Posts

பச்சைப்புடவைக்காரி-- ஒரு கோமேதகம் குழந்தையாய் வந்த அதிசயம்

Image
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள்   ஒரு கோமேதகம் குழந்தையாய் வந்த அதிசயம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிருந்தேன் ---  எதோ   என் தொண்டையை கொஞ்சம் அடைத்தது - இதுவரை   இல்லாத அனுபவம் -- ஒரே ஒரு நாமத்தில் கண்கள் நிலைத்து நின்று அடுத்த நாமாவளிக்கு போக கொஞ்சம் மறுத்தது –   கண்கள் நீரைக்கொட்டின ---- ஏன் இந்த அனுபவம் இன்று ? இதே நாமாவாளியை இதற்க்கு முன்னா ல் கூட சொல்லியிருக்கிறேன் - அப்போது தொண்டையை ஏதும் அடைக்கவில்லை - கண்கள்   கண்ணீரை மறந்து இருந்தது ...... பண்டபுத்ர - வதோத்யுக்த - பாலா   விக்ரம   நந்திதா     |   எல்லோரையும்   கேட்டுத் தெரிந்துகொண்டேன் ஆனால் அவளுக்கு மிகவும் பிடித்த பால திரிபுரசுந்தரியை மாதங்கியிடம் கேட்டுத்   தெரிந்துகொள்ளாமல்    விட்டுவிட்டோமே -   கேட்டிருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள் - அவள் பாதங்களில் இன்று  சா ஷ்ட்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் ....    தாழம்பூவின் மணமும்...