ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 27 - sloka 1 to 10 -கூர்மாவதாரம்
दुर्वासास्सुरवनिताप्तदिव्यमाल्यं
शक्राय स्वयमुपदाय तत्र भूय: ।
नागेन्द्रप्रतिमृदिते शशाप शक्रं
का क्षान्तिस्त्वदितरदेवतांशजानाम् ॥१॥
து₃ர்வாஸாஸ்ஸுரவநிதாப்ததி₃வ்யமால்யம்
ஶக்ராய ஸ்வயமுபதா₃ய தத்ர பூ₄ய: |
நாகே₃ந்த்₃ரப்ரதிம்ருதி₃தே ஶஶாப ஶக்ரம்
கா க்ஷாந்திஸ்த்வதி₃தரதே₃வதாம்ஶஜாநாம் || 1||
1. தேவலோக மங்கையால் தனக்குக் கிடைத்த மலர் மாலையை, துர்வாச முனிவர் இந்திரனுக்குக் கொடுத்தார். அந்த மாலை, இந்திரனுடைய ஐராவதம் என்ற யானையால் மிதிக்கப்பட்டது. அதனால், முனிவர் கோபம் கொண்டு இந்திரனைச் சபித்தார். உன்னிடமிருந்து தோன்றியவர்களைத் தவிர வேறு எவருக்கும் பொறுமை இருப்பதில்லை.
शापेन प्रथितजरेऽथ निर्जरेन्द्रे
देवेष्वप्यसुरजितेषु निष्प्रभेषु ।
शर्वाद्या: कमलजमेत्य सर्वदेवा
निर्वाणप्रभव समं भवन्तमापु: ॥२॥
ஶாபேந ப்ரதி₂தஜரே(அ)த₂ நிர்ஜரேந்த்₃ரே
தே₃வேஷ்வப்யஸுரஜிதேஷு நிஷ்ப்ரபே₄ஷு |
ஶர்வாத்₃யா: கமலஜமேத்ய ஸர்வதே₃வா
நிர்வாணப்ரப₄வ ஸமம் ப₄வந்தமாபு: || 2||
2. பிறகு, இந்திரன் சக்தி குறைந்தவனாக ஆனான். தேவர்களும் சக்தியை இழந்து அசுரர்களால் ஜயிக்கப்பட்டார்கள். பரமசிவனும், மற்ற தேவர்களும், பிரம்மாவுடன் உன்னை சரணடைந்தனர்.
ब्रह्माद्यै: स्तुतमहिमा चिरं तदानीं
प्रादुष्षन् वरद पुर: परेण धाम्ना ।
हे देवा दितिजकुलैर्विधाय सन्धिं
पीयूषं परिमथतेति पर्यशास्त्वम् ॥३॥
ப்₃ரஹ்மாத்₃யை: ஸ்துதமஹிமா சிரம் ததா₃நீம்
ப்ராது₃ஷ்ஷந் வரத₃ புர: பரேண தா₄ம்நா |
ஹே தே₃வா தி₃திஜகுலைர்விதா₄ய ஸந்தி₄ம்
பீயூஷம் பரிமத₂தேதி பர்யஶாஸ்த்வம் || 3||
3. வரதனே! அவர்களால் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட நீ, அவர்கள் முன்னால் தோன்றினாய். “தேவர்களே! அசுரர்களோடு சமாதானம் செய்து கொண்டு பாற்கடலில் அம்ருதத்தைக் கடையுங்கள்” என்று கட்டளையிட்டாய்.
सन्धानं कृतवति दानवै: सुरौघे
मन्थानं नयति मदेन मन्दराद्रिम् ।
भ्रष्टेऽस्मिन् बदरमिवोद्वहन् खगेन्द्रे
सद्यस्त्वं विनिहितवान् पय:पयोधौ ॥४॥
ஸந்தா₄நம் க்ருதவதி தா₃நவை: ஸுரௌகே₄
மந்தா₂நம் நயதி மதே₃ந மந்த₃ராத்₃ரிம் |
ப்₄ரஷ்டே(அ)ஸ்மிந் ப₃த₃ரமிவோத்₃வஹந் க₂கே₃ந்த்₃ரே
ஸத்₃யஸ்த்வம் விநிஹிதவாந் பய:பயோதௌ₄ || 4||
4. தேவர்களும், அசுரர்களும் சமாதானம் செய்து கொண்டனர். பிறகு, கர்வத்தோடு மந்தர மலையைக் கொண்டு வந்தனர். அப்போது மலை கீழே நழுவியது. அப்போது, நீ அம்மலையைக் கருடன் மீது, இலந்தையைப் போலத் தூக்கி ஏற்றி, பாற்கடலில் வைத்தாய்.
आधाय द्रुतमथ वासुकिं वरत्रां
पाथोधौ विनिहितसर्वबीजजाले ।
प्रारब्धे मथनविधौ सुरासुरैस्तै-
र्व्याजात्त्वं भुजगमुखेऽकरोस्सुरारीन् ॥५॥
ஆதா₄ய த்₃ருதமத₂ வாஸுகிம் வரத்ராம்
பாதோ₂தௌ₄ விநிஹிதஸர்வபீ₃ஜஜாலே |
ப்ராரப்₃தே₄ மத₂நவிதௌ₄ ஸுராஸுரைஸ்தை-
ர்வ்யாஜாத்த்வம் பு₄ஜக₃முகே₂(அ)கரோஸ்ஸுராரீந் || 5||
5. வாசுகி என்ற பாம்பைக் கடைவதற்கான கயிராக்கி, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். அப்போது நீ கபடமாக அசுரர்களை வாசுகியின் தலைப்பக்கம் பிடிக்கச் செய்தாய்.
क्षुब्धाद्रौ क्षुभितजलोदरे तदानीं
दुग्धाब्धौ गुरुतरभारतो निमग्ने ।
देवेषु व्यथिततमेषु तत्प्रियैषी
प्राणैषी: कमठतनुं कठोरपृष्ठाम् ॥६॥
க்ஷுப்₃தா₄த்₃ரௌ க்ஷுபி₄தஜலோத₃ரே ததா₃நீம்
து₃க்₃தா₄ப்₃தௌ₄ கு₃ருதரபா₄ரதோ நிமக்₃நே |
தே₃வேஷு வ்யதி₂ததமேஷு தத்ப்ரியைஷீ
ப்ராணைஷீ: கமட₂தநும் கடோ₂ரப்ருஷ்டா₂ம் || 6||
6. கடையும் போது சுழன்ற அந்த மந்தரமலையானது, அதிக கனத்தால் கடலில் மூழ்கியது. தேவர்கள் துயரம் அடைந்தனர். அவர்களின் நன்மையைக் கருதி, நீ கடினமான முதுகை உடைய ஆமையின் வடிவம் எடுத்துக்கொண்டாய்.
वज्रातिस्थिरतरकर्परेण विष्णो
विस्तारात्परिगतलक्षयोजनेन ।
अम्भोधे: कुहरगतेन वर्ष्मणा त्वं
निर्मग्नं क्षितिधरनाथमुन्निनेथ ॥७॥
வஜ்ராதிஸ்தி₂ரதரகர்பரேண விஷ்ணோ
விஸ்தாராத்பரிக₃தலக்ஷயோஜநேந |
அம்போ₄தே₄: குஹரக₃தேந வர்ஷ்மணா த்வம்
நிர்மக்₃நம் க்ஷிதித₄ரநாத₂முந்நிநேத₂ || 7||
7. நீ, லக்ஷ யோஜனை அகலம் கொண்ட சரீரத்துடன், வஜ்ராயுதத்தை விடக் கடினமான முதுகால், மூழ்கிய மந்தரமலையை மேலே தூக்கினாய்.
उन्मग्ने झटिति तदा धराधरेन्द्रे
निर्मेथुर्दृढमिह सम्मदेन सर्वे ।
आविश्य द्वितयगणेऽपि सर्पराजे
वैवश्यं परिशमयन्नवीवृधस्तान् ॥८॥
உந்மக்₃நே ஜ₂டிதி ததா₃ த₄ராத₄ரேந்த்₃ரே
நிர்மேது₂ர்த்₃ருட₄மிஹ ஸம்மதே₃ந ஸர்வே |
ஆவிஶ்ய த்₃விதயக₃ணே(அ)பி ஸர்பராஜே
வைவஶ்யம் பரிஶமயந்நவீவ்ருத₄ஸ்தாந் || 8||
8. மந்தரமலை மேலே வந்ததும், அனைவரும் சந்தோஷத்துடனும், பலத்துடனும் கடைந்தனர். தேவர்களுக்குள்ளும், அசுரர்களுக்குள்ளும், வாசுகியிடத்திலும் நீ பிரவேசித்து, அவர்களது களைப்பைப் போக்கி பலமடையச் செய்தாய்.
उद्दामभ्रमणजवोन्नमद्गिरीन्द्र-
न्यस्तैकस्थिरतरहस्तपङ्कजं त्वाम् ।
अभ्रान्ते विधिगिरिशादय: प्रमोदा-
दुद्भ्रान्ता नुनुवुरुपात्तपुष्पवर्षा: ॥९॥
உத்₃தா₃மப்₄ரமணஜவோந்நமத்₃கி₃ரீந்த்₃ர-
ந்யஸ்தைகஸ்தி₂ரதரஹஸ்தபங்கஜம் த்வாம் |
அப்₄ராந்தே விதி₄கி₃ரிஶாத₃ய: ப்ரமோதா₃-
து₃த்₃ப்₄ராந்தா நுநுவுருபாத்தபுஷ்பவர்ஷா: || 9||
9. மிக வேகமாகச் சுழற்றப்பட்ட மந்தரமலை, மேலே எழும்பியது. அப்போது, நீ கெட்டியான தாமரைக் கைகளை அம்மலை மேல் வைத்து மேலே கிளம்பாதவாறு செய்தாய். இதைக் கண்ட பிரம்மா, சிவன், முனிவர்கள் முதலியோர் பரவசமாகி வானிலிருந்து பூமாரி பொழிந்து, உன்னை வாழ்த்தினர்.
दैत्यौघे भुजगमुखानिलेन तप्ते
तेनैव त्रिदशकुलेऽपि किञ्चिदार्ते ।
कारुण्यात्तव किल देव वारिवाहा:
प्रावर्षन्नमरगणान्न दैत्यसङ्घान् ॥१०॥
தை₃த்யௌகே₄ பு₄ஜக₃முகா₂நிலேந தப்தே
தேநைவ த்ரித₃ஶகுலே(அ)பி கிஞ்சிதா₃ர்தே |
காருண்யாத்தவ கில தே₃வ வாரிவாஹா:
ப்ராவர்ஷந்நமரக₃ணாந்ந தை₃த்யஸங்கா₄ந் || 10||
10. தேவனே! அசுரர்கள் வாசுகியின் மூச்சுக்காற்றால் தாபத்தை அடைந்தனர். தேவர்களும் கொஞ்சம் தாபமடைந்தனர். நீ கருணையுடன், மேகத்தைக் குவித்து, தேவர்களை நோக்கி மழை பொழியச் செய்தாய். அசுரர்களுக்குப் பொழியவில்லை.
उद्भ्राम्यद्बहुतिमिनक्रचक्रवाले
तत्राब्धौ चिरमथितेऽपि निर्विकारे ।
एकस्त्वं करयुगकृष्टसर्पराज:
संराजन् पवनपुरेश पाहि रोगात् ॥११॥
உத்₃ப்₄ராம்யத்₃ப₃ஹுதிமிநக்ரசக்ரவாலே
தத்ராப்₃தௌ₄ சிரமதி₂தே(அ)பி நிர்விகாரே |
ஏகஸ்த்வம் கரயுக₃க்ருஷ்டஸர்பராஜ:
ஸம்ராஜந் பவநபுரேஶ பாஹி ரோகா₃த் || 11||
11. வெகுகாலம் கடைந்தும், சமுத்திரத்தில் உள்ள உயிரினங்கள் வெளியே வந்தனவேயன்றி, வேறு எதுவும் கிடைக்கவில்லை. அப்போது, நீ ஒருவனாகவே, அந்தப் பாம்பை, உன் இரு கரங்களாலும் இழுக்கத் தொடங்கினாய். குருவாயூரப்பா! நோய்களிலிருந்து என்னை நீ காப்பாற்று.
Comments
*Namaste nātha bhagavan śivāya guru rūpine*
Salutations to You, Lord, Divine Shiva, in the form of Guru.
*Vidyāvatāra saṃsiddhyai svīkṛtānekavigraha*
You are the incarnation of supreme Knowledge, the perfection of spiritual attainment, the one accepted through many forms.
*Navāya navarūpāya paramārthasvarūpiṇe*
Your nature is beyond the new (changing) forms;
You are the embodiment of Absolute Reality, beyond all forms.
*Sarvājñānatamobheda bhānave citghañāye te*
To You, whose light is the illumination of all-knowing wisdom, and who is the mass of Consciousness.
*Svatantrāya dayāklupta vigrahāya śivātmane*
You are independent (self-existent), merciful; Your form is indivisible, and You are the Self which is auspicious.
*Paratantrāya bhaktānāṃ bhavyānāṃ bhavyarūpine*
To Those who are devoted to You (bhaktās), You are the ultimate being, in the form of all that is to come; the source of their becoming.
*Vivekināṃ vivekāya vimarśāya vimarśinām*
To those with discrimination (viveki), You are Discrimination itself; to those who reflect, You are the very act of reflection.
*Prakāśānāṃ prakāśāya jñānināṃ jñānarūpiṇe*
To the luminous ones, You are Light; to the wise, You are Wisdom incarnate.
*Purastāt pārśvayoḥ pṛṣṭhe namaskuryāduparyadhaḥ*
I bow to You at the front, at the sides, behind, and above — in every direction.
*Sadā maccittarūpeṇa vidhehi bhavadāsanam*
Always, in the form of my own mind, establish me at Your divine seat.
*Tvatprasādād ahaṃ deva kṛtakṛtyo’smi sarvadā*
By Your grace, O Lord, I am ever thankful; I am ever in the debt of Your kindness.
*Māyāmṛty*
*umahāpāśāt vimukto’smi śivosmyaham*
Freed am I from the great bonds of illusion, death, and the mighty chain of ego — I am Shiva-like / I am of Shiva.
*Prātaḥ prabhṛti sāyāntaṃ sāyādi prātarantataḥ*
From dawn to dusk, from dusk to dawn — morning, midday, evening, and night — always Your remembrance and worship.
*Yat karomi jagannātha tadastu tava pūjanam*
Whatever I do, O Lord of the universe, let that be Your worship.
*Sri Gurubhyo nama*
*Sri Mathre nama :* 💐
*May your journey be always guided towards the top .*
*Verse 11*
*Nama-s 27 & 28*
நிஜஸல்லாப மாது⁴ர்ய வினிர்ப⁴த்ஸித கச்ச²பீ ।
மன்த³ஸ்மித ப்ரபா⁴பூர மஜ்ஜத்-காமேஶ மானஸா ॥ 11 ॥
*நிஜஸல்லாப மாது⁴ர்ய வினிர்ப⁴த்ஸித கச்ச²பீ ।*
The sweet melody of Her words defeat the tuneful " Kacchapi" veena of goddess Saraswati
*மன்த³ஸ்மித ப்ரபா⁴பூர மஜ்ஜத்-காமேஶ மானஸா ॥*
The mind of Kameswara is drowned in the overflowing glory of Her sweet smile
🕉️ ஹரி ஓம் 🙏
ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே ஸஹஸ்ரநாம ஜபே பாராயணே விநியோக: || 23 ||
இந்த விஷ்ணு ஸகஸ்ரநாம ஸ்தோத்திரம் என்ற மஹா மந்திரத்திற்கு பகவான் ஸ்ரீ வேத வியாஸர் ருஷி, அனுஷ்டுப் எனும் சந்தஸ், மஹாவிஷ்ணுவாகிய பரம்பொருள் ஸ்ரீமந் நாராயணன் தேவதை. அம்ருதாம்சூத்பவ: பானு: என்ற நாமங்கள் பீஜம், தேவகீநந்தந: ஸ்ரஷ்டா என்ற நாமங்கள் சக்தி. உத்பவ: க்ஷோபண: தேவ: என்ற நாமங்கள் பரமமான மந்திரம். சங்கப்ருத் நந்தகீ சக்ரீ என்ற நாமங்கள் கீலகம். சார்ங்கதன்வா கதாதர: என்பது அஸ்திரம். ரதாங்க பாணி: அக்ஷோப்ய: என்ற நாமங்கள் நேத்திரம். த்ரிஸாமா ஸாமக: ஸாம என்பது கவசம். ஆனந்தம் பரப்ரஹ என்பது யோநி. ருது: ஸூதர்சன: கால: என்று திக்பந்தம். ஸ்ரீ விச்வரூப: என்று தியானம். ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு பிரியமாகும் பொருட்டு இந்த ஸஹஸ்ரநாம ஜபம் செய்வதே பயன். (ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் கைங்கர்யமாக அமையும் ஸஹஸ்ரநாம ஜபம் செய்வதே பயன்). 🌿✨
---
🙏 *ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பகுதி பகுதியாக பகிரப்படும்.*
*தினமும் படித்து, நம் வாழ்க்கையில் ஸ்ரீ ஹரியின் அருள் பெறுவோம்.* 🌸📿
*ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ*
https://www.srimahavishnuinfo.org
மதன் ஓர் வீடு கட்டினான் ...
மணம் எங்கும் ஓட வைத்தான்
மனமெல்லாம் உன் நினைவை
நிறைத்தான்...
வனமெல்லாம் கதம்ப செடி நட்டே
தனமெல்லாம் கொட்டி
எழில் மிகு வர்ணம் தெளித்தான்
அவன் போல் எழில் கொண்ட இல்லம் அதில் அன்று புது இல்லம் குடி புகல் விழா வைபவம்
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன் மலரானதே !!
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்கியதே !!
கன்னல் மொழி ரதி கேட்டாள்
*அன்பே*!
மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையா ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே ஆமாம் என்றான் மதன் ...
வீடே உன் முக வதனம்
அங்கே வாசலில் தொங்கும் தோரணங்கள்
உன் இரு புருவங்கள்
என்றே அறிந்தோர் கூற
ரதியும் மதனும் ரகசியம் அம்பலம் ஆனதே என்றே முகம் சிவந்தனரே 💐💐💐
🕉️ ஹரி ஓம் 🙏
*ஸ்லோகம்:*
சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் ஸுரேசம்
விச்வாதாரம் ககநஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருர்த் தியானகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைகநாதம்
பொருள்:
சாந்த வடிவினரும் பாம்பை பள்ளியணையாகக் கொண்டவரும்,
தாமரையை ஒத்த கொப்பூழையுடையவரும்,
தேவர்களின் ஈசனும், உலகின் ஆதாரமும்,
ஆகாயம் போன்றவரும், மேக நிறம் கொண்டவரும்,
சுப லக்ஷணங்கள் அமைந்த அங்கங்கள் உடையவரும்,
லக்ஷ்மீ தேவிக்கு இனியவரும், தாமரைக் கண்ணருமாகிய,
யோகினிகளின் ஹ்ருதயத்தில் தியானத்தால் உணரத்தக்கவரும்,
பவபயத்தை (ஜன்ம-மரணம்) நீக்குபவரும்,
எல்லா உலகிற்கும் தனி நாயகனுமான விஷ்ணுவை வணங்குகிறேன்.
🙏 ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பகுதி பகுதியாக பகிரப்படும்.
🌸 தினமும் படித்து, நம் வாழ்க்கையில் ஸ்ரீ ஹரியின் அருள் பெறுவோம். 📿
ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ
🔗 https://www.srimahavishnuinfo.org
அம்மா என்றழைத்து
ஆசையாய் ஓடிவந்தேன்
இன்பமாய் அரவணைத்தாய்
ஈவதற்ககோ அன்பு ஒன்று தான்
உன்னில் நான் கண்டதை
ஊருக்கு காட்டிவிட்டேன்
என்னையும் ஓரு பொருட்டாக
ஏற்றிவிட்டாய்
உன் மனதில்
ஐயமின்றி வாழ்ந்திடவும்
ஒன்றிலும் பற்றாமல் வாழ்ந்திடவும்
ஓங்காரத்தையும்
தந்துவிட்டாய்
அம்மா நீ பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் கல்பங்கள் வாழ்கவென்று உன்னையே
வேண்டுகிறேன்
*ஸம்சார யாத்திரை*
காலை எழுந்து இரவு வரும் வரை சம்ஸார யாத்திரை செய்கிறோம் ...
நான் ,எனது ,என் வீடு என் மக்கள் என்றே சொல்லித் திரிகிறோம் ...
நாளும் ஆசை வளர்த்தே மோகம், மாயை எனும் பள்ளத்தில் வீழ்கிறோம்...
சுழலும் பந்தம் இதில் பம்பரமாய் நாங்களும் சுழல்கிறோம் ...
பாசம் எனும் கயிறு உன்னிடம் இருந்தும் சுழல்வதில் பெருமை கொள்கிறோம்
அங்குசம் உன் கையில் இருந்தும் குரோதம் வளர்த்து பேதம் காண்கிறோம்
மனம் எனும் கரும்பு உன்னிடம் இருந்தும் மரம் ஏறும் கரடியாய் திரிகிறதே
இந்திரியங்கள் எதுவும் கேளாமல் தந்திரங்கள் புரிகின்றதே
ஒருநாள் ஓர் பொழுதே உன் நினைவு வரும் வழியில் முட்களை எடுப்பாயோ
சில நாள் வாழ்ந்தாலும் உன் புன்னகை கண்டு சிலிர்க்க வைப்பாயோ ...
உன் நாமம் சொல்வதற்கு உன் அருள் தேவை என்றே புரிய வைப்பாயோ ...
உதவும் மனம் தனில் உன் கரம் கொண்ட கரும்பை பிழிந்து இனிப்பு ரஸம் தருவாயோ 🙏
போற்றிப் பாடடி பொண்ணே…
மோடி காலடி மண்ணே…
வடக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான்… ஹோய்…
முக்குலத்த சேர்ந்த மூத்த மகன்தான்… ஹோய்…
ஆண் : என்ன சொல்ல மண்ணு வளம்…
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
ஆண் : மத்தவங்க கண்ணு படும்…
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
ஆண் : என்ன சொல்ல மண்ணு வளம்…
மத்தவங்க கண்ணு படும்…
அந்த கதை எப்பவும் உள்ள…
சந்ததிங்க கேட்க வேணும்…
ஆண் : நம்முயிர்க்கு மேல மானம் மரியாதை…
மானம் இழந்தாலே வாழத் தெரியாதே…
பெரிசல்லாம் சொன்னாங்க…
சொன்னபடி நின்னாங்க…
குணத்தால் மனத்தால் கலைமான் ஆனாங்க…
போற்றிப் பாடடி பொண்ணே…
மோடி காலடி மண்ணே…
ஆண் : என்ன சொல்ல என்ன சொல்ல ... சாதனைகள் கோடி உண்டு ...
வேதனைகள் கொண்ட மனம் பாராட்ட தெரியாதே
போதனைகள் சொல்வோர் உண்டு சாதனை இவர் போல் செய்வோர் உண்டோ
ஆண் : முன்னோருக்கு முன்னோரெல்லாம்…
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
ஆண் : இன்னாருன்னு கண்டு கொள்ள…
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங்
முக்குலத்தோர் ஆட்சி தான் …
முத்து முத்து வெற்றிகள் தான்
எக்குலமும் வாழ்த்து சொல்லும்…
எங்களுக்கு கொண்டாட்டம் தான்
ஆண் : அழகான அரசாட்சி
ஆணைமேல அம்பாரி…
அம்பானிகள், அதானிகள் தொடும் பாத மடி
கணக்கா பொறுப்பா கடல்போல் ஏராளம்
போற்றிப் பாடடி பொண்ணே…
மோடி காலடி மண்ணே…
ஜம்முவும் காஷ்மீரும் இந்தியாவின் கீரிடங்கள் ...
மணிப்பூரும் , அசாமும் இந்தியாவின் பாடங்கள்
இந்தியாவை பிரிக்க துடித்தால்
சிந்தூரம் தெருவெங்கும் ஓடடும் என்றே
பிறர்க்காய் வாழும் உயிர் ஒன்று
வாழ்க அது பல்லாண்டு
என்றே வாழ்த்து சொல்லடி பெண்ணே !
போற்றிப் பாடடி பொண்ணே…
மோடி காலடி மண்ணே…
🕉️ ஹரி ஓம் 🙏
*ஸ்லோகம்:*
மேகச்யாமம் பீதகௌஸயவாஸம்
ஸ்ரீவத்ஸாகம் கௌஸ்துபோத்பாஸிதாங்கம் |
புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக
நாதம் 27
மேகம் போன்று கருநீல நிறமுள்ளவரும்
செம்மஞ்சள் நிறமுள்ள பட்டாடை உடுத்தியவரும்,
ஸ்ரீவத்ஸம் எனும் மறுவைச் சிறப்படையாளமாக கொண்டவரும்,
கௌஸ்துபம் எனும் மணியால் ஒளிபெற்ற மார்பகமுள்ளவரும்
புண்ணியத்தால் அருகில் நெருங்கப் பெறுபவரும்,
தாமரை போன்று அலர்ந்து விரிந்த கண்களுள்ளவரும்,
எல்லா உலகங்களுக்கும் ஒப்பற்ற தலைவருமான விஷ்ணுவை வணங்குகிறேன்.🙏🙏🙏
21st September
*Mind Reading should Begin from One’s Own Self*
It is no great art or acquisition to be able to read the mind of others. If your mind is in tune with that of the other person, you can read his mind; but this will be possible only if your mind is pure. There is a certain discipline, for achieving this. So long as this discipline is practiced this power exists. When it stops the power is lost. One who uses such power commercially, need not necessarily be graced by God; and it is worthless if God’s grace is not there.
It is not essential to know each other’s language for knowing the mind. Suppose a beggar from a different region comes to your doorstep and sings in his language. You cannot understand his song, but you certainly understand that he is begging. Similarly, one may understand the broad outline of the thoughts in the other person’s mind. It does not matter if the actual meaning of the words is not understood. If the listener comes with a keen interest, he automatically understands the essence of the speech. However, if the listener is not keen, then in spite of the clarity of the speaker, he does not really understand. Philosophical thought is eternal, never-changing. It has to be expounded in different languages according to the needs of place and time. Suppose we are travelling in a train. We remain on our seat but are moving with the train continuously. Similarly, if we stick to God, we shall reach our destination.
The lesson to learn from Rama’s life is that while in this human body, you should do your duty properly in respect of everyone. Stand before Rama and tell Him, ‘I am doing such and such a thing;’ and then do it. Remember God while doing the work. You will then feel contented. If you remember, ‘whatever I do is due to the grace of God,’ how can pride grow? Focus the searchlight inwardly on yourself. Find out where you have gone wrong. Don’t learn logic and become merely argumentative. Do not scrutinize the sayings of saints, for they are based on their personal experience. Their advice is in very straight-forward language. People start their scrutiny from the question, whether God exists or not; they get confused; and ultimately their progress is thwarted. Scrutiny must be done accepting God as a fact.
* * * * * * * * *
நம் இந்துமதம் வார்தைகளாலும் ஆயுதங்களாலும் பண பலத்தினாலும் அதர்மம் மட்டுமே செய்யும் பொறுப்புள்ள பதவிகளில் இருக்கும் அதிகாரிகளாலும் தாக்கப்படுவது இன்று புதியது அல்ல ..
அப்பர் வாழ்ந்த காலத்திலேயே இருந்த ஒன்று ...
நம்மிடம் இருக்கும் பொறுத்துக்
கொள்ளும் தன்மையை ( thick skin ) மற்றவர்கள் நம் பலவீனம் என்று கருதுவதால்
அவர்கள் குட்ட குட்ட குனிந்து கொண்டே இருக்கிறோம் ...
அவர்கள் குட்ட மறந்து போனாலும் நாம் கேட்டு வாங்கி பெற்றுக்
கொள்கிறோம் ...
எந்த மதத்திலும் இல்லாத தனித்தன்மை (பெருந்தன்மை என்று நாம் சொல்லிக்கொள்கிறோம்) நம் இந்து மதத்தில் மட்டுமே இருக்கிறது ...
LIC policy கூட சமயத்தில் mature ஆகிவிடும் ...
நமக்கு தான் maturity , ஒற்றுமை எப்போ வரும் என்று தெரியாது ....
சரி நமக்குள் வேறு பாடுகள் இல்லையே என்று கூட பெருமை பட்டுக்கொள்ள முடியவில்லை ..
பிரம்மம் ஒன்றுதான் என்று தெரிந்தும்
இந்த தெய்வம் உயர்ந்தது அந்த தெய்வம் தான் கேட்டதை கொடுக்கும் என்று சண்டை போட்டுக்
கொள்கிறோம் ...
சிவன் கோயில் வழியாக சென்றாலே பாவம் என்று நினைக்கும் பல வைஷ்ணவர்களை எனக்குத் தெரியும் ...
அதே போல் சிவன் தான் உயர்ந்த தெய்வம் என்று அடித்து சொல்லும் நண்பர்களையும் தெரியும் ..
காஞ்சி புரத்தில் வட கலை தென் கலை இன்றும் சர்ச்சையில் , வழக்கில் இருக்கிறது ...
வரதனே நேரில் வந்து தீர்வு சொன்னாலும் போட்டுக்
கொண்டிருக்கும் சண்டை ஒரு முற்றுப்புள்ளி பெறாது ...
உள்ளங்களில் இவ்வளவு பள்ளங்கள் இருப்பதால் போறவன் வருகிறவன் நம்மீது கல்லெறிந்து விட்டு போகிறான் ...
இன்று இருக்கும் பிற மதத்தவர்கள் எண்ணிக்கையில் 90% ஒரு காலத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் ....
பணம் பதவி மாற்றி விட்டது அவர்களை ...
இந்து மதம் இன்னும் பல கல்பங்கள் இருக்கும் ...
இதில் சந்தேகம் இல்லை
ஆனால் இந்து மதத்தை வளர்ப்பவன் மதம் மாறியவனாக இருக்க நாம் வழி வகுக்கக் கூடாது ...
பகவத் கீதையில் பகவான் அர்ஜுனனிடம் உன் வேலை போரிடுவது .அது உனக்கு விதித்த கடமை என்கிறார் ...
நம் கடமையும் வரும் எதிரிகளை அணைத்து கொள்வதில் இல்லை...
காரி துப்புவர்கள் மீது சீறி பாய வேண்டும் ...
கல் எடுத்து நம்மீது வீசுபவர்கள் மீது acid ஊற்ற வேண்டும் ...
Eye for an eye இல்லை இது ...
சாது மிரண்டால் என்னவாகும் என்பதை பிறர்க்கு உணர்த்த வேண்டிய தருணம் இது ....
ரவி
கொலு வைத்தோம் அதிலே சமத்துவம் கண்டோம் ...
வைத்த பொம்மைகள் ஜாதி பேதம் பேசுவதில்லை
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று தரம் பார்ப்பதில்லை ..
முதல் படியில் நாட்டுக்கோட்டை செட்டியார் நகை வியாபாரம்
கூடவே ரதி என வரும் மணப்பெண் ...
நாதஸ்வரம் , மேள தாளம் ...
யசோதை சேலைக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் குட்டிக்கண்ணன் ...
வரி நீங்கியபின் விலை குறைவில் பால் சுரக்கும் ஆவினங்கள்
இரண்டாம் படிக்கட்டில் ஷீரடி சாய் பாபா
அவருடன் பேசிக்கொண்டு ஆசி வழங்கும் புட்டபர்த்தி சாய் பாபா ...
மான் தேடும் ராமன் ... மதி இருந்தும் விதி படி செல்லும் சீதை ...
லக்ஷ்மணன் கோடு போட்ட இடத்தினிலே ரோடு போடும் ராவணன் ....
மூன்றாம் படிக்கட்டில் மூன்று தேவிகளின் ஆசிர் வாதம் ...
மூலை முடுக்கெங்கும் மாற்று மொழி பேசும் குட்டி குட்டி பொம்மைகள்
நான்காம் படிக்கட்டில் நான்மறை பிரம்மா
அவன் அருகில் யாழ் எடுத்து வாசிக்கும் சகலகலா வல்லி
ஐந்தாம் படிக்கட்டில் ஐந்தெழுத்தின் நாயகன் ... அருகில் பாகம் பிரியாள்
ஆறாம் படிக்கட்டில் ஆறுமுகன் கூடவே இச்சா கிரியா சக்திகள் ...
வேல்விழிகள் கண்டு வேல் கொஞ்ச
மயில் நடமாடும் ஆனந்த சோலையிலே
வினை தீர்க்கும் வேழம் உண்டு
வேண்டியது கொடுக்கும் லக்ஷ்மி எனும் பேழை உண்டு ஏழாம் படிக்கட்டில்
எட்டாம் படிக்கட்டில் சபரி உண்டு
சபரி மலையும் உண்டு
எட்டாம் படிக்கட்டில் பதினெட்டு படிகள் உண்டு
ஒன்பதாம் படிக்கட்டில் நடமாடும் தெய்வம் உண்டு ..
அந்த தெய்வம் எடுத்த பத்து அவதாரங்கள் உண்டு
பஜகோவிந்தம் பாடிய சங்கரன் உண்டு ...
எது இல்லை என்று சொல்லுவது கடினம்
எல்லாம் தரும் துர்க்கை காட்சி கொடுக்க
இது இல்லை அது இல்லை எனும் வார்த்தை இனியும் நாவில் பிறந்திடுமோ ?
*_அம்மா_* ...
நீ செய்த யுத்தங்கள் எதுவுமே ஓர் வினாடியில் முடிந்ததாய் கதையே இல்லையே !!
பாண்டாசூரன் வதம் 18 நாட்கள்
மகிஷன் வதம் 10 நாட்கள்
சண்ட முண்ட வதம் 15 நாட்கள்
உன்னால் அரைநொடியில் அவர்களின் கதைகளை முடிக்க முடியுமே ...
ஏன் அதிக நாட்கள் எடுத்துக்கொண்டாய்
சாதாரண மனிதர்களைப்போல்
சிரித்தாள் அன்னை ....
அரை நொடிக்கும் குறைவாகவே அவர்கள் கதைகளை முடித்திருக்க முடியும்
ஆனால் அது அழகு இல்லை ....
ஏன் தெரியுமா ?
தெரியாது தாயே சொல்லுங்கள் என்றேன்
சிரித்துக்கொண்டே அன்னை சொன்னாள்
தானவர்கள் மெத்த படித்தவர்கள் கடுமையான தவம் செய்து பல வரங்களை பெற்றவர்கள் ...
வானவர்களாக இருக்க வேண்டியவர்கள் தடம் புரண்டு தானவர்களாகி விட்டார்கள் பேராசையினால்....
அவர்கள் பக்தி , வீரம் மதிக்கப்படவேண்டும்
அவர்கள் சிறந்த வீரர்கள் என்ற அவர்களது தன்னம்பிக்கையை நாம் வீணாக தளரவிடக்கூடாது
எப்பவும் பிறரை மதித்து அறிவு புகட்ட வேண்டும் ...
ஒரே நொடியில் நான் அழித்திருந்தால் பாவம் அவர்கள் மிகவும் தாழ்வு மன பான்மையுடன் மடிந்திருப்பார்கள் ...
தங்களை எதிர்த்தது மாபெரும் சக்தி ... நாமும் சளைக்காமல் நம் வீரம் முழுதும் வெளிப்பட சண்டை போட்டோம் ... இந்த சந்தோஷத்தில் கண் மூடினார்கள் ...
இப்போ சொல் ... நான் நேரம் எடுத்து சண்டை போட்டது தவறா ?
இல்லை தாயே பகைவர்களுக்கும் இரக்கம் காட்டுவதால் வாக் தேவிகள் உன்னை ஸ்ரீ மாதா என்று சொல்வதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது ?
அம்பாள் ... சிரித்துக்கொண்டே சரி நான் கிளம்பட்டுமா ?
இன்னும் ஒரே கேள்வி அம்மா ...அதற்கும்.....
சரி நீ விடமாட்டாய் சொல் பதில் சொல்கிறேன்
அம்மா ... நீ மஹிஷனை வென்ற போதும் சண்ட முண்டர்களை வென்ற போதும்
திரிமூர்த்திகளும் எல்லா தேவர்களும் தங்கள் அம்சத்தையும் ஆயதங்களையும் உனக்கு தந்தனர் என்று படித்தேன் ...
தாயே உனக்கு பிறர் உதவி எதற்கு ?
எல்லாம் நீ தானே பின் ஏன் இவர்களிடம் எல்லாம் பெற்றுக்கொண்டாய் ?
நான் சக்தி எல்லோரிடமும் இருக்கிறேன் ...
அவர்களிடம் இருக்கும் என்னை நானே பெற்றுக்
கொண்டேன் போர் செய்வதற்காக ...
நீ எனக்கு நான் படைத்த நீர் நிலம் நெருப்பு வாயு பூக்கள் இவைகளை கொண்டு பூஜை செய்கிறாய் ...
அதை நான் கேட்டு வாங்கிக்
கொண்டேன் என்று சொல்வதா ?
நான் கேட்டு வாங்கி கொள்வது உன் பக்தியை தூய உள்ளத்தை ....
மற்ற எல்லாமே நான் படைத்தது ...
தேவர்களிடம் இருந்து நான் வாங்கிக்கொண்டது அவர்களது சரணாகதி எனும் ஆயுதங்கள்
பக்தி எனும் அவர்களது அம்சங்கள் ....
*அம்மா* ... இதைவிட இந்த பாமரனுக்கு யார் அம்மா இவ்வளவு சுலபமாக புரியவைப்பார்கள் ?
பச்சை புடவைக்காரி வாழ்த்தி விட்டு புன்சிரிப்பும் தந்துவிட்டு
*மீண்டும் வருவேன்* என்று சொல்லி மறைந்தாள் 💐💐💐
எவ்வளவு கரங்கள் அதில் தான் எவ்வளவு வித விதமான ஆயதங்கள் ?
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ...
கேள்வி கேட்டவரோ மெத்த படித்தவர் ...
வியாக்கியானம் செய்வதில் கெட்டிக்காரர் ...
நானோ ஒரு ஞான சூன்யம் ...
என்ன பதில் இவருக்கு சொல்வது ?
சரி அவள் விட்ட வழி என்று கீழ்வருமாறு சொன்னேன்
போன மாதம் நீங்கள் Apollo வில் heart surgery செய்து கொண்டீர்கள் அல்லவா ?
ஆமாம் ... பல கூட்டுப் பிராத்தனைகள் நடந்தன ...
முகம் தெரியாத பலர் எனக்காக வேண்டிக்
கொண்டனர்...
வெளி நாட்டிலிருந்து கூட சில மருத்துவர்கள் வந்தனர் என்றார்
இப்படி உங்களுக்கு அறிமுகம் ஆகாத பலர் பண உதவி , கூட்டுப் பிராத்தனை செய்தார்கள் ...
இவைகளைத்தான் நான் அம்பாளின் எண்ண முடியாத கரங்கள் என்பேன் ....
எப்படி உங்களால் உங்களுக்கு இருக்கும் well wishers ஐ எண்ண முடியாதோ
அதே போல் எங்கிருந்தோ வரும் உதவிகள் ஆசிர் வாதங்கள் என்பவைகள் தான் அவள் கரங்கள் ....
நிறைய உதவி/ஆசிகள் தேவை என்றால் அவள் கருணை கூர்ந்து தன் கரங்களை அதிகப்படுத்திக்
கொள்கிறாள்...
இதில் அவள் கரங்களின் எண்ணிக்கை 18 ஆகவும் இருக்கலாம் இல்லை ஆயிரமாகவும் இருக்கலாம் ...
சிறிய கஷ்டங்களுக்கு அவள் தன் கரங்களை அதற்கேற்ப சுருக்கிக் கொள்கிறாள்
அது இரண்டாகவும் இருக்கலாம், நான்காகவும் இருக்கலாம் ...
அவள் கரங்களில் இருக்கும் வித விதமான ஆயதங்கள் ...
"பண உதவி , நல்ல இதயங்களின் சேர்க்கை , கொடை, வாழ்த்துக்கள் .... "
கேட்டவர் அம்பாள் அருளால் திகைத்து நின்றார் ... 👍
*Prathama* - 🌚
I will leave all my Anger
*Dwitiya* - 🧡
I will stop Judging People.
*Tritiya* - 🤍
I will leave all my Grudges.
*Chaturthi* - ❤️
I will forgive myself & everyone
*Panchami* - 💙
I will Accept myself & every one AS they are
*Shashti* - 💛
I will love myself & everyone unconditionally
*Saptami* - 💚
I will leave all my feelings of Jealousy & Guilt
*Ashtami (durgaashtami)* - 🦚
I will leave all my Fears
*Navami (mahanavami)* - 💜
I will offer Gratitude for all the things I have and all which I will get.
*Dashami (vijayadashami)* -
There is abundance in the universe for all and I will always tap the same and create what I want through unconditional love, Sadhana, nishkama seva and faith.
Wishing all a blessed Navaratri ...
🙏🏻🕉✨💫🌈⭐🎊🎉
இல்லம் வந்து சேர்ந்த உனை இனிப்புகள் கொடுத்து வரவேற்றோம் ...
*அபர்ணா அன்றோ நீ ..*
கடன் ஏதும் வைக்காமல் எங்கள் எல்லோர் வாழ்வையும் இனிக்க வைக்கின்றாய்
படிக்கட்டுக்கள் பல வைத்தே பவானி உன்னை வரவேற்றோம் ...
*அபர்ணா அன்றோ நீ*
கடன் ஏதும் வைக்காமல் அனைவருக்கும்
பவானித்வம் தருகின்றாய்
பல பல பொம்மைகள் ... பாங்குடனே வைத்தே உனை வரவேற்றோம்
*அபர்ணா அன்றோ நீ ...*
கடன் ஏதும் வைக்காமல்
அனைவரையும் பொம்மைகளாக்கி நீ விளையாடுகிறாய்
பொக்கை வாய் காந்தியும் முண்டாசு கவிஞனும் சுபாஷ் சந்திர போஸும் , காமராஜரும்
வந்தே மாதரம் என்றே முழங்க உனை வரவேற்றோம் ...
*அபர்ணா அன்றோ நீ...*
கடன் ஏதும் வைக்காமல்
பாரத மாதாவாய் வந்தே பாரை காப்பேன் என்றாய்
அவதாரங்கள் எடுத்து எடுத்து அரங்கன் ஓய்ந்து போக ,
ஆடி ஆடி ஒருவன் களைத்துப்போக
படைத்து படைத்து ஒருவன் உறங்கி போக
மேள தாளம் கொண்டு உனை வரவேற்றோம்
*அபர்ணா அன்றோ நீ...*
கடன் ஏதும் வைக்காமல் ஐந்தொழிலும் நானே செய்வேன் என்றே சிரித்து நின்றாய் ..
நாங்கள் மலைத்துப்
நின்றோம் ..
உன்னிலும் கருணை அதிகம் கொண்டோர் உண்டோ என்றே .....🙏
24th September
*Mutual Behaviour in the Family*
In this human life, one should do appropriate duty towards others. There should be perfect harmony in the house. The young should not find faults with elders. Children should follow the righteous behaviour of the father, this enhances the reputation of the family. The elder members, on retirement, should regard themselves as the servants of God. A wife should have no other deity than the husband. All should stick to the name of God. He who behaves according to his inherent normal nature in his youth, can easily do so in his old age; his old age will not at all be painful to him. We behave unnaturally, that is, with attachment; in old age our capacity for work gets reduced, but attachment remains unchanged, and that becomes the root cause of trouble. The person who is free from attachment and insistence in his old age, will be liked by others, in spite of his bodily weakness. His hearing may be impaired, his eyesight may get affected, he may not be able to recollect past events, his sleep may diminish; in spite of all this, none may feel like avoiding him, and he himself will not be tired of life. How splendid it will be if our ego melts away in old age! There will be no sorrow if the feeling of doership is absent and the tendency, ‘but I tell you this’ is eliminated.
Everybody in the family should introspect, find out his own defects, and try to eliminate them. The age between sixteen and twenty-five years is a period of growth of intellect. For its proper growth, some regulation is necessary. The best regulation is to obey the parents; because they don’t have any motive except the welfare of the children. How can we hope to learn everything in the world by self-experience? Therefore we should certainly benefit from the experience of our parents. Not that our parents will not err sometimes, for to err is human. But their error will not do permanent damage to us because they have only our well-being at their heart. No one can foretell whose good luck brings a good period to the family; therefore, never feel despaired.
The greater the righteous deed, the greater are the obstacles. Constant remembrance of God is the greatest righteous deed. We should therefore resolutely and with a doubt-free mind chant nama and live in its joy.
* * * * * * * * *
ஆமாம் இரண்டும் அழகின் அலைகள் ...
சுந்தரகாண்டமும் தேவியின் மாஹாத்மியம் சொல்கிறது ...
சௌந்தரிய லஹரீயும் அதைத்தான் செய்கிறது
கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம் ...
சுந்தரம் என்றால் அழகு ... சௌந்தர்யம் என்றாலும் அழகு
சுந்தரகாண்டத்தில் சீதையின் சௌந்தரியங்களை அனுமன் வர்ணிக்கிறான் ...
இங்கே ஆதி சங்கரர் வர்ணிக்கிறார் .
சௌந்தர்ய லஹரியில் ஆதார சக்கரங்களைப் பற்றியும் ஸ்ரீ வித்யா உபாசனையைப் பற்றியும் வர்ணனை உள்ளது ...
இங்கே சீதை தான் அம்பாள் ...
*மூலாதாரம்* தான் அசோகவனம் ...
குண்டலினியாக சீதை சுருண்டு படுத்துக்
கொண்டிருக்கிறாள்...
ப்ரம்மக்ரந்தி, விஷ்ணுக்ரந்தி
ருத்ரக்ரந்தி எனும் முடிச்சுக்கள் தான் சூழ்ந்திருக்கும் அரக்கிகள்
(க்ரந்தி என்பது நாடிகளின் முடிச்சையும் நாடியினுள் பாயும் எண்ணங்களில் பூர்வ வாசனையால் ஏற்படும் சிக்கல்களையும் குறிக்கும்)
இங்கே தான் பிராண வாயு வாக அனுமன் இருக்கிறார் 🐒
மூலாதாரத்தில் குண்டலினியாக இருக்கும் சீதை மரத்தின் மேலிருந்து ஒலிக்கும் வேத வாக்கை ( ராம் , ராம்) கேட்டு விட்டு மெல்ல மெல்ல எழுந்து அடுத்த கட்டமாக *ஸ்வாதிஷ்டானத்தை* அதாவது நம்பிக்கை எனும் ஆதார சக்கரத்தை அடைகிறாள்
அனுமன், தான் யார்? ராமன் தனக்கு சொன்ன விஷயங்கள் என்ன? என்பதை எடுத்துச் சொல்கிறார் சீதையிடம் ... இதுதான் *மணிபூரகம்*
பிறகு சீதையை அங்கிருந்து கிளப்பி மெதுவாக ராமன் தந்த அங்குலியை தந்து அவர்கள் பரிமாறிக்கொண்ட அந்தரங்க விஷயங்களை சொல்கிறான்
அனுமன் இதுவே *அநாஹத* சக்கரம்
*விசுக்தி சக்ரத்திற்கு* சீதை வருகிறாள் ...
ராமனை பற்றி அனுமன் சொல்ல சொல்ல ராமனை சிம்மாஸனத்தில் இருக்கச் செய்து, சந்திரகலாரூபமான ஸ்படிகமணிகளால் மானசீக பூஜை செய்கிறாள் ,
அனுமன் மெதுவாக உறுதியாக சீதையிடம் ராமன் வந்து மீட்டுவான் தங்களை தாங்கள் விதித்த கால கடு முடிவதற்குள் என்கிறான்
ராவணன் கண்டிப்பாக கொல்லப்படுவான் என்று உறுதி அளிக்கிறான்.
இதுவே
*ஆஜ்ஞா சக்கரம்*
அனுமன் அங்கிருந்து சீதையை சஹஸ்ரார சக்ரத்திற்கு அழைத்துச் செல்கிறான் ...
எப்படி??
தன் வீரத்தின் மூலம் பக்தியின் மூலம் சரணாகதியின் மூலம் ...
இதுவே *ராம பட்டாபிஷேகம் ...*
ஜீவாத்மா பரமாத்வாவுடன் ஒன்றாக இணைகிறது ...
அங்கே அமிர்தம் மழையாய் கொட்டுகிறது ...
சீதையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ...
தன் கடமை முடிந்து விட்டது என்று அனுமன் எனும் பிராணவாயு தியான நிலைக்கு செல்கிறது ...
இதைத்தான் ஆதி சங்கரர் தனது சௌந்தரிய லஹரியில் 9, 10 & 11 வது ஸ்லோகங்களில் அழகாக வர்ணிக்கிறார் ....
இப்பொழுது தெரிகிறதா சுந்தர காண்டமும் சௌந்தர்ய லஹரீயும் ஒரே கிரந்தம் தான் என்று ..
ஆதிசங்கரர் வால்மீகியாக சுந்தர காண்டத்தில் தெரிகிறார் ...
சௌந்தர்ய லஹரீயில் பாஸ்கரராயராக தெரிகிறார் ...
எல்லாம் ஒருவரே ! எல்லாமே சக்தி மயம் தான் !!💐💐💐
முத்துசுவாமி தீக்ஷிதர் கோயிலில் கீர்த்தனைகள் பாடி விட்டு சற்றே சோர்வுடன் வீடு திரும்பினார் ...
அவர் காலடியில் செல்வதைக் கொட்ட கோடானு கோடி பணக்காரர்கள் இருந்தும் அவர்கள் எல்லாம் என்னைப்போல் பணக்காரன் இல்லை என்பார் ...
சிந்தாமணி கற்களின் குவியலாக அம்பாள் கருணை பெருகி வருவதே உண்மையான செல்வம் என்று வாதாடுவார்
மனைவி சற்றே மாறுபட்டவள் ...
அதிக ஆசைகள் இல்லை என்றாலும்
ஊர் மதிக்க வேண்டுமே என்பதால் கொஞ்சமாவது பொன் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைப்பவள்
வீட்டுக்கு வந்த தீக்ஷிதர் அம்பாள் இருக்கும் பூஜை அறைக்குள் சென்று சௌந்தர்ய ளஹரீ சொல்ல ஆரம்பித்தார் ...
மூன்றாவது ஸ்லோகம்
அவித்³யானாமந்த-ஸ்திமிர-மிஹிரத்³வீபனக³ரீ
ஜடா³னாம் சைதன்ய-ஸ்தப³க-மகரந்த-³ஸ்ருதிஜ²ரீ ।
த³ரித்³ராணாம் சிந்தாமணிகு³ணனிகா ஜன்மஜலதௌ⁴
நிமக்³னானாம் த³ம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய ப⁴வதி
அம்மா ! கேட்டவருக்கு கேட்டதை கொடுக்கிறாய் ...
அவர்களுக்கு ஓர் மோஹத்தையும் உண்டாக்கி அவர்கள் தாங்கள் கேட்பதுதான் மிகவும் உசத்தி எனும் எண்ணத்தையும் உருவாக்குகிறாய் ...
ஆனால் உண்மையான அவித்யா , ஜடம் , தரித்திரம் எது/ யார் தெரியுமா ?
நீதான் மிக உசத்தி எனும் நிலை புரியாதவர்கள்...
நீ தான் மாணிக்கம் , ரத்னம் , சிந்தாமணி , அமிர்தக்கடல் , கற்பக விருக்ஷம் என்று புரிந்தவர்களை எப்படி வராகன் தன் கோரை பற்களால் கடலுக்கு அடியில் இருந்த பூமியை தூக்கி வெளி கொண்டு வந்தரோ அதுபோல் நீயும் ஸம்ஸார கடலில் சிக்கி கொண்டு மீட்டு வெளியே கொண்டு வந்து அந்த பரசிவத்துடன் சேர்கிறாய் .....
அவர் கண்களில் ததும்பியது நீர் ...
மனைவி உள்ளே வந்து அவருடன் சில வார்த்தை பேச வேண்டும் என்றாள் ..
என்ன வேண்டும் என்றார் தீக்ஷிதர் ...
என் கழுத்தை பாருங்கோ ... மஞ்சளை வைத்து தாலி அணிந்துள்ளேன் ...
காதில் மூக்கில் எதுவும் இல்லை ..
ஒரு குண்டுமணி தங்கம் கூட வீட்டில் இல்லை ...
வெளியே வந்தால் யார் என்னை மதிப்பார்கள் ... ?
நீங்கள் தான் மிகச்சிறந்த சக்தி உபாசகர் ... அம்பாள் பிரத்தியக்ஷ்மாக எதிரே தோன்றுவாள் ..
ஊரெல்லாம் உங்களை புகழ்கிறார்கள் ...
எனக்காக அம்பாளிடம் சிறிது நகை கிடைக்க வழி செய்ய முடியுமா ?
அவளின் ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கும் மன வேதனை தான்
சிரித்தார் தீக்ஷிதர்...
சௌந்தர்ய லஹரியில் மூன்றாவது ஸ்லோகம் உனக்கு சரியாக பொருந்துகிறது ...
பொருள் செல்வம் இருப்பவர்கள் , மெத்த படித்தவர்கள் , ஜடமாய் இருப்பவர்கள் இவர்கள் எல்லோருமே உண்மையில் தரித்திரர்கள்....
அம்பாள் எனும் பொருள் செல்வமே மிக மிக உயர்ந்த செல்வம் ...
சரி உனக்கு புரியாது ...
உனக்காக அம்பாளிடம் கோரிக்கை வைக்கிறேன் ...
அவள் பாடு உன் பாடு நான் யார் இதில் ....
தீக்ஷிதர் அம்பாளிடம் சொல்லி வேதனை படுகிறார் ...
நீதான் வேண்டும் என்று என் மனைவிக்கு கேட்கத் தெரியவில்லையே !
இரவு ....தீக்ஷிதர் உறங்கி விட அவர் மனைவியின் கனவில் அம்பாள் வருகிறாள் ...
சர்வ ஆபரண பூஷிதையாய் , ஜகத் ஜோதியாய் ... ஆயிரம் சூர்ய ஒளி கொண்டு முகத்தில் பொங்கும் புன்னகையுடன்
தீக்ஷிதர் மனைவி பதறிப்போனாள்..
இதோ பல ஆபரணங்கள் அணிந்திருக்கிறேன்
.. இதில் எது வேண்டும் என்று சொல் ...
கயற்றி கொடுக்கிறேன்
தீக்ஷிதரை தொந்தரவு செய்யாதே
அவன் பாட்டு உபாசனைகள் செய்யட்டும் ..
இனி எது வேண்டும் என்றாலும் என்னை நேரிடையாக கேள் ...
கண்களில் பொங்கும் கண்ணீர் .
அம்பாளின் பாதங்களில் விழுந்தாள் தீக்ஷிதர் மனைவி
க்ஷமா பிராத்தனை செய்து மன்னிக்க வேண்டினாள் ...
லௌகீக ஆசைகள் அவளை விட்டு அறவே நீங்கியது ..
அடுத்த நாள் அவர் மனைவி தன் கனவை சொல்ல இனி ஒரு பொருளும் விரும்ப மாட்டேன் என்று உறுதிமொழியும் தந்தாள் ...
அப்பொழுது தீக்ஷிதர் பாடிய கீர்த்தனை
ஹிரண்மயிம் லக்ஷ்மீம் சதா பஜாமி |
ஹீன் மானவ ஆஷ்ரயம் த்யஜாமி ||
அம்பாள் தானே பார்வதி , லட்சுமி , சரஸ்வதி .... லட்சுமியாக கனவில் வந்ததால் கீர்த்தனை லட்சுமியை வர்ணிப்பதாக அமைந்தது
கடைசி நாட்களில் ஒரு நாள் தீக்ஷிதர் தன் சிஷியர்களை கூப்பிட்டு
மீனாக்ஷி மே முத3ம் தே3ஹி
மேசகாங்கி3 ராஜ மாதங்கி3
மீனாக்ஷி மே முத3ம் தே3ஹி
மேசகாங்கி3 ராஜ மாதங்கி3
மான மாத்ரு2 மேயே மாயே
மரகதச்சா2யே ஸி1வ ஜாயே
*மீன லோசனி பாஸ1 மோசனி*
மானினி கத3ம்ப3 வன வாஸினி
என்ற தன் கீர்த்தனையை பாட ச் சொன்னார்
பாஸ மோச நீ ... பந்தங்களை களைப்பவளே என்ற வரி வரும் போது தீக்ஷிதரின் உயிர் அம்பாளின் பாதங்களில் நிரந்தரமாய் சென்று அடைந்தது ....
மிக உயர்ந்த அறிவு , செல்வம் , புகழ் , வலிமை அம்பாளைப்பற்றிய சிந்தனைகள் மட்டுமே
மற்றவை அனைத்தும் அழியக்கூடியவை கள்...
நிரந்தரம் இல்லாதவைகள்...
👣👣👣👣👣👣👣👣
சுந்தரே சுந்தரி சீதா; சுந்தரே சுந்தரம் வனம்!
சுந்தரே சுந்தரம் காவ்யம்; சுந்தரே சுந்தரோ கபிஹி!
சுந்தரே சுந்தரம் மந்திரம்; *சுந்தரே கிம் ந சுந்தரம்??”*
இது "சுந்தர காண்டத்தின்" முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு அழகான ஸ்லோகம் .
இது இறுதியில் சுந்தர காண்டத்தில், அழகாக இல்லாத ஒன்று எது? (" *சுந்தரே கிம் ந சுந்தரம்??"* ) என்று கூறுகிறது .
"சுந்தர காண்டத்தில்" ,
ராமர் அழகானவர்; "சுந்தர காண்டத்தில் ", சீதை அழகானவர்!
"சுந்தர காண்டத்தில்" , கதையே மிகவும் அழகானது!
"சுந்தர காண்டத்தில்", காடு அழகானது!
"சுந்தர காண்டத்தில்" , முழு ராமாயணமும் மிகவும் அழகானது!
"சுந்தர காண்டத்தில்" , அனுமன் அழகானவர்!
இறுதியாக, "சுந்தர காண்டத்தில்" ஒவ்வொரு ஸ்லோகமும் அழகானது!
இவ்வாறு, இந்த காண்டம் அழகான ராமர், எப்போதும் அழகான சீதை மற்றும் கடல் தாண்டி குதித்து, தனது முழு பக்தியுடனும் சரணாகதியுடனும் சீதைக்கு ராமரின் மோதிரத்தை அளித்த ஹனுமான் என்று அழைக்கப்படும் அழகான "ராம-தூத" பற்றி பேசுகிறது!
இதனால், "சுந்தர காண்டம்" முழு ராமாயணக் கதையிலும் *ரத்தினமாகக்* கருதப்படுகிறது.🐒
இன்று நான்காம் நாள் ...
நான்மறைகள் நாடி, தேடி ஓடி வந்து உன் பாதங்கள் சரண் புகும் அழகை கண்டேன் !!
நான்முகன் வந்து பூஜை செய்ய
கச்சபீ வீணையுடன் கலைமகள் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லும் அழகை கண்டேன் !!
தமிழ் பண்புகள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு எனும் நான்கும் காமேஸ்வரன் உனை பார்க்க ,
ஓடி வந்து முகத்தில் பூச்சூடக் கண்டேன்
நான்கு கரங்களும் பாசத்தையும் அங்குசத்தையும் மனம் எனும் கரும்பையும் இந்திரியங்கள் எனும் மலர் கணைகளையும் தாங்கும் சுந்தர வடிவம் கண்டேன்
சொர்க்கம் கிட்டினும் வேண்டேன் ... இக்காட்சி ஒன்று போதும் ... இணையில்லா முக்தி பெற பவாநீத்தவம் அடையவே !!!💐💐💐
The myths linked to Dussehra are not just ancient tales. They hold a message relevant to us in the present times. The occasion of Dussehra every year reminds us that good ultimately prevails over evil. The Ramayan tells of the effort undertaken by Ram to vanquish Ravan and rescue Sita. Ram’s victory serves as an inspiration to all of us to allegorically overcome demon-like vices. These demonic weaknesses are different for each one of us: for some it may be anger, for others greed, jealousy, laziness, or some other flaws. Just like demons, these defects lurk within us, impinging upon our thoughts, attitude and actions to stop us from being the best we can become. They poison our minds to cause pain, sorrow and sufferings to us and others.
Overcoming these defects does not require any hard battle, great penance or sacrifices. All that is needed is an inner awakening. Weaknesses develop within us due to darkness or inertia of mind. Darkness is nothing but the absence of light. The forces of light and darkness have been metaphors for millennia – light represents truth, virtues, and divinity, whereas darkness symbolises fear, ignorance, and negativity. Just as night becomes day when the sun rises, the darkness within the soul vanishes when we ignite the light of awareness through right divine connection and spiritual contemplation.
We just must remember who we are. The human soul is essentially a being of purity, peace, and love. These qualities are innate to all of us, which is why we feel happy when we experience these virtues. When we become aware of our spiritual identity, that we are originally pure and peaceful souls, our self-image and outlook undergo change.
Imagine a millionaire who has forgotten that he has millions in the bank and is living in penury. Then someone reminds him of his riches. It would transform his life – from someone who was needy and dejected, he would become happy and self-assured, and capable of being generous. Most souls in the world today are like the millionaire – they do not know themselves. Unaware of the peace and love latent in the soul, they look for these outside and are repeatedly disappointed because those from whom they expect to get fulfilment are looking for the same.
The light of self-awareness resulting from regular practice of spiritual wisdom and Raj Yog meditation, dispels the darkness of ignorance within, revealing inner resources of virtues available to every soul. We realise that to experience real peace, we have to create peaceful thoughts and share the same with the world around. Daily cultivation of divine thoughts and positive feelings truly empowers the self. While others also benefit from our such spiritual state of being and goodness, we remain the primary beneficiary. Sharing our virtues with the world does not diminish our stock, rather multiplies it. That is spiritual arithmetic – goodness increases with giving.
To recognise the feminine within is to recognise the Divine in every form, every name, every breath. Navratri is that reminder: that life is not a battlefield alone, but also a celebration. The true victory is when masculine and feminine meet in balance, when power is tempered with beauty, and creation flows in harmony with courage.
கண்ணோரம் நீர்த்துளிகள்
காதோரம் மேள தாளங்கள்
உதடோரம் உன் நாமாவின் தேன் துளிகள்
உள்ளம் எங்கும் உனை வழி அனுப்பும் வேதனைகள்
பிறவி குருடன் கண் பெற்று கண் இழந்தது போல்
கண்ணெதிரே உன் ஆனந்த நடம் கண்டு
கண் மூடி உனை போய் வா என்று சொல்வது அழகோ ?
உள் இருந்த ஐம் பெரும் கள்வர்கள் காற்றிலே கரைந்த பின்னும்
கவி பாடும் திறன் பெற்றும்
காணும் இடம் எங்கும் உன் கண் மலர் தெரிந்தும்
ஒன்றும் தரவில்லை ஒன்பது நாட்களாய் என்றே புலம்ப வைப்பதும்
நீ பெற்ற பிள்ளைக்கு இது சரியோ ?
எல்லாம் தந்தாய் ... நிறை கண்டேன்
குறை சொல்லும் மனம் வெட்கி குனியக்கண்டேன்
தாயே போகாதே நில் என்றேன்
பொங்கி வரும் கண்ணீரை அணை போடத் தெரியாமல்
புன்னகைதாய் ..
நான் வசிக்கும் பழைய இடம் உன் மனம் அன்றோ ...
செல்வதும் வருவதும் உன் இல்லத்தை சீர் படுத்த ...
எங்கும் தேட வேண்டாம் ... பிரிந்தால் தானே தேட என்றாய் ...
காரணம் ஏதும் இன்றி கருணை பொழியும் தாயே
காத்திருப்பேன் நீ மீண்டும் கதவை தட்டும் வரை !!🙏🙌
மகரந்தங்கள் கொட்டும் மலர் கொத்தோ நீ என்றான் காளிதாசன்
மகிழம்பூவும் மரிகொழுந்தும் உன் கொடி இடையில் பிறந்த குழவிகளோ என்றான் கம்பன்
தேன் அடை கள் இரு பாதங்கள் என்றான் சங்கரன்
அஷ்டமி சந்திரன் போன்ற அழகு முகம் என்றார்கள் வாக் தேவிகள்
வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் வட்டமிடும் நந்தவனம் என்றார் அபிராமி பட்டர்
வானவீதியில் அந்திமலையில் காரணம் இன்றி அருள் மழை பொழியும் அருணம் நீ என்றார் முத்து சுவாமி தீக்ஷிதர்
எல்லா வார்த்தைகளும் வர்ணனைகளும் உனை சுற்றியே இருக்க
என்ன சொல்லி வாழ்த்துவேன் உனை ...
இனி ஓர் மொழி பிறந்தால் வார்த்தைகள் கிட்ட வாய்ப்பு உண்டோ அம்மா ? 💐💐💐
கண்ணோரம் நீர்த்துளிகள்
காதோரம் மேள தாளங்கள்
உதடோரம் உன் நாமாவின் தேன் துளிகள்
உள்ளம் எங்கும் உனை வழி அனுப்பும் வேதனைகள்
பிறவி குருடன் கண் பெற்று கண் இழந்தது போல்
கண்ணெதிரே உன் ஆனந்த நடம் கண்டு
கண் மூடி உனை போய் வா என்று சொல்வது அழகோ ?
உள் இருந்த ஐம் பெரும் கள்வர்கள் காற்றிலே கரைந்த பின்னும்
கவி பாடும் திறன் பெற்றும்
காணும் இடம் எங்கும் உன் கண் மலர் தெரிந்தும்
ஒன்றும் தரவில்லை ஒன்பது நாட்களாய் என்றே புலம்ப வைப்பதும்
நீ பெற்ற பிள்ளைக்கு இது சரியோ ?
எல்லாம் தந்தாய் ... நிறை கண்டேன்
குறை சொல்லும் மனம் வெட்கி குனியக்கண்டேன்
தாயே போகாதே நில் என்றேன்
பொங்கி வரும் கண்ணீரை அணை போடத் தெரியாமல்
புன்னகைதாய் ..
நான் வசிக்கும் பழைய இடம் உன் மனம் அன்றோ ...
செல்வதும் வருவதும் உன் இல்லத்தை சீர் படுத்த ...
எங்கும் தேட வேண்டாம் ... பிரிந்தால் தானே தேட என்றாய் ...
காரணம் ஏதும் இன்றி கருணை பொழியும் தாயே
காத்திருப்பேன் நீ மீண்டும் கதவை தட்டும் வரை !!🙏🙌
அணை போட்டாலும் என் ஆசைகள் நிற்பதில்லை
தடை போட்டாலும் அவை மடை திறப்பதை மறக்க வில்லை
கடை உன் அருள் இருந்தும் கவனங்கள் சிதறுவதேன்?
விடை தேடி அலைகின்றேன் ... விடையேறும் நீ பதில் ஒன்று தருவாயோ ?
சடை கொண்டோன் உன் நடை கண்டு மயங்கி நின்றான்
படை கண்டு மிரளாதவன் உன் நகை கண்டு நாண முற்றான்
எடை ஏறா மேனி கொண்டவளே
முடை ஒன்றும் இல்லா வாழ்வு தந்தே எல்லோரும் புடை சூழ வலம் வரவேண்டும் ..
அணியும் உடையிலும் உன் நாம வாசனை வீசவேண்டும் ..
அருள்வாயோ லடை இல்லா வாழ்வு தனை
6. Thus, SHIVAPURANAM, LINGAPURANAM etc. are the highest science of elevating human nature to the very peak of consciousness, expressed in the form of beautiful stories which we will be discussing. [With warm regards: R.Hariharan].
எங்கும் எதிலும் உன் திருநாமம்
உன் சங்கின் ஒலியே ஆதாரம்
சரணம் சரணம் உன் பாதம்
உலகம் எனும் தேரினையே ஓடச் செய்யும் சாரதியே
உருவாய் அருவாய் குருவாய் வந்திடும் பாரதியே
கரங்கள் இருக்கும் ஏராளம்
கண்கள் காட்டும் காரூணியம்
கடலிலும் ஆழம் அதன் அதிகாரம்
என் உள்ளம் உந்தன் சரணாலயம் ...
அங்கே உதிரும் பூக்கள் பாடும் உன் புகழாரம் 🙌🙌
*அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;*
*அ.அ பாடல் 44*
தாய்மை ஒரு இனிமையான பருவம் ....
பருவங்கள் மாறலாம் ஆனால் தாய்மை எனும் அக்ஷ்ர பாத்திரம் முடிவை என்றுமே
காணாதது....
ஒரு முறை சிவாஜி மகராஜ் அரியாசனத்தில் வீட்டிருந்தார் ...
அவருடைய தளபதிகளில் மிகவும் போற்றதக்கவர் தானாஜி மாலுசரே...
போரில் வென்றபின் வெற்றியை அறிவிக்க சபைக்குள் ஓடி வருகிறான் ...
ஜெய் பவானி!! நாம் வெற்றி பெற்று விட்டோம் ...
சுல்தானின் சொத்துக்கள் அத்தனையையும் பல்லக்குகளில் கொண்டு வந்துள்ளேன் ...
தாங்கள் வந்து பார்க்க வேண்டும் என்றான் ...
சிவாஜியும் "ஒன்றே ஒன்றைத்தான் என்னால் வெல்ல முடியவில்லை தானாஜி !!
அதையும் நீ தான் வென்று தரவேண்டும்" என்றார் ...
அதுதான்
*சின்ஹகட் கோட்டை....*
ஜானாஜி என் உயிர் போனாலும் கவலை இல்லை அந்த கோட்டையை மீண்டு வருவேன் என்றான் ...
சரி வா உன் பல்லக்குகளை பார்ப்போம் என்றார் சிவாஜி
முதல் பல்லக்கில் பல நவரத்தின குவியல்கள்
இரண்டாவதில் அவர்கள் நாட்டு நாணயங்கள் ....
ஜானாஜி மூன்றாம் பல்லக்கில் என்ன இருக்கிறது என்று கேட்டார் சிவாஜி ..
உங்களுக்கு விலை உயர்ந்த பரிசு கொண்டு
வந்துள்ளேன்...
தாங்களே திரையை அகற்றிப்பார்க்கவும் என்றார் ஜானாஜி
திறந்து பார்த்தால் உலக பேரழகி சுல்தானின் மனைவி
மின்னும் உடையுடன் மினுக்கும் நகையுடன்
கண்களில் கொதிக்கும் நீருடன் அமர்ந்து இருந்தாள் ..
சிவாஜி மஹாராஜ் அப்படிப்பட்ட ஒரு அழகிய சாமுத்ரா லக்ஷ்ணங்கள் எல்லாம் பொருந்திய பெண்ணை பார்த்ததே இல்லை ...
அவளோ தனக்கு இனி அடைக்கலம் யாரும் இல்லை என்ற பயத்துடன் அமர்ந்திருந்தாள் ....
சிவாஜி அவள் மிக அருகே சென்று
"உங்களைப்போல் மிகவும் அழகான பெண்ணை நான் பார்த்ததில்லை ...
எனக்கு ஒரு வரம் வேண்டும் தருவீர்களா ? " என்று கேட்டார்
அந்த பணிவு அவளை என்னவோ செய்தது ...
தான் ஒரு அடிமை ... என்னிடம் போய் இவன் வரம் கேட்கிறானே
சிந்தை கலங்கிப் போனதோ என்று ஆச்சரியப் பட்டாள்...
வாயில் இருந்து எந்த வார்த்தையும் பிரசவமாக வில்லை
சிவாஜி மேலே பேசினார் ....
"நான் உங்களுக்கு பிள்ளையாக அடுத்த ஜென்மத்தில் பிறக்க வேண்டும் ...
உங்கள் அழகில் எனக்கும் ஒரு பங்கு கிடைக்கும் அல்லவா?" என்றார் ...
அவளை அடையவேண்டும் என்ற எண்ணம் சிவாஜியிடம் கொஞ்சமும் இல்லை...
மாறாக
தாய்மையைக் கண்டார் ...
இதுதான் இந்திய மரபு என்று எல்லோருக்கும் புரிய வைத்தார் ...
அபிராமி பட்டர் இதைத்தான் பாடல் 44இல் சொல்கிறார் ...
கணவன் விஷத்தை அருந்துகிறான் ..
உடனே ஓடிப்போய் அதை கழுத்தில் நிற்குமாறு செய்கிறாள் ....
உள்ளே சென்றால் உள்ளே இருக்கும் அண்ட சராசரங்கள் , உயிர்கள் அழிந்து போகும் ..
வெளியே துப்பினால் வெளியில் நிற்கும் எல்லா தேவர்களும் மாய்ந்து போவார்கள்
அதனால் கழுத்தில் தங்க வைத்து ஈசனுக்கு இன்னொரு பிறவி தருகிறாள்...
இன்னொரு பிறவி தருவதனால் அவள் ஈசனுக்கே அன்னை ஆகிறாள் ...
அதுமட்டும் அல்ல
கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம் தெரிகிறாள் ...
இந்த கருணை தான் தாய்மை ..
இந்த உணர்வு மட்டுமே சிவாஜி மஹாராஜாவிற்கு
இருந்தது ....
அபிராமிக்கும் இருக்கிறது ...
என்ன ஒற்றுமை அபிராமிக்கும் ஜெய் பவானிக்கும்!!!💐💐💐
Happy to read 😊
Vn.N.Balaraman.Pollachi
For Chennai --> Abirama battar
For Mumbai --> Satapathy Sivaji
Interesting
இருவருமே இறைவன் இறைவி இடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர்கள் ...
பெரியாழ்வார் அருளிச் செய்த பெரியாழ்வார் திருமொழியில் இருந்து ஓர் பாசுரமும் அதனை ஓற்றிய ஒரு பாடல் அபிராமி அந்தாதியிலும் பார்ப்போம் ...
பெரும்பாலும் எல்லா மகான்களின் எண்ண ஓட்டமும்( ஆன்மீக சிந்தனைகளும்)
ஒருமித்தே இருக்கும்
*பெரியாழ்வார் பாசுரம் ( திருவாய் மொழி ) 413*
ஒருமுறை மஹாலக்ஷ்மியும் நாராயணனும் தனிமையில் இருந்தார்கள் ...
லட்சுமிக்கு தன் கணவனை சீண்டி பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை வந்தது ( ஊடல் இல்லாமல் காதல் ஏது? )
கேசவா .... ஸ்ரீரங்கத்தில் நான் மேற்கு திசையை நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறேன் ...
நீங்களோ கொஞ்சம் சாய்ந்து தெற்கு நோக்கி படுத்துக்கொண்டு அருள் பாலித்து வருகிறீர்கள் ...
தெற்கில் இலங்கை உள்ளது
அங்கே என்னை கவர்ந்து சென்ற அயோக்கியன் ராவணனின் தம்பி ராஜ்யம் புரிந்து வருகிறான் ...
உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்தவன் அவன் , அசுரன் ...
அவனுக்கு இன்னும் அருள் பாலித்து வருவது தவறல்லவா ... என்கிறாள்
அதற்கு ரங்கன் என்ன பதில் சொல்கிறான் என்பதுதான் இந்த பாசுரம்
தன்னடியார் திறத்தகத்துத் தாமரையா ளாகிலும் சிதகு ரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல்
நன்றுசெய்தா ரென்பர் போலும்
மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற் கன்றியும் மற்றொருவர்க்கு ஆளா வாரே.
*பதம் பிரித்து பார்ப்போமா ?*
*
*தன் அடியார்* *திறத்தகத்து*
தன்னுடைய (எம்பெருமானுடைய) அடியவர்கள் விஷயத்தில்
*தாமரையாள்* *ஆகிலும்*
(புருஷகாரம் பண்ணக்கடவளான) பெரிய
பிராட்டியார்தாமே
*சிதகு*
குற்றங்களை
*உரைக்கும் என்*
கணக்கிட்டுச் சொல்லத் தொடங்கினாலும்
*என் அடியார்*
“எனக்கு அடிமைப்பட்டவர்கள்
அது
*அக்குற்றங்களை*
*செய்யார்*
செய்யமாட்டார்கள்
*செய்தார் என்*
(செய்தகுற்றத்தைப் பொறுப்பதற்கு எம்பெருமானுண்டு என்று சிலவற்றைச் செய்தார்களாயினும்
*நன்றி செய்தார் என்பர்*
(அவர்கள்) நன்மையையே செய்தார்களத்தனை” என்று சொல்லா நிற்பவரும்,
மன் உடைய
*ஐச்வரியம் பொருந்திய*
*விபீடணற்கா*
விபீஷணாழ்வானுக்காக
*மதிள் இலங்கை* *திசை நோக்கி*
மதிளையுடைய லங்கையின் முகமாக
*மலர்கண் வைத்த*
மலர்ந்த திருக்கண்களை வைத்தருளினவனும்
*என்னுடைய*
எனக்கு ஸ்வாமியுமான
*திரு அரங்கற்கு அன்றியும்*
பெரிய பெருமாளையொழிய
மற்று ஒருவர்க்கு
*வேறொருவர்க்கு*
*ஆள் ஆவரே*
ஆட்படுவோர் ஆரேனுமண்டோ.
லட்சுமி ... அவன் உப்பிட்ட அண்ணனை துறந்து என்னை வந்து சரணடைந்தான் ...
எதற்காக??
நல்ல விஷயங்களை ராவணன் கேட்க மறுத்ததானால் ...
அங்கிருந்து உன்னை காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்த அவன் என்னிடம் சேர்ந்தான் ...
இதில் என்ன தவறு கண்டாய் ? ...
நான் உன் பதி உனை காக்க வேண்டியது என் கடமை
ஆனால் அவன் யாரோ
உனை காப்பாற்ற வேண்டும் என்றே துடித்தான்...
அதனால் என் நன்றியை அவன் வாழும் , வாழ்ந்த திக்கை நோக்கி படுத்துக்கொண்டு அருள் பாலித்து வருகிறேன் என்றாராம் ....
பக்தன் மீது இறைவனுக்குத்தான் எத்தனை பக்தி கரிசனம் ...
*என்னடியார் அதுசெய்யார்*
இந்த வரியை இரண்டு அர்த்தத்தில் சொல்லலாம்
என் அடியவர்கள் எந்த தவறும் செய்யமாட்டார்கள்
அப்படியே செய்தாலும் அதை மன்னிக்க நான் தயங்குவதில்லை
இது ஒரு அர்த்தம் ..
இன்னொன்று
என்னடி! யார்தான் இப்படிப்பட்ட சின்ன சின்ன தவறுகளை செய்யாமல் இருப்பார்கள் ...
இதைப்போய் ஏன் நீ பெரிது படுத்துகிறாய் ?
இப்படி சொல்வதாகவும் எடுத்துக்
கொள்ளலாம் ..
இதே போல் அபிராமி பட்டர் 46 வது அந்தாதி பாடலில்
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே;
புது நஞ்சைஉண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே!
அம்மா நீயே முகம் சுளிக்கும் காரியங்களை பக்தி எனும் பெயரில் நான் செய்யக்கூடும்
அதை மன்னித்து பொறுத்துக்
கொள்வது உன் கடமை
ஏன் எனில் நீ என் தாய் நான் உன் மகன் ...
தாய் மகனை தண்டித்தாள் என்று சரித்திரமே இல்லை ...
உனை கேளாமல் உன் பதி விஷம் அன்று குடித்தானே அவனது சேஷ்டகளை நீ பொறுத்துக்கொள்வதில்லையா ?
அதை விடவா நான் பைத்தியகார செயல்களை செய்து விட்டேன் ... ??
நீ என்னை மறுத்தாலும் நான் உன்னை வாழ்த்திக்கொண்டே இருப்பேன் ...
எனக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் அம்மா ...??
பெரியாழ்வார் அங்கே ரங்கனின் குரலில் பேசுகிறார்
இங்கே அபிராமி பட்டர் தாய்மையின் மகத்துவதை உலக நாயகிக்கே நினைவு படுத்துகிறார் ...
அவ்வளவே வித்தியாசம் ...
பக்தி பாவனை எல்லாம் ஒன்றே .... 💐💐💐
ஆன்மிக , மற்றும் பத்திரிக்கை எழுத்து உலகிலும், ஏராள அன்பர்கள் உள்ளனர், அதில் இன்று அளவும் நம்முடன் சில குழுமங்களில் பயணித்து வருபவர்கள், திருமதி, சுஜாதா வேணுகோபால், (ஶ்ரீரங்கம்),
மற்றும் கு.பண்பரசு என்ற காமராஜ் ஐயா (ஆனந்த விகடன் மற்றும் இன்னும் சில பத்திரிகைகளில் தொடர் பதிவு ஆசிரியர் சென்னை)
மற்றும், பல புகழ்பெற்ற சிறந்த பதிவுகளை மக்களுக்கு தந்து கொண்டிருக்கும் எழுத்து ஆசிரியர் திரு.ஜெயக்குமார் ஐயா மும்பை (தாங்கள்!)
உங்களை போன்ற சிறந்த பத்திரிகை எழுத்து ஆசிரியர்களுடன் குழுமங்களில் பயணித்து வருவது, மட்ட அற்ற மகிழ்ச்சியை தருகிறது!
எல்லாம் இறைவன் அருளே🙏
[06/10, 09:33] Jayaraman Ravikumar: என் பதில் 👇
[06/10, 09:33] Jayaraman Ravikumar: இரண்டு மறுப்புக்கள்
1.நீங்கள் சொல்வதைப்போல நான் சிறந்த எழுத்தாளரே இல்லை ...
ஒரு கத்துக்குட்டி ஏதோ கிறுக்குவேன்...
அதையும் ஒரு மதிக்கத்தக்க பதிவு என்று தாங்கள் கருதுவது உங்கள் மேன்மையை குறிக்கிறது
2.என் பெயர் ஜே. ரவிகுமார் ( ரவி) ஜெயகுமார் அல்ல ...
என் எழுத்தும் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் தவறாக குறிப்பிட்ட மாதிரி
பெயரும் உங்களையும் அறியாமல் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது
நன்றி ஐயா ...
நான் தான் கர்வப்பட வேண்டும் ..
அறிவாளர்கள் நிறைந்த இந்த சபையில் தத்தி தத்தி நடை பயில அனுமதி பெற்றதற்கு ...
இன்றும் இனிய நாளாக அமையட்டும் 🙌🙏
[06/10, 09:34] Jayaraman Ravikumar: நிறைகுடம் தளும்பாது
என்ற நம் மூத்த மக்களின் சொல் நினைவுக்கு வருகிறது!
தங்கள் எழுத்து படைப்பு அனைத்தும் சிறப்பு மற்றும் தனித்துவம் வாய்ந்தது💐🌷💐🌷🤝👍🙏
நன்றிகள் பல ஐயா✍️🙏
We know about your write up and the quality.
You proved your talent many times in Mayyam hub.
We always appreciate your writeups.
You are honoured sir.👍👍👍
ஆர்யா சதகம் 1
மூகபஞ்சசதீ
ஆர்யா சதகம்
மூகபஞ்சசதீ
பாடல் 2
You are always with me .
Salutations to You .
There is none higher than You .
I am a child of You .
My intellect is steadily fixed on You .
Oh JagadGuru , protect me .. 🙌
எங்கும் எதிலும் உன் திருநாமம்
உன் சங்கின் ஒலியே ஆதாரம்
சரணம் சரணம் உன் பாதம்
உலகம் எனும் தேரினையே ஓடச் செய்யும் சாரதியே
உருவாய் அருவாய் குருவாய் வந்திடும் பாரதியே
கரங்கள் இருக்கும் ஏராளம்
கண்கள் காட்டும் காரூணியம்
கடலிலும் ஆழம் அதன் அதிகாரம்
என் உள்ளம் உந்தன் சரணாலயம் ...
அங்கே உதிரும் பூக்கள் பாடும் உன் புகழாரம் 🙌🙌
*உள்ளத்தே விளைந்த* *கள்ளே*!
உணர்ச்சி வருவதற்கு காரணம் சொல்லலாம்.
ஆனால், ஒரு உணர்ச்சி எப்படி இருக்கிறது என்று விளக்கிச் சொல்ல முடியாது.
காதல் வந்தால், அதற்கு காரணம் சொல்ல முடியும்.
காதல் என்ற அந்த உணர்வு எப்படி இருக்கிறது என்று எப்படி விளக்கிச் சொல்வது?
இறை அனுபவம் என்றால் என்ன?
அது எப்படி இருக்கும் என்று கேட்டால் எப்படி அதை விளக்கிச் சொல்வது என்று தவிக்கிறார் பட்டர்.
எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது.
நான் அதை அனுபவிக்கிறேன்.
ஆனால், அது எப்படி இருக்கிறது என்று கேட்டால் எப்படிச் சொல்வது ?
ஒரு கள் குடித்து இருக்கிறான்.
போதையில் தடுமாறுகிறான். உளறுகிறான். ஆடுகிறான்.
தன்னை மறந்து நடந்து கொள்கிறான்.
அக்கம் பக்கம் இருப்பவர்களை பற்றி ஒரு கவலையும் இல்லை.
தான் யார், சமுதாயத்தில் தன் நிலை என்ன, ஒரு தகப்பன், கணவன், பிள்ளை, சகோதரன், ஒரு அலுவலகத்தில் ஒரு பொறுப்புள்ள வேலையில் இருப்பவன் என்பதெல்லாம் மறந்து விடுகிறது.
போதையில் இலயித்துக் கிடக்கிறான்.
அது போன்றது பக்தி என்கிறார் பட்டர்.
கள் தான்.
ஆனால் வெளியே வாங்கி வந்து அடித்த சரக்கு அல்ல.
உள்ளுக்குள்ளேயே உருவான கள் என்கிறார்.
*உள்ளத்தே விளைந்த கள்ளே என்கிறார்*
வெளியில் வாங்கி வந்தால், ஏதோ ஒரு பாட்டில், இரண்டு பாட்டில் வாங்கி வரலாம்.
போதை தலைக்கு ஏறிவிட்டால்
எப்போது வேண்டுமானாலும் குடிப்பதை நிறுத்தி விடலாம்.
இதுவோ உள்ளே விளைந்த கள்.
எப்படி நிறுத்துவது?
அது பாட்டுக்கு ஊற்று எடுத்துக் கொண்டே இருக்கிறது.
வேறு வழியில்லை. போதையில் தன் நிலை தடுமாற வேண்டியதுதான்.
அபிராமியைப் பார்க்கிறார்.
அவள் யார்?
தாயா? சகோதரியா? நண்பியா? காதலியா ? குருவா?
ஒன்றும் புரியவில்லை.
என்னை காப்பாற்று என்று பக்தனாக வேண்டுகிறார்.
உன் அழகு அப்படி இருக்கிறது , இப்படி இருக்கிறது என்று குழந்தையாக அவள் மடியில் கிடக்கிறார்.
உன்னுடைய மற்ற அவயங்கள் இப்படி இருக்கின்றன என்று வர்ணிக்கிறார்.
இப்படி செய்யலாமா? இது சரியா ? இதுவா பக்தி?,
பட்டர் போன்றவர்கள் இப்படி சொல்லலாமா ?
ஒரு பெண்ணின் அந்தரங்க அவயங்களை பற்றி பேசுவது நாகரீகமா என்று கேட்டால் கள் குடித்தவனுக்கு என்ன தெரியும்?
ஆண்டாளும் அப்படித்தான்.
பக்தி என்ற போதை. கள்.
*பாடல்*
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே
அபிராமி பட்டர் அருளிய
அபிராமி அந்தாதி 101 பாடல்களில் 23வது பாடல்
*பாடலின் பொருள்*
கொள்ளேன் மனத்தில் = என மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன்
நின் கோலம் அல்லாது = உன் உருவத்தை அன்றி மற்ற எதையும்
அன்பர் கூட்டம் தன்னை = உன்னுடைய அன்பர்கள் கூட்டம்
விள்ளேன் = விட மாட்டேன்
பரசமயம் விரும்பேன் = மற்ற சமயங்களை விரும்ப மாட்டேன்
வியன் = வியக்கத்தக்க
மூவுலகுக்கு = மூன்று உலகங்களுக்கு
உள்ளே =உள்ளே
அனைத்தினுக்கும் புறம்பே = எல்லாவற்றிற்கும் வெளியே
உள்ளத்தே = மனதினில்
விளைந்த = தோன்றிய
கள்ளே = கள்ளே
களிக்கும் களியே = அனுபவிக்கும் இன்பமே
அளிய என் கண்மணியே = அதைத் தரும் என் கண்ணின் மணி போன்றவளே
"அனைத்தினுக்கும் புறம்பே"...
எல்லாவற்றிற்கும் வெளியே.
ஏதோ ஒன்று இருக்கிறது என்றால்
அது ஏதோ ஒன்றினுக்கு உள்ளேதான் இருக்க வேண்டும். அனைத்துக்கும் வெளியே என்றால் அது எங்கே?
பக்தியின் உச்சம். அவருக்குத் தெரிகிறது. சொல்ல முடியவில்லை.
வண்டானோம்...
கள் கள்ளத்தனமாக நமக்குள் சென்று நம்மை பித்தனாக்கி பேசுவது தெரியாமல் செய்து விடுகிறது
அதைப்போல் பக்தி என்னும் கள் நம்முள் சென்று...
போதையில்.. பிதற்ற வைக்கிறது....
காஞ்சி எல்லையினுள்,
காமபீடத்தில் அமர்ந்தவளாக,
காஷ்மீரத்துப் குங்குமப்பூங்கொத்து போன்ற மேனி நிறமும்,
கொடிபோன்று துவள்கின்ற மென்மைமிக்க அவயங்களும் உள்ளவளாக,
உலகமனைத்திற்கும் ஆதி காரணமூலப் பொருளான,
உலகிற்கு அப்பாற்பட்ட, மேம்பட்ட சித்வடிவினளாக,
கருணையே உருவான நீ விளையாடுகிறாய்
சித்திப்பாள் சிந்திக்க சிந்தா மணியாக!
சித்பரையை உத்தமி யாளினை உள்ளத் திருத்த உவந்தருள்வாள்
முத்தியும் ஞானமும் மோதமாய் பெய்கின்ற மூலமவள்
நித்தமும் காஞ்சியில் நின்றுளில் தண்ணளி நிர்மலையே
சிவத்தோடு வேறிலா சித்தாய சக்தியாய் சேர்ந்தவளும்
சிவகாஞ்சீ புண்ணிய சேத்திரத் தேயுறை சின்மயியும்
சிவசந்த்ர மௌலியர் செல்வம் பிறையணி சேகரியும்
சிவவேத ஞானமும் செம்பொரு ளான சிவசதியே !!
தனம்,கல்வி,
தளர்வரியாத மனம்
வஞ்சமில்லா இனம் இப்படி
நல்லனவெல்லாம் தரும் அபிராமி...
இந்த குடும்பஆலமரத்தின் அடி வேராக உன்னையும் கொடுத்திருக்கிறாள்.
நீயும் அவள் புகழ் பாடவும், மற்றும் ஆன்மீகத் தகவல்களையும் மிகவும்
சிரத்தையுடனும்
ஆர்வத்துடனும்.
பகிர்வுகளை அனுப்புகிறாய்.
நன்றி. 🙏
*சயமானது அபசயம்* *ஆக *
பார்ப்பதற்கு அபிராமி எப்படி இருப்பாள்?
மற்ற பெண்களைப் போல இருப்பாளா?
திடீரென்று நாளை நம் முன் வந்து நின்றால், அவள் தான் அபிராமி என்று நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமா?
பட்டர் சொல்கிறார்....
அதிசயமான வடிவு உடையாள் ...
என்ன அதிசயம் ? மூன்று கண், ஐந்து தலை என்று அதிசயமான வடிவமாக இருக்குமோ ?
மலர்களில் அழகியது தாமரை மலர்.
உலகில் உள்ள அனைத்து தாமரை மலர்களும் அவளுடைய முக அழகைப் பார்த்து வணங்குமாம்.
அப்படி ஒரு அதிசயம்.
அது மட்டும் அல்ல...
இரதி, மிக அழகானவள். அவளுடைய பதி மன்மதன், அவனும்
சிறந்த அழகன்.
இராம பானத்துக்கு தப்பியவர்கள் கூட உண்டு, மன்மத பானத்துக்கு தப்பியவர் யாரும் கிடையாது.
கரும்பு வில்லையும், மலர் அம்புகளையும் எடுத்துக் கொண்டு போருக்குப் போனால், தோல்வி என்பதே கிடையாது. வெற்றி மட்டும்தான்.
அப்படி எப்போதும் வெற்றி பெற்ற மன்மதன் தோற்ற இடமும் ஒன்று உண்டு. அது சிவனிடம்.
சிவன் மேல் மலர் அம்பை எறிந்தான். சிவனுக்கு காமம் வரவில்லை. கோபம் வந்தது. மன்மதனை எரித்து விட்டார்.
முதன் முதலில் மன்மதனின் சயம் , அபசயம் ஆனது.
அப்படி மன்மத பானத்துக்கு மயங்காத சிவனும், அபிராமியின் அழகில் மயங்கி, தன் உடலில் இடப் பாகத்தை அவளுக்கு கொடுத்து விட்டார் என்றால், அபிராமி எவ்வளவு அழகாக இருக்க வேண்டும்?
*பாடல்*
அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி,
துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக,
முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?🙌
அபிராமி பட்டர் அருளிய
அபிராமி அந்தாதி 101 பாடல்களில் 17வது பாடல்
பாடலின் பொருள்
அதிசயம் ஆன வடிவு உடையாள் = அதிசயமான வடிவு உடையாள்
அரவிந்தம் எல்லாம் = தாமரை மலர்கள் எல்லாம்
துதி சய ஆனன = துதிக்கும்
சுந்தரவல்லி = அழகான பெண்
துணை இரதி பதி = இரதியின் துணையான பதி (மன்மதன்)
சயமானது = வெற்றியானது
அபசயம் ஆக = தோல்வியாக
முன் = முன்பு
பார்த்தவர்தம் = நெற்றிக் கண்ணால் பார்த்தவருடைய
மதி சயம் ஆக அன்றோ = அறிவை வெற்றி கொண்டதால் அல்லவா
வாம பாகத்தை வவ்வியதே? = இடப்பாகத்தை பெற்றுக் கொண்டது
என்ன ஒரு தமிழ்.
"துணை இரதி பதி சயமானது , அபசயமக பார்த்தவர் தம் மதி சயமாக "
மன்மத அம்புக்கு மயங்காதவரையும் மயங்க வைக்கும் அழகு.
அதிசயமான வடிவு உடையாள் ....
அபிராமி
சத் ( sat) ஆக இருக்கிறாய்
உண்மை, நிலையானது, மாறாதது என்றே காட்டிடவோ ?
அம்மா சித்( chit) ஆக இருக்கின்றாய்
அறிவும், நினைவும் நானே என்றே காட்டிடவோ ?
அம்மா என்றும் ஆனந்தமாய் இருக்கின்றாய்
மகிழ்ச்சி, பேரின்பம் நீ யே என்றே காட்டிடவோ ?
அம்மா நீயே பிரம்மம்
இயல்பான நிலையான உண்மை,
நித்திய அறிவு மற்றும் எல்லையற்ற மகிழ்ச்சி
ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அனுபவமே நீ தான் என்றே புரிந்து கொண்டேன்
புரிந்துகொண்ட உள்ளம் தெளிந்த நீரோடையாய் ஓட சமுத்திரம் எனும் உன் கருணையில் சேர்ந்து ஒன்றாகிப்போனதே !!!💐💐💐
9th October
*Remembrance of God is the Secret of Devotion*
To forget one’s own existence, and to be aware of the existence of God everywhere, at all times, is the essence of devotion. With devotion as the ruling passion, everything else fades into the background. It goes without saying that in the case of such a person God is such paramount awareness that sensory pleasures have no attraction.
Devotees of God have come from all classes of people and all kinds of circumstances. If the Lord rewarded them all with perfect contentment, why should we, too, not hope to be similarly rewarded? We accept the notion that the world is progressive; but to think of progress as consisting of children, money, public esteem, and other physical matters is not correct. Real progress relates to devotion. This progress may not be palpable. Success without God has no value, and may be classed a failure. On the other hand, an apparent failure may eventually turn out to one’s advantage; so never feel daunted by a failure; patiently bear with it as God’s will.
To think or say that ‘the Lord exists’ amounts to believing that the creation has emanated from Him, that He protects and supports it; we are part of the multitudes created by Him, so we, too, receive His protection and are sustained by Him. He who throws himself on God’s mercy is truly independent. One who yearns for Him becomes His. Intense love for Him is devotion. True upasana consists in loving God with even greater intensity than loving one’s own self. This is the crowning achievement of life. He can be truly said to have faith who seeks no other support even if calamities come in battalions.
Before one can grasp the concept of an attribute-less Divinity, one must go through the medium of idol-worship. This can be likened to a man’s village which is hidden beyond a knoll, and therefore cannot be seen until one climbs to the summit. A bugbear is not living but, made in the likeness of a man, it keeps the birds away in the absence of a guard, and preserves the ripening harvest from their depredations. Similarly, Worshipping and loving an idol of God leads easily to a realization of His subtle, attribute-less entity.
* * * * * * * * *
பாரதி பகவத் கீதையை தன் பாணியில் மொழி பெயர்த்துக்
கொண்டிருந்த நேரம் ... பார்த்த சாரதியின் தேர் சக்கரம் அவர் மனதில் ஏழு குதிரைகளுடன் ஓடிக்
கொண்டிருந்தது
நீயே சரணம் நீயே கதி நீயே எனக்கு எல்லாம் கண்ணா ..என்னை வழி நடத்து ...
மனகண்களில் அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கதறிக்
கொண்டிருந்தான்
இதுவரை அர்ஜுனனை பேசிவிட்டு வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்த கண்ணன் பேச ஆரம்பித்தான் அர்ஜுனன் முழு சரணாகதி செய்த பின் ....
பாரதி யோசித்தான்...
எத்தனை எத்தனை கவிதைகள் படைத்தேன் ..
சரணாகதி வரிகள் ஏன் வரவில்லை என் கவிதைக்குள் ....
மனம் ஏங்கியது ....
இது வேண்டும் அது வேண்டும் என்றே கேட்டேன்
ஆனால் உன் பாதங்கள் சரண் புகும் வரம் ஒன்று கேட்டிலேன் கண்ணா ...
சரஸ்வதி வார்த்தைகளை அனுப்பிக்
கொண்டிருந்தாள்...
புது சரணாகதி கவிதை பிரசவம் ஆனது பாரதியின் நாக்கு எனும் கருப்பையில் ....
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென..
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
கண்ணன் பாரதி எனும் புதிய அர்ஜுனனை கண்டு பிடித்த சந்தோஷத்தில்
மன குதிரைகளை இன்னும் வேகமாக ஓட்டினான் 🙏
பராசக்திக்கு வேர்த்துக்கொட்டியது ...
என் மீது இன்னொரு பாடல் பாரதி எழுதுகிறானே..
இதைக்கொடு அதைக்கொடு என்று கேட்பானே ...
கேட்டால் கொடுக்கலாம் ஆனால் கொடுக்க முடியாத விஷயங்களை இவன் கேட்டுவிட்டால் முடியாது என்று எப்பிடி சொல்வேன் ...
இவனுடைய கோபத்தை எப்படி சமாளிப்பது .....
சரி பாட்டு முடியட்டும் என்ன கேட்கிறான் என்று பார்ப்போம் என்று காத்திருந்தாள் உலக மாதா ..
அவள் எவருக்கும் இப்படி பயப்பட்டதில்லை ...
பாரதி எழுத தொடங்கினான் ...
நல்லதோர் வீணை செய்தே -
அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி -
எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி -
நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் -
நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் -
இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
தன் பாடலை பாரதி ஒரு கேள்வியுடன் முடித்தான் ..
பராசக்தி தடை இல்லை என்று சொன்னால் அவன் கேட்டதை குறைக்காமல் கொடுத்து விட வேண்டும் ... தடை உண்டு என்று சொன்னால் ...
என்ன தடை சொல் ..
உன்னால் அதை அகற்ற முடியவில்லை என்றால் நான் செய்து காட்டுகிறேன் என்பான் ...
சரி தடை இல்லை என்றால் உடனே
ஏன் அதை நீ இவ்வளவு தாமதமாக சொல்கிறாய் ...
உனக்கு இந்த வரம் தருவதில் விருப்பம் இல்லை ..
நீயே வைத்துக்கொள் நான் கேட்டதை என்பான் ...
இப்படி மனம் கலங்கினாள் பராசக்தி ... ஆனால் முடிவில் தன் பக்தனுக்கு தன்னையே அடிமையாக்கிக்
கொண்டாள் அன்னை பராசக்தி
பாரதியின் உச்சிதனை முகர்ந்தாள்
பராசக்தியின் கருவம் ஓங்கி வளர்ந்தது
மெச்சி பாரதியை அடுத்தவர் புகழ்ந்தால் பராசக்தியின்
மேனி சிலிர்த்தது ....
வளம் தரும் இயற்கை தந்தாய்
வாழ்வதற்கு எல்லாம் தந்தாய் ...
காற்றும் மழையும் தந்தாய்
நீரும் நிலமும் தந்தாய் ...
எல்லாம் ஜரிக்க தீயையும் தந்தாய்
வானம் எங்கும் பரவி நின்றாய் கடலின் ஆழம் கண்ணில் மறைத்தாய் ...
நம்பிக்கை ஊட்ட ஆதவனை தினமும் அனுப்புகின்றாய் ...
குளிர்ந்த மனம் குதுகளிக்க நிலவை தந்தாய் ...
தரும் அமுதம் பத்திரமாய் இருக்க தாரகைகள் கொண்டு வேலி இட்டாய் ...
வேண்டிய அண்டங்கள் படைத்தாய்
அதில் ஓர் பிண்டமாய் பூமி தந்தாய் ...
பூமியில் கோடி தந்தாய்
கோடியில் ஒருவனாய் நன்றி சொல்ல இனிய நாவை தந்தாய் ...
பேராசை கொண்டோரக்கு நீ தந்தது போதாது ..
போதும் எனும் மனம் கொண்டோர்க்கு
உனை தினம் வாழ்த்தாமல் இருக்கப் பிடிக்காது 🙏👍
உன்னை தெய்வம் என்பதா
குரு நாயகி என்பதா ?
என்னைப்பார்த்து பார்த்து வளர்ப்பதினால் அன்னை என்பதா ?
உன்னை கடவுள் என்பதா ... (என்னை கடந்தும் நிற்கிறாய் உள்ளும் நிறைந்திருக்கிறாய்)
கருணை வடிவம் என்பதா ?
ஞான தானம் தந்த உன்னை தந்தை என்பதா ?
சேரும் செல்வமெல்லாம் உன் அருள் அன்றோ!
பாடும் பாடல் எல்லாம் உன் தயவன்றோ !
எழுதும் எழுத்தெல்லாம் நீ உமிழ்ந்த தாம்பூலம் அன்றோ !
நான் எனும் எண்ணம் தனை நானே அழித்துக்
கொண்டேன் நீ என்னுள் வந்தபின்னே !!💐💐💐
திரிபுரம் எரித்தான் ஈசன் தன் கொவ்வை செவ்வாயில் இருந்து சிதறிய புன்னகையால் ...
புன்னகை எனும் ஆயுதம் ஒன்றால் பொன் இரும்பு வெள்ளி கோட்டைகள் உருகி போனதே ...
ஐயனை வெல்ல ஒருவர் உண்டோ என்றே அண்டங்கள் வியந்து நிற்க
என்னை ஈசன் வென்றபின் அவன் புகழ் பாடுங்கள் என்றே ஈசனை எதிர்க்க துணிந்தாய் ஊடலின் பெயரில்
போர் தருமம் ...பகை எடுக்கும் அதே ஆயுதம் கொண்டே பகை வெல்ல வேண்டும்
உன் இதழ்கள் விரிந்தே சிறு புன்னகை அம்பாக விழுந்தது ...
உதடுகள் வில்லாக
தொடுத்தாய் அம்பை ஈசன் மீதே ...
துவண்டு விழுந்தான் ஈசன் உன் மடியில் ...
உதடுகள் வில்லானால்
புன்னகை அம்பானால்
புருவங்கள் சேனைகள் ஆனால்
பார்வை வேல் ஆனால்
காதல் மலர் கணைகள் ஆனால்
மகேஸ்வரன்
உன்னிடம்
தினம் தினம் தோற்பது கடினமோ தாயே ? 💐💐💐
*அருந்திய நஞ்சு அமுது* *ஆக்கிய அம்பிகை*!
http://interestingtamilpoems.blogspot.com என்கிற இணையதள முகவரியில் படித்த நல்ல பதிவை
பகிர்ந்துள்ளேன்.
ஒரு குழந்தை இந்த உலகத்தில் வந்தபின் பெறும் முதல் சுகம், தாயின் மார்பில் இருந்து பாலை சுவைப்பதுதான்.
அது பசியை தணிப்பது மட்டும் அல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை தருவது மட்டும் அல்ல, அன்பை, காதலை , பாசத்தையும் தருகிறது.
தாயின் பாலை ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொடுத்தால் பிள்ளை அவ்வளவு நன்றாக வளராது.
பால் தரும் போது அந்தத் தாயின் அரவணைப்பு வேண்டும்.
அவள் உடல் சூடு வேண்டும்.
ஆண்கள் கொஞ்சம் வேகம் கொண்டவர்கள்.
உணர்ச்சி வேகம், உடல் தரும் வேகம் இவற்றால் எதையாவது செய்து விடுவார்கள்.
பின்னால், அப்படி செய்து இருக்கக் கூடாதோ,
அப்படி சொல்லி இருக்கக் கூடாதோ என்று யோசிப்பார்கள்.
என்ன செய்வது. செய்தாகி விட்டது. சொல்லியாகி விட்டது. அதன் வேண்டாத விளைவுகளை சரிப்படுத்த வேண்டும்.
அங்குதான் பெண் வருகிறாள்.
தன்னுடைய சாமர்த்தியத்தால் ஆணுக்கு வரும் துன்பங்களை நீக்குகிறாள்.
ஆணின் வேகமும் வேண்டும். பெண்ணின் நிதானமும் வேண்டும்.
பாடல்
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி
மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.
அபிராமி பட்டர் அருளிய
அபிராமி அந்தாதி 101 பாடல்களில் 5வது பாடல்
பாடலின் பொருள்
பொருந்திய = பொருத்தமான
முப்புரை = மூன்று சொல்லப்படக் கூடிய உரை. படைத்தல், காத்தல், மறைத்தல் என்ற செயல்கள்
செப்பு = செப்பு கலசம் போல
உரை செய்யும் = சொல்லக் கூடிய
புணர் முலையாள் = ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்கும் தனங்களை உடையவள்
வருந்திய = அதனால், அந்த பாரத்தால் வருந்தும்
வஞ்சி = வஞ்சிக் கொடி போன்ற
மருங்குல் = இடை, இடுப்பு
மனோன்மணி = மனோன்மணியைப் போன்ற சிறந்தவள்
வார் சடையோன் = சடை முடி நிறைந்த சிவன்
அருந்திய = குடித்த
நஞ்சு = ஆலகால விஷத்தை
அமுது ஆக்கிய = அமுது ஆக்கிய
அம்பிகை = அம்பிகை, அபிராமி
அம்புயமேல் = தாமரை மலரின் மேல்
திருந்திய சுந்தரி = அமர்ந்து இருக்கும் சுந்தரி
அந்தரி = அந்தரத்தில் இருப்பவள்
பாதம் = பாதம்
என் சென்னியதே. = எங்கு இருக்கிறது என்றால் என் தலை மேல்
நஞ்சை அமுதம் ஆக்கியவள்.
நமக்கு வரும் பெரிய பெரிய துன்பங்களை நீக்குவது மட்டும் அல்ல, அவற்றையே இன்பமாக மாற்றித் தருபவள்.
நாம் செய்த வினை காரணமாக துன்பம்
வந்து சேரும்.
அதில் இருந்து தப்ப முடியாது.
ஆனால், அபிராமி
அந்த துன்பங்களை இன்பங்களாக மாற்றி விடுவாள்.
ஆலகால விஷத்தை அமுதமாக மாற்றியவளுக்கு நம் துன்பங்கள் எம்மாத்திரம்.
என்னடா இது ஒரு பக்தனாக இருந்து கொண்டு, கடவுளின் மார்பகங்களை இப்படி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பேசுகிறாரே என்று சிலர் நினைக்கலாம்.
ஒரு தாயின் மார்பகத்தை ஒரு குழந்தை பார்க்கும் பார்வை வேறு, கணவனோ மற்றவர்களோ பார்க்கும் பார்வை வேறு.
பட்டர் குழந்தையாகி விடுகிறார்.
கொஞ்சம் கூட விகல்பம் இல்லை. கூச்சம் இல்லை.
அபிராமி அந்தாதி புரிய வேண்டும் என்றால், பட்டரின் மனநிலைக்கு போய் விட வேண்டும்.
ஒரு குழந்தையின்
மன நிலையில் இருந்தால்தான் அது புரியும்.
சொல்லுக்கு பொருள் தேடும் கவிதை விளையாட்டு அல்ல இது.
சொல்லைக் கடந்து, காதலில் கரையும் இரசவாதம் இது.
அந்த சித்தி உங்களுக்கும் வாய்க்கட்டும்.
கண்ணனை பார்க்க வேண்டும் என்று பாரதி தெருவில் நடந்து செல்கின்றார்
அவர் வழக்கமாக போகும் தெரு என்றாலும் இரவு நேரம் எங்கும் விளக்கில்லை ... பூரண அம்மாவாசை அன்று
எல்லோரும் உறங்கிப்போனதால் ஏற்றிய தீ பந்தகளும் தங்கள் நாவை சுருட்டிக்கொண்டன
பாரதி எதைப்பற்றியும் கவலைப்படவில்லை
... சில தெரு நாய்கள் பாரதியை தெரிந்து இருந்ததால் அதிகம் குரைக்க வில்லை
கண்ணனோ கருப்பு ..
இருக்கும் சூழ்நிலையும் அடர்ந்த கருப்பு ...
வானமோ கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு நிலவை வெளியிடாமல் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தன ...
பாரதி வானத்தைப்
பார்க்கிறார் ...
உடனே எம்பி குதிக்கிறார் ...
அதோ கண்ணன் அதோ என் கண்ணம்மா ... தேடினேன் கிடைத்து விட்டான்
உடனே வார்த்தைகள் சந்தோஷங்கள் கவியாக பொழிய ஆரம்பித்தன
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று.....
கண்ணம்மா எனும் காதலி சிரிக்கிறாள் ...
சம்மதம் தரவில்லை ...
தன்னை சற்றே காதலி எனும் நிலையில் இருந்து கண்ணம்மா மாற்றிக்கொண்டு பாரதிக்கு நந்தலாலாவாக தெரிகிறாள் ...
பாரதியின் பாடல் வரிகளை உடனே மாறுகின்றன
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா -
நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா -
நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
நந்தலாலா ஓடிவந்து பாரதியை கட்டிக்கொள்கிறான்
"பாரதி! என்னால் வேறு வேறு ரூபங்கள் எடுக்க முடியும் ...
உன்னாலும் கவிகள் வேறு வேறு பாட முடியும் ...
நாம் இருவருமே பாரதி கண்ணம்மா தான் என்று மழலை மாறா மொழியில் பாரதியின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிடுகிறான் அந்த தாமோதரன் ...
மது உண்ட மயக்கத்தில் தன்னை மறந்து போகிறான் முண்டாசு கவி
*கண்களிருந்து பயனுண்டோ* 👀
பார்த்த சாரதி கோயில் ...
உள்ளே உற்சவர் வீதி உலா வர தயாராகி கொண்டிருந்தார் ...
யோக நரசிம்ஹர் கர்ஜிக்க
சயணித்துக்
கொண்டிருக்கும் ஸ்ரீ ரங்கநாதன் கண்களில் கண்ணீர் அலை பாய எழுந்து அமர முயற்சி செய்து கொண்டிருந்தான்
கோதண்ட ராமன் சீதையுடன் இருந்தும் எதையோ தொலைத்து விட்டது போல் கவலையுடன்
தான் சிந்தும் புன்னகையை கொஞ்சம் நிறுத்திக்
கொண்டான்...
பார்த்தசாரதிக்கும் வீதி உலா வர இஷ்டம் இல்லை ...
சோகத்தை தீர்க்கும் அனைத்து தெய்வ அம்சங்களும் ஏன் அன்று சோகமாக காட்சி அளித்தார்கள் ?
ஆமாம் பாரதியின் துள்ளும் நடை
கம்பீரமாய் தேசத்தின் கொடி போல் உயர்ந்து நிற்கும் மீசை ...
பராசக்தி என முழங்கும் குரல்
நிரந்தர ஓய்வு எடுக்க போகும் நாள் ..
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியவன் மதம் வேண்டாம் என்று யானையிடம் சொல்ல மறந்து போனான் ... 🐘
மதம் பிடித்த யானை மதிக்கெட்டு திரிந்தது ...
பாரதி வழக்கமாய் தரும் துளசி மாலையை தூக்கி தெப்பக்குளத்தில் எரிந்தது ..
கொடுத்த பழத்தை வாங்க மறுத்தது ...
பாரதியை விலகி போ என்று தும்பிக்கை கொண்டு தூது சொன்னது ....
பாரதி கேட்க வில்லை ...
சரக்கடித்தவன் சாம வேதம் ஓதுவதைப்போல்
பாரதி மீண்டும் மீண்டும் யானை அருகில் சென்றான்
விதி ஒற்றைத் தவிர மற்றவை எல்லாம் அவரை யானையின் அருகில் செல்ல தடுத்தன ...
விதியின் அடி பலமாக பாரதிக்கு விழுந்தது ...
நாட்கள் சில ஓடின கொஞ்சம் நடந்தன ... பாரதியின் உறுதி யானையின் பலம் போல
ஆனால் உடம்போ கொத்தவரங்காய் போல அலேக்....
பசிக்கு என்றுமே பாரதி நிறைவை கொடுத்ததில்லை
யானையின் மீது சற்றும் கோபம் இல்லை ...
பார்த்த சாரதியை பார்க்க முடியவில்லையே என்றே ஏக்கம் ...
ஆசை முகம் மறந்து போய் விட்டதே !
புலம்பலில் தமிழ் அன்னை ,
ருக்மிணி தாயார் போல் பட்டுப்புடவை தழைய தழைய மடிசாரில் வந்து பாடல் வரிகளை தந்தாள் ....
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
(ஆசை)
கண்ணில் தெரியுதொரு தோற்றம் -
அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
(ஆசை)
தேனை மறந்திருக்கும் வண்டும் -
ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் -
இந்த
வையம் முழுதுமில்லை தோழி
(ஆசை)
கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் -
இனி
வாழும் வழியென்னடி தோழி
(ஆசை)
பார்த்தசாரதி *பாரதி* என்றே அழைத்து அன்று மயங்கி விழுந்தான் கருவறையில் .....🙌
திரிபுரம் எரித்தான் ஈசன் தன் கொவ்வை செவ்வாயில் இருந்து சிதறிய புன்னகையால் ...
புன்னகை எனும் ஆயுதம் ஒன்றால் பொன் இரும்பு வெள்ளி கோட்டைகள் உருகி போனதே ...
ஐயனை வெல்ல ஒருவர் உண்டோ என்றே அண்டங்கள் வியந்து நிற்க
என்னை ஈசன் வென்றபின் அவன் புகழ் பாடுங்கள் என்றே ஈசனை எதிர்க்க துணிந்தாய் ஊடலின் பெயரில்
போர் தருமம் ...பகை எடுக்கும் அதே ஆயுதம் கொண்டே பகை வெல்ல வேண்டும்
உன் இதழ்கள் விரிந்தே சிறு புன்னகை அம்பாக விழுந்தது ...
உதடுகள் வில்லாக
தொடுத்தாய் அம்பை ஈசன் மீதே ...
துவண்டு விழுந்தான் ஈசன் உன் மடியில் ...
உதடுகள் வில்லானால்
புன்னகை அம்பானால்
புருவங்கள் சேனைகள் ஆனால்
பார்வை வேல் ஆனால்
காதல் மலர் கணைகள் ஆனால்
மகேஸ்வரன்
உன்னிடம்
தினம் தினம் தோற்பது கடினமோ தாயே ? 💐💐💐
எதிலும் அடங்காதவன் எவரும் அடக்க முடியாதவன் அன்று அடங்கிப்போனான்
தயிரை கடைந்து கொண்டிருந்தாள் யசோதை ...
கண்களில் நின்ற கண்ணன் தாயின் இமைகளை சற்றே மூடினான் ... எங்கும் இருட்டு ...
கண்ணா எங்கிருக்கிறாய் .. இருளைக்கண்டால் பயந்து போவாயே நான் இங்கே இருக்கிறேன் ஓடி வந்து கட்டிக்கொள் என்றாள் ...
சிரித்தான் கண்ணன் ...
அம்மா என்னை விட இருள் அதிகம் கருமை கொண்டதோ ?
இதோ உன் முன்னாடி நிற்கிறேன் ..உன் கண்களை திறந்து பார் .....
கண்களை மெல்ல மெல்ல தாமரை மொட்டு போல் திறக்கிறாள் எதிரே ஆதவன் போன்ற ஒளி ....
கண்ணா ... ஒரு நிமிடம் உனை பார்க்க முடியாவிட்டால் என் உயிர் அந்த க்ஷணமே என்னை விட்டு போக வேண்டும் ...
கட்டி அணைக்கிறாள் ...
வாய் முழுதும் பால் தயிர் வெண்ணெய் ... கண்ணன் சிரித்தவுடன் எல்லாம் அபிஷேகமாய் யசோதையை நனைக்கிறது ...
கண்ணா வைத்திருந்த பால் தயிர் வெண்ணெய் ஆறாய் ஓட வைத்து விட்டாயே ..
உன் விஷமம் அதிகமாகிக்
கொண்டே போகிறது ...
நில் ஓடாதே ... உன்னை கட்டிப்போடுகிறேன் பார் ....
கண்ணன் முன் ஓட பின் ஓடுகிறாள் யசோதை கையில் அடிக்க குச்சியுடன் ...
மாட்டிக்கொண்டான் கண்ணன் ....
ஓங்கும் குச்சியை பார்த்து பயந்து போய் அழுகிறான் கண்ணன் ...
யசோதை" இன்னும் அடிக்கவே இல்லை அதற்குள் அழுகை எப்படி வரும் " என்று ஆச்சரியப்பட்டாள்
தனது இரண்டு தாமரை கைகளால் கண்களைத் தேய்த்துக் கொண்டிருக்கிறான் கண்ணன்.
அவனது கண்கள்
பயத்தால் நிரம்பியுள்ளன,
மேலும் அவனது கழுத்தில் இருந்த முத்து மாலை,
சங்கு ஓடு போல மூன்று கோடுகளால் குறிக்கப்பட்டுள்ளது,
அழுகையின் காரணமாக அவன் விரைவாக சுவாசிப்பதால் நடுங்குகிறது
அவன் ஓடும்போது, காதணிகள் முன்னும் பின்னுமாக நகர்ந்து, அவரது கன்னங்களைத் தொட்டு முத்தமிட்டன
கடைசியில் கண்ணன் சிக்குண்டான் ... அவன் கட்டுப்பட்டது கயிரானால் அல்ல அன்பினால் பிரேமையினால் , உண்மை பக்தியினால் , முழு சரணாகதியினால்
எதிலும் அடங்காதவன் எவரும் அடக்க முடியாதவன் அன்று அடங்கிப்போனான்
தயிரை கடைந்து கொண்டிருந்தாள் யசோதை ...
கண்களில் நின்ற கண்ணன் தாயின் இமைகளை சற்றே மூடினான் ... எங்கும் இருட்டு ...
கண்ணா எங்கிருக்கிறாய் .. இருளைக்கண்டால் பயந்து போவாயே நான் இங்கே இருக்கிறேன் ஓடி வந்து கட்டிக்கொள் என்றாள் ...
சிரித்தான் கண்ணன் ...
அம்மா என்னை விட இருள் அதிகம் கருமை கொண்டதோ ?
இதோ உன் முன்னாடி நிற்கிறேன் ..உன் கண்களை திறந்து பார் .....
கண்களை மெல்ல மெல்ல தாமரை மொட்டு போல் திறக்கிறாள் எதிரே ஆதவன் போன்ற ஒளி ....
கண்ணா ... ஒரு நிமிடம் உனை பார்க்க முடியாவிட்டால் என் உயிர் அந்த க்ஷணமே என்னை விட்டு போக வேண்டும் ...
கட்டி அணைக்கிறாள் ...
வாய் முழுதும் பால் தயிர் வெண்ணெய் ... கண்ணன் சிரித்தவுடன் எல்லாம் அபிஷேகமாய் யசோதையை நனைக்கிறது ...
கண்ணா வைத்திருந்த பால் தயிர் வெண்ணெய் ஆறாய் ஓட வைத்து விட்டாயே ..
உன் விஷமம் அதிகமாகிக்
கொண்டே போகிறது ...
நில் ஓடாதே ... உன்னை கட்டிப்போடுகிறேன் பார் ....
கண்ணன் முன் ஓட பின் ஓடுகிறாள் யசோதை கையில் அடிக்க குச்சியுடன் ...
மாட்டிக்கொண்டான் கண்ணன் ....
ஓங்கும் குச்சியை பார்த்து பயந்து போய் அழுகிறான் கண்ணன் ...
யசோதை" இன்னும் அடிக்கவே இல்லை அதற்குள் அழுகை எப்படி வரும் " என்று ஆச்சரியப்பட்டாள்
தனது இரண்டு தாமரை கைகளால் கண்களைத் தேய்த்துக் கொண்டிருக்கிறான் கண்ணன்.
அவனது கண்கள்
பயத்தால் நிரம்பியுள்ளன,
மேலும் அவனது கழுத்தில் இருந்த முத்து மாலை,
சங்கு ஓடு போல மூன்று கோடுகளால் குறிக்கப்பட்டுள்ளது,
அழுகையின் காரணமாக அவன் விரைவாக சுவாசிப்பதால் நடுங்குகிறது
அவன் ஓடும்போது, காதணிகள் முன்னும் பின்னுமாக நகர்ந்து, அவரது கன்னங்களைத் தொட்டு முத்தமிட்டன
கடைசியில் கண்ணன் சிக்குண்டான் ... அவன் கட்டுப்பட்டது கயிரானால் அல்ல அன்பினால் பிரேமையினால் , உண்மை பக்தியினால் , முழு சரணாகதியினால்
பயிரவன் போற்றும் பயிரவி நீ ...
பஞ்சமி .... திதிகள் எல்லாம் போற்றும் திரிபுரை நீ
பாசாங்குசை நீ பஞ்சபாணியும் நீ
வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர்சண்டி காளி சாமுண்டி நீ
ஒளிருங்கலா
வயிரவி நீ
மண்டலி நீ
மாலினி நீ
சூலி வராகி நீ
என்றும் மறை போற்றும் நாமங்கள் கொண்டவள் நீ
நாயகி நீ
நான்முகி நாராயணி யும் நீயே
கை நளினபஞ்ச
சாயகி நீ
சாம்பவி நீ
சங்கரி நீ
சாமளை நீ
சாதிநச்சு
வாயகி நீ
மாலினி நீ மாதங்கி நீ
எல்லாமே நீ
சரணம் புகுந்தோர்க்கு அரணும் நீயே ஹரனும் நீ யே
*கண்களிருந்து பயனுண்டோ* 👀
பார்த்த சாரதி கோயில் ...
உள்ளே உற்சவர் வீதி உலா வர தயாராகி கொண்டிருந்தார் ...
யோக நரசிம்ஹர் கர்ஜிக்க
சயணித்துக்
கொண்டிருக்கும் ஸ்ரீ ரங்கநாதன் கண்களில் கண்ணீர் அலை பாய எழுந்து அமர முயற்சி செய்து கொண்டிருந்தான்
கோதண்ட ராமன் சீதையுடன் இருந்தும் எதையோ தொலைத்து விட்டது போல் கவலையுடன்
தான் சிந்தும் புன்னகையை கொஞ்சம் நிறுத்திக்
கொண்டான்...
பார்த்தசாரதிக்கும் வீதி உலா வர இஷ்டம் இல்லை ...
சோகத்தை தீர்க்கும் அனைத்து தெய்வ அம்சங்களும் ஏன் அன்று சோகமாக காட்சி அளித்தார்கள் ?
ஆமாம் பாரதியின் துள்ளும் நடை
கம்பீரமாய் தேசத்தின் கொடி போல் உயர்ந்து நிற்கும் மீசை ...
பராசக்தி என முழங்கும் குரல்
நிரந்தர ஓய்வு எடுக்க போகும் நாள் ..
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியவன் மதம் வேண்டாம் என்று யானையிடம் சொல்ல மறந்து போனான் ... 🐘
மதம் பிடித்த யானை மதிக்கெட்டு திரிந்தது ...
பாரதி வழக்கமாய் தரும் துளசி மாலையை தூக்கி தெப்பக்குளத்தில் எரிந்தது ..
கொடுத்த பழத்தை வாங்க மறுத்தது ...
பாரதியை விலகி போ என்று தும்பிக்கை கொண்டு தூது சொன்னது ....
பாரதி கேட்க வில்லை ...
சரக்கடித்தவன் சாம வேதம் ஓதுவதைப்போல்
பாரதி மீண்டும் மீண்டும் யானை அருகில் சென்றான்
விதி ஒற்றைத் தவிர மற்றவை எல்லாம் அவரை யானையின் அருகில் செல்ல தடுத்தன ...
விதியின் அடி பலமாக பாரதிக்கு விழுந்தது ...
நாட்கள் சில ஓடின கொஞ்சம் நடந்தன ... பாரதியின் உறுதி யானையின் பலம் போல
ஆனால் உடம்போ கொத்தவரங்காய் போல அலேக்....
பசிக்கு என்றுமே பாரதி நிறைவை கொடுத்ததில்லை
யானையின் மீது சற்றும் கோபம் இல்லை ...
பார்த்த சாரதியை பார்க்க முடியவில்லையே என்றே ஏக்கம் ...
ஆசை முகம் மறந்து போய் விட்டதே !
புலம்பலில் தமிழ் அன்னை ,
ருக்மிணி தாயார் போல் பட்டுப்புடவை தழைய தழைய மடிசாரில் வந்து பாடல் வரிகளை தந்தாள் ....
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
(ஆசை)
கண்ணில் தெரியுதொரு தோற்றம் -
அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
(ஆசை)
தேனை மறந்திருக்கும் வண்டும் -
ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் -
இந்த
வையம் முழுதுமில்லை தோழி
(ஆசை)
கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் -
இனி
வாழும் வழியென்னடி தோழி
(ஆசை)
பார்த்தசாரதி *பாரதி* என்றே அழைத்து அன்று மயங்கி விழுந்தான் கருவறையில் .....🙌
திரிபுரம் எரித்தான் ஈசன் தன் கொவ்வை செவ்வாயில் இருந்து சிதறிய புன்னகையால் ...
புன்னகை எனும் ஆயுதம் ஒன்றால் பொன் இரும்பு வெள்ளி கோட்டைகள் உருகி போனதே ...
ஐயனை வெல்ல ஒருவர் உண்டோ என்றே அண்டங்கள் வியந்து நிற்க
என்னை ஈசன் வென்றபின் அவன் புகழ் பாடுங்கள் என்றே ஈசனை எதிர்க்க துணிந்தாய் ஊடலின் பெயரில்
போர் தருமம் ...பகை எடுக்கும் அதே ஆயுதம் கொண்டே பகை வெல்ல வேண்டும்
உன் இதழ்கள் விரிந்தே சிறு புன்னகை அம்பாக விழுந்தது ...
உதடுகள் வில்லாக
தொடுத்தாய் அம்பை ஈசன் மீதே ...
துவண்டு விழுந்தான் ஈசன் உன் மடியில் ...
உதடுகள் வில்லானால்
புன்னகை அம்பானால்
புருவங்கள் சேனைகள் ஆனால்
பார்வை வேல் ஆனால்
காதல் மலர் கணைகள் ஆனால்
மகேஸ்வரன்
உன்னிடம்
தினம் தினம் தோற்பது கடினமோ தாயே ? 💐💐💐
கண்ணனை பார்க்க வேண்டும் என்று பாரதி தெருவில் நடந்து செல்கின்றார்
அவர் வழக்கமாக போகும் தெரு என்றாலும் இரவு நேரம் எங்கும் விளக்கில்லை ... பூரண அம்மாவாசை அன்று
எல்லோரும் உறங்கிப்போனதால் ஏற்றிய தீ பந்தகளும் தங்கள் நாவை சுருட்டிக்கொண்டன
பாரதி எதைப்பற்றியும் கவலைப்படவில்லை
... சில தெரு நாய்கள் பாரதியை தெரிந்து இருந்ததால் அதிகம் குரைக்க வில்லை
கண்ணனோ கருப்பு ..
இருக்கும் சூழ்நிலையும் அடர்ந்த கருப்பு ...
வானமோ கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு நிலவை வெளியிடாமல் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தன ...
பாரதி வானத்தைப்
பார்க்கிறார் ...
உடனே எம்பி குதிக்கிறார் ...
அதோ கண்ணன் அதோ என் கண்ணம்மா ... தேடினேன் கிடைத்து விட்டான்
உடனே வார்த்தைகள் சந்தோஷங்கள் கவியாக பொழிய ஆரம்பித்தன
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று.....
கண்ணம்மா எனும் காதலி சிரிக்கிறாள் ...
சம்மதம் தரவில்லை ...
தன்னை சற்றே காதலி எனும் நிலையில் இருந்து கண்ணம்மா மாற்றிக்கொண்டு பாரதிக்கு நந்தலாலாவாக தெரிகிறாள் ...
பாரதியின் பாடல் வரிகளை உடனே மாறுகின்றன
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா -
நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா -
நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
நந்தலாலா ஓடிவந்து பாரதியை கட்டிக்கொள்கிறான்
"பாரதி! என்னால் வேறு வேறு ரூபங்கள் எடுக்க முடியும் ...
உன்னாலும் கவிகள் வேறு வேறு பாட முடியும் ...
நாம் இருவருமே பாரதி கண்ணம்மா தான் என்று மழலை மாறா மொழியில் பாரதியின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிடுகிறான் அந்த தாமோதரன் ...
மது உண்ட மயக்கத்தில் தன்னை மறந்து போகிறான் முண்டாசு கவி
*அங்கே குழுமினரம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம்*
வாயிலே வஞ்சனை மனத்துள்ளே கண்ணனுக்கு பால் அபிஷேகம்
கோபியர் குறை சொல்ல வந்தனர் நந்தகோபனிடத்தில் .யசோதை இடத்தில்
அம்மா யசோதை நல்ல பிள்ளையை பெற்றடுத்தாய் ..
நாலுபேர் திட்டும் படி ஏன் வளர்த்தாய் ..?
அவன் செய்யும் குறும்புகள் ஏராளம்... துள்ளும் வம்புகள் அது போகும் ஓராயிரம்
யசோதை ஏற்றுக்கொள்ள வில்லை ...
கண்ணனா என் மகன் கண்ணனா
அப்பாவி அவன் ... தப்பாமல் அமைதி காப்பான் ...
என் பால் பருகி வளர்ந்தவன்
எப்பாலும் தப்பு செய்ய மாட்டான் ...
கோபியர் கோபித்தனர் ...
சேலைக்குள் அவனை மூடி வளர்த்தால் எங்கள் பானைக்குள் பாலும் தயிரும் எங்கு சென்றது ?
பிறக்கும் வெண்ணெய் உடனே முக்தி அடைவது எப்படி ?
பாரதி யோசிக்கிறான்
அடடா எண்ணங்கள் அழகா வருகிறதே சரி இதை வைத்து ஓர் கவி இயற்றுவோம் ....
அவன் மனம் கோகுலம் விரைந்து சென்றது .... பாடல் வரிகளும் தான் ...
தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை. (தீராத)
தின்னப் பழங்கொண்டு தருவான்;-
பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால்-
அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)
*யசோதை*
போறும் நிறுந்துங்களடி...
என் கண்ணன் அப்படிப்பட்டவன் இல்லை ..
பத்தரை மாற்றுத் தங்கம் ...
ஒரு மாத்திரை போதும் தவறு செய்யான்
கோபியர்களில் மூத்தவள் திரிபுரா முன் வந்து சொல்கிறாள்
தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான்-
சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)
யசோதை ...
சிரிக்கிறாள் ..
கண்ணன் அப்படி சொன்னதாகவே இருக்கட்டும் ...
நீ என்ன மானொத்த பெண்ணா திரிபுரா ?
முண்டி அடித்துக்கொண்டே வருகிறாள் வசந்த கோகிலம்
யசோதா இன்னும் சொல்கிறோம் கேள்
அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழ அழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” என்பான்-
என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)
யசோதை மீண்டும் சிரிக்கிறாள் ...
வேடிக்கை இது
நீ பேரப்பிள்ளைகள் எடுத்தாகி விட்டாய் என்று என் கண்ணன் அறிவான்
வசந்தா எனும் கோபி ...
"யசோதே!! எதையும் நீ நம்ப மாட்டாய்
பார் என் பொங்கலுக்கு எடுத்த புடவை ..
புழுதி வாரி எறிந்தவன் உன் செல்லப்பிள்ளை கண்ணனடி...
புல்லாங் குழல்கொண்டு வருவான்-
அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)
மீரா சொல்ல சொல்ல யசோதை மகிழ்ந்து போகிறாள் ..இது குறை அல்ல பாராட்டு என்றே
மீரா தொடர்கிறாள்
அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ?-
கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)
ஓ .. மீரா குறை சொல்லத் தான் வருகிறாள் ..
கண்ணன் அப்படி செய்யக்கூடியவன் தான் என்று உள் மனம் சொன்னாலும் வெளியே நம்பாத மாதிரி நடிக்கிறாள் யசோதை
விளையாட வாவென் றழைப்பான்;-வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்;-எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான் (தீராத)
எல்லோரும் ஒரே குரலில் சொல்ல யசோதை காதுகளை பொத்திக் கொள்கிறாள்
அம்மைக்கு நல்லவன்,கண்டீர்!-
மூளி
அத்தைக்கு நல்லவன்,தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர் செய்யும் பெரியோர்-வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)
யசோதை தன்னை மீறி கத்துகிறாள் ..
கண்ணன் நல்லவன் சூது வாது தெரியாதவன் ...
அவனுக்கு நடிக்கத் தெரியாது நடிக்கவும் வராது
கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;-
பொய்மை
சூத்திரம் பழிசொலக் கூசாக் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)
ஐயோ நிறுத்துங்கள் ...
நீங்கள் சொல்லித்தான் அவனை அடிக்க குச்சி எடுத்துக்கொண்டு ஓடினேன் ..
கயிறால் கட்டினேன் உரலில் கட்டினேன் ... ஆனால் அவன் அப்பாவி
எனக்காக எல்லாம் பொறுத்துக்கொண்டான் என் தாமோதரன்
யசோதையிடம் இனி சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை என்று நொந்துகொண்டு எல்லா கோபியர்களும் வீடு திரும்புகிறார்கள்
கண்ணன் நக்கலாக சிரிப்பது பாரதியின் காதுகளில் மட்டும் கணீர் என்று கேட்கிறது ....
*நின்னருள் ஏதென்று சொல்லுவதே*💐💐💐
நீ எனக்கு என்னவெல்லாம் அளித்திருக்கிறாய் தெரியுமா ?
பட்டியல் போட்டுப்பார்த்தேன் ..
அதி பரவசம் கொண்டேன் ...
உடல் சிலிர்க்க உள்ளம் உவக்க
இனி ஒன்றும் வேண்டேன் என்றே உறுதி கொண்டேன் ...
அந்த உறுதி, மலை போல் குலையாமல் இருக்க வேண்டும் ... அதற்கும் சேர்த்து வரம் தருவாய் ....
*உடைத்தனை வஞ்சப்பிறவியை*
முதலாக நீ என்ன செய்தாய் ....
இந்த பாழும் பிறவி எனும் சாபத்தை உடைத்து தூக்கி எரிந்தாய் ...
இனி ஒரு தாயின் கருவறை நீ காண மாட்டாய் என்றாய் ...
பொருள் தரும் போகும் நீக்கினாய் ..
போகம் தரும் மருள் நீக்கினாய் ...
நீக்கி தெருளாய் வந்தாய் ... அது மட்டுமா ?
இந்த பள்ளம் நிறைந்த உள்ளத்தில் இருக்கும் அறியாமை எனும் இருள் நீக்கினாய் ..
வஞ்சம் நிறைந்த பிறவி இது ..... நான் இனி உனக்கு தாரேன் என்றே சத்தியம் செய்தாய்
உள்ளே ஒளி ஆனாய் ... வெளியே ஓடும் சுனையானாய்
*உள்ளம் உருகும் அன்பு*
*படைத்தனை*
அம்மா எங்கே போனது தாயே என் அகங்காரம் மமஹாரம்
கர்வம் மமதை மோகம் பேராசை காமம் ?
வெறும் கணிவும் அன்பும் கருணையும் மட்டுமே திரிவேணி சங்கமம் செய்கின்றதே தாயே
*பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே*
*அடைத்தனை*
மிகப்பெரிய வரம் எது தெரியுமா ...
உன் தாமரை பாதங்களை போற்றி பூஜை செய்யும் பணி ...
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் மகான்களுக்கும் மும்மூர்த்திகளுக்கும் கிடைக்காத வரம் அன்றோ இது !!
*நெஞ்சத்தழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை*
எவ்வளவு மண்டிகள்
வலைந்து வலைந்து செல்லும் சாக்கடைகள் ,
துர்நாற்றம் அடிக்கும் குப்பைகள் என் உள்ளத்தில் !!!
கவனிப்போர் அற்று கிடக்க
உள் புகுந்து உன் அருள் எனும் துடப்பத்தால் சுத்தம் செய்து கங்கை நீர் தெளித்து
கோலம் இட்டு செம்மண் போட்டு நெய் விளக்கேற்றி
நறுமணம் கமழும் ஊதுபத்திகள் புடை சூழ
உயிர் சிலையாக நீயே அமர்ந்து கொண்டாய்
*சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே*
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவளே , சுந்தரி, அபிராமி, மாதங்கி
உன்னருள் என்னவென்று சொல்வேன் அம்மா ...
இனியும் நான் உலக பற்று சேர்க்கும் எதையும் கேட்டால் எனைப்போல் ஒரு மூடன் உண்டோ ? 💐💐💐💐
*அபிராமி அந்தாதி*
*பாடல் : 27* 👌
*நின்னருள் ஏதென்று சொல்லுவதே*💐💐💐
நீ எனக்கு என்னவெல்லாம் அளித்திருக்கிறாய் தெரியுமா ?
பட்டியல் போட்டுப்பார்த்தேன் ..
அதி பரவசம் கொண்டேன் ...
உடல் சிலிர்க்க உள்ளம் உவக்க
இனி ஒன்றும் வேண்டேன் என்றே உறுதி கொண்டேன் ...
அந்த உறுதி, மலை போல் குலையாமல் இருக்க வேண்டும் ... அதற்கும் சேர்த்து வரம் தருவாய் ....
*உடைத்தனை வஞ்சப்பிறவியை*
முதலாக நீ என்ன செய்தாய் ....
இந்த பாழும் பிறவி எனும் சாபத்தை உடைத்து தூக்கி எரிந்தாய் ...
இனி ஒரு தாயின் கருவறை நீ காண மாட்டாய் என்றாய் ...
பொருள் தரும் போகும் நீக்கினாய் ..
போகம் தரும் மருள் நீக்கினாய் ...
நீக்கி தெருளாய் வந்தாய் ... அது மட்டுமா ?
இந்த பள்ளம் நிறைந்த உள்ளத்தில் இருக்கும் அறியாமை எனும் இருள் நீக்கினாய் ..
வஞ்சம் நிறைந்த பிறவி இது ..... நான் இனி உனக்கு தாரேன் என்றே சத்தியம் செய்தாய்
உள்ளே ஒளி ஆனாய் ... வெளியே ஓடும் சுனையானாய்
*உள்ளம் உருகும் அன்பு*
*படைத்தனை*
அம்மா எங்கே போனது தாயே என் அகங்காரம் மமஹாரம்
கர்வம் மமதை மோகம் பேராசை காமம் ?
வெறும் கணிவும் அன்பும் கருணையும் மட்டுமே திரிவேணி சங்கமம் செய்கின்றதே தாயே
*பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே*
*அடைத்தனை*
மிகப்பெரிய வரம் எது தெரியுமா ...
உன் தாமரை பாதங்களை போற்றி பூஜை செய்யும் பணி ...
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் மகான்களுக்கும் மும்மூர்த்திகளுக்கும் கிடைக்காத வரம் அன்றோ இது !!
*நெஞ்சத்தழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை*
எவ்வளவு மண்டிகள்
வளைந்து வளைந்து செல்லும் சாக்கடைகள் ,
துர்நாற்றம் அடிக்கும் குப்பைகள் என் உள்ளத்தில் !!!
கவனிப்போர் அற்று கிடக்க
உள் புகுந்து உன் அருள் எனும் துடப்பத்தால் சுத்தம் செய்து கங்கை நீர் தெளித்து
கோலம் இட்டு செம்மண் போட்டு நெய் விளக்கேற்றி
நறுமணம் கமழும் ஊதுபத்திகள் புடை சூழ
உயிர் சிலையாக நீயே அமர்ந்து கொண்டாய்
*சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே*
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவளே , சுந்தரி, அபிராமி, மாதங்கி
உன்னருள் என்னவென்று சொல்வேன் அம்மா ...
இனியும் நான் உலக பற்று சேர்க்கும் எதையும் கேட்டால் எனைப்போல் ஒரு மூடன் உண்டோ ? 💐💐💐💐
*அபிராமி அந்தாதி*
*பாடல் : 27* 👌
*நின்னருள் ஏதென்று சொல்லுவதே*💐💐💐
நீ எனக்கு என்னவெல்லாம் அளித்திருக்கிறாய் தெரியுமா ?
பட்டியல் போட்டுப்பார்த்தேன் ..
அதி பரவசம் கொண்டேன் ...
உடல் சிலிர்க்க உள்ளம் உவக்க
இனி ஒன்றும் வேண்டேன் என்றே உறுதி கொண்டேன் ...
அந்த உறுதி, மலை போல் குலையாமல் இருக்க வேண்டும் ... அதற்கும் சேர்த்து வரம் தருவாய் ....
*உடைத்தனை வஞ்சப்பிறவியை*
முதலாக நீ என்ன செய்தாய் ....
இந்த பாழும் பிறவி எனும் சாபத்தை உடைத்து தூக்கி எரிந்தாய் ...
இனி ஒரு தாயின் கருவறை நீ காண மாட்டாய் என்றாய் ...
பொருள் தரும் போகம் நீக்கினாய் ..
போகம் தரும் மருள் நீக்கினாய் ...
நீக்கி தெருளாய் வந்தாய் ... அது மட்டுமா ?
இந்த பள்ளம் நிறைந்த உள்ளத்தில் இருக்கும் அறியாமை எனும் இருள் நீக்கினாய் ..
வஞ்சம் நிறைந்த பிறவி இது ..... நான் இனி உனக்கு தாரேன் என்றே சத்தியம் செய்தாய்
உள்ளே ஒளி ஆனாய் ... வெளியே ஓடும் சுனையானாய்
*உள்ளம் உருகும் அன்பு*
*படைத்தனை*
அம்மா எங்கே போனது தாயே என் அகங்காரம் மமஹாரம்
கர்வம் மமதை மோகம் பேராசை காமம் ?
வெறும் கணிவும் அன்பும் கருணையும் மட்டுமே திரிவேணி சங்கமம் செய்கின்றதே தாயே
*பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே*
*அடைத்தனை*
மிகப்பெரிய வரம் எது தெரியுமா ...
உன் தாமரை பாதங்களை போற்றி பூஜை செய்யும் பணி ...
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் மகான்களுக்கும் மும்மூர்த்திகளுக்கும் கிடைக்காத வரம் அன்றோ இது !!
*நெஞ்சத்தழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை*
எவ்வளவு மண்டிகள்
வலைந்து வலைந்து செல்லும் சாக்கடைகள் ,
துர்நாற்றம் அடிக்கும் குப்பைகள் என் உள்ளத்தில் !!!
கவனிப்போர் அற்று கிடக்க
உள் புகுந்து உன் அருள் எனும் துடப்பத்தால் சுத்தம் செய்து கங்கை நீர் தெளித்து
கோலம் இட்டு செம்மண் போட்டு நெய் விளக்கேற்றி
நறுமணம் கமழும் ஊதுபத்திகள் புடை சூழ
உயிர் சிலையாக நீயே அமர்ந்து கொண்டாய்
*சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே*
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவளே , சுந்தரி, அபிராமி, மாதங்கி
உன்னருள் என்னவென்று சொல்வேன் அம்மா ...
இனியும் நான் உலக பற்று சேர்க்கும் எதையும் கேட்டால் எனைப்போல் ஒரு மூடன் உண்டோ ? 💐💐💐💐
*அபிராமி அந்தாதி*
*பாடல் : 27* 👌
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிளுக்குள் பல கோயில்கள் உள்ளன .. இப்படி எந்த பெருமாள் கோயிலும் கிடையாது
1. பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்க நாதன்
2. லக்ஷ்மணன் , சீதா சமேத கோதண்ட ராமன் எதிரே ராம தூதன்
3. யோக நரசிம்ஹர்
4. காஞ்சி வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில்
5. பார்த்த சாரதி தன் இல்லாள் ருக்மணி , பிள்ளைகள் பேர பிள்ளைகளுடன் நின்ற கோலத்தில் தரிசனம்
[13/10, 11:36] Jayaraman Ravikumar: பார்த்த சாரதியின் மீசை வெண்மை நிறம் கொண்டது ...
ஒருமுறை ருக்மணி கேட்டாள்
உங்கள் பிள்ளைகளுக்கு பெண்களே கிடைப்பதில்லை பேரப்பிள்ளைகளுக்கும் அதே கதி ...
எவ்வளவு வயதானாலும் உங்கள் வனப்பும் அழகும் குறைவதில்லை ...
கண்ணனுக்கு ஒரே கர்வம் ...
அவன் தூங்கும் போது அவன் மீசைக்கு வெண்மை நிறம் தந்து கண்ணனும் வயதாகிக் கொண்டிருக்கிறான் என்பதை உலகுக்கு காண்பித்தாளாம் ருக்மணி .... 🦚
Where was Shiva mentioned in Ramayana?
Mahadev is mentioned multiple times in the Valmiki Ramayana, specifically in the Bala Kanda, Ayodhya Kanda, and Yuddha Kanda.
Vishwamitra in Bala Kanda, narrates the story of Mahadev to Shri Ram about Shiva's penance in the hermitage where he burns Kamadev, birth of Skanda through Ganga, Shiva accepting Ganga on his mane and Shiva drinking Halahala.
When Mahadev burns down Kama (the god of Love) with his third eye and rendering him formless.
Kandarpa (the god of love), also known as Kama, was endowed with a living form in the past. The foolish fellow was bold enough to assail Lord Shiva, the suzerain Lord of gods, who had been performing austerities in the hermitage and remained uninterruptedly absorbed in deep meditation, while he was after having married going out along with the entire host of the forty-nine wind gods (to meet Goddess Parvati) and Love was thereupon snubbed with a roar by the high-souled Lord. Lord Rudra further reproached him with his third eye, O scion of Raghu, and all the limbs of the evil-minded fellow dropped off from his body. It was on that occasion that the limbs of the haughty fellow, consumed through the wrath of Lord Shiva, disappeared, and it was in this way that Kama was rendered bodiless.
Canto 23, Bala Kanda, Valmiki Ramayana
Ganga accepts the seeds; however, she is unable to bear the seed. Agni tells her to discharge it on the offshoot of the Himalayas.
O, exceptionally glorious god of fire! Place in Ganga, the daughter of Himavan, the seed of Lord Shiva borne by you.
Pray, place the seed of Lord Shiva captured and retained by me, for such is the pleasure of the gods.
Canto 37, Bala Kanda, Valmiki Ramayana
Vishwamitra narrates the story of how Mahadev accepts Ganga on his head, coiled in his mane.
I am pleased with you, O jewel among men, and shall do that which is pleasing to you. I shall receive the Ganga on my head. Swelling in the form of a very mighty stream and acquiring a formidable force, the celebrated Ganga, the adored of all the worlds, thereupon descended forthwith, O Rama, from the heavens on the blessed head of Lord Shiva: so the tradition goes. Nay, the said Ganga, who is all glorious and most difficult to sustain, thought: "Wafting a lord Shankara along with my stream, I might as well enter Patala." Enraged to perceive her arrogance, the three-eyed Lord Shankara, for his part, forthwith made up his mind to conceal her.
In this way, the holy river descended from the heavens to the head of Lord Shankara and came down from there to the earth, the appellation of "Tripathaga" or the river following a threefold path, enjoyed by it.
Vishwamitra narrates the story of Mahadev drinking the Halahal during the Samudra Manthan to Shri Ram.
Addressed thus by the gods, Lord Shiva forthwith appeared and afterwards appeared on that very spot Lord Shri Vishnu. Shri Hari spoke smiling to the aforesaid Lord Rudra, the Weilder of a trident:- "That which has appeared in the first instance on the ocean being churned by the gods is really speaking your share, O Jewel among gods, since it is You that takes the lead among gods. Therefore, standing here, O Almighty Lord, accept this poison as the tribute offered in precedence over others. Nay, saying si, Lord Vishnu went out of sight on that very spot. Perceiving the fright of the gods and listening to the exhortation of Lord Vishnu, Lord Shiva, the ruler of gods, for his part, treasured up in his throat the deadly poison named Halahala as though it were nectar, and, leaving the gods, departed.
Canto 45, Bala Kanda, Valmiki Ramayana
Janaka narrates to Shri Ram, Lakshmana and Vishwamitra about how he received the divine bow from Lord Shiva to his forefathers and then was given to him.
Pulling the string of this bow in sport to wreck the sacrifice of Daksha in the olden days, the valiant Lord Rudra for his part angrily spoke to the gods as follows:- "Since you have not set apart a share for me, even though I desired it, O gods, I shall sever your most adorable heads with this bow." Getting discomposed, all the gods thereupon conciliated Lord Shankara, O jewel among sages, and Shiva got eventually pleased with them.
Canto 66, Bala Kanda, Valmiki Ramayana
In Ayodhya Kanda, he pays obeisances to Mahadev on reaching Chitrakoot.
Having bathed in the river Mandakini according to the procedure laid down in the scriptures and muttered sacred texts in the right way and intending as he did to perform solemn rites calculated to ward off the evils attendant on a new construction, Shri Rama offered excellent oblations to Lord Rudra and Lord Vishnu too, after performing the Vaishwadeva.
Canto 56, Ayodhya Kanda, Valmiki Ramayana
Then again, Shri Ram meets Shiva after Agni brings back Sita from the fire. Mahadev brings with him Dasharatha in his ethereal form.
Hearing the foregoing excellent reply made by Shri Ram, Lord Shiva thereupon delivered the following still more charming speech.
“O lotus-eyed, mighty-armed and broad-chested scourge of your enemies, formed by you, O jewel among those upholding by you, O jewel among those upholding the cause of virtue. Fortunately, the dread born of Ravana, which cast an enormous, formidable gloom on the entire universe, has been dispelled by you on the battlefield.
Canto 123, Yuddha Kanda, Valmiki Ramayana
In the Uttara Kanda, Mahadev is mentioned during the episode where Ravana confronts Nandi and tries to lift the Kailash to clear the way for his vehicle. Mahadev presses the hill over his hand and he sings hymns in praise of Mahadev.
உன் கவிதையில்
எண்ணிய முடிதல் திண்ணிய தெளிந்த நல்லறிவு
பண்ணிய பாவம் பரிதி போல்
நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும்...
எத்தனை வேண்டும் கேட்டாலும் அருளும் பராசக்தி...
உன் நாவிலும்
கவிதைகள் புணர்வதற்கு கைகளிலும்
அமர்ந்து ஆசி புரிந்து கொண்டிருக்கிறாள்
அதை படிக்கும் பேற்றை நாங்களும் பெற்று இருக்கிறோம்.....
அன்னை பராசக்தியின் அருளால் அனைவரும் வேண்டும் வரம் பெற்று...
நலமுடன் வாழ வேண்டும்.. 🙏
பகிர்வு அருமையிலும் அருமை
கண்ணன் கோயில் சென்று வந்த பின் வழியில் ஒரு அம்மன் கோயிலை பார்க்கிறார் பாரதி
பாரதியின் வறுமை போல் சிதைந்து கிடந்தது கோயில் ...
ஊரில் இருந்தோர் பலரும் இந்த கோயிலில் உள்ள அம்மன் சக்தி இல்லாதது ...
அந்த அம்மனை வேண்டினால் இருப்பதும் போய் விடும் என்றனர்
பாரதியின் காது படவே ...
மனம் கலங்கினான் பாரதி ...
தாய் சுகம் இல்லை என்றால் நலம் கெட புழுதியில் தூக்கி எறிவீரோ மூடர்காள் ?
சக்தி அவளே இழப்பின் நாம் எல்லோரும் சவம் அன்றோ ?
நான் வேண்டுவதை தருவாள் என் அன்னை பராசக்தி இதோ பாருங்கள்
எண்ணங்கள் கவியாக பொழிந்தன
எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!
சிரித்தாள் பராசக்தி ...
சிதைந்த சுவர்கள் கோபுரமாயின ...
உடைந்த விளக்குகள் ஒளி விட்டு வீசின ...
நலிந்த சுவர்கள் இரும்பு கோட்டைகள் ஆயின ...
உடைந்து போன மணி தடை இன்றி அடித்தது ...
கொலுவிருந்த சிலந்திகளும் வௌவால்களும் அன்னமும் மயிலும் ஆயின ...
அலங்கோலமாய் இருந்த கோயில் கோலங்கள் நிறைந்த கோயில் ஆயின ...
பராசக்தியின் கடைக்கண் பாரதியின் வரமானது .....
நாலு கால பூஜை யில் அம்பிகை ஜொலித்தாள் நின்று எரியும் கற்பூரம் போல் .... 🙌🙌🙌
அச்சம்
மடம்
நாணம்
பயிர்ப்பு என்பது உலகை ஈன்ற அன்னை பராசக்திக்கும் பொருந்துமா ?
இப்படிப்பட்ட ஒரு கேள்வியை
என்னிடம் வைத்தார் என் நண்பர் ஒருவர் ...
அவருக்கு ஏன் இப்படி ஒரு விசித்திரமான சந்தேகம் உண்டானது என்றே புரியவில்லை ...
சரி அவர் கேட்ட கேள்வியை புறங்கணிக்காமல் பதில் சொல்ல விழைந்தேன்...
நீங்கள் சொன்ன நான்கு பண்புகளும் சாமுத்ரா லக்ஷணம் கொண்ட எல்லா பெண்களுக்கும் பொருந்தும் ...
அம்பாள் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி ...
அவளிடமிருந்து வெளிவந்ததுதான் சாமுத்ரா லக்ஷ்ணங்கள்...
சரி உதாரணம் சொல்லி விளக்குகிறேன்
*முதல் பண்பு ...அச்சம்*
எல்லாம் கொண்ட நாயகிக்கு பயம் அச்சம் உண்டாகுமா அவளே காளி , சாமுண்டி ...
அவள் ஏன் எதற்கு பயப்படவேண்டும் ...?
இருந்தும் அவள் மூன்று இடங்களில் அச்சம் எனும் பண்பை வெளிப்
படுத்துகிறாள்
1.இலங்கேஸ்வரன் இமயமலை பெயர்த்து எடுக்கும் போது .அங்கிருக்கும் உயிர் வாழ் விலங்கினங்கள் , முனிவர்கள் சித்தர்கள் பயம் கொண்டு இங்கும் அங்கும் ஓடும் போது தானும் பயந்து ஈசனை கட்டிக்கொள்கிறாள்
2.கம்பா நதியில் வெள்ளம் கரை புரண்டு வரும் போது தான் மணலால் கட்டிய சிவலிங்கத்திற்கு ஆபத்து என்று பயந்து மார்போடு கட்டிக்கொள்கிறான்
சுந்தரர் தன் பதிகத்தில் கள்ளனை காணும் கண்கள் செய்ததோ மாதவங்கள் என்று பாடினார் ...
ஈசனை கள்ளன் என்கிறார் ... அம்பிகை தன்னை ஆரத் தழுவேண்டும் என்றே கம்பா நதியில் வெள்ளத்தை உருவாக்கினான் ஈசன்
3.ஈசன் ஆல ஆல விஷத்தை உண்டபோது உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து போகுமே என்று பயந்தாளாம் அம்பாள்
அடுத்த பண்பு மடம் ...மடம் என்றால்
அப்பாவித்தனம் அல்லது துறவு வாழ்வு போன்ற ஒழுக்கம்.
அம்பாளைப் போல் தவம் செய்தவர் யாரும் இல்லை ... பவானி த்வம் தாஸே மயீ ....
சொல்ல வந்ததை முடிக்கும் முன்னே அருள்பவள் அம்பாள் ..
இவளை போல் கல்மிஷம் இல்லாத ஒரு தெய்வம் உண்டா ?
அடுத்த பண்பு நாணம் (வெட்கம்).... திருமீயச்சூர் போய் பார்க்க வேண்டும் அம்பாள் வெட்கப்படும் அழகை
அடுத்த பண்பு *பயிர்ப்பு* :
கற்பு அல்லது சுத்தம்.
அம்பாளின் இந்த குணம்
ஸ்ரீ வித்யா உபாசனைகளிலும் , ஸ்ரீ லலிதோபாக்யானதிலும்
தேவி மாஹாத்மியத்திலும் விரிவாக சொல்லப்பட்டுள்ளது...
அம்பாளிடம் இருந்து பிறக்கும் கலைகள் , பண்புகள் அம்பாளுக்கு பொருந்துமா என்று கேட்பது எவ்வளவு மடத்தனம் என்று உணர்ந்த நண்பர்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு கொண்டு மன்னிப்பு கேட்டார்
இந்த சந்தேகம் எல்லோருக்கும் வரக்கூடியது தான் ...உங்களுக்கும் வருவதில் ஆச்சரியம் இல்லை ... சரி 6 சமயங்களைப் பார்ப்போம்
1. *காணபத்தியம்*
கணபதியை முழு முதற்கடவுளாய் போற்றுவது ....
கணபதியை உருவாக்கினவள் அம்பாள் ..
மேலும் அம்பாளுக்கு செல்லப் பிள்ளை ...
அவனை புகழ்வதால் அம்பாள் ப்ரீத்தி அதிகம் அடைகிறாள் ...
திருவானைக் கோயிலில் உக்கிரமாக இருந்த அகிலாண்டேஸ்வரியை சாந்தப்படுத்த
அவள் எதிரில் அவள் செல்லப்பிள்ளை கணபதியை ஸ்தாபித்தார்கள் .
விளைவு சந்தோஷத்தில் அவள் வரம் அள்ளி அள்ளித் தருகிறாள்
கணபதியின் உச்சிதனை முகந்தால் - அவள் கருவம்
ஓங்கி வளர்கிறது
மெச்சி அவனை ஊரார்- புகழ்ந்தால்
அவள் மேனி சிலிர்க்கிறது
கணபதியை போற்றி புகழ்வதன் மூலம் அதி வரங்கள் அவளே தருகிறாள்..
அவள் செல்லப்பிள்ளை மூலம் அவளை அடையும் முறை தான்
*காணபத்தியம்*
*2.கௌமாரம்*
இங்கே முருகன் முழு முதற்முதல் கடவுள் ...
அவனும் செல்லப்பிள்ளை ...
சக்தியிடம் இருந்து வேல் வாங்கியவன் ...
அவனை முதன்மை படுத்தி சிவ காமேஸ்வர ஸாயுஜ்யம் அடையலாம்
3.*சௌரம்* :
அம்பாளின் மூன்று கண்களில் ஒன்று சூரியன் ..
தினம் நாம் பார்க்கும் கடவுள் ...
சூரியனை புகழ்வதன் மூலம் அம்பாளின் கண்களை புகழ்கிறோம் ...
ஆதவனின் ஒரு கதிர் நம்மீது பட்டாலே உடம்பு கொதிக்கும்
ஆனால் அம்பாளின் கண்களில் ஓன்றாக இருக்கும் சூரியன் குளிமை , கருணை , கடாக்ஷம் தருகிறான் ...
4.*வைணவம்*
மஹாவிஷ்ணு அதிபதி அவர் யார் அம்பாளின் மறு பக்கம் ...
விஷ்ணு மாயா , பத்மநாபன் சகோதரி , நாராயணீ ..
விஷ்ணுவை வணங்கினால் அவள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ...
இங்கே விஷ்ணு மூலம் அம்பாளை அடைகிறோம்
5.*சாக்தம்*
முழுக்க முழுக்க சக்தி இங்கே போற்றப்படுகிறாள்... விண்ணப்பங்கள் நேராக அவளிடமே போய் சேருகிறது
6.*சைவம்* ...
தன் பதியில் பாதி சக்தி ... தன் கணவரை பிறர் புகழ்ந்து துதிக்கும் போது தன்னையே அவர்களுக்கு தந்து விடுகிறாள்
அணுகும் முறைகள் வேறு வேறு ஆனால் அடையும் தெய்வம் ஒன்றே அதுவே *பராசக்தி* ...
ஒரு பெரிய மனிதரை சந்திக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு ப்ரீதியாக இருப்பவர்களை புகழ்ந்து அவர்கள் மூலம் அந்த பெரிய மனிதரின் தொடர்பை பெற்றுக்கொள்வது என்பது ஒரு முறை ( approach)
நேராக அந்த பெரிய மனிதரையே அணுகுவது இன்னொரு முறை
எல்லாவற்றிலும் மூலமாக வேராக இருப்பவள் பராசக்தி ...
எவரை கும்பிட்டாலும் , அவள் கருணை காற்றாற்று வெள்ளம் தான் ...
அபிராமி பட்டர் இதையே இப்படி சொல்கிறார்
56 வது பாடல்
"ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள்....."
63 ."ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயமுண்டென்று கொண்டாடிய வீணருக்கே!....."
கேள்வி கேட்டவர் விரைந்தார் மயிலை கற்பகாம்பாளை தரிசிக்க 👍
பராசக்தி பராசக்தி என்றே புலம்புகிறாய் ...
புவி ஏழும் பூத்தவள் என்கிறாய் ...
பூத்த வண்ணம் காத்தவள் என்கிறாய் ...
காப்பவள் என்றால் உனை அவள் தாழ்த்துவதேன் ?
வாடாத உன் சக்தி பாடல்களுக்கு வறுமை அள்ளி தந்தாள் ...
ஈட்டி போல் கிழித்து வரும் உன் பாடல் வரிகளுக்கு கிழிந்த ஆடைகள் தந்தாள் ...
எரியும் அடுப்பில் வரும் கருமை போல் அருமை வரிகளில் அயர்ந்து போனாள் ....
எல்லோரும் கேட்டனர் ஒரே கேள்வி ... தடுத்தனர் பராசக்தி பாரா சக்தி என்றே
சிரித்தான் பாரதி ....
நான் எழுதும் பாடல்கள் அவள் தருவது ...
எண்ணும் எனதல்ல எழுத்தும் எனதல்ல ... எல்லாம் இரவல் வறுமையும் இரவளே ...
எனக்கென வேண்டி நின்றால் நான் என்றும் ஏழைதான்...
பிறர் உச்சம் தொட பாடி நின்றால் நானே செல்வந்தன் ...
எனக்கென எதுவும் செய்வாள் என் பராசக்தி ...
வேண்ட தெரியதோர் கோடி ..
கோடியும் கூடி வாழ்ந்தால் சேர்ந்து வரும் இன்பம் அதிகம் அன்றோ !
எண்ணி லாத பொருட்குவை தானும்,
ஏற்றமும், புவி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளிம்
வெம்மை யும்பெருந் திணமையும் அறிவும்,
தண்ணி லாவின் அமைதியும் அருளும்
தருவள் இன்றென தன்னை யென்காளி;
மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்.
தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,
வானம் மூன்று மழைதரச் செய்வேன்
மாறி லாத வளங்கள் கொடுப்பேன்;
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்கறச் செய்வேன்,
நான்
விரும்பினவெல்லாம் காளி தருவாள்.
வாயடைத்துப்
போயினர் வசை பாடினோர் ....
பாரதி நன்றாக வாழவேண்டும் என்றே வந்தனை செய்தனர் பராசக்தியிடமே !!!
லலிதா சகஸ்ரநாமத்தில் என்ன விசேஷம் என்றால், ஒருமுறை கூப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது.
ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.
“ஸ்ரீ மாதா” என்று அழைக்கப்படும் ஸ்ரீ லலிதையானவள்,
எப்படித் தோன்றினாள்?
அசுரர்களின் இடையூறுகளையும்,
இன்னல்களையும் தாங்கமுடியாமல்,
தேவர்கள், யாகம் வளர்த்து, அம்பாளைவேண்டி நின்றனர்.
அவளை வரவழைக்க,
தங்களின் தேகத்தையே யாகத்தில் அர்ப்பணிக்கத் தயாரானார்கள்.
அப்பொழுது ஞானமாகிய குண்டத்திலிருந்து ஆதி சக்தியானவள் தோன்றினாள்.
சக்திகளுக்குள் ஸ்ரீ லலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லை என்று கூறுவார்கள்.
ஸ்ரீவித்யையைப்போல்,
நகரங்களில் ஸ்ரீ புரம் போல்,
ஸ்ரீ வித்யை உபாசகர்களில் ஸ்ரீ சிவனைப்போல், சகஸ்நாமங்களில் லலிதா சகஸ்ரநாமம் போல் என்று மேன்மை வாய்ந்ததாகப் போற்றப் படுகிறது.
நமது முதுகுத் தண்டின் அடியில், கிண்ணம் போன்ற அமைப்பு உள்ளது.
இதுதான் ‘மூலாதாரம்’ என்று கூறப்படுகிறது. நாம் மனதை ஒருநிலைப்படுத்தி,
சகஸ்ரநாமம் சொல்லும் பொழுது, நாபிக்கடியில் இருக்கும் சக்தியை, மந்திரத்தின் அழுத்தம் சீண்டி விடுகிறது.
அந்த சக்தியானது, மேலே எழும்பி,
சுவாதிஷ்டானம்,
மணிபூரகம்,
அனாகதம்,
விசுத்தி,
ஆக்ஞ்யை, பிறகு
சகஸ்ராரம் என்கிற கடைசி நிலையை வந்தடைகிறது.
சகஸ்ராரம் என்னும் சிகரத்தில்தான் ஸ்ரீ சிவன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சகஸ்ராரத்தில், அதாவது சிகரத்தில், கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்தில் அமிழ்தம் உள்ளது.
கீழிருந்து எழும்பிய சக்தி, சிகரத்தில் உள்ள சிவனோடு சேரும் பொழுது, கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்திலிருந்து,
அமிழ்தம் கொட்டுவதாக அறியப்படுகிறது. அப்பொழுது, அவள் சிவசக்தி ஸ்வரூபிணியாகவே நமக்குக் காட்சி கொடுப்பாள் என்று கூறப்படுகிறது.
லலிதா சகஸ்ரநாமம் படிப்பதால்,
கங்கை போன்ற புண்ணிய நதிகளில் முறைப்படி நீராடுதல்,
அவிலிங்க க்ஷேத்திரத்தில்,
கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்தல்,
அஸ்வமேத யாகம் செய்தல்,
அன்னதானம் செய்தல்,
இவையெல்லாவற்றையும் விட மேன்மையானது என்று கூறப்படுகிறது.
இப்பொழுது புரிகிறதல்லவா?
நாம் ஏன் லலிதா சகஸ்ரநாமத்தை சிரத்தையுடன் கூறவேண்டும் என்பதை?
விழிப்பு நிலை, உறக்க நிலை இரண்டிலுமே நம்முடன் தேவி எப்பொழுதுமே இருக்கிறாள். வாக்தேவிகள் மொழிய,
ஸ்ரீ ஹயக்ரீவரால் தெளியப் படுத்தப்பட்ட ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தினை நாம் அனுதினமும் நவிலுவோம்.
நிறைவான வாழ்வினைப் பெறுவோம்🙏
மகாபெரியவா
சரணம்🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*U become as a professional story teller*