பச்சைப்புடவைக்காரி -மலைய கோயில் - மிட்டாய் முருகன் 370 -52 வது படை
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பகையை வெல்லும் 52 வது படை
மலைய கோயில் -மிட்டாய் முருகன்
370 👍👍👍💥💥
💥
1👍👍👍
புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிறது, மலையக்கோயில்.
பார்ப்பதற்குச் சிறியதாகத் தோன்றினாலும், கீர்த்தியில் மிகப்பெரியதாகவும் மிகவும் ரம்மியமாகவும் காட்சியளிக்கிறது
மலையக்கோயில் மலை.
மலையின் மீதுள்ள கோயில் *மேல்கோயில்* என்றும், மலையின் கீழுள்ள கோயில் *கீழ்க்கோயில்*’ என்றும் அழைக்கப்படுகிறது.
மலை மேல் முருகப் பெருமானும் மலையடிவாரத்தில் சிவபெருமானும் அருள்புரிகிறார்கள். 💐💐💐👌👌👌
2🙏🙏🙏
மலையின் அடிவாரத்தில் கிழக்குப் பக்கத்தில் ஒன்றும், தெற்குப்பக்கத்தில் ஒன்றுமாக இரண்டு குடவரைக் கோயில்கள் உள்ளன.
கிழக்குக் குடவரைக் கோயில் ஒரே கருவறையையும் அந்தக் கருவறையின் நடுவில் ஆவுடையாருடன் கூடிய லிங்கம் மலைப்பாறையிலேயே செதுக்கப்பட்டிருக்கிறது.👏👏👏
3👍👍👍
மலையேறியதும் அர்த்தமண்டபத்தில் விநாயகர், உற்சவராக முருகப்பெருமான் ஆகியோர் காட்சியளிக்கிறார்கள்.
கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் முருகப் பெருமான்.
சுவாமிக்குத் தென்பக்கத்தில் இடும்பர் சந்நதி இருக்கிறது. 🙏🙏🙏
முருகன் சந்நதிக்கு அருகே சுனை ஒன்று உள்ளது.
இதை சரவணப்பொய்கை என்றும் கூறுகின்றனர். இந்தச் சுனை நீர் கொண்டுதான் சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.
இந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.
பக்தர்கள் இதைப் பருனால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வேண்டிய வரங்கள் யாவற்றையும் அருள்கிறார் முருகப்பெருமான்
அறுபடை வீடுகளில் மூன்றாம் வீட்டை கொண்டவர் பழநி முருகன்.
அவரை தரிசிக்க திண்டுக்கல் வழியாக செல்வோர் எவரும் *குழந்தை வேலப்பரை* கவனிக்காமல் செல்வதில்லை.
தினமும் சேவல், அன்னம், மயில் எனப் பலவித வாகனங்களில் குழந்தை வேலப்பர் வீதி உலா வருவார்.
முக்கிய நிகழ்வான தேரோட்டம்
எங்கும் இல்லாத சிறப்பாக பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரின் இருபுறமும் வடகயிறு கட்டப் பட்டிருக்கும். வழக்கமாக முன்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் வடக்கயிறைப் பிடித்து தேரை பக்தர்கள் இழுக்கத் தொடங்குவர்.
மலைப்பகுதியில் சரிவான சாலை வந்தவுடன் தேரின் பின்னால் இருக்கும் வடக்கயிறை பிடித்து இழுத்து மெதுவாக கீழே தேரை இறக்குவர்.
பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.👍👍👍
*மிட்டாய் முருகன்*' என செல்லமாக அழைக்கப்படும் இந்த குழந்தை வேலப்பரும், அருகேயுள்ள மலையின் வரலாறும் ஆன்மிக நாட்டமுள்ளோரை ஆர்வப்படுத்தக் கூடியது என்றே கூறலாம்.👌👌👌
8.
குழந்தையான வேலப்பர் அல்லவா?
எனவே திருமணம், குழந்தை வரம் என எந்த வேண்டுதலோடும் வருபவர்கள் வேலப்பருக்கு 'மிட்டாய்'யை நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர்.
முருகனுக்கு உகந்த செவ்வாயன்று, செந்நிற வஸ்திரம், செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வைப்பர். மிட்டாய் அல்லது சாக்லேட் சமர்பித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என நம்புகின்றனர்.
அருணகிரிநாதர் வணங்கிய தலம் என்ற பெருமை கொண்டது இக்கோயில்.👏👏👏
9😊😊😊
கோயிலுக்கு பின்புறம் பழநி மலையைப் போன்றே மூலிகை மரங்கள் நிறைந்த மலை ஒன்று இருக்கிறது. இங்கும் ஒரு கோயில் உள்ளது.
மலைமீது தான் பழநி முருகனைப் போல குழந்தை வேலப்பர் இருந்ததாக கூறுகின்றனர்.
பழங்கால சிலை ஒன்று மலைக் கோயிலில் இருந்துள்ளது.
சிதிலமடைந்த அச்சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை கும்பாபிேஷகம் நடக்கவில்லை.😰
10🙏🙏🙏
பழநி மலைக்கு இணையாக, அதேபோன்ற அமைப்புடன் உள்ளது இதன் தனிச் சிறப்பு.
மலைமேல் செல்லும் பாதை மோசமாக இருக்கிறது.
இம்மலையை மேற்கிலிருந்து பார்த்தால் பழநி மலைப் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் சிவலிங்கம் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் திருவண்ணாமலை போன்றும் தெரியும்.
மலையைச் சுற்றிலும் ஏராளமான மூலிகை மரங்கள், செடிகள் நிறைந்துள்ளன.
அவற்றில் பல ஆக்கிரமித்துள்ளவர்களால் அகற்றப்பட்டுள்ளன.
மலையைச் சுற்றிலும் குகைகள் பல உள்ளன. அனைத்தும் இயற்கையாலோ அல்லது மனிதர்களாலோ அடைக்கப்பட்டுள்ளது. இவை சித்தர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை காட்டுகின்றன.
பழநி வரும் 90 சதவீத பக்தர்கள் கீழே உள்ள குழந்தை வேலப்பர் கோயிலுக்குச் செல்கின்றனரே தவிர, பல ரகசியங்களை கொண்ட மூலிகை மலைக்கு செல்வதில்லை.
*கிரிவலம்*
மலையைச் சுற்றியுள்ள இடத்தில் பல ஆக்கிரமிப்புகள் இருந்தன. இவற்றை 'விழுதுகள்' எனும் தொண்டு நிறுவனத்தினர் சட்டரீதியாக போராடி மீட்டுள்ளனர்.
தற்போது கிரிவலம் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்மிக விரும்பிகள், தன்னார்வலர்கள் இணைந்து நிதியை தயார் செய்து விழுதுகள் அமைப்பின் மூலம் சரிசெய்து வருகின்றனர்.
கிரிவலம் அமைந்தபின், இங்குள்ள மூலிகை மரங்களின் காற்றே பல நோய்களை தீர்க்க வல்லமையுடையதை பொதுமக்கள் உணர்வர்.💐💐💐
11👏👏👏
கிரிவலம் அமைத்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரிய வகை மரஞ்செடி கொடிகளை சேகரித்து சுற்றிலும் நடுவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.
அங்கு பறவைகள் தணணீர் அருந்துவதற்காக தண்ணீர் தேக்க 2 சிறிய குட்டைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கிரிவலப் பாதையை முறையாக சீர்செய்தால் பழநி மலை, சித்தர் நத்தம் சிவன்மலை போல இதுவும் பக்தர்களின் ஆன்மிக தலங்களில் இதுவும் முக்கிய இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.👍👍👍
20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கி இருந்த அகதிகள் மலையின் மீது இருந்த சிலையை சேதப்படுத்தி விட்டனர்.
அதை புதுப்பித்தபின்னும் கும்பாபிேஷகம் நடக்கவில்லை.
பக்தர்கள் சென்று வர படிப்பாதை அமைக்க வேண்டும்.
பழநி போல் இங்கும் கால பூஜைகள் நடத்த வேண்டும். சமூக விரோத செயல்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 🙏🙏🙏
அம்மா இன்று படை வீடு ... குழந்தை வேலப்பர் அருமை ... முருகன் எங்களில் ஒருவர் , குழந்தைகளில் ஒருவர் , தருவதில் தன்னகிரில்லாதவர் என்றும் புரிய வைத்தாய் தாயே !!
*உண்மை ரவி ...*
காலப்போக்கில் நான் கொடுத்த எல்லா பொக்கிஷங்களும் தொலைந்து போகலாம் ...
இன்று மிஞ்சி இருக்கும் பசுமையும் மடிந்து போகலாம்
ஆனால் குன்றுகள் என்றும் நிலையானவை
அங்கே என் முருகன் இருந்துகொண்டு ஆன்மீக உள்ளங்களை வாழ்வித்துக்கொண்டுதான் இருப்பான் . 🏆🏆🏆
*641 த்யானகம்யா* - த்யானம் செய்த பலனாக அடையப்படுபவள் அம்பாள்.
ஆத்ம சக்தியை உணர அத்தியாவசியம் த்யானம். ஸ்வேதஸ்வதர உபநிஷத் (I.ii.3) “ரிஷிகள் ஆழ்ந்த த்யானத்தில் ஈடுபட்டு பிரம்மாண்டமான பர ஒளி மயமான ஒரு சக்தி பிரபஞ்சத்தை உருவாக்குவதை அறிந்தனர்.
பரமாத்மாவை மாயை திரையாக பிரபஞ்சம் பூரா சூழ்ந்து கொண்டிருப்பதை அறிந்தனர். .👌👌👌
*642 அபரிச்சேத்யா*-
ஓரிடத்தில் இருப்பவள் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாதவள் அம்பாள்.
எங்கும் நிறைந்தவள். பிரம்மத்தின் உருவம். அவளை தியானத்தில் அறியலாம்.
*643 ஜ்ஞானதா* -
தியானத்தின் மூலம் ஞானத்தை அள்ளி வாரி வழங்குபவள் அம்பாள்.
தன்னை, பிரம்மத்தை அறிய புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவைத் தருபவள்.
சிவ சூத்ரம் (I.2) '' ஞானம் பந்தா'' என்பது குறைந்த ஞானம் ஒரு எல்லைக்குள், கட்டுப்பாட்டுக்குள் உள்ளதை தான் குறிக்கும். கட்டுப்பாட்டில் இருப்பது. ப்ரம்மஞானம் எல்லையற்றது.👌👌👌
==========
Comments
மரபின் மைந்தன்
சஷ்டி நாயகன் சண்முகன்-6-காதல் முருகன்
"
அசுரர்களிடமிருந்து தேவர் குலத்தை மீட்ட முருகனுக்கு இந்திரன் தன் மகளாகிய தெய்வானையை மணமுடித்துத் தந்தான். வேட்டுவர் குலத் தலைவன் நம்பிராஜன் மகளாக வளர்ந்த வள்ளியை வேலன் தேடிப்போய் மணமுடித்தான்.
கச்சியப்பர்.
பிண்டியந் தினையின் பைங்கூழ்ப் பெரும்புனத் திறைவி தன்னைக்
கண்டனன் குமரன் அம்மா கருதிய எல்லை தன்னில்
பண்டொரு புடையில் வைத்த பழம்பொருள் கிடைத்த வாபோல்."
"
வள்ளிமேல் இருக்கும் காதலால் முருகன் அவளுடைய திருவடிகளைத் தொழுவான் என்பதை பகிரங்கமாகப் பறை சாற்றுகிறார் .
"பணியா எனவள்ளி பதம் பணியும்
தணியா அதி மோக தயாபரனே"
என்றும்
"பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா"
என்றும் பாடுகிறார்.
சொல்லித் தப்பித்து விடுவார்
அத்தி" எனச்சொல்லித்தான் அருணகிரியார் திருப்புகழையே தொடங்குகிறார்.
இனி, கந்தபுராணத்தின்படி முதியவர் வேடத்தில் வந்து முருகனாகக் காட்சி கொடுத்து வள்ளியையும் மையல் கொய்யச் செய்து மறுநாள் வருவதாய் பன்னிருகைப் பரமன் புறப்பட்டுப் போய்விடுகிறான்.பிரிவாற்றாத வள்ளியை அனைவரும் உறங்கிய நேரம் பார்த்து ,தோழி முருகனிடம் கொண்டு சேர்க்க அழைத்துச் செல்கிறாள்.முருகனும் வள்ளியைப் பிரிந்திருக்க ஏலாது அங்கே வந்து தவிக்கிறான்.
நாய்துயில் அறிந்து மற்றந் நகர்துயில் அறிந்து வெய்ய
பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழு ததனிற் பாங்கி
வாய்தலிற் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென் றுய்த்தாள்
பக்கத்தில் வந்து மேவிப் - பஞ்ச
பாதகன் ஒரு பாவி - சிறு
பாவையை மெள்ளக் கூவிக் - கையைப்
பற்றிக் கூட்டிக்கொண் டேகி னான்; பதை
பதைக்குதே என்றன் ஆவி
தேடினும்கிடை யாத தாகிய
திரவியக் கரு கூலம் - போலே
செனித்தபெண் ணுக்குச் சீலம் - வேறே
திரும்பின தென்ன காலம்? - கொங்கை
திரண்டி டாமுன்னம் மருண்டி டற்கெவன்
செய்தானோ இந்த்ர சாலம்?
காடுசேர்கையில் கரடி வேங்கைகள்
காட்டுமே ஆர வாரம், - அதைக்
காதில் கேட்கவி சாரம் - வைத்துக்
கலங்குவாள்; அந்த நேரம் - என்றன்
காதலி தன்னை ஆதரித் துயிர்
காப்பது வேலன் பாரம்.
தங்கள் ஆளுகையிலிருக்கும் அத்தனை மலைகளையும் மாப்பிள்ளைக்கு சீதனமாய் கொடுத்து விட்டார்களாம்.
ஒருகுலத்திற் கொள்ளோம்
உறவுபிடித்தாலும்விடோம் குறவர்குலம்நாங்கள்
வெருவவரும் தினைப்புனத்தில் பெருமிருகம் விலக்கி
வேங்கையாய் நிழல்பரப்பும் பாங்குதனைக் குறித்தே
அருளிலஞ்சி வேலர்தமக்கு ஒருமகளைக் கொடுத்தோம்
ஆதினத்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்"
ஐயற் கெனது சிறுசொல்லும் ஒப்பாகும் இப்பார்
செய்யுற் றவன்மால் உமைபூசைகொள் தேவ தேவன்
வையத்த வர்செய் வழிபாடு மகிழும் அன்றே
வற்றா அருள்சேர் குமரேசன்வண் காதை தன்னைச்
சொற்றாரும் ஆராய்ந் திடுவாருந் துகளு றாமே
கற்றாருங் கற்பான் முயல்வாருங் கசிந்து கேட்கல்
உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவர் அன்றே
(எப்போதும் உடனிருப்பான்)
நாயக சமையல்-பல
காய்கறிகள் கலந்துபோட்டு
கூட்டணி அவியல்
கேழ்வரகின் நெய்பிசைந்து
கசகச துகையல்
கடுகுபோல படபடக்கும்
கோபத்தின் பொரியல்
உப்புபோலத் தொட்டுக்கிட
ஜாதி ஒழிப்பு-அட
ஊறுகாயப் போல்பழசு
ஊழல் ஒழிப்பு
அப்பளம் போல் நொறுங்குதுங்க
மக்கள் நெனப்பு-கறி
வேப்பிலையப் போலொதுங்கும்
ஏழை பொழப்பு
சோறுவைக்கலாம்
வேகாத பருப்பக்கூட
வேக வைக்கலாம்
ஊசிப்போன கொள்கையோட
கூட்டு வைக்கலாம்
ஊருக்கெல்லாம் இலையின்கீழ
நோட்டு வைக்கலாம்
பந்தியெல்லாம் பதைபதைக்க
குழம்ப ஊத்தறான்
பாவிமக்க குழம்பத்தானே
தேர்தல் வைக்கறான்
முந்தாநாள் வச்சரசம்
மொண்டு ஊத்தறான்
முணுமுணுத்தா எலயவிட்டு
மடியில் ஊத்துறான்
பந்தி போடலாம்
பாயசத்தில் முந்திரிபோல்
பண்பைத் தேடலாம்
மானமில்லா மக்களெல்லாம்
பாயில் அமரலாம்
கோபம் ரோஷம் உள்ளவங்க'
கையக் கழுவலாம்
தின்ன எலையை கழுவிக் கழுவி
திரும்பப் போடுறான்-அவன்
தின்னு முடிச்ச மிச்சத்தைத்தான்
தேசம் என்கிறான்
இன்னயநாள் வரை நடந்த
பந்தி எத்தினி?-அட
இலையில் அமரும் இந்தியன்தான்
என்றும் பட்டினி!!
ஆன்மிக பலன்ஆன்மிக தொடர்கள்
‘உன் புருஷன் ஜெயிப்பான், என் கனவு பலிக்கும்!
மகாபாரதம் - 69
லட்சுமணன் சீதையின் இடத்தை விட்டு நகர்ந்த நேரம், ராவணன் பர்ணசாலைப் பகுதியில் பிரவேசித்தான். வாசலில் நின்று ‘பவதி பிட்சாம் தேஹி...’ என்று குரல் கொடுத்தான். சீதை வெளியே வந்து பழங்களையும், கிழங்குகளையும் தட்டில் எடுத்து வந்து அவனுக்குக் கொடுப்பதற்கு தயாரானாள். ஒரு சந்நியாசியைப்போல மாறுவேடத்தில் வந்திருந்த ராவணன், சீதையின் அழகைப் பார்த்து திகைத்தான். சட்டென்று, தன் வேடத்தை உதறி சுய ரூபத்தோடு காட்சியளித்தான்.
‘‘
‘
‘
‘‘
‘‘
‘‘
‘‘
‘‘
‘
ராமர் உதடு நடுங்க, மனம் நடுங்க அந்தச் சூளாமணியை பெற்றுக் கொண்டார்.
(தொடரும்)
பாலகுமாரன்
வீழ்ந்தான் வீணன்!
மாகாபாரதம் - 70
வானர வீரர்கள் இலங்கைக்குள் இறங்கி தோப்புகளுக்குள் மெல்ல நுழைந்து, நகரைச் சுற்றியுள்ள காடுகளுக்குள் ஊடுருவதை, அங்கு காவல் காத்திருந்த இரண்டு அரக்கர்கள் பார்த்து விட்டனர். சைன்யம் பெரிதாக இருக்கிறது எதிர்க்க முடியாது, போய் தகவல் சொல்லி விட்டு வரவும் நேரம் இல்லை என்பதால், என்ன, ஏது என்று தெரிந்து கொள்வதற்காக சட்டென்று தங்களை வானரங்களாக உருமாற்றிக் கொண்டு அவர்களோடு கலந்து, இப்போது எங்கே போகிறோம், என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம் தங்களுக்குள் பேச, மற்ற வானரங்கள் பதில் சொல்ல முயற்சிக்க, ஒரு தவறான வாசனை வருகிறது என்பதை விபீஷணன் உணர்ந்து கொண்டு, அந்த இடம் நோக்கிப் போய், உருமாறிய அந்த அரக்கர்களை சட்டென்று தாவி பிடித்தார். வானர வீரர்கள் பயந்தார்கள். அடித்து நொறுக்கினார்கள். விபீஷணன் தடுத்து ராமரிடம் கொண்டு போனார்.
“
‘‘
ஸ்ரீராமரை வந்து அடைந்தாள்.
‘
(தொடரும்)
மயிலை லஸ் சர்ச் ரோட்டில் உள்ள Central Bank of India மயிலை கபாலீஸ்வரர்க்கு சொந்தமான நிலத்தில் இயங்கி வருவதாக கேள்வி பட்ட ஜெபமணி மோகன்ராஜ், வங்கியிடம் வாடகை யாருக்கு செலுத்துகிறீர்கள் என்று கேட்க, வங்கி ஒரு தனியார் பெயரை குறிப்பிட்டது. திரு மோகன் ராஜ் அறநிலையத்துறை ஆணையரிடம் முறையிட, விஷயம் ஆணையர், துணை ஆணையர், செயல்அலுவலர் என்று முடிவில்லாமல் சுற்றி கொண்டிருந்தது.
தகவல் உரிமை அறியும் சட்டம் மற்றும் நீதிமன்றம் துணை கொண்டு எப்படி அறநிலையத்துறையை தன் வேலையை செய்ய வைக்க முடியும் என்பது திரு மோகன் ராஜ் அணுகுமுறை ஒரு சிறந்த உதாரணம்.
1. மயிலாப்பூர் கிளப் கபாலீஸ்வரர் சொத்தை வைத்து கொண்டு வாடகை தராமல் டபாய்த்து கொண்டிருந்தது. திரு மோகன் ராஜ் எடுத்த முயற்சியால் சுமார் 15 கிரௌண்ட் நிலத்தை கோவிலுக்கு திருப்பி கொடுத்து விட்டது. அந்த நிலத்தில் கார் பார்க்கிங் மூலம் கோவிலுக்கு வருமானம் வருகிறது.
3. பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் வடபழனி வேங்கீஸ்வரர் கோவில் குளத்தை மீட்க திரு மோகன் ராஜ் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வு ஆக்கிரமிப்புகளை நீக்க உத்தரவிட்டது.
4. விருகம்பாக்கம் சுந்திரவரதராஜ பெருமாள் கோவில் குளத்தை தூர்ந்து பட்டா போட்டு மசூதி கட்ட ஒரு முஸ்லிம் கும்பல் முயல நீதிமன்ற உத்திரவின் பேரில் கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டது. கலெக்டர் இரண்டு வருடங்களாக தூங்க, திரு மோகன் ராஜ் குளத்தை காணவில்லை என்று வழக்கு தொடுத்து கலெக்டர் விசாரணையில் இணைந்து கொண்டார். பிறகு விசாரணை முடிக்காத கலெக்டர் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்ககை அவர் தொடுக்க கலெக்டர் அந்த சொத்து முஸ்லிம் பார்டிக்கு சொந்தமில்லை என்று தீர்ப்பு வழங்கினார்.
திரு மோகன் ராஜ் போன்றவர்களை முன் உதாரணமாக கொண்டு கோவில் சொத்துக்களை மீட்க மேலும் பல இந்துக்கள் முன்வர வேண்டும்.