ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 38 ( 198-204)
198 லப்³த⁴மானா
எல்லோருக்கும் பிடித்தமானவள் , பூஜிக்கப்படுபவள் , பாராட்டுப்படுபவள் .
199. லப்³த⁴ரஸா
சிவகாமேசுவரருடன் என்றும் பிரியாமல் இருப்பதால் அவளுக்கு கிடைக்கின்ற அந்த பரமானந்தத்தை நமக்கும் மனமகிழ்ந்து தருபவள் . அந்த ஈசுவரனை அடைய நமக்கு என்றும் உதவுபவள் .
200. லப்³த⁴ஸம்பத்ஸமுன்னதி
ஸத்ய காமம் , ஸத்ய ஸங்கல்பம் முதலிய ஸம்பத்தின் உச்சியை அடைந்தவள்.
201. ஹ்ரீம்ங்காரிணீ
பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் மந்திரத்தின் பதினொராவது எழுத்தாகிய ஹ்ரீம்ங்கார வடிவினள் .
202. ஹ்ரீம்காராத்³யா
ஹ்ரீம்ங்கார பிரவணத்திற்கும் ஆதியானவள்
203. ஹ்ரீம்மத்⁴யா
பிரபஞ்சத்தை தன் விருப்பபடி நடுத்துபவள் .
204. ஹ்ரீம்ஶிகா²மணி
ஹ்ரீம்ங்காரத்தை சிகாமணியாக உடையவள் .
198. Om Labdha Maanaayai Namaha
Salutations to the Mother who gets Happiness through Poojas.
199. Om
Labhdha Rasaayai Namaha
Salutations the Mother, who is the Treasure House of Rasas. She is Rasa of supreme Love, and Happiness. She dwells in the Sringara Rasa. Always wears good Clothing ,Ornaments, Flowers, and Sandalwood and other Fragrances. Loves the Sattvic food which is Sweet, Madhura Rasam. For Naivedyam Sour, Bitter and Hot food should not be offered to the Deity. Devi is the Queen of Rasas who has attained ultimate happiness.
200.Om Labdha
Sampath Samunnathyai Namaha
Salutations
to the Mother, who has Attained the zenith of Riches. Sathya Kama ( true
desire), Sathya Sankalpa (true intentions) and Sat chit Ananda roopam
(existence knowledge happiness absolute) are the riches she possesses.
201. Om Hreenkaarinyai Namaha
Salutations
to the Mother, who is the Personification of the Letter Hreem. In the kamaraja
koota it is the last Sixth Letter and the Eleventh Letter in the Panchadasi
Mantra.
202. Om Hreenkaara Adhyaayai Namaha
Salutations to the Mother, whose form is Hreem, the First Word. She is the Origin of the Manthraksharas Om and Hreem. Here it means she is Veda Swaroopini.
203. Om Hreem Madhyaayai
Namaha
Salutations to the Mother, who is in the Midst of Hreem Beejaakshara, which is Mayachaitanyam.
204. Om Hreem Sikhaamanyai
Namaha
Salutations
to the Mother, who shines Brilliantly like the Head Ornament Choodamani in the
crown of Hreem Beejaakshara. The Head ornament Choodamani shines Brilliantly
attracting others, Hreem Beejaaksharam out shines all the other Mantras. Just
as the Crown is worn by the kings and Emperors, Hreem is the Raja Beejam for
Srividya and other Mantras.
* 198 *
Labdha-maana - She who is praised by all
* 199 * Labdha -rasa - She who has attained the
ultimate happiness
* 200 * Labdha sampath samunnadhi - She who has
attained (got) the apex of riches
* 201 * Hringarini - She who is the
personification of the letter “Hrim”-This is the eleventh letter of
Panchadasakshari mantra
* 202 * Hrinkaradhi - She who is the origin of
the matharakshara of “Hrim” and “Om”
* 203 * Hrim Madhya - She who is in the midst of
Hrim or She who is the reason of existence of the middle life of the earth
* 204 * Hrim Shikhamani - She who wears “hrim”
in her head
Comments
அவனும் அவளும் ஒரு bus stand இல் 23B பஸ் க்காக காத்திருந்தார்கள் ...
தினமும் சந்தித்து அதே பஸ்ஸில் போக வேண்டிய நிர்பந்தம்
மெதுவாக சிறிய உரையாடலில் அவர்கள் உறவு தொடங்கியது ... Hello hello ....
கொஞ்சமாக பேசிய வார்த்தைகள் நீண்ட கவிதையாக இருபக்கமும் மலர்ந்தது ....
காமன் தன் மலர் அம்புகளை அவர்கள் மீது தொடுத்த வண்ணம் இருந்தான்
விதி விளையாட ஆரம்பித்தது ...
அவனுக்கு வேறு எங்கோ பெண் பார்த்து அவனை அந்த பெண்ணிற்கு நல்ல விலையில் விற்று விட்டார்கள் அவனை பெற்றவர்கள் ...
ஒரே ஏமாற்றம் ... அவள் அழுதாள் புரண்டாள் காதல் தோல்வி கனத்தது
இறைவன் அவள் முன்னே தோன்றி ஒரே ஒரு வரம் தருகிறேன் ...
புத்திசாலித்தனமாக கேள் என்றான்
உடனே அந்த பெண் நான், எனக்கு நடந்த கொடுமைகள் ஏமாற்றங்கள் தோல்விகள் அனைத்தையும் மறந்து போக வேண்டும் ... என்றாள்
இறைவன் அவளை பாராட்டிவிட்டு அவள் கேட்ட வரத்தை கொடுத்தான் ...
அவள் அன்றிலிருந்து புதிய பெண்ணாக மகிழ்ச்சியாக சிரித்த வண்ணம் 23B பஸ்ஸை பிடிக்க சென்றாள் ...
அதே bus stand ... வேறு ஒரு வாலிபன் ...
மீண்டும் hello hello ......சின்ன வார்த்தைகளின் பரிமாற்றம் நீண்ட கவிதைகளாக இரு பக்கமும் மலர்ந்தது-------------🏵️🌹🌷
கிள்ளிய ஓர் சிரம் தரையில் உருண்டும்
ஈசன் என் தலை எழுத்தை மாற்ற மறந்தானோ..?
இது பெரிய சிரமம் தனக்கே என்று நினைத்தானோ ?
இல்லை அயன் தன் பணி செவ்வனே செய்யட்டும் என்றே தலையிடாமல் இருந்தானோ ?
தெரியவில்லை 😢
உனை நினைத்தேன் ஓர் முறை ....
முற்றும் மாறிப் போனதே !!
முக்தி கை தொடும் தூரம் ஆனதே !!
கண்களில் சிவானந்தம் பெருகி ஓடுகிறதே!!
ஸாயுஜ்யம் தந்துவிட்டாய் சுவாமி நாதா ... !!
கேட்க இனி ஏதும் இல்லை ...
இனி கேட்க பிறவி ஒன்று இல்லை ...
தாயின் கருப்பை இனி தேட தேவை இல்லை ...
தாயுமானவனே என்னுள் நீ இருக்கும் வரை !!!
நாத ஒலியில் நீ நான்மாடக்கூடலில் பவனி வரக்கண்டேன்
கீதை ஒலியில் உன்னை கிருஷ்ணனாக கண்டேன்
சலங்கை ஒலியில் உன் சரித்திரம் கேட்டேன்
கொலுசு ஒலியில் கொற்றவள் நீ சபையில் கொலு இருக்கக் கண்டேன்
உடுக்கை ஒலியில் உன் ஓங்கார வடிவம் கண்டேன்
சங்கொலியில் உன் சிம்ம நாதம் முழங்கக்கண்டேன்
நாதஸ்வர ஒலியில் நான்கு வேதங்கள் உனக்கு சாமரம் வீசக்கண்டேன்
ஒலியில் ஒளி கண்டு
பனியில் பணி செய்து
இரையில் இறைகண்டு
விடையில் நீ விடை ஏறி வரக்கண்டேன்
மாலையில் நான் தொடுத்த மாலையில்
நீ வரக்கண்டு என் மனம் வீசும் மணம் தனை எங்ஙனம் விவரிப்பேன் ?
கொண்டதைப் போல் கருப்பாக இருந்தது ...
சூல் கொண்ட மேகங்கள் வானத்தின் கருப்பு நிறத்தை இன்னும் அதிகமாக்கி கொண்டிருந்தது ....
அம்பாளின் கூந்தல் போல் இருள் சுற்றுப்புரத்தை கவ்விக்
கொண்டிருந்தது
நட்சத்திரங்கள் விடுமுறையில் இருந்ததனால் வானத்தில் எட்டிக்கூட பார்க்க வில்லை !💫⭐
கீழே எரிந்து கொண்டிருந்த நெருப்பு 🔥மட்டும் வானத்தை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருந்தன
இதோ சுப்ரமணியம் 79வது பாடல் ஆரம்பிக்கும் நேரம் ....
விழிக்கே அருளுண்டு;
அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு;
கண்களில் வற்றிப் போன கண்ணீர் ...
ஆனால் வற்றாத நம்பிக்கை ...
நெஞ்சில் பதை பதைப்பு
ஆனால் நெஞ்சம் ஆர்வத்துடன் 80வது பாடலை இயற்றிக் கொண்டிருந்தது
எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து
பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும்
கயவர் தம்மோடு என்ன கூட்டினியே ?
வானம் பெரிய சத்தத்துடன் இரண்டாக கிழிந்தது ...
கோடி இடிகள் ஒன்று சேர்ந்து கை கொட்டின ..
மின்னல் பலமாக சிரித்தது ...
வருணன் பாதை எங்கும் பன்னீர் தெளித்தான்
எங்கிருந்தோ ஒரு தாடங்கம் பறந்து வந்து கிழிந்து போன வானத்தை ஒன்றாக தையல் போட்டது....
ஜொலிக்கும் அதன் ஒளியில் சூரியன் சுருங்கிப்போனான்
தாடங்கம் நிலவாகி மேகங்கள் அமுதமாகி
இடிகள் நிலவு பூமியில் விழாமல் தாங்கி க்கொண்டது ...
மின்னல் சந்திர தேஜசில் மின் மினி பூச்சியாய் மறைந்து போயின
விடுமுறையில் இருந்த தாரகைகள் விழுந்து அடித்துக்கொண்டு ஓடி வந்து முழு நிலவுக்கு மாலையாயின ...
சூழ்ந்து இருந்த மன்னரும் மந்திரிகளும் மக்களும் முழு நிலவை அம்மாவாசையில் பார்த்துக்
கொண்டிருந்தனர்.
சுப்ரமண்யமோ அபிராமி பட்டராகி
புன்னகைத்து கொண்டிருந்த அம்மாவை ,
ஸ்ரீ மாதாவை வாஞ்சையோடு
முழு நிலவில் பார்த்து பரவசப்
பட்டுக்
கொண்டிருக்கிறார் இன்றும் என்றும் 🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝
நடந்த காட்சியை அப்படியே படமாகக் கண்டேன் உமது வர்ணனையில்..
ஆகா! ஆகா!...என்ன எழுத்து ஜாலம்.
மெய் சிலிர்த்துப் போனேன்.
விழிக்கே அருளுண்டு...
வழிக்கே நெஞ்சுண்டு...
பழிக்கே சுழன்று...நரகக்
குழிக்கே அழுந்தும்...
மிக மிக அருமை👏🏻👏🏻
பொழில் அமர்ந்த எழில் *குகனே*!
ஆகச் சிறந்த அழகுடனே,
வாகனமாய் ஓர் மயிலும்,
ஆயுதமாய் அவன் கரத்தில்..
பாயும் அந்த கூர் வேலும்,
ஆங்கு கொண்ட கோலமுமாய்ப்
பாங்குடனே *இளங்குமரா*!
சரவணப் பொய்கையில் பிறந்ததனால்!..நாம
கரணம் *சரவணன்* ஆனவனே!
கார்த்திகைப் பெண்கள் வளர்ப்பினிலே
*கார்த்திகேயனாய்* க் கீர்த்தி காண்பவனே!
என்ன அழகு! என்ன அழகு!
பொன்னில் வார்த்த மேனி அழகு!
அன்னை தந்த கூர் வேலால் ,நீ
உன்னத *வேலாயுதனே*!
கருவண்டாய் இரு கண்கள்
உருகொண்ட *இள முருகா*!
திருமாலின் மருமானாய்,
அருட்பேணும் *மால் மருகா*!
கொடியாய்ச் சேவல் தனி அழகு!
முடிமுதல் அடிவரை வடிவழகு!
பிடிவாதமான கோபத்தினால்,
அடியார்க்குப் *பழனி ஆண்டவா*!
மண்டை முடி வழித்து,
ஆண்டி ஆனவனே! ..கை
தண்டம் ஒன்று பிடித்து,
தொண்டர்க்குத் *தண்டாயுதனே*!
குன்றா ஒளியாய் மிளிர்பவனே!
குன்றின் மீதமர்ந்த *குருபரனே*!
ஒன்றிய ஆறுமுகம் உருவாய்,
வென்றிட *ஷண்முகம்* ஆனவனே!
அப்பனுக்கே உபதேசித்த குருவாய்...
*சுப்பையனே! சுவாமிநாதனே*!
சிந்தையில் நிதம் நினைப்போர்க்குத்..திருச்
செந்தூரிலே *செந்தில் நாதனே*!
எந்தன் குல தெய்வ *கந்தனே*!
உந்தனுக்கு பல வந்தனமே!
*தவழ்ந்து வா! வா! கண்ணா*!
பானை நிரம்ப வெண்ணை உண்டு,
தின்ன வா! சொப்பு வாய் கொண்டு!
வானை ஒத்த நீல வண்ணா!
முன்னே தவழ்வாய்க் கண்ணா!
ஊரார் கண் படும் முன், நேராய்...
ஆராவமுதனே!என் அகம் வாராய்!
தீரா நவநீத தெவிட்டா விருந்து,
தாராளமாய்த் தருவேன் வா விரைந்து!
*கூர்ந்த எழில் பார்வை மின்ன*,
*ஊர்ந்து வா! வா! கண்ணா*!
--------------------------------------------------
(அந்தாதி)
கார் முகிலென கேசம் சுருள,
சுருள் சுருளாய்த் தலையில் படர,
படர் நெற்றியில் நாமம் எழிலாய்...
எழில் கண்ணன் வண்ணம் நீலம்!
நீல நிறமாய் மேனி வண்ணம்,
வண்ணம் நீலமான கண்ணும்,
கண்ணும் நீலம் பூத்ததென்ன?
என்ன அழகாய் அவன் கண்மணி!
கண்மணி ஆனாளே அந்த ராதை!
ராதைக்கும் அவன் உயிர் நாடியே!
நாடி வரும் பக்தருக்கு அருளாய்..
அருள் கோடி பெறும் அவன் சிருங்கார்!
கார்...
--- *மஹா*
சொல்லிட வார்த்தையும் உண்டோ உன் அழகை வர்ணிக்க?
பஞ்சு மிட்டாய் நிறத்தில் நீ அழகாய்ப் பூத்திருக்க,
கொஞ்சமும் எதிர்ப்பார்க்காமல் தானே வளர்ந்து நிற்க…
எங்கள் பள்ளி நினைவுகளைத் தூண்டும் வண்ணம்,
உள்ளம் கொள்ளைக் கொண்ட அதே வண்ணம்,
தள்ளி நிற்பவரையும் ஈர்க்கும் வண்ணம்,
அள்ளித் தெளித்தாய் உன் நறுமணம் எங்கும்…
கண் கவர் காட்சியாய் எல்லை வரப்பினிலே,
நட்பின் நெருக்கத்தை உணர்த்தும் தரப்பினிலே…
எண்ணம் தங்கிடும் உன் அழியாத வாசம் போல்…
உணர்வில்
என்றும் தங்கிடும் எங்களின் நட்பின் வாசம்!
எங்கள் அன்பை உறுதியாய்ப் பிணைக்கும் வண்ணம்….
நீ
அழியாத நட்பின் பிரதிபலிப்புச் சின்னம்!🏵️🏵️🏵️
Let my mind reside at your lotus feet ,
Let my speech be engaged in praising you with hymns , and
Let my hands perform worship to you.
May my ears be dedicated to hearing the narrations of your divine deeds.
Let my intellect be absorbed in meditation on you and may my eyes always see your beautiful form in the idol .
Beyond this , with what other sense of faculties could I ever understand any other literary works ?
(Implying that all senses are fully dedicated to you and there is no need for anything else) 🙏🙏🙏
*Shivananda Lahari 7*
கட்டி போட்டேன் என் மனதினில்
காணவில்லை இன்று ...
கட்டு மஸ்தான உடல் இல்லை
கணிந்த கனியின் மேனி கொண்டவன்
பட்டாடை உடுத்தவில்லை
கௌபீனம் உன்றே உடம்பில் சுத்தி இருந்தான் ...
கேசம் படியவில்லை
நேசம் குறையவில்லை
பாசம் மறையவில்லை
ஆனால் மோசம் போனேனடி சகியே ... !
மனதில் பூட்டி இருந்த கண்ணன் எங்கோ சென்று விட்டான் ...
தினம் கவி பாடி நீ சொக்குப்பொடி போட்டுவிட்டாய் ...
உன் கவிதனில் மயங்கி போனான் என் மாயக் கண்ணன் !!
என் கண்ணன் எனக்கே சொந்தம் என்றிருந்தேன் ...
உன் கவி கண்டே கர்வம் இழந்து விட்டேன் ...
கண்ணனை இனி காண முடியுமோ?
என்றே கதறினேன்
நித்தம் நித்தம் உன் கவி கண்டு
அங்கே காளிங்க நடம் புரிகிறான் என்றே பெட்டி படுக்கையுடன் வந்து விட்டேன் ...
உன் கவியில் எனக்கும் கொஞ்சம் இடம் தாராயோ என் உயிர் சகியே !!💐💐💐
கச்சபி உன் கரங்களில் ...
கருணை மழை உன் கண்களில்
ஸ்படிக மாலை உன் கரங்களில் ,
அருண மாலை உன் நிறத்தினில்
ஞானம் உன் நாமத்தில்
எங்கள் அஞ்ஞானம் உன் கால் அடியில்
அஞ்சனம் உன் கண் இதழ்களில்
பஞ்சினம் உன் பாதங்களில்
வஞ்சினம் ஏதும் இலாதவளே ...
கஞ்சம் தனில் வசிப்பவளே
கொடுக்கும் வரங்களில் கஞ்சம் கொஞ்சமும் சேர்காதவளே...
பஞ்சம் வருமோ என் அறிவிலே ...
தஞ்சம் உன் பாதங்கள் என்றே அடைந்தபின்னே !!
அன்னையின் சீமந்த வகுடு தனில் சீராய் ஓடும் பால சூரியன் நீ 🌞
கரும் கூந்தல் அதனில் ஒளி வட்டம் சேர்க்கிறாய்🌞
அஞ்ஞானம் எனும் இருட்டினிலே அருண மயமாய் வருகிறாய் 🌞
தாயென கூப்பிட்டால் ஆயிரம் கரம் கொண்டு அணைக்கின்றாய் 🌞
தாயினும் மேலாய் மேல் நின்று புன்னகை பூக்கின்றாய் 🌞
பாராட்டு கேட்பதில்லை கரகோஷம் நினைப்பதில்லை 🌞
பாங்குடன் கிழக்கில் உதித்தே
கடமை செய்த கீதையாய் மேற்கில் சென்று மறைகிறாய் ... ..🌞
நன்றி சொல்லும் கூட்டம் நலிந்து போன உலகம் இது ... 🌞
செய்யும் உதவிகளை அன்றே மறக்கும் இதயங்கள் இரும்பாய் வாழும் அகிலம் இது 🌞
ஒன்றும் எதிர்பாரா உள்ளம் அதை இன்றே எனக்கு இரவல் தருவாயோ ...🌞
உயிர் மூச்சு உள்ளவரை உதவி செய்தே மறைய வரம் ஒன்று தருவாயோ 🌞
உத்தமனே நீ வாழ்வாய் யுகங்கள் தோறும் ... 🌞
நான் மறைவேன் ஒருநாள் ...
எருக்காய் ,
இலையாய் உரமாய் ஊரும் புழுவாய் ...
உயிர் எடுக்கும் உடம்பு எதுவென்று அறியேன் ...
எது வரினும் உன் போல் குணம் ஒன்றே வேண்டும் ...
கொற்றவனே ...!! கொடுத்தருள்வாய் இன்றே 🌞
தீமைதனை நீக்கும் தேசம் நீயே
அஞ்சல் கொள்ளும் இருளில் ஒளி வருவாய்
அருள் சுரந்து அன்பு முழுதும் தருவாய்
அகலாது உயிர் போல் நின்று விடாய்
அழியாத ஜோதி நீ என்றும் குடியாய்
நன்றி மறக்கும் மனமே மாறுவாயோ?
நல்லதை செய்வதற் காய் உருகுவாயோ?
கொற்றவனே..! உன் கருணை தருவாயோ?
🌞🌞🌞🌞
ரதசப்தமி ஸ்பெஷல் மிகவும் அருமை
நெய்முந்திரி திராட்சை பாதாம் மிதக்கும் சக்கரை பொங்கலின் ருசியும்
சுவையானஉளுந்து வடை சாப்பிடும் பொழுது வரும்
உ வகையும் கலந்து கவிதை நெஞ்சத்தில் நிறைந்து இருக்கிறது.....👌👌
அருமை அருமை
அருமையோ அருமை.....
அசத்தல் கலக்கல்
ஆண் பாலான சூரியனைப்,
பெண் பால் தாயெனச் சித்தரித்தாய்!...இது புதிது!
பண்பால் இயல்பாய் என்றுமே,
எதிர்பார்ப்பின்றி கடமை செய்யும்,
கதிரவனின் பெயர் கொண்ட நீயும்..அவ்
விதி வழியே தன்னலமற்றவனன்றோ?..அவன்
துதி பாடும் இந்நாளில்
உதிரட்டுமே பூமழை அருள் மழையாக!
வாழ்த்துகள்🙏🏻🌹
*மஹா* தேவனை அதில் தேடி நின்றேன்
*மஹா* பெரியவாவை வேண்டி கேட்டேன்
*மஹா* விஷ்ணுவை மனதார தொழுதேன் ...
கண்ணில் தெரியா தெய்வங்கள் யாவும்
கண்ணில் தினம் தெரியும் தீஞ்சுடரை வேண்டி நில் என்றன ..
வேண்டியது சிறு வரம் ...
ஆதவன் அள்ளி வழங்கியதோ *மஹா* வரம் ..
என்ன தவம் செய்தேன் ...?
தெரிந்தோர் கொஞ்சம் சொல்லுங்களேன் 💐
மஹானுபாவரே!
மஹா அனுபவமாக உள்ளதே உங்கள் மஹாத்மியம்!😀
---------------------------------------------
மந்தை வெளியிலே,
நந்தகோபன் மகனே!
பசுத் தலையில் கை வைத்துப்,
பசுந்தரையில் மெய் சாய்த்துக்...
களைப்பு மிக ஆனதால்,
இளைப்பாறுகிறாயோ?
என்ன தான் உந்தன் சோர்வு?
சொன்னால் தானே தீர்வு!
பாதையெங்கும் அலைந்தே,
ராதையைத் தேடி அயர்ந்தாயோ?
தூதாய்க் காதலை காற்றில்
ஊதியே உடல் தளர்ந்தாயோ?
எழுந்திரு கண்ணா! எழுந்திரு!
யாசிப்பாய் ஒன்று நான் கேட்க,
வாசிப்பாயா மீண்டும் குழலெடுத்து?
மோகனம் ஒன்று நீ வாசிக்க,
மோகம் கொண்டு பாடி வருவாள்!
ஓடி வருவாள்! ஓடி வருவாள்!
தோடி கேட்டும் ஓடி வருவாள்!
கடைக்கண் உனது பார்வை கிடைக்க,
இடையன் உனது இசைக்கு விடையாய்...
மடை திறந்த வெள்ளமாய்த்,
தடை தாண்டி ஓடி வருவாள்!
நாடி வருவாள்! நாடி வருவாள்... ஆயர்
பாடியனைத் தேடி வருவாள்!
ஆண் பாலான சூரியனைப்,
பெண் பால் தாயெனச் சித்தரித்தாய்!...இது புதிது!
பண்பால் இயல்பாய் என்றுமே,
எதிர்பார்ப்பின்றி கடமை செய்யும்,
கதிரவனின் பெயர் கொண்ட நீயும்..அவ்
விதி வழியே தன்னலமற்றவனன்றோ?..அவன்
துதி பாடும் இந்நாளில்
உதிரட்டுமே பூமழை அருள் மழையாக!
வாழ்த்துகள்🙏🏻🌹
பாரதம் படைத்த கணபதி
பாரெல்லாம் தன் ஊராய் வாழும் கணபதி
பணிந்து நடந்தால் தன் கால் கொடுத்து மேலே தூக்கும் கணபதி
எல்லாம் அறிவேன் என்றே நடந்தால்
வாழைத் தோலில் சறுக்க வைக்கும் கணபதி
ஆடை அணிகலன் ஆபரணங்கள் வேண்டா கணபதி
வெட்டி வேரும் கட்டி புல்லும் தந்தால்
நம்மை அட்டி வந்து கட்டிக்கொள்ளும் கணபதி ...
தாயின் கோபம் தரையில் உடைத்த கணபதி ... ( திருவானைக்கா)
நெற்றிக்கண்ணில் நிலவை காட்டும் நித்ய கணபதி
ஆடு வெட்டி மாடு வெட்டும் மந்தைகள் நடுவே
வாழை வெட்டி தேங்காய் வெட்டி வேண்டினேன் ...
குன்றமதில் அமைதி காண
பெரும் குன்றம் என பெருவயிறு படைத்தோன் அருளட்டும் ...
தம்பி மணம் நடந்த இடத்தினிலே எல்லாம் ஒரே சமயம் எனும் மனம் வீசட்டும் !!
ரீங்காரம் அதில் ஒங்காரம் தெளிக்க தீஞ்சுவை தமிழில் தேவாரம் பாடியதே !!
தேன் சிந்தும் இதழ்களில்
பால் சொரியும் மணமதில்
வேல் கொண்டு வீசிய வார்த்தைகள் விக்கினங்கள் உடைத்ததே
விவேகம் சிகரம் தொட விழிப்புடன் கேட்டேன் ...
நீ பாடும் பாடல் என்ன ?
பொருளும் என்ன ..?
பூங்காற்றில் புது மணமாய் வரும் வார்த்தைகள் என்ன ?
சிரித்த வண்டு சிங்காரமாய் அகங்காரம் இன்றி சொன்னதே ...
மலர் நாடி செல்வேன் ...
மனம் நாடி செல்வேன் ...
மணம் தரும் அவள் பாதங்கள் மாசில்லா மதுரம் தருமே ...
அதரம் அதில் அவள் நாமம் தவழ்ந்தால்
உன் உதிரம் உடம்பெங்கும் ஓர் தடை இன்றி ஓடிடுமே !
உண்மை உண்மை ...
தடை இல்லா ரத்த ஓட்டம் தழைத்திட்டால்
இளம் தளிர் போல் வாழ்ந்திடுமே ஊனும் உடலும் !
வண்டு சொன்ன மந்திரம் கண்டு மனம் ஆனதே ஓர் பூச்செண்டு !!
காதோரம் வண்டு பாடும் ராகம்,
தேன் சிந்தும் அவள் சொல் சுகம்.
மனம் நாடி சென்று பார்க்க,
மாசில்லா பாதம் வாழ்த்த,
மதுரம் தரும் வாழ்க்கை தானே!
🙏🙏🙏
அரங்கன் கண்விழித்து அஞ்சியதேன்?
கோதை குரல் கேட்கா நாளின் துயரம்
பசுமை சூடி, பறை கேட்டாள்,
பூசூடா, நகை அணியா,
அன்பில் மட்டும் எழுந்தாள்.
கண்ணன் நாமம் உணவாய் உட்கொண்டாள்,
உலகம் மறந்து பரமன் நினைந்தாள்.
சகிகளை அழைத்தாள், காவலரை எழுப்பினாள்,
நந்தனை கூவினாள், யசோதையை வணங்கினாள்,
நப்பினையோடு அழைத்து வந்தாள்!
நாமம் போல் நம் கண்கள் மூடியதோ?
கயல் விழி கோபனை மயக்கியதோ?
மதன் கணைகள் மடிந்தன,
மதுரம் என இனித்தாள் மார்கழியில்.
அவள் அம்புஜ இதழில் சிவந்த என் ஆசை,
காற்றில் கரைந்தது, என் உள்ளம் கீறியது.
காத்திருப்பேன் கோதை
உன் திருப்பாவை ஒலிக்கும் நாள்,
உண்மையாய் விழித்திடுவேன்!
அரங்கன் துயில் நீங்கி துயர் கொண்டான் ...
கோதை எனும்
திருப் பாவையின் குரல் கேளாமல் ...
நோன்பு இருந்தாள் சூடி கொடுத்தாள் பறை தருவேன் நான் என்றாள் ...
பூச் சூடவில்லை பொன் நகை அணிய வில்லை ...
கண்களில் அஞ்சனம் இல்லை வயிற்றில் உணவு இல்லை
கண்ணன் நாமம் ஒன்றே நா சுவைத்து உண்டாள்
கண்ணன் எனை எழுப்ப அவள் கண்ட கஷ்டங்கள் கண்டதுண்டோ ?
போர் களமும் கண்டதில்லை இந்த கண்ட துண்டங்களை ....
சகியை எழுப்பினாள்
பின் காவலாளிகளை எழுப்பினாள் ...
பின் நந்த கோபனை எழுப்பினாள்
பின் யசோதையை எழுப்பினாள்
பின் நப்பினையை எழுப்பினாள் ...
எனையும் எழுப்பி இணையும் தருணம் கேட்டாள் ..
மதன் விட்ட கணையும் சோர்ந்து போயின ...
கயல் விழியின் வேலும் கூர் முனை தொலைத்து நின்றன ...
மார்கழி யில் மாது அவள் மதுரம் என இனித்தாள் ...
அவள் அதரம் சிவக்க சிகரம் ஒன்று வைத்தேன் அவள் அம்புஜ இதழ்களில் ...
மறைந்து போன மார்கழி சிதைந்து போன என் உள்ளத்தில் சிறு கீறல் கோலம் போட்டதே ...!!
காத்திருப்பேன் கோதை ...
உன் குரல் ஒலிக்கும் நாள் அன்றே கலைத்திடுவேன் என் உறக்கமதை !!
(தை கிருத்திகை special )
*திருப்பரங்குன்றம்*
குன்றம் எனும் படை வீடு
கோபுரங்கள் வானைத் தொடும் கலையோடு ...
மதம் கொண்ட யானைகள் வதம் செய்யும் படை வீடு ...
பார்த்து நடந்தால் பரிவு பிறக்கும் எழிலோடு 🐘🐘
*திருச்சீரலைவாய்*
( திருச்செந்தூர்)
போர் தொடுத்த சூரன் வேல் வணங்க மறந்தான் .. வேல் கிழித்து வீழ
இரு உயிர் கொண்டு முருகன் உயிரானான் 🐓🦚
*திருவாவினன்குடி* (பழனி)
அள்ளித் தரும் ஆண்டி ஆனாய் ...
துள்ளி வரும் மயிலில் சுற்றி வந்தாய் அகிலமதை...
பழுத்தவன் நீ இருக்க வேறு பழம் வேண்டுமோ ? 🥭
*திருவேரகம்* ( சுவாமி மலை)
தந்தைக்கு சொன்னாய் மந்திரம் ...
அந்தரம் ஆடும் சந்திரன் அசையும் இந்திரன் வணங்கும் இணையில்லா எம்பிரான்
பம்பரமாய் சுழன்றானே ஒங்காரம் எனும் கயற்றினிலே
*குன்றுதோறாடல்* ( திருத்தணி)
தணிந்ததோ உன் சீற்றம் ... ?
தவறுமோ உன் நோட்டம் ...?
தழைக்குமோ தரம் கெட்டோர் போடும் ஆட்டம் ?
தரணி போற்றும் பாதங்கள் அழிக்குமோ அயன் எழுதும் மாற்றம் ?
*பழமுதிர்சோலை*
கள்ளழகன் களிக்கின்றான்
தன்னழகு ஏதும் இல்லை எல்லாம் உன் அழகேவென்று
சோலையிலே கண்டோம் சொக்கும் அழகை
தோகையில் கண்டோம் துள்ளும் இளமையை
வாகை சூடக்கண்டோம் தானவர்கள் தன்னிலை மறந்த போது
நாகையில் வேல் வாங்கி
இரு பெண்களின் கண்களில் வைத்தாயோ ...
*மருதமலை*
அமிர்த மலையன்றோ அனைத்தும் தருவதன்றோ ...
அலை பாயும் மனமதில் நீ படகோட்டி வரவேண்டும் ...
தடுப்போர் எவர் ஆயினும் எமன் பாதம் தொடவேண்டும்
என்றும் உன் நினைவில் எழில் காண வேண்டும் .. இல்லை என்ற போதில் என் மூச்சு நின்று போக வேண்டும் !!
வானம் வரைந்த செம்மண் கோலம்
வயலெல்லாம் அறுவடைக்கு ஏங்கும் வேகம்
குஞ்சுகள் எழுப்பி பறவைகள் உணவு கொண்டு வர பறக்கும் காலம்
எழில் கொண்ட ராணி அவள்
நான்மாடக்கூடலில் நாணி இருந்தாள் சொக்கன் வரும் தருணம் இதுவென்றே !
தங்க ரதம் ஒன்று பொன்னார் மேனியனை சுமந்து வந்ததே ...
பூவெல்லாம் அடி பணிந்து பூ பந்தல் போட்டதே
ஏனிந்த தாமதம் ஏங்க வைத்து மறைவது ஏட்டுப்பள்ளி தந்ததோ ? என்றாள் மீன் பாயும் கண்கள் உடையவள் ...
பக்தன் ஒருவன் தமிழ் பாடல் ஒன்று பாட மயங்கி போனேன் ... நேரம் சென்றது அறியேன் பதில் சொன்னான் ஹரியுமாகிய ஹரன்
அது என்ன பாடலோ மகேசனும் மயங்கும் பாடல் ...??
கேள் என் உயிரே இதோ அவன் பாடிய பாடல் ...
*அம்மா !*
பொன்னும் மணியும் கொட்டி தந்தாலும் பெண் உன் போல் ஆவாரோ ... ?
பத்து திங்கள் வலி கொண்டு சுமந்தாலும் உன் போல் அன்னை என பெயர் எடுப்பரோ ?
கருணையில் தோய்ந்து புன்னகையில் கலந்து பெண் நகை நாணும் கற்பகமே ... !!
பேசா ஊமைக்கு பேச்சாய் வந்தாய் ...
பிறவி பல எடுக்கும் எனக்கு இறப்பு இல்லா வாழ்வு தருவாயோ ?
-----
உன் புகழ் பாடும் கவி தனில் என் உயிர் மயங்க
வரும் நேரம் நினைவில் நிற்குமோ என் உமையே .... ?
ஈசன் சொல்ல சொல்ல
சிவந்து போனாள் உதிக்கும் சூரியன் போல் ...
நாணம் இதழில் வானம் அறிய சொன்னதே ...
என் ஆசி உண்டு கவி பாடிய உனக்கு என்றும் நன்றே !!
🏵️🏵️🏵️
வாச எழில் காப்புடனே,
மாசு இலா இராஜ உடை,
தேசு ஒளிர் வைர நகை,
கேசமதில் பொற் கிரீட
நேசமிகு தோற்றமுமாய்...
நீரிட்ட நெற்றியுடன்,
சீரிளங் குமரனவன்
ஏவல்தனை உடன் ஏற்கும்,
சேவல் மாட்சி கொடியுடனே,
கரம் பற்றிய வேலுடனே,
வரம் அளிக்கும் காட்சியுமாய்...
ஏறு மயில் ஏறி வரும் ,
ஆறுமுகன் தரிசனங் காண...
அகம் குளிர்ந்தேன் குன்றோனே!
ஷண்முக வடிவ ஒன்றோனே!
தீப ஆராதனை கண்டேனே,
பாப விமோசனமே கொண்டேனே!
சிந்தையில் நிதம் நிறைந்த,
கந்த குரு நாதனை நாட,
எந்தன் மன சஞ்சலம் ஓட,
செந்தூர் செந்திலைப் பாட,
*வந்தேனே! வந்தேனே*!.. *வந்தனம்*
*தந்தேனே தந்தேனே*!
----- *மஹா*
அறுபடை வீடுகளில்
அத்தனை அருமை பெருமைகளையும்....
அள்ளி பழக்கூழின்
சுவைதனில் கவிதை புனைந்த
கந்தனின் பக்தனுக்கு
அனைத்து நலமும் உண்டாகும்
[06/02, 14:30] +91 80564 92254: நடிப்பை நடிகர் திலகத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை
கவிதையை கண்ணதாசனால் புரிந்து கொள்ள முடியவில்லை
நடனத்தை கமலால் புரிந்து கொள்ள முடியவில்லை
நகைச்சுவையை நாகேஷால் புரிந்துகொள்ள முடியவில்லை
அழகை ஜெயலலிதாவால் புரிந்துகொள்ள முடியவில்லை
முரண்பட்ட உறவுப் பாத்திரங்களை பாலச்சந்தரால் புரிந்து கொள்ள முடியவில்லை
ஜூடோவை புரூஸ்லியால் புரிந்து கொள்ள முடியவிலுலை
அதுபோலத்தான் இருக்கிறது தங்கள் கருத்தும்
[06/02, 14:32] +91 80564 92254: என்னைப் பார்த்தால் கொஞ்சம் உங்களுக்குப் புரிந்ததிருந்ததும் கூட புரியாமல் போகும். அதுமட்டும் நன்றாக எனக்குப் புரிகிறது
பாடலும் இனிமை பாடலுக்கான விமர்சனமும் இனிமை...
இந்த முறை புதுமை..
இந்த பாடல் விமர்சனம் எனக்கு பிடித்து இருப்பது உண்மை.... சூப்பர் 👌
நல்லதொரு புதிய விளக்கம் அளித்த கைக்கு இந்த மோதிரம்....
அளவு சரியாக இருக்கிறதா என்று சொல் ppa
ஆலயமணியில் கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா என்று வரி அமைத்தார் கண்ணதாசன் ...
பாடல் இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது ..
பல வருடங்களுக்கு பிறகு ஒருவர் கண்ணதாசனை கேட்டார் ...
எங்கே உங்கள் கம்பனும் காளி தாசனும் ...
ஆலயமணி ஒலித்து வந்தவர்கள் எங்கே போனார்கள் என்றார் ...
அவர் கிண்டலை புரிந்து கொண்ட கவியரசர் வருவார்கள் அதே வடிவத்தில் வெகு விரைவில் என்றார் ..
சொன்னவர் மறந்து விட்டார் ...
கேட்ட கண்ண தாசன் மறக்க வில்லை ...
காதலில் இணைந்தவர்களை மீண்டும் காதலில் இணைக்க விரும்பினார்
பாட்டும் பரதமும் படம் தயாரானது
அதில் உயிருக்கு உயிரான காதலியை பிரிந்து காதலன் வாழ்கிறான் ..
பிரிவில் அவள் அருமை இன்னும் பல மடங்கு உயர்கிறது ....
கம்பனும் காளிதாசனும் ஓடிவந்து கண்ணதாசன் வரிகளில் மீண்டும் அமர்ந்தார்கள்
*ஆலயமணியில் பாடல் வரிகள்*
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
*பாட்டும் பரதமும்*
பாடல் வரிகள்
கம்பனை கூப்பிடுங்கள் சீதையை காண்பான்
கவி காளிதாசன் இவள் சகுந்தலை என்பான்
என்றோ எவரோ எங்கோ சொன்னதை நினைவில் நிறுத்தி
தக்க சமயத்தில் அதை பாடல் வரிகளில் மீண்டும் கொண்டு வந்தார் கவியரசர் ..
இந்த இரண்டு பாடல்களையுமே பாடியவர் TMS ... அதற்கு உயிர் தந்தவர் நடிகர் திலகம் 👍
*இலக்கணம் மாறுதோ....*
இந்த பாடலில் வரி ஒன்று வரும்
*மணி ஓசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை....
எதற்கு மணி ஓசையையும் சொல்லி இடி ஓசையையும் சேர்த்து சொல்கிறார் கவிஞர் .... ?
ஒன்றை மட்டும் சொல்லியிருந்தால் போதுமே ...
அந்த படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன் ...
சரியாக புரிந்து
கொள்வதற்கு...
இதில் வரும் பாத்திரம் பிறவியில் செவிடு ஊமையும் கூட ...
ஆஸ்திகனும் அல்ல நாஸ்திகனும் அல்ல ...
இறை உண்டு என்று நம்புவான் ஆனால் அதில் ஆழம் அதிகமில்லை
இதை உணர்ந்து கவிஞர் இப்படி சொல்கிறாரோ
*மணி ஓசை ...*
இதுவும் ஆலய வழிபாட்டில் ஒன்று ..
இறை நம்பிக்கை தரும் மங்கல ஓசை ...
*இடி ஓசை....*
இறையை நம்பாதவன் இயற்கையை நம்புவான் ...
ஆனால் நாம் காணும் பாத்திரம் ஆஸ்திகன் இல்லை நாஸ்திகனும் இல்லை ...
எனவே மணியோசை , இடியோசை இரண்டும் அவன் கேட்பதில்லை ...
வியந்து போனேன் ...
கண்ணதாசன் அவர் பாடல் வரிகள் மூலம் இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் ...
ஞானமும் யோகமும் முடிகிற இடத்தில் ஒர் ஆட்டம், அசைவு இல்லை. லோகமே இல்லை. உணர்ச்சிகளே இல்லை. இதெல்லாம் பட்டுப்போன இடம் அது. இப்படிப் பட்டுப்போன நிலையில் ஈசுவரனை ‘ஸ்தாணு’ என்று சொல்வது வழக்கம்; ‘பட்ட கட்டை’ என்று அர்த்தம். சுசீந்திரத்தில் ‘ஸ்தாணுமாலயன்’ என்று கேட்டிருப்பீர்கள். மூம்மூர்த்தியும் சேர்ந்த ஸ்வரூபம். அதில் ‘ஸ்தாணு’ என்பது பரம வைராக்கியமான பரமேச்வரன்தான். உணர்ச்சியில்லாவிட்டால், ‘மரத்து’ப் போகிறது என்கிறோமல்லவா? அப்படிக் காய்ந்து மரமாக இருக்கிறவர் ஸ்தாணு. பக்தி அநுக்கிரகத்துக்காக கருணையில் நனைந்திருந்தபோது “ஆர்த்ர”ராக (ஆதிரையனாக) இருப்பவரே இப்படி ஞானத்தில் ‘பட்ட கட்டை’யாயிருப்பார். அதே மாதிரிதான் அம்பாளும், கருணாமயமான அவரும் பரம விரக்தியாக இருக்கிற ஒர் அவஸ்தை (நிலை) உண்டு. அவள் எப்போதும் ஈசுவரனையே பற்றிப் படர்ந்திருப்பவள். அவர் மரமாக இருந்தால், இவள் கொடியாகச் சுற்றிக் கொண்டிருப்பாள். ஸ்ரீசைலத்தில் அவர் அர்ஜுன (மருத) மரமாக இருக்கிறார்; இவள் மல்லிகைக் கொடியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள்; அதனால்தான் அவருக்கு மல்லிகார்ஜுனர் என்று பெயர். அது நல்ல பசுமையோடு இருக்கப்பட்ட மரம். பட்ட மரமாக அவர் இருக்கும்போது அம்பாள் என்ன செய்கிறாள்?
பரமேசுவரன் பச்சைப் பசேலென்று கப்பும் கிளையுமாக ஒரு மரம் மாதிரி இருந்தால், அம்பாள் ஒரு பசுங்கொடியாக அவரைச் சுற்றிக் கொண்டிருப்பாள். அவர் பட்ட மரமாக, காய்ந்த கட்டையாக இருக்கும்போது, அவள் என்ன செய்கிறாள்? அப்போதும் அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். ஆனால், பச்சைக் கொடியாக இல்லை. இலையே இல்லாமல் நார் மாதிரியான கொடியாக, அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அபர்ணா, அபர்ணா என்று அவளுக்கு ஒரு பெயர். ‘பர்ணம்’ என்றால் இலையே இல்லாத கொடியாக இருக்கும்போது அம்பாள் அபர்ணாவாகிறாள். பர்வத ராஜ குமரியாகப் பிறந்து ஈஸ்வரனைப் பதியாக அடைவதற்காக அம்பாள் தபஸ் பண்ணினபோது இலையைக் கூடச் சாப்பிடாமல், கடும் நியமத்தோடு இருந்ததாலேயே இந்தப் பெயர் உண்டாயிற்று என்று ஒர் அர்த்தம் சொல்வதுண்டு. எனக்கென்னவோ ‘ஸ்தாணு’ வாக ஈசுவரன் இருக்கும்போதும், அவனை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிற அம்பாள் கொடிதான் ‘அபர்ணா’ என்று தோன்றுகிறது.
ஈசுவரனும் அம்பாளும் இருந்தால் ஸோமாஸ்கந்தமாக அங்கே ஸுப்ரம்மண்யரும் இருக்க வேண்டும் அல்லவா? ஈசுவரன் ‘ஸ்தாணு’வாகவும், அம்பாள் ‘அபர்ணா’வாகவும் இருக்கும்போது முருகன் எப்படியிருக்கிறார்? ‘விசாக’ ராக இருக்கிறார் என்று சொல்லலாம். ‘சாகை’ என்றால் கிளை என்று அர்த்தம். வேதத்தில் பல கிளைகள் உண்டு. அது ஒவ்வொன்றுக்கும் இன்ன வேத சாகை என்றே பெயர் சொல்வார்கள். ‘வி’ என்பது பல அர்த்தங்களில் வரும். சில சமயங்களில் ஒன்றை உயர்த்திக் காட்ட ‘வி’ சேர்ப்பதுண்டு. உதாரணமாக, ஜயம் – விஜயம். ஆனால் ‘வி’க்கு எதிர்மறை (Negative) பொருளும் உண்டு. ‘தவா’ என்றால் புருஷனை உடையவள்: ‘விதவா’ என்றால் புருஷன் இல்லாதவள். இந்த ரீதியில் ‘வி-சாக’ என்றால் ‘கிளை இல்லாத’ என்று அர்த்தம். அப்பா பட்ட கட்டையாகவும், அம்மா இலை இல்லாத கொடியாகவும் இருக்கும்போது, குழந்தை முருகனும் கிளையே இல்லாத கீழ்க்கன்றாக இருக்கிறார். அது பரம வைராக்கிய ஸ்வரூபம்.
பெண்மான் ஒன்று பொன் மான் கேட்க பிரிந்த இணையை சேர்த்து வைத்தான் அனுமான் அன்று
தன்மான் இல்லாமல் தவிக்கின்றோம் அனுமான் இல்லை இன்று
கண் மான் எனக் கொண்டவளே ...
கலை மான் என சிறந்தவளே
வலை சிக்கிய மான் என தவிக்கின்றேன் ...
மிரட்சி கொண்ட கண்கள் மான் என துள்ளாதோ ?
கஸ்தூரி மான் தந்த திலகம் அகிலம் முழுதும் மணக்காதோ ?
நிழலில் நிஜமாய் வருகின்றாய் ... நிஜத்தில் நிழலாய் ஏன் தெரிகின்றாய் ..?
உன் புஜத்தில் வாழும் அம்புஜம் என் நிலமை எடுத்து சொல்லாதோ ... ?
உன் தோளில் வாழும் தத்தை என் சிந்தை என்ன வென்றே இயம்பாதோ ... ?
உன் மலர் நாடி வரும் வண்டுகள் என் காதை ரீங்காரம் செய்யாதோ ...
சேர்ந்து இருக்கும் உன் திருவடிகள் எனையும் சேர்த்துக்
கொள்ளும் நாள் என்றோ ??💐💐💐
ஆலயமணியில் கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா என்று வரி அமைத்தார் கண்ணதாசன் ...
பாடல் இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது ..
பல வருடங்களுக்கு பிறகு ஒருவர் கண்ணதாசனை கேட்டார் ...
எங்கே உங்கள் கம்பனும் காளி தாசனும் ...
ஆலயமணி ஒலித்து வந்தவர்கள் எங்கே போனார்கள் என்றார் ...
அவர் கிண்டலை புரிந்து கொண்ட கவியரசர் வருவார்கள் அதே வடிவத்தில் வெகு விரைவில் என்றார் ..
சொன்னவர் மறந்து விட்டார் ...
கேட்ட கண்ண தாசன் மறக்க வில்லை ...
காதலில் இணைந்தவர்களை மீண்டும் காதலில் இணைக்க விரும்பினார்
பாட்டும் பரதமும் படம் தயாரானது
அதில் உயிருக்கு உயிரான காதலியை பிரிந்து காதலன் வாழ்கிறான் ..
பிரிவில் அவள் அருமை இன்னும் பல மடங்கு உயர்கிறது ....
கம்பனும் காளிதாசனும் ஓடிவந்து கண்ணதாசன் வரிகளில் மீண்டும் அமர்ந்தார்கள்
*ஆலயமணியில் பாடல் வரிகள்*
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
*பாட்டும் பரதமும்*
பாடல் வரிகள்
கம்பனை கூப்பிடுங்கள் சீதையை காண்பான்
கவி காளிதாசன் இவள் சகுந்தலை என்பான்
என்றோ எவரோ எங்கோ சொன்னதை நினைவில் நிறுத்தி
தக்க சமயத்தில் அதை பாடல் வரிகளில் மீண்டும் கொண்டு வந்தார் கவியரசர் ..
இந்த இரண்டு பாடல்களையுமே பாடியவர் TMS ... அதற்கு உயிர் தந்தவர் நடிகர் திலகம் 👍
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது கண்ணதாசனுக்கு மட்டும் அல்ல
கவிதை எழுதும் உனக்கும் தான்....
எப்படி உன் கற்பனையில் அபிராமியும் கண்ணதாசனும் ஒன்றாக வந்தார்கள்...
கருப்பு பணம் படத்தில்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்....
என்ற பாடல் வரிகள்
அபிராமியுடன்
ஒப்பிட்ட உன்
கற்பனை
திறமைக்கு ஆஹா!!! ஓஹோ!!! அருமை
கவிஞரே நீ உயர்ந்து நிற்கிறாய. ப்பா
தினம் ஒரு கவிதை புனைவதில்.... 👌👌
பாண்டவர்கள் கண்ணனை பார்க்க வந்தனர் ...
அந்தி மயங்கும் நேரம் ... வானில் பறவைகள் அஸ்தினாபுரம் எப்படி மாறப்போகிறது என்று தெரியாமல் தங்கள் கூட்டை நோக்கி பறந்து கொண்டிருந்தன ...
பாண்டவர்கள் ஓவ்வொருவரிடம் தனியாக கண்ணன் இந்த தூதின் முடிவை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான்
வேண்டுவது சமாதானமா அல்லது போரா ?
எல்லோரும் போரை த்தான் விரும்பினார்கள் .
சகாதேவன் மட்டுமே ஒன்றுமே சொல்லாமல் இருந்தான்
கண்ணன் அவனிடம் சென்று அவன் விருப்பதைக் கேட்டான் ..
சகாதேவன் ..."
"கண்ணா ஏன் போலி நாடகம் போடுகிறாய் ..
இங்கு நடப்பது எல்லாமே உன் விருப்பம் தானே ...
வெறும் கருவிகள் நாங்கள் ...
நாங்கள் என்ன விரும்பி என்ன பயன் ?
உன் ஒருவனை கட்டிப்போட்டு விட்டால் மட்டுமே போர் நின்று போகும் என்றான்
முடிந்தால் என்னை கட்டி போடு பார்க்கலாம் என்றான் கண்ணன் சிரித்துக்கொண்டே...
சகாதேவன் மனமார கண்ணனை பிராத்தனை செய்தான் ...
பக்தி என்ற கயிறு ஒன்றினால் தான் கண்ணன் கட்டுப்படுவான் என்பதை நன்கு அறிந்தவன் சகாதேவன் ...
சகாதேவனின் பக்தி கண்ணன் இடுப்பை இருக்கியது ...
வலி தாங்க மாட்டாமல் கண்ணன் கெஞ்சினான் ...
சகாதேவா நீ வென்று விட்டாய் .. என்னை விட்டு விடு என்றான் ...
சகாதேவன் கண்ணனை விடுவித்தான் .
கண்ணன் பேசினான் ...
"சகாதேவா நான் கட்டுண்டது நமக்குள் இருக்கட்டும் ..
உனக்கு மாறாக நீ கேட்கும் வரம் தருகிறேன் ... எதுவானாலும் கேள்" என்றான்
சகாதேவன் "போர் நிச்சயம் ...முடிவில் நாங்கள் ஐவரும் உயிருடன் இருக்க வேண்டும்!" என்ற வரம் கேட்டான்
கண்ணன் உடனே சகாதேவா இன்னும் யோசித்து இதை விட நல்ல வரமாய் கேள் என்றான்
சகாதேவன் சற்றும் யோசிக்காமல் கேட்டான் ..
நான் கேட்ட வரம் கொடு அது போதும் என்றான்
கண்ணன் சரி என்று கேட்ட வரத்தைக் கொடுத்தான் ...
சகாதேவன் த்ருப்தியுடன் சென்றான்
அவன் போன பின் கண்ணன் வருந்தி தனக்குள் சொல்லிக்
கொண்டான்
சகாதேவா உன் விதியை மாற்றலாம் என்று ஒரு வாய்ப்பு கொடுத்தேன் ...
அறிவு ஞானம் இருந்தும் நீ உணரவில்லை ..
போர் முடிவில் நீங்கள் ஐந்து பேர்கள் மட்டுமே மிஞ்சி என்ன பயன் ...
உங்கள் வம்சம் அழிந்து போய் விடுமே ...
எங்கள் வம்சம் வாழவேண்டும் கண்ணா என்றே கேட்பாய் என்று நினைத்தேன் ...
அழுத்தம் திருத்தமாய் ஐந்து பேர்கள் மட்டும் மிஞ்ச வேண்டும் என்றாய் ...
பாண்டவர்கள் மிஞ்ச வேண்டும் என்று கேட்டிருந்தால் கர்ணனும் உயிர் பிழைத்திருப்பானே !!
இறைவனே ஆசைப்பட்டாலும் விதியை மாற்ற முடியாது ...
கண்ணன் இதையே நமக்கு உணர்த்துகிறான் !!!💐💐💐
ஹரி ஓம் சிவ சிவ❤️🙏
சில சமயம் வார்த்தைகளில் சிவனை மறைத்தும் பேசுவார் ...
வியாசர் சிவனின் சிறந்த பக்தர் ..
மஹா பாரதத்தில் ஓர் இடத்தில் பாண்டவர்கள் தங்கி ஓய்வு எடுத்துக்
கொண்டிருப்பார்கள் ...
வியாசர் எப்படி எந்த திசையை நோக்கி எல்லோரும் உறங்குகிறார்கள் என்பதை அழகாக விவரிக்கிறார்
*அகஸ்திய சாஸ்தா அபிதோ திஷம் ( தெற்கு திசை)*
தெற்கு திசையை நோக்கி உறங்குகிறார்கள் என்று சொல்லி இருக்கலாம் ...
இதில் சிவன் எங்கிருக்கிறார்? அகஸ்தியர் ஏன் வரவேண்டும் ?
தெற்கு திசை சிவனுக்கு பிடித்த திசை ...
தக்ஷிணாமூர்த்தி , சிதம்பரம் நடராஜர் தெற்கு திசையை நோக்கித் தரிசனம் தருகிறார்கள் !
சிவன் பார்வதி திருமணத்தில் தெற்கு திசை சமநிலை யில் இல்லை
அதை சரி செய்ய ஈசன் அகஸ்தியரை அனுப்புகிறார் ...
அதனால் அகஸ்தியர்க்கு மரியாதை செய்து விட்டு சிவனுக்கும் நமஸ்காரம் செய்து விட்டு பாண்டவர்கள் எந்த திசையை நோக்கி உறங்குகிறார்கள் என்பதையும் அழகாக சொல்கிறார் ...
ஒரே கல்லில் மூன்று மாங்காய் 🥭🥭🥭
*அம்மா*
நான்மாடக்கூடலில் நாணமே உருவாய் நின்றிருந்தாய்!
நான்மறைகள் குடைபிடிக்க
நாவலர்கள்
பாட்டிச்சைக்க
காவலர்கள் கண் மூடா தவம் இருக்க
பசு காவலன் ஒருவன் சிங்கமென நடந்து வர
சிங்காரி நீ சொக்கிப்
போனாயே !!
அழகின் உருவிடமே அசந்துபோனால் வந்தவன் வரை இல்லா பேரழகனோ .... ?
கண்களில் ஏங்கி நின்ற ஏக்கம் கருமையாய் கீழ் சிந்த
பெருமை யாய் நீ கண்டாய் இவன் ஒருவனே இணை என்று
பிறை சந்திரன் சற்றே திரை போட
நட்சத்திரங்கள் மண்ணில் கோலம் போட
அணைத்துக் கொண்டாய் அவனை அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாம் காவலர்கள் பக்கம் தள்ளி விட்டே
மரகத மூக்குத்தி இடையில் வந்து தடை செய்யுமோ என்றே தத்தையிடம் தந்துவிட்டாய் கொஞ்சம் வைத்துக்கொள் என்றே
தாடகங்கள் தடங்கல் செய்தால் என் செய்வேன் என்றே வானில் முழு நிலவாய் அனுப்பி வைத்தாய் பேராக்காதலின் சாட்சியாக !!
கருணை மட்டும் கெஞ்சி கேட்க
கண்களில் அமர்த்திக்
கொண்டாய் ...
நிரந்தரமாய் அன்றே !!
அங்கிருந்த மான்கள் அழகன் கரம் தஞ்சம் அடைந்ததே ...
கண்களில் வாழ்ந்து வரும் மீன்கள் சடை சூழ்ந்த கங்கையில் நீந்தி மகிழ்ந்ததே !!
வீணையாய் நீ மாற மீட்டும் விரலாய் ஈசன் மாறிய விந்தை கண்டு வியக்காத விண்ணோர் , முன்னோர் மண்ணோர் எவரும் உண்டோ அம்மா ? 💐💐💐
அம்மா, நீர் அழகின் உருவம், அற்புத காட்சியாய்
அழகு மட்டும் இல்லை, அருளும் துணிந்து நிற்கும் தாயாய்
அடிமைபட்ட உலகில், நீ அமைந்தது சுதந்திரக் கோபுரமாய்
அழகன் கரம் நீயே பிடித்து தாளம் மாறா பாட்டாய்
அனலின் நடுவே, மழைபோல் குளிர்ச்சி ஊற்றும் கருணையாய்
அழித்திட நினைத்தவர் நீரின் அழகில் மூழ்கிப் போனார்
அமர்ந்த காதலின் சாட்சியாய் நிலவு மலைமீது வந்து சிரித்தது
அழகுடன் அன்பும் சேர, அதிசயமாய் உலகம் அசைந்தது!
அழுதுபோன துன்பம் நீர் கொடுத்த நிம்மதியில் கரைந்தது
அங்குள்ள மீன்கள் கூட இவன் கரம் தாங்கி மகிழ்ந்தது!
அச்சம் மடம் நாணம் என
மிச்சமொன்றும் வசமின்றி...ஈசனிடம்
இச்சை கொண்ட அழகினை
வர்ணித்த விதம் உச்சம்!
கண் மீனும்,மானும்..அந்த
விண்மீனும் சாட்சியாய்,
வான் நிலவாகி தாடங்கமும்,
தான் விலகிய காட்சியை,
கையாண்டது அருமை!
அருகில் வந்த சடையோனை,
உருகி விழியால் பருகவே....
கிளி ஏந்திய மரகத மூக்குத்தியின்,
ஒளியில் அரங்கேறிய காட்சியை,
சுந்தரேசன் மீனாளுடனான...
அந்தரங்கமான மாட்சியை..
உன்னத காதலின் பெருமையை,
சொன்ன விதம் அருமை!
உருமாறிப்
போனேன் அம்மா
திசைமாறி பறக்கும் பறவை ஆனேன் ...
நிறம் மாறி நீர் மாறி இருமாறியாகி
விடை ஏதும் இல்லாமல் வீண் போனேன் !!
கருமாரி உன் கடைக்கண் தடுமாறி செல்லும் என் பாதை தனை செப்பனிட்டதோ !
நிலை மாறி போனாலும் உன் நினைவு மாறி போகவில்லை
அருள்மாறி பெய்யும் மேகமே
உன் பாதத்துளியாய் துளி மாற வேண்டும் ....
கை மாறி போகும் வாழ்க்கையிலும் கருமாரி உனை மறவாத மனம் வேண்டும்
*திரு* மாறி போனாலும்
தெவிட்டாத உன் நாமங்கள்
குரு மாறி வரவேண்டும்
என் குறைகள் சிறை செல்ல வேண்டும் ...
கறை மாறவேண்டும் .. பிறவி கரை காண வேண்டும் ...
அக்கரைக்கு அழைத்துச் செல்ல உன் அக்கறை ஒன்றே போதும் ...
குறை விட்டு போகும் ...
நிறை வழிந்து ஓடும்
நரை விழும் மேனிதனில்
திரை விழுமோ உன் அருள் இருப்பின் ?
பறை தருவாய் வரை இன்றி ...
விடை ஏறும் விண்ணவளே
சடை கொண்டோன் மேனியில் படை கொண்டு பாதி பெற்றவளே !!
தடை ஏதும் வாராமல் நடை பயில செய்திடுவாய் ..
நல்லோர் உணரும் பூ மகளே !!
என் நாவில் வந்து அமர நல்ல நாள் கிழமை தேவையோ ?
👍👍👍
நம் பெருமாள் வீதி உலா பகலிலும் மாலையிலும் போவது வழக்கம் ஸ்ரீரங்கத்தில் ...
அது ராமானுஜர் வாழ்ந்த காலம் ...
ஷெனாய் , நாதஸ்வரம் மேளம் முழங்க பல்லக்கில் படை சூழ அன்று புறப்பட்டான் அரங்கன் ...
சற்று நேரத்தில் பல்லக்கை தூக்கி சென்றவர்கள் அதிக பளு கண்டு பல்லக்கை கீழே வைத்து விட்டார்கள் ...
அப்படி என்றுமே நடந்ததில்லை ...
இன்னும் பலர் சேர்ந்தும் பல்லக்கை தூக்க முடியவில்லை ...
அப்பொழுது அர்ச்சகருக்கு ஓர் அசரீர் கேட்டது ...
பல்லாக்கு கிளம்ப வேண்டும் என்றால் மேளம் , நாதஸ்வரம் , செஷனாய், மற்ற வாத்தியங்கள் உடனே நிறுத்தியாக வேண்டும் ..
நிசப்பதமாக இருக்க வேண்டும் .
மேலும் கூட்டத்தில் நடந்து வரும் ராமானுஜனை என்னுடன் வரவேண்டாம் என்று சொல் ...
அவன் கூட வந்தால் நான் கிளம்ப மாட்டேன் ...
எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம் ...
ராமானுஜர் அரங்கனின் உன்னத பக்தர் ...
அவரே வரக்கூடாது என்று அரங்கன் சொல்லுவானா ?
ஏன் மங்கல வாத்தியங்களையும் நிறுத்த சொல்ல வேண்டும் ...
அரங்கனுக்கு என்ன ஆயிற்று இன்று ?
ஏதாவது தெய்வ குற்றம் செய்து விட்டோமா ...?
இதே கவலை தான் ராமானுஜருக்கும் ...
அவர் குரு 18 முறை மலை மீது ஏறி தன்னை காண நடக்க வைத்தார்
அது கூட பெரிய வலியாய் தெரியவில்லை உடையவருக்கு
ஆனால் அரங்கனே என்னை நிராகரித்து விட்டானே ...
இந்த வலியைத் தான் தாங்க முடியவில்லை ...
ஆத்ம தியாகம் செய்யும் அளவிற்கு ராமானுஜர் துணிந்து விட்டார் ..
கடவுளே என்னை வெறுத்து விட்டார் என்றால் உயிர் இருந்து என்ன பயன் ?
அரங்கன் சொன்ன மாதிரியே மங்கல வாத்தியங்கள் நிறுத்தப்பட்டன ...
ராமானுஜர் அங்கிருந்து அனுப்பபட்டார் ..
பக்தர்கள் உற்சாகம் காற்றோடு கலந்தது...
பல்லாக்கு கிளம்பியது ...
யாருமே அரங்கன் முகத்தை தரிசிக்க வில்லை ..
பீகாரில் வெள்ளம் என்ற சோக கீதம் போல் நடை பிணமாய் எல்லோரும் நடக்க ஆரம்பித்தனர் ..
அரங்கன் சிரித்துக் கொண்டான் ...
மீண்டும் அந்த அமுத குரல் கேட்டது
"என் புகழை பாடிக்கொண்டு வந்தீர்கள் ...
அதற்கு பதில் என் பக்தன் ராமானுஜுன் புகழை பாடுங்கள் ...
உச்சரிப்பை சரியாக என் காதுகள் கேட்க வேண்டும் என்பதால் மங்கல வாத்தியங்கள் முழங்குவதை நிறுத்த சொன்னேன் ...
என் பக்தர்கள் புகழ் கேட்க அதைவிட சிறப்பு எனக்கு இங்கு ஒன்றும் இல்லை என்றான் அரங்கன் ...
இராமானுச நூற்றந்தாதி அங்கே உதித்தது
அரங்கன் என்றும் இல்லா மகிழ்ச்சியுடன் பல்லாக்கில் பவனி வந்தான் ...
அன்றும் இன்றும் நாளையும் !!
ராமனை எப்படி மகிழ்விப்பது என்ற கேள்வி துளசி தாசரிடம் வைக்கப்பட்டது ...
அவர் சொன்னார் அது மிகவும் சுலபம் ..
சொல்லுங்கள் தினமும் அனுமன் சாலீஸா...
அனுமனை விட ராமன் பன்மடங்கு சந்தோஷம் அடைவான் என்றார் .
இறைவன் கேட்க விரும்புவது அவன் அடியார்களின் பெருமைகளை தன் புகழை அல்ல ...
பெரியபுராணம் அப்பூதி அடிகள் ஒரு சிறந்த உதாரணம் 💐💐💐
🪷 சின்ன சின்ன கனவுகள் ....
சிங்காரத் தோரணங்கள் ....
முத்துமுத்தாய் கட்டிய வீட்டை மோந்து பார்த்து
எடுத்துச் சென்றது ஏரி உடைத்து வந்த வெள்ளம் 🐠
🐠 இறையை வேண்டி இரை தேடச் சென்றது தாய் பறவை
இரை தின்று மறை போல் பறந்து போனது சிறகு முளைத்த குட்டிப் பறவைகள்🦅
🦅 லாரி சுமந்து சென்றது வெட்டிப்போட்ட மரங்களை ....
மரங்கள் நகருமா என்றே குட்டிகள் கேட்டது தாய் பறவையிடம்🏵️
🏵️ மாடப் புறா ஒன்று கோபுரத்தின் உச்சியில் ....
மதிய நேரமதில் மாதா வின் கோயிலின் மணி மண்டபத்தில் ...
இரவு நேரம் தர்க்கா வின் உயரத்தில் ....
குட்டிப்பறவை கேட்டது .... மனிதர்கள் ஏன் சாதி வெறி மதவெறி கொண்டார்கள் ....
தாய் பறவை சொன்னது ... அண்ணாந்து பார்க்கும் வகையில் அவர்கள் உயரவில்லை ....
எல்லாம் சமம் என்றே குனிந்து பார்த்து சொன்னது 🌷
🌷பருவம் வந்த மகளைக் கண்டு பூரித்தாள் தாய் ... பருவம் கடந்த தாயைக் கண்டு சுமை என நினைத்தாள் மகள் 👣
👣 வட்டிகள் போட்டன பல குட்டிகள் ...
தலையில் விழுந்தன பல செம்மட்டிகள் ....
பட்டம் பெற்ற மகனின் நிகழ்ச்சியில் மறைந்து போயின
வட்டம் போட்ட வேதனைகள் ...🥲
--------
🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥
ஒர் உச்சி வேலி தொட்டு அமைத்த கூடு,
ஈர்க்குச்சி சருகு கட்டி தாய் பிணைத்த கூடு!
பெரும் முனைப்பும் உழைப்பும் சேர்ந்த அழகிய கூடு,
தரும் வியப்பும் திகைப்பும்... சிறந்த வேலைப்பாடு!
தன் குஞ்சுகள் பாதுகாப்பிற்கு பின்னிய வீடு,
மென் பஞ்சு மெத்தைப் போல் சொகுசாய் அமைந்த வீடு!
குஞ்சு ,தாய் வரவை எதிர்நோக்கிப் பார்த்திருக்க,
பிஞ்சு வாய்த் திறந்து இரைக்காகக் காத்திருக்க,
அஞ்சி அஞ்சி தலை நீட்டி எங்கும் பார்க்க,
கெஞ்சி கெஞ்சி தாயிடம் தன் பங்கைக் கேட்க ,
கொஞ்சி கொஞ்சி தாயவளும் அதை ஊட்டிக் கொடுக்கும்...
ஆகாரம் உண்ணும் அற்புத காட்சி கண்டேன்...
ஆகா! ஆனந்த கண்ணீருடன் வியந்து நின்றேன்!
இறக்கை முளைக்கும் வரை பாதுகாப்பு உறவு இது...
சிறகு முளைத்தவுடன் சுதந்திரப் பறவை அது!
கூட்டை விட்டுப் பரந்த வானம் செல்லும் அன்று ...ஒரு
கூற்றை ஆழமாய்ப் பதிந்துச்
சொல்லும் இன்று...
தன் கையே தனக்குதவி என உணர்த்தும்,
தன்னம்பிக்கைத் தூண்டும் பாடம் தான் இது !
🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥
----- மஹா
------------------------------------------------
சொந்த வீட்டில் வெண்ணை எடுக்க,
உந்தன் அன்னையவள் தடுக்க,
எந்த வீட்டில் உறி அடிக்க,
இந்த சிந்தனையோ?
எட்டா உயரமாய்க் கட்டி அங்கே,
விட்டம் தொங்கும் சட்டி இறக்க,
பட்டி தொட்டி குட்டிகளோடு,
திட்டம் தீட்ட யோசனையோ?
அறியா பிள்ளை கண்ணா!
உறி அடிப்பது சரியா?
பதம் பதித்து அகம் வா,
நிதமும் நவநீதம் உண்டு!
அவல் உண்ண ஆவலா?
கவலை ஏன் அதுவும் உண்டு!
உண்டு சுவைக்க உண்டு,
குண்டு குண்டு கற்கண்டு!
விண்டு நீ புசிக்கவே,
உண்டு மாம்பழத்துண்டு!
உண்டு களிப்போனை,இன்பங்
கொண்டு, திளைப்பேனே கண்டு!
உன் உண்ட களைப்பு-- புன்சிரிப்பு,
நான் கண்ட காட்சியாய்ப் பூரிப்பு!
---- மஹா
and who is the giver of all fortune and the mother of Creation.
All glories to You,
O
shelter of all living entities. O fulfiller of all desires, You are the wonderful energy of
Lord Achyuta, who is maintaining the three worlds.
You are the Supreme Goddess.
O
protector of the devotees, all glories to You.
O Devi, it is You who fulfills the desires of
the devotees, and it is You who engages them in the service of Lord Achyuta.
You are
eternal and deliverer of all fallen souls.
All glories unto You.
O Devi, for the welfare
and protection of the three worlds, You take on many forms such as Ambika, Brahmi,
Vaishnavi, Maheshwari, Varahi Maha-Lakshmi, Narasimhi, Indri, Kumari, Chandika,
Lakshmi, Savitri, Chandrakala, Rohini and Parameshwari.
All glories unto You, whose
glories are unlimited. Kindly be merciful upon me."
🙏🦅🪷
நிலைமாறி விட்டாலும் நினைவில் நீயே
உருமாறி சென்ற என் பாதை தவறினாலும்,
உன் அருள் மழையில் நனைந்தேன் அம்மா.
நீராய் ஓடியும், காற்றாய் பறந்தும்,
உன் பாதம் தேடி வந்தேன் துணிவுடன்.
குறைகள் எல்லாம் கரைந்து போக,
உன் அக்கறை எனை கரை சேர்க்க!
சடை கொண்டவன் துணை அம்மா,
வாழ்வின் ஒளி தந்து வளம் நிரப்புவாய்!