய போதி விருட்சம் குறிப்பிடுகிறது என்றால், அவர்களோ விஷய சுகத்தைப் பழுக்கிற லௌகீக அறிவையே Tree of Knowledge என்று சொல்லி விட்டார்கள்.
ravi said…
ஆனாலும், நம் வேத மதம் ஆதியில் அங்கேயிருந்திருக்கிறது என்பதற்கு இதிலிருந்து அத்தாட்சி கிடைக்கின்றதோ இல்லையோ? இன்னொரு உதாரணம் சொன்னால்தான் மூலத்தில் இருப்பது வெளி தேசத்தில் வேறு காலத்தில் ரொம்பவும் மாறிப்போகும்—மாறினாலும்கூட மூலத்தைக் காட்டிக் கொடுக்கும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை வரும். நம்முடைய திருப்பாவை – திருவெம்பாவைப் பாடல்கள் வேதம் மாதிரி அத்தனை பிராசீனமானவை அல்ல. ஒரு ஆயிரத்தைந்நூறு வருஷங்களுக்குள் அவற்றை ஆராய்ச்சியாளர்கள் கொண்டு வந்து விடுகிறார்கள். எப்படியானாலும் வேத இதிஹாச காலங்களுக்கு மிகவும் பிற்பட்டுத் தோன்றியவர்கள்தான் இந்த இரு பாவைகளைச் செய்த மாணிக்கவாசகரும் ஆண்டாளும்.
ravi said…
இவர்கள் காலத்துக்கு அப்புறம் கடல் கடந்து ஹிந்து சாம்ராஜ்யங்கள் உண்டாயின. தமிழ்நாட்டின் சோழ ராஜாக்கள்கூட அம்மாதிரி தேசாந்தரங்களில் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக்கிறார்கள். ஆனால் இந்த படை எடுப்பைவிட முக்கியமாக நம் கடல் வாணிபம் பெருகினதையே சொல்ல வேண்டும். வியாபார ரீதியில் நம் அந்நியத் தொடர்பு (Foreign contact) மிகவும் விருத்தியாயிற்று. இந்த வியாபாரிகளைப் பார்த்தே பல தேசங்களில் ஹிந்து நாகரிகத்தில் ஆகர்ஷிக்கப்பட்டு நம் மத அம்சங்களைத் தாங்களும் எடுத்துக் கொண்டார்கள். தூரக் கிழக்கு (Far – East ) என்று சொல்கிற நாடுகளை இவற்றில் முக்கியமாகச் சொல்ல வேண்டும். பாலி மாதிரி தேசங்கள் முழுக்க ஹிந்துவாயின. கம்போடியா, இப்போது தாய்லாந்து என்கிற ஸயாம், இந்தோ சைனா முழுவதும் பரவி, மணிலா இருக்கிற ஃபிலிப்பைன்ஸ் எல்லாம்கூட ஹிந்து கலாச்சாரத்துக்குள் வந்தன. அதை ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் என்பார்கள்.
ஆக, ரொம்பவும் ஆதியில் எங்கேயும் வேத மதமே இருந்தது ஒரு நிலை; அப்புறம் அங்கங்கே புது மதங்கள் ஏற்பட்டது ஒரு நிலை; பிறகு இந்த மதங்கள் எல்லாம் மங்கிப் போகிற மாதிரி கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம் இவை மட்டுமே அங்கெல்லாம் பரவிய நிலை; இதற்கப்புறம், சரித்திரத்தில் நன்றாக உறுதிப்பட்டுவிட்ட காலத்தில் மறுபடி இப்போது நான் சொன்னமாதிரி, ஹிந்து நாகரிகச் செல்வாக்கானது பல தேசங்களில் — குறிப்பாக கீழ்த்திசை நாடுகளில் ஜீவ களையுடன் ஏற்பட்டது ஒரு நிலை. இந்தக் கட்டத்தில்தான் அங்கோர்வாட், பேராபுதூர், ப்ரம்பானன் மாதிரி பெரிய பெரிய தமிழ்நாட்டுக் கோயில்கள் அங்கே எழும்பின. இந்தக் கட்டத்தில்தான் நம்முடைய திருப்பாவையும் திருவெம்பாவையும் கூட ஸயாமுக்கு—இப்போது தாய்லாந்து என்கிறார்கள்—சென்றிருக்கின்றன.
இதற்குச் சான்றாக இப்போதும் அங்கே வருஷா வருஷம் இங்கே நாம் இந்தப் பாவைகளைப் பாராயணம் பண்ணுகிற அதே மார்கழி மாதத்தில் ஒரு பெரிய உத்ஸவம் நடக்கிறது. இரண்டு பாவைகளும், சைவத்தையும் வைஷ்ணவத்தையும் சேர்த்து வைக்கிற மாதிரி இந்த உத்ஸவத்தில் பெருமானுக்குரிய டோலோத்ஸவத்தை (ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதை) சிவபெருமான் வேஷத்தைப் போட்டுக் கொள்கிற ஒருத்தனுக்கு ஸயாம் தேசத்தில் செய்கிறார்கள். சரி அவர்களுக்குப் ‘பாவை’ நூல்களைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டால், அடியோடு ஒன்றும் தெரியாது. அப்படியானால் இந்த உத்ஸவம் மார்கழியில் நடக்கிறது என்பது ஒன்றுக்காக அந்தப் பாவைகளோடு சேர்த்துப் பேசுவதற்கு ஆதாரம் இல்லை என்று தோன்றலாம். பின் நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், அவர்கள் இந்த உத்ஸவத்துக்குப் பெயரே ட்ரியம்பாவை, ட்ரிபாவை (Triyambavai, Tripavai) என்கிறார்கள். இப்போது பைபிள் படிப்பவர்களுக்கு உபநிஷத சமாச்சாரமே தெரியாவிட்டாலும், அதிலிருந்து வந்த கதை மாத்திரம் அவர்களிடம் இருக்கிற மாதிரி, தாய்லாந்துக் காரர்களுக்கு இப்போது திருப்பாவை – திருவெம்பாவை பாராயணம் அடியோடு விட்டுப் போய்விட்டது என்றாலும், அவர்கள் இதே தநுர் மாசத்தில் சிவ வேஷம் போட்டுக் கொண்டவனுக்காக நடத்துகிற டோலோஸ்தவத்துக்கு “ட்ரியம்பாவை, ட்ரிபாவை” என்ற பெயர் மட்டும் இருக்கிறது! சரித்திர காலத்துக்குள் இப்படிப்பட்ட மாறுபாடுகள் உண்டானால், மூவாயிரம் நாலாயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட சமாசாரங்கள் வெளிநாடுகளில் எத்தனையோ திரிந்தும் மாறியும் தானே இருக்கும்? இத்தனை மாறினாலும் எல்லாவற்றிலும் வேத சம்பிரதாயத்தின் அடையாளங்கள் “இதோ இருக்கிறோம்” என்று தலை நீட்டுகின்றன.
ravi said…
🌹🌺" *சுவாமி* ! *என்றும் இல்லாத திருநாளாக இன்று நீங்கள் மனமுருக அற்புதம் என்று கூறியதன் பொருள் என்ன* ? ... *என கேட்ட அன்னை லட்சுமிதேவி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺ஒரு நாள் மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார். விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து தனது சேவையை செய்து கொண்டிருந்தாள் லட்சுமிதேவி.

🌺கண்களை மூடிய படி இருந்த திருமால் திடீரென்று, ஆஹா! அற்புதம்! அற்புதமான காட்சி! என்று மனமுருகி சத்தம் போட்டார்.

🌺அவரது இந்த நிலையைக் கண்டு ஆதிசேஷனும், மகாலட்சுமி தேவியும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். கண்விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், தங்களின் சந்தேகத்தை ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர்.

🌺சுவாமி! என்றும் இல்லாத திருநாளாக இன்று நீங்கள் மனமுருக அற்புதம் என்று கூறியதன் பொருள் என்ன? என்றனர்.

🌺திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால்தான் அவ்வாறு கூறினேன் என்றார் மகாவிஷ்ணு.

🌺மேலும் அவர் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்லச் சொல்ல ஆதிசேஷனுக்கும் கூட உடல் சிலிர்த்தது. ஆதிசேஷனின் பரவசத்தை கண்ணுற்ற மகாவிஷ்ணு, ஆதிசேஷா! உனது ஆசை எனக்குப் புரிகிறது.

🌺நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டுமானால், பூவுலகில் பிறந்து, தவம் இருக்க வேண்டும். அப்போது அந்த அற்புத நடனத்தை நீ காணலாம். இப்போதே புறப்பட்டு போய் வா! என்று கூறி விடை கொடுத்தார் மகாவிஷ்ணு. ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார்.

🌺அவருடைய உடல் அமைப்பு இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது.

🌺பதஞ்சலி முனிவர் பல காலம் தவம் இருந்து வந்ததன் காரணமாக, ஒருநாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும்.....🌹🌺

🌺இந்நாளிலேயே இறைவன் நடராஜப்பெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார்.

🌺அது மட்டுமின்றி இதே நாளில் தான், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார். இதே நாளில் தான் ஈசன் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கும் தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.

🌺இந்நாளிலேயே பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்து அவரை மணக்க சிவபெருமான் சம்மதம் கூறிய நாளாகக் கருதி, இன்றும் கன்னிப்பெண்கள் தங்களுக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டி இதனைக் கடைபிடிக்கின்றனர்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*வாழ்வில் அயர்ச்சியை*
*குறைத்து, முயற்சியை தொடர்ந்தால்..*

*கண்டிப்பாக நல்வளர்ச்சியை*
*அடையலாம் வாழ்வில்...!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
கையில் மிஞ்சியதைப் பாதுகாத்து
வைத்துக் கொள்வதைப் போன்று ஆதாயம் வேறில்லை.

சின்ன சின்ன செலவுகளை குறையுங்கள். காரணம், எவ்வளவு பெரிய கப்பலையும் சிறிய ஓட்டை
மூழ்கடித்துவிடும்.

வலிமை உள்ளபோதே சேமிக்கப் பழகுங்கள். கடைசியில் யாரும் கொடுத்து உதவமாட்டார்கள்.

நேர்மையாக உழைத்து பணத்தை சம்பாதிக்கிறவர்கள் சாதாரண மனிதர்கள்.

அவ்வாறு சம்பாதிக்கிற பணத்தை, எதிர்கால வசதிக்காக, பாதுகாப்பாக சேமித்து வைப்பவர்கள் மாமனிதர்கள்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
🌹🌺 "Swami! What is the meaning of your saying that today is a wonderful day? Mother Lakshmi Devi asked...
-------------------------------------------------- ------

🌹🌺One day Lord Vishnu was teaching Adhisana in the ocean of milk. Lakshmi Devi was sitting at Vishnu's feet and doing her service.

🌺Thirumal, who was keeping his eyes closed, suddenly said, Aha! Wonderful! Amazing view! He made a distressed noise.

🌺 Adiseshan and Goddess Mahalakshmi were stunned to see him in this condition. Adiseshan and Mahalakshmi asked Mahavishnu about their doubts.

🌺 Swami! What is the meaning of your saying that today is a wonderful day? They said.

🌺 I saw with my wise eye the Ananda Thandavam sung by Lord Shiva today on Thiruvadhirai day. Mahavishnu said that he said so because he was mesmerized by it.

🌺And when he told about Lord Shiva's Ananda Thandavam, even Adiseshan was thrilled. Lord Vishnu who saw the ecstasy of Adisesha, Adisesha! I understand your desire.

🌺If you also want to see Lord Shiva's Ananda Thandavam, you must be born on earth and do penance. Then you will see that wonderful dance. Get out now! Mahavishnu answered by saying. Adiseshan also incarnated as sage Patanjali on earth.

🌺His body structure was human body up to the waist and serpent form below the waist.

🌺 Due to Sage Patanjali's penance for many years, one day on Tiruvadhirai day, Lord Shiva showed his dance performance to Sage Patanjali in Chidambaram. Arudra darshan on that day itself.....🌹🌺

🌺 On this very day, Lord Nataraja gave a vision to Sage Patanjali and Sage Vyagrapada and showed them dancing.

🌺Not only that, on this very day, after completing Thiruvemba of Manikkavasaka, he visited Isaan. It is believed that on this same day, Eason also blessed Kamadenu, the divine cow.

🌺Considering this day as the day Lord Shiva agreed to marry Parvati after enjoying her penance, even today virgins observe this to get a good husband for themselves.

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹Valga Valamudan 🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
முகுந்தமாலா 43, 44 ஸ்லோகங்கள்🪷🪷🪷
ravi said…
आश्चर्यमेतद्धि मनुष्यलोके सुधां परित्यज्य विषं पिबन्ति ।

नामानि नारायणगोचराणि त्यक्त्वान्यवाचः कुहकाः पठन्ति ॥ ४३ ॥

ஆஸ்ச்சர்யம் ஏதத்ஹி மனுஷ்யலோகே ஸுதாம் பரித்யஜ்ய விஷம் பிபந்தி |

நாமானி நாராயண கோசராணி த்யக்த்வான்ய வாச: குஹகா: படந்தி ||

குஹகா: ன்னா hypocrites கபட ஸ்வபாவம் உள்ளவர்கள்னு ‘நாமானி நாராயண கோசராணி’ நாராயண நாமங்கள் நாராயணா, கிருஷ்ணா முகுந்தா, கோவிந்தா, முராரே, மாதவான்னு இந்த நாமங்களை சொல்றதில்லை.

‘ஆஸ்ச்சர்யம் ஏதத்ஹி மனுஷ்யலோகே’

மனுஷ்ய லோகத்துல ரொம்ப ஆச்சர்யம் என்னன்னா, ‘ *ஸுதாம் பரித்யஜ்ய விஷம் பிபந்தி’* அமிர்தத்தை விட்டுட்டு விஷத்தை எடுத்து குடிக்கறாளே.

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று ன்னு வள்ளுவர் சொல்ற மாதிரி,

இனிமையான இந்த பகவானோட நாமங்கள் இருக்கும்போது ஜனங்கள் வெறும் வெட்டிப் பேச்சு பேசிண்டு இருக்காளேன்னு சொல்றார்.
ravi said…
❖ *77 காமேஷ்வர முகாலோக கல்பித ஸ்ரீகணெஷ்வரா =*

இறைவன் காமேஷ்வரனின் முகலாவண்யத்தை கண்டு அவ்வாறே கணேஸ்வரரை ஸ்ருஷ்டித்தவள்
ravi said…
வேழம் ஈன்றாய் வேதம் உயிர் பெற்றதே .

வேதம் வளர ஞானம் பிறந்ததே

ஞானம் பிறக்க வைராக்கியம் வரவானதே ...

வைராக்கியம் உறவாட அங்கே வன்மை பெருகியதே

பெருகிய வன்மையில் வண்மையும் சேர்ந்ததே

சேர்ந்த வண்மை தனில் காந்தம் எனும் உன் திருவடிகள் என்றும் எங்கள் துணையாய் வரும்போது ...

இந்த இரும்பும் துருப்பிடிக்க முடியுமோ அம்மா ?
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

36 –
சொல்லாது சொலி நீ சொல் அற நில் என்று
சும்மா இருந்தாய் அருணாசலா (அ)
ravi said…
பார்வதி தேவியின் பதியே

செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந் துறையில் வசிக்கும் அருணாசலா !

எம்பெருமானே!

உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் அடியவர்கள், குடும்பம், பந்தபாசங்களை உதறிவிட்டு உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர்.

கண்ணில் மை தீட்டிய பெண்மணிகளும் மனித இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர்.

எங்களுடைய பிறப்பை நீக்கி எங்களை ஆட்கொண்டு முக்தி நிலை தர உடனே விழித்தருள வேண்டும்.💐💐💐

அருணாசலா உன் மௌனமே உலகத்தின் பேரொலி

உன் சும்மா இரு தத்துவமே ஊழிக் காற்றின் பேரிரைச்சல்...

உன் தியானம் பஞ்ச பூதங்கள் பாடும்
பூபாளம்...

உன் யோகம் யோகம் ஒன்றும் செய்யா எங்களுக்கும் வருமோ அருணாசலா ? 💐💐💐
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 50*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
अङ्कितकचेन केनचिदन्धंकरणौषधेन कमलानाम् ।

अन्तःपुरेण शम्भोरलंक्रिया काऽपि कल्प्यते काञ्च्याम् ॥ ३४॥

34. Ankitha kachena kena chidandhangarana oushadhena kamalaanaam,

Antha purena Shambhoa alankriya kaapi kalpyathe kanchyaam.

அங்கிதகசேன கேனசிதன்தம்கரணௌஷதேன கமலானாம் |

அன்தஃபுரேண ஶம்போரலம்க்ரியா கா‌உபி கல்ப்யதே காஞ்ச்யாம் ||34||
ravi said…
அம்பாள் சிவப்ரியை. சிவனோடு இரண்டறக் கலந்த அர்த்தநாரீஸ்வரி .

அம்பாளும் சிவனைப்போல் பிறை சூடி காஞ்சி நகருக்கே அழகூட்டுகிறாள்.

தாமரை முகத்தாளை வணங்கி நமஸ்கரிக்கிறேன்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 454* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*190 * दुर्गा -துர்க்கா -*

அழகிய சிறிய ஒன்பது வயது பெண்ணாகக் கூட அம்பாளைக் காணலாம்.

துர்க்கை என்றாலே துன்பங்களை, கஷ்டங்களை நிவர்த்தி பண்ணுபவள் என்று அர்த்தம்.

நெருப்பு மாதிரி ஜ்வாலையாக ஜொலிப்பவள்.

துர்கா சூக்தம் விடாமல் சொல்வது கஷ்டங்களில் இருந்து நிவாரணம் பெற. இதில் முதல் ஸ்லோகம் ம்ரித்யுஞ்ஜய மந்த்ரம்.

காலனை வெல்லும் மந்திரம்.

த்ரியம்பகம் யஜாமஹே........ என்ற சக்திவாய்ந்த மந்திரம்.

கிராமங்களில் நாலு எல்லையிலும் எல்லையம்மனை, துர்க்கையை வழிபட்டவர்கள் நமது முன்னோர்கள். ரட்சிக்கும் கடவுள் அம்பாள்.🪷🪷🪷🪷🪷
ravi said…
பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே!

நீலக்கல் நிறத்தவனே!

பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே!

பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு,

உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும்,

பால் சாதம் போன்ற நிறத்தையும்,

உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும்,

பெரிய முரசுகளையும்,

பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து,

இந்த நோன்பை நிறை
வேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

கண்ணா 30 நாட்கள் ஓடி விட்டன ...மார்கழி முடிந்து தை வரும் நேரம் ..

உனை காண எங்கும் நாட்கள் எல்லாமே நாங்கள் இருக்கும் நோன்பாய் ஆகட்டும் ...

உனை வணங்கும் நாள் எல்லாம் மார்கழியாகவே மலரட்டும் *கண்ணா*
ravi said…
மாலே மணிவண்ணா!

மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன

வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

முகம் என்பது முழு மூஞ்சிக்கு மட்டுமில்லாமல் அதிலே உள்ள வாய்க்கும் பேர். ஸம்ஸ்கிருதத்தில் வாய்க்குத் தனியாக பேர் கிடையாது. அத்தனை பேர்களையும் சொல்கிறதாகவும், பேச்சுக்கே கருவியாகவும் இருக்கிற வாய்க்குத் தனிப்பேர் இல்லாமல் முகம் என்றே தான் அதையும் சொல்ல வேண்டியிருக்கிறது!* வேடிக்கையாக, தமிழிலே வாய்க்கு வாய் என்று பேர் இருந்தாலும் முகத்துக்குப் பேரே இல்லை. முகம் என்பது ஸம்ஸ்கிருத வார்த்தை. மூஞ்சி என்பது பேச்சு வழக்கிலே மட்டுமுள்ள கொச்சைதான். இலக்கண – இலக்கிய வார்த்தை இல்லை. அதனாலே, அந்தக் காலத்தில் ஸம்ஸ்க்ருத கடிகையில் படிக்கும் வித்யார்த்திகளும் தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பரஸ்பரம் பரிஹாஸம் பண்ணிக் கொள்வார்களாம். இவன் அவனை ‘முகம் இல்லாதவன்’ என்பானாம். அவன் இவனை ‘வாய் இல்லாதவன்’ என்று திருப்புவானாம்! பரிஹாஸமென்றாலும் இந்த நாள் மாதிரி ஒருத்தருக்கொருத்தர் பாஷா த்வேஷத்தில் ஏசிக்கொண்டார்களென்று அர்த்தமில்லை. ‘Good-humoured banter’ என்கிறார்களே, அப்படி நல்லெண்ணத்தோடு சேர்ந்த ஹாஸ்ய உணர்ச்சியில் ஸ்வாதீனமாகக் கேலி பண்ணிக் கொள்வார்கள்.
ravi said…
முகம் என்றாலே வாய் என்று சொல்ல வந்தேன். ஸுமுகம், நல்ல வாய் என்றால் எது நல்ல வாய்? நல்ல விஷயங்களை, ஸத் வித்யைகளைச் சொல்கிற வாய்தான் நல்ல வாய். அதனால் நல்ல வித்வானுக்கு ஸுமுகர் என்று பேர் உண்டு. ஸுமுகர் எனறால் கற்றறிந்தவர். இந்த அர்த்தத்திலேயும் பிள்ளையார் ஸுமூகர். அவர் நல்ல வாயை உடைய மஹா வித்வான். ப்ரஹ்மணஸ்பதி, ப்ருஹஸ்பதி என்று வேதங்களில் சொல்லப்படும் மஹா மேதாவிக்கும் அவருக்கும் பேதம் கிடையாது.
ravi said…
அவருடைய அநேக ரூப பேதங்களில் ‘வித்யா கணபதி’ என்றே ஒருத்தருண்டு. 21 கணபதி பேதங்களைச் சொல்லி, ஒவ்வொருத்தருக்கும் ஒரு புஷ்பமாக 21 தினுஸுப் புஷ்பங்களை அர்ச்சனை பண்ணும்படியாக சதுர்த்தி பூஜா கல்பத்தில் விதித்திருக்கிறது. அதிலே வித்யா கணபதி என்ற பேரைச் சொல்லி அவருக்கு ‘ரஸாள’ புஷ்பம் போடணும் என்று இருக்கிறது. ரஸாளம் (ரஸாளு என்று பொதுவாகச் சொல்கிறது) தான் மாம்பழங்களுக்குள்ளேயே பரம மதுரமாக இருக்கப்பட்ட தினுஸு. வித்யை என்பது அப்படிப்பட்ட ஆத்ம மாம்பழம். “யார் லோகத்தை முதலில் சுற்றிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு” என்று நாரதர் கொடுத்த பழத்தை வைத்துப் பரமசிவன் பந்தயம் நடத்தி அதிலே விக்நேச்வரர் ஜயித்துப் பெற்றுக் கொண்ட ஞானப்பழம் அந்த மாம்பழம்தான்!
வித்வத், வித்யை, அதனால் அடையும் ஞானம் இவற்றை உடையவர் ஸுமூகர்.

யானையின் வாயில் ஒரு விசேஷம். நமக்கும் இன்னும் ஆடு, மாடு மாதிரி எந்த ப்ராணியானாலும் அதற்கும் வாய் என்பது இந்தக் கோடிக்கு அந்தக் கோடி. உதடு எப்போதும் வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கிறது. கண் என்ற ஒரு அவயவத்திற்குத்தான் அவசியமான ஸமயங்களுக்காக ரப்பை என்று மூடிபோட்டு வைத்திருக்கிறதே தவிர காது, மூக்கு, வாய் ஆகியவை நன்றாக வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கின்றன. ரப்பை கண்ணை மூடுகிற மாதிரி உதடு நாக்கும் பல்லும் தெரியாமல் மூடுகிறதென்றாலும் இவற்றுக்குள் வித்யாஸமும் இருக்கிறது. கண்ணின் கார்யமான பார்வை என்பதில் ரப்பைக்கு வேலையேயில்லை. பார்வையை மறைப்பதற்கே ஏற்பட்டது அது. உதடு அப்படியில்லை. பேச்சு என்ற கார்யத்திலேயே நேராக நிறையப் பங்கு எடுத்துக் கொள்வது அது. நாக்கு, பல், உதடு, மூன்றுமே சேர்ந்துதான் பேச்சு என்பதை உண்டாக்கும் கருவியான வாய். ‘ப’, ‘ம’ முதலான சப்தங்கள் உதட்டாலேயே முக்யமாக உண்டாவதால் ‘ஓஷ்ட்யம்’ என்றே அவற்றுக்குப் பெயர். இங்கிலீஷிலும் ‘lip’ – ஐ வைத்து ‘labial’ என்கிறார்கள். நமக்கெல்லாம் வாயின் அங்கமான உதடு எப்போதும் வெளியே தெரிகிறது.
யானை ஒன்றுக்குத்தான் வாயை மூடிக்கொண்டு தும்பிக்கை இருக்கிறது. வாயைக் கையால் பொத்திக்கொள்வது அடக்கத்திற்கு அடையாளம். நாம் கையை மடித்துக் கொண்டுபோய் ஒரு கார்யமாக வாயைப் பொத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. யானைக்கானால் ஸ்வாபாவிகமாகவே [தன்னியற்கையாகவே] அதற்குக் கையின் ஸ்தானத்தில் உள்ள தும்பிக்கை வாயை ஸதாவும் மூடிக் கொண்டிருக்கிறது! தும்பி என்றால் யானை. அதன் கை தும்பிக்கை. தும்பிக்கையால் ஆஹாரத்தை எடுத்து அது வாய்க்குள்ளே போட்டுக் கொள்கிறபோதும், தும்பிக்கையை உசரத் தூக்கிக் கொண்டு பிளிறுகிறபோதும் மட்டுந்தான் அதன் வாயைப் பார்க்க முடியும். இப்படிப் பட்ட வாய்க்காரராகப் பிள்ளையார் இருப்பதில் பெரிய தத்வார்த்தம் இருக்கிறது. எத்தனை வித்வத் இருந்தாலும் வொட வொடவென்று விஷயங்களைக் கொட்டி வாதம் பண்ணிக் கொண்டிருக்காமல், அவசியமான ஸமயம் தவிர மற்ற காலங்களிலெல்லாம் வாயை மூடிக் கொண்டிருப்பது தான் நிஜமான வித்வானின் லக்ஷணம் என்று காட்டவே தும்பிக்கையால் வாயை மூடிக் கொண்டிருக்கும் கஜ ரூபத்தில் இருக்கிறார். அத்தனை வித்வத்துக்கும் முடிவு மௌனம்தான் என்று காட்டுகிறார்.
விக்நேச்வரர் நிஜமான ஸுமுகர்.
Kousalya said…
அப்பாடா...கண்ணில் நீர் முட்ட வைத்து விட்டீர்களே....படிக்க முடியவில்லை..
ravi said…

பழனிக் கடவுள் துணை -10.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-24

மூலம்:

தனக்குன் றுடையார் தலைவாசல் தோறும்
கனக்கத் திரிந்தலுத்தேன் கண்டாய் – எனக்கன்று
நீயுரைத்த(து) உண்மையன்றோ நித்தம் பழனிவெற்பில்
தாரகச்சீர் சொல்போ தகா (24).

பதப்பிரிவு:

தனக் குன்று உடையார் தலைவாசல் தோறும்
கனக்கத் திரிந்த உலுத்தேன் கண்டாய்! – எனக்கு அன்று
நீ உரைத்தது உண்மையன்றோ? நித்தம் பழனி வெற்பில்
தாரகச் சீர் சொல் போதகா!! (24).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

தனக் குன்று - மிக்க பொருட் செல்வம்;
கனக்க- அதிகமாக;
தாரகச் சீர் சொல்- பிரணவப் பொருள்;

இதுவும் சுவாமிகளின் வரலாற்றோடு தொடர்பு உடைய ஒரு பாடல். எல்லாம் வல்ல பழனிப் பெருமான் சுவாமிகளுக்கு உரைத்த உண்மையை (பல்வேறு தருணங்கள், சுவாமிகளின் வரலாற்றுச் சுருக்கத்தில் காண முடிகிறது) நினைவு கூறும் பாடல்.

மிக்க பொருட் செல்வம் உடையார், வீடுகள் வாசல் தோறும், மிக அதிகமாகத் திரிந்த நான், அலைந்து, உழன்று, துன்புறக் கண்டாய் பழனி வேலவா! பழனி அண்ணலே! நீ எனக்கு அன்று உரைத்தது உண்மையன்றோ? நித்தம் பழனியம்பதியில் பிரணவப் பொருள் உரைக்கும் போதகனே!!!ஞானாசிரியனே!

பொய் உறவுகளில் நித்தம் உலுத்த என்னை, மெய் உறவு நானே என்று காட்டிய நின் சித்தம் நான் பெற்ற பெரும் பேறு அன்றோ? எம் பெருமானே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
09.01.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 18)

Sanskrit Version:

द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते।
सौभद्रश्च महाबाहुः शङ्खान्दध्मुः पृथक्पृथक्।।1.18।।

English Version:

Drupado Draupadeyaashcha
sarvashah prthvIpate |
sauBhadrashcha mahaabahuh
shankhaandaDhmuh praThakpraThak ||

Shloka Meaning

Shlokas 15, 16, 17 & 18 describe the conch sounds of the various warriors of the Pandava army (sainyam)

Drupada, the sons of Draupadi, Saubhadrah and Abhimanyu all blew their conches separately

Panchajanyam - The conch of Shri Krishna was made from the bones of a demon named Panchajan,
hence called as Panchajanyam

Hrishikesha - Hrishika means sense organs. Esha means ruler. Hrishikesha means the ruler of the sense organs.
Hrishikesha also means th e source of all bliss.

Dhananjaya - Dhanam means wealth. He won wealth from all kings by performing Rajasuya Yaga

Vrukodarah - Vruka means wolf. So the word means wolf bellied. The name also means the one
who has fire 'Vrika' in his stomach and capable of consuming anything

Jai Shri Krishna 🌺
ravi said…
*பாடல் 19 ... வடிவும் தனமும்*

(வறுமையை நீக்கி அருள்வாய்)

வடிவும் தனமும் மனமும் குணமும்

குடியும் குலமும் குடிபோ கியவா

அடி அந்தம் இலா அயில் வேல் அரசே

மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 56 started on 6th nov

*பாடல் 19* ...💐💐💐
ravi said…
அருணகிரி நாதர் நல்ல குடியிலும் குலத்திலும் பிறந்து சிறந்த
குணவானாக திகழ்ந்த போதிலும்,

விலைமாதர் பழக்கத்தினாலும்
வேறு பல தீய பழக்க வழக்கங்களினாலும் கொடிய வறுமை
எய்தினார் என்பதை அவரது திருப்புகழ் பாடல்களினால்
தெரிய வருகிறது.

வறுமை யாகிய தீயின் மேற் கிடந்து நெளியு நீள்புழு
வாயினேற் கிரங்கி அருள்வாயே.

... (பாடல் 749) 'அறிவிலாதவர்' (திருநெல்வாயில்)

புலி வேட்டைக்குள் வரு பசுவைப் போல மிடியாற் பட்ட
பாடு ஒரு கதையை பாரினில் யார்க்குச் சொல்வேனினி ..

... என கூறுகிறார் ('வறுமை பாழ்பிணி').

வறுமை வந்தால் மேனி அழகு குறைகிறது.

சமூகத்தில் வகித்து
வந்த அந்தஸ்து நீங்குகிறது.

வந்த வறுமையை போக்கிக்கொள்ள
மனம் தீய வழியில் செல்ல நாடுகிறது.

அதனால் நல்ல குணம்
போய் கெட்ட குணம் ஏற்படுகிறது.

அனைவரும் பரிகசிக்கும்படியாக
மானம் காற்றில் பறந்துவிடுகிறது.

ஒருவனிடம் பல நற்குணங்கள், நல் குடிப்பிறப்பு, கவர்ச்சித் தோற்றம்,
ஒழுக்கம் சீலம் அமைந்திருந்த போதிலும் கையில் பணம்
இல்லாவிடில் சமூகம் அவனை மதிப்பதில்லை.🙏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 436*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

ஸ்லோகம் 59.
ravi said…
ஹம்ʼஸ꞉ பத்³மவனம்ʼ ஸமிச்ச²தி யதா² நீலாம்பு³த³ம்ʼ சாதக꞉
கோக꞉ கோகனத³ப்ரியம்ʼ ப்ரதிதி³னம்ʼ சந்த்³ரம்ʼ சகோரஸ்ததா² |
சேதோ வாஞ்ச²தி மாமகம்ʼ பஶுபதே சின்மார்க³ம்ருʼக்³யம்ʼ விபோ⁴
கௌ³ரீநாத² ப⁴வத்பதா³ப்³ஜயுக³லம்ʼ கைவல்யஸௌக்²யப்ரத³ம் || 59 ||
ravi said…
*ஹம்ஸ: பத்மவனம் ஸ மிச்சதி –*

ஹம்சமானது தாமரை காட்டை மிகவும் விரும்புகிறது.

எப்பவுமே ஹம்சங்கள் தாமரைத் தண்டை சாப்பிடும்,

தாமரைக்கு பக்கத்திலேயே இருக்கணும்னு ஆசைப்படும்.

தாமரை இருந்தா ஹம்சம் இருக்கும், ஹம்சம் இருந்தா தாமரை இருக்கும்.🪷🪷🪷🪷🦢🦢🦢🦢
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 437* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

*ஸித்திஸ்* :‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
*அம்மா* ....

அதே குரல் வேதங்கள் வேண்டி நிற்கும் குரல் ...

கானங்கள் சங்கமிக்கும் குரல்..

தேனும் பாலும் பாகும் சேர்ந்து ஓர் உருவாய் ஆன குரல் ..

மூன்றடி கேட்ட குரல் ...

தூணில் கர்ஜித குரல் ..

குயில்கள் தானம் வாங்கிய குரல் ...

கஜேந்திரன் ஆதிமூலமே என்று அழைத்து ஓடி வந்த குரல் ...

துருவனை தூக்கி விட்ட குரல் ..

துஷ்ட்டர்களை தூக்கிலிட்ட குரல் ... தசமுகனை ஒரு முகமும் இல்லாமல் செய்த குரல் ...

கலைப்பைக் கொண்டு களைப்பை நீக்கிய குரல்

கோபியர் கோடி கோடியில் நின்று தேடிய குரல்

ஆண்டாள் அனுதினமும் மாலை தொடுத்து கேட்கும் குரல் ...

அம்மா இதோ உன் கண்ணன் வந்துவிட்டேன் மீண்டும் உன்னிடம் கோகுலம் தனில் கோலாகலம் காண

யாரது என் கண்ணனா ?

மண்ணை தின்று பெண்ணை கவர்ந்து பொன்னை வெறுத்து தன்னை தந்து என்னை ஆண்ட என் கண்ணனா ....

ஆம் தாயே உங்கள் கண்ணனே ..

உரலில் கட்டுண்டு உதவிக்கு குரல் கொடுத்து உள்ளத்தில் வெண்ணெய் சேர்த்து நெஞ்சத்தில் பால் ஊற்றி எல்லோருக்கும் தயிராய் இனித்தவன் வந்திருக்கிறேன் தாயே .... 🙏🙏🙏🦚🦚🦚
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவாலயங்களில் காவல் தெய்வமாக இருக்கும் பைரவரின் சிறப்புகள் பற்றிய பகிர்வுகள் :*

அசுரர்களை அழிக்க துர்க்கை புறப்பட்டபோது, துர்க்கைக்கு படைத்தலைவனாக அவளுக்கு உதவும் பொருட்டு சிவபெருமானால் (தம் அம்சமாக) அனுப்பப்பட்டவர்தன் பைரவர். இவர் தீய சக்திகளையும், ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும் அழிப்பவர்.

கால பைரவரோடு இருக்கும் நான்கு நாய்களையும் நான்கு வேதங்களாக கூறுவர். சிவன் ஒவ்வொரு கால கட்டத்திலேயும் தன்னை ஒவ்வொரு ரூபத்தில் வெளிப்படுத்தி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அவ்வாறு அவர் காட்சி தந்த ரூபமே காலபைரவ மூர்த்தி ரூபமாகும். இப்படித் தோன்றிய சிவன் ‘சண்டாளர்’ எனப்படுகிறார். சண்டாளர் என்றால், மக்களின் கொலை பாதக உணர்வுகளை விரட்டக்கூடியவர் என்று பொருள்.

இப்பைரவ மூர்த்தி சிவாலயங்களில் காவல் தெய்வமாக நியமிக்கப்பட்டவர். வழிபாடு முடிந்து சிவாலயம் மூடப்பட்டு தாழிட்ட பிறகு, அக்கோவிலின் சாவியை பைரவமூர்த்தி சந்நிதியில் வைப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கம். சனீஸ்வரின் குருநாதர் இவர்.

காசியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டாராம் சனீஸ்வரன். அவர் காசியில் காவல் தெய்வமான காலபைரவரை நோக்கி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்தார். இறுதியில் பைரவர் காட்சி தந்து அவருக்கு மெய்ஞானம் அருளினார் என்கிறது காசி புராணம். சிவாகமங்கள், பைரவக் கோலங்கள் 64 என்கின்றன.

இவற்றில் எட்டு வகையான பைரவக் கோலங்கள் மிகவும் சிறப்பானவை. சில சிவாலயங்களில் பைரவரும் சனீஸ்வரனும் அருகருகே காட்சி தருவார்கள். இவர்களை அஷ்டமியிலும் (தேய்பிறை) சனிக்கிழமைகளிலும் அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு. இவ்வாறு வழிபடுவதால், விரோதிகளால் ஏற்படும் தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், சனிதோஷம் போன்றவை நீங்கும் என்று கூறப்படுகிறது.

பைரவக் கோலங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்படுபவர் காலபைரவர். இவரை கால புருஷர், பிரம்ம சிரச்சேதர் என்றும் கூறுவர். ஜோதிட நூல்கள் இவரை காலமே உருவமான கடவுள் என்கின்றன. 12 ராசிகளும் இவர் உடம்பின் பகுதிகளாகும்.

பிருஷத் ஜாதகம் என்னும் நூல், உடம்பின் பகுதிகளாக,

மேஷம்-தலை,
ரிஷபம்-வாய்,
மிதுனம்-கைகள்,
கடகம்-மார்பு,
சிம்மம்-வயிறு,
கன்னி-இடை,
துலாம்-புட்டம்,
விருச்சிகம்-லிங்கம்,
தனுசு-தொடை,
மகரம்-முழந்தாள்,
கும்பம்-காலின் கீழ்ப்பகுதி,
மீனம்-பாதம் என்று கூறுகிறது. காலபைரவரின் உடம்பில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலைகளாக இருந்து அலங்கரிக்கின்றன.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
கௌசல்யா said…
ஆஹா... அதி அதி அதி அற்புதமான பதிவு ...இதற்காகவே காத்திருந்து குரல் கேட்டு மயங்கினேன்.... சித்த சோரனே...
Kousalya said…
இந்த *ஸித்திஸ்* கிருஷ்ணா ...நீ இப்படியும் யசோதாவை படுத்துவாய் என்று துளியும் எண்ணவில்லை........சரி...நீ இப்படியும் வேண்டுமானால் எதையும் செய்து. ... யசோதையை உன்னிடம் உன் பாதாசரணங்களில் ஏற்றுக் கொள்ள வேண்டும்....கண்ணா...🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
தண்டம் ஏந்திய குருவின் திருவடி

அண்டம் காக்கும் அற்புத திருவடி

கண்டம் தடுக்கும் குருவின் திருவடி

பற்றிட மறைந்திடும் பாவங்கள் தானடி

மங்களம் தந்திடும் குருவின் திருவடி

மனத்தில் இருத்தி பணிவோம் மலரடி

கணத்தில் வந்து தருவான் சேவடி

குருவாய் வந்த தாயவன் தானடி

மூன்றடி கேட்டவனும் அறியேன் என்றான்

மூவுலகம் படைத்தவனும் பொய்யேன் என்றே பேர் கொண்டான்

மெய்யேன் நெய்யேனை நினைவில் வைத்தால்

விம்மேன் இனியும் வையகத்தில்

விமலேன் வருவான் குருவாய் திருவடி தந்தே தன்னடி சேர்ப்பான் 🙌🙌🙌
ravi said…
*26. மாலே! மணிவண்ணா!*

*திருப்பாவை- 26ஆம் பாசுரம்:*

_மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்_
_மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்_
_ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன_
_பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே_
_போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே_
_சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே_
_கோல விளக்கே கொடியே விதானமே_
_ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்_ .


பாவையர் நாங்கள் ஒன்றுகூடி-
பரந்தாமனே! உன் சீர்பாடி-
பனிவிழும் காலையில் நீராடி-
பரவுவோம்-உந்தன் அருள்நாடி!

மார்கழி நோன்பிருக்க
முன்னோர்கள் கடைபிடித்த
சீர்வழியைச் செப்புகின்றோம்!
சீதரனே! கேட்டருள்வாய்!

"பாஞ்சசன்னியம்" என்னும்
பால்வண்ணச் சங்கினைக் கொண்டவனே!
அதன் ஓசை கேட்டால்
அகிலமே அதிர்வதைக் கண்டவனே!

உன்னுடைய அச்சங்கையொத்த-
உயர்சங்கத்தை எமக்கருள்வாய்!
இன்னும் சில வேண்டுகின்றோம்!
இனியவனே! தந்தருள்வாய்!

கொடிகள்;
திரைச்சீலைகள்;

அரசர்கள்
வைத்திருக்கும்
முரசங்கள்;

சாப இருளை
போக்குகின்ற
தீப விளக்குகள்;

பல்லாண்டு
பாடவல்ல
நல்லோர்கள்!

என்பன போன்றவற்றை
எம்பிரானே! தந்தருள்வாய்!

ஆலிலையில் அமர்பவனே!
அருள்கூர்ந்து தந்தருள்வாய்!

நீலக்கல் நிறத்தவனே!
நெடியானே! தந்தருள்வாய்!

மாயோனே! மன்னவனே!
மாலே! தந்தருள்வாய்!

- S. நடராஜன், சென்னை
ravi said…

பழனிக் கடவுள் துணை -11.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-25

மூலம்:

தகாத நடைநடந்து தாரணியிற் பல்லோர்
விகாதம்விளைத் தேனை வெறுக்கேல் – அகாத
மனத்தார் தொழப்பழனி வாழ்முருகா! வல்லோர்
இனத்தாரச் செய்தருள்இன் றே (25).

பதப்பிரிவு:

தகாத நடை நடந்து தாரணியில் பல்லோர்
விகாதம் விளைத்தேனை வெறுக்கேல்! – அகாத
மனத்தார் தொழப் பழனி வாழ் முருகா! வல்லோர்
இனத்து ஆரச் செய்து அருள் இன்றே!!! (25).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

விகாதம்- விரோதம்;
அகாத- ஆழ்ந்த சிந்தனை;
இனத்து ஆர- கூட்டத்துள் பொருந்தும்படி;

பழனாபுரி ஆண்டவனே! இந்த உலகில், பலரிடம், அவர்களுக்கு ஏற்க ஒண்ணாத படி நடந்து அல்லது பலர் என்னிடம் தகாத படி நடந்ததால், பல பேரிடம் விரோதம் விளைத்த என்னை வெறுக்கேல்! நன்றே வருகினும், தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை; எல்லாம் உன் திருவுளப்படித் தான் நடக்கிறது என்பதை நான் அறிவேன் பழனிக் கடவுளே! உன்பால் ஆழ்ந்த சிந்தனையுடைய மனத்தார் உன்னையே நினைந்து, போற்றித் தொழுமாறு பழனியில் நின்று அருளோச்சும் பழனி வாழ் மன்னனே! பொய்யான உறவுகளில் சிக்கி தவித்த, தவிக்கும் என்னை, வல்லோர், நல்லோர் கூட்டத்துள் பொருந்தும்படி அருள் செய்து என்னைக் கா இன்றே!!!

பொய் உறவு என்று அறியாது சிக்கித் தவித்த, தவிக்கும் என்னை இன்றே வா! நின்றே கா! நன்றே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
மார்கழி சிறப்பு!

"" #கூடியிருந்து_குளிரும் #கூடாரவல்லி_உற்சவம்
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
மார்கழி மாத 27 ஆம் நாளே " கூடாரவல்லி " நாளாக, அழகான உற்சவமாக வைணவ ஸ்தலங்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் முப்பது திருப்பாவை பாசுரங்களை அருளிச் செய்தவள்.
அதில் 27வது பாசுரமான " கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப் " பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம் " எனும் பாசுரத்தை பாடியதும் #கண்ணன்_ஆண்டாளுக்கு #திருமணவரம்_தந்ததாக_ஐதீகம். கூடாரவல்லியன்று திருமால் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும், ஆண்டாளையும் தரிசிப்போருக்கு வாழ்வில் நல்வளங்கள் சேரும்.

27 ஆம் நாள் " கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் பாடல் பாடி , " மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் " என்றபடி பெருமாளுக்கு நெய் நிறைந்த #அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.

நோன்பு சமயத்தில் , " நெய்யுண்ணோம் , பாலுண்ணோம், கண்களில் மையிடோம், மலரிட்டு முடியோம் என்று பெண்கள் இறைவனுக்காக அனைத்தையும் தவிர்த்து பணிகின்றார்கள்.
மார்கழி மாதம் ஆன 27ஆம் நாளில் விரதம் முடிகின்றார்கள்.
12 ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக விளங்கிய ஆண்டாள் அருளிய பாசுரங்கள் தமிழன்னைக்கு சூடாமணியாக விளங்குகின்றன.

ஶ்ரீஆண்டாள்_திருவடிகளே_சரணம்.

நா_ஊறும்_அக்கார_அடிசல்

பண்டிகை, திருவிழா என்றாலே இனிப்பு இல்லாமல் இருக்காது.

நெய், வெல்லம் சேர்த்து செய்த அக்கார அடிசல் எனப்படும் இனிப்பு வகை பண்டிகை நாட்களில் பிரசித்தம்.

நெய் சொட்டச் சொட்ட செய்யப்படும் இந்த இனிப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனை வீட்டில் செய்து பாருங்களேன்.

தேவையான பொருட்கள்:-

பாசுமதி அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - ½ கப்
பால் - 750 மிலி
வெல்லம் - 2 கப்
முந்திரி,
திராட்சை - கால் கப்
ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 50 கிராம்
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு

செய்முறை:-

வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டவும்.
பின்னர் சுத்தமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.

அரிசி, பருப்பை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியையும், பருப்பையும் போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும்.

நன்கு வெந்தபின் வெல்லப்பாகை ஊற்றி அதனுடன் கொஞ்சம் நெய்யை விட்டு அடி பிடிக்காமல் கிளறவும்.

லேசாக கெட்டியான பின் அதில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும்.

மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறவும்.
கடைசியில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கவும்.

""ஶ்ரீஆண்டாள்_திருவடிகளே_சரணம்""🙏🕉️🚩🪷🙏
ravi said…
*"GOTRA"* in HINDUISM Vs *"GENE MAPPING!*

*Do you know why every time you sit for a Puja, the temple poojari asks you for your GOTRA ?*

*The Science behind GOTRA (Genetics), is nothing but what is today popularly known as _GENE ~ MAPPING._*

*What is the GOTRA system ?*

*Why do we have this system of Gotras ?*

*Why do we consider the knowledge of one's Gotra to be so important to decide marriages ?*

*Why should only Sons carry the Gotra of father, why not Daughters ?*

*How/Why does Gotra of a Daughter change after she gets married? What is the logic ?*

*In fact, this is an amazing and ancient genetic science that we follow. Let's see the SCIENCE of GENETICS behind our great GOTRA systems.*

*The word GOTRA is formed from two Sanskrit words, GAU (meaning, Cow) and TRAHI (meaning, Shed).*

*GOTRA means Cow-shed.*

*GOTRA is like a cowshed protecting a particular male lineage. We identify our male lineage / Gotra by considering to be descendants of the 8 great Rishi (Sapta Rishi + Bharadwaj Rishi). All the other Gotra evolved from these only.*

*Biologically, the human body has 23 pairs of chromosomes (one from the father and one from the mother). On these 23 pairs, there is one pair called Sex Chromosomes, which decides the Gender of a person.*

*During conception, if the resultant cell is XX chromosome, then the child will be a Girl. If it is XY, then it will be a Boy.*

*In XY - X is from Mother and Y is from Father.*

*In this, Y is unique and it doesn't mix. So in XY, Y will suppress the X and the son will get Y chromosomes. Y is the only chromosome that gets passed down only between male lineage. (Father to Son and to Grandson).*

*Women never get the Y chromosome. Hence, the Y chromosome plays a crucial role in genetics, in identifying the genealogy. Since women never get the Y chromosome, the Gotra of the woman is said to be of her husband, and therefore changes after she is married.*

*They are 8 different Y chromosomes from 8 Rishis. If we are from the Same Gotra, then it means we are from the same root ancestor.*

*Marriages between the same Gotra will increase the risk of causing genetic disorders as same Gotra Y chromosomes cannot have crossover, and it will activate the defective cells.*

*If this continues, it will reduce the size and strength of the Y chromosome which is crucial for the creation of males.*

*If no Y chromosome is present in this world, then it will cause males to become extinct.*

*The GOTRA system is thus an ancient method devised by our great Maharishis to avoid genetic disorders and attempt to protect the Y chromosome.*

*Amazing bio-science by our Maharishis. Our Heritage is unarguably THE GREATEST.*

*Our Rishis had the _"GENE MAPPING"_ sorted out thousands of years ago.

*Be proud of our Hindu Ancestors, they were most advanced than us*.🙏🪷🇮🇳🕉️
ravi said…
[11/01, 07:21] +91 96209 96097: **இஷ்டாய(அ) வசிஷ்டாய நமஹ*🙏
எல்லோராலும் விரும்பப்படுபவர்
எல்லோரையும் விரும்புவர்
[11/01, 07:21] +91 96209 96097: மனுவித்யா சந்த்ரவித்யா *சந்த்ரமண்டல மத்யகா* 🙏
மனத்தினில் மகிழ்ச்சி எழ அருள்பவள்
ravi said…
பிள்ளையாரின் அறுபடை வீடுகள்*

சங்கடஹர சதுர்த்தி 10-1-2023

முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதை எல்லோரும் அறிவோம். அதேபோல பிள்ளையாருக்கும் அறுபடை வீடுகள் உண்டு. அவை என்னென்னவென்று காண்போமா?

1. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்

ஊரின் பெயரே இறைவனின் திருப்பெயரால் அழைக்கப்படும் பெருந்தலம் இது. ராஜகோபுரங்களோடு கூடிய பொலிவு மிக்க தலமாக விளங்குகிறது. வரலாற்றுப் பெருமையும், புராணத் தொன்மையும் சுமந்து நிற்கும் பூமி இது. முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த கோயில் இது. திருவீங்கைக்குடி மாகாதேவர் எனும் திருவீசர் ஈசனாக அருளும் மகத்தான ஆலயமாகவும் இது விளங்குகிறது. இந்த ஆலயத்தில் குடைவரை அமைப்பிற்குள் கற்பக விநாயகர் அருட்காட்சி தருகிறார்.

Io
ravi said…
பிள்ளையாருக்கென அமைத்த இந்த தலத்தை பின்னாட்களில் பாண்டிய அரசர்களும் தங்களை திருப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

பிள்ளையார்பட்டியில் அருளும் பிள்ளையார் வலம்புரியாக இருப்பதால் மிகுந்த தத்துவம் பொதிந்த மூர்த்தமாக கருதப்படுகிறது. வலப்புற தந்தம் ஒடிந்ததான அமைதியில் காட்டப்பெறுவதன் மூலம் `ஓ’ என்ற எழுத்தின் தொடக்கச் சுழி கிடைத்து விடுகிறது. கையிலுள்ள மோதகம்தான் ‘ம்’ என்ற வரிவடிவத்தை உணர்த்துகிறது.

ravi said…
இவ்வாறு வலம்புரி பிள்ளையாராகவே இந்த தலத்தில் அருள்வதால் மற்ற மூர்த்தங்களைவிட சிறப்பு பெற்றதாக விளங்குவதை காணலாம். சாதாரணமாக மற்ற தலங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களோடு விநாயகர் அருள்கிறார். இந்த கற்பக விநாயகரை தரிசிக்க வாழ்வு வளம் பெறும். காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது.
ravi said…
2. விருத்தாசலம் ஆழத்துப் பிள்ளையார்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில். விருத்தாம்பிகை - பாலாம்பிகை சமேதராக அருள் பரப்பி வருகிறார் விருத்தகிரீஸ்வரர். நடுநாட்டு சிவாலயங்களில் ஒன்பதாவது திருத்தலம் இது விளங்குகிறது. விருத்த காசி, பழமலை, திருமுதுகுன்றம் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. நுழைவாயிலைக் கடந்து, உள்ளே சென்றவுடன் நாம் தரிசிக்கும் ஆழத்து பிள்ளையார் கிழக்கு முகமாக 18 அடி ஆழத்தில் இருக்கிறார். ஆழ் அகத்துப் பிள்ளையாரைத்தான் ஆழத்துப் பிள்ளையார் என்கிறார்கள்.

ravi said…
இங்கு 16 படிகள் உள்ளன. இந்த பதினாறு படிகளும் பிள்ளையாரின் முக்கியமான பதினாறு திருப்பெயர்களை சொல்வதாக உள்ளது. இதைத்தான் ஷோடச நாமாக்கள் என்பார்கள். ஷோடச என்றால் பதினாறு என்று பொருள். அந்த பெயர்கள் என்னவென்று பார்ப்போமா? ஸூமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணர், லம்போதரர், விகடர், விக்நராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்திரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர் என்கிற பதினாறு திருப்பெயர்களை நினைவூட்டுவதாகவே இந்தப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன.

ravi said…
3. திருநாரையூர்

திருநாரையூர் தலம் அரிதும், பெருஞ் சிறப்பும் வாய்ந்த தலமாகும். தமிழின் பொற்கிடங்கான தேவாரம் முதலான பதிகங்களை காட்டியருளிய அற்புதத்தை நிகழ்த்திய தலமாகும். தொடக்கத்திலிருந்தே ராஜராஜ சோழனுக்கு, ஏன் இப்படி சில பதிகங்கள் மட்டும்தான் கிடைத்துள்ளன. மற்ற பதிகங்கள் எங்கேயிருக்கின்றன என்கிற குறை இருந்து கொண்டேயிருந்தது. அப்போதுதான், திருநரையூர் எனும் தலத்தில் நம்பியாண்டார் நம்பி என்பார் அத்தலத்திலுள்ள ``பொல்லாப் பிள்ளையாரின்’’ அருள் பெற்றிருப்பதை அறிந்தார். உடனேயே அத்தலத்தை நோக்கிச் சென்றார்.

ravi said…
ஆதியில் மகாபாரதம் எழுதிய விநாயகப் பெருமான்தான் இப்போதும் தேவாரம் உள்ளிட்ட திருபதிகங்களை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று வேண்டினார்.

நம்பியாண்டார் நம்பியை வணங்கிய பேரரசன் கைகூப்பியபடியே, ‘‘தாங்கள் ஆதிநாயகனோடு அளவளாவுவதாக நம்புகிறோம். தாங்கள்தான் பெருமானிடம் பதிகங்கள் எங்குள்ளன’’ என்பதை கேட்டுச் சொல்ல வேண்டும் என்றான். பொல்லாப் பிள்ளையாரிடம் அதீத நம்பிக்கையோடு இருந்த நம்பியாண்டார் பெருமானின் கருணைப் பாதம் பற்றி ‘‘எங்கேயிருக்கிறது பதிகங்கள்’’ என்று கேட்டார்.

ravi said…
ஆதித்தலமான சிதம்பரத்தில் மேற்குப் பிராகாரத்தில் ஓர் அறையில் ஏடுகளாக உள்ளன என்று பிள்ளையார் தெரிவிக்க, அதை மன்னரிடம் நம்பியாண்டார் கூற எல்லோரும் சிதம்பரம் நோக்கி விரைந்தனர். தில்லை மூவாயிரவர்களிடம் இதைத் தெரிவிக்க அவர்கள் மறுத்தனர். ‘‘தேவாரம் படைத்த மூவர் வந்தால் திறப்போம்’’ என்றனர். ராஜராஜன் சிலா விக்ரகங்களாக மூவரையும் நிறுத்த, பின்னர் திறந்தனர். ஏடுகளை கரையான் புற்று கரைத்திருந்தது. வேண்டியதை மட்டுமே விட்டுவைத்து மீதியை மண்மூடச் செய்ததாக அசரீரியின் மூலமாக ஈசனே அப்போது அறிவித்தார்.

ravi said…
அதற்குப் பிறகு ஏடுகளை பத்திரமாக பிரித்து பாடம் செய்து பதிகங்களாக தொகுத்து அளித்தார், நம்பியாண்டார் நம்பி. அவருக்குப் பின்னால் இருந்து எல்லாவற்றையும் செய்து பதிகங்களை கொணர்ந்ததே கஜமுகனான பொல்லாப் பிள்ளையார்தான் என்பதை சொல்லத்தான் வேண்டுமா என்ன? திருப்பதிகங்களை அளித்த வேழ முகத்தோனை மறவாது தொழுங்கள். இத்தலம் சிதம்பரத்திற்கு அருகேயே உள்ளது.

ravi said…
. திருக்கடையூர்

சிறந்த சிவபக்தனான மார்க்கண்டேயனை எமன் பாசக்கயிறால் சுருக்கிட்டார். என் பக்தனையா பிடித்திழுத்தாய் என்று ஈசன் கொதித்தெழுந்தார். எமனான காலனையே சம்ஹாரம் செய்து காலசம்ஹாரமூர்த்தியாக இத்தலத்தில் அருட்கோலம் காட்டினார். எமனால் தீண்ட முடியாத தலமாக இது மாறியது. மேலும் ஈசனின் திருப்பெயரே அமிர்தகடேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருப்பெயரோ அபிராமியன்னை.

ravi said…
ஒருமுறை தேவர்கள் விநாயகப் பெருமானை துதியாது மறந்தனர். கொழுக்கட்டைக்குள் பூர்ணமான அமுதத்தை ஏந்தி நிற்கும் விநாயகரை மறந்துபோய் அதெப்படி அமுதத்தை பெற முடியும். அமுதம் வேண்டும் என்கிறபோதே அதை கையில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமானும் நினைவுக்குள் வர வேண்டுமல்லவா. முற்றிலும் மறந்தார்கள். அதனால் ஆதிநாயகன் அமுதத்தை மறைத்தான். அதுவும் அமுத லிங்கமாக தன் தந்தை உறையும் அமிர்தகடேஸ்வரன் ஆட்சி செய்யும் தலத்திலேயே தன் லீலையை நிகழ்த்தினான்.

மெதுவாக அமுத கலசத்தை எடுத்து வைத்துக் கொண்டான். தேவர்கள் தொடர்ந்து தேடினார்கள். ஈரேழு லோகங்களுக்கும் சென்று அலைந்தார்கள். யாரை முதலில் தொழவேண்டுமோ அவரைத் தொழ மறந்தோமே என்று இறுதியொதான் ஞானம் உதித்தது. விநாயகரின் பாதம் பணிந்தார்கள். ஆதிநாயகன் அமுதக் கும்பத்தை கொடுத்தான். தேவர்கள், இனி உம்மை மறக்காது துதிப்போம் என்றனர். இவ்வாறு விகடமாக பிள்ளையார் லீலை செய்த தலமே திருக்கடையூர் ஆகும். மயிலாடுதுறையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் திருக்கடையூர் எனும் இத்தலம் உள்ளது. பொதுவாகவே இங்கு அறுபதாம் கல்யாணம் என்கிற சஷ்டி அப்த பூர்த்தி திருமணத்தை நடத்துவர்.

5. திருச்சி உச்சிப் பிள்ளையார்

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பட்டாபிஷேகம் நிறைவுற்றது. விபீஷணன் உள்ளமும், கண்களும் குளிரக்குளிர ஸ்ரீராமரையும் சீதாப் பிராட்டியாரையும் தரிசித்தான். புறப்பட வேண்டுமே என்று கொஞ்சம் வருத்தமுற்றான். ராமரும் பிரிய மனமிலாது விடையளித்தார். ராமர், தன்னுடைய நினைவுப் பரிசாக தன் குலப்பதியான ஸ்ரீரங்கநாதரை அளித்தார். விபீஷணன், மகிழ்ந்து ஏற்று அயோத்தியிலிருந்து புறப்பட்டு திரிசிரபுரம் எனும் இன்றைய திருச்சிக்கு வந்தான். சற்று ஒய்வெடுக்க தீர்மானித்தான்.

காவிரிக்கு அருகேயே அங்கு சிறுவனாக வந்திருந்த விநாயகரிடம், ரங்கநாதரின் சிலையை கொடுத்துவிட்டு சென்றான். இத்தலத்தில்தான் இந்த ரங்கநாதர் பிரதிஷ்டையாக வேண்டுமென்று யார் தீர்மானித்தார்களோ இல்லையோ, ஞானமுதல்வன் தீர்மானித்து விட்டான். விபீஷணன் கைகளில் கொடுத்த ரங்கநாதரை அங்கேயே வைத்தார். மறைந்தார். அருகேயுள்ள மலையின் உச்சியில் சென்று அமர்ந்து கொண்டார். விபீஷணன் திரும்ப வந்தான், சிறுவனை காணவில்லையே என்று அதிர்ந்தான். அருகேயே ரங்கநாதர் பிரதிஷ்டை ஆகியிருப்பது பார்த்து திகைத்தான்.

ரங்கநாதரை எடுத்துச் செல்லலாம் என்று எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை. இது அந்த ஆதிநாயகனின் லீலைதான் போலும் என்றுணர்ந்து ஸ்ரீரங்கத்திலேயே பிரதிஷ்டை செய்தார். சிலையை கொடுத்து விட்டுச்சென்ற சிறுவன் மலையின் மீதுள்ளதை அறிந்த விபீஷணன் அங்கு சென்று பார்த்தான். ஏன் அப்படி கீழே வைத்தாய் என்று கோபம் காட்டி குட்டு வைத்ததாகவும் கூறுவர். உச்சிப் பிள்ளையாரின் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு உள்ளதாக சொல்வார்கள்.

6. திருவண்ணாமலை

திருவண்ணாமலை கோயிலில் அருளும், செல்வக் கணபதி, சிவகங்கை விநாயகர், ஆனைத் திரை கொண்ட விநாயகர், செந்தூர விநாயகர் எனும் சம்மந்த விநாயகர், க்ஷேத்ர விநாயகர் என்று ஐந்து முக்கிய விநாயகர் சந்நதிகள் உள்ளன. இதில் அறுபடை வீடாக எதைக் கொள்ளலாம் எனும் ஐயம் உள்ளது. ஆனாலும், ஔவையார் இத்தலத்திலுள்ள ஓர் விநாயகர் மீது ஆதாரப்பூர்வமாக பாடலை இயற்றியிருக்கிறார்.

அல்லல் போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத்

துயரம்போம் நல்ல

குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும்
ravi said…
*💐💐💐 💐🌹"இன்றைய சிந்தனை"..(11.01.2023 )* …............................... *"பாராட்டுங்கள்"..*
.........................................
நமது குணங்களில் தலையாய குணம் மற்றவர்களின் நல்ல செயல்களை இதய சுத்தியுடன் பாராட்டுவது.. மாலைக்கும், மரியாதைக்கும் மயங்குபவர்கள் பலர். இன்னும் சிலரோ எத்தனையோ சாதனைகள் அல்லது நல்ல செயல்கள் செய்து இருந்ததாலும் பாராட்டைப் பெற தவிர்த்து விடுவார்கள்.. மற்றும் வெறும் புகழ்ச்சிக்கு மயங்க மாட்டார்கள்..

ravi said…
ஆனால் மனித வாழ்வில் பாராட்டு, எதிர்பார்ப்புடன் இருப்பது சர்வ சாதாரணம். மனித மனம் பாராட்டுகளைத் தொடர்ந்துப் பெற நினைக்கும். இந்த நினைப்பால் அவர்களது சாதனைகள் ஒரு தொடர்கதையாகவே இருக்கும். எனவே பாராட்டுப் பெற வேண்டியவர்களை நாம் பாராட்டத் தவறினால், நல்லது செய்வதற்கான மனம் படைத்தவர்களே சற்று ஒதுங்கி,நல்லது செய்வதை நிறுத்தி விடுவார்கள். சிலர் உரிய பாராட்டுக் கிடைக்காத போது எவ்வளவு நல்லது செய்தும் இவர்கள் ஒருவர் கூட நன்றி கூடத் தெரிவிக்கவில்லையே என மனம் வருந்துபவர்களும் உண்டு. நாம் தான் அப்படிப்பட்டவர்களைத் தேடிக் கண்டு பிடித்து பாராட்டு செல்ல வேண்டும்..

ravi said…
ஆம்.தோழர்களே.*

*மற்றவர்களின் நல்ல பண்புகளை,* *செயல்களை, குணங்களை மனம் திறந்துப் பாராட்டுங்கள். உங்கள் பாராட்டின் மூலமாக ஒருவருக்கு அங்கீகாரம் கிடைக்கின்ற போது அவர் உங்களை மேலும் பன்மடங்கு விரும்புவதோடு உங்கள் மீது மிகுந்த நல்மதிப்பைக் கொண்டு இருப்பார்...✍🏼🌹*

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_


எந்த உறவிலும் சுமையாகிக்
கனத்துப்போய் விடாமல்

ஒரு புன்னகையோடு விடை
பெற முடிந்தால் நலம்

அதுவே அவ் உறவுக்கு நாம்
செய்யும் மரியாதையும் கூட.....

*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
ravi said…
🌹🌺 "Swami! What is the meaning of your saying that today is a wonderful day? Mother Lakshmi Devi asked...
-------------------------------------------------- ------

🌹🌺One day Lord Vishnu was teaching Adhisana in the ocean of milk. Lakshmi Devi was sitting at Vishnu's feet and doing her service.

🌺Thirumal, who was keeping his eyes closed, suddenly said, Aha! Wonderful! Amazing view! He made a distressed noise.

🌺 Adiseshan and Goddess Mahalakshmi were stunned to see him in this condition. Adiseshan and Mahalakshmi asked Mahavishnu about their doubts.

🌺 Swami! What is the meaning of your saying that today is a wonderful day? They said.

🌺 I saw with my wise eye the Ananda Thandavam sung by Lord Shiva today on Thiruvadhirai day. Mahavishnu said that he said so because he was mesmerized by it.

🌺And when he told about Lord Shiva's Ananda Thandavam, even Adiseshan was thrilled. Lord Vishnu who saw the ecstasy of Adisesha, Adisesha! I understand your desire.

🌺If you also want to see Lord Shiva's Ananda Thandavam, you must be born on earth and do penance. Then you will see that wonderful dance. Get out now! Mahavishnu answered by saying. Adiseshan also incarnated as sage Patanjali on earth.

🌺His body structure was human body up to the waist and serpent form below the waist.

🌺 Due to Sage Patanjali's penance for many years, one day on Tiruvadhirai day, Lord Shiva showed his dance performance to Sage Patanjali in Chidambaram. Arudra darshan on that day itself.....🌹🌺

🌺 On this very day, Lord Nataraja gave a vision to Sage Patanjali and Sage Vyagrapada and showed them dancing.

🌺Not only that, on this very day, after completing Thiruvemba of Manikkavasaka, he visited Isaan. It is believed that on this same day, Eason also blessed Kamadenu, the divine cow.

🌺Considering this day as the day Lord Shiva agreed to marry Parvati after enjoying her penance, even today virgins observe this to get a good husband for themselves.

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹Valga Valamudan 🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*🙇🏻‍♂️ _TODAY'S G.K._ 🙇🏻‍♀️*


*🤔 Do you know?*

1. The World Peace Day is celebrated on September 21.

2. The chemical name of sand is silicon - di - oxide.

3. The old name of Pondicherry is Vedapuri.

4. Insulin is secreted from pancreas.

5. The metal, which is in liquid state is mercury.

6. The Polio vaccine was developed by Albert Sabin.

7. A.P.J.Abdul Kalam was called as missile man of India.

8. The planet uranus takes 84 years to move around the sun.

9. The Queen of Spices is called, cardamom.

10. There is no snake in Hawaii island.

*🤔 உங்களுக்குத் தெரியுமா?*

1. செப்டம்பர் 21, உலக அமைதி தினம்.

2. மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.

3. பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.

4. இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.

5. திரவ நிலையில் உள்ள உலோகம்இ பாதரசம்.

6. போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர் ஆல்பர்ட் சாபின்.

7. இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்படுபவர், ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் ஆவார்.

8. யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.

9. வாசனைப் பொருட்களின் ராணி என அழைக்கப்படுவது, ஏலக்காய்.

10. பாம்பு இல்லாத தீவு, ஹவாய் தீவு.


🌷🌷
ravi said…
🌹🌺" *குறைந்த ஆயுள்*
*கொண்ட புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா அல்லது அறிவற்ற நீண்ட* *ஆயுளை உடைய சாதாரண மகன் வேண்டுமா* ? *என்று கேட்ட சர்வேஸ்வரன்* ..... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺ஜகத்குரு ஆதி சங்கரர் வாழ்க்கை வரலாறு படிக்க படிக்கச் திகட்டாத ஒன்று. அவர் தன் மிகக்குறுகிய வாழ்நாளில் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார்.

🌺மிகவும் நலிவுற்று இருந்த இந்து மதத்தையும் வேதங்களையும் காத்து அருளினார். பல நூல்களை இயற்றியுள்ளார். நம் அகண்ட பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் அத்வைத மடங்களை நிறுவி இந்து மதத்தை பரப்பினார். இனி ஶ்ரீசங்கர பகவத் பாதாள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை காணலாம்.

🌺கி.பி. 7ம் நூற்றாண்டில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடி என்னும் ஊரில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற அந்தண தம்பதியினர் வசித்து வந்தனர்.

🌺அவர்கள் இறைவன் மீது மிகுந்த பக்தி கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர். ஆனால் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற மனக்குறை இருந்து வந்தது.

🌺இதை பார்த்த பெரியோர்கள் அவர்களுக்கு உகந்த ஒரு ஆலோசனை கூறினர். திருச்சூர் என்னும் ஊரில் வடக்குநாதன் என்ற பெயருடன் சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். அவரை தொடர்ந்து ஒரு மண்டலம் பூஜை செய்யுமாறு அறிவுறுத்தினர்.

🌺ஆகவே சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதியினரும் பெரியோர்கள் அறிவுரைப்படி மிகுந்த பக்தி கொண்டு பூஜை செய்தனர்.
தங்களுக்கு புத்திர பாக்கியம் வேண்டும் எனபதற்காக திருச்சூர் வடக்குநாதரை வேண்டி மிகவும் கடுமையான விரதங்களை அவர்களிருவரும் மேற்கொண்டனர்.

🌺அவர்களின் தூய்மையான பக்தியை கண்டு மகிழ்ந்தார் வடக்குநாதர். சிவகுருவின் கனவில் தோன்றி உங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஆனால் ஒரு நிபந்தனை.

🌺குறைந்த ஆயுளுடன் எல்லா நற்குணங்களும், ஞானமும்,
அறிவும் மற்றும் ஒழுக்கமும்
கொண்ட புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா அல்லது அறிவற்ற நீண்ட ஆயுளை உடைய சாதாரண மகன் வேண்டுமா? என்று கேட்டார்.

🌺இந்த இரண்டு வரங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். ஆனால் பக்தியில் சிறந்த சிவகுரு, எதை குடுக்க வேண்டும் என்று தங்களுக்கு தெரியும். தாங்கள் எதை குடுத்தாலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு அதை ஏற்று கொள்வோம் என்றார்.

🌺இந்த பதிலால் உள்ளம் மகிழ்ந்த ஈசன், நானே உங்களுக்கு மகனாக பிறப்பேன் என்று ஆசி கூறினார். சிவகுருவின் கனவைக் கேட்ட ஆர்யாம்பாள் மனமகிழ்ந்து தங்களுக்கு ஒரு ஞானக்குழந்தை மகனாகப் பிறப்பான் என்று எண்ணி ஆனந்தம் அடைந்தாள். உள்ளம் மகிழ்ந்த தம்பதியினர் தங்கள் ஊரான காலடிக்கு திரும்பினர்.

🌺இறைவன் அளித்த வரத்தின் படி காலடியில் வைகாசி மாதம், வளர்பிறை பஞ்சமியன்று சூரியன், செவ்வாய், சனி, குரு ஆகிய நான்கு கிரஹங்கள் உச்சத்தில் இருக்கும் சுபவேளையில் திருவாதிரை நட்சத்திரத்தில் இறைவனின் அருளால் தெய்வீகக் குழந்தை இந்த பூமியில் அவதரித்தது.

🌺சிவபெருமானே தெய்வத்தாய் ஆர்யாம்பாளுக்கு மகனாக பிறந்தார். பிள்ளையில்லா தசரதனுக்கு மகாவிஷ்ணுவே ராமராக அவதரித்தது போல, சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு ஈசுவரனே குழந்தையாகப் பிறந்தது பெரும் பாக்கியமே.

🌺பிள்ளை பிறந்த மகிழ்ச்சியில் சிவகுரு தான தருமங்கள் செய்து சான்றோர்களுக்கு விருந்து அளித்து கொண்டாடினார்.

🌺சோதிடர்கள் இவன் ஒரு பெரிய ஞானியாவான் என்று கணித்து கூறினார்கள். அந்த இளம் குழந்தையைச் சுற்றி நாகம் ஒன்று சிறிதுநேரம் விளையாடி அதன் பின்னர், விபூதியாகவும் மறறும் ருத்ராட்சமாகவும் மாறியது கண்டும், உடலில் சிவச் சின்னங்கள் இருந்ததாலும் குழந்தைக்கு சங்கரன் என்று பெயர் சூட்டப்பட்டது.

🌺 அந்தக் குழந்தையின் தெய்வீக அழகை கண்ட மக்கள் இது சாதாரண குழந்தை இல்லை. இது தெய்வீக குழந்தை என்பதை உணர்ந்தனர்.
குறும்புக் கண்ணனைப் போலவே, குட்டிச் சங்கரனும் குழந்தை பருவத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்,

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 "Short life
Do you want a brilliant child with a mind or an ordinary son with a long life without intelligence? Sarveswaran asked..... A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Jagatguru Adi Shankar's biography is a must read. He has performed many miracles in his very short life.

🌺 He saved Hinduism and Vedas which were very weak. He has authored many books. He spread Hinduism by establishing Advaita Maths in the four directions of our great Bharata nation. Now you can see the biography of Sri Sankara Bhagwat Badal.

🌺 AD In the 7th century, a devout couple named Sivaguru and Aryambal lived in Kaladi near Ernakulam, Kerala.

🌺 They had great devotion to the Lord and helped the poor and needy people as much as they could. But there was a complaint that they did not have children.

🌺 The elders saw this and gave them a suitable advice. In the town of Thrissur, Lord Shiva has risen with the name of Vadukanathan. They advised him to perform a mandal pooja.

🌺So Sivaguru Aryambal couple also performed pooja with great devotion as advised by their elders.
Both of them performed very strict fasts to pray to the Thrissur North Nathara for the blessing of a son.

🌺 Vadukhanathar was happy to see their pure devotion. You will be blessed with a son by appearing in Shivaguru's dream. But one condition.

🌺 With short life all virtues and wisdom,
Knowledge and discipline
Do you want a brilliant child with a mind or an ordinary son with a long life without intelligence? he asked.

🌺 He said that one should choose one of these two blessings. But Shiva, the best in bhakti, knows what to drink. He said, "Whatever you drink, we will accept it very happily."

🌺Isaan was pleased with this answer and said blessing that I will be born as your son. Hearing Shivaguru's dream, Aryambal felt happy and thought that a wise child would be born to them as a son. The happy couple returned to their hometown Kaladi.

🌺According to the boon given by the Lord, the divine child incarnated on this earth by the grace of the Lord in the Tiruvadhirai Nakshatra at the auspicious time when the four planets namely Sun, Mars, Saturn and Guru were at their peak in the month of Vaikasi, Vakarirai Panchami.

Lord Shiva himself was born as the son of Aryambalu. Just as Maha Vishnu himself incarnated as Rama to the childless Dasaratha, it was a great blessing that Lord Shiva was born as a child to the Sivaguru-Aryambal couple.

🌺 In the joy of the birth of the child, Shivaguru celebrated by giving gifts and giving a feast to the witnesses.

🌺 Soothsayers predicted that he is a great sage. A naga played around the young child for a while and then transformed into a vibhuti and forgetful rudraksha, and the child was named Shankaran because of the symbols of Shiva on its body.

🌺 People saw the divine beauty of that child, this was no ordinary child. They realized that this was a divine child.
Like the mischievous Kannan, Kutich Shankaran performed many miracles in his childhood,

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*சிவாயநம*

வருகிற பொங்கலை முன்னிட்டு ( 15-01-2023 ) நமது ஓம் நமசிவாய அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள், உடை போன்ற நலத்திட்ட உதவிகள் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வெறும் பார்வையாளராக மட்டும் இல்லாமல் அனைவரும் நமது அறக்கட்டளையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

இந்த அற்புதமான சிறப்பான நன்நாளில் நம் குடும்பத்துடன் பொங்கலை பொங்கி மகிழ்ச்சியாக கொண்டாடுவது போல, நம்மால் இயன்ற வகையில் இயலாத மக்களின் வாழ்க்கையிலும் சந்தோஷம் பொங்கி மகிழ நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

கோடி தானங்கள் செய்தாலும் அது இந்த அன்னதானம் என்ற ஒரு தானத்திற்கு ஈடாகாது. எனவே அற்புதமான இந்த பொங்கல் பண்டிகையில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அன்னதானம் வழங்க அனைவரும் தங்களால் இயன்ற நிதி உதவிகளை நமது ஓம் நமசிவாய அறக்கட்டளைக்கு வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அனைவரும் இணைந்து செய்யும் இந்த உதவியின் மூலம் அதிகப்படியான ஏழை எளிய மக்களுக்கு உதவ முடியும்.

குழுவில் உள்ள அனைவரும் தங்களால் இயன்ற நன்கொடையை கீழே குறிப்பிட்டுள்ள அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 👇
_____________________________

*வங்கி விவரம் :*

Name : Om Namasivaya Charitable Trust

Account Number : 39740686917

IFSC Code : SBIN0002197

Bank Name : State Bank of India

Branch : Aramboly
______________________________

*G-PAY Number 8300845263*

*Phonepe number 8300845263*

____________________________

*மேலும் விபரங்களுக்கு,*

அறக்கட்டளை தொலைபேசி எண் : 8300845263

தொடர்ந்து நமது அறக்கட்டளைக்கு நிதி உதவிகள் செய்து வருகின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

*ஓம் நமசிவாய🙏*
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 23*

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை

*பொருள்.*

வழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன் படாமல் போகும், அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும், வெள்ளை எருக்கம் பூ பூக்கும் , பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும், மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும். ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சனையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக்கூடாது

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
💛💛💛💛💛💛💛💛💛💛💛

💛காலால் மிதித்த தன்னை, கையால் எடுக்க வைக்கும் பெருமை கொண்ட முள்ளைப் போல, உங்களைத் தாழ்த்திப் பேசுபவர்கள், உங்களைப் புகழ்ந்து பேசுமாறு மாற்ற உங்கள் முயற்சியை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.

💛உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து மகிழ்ச்சியுடன் இருங்கள். ஏனென்றால் பலர் எதுவுமே இல்லாமல் இங்கே வாழ்க்கையை
கழிக்கின்றார்கள்.

💛பிரச்சனை என்று சொல்லும் பொழுது கவலையும் பயமும் தொற்றிக் கொள்ளும். அதுவே சவால் என்று சொல்லும் போது தைரியமும் தன்னம்பிக்கையும் தானாகவே வரும்.

💛💛💛💛💛💛💛💛💛💛
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*


🙏
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க அருள் புரியும் கள்ள விநாயகர் பற்றிய பதிவுகள் :*

கள்ள விநாயகர் ஆலயத்தின் தொடக்கத்தில் கன்னி மூலையிலோ அல்லது முச்சந்திகளிலோ இல்லை.

ஆலயத்தின் உள்ளே மகா மண்டபம் பகுதியில் ஈசனை பார்த்தபடி ஓரு ஓரத்தில் உள்ளார்.

அதாவது அமிர்தம் எடுத்து பதுங்கி இருந்ததை சுட்டிக் காட்டுவது போல அவரது சன்னதி மகா மண்டபத்தில் ஈசனின் கருவறைக்கு தென் கிழக்கில் ஓரு ஓரமாக உள்ளது.

அவரது துதிக்கையில் அமிர்த கலசம் உள்ளது. இதன் காரணமாக இந்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

இவரை மனம் உருகி வழிபட்டால் இழந்த செல்வங்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.

உறவினர்கள் மற்றும் பகைவர்களிடம் நீங்கள் எதையாவது இழந்து தவித்தால் இந்த விநாயகரை வழிபட சுபம் ஏற்படும்.

முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. அதில் இத்தலத்து கள்ள வாரண விநாயகர் மூன்றாம் படை வீட்டுக்கு அதிபதியாக உள்ளார். சமஸ்கிருதத்தில் இவரை சோர கணபதி என்று அழைக்கிறார்கள்.  

அபிராமியைத் தொழுது அருள்பெற்ற அபிராமி பட்டர் விநாயகரை வணங்கிப் பாடியது திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம்.

பத்து பாடல்கள் கொண்ட இப்பதிகத்தில் கள்ள விநாயகர் திருவுருவ அழகு, வழிபடும் முறை மற்றும் சிறப்பினைக் கூறுகிறது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 455* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*191 * दुःखहन्त्री - துக்கஹந்த்ரீ --*

பக்தர்களின் துயரங்களை, துன்பங்களை, துக்கங்களை, நீக்குபவள் அம்பாள்.

எல்லா துன்பத்துக்கும் அடிப்படை காரணம் சம்சார பந்தம்.

இந்த பற்று விடத்தான் பற்றற்றவனான காமேஸ்வரன், பரமேஸ்வரனின் திருவடிகளை பற்றிக் கொள்வது. உலக வாதனைகளிலிருந்து மீள்வதற்கு.🙌🙌🙌
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 51*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
ऊरीकरोमि सन्ततमूष्मलफालेन ललितं पुंसा ।

उपकम्पमुचितखेलनमुर्वीधरवंशसम्पदुन्मेषम् ॥ ३५॥

35. Oori karomi santhatha mooshmala phaalena laalitham pumsaa,

Upakampa muchitha khelanam oorvadhara vamsa sampad unmesham.

ஊரீகரோமி ஸன்ததமூஷ்மலபாலேன லலிதம் பும்ஸா |

உபகம்பமுசிதகேலனமுர்வீதரவம்ஶஸம்பதுன்மேஷம் ||35||
ravi said…
எனக்கு என்ன வேலை?

காஞ்சி நகரவாசி யாகிவிட்டேன், காமாக்ஷி தாசனாகி விட்டேன்.

அவளை தியானிப்பதே என் லக்ஷியம்.

அவள் முகம் எவ்வளவு குளுமையோ அவ்வளவு சூடாக இருக்கும் சிவனின் நெற்றி.

அக்னி குடியிருக்கும் நெற்றிக்கண் இருக்கும்போதே சூடு இல்லாமலா இருக்கும்?

ஹிமவான் வம்ச குல ரத்னம் அவ்வளவுக்கவ்வளவு குளுமையான கண்களை கருணையை காட்டுபவள் ..

நமஸ்கரித்து வணங்குகிறேன்.🙌🙌
ravi said…
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா!

உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே

தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார

கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.🦢🦢🦢
ravi said…
எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே!

உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம்.

அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக!

அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது.

கையில் அணியும் சூடகம்,

தோளில் அணியும் பாஹுவலயம்,

காதில் அணியும் தோடு, கர்ணப்பூ,

காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு.

புத்தாடைகளை வழங்கு.

பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில்,

கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

30 நாட்கள் சாப்பிடாத இவ்வயிரு ஸாகரம் போல் உன் கருணை கண்டு சாப்பிடட்டும் நெய் சோறு *கண்ணா*
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

37 –
சோம்பியாய்ச் சும்மா சுகம் உண்டு உறங்கிடில்

சொல் வேறு என்கதி அருணாசலா (அ)
ravi said…
தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய அருணாசலா!
திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே!

உன் பெயர் சொன்னால் அது பழம் போல் இனிக்கிறது.

பால் போல் சுவையாக இருக்கிறது.

உன்னைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது சிரமமானது.

உன்னை எளிதாகப் பிடித்து விடலாம் எனச் சொல்கிறார்களே தவிர,

தேவர்களால் கூட அதைச் செய்ய முடியாது.

உன்னுடைய வடிவம் என்ன?

இவன் தான் அவனோ? என்று அனுமானிக்கத் திணறும் தேவர்களுக்கே காட்சி தராத நீ,

இதோ, என் நிஜ வடிவம் இதுவே எனச் சொல்லி, இதோ! எங்கள் முன்னால் இருக்கிறாய்.

எங்களை நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைச் செய் என்றே உன்னிடம் கேட்போம். எம்பெருமானே!

நீ எழுந்தருள்வாயாக.

அருணாசலா ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்து ஆன்ம சுகம் கண்டு உறங்குகிறேன்

வேறு கதி உண்டோ எனக்கு நீ யே சொல் அருணாசலா !!!💐💐💐
ravi said…
❖ *78 மஹாகணேஷ நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா =*

விஷுக்ரன் உருவாக்கிய விக்னயந்திரத்தை மஹாகணபதி நிர்மூலமாக்கியதால் குதூகலித்தவள்🙌🙌🙌
ravi said…
வேழம் தோற்குமோ

ஆழம் கொண்ட பக்தி தாழம் பூவின் வாசமன்றோ

பேரம் பேசி வாங்குவதில்லை பக்தி

பிழை பொறுக்க இறை தேடும் கலை ஒன்றே பக்தி ...

எதுவும் நிலையில்லா வாழ்க்கை இதில் தந்தம் தரும்

தவப்புதல்வன் தாள் பணிந்தால் நிறைந்த அமைதி கிடைக்குமன்றோ !

தந்தம் உடைத்து பாரதம் எழுதினான்

கந்தம் சூடி தாள் பணிவோம்

காந்தம் போல் அவன் தன்னில் சேர்ப்பான் ....
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 437*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

ஸ்லோகம் 59.
ravi said…
ஹம்ʼஸ꞉ பத்³மவனம்ʼ ஸமிச்ச²தி யதா²

நீலாம்பு³த³ம்ʼ சாதக꞉
கோக꞉ கோகனத³ப்ரியம்ʼ

ப்ரதிதி³னம்ʼ சந்த்³ரம்ʼ சகோரஸ்ததா² |

சேதோ வாஞ்ச²தி மாமகம்ʼ பஶுபதே சின்மார்க³ம்ருʼக்³யம்ʼ

விபோ⁴
கௌ³ரீநாத² ப⁴வத்பதா³ப்³ஜயுக³லம்ʼ
கைவல்யஸௌக்²யப்ரத³ம் || 59 ||
ravi said…
*நீலாம்பு³த³ம்ʼ சாதக꞉ –*

சாதக பக்ஷின்னு ஒண்ணு இருக்கு, அதுக்கு கழுத்துல ஓட்டை இருக்கும், அதனால பூமியிலிருந்து ஜலத்தை குளத்திலிருந்தோ, பாத்திரத்திலிருந்தோ குடிக்க முடியாது,

மழைநீர் மேகத்திலிருந்து கொட்டும்போதுதான் “ஆ“ன்னு வாய காமிச்சுண்டு குடிக்கும்.

அப்படி எப்படி ஒரு, “ *சாதக: நீலாம்பு³த³ம் ஸமிச்சதி”* ,

சாதக பக்ஷியானது கார்மேகத்தை எப்படி வேண்டுகிறதோ

*கோக꞉ கோகனத³ப்ரியம்ʼ* –

சக்கரவாகப் பக்ஷின்னு ஒண்ணு, அது தபஸ் பண்றவாள, இந்த சக்கரவாக பக்ஷிகள் ஏதோ தபச கலச்சதாகவும், அதனால முனிவர்கள், சக்கரவாகப்பக்ஷி, அது காதலர்கள் மாதிரி, ஆனா அதுக்கு முனிவர்கள் சாபம்.

ராத்திரியெல்லாம் நீங்க பிரிஞ்சு இருப்பேள் சேர முடியாது.

அதுனால எப்படா சூரியன் வரும்னு காத்துண்டே இருக்குமாம்,
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 57 started on 6th nov

*பாடல் 20* ...💐💐💐
ravi said…
*பாடல் 20 ... அரிதாகிய மெய்*

(உபதேசம் பெற்றதை வியத்தல்)

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா

விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.
ravi said…
*விரி தாரண ...* விரிந்து பரந்த உறுதியான உள்ளம் கொண்டவனே,

*விக்ரம* ... மிகுந்த வலிமை உடையவனே,

*வேள்* ... எல்லோராலும் விரும்பப்படுகின்றவனே,

*இமையோர் புரி தாரக ...*

தேவர்கள் விரும்பும் தாரகப் மந்திரமாம்
பிரணவப் பொருளே, விண்ணுலகோரைக் காத்த தேவசேனாபதியே,

*நாக புரந்தரனே* ... தேவ லோகத்தைத் தாங்குபவரே,

*அரிது ஆகிய மெய்ப் பொருளுக்கு ...*

அடைவதற்கு அரிது
ஆகிய உண்மைப் பொருளைப் பெறுவதற்கு,

*அடியேன்* ... அடியேனாகிய நான்,

*உரிதா உபதேசம் உனர்த்தியவா ...*

தகுதி உடைவனாகும்படி
உபதேசம் செய்து உணர்த்தி அருளிய திறம் ஆச்சரியமானது
ravi said…
எங்கும் விரிந்து எதையும் தாங்கும் பொறுப்பை உடைய
பராக்ரமசாலியே,

தேவர்கள் சதா தியானம் செய்யும் பிரவண
சொரூபியே,

விண்ணுலகத்தைக் காப்பவனே,

கிடைப்பதற்கு
அரிதாகிய மெய்யுணர்வாகிய சிவஞானத்தை அடியேனுக்கு
உரியவை ஆகும்படி எனக்கு உபதேசம் செய்த பெருமையை
என்னவென்று சொல்வது?🙌🙌🙌
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 438* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

*ஸித்திஸ்* :‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
கண்ணா நீயா ... வந்து விட்டாயா ...

இல்லை இதுவும் கானல் நீரா ...

உனை பார்ப்பதை போன்ற பிரமையா ?

இதோ கண்களை மூடப்போகிறேன்

உன் மாயாஜாலங்கள் வேண்டாம்

ஒரு முறை ஒரே ஒருமுறை என் நேரில் வா கண்ணா ...

அம்மா இது மாயம் இல்லை சத்தியம்

உன் குரல் துவாரகாவில் இருந்த எனக்கு கேட்டது தாயே ...

நீ தான் என்னை தொலைத்து விட்டாய் ...

மதுரா செல்லும் போது ஏன் மீண்டும் என்னை உரலில் கட்டிப்போடவில்லை ..

கம்சனை கோகுலம் ஏன் அழைக்க வில்லை ...

கோபியர்கள் நான் போகும் போது அழுதார்களே நீ மட்டும் சிரித்து போ கண்ணா உன் மாமனை கொல் ... என்றாய் ..

கொன்றுவிட்டு திரும்பி என்னுடம் பழைய கண்ணனாய் வந்து விடு என்று ஏன் கேட்க வில்லை ... நான் உன்னை என்றும் தொலைத்து இல்லை தாயே !

கண்ணா ... உன்னை திரும்பி வா என்று சொல்லாதற்கு எனக்கு இத்தனை பெரிய தண்டனையா ?

இல்லை தாயே தண்டனை உனக்கு அல்ல எனக்கு ... மதுராவில் நான் மகிழ்ச்சி யாக இல்லை துவாரகாவில் துன்பம் ஒன்றே துணை ...

தேவகி நந்தகோபன் பாவம் என்ன பாவம் செய்தார்களோ என்னை குழந்தே என்று கொஞ்சியது இல்லை ...

உனக்கு மட்டும் நான் சொந்தம் என்று நீ இன்னும் நினைத்துக்கொண்டு இருப்பது நியாமா *அம்மா* .
ravi said…
➿➿➿➿➿➿➿➿➿➿➿

🤔 *நாளும் ஒரு சிந்தனை:*

நான் எனும் ஆணவம் தகர்த்தெறியப்பட்ட பிறகு எது மீதமிருக்கின்றதோ
அதுவே உண்மையான அன்பு!

🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்:*

சோம்பு சேர்த்த தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பின் குடித்தால் *செரிமான பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம்* குணமாகும்.

📰 *நாளும் ஒரு செய்தி:*

யமுனை ஆறு கடலில் கலக்கவில்லை.

🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு:*

தேங்காய் அரைக்கும்போது தேங்காயின் பின்புறமுள்ள தோலை நீக்கிய பின் சட்னி அரைத்தால் வெண்மையாக இருக்கும்.

*💰நாளும் ஒரு பொன்மொழி:*

சினத்தை வென்று விட்டால் அடக்கம் தானாக வரும்.
*-மகாவீரர்*

*📆 இன்று சனவரி 11-*

▪️ *பன்னாட்டு சிரிப்பு நாள்.*

💐 *நினைவு நாள்* 💐

⭕1932- *திருப்பூர் குமரன்* (விடுதலைப் போராட்ட வீரர்)

⭕1966- *லால்பகதூர் சாஸ்திரி* (இந்தியாவின் 2-ஆவது பிரதமர்)

➿➿➿➿➿➿➿➿➿➿➿

*(பகிர்வு)*
ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍*


*NONPLUSSED*

*(செய்வதறியாது, திகைப்படைதல்)*

meaning..... confused about how to behave or respond.....


1. Even the experienced doctor was *nonplussed* when he saw the patient with a needle in his skull.


2.  While our host and hostess argued during dinner, my wife and I were *nonplussed* and not sure of whether or not to intervene.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
*27. கூடாரவல்லி*

*திருப்பாவை- 27ஆம் பாசுரம்:*

_கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்_
_பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்_
_நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே_
_தோள்வளையே தோடே செவிப்பூவே_
_பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்_
_ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு_
_மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்_
_கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்_ !

*விளக்கம்:*

அறக் கருணையாலோ-
மறக் கருணையாலோ-

பகைவரை வெற்றிகொள்ளும்
பரந்தாமனே!
பரவுவோர்க்கு அருள்செய்யும்
பரமேட்டியே!

உயரிய உந்தன்
உதார குணத்தை-
உலகமும் உணர்ந்து போற்றட்டும்;
நீ செய்யும் உதவியை-
ஒவ்வோர் உயிரும்
உன்தாள் பணிந்து ஏற்கட்டும்!

உன்னுடைய பேரை-
உன்னுடைய சீரை-
உளமாரப் போற்றினோம்;
உவகை கொண்டு- நீ
உதவும் பரிசுகளை
ஒன்றன்பின் ஒன்றாகச் சாற்றுவோம்!

அணியத்தக்க ஆடைகள்;
ஆடைக்கேற்ற அணிகள்-
கை வளை;
தோள் வளை;
கால் வளை;
காதோலை;

இன்ன பிற
வளைகள்;
குழைகள்;
இலைகள்;
நகைகள்;

நாயகனே! உன்னையெண்ணி
நாளும் நோன்பு நோற்போம்!
நோற்கும் நோன்புக்குப் பரிசாய்
நீ உதவியவற்றை ஏற்போம்!

அகம் கனிவோம்;
அணிகளை அணிவோம்;
அனைத்தும் அளித்த உந்தன்
அருளடி பணிவோம்!

ஆடை உடுத்தி-
அணிகளைத் திருத்தி-
அடிசில் சமைத்து-
உண்போம் சுவைத்து!

அடிசிலில் ஊற்றிய
அத்துணை நெய்யும்-
முழங்கையின் வழியே
மாரிபோல் வழிய-
அனைவரும் அமர்ந்து
அடிசில் உண்டு- அதன்
இனிப்பினில் மயங்கி
இதயங்கள் மகிழ-

விரதத்தை நிறைவு செய்வோம்;
விரதத்தால் சீவன் உய்வோம்!

- S.நடராஜன், சென்னை
ravi said…
[12/01, 07:23] +91 96209 96097: *விஷ்டேஷ்டாய நமஹ*🙏
மகான்கள் அடைய விரும்பும் மிக உயர்ந்த இலக்காக இருப்பவர்
[12/01, 07:23] +91 96209 96097: *சாருரூபா* சாருஹாஸா சாருசந்த்ர-கலாதரா🙏
இடை விடாமல் பார்க்கத் தூண்டும் ரூபத்தை உடையவள்
ravi said…
ஆரூரா.. தொண்டீசா..

*தர்ம சாஸ்திரம் அறிவோம்*. பகுதி - 2.

*மஹாபாரதத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.*

1. ஒரு நாட்டு மன்னன் - - குடும்பத் தலைவன் ஆகட்டும் தர்ம சாஸ்திரம் அறிந்து கொண்டால் நாடும் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்..

2. நேர்மை - ஒழுக்கம் - சத்தியம் யாரிடத்தில் இல்லையோ அவனும் அவனைச் சார்ந்தவர்களும் நிச்சயமாக நரகத்தில் விழுவர்.

3. ஒருவருக்கு கிடைக்க இருப்பதை நாம் எக்காரணத்திலும் - எந்த வித சூழ்நிலையிலும் தடுக்கக் கூடாது.

4. ஒருவர் தவறு செய்கிறார் என்றார் அவரிடம் சென்று நல்லதை எடுத்துரைக்க வேண்டும்.

இரண்யகசிபு தவறு செய்தான் பிரகலாதன் நல்லதை எடுத்துரைத்தான்

இராவணன் தவறு செய்தான விபீஷ்ணன் நல்லதை எடுத்துரைத்தார்..

ஆகவே நமக்கு வேண்டியவர்களாயினும் தவறு செய்தாலும் அதை திருத்த முற்பட வேண்டும்.

5. ஆஸ்த்திகம் - கடவுள் நம்பிக்கை உடையவர்கள்.

நாஸ்த்திகம் - கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.

6. யாரிடத்திலும் மூடத்தனமான பாசத்தை வைக்கக் கூடாது. அவை உங்களுக்கு துன்பத்தை தரும்.

7. தவறை கண்டிப்பதற்கு ஒரு நல்லவர் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.

8. நிறைய படித்தவர்கள் அதன்படி நடப்பவர்களே நன்கு படித்தவன் ஆவான்.

9. நம் நாடு என்றும் அமைதியையே விரும்புகிறது..

10. நம்மால் என்ன முடியுமோ அதை மட்டும் செய்தால் போதும்..

தொடரும்..

தொகுப்பு:
ஈரோடு பெரியமாரியம்மன் திருக்கோயில் ஓதுவா மூர்த்திகள். 99658 17735.
ravi said…
பாதாரவிந்த சதகம் !

66.ததாநோ மந்தார ஸ்தபக பரிபாடீம் நகருசா
வஹந் தீப்தா:ஸோணாங்குலி பிரபி சாம்பேய கலிகாம்
அசோ'கோல்லாஸம் ந: ப்ரசுரயது காமாக்ஷி சரணோ
விகாஸீ வாஸந்த: ஸமய இவதே ஸர்வ தயிதே

உலகை ஒடுக்குபவரான சிவனுக்கு இனியவளே / காமாக்ஷி / மந்தாரப் பூங்கொத்தின் நிலையை நகஒளியால் விளக்குவதும் சிவந்தவிரல்கள் வரிசையால் ஒளிமிக்க சம்பகமொட்டின் நிலையை ஏற்றுள்ளதுமான உன் திருவடி, அசோகமரத்து மலர்ச்சியை வஸந்தகாலம் போல் எம்மிடம் பரவச்செய்யட்டும்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺 "Short life
Do you want a brilliant child with a mind or an ordinary son with a long life without intelligence? Sarveswaran asked..... A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Jagatguru Adi Shankar's biography is a must read. He has performed many miracles in his very short life.

🌺 He saved Hinduism and Vedas which were very weak. He has authored many books. He spread Hinduism by establishing Advaita Maths in the four directions of our great Bharata nation. Now you can see the biography of Sri Sankara Bhagwat Badal.

🌺 AD In the 7th century, a devout couple named Sivaguru and Aryambal lived in Kaladi near Ernakulam, Kerala.

🌺 They had great devotion to the Lord and helped the poor and needy people as much as they could. But there was a complaint that they did not have children.

🌺 The elders saw this and gave them a suitable advice. In the town of Thrissur, Lord Shiva has risen with the name of Vadukanathan. They advised him to perform a mandal pooja.

🌺So Sivaguru Aryambal couple also performed pooja with great devotion as advised by their elders.
Both of them performed very strict fasts to pray to the Thrissur North Nathara for the blessing of a son.

🌺 Vadukhanathar was happy to see their pure devotion. You will be blessed with a son by appearing in Shivaguru's dream. But one condition.

🌺 With short life all virtues and wisdom,
Knowledge and discipline
Do you want a brilliant child with a mind or an ordinary son with a long life without intelligence? he asked.

🌺 He said that one should choose one of these two blessings. But Shiva, the best in bhakti, knows what to drink. He said, "Whatever you drink, we will accept it very happily."

🌺Isaan was pleased with this answer and said blessing that I will be born as your son. Hearing Shivaguru's dream, Aryambal felt happy and thought that a wise child would be born to them as a son. The happy couple returned to their hometown Kaladi.

🌺According to the boon given by the Lord, the divine child incarnated on this earth by the grace of the Lord in the Tiruvadhirai Nakshatra at the auspicious time when the four planets namely Sun, Mars, Saturn and Guru were at their peak in the month of Vaikasi, Vakarirai Panchami.

Lord Shiva himself was born as the son of Aryambalu. Just as Maha Vishnu himself incarnated as Rama to the childless Dasaratha, it was a great blessing that Lord Shiva was born as a child to the Sivaguru-Aryambal couple.

🌺 In the joy of the birth of the child, Shivaguru celebrated by giving gifts and giving a feast to the witnesses.

🌺 Soothsayers predicted that he is a great sage. A naga played around the young child for a while and then transformed into a vibhuti and forgetful rudraksha, and the child was named Shankaran because of the symbols of Shiva on its body.

🌺 People saw the divine beauty of that child, this was no ordinary child. They realized that this was a divine child.
Like the mischievous Kannan, Kutich Shankaran performed many miracles in his childhood,

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *எந்த மந்திரமும் அறியாதவன் கூட* " *கோவிந்தா* ' *என்று*
*உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்'* ' *என்ற குரு... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺பெருமாள் பக்தர் விஜயன் அதிகாலை நீராடி, விஷ்ணுசகஸ்ரநாமம் சொல்லி
பெருமாளைத் தரிசிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார்.

🌺ஒரு குருவிடம் சென்று, ""குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு
குறையில்லை. இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன்'': என்றார்.

🌺குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து,""தம்பி! உன் குடும்பம் நலமா? ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா?'' என்று கேட்டார்.
அந்த நபரோ, ""பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை...?''என்றார்.

🌺உடனே பெருமாள் பக்தர் விஜயன் ஆச்சரியத்துடன், ""எனக்கு அந்த
மந்திரம் தெரியாதே! அதைச் சொல்லேன்!'' என்றார்.
வந்தவர்,""கோவிந்தா! கோவிந்தா!'' என்றார்.

🌺பக்திமான் விஜயன் ஏமாற்றத்துடன்,""இது தானா! நான் தினமும் விஷ்ணு
சகஸ்ரநாமமமே சொல்கிறேன். அதை விடவா இது பெரிது?'' என்றார்.
குரு அவரிடம்,""நீதவறாக நினைக்கிறாய்.

🌺ஆயிரம் பெயர்களால் விஷ்ணுவை வணங்குவதே சகஸ்ரநாமம்.
இது பீஷ்மர் அர்ஜூனனுக்கு உபதேசித்தது. இதைப் போல அற்புதம்
வேறில்லை. ஆனால், எல்லாரும் பீஷ்மராக முடியுமா?

🌺பாமரனும், பெருமாள் அருள் பெற சொல்லப்பட்டதே கோவிந்த நாமம்.
திரவுபதியின் மானம் காத்தது .
அதுவே. எந்த மந்திரமும் அறியாதவன் கூட "கோவிந்தா' என்று
உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்'' என்றார் குரு.

🌺சொல்லுவோம் தினமும் கோவிந்தா கோவிந்தா என்ற பகவத்
நாமாவை.....தொலைப்போம் நம் ஜென்மத்தை!!
"கோவிந்தா கோவிந்தா கோவிந்தா"....🙏🌹🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…

பழனிக் கடவுள் துணை -12.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-26

மூலம்:

இன்றே மயின்மீ(து) எதிற்தோன்றி என்கவலை
ஒன்றேனும் இல்லா(து) ஒழித்தாளில் – நின்தேசு
குன்றுமோ நீடுமன்றோ? கோதில்பழ னாபுரியில்
என்றும்வாழ் கந்தா இயம்பு (26).

பதப்பிரிவு:

இன்றே மயில் மீது எதிர் தோன்றி என் கவலை
ஒன்றேனும் இல்லாது ஒழித்தாளில் – நின் தேசு
குன்றுமோ? நீடும் அன்றோ? கோது இல் பழனாபுரியில்
என்றும் வாழ் கந்தா! இயம்பு!!! (26).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

தேசு- உன் அருள் ஒளி; தேஜஸ் என்பது வடச்சொல் என்று உணர்க.

கோது- குற்றம்; கோதிலாத குறத்தி அணைத்து அருள் பெருமாளே என்கிறார் நம் குருநாதர் பழனித் திருப்புகழில்.

எம் பெருமானிடம் உரிமையுடன் முறையிடும் ஒரு அற்புதமான வெண்பா. உன் குருத்துவம் சற்றும் குறையுமோ என்று மதுராந்தகத் திருப்புகழில் அருணகிரிப் பெருமான் (சிறியேன் தனக்கும் உரை செயில் சற்றும். குருத்துவம் குறையுமோ தான்) முறையிடுவதை ஒத்த வெண்பா இது.

குற்றம் என்ற சொல்லுக்கு இடமே இல்லாத, பெருமை ஒன்றே மிகுதியாய் விளங்கும், பழனாபுரியில்
என்றும் விரும்பி வாழும் பழனிக் கந்தசுவாமியே! இன்றே, இப்பொழுதே, உன் மயில் என்ற குதிரையின் மீது ஏறி, என் எதிரில் தோன்றி, என் கவலைகளில் ஏதேனும் ஒன்றையாவது, நீ உன் பேரருள் கூர்ந்து, முற்றிலும் இல்லாமல் ஒழித்து என்னை உன் தாளில் வைத்து ஆண்டால், நின் அருள் ஒளி குன்றிவிடக் கூடுமா? என்ன?குன்றுவதற்கு மாறாக, நீண்டு பெருகும் என்பது நீ அறியாத ஒன்றோ? பழனாபுரிக் காவலனே! நீயே சொல்! உன் வழி வழி அடிமையைக் கா!

மாளாத் துயரின்றும் என்னை மீள்! நீள் புகழ் உடையாய்! உன் தாளில் வீழ், வாழ், ஊழ் தா! பழனி வேலா!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
*வீசுகின்ற வாசனையை*
*பொறுத்துதான் மலர்கள்*
*மதிக்கப்படுகின்றன..!!*

*அதுபோல..*

*பேசுகின்ற வார்த்தைகளை*
*பொறுத்துதான் மனிதர்களும்*
*மதிக்கப்படுவார்கள்...!!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
*❤இன்றைய சிந்தனை..( 12.01.2023)..*
*........................................*

*"சந்தேகம் என்னும் கொடிய நோய்''..*
*........................................*.

சந்தேகம் என்பது மிகப் பெரிய கொடிய நோய். இந்த சந்தேக நோய் எவ்வித கிருமிகள் இல்லாமலே ஒரு மனிதனுக்கு பிறவியிலோ, அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையிலோ பரவக்கூடிய மிகப் பெரிய விசக் கிருமி.

சந்தேகம் என்பது ஆறாத, ஒரு
புற்றுநோய். இது வளர்ந்து கொண்டே இருக்கும். மற்றொரு புறம், நமது மகிழ்ச்சியை அழித்துக் கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது, குடும்பம் தான்.

எத்தனை எடுத்துச் சொன்னாலும், பலர் இதனைப் புரிந்து கொள்வதில்லை. பின் உணர்ச்சி வேகத்தில், தவறு செய்து விட்டு, வாழ்க்கையையும் தொலைத்து விட்டு, வாழ்நாள் முழுதும் வருந்திக் கொண்டு
இருக்கிறார்கள்.

இந்த சந்தேகம் ஒவ்வொரு மனிதனையும்
மரணக்குழி வரை அழைத்துச் சென்ற உண்மைச் சம்பவங்களும் நிறைய உண்டு என்பதை நமது அன்றாட வாழ்வில் காண்கிறோம்.

எதில், எப்படி, யாரிடம், எங்கு, எவ்வாறு, எதற்காக என்பதை நன்கு அறிந்து கொண்டு சந்தேகப்படுவது ஆரோக்கியமான செயல்.

ஆனால் நம்மில் பலர் சம்பந்தமில்லாமலே வீண் சந்தேகப்பட்டு வாழ்வைத் தொலைத்தவர்கள் அதிகம். இதனால் பலர் வாழ்விழந்து வாழ்க்கையே
கேள்விக்குறியாக்கிக் கொண்டு வாழும் மனிதர்களும் உண்டு.

ஒருவருக்கு வீண் சந்தேகம் வெளியிலும், வேலை செய்யும் அலுவலகத்திலும் இருந்தால் எவராலும் மதிக்கப்பட மாட்டார்கள்.

நமது அய்யன் வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார்

*''தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்..* *(.குறள்:510..)*

குறள் விளக்கம்:

ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவு அடைந்த ஒருவனிடம் சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும் என்கின்றார்.

*ஆம்.,தோழர்களே.....,*

*நாம் வாழ்வதற்காகவே இங்கு வந்து இருக்கின்றோம் என்பதை உணருங்கள்..*

*நம்பிக்கையோடு இனிதே வாழ்வைத் தொடங்குங்கள்*

*அனாவசியமாக மற்றவர்கள் மீது* *வீண்' சந்தேகம் வைத்து உங்களின் வாழ்க்கையில்*
*அல்லல்பட வேண்டாம்.✍🏼🌹*

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

லோகத்தில் மனசுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு, அப்பர் ஸ்வாமிகள் ஒரு ‘லிஸ்ட்’ கொடுக்கிறார். இந்திரியங்களுக்கு அகப்படுகிற சுகங்கள்போல இருந்தாலும், நிரந்தரமான, தெய்வீகமான ஆனந்தத்தைத் தருகிற வஸ்துக்களைத் சொல்கிறார். அந்த வஸ்துக்கள் என்ன? முதலில், துளிக்கூட தோஷமே இல்லாத வீணா கானம்; அப்புறம், பூரண சந்திரனின் பால் போன்ற நிலா; தென்றல் காற்று; வஸந்த காலத்தின் மலர்ச்சி; வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிற தாமரைத் தடாகம்.

ravi said…
மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

இந்திரியங்களால் பெறுகிற இன்பங்களை ஈசுவர சரணாரவிந்த இன்பத்துக்கு உபமானமாக அடுக்கும்போது, “மாசில் வீணை” என்று சங்கீதத்துக்கே முதலிடம் தருகிறார்.

ravi said…
நல்ல ஸங்கீதம்—அதுவும் குறிப்பாக நம்முடைய ஸங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம்—என்றால் அது ஈசுவரனின் பாதத்துக்குத் கொண்டு சேர்ப்பதாகவே இருக்கும். நம் பூர்வீகர்கள் இசையை ஈசுவரனின் சரணங்களிலேயே ஸமர்ப்பணம் பண்ணினார்கள். அந்த இசை அவர்களையும், அதைக் கேட்கிறவர்களையும் சேர்த்து, ஈசுவர சரணாரவிந்தங்களில் லயிக்கச் செய்தது. தர்ம சாஸ்திரம் தந்த மகரிஷி யாக்ஞவல்கியரும் “சுஸ்வரமாக வீணையை மீட்டிக் கொண்டு, சுருதி சுத்தத்தோடு, லயம் தவறாமல் நாதோபாஸனை செய்துவிட்டால் போதும் — தியானம் வேண்டாம்; யோகம் வேண்டாம; தபஸ் வேண்டாம்; பூஜை வேண்டாம;. கஷ்டமான சாதனைகளே வேண்டாம் — இதுவே மோக்ஷத்துக்கு வழிகாட்டிவி்டும்” என்கிறார்.

ravi said…
வீணா வாதன தத்வக்ஞ: ச்ருதி ஜாதி விசாரத : |

தாளகஞச்ச அப்ரயதனேன மோக்ஷமார்க்கஸ ஸ கச்சதி ||

இதிலே இன்னொரு விசேஷம் சங்கீத வித்வான் மட்டுமில்லாமல், அவன் கானம் செய்வதை வெறுமே கேட்டுக் கொண்டிருக்கிற அத்தனை பேருக்கும், அவன் ஒருத்தன் செய்கிற சாதனையின் பூரண பலனான நிறைந்த திவ்விய சுகம் கிட்டிவிடுகிறது.

ravi said…
வித்யா தேவதையான சரஸ்வதி எப்போதும் வீணாகானம் செய்கிறாள். லௌகிகமான (secular) பாட்டே கூடாது. பகவானைப் பற்றித்தான் பாட வேண்டும். சரஸ்வதியும் பரமேஷ்வரனின் பலவித லீலைகளைப் பற்றித்தான் பாடுகிறாள் என்று ‘ஸெளந்தர்ய லஹரி’ சுலோகம் சொல்கிறது.

ravi said…
ஆசாரியாள் ‘ஸெளந்தர்ய லஹரியில’ அம்பாள் கழுத்தழகைச் சொல்லும்போது, அவளிடமிருந்து, சங்கீதம் முழுதும் பிறக்கிறது என்பதை வெகு அழகாகச் சொல்லுகிறார் (‘கலே ரேகா; திஸ்ரோ’ என்று ஆரம்பிக்கும்) கழுத்திலே மூன்று ரேகைகள் இருப்பது உத்தம ஸ்திரீ லட்சணம். புருஷ லட்சணம் Adam’s apple என்று இங்கிலீஷில் சொல்கிற நெஞ்சிலே இருக்கப்பட்ட உருண்டையான படைப்பு. ஈசுவரன் ஆலகாலத்தை தொண்டையில் கோலிக்குண்டு மாதிரி அடக்கிக்கொண்டார் அல்லவா? ஆண்கள் எல்லோரும் அவனது ஸ்வரூபம் என்பதற்கு அடையாளமாகவே உத்தம புருஷர்களின் தொண்டையில் இப்படி உருண்டை இருக்கிறது. அதே மாதிரி ஸ்திரீகள் யாவரும் தேவீ ஸ்வரூபம் என்பதால் அவர்களுடைய பரம மங்கள சின்னமான கழுத்து ரேகைகள் மூன்றும் உத்தமப் பெண்களிடம் இருக்கிறது. இதை ஆசாரியாள் வர்ணிக்கும்போது, “ஸங்கீதத்தில் ஷட்ஜ கிராமம், மத்தியம கிராமம், காந்தார கிராமம் என்று மூன்று வரிசைகள் (Scale, Gamut) உண்டு. இந்த மூன்று தொகுப்பு(கிராமம்)களிலிருந்துதான் மதுரமான நானாவித ராகங்களும் எழுந்திருக்கின்றன. அம்மா, நீயோ ஸங்கீதத்தின் கதிகளிலும், கமகங்களிலும் மகா நிபுணை.
ravi said…
அந்த மூன்று ஸங்கீத கிராமங்களும் உன் கண்டத்திலிருந்துதான் பிறந்தன. அதற்கு அடையாளமாகவே அது ஒவ்வொன்றுக்கும் உரிய ஸ்வரங்கள் தொண்டைக்குள் எந்தெந்த இடத்தில் பிறந்து, எந்தெந்த இடத்தில் முடிகின்றன என்று எல்லை வகுத்துக் காட்டுவதுபோல், வெளிப்பட்ட இந்த மூன்று ரேகைகளும் உன் கழுத்தில் காணப்படுகின்றன” என்கிறார்.

அத்வைத பரமாசாரியார்களுக்குச் சங்கீதத்தில் எத்தனை பாண்டித்தியம் இருந்தது என்பதும் இங்கே தெரியவருகிறது. ஸங்கீதமே அத்வைதமாக நம்மை மூலத்தோடு கரைப்பதுதான். சாக்ஷாத் அம்பிகை வீணாதாரிணியான சியாமளாம்பிகையாக விளங்குவதாகக் காளிதாஸர் ‘நவரத்தின மாலிகை’யில் ‘ஸரிகமபதநிரதாம்’ என்று பாடுகிறார். அவள் பாடுகிற சங்கீதத்தால் அவளுடைய மிருதுவான இருதயமும் அதற்கும் உள்ளே இருக்கிற அத்வைதமான சாந்தமும் (சாந்தாம், மிருதுள ஸ்வாந்தாம்) வெளிப்படுகின்றன என்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், எத்தனை உணர்ச்சிப் பரவசங்களைத் தூண்டிவிட்டாலும் சாந்தம்தான் சங்கீதத்தின் முடிந்த முடிவாக இருக்க வேண்டும். சங்கீதத்தினாலேயே அன்பு என்கிற மிருதுவான இருதயம் ஏற்படுவதாகவும் தொனிக்கிறது. தசவித கமகங்களைச் செய்கிற சியாமளாம்பிகையான மீனாக்ஷியை வீணை மீட்டிப் பாடிக்கொண்டே, இந்த அன்போடு அன்பாக, சாந்தத்தோடு சாந்தமாகத்தான் முத்துஸ்வாமி தீக்ஷிதர் கரைந்து போனார். தியாகராஜ ஸ்வாமிகளும், பாஷை தெரியாதவர்களுக்கும் கேட்டமாத்திரத்தில் எல்லையல்லாத விச்ராந்தி தருகிறமாதிரி சாம ராகத்தில் ‘சாந்தமுலேக ஸௌக்கியமு லேது’ என்று பாடியிருக்கிறார். ஈசன் எந்தை இணையடி நீழலில் அப்படியே லயித்துப் போகிற இந்த சாந்தத்தைத்தான் அப்பரும் ‘மாசில் வீணை’ என்பதாக உவமிக்கிறார்.
(இன்று தியாகம்பிரம்மம் ஆராதனை)
ravi said…
ஒரு நிமிட கோபத்திலிருந்து நீங்கள் தப்பி விட்டீர்கள் என்றால் துக்கமான நான்கு நாட்களிலிருந்து தப்பி விட்டீர்கள் என்று அர்த்தம்.
- சுவாமி விவேகானந்தர்.

நியாயங்கள் உங்கள் பக்கம் இருந்தாலும் உங்களை புரிந்து கொள்ளாதவர்களோடு
வாதிட முடியாமல் போகும்போது அந்த நேரங்களில் அமைதியாக இருக்கப் பாருங்கள்.

உங்களை மதிக்காத மனிதர்களிடம் உங்கள் நேரத்தை செலவு செய்து, உங்கள் மதிப்பை இழந்து விடாதீர்கள்.

உங்கள் எல்லையில் நீங்களே நின்று விட்டால் அது கெளரவம். மற்றவர்கள் நிறுத்தினால் அது அவமானம்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
12.01.2023;
"Gita Shloka (Chapter 1 and Shloka 20)

Sanskrit Version:

अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान्कपिध्वजः।
प्रवृत्ते शस्त्रसंपाते धनुरुद्यम्य पाण्डवः।।1.20।।

English Version:

aTha vyavasThithaan drushtvaa
Dhaartaraashtraamkapidhvajah: |
pravrutte shastrasampaate
Dharudyamya paandavah: ||

Shloka Meaning

O King Dhrutaraashtrah! Now seeing the Kauravas arrayed in battle order
and the exchange of weapons about to begin, Arjuna took up his bow.

Jai Shri Krishna 🌺
ravi said…
கண்ணால் மணி கட்டி

செவியால் ஒலி எழுப்பி

மணி மணியாய் உன் நாமங்கள் சொல்லி

காலால் கல்லும் முள்ளும் மெத்தை என்றே நடந்து

கரங்களால் இருமுடி தாங்கி

பொய்யான மெய்யில் நெய் நிரப்பி

மெய்யாய் உன் நினைவு தாங்கி

கண்ணாய் மணியாய் உன் பாதம் பற்றி

ஜோதி காண வந்தோம் ...

கண்கள் கோடி புண்ணியம் செய்ததோ

பிறவி பெருங்கடல் நீந்தி சென்றதோ

நெஞ்சம் விம்மி விம்மி அழுததோ

இன்னும் வேண்டும் சக்கரை பொங்கலாய் தித்திக்கும் உன் காட்சி என்றே

மெய் நெய்யாய் உருகியதோ ஐயப்பா !!💐💐💐
ravi said…
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்

*குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!*

உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம்

அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா!

நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
ravi said…
குறையே இல்லாத கோவிந்தனே!

நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள்.

எங்களுக்கு அறிவென்பதே இல்லை.

ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும்.

உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது.

உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது.

விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்!

அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா!

என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே.

எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.
ravi said…
குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது,

கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது.

*அவனுக்கு என்ன குறை?*

ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார்.

ராமனுக்கு இது ஒரு குறை.

இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம்

அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே!

அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே!

அவனோடு நம்மை ஒப்பிடலாமா?

என்ற குறை இருந்ததாம்.

கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான்.

கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான்.

ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால்,

ஆயர்குலப் பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.🙌🙌🙌
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 52*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
अङ्कुरितस्तनकोरकमङ्कालंकारमेकचूतपतेः ।
आलोकेमहि कोमलमागमसंलापसारयाथार्थ्यम् ॥ ३६॥

36. Ankuritha sthana korakam angalankaram eka chootha pathe,

Aloka mahi komalam aagama samlapasarayadharthayam.

அங்குரிதஸ்தனகோரகமங்காலம்காரமேகசூதபதேஃ |

ஆலோகேமஹி கோமலமாகமஸம்லாபஸாரயாதார்த்யம் ||36||
ravi said…
ஏகாம்ரம் என்றால் ஒற்றை மாங்கனி உடைய மாமரம். அதன் அடியில் அமர்ந்து தவம் செய்தவள்.

காமேஸ்வரன் இடது துடையில் அமர்ந்து ரக்ஷிப்பவள். வேதங்களின் உட்பொருள் ஆனவள்.

அழகே உருவெடுத்து வந்தவள். நமஸ்கரிக்கிறேன்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 456* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*191 दुःखहन्त्री - துக்கஹந்த்ரீ --*

இந்த நாமம் ஒன்று போதும் ..

தினமும் மூன்று வேளையும் சொல்லிக்கொண்டு வந்தால் நம்மை சுற்றி ஜ்வாலாமுகி தேவி அக்னி கோட்டையை எழுப்பி தேடி வரும் துன்பத்தை தூசி கவ்வ செய்வாள் ...

நாமத்திலேயே பலனும் அமைந்திருப்பது வேறு சஹஸ்ரநாமத்தில் அமையாத ஆச்சரியம்🙌🙌🙌
ravi said…
வில்லால் உனை வீழ்த்த முடியுமோ ?

சொல்லால் உனை வர்ணிக்க முடியுமோ ?

கண்ணால் உன் அழகை பருக முடியுமோ ?

கற்பனையால் உன் கருணை மழை நாங்கள் பொழிய வைக்க முடியுமோ

அம்மா என்பவர்கள் எல்லாம் உன் தாய் போல் ஆவதுண்டோ

உன் போல் வரம் தருபவர் எல்லாம் நின் ஒத்த தெய்வம் ஆகி விடுமோ ?
ravi said…
*❖ 79 பண்டாசுரேந்திர நிர்முக்த ஷஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணி* =

பண்டாசுரனின் ஒவ்வொரு சஸ்திர-அஸ்திரத்தையும் தனது ஆயுதமழையால் முறியடித்து நிர்கதியாக்கியவள்.
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

38 –
சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே

சலியாது இருந்தாய் அருணாசலா (அ)
ravi said…
என்னை ஆட் கொண்ட ஆரமுதான அருணாசலா!

மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே!

நீயே உலகத்தைப் படைத்தமுதல்வன்,
எல்லாருக்கும் நடுநாயகமானவன்.

அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் எண்ணும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்?

உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய்.

திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய்.

அந்தணரின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய்.

இத்தகைய சிறப்புகளை உடையவனே!

நீ துயில் எழுவாயாக.

அருணாசலா என் மன இருள் அழிந்து விட்டது என்றே நீ கொஞ்சமும் கவலை இன்றி இருக்கிறாயோ ?
ravi said…
எது நடக்கணுமோ அது நடக்கும் என்கிற விதிக்கு சரியான கதை

"மாமா நமஸ்காரம்" என்றபடியே வந்த
சந்துருவை, வாடா அம்பி "எப்படி இருக்கே" என்றார் ஈசிசேரில் சாய்ந்து கொண்டிருந்த மகாதேவ சாஸ்திரிகள்.

ravi said…
"மாமா, இந்த மாசம் அப்பா ஶ்ரார்தம் அதுதான் உங்களுக்கு ஞாபகப் படுத்திட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் சந்துரு.
"ஏண்டா அம்பி இத நீ எனக்கு, ஞாபகபடுத்தணுமா? இந்த மாசம் 26ஆம் தேதி, தசமி திதிதானே எனக்கு ஞாபகம் இருக்கு, கார்த்தால பத்து மணிக்கு நான் அங்க இருப்பேன். நீ கவலைப்படாதே வழக்கம் போல நல்லபடியா நடத்தி குடுத்துடறேன். பிராமணாள் கூட ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றார் மகாதேவ சாஸ்திரிகள்.
"எது நடக்கணுமோ அது நடக்கும் என்கிற விதிக்கு சரியான கதை

ravi said…
"
"ரொம்ப சந்தோஷம் மாமா. நமஸ்காரம் பண்றேன், ஆசீர்வாதம் பண்ணுங்கோ" என்ற சந்துரு, நமஸ்காரம் பண்ணி "அபிவாதயே " சொல்லி முடித்தவுடன்
"க்ஷேமமா சௌக்யமா, இருப்பேடா அம்பி, தீர்காயுஷ்மான்பவா. சீக்கரமேவ விவாக பிராப்திரஸ்து" என்று ஆசீர்வாதம் பண்ண
சாஸ்திரிகள், "கேள்விபட்டேன்ண்டா, பேங்க்ல ஒனக்கு ரொம்ப நல்ல பேருன்னு. பேங்க் மேனேஜர் எங்கிட்ட சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா அம்பி".
"மாமா இந்த வேலையே உங்க சிபார்சில கிடைச்சதுதானே" என்றான் அம்பி.
"அம்பி, சிபார்சு என்னோடதா இருக்கலாம், ஆனா எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணது நீதானே. அதனாலதான் அந்த வேலை ஒனக்கு கிடைச்சது. இதுக்கெல்லாம் காரணம்
ravi said…
உங்கப்பாவோட நல்ல மனசும், அவருடைய பரோபகார குணமும்தான். அவர் எவ்வளவோ பேருக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கார். அதைத்தான் பகவான் திருப்பி குடுத்திருக்கான்"
என்றார் மகாதேவ சாஸ்திரிகள்.
"எல்லாம் உங்களோட ஆசீர்வாதம்தான் மாமா" என்ற சந்துரு, "சரி மாமா நான் கிளம்பறேன்" என்றான்.
"அம்பி கொஞ்சம் இரு, ஒருவா காபி சாப்டு போகலாம்" என்றவர், உள் பக்கம் திரும்பி "கௌரி, அம்பிக்கு காபி கொண்டு வா" என்றார்.
"
ravi said…
இந்தாடா அம்பி" என்றபடியே காபி டம்பளரை அவன் கையில் குடுத்த கௌரி, "ஏண்டா அம்பி ஆத்துல அம்மா சௌக்யமா
இருக்காளோன்னோ. ஆமா எப்போ கல்யாண சாப்பாடு போடப்போற" என்றாள்.
மௌனமாக இருந்த சந்துருவைப் பார்த்த மகாதேவ சாஸ்திரிகள் கௌரியிடம், "சீக்கிரம் முடிச்சுட வேண்டியதுதான். நானும் ரெண்டு, மூணு எடத்துல அம்பி ஜாதகத்தை குடுத்து வெச்சிருக்கேன். அநேகமா அம்பி கல்யாணம் மஹா
ravi said…
பெரியவரோட அனுகிரகத்தல சீக்கிரம் முடிஞ்சிடும்னு என் மனசுல பட்றது" என்றார். அம்பி சென்ற கொஞ்ச நாழிக்கு கழித்து
"உள்ளே வரலாமா" என்ற குரலை கேட்டதும் கண்களை திறந்த மகாதேவ சாஸ்திரிகள், "அடடே வாங்கோ வாங்கோ" என்று சொல்லிக் கொண்டே ஈசிசேரிலிருந்து எழுந்து நாற்க்காலியில் அமர்ந்தார்.
"மன்னிக்கணும், உங்களோட தூக்கத்தை கெடுத்துட்டோமோ" என்றனர் வந்தவர்கள். "அதெல்லாம் ஒன்றும் இல்லை, சும்மாதான்
படுத்திண்டிருந்தேன். என்ன விஷயம்" என்றார் மகாதேவ சாஸ்திரிகள்.
ravi said…
"இதோ பாருங்கோ இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் நமக்கு மறுபடி கிடைக்காது. டெல்லியில் வேதபுரின்னு ஒருத்தர், மத்யஅரசுல வேலை பண்றார். அவா பூர்வீகம் வேலூர் பக்கத்துல ஏதோ கிராமம் நல்ல செல்வாக்கானவர், ரொம்பவும் ஆச்சாரமான குடும்பம், மஹா பெரியவா பக்தர். நல்ல மனுஷன். அவருடைய தகப்பனாருக்கு "சதாபிஷேகம்" அதை நன்னா விமரிசையா நடத்தணும்னு
பிரியப்படறார். அதுவும் நாகப் பட்டினம் மகாதேவ சாஸ்திரிகள்தான் நடத்தி வைக்கணும்னு ரொம்ப பிரியப்படறார். உங்களை பத்தி நிறைய கேள்விபட்டிருக்கார். அவர்
உங்களுக்கு ஒரு லெட்டர் குடுத்து விட்டிருக்கார். இதோ இவர்தான் அதை கொண்டு வந்தார். இவர் பேர் நடராஜ சாஸ்திரிகள்" என்றார் சுப்பண்ணா சாஸ்திரிகள்.
"அது மட்டுமில்ல அவா லௌகீகத்தை விட வைதீகத்துக்கு முக்கியத்துவம் குடுக்கறா. நிறைய வேத விற்பன்னர்களை வெச்சு நன்னா சாஸ்த்ரோத்தமா பண்ணனும்னு
பிரியப்படறா" என்றார் கல்யாணராம சாஸ்திரிகள்.
"இங்க செ ன்னையிலேர்ந்து உங்களையும் சேர்த்து 11பேர் ஏற்பாடாயிருக்கு. நீங்க இல்லாம எங்களால போகமுடியாது. நீங்க
சரின்னு சொன்னா நாங்க சந்தோஷப்படுவோம். நம்ம எல்லாருக்கும் டெல்லி
போகவர ரெயில்ல 1st class ticket, அங்க நாம தங்க இட வசதி, நல்ல சம்பாவனை, தானங்கள், எல்லாருக்கும் பட்டு வஸ்த்ரம், பார்யாளுக்கும் பட்டு புடவை, அப்படி, இப்படீன்னு ஏகப்பட்டது. நீங்க நல்லா
யோஜனை பண்ணி சரின்னு சொல்லணும்" என்றார் சுப்பண்ணா
சாஸ்திரிகள்.
"ஏங்காணும், இதுல யோஜனை பண்ண என்ன இருக்கு, உடனே சரின்னு சொல்ல வேண்டியதுதானே. அதிர்ஷ்டம் நம்மளை தேடி வர்றது" என்றார் நாராயண வாத்யார்.
"நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சுவாமி, ஆனா அந்த "சதாபிஷேகம்" என்னிக்கு சொல்லலையே" என்றார் மகாதேவ சாஸ்திரிகள். "மன்னிக்கணும், இந்த மாசம் 26ஆம் தேதி சதாபிஷேகம், நாம 23ஆம் தேதி அங்க இருக்கணும். இங்கேயிருந்து 21ஆம் தேதியே புறப்படறோம். மறுபடியும் 28ஆம்
தேதி புறப்பட்டு 30ஆம் தேதி இங்க வரோம்" என்றார் சுப்பண்ணா சாஸ்திரிகள்.
"நீங்க சொல்ற அதே தேதியில என்னோட உபாத்யாயத்துல ஒரு சிரார்த்தம், ரொம்பவும் சிரமப்படற குடும்பம். இப்பதான் அந்த பையன் கொஞ்சம் தலையெடுத்திருக்கான். அந்த பையனோட அப்பா என்னோட நண்பர் வேற. சாதாரணமா நான் எந்த சிரார்தத்துக்கும் சம்பாவனை வாங்கிறது இல்லை. பிராமணாளுக்கு மட்டும் வாங்கி குடுத்துடுவேன். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் அந்த பையன் சந்துரு இங்க வந்து சிரார்தத்த ஞாபக படுத்திட்டு போனான். அதனால அந்த சிரார்தத்தை உதறி தள்ளிட்டு என்னால் டெல்லிக்கு வரமுடியாது. நீங்க வேற யாரையாவது பாருங்கோ" என்றார் மகாதேவ சாஸ்திரிகள்.
"ஓய் சாஸ்திரிகளே சிரார்தம் வருஷமா வருஷம் வரும். ஆனா சதாபிஷேகம் வருமா. அதுவும் இல்லாம நீரோ சிரார்தத்தை தர்மமாத்தான் பண்ணி வைக்கப் போகிறீர். வருமானமும் இல்லே, ஆனா சதாபிஷேகத்தை பண்ணி வெச்சா, நல்லா வருமானமும் வரும், நமக்கு நல்ல பேரும் கிடைக்கும். அதனால நீங்க சரின்னு சொல்லுங்காணும்" என்றார்
நாராயண வாத்யார்.
"உங்க எல்லோருக்கும் சொல்றேன், எனக்கு வருமானம் முக்கியமில்லை. என்னோட தன்மானமும், மனுஷாளோட அபிமானமும்தான் முக்கியம். என்னை வற்புறுத்தாதீங்க" என்றார்.
இவர்கள், பேசுவதை கதவுக்கு பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மகாதேவ
சாஸ்திரிகளின் மனைவி கௌரி,
"ஏன்னா சித்த இங்க கொஞ்சம் வரேளா." என்று குரல் குடுக்க "ஒரு நிமிஷம்", என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.
"ஏ ன்னா உங்களுக்கு புத்தி பிசகிபோச்சா, தானா வர்ற சீதேவியை வேண்டாம்னு
சொல்றவர் நீங்களாத்தான் இருக்கும்" என்று சொன்னவள், மடமடன்னு வெளில வந்து மத்தவாளை பார்த்து, "இத பாருங்கோ மாமா உங்களோட
டெல்லிக்கு வருவார். அதுக்கு நான் பொறுப்பு. நீங்க மத்த ஏற்பாட்டை
பண்ணுங்கோ" என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.
"
ravi said…
*இன்று நம்மாழ்வார் மோட்ச உற்சவம்*

வைணவத்தில் ஆழ்வார் என்று சொன்னால் நம்மாழ்வாரைக் குறிக்கும். மற்ற ஆழ்வார்கள் இவருக்கு அங்கங்கள். ஆழ்வாரின் தலைவர் நம்மாழ்வார்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 1,269 பாசுரங்களை இனிக்க இனிக்கப்பாடி பரம்பொருளைப் போற்றியுள்ளார் நம்மாழ்வார். 39 திவ்விய தேசங்களின் அருள் சிறப்படையும் போற்றி பாடியுள்ளார்

அவர் அவதரிப்பதற்கு முன்பு வரை, ஆளில்லாமல் பரமபதவாசல் மூடியிருந்தது. ஆழ்வார் தமிழில் பாடிய பிறகு மக்கள் ஞானம் பெற்று அவரோடு அவருடைய பாடல்களைப் பாடி நற்கதி அடைந்தார்கள்.

இதைக் காட்டுவதற்காக இந்த நாளில் அவர் பாடிய திருவாய்மொழி கேட்டுக்கொண்டே பரமபதத்துக்கு அழைத்துச் சென்றார் பெருமாள்.

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் அடிப்படையில் ஆழ்வார் மோட்ச உற்சவம் எல்லாக் கோயில்களிலும் நடைபெறும்.

அவருடைய விக்கிரகத்தை எடுத்துச்சென்று பெருமாளுடைய திருவடியில் வைத்து துளசியால் மூடுவார்கள். அவருக்கு மோட்சம் கிடைத்துவிட்டதாகப் பொருள்.

அதற்கு பிறகு ‘‘ஆழ்வாரை எங்களுக்குத் தந்தருள வேண்டும்’’ என்று இறைவனிடம் பிரார்த்திக்க, துளசியை அகற்றிவிட்டு, அவருக்கு மாலை பரிவட்டம் எல்லாம் தந்து, திரும்ப அவரை அவருடைய ஆஸ்தானத்தில் கொண்டு சென்று சேர்ப்பார்கள். இது அற்புதமான உற்சவம்.

ஆழ்வார் எல்லோரையும் உய்வடையச் செய்தார். ஆழ்வார் பாசுரம் பாடிய பிறகு, நரகத்தில் யாருக்கும் இடமில்லை. எல்லோருக்கும் பரமபதத்தில்தான் இடம் இருந்தது என்று சொல்லும் பாடல் இது.

பொலிக பொலிக பொலிக! போயிற்று வல் உயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த  நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழிதரக் கண்டோம்.

ஆசார்யன் திருவடிகளே சரணம் 🙏 12.01.23

ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 439* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

*ஸித்திஸ்* :‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
உண்மைதான் கண்ணா ...

தாய்மை என்றாலே அது சுயநலம் ஒன்று தானே ...

தன் குழந்தை தன் ரத்தம் தன் உணர்வுகள் என்று தானே எந்த ஒரு தாயும் இருப்பாள் ...

10 மாதங்கள் சுமந்து பெற்றபின்னும் எண்ணங்களில் தன் ஆயுசு முடியும் வரை அவள் அந்த சிசுவை சுமக்கிறாள் ...

நீ எனக்கு பிறக்க வில்லை என்பதால் என் தாய்மை சுயநலம் இன்றி போய் விடுமா *கண்ணா ?*

என் அன்பு வளர்ந்ததே தவிர என் அறிவு வளரவில்லை *கண்ணா*

அனைவருக்கும் தெய்வமாய் தெரிந்த நீ எனக்கு மட்டும் ஏன் என் குழந்தையாகவே தெரிந்தாய் ... ?

எவ்வளவு பேதை நான் கண்ணா ...

அஞ்சன வண்ணனை ஆயர்குலக் கொழுந்தினை

மஞ்சனம் ஆட்டி மனைகள்தோறும் திரியாமே,

கஞ்சனைக் காய்ந்த கழலடிநோவக் கன்றின்பின்

என்செயப் பிள்ளையைப் போக்கினேன்?

எல்லே பாவமே!

இப்போது என்ன செய்கிறானோ என் குழந்தை!

மாடுகன்றுகளை விரட்டிக்கொண்டு சாப்பிடவும் மறந்து பசியுடன் அலைவானோ?

யார் அவனுக்கு சாப்பிட நினைவுபடுத்துவார்கள்?

அண்ணன் பலராமன் செய்தால் உண்டு.

ஆற்றில் குளிக்கச் சென்ற பெண்களுடன் தானும்சென்று அவர்கள் அரைத்துவைத்த பற்றும் மஞ்சளைத் தன் உடலிலும் பூசிக்கொண்டு திரிவானே!

ஆற்றங்கரை மணலில் ஆய்ச்சிறுமியர்கள் கட்டிய சிற்றிலை அழித்துவிட்டுக் கைகொட்டி நகைப்பானே!

அந்தச் சிறுவனை கொலைவேடர்கள் திரியும் காட்டிற்கு கன்றுகளை மேய்க்க அனுப்பிவைத்தேனே!

கண்ணா இப்படியெல்லாம் புலம்பினேன் நீ பரந்தாமன் என்பதை அறியாமல் ..... நான் அன்றோ கண்ணா அடி முட்டாள் ....
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 438*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

ஸ்லோகம் 59.
ravi said…
ஹம்ʼஸ꞉ பத்³மவனம்ʼ ஸமிச்ச²தி யதா²

நீலாம்பு³த³ம்ʼ சாதக꞉
கோக꞉ கோகனத³ப்ரியம்ʼ

ப்ரதிதி³னம்ʼ சந்த்³ரம்ʼ சகோரஸ்ததா² |

சேதோ வாஞ்ச²தி மாமகம்ʼ பஶுபதே சின்மார்க³ம்ருʼக்³யம்ʼ

விபோ⁴
கௌ³ரீநாத² ப⁴வத்பதா³ப்³ஜயுக³லம்ʼ
கைவல்யஸௌக்²யப்ரத³ம் || 59 ||
ravi said…
*கோகனத ப்ரிய: –*

அப்படின்னா தாமரைக்கு பிரியமான சூரியன், *கோக* : அப்படிங்கறது சக்கரவாக பக்ஷி,

*கோக்கனத பிரியம் ஸ மிச்சதி,*

அந்த சூரியனின் வரவை மிகவும் விரும்புகிறது.

இந்த சக்கரவாகப் பக்ஷி தம்பதிகள் பிரிந்திருந்து ராத்திரியில, அப்புறம் பகல் வந்த உடனே அந்த பக்ஷி தம்பதிகள் சேர்வது அப்படிங்கறது ராமாயணத்திலேயே வரது.
ravi said…
ஹிமஹதநலினீவ நஷ்டஶோபா⁴

வ்யஸனபரம்பரயாநிபீட்³யமானா |
ஸஹசரரஹிதேவ சக்ரவாகீ

ஜனகஸுதா க்ருʼபணாம்ʼ த³ஶாம்ʼ ப்ரபன்னா ||5.16.30||

அப்படின்னு சொல்றார்.

பனியினால் வாடின தாமரையைப் போலவும்,

கணவனைப் பிரிந்த சக்ரவாக பக்ஷியை போலவும்,

இந்த ஜனக சுதா, ராமரைப் பிரிந்து ரொம்ப வாடிய நிலைல இருக்காள்,

அப்படின்னு ஹனுமார் 16வது சர்கத்தில சீதையை குறித்து வருத்தப்பட்டு புலம்பும்போது சொல்ற ஒரு ஸ்லோகம்.
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 58 started on 6th nov

*பாடல் 20* ...💐💐💐
ravi said…
*பாடல் 20 ... அரிதாகிய மெய்*

(உபதேசம் பெற்றதை வியத்தல்)

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா

விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.
ravi said…
குரு அருள் இன்றி ஞானம் கிட்டாது. அருணகிரி போன்ற அவதார
புருஷர்களுக்கு இறைவனே குருவாக வந்து உபதேசம் செய்கிறான்.
இதை பல கந்தர் அலங்காரப் பாடல்களிலும் கூறுகிறார்
(பாடல் 9) 'தேனென்று',

.. தெளிய விளம்பியவா முகமாறுடை தேசிகனே
தெய்வ வள்ளிக்கோன் அன்று எனக்கு உபதேசித்தது
ஒன்று உண்டு ..

... என பல இடங்களில் வியக்கிறார். இதற்கு முன் உள்ள அநுபூதியில்,
வறுமையின் கொடுமையை வர்ணித்தார். இந்த வறுமை தீர முருகப்
பெருமானின் கருணையை வேண்டினார்.

.. என் வறுமை தீர அன்று உன் அருள் பேணேன் ..

... என்கிறார்.
Kousalya said…
அற்புதம் அதி அற்புதமான விளக்கம்....
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

நம் எண்ணங்கள் தடுமாறாமல் இருந்தால் தான்

நம் பயணங்கள் தடம் மாறாமல் இருக்கும்,

நாம் சேரும் இடமும் சிறப்பாக இருக்கும்.


*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
ravi said…
❤️ *இன்றைய சிந்தனை*

*( 13.01.23 )*
*..........................................................*

*'‘அடுத்தவர்களின் குறைகளை...! ’’*
*...........................................................*

*மனிதர்களுக்கு இடையில் ஒருவரையொருவர் வெறுப்பதற்கும், இதமான உறவு இல்லாமல் போவதற்கும் சரியான, தெளிவற்ற, தவறானப் புரிதல்கள் தான் காரணம்...*

*மற்றவர்களைத் தவறாக எண்ணுவதற்குக் காரணமாக இருப்பது தேவையற்ற அய்யப்பாடுகளும் அவதூறு பரப்புதலும் தான் என்றால் அது மிகையில்லை...*

*கெட்ட எண்ணத்தில் ஆதாரம் இல்லாமல் நாம் பேசும் பொழுது நிறைய பொய்களை சேர்த்துப் பேச வேண்டிய நிலை உருவாகி விடுகின்றது. அவர்களைப் பற்றி தேவையில்லாமல் துருவித் துருவி ஆராய வேண்டிய நிலையையும் உருவாக்கி விடுகின்றோம்...*

*மனிதர்களில் எவரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது...!*

*எனவே!, பிறரின் குறைகளையும், அவர்களின் அந்தரங்க செயல்களையும் எக்காரணம் கொண்டும் துருவித் துருவி ஆராயமல் இருப்பது மிக நல்லது...*

*சிலர் தங்கள் பொன்னான நேரத்தை, தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல் அடுத்தவர்களின் குறைகளைக் கண்டுபிடிக்கவே செலவிட்டுக் கொண்டிருப்பார்கள்...*

*அவர்களின் கண்களுக்கு மற்றவர்களிடம் இருக்கும் நிறைகள் தெரியாது. குறைகள் மட்டுமே தெரியும். அடுத்தவர்களின் குறைகளைக் கண்டுபிடிக்கவும், அதுபற்றிப் பேசவுமே தங்கள் மூளையைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதால், அவர்களது மூளை அதற்கு அப்பால் சிந்திக்கும் திறனை இழந்து விடும்...*

*ஆம் நண்பர்களே...!*

*மற்றவர்களின் குறைகளை மட்டுமே கண்டுபிடிப்பவன், தனக்குத் தானே குழி பறித்துக் கொள்கிறான்...!*

*மற்றவர்களின் குறைகளை எல்லாம் கண்டுபிடிக்கும் சிலருக்கு, தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்குப் பெயர் தான் ''தன் நலம்''...!!*

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
👇👇
ravi said…
13.01.2023:

"Gita Shloka (Chapter 1 and Shloka 21)

Sanskrit Version:

हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते।
सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत।।1.21।।

English Version:

hrshikesham tadaa vaakyam
idamaaha mahipate |
senayorubhayormadhye
raTham sThaapaya me achuyata ||

Shloka Meaning

After surveying the rival army, Arjuna took his bow and spoke these words.
Place my chariot in the middle of the two armies

Achyuta - One of the multiple names with which Krishna is known as.
Means one who has no fall or one who never slips down from the state of the Supreme Self.
It might also mean one who protects those who take refuge in him, from sinking in the ocean of samsara.

Jai Shri Krishna 🌺
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 440* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

*ஸித்திஸ்* :‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
கண்ணா .... நீ என்றும் எனக்கு கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!-

கண்ணா உனக்கு ஞாபகம் இருக்கா ? அன்று ஒரு நாள்
விடியற்காலை,

பெரிய பானையில் தோய்த்த கட்டித்தயிரைக் கடைந்துகொண்டிருக்கிறேன் .

கொண்டை அவிழ்ந்து ஒருபுறம் சரிந்து கிடக்கிறது;

கழுத்தாபரணங்களும், கைவளையல்களும் ‘கலின் கலின்’ என ஒரு லயத்தோடு ஒலிக்கின்றன.

கள்ளக்குட்டன்,நீ அவ்விடியலிலேயே எழுந்துவந்து என் தோளைக்கட்டிக்கொண்டு

கையில் ஒரு பெரிய பந்தளவு வெண்ணையையும் வாங்கி உண்டாயே

மேலும்மேலும் வெண்ணைகேட்கும் அவனுக்கு இன்று என்னாயிற்று?

சமர்த்தாக என்னருகே அமர்ந்துகொண்டு பொறுமையாகக் காத்திருக்கிறாயே !!

கடைவதை நிறுத்தாமல் உன்னை நோக்கிக் கடைக்கண்ணால் புன்னகைக்கிறேன்

பாசத்தில் நெஞ்சம் விம்முகிறது. கண்களில் நீர்துளிர்க்கின்றது.

‘அட! எத்தனை அழகாகக் குட்டிக் கருமேகம் போல இருக்கிறான் என் குழந்தை!

எவ்வளவு விரைவாக வளர்ந்து விட்டான்,‘ என்றெல்லாம் எண்ணிப் பூரிக்கிறேன்

ஒருவழியாகக் கடைந்து முடித்து, வெண்ணையை விற்பதற்காகப் பெரிய ஒரு சட்டியில் திரட்டி வைக்கிறேன்

மேலும் ஒரு பெரிய உருண்டையாக உருட்டி எடுத்து, அவனுடைய குட்டிக் கைகளில் வைக்கிறேன்

ஆசையாக அவனது சுருண்ட கேசத்தை விரல்களால் அளைகிறேன் ‘

கொழுகொழு’க் கன்னத்தில் முத்தமிடுகிறேன்

வாரி நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு புளகாங்கிதம் அடைகிறேன்

“அம்மா,” எனக் கொஞ்சியவாறே நீயும் ஏதோ சொல்லமுனைகிறாயே ஞாபகம் இருக்கா கண்ணா ...

ஆமாம் என்பதைப்போல தலையாட்டினான் துவாரகா வேந்தன் ... 🙌🙌🙌
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 457* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*191 दुःखहन्त्री - துக்கஹந்த்ரீ --*

முதலில் துக்கம் ஏன் தரவேண்டும் பின்பு அதை ஓடிவந்து அழிக்க வேண்டும் .. எல்லா தெய்வங்களும் இப்படித்தான் ..

குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்ட ஓடி வரும் ...

ஏன் அம்பாள் முதலில் கஷ்டத்தை கொடுக்க வேண்டும் ...

ரமணரும் பரமஹம்ஸரரும் அழகான உதாரணம் .

இருவருக்கும் புற்று நோய் ..

ஒருவருக்கு துடையில் இன்னொருவருக்கு தொண்டையில் ...

அவர்கள் இறையிடம் கொண்ட பக்தி எள்ளளவும் குறையவே இல்லை ..

நம்மால் அந்த அளவிற்கு செல்ல முடியாது

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் ..

ஸ்ரீ லலிதா என்றாலே எதையும் விளையாட்டாய் செய்பவள் ..

அதனால் அவள் சோதித்து பார்க்கிறாள் ...

அவளே கதி என்பவர்களுக்கு தாயாகிறாள் ...

மற்றவர்களுக்கு பாடம் போதிக்கிறாள் ...

அந்த மகான்களை நினைவில் கொள்ள வேண்டும் .

அவர்கள் பட்ட உடல் உபாதைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல ..

வாழ்க்கையை விளையாட்டாய் எடுத்துக்கொண்டார்கள்

அதனால் ஸ்ரீ லலிதாவின் விளையாட்டை சுகமாக அனுபவிக்க முடிந்தது ... 🪷🪷🪷
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 53*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
पुञ्जितकरुणमुदञ्चितशिञ्जितमणिकाञ्चि किमपि काञ्चिपुरे ।

मञ्जरितमृदुलहासं पिञ्जरतनुरुचि पिनाकिमूलधनम् ॥ ३७॥

37. Punchitha karunaa mudanchitha, sinchutha mani Kanchi kimapi kanchipure,

Manchareetha mrudhula haasam pinchara thanu ruchi pinaki moola dhanam.

புஞ்ஜிதகருணமுதஞ்சிதஶிஞ்ஜிதமணிகாஞ்சி கிமபி காஞ்சிபுரே |

மஞ்ஜரிதம்றுதுலஹாஸம் பிஞ்ஜரதனுருசி பினாகிமூலதனம் ||37||
ravi said…
கம்பா நதிக்கரையில் கிளிங் கிளிங் என்று சத்தம் கேட்கிறதே

அது என்ன தெரியுமா?

அம்பாளின் இடையில் அணிந்திருக்கும் ஒட்யானத்தின் நவமணி சலங்கைகள் வேதநாத ஒலி .

அந்த சப்தமே பக்தர்களின் துன்பமகற்றி கருணை பெறச் செய்கிறது.

அந்த இனிய நாதம் காஞ்சி முழுதும் எதிரொலிக்கிறது.

இந்த இனிய இளைய தாமரை மொட்டு தான் மகேஸ்வரன், ஏகாம்ர நாதனின் பொக்கிஷம், செல்வம், பெரும் தனம் .

நமஸ்கரிக்கிறேன் தாயே !!
ravi said…
*கண்ணா* !

அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம்.

அதற்கான காரணத்தைக் கேள்!

பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ,

எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே!

நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை)

இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை.

என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும்.

எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும்.

உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும்.

இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.

*கண்ணா* ... கோரிக்கை ஒன்றே கோவிந்தனே எங்கள் உள்ளமதில் உறவாட வேண்டும் .

எனது என்னுது என்றெல்லாம் மறக்க வேண்டும்

என்றும் உன் எழில் காணும் கண்கள் வேண்டும்

எதிலும் உனையே காணும் வரம் வேண்டும் .

நான் உண்பதெல்லாம் உன் பிரசாதமாக வேண்டும் ..

ஓடி உழைப்போர்க்கு உதவி செய்யும் மனம் வேண்டும் ..

வறுமை கண்டு வாழாமல் வாழ்வோர்க்கு உன் நாமம் வற்றாத ஜீவ நதியாக வேண்டும் .

குசேலன் போல் உன் நட்பு வேண்டும்

கோவிந்தா என்று சொல்லும் போது என் மூச்சு நிற்கவேண்டும்
ravi said…
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச்

சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம்

உனக்கேநாம் ஆட்செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.🪷🪷🪷
ravi said…
அம்மா

ஹரி வேறு நீ வேறு என்போர் அறியாமை கொண்டோர் அன்றோ ?

புவி வேறு புலன் வேறு என்று சொல்வோர் கவி ஆவதுண்டோ ?

தாய் வேறு தாய்மை வேறு என்று சொல்வோர் தரம் குறைந்தோர் அன்றோ ?

தமிழ் வேறு உயிர் வேறு என்போர் தன்னில் சிறுமை கொண்டோர் அன்றோ ?

யுகம் யுகம் எடுக்கும் அவதாரம் தனை அகம் அகம் என்றே சொன்ன அசுரனை அரை நொடியில் அழித்தன்றோ ... ?

அனைத்தும் நீயே என்றே தெரிந்தபின் உன் கருணை தனில் ஆழம் பார்ப்பது தவறன்றோ .... ?💐💐💐
ravi said…
*❖ 80 கராங்குலி நகோத்பன்ன நாராயண தஷாக்ருதி; =*

ஸ்ரீமன் நாராயணரின் பத்து அவதாரங்களை தனது நகங்களிலிருந்து உருவாக்கியவள்.
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

39 –
ஞமலியில் கேடா நான் என் உறுதியால்
நாடி நின் உறுவேன் அருணாசலா (அ)
ravi said…
விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத சிறந்த பொருளான அருணாசலனே

உன்னை வணங்கும் அடியவர்களுக்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்து அருள்செய்து வாழ வைத்தாய்.

வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே!

பரம்பரை பரம்பரையாக உனக்கு பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேனே!

பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பே!

உன்னை அணுகும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே!

நீயே இந்த உலகின் உயிர்.

எம்பெருமானே!

நீ கண் விழித்தால் இந்த உலகம் வாழும்.

நாயேனையும் ஓர் பொருளாய் மதித்து நீயே எனை த் தேடி வந்தாய் ..

வந்தபின் உன் திருவடி என் சென்னியில் பதிக்கா விடில் பாழ் இகழும் உனை அருணாசலா 🙏🙏🙏
ravi said…
முகுந்தமாலா 43, 44 ஸ்லோகங்கள்🪷🪷🪷
ravi said…
பகவானோட அந்த ஆனந்தம், சிவானந்தம், சிவானந்த லஹரின்னு சொல்றார் ஆசார்யாள். ப்ரவாகமா வரும் சிவானந்த லஹரின்னு ஆதிசங்கரர் சொல்றார். அந்த சிவானந்த லஹரி பெருகி வரும்போது அது என் மனதில் வந்து தேங்கட்டும்னு சொல்லி சிவானந்த லஹரியில இரண்டாவது ஸ்லோகம்

गलन्ती शंभो त्वच्चरितसरितः किल्बिषरजो

दलन्ती धीकुल्यासरणिषु पतन्ती विजयताम् ।

दिशन्ती संसारभ्रमणपरितापोपशमनं

वसन्ती मच्चेतोहृदभुवि शिवानन्दलहरी ॥

க³லந்தீ சம்போ⁴ த்வச்சரிதஸரித: கில்பி³ஷரஜோ

த³லந்தீ தீ⁴குல்யாஸரணிஷு பதந்தீ விஜயதாம் ।

தி³சந்தீ ஸம்ஸாரப்⁴ரமணபரிதாபோபசமனம்

வஸந்தீ மச்சேதோஹ்ருʼத³பு⁴வி சிவானந்த³லஹரீ ॥

ன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
இதுக்கு அர்த்தம் ‘சம்பு’ங்கிறதுக்கு ஆனந்தத்தை இருப்பிடமா கொண்டவர்னு அர்த்தம் ‘த்வச்சரிதஸரித: க³லந்தீ’ இந்த சிவானந்த லஹரி, சிவானந்த பிரவாகம் எங்க இருந்து கிளம்பறதுன்னா உன்னுடைய சரித்திரம் என்கிற நதியிலிருந்து கிளம்பறது. அங்கேயிருந்து கிளம்பி வழியில பாவம்ங்கிற புழுதியைப் போக்கிண்டு ‘கில்பி³ஷரஜோ த³லந்தீ’
ravi said…
❤️ *இன்றைய சிந்தனை*

*( 13.01.23 )*
*..........................................................*

*'‘அடுத்தவர்களின் குறைகளை...! ’’*
*...........................................................*

*மனிதர்களுக்கு இடையில் ஒருவரையொருவர் வெறுப்பதற்கும், இதமான உறவு இல்லாமல் போவதற்கும் சரியான, தெளிவற்ற, தவறானப் புரிதல்கள் தான் காரணம்...*

*மற்றவர்களைத் தவறாக எண்ணுவதற்குக் காரணமாக இருப்பது தேவையற்ற அய்யப்பாடுகளும் அவதூறு பரப்புதலும் தான் என்றால் அது மிகையில்லை...*

*கெட்ட எண்ணத்தில் ஆதாரம் இல்லாமல் நாம் பேசும் பொழுது நிறைய பொய்களை சேர்த்துப் பேச வேண்டிய நிலை உருவாகி விடுகின்றது. அவர்களைப் பற்றி தேவையில்லாமல் துருவித் துருவி ஆராய வேண்டிய நிலையையும் உருவாக்கி விடுகின்றோம்...*

*மனிதர்களில் எவரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது...!*

*எனவே!, பிறரின் குறைகளையும், அவர்களின் அந்தரங்க செயல்களையும் எக்காரணம் கொண்டும் துருவித் துருவி ஆராயமல் இருப்பது மிக நல்லது...*

*சிலர் தங்கள் பொன்னான நேரத்தை, தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல் அடுத்தவர்களின் குறைகளைக் கண்டுபிடிக்கவே செலவிட்டுக் கொண்டிருப்பார்கள்...*

*அவர்களின் கண்களுக்கு மற்றவர்களிடம் இருக்கும் நிறைகள் தெரியாது. குறைகள் மட்டுமே தெரியும். அடுத்தவர்களின் குறைகளைக் கண்டுபிடிக்கவும், அதுபற்றிப் பேசவுமே தங்கள் மூளையைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதால், அவர்களது மூளை அதற்கு அப்பால் சிந்திக்கும் திறனை இழந்து விடும்...*

*ஆம் நண்பர்களே...!*

*மற்றவர்களின் குறைகளை மட்டுமே கண்டுபிடிப்பவன், தனக்குத் தானே குழி பறித்துக் கொள்கிறான்...!*

*மற்றவர்களின் குறைகளை எல்லாம் கண்டுபிடிக்கும் சிலருக்கு, தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்குப் பெயர் தான் ''தன் நலம்''...!!*

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
👇👇
https://chat.whatsapp.com/CI5Bj32nY6rJ34WCW5PIjL
ravi said…
*இன்றைய சிந்தனை.*
..........................................
*"மற்றவர்களுக்கு கெடுதல்..''*
........................................

நாம் ஒருவருக்கு உதவி செய்யவில்லை என்றாலும் கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும்..’

இதே அறிவுரையை யாராவது உங்களிடம் சொல்லி இருப்பார்கள், இல்லாவிட்டால் நீங்களாவது யாரிடமாவது கூறி இருப்பீர்கள்.

இந்த சிந்தனை இன்று நேற்று தோன்றியதல்ல.
நம்மால் நல்லது செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை;கெடுதல் செய்யாமல் இருக்கும் குணத்தையாவது பெற்று இருக்க வேண்டும்..

அந்தச் செயல்தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவது. அதுமட்டுமல்ல,நம்மை நல் வழிப்படுத்தும்..

நாம் எல்லோரும் மகிழ்வாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.அதற்கு யாருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பதுகூட இல்லை, தீமை செய்யாமல் இருந்தாலே போதும்.

ஒரு மரத்தில் அணில் ஒன்று தாவி விளையாடிக் கொண்டு இருக்கும்போது தவறி கீழே நின்ற ஒநாயின் மீது விழுந்தது.

ஓநாய் அதைத் தன் வாயில் கவ்வி சாப்பிட முயற்சி செய்யும்போது, தன்னை விட்டு விடுமாறு அணில் கெஞ்சியது..

அப்போது ஓநாய் ,”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் உன்னை விட்டு விடுகிறேன்,” என்றது.

அணிலும்,”உன் பிடியில் நான் இருந்தால் எப்படி பதில் சொல்ல முடியும்?” என்று கேட்கவேஓநாயும் பிடியைத் தளர்த்தியது.

உடனே மரத்தில் தாவி ஏறிய அணில்,

இப்போது உன் கேள்வியைக் கேள்,”என்றது.ஓநாய் கேட்டது,”உன்னை விட நான் பலசாலி.

ஆனால் என்னைவிட மகிழ்ச்சியாக மரத்தில் எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டு இருக்கிறாயே! இது எப்படி சாத்தியம்?”..

அணில் சொன்னது,

”நீ எப்போதும் கொடிய செயல்களையே செய்கிறாய். அதுவே உன் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடிய வில்லை..

ஆனால் நான் எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் விளை விப்பதில்லை. மரங்களில் தானாகப் பழுத்த பழங்களை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். அதனால் என் மனதில் எப்போதும் கவலை இல்லை.” என்றது.

*ஆம்.,நண்பர்களே..,*

எந்த சூழளிலும் நாம் நம்மால் சமூகத்திற்கு நன்மை செய்யா விட்டாலும், தீமை செய்யாமல் இருந்தாலே அதுவே மிகப் பெரிய நன்மையாகும் ..

இயன்றவரை நன்மை செய்து வாழவேண்டும் என்ற எண்ணத்தை நம் மனதில் விதைப்போம்.💐🙏🏻❤

பகிர்வு - தகவல் உலா
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

பிதாவான மஹேச்வரன் பஞ்சலிங்க அநுக்ரஹம் பண்ணினபோது மாதா பார்வதி சும்மாயிருப்பாளா? அவள் ஒரு ஸ்தோத்ரச் சுவடியை ஆசார்யாளுக்குக் கொடுத்தாள். அதுதான் தேவீ ஸ்துதிகளில் முதல் ஸ்தானம் வஹிப்பதான “ஸெளந்தர்ய ஸஹரி”. மார்க்கண்டேய ஸம்ஹிதையில் அதை “ஸெளந்தர்ய ஸாரம்” என்று சொல்லியிருக்கிறது. “பூத்யை” – அதாவது லோகத்திற்கு க்ஷேமம் உண்டாக்குவதற்காக – அதை ஆசார்யாளுக்கு அநுக்ரஹம் பண்ணினாளென்று இருக்கிறது.

ravi said…
பஞ்சலிங்கம் கொடுத்தது, அவற்றின் பெயர்கள், அவற்றை ஆசார்யாள் எங்கெங்கே வைத்தார் என்பதையெல்லாம் ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’க்கு முழுக்க இசைவாகச் சொல்லும் ‘ஆனந்தகிரீய சங்கர விஜய’த்தில் அம்பாள் கொடுத்த புஸ்தகத்தை ‘அம்பிகா ஸ்தவ ஸாரம்’ என்று குறிப்பிட்டிருக்கிறது.4 தேவீ பரமான ஸ்துதிகளுக்கெல்லாம் இதுவே ஸாரமாயிருப்பது என்று அர்த்தம். “ஜகதநுக்ரஹாய” கொடுத்தாளென்று இருக்கிறது. ஜகத்குருவுக்குப் பண்ணும் அநுக்ரஹம் ஜகத்துக்கே அநுக்ரஹம்தானே?

ravi said…
ஸெளந்தர்ய லஹரி’ என்றால் அழகின் அலைகள். அம்பாள் அழகு ஸமுத்ரமாயிருக்கிறாள். அதை ஸ்தோத்ரம் வாக்கு ரூபத்தில் காட்டிவிடுகிறது. அப்போது ஒவ்வொரு ச்லோகமும் ஒரு அலைமாதிரி.

அம்பாளுக்குப் பல ரூப பேதங்கள் இருப்பதில் இது ‘ஸுந்தரி’ என்பவளைப் பற்றியது. அவள் தசமஹா வித்யா என்று பத்தில் ஸுந்தரி வித்யாவுக்கு தேவதையாக இருப்பவள். ‘ஸ்ரீவித்யா’ என்பது அதைத்தான்.

ravi said…
த்ரிபுரஸுந்தரி என்பது அந்த ஸுந்தரிதான். மூன்று லோகத்திலேயும் சிறந்த அழகி த்ரிபுரஸுந்தரி. ஸ்தூல-ஸுக்ஷ்ம-காரணம் என்ற முப்புரங்களுக்குள்ளே ஞானமாகவும் காருண்யமாகவும் இருக்கும் ப்ரஹ்ம தத்வம்தான் இப்படி அழகு ஸ்வரூபமான தாயாக ஆகி த்ரிபுர ஸுந்தரி என்ற பெயரில் விளங்குவது. ‘லலிதாம்பாள்’ என்று சொல்வது அவளைத் தான்.

சந்த்ரமௌலீச்வர லிங்கத்தின் சக்தியாக ஸ்ரீசக்ர ரூபத்தில் பூஜை பண்ணுவது த்ரிபுரஸுந்தரிக்குத்தான். ஏனென்றால் அவர் மாதிரியே அவளுக்கும் பூர்ண சந்த்ர ஸம்பந்தம் நிறைய உண்டு. அவருடைய சிரஸில் பூர்ண சந்த்ரன் இருக்கிறதென்றால் இவள் வாஸம் பண்ணுவதே பூர்ண சந்த்ர மத்தியில்தான்! ” சந்த்ர மண்டல மத்யகா “என்று ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. அவளுக்கு விசேஷமான திதியும் பூர்ணிமை! ஸாதனாந்தத்தில் (ஸாதனை) முடிவில் அவளே நம்முடைய சிரஸ் உச்சியில் பூர்ண சந்த்ரனாக அம்ருதத்தைக் கொட்டுவாள்.

ravi said…
திவ்ய தம்பதி ஜிலுஜிலுவென்று அழகாக அம்ருத கிரணங்களைக் கொட்டிக் கொண்டிருக்கும் சந்த்ர ஸம்பந்தத்துடன் லோகத்தின் தாபத்தையெல்லாம் போக்கி ஆனந்தம் கொடுப்பதற்காகச் சந்த்ரமௌளியாகவும் த்ரிபுரஸுந்தரியாகவும் இருக்கிறார்கள். அவள் சிரஸிலும் சந்த்ர கலை உண்டு. “சாரு சந்த்ர கலாதரா” என்று ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது. ‘மஹாத்ரிபுரஸுந்தரி’, ‘சந்த்ர மண்டல மத்யகா’, ‘சாரு சந்த்ரகலாதாரா’ என்ற நாமாக்கள் கிட்டக் கிட்டவே வந்துவிடுகின்றன.

“‘ஸெளந்தர்ய லஹரி’ ஆசார்யாளே பண்ணியது என்று தான் ப்ரஸித்தமாயிருக்கிறது. ஏற்கெனவே அது கைலாஸத்திலிருந்து, அம்பாள் கொடுத்தாள் என்றால் ஆசார்யாள் அதைப் பண்ணவில்லையா? ப்ரசாரம் மட்டும் தான் பண்ணினாரா?” என்று கேட்டால் இதற்கு ஒகு கதை பதில் சொல்கிறது. இந்தக் கதை சங்கர விஜயம் எதிலும் இல்லாவிட்டாலும் கர்ணபரம்பரையாக வந்திருக்கிறது. சிஷ்டர்களும் மதிப்புக் கொடுத்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். என்ன கதை என்றால்…

“மூன்று காலமும் பில்வார்ச்சனை பண்ணி லோக க்ஷேமத்தை உண்டாக்கு” என்று சொல்லி ஸ்வாமி பஞ்சலிங்கங்களைக் கொடுத்தார். அம்பாளும் லோகக்ஷேமத்திற்காக ப்ரசாரம் பண்ணச் சொல்லி ஸ்தோத்ரச் சுவடியைக் கொடுத்தாள். ஆசார்யாள் அவர்களை நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பினார்.

கைலாஸத்தின் வாசலிலிருந்த நந்திகேச்வரருக்கு மஹா மந்த்ர சாஸ்த்ரமாக இருந்த அந்த ஸ்தோத்ரம் கைலாஸத்தை விட்டுப் போவதா என்று இருந்தது. அவர் அப்பப்போ ரொம்பவும் ரோஷமாகக் கார்யம் பண்ணிவிடுவார். அதனால் யார் என்ன என்று பார்க்காமல் ஆசார்யாளின் கையிலிருந்த சுவடியைப் பறித்தார். எல்லா ஓலையும் அவர் கைக்குப் போகவில்லை. ஒரு பாகம் ஆசார்யாள் கையிலேயே இருந்தது. மொத்தம் இருந்த நூறு ச்லோகத்தில் பின் 59 நந்திகேச்வரர் கைக்குப் போயிற்று. ஆரம்ப பாகமான 41 ஸ்லோகத்தை ஆசார்யாள் இறுக்கப் பிடித்துக்கொண்டு சட்டென்று வெளியேறி விட்டார்!

பெரிய பாகம் நஷ்டமாகவிட்டதே என்று அவர் துக்கப்பட்டார். அப்போது அம்பாள் அசரீரி வாக்கில், “எல்லாம் என் லீலைதான். அந்த 59-ம் நீயே பூர்த்தி பண்ணிவிடு. உன் வாக்காலேயே ஸ்தோத்ரம் கேட்கணும்; அது கைலாஸ ஸொத்தான ஸ்தோத்ரத்தோடேயே, அதற்கு ஸமதையாகச் சேர்ந்து ப்ரகாசிக்கணும் என்றுதான் இப்படி நடக்கப் பண்ணினேன்” என்றாள்.

ஆசார்யாள் ரொம்பவும் ஸந்தோஷத்துடன் அப்படியே 41-ஐ நூறாக்கிப் பூர்த்தி பண்ணிவிட்டு, “என் வாக்கா? உன்னுடையதேயானே வாக்கால்தான் உனக்கென்றே இந்த ஸ்தோத்ரம் ஏற்பட்டது – த்வதீயாபிர் – வாக்பிஸ் – தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்” என்று பரம விநயத்தோடு முடித்து அவளுக்கு அர்ப்பணம் பண்ணினார்.

இப்படிக் கதை இருக்கிறது.
Kousalya said…
😍supperub.. bringing the Gokul/ aayarpady/ Krishna என்னும் கருந்தைவம் மாதவத் தைவம்....என் கண்முன் நின்று நடம் செய்கின்றான்....மிக அருமையாக உள்ளது...
ravi said…
*அன்று*
வீடு நிறைய குழந்தைகள்
*இன்று*
வீட்டுக்கொரு குழந்தை
*அன்று*
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
*இன்று*
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்
*அன்று*
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி
*இன்று*
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி
*அன்று*
படித்தால் வேலை
*இன்று*
படிப்பதே வேலை
*அன்று*
வீடு நிறைய உறவுகள்
*இன்று*
நிறைய வீடுகள் உறவுகள் இல்லை
*அன்று*
உணவே மருந்து
*இன்று*
மருந்துகளே உணவு
*அன்று*
முதுமையிலும் துள்ளல்
*இன்று*
இளமையிலேயே அல்லல்
*அன்று*
உதவிக்கு தொழில் நுட்பம்
*இன்று*
தொழில் நுட்பம் தான் எல்லாம்
*அன்று*
யோக வாழ்க்கை
*இன்று*
எந்திர வாழ்க்கை
*அன்று*
படங்களில் ஒரு குத்து பாட்டு
*இன்று*
குத்து பாட்டில் தான் படமே
*அன்று*
ஓடினோம் வயிற்றை நிறைக்க
*இன்று*
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க
*அன்று*
பெரியோர்கள் பாதையில்
*இன்று*
இளைஞர்கள் போதையில்
*அன்று*
ஒரே புரட்சி
*இன்று*
ஒரே வறட்சி
*அன்று*
சென்றார்கள் வளர்ச்சியில்
*இன்று*
செல்கிறது சினிமா கவர்ச்சியில்
*அன்று*
ஊரே கூட கோலாகல விழா
*இன்று*
ஊருக்கே போக முடியாத மூடுவிழா
*அன்று*
கைவீசி நடந்தோம்
*இன்று*
கைப்பேசியுடன் நடக்கிறோம்
*அன்று*
ஜனநாயகம்
*இன்று*
பணநாயகம்
*அன்று*
விளைச்சல் நிலம்
*இன்று*
விலை போன நிலம்
*அன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
*இன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.
*அன்று*
நிறைந்தது மகிழ்ச்சி
*இன்று*
நடக்குது வெற்று நிகழ்ச்சி
🦋 *அன்று*
வாழ்ந்தது வாழ்க்கை
🦀 *இன்று*
ஏதோ வாழும் வாழ்க்கை.
*படித்ததில் பிடித்தது...🙏🌹
ravi said…
🌀படுக்கையில் பலநாள் படுக்காமல், உடம்பெல்லாம் பீஷ்மர் போல் ஊசி தைத்துக் கொள்ளாமல், அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே, தண்ணீர் குடிக்காதே என்று வெள்ளைக் கோட்டின் கட்டுப்பாடில்லாமல், ஆஸ்பத்திரிகளை அணுகாமல், ஊரெல்லாம் கடன் வாங்கி பில் கட்டியும் பலனின்றி, உறவினர் நொந்து கொள்ளாமல், யாருக்கும் ஆஸ்பத்திரி, மருந்து, டாக்டர் செலவு, வைக்காமல் ''வந்தோம் போனோம்'' என்று மறையக் கொடுத்து வைக்கவேண்டாமா?'?

இந்த ஸ்லோகத்தை எழுதியவர் ஆதி சங்கரர்.

अनायासेन मरणं विनादैन्ये- न जीवनं देहि मे क्रिपय शम्भो भक्तिं अचन्चलं

AnAyAse- na MaraNam, VinA Dainyena JIvanam DEhime Kripaya ShambO Bhakthim Achanchalam "

அநாயாசேன மரணம் விநா தைன்யேன ஜீவனம் தேஹிமே க்ருபையா சம்போ த்வயி பக்திம் அசஞ்சலம்''

கொஞ்சம் மாற்றியும் இந்த ஸ்லோகம் கிடைக்கிறது:

अनायासेन मरणं विनादैन्येन जीवनं । देहान्त तव सानिध्यम्, देहि मे परमेश्वरम्॥

anāyāsena maraṇaṁ vinādainyena jīvanaṁ। dehānta tava sānidhyam, dehi me parameśvaram॥

அநாயாசேன மரணம் விநா தைன்யேன ஜீவனம்; தேஹாந்த தவ சாந்நித்யம் தேஹி மீ பரமேஸ்வரம்''

''சம்போ மகாதேவா, அப்பா எனக்கு தேஹ உபாதை இல்லாத சிரமப்படாத
ravi said…
முருகா சரணம்!

திருச்செந்தூர் திருப்புகழ் சித்ர சபை கும்பாபிஷேகத்திற்கு இது வரை நன்கொடை கொடுத்த உலகு எங்கும் உள்ள முருக பக்தர்களுக்கு கோடான கோடி நன்றிகள்!

இன்னும் யாருக்கேனும் நன்கொடை தர விருப்பம் இருந்தால், உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி!

முருகா சரணம்!
ravi said…
மஹா பெரியவா திருப்பாத சரணம்🙏🏻🌹🙏🏻

நேற்று பலராலும் அன்புடன் அழைக்கப்பட்ட வேதபுரி மாமாவை தன் பாதத்திலே பெரியவா சேர்த்துக்கொண்டு விட்டார்.🙏🏻🙏🏻

வேதபுரி மாமாவுக்கு 60 வயது பூர்த்தி இரண்டுநாள் முன்பு கூப்பிட்டு
ஏன்டா அறுவது நீ பண்ணிக்க வேண்டாமோ.?

அது எல்லாம் எனக்கெதுக்கு பெரியவா.. நீங்கதான் கூட இருக்கேளே.. பணமிருக்கணும் அதுக்கு..
இல்லேடா லோக வழக்கம்..
உங்காத்துல அபிப்ராயப்படுவாளோ என்னவோ..
அதிலிருந்த உண்மை தெரிய பேசாமலிருந்து விட்டார் மாமா..

பெரியவா படத்திலிருந்து முதல்நாள் வேத கோஷங்களும் பிரமாதமாக மறுநாள் சஷ்டியப்த பூர்த்தி நடத்தினார்கள்.
அன்று சாயங்காலம் கச்சேரி
யார் தெரியுமா??

காலையிலே வந்தார் மாண்டலின் ஸ்ரீ நிவாஸ்.
அவாத்துல போயி வாசி. இன்று அங்கு விசேஷம். அங்கே வாசித்தால் எனக்கு எதிரே வாசித்தாமாதிரி..
தெய்வக் குழந்தையின் வாயிலிருந்து உதிர்ந்தது ..
பூர்ண பலன்.

எல்லாம் முடிந்து வாயெல்லாம் பல்லாக பெரியவாளுக்கு வந்தனம் செய்ய வந்த தம்பதியினருக்கு நிறைய பழங்களும் மாலைகளும் தந்து கடாக்ஷித்து..
ஏன்டா கச்சேரி வைச்சியா? நன்னாயிருந்ததோ??
யாரு பாடினா??
அமர்களப் படுத்திட்ட போ..

இருந்தது பெரியவா..
யாரோ மாண்டலினாம்..
(ஒருவருடம் காத்திருக்கணும் அவர் கச்சேரிக்கு அப்ப...)
வயலின் மாதிரி வைச்சுண்டு ஏதோ வாசித்தார்.
எனக்கென்ன பெரியவா தெரியும்? நீங்க இருக்கறப்ப எனக்கென்ன கவலை?

ஓ... அப்படியா. ரொம்ப நல்லதா போச்சு..😃

எதுவுமே தெரியாத மாதிரி பரப்ரம்மத்தின் கருணா கடாக்ஷம் சிலிர்த்துப் போனது..
மஹா பெரியவா திருப்பாத சரணம்.
🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻
Repost ..

VijiVas.
12-02-2022
ravi said…

பழனிக் கடவுள் துணை -14.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-28

மூலம்:

விடம்கலுழ்வெண் பற்பாம்பும் வேணியினிற் சூடி
நடம்புரிந்த நாதனுக்கும் நாதன் – அடம்பெருகு
தீங்கோர் மருவாத் திருவாவி னன்குடியில்
ஓங்கோர் மலைமீ துளான் (28).

பதப்பிரிவு:

விடம் கலுழ் வெண் பல் பாம்பும் வேணியினிற் சூடி
நடம் புரிந்த நாதனுக்கும் நாதன்!! – அடம் பெருகு
தீங்கு ஓர் மருவாத் திருவாவினன்குடியில்
ஓங்கு ஓர் மலை மீது உளான்!! (28).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

கலுழ்- ஒழுகும்;
வேணி- சடை;
அடம் -தன் கொள்கை ஒன்றைப் பற்றிச் சாதிப்பது;
ஓங்கு- உயர்ந்த;

கொடிய நஞ்சு ஒழுகும் வெண் பல் உடைய பாம்பையும் தன் சடையின் மீது சூடி, நடம் புரிந்த நாதனான சிவபெருமானுக்கும் நாதன், தலைவன், ஆசிரியன், குரு ஒருவன் உளான்; அவன் எங்கு உளான் எனில், பிடிவாதம் மிகுந்த தீங்கு அல்லது தீமை ஒரு சிறிதும் அணுகவே முடியாத திருவாவினன்குடி என்னும் அற்புதத் தலத்தில், வான் அளவு உயர்ந்த பழனி என்னும் ஓர் மலையின் மீது உள்ளான்; பழனியில் நீங்காது உறைகிறான் என்று தெளிக.

சிவ நாதனுக்கும் நாதா! எந்த பாதகமும் அணுகாது போதகம் செய்து என்னைக் கா!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺"🌺 *எண்ணற்ற துன்பங்கள் மற்றும் கஷ்டங்களைப் போக்க வேண்டி க்ருஷ்ணா என்று சொல்லக்கூடாதா?. என்ற புரந்தரதாஸர் .... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺கிருஷ்ணா என்று சொல்லுங்கள்! கிருஷ்ணனை நினைத்தாலே அனைத்து கஷ்டங்களுக்கும் பரிகாரம் கிடைக்கும். பிறவிகளிலேயே உயர்ந்ததாகிய மானிட ஜன்மத்தையும் நாக்கையும் கொடுத்திருக்கும்போது கிருஷ்ணா என்று சொல்லக்கூடாதா?

🌺"காலையில் தூங்கி எழுந்து சோம்பல் முறிக்கும்போது ஒரு தடவை கிருஷ்ணா என்று சொல்லக்கூடாதா? தினமும் வீட்டிற்குள்ளே சுற்றிச்சுற்றி வரும் போது கிருஷ்ணா என்று சொல்லக்கூடாதா?

🌺எல்லையின்றி (தேவையில்லாமல்) பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு தடவை கிருஷ்ணா என்று சொல்லக்கூடாதா?

🌺நீண்ட பாதையில் பாரத்தைச் சுமந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு தடவை கிருஷ்ணா என்று சொல்லக்கூடாதா?

🌺சந்தனத்தைப் பூசிக்கொண்டு, தாம்பூலத்தைமென்று கொண்டு இருக்கும் போது கிருஷ்ணா என்று சொல்லக்கூடாதா? மாளவியுடன் கூடி சந்தோஷமாக இருக்கும்போது கிருஷ்ணா என்று சொல்லக்கூடாதா?

🌺கேலியாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு தடவை கிருஷ்ணா என்று செல்லக்கூடாதா?

🌺மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கும்போது இதையும் ஒரு வேலையாகக் கருதி கிருஷ்ணா என்று சொல்லக்கூடாதா?

🌺குழந்தையைக் கட்டிப்பிடித்து வாரியணைத்து முத்தமிடும்போது ஒரு தடவை கிருஷ்ணா என்று சொல்லக்கூடாதா? மிக அழகான படுக்கையில் உட்கார்ந்திருக்கும் போது கிருஷ்ணா என்று சொல்லக்கூடாதா?

🌺தீர்வு காண முடியாத ப்ரச்னைகளைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கும் போது ஒரு தடவை கிருஷ்ணா என்று சொல்லக்கூடாதா?

🌺சுகபோகம் மற்றும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு தடவை கிருஷ்ணா என்று சொல்லக்கூடாதா?

🌺எண்ணற்ற துன்பங்கள் மற்றும் கஷ்டங்களைப் போக்க வேண்டி க்ருஷ்ணா என்று சொல்லக்கூடாதா? கருடவாகனனான ஸ்ரீபுரந்தர விட்டலனை ஸ்ரீ கிருஷ்ணா என்று சொல்லக்கூடாதா?

🌺 *புரந்தரதாஸர் கீர்த்தனை பாடல்* 🌹

🌺க்ருஷ்ணா என பாரதெ க்ருஷ்ணன நெனெதரெ கஷ்ட ஒந்திஷ்டில்ல நரஜன்ம பந்தாக நாலிகெ இருவாக

🌺க்ருஷ்ணா எனபாரதெ மலகித்து மை முரிது ஏளுத்தலொம்மெ

🌺க்ருஷ்ணா என பாரதெ நித்ய ஸுளிதாடுத மனெயொளகாதரு ஒம்மெ

க்ருஷ்ணா என பாரதெ ……

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

*காணாமல் போனவர்களை தேடலாம் அதில் சிறிதும் தவறு இல்லை. ஆனால் கண்டும் காணாமல் போனவர்களை மட்டும் நீ தேடி விடாதே. உன் தேடல்களில் அவர்கள் இல்லை என்று நினைத்துக்கொள்.*

*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
ravi said…
🌹🌺"🌺Shouldn't we pray to Krushna to get rid of countless miseries and hardships?. A simple story explained by Purandara Dasa 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺Say Krishna! Just by thinking of Krishna, all the troubles are solved. Shouldn't we say Krishna when we have given birth and tongue to the highest human being?

🌺 "Shouldn't you say Krishna once when you wake up in the morning to break your sleep? Shouldn't you say Krishna every day while walking around the house?

🌺Shouldn't we say Krishna once while talking endlessly (unnecessarily)?

🌺Shouldn't we say Krishna once while carrying a load on a long journey?

🌺Shouldn't we say Krishna while wearing sandalwood and holding tambulam? Shouldn't you say Krishna when you are happy with Malavi?

🌺Shouldn't you say Krishna once while talking and laughing?

🌺Shouldn't we say Krishna when we are busy working, considering this also as work?

🌺Shouldn't we say Krishna once while hugging and kissing the baby? Why not say Krishna while sitting on the most beautiful bed?

🌺Shouldn't we say Krishna once while thinking about unsolvable problems?

🌺Shouldn't we say Krishna once while soaking in bliss and happiness?

🌺Shouldn't we chant Kṛṣṇa to remove innumerable miseries and difficulties? Shouldn't Sripurandara Vithalan, the vehicle of Garuda, be called Sri Krishna?

🌺Purandaradasa kirtana song 🌹

🌺 Krsna as Bharate Krshnana Nenethere Kashta Ondishtilla Narajanma Bandaga Nalikhe Nalikhe

🌺 Krushna is called Malakittu My Muritu Elutalomme

🌺 Bharate Nitya Sulidadutha Maneolakadharu Omme as Krishna

Bharat as Krishna

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
[14/01, 07:22] +91 96209 96097: *நஹுஷாய நமஹ*🙏
மாயை எனும் ப்ரக்ருதியாலே உயிர்களை கட்டுபவர்
[14/01, 07:22] +91 96209 96097: சாருரூபா சாருஹாஸா *சாருசந்த்ர கலாதரா* 🙏
நாம் செய்யும் தவறுகளை பொறுத்து அருள்பவள்
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 26*

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்

*பொருள்*

ஒருவனுக்கு பசி தோன்றிய போது அவனிடத்தில் உள்ள சிறந்த குணங்கள் அனைத்தும் போய்விடும். இதை தான் “பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்பார்கள். அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பறந்து போகும்


*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
❤️ *இன்றைய சிந்தனை (14.01.2023)*
................................................

*"மன்னிப்பு மகத்துவமானது...!"*
...........................................

நமக்கு தீமை செய்தவர்களை பழி வாங்க வேண்டும் என்று நினைக்காமல் அவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம் படைத்தவர்களுக்கு, இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப் பார்க்காது என்று அண்மையில் வந்த ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது...

மனிதர்களின் மனதிற்கும், உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்...

இருநூறு பேர் பங்கேற்ற அந்த ஆய்வில் நூறு பேரிடம் உங்களுக்கு கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்...?, அவரை எப்படி பழி வாங்குவது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது...

மீதமுள்ள நூறு பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது...

ஐந்து நிமிடம் கழித்து அதே நிகழ்வுகளை மீண்டும் நினைத்து பார்க்க வைத்து அவர்களது குருதியோட்டம் (ரத்த அழுத்தம்) சோதனை செய்யப்பட்டது...

நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட நூறு பேரின் குருதியோட்டம் மிக அதிகமாக வேகமாக பாய்ந்தது...

மறப்போம், மன்னிப்போம் என்ற மன்னிக்கும் குணம் கொண்ட நூறு பேரின் குருதியோட்டம் சீராக இருந்ததும் தெரிய வந்தது...

_இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த குழுவின் தலைமை பேராசிரியர் டாக்டர் பிரிட்டா லார்சன்,_

_"மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் குருதியோட்டம் ஆத்திரப்படும்போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பைச் சந்திக்கிறது._

_அதனால், அவர்கள் இரத்தக் கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம்._

_அதேநேரம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதய துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு குருதியோட்டம் அதிகரித்து அது வலுவடைந்ததும் சோதனையில் தெரிந்தது..._

_இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டு மொத்த உடல் நலனுக்கு நன்மை தரும்'' என்று கூறியுள்ளார்..._

இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளியாகும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது...

இதைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ''எண்ணம் போல் வாழ்வு'' என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்...

மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும்...

மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும்போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது...

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளை விடும்...!

*ஆம் தோழர்களே...!*

🟡 *மன்னிப்பு!, வாழ்க்கையை உருவாக்குகிறது.. மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது...!*

🔴 *மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள். மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்...!!*

⚫ *வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம். எனவே!, நமக்கு தீமை செய்தவர்களுக்கும் கூட நன்மையே நினையுங்கள். நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்......!!!✍🏼🌹*

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
*( ஆன்மீக வழிகாட்டி )*
ravi said…
அம்மா

வேடன் வந்தே விஜயனுக்கு தந்தான் பாசுபதம் ...

பரமபதம் அருளும் உனக்கும் பாசுபதம் தந்தான் பரமன்

பாசுபதம் எய்தியே உன் பாதம் தனில் சேர்த்தாய் பாண்டாசூரனை

உனை ஏசும் பதம் உண்டோ இவ்வையகத்தில்

உண்டு என்போர் அனைவரும் பாண்டாசூரர்களே

உத்தமியே பாதம் பற்றிய கம்சனுக்கும் கண்ணனை காட்டினாய் ...

உன் பாதம் வேண்டிய காமனுக்கும் பதம் தந்தாய் ..

பாதம் கொண்டு உதைத்தாய் காலனை

பஞ்சு அஞ்சும் பாதம் தனை என் சென்னியில் வைத்தாய் வலிய வந்தே 🙏🙏🙏👣👣
ravi said…
*❖ 81 மஹாபாஷுபதாஸ்த்ராக்னி நிர்தக்தாசுர சைனிகா; =*

மஹாபாசுபத அஸ்திரத்தின் தீப்பிழம்பில் மொத்த அசுர சேனையையும் சின்னாபின்னமாக்கியவள்.🙌🙌🙌
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 54*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
लोलहृदयोऽस्ति शम्भोर्लोचनयुगलेन लेह्यमानायाम् ।
ललितपरमशिवायां लावण्यामृततरङ्गमालायाम् ॥ ३८॥

38. Lola hrudayosmi Shambho lochana yugalena lehyamaanaayaam,

Laalitha paramashivaayaam lavanyaa amrutha tharanga maalaayaam.

லோலஹ்றுதயோ‌உஸ்தி ஶம்போர்லோசனயுகலேன லேஹ்யமானாயாம் |

லலிதபரமஶிவாயாம் லாவண்யாம்றுததரங்கமாலாயாம் ||38||
ravi said…
பரமேஸ்வரனே மயங்கி கண்களால் விழுங்கும் அழகு தெய்வம் அம்பாள். கருணா சாகரி .

லலிதா பரமேஸ்வரி அம்ருதமாக கண்களுக்கு விருந்தூட்டுபவள்.

சௌந்தர்யம் எனும் சமுத்திரத்தில் அடுத்தடுத்து ஓயாமல் எழும்பும் அழகிய அலைகள், லஹரி, போன்றவள்

அழகிய அம்பாள் என்பதால் அவளை வர்ணிக்க சௌந்தர்ய லஹரி என ஸ்ரீ ஆதி சங்கராச்சார்ய பகவத் பாதாள் தனது ஸ்லோகங்களை பெயரிட்டார்.

நமஸ்கரிக்கிறேன் அம்மா என்றும் உனை 🙏🙏🙏
1 – 200 of 366 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை