அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 36 பதிவு 30

           அபிராமி பட்டரும்                              அடியேனும் 

கேள்வி பதில் 36

                                        பதிவு 30



கேள்வி பதில் நேரம்

 பதிவு 30 🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . 

 கேள்வி 36

 *நான்* : 

ஐயனே .... நமஸ்காரம் .மீண்டும் ஒரு குழந்தைத்தனமான கேள்வி .. பொறுத்துக்கொள்ள வேண்டும் . 

 *பட்டர்* .. 

இதுவரை நான் பொறுமை காட்டவில்லை என்றால் நீயும் 35 வது கேள்வி வரை வந்திருக்க முடியாது .. (சிரித்துக்கொள்கிறார்)

*நான்* ஐயனே ஆதி சங்கரர் ஆகட்டும் பட்டினத்தார் ஆகட்டும் . எல்லாம் துறந்தும் தங்கள் தாயை துறக்க முடியவில்லையே .. 

அவர்கள் கடைசி நேரத்தில் ஓடி வந்து ஈமக்கடன்கள் செய்தார்கள் .. 

எப்படி இவர்கள் பாசப்பிணைப்பை  அறுத்தவர்கள் என்று சொல்ல முடியும் ...?? 

துறவறம் என்பது எல்லா பந்தங்களையும் துறப்பது தானே ?💐💐💐




பட்டர்

ரவி உன் புரிதல் தவறு ... அவர்கள் அபிராமியை துதித்தவர்கள் அவள் அம்சமான தாயை எப்படி தூர வைப்பார்கள் ? 

ஒரு தாயை வணங்குவது என்பது கோடி ஆலயங்களுக்கு செல்லும் புண்ணியம் 

பெற்ற தாயை ஒதுக்கி வைத்து விட்டு உன்னால் அம்பிகையை வணங்கும் திறமை பெற முடியாது . .. 

பிறவி தாய்மார்கள் 64 கோடி யோகினி தேவதைகள் போல .. 

ஸ்ரீ சக்கரத்தில் பிந்துவை அடையும் முன் ஓவ்வொரு மூலையிலும் , ஒவ்வொரு முக்கோணத்திலும் யோகினி தேவதைகள் இறுதியாக 8 வாக் தேவிகள் அமர்ந்திருப்பார்கள் . 

இவர்களை மதிக்காமல் நீ ஸ்ரீபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமத் சிம்மாசனேஸ்வரியை பார்க்க முடியாது ...🌷🌷🌷




நீ கோடி லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதும் ஒன்றுதான் உன் தாயை பரிவுடன் பார்த்துக்கொள்ளுதலும் ஒன்றுதான் . 

ஆதிசங்கரருக்கு தெரியும் அவள் தாய் ஆர்யாம்பாள் தான் கற்பகாம்பாள் என்று ... 

பட்டினத்தாருக்கும் தெரியும் தன் தாய் சக்தியின் மறு வடிவம் என்று ... 

அவர்கள் துறவறத்தை விடவில்லை தாயை வணங்கினதால் இன்னும் அதிகமாக துறவியானர்கள்👑👑👑

நான் 

எவ்வளவு மடத்தனமான கேள்வியை கேட்டுவிட்டேன் .. மனம் மிகவும் வருந்தியது ... பட்டர் விட்டு சென்ற மணம் அருமறையாய் சுகந்தம் அங்கே பரப்பிக்கொண்டிருந்தது ...🙌🙌🙌😊😊😊



                 👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐


Comments

Ramani said…
நேரில் பேசும் தெய்வம் அம்மா என
அறியவைத்தான் இறைவன் -

என் கண்முன்னே
அவள் ஆவி துடிப்பதை அறிந்து
அழுதேன் - மாற்று வழி அறியாமல்
துவண்டேன் - என்றாலும் - அவள் மூச்சு
அடங்கியதும்
அடக்கமாய் அவளை - இரு கைத் தாங்கி
இடுகாட்டில்
மீண்டு வராமல் சாம்பலாக்கினேன்

மண்பானையில் அவளது சாம்பல்
மனமெல்லாம் அவளது ஆம்பல் (ஒழுக்கம்) என்
செல்லமே என்று கொஞ்சியவள் - என் வீட்டு
சுவற்றில் செல்லமாய் அசையாமல்
சிரித்துக்கொண்டே இருக்கின்றாள் படமாய்
ஆசிர்வதித்து கொண்டு இருக்கிறாள் தெய்வமாய்....

.. ச.சுப்பிரமணியன்..

என்றோ படித்த ச.சு கவிதையை ஞாபகப்படுத்தும் விதமாக அமைந்தது சக்தி குழும அபிராமி பட்டரின் இன்றைய பதிவு...

அழகான பதில்...மனதை உருக்கிய பதில்...😢😢

🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
*Twelve Golden Sentences*:

1. Heavy rains remind us of challenges in life. Never ask for a lighter rain, just pray for a better umbrella. That is Attitude.

2. When flood comes, fish eats ants and when flood recedes, ants eat fish. Only time matters. Just hold on. God gives opportunity to every one.

3. In a theatre when drama plays, you opt for front seats. When film is screened, you opt for rear seats. Your position in life is only relative. Not absolute.

4. For making soap, oil is required. But to clean oil, soap is required. This is the irony of life.

5. Life is not about finding the right person. But creating the right relationship.

6. It's not how we care in the beginning. But how much we care till the end.

7. Every problem has (N+1) solutions: where N is the number of solutions that you have tried and 1 is that you have not tried.

8. When you are in problem, don't think it's the End. It is only a Bend in life.

9. Difference between Man and God is God gives, gives and forgives. Man gets, gets and forgets.

10. Only two category of people are happy in life-The Mad and the Child. Be Mad to achieve a goal. Be a Child to enjoy what you achieved.

11. Never play with the feelings of others. You may win. But loose the person for lifetime.

12. There is NO Escalator to success. ONLY STEPS!!!
ravi said…
*ஜகத்குரு*

உங்களை ஜகத்குரு என்கிறார்களே நீங்கள் என்ன அகில ஜகத்துக்கும் குருவா என காசியில் பண்டிதர்கள் பரமாச்சாரியார் காசிக்கு விஜயம் செய்தபோது கேள்விகணை விடுத்தார்கள்.

அவர்களுக்கு பணிவாக பதில் சொன்னார் ஜகத்குரு" உலகில் உள்ள எல்லாரையும் எல்லாப்பொருளையும் குருவாக கருதுகிறேன் அவ்வளவுதான்".

அந்த நிதர்ஸனம் நமக்கு புரிவதற்கு பல ஆண்டுகள் ஆகியது.

மேற்கொண்டு படியுங்கள் நீங்களும் உடன்படுவீர்கள் அவர் மட்டும்தான் ஜகத்குரு என்று.👍👍🙏
ravi said…
காஞ்சி மகா பெரியவா ஓரிடத்தில் தங்கியிருந்தார்.

அன்று 'ஏகாதசி'.தண்ணீர் கூட சாப்பிடமாட்டார்.

அங்கே ஒருவர் மின்சாரம் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.

மணி ஆகிக் கொண்டே இருந்தது.

அதைப் பார்த்த பெரியவா,"இந்த ஆள் சாப்பிடவே போகாமல் வேலை செய்துகொண்டிருக்கிறார்!

சாப்பிட்டு விட்டு வரச்சொல்லுங்கள்."

என்கிறார்.

அதைக் கேட்டுவிட்டு அவர் ", இன்று ஏகாதசி, நான் சாப்பிட மாட்டேன்." என்றார். அவர் மராட்டிக்காரர்.

மராட்டியர் ஏகாதசி உபவாசங்களில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.

ஆச்சர்யப்பட்ட பெரியவா, "சரி,சாப்பிட வேண்டாம்.டீ யாவது குடித்துவிட்டு வரச்சொல்லுங்கள்." என்றார்.

அவரோ, "நான் தண்ணி கூடக் குடிக்க மாட்டேன்.நீங்ககவலைப்பட வேண்டாம்."என்றார்.

அதைக் கேட்டதும் அன்று முதல் ஏகாதசியில் குடித்த வந்த பாலையும் பெரியவா விட்டுவிட்டார்.

அந்த பழுது பார்க்க வந்தவரிடமிருந்து ஓர் உபதேசம் பெற்றதாக நினைத்தாரோ இந்த ஜகத்குரு!
ravi said…
இப்படி ஏகாதசி தண்ணீர்கூட இல்லாமல் கழிந்தது. மறுநாள் 'துவாதசி'. ஏகாதசியில் பட்டினி கிடக்காவிட்டால்கூட நாமெல்லாம் துவாதசியில், 'பாரணை' என்று சொல்லிக்கொண்டு சீக்கிரமாகச் சாப்பிட உட்கார்ந்துவிடுவோம்.

சாஸ்திரப்படி, துவாதசி ஸ்ரவண நட்சத்திரத்தில் வந்துவிட்டால் ஏகாதசிக்கு பட்டினி கிடக்காவிட்டாலும் துவாதசியில் தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது என்பர்.

அப்படிப்பட்ட துவாதசியாக அமைந்துவிட்டதால் பெரியவாளுக்கு அன்றும் உபவாசம். அடுத்த நாள் 'பிரதோஷம்'.

அதில் பகலெல்லாம் விரதமிருந்து இரவு 'சிவபூஜை' பண்ணி, சிவ தரிசனமான பின்தான் உண்பது வழக்கம்.

அதிலும் ஞாயிற்றுக்கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால் சூரியாஸ்தமனம் ஆன பிறகு சாப்பிடக் கூடாது. நாலாம் நாள் 'மகாசிவராத்திரி'.அன்றும் உபவாசம். தீர்த்தமாட
ravi said…
மட்டும்தான் சுவாமிகள் தண்ணீரைப் பார்த்தார்.

அவ்வளவு கடுமையாக உபவாசங்களைத் தொடர்ந்து அனுஷ்டித்தவர் அவர்.'

அப்படிப்பட்டவர் தான் வேளாவேளைக்குப் பசியெடுக்காத நிலை.' எனக்கு இன்னும் வரவில்லை என்கிறார்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

குரு என்பவர் தாம்பாட்டுக்குக் கடமை என்று ஏதோ லெக்சர்கள் கொடுத்து ‘போர்ஷன் எல்லாம் கவர் பண்ணியாச்சு’ என்று நிம்மதியாகப் போய்விடாமல், மாணவனை சோதித்துச் சோதித்துச் சுத்தம் செய்து குணவானாக்கி அதன் பின்பே வித்யையைக் கற்றுக் கொடுத்து அவனை புத்திமானாக ஆக்கினார். குணமில்லாத புத்திசாலித்தனத்தைவிடப் பெரிய ஆபத்து எதுவுமில்லை.
ravi said…
எந்தப் பக்வ ஸ்திதியில் இருப்பவனுக்கு என்ன உபதேசம் தரவேண்டும், அவனை அடுத்த ஸ்டேஜுக்கு எப்படி உயர்த்தி இதற்கு மேலான தத்வங்களை உபதேசிக்க வேண்டும் என்றெல்லாம் நன்றாக யோசித்துத் தீர்மானம் பண்ணிக் கொண்டு படிப்படியாக அவனை டெவலப் பண்ணிக் கொண்டே போய் மேலும் மேலும் உயர்ந்த வித்யைகளைக் கற்பித்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.
ravi said…
ப்ருகு தம்முடைய பிதாவான வருணரிடமேதான் சிக்ஷை பெற்றார்1. ஆனாலும் முதலில் அவர் இருந்த அதிகப் பக்வமில்லாத நிலையில் பிதாவானவர் அன்னமய கோசமான இந்த உடம்பே ஸத்யம் என்ற பேஸிஸில் (அடிப்படையில்) தான் ஆரம்பித்தார். அப்புறம் அவரைத் தபஸ் பண்ண வைத்து, அவராகவே உடம்பின் அஸத்யத்வத்தை (மெய்யின் மெய்யின்மையை) உணரும்படியாகப் பண்ணி, அதன்பின் ப்ராணமய கோசம்தான் ஸத்யம் என்று நினைக்கும்படி உயர்த்திவிட்டார்.
ravi said…
இப்படியே மறுபடி மறுபடி தபஸ் பண்ணவைத்து, அதாவது மேலும் மேலும் ப்ருகுவைப் பக்வப்படுத்திக் கொண்டே போய், “ப்ராணனுமில்லை, மனஸ்தான் ஸத்யம்; மனஸும் இல்லை, விஞ்ஞானம்தான் (அறிவு என்று வைத்துக்கொள்ளலாம்) ஸத்யம்; இல்லை, இதெல்லாம் கடந்தும் இதற்கெல்லாம் அடிப்படையாய், தன்னியல்பான ஆனந்த ஸ்வரூபமாய் இருக்கும் ஆத்மாதான் ஸத்யம்” என்று கடைசியில் தெரியவைத்தார்.
ravi said…
இப்படியெல்லாம் ஒரு வித்யார்த்தியை (மாணவனை)ப் படிப்படியாகப் பக்வப்படுத்தி அந்தந்த ஸ்டேஜுக்கு உரிய வித்யையைப் புகட்டுவதென்பது இன்ஸ்டிட்யூஷனில் எந்த அளவுக்கு ஸாத்யம்?

ravi said…
இதிலே இன்னொரு முக்யமான அம்சமும் இருக்கிறது. “குழந்தைகளை அவர்களே அநேக விஷயங்களைக் கார்யத்தில் செய்து பார்க்குமாறு விடவேண்டும். இதே மாதிரி, விஷயங்களை அவர்களே யோசித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளும்படியும் விடவேண்டும்.
ravi said…
எல்லாவற்றையும் புஸ்தகத்திலே போட்டு, வாத்தியார் அதைப் பார்த்து ஒப்பித்து அப்புறம் மாணவனும் பொட்டை நெட்டுருப் போடும்படியாக விடப்படாது” என்று மான்டிஸோரி முதலானவர்கள் சொல்கிறார்கள்.
ravi said…
தம்முடைய யஜ்ஞாநுஷ்டானத்துக்கான சுற்றுக் கார்யங்களை ஆசாரியரானவர் சிஷ்யனிடம் விடும்போது அவனுக்குத் தானே ஒன்றைச் செய்து பார்த்து தெரிந்துகொள்ள இடமேற்படுகிறது. இதர ஜாதியாரின் குழந்தைகள் தங்களுடைய தொழிலையே முக்யமாக அப்பன், பாட்டன் செய்வதைப் பார்த்துத் தெரிந்துகொண்டு தாங்களும் அம்மாதிரிக் கார்யத்தில் செய்தே அவற்றில் அறிவைப் பெருக்கிக் கொள்ளும்படிதான் நம்முடைய சாஸ்த்ரீயக் கல்வி முறையில் இடம் அளித்திருக்கிறது.
ravi said…
இவ்வாறு மாணவர்களை நேராகக் கார்யத்தில் விட்டு அதன் மூலம் “ப்ராக்டிகல் நாலெட்ஜ்” (நடைமுறை அறிவு) பெற வழி வகுத்திருப்பது போலவே அவர்களை ஸொந்தமாகச் சிந்திக்கவிட்டு உண்மைகளைப் பற்றிய அறிவைப் பெறவும் அக்காலக் கல்வி முறையில் இடம் கொடுத்ததற்கு ப்ருகு கதை சான்று. யோசித்து, யோசித்து ப்ருகுவே ஸத்யத்தைப்பற்றி அறியும்படி அவருக்குப் பிதாவும் ஆசார்யருமாக இருந்த வருணன் ஊக்கம் தந்திருக்கிறார்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 125*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 17 & 18 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
சிவானந்தலஹரியில இன்னிக்கு 17 வது 18வது ஸ்லோகம் பார்ப்போம்

फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो

प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।

कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां

निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥

ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴

ப்ரஸன்னேऽபி ஸ்வாமின் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் ।

கத²ம் பச்யேயம் மாம் ஸ்த²க³யதி நம: ஸம்ப்⁴ரமஜுஷாம்

நிலிம்பாநாம் ச்ரோணிர்னிஜகனகமாணிக்யமகுடை: ॥

ன்னு ஒருஸ்லோகம்
ravi said…
முத்துஸ்வாமி தீக்ஷிதர், அருணகிரி நாதருக்கெல்லாம் பகவான் வாய் விட்டு ஒரு உபதேசம் பண்ணா.

இவருக்கு மலையா இருந்து உபதேசம் பண்ணியிருக்கார். அவர் உட்கார்ந்திருந்தார்.

அதுதான் அடைய வேண்டிய நிலைமை. உத்தம பக்தி.

பக்திங்கிறதுக்கு ultimate goal பர சிவோல்லாஸம். அதை அடைய வேண்டிய நிலைமை னுவெச்சுண்டு பக்தி பண்ணா safe.

இந்த பக்தி பண்றதுனால நம்ம கிட்ட வரவா நாலு பேர் அந்த ருசியை கண்டு அவா நம்மை புகழும்போதோ இல்லை ஏதாவது offer பண்ணும் போதோ நப்பாசையினால திரும்பியும் அவா carல கிளம்பி காரியங்கள் பண்றதுன்னு ஆரம்பிச்சுட்டா நமக்கு ultimate goal அந்த பக்தியினால ஏற்பட வேண்டிய சிவஞானம் கிடைக்காம போயிடும்னு இந்த ஸ்லோகத்துல தாத்பர்யம்.

அடுத்த ஸ்லோகத்துலயும் அதே மாதிரிதான் சொல்றார்
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 139* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️

47வது திருநாமம்
ravi said…
அப்ரமேயோ *ஹ்ருஷீகேச* ’:
பத்மநாபோ(அ)மரப்ரபு: |

விச்’வகர்மா மனுஸ்‌ த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
ravi said…
*47. ஹ்ருஷீகேசாய நம: (Hrushikesaaya namaha)*
ravi said…
மணிகண்டன் அவதாரம் எடுத்து மஹிஷியை கொல்ல வேண்டும் . ஈசன் திருமால் சேர்ந்த சக்தி ஒன்றே மஹிஷியை கொல்ல முடியும் ...

மோகினி கைலாயத்தில் வந்து நின்றாள் ..

எங்கே காமனை எரித்தவன் தன்னையும் எரித்து விடுவானோ என்ற பயம் உள்ளுக்குள்

ஆனால் ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டும் ..

அன்று காமன் செய்த நல்ல காரியத்தால் குமார சம்பவம் நிகழ்ந்தது

இன்று நான் செய்யும் ஒரு நல்ல காரியத்தால் ஹரி ஹரன் அவதரிக்கட்டும்

இதில் நான் பஸ்மமாக ஆனாலும் பரவாயில்லை என்றே திருமால் நினைத்தார் ...

உமையிடம் மோகினி வேண்டவே உமையே அங்கே மோகினி ஆனாள் ...

ஹரிஹரன் தத்துவம் இதுவே 🙏🙏🙏
ravi said…
கண்ணதாசன்
ஒவ்வொருவரும் படிக்க வேண்டியவை
-------------- ------------ ------------- ------------- ---------------
காலம் பாடும் ராகங்கள், அவை வீணடிக்கப்பட்டு விட்டால் திரும்பக் கிடைப்பதில்லை.

ஒரு வருஷம் முடிகிறது என்றால், ஒரு வயது முடிகிறது என்று பொருள்.

வயதுக்கு ஏறுகிற சக்தி உண்டே தவிர, இறங்குகிற சக்தி கிடையாது.

எத்தனை வயது வரை ஒருவன் வாழ்ந்தான் என்பது கேள்வியல்ல; ஒவ்வொரு வயதிலும் அவன் என்ன செய்தான் என்பதே கேள்வி.
ravi said…
#

மராட்டிய வீரன் சிவாஜியின் வயதைப்பற்றி யார் கவலைப்பட்டார்கள்? அவன் நடத்திய வீர சாகஸங்கள் வரலாறாயின!

ஆதிசங்கரர் சமாதி அடையும்போது வயது முப்பத்து இரண்டுதான்.

ஆனால், அந்த வயதுக்குள் அவர் ஆற்றிய காரியங்களின் பயனே இன்றைய பீடங்கள்.

இந்து தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு ஆதிசங்கரர் ஒரு மைல்கல்.

இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இலக்கணம் வகுத்தவரும் அவரே.

வயதுகள் கூடலாம், குறையலாம்; ஆனால் ஓடுகிற வருஷங்கள் உருப்படியான வருஷங்களாக இருக்க வேண்டும்.

இன்ன ஆண்டில், இன்ன காரியம் நடந்தது என்று வரலாறு எழுதப்படுமானால், அந்த வரலாற்றில் எங்காவது ஒரு மூலையில் நம்முடைய பெயர் இருக்க வேண்டும்.
ravi said…
இன்ன ஆண்டில், இன்ன காரியம் நடந்தது என்று வரலாறு எழுதப்படுமானால், அந்த வரலாற்றில் எங்காவது ஒரு மூலையில் நம்முடைய பெயர் இருக்க வேண்டும்.

உண்டோம், உறங்கினோம், விழித்தோம் என்று வாழ்கிறவர்கள் விலங்குகளே!

பயனற்ற காரியங்களில் பொழுதைச் செலவழிப்போர் பயனற்ற பிறவிகளே!

எந்தக் காரியத்தை எந்தக் காலத்தில் செய்ய வேண்டுமோ, அந்தக் காலத்தில் செய்துவிட வேண்டும். இல்லையேல் பின்னால் வருந்த நேரிடும்.
ravi said…
எந்தக் காரியத்தை எந்தக் காலத்தில் செய்ய வேண்டுமோ, அந்தக் காலத்தில் செய்துவிட வேண்டும். இல்லையேல் பின்னால் வருந்த நேரிடும்.

எனது இளமைக் காலங்கள்- அவற்றை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

எழுத உட்கார்ந்தால் மளமளவென்று என் கைப்படவே நாற்பது ஐம்பது பக்கங்கள் எழுதியதை எண்ணிப் பார்க்கிறேன்.

பரபரப்பான நடை; சுறுசுறுப்பான சிந்தனை; துருதுருவென்றிருந்த மூளை.

எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கிறேன்.
ravi said…
அவை, எவ்வளவு வீணாகி விட்டன என்பதை எண்ணும் போது, `இறைவா, இன்னொரு முறை இளமையைத் தர மாட்டாயா?’ என்று கெஞ்சத் தோன்றுகிறது.

`அதைப் புத்தகமாக எழுத வேண்டும். இதைப் புத்தகமாக எழுத வேண்டும்’ என்றெல்லாம் இப்போது ஆசை பெருக்கெடுத்து ஓடுகிறது.

திடீர் திடீரென்று உடம்பு சோதனை செய்கிறது.

இந்தச் சோதனை இல்லாத காலங்களில் பயனற்ற அரசியல் கட்டுரைகளை எழுதினேன்; பயனற்ற மேடைகளில் காட்சியளித்தேன்; வீண் வம்புகளில் ஈடுபட்டேன்; விளையாட்டுகளையே வாழ்க்கை என்று கருதினேன்.
ravi said…
சிந்தனைகளைச் செயல்படுத்தும் ஆசைகள் வளர்ந்தபோது அந்தச் சக்தியை வழங்க, உடம்பு அடிக்கடி மறுக்கிறது.

இரணியனுக்கும் பிரஹலாதனுடைய வயதிருந்தால் அவன் நரசிம்ம அவதாரத்துடனேயே சண்டை போட்டுப் பார்த்திருப்பான்.

அறிவும் உணர்ச்சியும் தாமதித்தே வருகின்றன; ஆனால், காலம் முந்திக் கொண்டு வருகிறது.

இருபது வருஷங்களுக்கு முன்பு குமரியாக இருந்தவள் இப்போது
கிழவியாகக் காட்சியளிக்கிறாள்.
ravi said…
அப்போது அவளுக்காக ஏங்கிய ஆடவர்களும், இப்போது அவளிடம் ஆத்ம விசாரம்தான் பேச முடிகிறது.

முன்பு எனக்கு வந்த வருமானம் இப்போது இல்லை.

அந்த வருமானத்தை நான் செலவழித்த போது இதே போல் வந்து கொண்டே இருக்கும் என்று கருதினேன்.

ஆனால், அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் உள்ள பேதம் இப்போதுதான் புரிகிறது.

மலர் பூத்தவுடனேயே அது கூந்தலுக்குப் போகாவிட்டால், அது வாடியவுடனேயே காலடியில் விழத்தான் வேண்டியிருக்கும்.

ஈயம் பத்திரமாக இல்லாவிட்டால், அது பேரீச்சம் பழத்துக்குத்தான் விலையாக இருக்கும்.

குருஷேத்திரம் எப்போது நடந்தது?

பாண்டவர்கள் வனவாசம் முடிந்த பிறகு.

அதற்கு முன்னாலேயே கண்ணன் அந்தப் போரைத் துவக்கி இருக்கலாம். ஆனால் அந்தக் காலம், யுத்த தர்மத்திற்கு நியாயமான காலமாக இருக்காது.
ravi said…
இரண்டாவது உலக யுத்தத்தை ஹிட்லர் தொடங்கிய காலம் அற்புதமான காலம்.

அவன் திட்டம் ஒழுங்காக இருந்திருக்குமானால் அவனே உலகத்தின் ராஜா!

அதுபோலவே, தாமதித்து அமெரிக்கா போரில் இறங்கின காலமும் அற்புதமான காலம்.

பங்களா தேசத்துக்குள் இந்தியா புகுந்த காலமே அருமையான காலம். அதற்கு முந்தி இருந்தால் உலகத்தின் வசை இருந்திருக்கும்; பிந்தி இருந்தால் இந்தியப் பொருளாதாரம் நாசமாகி இருக்கும்.

இளம் பருவத்தில் பைரன் ஒரு இளம் பெண்ணைக் காதலித்தான்; அவள் மறுத்து விட்டாள்.

நாற்பது வயதுக்கு மேல் அவளே அவனைத் தேடி வந்தாள் ஆசையோடு; அவன் மறுத்து விட்டான்.

சகல வசதிகளும் படைத்த இராவணன், சீதையின் சுயம்வரத்திற்கு முன்பே அவளை சிறையெடுத்திருந்தால் அவன் மீது பழி வந்திருக்காது. ஒரு வேளை சீதையே அவனை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும்.
ravi said…
அரசாங்க வேலையில் சேருவதற்குக் குறிப்பிட்ட ஒரு வயது நிர்ணயித்திருக்கிறார்கள். அந்த வயது கடப்பதற்கு முன்னாலேயே அதில் சேர்ந்து விடவேண்டும். காலம் போய்விட்டால், பிறகு கடைகளில் தான் வேலை பார்க்க வேண்டிவரும்.

சபரிமலை, ஜோதி கூட ஒரு குறிப்பிட்ட நாளில்தான் தெரிகிறது; தினசரி தெரிவதில்லை.

காலத்தின் பெருமையை உணர்ந்தவன்தான் காரியத்திலும் பெருமை கொள்ள முடியும்.

இன்று நான் செய்யும் புத்தகப் பணிகளைப் பத்து ஆண்டுகளுக்கு முன்
நான் துவங்கியிருந்தால், எதிர்கால மாணவன் சிலப்பதிகாரத்திற்கும், மணிமேகலைக்கும் என் உரையைத்தான் படிப்பான்.

`இப்போது திருக்குறள் உரையை மட்டுமாவது எழுதி முடித்து விட முடியாதா?’ என்று தோன்றுகிறது.

`முடியும்’ என்ற நம்பிக்கை இருக்கிறது.
ravi said…
ஆரம்பத்தில் இருந்தே எனது சினிமாப் பாடல்களையும், இசைத் தட்டுக்களையும் தொகுத்து வைத்திருந்தால், இன்று இது ஒரு தனி `லைப்ரரி’ ஆகியிருக்கும்.

முறையாக 1944-ல் இருந்தே நான் டைரி எழுதத் தொடங்கி இருந்தால், உலகத்தில் வேறு எவனுக்கும் இல்லாத வரலாறு எனக்கு இருப்பதை உலகம் கண்டு கொண்டிருக்கும்.

வெள்ளம் போல வருமானம் வந்தபோது ஒரு தோட்டத்தையும் வாங்கி, ஒரு கிருஷ்ணன் கோயிலையும் கட்டி வைத்திருந்தால், இப்போது அந்த ஆசையால் வெந்து சாக வேண்டியிருக்காது.

அப்போது குழந்தைகள் பெயரால் குறைந்த பட்ச டெபாசிட் போட்டிருந்தால்கூட, மரணத்தைப் பற்றிய நினைப்பு வரும்போது குழந்தைகளைப் பற்றிய கவலை வராது.

அப்போது வாங்கிய சொத்துகளை விற்காமல் இருந்திருந்தால் கூட இப்போது எதிர்காலத்தைப் பற்றிய கவலையிராது.

அப்போது காலம் கனிவாக இருந்தது.
ravi said…
பணம் வந்தது; உடம்பு துடிதுடிப்பாக இருந்தது; `போனால் போகட்டும் போடா’ என்ற புத்தியும் இருந்தது.

இப்போது பழங்கணக்குகள் பரிசீலிக்கப்படுகின்றன.

பாய்மரக் கப்பல், காற்றை நம்பிப் போய்க் கொண்டிருக்கிறது.

புயல் காலத்தில் வானளாவி எழுந்த அலைகள், இப்போது அமைதியாக நாக நர்த்தனமாடுகின்றன.

நம்முடைய நண்பர்களும் காலங்களே; பகைவர்களும் காலங்களே.

காலங்களே தருகின்றன; அவையே பறிக்கின்றன.

காலங்களே சிரிக்கச் செய்கின்றன; அவையே அழவும் வைக்கின்றன.
ravi said…
நம்முடைய நண்பர்களும் காலங்களே; பகைவர்களும் காலங்களே.

காலங்களே தருகின்றன; அவையே பறிக்கின்றன.

காலங்களே சிரிக்கச் செய்கின்றன; அவையே அழவும் வைக்கின்றன.

`ஞாலம் கருதினும் கைகூடும்; காலம்
கருதி இடத்தால் செயின்’

என்றான் வள்ளுவன்.

காலம் பார்த்துக் காரியம் செய்தால், பூமியையே விலைக்கு வாங்கலாம்.

பத்து வருடங்களுக்கு முன்னால் கேரளாவில் பரபரப்பான கொலை ஒன்று நடந்தது.

கேரளா முழுவதிலும் அதைப்பற்றிய பேச்சாகவே இருந்தது. அடுத்த மாதமே அதைக் கதையாக எழுதிப் படமாக எடுத்து விட்டார் ஒருவர். அவர் லட்சாதிபதியாகி விட்டார்.
ravi said…
கைவண்டிக்காரர்கள் காய்கறி விற்கிறார்கள்; மாம்பழம்
வந்தால் மாம்பழம் விற்கிறார்கள்.

பனிக்காலத்தில் ஐஸ் கட்டியையும், காற்றடிக்கிற காலத்தில் மாவையும் வியாபாரம் பண்ணக்கூடாது.

`முறைகோடி மன்னவன் செய்யின்; உறைகோடி
ஒவ்வாது வானம் பெயல்’

-என்றான் வள்ளுவன்.

சித்திரை வைகாசி மாதங்களில் ஏரி குளங்களைத் தூரெடுக்க வேண்டும். அப்படித் தூரெடுக்கத் தவறினால், ஐப்பசி கார்த்திகையில் பெய்கிற மழைத் தண்ணீர் குளங்களிலும், ஏரிகளிலும் தங்காது.

வானம் பார்த்த பூமியில் பங்குனி மாதம் விதை விதைக்கின்றவன் விதைத்த விதையையும் சேர்ந்தே இழப்பான்.

`ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள்.
ravi said…
ஆவணியில் தண்ணீர் இறைத்தால் போதும், புரட்டாசியில் இருந்து மழை உதவி செய்துவிடும்.

காலங்களிலேயே காரியங்களின் வெற்றி தோல்விகள் அடங்கி இருக்கின்றன.

நல்ல பெண் கிடைக்கும் போது திருமணத்தை முடிக்காமல் விட்டுவிட்டால், பிறகு எந்தப் பெண் கிடைத்தாலும் போதும் என்ற நிலைமை வந்து விடும்.

காலத்தால் கிடைக்கும் நல்ல நண்பர்கள் மீண்டும் கிடைக்க மாட்டார்கள்.

இராவணன் தோற்ற பிறகு விபீஷணன் ராமனைத் தேடி வந்திருந்தால், ராமனே அவனை ஒரு அடிமையாகத்தான் நடத்தி இருப்பான்.

காலம் பார்த்து சுக்ரீவன், ராமனைச் சேராமல் இருந்திருந்தால், வாலி வதமும் நடந்திருக்காது; சுக்ரீவனுக்குப் பட்டமும் கிடைத்திருக்காது.
ravi said…
கம்சன் போட்ட தவறான காலக் கணக்கினால் தான் கிருஷ்ணாவதாரம் நமக்குக் கிடைத்தது.

காலத்தின் கருணையால்தான் அசுரக் கூட்டம் அழிந்தது.

காலத்தைச் சரியாகப் பிடித்துக் கொண்டால், தெருப் பிச்சைக்காரியும் மகாராணியாகலாம்.

சினிமா உலகிலேயே நான் பார்க்கிறேன். காலத்தால் தவறான ஆட்களைச் சந்தித்து, கல்யாணம் என்ற பெயரில் வாழ்வு இழந்து போன நடிகைகளும் உண்டு. பெரும் பணக்காரர்களைப் பிடித்துக் கொண்டு உலகம் முழுவதும் விஜயம் செய்யும் நடிகைகளும் உண்டு.

அதிர்ஷ்டம் என்பது வேறொன்றுமில்லை; வருகின்ற காலத்தை ஒழுங்காகப் பிடித்துக் கொள்வதே.

நீங்கள் அதிர்ஷ்டக்காரர்களா என்பதைச் சோதிக்கக் காலம் அறிந்து காரியம் செய்தீர்களா, என்பதை எண்ணிப்பாருங்கள்.
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 220🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
The first ever challenge*

1 *DRDO .. missile centre*
(Contd)...

The second missile centre was far off from port hence was not a threat . Their reason for no port to come up near their missile centre was if missile is misfired ( often that way only ) either it might fall in Pakistan or our Port . If it was pakistan it would be a celebration but if it falls on our port it would be disaster ...

Chandipur is also the location of the Indian Strategic Forces Command's Integrated Test Range (ITR) at Abdul Kalam Island, formerly known as Wheeler Island.

A number of Indian missiles have been tested and launched from the ITR, including nuclear-capable Prithvi, Agni and Shaurya[3] ballistic missiles, as well as Akash and Barak 8 surface-to-air missiles.
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 126* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
இல்லாத இடையை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள் ?
ravi said…
ம்ஹூம், எந்தப் பலனும் இல்லை.

சீதை பலவிதமாகப் புலம்பத் தொடங்குகிறாள்.

அவற்றுள் ஓர் அருமையான பாட்டு:

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி, என் உயிரை அம் முறுவல் உண்டதே!

’என்னை வருத்துவது எது?

இந்திர நீலம் என்ற உயர்ந்த கல்லைப்போல இருண்ட அவனுடைய தலைமுடியா?

நிலவைப் போன்ற முகமா?

நீண்ட கைகளா?

அழகான ரத்தின மலை போன்ற தோள்களா?’

‘இவை எதுவுமே இல்லை,

எல்லாவற்றுக்கும் முன்பாக, அவனுடைய உதட்டில் பரவிய அந்தப் புன்சிரிப்பு, அதுதான் என்னுடைய உயிரை உண்டுவிட்டது!’

இங்கே ‘தாழ்ந்த கைகளும்’ என்ற பிரயோகத்தைக் கவனிக்கவேண்டும்.

அதாவது, நீண்ட கைகள், அதனை ராஜ லட்சணம் என்று சொல்வார்கள்.

என்னதான் ராஜாவானாலும், காதல் வந்துவிட்டால் அவன் நிலைமையும் பரிதாபம்தான்.

சீதையைப் பார்த்துவிட்டு விசுவாமித்திரருடன் சென்ற ராமனும் அப்படிப்பட்ட ஒரு தவிப்பில்தான் சிக்கிக் கிடந்தான்.👍👍👍
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 126* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 26👍👍👍
ravi said…
விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம்

விநாஶம் கீநாஶோ பஜதி தநதோ யாதி நிதனம்

விதந்த்ரீ மாஹேந்த்ரி விததிரபி ஸம்மீலித த்ருஶாம்

மஹாஸம்ஹாரே (அ)ஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ 26
ravi said…
இங்கு அம்பாளை குறிப்பிடுகையில் ஸதி என்றே கூறுகிறார்.

அன்னை பரம பதிவ்ரதை.

பதிக்கு மரியாதை இல்லாத இடத்தில் தான் இருப்பது சரியல்ல என்றும் அப்படி மதிக்காத பிறந்தகத்தால் உருவான உடலே வேண்டாம் என்று தனது ஜீவனையே விட்டவள் தாக்ஷாயினி.

அவளது இன்னொரு பெயரே ஸதி.

இவளோ ப்ரம்ஹ சக்தி, அச்சக்திக்கு ஏது அழிவு?.

அப்படி அப்பட்ட சக்தி பதிவ்ரதை என்றால் அவளது பதியும் அழிவில்லாதவன் தானே?.

ஆகையால்தான் அவன் மட்டும் ப்ரளய காலத்தில் அழிவில்லாது இருக்கிறான் என்கிறார்.

இப்பாடலில் தநன, நிதந, விநாச, கீநாச என்று வார்த்தை ஜாலங்களைச் செய்திருக்கிறார் பகவத் பாதர்.🙏🙏🙏
ravi said…
*A day in advance 👍👍👏👏👏🎂🎂🎂🎂 11th Feb*


நாள் மறப்பதில்லை , நினைவுகள் விடுமுறை எடுப்பதில்லை ...

சேர்ந்து இருந்த நேரங்கள் கடலில் எடுத்த முத்துக்கள் ..

கோக்க வென்று எடுத்தேன் ...

பதவியும் பரிசும் கொடுத்த சுகம் நட்பு கொடுக்குமோ என்றே ஒரு சந்தேகம் ...

நினைவுகள் மட்டுமே நிரந்தரம் நடப்பதெல்லாம் நாளை மாறிப்போகும் என்றே நெஞ்சம் கொஞ்சம் விம்மியது ...

இல்லை இல்லை இந்த நட்புக்கு பேசத் தெரியாது மறக்கத் தெரியாது ...

மண்ணில் இருக்கும் வயிரம் வாழ்த்து சொல் வான் பரப்பு உள்ள வரை என்றே நெஞ்சம் கிள்ளி சொன்னது

உண்மை...

உள்ளம் நிறைந்து இருந்தால் வார்த்தைகளில் வறுமை வந்தே என் செய்யும் ?

வான் புகழ நான்மறை போல் வாழ்கவே ...

பிறந்தநாள் இனி வருந்தா வகையாகட்டும் ... நினைப்பதெல்லாம் நடக்கட்டும் நன்றே !!

என்றோ எங்கோ சந்தித்த ஒருவன்
ரவி 💐💐💐
ravi said…
*A day in advance 👍👍👏👏👏🎂🎂🎂🎂 11th Feb*



Wedding day ... A day that is imprinted in the minds brings nostalgic feelings .. an album full of memories , assurances to walk together on a road never experienced ...

It adds joy n fun if near and dear remember the day the way we remember ... Yes in a life we are not alone not made up of our own ... Friends , blessing souls around add real meaning to the life . I'm happy I'm one such blessing soul and wishing all your desires to get fulfilled and it is better than never late 👍👍👍
ravi said…
*Dear all*

Many don't know the purpose of their being in this world .

Many don't want to find a purpose for being in this world

Many lost their purpose of being while living in this world

Very few define their purposes for their being in this world .

And if such few are amongst us what a wonder !!

Yes two *Ss*... Their are the Ones and not just anyone .

*Achievers* but still humble .

*Winners* but their feet are always on the ground .

*Savitha n Sujatha* ...

Savitha celebrates her birthday while Sujatha celebrates her wedding day

Let us salute them with clapping hands and wishing them to reach a new high in the careers and personal front . 🌷🌷🌷👏👏👏👍👍👍
Lakshmi Balaraman said…
Wow.
Many More Happy Returns Of The Day
Savitha Sujatha.
வாழ்க நலமுடன் வளமுடன்.
இருவரும் சக்தியின்
கண்கள்.
இருவரும் சக்திக்கு பெருமையை சேர்ந்தவர்கள்.
இருவரும் பராசக்தியின்
அருளால் சகல சௌபாக்யத்துடன்
நீண்ட ஆயுளுடன் க்ஷேமமாக இருக்க
எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன்
வாழ்க. வளமுடன். 🙌
ravi said…
S & S both are lucky . Not a single post of mine evokes any response from lakshmi mami but she pours her blessings on both of you at length .. i envy both
Lakshmi balaraman said…
S&S நீங்கள் தப்பாக நினைக்கவேண்டாம்.
என் தம்பி எப்பவும் அப்படித்தான். சற்று அதிகமான பாசம். அவனை மிஞ்சமுடியாது.
நான் என்ன செய்ய
அக்காவுக்கும் வயதாகிறது வயதான
காலத்தில் கடமைகள்
கவலைகள்.
நினைப்பதெல்லாம்
நடந்துவிட்டால் தைய்வம். ஏதுமில்லை. 🙏
Savitha said…
😊well said
He is very affectionate
Lakshmi Balaraman said…
அவனுடைய எழுத்துக்களை விமர்சனம் செய்கிற அளவுக்கு எனக்கு ஞானம் கிடையாது
தம்பி எழுத்தாளர்களை
மிஞ்சிவிட்டான். தம்பி
அனைவரிடமும் ஒருபோல அன்பாக பழகுவான். கண்ணாடி மனசு.
சிறப்பாக புகழுடன் இருப்பான் ,
🙌
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் 19*☀️☀️🌞🌞🌞
ravi said…
ப்ரமஹேஷான் அச்யுதேஷாய ஸூர்யாய ஆதித்ய வர்ச்சஸே |

பாஸ்வதே ஸ்ர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷெ நம: || 19 ||🌞🌞🌞
ravi said…
அதிதியின் புத்ரனாகிய ஸூர்ய பகவானே ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு ஆவார்.

அவருக்கு நமஸ்காரம். எங்கும் வியாபித்து எங்கும் நிறைந்திருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.🙏🙏🙏
ravi said…
பொங்கும் எழில் தங்கும் எங்கும்

பொன்னும் வயிரக்குழையும் துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் உன் துணை விழிக்கே ..

அப்பும் களப மேனி தனில் ஆனந்தம் தாராயோ ...

ஆழியும் புவனமும் பூத்துக் குலுங்க உன் விரைகமலம் போற்றும் புண்ணியம் அருளாயோ 🌷🌷🌷
ravi said…
*34 சிறுத்தொண்ட நாயனார்*
ravi said…
செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்

திருத்தொண்டத் தொகை
ravi said…
செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்

திருத்தொண்டத் தொகை
ravi said…
பரஞ்சோதியார் சிவனடியார்களை விரும்பி பொழுது அவர் மிகச் சிறியராகப் பணிந்து ஒழுகியமையால் "சிறுத்தொண்டர்" என அழைக்கப்பட்டாரே

அந்நாளில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனை வழிபடத் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினாரே

சிறுத்தொண்டருடன் நண்பினால் மகிழ்ந்தனர்.

கணபதீச்சரப் பெருமானைத் தாம்பாடிய "பைங்கோட்டு மலர்புன்னை" என்னும் திருப்பதிகத்தில் சிறுத்தொண்டரைச் சிறப்பித்துப் பாடினரே

இறைவன் சோதிக்க நினைத்தான் சோதனையின் நாயகன் ... யாரும் கேட்க்காத யாசகம் ... அங்கங்கள் அஞ்சும் கொடும் விஷம்

விஷம் உண்டவன் விஷம் கொண்ட வார்த்தைகள் சிந்தினான் .. பிள்ளைக்கறி வேண்டும் என்றே ... மகன் பெயரோ சீராளன் .. சீராட்டி பாராட்டி பாரில் வளர்பவன் ..

அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும் சிறு தொண்டனே வேண்டும் உன் பிள்ளை கறி என்றான் வந்தவன் வானயும் மண்ணையும் உருவாய் கொண்டவன்


சங்கறுப்பது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்? –

சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உமக்கு எங்கள் உயிரே தருவோம் .. என்றான் சிறு தொண்டன் செய்ததோ பெரும் தொண்டு

வந்தவன் விடவில்லை கறி புசிக்கும் முன்னே கூப்பிடு உன் மகனை இங்கே என்றான் .. உதவிக்கு வாரான் எனச் சொல்லியும் அழைத்தான் சீராளா ஓடி வா என்றே ..

பள்ளிக்கு சென்ற பிள்ளை போல் பாற்கடல் துயில் கூவும் கண்ணன் போல் ஓடி வந்தான் சீராளன் ...

கண்ணீர் விட்டான் முக்கண்ணன் ...

உன் பக்தி என் கருணையும் மிஞ்சி விட்டதே .

இனி உன்னை நஞ்சு என் செய்யும் ...
பஞ்சும் இனி உன் பதமாகும்

அஞ்சும் உன் மேனி என் ஐந்தெழுத்தில் கொஞ்சும் கொலுசாக ஒலி எழுப்பட்டும் என்றான் ...

எஞ்சி நின்ற வாழ்க்கை இறையின் பாதம் அதில் ஒளியாய் கலந்ததே 🌷🌷🌷
ravi said…
பெரியவாளின் பாதம் பஞ்சும் அஞ்சும் பாதம் .. நான்மறைகள் பழகி சிவந்த பாதம் .. சீராளன் சிங்காரமாய் வீற்றிருக்கும் பாதம் ...இணை ஏதும் இல்லா ஈசன் பாதம் அன்றோ இப்புவி தனில் நாம் பெற்றது 👣👣
ravi said…
பெயரோ சந்திர சேகரம்
அருளோ கருணா சாகரம்

தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி

பூஜைக்கு மூலம் குருவின் பாதம்

மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்

முக்திக்கு மூலம் அவன் கிருபையே அன்றோ ..

இன்றும் இனிய நாள் தான் 🙏🙏🙏
ravi said…
அரிசி வாங்கலியோ அரிசி!"

(அரி சிவா ங்கலியோ)

(பெரியவாளின் சிலேடைப் பேச்சு).

கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்
நன்றி-தினமலர்

அந்தக் காலத்தில் அரிசியைத் தெருவில் கூவி விற்பார்கள். மக்களும் தெருவில் வரும் வியாபாரியிடம் பேரம் பேசி வாங்குவர்.

ravi said…
ஒருநாள் வியாபாரி ஒருவர் தெருவில் அரிசி விற்றுச் சென்றார். அவரின் சத்தம் காஞ்சி மகாசுவாமிகள் முகாமிட்டிருந்த இடம் வரை தெளிவாகக் கேட்டது
ravi said…
பக்தர்களுக்குத் தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார் சுவாமிகள்.

வரிசையில் மெல்ல நடந்து வந்தாள் மூதாட்டி ஒருவர். அவர் காது கேட்காததால், வலதுகையால் செவி மடலைக் குவித்தபடி மற்றவர் பேச்சைக் கேட்டார்.

இந்நிலையில் சுவாமிகளை வணங்கி, ''பெரியவா...! எனக்கோ வயதாகி விட்டது. எந்த திருநாமத்தை ஜபித்தால் எனக்கு நற்கதி கிடைக்கும் என அறிவுறுத்தக் கூடாதா?'' என்றார்.

சுவாமிகள் தீர்த்தம் வழங்கியபடி, ''தெருவில் அரிசி வியாபாரி கூவிக் கூவிச் சொல்கிறாரே? அதன்படி நடந்து கொள்!'' என்றார் சிரித்தவாறே
.
மூதாட்டிக்கு புரியவில்லை. அருகில் நின்றவர்களுக்கும் புரியவில்லை.
ravi said…
என்ன! சொல்றது புரியலையா?'' எனக் கேட்டார் சுவாமிகள்.

''எப்போதும் 'ஹரி' 'சிவ' நாமத்தையும் ஜபித்தால் போதும். துக்கமெல்லாம் விலகும். மனதில் நிம்மதி பிறக்கும். அரிசி வியாபாரி என்ன சொல்லிக் கூவுகிறார் தெரியுமோ? 'அரிசி வாங்கலியோ... அரிசி' என்று தானே கூவுகிறார்? யோசித்தால் புரியும். அரியும், சிவாவும் இருக்குமிடத்தில் எல்லா மங்கலங்களும் உண்டாகும். இத்திருநாமங்களை ஜபித்தால் பாவம் தொலையும். 'அரிசி வாங்கலியோ' என்பதைக் கேட்கிற போது வயிற்று ஞாபகம் வந்தால் மட்டும் போதாது. ஆன்மாவின் ஞாபகமும் நமக்கு வர வேண்டும். வயிற்றுப் பசிக்கு அரிசியைச் சமைத்துச் சாப்பிடலாம். ஆன்மாவின் பசிக்கு அரி, சிவ நாமங்களை இடைவிடாது நாம் ஜபிக்க வேண்டும்!''

சுவாமிகளின் சிலேடையான பேச்சைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்தனர்.
ravi said…
🙏🙏 அருமை ...ஆசி வாங்களையோ ஆசி என்று கூறுவதைப்போல் இருக்கிறது
ravi said…
தாயாரைத் தெய்வமாக நினைக்க முடியுமானால் இதையே திருப்பி வைத்துப் பார்க்கும்போது தெய்வத்தைத் தாயாராக நினைக்க முடியும். சர்வ லோகங்களையும் படைத்துக் காத்துக் கொண்டிருக்கிற மகாசக்தியைத் தாயாராக நினைக்கும்போது ‘அம்பாள்’ என்கிறோம்.

ravi said…
எல்லாமாக ஆகியிருக்கிற பரமாத்மா, நாம் எப்படி நினைத்தாலும் அப்படி வந்து அருள் செய்கிறது. எந்த ரூபமாகத் தியானித்தாலும், அப்படியே வந்து அநுக்கிரகம் செய்கிற கருணை பரமாத்மாவுக்கு உண்டு. அப்படி சாக்ஷாத் பரப் பிரம்மமே தாயாகி, அம்பிகையாய் இருந்துகொண்டு, நமக்கு அநுக்கிரகம் செய்யவேண்டுமென்று நாம் பிரார்த்தித்தால் அவ்விதமே வருகிறது.
ravi said…
பரமாத்மாவை அன்னைத் தெய்வமாக பாவிப்பதில் தனியான விசேஷம் உண்டு. அம்மாவிடம் நமக்குள்ள அன்பும் அம்மாவுக்கு நம்மிடம் உள்ள அன்பும் அலாதியானவை அல்லவா? எனவே, ‘அம்மா’ என்று நினைத்து பக்தி செய்தால் ஒரே அன்பு மயமாக இருக்கிறது. ஆனந்த மயமாக இருக்கிறது. நாம் குழந்தையாகி விடுவதால், தானாகவே காமக் குரோதாதிகள் நம்மை விட்டு விலகுகின்றன. வயசேறிப் போவதால் ஏற்படும் விகாரங்களை, அவளுடைய குழந்தை என்ற உணர்வினால் போக்கிக் கொள்கிறோம்.
ravi said…
பரமாத்மாவை ‘அம்மா’ என்பது நாமாக உபசாரத்துக்கு செய்கிற பாவனை அல்ல. வாஸ்தவத்திலேயே பரமாத்மா ஒரு தாயாரின் அன்போடு கூடவே சமஸ்தப் பிராணிகளுக்கும் அநுக்கிரகம் செய்து கொண்டிருக்கிறது.

ravi said…
இந்த ஜன்மத்துக்கு ஏற்பட்ட தாயையே தெய்வமாக வழிபட வேண்டுமானால், எந்தெந்த ஜென்மத்துக்கும் துணையாக இருக்கிற பரமாத்மாவையும் தாயாக வைத்து வணங்கத்தான் வேண்டும். நம்வீட்டு அம்மா, இந்த ஒரு ஜன்மாவில், நாலைந்து குழந்தைகளுக்கு மட்டும் தாய் ஆவாள். அம்பிகையோ எல்லா ஜன்மங்களுக்கும் எல்லா ஜந்துக்களுக்கும் தாயாக இருக்கிறவள். அவள் ஜகன் மாதா, அணு முதல் மனிதன் வரை, பசு, பட்சி, புழு, பூச்சி, புல், செடி, கொடி, மரம் எல்லாம் ஒரே சக்தியிலிருந்துதானே பிறந்திருக்கின்றன? ஒரே ஜகன்மாதாவிடமிருந்துதான் நாம் இத்தனை பேரும், இத்தனை வஸ்துக்களும் வந்திருக்கிறோம். பரமாத்மாவை அம்பிகையாகப் பூஜிப்பதால், அவள் ஒருத்திதான் அம்மா, நாம் அனைவரும் அவளுக்குப் பிறந்த குழந்தைகள்; அதாவது எல்லாரும், எல்லாமும் சகோதரர்கள் என்ற அநுபவம் உண்டாகும். எல்லாரையும் தழுவும் பரம மதுரமான அன்பு நமக்கு வரும்.
ravi said…
தெய்வங்களும், அவதார புருஷர்களும், மகான்களும்கூட அம்பாளை உபாஸித்து அநுக்கிரகம் பெற்றிருக்கிறார்கள். ஆதிசங்கர பகவத்பாதர்களும், காளிதாஸனும் அவளுடைய அநுக்கிரகத்தாலேயே விசேஷ வாக்குச் சக்தி பெற்றார்கள். திருஞானசம்பந்தருக்கு, அவளது க்ஷீரமே திவ்வியப் புலமை தந்தது.

ravi said…
எல்லாவித இகபர நலன்களும் தருகிற அம்பிகை, விசேஷமாக வாக்குவன்மையை அருளுகிறாள். ஏனெனில், அவளே அக்ஷர ஸ்வரூபமானவள். நம் உடலின் மேல் சதையைச் சிறிது கீறிவிட்டால் – வெளியில் நாம் எத்தனை அழகாக இருந்தாலும் – உள்ளே அருவருப்புத் தருகிற வஸ்துக்களையே பார்க்கிறோம். பரமாத்மா அம்பாளாக வருகிறபோது, தரித்த சரீரமோ கருணா மயமானது. அம்பிகையாக வரும்போது, பரமாத்மா ஐம்பத்தொரு அக்ஷரங்களையே சரீரமாகத் தரித்துக் கொண்டு வருகிறது. அதனால்தான் தேவீ உபாஸகர்கள் விசேஷ வாக்கு வன்மை பெறுகிறார்கள்.
ravi said…
லோகம் முழுவதற்கும், காலம் முழுவதற்கும் தாயாக இருந்து அநுக்கிரகம் செய்கிற பராசக்தியின் கடாக்ஷம் எப்படிப்பட்டவனையும் கைதூக்கி ரக்ஷிக்கும். அந்த அம்பிகையை நாம் அன்போடு தியானம் செய்ய வேண்டும். அக்ஷர மயமானவளை வாக்கால் துதிக்க வேண்டும். அம்மாவின் சரீரவாகு, மனப்பான்மை எல்லாம் குழந்தைக்கும் வருவதுபோல், அம்பாளே நம் சரீரம், மனஸ் எல்லாமாயிருக்கிறாள் என்ற உணர்ச்சியோடு – அவள் வேறு நாம் வேறு அல்ல என்ற அனன்ய பாவத்தோடு – அபேதமாக அம்பாளை உபாஸிக்க வேண்டும். அப்படி உபாஸித்துக்கொண்டேயிருந்தால், அவளைப்போலவே நாமும் அன்பே உருவமாகி லோகம் முழுவதற்கும் ஆனந்தத்தைக் கொடுக்கலாம்.
ravi said…
மீண்டும் ஏற்கனவே சொன்னதை திருப்பி சொல்கிறேன்


சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன்.

கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன்

ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது

தானம் செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன்

ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன்

தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன்
நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!🙏🙏🙏
Hemalatha said…
படித்து விட்டேன் பாராட்ட தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறேன். வியப்பா இருக்கு. உங்களை படைத்த இறைவன் தான் எங்களை படைத்து உள்ளான். எவ்ளோ வித்தியாசம்..பெருமையாக உள்ளது. உங்களை எனக்கு தெரியும்னு
Hemalatha said…
ஒரு நாள் mike lae பேசும்போது என்னை நினைப்பீர்கள்.இப்போ குடத்தில் உள்ள விளக்கு குன்று எரியே தீரும்🙏🙏👏👏
Savitha said…
அருமையான வாழ்த்துகள்
நன்றி🌷🙏🏻
Sujatha said…
Wow wonderful message thanks a lot 😊
Savitha said…
👍🏻👍🏻super ooo super
ravi said…
கட்டாயம் படிக்கவும். பகிரவும்🙏🙏🙏*.

நம் ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில், கையில் தூக்கு வாளியுடன் ஒரு 10 வயது சின்னக் குழந்தை,
"அண்ணா...! அம்மா 10 இட்லி வாங்கி வரச் சொன்னாங்க...!
காசு நாளைக்குத் தருவாங்களாம் என்றது...

ஹோட்டல் நடத்துபவர், "ஏற்கனவே கணக்கில் நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....
இப்போ வாங்கிட்டுப்போ... தூக்கு வாளியை தா , சாம்பார் ஊத்தி தாரேன் என்றார் ...📖✍🏻
ravi said…
இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.

குழந்தை, "சரி... அம்மாட்ட சொல்றேன்... போயிட்டு வரேன் அண்ணே.... " 🗣
என்றபடியே கிளம்பிவிட்டாள்.

அந்தக் கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டேன்... "நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....?"

ஹோட்டல் முதலாளி, "அட சாப்பாடு தானே சார்.... நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்...
ravi said…
அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்.... எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது?

குழந்தை பசியால் கேட்டிருக்கும்.. அதான் சார், அந்த குழந்தையை அனுப்பி இருக்காங்க..
நான் கொடுத்தனுப்புவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்....

நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...வந்துடும் சார்.... ஆனா இப்போதைக்கு அந்தக் குடும்பம் சாப்பிடுதுல,
அதுதான் சார் முக்கியம்"

நான் உணவு தரவில்லை என்றால் ,

அந்தக் குழந்தை , தன் தாய்க்காக திருடப் போகும்,
அல்லது அந்தத் தாய்,
தன் குழந்தையின் பசிக்காக, தவறான பாதைக்கு செல்வாள் ...
ravi said…
ஆனால், என்னால் _ நான் நஷ்டப்பட்டாலும், இப்பொழுது நம் சமுகத்தில் நடக்க இருந்த, இரண்டு தவறுகளைத் தடுக்க முடிந்திருக்கிறது என்றார்.

மேலும் ஹோட்டல் முதலாளி கூறினார்.

எனக்கும் இந்த அனுபவம் உண்டு
நான் கும்பகோணத்தில் என்னுடைய இளமைப்பருவத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இருக்கின்றது.

புட்டு விற்கும் ஒரு பாட்டியிடம் இதே போல கடன் சொல்லி அவ்வப்போது என் பசியை ஆற்றிக் கொள்வேன். அப்பொழுது அந்தப் பாட்டியிடம்,

ஏன் பாட்டி, நான் கடனைத் திருப்பித் தராமல் ஓடிவிட்டால் என்ன செய்வாய் என்று கேட்டேன்.
அதற்கு அந்தப் பாட்டியும் அட போப்பா,
*நீ பணம் தந்தால் அது எனக்கு லாபக் கணக்கு. பணம் தராமல் ஓடிப் போய் விட்டால் அது என் புண்ணியக் கணக்கில் வரவு வைக்கப்படும்* என்று சொல்லி மெய்மறக்க சிரித்தார்.

இதுதான் இந்தியா இதுதான் நமது நம்பிக்கை, பண்பாடு!

*வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை*

*இதுவரை இல்லை என்றாலும் பரவாயில்லை இனி அன்னதானம் செய்வோம்*

🙏🌹🙏
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் 20*☀️☀️🌞🌞🌞
ravi said…
தமோக்னாய ஹிமாக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |

க்ரதக்னாக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: || 20 ||
ravi said…
இருளையும் குளிரையும் போக்கி எதிரிகளை என்றும் அழிக்கும் ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்.

செய் நன்றி மறத்தலை அகற்றி ஒளியால் திகழும் ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்.
ravi said…
*ஆதித்தனை தொழுதால் அதிக வரம் பெறலாம்* 🌞🌞🌞
ravi said…
ஆதித்தனை தொழுதால் அதிக வரம் பெறலாம் ... நெஞ்சங்கள் பொன்னாக நினைவலைகள் கண்ணாக நின்ற திருமூர்த்தம் ..

விழியும் நெஞ்சும் விம்மி எழ வேண்டும் வரம் தரும் விமலன் அவன் ..

பநிமின் அவனை கண்டீர் அமராவதி ஆளுகைக்கே 🌞🌞
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 127* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
*பொருள் எலாம் அவள் பொன்னுருவாயவே’* என்கிறார் கம்பர்.


‘பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா’ என்று பாரதி பாடியதுபோல, ராமனுக்கு எதைப் பார்த்தாலும் சீதையின் பொன் வடிவம் மட்டுமே தெரிகிறதாம்.

அவளையே நினைத்துக்கொண்டு படுத்துக் கிடக்கிறான்.

திடீரென்று ராமனுக்கு ஒரு சந்தேகம்.

‘ஒருவேளை, அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவளாக இருந்துவிட்டால்?
என்னுடைய காதல் பிழையாகிவிடுமே!’

மறுகணம், அவனே தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்கிறான்.

‘நல் வழி அல் வழி என் மனம் ஆகுமோ?’…

என்னுடைய மனம் எப்போதும் கெட்ட வழியில் போகவே போகாது, ஆகவே, இன்றைக்கு நான் இந்தப் பெண்ணைப் பார்த்துக் காதல் வயப்படுகிறேன் என்றால், அவள் எனக்கெனப் பிறந்தவளாகதான் இருக்கவேண்டும்.🌷🌷🌷
ravi said…
இல்லாத இடையை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள் ?
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 127* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 27👍👍👍
ravi said…
*27. சமயாசார மானஸிக பூஜை*

*ஆத்ம ஞான சித்தி*

ஜபோ ஜல்ப: ஶில்பம் ஸகலமபி முத்ராவிரசனா

கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமண மஶனாத்யாஹுதி விதி:

ப்ரணாம: ஸம்வேஶ: ஸுகமகில மாத்மார்ப்பம த்ருசா

ஸபர்யா பர்யாயஸ் தவ பவது யன்மே விலஸிதம் 27💐💐💐
ravi said…
மிகவும் அருமையான ஸ்லோகம் . பட்டரும் ஆதி சங்கரரை பின் பற்றி இதே தொனியில் ஒரு பாடல் பாடுகிறார் . பார்ப்போம் அதையும்
ravi said…
ஆத்மஸமர்ப்பண பாவனையால் வெறும் பேச்சு ஜபமாகவும்,

கைத்தொழில் அனைத்தும் முத்திரைகளின் விளக்கமாகவும்,

நடை ப்ரதக்ஷிணம் செய்வதாகவும், உண்டி முதலியன ஹோமமாகவும்,

படுத்துக் கொள்ளுதல் நமஸ்காரமாகவும், இன்னும் சுகமாக முயற்சியின்றி எனது செயல் எது உண்டோ அது எல்லாம் உன்னுடைய பூஜை முறையாகவும் ஆகட்டும்.🌷🌷🌷
ravi said…
*முத்திரைகள்* :

‘ *தசமுத்ரா ஸமாராத்யா”* –

லலிதா ஸஹஸ்ர நாமம். தேவியின் பூஜையில் பத்துமுத்திரைகள்

(1)ஸம்க்ஷோபினீ (2) வித்ராவிணீ (3) ஆகர்ஷிணி (4) வசங்கரீ (5) உன்மாதினீ (6) மஹாங்குசா (7) கேசரீ (8) பீஜ (9) யோனி (10) த்ரிகண்டா.
ravi said…
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை, என்றும் வணங்குவதுன் மலர்த்தாள் – அபிராமி அந்தாதி
Kousalya said…
மிக முக்கியமாக இந்த ஸ்லோகம் அற்புதம் .....பெரியவர்கள் என் போன்றவர்களுக்கு அருமையாக எழுதி இருக்கிறார்கள்....🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🪔🪔
ravi said…
என்னையும் இதில் சேர்த்துக்கொள்ளவும்
ravi said…
உங்களால் தானே இந்த ஸ்லோகம் எங்களுக்கு தெரிய வந்துள்ளது....நீங்கள் இல்லாமல் எப்படி🙏🙏
Kousalya said…
Kousakya
ravi said…
நான் சொல்ல வந்தது வேறு ...

பெரியவர்கள் என் போன்றவர்களுக்கு அருமையாக எழுதி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருக்குறீர்கள்

அந்த list இல் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல வந்தேன் ..

🙏🙏🙏
Kousalya said…
Absolutely ssss.. அதை தானே நானும் சொன்னேன்...நீங்கள் தானே இதை எழுதினீர்கள்..😊😊😆
ravi said…
🌹 கம்பராமாயணம் அரங்கேற்றம்...

"பத்தாயிரம் கவிதை முத்தாகப்
பாடிவைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு_ இனி
வித்தாக வில்லையென்று பாடு"
__ கண்ணதாசன்.
ravi said…


கவிஞர் கண்ணதாசன் கூறியதைப் போல பத்தாயிரம் கவிகளில் திருமாலின் இராமாவதாரத்தைப் பாடிய கம்பருக்கு இணையாக யாரும் இதுவரைத் தோன்றவில்லை; தோன்றவும் போவதில்லை.
ravi said…
#சரஸ்வதி தேவி, காளி தேவி, திருமால் ஆகியோரின் பரிபூரண அருளைப் பெற்ற கம்பர், தனது இராமாவாரத்தை அரங்கேற்றம் செய்வதற்குள் அவர் பட்ட பாடு மிக அதிகம். மனிதர்கள் இடைஞ்சலாக இருந்தாலும், இறைவனே அவருக்கு உறுதுணையாக இருந்தார். #சரஸ்வதிதேவியின் பரிபூரண அருளைப் பெற்றவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

கம்பர் நினைக்கும் வேளையில் சரஸ்வதி தேவியே அவருக்கு வேண்டியதை அருள் செய்வாராம். கம்பர் பாடியதும், அவர் பாடியபடியே சரஸ்வதி தேவியே மானிட வடிவில் வருவாராம்.
ravi said…
இராமரின் வரலாறான வால்மீகிராமாயணத்தை பின்பற்றி, அதன் வழி நூலாகத் தமிழில் இராமாயணத்தை எழுதினார் கம்பர். ( கம்பராமாயணம் மொழிபெயர்ப்பு நூல் அல்ல; வழி நூல்) அதற்கு #இராமாவதாரம் என்று பெயரிட்டு அதை ஶ்ரீரங்கம் கோயிலில் அரங்கேற்றம் செய்ய நினைத்தாராம் கம்பர். திருமாலின் இராமாவதாரத்தைச் சிறப்பித்துச் சொல்லும் நூலானாலும், அதனை அத்தனை சுலபமாக ஏற்கவில்லை வைஷ்ணவர்கள். ஏனென்றால் இது அரியதொரு நூல் என்பது அவர்களுக்கும் தெரியும்; இருப்பினும் இந்நூலைச் சைவர்களே ஆதரிக்க வேண்டும்; அப்போது தான் இதன் மகிமை இன்னும் கூடும்! என எண்ணினர் வைஷ்ணவப் பெரியோர்கள்.
ravi said…
எனவே தில்லை மூவாயிரவர்களிடம் சென்று இந்நூலுக்கு நற்சான்று வாங்கி வந்தால் தான், இதை அரங்கேற்ற அனுமதிப்போம்! என்றனராம் ஶ்ரீரங்கத்து வைஷ்ணவர்கள்.
ravi said…
சிவபெருமான் நடராஜராக வீற்றிருக்கும் சிதம்பரமே #தில்லை. அக்காலத்தில் சைவ, வைஷ்ணவ வேறுபாடுகள் தீவிரமாக இருந்தன.

ஒருவரையொருவர் தீவிரமாக எதிர்த்துக் கொள்வர்.

அப்படிப்பட்ட காலத்தில் சிதம்பரம் நகரில் சிவபெருமானுக்குப் பூஜை செய்வதற்கென்றே உரிமைப்பெற்ற தீவிர சைவர்கள் மூவாயிரம் குடும்பத்தார் அங்கே இருந்தனர்.

அவர்களே #தில்லை_மூவாயிரவர்கள் என அழைக்கப்பட்டனர். தீவிர சைவர்களான மூவாயிரவரும் இணைந்து கம்பரது இராமாயணம் அருமையானது! என நற்சான்று! தர வேண்டும்! என்பதே ஶ்ரீரங்கத்து வைஷ்ணவர்களின் கூற்று.
ravi said…
இதை எப்படி சாதித்தார் கம்பர்?
கம்பராமாயணம் அரங்கேற சிவபெருமானே அருள் புரியும் போது, அவரால் சாதிக்க முடியாதா என்ன?
ravi said…
கம்பர் தில்லைக்குச் சென்று ஒவ்வொரு நாளும் தில்லை மூவாயிரவர்களில் பலரையும் சந்தித்து, தனது வேண்டுகோளை வைத்தார்.
'நாங்கள் மூவாயிரவர்களும் என்றைக்கு ஒன்றாக ஓரிடத்தில் குழுமி இருக்கிறோமோ, அன்று வந்து உமது நூலைப் பற்றிச் சொல்லி, நற்சான்று வாங்கிக் கொள்ளும்!' என தில்லை வாழ் தீட்சிதர்கள் கம்பரிடம் கூறிவிட்டனர். ஆனால் ஒருநாளும் மூவாயிரவரையும் ஒருங்கே பார்க்கக் கம்பரால் இயலவில்லை. இறைவன் மீது கொண்ட. தீவிர பக்தியால் மனம் தளராது, கம்பரும் முயற்சித்துக் கொண்டேயிருந்தார்.
ravi said…
திருவிளையாடல்களைப் புரிவதில் வல்ல சிவபெருமானே கம்பருக்கு உதவ முன்வந்தார்! எனலாம். அன்று தலைமை தீட்சிதரின் மகனைப் பாம்பு கடித்து, சாகும் தறுவாயில் இருந்தான். பாலகனின் அருகே தில்லை மூவாயிரவரும் கூடியிருந்தனர். இந்த சோகமயமான இடத்தில் கம்பர் வந்து நின்றார்; இவரைக் கண்டதும் சினம் தலைக்கேறியது தீட்சிதர்களுக்கு. எங்கே வந்து உங்கள் நூலுக்கு நற்சான்று பெற வந்திருக்கிறீர்? என்றனர் தீட்திதர்கள்.
ravi said…
தீட்சிதர்களே! கோபம் வேண்டாம்; எம்பெருமான் அருளால் இந்த பாம்புக்கடி விஷமும் விலகும்! அவ்வாறு விலகி, உங்கள் மகன் உயிர்ப் பிழைத்தால் எனது நூலுக்குச் சான்று தருவீர்களா? என்றார் கம்பர். உம்மால் எப்படி முடியும்? புத்திரனைப் பிழைக்க வைத்தால், நற்சான்று தருகிறோம்! என்றனர் தீட்சிதர்கள்.
ravi said…
இலங்கையில் அரக்கர்களோடு இராமசேனை போர்புரிகையில், இராவணனின் மகன் இந்திரஜித் (மேகநாதன்) முறையானப் போரில் இவர்களை வெல்ல இயலாது ! என மாயப்போர் புரிந்தான். இலட்சுமணரும், இந்திரஜித்தும் செய்த போரில் இலட்சுமணரின் தாக்குதலைச் சமாளிக்க இயலாது, தனது மாயவித்தையால் விண்ணில் மறைந்து நின்று கொண்டு, நாகப்பாசத்தைப் போட்டுவிட்டு அரண்மனைக்குத் திரும்பினான் இந்திரஜித்.
ravi said…
கொடிய நாகங்களே பாணத்தின் வடிவில் அனைவரையும் பிணைத்திருக்கும். இராம, இலட்சுமணர்கள் உட்பட அனைவரும் நினைவிழந்துக் கிடந்தனர். அனுமனை எந்த ஆயுதமும் தாக்காதென்பது முன்பு இந்திரன் மற்றும் சிவபெருமான் அளித்த வரமாதலால், சிரஞ்சீவியான அவருக்கு எப்பாதிப்பும் இல்லை. கரடிகளின் தலைவரான ஜாம்பவானும் சிரஞ்சீவி ஆதலால், அவரும் அனுமனும், இராமரைத் தேடி வந்தனர்.
ravi said…
நாகப்பாசத்திலிருந்து விடுபட்டுவிட்ட இராமர், தம்பி இலட்சுமணன் நினைவிழந்துக் கிடப்பதைக் கண்டு துக்கித்தார் . இராமர் கலங்குவதைக் கண்டு மனம்பொறாதத் திருமாலின் வாகனமான பெரிய திருவடியாம்! கருடாழ்வார் விண்ணும் , மண்ணும் கலங்கப் பெரியதொரு செம்பொன் மலையே பறந்து வருவதைப் போல, பறந்து வந்தார். கருடனைக் கண்டால் நாகங்கள் பயந்தோடிவிடும்! என்பதால், பாணங்களின் வடிவிலிருந்தச் சர்ப்பங்கள், கருடனின் நிழல் பட்டதுமே தெறித்து ஓடிவிட்டன
ravi said…
கருடன், இராம, இலட்சுமணர்களை வருடிக் கொடுத்துவிட்டு பறந்தது சென்றது. நாக பாசத்திலிருந்து யாருமே தப்ப இயலாது, அப்படியிருக்க இம்மானிடர்கள் எப்படி மீண்டனர்? எனக் கலங்கினான் இராவணனைவிட மாவீரனான இந்திரஜித். கம்பர் இதை யுத்த காண்டத்தில்
#நாகபாச_படலம் எனப் பாடியுள்ளார்.
ravi said…
பாம்புகடித்துச் சாகக்கிடக்கும் பாலகனின் அருகில் நின்று
இராம, இலட்சுமணர்களைக் காப்பாற்றிய
நாகபாச படலத்தில் கருடாழ்வார் வரும் பகுதிகளைப் பாட ஆரம்பித்தார்! கம்பர். அதுமட்டுமல்லாது, கூடவே ஒரு சில தனிப்பாடல்களையும் பாடி "நச்சரவமே விலகு" என்றார் கம்பர்.

மாசக்தி காளியன்னையே இவர் இராமாயணம் எழுத விளக்கேந்தி நின்றாள்! என்றால், நச்சரவங்கள் இவர் பாடலுக்கு முன் எம்மாத்திரம்?
ravi said…
கம்பர் பாடி முடித்ததும் பாலகனின் உடலில் ஏறியிருந்த விஷத்தை அவனைக் கடித்தப் பாம்பே மீண்டும் வந்து உறிஞ்சிச் சென்றது; பாலகனும் உயிர்பிழைத்து எழுந்தான். பன்னிரண்டு பாடல்களில் கருடன், திருமாலைத் துதிப்பதை அழகாகப் பாடியுள்ளார் கம்பர். மனதிற்குள்ளாகவே. திருமாலின் மாயையினைத் துதித்தவாறே வந்து நின்றார்! கருடன்! எனப் பாடியுள்ளார்! கம்பர்.
கருடன் வந்ததும் நாகபாசம் விலகியதைக் குறிக்கும் பாடலின் பொருள்:
ravi said…
___🙏 கொடியவனாகிய இந்திஜித் விட்ட நாக பாசம் வாசனை மிக்க தாமரை மலரின் தண்டிலுள்ள நூலின் தன்மைபோல் மெலிந்தது எனக் கூறுவது எதற்கு? மேகம் என யாரும் நினைக்கக் காரணமான 'கொடைத் தன்மை மிக்க வலிமையுடைய மேலோனாகிய
சடையப்ப வள்ளலின்
திரு வெண்ணெய் நல்லூரை அடைந்த வேதியர்கள், சொல் வளம் மிக்கப் புலவர்கள் முதலியவர்களை வருத்திய பசி நீங்கியதைப் போல
அந்நாக பாசம் உருத் தெரியாமல் நீங்கியது' .

__ இப்பாடலில் தன்னை ஆதரித்தச் சடையப்ப வள்ளலையும் நன்றியோடு புகழ்கிறார் கம்பர்.
ravi said…
அடுத்தப் பாடலின் பொருள்__

🙏 பல ஆயிரம் காத தூரம் முடிவு பெறாது பரவியுள்ள இரு பக்கத்தும் அமைந்த சிறகுகளைக் கருடன் வீசுவதால் எழுகின்ற காற்றினால் பூமியில் இதுவரை விலகாதிருந்த இருளானது விலகிச் சென்றது. அப்போது இலட்சுமணர் முதலியோரின் உடம்புகளில் நின்ற நாகக் கணைகள் சிதறி போயின. அக்கணைகளால் உண்டான தழும்புகளும், எல்லா வகையிலும் பாவத்தை விடுத்து, அறத்தையே போற்றிச் செயல்படுபவனின் மீது, பொய் தகவல்களைப் புனைந்துரைப்பதில் வல்லவன், உண்டாக்கிய பழி நீடித்து நிற்காது அழிவதைப் போல அழிந்தன__
என்கிறார் கம்பர்.
அவரது காலத்திலேயே பொய்தகவல்களைப் பரப்புவோர் இருந்துள்ளனர்! எனத் தெரிகிறது.
ravi said…
🙏 "பல்லாயிரத்தின் முடியாத பக்கம்
அவைவீச வந்து படர்கால்
செல்லா நிலத்தின் இருள் ஆதல்
செல்ல
உடல் நின்ற வாளி சிதறுற்று
..............................."

___ குரங்குச் சேனை வெள்ளங்கள் ஊழிக் காலத்திற்குப் பின் பிரம்மாவால் புதிதாகப் படைக்கப்பட்டதைப் போல உயிருடன் எழுந்து நின்றன! _ என்கிறார் கம்பர்.
எய்துவிட்டால் உயிரை உறிஞ்சாது செல்லாத நாக பாசங்கள் அனைவரையும் விட்டு விலகியது. எங்களுக்கு உதவிய தாங்கள் யாரென? இராமர், கருடனைப் பார்த்து நன்றியோடு வியந்துக் கேட்க, கருணைக் கடலே! தங்களையே யாரென அறியாத மருட்சி நிலையயாலே, தாங்கள் இவ்வாறு கேட்கிறீர்கள்; இராவணனையும் கொன்ற பின்னர், தங்களிடம் வந்து நமக்கிடையேயுள்ள பழைய உறவுமுறையை விளக்குகிறேன்! எனக் கருடாழ்வார் பறந்து சென்றதாகக் கூறுகிறார் கம்பர்.
ravi said…
இனி அவர் பாம்பின் விஷம் விலகப் பாடியப் பாடல்கள்:
🙏
"ஆழியான் பள்ளி அணையே அவன்
கடைந்த
ஆழி வரையின் மணித்தாம்பே_
பூழியான்
பூணே புரமெரித்த பொற்சிலையில்
பூட்டுகின்ற
நாணே அகல நட". 🙏

__ 1.ஆழி= சக்கரம், 2. ஆழி=கடல்
சக்ராயுதத்தை ஏந்திய திருமாலின் படுக்கையாக இருப்பவனே!
திருப்பாற்கடலில் மந்தர மலையை மத்தாக இட்டு கடைந்தபோது அதில் கயிறாக இருந்தவனே!( அமுதம் கடைய பயன்பட்டவனே)
பூழியான்= விபூதியைப் பூசிய சிவபெருமான்.
சிவபெருமுன் முப்புரமெரிக்கப் போனபோது மேருமலையை வில்லாக்கி அதில் பாம்பை நாணாக்கினாராம். அத்தகைய சிறப்புடைய பாம்பே நீ இந்த பிள்ளையை விட்டு விலகி நடந்து விடு ! என்கிறார் கம்பர்.🙏
ravi said…
பாரைச் சுமந்த படவரவே
பங்கயக்கண்
வீரன் கிடந்துறங்கும் மெல்லணையே
__ஈரமதிச்
செஞ்சடையான் பூணும்
திருவாபரணமே
நஞ்சுடையாய் தூர நட" 🙏

__ பார் = உலகு
உலகையே தாங்கும் ஆதிசேஷனே! தாமரைக்கண்ணனாகிய திருமால் கடலின் மீது படுத்துறங்க மென்மையான அணையாக இருப்பவனே! குளிர்ந்த சந்திரனைத் தலையில் சூடிய சிவபெருமான் அணியும் ஆபரணமே! இத்தகைய சிறப்புடைய நச்சரவமே ! உன் நஞ்சை எடுத்துவிட்டு தூர விலகி நட! என ஆணையிடுகிறார்! கம்பர்.
ravi said…
தெய்வீகக் கவியின் வாக்கை மீறும் சக்தி அந்த விஷப் பாம்பிற்கும் உண்டோ? கவிச்சக்கரவர்த்தி கம்பரின் வாக்கைக் கேட்டு பாம்பும் விஷத்தை உறிஞ்சி விலகியது. தில்லை மூவாயிரவர்களும் கம்பருக்கு நற்சான்று வழங்கினர்.
மகிழ்வோடு கம்பரின் இராமாயணம் ஶ்ரீரங்கத்தில் நரசிங்கர் சந்நதியின் முன்பு அரங்கேற்றமாகியது. விபீஷணன் , இராவணனுக்குப் புத்தி சொல்லுகையில், இரணியனின் கதையைச் சொல்லி புத்தி சொல்வதாக எழுதியுள்ளார் கம்பர்.
ravi said…
அவ்வாறு நரசிங்கரைப் பற்றி கம்பர் பாடி வருகையில், #ஶ்ரீரங்கம் கோயிலில் அருள்பாலிக்கும் #மேட்டழகிய_சிங்கர் ( நரசிங்கர்) தனது தலையை அசைத்து சிங்கக் கர்ஜனையைச் செய்து, பிள்ளாய்! நம்மாழ்வானைப் பாடினாயா? எனக் கேட்டாராம். எனவே இராமாவதாரத்தைப் பாடி முடித்தப் பின்னர், #சடகோபர்_அந்தாதி என்ற நூலையும் இயற்றினாராம் கம்பர்.
(சடகோபர்= நம்மாழ்வார்)
ravi said…
🙏 நரசிங்க மூர்த்தியே சிங்கக் கர்ஜனையைச் செய்து கம்பராமாயணத்தை அங்கீகரித்தார்! என்றால், அதன் மேன்மையை சாதாரண மானிடர்களால் உணரவும் இயலுமோ?. உயிர் போகும் நிலையில் இருந்தப் பாலகனைத் தன் தெய்வீகப் பாடல்களால் பிழைக்க வைத்தவர், நம் தமிழ்க்கவிஞர், #கவிச்சக்கரவர்த்தி #கம்பர்.

🙏 #ஜெய்ஶ்ரீராம் #ஶ்ரீராமஜெயம்
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 221🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
1 *DRDO .. missile centre*
(Contd)...

So we were getting seamlessly threats from wheeler island to move away from the safe distance being decided by them unilaterally from time to time . We once or twice redesigned the berths but their frequent changes in safe distance ever remained unattempted threats

*2. Challenge -Olive Ridley Turtle*

The olive ridley sea turtle (Lepidochelys olivacea), also known commonly as the Pacific ridley sea turtle, is a species of turtle in the family Cheloniidae.

The species is the second-smallest[7] and most abundant of all sea turtles found in the world.

Olivacea is found in warm and tropical waters, primarily in the Pacific and Indian Oceans, but also in the warm waters of the Atlantic Ocean.

The olive ridley turtle is named for the generally greenish color of its skin and shell, or carapace. It is closely related to the Kemp’s ridley, with the primary distinction being that olive ridleys are found only in warmer waters, including the southern Atlantic, Pacific and Indian Oceans...

How the species became our sole enemies ... Interesting story indeed

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை