ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 46 (237- 243)


 LT 46

  237- 243

 ஸர்வோத்துங்கா³ ஸங்க³ஹீனா ஸகு³ணா ஸகலேஷ்டதா³

ககாரிணீ காவ்யலோலா காமேஶ்வரமனோஹரா 46

 237 : ஸர்வோத்துங்கா³

எல்லாவற்றிலும் உயர்ந்தவள் . 

238 : ஸங்க³ஹீனா  

அவளே ஆத்மாவாக இருப்பதால் , அவளுக்கு எதிலும் பற்று இருப்பதில்லை . 

239 :  ஸகு³ணா

முக்குணங்களுடன் சிறப்பாக இருப்பவள்  

240 : ஸகலேஷ்டதா³  

விரும்பிய அனைத்தையும் சற்று கூட குறைக்காமல் தருபவள் 

241.ககாரிணீ

------------------------ --------------------

 

பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் பதிமூன்றாவதெழுத்தாகிய ""  எழுத்தாகிய ககார வடிவினள்.

 242 காவ்ய லோலா 

காவியங்களில் ஆனந்தவடிவாய் விளங்குபவள் 

243. காமேஸ்வர மனோஹரா

சிவ காமேஸ்வரரரின் மனதில் நிறைந்தவள் , அதில் அமர்ந்து ஆட்சி செய்பவள்  

 237. Om Sarvothungaayai Namaha

Salutations to the Mother, who is Para Brahma Swaroopini. She who is the greatest of all. Infinite, higher than any thing else, any one else. Devi is the the source of all Gods and the Sages but also their efficient cause, their inner ruler and ordains and is the guide of their intellect etc. She is origin, the Supreme being of all the Worlds, beginingless, source of all, there is no source for her existence because she is unborn and is the Great Goddess of the Universe. 

 238. Om Sanga Heenaayai Namaha

Salutations to the Mother, who has no attachments. All beings dwell in her, yet she does not dwell in any of the beings. Devi contains every thing and yet is not touched by them. Devi has no connection with any object, as She is very subtle, attributeless and formless and so she is unattached. All the beings rest in her without any contact or attachment. They cannot produce any effect on her, as Devi rests in her own pristine Glory. 

239. Om Sagunaayai Namaha

Salutations  to the Mother, who has all the good Qualities and Attributes. She is the Manifestation of Thrimurthies who have Sattva, Rajo and Tamo Gunas.

240. Om Sakaleshtadaayai Namaha

Salutations to the Mother, who grants us the Desires we Pray for. She gives us the required amount and not anything more. Not expecting fruits for our actions is Nishkama karma which leads us to Moksha, and expecting rewards for our actions leads us to to Rebirth. Devi sees to that, from Brahma to the tiniest of Insects, the Desires are fulfilled. 

241. Om Kakaarinyai Namaha

Salutations to the Mother, who is the Manifestation of the Letter Ka. It is in the third part and the Second Letter of the Shakthi koota and the Thirteenth Letter in the Panchadasi Mantra.

242. Om Kaavya Lolaayai Namaha

Salutations to the mother, who loves Poetry. Devi loves Epics, Ramayana written by Valmiki, and Mahabharatha written by Vedavyasa, and the other Ithihasas and epics written by the great Maharshis and Mahaans.

243. Om Kameshwara Manoharaayai Namaha

Salutations to the Mother, who is the Consort Lord of Siva. In the Word Sat Chit Ananda, Sat is Kameshwara, whose mind was stolen by Devi. 

* 237 * Sarvothunga - She who is the greatest among all


* 238 * Sanga hina - She who does not have attachments


* 239 * Saguna - She who has all the good qualities


* 240 * Sakaleshtada - She who gives all that is desired


* 241 * Kakarini - She who sounds like the alphabet “ka”- -it is also the thirteenth letter of the panchadasakshari manthra


* 242 * Kavya lola - She who is mentioned in epics in the form of supreme happiness


* 243 * Kameshwara manohara - She who steals the mind of The god of Kama (The god of love )-i.e. Shiva


Comments

ravi said…
*ஒரு வரி கவிதை (2)*

காதல் தோல்வியில் கடவுளை வேண்டினான் அவன் .

பழைய காதலியை மறக்க வைக்கும் அளவிற்கு ஒரு மணவி வேண்டும் என்றே !!
----
சிட்டுக்குருவி ஒன்று ஜன்னல் ஓரம் கூடு ஒன்று கட்டியது ...

செங்கல் இல்லை சிமிண்ட் இல்லை ...

சித்தமெல்லாம் பிறக்கும் குஞ்சுகள் பறக்கும் வரை வீடு விழக்கூடாது என்றே !
---------
ஓடை ஓரம் காத்திருந்தான் ...
வருவேன் என்றவள் வரவில்லை ...

எதிர்வரும் கூட்டம் அவள் மணக்கோலம் வாழ்த்த சென்று கொண்டிருந்தது ...
-----
டாஸ்மார்க் அருகே விழுந்து கிடந்தான் கணவன் ...

விரல் சிவக்க பாத்திரங்கள் நடுவே பிள்ளை பள்ளிச் செலவை தள்ளி போட்டுக்கொண்டிருந்தாள் மனைவி
------
பச்சைக்கிளி ஒன்று தத்தி தத்தி வந்தே மழலையில் அள்ளி அள்ளித் தெளித்து முத்து முத்தாக வார்த்தைகளை

"நாளை எண்ணி இன்றை ஏன் வீணடைக்கிறாய் ... ?
இன்று வானில் பறக்க சிறகு இருக்கு என்றே எண்ணி எண்ணி வியக்கிறேன் இறைவன் தந்த வரத்தை ... 🦜
ravi said…
*உண்ணாமுலை* / *உண்ணாமலை* / *அபிதகுஜாம்பாள்*

*திரு*
*வண்ணாமலை*

மூவர்க்கும் தேவர்க்கும் யாவர்க்கும் மேலான
முதல்வி முக்கண்ணி நீ யன்றோ ...!!

முக்கனிச்சுவையும் உன் நாமம் அன்றோ !!

முறையாகத் தொழுவோர்க்குத் துணையாகி வழிகாட்டும்
முத்தமிழ்ச்செல்வி நீயன்றோ !!

நாவுக்கும் நெஞ்சுக்கும் நலம்தந்து இனிக்கின்ற
நாதாந்த சக்தி நீயன்றோ!!

நான் என்றும் எனதென்றும் நலியாத நிலைசேர்க்கும்
ஞானப் பூங்கோதை நீயன்றோ!!

பாவுக்கும் பூவுக்கும் பாதம் பெயர்த்தருளும்
பாண்டிமாதேவி நீயன்றோ!!

பணிவார்த்தம் துயரோடு பிணியாவும் பொடியாக்கும்
பரமகல்யாணி நீயன்றோ!!

ஏவல் கொண்டு லகுவாய் பல காவல் செய்யும் அன்னை நீ யன்றோ!!

நின்
இணையடிகள் ஈடு இணை கண்டதுண்டோ ??

கஸ்தூரி குங்குமம் தஞ்சம் என வந்தடைந்தது உன்னிடமோ ?

காமனை எரித்த சிவனும் உயிர்பித்த *சிவா* வும் பாதி பாதியாக ஆனபின்

மீதி மீதி கவலைகள் மிதிபட்டே போகாதோ !?💐💐💐
ravi said…
*மயிலையில் ஓர் கயிலை*

*கற்பகாம்பாள்*

நோக்கும் திசைதோறும் நூபுரத்தாள்களும்

நூல் போல் ஒசிந்த இடையும்

நொடி தோறும் புதிதான எழில் கொள்ளும்
நுவலரி யதிரு மேனியும்

வார்க்குங் குமக்கச்சு மார்பும்

அம்மார்பினில்
வாடாதமலர் மாலையும்

வயிரமொடு நவமணி வயங்குமங் கல நாணும்

மணம் வீசும் இனிய பொலிவும்
காக்கும் கரங்களும்

அங்குசம் பாசம்
கரும்பு வில் மலர்கள் ஐந்தும்

கனிவாயில் மூரலும்

கருணை பொழி விழிகளும்

கனகமணி ஒளிரு முடியும்

ஈர்க்கும் சுடர்முகமும்

இருவிழி களிப்பையாம்

எங்கெங்கும் காண அருள்வாய்

மயூரம் ஆட மயூரீ பாட

கற்பக மரம் ஒன்று மயிலையில் முளைத்ததே ...

இந்திரனும் சந்திரனும் ஏங்க ஊர்வசியும் மேனகையும் பொரும

உன் எழில் கண்டு உளம் குளிர்ந்தோம் ...

உன் அருள் கண்டு மெய் சிலிர்த்தோம்.. உன் கழல் கண்டு சரண் புகுந்தோம் . 👣
ravi said…
சிறப்பு🙏

(இன்னும் சில நிமிடங்களில் இந்த பதிவு லட்சம் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்வதை மகிழ்வுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்.

ஹரி ஓம் சிவ சிவ🙏
ravi said…
நன்றி சார் ... நிறைய எழுதுகிறேன் அதில் ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் எல்லோருக்கும் நலம் தரும் என்றால் அது நான் செய்த பெரும் பாக்கியம்
ravi said…
*Jagathaam upagaragam* ( ஜகதாம் உபகாரகம் )

தேவீ மஹாத்மியத்தில் 11வது அத்தியாயத்தில் நாராயணீ ஸ்துதியில் 37 வது ஸ்லோகம்

வரதா³ஹம் ஸுரக³ணா பரம் யன்மனஸேச்சத।²
தம் வ்ருணுத்⁴வம் ப்ரயச்சா²மி *ஜக³தாமுபகாரகம்॥* 37॥

என்று தேவி சொல்வது போல் ஓர் ஸ்லோகம் ...

நீங்கள் கேட்டதை தருவேன்

ஆனால் கேட்கும் வரங்கள் உலக க்ஷேமத்திற்காக இருக்க வேண்டும் என்று சொல்கிறாள் ...

உங்களுக்காக எதையும் வேண்டி கேட்காதீர்கள்

உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள் ...

அந்த உயிர்களில் நீங்களும் உங்கள் குடும்பமும் அடங்கி உள்ளது 👍
ravi said…
*காளிகாம்பாள்* ...
*சென்னை*💐

யாதுமாய் நின்றாய் அம்மா ...

ஸ்ரீ வித்யா பாதுமாம் என்றே ஊர் சொல்லக் கேட்டேன்

ஏதுமாய் இல்லாதிருப்பாய்

தோடுமாய் காதுகள் நவரத்தினம் ஜொலிக்கக் கண்டேன்

பாடுமாய் எனை படைத்தே

தேடுமாய் ஆசைகளை ஏன் தந்தாய் ...

காயுமாய் இருக்கும் ஆசைகள் கனியுமாய் ஏன் செய்தாய் .... ?

வாயுமாய் வயிறுமாய் தாயுமாய் ஆன பெண்கள் சேயுமாய் தேயுமாய் ஏன் விம்மி அழச் செய்தாய் ...

நாயுமாய் ஆனா என்னிடமும் கற்பகமாய் வந்தாயே ...

மீண்டும் ஓர் தாய் வயிற்றில் சேயுமாய் பிறக்க வேண்டேன் ....

வானமாய் பூமியாய் பஞ்ச பூதங்களாய் உமையாய் ஆனவளே ...

ஜகம் உள்ளோர் உன் அருள் பெற அடியவனாய் வேண்டுகிறேன் ..

அருள் மழையாய் வருவாய் ...

பூமியில் தழைக்கும் கற்பகமே !!
ravi said…
ஆறு மனமே ஆறு

ஆறு மனமே ஆறு
ஆறுதலை தருபவன் யாரு ?

சேர்ந்து வாழும் மனிதர்நடுவே சேறு இறைத்தது யாரு ?

ஒன்றே சொல்வார் அதையும் செய்யார் உள்ளத்தில் உள்ளது வீழ்ச்சி

ஆட்சியில் கொஞ்சம் மாட்சியில் கொஞ்சம் பெருவதெல்லாம் கள்ள ஓட்டு

சொல்லுக்கு செய்கை செய்யாமல்

பிறர் வாழ்வில் இன்பம் காணாமல் வாழும் வாழ்க்கை இரண்டாகும்

உண்மையை சொல்லி நன்மையை செய்ய எந்த ஆளும் இல்லை இங்கே !!

அடிப்பதெல்லாம் கொள்ளை என்றால் சுருட்டுவதெல்லாம் பிறர் வேர்வை என்றால்

பிற உயிர்கள் உன்னை வெறுக்கும்

சேர்த்தது போதும் என்றிருந்தால் போகும் இடம் பொன்னாகும் ...

சேர்த்த பொருளை இல்லார்க்குத் தந்தால் இமயம் உன் பாதம் தனை தொட வரும் ....

கஞ்சா ,போதை கருப்புப்பணம் வாழ்க்கை தனை அழிக்கும் ...

மிச்சம் மீதி உள்ள மானம் தெருவில் புரண்டு சிரிக்கும்

இச்சம் கொண்டு கஞ்சம் கொஞ்சும் வஞ்சம் அழிக்கும் மாரி அவளை நினைத்துவிட்டால்

வாரி அணைத்துக்
கொள்ளும் வல்லமை யாவும்

வரவில் இல்லை செலவு இனியே
ravi said…
*ஸ்ரீ* *ப்ரம்மராம்பிகை*

*ஸ்ரீ சைலம்* 💐💐💐

தேனீக்கள் சொரியும் தேன் மழைகள், தெப்பக்குளம் ஆனதோ ?..

அன்னம் நாணும் நடை கொண்டவளே !

தேன் அடைகள் உன் வீட்டின் மதிர்சுவர் ஆனதோ ? ...

சுவைத்தேன் உன் நாமங்கள் ...

உன் சுவை கொண்ட நாமங்கள் தெப்பக்குளத் தேனையும் கொஞ்சம் கசக்க வைத்ததம்மா !!

அலைந்தேன் உனைத் தேடி அங்கும் இங்கும் ...

தொலைத்தேன் என் அகங்காரம் தனை

உடன் மலைத்தேன் எதிர் நின்ற உன் வடிவம் கண்டே !!

நினைத்தேன் உனை என் நெஞ்சில்

தெளிந்தேன் இங்கே நான் பெற்றதெல்லாம் நீ தந்த வரம் என்று !!💐💐💐
ravi said…
*அம்மா*💐💐💐

உன் பாதம் அழகு அதில் மலரும் கமலங்கள் அழகு !!

உன் இடை அழகு அதைத் தேட முயன்றோர் தோல்வி காண்பதும் அழகு ... !!

இடை இல்லா மேனிதனில் அணியும் ஒட்டியாணம் தடை காணுமோ ... ?

அழகு சிந்த நாணுமோ ?

நடக்கும் நடை அழகு அங்கே அன்னங்கள் புற முதுகு காட்டி ஓடுவதும் அழகு !!

மார்பில் தவழும் மணி அழகு !!

அங்கே கொஞ்சி விளையாடும் மாதவன் அழகு ...!!

அவன் கட்டிய மாங்கல்யம் அழகு ...!!

வாழைத்தண்டு என வான் நோக்கி நிமிர்ந்து நிற்கும் கழுத்து அழகு ... !!

பவழம் உறங்கும் இதழ்கள் அழகு ...

கோமேதகம் என மின்னும் கன்னங்கள் அழகு ... !!

ஸ்ரீ சக்ரமாய் ஜொலிக்கும் தாடகங்கள் அழகு !!

அவை போக்கும் தடங்கல்கள் அழகு ... !!

மீனும் மானும் மேயும் கண்கள் அழகு .. !!

புல் என வளைந்து செல்லும் புருவங்கள் அழகு... !!

நெற்றி அழகு ... அதில் ஆடி ஓடும் கஸ்தூரி அழகு.... !!

காஷ்மீர் குங்குமம் அழகு ...

அதில் சேரும் பச்சைக்கர்ப்பூரம் அழகு .... !!

எல்லாமே அழகு எனினும்

உன் கண்கள் தேக்கும் காரூண்யம் அழகுக்கு எல்லாம் அன்னை ஆகி கிரீடம் வைத்ததே அம்மா !!🪷🪷🪷🦅🦅
ravi said…
சங்கர சுவனனே ! ராம தூனாக இலங்கை சென்றாய் ...

மாதா சீதையின் அருளால் ராம தாசன் ஆனாய் ...

உனக்கு இணையாக பலம் கொண்டவர் என்று ஒருவரும் இல்லை ...

அஞ்சனியின் மைந்தனே!

( அஞ்சனா ஓர் கந்தர்வ பெண் ... ஒரு ரிஷிக்கு உதவி செய்யும் நேரத்தில்

ஒரு குரங்கு போல் தாவி குதித்து சேவை செய்ததால் சாபம் பெற்று ஒரு குரங்காக பிறந்தாள் ...

ஒரு உத்தமனை பெற்றதால் அவள் புகழ் எங்கும் பரவியது ...

திருப்பதியில் உள்ள 7 மலைகளில் ஒரு மலையின் பெயர் அஞ்சனா )

வாயுவின் புத்திரனே !!

உனை போற்ற வார்த்தை இனி பிறக்க வேண்டும் . உனக்கு வெற்றி வெற்றி !!💐💐💐
ravi said…
*மாங்காடு காமாக்ஷி*

அம்மா மாதவம் செய்தவள் நீ

மாதவன் தங்கை நீ

ஆதவம் ( கண்ணன்) கண்ட அருமை நீ

யோகத்தின் நித்திரை நீ

போகத்தின் முத்திரை நீ

யாகத்தின் சித்திரை நீ

காணும் பொருள்களில் கரும்பின் சுவை கண்டோம் ...

எறும்பின் ஆத்மாவும் நீ

பிளிரும் களிரின் நம்பிக்கையும் நீ

கபீகளின் ஆட்டமும் நீ

காற்றில் பறக்கும் பறவைகளின் சிறகும் நீ

காத்திருப்பேன் உனை காண்பேன் ..ஓர் நாள் என்றே

எனை தினம் காணும் நீ உனை ஓர் நிமிடம் காட்ட மாட்டாயோ அம்மா ?💐💐💐
ravi said…
மாங்காடு காமாக்ஷி

பூமியில் தவமிருந்து பூஜை பெற்றாய்,
புரிந்துணர்ந்து போற்றிடும் தேவி நீயே

சுந்தரத்தின் மகுடமாய் சிறந்தவளே,
சுகத்தின் தேனீயாய் நிறைந்தவளே

கண்ணனது கனவிலும் தோன்றியவள்,
கலையெனும் வடிவிலே வாழ்ந்தவள்

அருளொளி வீசும் ஆனந்த மூர்த்தி,
அகிலத்தில் எல்லாம் அணைந்தவளே

கடலில் வீசும் அலையின் ஓசை,
கவிதையாகும் உன் திருநாமம்

நித்தமும் வந்து நேசம் காட்டி,
நெஞ்சை நீங்கி போகாதவளே

உன் திருவடி காண ஆசை கொள்கிறேன்,
ஓர்நாள் எனை அருகே அழைக்குவாய் அம்மா
ravi said…
*அம்மா*💐💐💐

உன் பாதம் அழகு அதில் மலரும் கமலங்கள் அழகு !!

உன் இடை அழகு அதைத் தேட முயன்றோர் தோல்வி காண்பதும் அழகு ... !!

இடை இல்லா மேனிதனில் அணியும் ஒட்டியாணம் தடை காணுமோ ... ?

அழகு சிந்த நாணுமோ ?

நடக்கும் நடை அழகு அங்கே அன்னங்கள் புற முதுகு காட்டி ஓடுவதும் அழகு !!

மார்பில் தவழும் மணி அழகு !!

அங்கே கொஞ்சி விளையாடும் மாதவன் அழகு ...!!

அவன் கட்டிய மாங்கல்யம் அழகு ...!!

வாழைத்தண்டு என வான் நோக்கி நிமிர்ந்து நிற்கும் கழுத்து அழகு ... !!

பவழம் உறங்கும் இதழ்கள் அழகு ...

கோமேதகம் என மின்னும் கன்னங்கள் அழகு ... !!

ஸ்ரீ சக்ரமாய் ஜொலிக்கும் தாடகங்கள் அழகு !!

அவை போக்கும் தடங்கல்கள் அழகு ... !!

மீனும் மானும் மேயும் கண்கள் அழகு .. !!

புல் என வளைந்து செல்லும் புருவங்கள் அழகு... !!

நெற்றி அழகு ... அதில் ஆடி ஓடும் கஸ்தூரி அழகு.... !!

காஷ்மீர் குங்குமம் அழகு ...

அதில் சேரும் பச்சைக்கர்ப்பூரம் அழகு .... !!

எல்லாமே அழகு எனினும்

உன் கண்கள் தேக்கும் காரூண்யம் அழகுக்கு எல்லாம் அன்னை ஆகி கிரீடம் வைத்ததே அம்மா !!🪷🪷🪷🦅🦅
ravi said…
*தூக்கு மேடையில் கடைசி தருணம் ... உயிர் காத்த முருகன் ...* 🐓🦚

பாடல் பாடியவர்

ஆர்மோனியம் *காதர் பாட்சா ...*
இஸ்லாமியர்

பாடலை கேட்டுக்
கொண்டிருந்தவர்கள் கிறிஸ்டியர்கள் (அங்கிலேயர்கள்)

பாடல் மொழி ... *தமிழ்*

பாடப்பட்ட கடவுள் .. *சீலை மலை முருகன்*

மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்

தூக்கு மேடையில் ஒரு காவடிச் சிந்து:

"ஆர்மோனியம்" காதர் பாட்சா என்ற ஓர் இசைக் கலைஞர். இசுலாமியர் தான்.

ஆனாலும், கழுகுமலை முருகன் மீது ரொம்ப ஈடுபாடு.

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துப் பாடல்களில் ஈர்ப்பு.

காதர் பாட்சா = காவடிச் சிந்து பாட்சா ஆகிவிட்டார்:)

ஆனா, ஏதோவொரு வழக்கில் பாவம் சிக்கிக்கிட்டாரு.

அப்பாவிக்குத் தூக்குத் தண்டனை. "உன் கடைசி விருப்பம் என்ன?" - தூக்கு மேடையில் அதிகாரி கேட்ட போது, "காவடிச் சிந்தை என் ஆர்மோனியத்தில் கொஞ்ச நேரம் ஆசை தீரப் பாடணும்" என்றார் பாட்சா.

சுருளிமலை மீதில் மேவும்சீலா - உனைத்
தோத்தரித்தேன் சுப்ர மண்யவேலா -

பசுந்
தோகைமயில் - மீதில் ஏறி
வாகுடனே - காத்(து) அருளும்
துய்யா முரு கைய்யா!

பலரும் கேட்டார்கள், மனம் மயக்கும் தமிழிசையை ஆன்மீகம் கலந்த குரலில்

ஒரு வாத்தியமும் இல்லாமல், தானாவே இசை கூட்டும் சந்தம்!

நேரம் கடந்து போனதே தெரியாமல், அதிகாரிகள் ரசித்துக் கொண்டிருக்க..

முடிவில் தூக்கு மேடை ஏறினார் காதர் பாட்சா!

ஆனால், உடன் இருந்த வழக்கறிஞர், ஒரு புதுப் பிரச்சனையைக் கிளப்பினார்.

"மாலை சரியாக 6:00 மணிக்குக், காதர் பாட்சாவை, உயிர் பிரியும் வரை, தூக்கில் தொங்க விடுங்கள்" - இதுவே நீதிபதியின் தீர்ப்பு.

ஆனால் காலம் கடந்து விட்டது.

6:45; "தண்டனை உரிய காலத்தில் நிறைவேற்றப்படாததால், ஒன்று ரத்து செய்ய வேண்டும், இல்லை அப்பீல் செய்ய வேண்டும்" - விதிகளைச் சுட்டிக் காட்ட...

அன்று தலை தப்பிய பாட்சா, பின்பு நீதிமன்றத்திலும் தலை தப்பினார்
நீதிபதியும் முருகன் பாடலில் சொக்கிப்
போனதால் ...

இவ்வளவு உருக்கமாக பாடிய இவர் கண்டிப்பாக ஓர் கொலையை செய்திருக்க முடியாது என்று தீர்ப்பு கொடுத்தார்

என் "தலை" வைத்து, உன் இணையடி காக்க!

என் உயிருக்கு உயிராம், இறைவன் காக்க!
ravi said…
அருமையான பதிவு .. பகிர்வு ...
........................................................
தாயே உன் கருணை....

" எங்கம்மா உங்க ஆத்துக்காரர் இன்னும் வரலையா ? " ராஜேஷ் கேலியாக கேட்டான்.

" ஏண்டா உங்காத்துக்காரர்னு சொல்ற தோப்பனாரை இப்படி எல்லாம் சொல்லலாமா? அவர் மேல நோக்கு அப்படி என்னடா கோபம்?"என்றாள் தங்கம்.

" கோபமா...செம கடுப்புல இருக்கேன்.. மூணு தலைமுறையா அம்பாளுக்கு சேவை பண்ணுற குடும்பம்னு சொல்லியே என்னை வேதம் படிக்க வைச்சாரு.."

" இப்ப என்னடா குறைஞ்சு போயிட்ட ..அருமையா வேதம் கத்துண்டு அழகா மந்திரம் சொல்ற.. இயற்கையாகவே நம்ம குடும்பத்து ஆச்சாரம், பயபக்தி, உன்கிட்ட ரொம்ப இருக்கு ஏன் மனசு அல்லாடுற "

" அம்மா நேக்கு உங்கள மாதிரி குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டிண்டு காலம் கழிக்க முடியாது . என் வயசு பையன்களை பாருங்க ,அழகா படிச்சு முடிச்சு வெளியில வேலை பாக்குறா.."

" நோக்கு என்னடா.. கற்பூர புத்தி... பி. காம் படிச்சு முடிச்சுட்டே.. நம்ம ஆத்துல முதல் பட்டதாரி.. அம்பாள் கருணையால நோக்கு நல்ல வேலை கிடைக்கும்.."

" அம்பாள விடு.. முயற்சி என்னோடது.. உங்க பேச்சைக் கேட்டா உண்டக்கட்டியும், புளியோதரையும், தின்னுட்டு உள்ளூர் கோயில்ல மணியடிச்சுண்டு காலம் கழிக்க வேண்டியது தான். நான் வெளியூர் போகப் போறேன். நீங்களே இந்த பொன்னாக்குடி கிராமத்த கட்டிண்டு அழுங்க" என்றான் எரிச்சலோடு .

ravi said…
அருமையான பதிவு .. பகிர்வு ...
........................................................
தாயே உன் கருணை....

" எங்கம்மா உங்க ஆத்துக்காரர் இன்னும் வரலையா ? " ராஜேஷ் கேலியாக கேட்டான்.

" ஏண்டா உங்காத்துக்காரர்னு சொல்ற தோப்பனாரை இப்படி எல்லாம் சொல்லலாமா? அவர் மேல நோக்கு அப்படி என்னடா கோபம்?"என்றாள் தங்கம்.

" கோபமா...செம கடுப்புல இருக்கேன்.. மூணு தலைமுறையா அம்பாளுக்கு சேவை பண்ணுற குடும்பம்னு சொல்லியே என்னை வேதம் படிக்க வைச்சாரு.."

" இப்ப என்னடா குறைஞ்சு போயிட்ட ..அருமையா வேதம் கத்துண்டு அழகா மந்திரம் சொல்ற.. இயற்கையாகவே நம்ம குடும்பத்து ஆச்சாரம், பயபக்தி, உன்கிட்ட ரொம்ப இருக்கு ஏன் மனசு அல்லாடுற "

" அம்மா நேக்கு உங்கள மாதிரி குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டிண்டு காலம் கழிக்க முடியாது . என் வயசு பையன்களை பாருங்க ,அழகா படிச்சு முடிச்சு வெளியில வேலை பாக்குறா.."

" நோக்கு என்னடா.. கற்பூர புத்தி... பி. காம் படிச்சு முடிச்சுட்டே.. நம்ம ஆத்துல முதல் பட்டதாரி.. அம்பாள் கருணையால நோக்கு நல்ல வேலை கிடைக்கும்.."

" அம்பாள விடு.. முயற்சி என்னோடது.. உங்க பேச்சைக் கேட்டா உண்டக்கட்டியும், புளியோதரையும், தின்னுட்டு உள்ளூர் கோயில்ல மணியடிச்சுண்டு காலம் கழிக்க வேண்டியது தான். நான் வெளியூர் போகப் போறேன். நீங்களே இந்த பொன்னாக்குடி கிராமத்த கட்டிண்டு அழுங்க" என்றான் எரிச்சலோடு .

ravi said…
மனம் வலித்தது.." தாயே கற்பகாம்பா.. நீதான் இவனத் திருத்தனும். நோக்கு சேவ பண்ற பாக்கியத்த பாரமா நினைக்கிறான் " கண்களில் கண்ணீர் வடிந்தது. அவன் விரும்பும் வாழ்க்கை, இந்த கிராமத்தில் இல்லை என்பது மட்டும் அவளுக்கு நன்றாக புரிந்தது.

திறந்திருந்த ஏகாம்பரேஸ்வரர் உடனுறை கற்பகாம்பாள் திருக்கோவிலின் நடையில் கணேச ஐயர் உட்கார்ந்திருந்தார். அங்கு வந்த அவருடைய நண்பர் குருமூர்த்தி ...

"கணேசா! என்னப்பா நேரமாச்சு இன்னும் கோயில் நடை சாத்தலையா?"

" குரு நோக்குத் தெரியாதா? இன்னைக்கு வெள்ளிக்கிழம வேல முடிச்சு போறவா, ' போறச்ச கோயில் நட தொறந்திருந்தா அம்பாள சேவிச்சிண்டு போயிடலாமே'ன்னு நினைப்பா..அதான் செத்த நேரம் கூட கோயில தொறந்து வச்சிருக்கேன் "

"உன்ன மாத்த முடியாது கணேசா! நாட்டுல மழை பெய்யுதுன்னா உன்னப் போல ஆளால தான்.." சிரித்தார் குருமூர்த்தி.

பொன்னாக்குடி சிறிய கிராமமாக இருந்தாலும், கற்பகாம்பிகை கோயில் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்றது. இங்கு வரும் பெண்களுக்கு திருமணம் நடந்து விடும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருவதால், வெள்ளி, செவ்வாயில் கூட்டம் அதிகமாக வரும். கணேச ஐயரின் குடும்பம் தான் மூன்று தலைமுறையாக சேவை செய்து வருகிறார்கள்.

" என்ன கணேசா! ராஜேஷை பாத்தேன்.. ஏன் சோர்வா தெரியறான்."

"அவனுக்கு இங்க இருக்கப் பிடிக்கல குரு.. சின்ன வயசுல என் பேச்சக் கேட்டான். வேதம் படிச்சான். புத்திசாலிப் பையன். காலேஜ்ல மெடல் வாங்கினான். சரஸ்வதி கடாட்சம் நிறைய இருக்கு. ஆனால் அவன் லட்சுமி கடாட்சத்தை எதிர்பார்க்கிறான். ஆத்தா கைங்கரியத்தை விட்டுட்டு வெளியூர் போக நினைக்கிறான். நேக்கு பிறகு என் புத்திரன் அம்பாள் சேவைக்கு வரணும்னு ஆச .."

"
ravi said…
கணேசா நீ சொல்றது சரி! உன் மகன் விருப்பம் இல்லாம
நீ நினைக்கிறத அவன் செய்யனும்னு நினைக்கிறது எப்படிப்பா சரியாகும்? அவன் ஒன்னும் தப்பான வழியில போகலையே! உழைச்சு சம்பாதிச்சு வசதியா வாழனும்னு நினைக்கிறான். அதுல தப்பில்லையே.."

" சரி விடு குரு! ஆத்தா என்ன நினைக்கிறாளோ அதுபடி நடக்கட்டும்.." என்றவர் கோயிலை பூட்டி சாவியை இடுப்பில் சொருகியபடி நண்பனுடன் வீடு நோக்கி நடந்தார்.

மறுநாள் காலை அருகில் வந்து நின்ற மகனை ஏறிட்டவர்

" என்னப்பா ராசு..ஏதாச்சும் வேணுமா? "

" அப்பா நேக்கு சென்னையில ஒரு நல்ல கம்பெனில வேலைக்கு கால் பார் பண்ணியிருக்கா. இன்டர்வியூ கார்டு வந்திருக்கு.. நாளைக்கு சென்னை போகனும் ..போக வர்ற செலவ கிளைம் பண்ணிக்கலாம்.."

" சரி போயிட்டு வாப்பா! " என்றவர் பரிஸிலிருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

இரவு கிளம்பும்போது ராஜேஷ் விபூதி பூசி ஆசிர்வாதம் பண்ணிய அம்மாவிடம் , "என்னம்மா உங்க ஆத்துக்காரர் சைலன்ட் ஆயிட்டார். வழக்கமான அர்ச்சனையக் காணும்?" என்றான் கிண்டலாக. அவன் கிளம்பும் நேரம் என்பதால் தங்கம் பதில் பேசாமல் புன்னகைத்தாள்.

சென்னையை அடைந்தவன், குளித்து முடித்து, இன்டர்வியூக்கு ரெடியானான். பர்ஸில் இருந்த கற்பகாம்பாவின் படத்தை எடுத்து கும்பிட்டு " தாயே நல்ல வழி காட்டு..இந்த வேலை கிடைக்கட்டும் " என்று வேண்டிக் கொண்டான்.

10 மணிக்கெல்லாம் அலுவலகத்தை அடைந்தபோது அங்கு கூடி இருந்த கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியானான். ஒரு வேலைக்கு 2000 பேரா?.. நம்பிக்கை தளர்ந்தது ..

ravi said…
இன்டர்வியூ ரெண்டு நிலைகளை கடந்த பின்...

" சார் உங்க பேர் தானே ராஜேஷ்? உங்களை எம்.டி .பார்க்க விரும்புகிறார்" என்று கூப்பிட்டார் ஒருவர்.

அவனை வரவேற்ற எம்.டி." மிஸ்டர் ராஜேஷ் உக்காருங்க.. ரெண்டு லெவலை தாண்டியதுக்கு வாழ்த்துக்கள்.. உங்கள் ரெஸ்யூமை பார்த்தேன். ஊர் பொன்னாக்குடி.. அப்பா கணேச ஐயர் என்று போட்டிருந்தது.. 'கற்பகாம்பாள் கோயில்' பேமஸ் ஊரு தானே?"

" ஆமாம் சார் கணேச ஐயர் தான் என் தோப்பனார். நான் அவர் ஒரே பையன் .."

"உங்கப்பா மாதிரி கோயில் பூஜையில விருப்பம் இல்லையா"

துணிவை வரவழைத்துக் கொண்ட ராஜேஷ் எம்.டி.ஐ பார்த்து,

"சார் நானும் வேதம் படிச்சிக்கிறேன்..கோயில் கைங்கரியம் அப்பா கூட பண்ணுவேன் ..ஆனா என்னுடைய விருப்பம் வேற...வெளியில வேலை பார்க்கணும்னு இருக்கு "

இடைமறித்த எம் .டி . " உங்களுடைய ரெஸ்யூமை பார்த்தேன்..நீங்க ரெண்டு லெவல் தாண்டுற வரை காத்திருந்தேன் .உங்களுக்கு இந்த ஆபீஸ்ல வேலை இல்லைன்னு சொன்னா வருத்தப்படுவீங்களா மிஸ்டர் . ராஜேஷ்?"

உண்மையிலேயே அதிர்ச்சியில் மனம் உடைத்து போனான் ராஜேஷ்.

" மிஸ்டர் ராஜேஷ்! உங்களுக்கு ஒரு சம்பவத்தை சொல்லி ஆகனும் . ஐந்து வருடங்களுக்கு முன்பு, என் மகள் திருமணம் தள்ளிப் போகிறது என்று கவலைபட்டுக் கொண்டிருந்தோம். என் மனைவி உங்கள் ஊர் கோவிலைப் பற்றி கேள்விப்பட்டு பொன்னாக்குடி கிராமத்துக்கு வரணும்னு அடம் பிடிச்சா.

அர்ச்சனை கூடை...பூ மாலை சாமான்களுடன் கோயிலுக்கு வந்தோம். பிரார்த்தனை முடிச்சு அர்ச்சனை செய்தோம். அர்ச்சனை செய்யும்போது, உங்கள் தந்தை அர்ச்சனை தட்டில் இருந்த எதையோ மாற்றி வைப்பதைப் பார்த்தேன். என் மனைவி பிரகாரம் சுற்றப் போயிருந்த போது, உங்கள் தந்தையிடம் கேட்டு கோபப்பட்டேன். அதற்கு உங்கள் தந்தை கூறிய பதில் என்னை திகைக்க வைத்தது..

' ஐயா! நீங்கள் கொண்டு வந்த தட்டில் இருந்த தேங்காய் அழுகியிருந்தது . தெரிஞ்சா அம்மா வருத்தப் படுவாங்களேன்னு அதை எடுத்துட்டு நல்ல தேங்காயை வைத்தேன். உங்களுக்குன்னு இல்லை யாருக்கு தேங்காய் அழுகியிருந்தாலும் அதை மாத்திடுவேன். இது தவறாத் தெரியல. நம்பிக்கையோடு கோயிலுக்கு வர்றவங்களுக்கு சகுன தடையா ஒரு காரியம் நடந்தா வருத்தம் வரும். மன சஞ்சலத்தோடு போவாங்க .அதைவிட நல்ல தேங்காயை வைச்சிட்டு அவங்களுக்காக நான் தாய் கிட்ட தனியாக வேண்டிக்குவேன்" என்றார்,

பிறருடைய உணர்வுகளுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கும் ஒரு உத்தமரை தான் பார்த்ததில்லை. வரும் வழியெல்லாம் கார் டிரைவரும் அவரைப் பற்றி உயர்வாக பேசிக் கொண்டே வந்தான். அப்பேற்பட்ட நல்லவரின் மகன் நீங்க.. அதான் உங்களுக்கு இங்க வேலையில்லைன்னு சொன்னேன். வேலை இங்கே இல்லைன்னு தான் சொன்னேனே தவிர, வேலையே இல்லைன்னு சொல்லலை..

ravi said…
லண்டனில் நானும், என் தமிழ் நண்பர்களும், சேர்ந்து ஒரு லட்சுமி நரசிம்மர் கோயிலை கட்டியிருக்கோம். அங்கு அம்மனுக்கு பூஜை செய்ய, நல்ல ஆளை தேடிக் கொண்டிருந்தோம்.. நீங்க வேதம் படிச்சிருக்கீங்க.. கிராஜுவேஷன் பண்ணியிருக்கீங்க..... நான் ரொம்ப மரியாதை வைத்திருக்கும் கணேச ஐயரின் மகன் நீங்க, அந்த ஒரு தகுதி போதும். இந்திய ரூபாயில் இரண்டு லட்சம் சம்பளம். இது அம்பாளுக்கு பூஜை செய்ய..

மேலும் நீங்க விருப்பப்பட்டால் எங்க லண்டன் ஆபீஸில் அக்கவுண்ட் செக்ஷனில் பார்ட் டைம் வேலை பார்க்க ஏற்பாடு பண்றேன். தங்குமிடம், சாப்பாடு, நாங்கள் ஏற்பாடு பண்ணிடுவோம். மூன்று வருட காண்ட்ராக்ட்... போறீங்களா? " என்றார். நடந்ததை நம்ப முடியாத அதிர்ச்சியில் தலையசைத்தான் ராஜேஷ் .

ஊர் திரும்பியவன், அப்பாவின் காலில் விழுந்து கதறினான்.

" அப்பா என்னை மன்னிச்சிடுங்க! உங்க உயர்வான குணத்தை மதிக்காம.. கோயில் கைங்கரியத்த...நம்ம குலத் தொழில... மரியாத குறைவா பேசியிருக்கேன். அந்த அம்பாளின் ஆசீர்வாதமும், உங்களின் உன்னத குணமும், நான் நம்பவே முடியாத அதிர்ஷ்டத்தை ...நான் விரும்பிய வாழ்க்கைய எனக்குப் பெற்றுத் தந்திருக்குது.." என்று நடந்ததைக் கூறினான்.

கணேச ஐயர் கோயிலை நோக்கி கை கூப்பினார்...

" தாயே உன் கருணையே கருணை. அவன் விருப்பப்பட்ட வாழ்க்கையையும் கொடுத்து, அவன் தெய்வ கைங்கரியம் செய்யும் என் விருப்பத்தையும் நிறைவேத்தியிருக்க...இதுக்கு தான் என்ன கைமாறு செய்வேன்?" என்றவர் கண்களில் கண்ணீர் வடித்தது .

*அவரவர்கள் குலத் தொழிலை மறக்க் கூடாது.🙏🙏🙏🙏🙏🙏🙏🤞🏽🤞🏽🤞🏽👌🏼 இறைவனிடம் மாறாத பக்தி கொண்டு கடமைகளைச் செய்துவந்நதால் நல்லதே நடக்கும்.** *இறைவன் இந்த உலகில் ஒவ்வொருவரையும்ஒரு காரண காரியத்திற்காகப் படைக்கிறான்.* *அவனுடயை கணக்கு வெறும் ஏட்டுக் கணக்கல்ல மிகவும் துல்யமானது. அது வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் நடந்தே தீரும்.*

அதற்கு இந்தக் கதை ஓர் எடுத்துக் காட்டு.🙏🙏படித்து பிடித்தது.பெரியவா பாதசரணம்
ravi said…
*To Recover the lost one - Chant கண்ணி நுண் சிறுத்தாம்பு*👇🏻

Real incident - A l miracle happened today, and I just have to share this!

A friend of mine had misplaced one of his house keys before leaving for a trip.

When he returned, he searched every nook and corner of his home—turning things upside down—but the key was nowhere to be found.

With a heavy heart, convinced that he had lost it forever, he reached out to me, hoping he might have given it to me at some point.

That’s when something clicked in my mind! I remembered what my Guru, (Sri. U. Ve. Anantha Padma nabhachariar APN Swami) had mentioned during a kalakshepam—a powerful lesson from our scriptures.

He often spoke about how we owe eternal gratitude to Srimad Nathamuni, who retrieved the lost 4000 Divya Prabandhams for us.

At one point in history, only 10 pasurams (hymns) remained. These verses hinted that they were just a fraction of a larger collection (1000 verses) composed by Nammazhwar, who resided in Azhwar thirunagar.

Desperate to recover the lost works, Nathamuni traveled to Azhwarthirunagar, but no one knew of the remaining verses.

Instead, he was advised to chant Kanninun Siruthambu, a prabandham composed by Madhurakavi Azhwar, Nammazhwar’s devoted disciple.

Heeding the advice, Nathamuni chanted it 12,000 times—and Nammazhwar himself appeared, blessing him with not just the missing 1000 verses, but the entire 4000 Divya Prabandham!

Sri APN Swami always emphasizes that *chanting Kanninun Siruthambu helps recover lost things, be it material objects or even spiritual wisdom.*

Coming back to my friend—he was already feeling defeated after a week of fruitless searching.

I told him to stay calm, prostrate before the altar, and chant Kanninun Siruthambu with faith. And guess what?

*Moments after finishing his chanting, he walked back to his bedroom and noticed a bag tucked away in a corner. Something nudged him to open it. Inside, shining right in front of his eyes, were his lost keys !*

That’s when it hit him—he had taken that very bag before his trip and unknowingly left the keys inside.

He called me immediately, filled with joy and disbelief, thanking me for reminding him of this powerful prayer.

But truly, all gratitude belongs to *Madhura kavi Azhwar, Nammazhwar, and the divine grace behind these sacred verses* .

What makes this even more special? This happened on Visakam nakshatram, the birth star of Swami Nammazhwar—a divine sign that there’s a greater force at play in our lives.

*My faith in Kanninun Siruthambu has deepened even more, and I wholeheartedly encourage everyone to chant it whenever they need divine guidance—especially when searching for something lost !* 👇🏻

*By Natteri Sri Ranganathan Swamy*
ravi said…
*This is a translation of a Malayalam post ...*

Many years ago, a Melshanthi used to perform all the pujas in the Guruvayur temple very beautifully and sincerely.

Everyone liked him very much. One day, he got up at three in the morning, took a bath and opened the temple door. For a while, he stood looking at Unnikrishna savouring his beauty with his eyes.

Then, Melshanthi started removing all the ornaments from Krishna's divine body one by one. He checked to see if there was anything left on Krishna. There were still some flowers here and there which he removed very carefully.

When he was almost done, there was still a flower petal sticking on Krishna's cheek.

Melshanthi tried to remove the petal from Krishna's cheek, but could not do so.
Despite trying many times, it failed to come off Krishna's beautiful face.

Finally, Thirumeni took some water and sprinkled it on Krishna's face and pinched off the flower that was stuck to Krishna's mischievous face.

Thereafter, Thirumeni performed all the pujas and dressed Krishna beautifully.

In the afternoon after the pujas, Melshanthi felt a little tired and went to rest. While he was lying, he felt some pain in his hand. Later, the pain increased.

He took some ointment that was around there and applied it to his hand, but the pain did not go away.

It was then his grandfather from the Vaidya Math came to visit him in Guruvayur. When he found out that Thirumeni's hand was in pain, he examined his hand. Apparently, there was nothing wrong. But the pain increased again.

So his grandfather gave Thirumeni a paste to apply on his hand to remove all the pain.

While he was resting, Thirumeni heard a footstep and raised his head and looked around but did not see anyone.

He lay down again and heard the same sound of footsteps. Noone was around.

"Who is it?"

The answer came after a pause.

"I am"

What a beautiful voice! Melshanthi had never heard such a beautiful voice before.

"Who is it ?"

That beautiful voice asked -
"How is the pain in your hand now?"

"How come someone knows about my pain in the hand? " Melshanthi wondered.

"I have difficulty getting up. But who are you asking about my pain?"

That sweet voice said, "This is Me, Thirumeni, your own Krishna!."

There... Unnikrishnan, Balagopalan appeared before Melshanthi, tucking his flute in his waist with both his hands behind his back and asked with a smile...

"How is the pain in your hand now, Thirumeni?"

The melshanthi could not believe his eyes!
"My Krishna came and stood in front of me and asked about the pain in my hand." He cried with joy. Tears of joy fell from his eyes in torrents.

The melshanthi asked. "Kanna, why are you asking like this?"

Then Krishna said "Oh Thirumeni! You have hurt me a lot today. Do you know how hurt I was, when you pinched my cheek to take off the flower petal. Look at my cheek! It has become red when you touched it with your nails. I feel the pain still...."

Melshanthi looked at Krishna's face carefully. Kannan was right, His face was all red !!

He said "Forgive me, Kanna... I didn't think my Kanna would be hurt this much."

Krishna said.. "What did you think? Did you think that I am just a stone or rock? Did you not see that I am in this..?"

When melshanthi heard all this, he cried,
"My Kanna.... Please forgive your servant. Please forgive me for all my sins."

ravi said…
Krishna came before Melshanthi and took his hand saying, "Where does it pain in your hand? I love you very much. But when you hurt me, I thought that I have to give you some of that pain. That's all, so don't be afraid."

Krishna patted Thirumeni's hand with his little hand.

"Ok Thirumeni, the pain will go away now. Don't hurt me like this anymore!", saying this, Krishna vanished!

Suddenly, Melshanthi got up in shock and told everyone present that his pain had gone away.

Hearing this, the grandfather said, "So the pain is gone. The medicine I gave you worked."

Then Melshanthi said, "It's not the medicine, it's my Krishna who has taken the pain away. It's my Krishna who caught my hand and stroked and patted. That's why my pain has gone away."

My Kanna... My Maya... You are my refuge, you are my refuge. Sararam Saranam

Hearing this, the grandfather ran up to Melshanthi and held his hand and said, "Thirumeni, what blessing can be greater than this?" He touched the hand that Krishna had patted and stroked it.

We should see Unnikannan sitting in the silaroopa as Krishna himself. We should not see him as a rock or a stone. We must worship Bhagavan with pure devotion.

For each of us, the Lord will give us His darshan in different forms and manifestations. Let us wait patiently for that day with devotion chanting His auspicious namas.

Guruvayurappa Saranam 🌷🌷
ravi said…
நேரம் கடந்துவிடுகிறது என சில விஷயத்தை திரும்ப எண்ணி வருத்தப்படுகிறோம். கடந்து போன நேரம்தான் இங்கு காதர்பாட்சா விற்கு உயிர் கொடுத்து உள்ளது. அனைத்தும் முருகன் விளையாட்டு. அர்த்தம் உள்ள பக்தி பதிவு 😁
ravi said…
நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள்.

தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும்.

போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும்போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர்,அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில். அதைக் கவனித்த ஸ்ரீராமன் கூறினார் " யாரும் கவலைப்பட வேண்டாம்.என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு" என்று.

போர் ஆரம்பமாயிற்று.கடும்போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள்.வேறு வழியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச்சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் "இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதாதேவியைக் கடத்தியதற்காக ஸ்ரீராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை.வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன்.

கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கேற்றாற்போல் அவனது தேரும் மிகப்பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன.
போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது.

திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப்போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன.ஒரே இருட்டு.நல்லவேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது.சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.

ஒரு வானரம் சொன்னது " இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப்போய்விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி" என்றது

" சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப்போவதில்லை நம்மைக் காப்பாற்ற .நம் தலைவிதி இப்படியே கிடந்து சாகவேண்டியதுதான்" சொன்னது இன்னொரு வானரம்

" ஸ்ரீராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களையெல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே,அவர் மட்டும் என்ன செய்தார்" இன்னொரு வானரம் சொன்னது. இதைக்கேட்ட மற்ற வானரங்களும் " ஆமாம் ஆமாம் " என்றன.

ravi said…
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது.

" முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள்.நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்.எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ஸ்ரீ ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ' ராம் ராம் ராம்' என்று ஜெபம் செய்யுங்கள். ஸ்ரீ ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார்" என்று சொன்னது.எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.

கடைசியில் ராமபாணத்தால் ராவணனும் கொல்லப்பட்டான். போர் முடிந்தது. சீதாப்பிராட்டியை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள்.

அப்போது ஸ்ரீராமன் சொன்னார் " சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா"

" பிரபு! எண்ணிவிட்டேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை" என்றான் சுக்ரீவன்.

" இல்லை.மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா " என்றார் ஸ்ரீராமன்.

ஸ்ரீராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான்.

" தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை"

" அனுமா நீ யும் என்னுடன் வா.நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம். "என்றார் ஸ்ரீராமன்

அனுமனும் ஸ்ரீராமனும் வானர்களைத்தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள்,உடைந்து கிடந்த தேரின் பாகங்கள், அம்புகள், கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப்பார்த்தான் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை.

திடீரென்று ஸ்ரீராமன் ஒரு இடத்தில் நின்றார்.

" அனுமா! அங்கேபார்.ஒரு பெரிய மணி தெரிகிறது."

ஸ்ரீராமன் என்ன சொல்லப்போகிறார் என்று புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் விரைந்தார்கள் அந்த இடத்திற்கு .

அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமனுக்கு இது ஒரு பொருட்டா என்ன!

அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக்கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப்பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள்.

எதிரே ஸ்ரீராமனும் அனுமனும்.

வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்களின் கண்களில் கண்ணீர்.

"பிரபு ! என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம்.எங்களை மன்னித்து அருள வேண்டும்" என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின.

அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ஸ்ரீராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் வானரங்களுக்கு.

அருகில் நின்றிருந்த அனுமன் பக்கம் திரும்பிய ஸ்ரீராமன் அனுமனைப் பார்த்து சொன்னார்

" அனுமா! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா?

இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் கிட்டும் "
என்று வாழ்த்தினார்.

பின் குறிப்பு: கர்நாடகா,ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கிக்கொண்டிருப்பதாக இருக்கும்.

"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"
ravi said…
SL

1.
கலைகள் பலவாகி த்தலையில் பிறைசூடித்

தவமும் பலனாகித் - திகழ்வோரை

கருணை மிகவாகிப் பணியும் அடியார்கள் அடையும் வரமாகி -
அருள்வோரை

விளை மூவ்வுலகாகி உள முள் ளுறைவாகி

நினைவில் புதிராகி- நிறைவோரை

விடைகள் புலனாகி விளையும் சிவகாம வெளியை இதனாலே -பணிவேனே !
ravi said…
2

அரிய சிவசரிதம் அருளப் பெரியநதி

அகலத் துயர்வினையின் - துகளோய

அருவிப் பெருக வருள் அறிவுச் சுனை பரவி

அவியப் பிறவியுழற்- சுழிதீர

விரிய நிறை மனது விரைய இதயமடு
விரிய சுகவமுதக் - கடலாகி

விளையும் பரம சுக வமுத சிவனதியுன்

தயவு தகை யொளிரும் - அருளாலே
ravi said…
3.மறைமும் முடிவாய் மூவுடலின் விடிவாகி

மனதுள் வதிமூன்று- விழியோனே

முடிகள் சடையாகிப் பிரள விட நாகம் இடையில் கலைமானுன் - கரனேயா

அமரர் பதியாகி தமையுள் ஒளியாகி அருளும் உயிர் நேயர் - தலைவோனே

உமையின் மணவாளன் ஒளிரும் நடிகோனை

உனையென் மனதார - நினைவோனே !
ravi said…
4

ஆயிரமெனவே தேயுங் கடவுள்

அழிவாகிய பொருள் -தரலாகக்

காயென அவையே தீதென விலகிக் கனவானதுவென - விழையாது

தீயெனப் பெருமான் நீடூயூர்ந் திடினும்

திருமாலயானவர் - அறியாத

தூயன சிவனார் தாமரை அடியைத்
தொழவே மனமருள்-சிவ சம்போ !
ravi said…
5

அறமும் நெறியுமௌ டதமும்
அறிகுறியும் அணியும்
இயலிசையும்- அறியாமல்

அயலர் மகிழரவுந் துதியும் முதியகதை
அகட விகட நடம் -புரியாமல்

திறமை எதுவுமறத் திரியின் புகலுமெது

திசையு மிலநெனது- திசை ஈஸா

திரியும் பசுவிதெனப் திறனும் பயனுமருட் திகழும் வரமருளும் பெருமானே !
ravi said…
*திருக்கடவூர் அபிராமி*

அமுதம் எனும் பொற் குடத்தில் அழகாக உதித்தவளே !!

உதிக்கின்ற செங்கதிர் சீமந்த வகுடு தனில் கல்யாண ஊர்வலம் காண்கின்றதோ ... !!

காணும் திசை எங்கும் வானும் மண்ணும் கோலமிட நிற்கின்றாய் ...

நிற்கும் அழகு நினைவில் பெயராய் மாறியதோ?

மாறியவை அனைத்தும் மாறா ஒன்றே உன் அன்பு

அன்பு காட்டும் கரங்கள் அபய வரத முத்திரைகள் காட்ட

முத்திரை பதித்தாய் என் நெஞ்சில் சித்திரமாய் ...

சித்திரை கண்டு தை வந்தேன் ...

கால நேரம் மாற்றி வைத்தாய் கால ஸம்ஹாரம் செய்த பின்னே

பின்னே நான் தொழுவேனோ வேறு ஓர் தெய்வம் பித்தன் என்றே ஊர் சிரித்தாலும் என் சித்தம் நீ யன்றோ

அன்றோ தோன்றி மறைந்தாய்

மறையா நூறு பாடல் தீயின் நடுவில் அவதாரம் எடுத்தே அணையாமல் மின்னுகிறதே இன்றும் என்றும் 🙏🙏🙏
ravi said…
பொன்னார் மேனியன்

காதுகளில் வட்டமிடும் குண்டலம்,

சுருண்ட செந்நிறமான கேசம் -

சுந்தரன், சொக்கன் அழகன் அபிராமியின் ஆண் வடிவம்

பரமேஸ்வரரின் அம்சம் என்றால் ஏன் ஆடை அணிகலன்கள் இவ்வளவு சிறப்பாக அனுமனுக்கு இருக்க வேண்டும் ..

அபிஷேக பிரியன் தானே பரமேஸ்வரன் ....

ஒன்றை கவனிக்க வேண்டும் .. அனுமன் ஈசனின் அம்சமாக இருந்தாலும் ராம காரியத்திற்காக அவதரித்தவன் ...

அந்த சக்கரவர்த்தி திருமகனுக்கு தாசன்

கொஞ்சமாவது அலங்கரித்துக்
கொள்ளதான் வேண்டும் அல்லவா ?

அதனால் தன் சுய மேனியை பொன்னாகவே வைத்துக்கொண்டு குண்டலங்கள் நல்ல உடைகள் சுருண்ட கேசம் மட்டும் இரவல் வாங்கிக்
கொண்டார் 🐒


இத்தகைய உருவத்துடன் தாங்கள் மிக அழகாக விளங்குகிறீர்கள்.
ravi said…
திருவந்தாதி


பேரானை ஈருரிவை
போர்த்தனை, ஆயிரத்தெண்
பேரானை, ஈருருவம்
பெற்றானைப் - பேராநஞ்(சு)
உண்டானை உத்தமனை
உள்காதார்க் கெஞ்ஞான்றும்
உண்டாம்நா
ளல்ல உயிர்".

💫🔆💫

"பெரிய யானை வடிவில் வந்த கயமுகாசுரனை கிழித்து அவன் தோலை உரித்தவன் அளவிடமுடியாத பெயர்களை கொண்டவன் ஆண் பெண் எனவும் அரன் அரி எனவும் இரண்டு உருவம் கொண்டவன் பிற உயிர் வர்க்கங்கள் விலக்க ஒன்னாத அகந்தை எனும் மாயை பிறரால் விலக்கப்பட்ட ஆலாகால விடத்தை அருந்தியது போல அடக்க வல்லவன் ஐயன் ஒருவனே அப்படிப்பட்ட பற்றற்ற பெரும்பற்ற புலியூரில் அருளும் ஐயனின் கருணையை பேசாத நாளெல்லாம் வீணான நாட்களே....💫🙏

திருச்சிற்றம்பலம்
ravi said…
*திரியம்பகம் என்றால் ? .....💐💐*

திரி என்றால் மூன்று ... அம்பகம் என்றால் கண்கள்

மூன்று கண்கள் கொண்டவன் பரமேஸ்வரன் ... எதிர்மறை பல நிறைந்த தோற்றம் ...

ஒருபக்கம் குளிர்ந்த கங்கை அமுதம் பொழியும் பிறைச் சந்திரன் ... மறுபக்கம் விஷம் கக்கும் நாகங்கள்

ஒரு பக்கம் அபிஷேகம் ...மறு பக்கம் சுட்டுவிடும் நெருப்பு

ஒரு பக்கம் அள்ளித்தரும் பொக்கிஷங்கள் மறுபக்கம் எல்லாம் அடங்கி போகும் என சொல்லும் பஸ்மம்...

சொக்கும் அழகு ... முகம் சுளிக்க வைக்கும் யானைத்தோல் & புலித்தோல்

பொன்னார் மேனியன் .... நாகாபரணங்கள் உடல் எங்கும்

இப்படி both the extremes ...

மூன்று கண்கள் ... ஓர் கண் சூரியன் ... ஓர் கண் சந்திரன் ஒரு கண் அக்னி ...

சூரியன் நம் ஈரம் இல்லாத உள்ளங்களையும் காய வைப்பான் ...

அக்னி தீய எண்ணங்களை பொசுக்குவான் ...

சந்திரன் சிவானந்தம் எனும் அமிர்தத்தை அள்ளி அள்ளித்தருவான்

சூரியனுக்கு உகந்த அக்ஷரம் *அ* சந்திரனுக்கு *ம* அக்னிக்கு *ர*

சேர்த்துப் பாருங்கள் ராம ...என்று வரும் ...

ராம நாமம் எனும் தத்துவத்தை தன் மூன்று கண்களாக கொண்டவர் பரமேஸ்வரன் 👍🪷
ravi said…
27

O Parameswara ! In Your hands lies a golden mountain , near You , resides *_Kubera_*, the lord of Wealth ..

In Your house are the celestial tree *_Kalpavrksa and_* divine wish - fulfilling treasures like *_Kamadhenu_* the celestial cow and *_Cintamani_* the gem .

On Your head rests the cool-rayed moon and at Your lotus feet lies the source of all auspiciousness .

What can I possibly offer to You ?

Let my mind be entirely dedicated to You for Your service .👍👍👍

*Shivananda Lahari 27*🛕🛕🛕
ravi said…
*ஸ்ரீ கனக துர்கா*
*விஜய வாடா*

*அம்மா!*

வையம் ஆளும் வலிமை தந்தாய் !

குதிரை படை தந்தாய் 🐎🐎🐎

மதம் கொண்ட யானைகள் மதி கொண்டு எனை வணங்க வைத்தாய்🐘🐘🐘

மாபெரும் மணி மகுடம் தந்தாய்

நவமணிகளா லான அழகிய பல்லக்கில் பவனி வரச் செய்தாய் !!

பெய்யும் கனகம் சிவானந்த வெள்ளம் ஆனதே !!

பொற்குவியல், விலைமதிக்க முடியா பொன்னாரம் எங்கும் உன் புன்னகை சுமந்து வந்ததே !!

இவைகள் என் பேறு என்று சொல்வதா .. ?

உன் பேரு சொல்வதால் கிடைக்கும் மேரு என்பதா ... ?

உன் தளிர்மேனி சுமந்து வரும் தேரு என்பதா?

உன் அடியார் அடி பணியும் பேழு கொண்ட பேழை என்பதா ?

என் சொல்வேன் ?

என் ஏழ்மை வார்த்தையின்றி தவிக்கின்றதே !!💐💐💐
ravi said…
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நம்மை கண்ணின் இமை போல் காக்கிறார் என்று விளக்கும் எளிய கதை

ஒரு மாடு மேய்ச்சலுக்காக வழி தவறி ஒரு காட்டுக்குள் சென்று விட்டது.

மாலை நேரம் நெருங்கியது.
ஒரு புலி தன்னை நோக்கி வருவதை மாடு பார்த்தது. மாடு பயத்தில் ஓட ஆரம்பித்தது . அந்த புலியும் அதன் பின்னால் ஓட ஆரம்பித்தது.
ஓடும் மாடு முன்னால் ஒரு குளத்தைக் கண்டது. பயந்து போன மாடு குளத்துக்குள் நுழைந்தது.

புலியும் அதனை பின் தொடர்ந்து குளத்திற்குள் நுழைந்தது.
அந்த குளம் மிகவும் ஆழமாக இல்லை, அதில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது மற்றும் சேறு நிரம்பியிருந்தது.

புலியும் மாடும் மெதுவாக
சேற்றுக்குள் மூழ்கத் தொடங்கியது.
புலியின் அருகில் மாடு இருந்த போதும் புலி அதனை பிடிக்க முடியவில்லை.
இருவரும் சேற்றுக்குள் கிட்டத்தட்ட கழுத்து வரை மூழ்கிவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து,
மாடு புலியைக் கேட்டது,

மாடு* : உனக்கு உரிமையாளர் இருக்கிறாரா?

புலி* : நானே காட்டின் ராஜா.
நான் யாருக்கும் சொந்தமில்லை. நானே இந்த காட்டின் உரிமையாளன்.
என்றது ஆணவமாக.....

மாடு* : ராஜாவா இருந்து என்ன பலன்? நீயும் என்னைப் போல மாட்டிக்கிட்டு இருக்க.

மாடு* : என் எஜமானர் மாலையில் வந்து என்னை தேடி பார்ப்பர்,
அவர் நிச்சயமாக என்னைத்
தேடி இங்கு வந்து , என்னை இந்த மண்ணிலிருந்து வெளியே எடுத்து வீட்டிற்கு அழைத்துச் செல்வார். உன்னை யார் வந்து அழைத்துச் செல்வார்கள்?

சிறிது நேரத்தில்,
ஒரு மனிதன் அங்கு வந்து மாட்டை சேற்றிலிருந்து வெளியே எடுத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

செல்லும் முன்,
மாடு மற்றும் அதன் உரிமையாளர்
இருவரும் நன்றியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்கள் விரும்பினாலும் புலியை சேற்றில் இருந்து வெளியே எடுக்க முடியாது, ஏனெனில் அது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவே அமையலாம்.

கதையின் தத்துவம் :
**********
மாடு - நல்ல குணம் உள்ள
நம் இதயத்தின் சின்னம்.

புலி - இறுமாப்புள்ள நம் மனம்.

உரிமையாளர் - கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்

குளம் - இந்த உலகம்.

நான் தான் எல்லாம்,
எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என்ற ஆணவம், அழிவின் விதையை விதைத்துவிடும்.

நம் உரிமையாளர் பகவான்
ஸ்ரீ கிருஷ்ணன் நம்மை ,
கண்ணின் இமை போல் காக்கிறார் என்று நம்பிக்கை கொள்வோம்..
நம்மை அவருடன் அழைத்து செல்ல....

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
🙏🙏🙏

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை