ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 44 (226- 231)

 


ஸகலா ஸச்சிதா³னந்தா³ ஸாத்யா ஸத்³³திதா³யினீ
ஸனகாதி³முனித்யேயா ஸதா³ஶிவகுடும்பி³னீ 44

226 : ஸகலா 

கலைகளின் பிறப்பிடம் 

227. ஸச்சிதா³னந்தா³

ஸச்சிதானந்த வடிவானவள் - சிவ சக்தி ஸ்வரூபம் . உண்மையான பேரானந்தத்தை தருபவள் 

228. ³ ஸாத்யா 

ஸாதனகளால் அடைதற்குரியவள் . சுலபமாக அடையக்கூடியவள் 

229. ஸத்³³திதா³யினீ  

நற்கதியை என்றும் நமக்கு அளிப்பவள் 

230. ஸனகாதி³முனித்யேயா   

ஸநகாதி முனிவர்களால் தியானம் செய்யப்படுபவள் 

231. ஸதா³ஶிவகுடும்பி³னீ

பரமேஸ்வரரின் பத்தினி .அணுவும் அந்த ஈஸ்சுவரனை என்றும் பிரியாதவள் . 

226. Om Sakalaayai Namaha

Salutations to the Mother, who is the Treasure House of Fine Arts. Devi is Shodasa kalaamayee and Chathusshasti kalaaraadhyaa, kalaswaroopini. Who has all the Rays and who is Complete.

227. Om Sacchithaanandaayai Namaha

Salutations to the Mother, Who is Sat Chit Ananda Swaroopini. In all three kaalas (time), She is immortal and there is no decay. Devi is immeasurable, whose limits cannot be fixed. In all the three world, at all times, she is the Absolute Existence, Absolute Consciousness, and Absolute Bliss. This is ParaBrahma Swaroopa Lakshanam.(attribute). As, in Lalitha sahasranamam, 'Om sacchithaanandaroopinyai namaha'. 

228. Om Saadhyaayai Namaha

Salutations to the Mother, who is Attainable. She is Attainable and Reachable through Upasana, Bhakthi, and Jnana.

229. Om Sadgathi Daayinyai Namaha

Salutations to the Mother, who gives us Salvation and Liberation from this World. She through her Mercy, created all world, Brahma,Ishwara's, Indra and other Devas, and Jivas and is the resting incarnate in each jiva directing each one of them according to their merits and demerits and is the cause for Salvation. She shows Uttaraayana the Light path or Devas path for Salvation. Devi bestows Ananada Gathi to all her Devotees. As, in Lalitha Sahasra Nama, '0m Sadgaathipradaayai namaha.

230. Om Sanakaadi Munidyeyaayai Namaha

Salutations to the Mother, who is Adored by Sanaka and other Munis. They are Brahma's Manasaputras. Jnanam and Vairaagyam are their assets. They are Mananasiromanis who always think of God. Sanaka and Munis meditate on Devi. As, in Lalitha Sahasra Nama, ' Om Sanakadi Samaaraadyaayai Namaha'.

231. Om Sadaasiva Kutumbinyai Namaha

Salutations to the Mother, who is the consort of Lord Sadasiva. She is the Head and Care taker of Lord Sadasiva's family. Here Sadasiva, refers to Lord Kameshwara. As, in Lalitha Sahasra nama, 'Om Sadaasiva-kutumbinyai Namaha'. 

* 226 * Sakhala - She who has all the rays (She who is complete)


* 227 * Satchidananda - She who is the ultimate true happiness


* 228 * Saadhya - She who is reachable


* 229 * Sadgathi Dhayini - She who gives salvation


* 230 * Sanakathi muni dhyeya - She who is being meditated upon by sages like Sanaka


* 231 * Sada shiva Kudumbini - She who is the wife of Sada Shiva
 


Comments

ravi said…
பெருமாள் தான் எடுத்த 9 அவதாரங்களிலும் சிவபிரானை பூஜித்த தலங்கள்


🙏🏽
ravi said…
*மச்சாவதாரம்...*
சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில் கடலை கலக்கி விளையாடினார். இந்த செயலால் உலகம் துன்பமடைந்தது. அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை உணர்த்தினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காண்கிறோம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் எனப்படுகிறார். கும்பகோணம் அருகிலுள்ள தேவராயன்பேட்டை என்ற ஸ்தலம் முன்னாளில் சேலூர் (சேல் - மீன்) என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள சிவபெருமானையும் மீன் வடிவ திருமால் வணங்கியதால், இறைவன் மச்சேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

*
ravi said…
கூர்மாவதாரம்...*
திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர் களும் கடைந்தபோது, மத்தாக இருந்த மந்திரமலை கடலுக்கடியில் மூழ்காமல் இருக்க ஆமை (கூர்மம்) அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கினார் திருமால். ஆமை வடிவம் கொண்ட பெருமாள், மலையை தாங்கும் வல்லமையை தர சிவபெருமானை வேண்டினார். இதற்காக, காஞ்சிபுரத்திலுள்ள திருக்கச்சூர் சிவன் கோயிலில் ஆமைமடு என்ற தீர்த்தம் உண்டாக்கி பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள விநாயகர் சன்னதி விதானத்தில் திருமால் ஆமை வடிவில் சிவபூஜை செய்வது சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. முருங்கை மரத்தின்கீழ் ஜோதி வடிவாக விளங்கும் சிவலிங்கத்தை பெருமாள் ஆமை வடிவத்தில் வழிபட்டதால் இந்த சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் (கச்சபம் - ஆமை) என்ற பெயர் ஏற்பட்டது.

*
ravi said…
வராக அவதாரம்...*
இரண்யாட்சன் என்ற அசுரன் பாதாள லோகத்தில் இருந்தபடி தேவர்களைத் துன்புறுத்த பெருமாள் வராக அவதாரமெடுத்து பூமியை தோண்டி அங்கு சென்று அவனை அழித்தார். கோபம் நீங்காத அவரை சிவபெருமான் சாந்தப்படுத்தினார். சிவ தரிசனத்தால் சினம் தணிந்த பெருமாளுக்கு சிவபெருமான் அருள் புரிந்த தலமே திருப்பன்றிக்கோடு (வராகம் - பன்றி) ஆகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

*நரசிம்ம அவதாரம்...*
தன் பக்தனான பிரகலாதனை இரண்யனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்து பெருமாள் வெளிப்பட்டார். இரண்யனைக் கொன்றார். அவரது உக்கிரத்தைத் தணிக்க, அதனினும் மேற்பட்ட உக்கிரத்துடன் சிவபெருமான் சரபேஸ்வரராக வடிவெடுத்தார். காஞ்சிபுரத்தில் தாமல் என்ற பகுதியில், நரசிம்மர் வழிபட்ட நரசிம்மேஸ்வர சிவாலயம் உள்ளது. புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் தலத்தில் நரசிம்மர் வழிபட்ட காமீஸ்வரர் என பெயர் கொண்ட சிவபெருமானை தரிசிக்கலாம்.

*வாமன அவதாரம்...*
மலை நாட்டை ஆண்ட மகாபலியின் ஆணவத்தை அடக்க அவனை குள்ள அந்தணன் (வாமனன்) வடிவெடுத்து திருமால் முக்தி கொடுத்தார். அவனை காலால் அழுத்தி பாதாள லோகம் அனுப்பிய பாவம் தீர பெருமாள் வழிபட்ட சிவத்தலம் கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியாகும்.

*பரசுராம அவதாரம்...*
ஜமதக்னி என்ற முனிவரின் மகனாய் பிறந்து, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தத்துவத்தை உணர்த்த, தன் தாயின் தலையையே கொய்து, அவளுக்கு மீண்டும் உயிர் வரம் கேட்ட அவதாரம் பரசுராம அவதாரம். இந்த அவதாரத்தில் மன்னர்களின் செருக்கையும் அடக்கினார் திருமால். திருமால் பரசுராமராய் பூஜித்த சிவத்தலங்கள் பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் அருகிலுள்ள பழுவூர் மற்றும் மயிலாடுதுறை அருகே உள்ள திருநின்றியூர் ஆகும்.

*ராமாவதாரம்...*
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்த்தவும், பெற்றவர் சொல் கேட்டு நடக்கவும், அநியாயத்தை எப்பாடுபட்டேனும் வேரறுக்கவும், சிவ பக்தனாயினும் காமத்திற்கு அடிமைப்பட்ட அரக்கனை அழிக்கவும் திருமால் எடுத்த அவதாரம் ராமாவதாரம். ராம நாமத்தை சிவனே உச்சரிக்கிறார் என்பதும் வரலாறு. அவரே அனுமானாக உருவெடுத்து, ராவணனை அழிக்க திருமாலுக்கு உதவினார் என்பதும் செவிவழிச் செய்தி. திருமால், ராமாவதார காலத்தில் சிவனுக்காக சேதுக்கரையில் ஒரு தலமே உருவாக காரணமாக இருந்தார். மணலால் சிவலிங்கம் அமைத்து பூஜித்தார். அதுவே ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலாகும். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலுள்ள சிவனை ராமர் வழிபட்டதாக கூறப்படுவதால் அவர் ராமலிங்கேஸ்வரர் எனப்படுகிறார்.

*பலராம அவதாரம்...*
திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு, அவரது சயனமான ஆதிசேஷன் பலராமனாக உருவெடுத்ததாகவும், திருமால் அதனைக் கவுரவிக்க தன் அண்ணனாக உருவெடுக்கச் செய்தார் என்பதும் பலராம அவதாரத்தின் வரலாறு. காஞ்சிபுரத்தில் பலராமர் வழிபட்ட சிவன் கோயில்

பலபத்ர ராமேஸ்வரம் என பெயர் கொண்டதாகும். திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) அருகிலுள்ள கோடியக்கரை குழகர்கோயில் பலராமர் வழிபட்ட தலமாகும்.

*கிருஷ்ண அவதாரம்...*
கண்ணன் தனது சிவயோக மகிமையால் சிவபெருமானாகவே இருந்து, குருஷேத்திர யுத்தத்திற்கு காரண பூதராய் அழித்தல் தொழிலை செய்ததாக பாகவதம் கூறுகிறது. மேலும் கண்ணன் தன் வினைகள் தீர, திருவீழிமலை (திருவாரூர் மாவட்டம்) மற்றும் திருவிடை மருதூர் (தஞ்சாவூர் மாவட்டம்) சிவபெருமானை பூஜித்த தலங்களாக கூறப்படுகிறது.

*சிவாய நம...*
*சிவமே ஜெயம்...*
*சிவமே தவம்...*
*சிவனே சரணாகதி...*
*சிவமே என்‌ வரமே...*


💐🙏🏽 இனிய காலை வணக்கம்💐
ravi said…
பெரியவா சொன்னது ....

மார்க்கண்டேயர் தன்னுடைய மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்லோகம் தனை சொல்லிக்கொண்டிருந்தார் ...

யமன் எதிரே ... மரணம் 16 வயது மார்கண்டேயரை தழுவ காத்துக்
கொண்டிருந்தது ...

இன்னும் சில ஸ்லோகங்களே பாக்கி இருந்தன ... அதில் ஒரு பாடலில்

வ்யோமகேஷம் விரூபாக்ஷம் சந்திராத்ர க்ருத சேகரம்....

என்று பரமேஸ்வரனை சந்திர சேகரம் என்று அழைத்தார் ...

கால சம்ஹாரன் என்று அழைப்பதை விடுத்து ஏன் சந்திர சேகரம் என்று சொன்னார் என்று தெரியுமா ?

பரமேஸ்வரன் அணிந்திருக்கும் சந்திரன் பால சந்திரன்

மூன்றாம் பிறை ...

அங்கே சந்திரன் குழந்தையாகவே இருக்கிறான் ...

வளர்வதில்லை சிதைவதில்லை ..
மறைவதில்லை ... காலத்தை வென்ற நிலையில் ....

அப்படி காலத்தை வென்றவன் பரமேஸ்வரன் அவன் இருக்கும் போது காலத்திற்கு கட்டுப்பட்ட காலன் என்னை என்ன செய்து விட முடியும் ?

ஒரு பெரிய உண்மை ஒரு நாமத்தில் அடங்கி போனதைப் பார்த்தீர்களா ... ?
ravi said…
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..

'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்..

குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..

மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..

ரொம்ப உயரம் போலவே...
ஏற முடியுமா என்னால்...

மலையைச் சுற்றிலும் பல வழிகள்..
மேலே போவதற்கு...

அமைதியான வழி..
ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..
சாஸ்திர வழி...
சம்பிரதாய வழி..
மந்திர வழி..
தந்திர வழி..
கட்டண வழி..
கடின வழி...
சுலப வழி...
குறுக்கு வழி..
துரித வழி...
சிபாரிசு வழி...
பொது வழி..
பழைய வழி..
புதிய வழி..

இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா...

அடேயப்பா....எத்தனை வழிகள்...

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..

'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...'
ஒதுக்கினர் சிலர்..

'நான் கூட்டிப் போகிறேன் வா...
கட்டணம் தேவையில்லை..
என் வழியி்ல் ஏறினால் போதும்..
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...'
என கை பிடித்து இழுத்தனர் சிலர்...

'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்
உனக்குப்பதில் நான் போகிறேன்..
கட்டணம் மட்டும் செலுத்து'...
என சிலர்..

'பார்க்கணும் அவ்ளோதானே...
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்..
அது போதும்.....
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்...'
ஆணவ அதிகாரத்துடன் சிலர்....

'அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது..
உன்னால் ஏறமுடியாது...
தூரம் அதிகம்.. திரும்பிப்போ...
அவரை என்னத்துக்குப் பார்க்கணும்..
பார்த்து ஆகப்போறது என்ன..'
அதைரியப்படுத்தினர் சிலர்...

'உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை..
ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்
அது ஒரு வழிப்பாதை...
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது...அப்படியே போவேண்டியதுதான்...'
பயமுறுத்தினர் சிலர்...

'சாமியாவது...பூதமாவது..
அது வெறும் கல்..
அங்கே ஒன்றும் இல்லை..
வெட்டி வேலை...
போய் பிழைப்பைப் பார்...'
பாதையை அடைத்து வைத்துப்
பகுத்தறிவு பேசினர் சிலர்...

என்ன செய்வது...
ஏறுவதா...
திரும்பிப் போவதா...

குழம்பி நின்ற என்னிடம்
கை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..

கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்தக் கையில் வைத்தேன்..

'மவராசனா இரு...'

வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்..

நன்றியுடன் எனை நோக்கிய
அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து
புன்னகைத்தார் கடவுள்..!!!!

'இங்கென்ன செய்கிறீர்..!!'

* "நான் இங்கேதானே இருக்கிறேன்..."*

'அப்போ அங்கிருப்பது யார்..?'
மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்..

* "ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்...
எங்கேயும் இருப்பவனல்லவா நான்!
இங்கே எனைக் காண முடியாதவர்
அங்கே வருகிறார்...
சிரமப்பட்டு!!!!..."

'ஆனால்'..திணறினேன்...
'இது உமது உருவமல்லவே...'

"அதுவும் எனது உருவமல்லவே...
எனக்கென்று தனி உருவமில்லை..
நீ என்னை எதில் காண்கிறாயோ
அது நானாவேன்..."

'அப்படியென்றால்..??'

"வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே....

பசித்த வயிற்றோடு கைநீட்டியவன்,
உணவளித்த உன் கண்களில்
காண்பதும் எனையே..

தருபவனும் நானே...
பெறுபவனும் நானே...

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்...
என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..
மனதுதான் வேண்டும்..."

'அப்போ உனைப் பார்க்க
மலை ஏற வேண்டாம் என்கிறாயா??'..
குழப்பத்துடன் கேட்டேன்..

"தாராளமாக ஏறி வா...
அது உன் விருப்பம்...
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே..
அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.."

'கடவுளே'...விழித்தேன்...
'எனக்குப் புரியவில்லை...'

"புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல...

உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்..
என்னைக் காண, நீ சிரமப்பட்டு
மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...

பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...
நீ இருக்குமிடத்திலேயே
எனைக் காண்பாய்..

புன்னகைத்தார் கடவுள்!

*படித்ததில் மிகவும் பிடித்தது*
ravi said…
*KNOWING WHEN TO STOP*

I thoroughly enjoy Kaun Banega Crorepati, an intellectual and entertaining show.

In a recent episode, Neeraj Saxena, who ranked first in the Fastest Finger round, took the hot seat.

He sat there calmly—no screaming, no dancing, no tears, no hugging Amitabh.

He is a scientist, holds a PhD, and is the Pro- Vice Chancellor of a university in Kolkata.

He had a privilege to worked with Dr. A.P.J. Abdul Kalam.

Neeraj began the game confidently, using the audience poll once but regaining the lifeline thanks to his double-dip power.

He answered each question smoothly, and his intelligence was striking.

He won Rs 3.2 lakhs and an equivalent bonus before the break.

After the break, Amitabh started introducing the next question: “Alright, Doctor, now the eleventh question is coming up… Here it is…”

But just then, Neeraj spoke up, “Sir, I would like to quit.”

Amitabh was surprised. A contestant playing so well, with three lifelines still left and a clear path to ₹1 crore, wanted to quit?

Neeraj replied calmly, “There are other contestants waiting, and they are younger than I am.

They deserve a chance too.

*Besides, I have already won a good amount. I feel what I have is enough. I don’t need more.”*

Amitabh was speechless. The entire studio fell silent for a moment.

Then everyone stood up and gave him a long round of applause.

Amitabh said, “There is so much to learn from you today. It’s rare to meet someone so humble.”

Honestly, despite having such a huge opportunity, Neeraj’s decision to step back and allow others to play, while being content with what he had, is something I’ve never witnessed before. In my heart, I saluted him.

*Today, people often chase money, power endlessly. No matter how much they earn, they are never satisfied.*

Greed never diminishes.

In this pursuit, people lose their family time, sleep, peace, love, and friendships.

But during times like these, people like Dr. Neeraj Saxena reminds us of valuable lessons.

In this age, encountering someone who is satisfied with less is a rare and precious sight.

After Neeraj quit, a young girl came to the hot seat. She shared her story:

“My father threw us out because we are three daughters. We live in an ashram now…”

I realized that if Neeraj hadn’t quit, this girl would not have had the chance to play.

His sacrifice gave her an opportunity to earn some money.

In today’s world, people don’t even want to part with a single penny from their inheritance. But this was an exceptional case.

*When your needs are met, it’s important to know when to stop and give others a chance.*

Letting go of selfishness leads to collective happiness.
ravi said…
*ஸ்ரீ வைஷ்ணவி ... ஜம்மு & காஷ்மீர்*

முராரிக்கு ஜடாரியாய் ஆனாயோ ?

புராரிக்கு புண்ணிய நதியாய் ஆனாயோ ?

கராரிக்கு ( பிரம்மா) கமண்டலமாய் ஆனாயோ ?

வாராஹி உமையே !!

போராகி ரணம் கண்ட உள்ளமதில்

தேனாகி வருவாயோ ...?

சோறாக்கி படைப்பேன் அம்மா ...

நாராகி உன் நாமம் பூவாக்கி தொடுப்பேன் அம்மா .. !

சேறாகி போகும் வாழ்க்கை வேண்டேன் ...

காயாகி கனியாகி யாதும் ஆன உன்னிடம்

பாலாகி உன் பாதம் தனில் நெய்யாகி மணம் வீச வேண்டும் ...

என் மனம் அதில் மயங்கிட வேண்டும்

மற்ற ஒன்றும் வேண்டா வரம் தரவேண்டும் ...🪷🪷🪷
ravi said…
*ஸ்ரீ* *ராஜராஜேஸ்வரீ* -

*நங்கநல்லுர் சென்னை* 💐💐💐

கண்கள் மூலம் ஆட்சி செய்யும் காரூண்ய ரூபிணி

சாம்ராஜ்ஜியங்கள் சற்றும் நினையாமல் தருபவளே !

உலகம் எனும் சாம்ராஜ்யத்தின் வல்லபம் நீ தானே !!

கருணையின் மறு வடிவே ...

உண்மை பக்தர்களை அரியாசனம் ஏற்றி அழகு பார்ப்பவளே !!

ராஜ்ஜியலக்ஷ்மி நீ என்றே சொன்னால் நாவெல்லாம் இனிக்கின்றதே !!

தரம் பார்த்து அருள் செய்வதில்லை

கனம் பார்த்து கண் சிமிட்டுவதில்லை

பணம் பார்த்து பரவசப்
படுவதில்லை

நலம் பார்த்து அருள்கின்றாய்

நாமங்கள் தினம் சொல்வோர் நாவினில் ஓடி வந்து அமர்கிறாய் ...

ஓடி ஓடி உட்கலந்தாய்

நாடி நாடி நாட்களை கழித்தோமே !

வாடி வாடி வதைந்து போனோர் கோடி கோடி அன்றோ

கொற்றவளே குற்றம் இருந்தால் குறை ஏதும் இருந்தால்

சற்றே மறந்து உன் சரண் புக அருள்வாயே 💐💐💐
ravi said…
கிருஷ்ணன் அவதாரம் ... *அத்புதம் பாலகம்*

இடம் கம்சனின் சிறைச்சாலை

Witness : தேவகி , வசுதேவர் , முப்பது முக்கோடி தேவர்கள் , கின்னர்கள் , ரிஷிகள் , பர்வதங்கள் , கந்தர்வர்கள் , முனிவர்கள் இன்னும் கோடி கோடி உயிரினங்கள் ...

*சூழ்நிலை :* சந்தோஷம் , பரமானந்தம் தேவகானம்
சச்சிதானந்தம்
சிவம்

ஸ்ரீமத் பாகவதம் கிருஷ்ணனின் பிறப்பை இப்படி குறிப்பிடுகிறது

தம் அத்புதம் பாலகம்

அம்புஜேக்ஷணம்
சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம்

ஸ்ரீவத்ஸலக்ஷ்மம் கலசோபிகௌஸ்துபம்

பீதாம்பரம் ஸாந்த்ரபயோதஸௌபகம்

மஹார்ஹ வைடூர்ய கிரீடகுண்டல-
த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ரகுந்தலம்

உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபி:

விரோசமாநம் வஸுதேவ ஐக்ஷத

எப்படி கிருஷ்ணன் உதித்தான் என்று தெரியுமா ?

சங்கு, சக்கரம், கதை, பத்மம் தாங்கிய நான்கு திருக்கரங்கள் ,

திருமறு,
கவுத்துவம், வனமாலை தாங்கிய மார்பு,

பீதகவாடை, மின்னும் முடி-
குண்டலங்கள்,

மேகலையும் கங்கணமும். தாமரைக்கண்கள் கொண்ட அற்புத வடிவம்.

வசுதேவர் கண்ணிமைக்
காமல் பார்த்தார்... இமைகளாய் கண்ணன் வந்த போது

கண்ணன் சொல்கிறான் ....

*அம்மா* !

நான் நான்கு கரங்களுடன் வந்திருக்கிறேன் ...

எந்த தாயும் குழந்தை நன்றாக வளர்ந்து நல்ல பெண்ணாய் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றே ஆசைப்படுவாள் ...

அறிவேன் உன் ஆசையை

இதோ பார்த்துக்கொள் உன் மாட்டுப்பெண்ணை... மார்பில் உறைந்திருக்கும் லட்சுமியை காட்டுகிறேன்

பிறகு ஒரு தாய் எதற்கு கவலைப்படுவாள்...?

நல்ல பேர / பேத்திகள் பிறக்க வேண்டும் என்றே ...

பாலன் நான் பாலகனாய் வந்தேன் ( *க* என்பது சதுர் முக பிரம்மனை குறிக்கும்) ...

இதோ என் நாபியில் உதித்த உன் பேரக்குழந்தையைப் பார்த்துக்கொள்

சிறையில் எனக்கு விளையாட உன்னிடம் ஒன்றும் இருக்காது என்றே

இதோ சங்கையும் , சக்ரத்தையும் , கதையையும் கொண்டு வந்திருக்கிறேன் ... ..

கிழிந்த துணிகள் உன்னிடம் இருக்காது

இதோ என் பட்டு பீதாம்பரம்.....

இப்படி ஒரு தாயை சரியாக புரிந்துகொண்ட குழந்தை வேறு எங்கும் உண்டா??

அதனால் சுகர் பாடும் போது
*அத்புதம் பாலகம்* என்றே தன்னையும் மறந்து பாடினார் 💐💐💐💐
ravi said…
You must visit this temple !!

மஹா பெரியவா நடந்தே எல்லா சிவஸ்தலங் களும் செல்பவர்.

ஒருதடவை ஒரு பெரிய சுற்றுலா மாதிரி ஒரு ஆலய தர்சனம்.

திரி
சூலம் மலைகள் அடியில் ஒரு அருமையான அமைதியான திரிசூலநாதர் கோவில் இருக்கிறது.

அதற்கு விஜயம் செய்துவிட்டு திருசூலநாதர் திரிபுர சுந்தரி தரிசனத்துக்குப் பிறகு மெதுவாக வடக்கு நோக்கி நடந்து வந்தார்.

அப்போது மீனம்பாக்கத்துக்கும் பரங்கி மலைக்கும் இடையே இப்போது இருக்கும் பழவந்தாங்கல்
ரயில் நிலையம் கிடையாது.

பரங்கிமலை ரயில் நிலையம் அருகே ஒரு அற்புதமான தொன்று தொட்ட சிவாலயம் இருக்கிறது.

நந்தீஸ்வரர் பிருங்கி மகரிஷிக்கு தரிசனம் கொடுத்த இடம்.

பிருங்கி மலை தான் பறங்கி மலை ஆகிவிட்டது.

அம்பாள்
ரொம்ப வே அழகாக இருப்பாள்.

ஆவுடை நாயகி என்று பெயர்.

அவர்களை தரிசிக்க மஹா பெரியவா நடந்து வந்தார்.

நங்கநல்லூர் அப்போது உருவாக வில்லை.

பழவந்தாங்கல் என்கிற கிராம பெயர்.

அதன் வழியாக நடந்து வந்தார்.

வெயில் நேரம். இப்போது நேரு உயர்நிலைப்பள்ளி இருக்கிற தே நேரு காலனி, நங்கநல்லூரில் அந்த பக்கமாக வந்தார்.

பள்ளி மைதானத்துக்கு பின் புறம் ஒரு அரசமரம்.

அதன் அடியில் சற்று இளைப்பாறலாம் என்று அமர்ந்தார். கூட
வந்தவர்கள் சற்று தள்ளி வெவ்வேறு இடங்களில் அமர்ந்து சிரம பரிகாரம் செய்தார் கள்.

மஹாபெரியவாளுக்கு தாகம் தொண்டை யில் வறட்சி.

மெல்லிய குரலில் சற்று தள்ளி அமர்ந்திருந்த மடத்து தொண்டர்களில் ஒருவர் பெயர் சொல்லி அழைத்தார்.

மறுபடியும் அவர் பெயரைச் சொல்லி, ''கொஞ்சம் குடிக்க ஜலம் கொண்டுவாடா '' என்றதும் கூட அந்த தொண்டர் காதில் விழவில்லையோ, என்னவோ
அந்த தொண்டர் அருகே எங்கோ சென்றார்.

''சரி அவன் வரட்டும், அதுவரை தாகத்தோடு காத்திருப்போம்'' என்று மஹா பெரியவா தீர்மானித்துவிட்டார்

தாகத்தை லக்ஷியம் பண்ணாமல் கண்ணை மூடி ஜெபத்தில் ஆழ்ந்துவிட்டார்.

பெரியவா முன் லக்ஷணமாக ஒரு சிறு பெண் கையில் ஒரு சுத்தமான சொம்பு நிறைய ஜலத்தோடு பெரியவர் எதிரில் நின்றாள் .

''இந்தாருங்கள் குடிக்க நீர் கேட்டீர்களே'' என்று சொம்பை நீட்டினாள்.
மிக சந்தோஷத்தோடு சொம்பு ஜலத்தை பருகி விட்டு அந்த பெண்ணிடம் சொம்பை திருப்பிக் கொடுத்தார். முகத்தில் புன்னகையோடு அந்த பெண் சொம்பை வாங்கிக் கொண்டு அவரை
பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள் .

தொண்டரும் அருகே வந்து நின்றார்.

'யாரடா அந்த குழந்தை, அது கிட்டே ஜலத்
தோடு சொம்பை கொடுத்து அனுப்பினே?''

''பெரியவா க்ஷமிக்கணும். நீங்க ஜலம் கேட்
டதே எனக்கு தெரியாது. நான் எந்த குழந்தை
யும் இங்கே பாக்கலியே . யார் கிட்டேயும் தீர்த்த சொம்பு கொடுத்து அனுப்பலையே ''

சுற்று முற்றும் ஜன நடமாட்டம் இல்லாத இடம். மஹா பெரியவா மீண்டும் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்தார். அந்த குழந்தை யின் முகம், அவள் உடை ஆபரணம் எல்லாமே அவர் மனதில் அந்த குழந்தை ஸ்ரீ ராஜ ராஜேஸ் வரி என்று புரிந்துவிட்டது.

அடடா அம்பிகையே அல்லவோ வந்து எனக்கு ஜலம் கொடுத்திருக் கிறாள்''

அந்த ஊர் கிராம பெரியவர்களை எல்லாம் அழைத்துவரச் சொன்னார். பெரியவா வந்தி ருக்கும் செய் திஅதற்குள் பரவிவிட்டதால் ஊர்மக்கள் தரிசனத்துக்கு வந்துவிட்டார்கள்.

"இந்த இடத்தில் ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி எங்கோ பூமிக்கடியில் இருக்கிறாள். உடனே ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிப்பேசி தோண்டி கண்டுபிடியுங்கள்'' என்று சொன்னார் மஹா பெரியவா.

மஹா பெரியவா பரங்கிமலை நோக்கி நந்தீஸ்வரர் ஆலயத்துக்கு பிரயாணம் தொடங்கிவிட்டார்.

ஊர்க்காரர்கள் சும்மா இருப்பார்களா?
.
மஹா பெரியவா சொன்ன இடத்தில், தோண்டிப்
பார்த்தார்கள்.

குழந்தை வடிவான அம்பிகை கிடைத்தாள் , தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ்வரி விக்ரஹமும் கிடைத்தது. காஞ்சிபுரத்திற்கு சென்று மஹா பெரியவாளுக்கு விஷயம் சொன்னார்கள்.

''அம்பாள் பெயர் 'ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி '' ஒரு ஆலயம் எழுப்பி அம்பாளை பிரதிஷ்டை பண்ணி நித்ய பூஜை விடாமல் செய்ய ஏற்பாடு பண்ணுங்கள்''

இந்த விஷயம் தெரிந்தவர்கள் அந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்ய தவறவில்லை.

நான் பலமுறை சென்றிருக்கிறேன்.

அமைதி யான ஆலயம்.

பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து நேரு காலனி 2வது தெருவில் இந்த ஆலயத்துக்கு நடந்தோ, ஆட்டோ ரிக்ஷாவிலோ கூட வரலாம்.
ravi said…
ரவி கவிதை
க ள ஞ் சி ய ம் ( மே) ஏதாவது வைத்திருக்கிறாயா ppa....!!!!
சகட்டு மேனிக்கு போத்தீஸ் புடவை கடை மாதிரி கவிதையை அள்ளி அள்ளி
தெளிக்கிறியே ராஜா ...👌👌👌சூப்பர் சூப்பர் ஸ்பெஷல் சூப்பர்
ravi said…
ரவி
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மனை பற்றி நீ அழகாக விமர்சிக்கிறாய்
அத்தனையும் அருமை.....
உன் பகிர்வுகளை படிக்கும் பொழுதாவது அந்தந்த ஊர் அம்மனை நாங்கள் நினைவு கூறுகிறோம்....
இன்றைக்கு நங்கநல்லூர் அம்மனை... ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை
நீ உன் பகிர்வின் மூலம் நினைவு படுத்திவிட்டாய்.
அருமை.... நன்றி 🙏
ravi said…
*தட்சிண காளி 👅 காளிகாட் மேற்கு வங்காளம்*

யாதும் ஆனாய் காளி யாவும் நீயே காளி !

போதும் போதும் என சொல்லும் மனமும் தந்தாய் !

மேலும் மேலும் வரங்கள் தந்தாய் ...

காதும் காதும் வைத்தாற் போல் உன் தீக்ஷை தந்தாய்

என்னுள் புகுந்து என்னுள் கலந்து என்னுள் நிலைத்து நின்றாய்

சொல்லும் பொருளும் ஆனோம் காளி பாலும் மணமும் ஆனோம்

சக்கரையும் அதன் சுவையும் ஆனோம் காளி

எக்கரையும் இனி உன் அக்கறை என்றே அக்கரை சேர்ந்தேன் காளி

கடலில் நீந்தும் போதே காளி கரையை காண வைத்தாய் ...

கறை படிந்த என் வாழ்க்கை இது

கை பிடித்து தூக்கி விட்டாய்

விடை என்றே வந்தாய் காளி வினைகள் ஓடக்கண்டேன் ..

விடை ஏறி நின்றாய் காளி உன் கடை கண்டு உவந்தேன்

துன்பம் இனி இல்லை காளி துயரம் இனி இல்லை ...

சடை கொண்டோன் பாகம் படை இன்றி வென்றாய் ...

தடை இனி ஏதும் உண்டோ காளி நீ எனை அடை காக்கும் போதே !!
ravi said…
*புவனேஸ்வரீ - புதுக்கோட்டை*👍🪷

வானமும் பூமியும் மாறினும் மாறாத
வாய்மை வடிவான தேவி

வழிபாடு செய்பவர் குறைபாடு தீரத்தின்ப
வாழ்வுதரும் ஆதி தேவி

தேனுமாய் அமுதுமாய்ச் சித்தத்திலே நின்று
தித்தித் தினிக்கும் தேவி

சேரரின் மார்பை இருகூறாகவே செய்யும்
திரிசூலம் ஏந்தும் தேவி

கானமும் சிற்பமும் கலைமலர் பலப்பலவும்
காணிக்கை கொள்ளும் தேவி

கற்பனையும் ஒப்பனையும் காலம் ஒரு மூன்றும்
கடந்த எம் தேவதேவி

ஈனமொன்றண்டாத ஞானமாதேவி

உனை
என் சொல்லி வாழ்த்துவோம் யாம்

இறைவி எனை ஆண்டருளும் புவனேஸ்வரீயே!!

இமயமலை வாழும் உமையே !!💐💐💐
ravi said…
*சாமுண்டீஸ்வரீ - மைசூர் 🪷*

வரம்பற்ற ஆற்றல் வரப்பெற்ற பண்டனை

மற்றும் அவன் பெற்ற மகனை
மாறுகொள் விடங்கனை

மடம்படு விசுக்கி றனை
மதுகையிடப்பன் மயிடனை

உரம் பெற்ற சும்பனை நிசும்பனை நரகனை
உதிரபீசன் மரபினை

ஒழிவிலாச் சண்டனை முண்டனை இரணியனை

உணர்வற்ற தக்கன் தன்னை
சிரம்பத்து பெற்றவனைத்

தேரேறி மாவேறிச்
செற்ற எம் வெற்றி மயிலே

சேவிக்கும் அடியாரை வாழ்விக்கும் ஆசையால்

செங்கோல் பிடித்த அழகை

இரும்புவி புரந்தருள் பெரும்பெயர் மடந்தை உனை
என் சொல்லி போற்று வோம்யாம்

இறைவி எனை ஆண்டருளும்
சாமுண்டீஸ்வரியே !

இமயமலை வாழும் உமையே !!
ravi said…
*பிரகதாம்பாள்*

*திருக்கோகர்ணம் புதுக்கோட்டை*

தேறாத கவி எனினும்

மாறாத காதலால்
திரு முன்பு சாற்றுகின்றேன்

சிந்தை அணு ஒவ்வொன்றும் தேவி உனதே ஆகச்
செய்ய தமிழ் பாடுகின்றேன்

ஆறாத துயருக்கும் அகலாத கவலைக்கும்
யாரை நான் நொந்து கொள்வேன்

அறியாது பிழை செய்து சரியாக வதைபட்ட
அவலத்தை எங்கு சொல்வேன்

நீறாக வேந்ருதர் புரமூன்றும் செற்ற உனை
நெஞ்சாரப் போற்றுகின்றேன்

நெற்றிவிழியால் எனது குற்ற மலை பொடியாக
நின்னருளை வேண்டுகின்றேன்

ஈறேதும் இல்லாத இன்பவடிவாக என்
இதயதள மீதும் ஒளிர்வாய்
இறைவி

எனை ஆண்டருளும் பிரகதாம்பாளே!!

இமயமலை வாழும் உமையே !!
ravi said…
*இரண்டு ராஜாக்கள்*

*தில்லை நடராஜன்*

*திருவாரூர் தியாகராஜன்*

ஆனந்த நடனம் இங்கே அனுதினமும்

அற்புத நடனம் இங்கே எப்பொழுதும்

பார்த்தவண்ணம் திகைத்திருக்கும் கோவிந்தன் இங்கே

ப்ராணத்தில் அஜபா நடம் கண்டு களிக்கும் மாதவன் அங்கே !

மானாட மழுவாட மதியாடப் புனலாட
மங்கை சிவகாமியாட தில்லையே சேர்ந்தாடுவது இங்கே !

மாலாட நூலாட மறையாடத்

திரையாட
மறைதந்த பிரம்மனாட

கோனாட வானுலகு கூட்டமெல் லாமாட

குஞ்சர முகத்தனாடுவது இங்கே

குண்டல மிரண்டாடத் தண்டைபுலி யுடையாடக்

குழந்தை முருகேசனாட

ஞானசம் பந்தரொடு யிந்திரர்பதி னெட்டு
முனியாட பாலகருமாடுவது அங்கே !!

நரைதும்பை யறுகாட
நந்தி வாகனமாட
நாட்டிப் பெண்களாட வினை அறுப்பது இங்கே

உனைப்பாட யெனைநாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவது அங்கே

தாயென்று சேயென்று நீயென்னு நானென்று

தமியேனை யிவ் வண்ணமாய் ஆக்குவது இங்கே !!

எங்கும் சிவானந்தம் வருவது அங்கும் இங்கும் அவன் ஆடுவதால் தானோ ? 💐💐💐
ravi said…
*இரண்டு ரங்காக்கள்* 🪷🪷

ஒருவன் ஸ்ரீ ரங்க நாதன்

இன்னொருவன் பாண்டு ரங்கன்

ஒருவன் யோக நித்ரா வில் அனந்தசயனம்

ஒருவன் சுடும் செங்கலில் நின்று தவம்

காவேரி பாதம் தழுவி காதம் ஓடும் அழகு ...

சந்திரபாஹா அமுதை பொழிந்து விட்டல விட்டல என்றே சொல்லி ஓடும் அழகு

ரங்கநாயகி தன் அரங்கம் தனில் அந்தரங்கம் கொண்டவள் ...

ருக்மிணி இங்கே அவல் சுவைத்து அமுது படைப்பவள்

கிளிகள் கொஞ்சம் அழகு இங்கே

கீர்த்தனைகள் மிஞ்சும் வானின் அளவு அங்கே

எதையும் கொடுப்பான் ஸ்ரீரங்கம் ரங்கன் ...

வேண்டதக்கது அறிவான் வேண்டும் முழுதும் தருவான் பண்டரிப்பூர் விட்டலன்

நாமம் சாத்தியவர்கள் இங்கே செய்வார் பூஜை ...

நாமம் சொல்வோர் அணைப்பார் இங்கே அவன் தேஜசஸை

கால் நடந்து செல்வோர் கோடி ...

நாடி நலம் பெற வைப்பான் விளையாடி

மால் அறிந்து மயங்குவோரை நாடி வந்து கோடி தருவான் தேடி செல்ல வேண்டாம் என்றே !! 🛕🛕
ravi said…
*மூன்று*
*ராணிகள்*

👑👑👑

👑 *மீனாக்ஷி*

நான்மாடக்
கூடலிலே நாரைகள் பறக்கும் வானத்திலே

நான்மறைகள் சாமரம் வீசும் வீதியிலே

கிளிகள் கொஞ்சும் கடம்ப வனத்தினிலே

பேரழகி ஒருத்தி காத்திருந்தாள்
கண்கள் பேசும் காதலன் வருகைக்காக ...

ஆட்சியிலே மும்மாரி பெய்கிறதா ?

முக்காலமும் பூஜை நடக்கிறதா என்று கேட்டு வந்தான் காக்க வைத்த காதலன் !!

பஞ்சும் அஞ்சும் பாதம் கொண்டவள் சொன்னாள்

விழிகள் அங்கும் இங்கும் ஓடுவது ஊர் மக்களை காக்கவே கவலை வேண்டாம் என்றாள் ...

காதலில் கண்கள் இங்கே இல்லை என்றால் கரும்பும் கசக்காதோ என்றான் ஆயிரம் மன்மத முகம் கொண்டவன்

இதயத்தை கொண்டு வந்தேன் இங்கே மான் போல் ஓடும் மனமதை எடுத்து வந்தேன் ...

நம் காதலுக்கு இது போதும்
காவியம் நாம் படைத்திடவே என்றாள்

அணிந்து இருந்த மரகத மூக்குத்தி திரிநயனம் கொண்ட சொக்கனைப்
பார்த்தே
கண் சிமிட்டியதே ஓர் காரணத்துடன் !!

👑 *காமாக்ஷி*

கண்கள் ஆட்சி செய்ய கருத்தெல்லாம் ஏகாம்பரம் ஆனதே !

காமன் அவன் தந்த ஆயுதங்கள் செல்லுமோ அவன் விதி முடித்தவன் மீதே ?

கவலை கொண்டாள் இடை என்றே ஒன்றும் இல்லாதவள்

வாரி அணைக்க கரங்கள் துடித்தும் வல்லபம் ஆயிரம் இருந்தும் ஏகன் அநேகன் வரவில்லை அங்கே

மண் எடுத்து உருவம் அமைத்தாள் மண் ஆளும் மஹாராணி

வெள்ளம் கரை புரண்டு ஓடி வர கட்டழகன் அவனை நெஞ்சம் முட்ட அணைத்துக்
கொண்டாள் ...

ஓடி வந்த வெள்ளம் பாடிக்கொண்டு சென்றது எதிர்பார்த்ததை ஏகாம்பரன் பெற்று விட்டான் என்றே !!

👑 *விசாலாட்சி*

வேதங்கள் கீதங்கள் முழங்க நாதங்கள் நமசிவாய என்றே நாவசைக்க

சஹஸ்ராரம் தனிலே யாழ் எடுத்து வாசித்தாள் விசாலமான கண்கள் கொண்ட மஹாராணி

வருவானோ விஸ்வநாதன் ... தருவானோ முத்திரை சின்னங்கள் ...

தவித்துப்போனாள் தங்க பதுமை

தங்கரதம் பவனி வர தாழம்பூ குடை பிடிக்க ஐம்பூதங்கள் பரியாக தேர் இழுக்க

வந்தான் பரிமேலழகன் ...

நரிகள் பரியாக்கியவன்

இன்று சரியாக வந்தான் வண்ண வண்ண பட்டாடையில் ...
கண்ணை பறிக்கும் நகை அணிந்து

விசாலமான கண்களில் விஸ்வநாதன் அமர்ந்தான் ...

விரிவான கண்கள் சற்றே இமை உதவி நாடியது ...

அந்தரங்கம் புரியவே இமைகள் சற்றே மூட

சரிந்தான் அவள் மடியில் சரித்திரம் எழுதியது ஓர் புதிய இலக்கணம் அன்று

சந்திரன் கொட்டி தீர்த்தான் தன் அமுத கலசத்தை அங்கே !!
ravi said…
*அனுமனை கண்டீரா ?* 🐒

அனுமனை கண்டீரா பரமான் குணவானை கண்டீரா ?

அஞ்சனா புத்திரன் அனுமந்தன் அஞ்ஞானம் தீர்ப்பவன் அனுமந்தன்

பஞ்ச முகன் அனுமந்தன் பஞ்சன பறப்பவன் அனுமந்தன்

பக்தியில் பெரியவன் அனுமந்தன்
பல சக்தி உடையவன் அனுமந்தன்

யுக்தி தெரிந்தவன் அனுமந்தன் முக்தி தருபவன் அனுமந்தன்

தடைகளை தவிர்ப்பவன் அனுமந்தன்
படைக்கு அஞ்சாதவன் அனுமந்தன்

வடமாலை பிரியன் அனுமந்தன் அடையாளம் தந்தவன் அனுமந்தன்

விண்ணில் பறப்பவன் அனுமந்தன்
மண்ணின் மகளை கண்டவன் அனுமந்தன்

தன்னிகரில்லாதவன் அனுமந்தன்
பண்ணில் சிறந்தவன் அனுமந்தன்

சகலமும் அறிந்தவன் அனுமந்தன்
பகலவன் சீடன் அனுமந்தன்

தகவலை அறிவித்தவன் அனுமந்தன்
நகரத்தை அழித்தவன் அனுமந்தன்

ராமாயணம் கண்டவன் அனுமந்தன்
நவ வியாகாரண பண்டிதன் அனுமந்தன்

நவ கோள்களை அடக்கியவன் அனுமந்தன் நவ சக்தியை தருபவன் அனுமந்தன்

ராம ராம ராம ராம ராம ராமராம ராம ராமராம ராம ராம🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
ravi said…
*பிரகதாம்பாள் அல்லது அரை காசு அம்மன்*

மனதிற்கு பிடித்த பொருட்களை அல்லது முக்கியமான பொருட்களை, ஆவணங்களை, நகைகளை தொலைத்து விட்டால் நம் மனது என்ன பாடு படும்?

ஆம்! என்ன அழுது புரண்டாலும், தேடினாலும் கூட சில நேரங்களில் கிடைக்காமல் போய் விடுகிறது.

ஆனால் புதுக்கோட்டை திருகோகர்ணம் அருகே அமைந்துள்ள சக்தி வாய்ந்த அரைக்காசு அம்மன் கோவிலுக்கு சென்று வேண்டி பாருங்களேன்.

நீங்கள் தொலைத்த பொருள் நிச்சயம் உங்கள் கை தேடி வரும்
ravi said…
*பிரகதாம்பாள்*

*திருக்கோகர்ணம் புதுக்கோட்டை*

தேறாத கவி எனினும்

மாறாத காதலால்
திரு முன்பு சாற்றுகின்றேன்

சிந்தை அணு ஒவ்வொன்றும் தேவி உனதே ஆகச்
செய்ய தமிழ் பாடுகின்றேன்

ஆறாத துயருக்கும் அகலாத கவலைக்கும்
யாரை நான் நொந்து கொள்வேன்

அறியாது பிழை செய்து சரியாக வதைபட்ட
அவலத்தை எங்கு சொல்வேன்

நீறாக வேந்ருதர் புரமூன்றும் செற்ற உனை
நெஞ்சாரப் போற்றுகின்றேன்

நெற்றிவிழியால் எனது குற்ற மலை பொடியாக
நின்னருளை வேண்டுகின்றேன்

ஈறேதும் இல்லாத இன்பவடிவாக என்
இதயதள மீதும் ஒளிர்வாய்
இறைவி

எனை ஆண்டருளும் பிரகதாம்பாளே!!

இமயமலை வாழும் உமையே !!
ravi said…
*இன்முக இதழ்கள்*

இளஞ்சிவப்பு மலர் ஒன்று,
இதழ் விரித்துச் சிரிக்குது!

இரு வேறு நிறம் கொண்ட,
இறுமாப்பில் இருக்குது!

இடை அமர்ந்த மகரந்தம்,
இனிக்கும் தேன் சுரக்குது!

இன்முக எழில் கண்டு,
இமை மூட மறுக்குது

இனிதான பசுமைச் சூழ,
இத்தோட்டத்தில் பூத்தது—

இடம் பார்த்துத் தனித்துவமாய்,
இன்பம் வாரி இரைக்குது!

இங்ஙனம் அழகிய இப்பூவை,
இப்பூவையர் நாம் ரசிக்கவே,

இத்தகு துல்லிய படமாய்,
இங்கு ராணி நமக்கு கொடுத்தது!

இத்தனை எழில் கண்டதுமே,
இக்கவிதையும் இங்கு பிறக்குது!

இந்நாளை நன்னாளாக்கிய,
இன்பத்தில் அவளை வாழ்த்துது!
ravi said…
சங்கர சுவனா ... உனை முழுதும் அறிந்தோர் யார் ?

ஸனகாதி முனிவர்களா ? பிரம்மா வா ?
முப்பது முக்கோடி தேவர்களா ? கந்தர்வர்களா ? ரிஷிகளா ? சித்தர்களா ?

நாரதரா ? சரஸ்வதியா ? திருமகளா ?

ஆதிசேஷனா ? கருடனா ? நந்திகேஸ்வரரா ? ஹம்ச பறவைகளா ?

யமனா ? குபேரனா ? திக்பாலர்களா ?

கவிஞர்களா ? வித்வான்களா ? பண்டிதர்களா ?

எவ்வளவுதான் உனை புகழ்ந்தாலும் அது கடலில் ஓர் உத்திரிணி அளவு தான் !!!💐💐💐

இதே மாதிரி அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் 97 வது பாடலில் இப்படி சொல்கிறார்

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,

காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.🙏🙏🙏
ravi said…
Hanuman epitomizes Bhakthi ( devotion) , Shakthi ( strength) , Siddhi ( spiritual power) Buddhi ( intelligence) , noble character ( guna) and unparalleled articulation skills . Simply put , He is the ultimate problem solver . Sri Rama entrusted Him with the vital mission of delivering reassurance to Sita Devi and confronting Ravana in Srilanka . Blessed with Ashta Siddhis ( 8 Super natural powers) Hanuman alone was capable of flying to Lanka and completing this critical task . He was also the first person to proclaim "Sri Ramajayam" a sacred chant invoked in auspicious and challenging times alike!! 🐒
ravi said…
*GLIMPSES FROM BHAGAVATHAM (11):*

*Tatwam (hidden meaning) of the Story of Gokarna:*

At the outset, this anecdote is selected by Vyasacharya to disprove the common belief propagated by the ritualistic Brahmin Priests that Gaya-shardams and tharpanas will solve all the soul-related problems. They propagate that these rituals are capable of providing final relief to the souls. [This belief exists even today and many devout believers travel to Gaya, Benaras, Panchavati or Rameshwaram to do Shrardhams and tharpanams and are being fleeced by the priests in these places.] More importantly, this story emphasizes that: “Mukthi is available for everyone (ghost included) who surrenders to the Lord with a pure and receptive mind through self-cleaning. This cleaning of the internal equipment (antakkarana-shuddhi) can be achieved through serious study of the scriptures, regular chanting of God’s name over long periods, sincerely regretting past mis-deeds (paschaa-taapam) through suffering the consequences thereof and through continuous penance (tapas). Easiest in Kaliyuga is through total bhakthi (devotion) to the Lord resulting in self surrender to Him. In such a carefully prepared mind if the ‘high yielding seed’ of the knowledge of the Lord extracted from the scriptures including the Puranic stories is implanted, the same will flower into self-realisation. Classic example is the robber and murderer called Ratnakar who sincerely repented and meditated on Lord Rama to become the most venerable Valmiki Maharshi. If a murderer (Ratnakar) and a ghost (Dhundhukari) can get rid of ignorance and reach the Lord, it should be much easier for normal humans like us if we work hard for mukthi with shraddha. Further, this story shows that in Kaliyuga continuous listening on a soft stomach to a 7-day exposition of Bhagavatham (Saptaham), followed by deep contemplation on its essence, will give the requisite knowledge which, in a receptive mind, can produce instant results. The breaking of seven joints represents movement of the mind through the 7 upper subtler levels of consciousness and reaching the subtlest universal presence called Pure Existence. This shows the expertise of our ancient masters on the deeper aspects of the mind. Further, there is one more scientific truth that can be extracted from this story. The birth of a human child to a cow shows that our ancient masters had experimented with surrogate wombs (including those of animals) and had successfully produced human off-springs. The inherent risk in such artificial human manipulations is also highlighted by the fact that Gokarna, the child was born with cow’s ears. Suppose he had cow’s head, legs, stomach or other vital organs? It appears that Hanuman was also a product of a fusion of Lord Shiva’s seed preserved in liquid nitrogen (Vaayu) and incubated and nourished in the Surrogate Monkey Womb of Anjana. [With warm regards: R. Hariharan

🪷🪷🪷🪷🪷
ravi said…
Shriram

10th March

*Ideal Behaviour of a Woman in Prapancha*

A housewife who, carefully and lovingly, looks after her husband and family, and is contented at heart, may be considered to have done her duty and also her sadhana. Everybody in the home should feel happy, and keep uttering Nama. This brings happiness, and there Rama resides. There is no better gain than working to keep each other contented and happy.

Whatever God gives should be treated as His, and we should neither claim it as ours, nor feel selfishly attached to it; this, indeed, is walking on the path to God. What distinguishes the devotee from the others, is to be in worldly life and yet feel the urge to utter Rama-nama. Think every now and then of the great saints; this will help purify the heart. Talk not harshly to anyone, particularly to your spouse; keep everybody contented; this is what the good and the devout would deeply appreciate. Everyone should live for the mutual happiness of everyone else in the family; this can be achieved if everyone holds Rama always at the heart; all the worry then becomes His.

Be cautious and vigilant in worldly life, but without becoming attached to or involved in it. It is a universal rule that one should not spend all the earnings but economise and lay something by against a time of need. Do not, however, become stingy, nor a mammon-worshiper. One who enshrines Rama in his heart will be happy in life; this is my assurance and blessing.

Prapancha always presents one cause or another for worry; that worry will, however, cease and give place to joy if one always holds Rama in his heart. Never give up proper effort; the good and the righteous always tell us that if you do your part, God will not fail to give you what is in your best interest, provided you always remember Him in your heart.

I advise you, in your own interest, do not get absorbed in the palpable, tangible world; remember always that our basic object is to attain Rama; indeed, we should live for Him and Him alone. Pay little heed to the world’s respect or disrespect, for both of them strike at the very root of peace and of achievement of God. Keep the mind calm, but discharge your duties as a practical person.

* * * * * * * *

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை