ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 23 - sloka 1 to 11 சித்ரகேதுவின் சரித்திரம்

प्राचेतसस्तु भगवन्नपरो हि दक्ष- स्त्वत्सेवनं व्यधित सर्गविवृद्धिकाम: । आविर्बभूविथ तदा लसदष्टबाहु- स्तस्मै वरं ददिथ तां च वधूमसिक्नीम् ॥१॥ ப்ராசேதஸஸ்து ப₄க₃வந்நபரோ ஹி த₃க்ஷ- ஸ்த்வத்ஸேவநம் வ்யதி₄த ஸர்க₃விவ்ருத்₃தி₄காம: | ஆவிர்ப₃பூ₄வித₂ ததா₃ லஸத₃ஷ்டபா₃ஹு- ஸ்தஸ்மை வரம் த₃தி₃த₂ தாம் ச வதூ₄மஸிக்நீம் || 1|| 1. குருவாயூரப்பா! தக்ஷப்ரஜாபதி அல்லாத, ப்ராசேதஸ் என்பவனுடைய மகனான வேறொரு தக்ஷன் இருந்தான். அவன் இனப் பெருக்கத்திற்காக உன்னை ஆராதித்து வந்தான். நீ அவன் முன் எட்டு கரங்களுடன் தோன்றினாய். அவனுக்கு வரங்களையும், அஸிக்னீ என்ற மனைவியையும் அளித்தாய். तस्यात्मजास्त्वयुतमीश पुनस्सहस्रं श्रीनारदस्य वचसा तव मार्गमापु: । नैकत्रवासमृषये स मुमोच शापं भक्तोत्तमस्त्वृषिरनुग्रहमेव मेने ॥२॥ தஸ்யாத்மஜாஸ்த்வயுதமீஶ புநஸ்ஸஹஸ்ரம் ஶ்ரீநாரத₃ஸ்ய வசஸா தவ மார்க₃மாபு: | நைகத்ரவாஸம்ருஷயே ஸ முமோச ஶாபம் ப₄க்தோத்தமஸ்த்வ்ருஷிரநுக்₃ரஹமேவ மேநே || 2|| 2. அந்த தக்ஷனுக்கு பதினாயிரம் புதல்வர்கள் இருந்தனர். நாரதரின் உபதேசத்தின் படி அவர்கள் மோக்ஷ மார்க்கத்தில் ஈடுபட்டனர். கோபமடைந்த தக...