ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 26.கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா- பதிவு 33
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே பதிவு 33 26 கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா 26 कर्पूरवीटिकामोदसमाकर्षिदिगन्तरा - கர்ப்பூர வீடிகாமோத ஸமாகர்ஷி திகந்தரா --(1 அவள் இருக்கும் இடத்திற்கு வெகுதூரம் வரை கம்மென்று மணம் வீசுகிறதே அது என்னவா ? வேறு ஒன்றுமில்லை. அவள் மெல்லும் வெற்றிலை தாம்பூலம் அதில் இருந்து வீசும் சுகந்தம்.👍👍👍 கற்பூர = கற்பூரம் வீடிகா = வெற்றிலையுடன் மெல்லக்கூடிய பாக்கு மற்றும் இதர நறுமணப் பொருட்கள் மோத = நறுமணம் சமாகர்ஷி = பரவலாக மணம் கம்ழதல் திகந்தரா = பிரபஞ்சம் = நறுமணத் தாம்பூலம் மென்று பிரபஞ்சமெங்கும் சுகந்தம் பரப்புபவள்🪔 அ ம்பாள் போடும் தாம்பூலம் அதில் இருந்து சொட்டும் தேன் அதை பருக மொய்க்கும் வண்டுகள் போல தேவர்கள் ரிஷிகள், கிங்காரர்கள் பல பல மகான்கள் புத்தி மான்கள் இப்படி ஒரு பெருங்கூட்டமே காத்திருக்க அவள் என்ன செய்தாள் தெரியுமா ? தன்னை கூப்பிடாத ஒருவனை தேடிச் சென்று அந்த மடப்பள்ளி வரதனை காளமேகமாக்கி கவி மழை பொழிய வைத்தாள் ... பேசத் தெரியாத...