அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 38 பதிவு 32
அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் பதிவு 32 கேள்வி பதில் நேரம் பதிவு 32 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான் பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் கேள்வி 32 நான் : ஐயனே நேற்று கேட்க வேண்டிய கேள்விகள் இவைகள் ... நேற்றைய வர்ணனையில் மனம் பரிபோனதால் இன்று கேட்கிறேன் பட்டர் நிலவென வந்தவள் பதில் ஒன்று தந்தவள் மறை சடையோன் பாதி பாகம் கொண்டவள் வரை இல்லா அருள் தருபவள் தரை வான் காணா தவ ஒளி உங்கள் எல்லோரையும் கவசம் போல் என்றும் காக்கட்டும் ... கேள்விகளை ஆரம்பி ரவி 🙂🙂🙂 நான் ஐயனே ... ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பொருள் புரிந்து கொண்டுதான் சொல்ல வேண்டுமா ? அவளைப்பற்றி சொல்ல வேண்டும் என்று ஒரு நல்ல எண்ணம...