Posts

Showing posts from July, 2024

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 59 TO 63 பதிவு 55

Image
  LS 23   || ஸ்ரீ நகர வர்ணனை ||    || மஹாபத்மாடவீ  - ஸம்ஸ்தா கதம்பவன வாஸிநீ |     ஸுதாஸாகர மத்யஸ்தா காமாக்ஷி   காமதாயினீ ||   யோக சாத்திரத்தின் அடிப்படையிலே பார்த்தால் , ஸ்ரீபுரம் பிரம்மரந்திரத்தில் இருக்கிறது . அதாவது நமது மனோநிலையில் இருப்பது . சிந்தாமணி கிருஹம் என்பது நிஜமான சிந்தாமணிக் கற்களைக் கொண்டு கட்டியது மாத்திரம் அல்ல . சிந்தாமணி கிருஹத்தில் இருக்கிறாள் என்றால் தன்னுடைய குழந்தைகள் எதையெல்லாம் கேட்க்கிறார்களோ , அதையெல்லாம் தருவதற்காக இருப்பவள் என்று பொருள் . இன்னொன்று , இந்த ஜீவன்களின் உடல்களையே தன்னுடைய இருப்பிடமாக்கிக்கொண்டு , சிந்தாமணியின் திருப்தியை அங்கேயே ஏற்படுத்துகிறாள் . ஸ்ரீ என்றால் ஐசுவரியம் . ஸ்ரீ நகரம் என்றால் ஐசுவரியம் செழிந்த நிலை .    59. மஹாபத்மாடவீ   - மஹா பத்மம் என்றால் பெயரிய தாமரை - ஆயிரம் இதழ்களை உடையது . அந்த மஹா பத்ம அடவியில் இருப்பவள் அம்பாள் .  60 . கதம்பவன வாஸினீ அம்பாளுக்கு   மிகவும்   பிடித்தது   கடம்ப   வனம்  .  கடம்பவன   சுந்தரியா   இருப்பவள்  அந்த