ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 33

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 40

33

कामेश्वरप्रेमरत्नमणिप्रतिपणस्तनी -காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண ஸ்தநீ | -

பெண்மைக்குரிய லக்ஷணங்களோடு காமேஸ்வரனை கவரும் லோக மாதா என்று அறிந்து கொண்டாலே போதுமானது. 

தாயை அதற்கு மேல் வர்ணிக்க நமக்கு உரிமையில்லை.




காமேஷ்வர ப்ரேம
 = காமேஷ்வரனின் அன்பு

ப்ரேமை ரதன-மணி = ரத்தினங்கள்- செல்வம் - விலைமதிப்பற்ற 

ப்ரதிபண= ப்ரதியாக - பரிமாற்றம்

ஸ்தனி = மார்பகம் 

33 காமேஷ்வர ப்ரெம ரத்னமணி ப்ரதிபண ஸ்தனி =

காமேஷ்வரனான ஈஸ்வரனின் ஈடற்ற பிரமைக்கு தன் பெண்மையின் அடையாளமான ஸ்தனங்களைப் பரிசளிப்பவள் 🌷🌷🌷

 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

Comments

ravi said…
🌹🌺" *ஒரு ஆண்டின் 24 ஏகாதசிகளில் மார்கழி மாத ஏகாதசி மட்டுமே வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது..என்பதை ..விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து திருப்பாவை பாடி பெருமாளை பின் தொடர்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

🌺அந்த நாளில் மகாவிஷ்ணுவை மட்டுமே மனதில் நினைத்துக்கொண்டு எதுவும் சாப்பிடாமல் இரவில் கண் விழித்து விரதம் இருப்பவர்களுக்காக சொர்க்கவாசலை திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் இறைவன்.

🌺மாதத்திற்கு 2 ஏகாதசி என ஆண்டிற்கு 24 ஏகாதசி விரதம் இருந்தாலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி என்ற பெருமைக்குரியது.

🌺மார்கழியில் ஆண்டுதோறும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

🌺வைகுண்ட ஏகாதசி 2023ஆம் ஆண்டில் ஜனவரி 02 மற்றும் டிசம்பர் 23 என இரண்டுமுறை வருகின்றது.

🌺அதன்படி 2023ஆம் ஆண்டின் முதல் வைகுண்ட ஏகாதசி ஜனவரி 2ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

🌺108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் 21 நாட்கள் நடைபெறும்.

🌺பகல்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வித்தியாசமான அலங்காரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10வது நாளான வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்வார்.

🌺ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார்.

🌺வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை நடைபெறும் பெருமாள் புறப்பாட்டைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் வருகை புரிவார்கள்.

🌺பெருமாள் சொர்க்கவாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க, பக்தர்களும் அதே சொர்க்கவாசல் வழியாக வந்து பெருமாளை சேவிப்பது வழக்கம்.

🌺ஒரு ஆண்டின் 24 ஏகாதசிகளில் மார்கழி மாத ஏகாதசி மட்டுமே மோட்ச ஏகாதசி அல்லது வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் கண் விழித்து விரதம் இருப்பவர்கள் பரமபத விளையாட்டு விளையாடுவார்கள்.

🌺அந்த விளையாட்டில் பாம்பும், ஏணியும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏணியில் ஏறி செல்லும் போது பாம்பு கொத்தி கீழே இறக்கி விட்டு விடும். இது ஏற்ற இறக்கம் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துகிறது.

🌺இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நாளில் அதிகாலையில் 3.30க்கு எழுந்து குளித்து விரதம் இருந்து இறைவனிடம் வேண்டிய வரம் பெறுவோம்.🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺" Out of 24 Ekadasi in a year only Ekadasi of Margazhi month is praised as Vaikunda Ekadasi..a simple story to explain that 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Puranas say that those who wake up early in the morning in the month of March and chant Tirupa and follow Perumal will get a place in heaven.

🌺 On that day, God keeps the gates of heaven open for those who keep their eyes open and fast at night without eating anything, thinking only of Lord Vishnu.

🌺Though there are 24 Ekadasi Vrats in a year as 2 Ekadasi per month, the Ekadasi Vrat that occurs in the month of Margazhi is called Vaikunda Ekadasi.

🌺Vaikunda Ekadasi is celebrated on the eleventh day of waxing every year in Margazhi. It is on this day that the gate of heaven is opened.

🌺 Vaikunda Ekadasi is coming twice in 2023 on January 02 and December 23.

🌺Accordingly the first Vaikunda Ekadasi of 2023 will be celebrated on 2nd January.

🌺 It will be held for 21 days at Srirangam Renganatha Temple, the foremost of the 108 Vaishnava Sthalas and hailed as Phuloka Vaikundam.

🌺 On every day of Pakalpatu Utsavam, Utsavar Namperumal will appear to the devotees in different decorations in the Archuna Mandapam. On the 10th day of Pakalpattu Utsavam, on the 1st of January, Namperumal Nachiyar will wake up dressed as a Mohini called Thirukolam.

🌺 Devotees flock from different parts of the country to witness the early morning procession to Perumal on Vaikunda Ekadasi.

🌺 It is customary for Perumal to get up through the gate of heaven to give darshan, and devotees also come through the same gate of heaven to worship Perumal.

🌺 Out of 24 Ekadasi in a year only Ekadasi of Margazhi month is celebrated as Moksha Ekadasi or Vaikunda Ekadasi. On this day those who keep their eyes awake and fast will play Parampada game.

🌺Snake and ladder get importance in that game. While climbing the ladder, the snake drops its stinger and leaves. It means that life is full of ups and downs.

🌺This year on Vaikunda Ekadasi day we will get up early in the morning at 3.30 am and take bath and fast and get the blessings from God.🌹🌺

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹Valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
பாதாரவிந்த சதகம் !

58.ஸமந்தாத் காமாக்ஷி
க்ஷததிமிர ஸந்தான ஸுபகான்
அநந்தாபிர் பாபி: தினமனு
திகந்தான் விரசயன்
அஹந்தாயா ஹந்தா மம ஜடிம
தந்தாவலஹரி: விபிந்தாம்
ஸந்தாபம் தவ சரண
சிந்தாமணி ரஸௌ

காமாக்ஷி! எல்லையற்ற ஒளிக்கதிர்களால், சுற்றிலுமுள்ள கடும் இருள் அகற்றித்தினமும் திக்கின் எல்லைகளை அழகுமிக்கவைகளாகச் செய்கிற உன் திருவடி எனும் சிந்தாமணி, அகந்தையை அழித்து, ஜடத்தன்மையாகிற
யானையைச் சிங்கமாகி மாய்த்து, என் உள்ளத்துத் தாபத்தை நீக்கட்டும்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே!

கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே!

ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக.

நீயோ வெளி காப்பாளன் அதோ அங்கும் உறங்குவது போல் நடிக்கும் எங்கள் கண்ணன் எங்கள் உள் காப்பாளன் ...எங்கள் உள்ளம் திறக்க உன் மாயை எனும் கதவை திறப்பாயோ

மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன்

எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான்.

அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம்.

அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம்.

அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே.

மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.

மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்

எங்கள் ஆலய மணிகதவை கொஞ்சம் தாழ் திறவாய்

மனக்கதவம் திறந்த பரம்பொருளை

திருக்கதவும் திறக்க வரமருள்வான்

இருக்கரம் கூப்பி கண்ணனை வலம் வரவே

எங்கும் கண்ணன் மயமாய் மலர தாழ் திறவாய்

ஆடும் திருவடி கோலம் அறிந்திட ஹரியே தாழ் திறவாய்

அன்னையின் மார்பினில் பொன்மணி கண்டிட மாதவா தாழ் திறவாய்

அருள்நெறி தெளிவுற பாசுரம் புகழ் பெற

அன்பே தாழ் திறவாய்

ஒருமுறை இருமுறை பலமுறை கேட்டேன் ஒளியே தாழ் திறவாய்

காவலனே தாழ் திறவாய் எங்கள் தலைவா தாழ் திறவாய்🙌🙌🙌

கதவே தாழ் திறவாய் தாழ் திறவாய்..
ravi said…
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே!

கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே!

மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன்

நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம்

துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா!

நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.🙌🙌🙌
ravi said…
*இன்றைய சிந்தனை*

( 31.12.22 )
..........................................................

*'நாவிருந்து புறப்படும் வார்த்தைகள்...!*
......................................................

நாக்கு வன்மையானது, இதனால் நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை அதைவிட வன்மையானது...

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும், இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்குக் காரணமாகி விடும்...

நாம் அடக்கத்துடன் இருப்பது அவசியம். புலனடக்கம் என்பது ஐம்புலனுக்கும் உரியது தான். அவற்றில் மற்றவற்றைக் காக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. பேச்சில் அடக்கத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்...

ஒவ்வொருவரின் நாவிருந்தும் புறப்படும் வார்த்தைகள் மற்றவருக்கு மகிழ்ச்சியைத் தரலாம், சிலருக்கு மனதை உடைத்தெறியலாம். நம்பிக்கையை உடைத்தெறியலாம். ஆறாத வடுவை ஏற்படுத்தலாம்...

ஒருவரை சிந்தித்து வாழ வைக்கலாம். மற்றொருவரை சாகத் தூண்டலாம். ஒரு நொடிப்பொழுதில் நம்மை உயர்வடையவும் தாழ்வடையவும் செய்யலாம்...

கூடியவரை கடுஞ்சொற்களைத் தவிர்த்து விடுவது நல்லது. சினத்தால் வெளிப்படும் சொற்கள் காயப்படுத்துவதை விட, ஏளனமாக, புறக்கணித்துப் பேசும் வார்த்தைகளே அதிக வலியினைத் தரும்...

திருவள்ளுவர் சொல்கிறார்...!

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு." - என்று...

தீயால் சுட்ட புண்ணானது ஆறிவிடக் கூடியது, அதன் தழும்பு கூட மறைந்து விடக்கூடும். ஆனால், ஒருவரை நாம் கோபத்தால், வெறுப்பால், புறக்கணிப்பால் அல்லது அகந்தையால் நாவடக்கம் இன்றிப் பேசுவதால் அவர்கள் மனத்தில் உண்டாகும் காயம் ஆறவே ஆறாது...

இதனை வலியுறுத்தவே, "யாகாவாராயினும் நாகாக்க" என்றும் கூறுகிறார் அவர்.

ஒவ்வொருவரிடம் ஒரு நல்ல குணம், ஒரு திறமை மறைந்து கிடக்கிறது. அதைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும், ஒருவரைப் புண்படுத்துவது, பூவால் வருடுவது இரண்டையும் செய்யும் வல்லமை படைத்தது நம் நாக்கு.

ஒருவர் கூறும் நல்ல இனிமையான சொல், விரக்தியின் விளிம்பில் இருப்பவரைக் கூட மலர்ச்சியடையச் செய்கிறது. ஒருவர் வீசும் கடுஞ் சொல்லோ, நல்ல மனநிலையில் இருப்பவரைக் கூட வேதனைப்பட வைக்கிறது.

இனிய கனியைத் தேர்ந்தெடுப்பதா...?, புளிக்கும் காயைத் தேர்ந்தெடுப்பதா...? - இரண்டும் நம் கையில் தான்...
அல்ல. அல்ல. நம் நாவில் தான் இருக்கிறது...

தயவுசெய்து (Please), மன்னிக்கவும் ( Sorry), நன்றி ( Thank you) இவற்றை தாராளமாகப் பேச்சினூடே பயன்படுத்த வேண்டும்...

ஆம் நண்பர்களே...!

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு. அத்தகைய ஆற்றலும், சக்தியும் வாய்ந்த பேச்சு நம்மிடம் இருந்து வெளிப்பட வேண்டும்...

நமது பேச்சுப் பிறரை மகிழ்ச்சியுறுவதற்காகவும், எவ்வகையிலும் பிறரைக் காயப்படுத்தாததாகவும் அமைய வேண்டும்...

ஒருவரிடம் பேசும் பொழுது சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிந்தித்து சுயமாகப் பேச வேண்டும்...

*வாக்கினிலே இனிமை சேர்ந்தால் வாழ்வினிலும் இனிமையே கூடும் தானே...?*

ravi said…
*❖ 67 அஷ்வாரூட திஷ்டிதாஷ்வ கோடிகோடி பிராவ்ருதா=*🦄🦄🦄

அஷ்வாரூடாதேவி ஆணையின் கீழ் கோடிக்கணக்கில் குழுமியுள்ள உயர்ந்த குதிரைப்படையால் சூழப்பட்டவள்.
ravi said…
குதிரையில் நீ வரும் அழகை கண்டே ஹயக்ரீவர் உன் பாஷ்யம் வரைந்தாரோ அம்மா ?

குருமுனி தாள் பணிய அங்கே காவேரி என ஓட வைத்தாரோ ஆயிரம் திரு நாமங்களை

ஓவ்வொரு நாமமும் புல்லரிக்க வைக்கின்றதே ...

வாக் தேவிகள் என் நாவில் அமர

வாணீ அங்கே வீணை வசிக்க

திருமகள் செந்தாமரை தனில் அமர்ந்து புன்னகை புரிய

உன் நாமம் அதை தினமும் சொல்ல வைத்தாயோ ?

புண்ணியம் செய்தேன்

புது பிறவி வந்திடினும்

புண்ணியவளே உனை புண் செய்யா பக்தி வேண்டும் ...

அருள்வாய் என்
அஷ்வாரூடா !!!💐💐💐
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ஸ்ரீ-நகர வர்ணனை

*💐💐💐(55-63)*
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

26 –
கௌதமர் போற்றும் கருணை மாமலையே

கடைக்கணித்து ஆள்வாய் அருணாசலா (அ)
ravi said…
அருணாசலா என்ன ஆச்சரியம் !!

இந்த உப்பு கடல் மேகங்களின் உணவாகி மேலே சென்று சிரிக்கும் போது

அன்னை உமை போல் கருத்து கருணை முகம் பெறுகிறதே...

என்ன விந்தை இது !!

எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறதே

என்ன விந்தை இது !!.

எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள்

எழுப்பும் ஒலியைப் போல

இடி முழங்குகிறதே

என்ன விந்தை இது !!

அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறதே

என்ன விந்தை இது !!

நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி,

தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல.

மழை தனை விடாமல் பொழிய அருள் நீ அன்றோ செய்கிறாய் *அருணாசலா*

காயத்திரி நாமம் பிறக்க வைத்து

அதை பிரசவித்த கௌதமருக்கும் முக்தி தந்தாய் ...

அவன் உனை தினம் புகழ்வதில் விந்தை ஏதும் உண்டோ *அருணாசலா* ? 💐💐💐
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

விக்நேச்வரரின் அப்பாவான பரமேச்வரன்தான் தக்ஷிணாமூர்த்தியாகவும், நடராஜாவாகவும் இருக்கிறபோது தெற்குப் பார்க்க இருப்பவர். இப்போது அவர் (விக்நேச்வரர்) மாமாவையும் அதே மாதிரி தெற்கே பார்க்க வைத்துவிட்டார். லோகமே தெரியாமல் அடித்த சிலையாக த்யானத்திலே உட்கார்ந்திருக்கிறவர் தக்ஷிணாமூர்த்தி. ஸர்வ லோக வியாபாரத்தையும் ஆனந்தக்கூத்தாக்கி அமர்க்களமாக ஆடுகிறவர் நடராஜர். சயன மூர்த்தியாக நித்ரை பண்ணிக் கொண்டிருக்கும் பெருமாளோ நித்ரை என்ற பேரில் தக்ஷிணாமூர்த்தி இருக்கிற அதே ஸமாதி ஸ்திதியில் இருக்கிறவர்தான். பின்னே ஏன் இதை ஸமாதி என்காமல் நித்ரை என்கிறார்களென்றால்... அவர் மஹா மாயாவித்தனம் - நமக்குப் புரியாத இந்திர ஜாலம் எல்லாம் - பண்ணுகிறவரோல்லியோ, அதனால் ஸமாதியில் பாட்டுக்கு ஒரு பக்கம் இருந்துகொண்டே, இன்னொரு பக்கம் நாம் எப்படி நித்ரையின் போது ஸ்வப்னம் கண்டு அந்த ஸ்வப்னத்தில் நாம் ஒருத்தரே நம் ஒருவருடைய நினைப்பாலேயே மநுஷ்யர்கள், இடங்கள், ஸம்பவங்கள் எல்லாவற்றையும் கல்பிக்கிறோமோ (கற்பனை செய்கிறோமோ) அந்த மாதிரித் தன் ஒருத்தருடைய கல்பனா ஸ்ருஷ்டியாகவே இத்தனை ஜீவ - ஜகத் ஸ்ருஷ்டியையும் பண்ணுவார். அதனால் இதை அவருடைய ஸ்வப்னம் என்று வைத்தது. ஸ்வப்னம் வரவேணுமானால் தூங்கினால்தானே முடியும்? அதனால் அவருடைய ஸமாதியை நித்ரை என்கிறது. இப்படிச் சொல்ல இன்னொரு கூடுதல் காரணம், அவர் பொது வழக்கப்படி நேரே நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு ஸமாதியில் போகாமல், தம்முடைய மாயாவித்தனத்தை இதிலும் விடாமல், நன்றாக நீள நெடுகச் சயனித்துக் கொண்டு இருப்பதாகும். ஆனாலும் இந்த நித்ரை நம்முடைய நித்ரை போன்றதில்லை என்று தெரிவிப்பதாக அதை 'யோக நித்ரை' என்று ஒரு சிறப்பு அடைமொழி போட்டுச் சொல்வது, நாமெல்லாம் அறிவு மழுங்கித் தூங்குகிறாற் போலில்லாமல் நல் அறிவு விழிப்போடேயே அவர் தூக்கத்தில் லோக ஸ்ருஷ்டியாதிகளைக் கல்பனை பண்ணுவதால் தமிழிலே அழகாக 'அறிதுயில்' என்பது. அரிசெய்வது அறிதுயில்!

'
ravi said…
அப்பாவின் ஸமாதி மூர்த்தம். ஜகத் வியாபார மூர்த்தம் இரண்டும் தெற்குப் பார்க்க இருக்கிற போது, மாமா இரண்டையும் சேர்த்துப் பண்ணிக் கொண்டிருக்கிற பள்ளிகொண்ட மூர்த்தியும் அப்படி இருக்கவேண்டாமா?' என்று விக்நேச்வரர் நினைத்துக் கொண்டிருந்தார் போல இருக்கிறது. இப்போது விபீஷணாழ்வாரிடமிருந்து அப்படிப்பட்ட மூர்த்தியைப் பறிமுதல் பண்ணினபோது... (சிரித்து) வெளிதேசத்துக்குக் கொண்டுபோகக் கூடாது என்று கஸ்டம்ஸ் அதிகாரி சரக்கைக் கைப்பற்றுகிற மாதிரிப் பண்ணினபோது, அந்தப் பரம பக்தருக்கு அநுக்ரஹமும் தடைப்படக்கூடாது என்ற பரம கருணை விக்நேச்வரருக்கு உண்டாகி, அவருடைய ஊரைப் பார்க்க விக்ரஹத்தை ப்ரதிஷ்டை பண்ணிவிடலாமென்று நினைத்து, அதே ஸமயம் அப்பா மாதிரியே மாமாவுக்கும் தெற்குப் பார்க்க மூர்த்தி உண்டாக்கித் தன்னுடைய ஆசையையும் தீர்த்துக் கொண்டார் என்று தோன்றுகிறது.

ravi said…
அவருடைய ஹஸ்த விசேஷமும், ஈச்வரனுக்கு எப்படியோ அப்படியே

பெருமாளுக்கும் என்ற ஸமரஸமான மனோ விசேஷமும், இரண்டும் சேர்ந்து அப்படி அவர் ப்ரதிஷ்டித்த ரங்கராஜாவே மற்ற அத்தனை க்ஷேத்ரத்துப் பெருமாள்களுக்கும் ராஜாவாக அக்ரஸ்தானம் (முதலிடம்) பெற்றுவிட்டார்!அந்த ராஜாவின் ஆஸ்தானமான க்ஷேத்ரம் ஸ்ரீரங்கம் என்றும், திருவரங்கம் என்றும் பேர் பெற்றது.

ravi said…
நான் மாற்றிச் சொல்லிவிட்டேன் 'ரங்கராஜா' இருக்கிறதால் அந்த இடம் 'ரங்கம்' என்பது ஸரியில்லை, அந்த இடத்துக்கு 'ரங்கம்' என்ற பேர் இருப்பதால்தான் அங்கே ராஜாவாக இருக்கிறவருக்கு 'ரங்கராஜா'என்று பேர் ஏற்பட்டது. இக்ஷ்வாகு வம்ச ராஜாக்கள் - ராமர் வரை இருந்தவர்கள்- ஆராதித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு நாராயணன், விஷ்ணு என்று பொதுப் பெயரோ, அல்லது ஆதிசேஷ ஸர்ப்பத்தின் மேல் சயனித்துக் கொண்டிருப்பதால் சேஷசாயி, அனந்தசாயி என்கிற மாதிரி ஒரு பெயரோதான் இருந்திருக்கும். உபய காவேரி மத்தியில் விக்நேச்வரர் அவருக்கு ரங்கமாக ஒரு ஸ்தானத்தை ஏற்படுத்திய இப்போதுதான் அவர் ரங்கராஜா என்ற பெயரைப் பெற்றிருக்கவேண்டும்.

அதென்ன 'ரங்கம்'?

ரங்கம் - தமிழில் 'அரங்கம்' - என்றால் நாட்டிய நாடகங்கள் நடக்கும் மேடை. அதைப் பார்க்க ஜனங்கள் கூடியிருக்கும் ஹாலையும் சேர்த்து, என்றும் சொல்லலாம். அதாவது 'ஸ்டேஜ்' மாத்திரம் என்றும் சொல்லலாம், 'தியேட்டர்' முழுவதும் என்றும் சொல்லலாம். லோக நாடகத்தை ஸ்வப்ன கல்பனையாகப் பண்ணும் மஹா பெரிய நாடகக்காரன் ரங்கத்தில்தானே அந்த நாடகம் நடத்தணும்? இதே கார்யத்தைப் பரமேச்வரனாக இருந்து கொண்டு நாட்டியமாக அவன் பண்ணும் சிதம்பரத்தில் அவனுடைய ஸந்நிதிக்கு 'ஸபை' என்று பெயர். 'சித்ஸபை' என்பார்கள். ஜனங்களுக்குத் தெரிந்த பெயர் 'கனக ஸபை'. இந்த இடத்தில் 'ஸபை' என்பதற்கு, 'ரங்க'த்துக்கு என்ன அர்த்தமோ அதே அர்த்தந்தான். அதாவது நாட்டிய - நாடக சாலை என்றே அர்த்தம். இப்போதுங்கூட ஸங்கீதக் கச்சேரி, டான்ஸ் கச்சேரி நடத்துகிற ஸங்கங்களெல்லாம் 'ஸபா', 'ஸபா' என்றுதானே பேர் போட்டுக்கொள்கின்றன? 'ஸபா'வில் ஒருத்தர் முதல் தடவையாக டான்ஸ் கச்சேரி பண்ணுவதை 'அரங்கேற்றம்' என்கிறார்கள். இங்கே சித்ஸபை, ஸ்ரீரங்கம் இரண்டும் ஜாடையடிக்கின்றன.

நடைமுறையிலுள்ள வழக்கத்தை அநுஸரித்து நாட்டியம் என்றால் டான்ஸ், நாடகம் என்றால் ட்ராமா என்ற அர்த்தத்தில் நாட்ய - நாடக சாலை என்று நடுவே சொன்னேன், ஆனால் 'நாட்ய சாஸ்த்ரம்' என்கிற பரதரின் பெரிய ப்ரமாணப் புஸ்தகத்தில் 'நாட்டியம்' என்பது முக்யமாக இப்போது நாம் 'நாடகம்' என்று சொல்வதைத் தான் குறிக்கிறது, அதிலேயே டான்ஸைப் பற்றியும் வருகிறது. அது மட்டுமில்லாமல் ஸங்கீதம் பற்றியும் வருகிறது. 'நட' என்ற வேர்ச் சொல்லிலிருந்துதான் நாடகம், நாட்யம், நடனம் - தமிழில் 'நடப்பது' - எல்லாமே வந்திருக்கிறது. அது அசைவை, motion -ஐக் குறிக்கிற தாது (வேர்ச்சொல்) ....

டான்ஸ் பண்ணும் தகப்பனாருக்குக் கோவிலாக ஒரு நாட்டிய - நாடக சாலை 'ஸபை' என்றே இருக்கிறதென்றால், ஸ்வப்னமாகவே ட்ராமா பண்ணும் மாமாவுக்கும் அப்படி ஒன்று இருக்கணும் என்று தீர்மானித்த விக்நேச்வரர், தத்வத்தில்

ஒன்றேயானாலும், பெயரில் வித்யாஸம் இருந்தால்தான் அழகு என்று தாம் ப்ரதிஷ்டித்த மூர்த்தியின் ஸந்நிதிக்கு 'ரங்கம்' என்று பெயர் வைத்தார்.
ravi said…
ஒரு புத்திசாலியான பையன் ஒருத்தன் இருந்தான். அவன் நல்ல mark வாங்கி நல்ல college ல படிச்சு அமெரிக்காவுல நல்ல வேலையில இருந்தான்.

ஆனா அவன் மனக்கலக்கத்தோட இருந்தான். என் நண்பன் ஸ்வாமிகள் கிட்ட அழைச்சிண்டு வந்தார்.

ஸ்வாமிகள் “ *அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித”* ன்னு 336 தடவை ஜபிச்சிட்டு, ராம நாமத்தை ஒருமணிநேரம் சொல்லுன்னு சொன்னார்.

அவன் mental healthகாக பல மருந்துகள் சாப்டுண்டு இருந்தான்.

இந்த நாம ஜபம் பண்ணி அவனுக்கு உடம்பு, மனசு எல்லாம் ரொம்ப சரியாகி கல்யாணமாகி, குழங்தைகளோடு சௌக்யமா இருக்கான்.

அப்படி கண்கூடா அந்த நாமம்கிறது நன்மை செய்கிறது.

மஹான்கள் எல்லாரும் அதைச் சொல்றா.
ravi said…
பகவானை அடையணும்.

ஏன்னா,ரொம்ப பாக்யவசத்துனால இந்த பாரத பூமியில வந்து இருக்கோம்.

“புவனியில் போய் பிறவாமையில் நாம் நாள் போக்குகின்றோம் அவமே இந்த பூமி” ன்னு திருப்பள்ளி எழுச்சியில இந்த புவனியில வந்து நாம பிறக்கலையேன்னு தேவர்கள்லாம் ரொம்ப வருத்தப் படறாளாம்.

இந்த பூமியில வந்த பிறந்தா நமக்கு சிவபெருமானோட அருள் கிடைக்கும்.

இந்த மேலுலகங்கள் எல்லாம் தேவலோகம், பிரம்மலோக பர்யந்தம், ஸ்வர்காதி லோகங்கள்ல சந்தோஷம் அனுபவிப்பாளே தவிர முக்தி கிடையாது.🙌🙌🙌
ravi said…
*""பிரதோஷ பூஜைக்கு உதவிய மகாபெரியவா!""*

ஒரு பிரதோஷ நாள். தற்செயலாக கிராமத்து சிவாலயம் ஒன்றுக்குச் சென்றிருந்தார் மகாபெரியவர்.

அங்கே நந்திக்கும் ஈசனுக்கும் ஒரே சமயத்தில் அபிஷேகங்கள் தொடங்கின. பால், தயிர், சந்தானம், தேன், இளநீர் என்று அபிஷேகங்கள் நடந்து கொண்டிருந்தன. ஒரு ஓரமாக நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார், பரமாசார்யார். எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருந்த அந்த சமயத்தில், அர்ச்சனை செய்து கொண்டிருந்த குருக்கள், ஒரு நிமிடம் திகைத்து நின்றார்.

அவரது பார்வை, அபிஷேகத்துக்கான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தையே துழாவித் துருவிப் பார்த்தது. ஏதோ ஒரு பொருளை அவர் தேடுவதும், அது அங்கே இல்லை என்பதும் அவரது செய்கையைப் பார்க்கும்போதே புரிந்தது. மகாபெரியவர் முன்னிலையில் இப்படி ஆகிவிட்டதே... என்ன செய்வது என்று புரியாமல் அவர் தவிக்க, பக்தர்களோ என்ன பிரச்னை என்று புரியாமல் பார்க்க, வதனத்தில் புன்னகை தவழ அமைதியாக நின்றிருந்தார், மகான்.

அந்த சமயத்தில் மிகச் சரியாக உள்ளே வந்த பக்தர் ஒருவர், மகான் இருப்பதையோ பக்தர்கள் கூட்டம் நிறைந்து இருப்பதையோ எதையும் கவனிக்காமல் வேகவேகமாக அர்ச்சகர் முன்னால் சென்று நின்றார்.

"மன்னிக்கணும்...பூஜையெல்லாம் தொடங்கறதுக்கு முன்னாலயே வந்து இந்த அபிஷேக திரவியத்தை தரணும்னு நினைச்சேன். வண்டி கிடைச்சு வர்றதுக்கு நேரமாகிடுச்சு....அபிஷேகமெல்லாம் முடிஞ்சிடுச்சா...இதை சேர்த்துக்க முடியுமா?" பரபரப்பாகக் கேட்டார்.

"என்ன அது?" என்பது போல அர்ச்சகரின் பார்வை உயர.."நெல்லிப்பொடி (காய்ந்த நெல்லிக்காய்த்தூள்) பிரதோஷ அபிஷேகத்துக்குத் தந்தால் நல்லதுன்னு சொன்னாங்க..அதனால கொண்டு வந்தேன்..!"

கையில் இருந்த பொட்டலத்தை அர்ச்சகர் முன் நீட்டினார், அந்த பக்தர். நெல்லிப்பொடி என்று அவர் சொன்னதுதான் தாமதம், அர்ச்சகரின் கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது.

இதுதான்....இதைத்தான் தேடினேன்..என்பது போல அவசர அவசரமாக அதை வாங்கியவர், சட்டென்று பொட்டலத்தைப் பிரித்து அதில் இருந்த நெல்லிப்பொடியை சிவலிங்கத் திருமேனியில் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவினார். அப்படியே சிவலிங்கத் திருமேனி முழுவதுமாக நெல்லிப்பொடியால் நிறைந்தது. ஆர்த்தி காட்டினார் அர்ச்சகர்.

அபிஷேகத்துக்கான பொருட்களை எடுத்து வைத்த போது நெல்லிப் பொடியை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லையே..மகான் முன்னிலையில் நெல்லிப்பொடி அபிஷேகம் செய்யாமல் விட்டால் அது பெரும் குறையாகி விடுமோ என்றெல்லாம் மனதுக்குள் தவித்துக் கொண்டிருந்த அர்ச்சகர் முகத்தில் இப்போது ஒரு நிம்மதி நிறைந்திருந்தது.

அபிஷேகங்கள், அலங்காரம் எல்லாம் முடிந்து, ஆர்த்தி காட்டினார், அர்ச்சகர். மகாபெரியவரிடம் பிரசாதங்களை கோயில் முறைப்படி கொடுத்தார்.

குறுநகை தவழ அதை ஏற்றுக்கொண்டு புறப்பட்டார் மகாபெரியவர்.

மகான் புறப்பட்ட கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ஏதோ நினைவு வந்தவராய், சரியான சமயத்தில் நெல்லிப்பொடி கொண்டு வந்த பக்தர் பெயரால் சுவாமிக்கு ஒரு அர்ச்சனை செய்ய நினைத்து, அவரைத் தேடினார், அர்ச்சகர்.

ஊஹூம்..எங்கேயும் காணோம். அவர் ஈசனுக்கு ஆராதனை செய்தபோது நந்திக்கு பூஜைகள் செய்து கொண்டிருந்த அர்ச்சகர், "என்ன நெல்லிப்பொடி கொண்டு வந்தவரைத் தேடறீங்களா? அவர் அப்பவே புறப்பட்டுவிட்டார். நீங்க அர்ச்சனை செய்யறதுக்காக தேடினா, சந்திரசேகரன், அனுஷ நட்சத்திரம்னு சொல்லச் சொன்னார்.!"

அதைக் கேட்டதும் அர்ச்சகருக்கு உடல் சிலிர்த்தது..."இது மகாபெரியவரோட பெயர், நட்சத்திரம் ஆச்சே...அப்படியானால் அதைக் கொண்டுவந்தவர்....?" அவர் மனதில் எழுந்த கேள்விக்கான விடையை சொல்லவும் வேண்டுமா என்ன?
ravi said…
*தாத்தா பாட்டியை விட வேற சிறந்த குரு யாரும் கிடையாது.*

சென்னை ஸம்ஸ்கிருத கல்லூரியிலே 1956-57லே மஹா பெரியவா சில நாள் தங்கி, சாயந்திரம் தினமும் பிரசங்கம் நடைபெறும். கேக்கணுமா பெரியவா பேச்சை கேக்க கூட்டம் அலைமோதும். அன்று *ராஜாஜி வந்திருந்தார் (இன்று அவர் மறைந்த தினம்).* என்ன பேசறதுன்னு மகாபெரியவா முடிவு பண்ணலை. பக்கத்திலே பேராசிரியர் சங்கரநாராயணன் நிக்கறதை பெரியவா பாத்து அவரை பக்கத்திலே கூப்பிட்டா.

அவர்கிட்ட ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி அதிலே முதல் ரெண்டு வரியை சொன்னா.

"உனக்கு அடுத்த ரெண்டு வரி இருக்கே அது தெரியுமா"?

''பெரியவா மன்னிக்கனும். எனக்கு தெரியலை''

இப்படி பெரியவா ஒரு ஸ்லோகத்தை பத்தி பேசினது மைக்லே எல்லோருக்கும் கேட்டுடுத்து.

கூட்டத்திலே ஒருத்தருக்கு அந்த ஸ்லோகம் தெரிஞ்சிருந்தது. அவர் மெதுவாக மேடைக்கு அருகே வந்து பேராசிரியர்
சங்கரநாராயணன் கிட்டே '' சார், பெரியவா கேட்ட அந்த பாக்கி ரெண்டு அடி எனக்கு தெரியும். அது இதுதான் என்று அவரிடம் சொன்னதை பேராசிரியர் சந்தோஷமா மேடையிலேறி பெரியவா கிட்ட,

''பெரியவா அந்த மீதி ரெண்டு வரி இது தான் என்று சொன்னவுடன்,

''நான் கேட்ட போது தெரியாதுன்னியே''?

''ஆமாம் பெரியவா. கூட்டத்திலே யாரோ ஒருவருக்கு தெரியும்னு வந்து எங்கிட்ட சொன்னதைத்தான் பெரியவா கிட்ட சொன்னேன். ''

''அவரை இங்கே அழைச்சிண்டு வா''

''நீ தான் அந்த ரெண்டு வரியை சொன்னதா?''

''ஆமாம் பெரியவா''

''எங்க படிச்சே?''

''மெட்ராஸ்லே பிரெசிடென்சி காலேஜ்லே''

''நான் அதைக் கேக்கலே. இந்த ஸ்லோகத்தை எங்கே படிச்சே?''

''எங்க தாத்தா சொல்லி கொடுத்தது சின்ன வயசுலே''

''எந்த ஊர் நீ, உங்க தாத்தா யார்?''

சுவாமிநாதன் விருத்தாந்தம் எல்லாம் சொன்னார்.

பெரியவா சுவாமிநாதன் பேசினது அத்தனையும் மைக் வழியா சகல ஜனங்களும் கேட்டிண்டு இருந்தா.

பெரியவா சொன்ன ஸ்லோகம் இது தான்.

*அர்த்தாதுரணாம் ந குருர் ந பந்து,*
*க்ஷுதாதுராணாம் ந ருசிர் ந பக்வம்*
*வித்யாதுராணாம் , ந சுகம் ந நித்ரா*
*காமாதுராணாம் ந பயம் ந லஜ்ஜா*

பணமே லக்ஷியம் என்று தேடுபவனுக்கு குரு ஏது பந்துக்கள் ஏது?
பசி காதடைக்கிறவனுக்கு ருசியோ, பக்குவமோ அவசியமா?
படித்து முன்னேர முனைபவனுக்கு வசதியோ தூக்கமோ ரெண்டாம் பக்ஷம் தானே?
காமாந்தகாரனுக்கு பயமேது வெட்கமேது?

தான் பிறகு பேசும் போது பெரியவா கேநோபநிஷதிலிருந்து மேற்கோள்கள் காட்டினார். எப்படி பார்வதி தேவி தேவர்களுக்கு பிரம்மத்தை உபதேசித்தார் என்றெல்லாம் விளக்கிவிட்டு,
இப்போ பேசுறதுக்கு முன்னாலே ஒருத்தரை மேடைகிட்ட கூப்பிட்டு ஒரு ஸ்லோகத்தின் முதல் ரெண்டு அடிகளை சொல்லி பாக்கி தெரியுமா என்றதற்கு தெரியும் என்றார். எங்கே தெரிஞ்சுண்டே என்று கேட்டதற்கு, சின்ன வயசிலே தாத்தா வீட்டிலே சொல்லிக் கொடுத்தார் என்றார். எனக்கு அவா குடும்பத்தை தெரியும்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து என்ன தெரிகிறது?

நான் எதுக்கு இதை பெரிசா எடுத்து சொல்றேன்னா, இதெல்லாம் வீட்டிலே பெரியவா கிட்டே தெரிஞ்சிக்கணும். இதெல்லாம் பள்ளிக்கூடத்திலேயோ, காலேஜ்லேயோ சொல்லித் தரமாட்டா. சேர்ந்து ஒண்ணா வாழற குடும்ப வாழ்க்கையிலே இது ஒரு பெரிய லாபம் என்பதைபுரிந்து கொள்ள உதவும்.

*தாத்தா பாட்டிகள் ஒரு பொக்கிஷம்*. நிறைய விஷயங்களை அவா கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கலாம்.

சின்ன வயசிலேயே சொல்லிக்கொடுக்க தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த *குரு* யாரும் கிடையாது. மனதில் நன்றாக படியும் . அது தான் பசுமரத்தாணி என்கிறது.


*குருவே சரணம்*
ravi said…
பாதாரவிந்த சதகம் !

58.ஸமந்தாத் காமாக்ஷி
க்ஷததிமிர ஸந்தான ஸுபகான்
அநந்தாபிர் பாபி: தினமனு
திகந்தான் விரசயன்
அஹந்தாயா ஹந்தா மம ஜடிம
தந்தாவலஹரி: விபிந்தாம்
ஸந்தாபம் தவ சரண
சிந்தாமணி ரஸௌ

காமாக்ஷி! எல்லையற்ற ஒளிக்கதிர்களால், சுற்றிலுமுள்ள கடும் இருள் அகற்றித்தினமும் திக்கின் எல்லைகளை அழகுமிக்கவைகளாகச் செய்கிற உன் திருவடி எனும் சிந்தாமணி, அகந்தையை அழித்து, ஜடத்தன்மையாகிற
யானையைச் சிங்கமாகி மாய்த்து, என் உள்ளத்துத் தாபத்தை நீக்கட்டும்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺 "Lord! You alone are enough." If we pray to him like Arjuna, our life will end.
-------------------------------------------------- ------
🌹🌺 ''There was a thief named Rohit in a town
There was no place he did not steal.
As he caused great suffering to the people, all the people of the town went to the king and complained.

🌺 As Rohit the thief escaped without being caught by anyone, the king announced a reward of five lakh rupees if this thief is caught. While searching for the minister, the thief got hold of him.

🌺 The minister made a trick.
"The king has said five lakhs for your head. If you do as I say, I will give you twenty lakhs, and let you escape too." He assured.

🌺 "Okay" Thief Rohit agreed.
The minister disguised himself as a sanyasi by dressing the thief with Thirunee and Rudraksha.
Then to him,
"You sit quietly under this tree.

🌺 The king comes and says no to whatever he gives.
Finally he will give you half of his kingdom. Buy it and give it to me.
I will give you twenty lakhs as I said."

🌺Then the minister went to the king and said, "I have seen a hermit sitting under a tree without his bonds. Visit him and get rid of your mental worries." said.

🌺 The king went and bowed down at the feet of that sanyasi (thief) who was under the tree and said, "Sir, I will give you one lakh gold necklace as alms, take it." said.

🌺Sanyasi Rohit, "No". said. Then five lakhs, ten lakhs. He donated twenty lakhs, fifty lakhs, precious jewels and money.

🌺 Sanyasi said he didn't want anything. Then the king said, "You are Satyaseelan! I will give you half of my kingdom as alms.
You should receive it and congratulate me."

🌺 Now the minister is very happy!
He was laughing and happy in his heart as he was acting as we told him! But
Sanyasi said no to this too.

🌺 Minister's face has changed. "Innocent!
If you say no,
We cannot call him a thief now.
What to do?"
At last the king said that he would give his daughter in marriage to the sanyasi.

🌺 To that the ascetic said, "O king!
What is all this for me who is non-attached? "Don't!" he said. "You are a true non-attached sage!" The king fell down and worshiped him.

🌺 After that the minister came and said, "Why did you put mud like this in your old age, is this fair?" And he fought. That ascetic,

🌺 "Sir, I am a thief. When you showered me with Thirunei and Rudraksha,
Then my mind changed.
And the king, who had put a price of five lakhs on my head, fell at my feet on seeing my golam.

🌺 That humility is not for me, but for Thiruneeru and Rudraksha above me.
I got something higher than what I said I didn't want.

🌺I understood that if I don't want all the worldly things of value, the priceless Lord will be available to me.

🌺That's what I need." Said the Sanyasi. This understanding is the secret of life. The purpose of our birth.
We use the Lord as an instrument and ask for the riches of the Lord but not Him.

🌺 "Lord! You alone are enough." If we pray to him like Arjuna, our life will end.🌹🌺

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -31.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-14


மூலம்:

அறைகழற்செஞ் சீறடிகள் அன்றென் சிரத்தில்
உறையவைத்த மேன்மைஎனக் குண்டோ – இறையளவும்
இன்றோ அறியேன், எழிர்பழனி மாமலைமேல்
நின்றோனே! மெய்யுரைப்பாய் நீ (14).

பதப்பிரிவு:

அறை கழல் செம் சீறடிகள் அன்று என் சிரத்தில்
உறைய வைத்த மேன்மை எனக்கு உண்டோ? – இறை அளவும்
இன்றோ அறியேன்!! எழில் பழனி மாமலை மேல்
நின்றோனே! மெய் உரைப்பாய் நீ!!! (14).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

மிக உருக்கமான வெண்பாக்களில் ஒன்று.

அழகே உருவான பழனி மா மலையின் மீது நின்றோனே! பழநியாண்டவனே! ஒலிக்கின்ற சிலம்பு பொருந்திய உன் செம்மையான சிறிய திருவடிகள் அன்று என் தலையில் பொருந்தும்படி வாய்த்த சிறப்பு, மேன்மை எனக்கு உண்டோ? ஒரு சிறிது அளவும் இன்றோ அறியேன் உன் அடிமை! மெய்யே உருவான பழனியப்பா நீயே மெய் உரை!

தரிசான என் சிரசில் உன் திருவடிப் பரிசு!என்னே பாக்கியம் செய்தேன் என் ஞான தண்டாயுதபாணியே!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
[01/01, 07:28] +91 96209 96097: *காமப் பிரதாய நமஹ*🙏
அடியார்களின் விருப்பங்களை நன்கு அருள்பவர்
[01/01, 07:28] +91 96209 96097: *மஹாயாக-க்ரமாராத்யா* மஹாபைரவ-பூஜிதா🙏
நமது பாவங்களை பெற்றுக் கொண்டு நமக்கு மிகு‌ந்த நன்மைகளை அளிப்பவள்
ravi said…

பழனிக் கடவுள் துணை -01.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-15


மூலம்:

நீலக் கலாபிமிசை நீஒருக்கால் நேரில்வந்து
ஞாலத்தோர் தேறும் நலம்நல்காய்! – சாலப்
புகழ்விளைக்கும் சீர்ப்பழனிப் புங்கவா! பொல்லார்
இகழ்(வு)இனிநான் தாங்கலரி தே (15).

பதப்பிரிவு:

நீலக் கலாபிமிசை நீ ஒருக்கால் நேரில்வந்து
ஞாலத்தோர் தேறும் நலம் நல்காய்! – சாலப்
புகழ் விளைக்கும் சீர்ப் பழனிப் புங்கவா! பொல்லார்
இகழ்வு இனி நான் தாங்கல் அரிதே!!!(15).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

புத்தாண்டை வரவேற்க என்ன ஒரு வெண்பா? என்னே எம் பெருமான் கருணை!

இந்தப் பாடலில், பொல்லார் இகழ்வு இனி நான் தாங்கலரிது என்கிறார். நல்லோர் குறை கண்டாலும் இகழார்; பொல்லார் தமக்கு ஒவ்வாத நல்லோரையும் கூட இகழ்வார்கள் என்னும் உலக இயல்பு பிரதிபலிக்கப்படுகிறது.

மெத்தப் புகழ்,பெருமைகள் பல உடைய பழனி என்னும் திருப்பதியின் அதிபதியே! பழனிக் கடவுளே!
நீலக் கலாபி என்னும் நீல மயிலில் நீ ஒரு முறை நேரில்வந்து, இந்த உலகில் உள்ள மக்கள் எல்லாரும் தேறும் படிக்கான நலம் அருள வேண்டும்! பொல்லாக் கூட்டத்தினரின் இகழ்ச்சி இனிமேல் நான் தாங்குவது கடினம்!! என்னை நீ தான் ரட்சிக்க வேண்டும் ஐயா!

புகழ்ச்சி மிக்கப் பழனிப் பெருமாளே! இகழ்ச்சியின்றி மகிழ்ச்சியுடன் நான் வாழ நீ அருள்!

தரிசான என் சிரசில் உன் திருவடிப் பரிசு!என்னே பாக்கியம் செய்தேன் என் ஞான தண்டாயுதபாணியே!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
நினைவும் அமுதம் அணைவும் அமுதம்
நிதமும் அமுதம் நிகழ்வும் அமுதம்
பதமும் அமுதம் பரமும் அமுதம்
காஞ்சீ கனலின் கருணை அமுதம்
காக்கும் கரமும் பொழியும் அமுதம்
கீழோர் மேலோர் சாடா அமுதம்
தீரா பிணியும் அகற்றும் அமுதம்
பாரோர் துயரும் விலக்கும் அமுதம்
மனிதம் உணரும் மகிமை அமுதம்
கூடா நட்ப்பும் குறைக்கும் அமுதம்
சாடா நிலையும் நிறைக்கும் அமுதம்
வாரா வினைபயன் தருமம் நிலைக்கும்
பரமாசார்யரின் பதநிழல் அமுதம்
இனி வரும் காலம்
இனிதே உதயமாகட்டும்
வாழ்வில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிரம்பட்டும்
மகாபெரியவா என்றும் நம்முடன்
சுப சுப்ரபாதம் 🌹🌹🌹
சுப தினம் 💐💐💐
ஹரி ஓம் 🙏🙏🙏🙏🙏
ravi said…
ரங்க³நாதா²ஷ்டகம்

ஆனந்த³ரூபே நிஜபோ³த⁴ரூபே ப்³ரஹ்மஸ்வரூபே ஶ்ருதிமூர்திரூபே .
ஶஶாங்கரூபே ரமணீயரூபே ஶ்ரீரங்க³ரூபே ரமதாம்ʼ மனோ மே ..1..

காவேரிதீரே கருணாவிலோலே மந்தா³ரமூலே த்⁴ருʼதசாருசேலே .
தை³த்யாந்தகாலே(அ)கி²லலோகலீலே ஶ்ரீரங்க³லீலே ரமதாம்ʼ மனோ மே ..2..

லக்ஷ்மீநிவாஸே ஜக³தாம்ʼ நிவாஸே ஹ்ருʼத்பத்³மவாஸே ரவிபி³ம்ப³வாஸே .
க்ருʼபாநிவாஸே கு³ணப்³ருʼந்த³வாஸே ஶ்ரீரங்க³வாஸே ரமதாம்ʼ மனோ மே ..3..

ப்³ரஹ்மாதி³வந்த்³யே ஜக³தே³கவந்த்³யே முகுந்த³வந்த்³யே ஸுரநாத²வந்த்³யே .
வ்யாஸாதி³வந்த்³யே ஸனகாதி³வந்த்³யே ஶ்ரீரங்க³வந்த்³யே ரமதாம்ʼ மனோ மே ..4..

ப்³ரஹ்மாதி⁴ராஜே க³ருடா³தி⁴ராஜே வைகுண்ட²ராஜே ஸுரராஜராஜே .
த்ரைலோக்யராஜே(அ)கி²லலோகராஜே ஶ்ரீரங்க³ராஜே ரமதாம்ʼ மனோ மே ..5..

அமோக⁴முத்³ரே பரிபூர்ணநித்³ரே ஶ்ரீயோக³நித்³ரே ஸஸமுத்³ரநித்³ரே .
ஶ்ரிதைகப⁴த்³ரே ஜக³தே³கநித்³ரே ஶ்ரீரங்க³ப⁴த்³ரே ரமதாம்ʼ மனோ மே ..6..

ஸ சித்ரஶாயீ பு⁴ஜகே³ந்த்³ரஶாயீ நந்தா³ங்கஶாயீ கமலாங்கஶாயீ .
க்ஷீராப்³தி⁴ஶாயீ வடபத்ரஶாயீ ஶ்ரீரங்க³ஶாயீ ரமதாம்ʼ மனோ மே ..7..

இத³ம்ʼ ஹி ரங்க³ம்ʼ த்யஜதாமிஹாங்க³ம் புனர்னசாங்கம்ʼ யதி³ சாங்க³மேதி .
பாணௌ ரதா²ங்க³ம்ʼ சரணேம்பு³ கா³ங்க³ம் யானே விஹங்க³ம்ʼ ஶயனே பு⁴ஜங்க³ம் ..8..

ரங்க³நாதா²ஷ்டகம்ʼ புண்யம் ப்ராதருத்தா²ய ய꞉ படே²த் .
ஸர்வான் காமானவாப்னோதி ரங்கி³ஸாயுஜ்யமாப்னுயாத் ..

.. இதி ஶ்ரீமச்ச²ங்கராசார்யவிரசிதம்ʼ ஶ்ரீரங்க³நாதா²ஷ்டகம்ʼ ஸம்பூர்ணம்.
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நாமக்கல் நன்செய் இடையாறு திருஎயிலிநாதர் கோயில் பற்றிய பதிவுகள் :*

பாண்டவர்களில் பீமனால் போதிக்கப்பட்டு சோழர்களால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்தான் நன்செய் இடையாறு திருஎயிலிநாதர் திருக்கோயில். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

இவ்வூரை சுற்றி பெரும் தெய்வ கோயில்கள் சிறு தெய்வ கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், சுப்ரமணியராக ஆறுமுகம் கொண்டு வள்ளி தெய்வானையுடன் துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், சனி பகவான், பைரவர் மற்றும் காரிய சித்தி ஆஞ்சநேயர் உட்பட அனைத்து தெய்வங்களும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

இந்த தளத்தில் ஆழ்வார்களும் இடம் பெற்றுள்ளன. சுந்தரவள்ளியாக காட்சி அளிக்கின்றார். தாயார் இங்கு தல விருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது ஸ்ரீனிவாச பெருமாள் தனி சன்னதியில் தேவிகளுடன் காட்சியளிக்கின்றார். ஐந்து இடங்களில் சிவ பூஜை செய்த பீமனுக்கு எந்த தலத்தில் தான் அபிவிருத்தி தோஷம் நீங்கியதாக கூறப்படுகிறது.

பீமன் பிரதிஷ்டை செய்து தனக்கு ஏற்பட்ட துன்பத்தை போக்கிக் கொண்டதால் இந்த தலத்தில் சிவன் திருவேலீஸ்வரராக அருள்பாலிக்கின்றார். கோயிலில் உள்ள மூலவர் லிங்கம் பீமனால் மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால், தண்ணீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்தாலும் இந்த லிங்கம் கரையாமல் அப்படியே இருக்கும்.

ஆகவே இந்த லிங்கம் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தலத்தில் வழிபடுபவர்களுக்கு பல்வேறு தோஷங்கள் மற்றும் பாவங்கள் நீங்கி முக்தி உண்டாகும் என்பது ஐதீகம். மேலும் தொழில், கல்வி, திருமண தடை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு நலம் பெற முடியும். விசேஷ பூஜைகள் பிரதோஷம் கிருத்திகை, அஷ்டமி, சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

கிபி பத்தாம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது இக்கோயிலை முதலாம் இராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்றுகள் உள்ளன.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
பாதாரவிந்த சதகம் !

59.ததானோ பாஸ்வத்தாம்
அம்ருத நிலயோ லோஹித வபு:
வினம்ராணாம் ஸெளம்யோ
குருரபி கவித்வம் ச கலயன்
கதௌ மந்தோ கங்காதர
மஹிஷி காமாக்ஷி பஜதாம்
தம:கேதுர்மாத:தவ சரண
பத்மோ விஜயதே

கங்கையைத் தாங்குபவரின் பட்டமஹிஷியே ! தாயே ! காமாக்ஷி ! உன் திருவடியாகிற தாமரை, ஒளி மிக்க சூர்யனாக, அமுதத்தின் இருப்பிடமான சந்திரனாக, செந்திறமேனியனான செவ்வாயாக, வணங்குபவரிடம் மென்மை காட்டுகிற புதனாக, குருவான பிருஹஸ்பதியாக, கவிதை அருள்கிற சுக்கிரனாக, நடையில் மந்தனான சனியாக, இருட்டைக் கொடியாகக் கொண்ட (ராகுவும்) கேதுவுமாக, விளங்குகிறது.
ஒன்பது கிரகங்களும் தேவியின் திருவடியில் தன் தன் சிறப்புடன் அமைந்துள்ளனர்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
*17. எழுந்து வா! இறைவா!*

*திருப்பாவை-17ஆம் பாசுரம்:*

_அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்_
_எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்_
_கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!_
_எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!_
_அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த_
_உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்_
_செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!_
_உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்_ .

பசிக்கு உணவு;
பருக உதகம்;
உடுத்த உடை-
ஊருக்கு இவற்றை ஈந்தே-
உயிர்காத்து உதவும் வேந்தே!

நந்தகோபனே! எழுந்திராய்!
நாழி ஆயிற்று! எழுந்திராய்!

வஞ்சிக்கொடி போன்றவளே!
வரதனை ஈனாமல் ஈன்றவளே!

யாதவர் குலவிளக்கே!
யசோதை அன்னையே!
விழித்துக்கொண்டு எழுந்துவர-
வேண்டுகிறோம் உன்னையே!

உலகளந்த கண்ணனே!
உறக்கம் நீங்கி எழுந்து வா!
தேவர்களின் தலைவனே!
துயில் நீங்கி எழுந்து வா!

பொன்கழலை அணிந்தவனே!
பலராமா! எழுந்து வா!
பின்னோனுடன் எழுந்து வா!
பிரார்த்திக்கிறோம்! எழுந்து வா!

-S.நடராஜன், சென்னை
ravi said…
*கட்டைவிரல் இதயத்தில் கடவுள்!*

பெருமாள் பக்தன் ஒருவன், தன் பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான். பெருமாள் சயனத்தில் இருந்தார். அருகில், லட்சுமி அமர்ந்து அவரது கமலமுகத்தை மகிழ்வுடன் நோக்கியபடியே, திருவடிகளை பிடித்து விட்டுக்கொண்டிருந் தாள்.பக்தன் பெருமாள் முன் நின்று சேவித்தான்.
பூலோகத்தில், அவன் செய்த நன்மைகளைப் பாராட்டிய பெருமாள், பூலோகத்தில் எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் நீ. வைகுண்டத்திலும் இன்பவாழ்வு நடத்து, என்றார்.

பக்தன் அவரிடம்,பெருமாளே! எனக்கு பூலோகத்தில் இன்பமான வாழ்வு கிடைத்தது உண்மை. ஆனால், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை என்ற குறையுடன் இங்கு வந்துவிட்டேன், என்றான்.
அப்படியா! வைகுண்ட பதவியே பெறுமளவு தகுதி பெற்ற உனக்கு குறையேதும் இருக்கக்கூடாதே, சொல்...சொல்.
.உடனே தீர்த்து விடுகிறேன், என்றார்.

ஐயனே! நான் உலகில் வாழ்ந்த காலத்தில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற சர்ச்சையையே மக்கள் மத்தியில் அதிகம் பார்த்தேன்.
பூலோகத்தில் கடல், மலை என்றெல்லாம் பெரிது பெரிதாக இருக்க, இந்த மக்கள் தாங்களே பெரியவர்கள் என்று புகழ்ந்து கொள்கிறார்களே! உண்மையைச் சொல்லுங்கள். பூலோகத்தில் உயர்ந்தவர் யார்? என்றான்.
பெருமாள் சிரித்தார்.
பக்தனே! மக்கள் சொல்வது போல கடலும், மலையும் பெரிது தானே! என்றார்.
சுவாமி! உங்கள் கருத்துக்கு என்னிடம் விடை இருக்கிறது.கடலையே வாரிக் குடித்து விட்டார் குள்ள முனிவரான அகத்தியர். புராணங்களில் இதைப் படித்திருக்கிறேன். கிரவுஞ்ச மலையையே தகர்த்திருக்கிறார் தங்கள் மருமகன் முருகப்பெருமான்.நிலைமை இப்படியிருக்க, இவற்றை எப்படி பெரிதென ஒத்துக் கொள்ள முடியும்! பூலோகத்தில் தானே இவையெல்லாம் நடந்தன. எனவே, பூலோகத்தில் பெரியவர் என்று யாருமில்லை.பகவனாகிய தாங்களே பெரியவர், என்றான்.
இல்லை...இல்லை... நீ சொல்வது சரியல்ல. உலகில் பெரியவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் உன்னைப் போன்ற பக்தர்கள் தான்! அவர்களில் யார் மிக மிக உயர்ந்த பக்தி செலுத்துகிறார்களோ, என்ன நடந்தாலும் கடவுளே கதியென இருக்கிறார்களோ, எவ்வளவு சோகம் வந்தாலும், எல்லாம் என்னால் வந்தது என நினைக்கிறார்களோ அவரே உயர்ந்தவர் என்று பதிலளித்தார் பெருமாள்.
எப்படி? என்று தன் சந்தேகத்தை வெளியிட்ட பக்தன், தாங்கள் சர்வ வியாபி.வாமன அவதாரம் எடுத்த போது, பூலோகத்தை தங்கள் சிறுபாதம் கொண்டு ஒரே அடியால் அளந்து விட்டீர்கள். விண்ணை ஓரடியால் அளந்து உலைகையே வசமாக்கிக் கொண்டீர்கள். அப்படியிருக்க நீங்கள் தானே உயர்ந்தவராக இருக்க முடியும்? என திருப்பிக்கேட்டான்.
உடனே பெருமாள் ஒரு தட்டொளியை (தேவலோகக் கண்ணாடி) எடுத்து வரச்சொன்னார். அதன் முன்னால், அந்த பக்தனை நிறுத்தச் சொன்னார்.பக்தனே! அந்தக் கண்ணாடியில் உன் மார்பைப் பார், என்றார். பக்தன் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
ஏனெனில், பகவான் அவனது மார்புக்குள் சிறுஅளவில் குறுகி நின்றார்.
பார்த்தாயா! உலகையே அளந்த என்னை, உன் பக்தியால் உன் கையளவு இதயத்துக்குள் கட்டைவிரலளவாக மாற்றி வைத்துக் கொண்டாயே! எனவே நீ தான் பெரியவன், என்றார்.
பக்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நாமும் இறைவனை நம் இதயத்துக்குள் நிறுத்துவோம்.

அவனருள் பெற்று பிறப்பற்ற நிலையை அடைவோம்.

*இது போன்ற விஷ்ணுவின் ஆன்மீக கதைகளை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி விஷ்ணுவின் குழுவில் இணையுங்கள்*
👇👇
https://chat.whatsapp.com/CI5Bj32nY6rJ34WCW5PIjL
ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 51 started on 6th nov

*பாடல் 16 ... பேராசை எனும்*

(பேராசையில் கலங்குவது நியாயமா முருகா?)

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே
ravi said…
*ஓரா வினையேன் ..*

... என்றால் இப்படிப்பட்ட ஞான விசாரம் இல்லாதவன் என்று பொருள்.

இந்தப் போராசையை ஒழிக்க வல்லவன் முருகன்.

அவனே பேராசையின்
வடிவினனாகிய சூரபத்மனை அழித்தவன்.

இங்கு ஒரு விஷேச குறிப்பைக் கூட சொல்லலாம்.

முருகனே
குருநாதராக தோன்றி உபதேசம் செய்து, தான் அநுபூதி நிலையை
அடைந்த பின்னும் இதற்கு முன் பாட்டில்

.. உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய் ..

... என்று கேட்டு விட்டோமே?

இதுவும் ஒருவித பேராசைதானே என
உணர்ந்து மன்னிப்பு கேட்பதுபோலவும் இருக்கிறது.🙌🙌🙌
ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 51 started on 6th nov

*பாடல் 16 ... பேராசை எனும்*

(பேராசையில் கலங்குவது நியாயமா முருகா?)

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே
ravi said…
[01/01, 17:04] Jayaraman Ravilumar: *சிவானந்த லஹரீ*
*பதிவு 428*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
[01/01, 17:06] Jayaraman Ravilumar: இந்த ஸ்லோகத்துல, ஒரு சூரியனே கண்ணுக்கு, தெரியறானே,

நீங்கள் என்னுடைய அஞ்ஞானத்தை போக்கி என் முன்னால தரிசனம் தரவேண்டாமா?,

அப்படின்னு ஒரு, எவ்வளவு நைச்சியமா ப்ரார்த்தனை, பண்றார்.

என்னுடைய அறியாமை அவ்வளவு, அடர்த்தியா இருக்கு, சிவபெருமானே!,

அதை போக்கி, நீங்கள், எனக்கு காட்சி தரவேண்டும். அப்படின்னு, ஒரு ப்ரார்த்தனை.

இந்த பாவம் வந்துட்டதுன்னா, அந்த பக்தியே, படிப்படியா, ஞான வைராக்கியத்தை கொடுத்து, மேலான உயர் வர, உயர்நலமான மோக்ஷத்தையும் கொடுக்கும்.

அதனால் தான், ஆசார்யாள், அவ்வளவு பெரிய ஞானியா இருந்து, அவ்வளவு, வேதாந்தம் பேசினாலும், இந்த மாதிரி, பக்தி கிரந்தங்களை அனுக்கிரஹம் பண்ணி கொடுத்துருக்கார்.

இது மூலமாவே, நமக்கு அந்த தாபம் ஏற்பட்டா, அதுவே, ஒரு விதமான ஆத்மவிசாரம்தானே
ravi said…
[01/01, 16:53] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 432* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[01/01, 16:54] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[01/01, 16:56] Jayaraman Ravilumar: பிரம்மா ஆசைப்பட்டபடித் திருமாலின் தரிசனம் கிட்டியது.

இன்றும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் முகத்தில்
அத் தீக் காயங்களைக் காணலாம்.

இந்தச் சரித்திரத்தில், திருமாலைக் காண வேண்டும் என்பது
பிரம்மாவின் இலக்கு.

அந்த இலக்கை அடைவதற்கு வழியாகவும் திருமாலே இருந்தார்.

ஏனெனில் தியானம் செய்ய வழிகாட்டியது, அதற்கான இடத்தைத் தேர்வு செய்தது, விளக்கொளியாக வந்து இருளைப் போக்கியது,
ஆயுதங்களோடு வந்து அசுரரை வீழ்த்தியது,

சரஸ்வதி நதியாக வந்தபோது அவளைத் தடுத்தது இவை அனைத்தையும் திருமாலே செய்து,
இறுதியில் தன் தரிசனத்தையும் பிரம்மாவுக்கு வழங்கி விட்டார்.🙌🙌🙌
[01/01, 16:58] Jayaraman Ravilumar: இவ்வாறு தன்னை அடைவதற்கான வழியாகவும் தானே இருப்பதால் திருமால் ‘ *ஸித்த* :’ என்றழைக்கப்படுகிறார்.

உலகில் வேறெங்கும் அப்படிக் காண முடியாது.

சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்ல வேண்டுமெனில், இலக்கு – மதுரை,
அதற்கான வழி – நெடுஞ்சாலை.

ஆனால் திருமாலை அடையும் விஷயத்தில் இலக்கும் அவரே, அதை அடைவிக்கும் வழியும் அவரே.

“ *ஸித்தாய நமஹ”* என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 98-வது திருநாமத்தைத் தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
செல்லும் பாதையில் தடங்கல்கள் ஏற்படாமல் திருமால் காத்தருள்வார்.👏👏👏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 445* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*181 ம்ருத்யுமதநீ -*

ஸ்ரீ ருத்தரத்தில் வேண்டுதல் ஸ்லோகம் இது

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |

உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் ||

மரணபயம் நீக்குபவள்

மரகத மேனி கொண்டவள்

மாதுளம் நிறத்தவள் மாதவம் செய்தவள்

மடை திறந்த வெள்ளம் போல் அருளுபவள் ... 🪷🪷🪷
ravi said…
[01/01, 06:34] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 41*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
[01/01, 06:35] Jayaraman Ravilumar: संश्रितकाञ्चीदेशे सरसिजदौर्भाग्यजा ग्रदुत्तंसे ।

संविन्मये विलीये सारस्वतपुरुषकारसाम्राज्ये ॥ २५॥

25. Samsritha Kanchi dese sarasija dourbhagya jagard uthamse,

SAmvinmae vileeye saaraswatha purushakara samrajye.

ஸம்ஶ்ரிதகாஞ்சீதேஶே ஸரஸிஜதௌர்பாக்யஜாக்ரதுத்தம்ஸே |

ஸம்வின்மயே விலீயே ஸாரஸ்வதபுருஷகாரஸாம்ராஜ்யே ||25||🙌🙌🙌🙌🙌
ravi said…
நகரங்களில் சிறந்த காஞ்சிபுரத்தை அடைந்தவன், அங்கே என்ன பார்த்தேன்?

விடியற் காலையில் சூரியன் உதயத்தில் காத்திருந்து மொட்டவிழ்ந்து கண் திறந்த மலர்கள், இரவில் சூரியன் மறைந்ததும், தாமும் கண்களை மூடிக்கொள்கிறது.

சூரியன் நண்பன், சந்திரன் வேண்டாதவன்.

காஞ்சி கம்பாநதி தீரத்தில் காமாக்ஷி அம்பாள் சூரியன் போல ஜொலிக்கிறாள், ஒளிர்கிறாள்.

சந்திரனை பார்க்க தேவையில்லை. அவளே சந்திர பிம்பம் தானே என்று சொல்வதை விடை சந்திரன் ஒளி பெறுவது அவளாலே என்று சொல்லலாம்.

இந்த பிரதேசமே அம்பாளின் சாம்ராஜ்யம். அவள் தான் மஹா ராணி. ஆட்சி புரிபவள்.

மதுரையை அரசாளும் மீனாக்ஷி போல் காஞ்சியை அரசாளும் காமாக்ஷி.🙌🙌🙌
ravi said…
ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே!

தாங்கள் எழுந்தருள வேண்டும்.

கொடி போன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே!

மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே!

நீ எழ வேண்டும்.

விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே!

நீ கண் விழிக்க வேண்டும்.

செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே!

நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.

கண்ணா புத்தாண்டு பிறந்து விட்டது ...

புதிய நம்பிக்கை மலர்ந்து விட்டது ...

முத்துக்கள் வெடிக்க மாணிக்கம் குடை பிடிக்க மற்ற நவரத்தினங்கள் அணி வகுக்க ஆதவன் அழகுடன் சிரிக்கிறான் ...

வானம் சிவக்க வெள்ளி முளைக்க நீ மட்டும் கண் அயர்தல் நியாமோ கண்ணா ... ?

உன் தாமரை கண்கள் மலர அதில் சொரியும் கருணை எனும் தேனை பருக வந்துள்ளோம் ..

உன் கருணை இந்த புது வருடம் அதில் புத்துணர்ச்சி ஆரோக்கியம் தரவேண்டும் எல்லோருக்கும் கண்ணா ...

வேறு ஏதும் அறியேன் ஹரியே கண் மலராய்🙌🙌🙌
ravi said…
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா!
எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே!

உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா!

பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.🙌🙌🙌
ravi said…
2023 ஆம் ஆண்டு, நாட்டிலும், உலகிலும் என்ன நடந்தாலும், உங்கள் வீட்டில் ஆனந்தமும், அமைதியும் நிறைந்து இருக்க என் நல் வாழ்த்துக்கள்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

சைவ க்ஷேத்ரங்கள் அளவுக்குக் காவேரிக் கரையில் வைஷ்ணவ க்ஷேத்ரங்கள் இல்லாவிட்டாலும், சைவத்துக்கும் இல்லாத ஒரு சிகரமான பெருமையை வைஷ்ணவ ஸம்பந்தப்படுத்தியே பிள்ளையார் காவேரிக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். என்னவென்றால், சைவர்கள் தங்கள் க்ஷேத்ரங்களுக்குள் முதலிடம் கொடுத்துக் 'கோயில்' என்றே குறிப்பிடுவது சிதம்பரம். அது காவேரிக்கரையில் இல்லை. வைஷ்ணவர்கள் இதே மாதிரி 'கோயில்' என்று முதல் ஸ்தானம் தந்து சொல்கிறது ஸ்ரீரங்கம். அதுதான் காவேரிக்கே ஜீவ மத்யமான ஸ்தானத்தில் இருக்கிறது. 'உபய காவேரி' என்பதாக இருப்பக்கமும் காவேரி நதி சூழ, 'காவேரி ரங்கன்' என்றே கியாதி பெற்றிருக்கிற பெருமாள் அங்கே பள்ளி கொண்டிருக்கிறார்.
அந்த ரங்கராஜா எப்படி அங்கே வந்தார்? விக்நேச்வரர் பண்ணிய லீலையால்தான்!

ravi said…
இக்ஷ்வாகு வம்சத்தினர் வழிவழியாகப் பூஜித்து வந்த ஸ்ரீ ரங்கநாத விக்ரஹத்தை ராமசந்திர மூர்த்தி விபீஷணருக்குக் கொடுத்துவிட்டார். அது அவருடைய நன்றி பாராட்டும் பெரிய மனஸுக்கும் தியாகத்துக்கும் ஒரு பெரிய 'ப்ரூஃப்'. அயோத்தியில் நடந்த ஸ்ரீராம பட்டாபிஷேகத்தில் எல்லா வானரர்களும் ராட்சஸர்களும் கலந்து கொண்டுவிட்டு அப்புறம் தங்கள் தங்கள் ஊருக்குப் புறப்பட்டார்கள். அப்போது ராமர் அவர்கள் தனக்குச் செய்த ஸஹாயத்தை நன்றியோடு நினைத்து, அவர்களுக்குப் பொன்னையும் பொருளையும் வாரிவிட்டு வெகுமதிகள் கொடுத்தார். இவருக்குக் கைங்கர்யம் செய்ய அவர்களுக்குக் கொடுத்து வைத்திருந்ததே பெரிய வெகுமதி, பாக்கியம் எல்லாம். ஆனால் அவருடைய உசந்த குணம் அவர்களிடம் நன்றி பாராட்டி வெகுமதிகள் கொடுத்தார். இவரால்தான் ஸுக்ரீவனும், விபீஷணனும் ராஜாக்களாக ஆனதே. ஆனால் அவர்களுக்குத் தாம் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவே ஸ்வாமி நினைத்து, ராஜாராமரானவுடன் பெரிசாகப் பரிசுகள் தந்தார். முக்யமாக நவரத்னாபரணங்கள், பீதாம்பராதிகள் தந்தார்.

ravi said…
விபீஷணருக்கு மட்டும் அது போதாது, அதற்கு மேல் ரொம்ப உசந்த ஒன்று தரணும் என்ற எண்ணினார். ஏனென்றால் அண்ணாவைத் தியாகம் செய்துவிட்டு ராமரே ஸர்வமும் என்று அவர் காலில் வந்து விழுந்தவர் விபீஷணர். சரணாகதருக்கு உதாரணமாக அவரையே சொல்வது. விபீஷணருக்கும் ஸுக்ரிவனுக்கும் ஒரு பெரிய வித்தியாஸம் சொல்கிறதுண்டு:பெண்டாட்டியையும் கிஷ்கிந்தா ராஜ்யத்தையும் தனக்குப் பெற்றுக்கணும் என்றே ஸுக்ரீவன் ராமரிடம் வந்து விழுந்தது, விபீஷணர்தான் கார்யார்த்தமாக இல்லாமல் நிஜமான சரணாகதி செய்தது என்பார்கள். அதோடு, ராமசந்த்ரமூர்த்தி தன்னுடைய சரணாகத ரட்சணத்தை ப்ரகடனப் படுத்திக்கொண்டு ஸத்யப் பிரதிக்ஞையாகவே ஸகலருக்கும் வாக்குக் கொடுக்கும்படியான வாக்கியத்தைச் சொல்ல வைத்தவரும் விபீஷணரே. அவர் நிஜமான சரணாகதராக வந்திருந்த போதிலும் ராமரைச் சுற்றியிருந்தவர்கள் - ஹநுமார் ஒருத்தரைத் தவிர ஸுக்ரீவன், அங்கதன் முதலானவர்கள் - அவரை ஸந்தேஹித்துப் பேசினார்கள். அதனாலேயே, நல்ல பக்திமானை

ravi said…
ஸந்தேஹிக்கிறார்களே என்பதில் ராமருக்கு உண்டான உணர்ச்சி வேகத்திலே அவர் பெரிசாக ஸத்யப் பிரதிக்ஞை பண்ணிவிட்டார்:" 'நான் உன்னைச் சேர்ந்தவன்' என்று ஒருத்தன் ஒரே ஒரு தரம் சொல்லி என்னை யாசித்துவிட்டாலும் போதும், அவனுக்கு லோகத்தில் எது ஒன்றாலும் பயம், அதாவது கஷ்டம் ஏற்படாதபடி அபயம் தந்து ரட்சிப்பேன். இதுவே என் ஜீவித விரதம்" என்று ஒரு ஆவேசத்தில் சொல்லிவிட்டார்:

"ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே 1

அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் - வ்ரதம் மம 11"

ravi said…
அப்பேர்ப்பட்ட பக்திமானுக்கு ரொம்பப் பெரிசாக ஒன்றைத் தரவேண்டும் என்று ராமர் இப்போது பட்டாபிஷேகம் பண்ணிக்கொண்ட ஸமயத்தில் நினைத்தார். பரமத் தியாகியான அவராலேதான் அப்படிப் பண்ண முடியும் என்கிற மாதிரி, என்ன செய்தாரென்றால் இக்ஷ்வாகு வம்ச குலதனமாக, குலதேவதையாக, வழிவழியாகப் பூஜை பண்ணிக்கொண்டு வந்திருந்த ரங்கராஜா விக்ரத்தையே ப்ரணவாகாரமான விமானத்தோடுகூட விபீஷணருக்குக் கொடுத்துவிட்டார். கொடுத்து, லங்கைக்குத் திரும்ப அனுப்பிவிட்டார்.

ravi said…
விக்ரஹத்தோடு புறப்பட்ட விபீஷணர் அயோத்தியிலிருந்து தெற்காக ரொம்ப தூரம், அயோத்தியிலிருந்து பார்க்கிறபோது ஏறக்குறைய தேசத்தின் தெற்கோரத்தில் இருக்கிற உபய காவேரிக்கு வந்துவிட்டார்.

அதுவரை சும்மாப் பார்த்துக்கொண்டிருந்த விக்நேச்வரர்தான் சட்டென்று அப்போது, "இந்த பாரத தேசத்தை, தமிழ் தேசத்தை, ரமணீயமான இந்தக் காவேரித் தீவை விட்டுப் பெருமாள் போகவாவது?" என்று நினைத்தார். மாய விளையாட்டெல்லாம் பண்ணி, ரங்கநாதர் அந்த இடத்திலேயே அசைத்தெடுக்க முடியாதபடி ப்ரதிஷ்டை ஆகும்படிச் செய்துவிட்டார். என்ன செய்தாரென்றால்...

"
ravi said…
விமான விக்ரஹங்களை பூமியில் எங்கேயும் வைக்கப்படாது. எங்கே கீழே வைத்தாலும் அங்கேயே அது நிலையாக ப்ரதிஷ்டை ஆகிவிடும். அதனால் நேரே லங்காபுரிக்கே அதைக் கொண்டு போய் அங்கேதான் கீழேவைக்கணும்" என்று ராமர் சொல்லியினுப்பியிருந்தார்.

விக்நேச்வரர் என்ன பண்ணினார் என்றால், காவேரி அலை புரட்டிக்கொண்டு போகிற அழகைப் பார்த்ததும் விபீஷணருக்கு அதிலே ஸ்நானம் பண்ணணும் என்ற ஆசை தோன்றும்படிப் பண்ணினார். தாமும் ஒரு ப்ரஹ்மசாரிப் பையனாக அங்கே போய் நின்று கொண்டார். ஸாதுப் பிள்ளை, சமர்த்துப் பிள்ளை என்று தோன்றும்படியான ரூபத்தோடு நின்று கொண்டார்.

"
ravi said…
அப்பா, கொழந்தே!நான் ஸ்நானம் பண்ணிட்டு வரவரையிலே இதை c பூமியிலே வெச்சுடாம, கையிலேயே வெச்சுக்கறயா?" என்று விபீஷணர் கேட்டார்.

"அப்படியே பண்றேன். ஆனாலும் எனக்குக் கை கனத்துப் போனா என்ன பண்றது? மூணு தரம் ஒங்களைக் கூப்பிடறேன். அப்டியும் நிங்க வல்லேன்னா கீழே வெச்சுப்புடுவேன்" என்று விக்நேச்வரர் சொன்னார்.

"ஆனா ஸரி" என்று விபீஷணரும் ஒப்புக் கொண்டார். விக்நேச்வரர் என்ன பண்ணினார் என்றால், விபீஷணர் பிரவாஹம் கண்ட உத்ஸாஹத்தில் காவேரிக்குள் ரொம்ப தூரம் நீச்சலடித்துப் போய்விட்ட ஸமயம் பார்த்து, சட் சட் என்ற அவர் மூன்று தரம் கூப்பிட்டார்.

அவர் அதற்குள் வரமுடியவில்லை.

"நான் சொன்னபடி கூப்டுட்டேன். நீங்க சொன்னபடி வரல்லை. கனம் தாங்காம இதோ பூமியிலே வெச்சுட்டேன்" என்ற சொல்லிக்கொண்டு உபய காவேரி மத்தியிலிருந்த திட்டில் விக்ரஹத்தை வைத்துவிட்டார்.

ravi said…
விக்ரஹம் அங்கேயே அப்படியே ஆழமாக ப்ரதிஷ்டை ஆகிவிட்டது.

கதையைப் பார்த்தால் அதுவரை நல்ல பலிஷ்ட பாலர் ஒருத்தர் கையிலே தாங்கி கொள்கிற அளவுக்கே - (சிரித்து) Portable size என்கிறார்களே, அப்படித்தான்- விக்ரஹமும் அதற்கான விமானமும் சேர்ந்தே இருந்திருக்கணும் என்று ஆகிறது. இக்ஷவாகு வம்ச ராஜாக்கள் தாங்களே பண்ணுகிற தங்களது அகத்துப் பூஜையில் வைத்துக்கொண்டிருந்தார்கள் என்றால், அப்படித்தானே (சிறிய அளவினதாக) இருந்திருக்கணும்?

ravi said…
இப்போது காவேரிக் கரையில் வைத்தபின்தான், பெருமாளும் க்ஷீரஸாகரமா யில்லாவிட்டாலும் மஹாநதியாக இருக்கிற இடத்தில் ஸந்தோஷப்பட்டுக்கொண்டு பெரும் ஆளாகவே நன்றாக நீள நெடுக ஆக்ருதி எடுத்துக்கொண்டிருக்கணும். அதே மாதிரி விமானமும் பெரிசான ஆலய ஸந்நிதியாக ஆகியிருக்கணும்.

ravi said…
வேக வேகமா ஸ்நானம் முடித்து ஓடிவந்த விபீஷணருக்கு ஒரே ஏமாற்றமும் கோபமுமாக வந்தது. 'கீழே வைக்கப்படாது என்று 'கன்டிஷ'னாயிற்றே, இந்த பிள்ளை வைத்து விட்டதே!என்ன ஆயிருக்குமோ?' என்று விசாரப்பட்டுக் கொண்டு விக்ரஹத்தை பூமயிலிருந்து எடுக்கப்போனார். ஆனால் அவர் எத்தனை பிரயத்னம் செய்தும் விக்ரஹம் அசைந்தே கொடுக்காமல் பூமியிலே நன்றாகப் பதிந்துவிட்டிருந்தது. விபீஷணருக்கு ப்ரஹ்மசாரிப் பிள்ளை மேல் கோபம் கோபமாக வந்தது. அவரைக் குட்டுவதற்காகக் கையை மடக்கிக்கொண்டு வந்தார். பிள்ளையார் ஒட்டமாக ஒட, "விட்டேனா பார்" என்று விபீஷணரும் துரத்தினார். மலைக் கோட்டை உச்சிக்குப் போய்விட்ட பிள்ளையார் தாமே மனஸ் இரங்கி விபீஷணருக்குப் பிடிபட்டார். பகவானாக நமக்குப் பிடிபட்டால்தான் உண்டே தவிர, நாமாக ஸொந்த பலத்தால் அவரைப் பிடித்துவிடமுடியுமா என்ன? யசோதைக்கூடப் பாடாகப் படுத்தின பாலக்ருஷ்ணமூர்த்தியை உரலில் கட்டிப் போடப் போய், எத்தனை கயிறும் போதாமல் வேர்த்து விருவிருத்துத் தினறின போது, பகவானேதான் மனஸ் இரங்கி கயிற்றைப் போதும்படியாக்கி அவள் தன்னை உரலோடு சேர்த்துக் கட்டிப் போடும்படிப் பண்ணினான் என்றுதானே பாகவதத்தில் இருக்கிறது?

பிள்ளையார் விபீஷணருக்குப் பிடிபட்டு அவர் தன்னுடைய சிரஸில் குட்டுவதற்கும் பரம கருணையோடு காட்டிக்கொண்டிருந்தார். எல்லாரையும் எவர் குட்டுப் போட்டுக்கொள்ள வைக்கிறாரோ, அவரே அப்போது தனக்குக் குட்டு வாங்கிக்கொண்டார்.

அந்த க்ஷணமே பிரம்மசாரி ரூபம் மாறி விக்நேச்வர மூர்த்தியாகி தர்சனமும் கொடுத்தார்.

அந்த தர்சனத்திலேயே விபீஷணருடைய ஏமாற்றம், துக்கம், கோபம் எல்லாம் பாதிவாசி சமனமாகிவிட்டது. பாக்கிப் பாதியும் சமனமாகும்படியாக விக்நேச்வரர், அவரிடம், "பெருமாளை நான் லங்கைக்குப் போக விடவில்லையே என்று வருத்தப்படாதே. இங்கே இருந்தபடியே அவர் லங்கையைப் பார்த்து அநுக்ரஹம் பண்ணும்படியாகத்தான் அவரை நான் வைத்திருக்கிறேன். தெற்குப் பார்க்கப் பெருமாளை ப்ரதிஷ்டை செய்கிற வழக்கமே இல்லாவிட்டாலும் நான் இங்கே அப்படித்தான் வைத்திருக்கிறேன்" என்றார்.
ravi said…
நினைவும் அமுதம் அணைவும் அமுதம்
நிதமும் அமுதம் நிகழ்வும் அமுதம்
பதமும் அமுதம் பரமும் அமுதம்
காஞ்சீ கனலின் கருணை அமுதம்
காக்கும் கரமும் பொழியும் அமுதம்
கீழோர் மேலோர் சாடா அமுதம்
தீரா பிணியும் அகற்றும் அமுதம்
பாரோர் துயரும் விலக்கும் அமுதம்
மனிதம் உணரும் மகிமை அமுதம்
கூடா நட்ப்பும் குறைக்கும் அமுதம்
சாடா நிலையும் நிறைக்கும் அமுதம்
வாரா வினைபயன் தருமம் நிலைக்கும்
பரமாசார்யரின் பதநிழல் அமுதம்
இனி வரும் காலம்
இனிதே உதயமாகட்டும்
வாழ்வில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிரம்பட்டும்
மகாபெரியவா என்றும் நம்முடன்
சுப சுப்ரபாதம் 🌹🌹🌹
சுப தினம் 💐💐💐
ஹரி ஓம் 🙏🙏🙏🙏🙏
ravi said…
ஆயுதங்கள் என் செய்யும் உன் விழியின் கூர்மை உண்டோ அதற்கு ...

வேல் விழி கொண்டவளே

வேழம் என் செய்யும் பவழம் போல் வேழம் ஒன்றை ஈன்றவளே

மந்தம் கொண்ட அரக்கர்கள் என்னை தாக்கினும் என்ன் பயம் ...?

உன் மந்தாஸ்மிதம் கவசம் என இருக்கையில்

பிரம்மன் அடித்து எழுதும் என் விதி என் செய்யும் ?

உன் திருவடிகள் தீயாய் அதை அழித்து உன் நாமம் எழுதுகையில் ...

புதியவளே புத்தாண்டு தனில் வேண்டுவது ஒன்றே

எல்லோரும் உனை போல் என்று சிரித்து வாழவேண்டும் ...

உனை வணங்கும் யோக்கியம் பெற்றே ஆரோக்கியம் கொண்ட வாழ்வு வாழவேண்டும் 🙌🙌🙌
ravi said…
*68 சக்ரராஜ ரதாரூட சர்வாயுத பரிஷ்க்ருதா =*

அனைத்தாயுதங்களும் தாங்கி சக்ரராஜம் எனும் தனது தேரிலேறி பெரும் சேனையை அணிசெய்திருப்பவள்
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

💐💐💐
ravi said…
தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே!

செந்தாமரைக் கண்ணனான நாராயணன்,

பிரம்மா, பிற தேவர்கள்

யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாகிய அருணாசலன் இதோ!

வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான்.

அவனது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான்.

அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் அருணாசலனை வணங்கி

நலம் பல பெறும் பொருட்டு,

தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் பாய்ந்து நீராடி

அவன் தரிசனம் காண தயாராவோம்.

*புத்தாண்டு பிறந்து விட்டது ...*

புலன்கள் எல்லாம் அவன் புகழ வேண்டாமோ ?

எல்லாம் அவனிடம் சேரும் ஒருநாள் ..

இருளை விழுங்கும் கதிரவன் நம் மனத் தாமரையை மலர செய்தே மாண்பு தருவான் ...

பணிமின் அவனை கண்டீர் அமராவதி அளுகைக்கே ... 🙏🙏🙏
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

27 –
சகலமும் விழுங்கும் கதிர் ஒளி இன(ன்)

மன
சலசம் அலர்த்தியிடு அருணாசலா (அ)
ravi said…
முகுந்த மாலையில நேத்திக்கு 39, 40வது ஸ்லோகங்களில் பகவானுடைய நாமங்களை அடுக்கி இப்பேற்பட்ட இனிமையான நாமங்களை சொல்ல முடிஞ்சாலும் சொல்ல மாட்டேங்கறாளேன்னு இரண்டு ஸ்லோகங்கள்

ஸ்ரீனாத² நாராயண வாஸுதே³வ ஸ்ரீக்ருʼஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே ।

ஸ்ரீபத்³மனாபா⁴ச்யுத கைடபா⁴ரே ஸ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥ 39 ॥

அனந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ।

வக்தும் ஸமர்தோ²ऽபி ந வக்தி கஸ்சித் அஹோ ஜனாநாம் வ்யஸனாபி⁴முக்²யம் ॥ 40॥

ன்னு ஜனங்களைப் பத்தி சொல்றார்
ravi said…
🌹🌺" *இறைவா! நீ மட்டும் போதும்." என்று அர்ஜுனனைப் போல் நாம் அவனையே வேண்டி பெற்றால், நம் ஜென்மம் கடைத்தேறி விடும்.🌹🌺... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺 ''ஒரு ஊரில் ரோஹித் எனும் திருடன் இருந்தான்
அவன் திருடாத இடமே இல்லை.
அவன், மக்களுக்குக் கடும் அவதியை தந்ததால் ஊர் மக்கள் அனைவரும் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.

🌺ரோஹித் திருடன் யாரிடமும் சிக்காமல் தப்பித்து வந்ததால் அரசர், இந்த திருடனை பிடித்துத் தந்தால் ருபாய் ஐந்து லட்சம் என அறிவித்தார். மந்திரி தேடிச் செல்லும் போது அந்த திருடன் அவரிடம் வசமாக மாட்டிக் கொண்டான்.

🌺மந்திரி ஒரு சூழ்ச்சி செய்தார்.
"உன் தலைக்கு ராஜா ஐந்து லட்சம் என கூறியுள்ளார். நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது லட்சம் தருகிறேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கிறேன்." என உறுதி அளித்தார்.

🌺"சரி"என திருடன் ரோஹித் சம்மதித்தான்.
அந்த திருடனுக்கு திருநீறும் ருத்ராட்சமும் அணிவித்து, ஒரு சன்யாசி போல் வேடமிட்டார் மந்திரி.
பின் அவனிடம்,
"நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இரு.

🌺ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் என்று சொல்.
கடைசியாக அவர் தன் ராஜ்ஜியத்தில் பாதியை உனக்கு தானமாக தருவார். அதை வாங்கி என்னிடம் தா,
நான் உனக்கு பேசியது போல் இருபது லட்சம் தருவேன்." என சொன்னார்.

🌺பின் அந்த மந்திரி, ராஜாவிடம் சென்று, "பற்றுகளை விட்டு மரத்தடியில் அமர்ந்துள்ள ஒரு சன்யாசியை கண்டுள்ளேன். அவரை தரிசித்து தங்களின் மனக் கவலையை நீக்கிக் கொள்ளுங்கள்." என்றார்.

🌺அரசர் சென்று மரத்தடியில் இருந்த அந்த சன்யாசி (திருடன்)யின் காலில் விழுந்து வணங்கி, "ஐயா, தங்களுக்கு தானமாக ஒரு லட்சம் பொன்மாலை தருவேன் அதை எற்றுக்கொள்க." என்றார்.

🌺சன்யாசி ரோஹித் , "வேண்டாம்". என்றார். பின் ஐந்துலட்சம், பத்து லட்சம். இருபது லட்சம், ஐம்பது லட்சம், உயர்ந்த நகை, பணம், என தானமாக தந்தார்.

🌺சன்யாசி எதுவுமே வேண்டாம் என்றார். பின் ராஜா, "நீயே சத்தியசீலன்! என் ராஜாங்கத்தில் பாதியை தங்களுக்கு தானமாக தருகிறேன்.
நீங்கள் அதை பெற்றுக் கொண்டு எனை வாழ்த்த வேண்டும்." என்றார்.

🌺இப்போது மந்திரிக்கு ஏக சந்தோஷம்!
நாம் சொன்னது போலவே நடிக்கிறான் என தன் மனதுக்குள்ளே சிரித்து மகிழ்ந்தார்! ஆனால்
சன்யாசி இதற்கும் வேண்டாம் என்றார்.

🌺மந்திரி முகம் மாறி விட்டது. "அடப்பாவி!
வேண்டாம் என்று சொல்லி விட்டானே,
இவனை இப்போது திருடன் எனவும் நாம் சொல்ல முடியாது,
என்ன செய்வது?" என மனத்துக்குள்ளே குழம்பி நிற்க,
கடைசியாக ராஜா தன் மகளையே சன்யாசிக்குத் திருமணம் செய்து தருகிறேன் என கூறினார்.

🌺அதற்கு அந்த சன்யாசி, "அரசே!
நானோ பற்று அற்றவன் எனக்கு எதுக்கு இது எல்லாம்? வேண்டாம்!" என்றார். "நீரே உண்மையான பற்றற்ற ஞானி!" என அவரை விழுந்து வணங்கி சென்றார் அரசர்.

🌺அதன் பின் அந்த மந்திரி வந்து, "ஏன்டா வயத்துல இப்படி மண் அள்ளி போட்டு விட்டாயே, இது நியாயமா?" என சண்டை போட்டார்.அதற்கு அந்த சன்யாசி,

🌺"ஐயா நான் திருடன் தான். எப்போது நீங்கள் என் மீது திருநீறும் ருட்த்ராட்சமும் தரித்தீர்களோ,
அப்போதே என் மனம் மாறிவிட்டது.
மேலும் என் தலைக்கு ஐந்து லட்சம் என விலை வைத்த ராஜா, என் கோலத்தை பார்த்து என் காலில் விழுந்தார்.

🌺அந்த பணிவு எனக்காக அல்ல, என் மேல் உள்ள இருந்த திறுநீறுக்கும் ருத்ராட்சத்துக்கும் தான்.
நான் எதை வேண்டாம் வேண்டாம் என்று சொன்னேனோ அதை விட உயர்வான பொருள் தான் எனக்கு கிடைத்தது.

🌺விலை மதிப்புள்ள உலகியல் பொருட்களை எல்லாம் நான் வேண்டாம் என்றால், விலை மதிப்பில்லா அந்த இறைவன் எனக்கு கிடைப்பான், என்பதை புரிந்து கொண்டேன்.

🌺அதுதான் எனக்குத் தேவை." என்றார் அந்த சன்யாசி.இந்த புரிதல் தான் வாழ்வின் ரகசியம். நம் பிறவிப் பயன்.
நாம் இறைவனை கருவியாக வைத்து, இறைவனிடத்தில் உள்ள ஐஸ்வர்யங்களை கேட்கிறோமே தவிர அவரை கேட்பதில்லை.

🌺"இறைவா! நீ மட்டும் போதும்." என்று அர்ஜுனனைப் போல் நாம் அவனையே வேண்டி பெற்றால், நம் ஜென்மம் கடைத்தேறி விடும்.🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 "Lord! You alone are enough." If we pray to him like Arjuna, our life will end.
-------------------------------------------------- ------
🌹🌺 ''There was a thief named Rohit in a town
There was no place he did not steal.
As he caused great suffering to the people, all the people of the town went to the king and complained.

🌺 As Rohit the thief escaped without being caught by anyone, the king announced a reward of five lakh rupees if this thief is caught. While searching for the minister, the thief got hold of him.

🌺 The minister made a trick.
"The king has said five lakhs for your head. If you do as I say, I will give you twenty lakhs, and let you escape too." He assured.

🌺 "Okay" Thief Rohit agreed.
The minister disguised himself as a sanyasi by dressing the thief with Thirunee and Rudraksha.
Then to him,
"You sit quietly under this tree.

🌺 The king comes and says no to whatever he gives.
Finally he will give you half of his kingdom. Buy it and give it to me.
I will give you twenty lakhs as I said."

🌺Then the minister went to the king and said, "I have seen a hermit sitting under a tree without his bonds. Visit him and get rid of your mental worries." said.

🌺 The king went and bowed down at the feet of that sanyasi (thief) who was under the tree and said, "Sir, I will give you one lakh gold necklace as alms, take it." said.

🌺Sanyasi Rohit, "No". said. Then five lakhs, ten lakhs. He donated twenty lakhs, fifty lakhs, precious jewels and money.

🌺 Sanyasi said he didn't want anything. Then the king said, "You are Satyaseelan! I will give you half of my kingdom as alms.
You should receive it and congratulate me."

🌺 Now the minister is very happy!
He was laughing and happy in his heart as he was acting as we told him! But
Sanyasi said no to this too.

🌺 Minister's face has changed. "Innocent!
If you say no,
We cannot call him a thief now.
What to do?"
At last the king said that he would give his daughter in marriage to the sanyasi.

🌺 To that the ascetic said, "O king!
What is all this for me who is non-attached? "Don't!" he said. "You are a true non-attached sage!" The king fell down and worshiped him.

🌺 After that the minister came and said, "Why did you put mud like this in your old age, is this fair?" And he fought. That ascetic,

🌺 "Sir, I am a thief. When you showered me with Thirunei and Rudraksha,
Then my mind changed.
And the king, who had put a price of five lakhs on my head, fell at my feet on seeing my golam.

🌺 That humility is not for me, but for Thiruneeru and Rudraksha above me.
I got something higher than what I said I didn't want.

🌺I understood that if I don't want all the worldly things of value, the priceless Lord will be available to me.

🌺That's what I need." Said the Sanyasi. This understanding is the secret of life. The purpose of our birth.
We use the Lord as an instrument and ask for the riches of the Lord but not Him.

🌺 "Lord! You alone are enough." If we pray to him like Arjuna, our life will end.🌹🌺

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *நமக்காக தூக்கத்தை கூட தொலைத்து விட்டு இரவில் விழித்திருந்த தெய்வம் .. "அம்மா"..என்பதை ..விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺உலகில் நம் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன் அம்மா மட்டுமே....ஒரு தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால், எதற்காகவும் நம் தாயை இழக்கக்கூடாது..

🌺விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்..

🌺படிப்ப விட அப்பா அம்மா ஒசத்திதான். அதனாலதான் இன்சியல முதல்லயும், படிப்ப கடைசியிலும் எழுதுறோம்..!!

🌺ஹலோ' சொன்னதும் "என்னடா உடம்பு சரியில்லையா" என்று கேட்கும் அம்மாவிடம் தோற்றுப் போகின்றனர் உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும்..!!*

🌺தாய் தந்தையாரின் அருமை நீ வளரும் போது தெரியாது.. உன் பிள்ளையை நீ வளர்க்கும் போது தான் தெரியும்...

🌺புரண்டு படுத்தால் நாம் இறந்துவிடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட தொலைத்து விட்டு இரவில் விழித்திருந்த தெய்வம் .. "அம்மா"*

🌺வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் மட்டும்..!!

🌺 பணம், நகை வேணுமான்னு கேக்க தேவையில்லை.. சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சோறு போடும்மா என்று கேட்டாலே போதும்..

🌺ஒரு தாய் தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை.. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை...

🌺மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது அல்ல பழமொழி....மாதா, பிதா, குரு இவர்கள் மூவருமே தெய்வம் என்பது தான் பழமொழி... அன்னையே தெய்வம்...ஆம்... எல்லா பெண்களும் தெய்வத்திற்கு சமம்

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺" A simple story that explains the goddess who was awake at night even losing sleep for us 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Mother is the only life in the world who is not jealous of our growth.... We can lose anything for a mother.. But we should not lose our mother for anything..

🌺 The mother in the nursing home is happy to think that it is her son who thinks when he has hiccups..

🌺 Father and mother are busy rather than studying. That's why we write at the beginning and at the end of reading..!!

🌺All the doctors in the world lose to mom who asks "what's wrong" after saying hello..!!*

🌺 You don't know the beauty of parents when you grow up.. You only know when you raise your child...

🌺 The goddess who was awake at night even losing sleep for us in the womb lest we die if we turn it upside down .. "Mother"*

🌺 Spoke without words.. Enjoyed without eyes.. Breathed without air.. Lived without worries.. Only in my mother's womb..!!

🌺 You don't need to ask if you want money or jewelry.. Just ask if you want some more rice while eating..

🌺 Man never realizes what a mother has done for him till the end.. When he realizes it she is not alive...

🌺Mother, Father, Guru, Goddess is not the proverb...Mata, Pitha, Guru all these three are goddesses is the proverb...Mother is goddess...yes...all women are equal to goddess.

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

28 –
சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவா யான்

சாந்தமாய்ப் போவன் அருணாசலா (அ)
ravi said…
சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும்

விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் மாயமாய் மறையும் அன்றோ

அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன அன்றோ

பெண்ணாகவும், ஆணாகவும், பெண்மைக்கு தன் சரி பாதி உடம்பை தந்தவனும் முப்பிரிவாகவும் திகழும் அவன்

வானமாகவும், பூமியாகவும்,

இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறான் அன்றோ

கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி,

பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராட வாரீரோ .

நமக்கு சிறந்த உணவு அவன் திருநாமம் ஒன்றே அன்றோ ...

*வாயில்* அதை போட்டு *பக்தி* எனும் பற்களால் நற நற வென்றே கடித்து

சரணாகதி எனும் *உமிழ் நீரில்* அரைத்த அவன் நாமம் அதை சேர்த்து

*நாக்கு* எனும் அவன் அவன் ஆலயத்தில்

*உள்ளம்* எனும் கருவறைக்கு அனுப்பினால்

*முக்தி* எனும் ஜீரணம் கிடைக்காதோ ...

அவனை உணவை என்று நினைக்கும் முன் அவன் நம்மை *கருணை* எனும் தடியால் அடித்து தன் உணவாக்கி கொள்வானே ...

அன்பில் அவனை ஜெயிக்க முடியுமா ... ?
ravi said…
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே!

நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்

வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி!

உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய்

மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 18
ravi said…
மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும்,

போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான

நந்தகோபனின் மருமகளே!

நப்பின்னை பிராட்டியே!

வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே!

உன் வாசல் கதவைத் திற!

கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது.

குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன.

பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே!

உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம்.

அளவு மாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால்

எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.

தாயார் அருள் இன்றி தந்தை அவனை பார்க்க இயலுமோ ..

ஸ்ரீ இன்றி ஸ்ரீதரன் எங்கே ?

உன் அருள் இன்றி அவன் அருள் உயிர் இல்லா உடம்பு அன்றோ

குரல் இல்லா குயில் அன்றோ

தோகை இல்லா ஆண் மயில் அன்றோ ...

கர்ஜனை இல்லா ஆண் சிங்கமன்றோ ...

கருணா ரஸமே வந்தே அருள் புரிவாய் அரங்கன் அவன் திருவடி காணவே 🙌🙌🙌
ravi said…
[02/01, 07:23] +91 96209 96097: மஹாயாக-க்ரமாராத்யா *மஹாபைரவ-பூஜிதா*🙏
சிவ பெருமானால் பூஜிக்க ப்பட்டவள்
[02/01, 07:23] +91 96209 96097: *பிரபவே நமஹ*🙏
குணங்களால் மனங்களை கவர்பலர்
ravi said…

பழனிக் கடவுள் துணை -02.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-16

மூலம்:

அரியும், சிவனு(ம்) மற்றை யாவரும், பழனிக்
கிரிமுருகன் என்றே கிளத்தும் – பெரிய
கவுமாரர் மாற்றமுற்றும் காய்கனற்போற் கோபப்
பவுராணி கர்க்குப் பகை (16).

பதப்பிரிவு:

அரியும், சிவனும் மற்றை யாவரும், பழனிக்
கிரி முருகன் என்றே கிளத்தும் – பெரிய
கவுமாரர் மாற்றம் முற்றும் காய் கனல் போல் கோபப்
பவுராணிகர்க்குப் பகை (16).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

கௌமாரத்தின் சாரம் விளக்குகின்ற ஒரு அற்புதப் பாடல்.

சிவன் முதல் ஆன எந்தக் கடவுளும், முருகப் பெருமானே என்று அறிபவர் பெரிய கௌமாரர். எனவே அவர்களை வேறாய் எண்ணுவோர் சிறிய கௌமாரர். அகரமும் ஆகி என்ற பழமுதிர்சோலை தலத்துத் திருப்புகழ் பாடலைக் காண்க. இது தான் பெரிய கௌமார இயல்பு. குமார வழிபாட்டினர் கௌமாரர். பவுராணிகர்- புராணம் உறையோர், இவர் மத பேதம் உடையவர் என்று உணர்க.

அரியும், சிவனும் மற்றை யாவரும், எந்தத் தெய்வமும் பழனி மலையில் உறையும் எல்லாம் வல்ல தண்டபாணிப் பெருமாள் என்றே அறிந்து, உணர்ந்து தெளிபவர் பெரிய கவுமாரர்; மாற்றம் முற்றும் சுடுகின்ற கனல் போல் கோபம் கொள்ளும் புராணம் உறையோர் ஆன, மத பேதம் உடைய பவுராணிகர், குமார வழிபாட்டினர் ஆன பெரிய கவுமாரர்களை வேறு அல்லது பகை என்று எண்ணுவர்.

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
[02/01, 06:53] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 42*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
[02/01, 06:54] Jayaraman Ravilumar: मोदितमधुकरविशिखं स्वादिमसमुदायसारकोदण्डम् ।

आदृतकाञ्चीखेलनमादिममारुण्यभेदमाकलये ॥ २६॥

26. Modhitha Madhu kara vishikham swadhima samudhaya sara kodandam,

Adhrutha Kanchi kelanm aadhimam aarunya bhedhamaakalaye.

மோதிதமதுகரவிஶிகம் ஸ்வாதிமஸமுதாயஸாரகோதண்டம் |

ஆத்றுதகாஞ்சீகேலனமாதிமமாருண்யபேதமாகலயே ||26||
ravi said…
ஏன் காமாக்ஷியை சுற்றி இத்தனை வண்டுகள், தேன் உறிஞ்சிகள்?

காரணம் சொல்லவா வேண்டும்.

மது நிறைந்த இதழ் விரிந்த மலர்களை பாணங்களாக கைகளில் வைத்திருக்கிறாளே ,

தேன் சிந்துதே அவற்றிலிருந்து.

வண்டுகள் தேன் உறிஞ்சிகள் வேறு எங்கும் போய் தேட வேண்டாமே , அவள் அழகை ரசித்துக்கொண்டே வயிறு முட்ட குடிக்கலாமே.

இது போதாது என்று கையில் கரும்பு வில் வேறு.

அதன் இனிமை எட்டு ஊருக்கு எல்லா இனிமை விரும்பிகளையும் ஈர்க்குமே .

பக்தர்களுக்கு கண்ணுக்கும் சுவை, நாவிற்கும் இனிமை.

எவ்வளவு அழகு நிறைந்த சிவப்பி, இளம் மங்கை கம்பா நதிக்கரையில் ஆனந்தமாக நடமாடிக் கொண்டு செல்கிறாள்.

பார்க்க ஆயிரம் கண்கள் போதாது.

கரம் சிரமேற் குவித்து ஆனந்தமாக த்யானிக்கிறேன்.🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 446* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*182 நிஷ்க்ரியா --*

தனக்கென்று எந்த ஒரு காரியமும் செய்யவேண்டிய நிலையில் இல்லாதிருப்பவள்.

அவளது சங்கல்பமே, எண்ணமே, உலகை, பிரபஞ்சத்தை பரிபாலனம் செய்யும். ரட்சிக்கும்.

உலகத்தில் நமக்கு தெரிந்த தெரியாத எல்லா காரியங்களும் அவளே தான் என்றபோது அவளுக்கு என்று தனியாக எந்த காரியம் இருக்கப்போகிறது?🙏🙏🙏
ravi said…
மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும்,

போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான

நந்தகோபனின் மருமகளே!

நப்பின்னை பிராட்டியே!

வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே!

உன் வாசல் கதவைத் திற!

கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது.

குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன.

பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே!

உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம்.

அளவு மாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால்

எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.

தாயார் அருள் இன்றி தந்தை அவனை பார்க்க இயலுமோ ..

ஸ்ரீ இன்றி ஸ்ரீதரன் எங்கே ?

உன் அருள் இன்றி அவன் அருள் உயிர் இல்லா உடம்பு அன்றோ

குரல் இல்லா குயில் அன்றோ

தோகை இல்லா ஆண் மயில் அன்றோ ...

கர்ஜனை இல்லா ஆண் சிங்கமன்றோ ...

கருணா ரஸமே வந்தே அருள் புரிவாய் அரங்கன் அவன் திருவடி காணவே 🙌🙌🙌
ravi said…
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே!

நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்

வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி!

உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய்

மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 18
ravi said…
*ஓம் நமசிவாய* ஆன்மீக குழுவில் பயனிக்கும் அனைவருக்கும் நமது ஓம் நமசிவாய அறக்கட்டளை சார்பில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது அறக்கட்டளையிலிருந்து வருகிற பொங்கலை முன்னிட்டு ஏழை குழந்தைகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள், உடை போன்ற நலத்திட்ட உதவிகள் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன மேலும் தொடர்ந்து சிறுசிறு ஆலயங்களுக்கும் பூஜைகளுக்கு தேவையான சிறப்பு பூஜைபொருட்களும் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஈசன் அருளால் அனைவரும் தங்களால் இயன்ற ஒரு சிறு தொகையாவது நன்கொடையாக வழங்கி இத்தகைய சேவைகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எப்படி கோயிலில் நம் பெயரில் செய்யும் அர்ச்சனைக்கு பலன் உள்ளதோ, அதுபோல நம் பெயரில் செய்யும் தானத்திற்கும் பலன் உண்டு. நம்முடைய பெயரில் செய்யும் தானத்தில் பல மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்றால், அதைவிட புண்ணியம் வேறேதுவுமில்லை.

எனவே தங்களால் இயன்ற நன்கொடையை கீழே குறிப்பிட்டுள்ள நமது அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 👇
____________________________

*வங்கி விவரம் :*

Name : Om Namasivaya Charitable Trust

Account Number : 39740686917

IFSC Code : SBIN0002197

Bank Name : State Bank of India

Branch : Aramboly
____________________________

*G-Pay number 8300845263*

*Phonepe number 8300845263*

*மேலும் விவரங்களுக்கு,*

அறக்கட்டளை தொலைபேசி எண் : 8300845263

நன்றி.

*ஓம் நமசிவாய🙏*
ravi said…
*69 கேயசக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிசேவிதா* =

கேயசக்ரம் எனும் ரதம் அமர்ந்த மந்த்ரிணீதேவியால் தொண்டு செய்யப்படுபவள்🙌
ravi said…
அம்மா ... நல்ல மந்திரி நல்ல தளபதி நல்ல சேனைகள்

படை சூழ நீ வரும் வேளை தனில் வேண்ட வேறு ஏதும் உண்டோ ... ?

நல்ல நேரம் பிறக்க நல்லாட்சி தொடர நல்லவர்கள் வாழ வேதம் வேழம் போல் செழிக்க

உன் அருள் ஆறாய் பெருகி ஓட அதிலே அடிப்பட்டு ஓடும் தூசிகள் அன்றோ நாங்கள் ... ?

தேன் ஆற்றில் ஓடுகிறோம்

சங்கமம் ஆவதோ பாலாற்றில் ...

அதில் வந்து சேர்வதோ கருப்பஞ்சாறு ...

இனிக்க இனி என்ன வேண்டும் அம்மா ?

பகைவர்க்கு எமானாய் வருபவளே ...

எமன் வரும் வேளையில் காலால் எட்டி உதைப்பவளே ...

உனை அன்றி ஒர் தெய்வம் உண்டு என்றால் அதுவும் நீயே அன்றோ ?💐💐💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

28 –
சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவா யான்

சாந்தமாய்ப் போவன் அருணாசலா (அ)
ravi said…
சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும்

விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் மாயமாய் மறையும் அன்றோ

அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன அன்றோ

பெண்ணாகவும், ஆணாகவும், பெண்மைக்கு தன் சரி பாதி உடம்பை தந்தவனும் முப்பிரிவாகவும் திகழும் அவன்

வானமாகவும், பூமியாகவும்,

இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறான் அன்றோ

கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி,

பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராட வாரீரோ .

நமக்கு சிறந்த உணவு அவன் திருநாமம் ஒன்றே அன்றோ ...

*வாயில்* அதை போட்டு *பக்தி* எனும் பற்களால் நற நற வென்றே கடித்து

சரணாகதி எனும் *உமிழ் நீரில்* அரைத்த அவன் நாமம் அதை சேர்த்து

*நாக்கு* எனும் அவன் அவன் ஆலயத்தில்

*உள்ளம்* எனும் கருவறைக்கு அனுப்பினால்

*முக்தி* எனும் ஜீரணம் கிடைக்காதோ ...

அவனை உணவை என்று நினைக்கும் முன் அவன் நம்மை *கருணை* எனும் தடியால் அடித்து தன் உணவாக்கி கொள்வானே ...

அன்பில் அவனை ஜெயிக்க முடியுமா ... ?
ravi said…
[02/01, 07:55] Jayaraman Ravilumar: முகுந்த மாலையில நேத்திக்கு 39, 40வது ஸ்லோகங்களில் பகவானுடைய நாமங்களை அடுக்கி இப்பேற்பட்ட இனிமையான நாமங்களை சொல்ல முடிஞ்சாலும் சொல்ல மாட்டேங்கறாளேன்னு இரண்டு ஸ்லோகங்கள்

ஸ்ரீனாத² நாராயண வாஸுதே³வ ஸ்ரீக்ருʼஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே ।

ஸ்ரீபத்³மனாபா⁴ச்யுத கைடபா⁴ரே ஸ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥ 39 ॥

அனந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ।

வக்தும் ஸமர்தோ²ऽபி ந வக்தி கஸ்சித் அஹோ ஜனாநாம் வ்யஸனாபி⁴முக்²யம் ॥ 40॥

ன்னு ஜனங்களைப் பத்தி சொல்றார்
[02/01, 07:57] Jayaraman Ravilumar: ध्यायन्ति ये विष्णुमनन्तमव्ययं हृत्पद्ममध्ये सततं व्यवस्थितम् ।

समाहितानां सतताभयप्रदं ते यान्ति सिद्धिं परमां च वैष्णवीम् ॥ ४१॥

த்⁴யாயந்தி யே விஷ்ணுமனந்தமவ்யயம்

ஹ்ருʼத்பத்³மமத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம் ।

ஸமாஹிதாநாம் ஸததாப⁴யப்ரத³ம்

தே யாந்தி ஸித்³தி⁴ம் பரமாம் ச வைஷ்ணவீம் ॥ 41 ॥
ravi said…
[02/01, 07:59] Jayaraman Ravilumar: விஷ்ணும்னா எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்னு அர்த்தம்.

அனந்தம்னா எல்லையில்லாத பரம்பொருள் னு அர்த்தம்.

அவ்யயம்னா மாறாத பரம்பொருள்னு அர்த்தம்.

எந்த ஒரு மாற்றமும் கிடையாது. எல்லையும் கிடையாது.

எங்கும் நிரம்பி இருக்கக் கூடிய அதே பகவான் நம்முடைய ‘ *ஹ்ருʼத்பத்³மமத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம்’*
[02/01, 08:02] Jayaraman Ravilumar: மனசுக்குள்ளயும் ஹ்ருஷிகேச: ன்னு ஹ்ருதய புண்டரீகத்துலயும் எப்பவும் நித்யமா வசிக்கறான்.

அந்த பகவானை யாரு ‘ *த்⁴யாயந்தி யே ஸததம்* ’

எவர்கள் அந்த பகவனை இடையறாது தியானம் பண்றாளோ ‘ *ஸமாஹிதாநாம் ஸததாப⁴யப்ரத³ம்* ’

விஷ்ணும், அனந்தம், அவ்யயம் னு பகவானுக்கு அடைமொழிகள் சொன்ன மாதிரி இன்னும் ஒண்ணு சொல்றார்.

நெருங்கி வந்து தன்னுடைய மனதை பகவான்கிட்ட செலுத்தறவாளுக்கு எப்பொழுதும் அபயம் கொடுப்பவர், தவறாது அபயம் கொடுப்பவர்.

ராமர் சொல்ற மாதிரி
*ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீ திச யாசதே |*

*அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம ||*
ன்னு ராமர் சொன்னார்.
[02/01, 08:06] Jayaraman Ravilumar: அப்படி தன்னை அண்டினனவர்களுக்கு அபயம் கொடுப்பவனும்,

ஹ்ருதய தாமரையில் எப்பொழுதும் வசிப்பவனுமான அந்த புண்டரீகாஷனை எவர்கள் தியானம் செய்கிறார்களோ

‘ *தே த்யாயந்தி’* அவர்கள் ‘ *தே பரமாம் வைஷ்ணவீம் ஸித்³தி⁴ம் யாந்தி* ’

அவர்கள் ஒப்புயர்வற்ற வைஷ்ணவ ஸித்தியை, அதாவது வைகுண்டத்தை மோக்ஷத்தை அடைகிறார்கள்னு பிரதிக்ஞை பண்ணி சொல்றார்.🙏🙏🙏
ravi said…
*இன்றைய சிந்தனை*

02.01.2023

_*கஷ்ட காலத்திலும் தைரியமாக இருப்பது எப்படி?*_


பாதை இலகுவா...கஷ்டமா என்று பார்க்காதீர்கள்; நீங்கள் செல்லும் பாதை சரியானதா என்று மட்டும் பாருங்கள்... போகும் இடத்தை அடைந்து விடலாம்..!!

எல்லா சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.ஓஹோ என்று வாழ்ந்து ஒன்றுமில்லாமல் போனவர்களும் உண்டு. ஒன்றுமில்லாமல் வாழ்ந்து ஓஹோ வென்று போனவர்களும் உண்டு*

தகுதியை மீறி ஆசைப்பட கூடாது என்பது உண்மை தான்! ஆனால், உங்கள் தகுதி என்ன என்பதை மற்றவர் தீர்மானிக்க கூடாது!

துன்பத்தை தூரமாக வைத்து, இன்பத்தை இதயத்தில் வைத்து, நம்பிக்கையை நமக்குள் வைத்தால், எல்லாம் வெற்றி ஆகும்....!

பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்வி வந்து கொண்டேதான் இருக்கும். பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள். வெற்றி உங்கள் காலடியில்.

நீங்கள் எப்படி நடக்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி, வேகமாக விரைந்தாலும் சரி. ஆனால் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் உங்களை இழிவாக நினைப்பவர்களை குறை மட்டும் காண்பவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடுங்கள்.

நீ விழுந்த போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை.. மனம் உடையும்போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் இந்தக் கை.. தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை.. அது வேறு யார் கையும் அல்ல.. உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை.. அதை மட்டும் ஒரு போதும் இழந்து விடாதே..!!

எந்த விஷயம் நீ செய்தாலும் என்றுமே நம்பிக்கையோடு கடை பிடிக்க வேண்டிய தாரக மந்திரம் “என்னால் முடியும்..!.

விமர்சனங்கள் முன் வீழ்ந்து விடாதே. விடாமுயற்சி மட்டுமே உன் பெயரை மண்ணில் விதைக்கும் விதையாய் இருக்கும் என்பதை மறந்துவிடாதே.

*ஆன்மீக தகவல்கள் அனைத்தும் தொடர்ந்து படிக்க கீழே லிங்கை அழுத்தி குழுவில் இணையுங்கள்*
👇👇
https://chat.whatsapp.com/CI5Bj32nY6rJ34WCW5PIjL
ravi said…
நாமும் தெரிந்து கொள்வோமே.

வைகுண்ட ஏகாதசி பின் நடக்கும் நிகழ்வில்ஒரு சில திவ்யதேசங்களில் பெருமாளுக்கு ஏன் ரத்னாங்கி
சாற்றுகிறார்கள்?

மற்ற ஏகாதசியை போல் இல்லாமல் மார்கழி மாத ஏகாதசியில் மட்டும் ஏன்
பரமபத வாசல் நிகழ்வு .

வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியாகும்..

இந்நாளில் பகவான் ஒரு ஆத்மா.

பரபதநாதனான தன்னை எப்படி வந்து அடையும் என நடித்து காண்பிக்கிறான்.

அதன் நிறைவு நாளான நம்மாழ்வாருக்கு மோட்சத்தையும் சமர்ப்பிக்கிறான்.

முன்பத்து பின்பத்து என இவ்விழா
21 நாட்கள் நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசிக்கு முன் பகவான் ஆழ்வாருக்கு பரமபதம் தர சங்கல்பம் கொண்டு அவருக்காக பரமபத வாசலை திறக்கச் செய்து தானே

( எப்படி நம் வீட்டுக்கு வரும் விருந்தினரை வாசலில் வந்து வரவேற்போமோ அப்படி)

பரமபத வாசலுக்கு வந்து வரவேற்க சித்தமாகிறான்.

அரங்கம் என்றாலே நாடகம் நாட்டியம் நடக்கும் இடம் தானே.

அதனால் தான் இந்த விழாவை பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் தானே நடித்து நடத்தி காட்டுகிறார்.

இந்த ரத்னாங்கி சேவை என்பது இங்கு தான் ஆரம்பிக்கப்பட்டது.

ravi said…
வைகுண்ட ஏகாதசி அன்று அரங்கனுக்கு சாற்ற பெறும் ரத்னாங்கி 1700 ஆம் வருடம் வழங்க பெற்ற அறிய ஆபரணம் 1900 ங்களில் மறுபடியும் பாகவத புருஷர்களால் செப்பனிடப்பட்டது ஏன் இந்த அங்கி என தகுந்த இடத்தில் சொல்லுகிறேன்.

பகல் பத்து முடித்து பரம்பதம் திறக்கப் பட்டதும்,

திருவரங்கத்தில் இந்த இராபத்து நடைபெறும் அந்த பத்து நாட்களும் அரங்கன் ஒரு நாடகத்தினை தினம் நடிக்கின்றான்.

அரங்கன் திருஅத்யாயன புறப்பாடு முதல் நாள் முதல் அந்த நாடகத்தை காண்போம்.

அரங்கன் மூலஸ்தானத்திலிருந்து கிளம்பும் பொழுது சாதாரன போர்வை அணிந்து

(வைகுண்ட ஏகாதசி நீங்கலாக )

தன் இரு அபயகரங்கள் மட்டுமே தெரியும் வண்ணம் எழுந்தருளுவார்.

பின்னர் மேல் படியில் மரியாதையாகி உத்தமநம்பி அவர்களுக்கு பரிவட்டம் வழங்கப் பெற்று அவர் மூலம் இந்த நாடகத்தை நடத்திவைக்க பணிப்பார் இக்கோவிலின் ஸ்தானிகர்.

அதன் பின் அரங்கன் புறப்பட்டு சேனை முதல்வருக்கு மரியாதைகள் வழங்கிய பின்பு நாழி கேட்டான் வாயிலை அடைவார்.

அது என்ன நாழிகேட்டான் ?

அதாவது அந்த கதவுகளின் அருகில் வந்தவுடன் சரியான நேரம் தானா என்று கேட்கப்படும்.

ravi said…
நாழி

முன்னோர் காலங்களில் நாழி என்னாச்சு? னு நம்மிடையே கேட்கும் வழக்கமும் இருந்தது.

அதாவது நேரத்தை நாழி என்று குறிப்பிடுவோம்

( இன்றும் சில இல்லங்களில் இப்பேச்சு உள்ளது)

24 நிமிடம் என்பது ஒரு நாழிகை.

அது தான் அங்கு நாழி கேட்கப்படுவதின் ரகஸ்யம்.

அரங்கன் மூலஸ்தான புறப்பாடாகிய பொழுது

(சாற்றியிருக்கும் அந்த போர்வை தான் நாம்)

அதாவது ஜீவாத்மா அவன் அந்த ஆத்மாவை போல் இரு கரங்கள் தெரிய புறப்படுகிறான்.

அந்த ஜீவாத்மா தான் மேலே கிளம்ப வேண்டிய நேரத்தினை அறிந்து புறப்படுகின்றது என்பதை தெரிவிக்கவே நாழி கேட்கப்படுகிறது

ஒரு ஆத்மாவின் ஜீவதசைக்கு ( மரணத்திற்க்கு) பின்பு இரண்டு வகையான பாதைகளிலில் பயணிக்கும்.

ஒன்று முக்திக்கு செல்ல கூடிய பாதை.

இன்னொன்று எம தர்மலோகமாம் எம பட்டினம் செல்லும் பாதை.

முக்திக்கு செல்லும் பாதையினை #அர்ச்சிராதி மார்க்கம் என்று கூறுவார்.

இன்னொன்றை #தூமாதி மார்க்கம் என்பார்கள்.

இப்பொழுது நம் அரங்கன் நமக்கு #அர்ச்சிராதி மார்கத்தினை தான் காட்ட போகின்றான்

நாழி கேட்டனை அடைந்த பிறகு அரங்கன் துறை பிரகாரம் என்னும் பிரகாரம் கடப்பான் அந்த பிரகாரம் மட்டும் சற்றே மாறுபட்டது.

இங்கு நடுவினில் முழுதும் தொடர்ச்சியான மண்டபம் இருமருங்கும் வெற்றிடம் ஏன் இப்படி என்றால் அந்த மண்டபத்திற்கு வெளிச்சம் ஏற்றிட என்பார்கள்.

ஆம் அர்சிராதி மார்கத்தினை அடையும் ஜீவன் முதலில் விதியுத் அதாவது மின்னல் உலகம் பின்பு சூர்ய லோகம் சந்திர லோகம் என ஒளி பொருந்திய லோகங்களை கடந்தே செல்லும்.

அதற்க்கு தான் இந்த மண்டபம்
பின்பு விராஜா மண்டபம் அடைவார் அரங்கன், அங்கு வேத பாராயண கோஷ்டி முதலியன நடைபெறும்.

ஏன் அங்கு இப்படி ஒர் ஏற்பாடு?

இந்த ஜீவன் விரஜை என்னும் பேரெழில் ஆற்றை அடையும் அதுவே வைகுண்டத்தின் கரை அந்த ஆற்றை அடைந்த பிறகு அங்கு வேத கோஷங்கள் முழக்க தேவ மங்கையர்கள் நம்மை நீராடிடுவார்கள் நமக்கு மரியாதையை செய்வார்கள்.

இது வரை அந்த ஜீவனுக்கு சூக்ஷும சரீரமா இருக்கும் .

கடைசியாக விரஜையில் அந்த ஜீவன் முழுகி எழுந்த உடன் அந்த ஜீவன் நான்கு கரமும் கஸ்தூரி திருமண் காப்போடு துலங்குமஅந்த மேனியினை வார்த்தையால் வர்ணிக்க ஒண்ணாது.

அதுபோலவே ஒளிபொருந்திய மேனியை அடைந்ததை குறிக்கவே இரத்தினஅங்கி

(வைகுண்ட ஏகாதசி நீங்கலாக மற்றைய நாட்களில்)

வைகுண்ட வாசல் அருகில் வந்த உடன் அரங்கனின் போர்வை கலையப்பெற்று கஸ்தூரி திருமண் காப்பு சாற்ற பெற்று நான்கு கரத்துடன் அவர் உயர்த்தி காண்பிக்க படுவார்.

இங்குதான் இரத்தினாங்கி சாத்தப்படுகிறது அதாவது அந்த பேரெழில் ஒளி பொருந்திய வார்த்தைகளால் வர்ணிக்கபட முடியாத மேனியினை காட்ட அரங்கனுக்கு ரத்னஅங்கி சாற்ற பெறுகின்றது.

இன்னும் சொல்லப்போனால் நம்மால் விவரிக்க ஒண்ணா காந்தியினை கூறவே உலகில் கிடைக்கும் இயற்கையான ஒளி பொருந்திய கற்களால் ஆன அங்கி சாத்தப்படுகிறது.

இதையே இன்று வேறுபல திவ்யதேசங்களிலும் செய்கிறார்கள்.

பின் அந்தமிழ் பேரின்ப நாடாம் வைகுந்தமடைவார்.
.
அப்படிபட்ட பேரோளியான ஆத்மா வைகுண்டத்தில் பகவானுடன்

(திருவரங்கத்தில் பகவான் 1000 கால்களை உடைய மண்டபத்தின் நடுவே அதாவது திருமாமணி மண்டபத்தில் ஆனந்தமாக எழுந்தருளிஇருப்பார்)

என்றும் ஆனந்த பரவசத்தில் திளைப்பதை தாம் நாம் அரங்கன் பரமபத வாசல் கடந்து நடத்தி காட்டுகிறார்.

ஆயிரம் கால் மண்டபமான இந்த லீலா விபூதி அதாவது இந்த அவன் தற்காலிகமாக ஏற்பட்டுத்திருக்கும் இந்த வைகுண்டத்தைஅடைகிறார்.

இப்படியாக ஒரு ஜீவனின் வழியை தானே நடித்து அதன் தன்மையினை அணிந்து காட்டுகின்றார்.

நம்மாழ்வாருக்கு மோட்சமருளும் நாள் அவர் காட்டிய வழியில் நாம் சென்றால் அவரால் நமக்கும் மோட்சம் கிட்டும்.

ஆழ்வார் ஆசாரியர் வழி நடந்து நாமும் மோட்சத்தை அடைவோம்!!

ravi said…
*WHY VAIKUNTHA EKADASI?*

The EKGDASI of Margasirsa SUKLA paksa is known as VAIKUNTHA-EKADASI . ON this day, thousands of people gather IN Visnu temples. One of the main DOORS called ‘VAIKUNTHADVARA Which is NORMALLY kept closed throughout the year, is THROWN open on this day. The devotees who pass
through this door for the darsana of the Lord are believed to go to Vaikuntha, the abode of Visnu.
It is said that long back, devotee Rukmangada who was being forced by an ogress to break his ekadasi fast against the norms of the vrata was saved by Visnu and was taken to Vaikuntha on this day. Hence the name. There is a very big festival on this day at the Ranga Nathan Temple of Srirangam in Tamil Nadu, Which goes on for 21 days. This day is also the day on which the Bhagavadgita was taught by the Lord Sri Krsna to Arjuna on the battlefield of Kuruksetra before the Mahabharata war.
Hence, it is celebrated as Gitajayanti even now. Apart from fasting and worship of
the Gitacarya Krsna, there will be ceremonial chanting of the text and sometimes discourses expounding the same.

........ Sarvam vishnumayam jagath
ravi said…
இல்லையென்பதும் இருக்குமென்பதும் மனதின் நிலை. இருப்பதைக் கொண்டு
திருப்தியடைவதே வாழ்வின் சிறப்பு நிலை.
- சுவாமி விவேகானந்தர்.

நமக்கு நாமே எதன் மீதும் ஆசையில்லை என்று சொல்லிக் கொள்ளும் பொய் சமாதானங்கள் தான்
நம்மை அடுத்த நாளுக்கு நகர்த்திச் செல்கின்றன.

தேவையற்ற ஆசையை தூண்டி விட்ட மனசுதான் தவறுக்கு பிறகு தத்துவமும் சொல்லும்.

பணம் வந்து விட்டால் நல்ல மனம் போய்விடும். நல்ல மனம் இருந்தால் சுத்தமாக பணம் இருக்காது.

மனித உலகில் பணமும், நல்ல மனமும் ஒருசேர வாய்க்கப் பெற்றவர்கள் குறைவு. இன்று எல்லோரிடமும் பணம் இருக்கிறது. மனம் தான் தொலைந்து விட்டது.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
தகவல் உலா




*தினம் ஒரு குட்டிக்கதை*

இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தனர்.
வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின.

கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான்.

அதனால் தன் ஏழை நண்பனுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான்.

தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான்.
இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே இல்லை.

பாலைவனத்தில் ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அம்மரத்திலிருந்து விழுந்த பழங்களை ஏழையானவன் ஓடிப்போய்ப் பொறுக்கினான்.

உடனே பணக்காரன், அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறித்தான்.

உன்னிடம்தான் தேவையான உணவு இருக்கிறதே.
பிறகு ஏன் இதைப் பறிக்கிறாய் எனக்கு கேட்டான் ஏழை.

அப்படியானால் நான் உணவை வைத்துக்கொண்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா?

என்று சொல்லி கோபத்தில் ஏழையின் முகத்தில் ஓங்கி அடித்தான் பணக்காரன்.

அந்நேரமே இருவரும் பிரிந்து நடக்கத் தொடங்கினர்.
வலியும் அவமானமும் கொண்டவனாக பாலைவன மணலில்,

"இன்று என் நண்பன் என்னை அடித்து விட்டான்" என்று பெரிதாக எழுதி வைத்துவிட்டு நடந்தான் ஏழை.

ஓரிரு நாட்கள் இருவரும் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள்.

அப்போது ஓரிடத்தில் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக் கண்டு ஓடிச் சென்று குடிக்க முயன்றான் பணக்காரன்.

திடீரென நண்பனின் நினைவு வந்தது.
இவ்வளவு காலம் பழகிய நண்பனை ஒரு கஷ்டம் வந்ததும் ஏமாற்றி விட்டோமே என்று உணர்ந்து நண்பனைச் சத்தமிட்டு அழைத்தான்.

குரல் கேட்டு ஓடோடி வந்த ஏழை நண்பன் அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான்.

இதிலுள்ள தண்ணீரை ஒருவர் மட்டுமே குடிக்க முடியும்.
நீயே குடித்துக்கொள் என்றான் பணக்காரன்.

உடனே ஏழை தாகம் மிகுதியில் தண்ணீரை முழுவதும் குடித்து விட்டு நண்பனை அணைத்துக்கொண்டு நன்றி தெரிவித்தான்.

பின்னர் இருவரும் ஒன்றாக நடக்கத் தொடங்கினர்.
ஏழை நண்பன் அங்கிருந்த ஒரு கல்லில்,

"என் நண்பன் இன்று மறக்க முடியாத ஓர் உதவி செய்தான்"
என்று எழுதி வைத்தான்.

உடனே வானத்திலிருந்து ஒரு தேவதூதன் தோன்றி ஏழையிடம், அவன் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதி வைத்தாய்.

உதவி செய்தபோதோ அதைக் கல்லில் எழுதி வைக்கிறாய்.
அது ஏன்? என்று கேட்டான்.

நடந்த தவறுகள் காற்றோடு போக வேண்டியவை.
அதனால் அதை மணலில் எழுதினேன்.

ஆனால் செய்த நன்றியை என்றும் மறக்கக் கூடாது.
ஆகவே அதைக் கல்லில் எழுதி வைத்தேன் என்றான் ஏழை.

ஒருவர் நமக்குச் செய்த தீமைகளை மறந்து அவர் செய்த நன்மைகளை நினைவில் வைத்திருந்தால் உறவுகள் மேம்படும்.

வாழ்வில் தேடித் தேடி நாம் சேகரித்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல; மனித உறவுகளை!

ravi said…
🌹🌹🌹🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺

*இன்றைய சிந்தனை*
.............................................................

*"மனச்சலனமும் மாமருந்தும்...!*
.............................................................

நம் வாழ்வில் ஏதாவது ஒரு நிலையில் மனச்சலனம்(சலிப்பு) வரத்தான் செய்யும். ஏனென்றால் நீங்கள் அந்த வேலையை நேசித்து விட்டீர்கள்...!, எங்கு அன்பு மிகையாய் இருக்கிறதோ, அங்கே மனச்சலனம் ஏற்பட்டே தீரும்...!

வெளியுலகத் தாக்கங்களுக்கு ஏற்ப மனநிலையில் மனச்சலனம் ஏற்படுவது இயற்கையானது.

செக்குமாடு போல ஒரே வேலையைச் செய்தும், அதுபோல் சிந்தனையில் உழன்றும், மன அழுத்தத்தில் சிக்கித் திறனற்ற மனமில்லாதவர்களாக காட்சியளிப்பதோடு மட்டுமன்றி அவர்களுடைய வாழ்க்கையிலும் மனச்சலனம் ஏற்படுகின்றது...

மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் மனச்சலனம் என்பதே இருக்காது. உயிரோட்டமான புன்னகை இருந்து கொண்டிருக்கும். மகிழ்ச்சி வேண்டுமானால், மனநிறைவு இருக்க வேண்டும். மனநிறைவு பெற வேண்டுமானால், வாழ்க்கையில் மனச்சலனம் என்பதே இருக்கக் கூடாது...

மகிழ்ச்சியாக இருப்பவர்களால் தான் குடும்பத்தையே மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்,  வாழ்க்கையை நரகமாக செய்வதற்கு மனச்சலனம் ஒன்று போதும். இயற்கை சலிப்படைந்து ஒரே ஒரு நாள் தன் இயக்கத்தை நிறுத்தினால் இவ்வுலகம் என்னவாகும்...?

எனவே!, மனச்சலனம் எனும் சரிவில் உங்களை வீழ்த்தி விடாமல் இருக்க அதன் இறகுகளை விரித்து உதறுங்கள்.

"நான் செக்குமாட்டு வாழ்க்கை வாழப்போவதில்லை...!என்று சொல்லிக் கொள்ளுங்கள்...

'இப்படியே இருக்கப் போவதில்லை'என்று தீர்மானியுங்கள்...

"என்னால் எதையும் செய்திட முடியும்" என்று நம்பிக்கை கொள்ளுங்கள், செய்திடுங்கள், அச்சம் கொள்ளாதீர்கள், துணிந்து இறங்குங்கள். போட்டிகளை எதிர்கொள்ளத் தயங்காதீர்கள்...

செக்குமாட்டு வாழ்க்கையிலிருந்து சற்றே விலகி, அடைந்திருக்கும் புதிய உற்சாகம் உங்களுக்கு மனச்சலனத்தை ஏற்படுத்தாது, மாறாக ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும்..

*ஆம் நண்பர்களே...!*

எந்தத் துறையில் இருந்தாலும், எந்தப் பணிகளை மேற்கொண்டாலும், அன்புடனும், இரக்கத்துடனும், உயரிய குறிக்கோள்களை மனதில் கொண்டு செய்து பாருங்கள்...!

உங்கள் செயல்கள் யாவும் மனித குலத்திற்குச் செய்யப்படும் சேவையாக மலர்வதோடு, மனச்சலனம் என்றால் என்னவென்றே உங்களுக்குத் தெரியாமல் போய் விடும்...!!

இதை வாழ்க்கையில் ஒருமுறை கடைப்பிடித்துத் தான் பாருங்களேன், அதன் பிறகு உங்களுக்கு இதன் முழு பொருளும், பெருமையும் புரியும்...!!

ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍️*


*HAGGLE*

*(பேரம் பேசுதல், பேச்சுவார்த்தை, பேசிசண்டையிடுதல், சச்சரவிடுதல்)*

meaning...... argue with somebody until you reach an agreement, especially about the price of something, to engage in conversation to reach a deal....


1. During the investment meeting, the company CEO and the potential investor will *haggle* over the value of the organization.


2. Although my grandfather is quite wealthy, he will *haggle* to save a rupee.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
Historical Events on January 2.

● 1885, 2nd Jan: Establishment of Ferguson College in Pune.

● 1936, 2nd Jan: Establishment of Madhya Pradesh High Court.

● 1942, 2nd Jan: During World War II, the Japanese army captured Manila, the capital of the Philippines.

● 1951, 2nd Jan: Russia launched Luna-1 spacecraft towards the moon.

● 1954, 2nd Jan: India established its highest civilian awards, the Bharat Ratna and the Padma Vibhushan. 

● 1975, 2nd Jan: Railway Minister Lalit Narayan Mishra had injured in a bomb blast in the Samastipur district of Bihar.

● 1989, 2nd Jan: Safdar Hashmi, a Marxist street playwright, writer, director, poet, and lyricist, was brutally murdered while performing a street play in New Delhi.

● 1991, 2nd Jan: Thiruvananthapuram Airport of Kerala became an international airport.

● 2000, 2nd Jan: The Panama government took full control of the Panama Canal after 85 years.

● 2016, 2nd Jan: Noted Shia cleric Nimr al Nimr and 46 other associates of Saudi Arabia had hanged.


Famous Birthdays & Birth Anniversaries on January 2.

● 1917: K. M. Mathew, an Indian newspaper editor.

● 1920: Isaac Asimov, an American writer, and professor of biochemistry at Boston University.

● 1932: Harchand Singh Longowal, the former President of the Akali Dal.

● 1937: Chandrashekhara Kambara, a prominent Indian poet, playwright, folklorist, film director in the Kannada language.

● 1940: S. R. Srinivasa Varadhan, an Indian American mathematician.

● 1959: Kirti Azad, an Indian politician and former cricketer.

● 1960: Raman Lamba, an Indian cricketer.

● 1987: Kanhaiya Kumar, Indian politician and student activist.


Death Anniversaries of famous people on January 2.

● 1316: Alauddin Khilji, the most powerful emperor of the Khalji dynasty that ruled the Delhi Sultanate in the Indian subcontinent. 

● 1861: Frederick William III, King of Prussia.

● 1877: Alexander Bain, a Scottish Inventor, and engineer who was the first to invent and patent the electric clock. 

● 1943: Virbhai Kotwal, an Indian social reformer and revolutionary from Neral, Maharashtra, India. 

● 1949: Safdar Hashmi, a communist playwright, and director, best known for his work with street theatre in India.

● 1944: Maharshi Vitthal Ramji Shinde, one of the most important social and religious reformers in Maharashtra, India.

● 1953: Guccio Gucci, an Italian businessman and fashion designer.

● 1989: Safdar Hashmi, a communist playwright and director.

● 2015: Vasant Gowarikar, an Indian scientist.

*Knowledge Spread ✍️🇮🇳*
ravi said…
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

🔷 *நாளும் ஒரு சிந்தனை*
ஆண்டுகள் மாறுவதால் மட்டும்
வாழ்க்கை மாறிவிடாது.
விடாமுயற்சி இருந்தால் மட்டுமே
வாழ்க்கை மாறும்.

🔷 *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*
வெந்தயம், கசகசா இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி உடனே சரியாகும்.

🔷 *நாளும் ஒரு செய்தி*
பாம்புக்கு காதுகள் இல்லை.

🔷 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
காய்ந்த மிளகாயை வறுக்கும் போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுக்க வேண்டும்.

🔷 *நாளும் ஒரு பொன்மொழி*
நேர்மையாக இருப்பதற்கு அதிக வல்லமையும், உறுதியும் வேண்டும்.
*-ஒரேகமான்*

*இன்று சனவரி 2-*

💐 *நினைவு நாள்* 💐
⭕2016- *அ.பூ.பரதன்* (குமுகாய ஆர்வலர், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மேனாள் பொதுச் செயலாளர்)

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
( *பகிர்வு)*
ravi said…
*எதிர்க்கும் முன் சரி தவறை உணர்ந்து கொள்ளுங்கள்.....!*

*பின்னாளில் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இருக்காது...!!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 14*

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

*பொருள்*

நல்ல குடியில் பிறந்தவர்கள் வயிறு வளர்பதற்காக அடுத்தவரை அண்டி, அவரை புகழ்ந்து பிச்சை வாங்கி வாழ்வது சீச்சீ என்று கூறும் அளவிற்கு இழிவான செயலாகும். இப்படி மானம் விட்டு உயிர் வாழ்வதை விட இறப்பது மேல்

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 13*

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்.

*பொருள்*

வாழ வேண்டும் என்று விதி உடையவரை, என்ன முயற்சி செய்தாலும் எவரும் கொல்ல முடியாது. அது போல் இறக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் தடுத்தாலும் வாழ வைக்க முடியாது, எத்தனை முயற்சி செய்தாலும் முன்னேற்றம் அடையாமல் பிச்சை எடுக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் காப்பாற்ற முடியும். இது தான் இந்த பூமியில் கண் கண்ட உண்மை. ஒருவரை காப்பாற்றவோ அழிக்கவோ விதியைத் தவிர வேறு ஒருவராலும் முடியாது, அவர் அவரின் வினைக்கேற்ப உள்ள பலன்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.


*இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்*

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
பாதாரவிந்த சதகம் !

60.நயந்தீம் தாஸத்வம்
நளினபவ முக்கியான் அஸுலப-
ப்ரதானாத் தீனானாம் அமர தரு
தௌர்ப்பாக்ய ஜனனீம் |
ஐகஜ் ஜன்ம க்ஷேமக்ஷம hbய
விதிஷு காமாக்ஷி பதயோ:
துரீணாமீஷ்டே கஸ்தவ
பணிது மாஹோ புருஷிகாம் ||

காமாக்ஷி / உன் திருவடிகளின் பேராண்மை, பிரும்மா முதலியவர்களைத் தன்னடியார்களாக்கிக் கொண்டது. எளிதில் கிட்டாதவற்றை எளியவர்களுக்கு அளித்துக்கற்பகமரங்களின் பெருமையைத் தாழச் செய்தது. உலகின் படைப்பிலும் காத்தலிலும் லயத்திலும் முன் நின்று செயலாற்றுவது. அதனை வர்ணிக்க வல்லவன்
யார்?

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வைகுண்ட ஏகாதசி பரமபத இரகசியம் பற்றிய பதிவுகள் :*

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று சாதாரண மக்களும் அறிந்துணர்வதற்காக பரமபதத்தைக் காட்டுவார்கள்.

பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம், திரும்பத் திரும்ப மேலும் கீழும் வந்து பல சுழற்சிகள் ஆகி நாம் மேலே போகின்றோம்.

நம் வாழ்க்கையில் நடக்கும் இத்தகைய பேருண்மைகளை நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் ஏகாதசி.

*பரலோகம் எனப்படும் இறைவன்*

நாராயணனின் பரமபதத்தை அடைய வேண்டும் என்றால் விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லாதபடி ஒளியின் உடலாக நாம் பெற்று அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது.

அன்றைய நாளில் சொர்க்கவாசல் ( பரமபதவாசல் என்பதே சொர்க்கவாசாலாக மருவியது ) என்று கோவில்களை எல்லாம் திறந்து வைப்பார்கள்.

நமக்கு இதைக் கதையாகச் சொல்லி ஏதோ பேருக்கு சொர்க்க வாசல் வழியாகச் சென்று சாமியைக் கும்பிட்டோம்… போனோம்… வந்தோம்… இராத்திரியெலாம் விழித்திருந்தோம்… இரவு பரமபதம் விளையாடினோம் என்ற எண்ணம் தான் இருக்கும்.

*பரமபதத்தின் இரகசியம்*

நம் வாழ்க்கையில் எல்லாம் நல்லதைச் செய்வோம். அதே சமயம் நம்மை அறியாதபடி வேதனை என்ற நிலைகள் வரப்படும் போது அந்த விஷமான நிலைகள் “கொத்தப்பட்டு…!” நம் உடலுக்குள் நோய்களாகி விடுகின்றது.

நோயாகி விட்டால் இந்த மனிதச் சரீரத்தை இழந்து மீண்டும் இழி நிலையான சரீரத்தைப் பெற்று விடுகின்றோம்.

1. அதிலிருந்து மீண்டு மீண்டும் மனிதனாக வளர்ச்சியாகி பல கோடி சரீரங்களைப் பெற்று…

2. மீண்டும் இழந்து மீண்டும் வளர்ச்சி பெற்று…

3. இப்படியே இழந்து இழந்து… இன்று நாம் இந்தச் சுற்றிலேயே தான் இருக்கின்றோமே தவிர

4. மெய் வழியின் தன்மையை அடையும் தன்மை (பரமபதத்தை) இல்லாது நாம் இருக்கின்றோம்.

5. அந்த மெய் வழி செல்வதற்கு என்ன வழி…?

என்ற நிலையைத்தான் அன்று மெய் ஞானிகள் பரமபதத்தின் மூலம் உணர்த்தினார்கள்.

*பரமபதம் அடைவது என்றால் என்ன?*

1. பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களில் இருந்து அடுக்கடுக்காக சென்று

2. மனித நிலைகள் பெற்று மனித நிலைகளிலிருந்து

3. உயிரை ஒளியாக மாற்றி உச்சியிலே செல்லும் போது தான் ( அர்ச்சிராதி மார்க்கம் எனும் ஒளிமயமான வழி )

4. அதாவது இந்த உடலை விட்டு (வெளியிலே) விண்ணிலே சென்று அனைத்து எண்ணிலாத் தெய்வங்கள், அமரர்கள், முனிவர்கள், தேவதைகளை உள்ளடக்கிய அனைத்து அண்ட பிரம்மாண்டத்தைக் கடந்து பேரொளியாக நிற்கக்கூடிய நிலையை பரமபதமாக (நல அந்தமிலாப் பேரின்ப சோதித் திருநாடு) காட்டி

5. அதற்குகந்த நாளாக நாம் ஏகாதசியை காட்டினார்கள் ஞானிகள்.

ஓடி ஓடி மாறி மாறி பல பிறப்பு பிறந்து பிறந்து வாழ்வில் கஷ்டங்களும் சுகங்களும் அனுபவித்து பிறவி வீணாகாமல் இறைவனிடம் சரணாகதி மூலம் பக்தி செய்து இருவினையாகிற பாவம்- புண்ணியம் கழிந்து கட்ட கடைசியிலே பரலோகத்திலே ஆட்சி செலுத்தும் பர தெய்வமான நாராயணன் திருவடியடைதலே பிறவிப்பயன் - முக்தி எனப்படும் மோட்சநிலை, அதை நாம் பெற்ற மீண்டும் இந்த பிறவிநோய்க்கு இடமான உலகத்தில் திரும்பாமல் அங்கேயே நிலை பெற்று விட வேண்டும்.

இதை தான் நாம் இந்த விளையாட்டின் மூலம் பெறப்படும் படிப்பினை. அவனிடம் சரணாகதி அடைந்தால் தான் எல்லாம் நன்மைக்கே என்று தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘 ஓம் நமசிவாய 🙏*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

சுத்த உபவாஸம் என்றால் முழுப் பட்டினி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ‘உபவாஸம்’ என்றால் ‘கூட வஸிப்பது’. பகவனோடுகூட, அவனுக்குப் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு வஸிப்பதுதான் உபவாஸம். அன்றைக்கு வயிற்றில் ஒன்றையும் தள்ளாவிட்டால்தான் அப்படி அவனோடுகூட, கிட்டக்க வஸிக்க முடியும். மனஸ் அவன் கிட்டக்கவே கிடக்க வேண்டுமானால் அதற்கு முதலில் வயிறு வெறுமனே கிடக்கணும். சாப்பிட்டால் வயிற்றிலே ‘கடாபுடா’. வேலைசெய்ய முடிவதில்லை. மனஸையும் எதிலேயும் நிறுத்த முடிவதில்லை. வயிறு அடைசலில்லாமலிருந்தால்தான் நன்றாகப் பிராணாயாமம் பண்ணி, மனஸை சுத்தி செய்துகொண்டு ஒருமுகமாக நிறுத்த முடியும். பெரிசாக மூச்சடக்கிக் கும்பகம் பண்ணவேண்டுமென்றில்லா விட்டாலும், தடைப்படாமல் தீர்க்கமாக ச்வாஸம் விடும்படியிருந்தால்தான் மனஸ் தியானத்தில் நிற்கும். வயிற்றில் கனம் இருந்தால் இப்படி ஃப்ரீயாக ச்வாஸிக்க முடியவில்லை. இதற்காகத்தான் உடம்பை நெற்றுப்போல ஆக்கிக்கொண்டு அதனால் ச்வாஸத்தை ஃப்ரீயாகவும் மனஸை லைட்டாகவும் பண்ணிக் கொண்டு நன்றாக ஈச்வர தியானத்தில் ஈடுபடும் பொருட்டு எப்போதுமே ஆஹாரத்தை லகுவாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தோபவாஸம் அநுஷ்டிக்க வேண்டுமென்றும் சாஸ்திரம் விதிக்கிறது.

ravi said…
இந்த உடம்புதான்  ‘நான்’ என்று நினைத்துக் கொண்டிருப்பதால்தான் ஸதா இதற்கு ஸவரக்ஷணை பண்ணுவதையே கார்யமாக வைத்துக்கொண்டு, ஆத்மாவைக் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த தேஹாத்ம புத்தி போகணும். இதற்காகத்தான் சரீரத்துக்கு சிரமத்தை தருகிற உபவாஸங்களை சாஸ்திரம் விதித்திருக்கிறது. உபவாஸங்களால் சரீரத்துக்கு ஏற்படுகிற சிரமங்களைச் சிரமமாகத் தெரியாமல் பழக்கிக் கொள்கிறோமென்றால், அப்போது தேஹத்தையே பிரதானமாக மதித்து அதன் ஸெளகர்யத்தையே கவனிக்கும் அபிமானத்தை விடுகிறோம் என்றுதானே அர்த்தம்?

ravi said…
பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு; வம்பும் வீணும் பேசுவதில் ஸுகமிருந்தாலும் மௌனம் அநுஷ்டி; கண்ணை இழுத்துக் கொண்டு போனாலும் தூங்குவதில்லை என்று ராத்திரி பூரா விழித்துக்கொண்டு ஈச்வர ஸம்பந்தமாக ஏதாவது பண்ணிக்கொண்டிரு. இப்படியெல்லாம் பழகப் பழக தேஹாத்ம புத்தி போகும். சரீரம் எப்படியானாலும் சித்தம் பரமாத்மாவிடம் நிற்கும். இப்போது பிடித்தே பழக்கிக் கொள்ளாவிட்டால் மரண யாதனை என்று சொல்லுகிறார்களே, அந்தப் பெரிய ஹிம்ஸை சரீரத்துக்கு வரும்போது மனஸை எப்படிப் பரமாத்மாவிடம் செலுத்த முடியும்?’ என்றுதான் சாஸ்த்ரங்கள் வ்ரத உபவாஸங்களை வைத்திருப்பது.

ravi said…
ஜீவிப்பதற்கு சாப்பாடு அவசியம்தான். இல்லாவிட்டால் உயிர் போய்விடும். ஆனால் சாப்பாடு கொஞ்சம் ஜாஸ்தியாகிவிட்டால்கூட உடம்புக்கு வியாதி வக்கைகள்தான். ஆரோக்கியத்துக்குக் காரணமான ஆஹாரமே லிமிட் தாண்டிவிட்டால் நோய்க்குக் காரணமாகிவிடும்.

மெஷின்கள்கூட விடாமல் வேலை செய்தால் கெட்டுப் போய் விடுகின்றன என்று அவ்வப்போது ரெஸ்ட் கொடுக்கிறார்கள். இப்படி வயிற்றுக்கும் ரெஸ்ட் கொடுத்தால் ஆரோக்யத்துக்கு ரொம்ப நல்லது.

உடம்பு என்று முழுசாக ஒன்றை எடுத்துக் கொண்டால் அதற்கு ஆறு நாள் வேலை கொடுத்தால் ஒருநாள் லீவ் தருவது என்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த உடம்புக்கு உள்ளே வயிறு முதலான உறுப்புக்கள் தனியாக வேலை பண்ணிக்கொண்டேயிருக்கின்றனவே! இவற்றில் ஹ்ருதயத்தையும் லங்க்ஸையும் கொஞ்சங்கூட ‘ரெஸ்ட்’ கொடுத்து வைக்க முடியாது. வயிற்றுக்குக் கொடுக்க முடியும்; கொடுக்கவும் வேண்டும். ஏனென்றால் ஸ்தூலமாக வெளியிலிருந்து வஸ்துக்களை வாங்கிக் கொண்டு அரைத்துக் கரைத்து ரொம்பவும் உழைப்பது அதுதான். எப்போது பார்த்தாலும் வேலை செய்யும் கருவி அதுதான். எப்போது பார்த்தாலும் வேலை செய்யும் கருவி கெட்டு விடுவதுபோல் ஒரு வேளை மாற்றி இன்னொரு வேளை என்று ஓயாமல் வேலை பண்ணினால் ஜீர்ணக் கருவிகள் கெட்டுவிடும். ஆஹாரம்தான் ரத்தமாகி, பம்ப் ஆகும் போது மூளைக்குப் பாய்கிறது. அந்த மூளை ரொம்ப நுட்பமான அவயம். அதனால், அதற்கு இந்த ரத்த ஓட்ட ‘வெய்ட்’டை அவ்வப்போது குறைக்க வேண்டும். இதற்கெல்லாம் உபவாஸம் உறுதுணை செய்கிறது.

ravi said…
ஆகவே உபவாஸமிருந்தால் ஆரோக்யம் போய்விடும் என்று தோன்றினாலும் உண்மையில் இதுதான் இருக்கிற ரோகங்களையும் போக்கும் பெரிய மருந்து; லங்கனம் பரம ஒளஷதம் என்றே வைத்ய சாஸ்த்ர வசனம்.

லங்கனம் என்றால் பட்டினி என்று ஏன் அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம் தெரியுமா? அந்த வார்த்தைக்கு நேர் அர்த்தம் “தாண்டுவது” என்பதாகும். ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் அதைத் தாண்டிப் போய்விட்டால், skipping a meal என்று சொல்கிறது இதுதான், அதுவே லங்கனம்.

ravi said…
வைத்ய சாஸ்த்ரம் சொல்கிற லங்கனத்தையே மத நூல்களும் சொல்கின்றன திருவள்ளுவரும் இதைச் சொல்லியிருக்கிறார். அவ்வப்போது ஒரு வேளை, இரண்டு வேளை சாப்பிடாமலிருந்தால்தான் வயிற்றிலே ஏற்கனவே போட்டதில் துளிக்கூட ஜீரணமாகாமலில்லை என்று நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். இப்படி ஏற்கனவே சாப்பிட்டது முழுதும் ஜெரித்துப்போனதை (‘அற்றதை’) த் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே ஒருவன் மறுபடி உண்பானானால் அப்படிப்பட்டவனுடைய உடம்புக்கு மருந்து எதுவும் வேண்டாம் என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

ravi said…
சாப்பாட்டினால்தான் ஆரோக்யம் என்று நாம் நினைத்தாலும் வியாதிக்கும் அதுதான் முதல் தோழன் என்பதற்கு ஒன்று சொல்கிறேன். ஜ்வரம் வந்தால் டாக்டர் முதல் கார்யமாக என்ன பண்ணச் சொல்கிறார்? ‘சாப்பாட்டை நிறுத்து; கஞ்சி குடி; இல்லாவிட்டால் இன்னபானம் சாப்பிடு’ என்றுதானே சொல்கிறார்? எந்த நோயானாலும் அதற்குப் பத்தியமாக என்னென்ன சாப்பிடக் கூடாது என்றுதான் முக்யமாகக் கண்டிப்புப் பண்ணுவதிலிருந்தே வியாதிக்கு ஆதாரம் ஆஹாரம்தானென்று தெரிகிறது.

ravi said…
இப்படி சரீர ரீதியில் ஆரோக்யத்துக்கு நன்மை செய்கிற பட்டினியே அதைவிட ஆத்ம ஸம்பந்தமாக நல்லது செய்கிறது.

ஆஹாரங்களில் பல வகைகள் உடம்புக்குப் புஷ்டி தந்தாலும் மனஸைக் கெடுப்பவையாயிருக்கின்றன. ஸத்வ பதார்த்தமே சாப்பிட்டு வந்தாலுங்கூட உடம்புக்குள்ளே கெட்டியான சாப்பாடு ஒன்று போய் விழுந்தால் அது மனசை லேசாக்கி மேலே கிளம்ப விடாமல் கனமாகக் கீழே இழுத்துக்கொண்டுதானிருக்கும். இதனால்தான் நடு நடுவே சுத்தப் பட்டினி விதித்திருக்கிறது.

ravi said…
பட்டினி கிடக்கிறபோது மனசுக்குப் பரமார்த்திகமாகவும், பகவத் விஷயமாகவும் போய்த் தோய்ந்து நிற்கிற தன்மை உண்டாகிறது. இதனால்தான் பகவத் ஸ்மரணம் விசேஷமாக இருக்கவேண்டிய தினங்களில் பூர்ண உபவாஸமோ, ஒருபொழுதோ வைத்திருக்கிறது.

காந்திகூட ஆத்ம சுத்திக்காகவேதான் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லி அடிக்கடி பட்டினி கிடந்தார். அந்தச் சமயங்களில் தமக்குப் புத்தியிலே ஒரு தெளிவு ஏற்பட்டதாகவும் மனஸில் சுத்தி உண்டானதாகவும் சொல்லியிருக்கிறார்.

இப்படியாக உடல் நலத்தோடு உயிர் நலத்தையும் இம்மையோடு மறுமையையும் சேர்த்து ஆன்றோர்கள் உபவாஸ விதிகளைத் தந்திருக்கிறார்கள்.

அதோடு இப்படிப்பட்ட உபவாஸங்கள் எல்லா ஜனங்களாலும் அநுஷ்டிக்கப்பட்டால் உணவுத் தட்டுப்பாடு என்ற பிரச்னையே வராது.

முதலில் கஷ்டமாயிருந்தாலும் அப்யாஸத்தினால் சமாளித்து விடலாம். பக்தி பலத்தோடு, சங்கல்ப பலத்தோடு ஆரம்பித்தால் அதிலே தெரிகிற நல்ல பலனைப் பார்த்தே நாளுக்கு நாள் உபவாஸ நியமத்தில் ஈடுபாடு வலுக்கும்.

ravi said…
ஆரம்பத்தில் உடம்பை வாட்டுவது சிரமமாயிருந்தாலும் பிற்பாடு ஏற்படுகிற பெரிய இன்பத்துக்காக இதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

வ்ரதோபவாஸ நியமை: க்லேசித: ஸுகம் அச்நுதே |

இக்ஷு க்லேசாத் யதா (ஆ) நந்தம் ததா ப்ராப்நோதி தத் ஸுகம் ||

ravi said…
அதாவது, கரும்பைக் கசக்கிக் கிலேசப்படுத்துவதால்தான் கருப்பஞ்சாற்றை எடுத்துப் பானம் பண்ணுகிற இன்பம் கிடைப்பது போல, உடம்பைக் கிலேசப்படுத்துவதால்தான் உள்ளத்துக்கு ஸுக ரஸம் கிடைக்கிறது.

வியாபாரி முதலில் கையிலிருப்பதைச் செலவழித்துத்தான் பண்டங்கள் வாங்குகிறான். அப்புறம் அதை விற்று அதிகப் பொருள் சம்பாதிக்கிறான். அப்படியே உடம்பை முதலில் செலவழித்து, அப்புறம் அந்தச் செலவுக்கு மேல் பெரிய வரவு ஆத்மாவுக்கு சம்பாதித்துக் கொள்வதற்கே உபவாஸமிருப்பது.

ravi said…
சாப்பிடுகிற நாட்களிலும் பகவத் த்யானம் பண்ணுங்கள்; உபவாஸ நாளில் சாப்பிடாமலிருந்தும் த்யானம் பண்ணிப் பாருங்கள். தனக்கே வித்யாஸம் தெரியும். அந்த லாபத்துக்காக இந்த நஷ்டப் படலாம் என்று தெரிந்துகொள்வீர்கள். நான் நிறையச் சொல்வதைவிடப் பிரத்யக்ஷமாகப் பண்ணிப் பார்த்து விட்டாலே உபவாஸத்தின் அவச்யமும் பெருமையும் விளங்கிவிடும்.

வயிற்றை வற்றப் போடுகிற நாட்களில் மனசுக்கு த்யானாம்ருத போஜனத்தைக் கொடுத்துக் கொண்டால் எது பெரிய இன்பம் என்று தெரியும்.

சாப்பாடு இல்லாத வாய்க்கு அதைவிட ரஸம் சொட்டுகிற அவனுடைய நாமாமிருதத்தை, லீலாமிருதத்தை ஜபமாக, பஜனையாக, ஸ்தோத்ரமாக, பாராயணமாகக் கொடுத்துக் கொள்ள வேண்டும். காதுக்கு அம்ருத போஜனமாகக் கீர்த்தனையும், ஹரிகதையும் கிடைக்கப் பண்ணணும். ஏகாதசி புராண படநம்-ச்ரவணம் [படிப்பதும் கேட்பதும்] ரொம்ப விசேஷம்.

இதற்கெல்லாம் basic-ஆக, preliminary-யாகப் பண்ணவேண்டியது பட்டினி. அதைப் பண்ணினால்தான் இவற்றின் effect பூர்ணமாய்க் கிடைக்கும். அதனால்தான், ஆரம்பத்தில் சொன்ன ச்லோகத்தில் முதலில் ‘சுத்தோபவாஸ’த்தை ‘ப்ரதமம்’ என்று சொல்லிவிட்டு அதற்கப்புறமே ‘தத:’ என்று இரண்டாவதாக ‘ஸத்கதா ச்ரவண’த்தைச் சொல்லியிருக்கிறது.
ravi said…
ஆரத்தி எடுப்பது ஏன்?!

அறிவியல் பூர்வமான காரணங்கள்!!!

காலம், காலமாக நமது பழக்கவழக்கங்களில் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று ஆரத்தி எடுப்பது. தற்போது நாம் இதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில் தான் செய்து வருகிறோம்.

ஆனால், இது திருஷ்டி கழிப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறையல்ல. கடவுளை வழிப்படும் போது எதற்கு ஆரத்தி காண்பிக்கிறோம் என்று தெரியுமா?

இதன் பின்னணியில் பெரிய அறிவியல் காரணம் ஒன்று இருக்கிறது. நாம் தினந்தோறும் ஆரத்தி எடுப்பது கிடையாது. முக்கிய நாட்களில் மட்டுமே எடுப்போம்.

திருமணம் முடிந்த தம்பதியர், பிரசவம் முடிந்த பெண், வெளியூர் பிராயணம் முடித்து வரும் நபர்கள் என இவர்களுக்கு தான் நாம் பொதுவாக ஆரத்தி எடுப்போம்....

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்!

நம் முன்னோர்கள் ஏன் இந்த மாதிரயான சூழலில் மட்டும் ஆரத்தி எடுத்தார்கள், இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணிகள் என்னென்ன என்று காணலாம்.....

மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீர் நிரப்பி, மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீர் சிவப்பு நிறமாக மாறும்.

தீச்சுடர் அந்த சிவப்பு நீரை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து, அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகிறோம்.

கிருமிநாசினி மஞ்சள் ஓர் சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அறிந்தது தான். சுண்ணாம்புக்கும் இந்த திறன் உண்டு.

பிரசவித்த பெண், மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் நபர்கள், பிராயணம் செய்து வருபவர்கள் மீது கண்டிப்பாக கிருமிங்கள் அதிகம் அண்டியிருக்கும்.

இந்த கிருமிநாசினி நீரில் சூடமேற்றி உடலை சுற்றுவதால், உடல் மேல் அண்டியிருக்கும் கிருமிகள் அழிந்துவிடும்.

வாசலில் ஆரத்தி எடுப்பது ஏன்?

உடல் மேல் கிருமிகள் அண்டியிருக்கும் நிலையில், வீட்டுக்குள் வரும்போது அது வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை எளிதில் தொற்றிக்கொள்ளும்.

இது அவர்களுக்கு சிறுசிறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. அதனால் தான் வாசலிலேயே ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து வருகிறார்கள்.

முன்னோர்களின் அறிவியல் நமது முன்னோர்கள் எதையும் வெறுமென செய்து வைக்கவில்லை, அவர்களது செயல்களில் மருத்துவமும், அறிவியலும் புதைந்து இருக்கிறது என்பதற்கு ஆரத்தி எடுக்கும் முறை மற்றுமொரு சான்றாக விளங்குகிறது.

புரிதலின்மை சரியான புரிதலின்மையின் காரணமாக, இந்த தலைமுறையினர், இவற்றை எல்லாம் மூட நம்பிக்கை, வீண் சடங்குகள், அறிவியல் வளர்ந்த பிறகும் இதை ஏன் கடைபிடிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, நமது முன்னோர்களின் செயல்களில் ஒளிந்திருக்கும் ஆழமான விஞ்ஞானத்தை நாம் முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும்.
ravi said…
[03/01, 07:30] +91 96209 96097: *மஹேச்வர-மஹாகல்ப-மஹாதாண்டவ ஸாக்ஷிணீ*🙏
மோக்ஷம் ஞானம் போகம் வேண்டுவனற்றை அருள்பவள்
[03/01, 07:30] +91 96209 96097: *யுகாதிக்ருத்தேயே நமஹ*🙏
யுகத்தின் தொடக்கத்தை அருள்பவர்
ravi said…
🌹🌺 "Mahalakshmi who stands at the door will enter your house as Varalakshmi... a simple story 🌹🌺 -------------------------------------------------- ------

🌹🌺If women say this 1 line mantra when they wake up in the morning and open the front door, wealth and prosperity will increase in the house. Poverty never sets foot in the house.*

🌺 To stay Mahalakshmi Kataksam at home, very simple things that women should do
Mantra to recite:*

🌺🌹 'Welcome Varalakshmi'*🌹🌺

Say this one line mantra 🌺 and then open the door.

🌺 If you do this, Mahalakshmi standing at the door will enter your house as Varalakshmi.

🌺 There will be no poverty in a home that welcomes Mahalakshmi like this every day. You can follow this topic daily.

🌺 For those who can't do this on Friday only, Lakshmi Kataksam will remain at home.

🌺Sprinkling the door with kolam on Friday morning and drawing Mahalakshmi's feet on the door will bring Lakshmi Kadaksh to the house.


🌺 The women in the house wake up in whatever mood, other people in the house also start the day by looking at them. If the woman in the house is depressed and mentally troubled, the work of the people in the house will not go well.

🌺When the women of the house are always happy and smiling, the house becomes a temple🌹🌺

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *வீட்டு வாசலில் நிற்கும் மகாலட்சுமி, வரலட்சுமி ஆக உங்கள் வீட்டிற்குள் நுழைந்து விடுவாள்...என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺பெண்கள் காலையில் எழுந்து நிலை வாசல் கதவை திறக்கும் போது இந்த 1 வரி மந்திரத்தை சொன்னால், வீட்டில் செல்வ செழிப்பு பெருகும். வறுமை வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கவே வைக்காது.*

🌺வீட்டிற்குள் மகாலட்சுமி கடாட்சம் தங்குவதற்கு, பெண்கள் செய்ய வேண்டிய மிக மிக எளிமையாக
சொல்ல வேண்டிய மந்திரம்:*

🌺🌹 ‘வரலட்சுமியே வருக வருக’*🌹🌺

🌺என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லி அதன் பின்பு கதவை திறக்க வேண்டும்.

🌺இப்படி செய்தால் வீட்டு வாசலில் நிற்கும் மகாலட்சுமி, வரலட்சுமி ஆக உங்கள் வீட்டிற்குள் நுழைந்து விடுவாள்.

🌺தினம் தினம் மகாலட்சுமியை இப்படி வரவேற்கக் கூடிய வீட்டில் வறுமை என்பது நிச்சயம் இருக்காது. தினமும் இந்த விஷயத்தை நீங்கள் பின்பற்றி வரலாம்.

🌺முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை மட்டும் ஆவது இதை தொடர்ந்து செய்து வர வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும்.

🌺வெள்ளிக்கிழமை அதிகாலை வேளை வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு மகாலட்சுமியின் பாதங்களை நிலை வாசலில் வரைவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை வர வைக்கும்.


🌺வீட்டில் இருக்கும் பெண்கள் எந்த மனநிலையில் கண்விழிக்கிறார்களோ, அவர்களை பார்த்து தான் வீட்டில் இருக்கும் மற்றவர்களும் அந்த நாளை தொடங்குவார்கள். வீட்டில் இருக்கும் பெண் முகவாட்டத்தோடு மன கஷ்டத்தோடு இருந்தால், அந்த வீட்டில் இருப்பவர்களுடைய வேலையும் சரியாக ஓடாது.

🌺வீட்டுப் பெண்கள் எப்போதும் மன மகிழ்ச்சியோடு புன்னகையோடு இருக்கும்போது, அந்த வீடு கோவிலாக மாறும்🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*❤இன்றைய சிந்தனை..( 03.01.2023..)..*
*...........................................*

*" சிக்கல் வரும் போது..''*
*...........................................*

சிக்கல் வரும் போது, ஒட்டுமொத்தச் சிக்கலையும் எண்ணி மலைக்கவோ, மருளவோ, தயங்கவோ கூடாது.

சிக்கலைப் பகுதிகளாகப் பிரித்துப் பகுத்து, காரணம் அறிந்து, ஒவ்வொன்றாகத் தீர்வு கண்டால் ஒட்டு மொத்த சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும்.

சிக்கலுக்கான காரணம் கண்டறியப்பட்டு அதன் வழி தீர்வுக்கு வர வேண்டும்.

நூற்கண்டு சிக்கலாகி விட்டால் ஒட்டு மொத்தமாகப் பிடித்து இழுத்தால் இன்னும் சிக்கலாகி விடும்.

நூலின் தலைப்பைக் கண்டறிந்து அதன் வழி சிக்கலைத் தீர்த்தால் சிக்கல் தீர்ந்து விடும்

ஒரு நிர்வாகியின் அறையில் ஒரு கணினியின் படமும், அதன் கீழே.,

"சிக்கல்களுக்கு தீர்வு...Ctrl + alt + del +" என்றிருந்தது.

அவரிடம் விளக்கம் கேட்ட போது சொன்னார்,

Ctrl என்பது ( Control ),(கட்டுப்படுத்தல்)

alt என்பது ( alternate) ,( மாற்று..)

del என்பது (delete ),( நீக்குதல்..

சிக்கல் வரும் போது நம்மை நாமே
கட்டுப்படுத்தி, மாற்று வழியை யோசித்தால் வந்த சிக்கலை நீக்கி விடலாம்"..

வாழ்க்கைக்கு உதவும் கணினியின் குறியீட்டு சொற்கள் இவை என்றார்.,

*ஆம்.,தோழர்களே.,*

*மாற்றத்தை ஏற்படுத்தினால் தான் முன்னேற முடியும் என்பதைப் புரிந்து கொண்டு புதிய சிந்தனைகளை புகுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.*

*வழக்கமாக செய்கின்ற வேலைகளை மாற்றி செய்வதற்கு முயற்சித்தாலே போதும். மாற்று சிந்தனைகள் மலரத் தொடங்கி விடும்.*

*வாழ்வில் சிக்கல்கள் ஏற்படும் போது அவற்றைத் தீர்க்க முனையும் போது அதற்காக பல மாற்று வழிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் எந்த சிக்கல்களில் இருந்தும் வெளிப்படலாம்..✍🏼🌹*

ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 52 started on 6th nov

*பாடல் 16 ... பேராசை எனும்*

(பேராசையில் கலங்குவது நியாயமா முருகா?)

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே
ravi said…
*பாடல் 17 ... யாம் ஓதிய* 🙏

(கற்றதன் பலன் கந்தன் கழலடிக்கு தன்னை அர்ப்பணம் செய்வதே)

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே
ravi said…
*யாம் ஓதிய கல்வியும்* ... நாம் கற்று உணர்ந்த கல்வி அறிவும்,

*எம் அறிவும்* ... நமக்கு இயற்கையாகவே அமைந்த உண்மை அறிவும்,

*தாமே பெற* ... தாமே திரும்பப் பெற வேண்டி,

*வேலவர் தந்ததினால்* ...

வேலாயுதக் கடவுள் நமக்குக்
கொடுத்ததினால்,

*பூ மேல்* ... இப் பூமியில்,

*மயல் போய்* ... நீங்கள் மயக்கங்களை விட்டு,

*அற மெய்ப் புணர்வீர்* ... தர்மத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடித்து
வாழும் உத்தம சீலர்களே,

*இனி நா மேல் நடவீர் நடவீர் ...*

நம்மை அவனுக்கு அர்ப்பணித்து
அவனுடைய புகழைச் சொல்லிச் சொல்லிப் பாடுங்கள்🙂🙂🙂
ravi said…
நாம் கற்ற கல்வியும், நம்மிடம் இயல்பாகவே அமைந்த மெய்ஞானமும்
தாமே திரும்பப் பெற முருகப் பெருமான் கொடுத்து அருள் செய்ததால்
அதற்குக் கைமாறாக அவனுக்கு நமது புலமையை அர்ப்பணம்
செய்யவேண்டும்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 429*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

ஸ்லோகம் 58 contd ...
ravi said…
மூக பஞ்ச ஸ்துதிலயும் இதே மாதிரி ஒரு ப்ரார்த்தனை இருக்கு.

மனோகே³ஹே மோஹோத்³ப⁴வதிமிரபூர்ணே மம முஹு:
த³ரித்³ராணிகுர்வந்தி³னகரஸஹஸ்ராணி கிரணை: ।

வித⁴த்தாம் காமாக்ஷி ப்ரஸ்ருʼமரதமோவஞ்சனசண:
க்ஷணார்த⁴ம் ஸான்னித்⁴யம் சரணமணிதீ³போ ஜனனி தே ॥ 26 ॥
ravi said…
என்னுடைய மனமாகிய வீட்டில், ‘ *மோஹோத்³ப⁴வதிமிரபூர்ணே’ –* மோஹத்தினால, ஏற்பட்ட அஃஞானம், பூர்ணமா இருக்கு,

அதனாலதான், நான் இன்னும் உன்னுடைய, பாதத்தை தர்ஶ்னம் பண்ணலை. உன்னுடைய பாதமோ, ஆயிரம் ஸுர்யர்களுக்கும், மேலான ஒளியோட விளங்குகிறது.

அதோட, ஒரு கீத்து, ஒரு க்ஷ்ணம்!, என்னோட மனஸுல வந்துட்டதுன்னா, இந்த இருட்டைல்லாம், போயிடுமே, அம்மா!.

உன் பாத தர்ஶ்னம் கொடு, அப்படின்னு, ப்ரார்த்தனை பண்ணுறார்

இதே மாதிரி ஒரு ஸ்லோகம். அந்த மாதிரி ஸ்லோகங்களை சொல்லி ஸ்வாமிகிட்ட ப்ரார்த்தனை பண்ணிப்போம்
ravi said…
தகவல் உலா



*தினம் ஒரு குட்டிக்கதை.*

போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.

அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.

எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு".

அங்கே ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார்.

தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதவில்லை. எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன். தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.

என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடித்ததே கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறி கொண்டு தான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி.

மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?

மனித நேயம் சாகவில்லை...

இதுதான் பணத்தாலும் விலைக்கு வாங்க முடியாத நம் நாட்டுக்கே உரிய மனித நேயம்!!

ravi said…
*🙇🏻‍♂️ _TODAY'S G.K._ 🙇🏻‍♀️*


*🤔 Do you know?*

1. Charles Dickens is the first person who wrote story as a serial in magazine.

2. Satellite was first launched by Russians.

3 Passenger rail transport was first launched in 1820 in England.

4. Galileo was the first man who saw the moon through telescope.

5.The world's first museum is Asmoliyan Museum in Oxford.

6.The world's first traffic signal was used in the city of London in 1868.

7.China was the first country where they produce and use wooden beds.

8.The first horse race was conducted in America.

9.The Cone icecream was first prepared by Marconi.

10. Lipstick was first introduced by France.

*🤔 உங்களுக்குத் தெரியுமா?*

1. பத்திரிகைகளில் முதன் முதலில் தொடர்கதை எழுதிய எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்.

2. முதன் முதலில் செயற்கைக்கோளை அனுப்பிய நாடு ரஷ்யா.

3. பயணிகள் ரயில் போக்குவரத்து முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் 1820ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

4. நிலவை முதன் முதலில் தொலைநோக்கி வழியாக பார்த்தவர் கலிலியோ.

5. உலகில் முதன் முதலில் தொடங்கப்பட்ட அருங்காட்சியகம் ஆக்ஸ்போர்டிலுள்ள ஆஸ்மொலியன் அருங்காட்சியகம்.

6. உலகில் முதன் முதலில் போக்குவரத்து சிக்னல் 1868-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன்படுத்தப்பட்டது.

7. முதன் முதலில் சீனர்கள்தான் மரப்படுக்கைகளைத் தயாரித்து பயன்படுத்தினார்கள்.

8. அமெரிக்காவில் தான் முதன் முதலில் குதிரைப் பந்தயம் தோன்றியது.

9. முதன் முதலில் கோன் ஐஸ்கிரீமை தயாரித்தவர் மார்கோனி.

10. உலகில் முதன் முதலில் உதட்டுச்சாயம் அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ் ஆகும்.


ravi said…
*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*


நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!
டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,
“சார் பின்னாடி போய் உட்காருங்க.
நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.
தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.
என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!
*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*
*சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*
*சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*
*இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*
எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,
உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*
*உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா?*
*எடுத்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!*
*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*
எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.
*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*.
*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*
*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*
*உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!*
எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.
*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?*
யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.
*"தீதும் நன்றும் பிறர்தர வாரா".*

ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍️*


*SYLLOGISM*

*(முக்கூற்று முடிவு, விதிதருமுறைவாதம், நேரியல் வாதமுறை.)*

meaning...... a line of reasoning in which a conclusion is drawn from two related premises.....


1. If you believe that all water is safe to drink just because water from a bottle is safe to drink, you have used *syllogism* to reach a wrong conclusion.


2. Some people use *syllogism* to say that just because one person is bad and they are part of a certain culture that the entire culture is equally bad.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

_*☘️உங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதில் அதிக கவனத்தை செலுத்துங்கள். ஏனென்றால், உங்கள் வாழக்கையில் மீதி இருக்கும் பகுதியை அங்கு தான் கழிக்கப் போகிறீர்கள்.*_

_*☘️உங்கள் எதிர்காலத்திற்காக*_
_*உங்களுக்கு இருக்கும் ஒவ்வொரு நொடியிலும்,*_

_*☘️நல்ல சிந்தனைகளையும் செயல்களையும் உங்களுக்குள் விதைத்து கொண்டே இருங்கள்.*_

_*☘️எதை நினைத்தும் கவலைப்படாதீர்கள்.*_

_*☘️வீணான கவலையினால், உங்கள் வாழ்வின் இனிய தருணங்களை நீங்கள் இழக்க நேரிடும்.*_

_*☘️வளைவுகள் இல்லாத பாதையும் இல்லை. கவலைகள் இல்லாத வாழ்க்கை பயணமும் இல்லை.*_

_*☘️துணிவோடும், நம்பிக்கையுடனும் செல்லுங்கள் நீங்கள் அடையும் இலக்கு மிக அருகில்.*_

_*☘️இனிய காலை வணக்கம்*_

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
ravi said…
*❤இன்றைய சிந்தனை..( 03.01.2023..)..*
*...........................................*

*" சிக்கல் வரும் போது..''*
*...........................................*

சிக்கல் வரும் போது, ஒட்டுமொத்தச் சிக்கலையும் எண்ணி மலைக்கவோ, மருளவோ, தயங்கவோ கூடாது.

சிக்கலைப் பகுதிகளாகப் பிரித்துப் பகுத்து, காரணம் அறிந்து, ஒவ்வொன்றாகத் தீர்வு கண்டால் ஒட்டு மொத்த சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும்.

சிக்கலுக்கான காரணம் கண்டறியப்பட்டு அதன் வழி தீர்வுக்கு வர வேண்டும்.

நூற்கண்டு சிக்கலாகி விட்டால் ஒட்டு மொத்தமாகப் பிடித்து இழுத்தால் இன்னும் சிக்கலாகி விடும்.

நூலின் தலைப்பைக் கண்டறிந்து அதன் வழி சிக்கலைத் தீர்த்தால் சிக்கல் தீர்ந்து விடும்

ஒரு நிர்வாகியின் அறையில் ஒரு கணினியின் படமும், அதன் கீழே.,

"சிக்கல்களுக்கு தீர்வு...Ctrl + alt + del +" என்றிருந்தது.

அவரிடம் விளக்கம் கேட்ட போது சொன்னார்,

Ctrl என்பது ( Control ),(கட்டுப்படுத்தல்)

alt என்பது ( alternate) ,( மாற்று..)

del என்பது (delete ),( நீக்குதல்..

சிக்கல் வரும் போது நம்மை நாமே
கட்டுப்படுத்தி, மாற்று வழியை யோசித்தால் வந்த சிக்கலை நீக்கி விடலாம்"..

வாழ்க்கைக்கு உதவும் கணினியின் குறியீட்டு சொற்கள் இவை என்றார்.,

*ஆம்.,தோழர்களே.,*

*மாற்றத்தை ஏற்படுத்தினால் தான் முன்னேற முடியும் என்பதைப் புரிந்து கொண்டு புதிய சிந்தனைகளை புகுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.*

*வழக்கமாக செய்கின்ற வேலைகளை மாற்றி செய்வதற்கு முயற்சித்தாலே போதும். மாற்று சிந்தனைகள் மலரத் தொடங்கி விடும்.*

*வாழ்வில் சிக்கல்கள் ஏற்படும் போது அவற்றைத் தீர்க்க முனையும் போது அதற்காக பல மாற்று வழிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் எந்த சிக்கல்களில் இருந்தும் வெளிப்படலாம்..✍🏼🌹*

ravi said…
*18. நப்பின்னையிடம் வேண்டுகோள்!*

*திருப்பாவை-18ஆம் பாசுரம்:*

_உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்_
_நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்_
_கந்தம் கமழும் குழலி கடை திறவாய்_
_வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்_
_பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்_
_பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட_
_செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப_
_வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்_ .

மதம் பிடித்த யானையோடு
மல்யுத்தம் புரிபவன்;
நிதம் யுத்த களத்தினிலே
நீசரைக் கண்டு எரிபவன்!

அவன்தான் நந்தகோபன்;
அரக்கரின் முகம்கண்டால்
அனலாய் வெந்தகோபன்!

அத்தகைய வீரனின் மருமகளே!
ஆயர்பாடி யசோதையின்
மறுமகளே!

குழல் கொண்டவனைத் தன்
குழலில் கொண்டவளே!
மயிற்பீலி செருகியவனைத் தன்
மையற்பீலியில் செருகியவளே!

கன்னியர் நாங்கள்
மகிழ்ச்சியுற-
கண்ணே! கொஞ்சம்
கதவைத் திற!

வாயிலில்-
வந்து கூவினவே கோழி!
வான் விடிந்து-
ஆயிற்றே பல நாழி!
ஆயினும்-
கதவு திறக்கவில்லையே
தோழி!

கொடிகளில் அமர்ந்தவாறே
கோகிலங்கள் கூவிட-
காலைப்பால் குடித்திட
கன்றுக்குட்டிகள் மேவிட-

பொழுது புலர்வதே தெரியாமல்
பெண்ணே! உனக்கு உறக்கமோ?
நேசத்துக்குரியவன்
நெருக்கத்தில் இருந்தால்-
நேரம் பொழுது மறக்குமோ?

பூப்பந்தை வருடுகின்ற
பூவிரல்கள் கொண்டவளே!
பூவராகப் பெருமானைப்
புருடனாய்க் கொண்டவளே!

மனதுக்கினியானின் நாமத்தை
மனனம் செய்து-
மங்கையர் நாங்கள் ஒப்பிக்க...
கமலமொத்த
கரங்களின் வளைகள்-
கரகோஷங்கள் ஒலிப்பிக்க...

கதவைத் திறவாய் கண்ணே!
கண்ணனை-
காண விழையும்-எம் கண்ணே!

- S.நடராஜன், சென்னை
ravi said…
*அடுத்தவர்கள்..*
*திரும்பி பார்க்கவேண்டும்*
*என்று வாழ ஆரம்பித்துவிட்டால்..!*

*நீ திரும்பி பார்க்கும்போது..*
*உனக்கான வாழ்க்கையை*
*வாழ்ந்திருக்க மாட்டாய் !*

*உனக்காக வாழு !*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
எல்லாமும் அழிவதை பார்த்துக் கொண்டே தன் வாழ்வு மட்டும் நிலையானது என்று எண்ணி மனித மனம் துன்பத்துக்கு ஆளாகிறது.
- புத்தர்.

பலசாலிகள் என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை. அடுத்தவர்களுடைய
பலவீனத்தை பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் பலசாலிகளாக வலம் வருகிறார்கள்.

தன்னை காயப்படுத்திய ஒருவரை விட்டு மௌனமாக விலகிச் செல்பவர்தான் உண்மையான பக்குவநிலை அடைந்தவர் ஆவார்.

அமைதியாக இருப்பது மிக மிக கடுமையான விஷயம் தான் அப்படி இருக்க பழகி விட்டால் நிம்மதி நம்மை தேடி வரும்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 43*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
उररीकृतकाञ्चिपुरीमुपनिषदरविन्दकुहरमधुधाराम् ।

उन्नम्रस्तनकलशीमुत्सवलहरीमुपास्महे शम्भोः ॥ २७॥

27. Uraree kutha Kanchi pureem Upanishad aravinda kuhara Madhu dharam,

Unnamrastha kalaseemuthsava laharimupasmahe Shambho.

உரரீக்றுதகாஞ்சிபுரீமுபனிஷதரவின்தகுஹரமதுதாராம் |

உன்னம்ரஸ்தனகலஶீமுத்ஸவலஹரீமுபாஸ்மஹே ஶம்போஃ ||27||
ravi said…
புஷ்பங்களிலிருந்து தேன் பெருகி வழிந்து ஓடுவது என்று சொன்னது உதாரணம்.

அவள் தான் அம்ருத கலசம்.

அவளிடமிருந்து பெருகி வெளியேறுவது தான் வேதங்களின் சாரமான
உபநிஷத்துக்கள் என்னும் தேன் சாறு.

குருவான பரமேஸ்வரனுக்கு மகிழ்ச்சி தரும், ஆனந்தமளிக்கும், காஞ்சி மாநகருக்கு பெருமை தரும் காமாக்ஷியை தரிசிக்க பாக்யம் செய்தேன். 🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 447* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*183 நிஷ்பரிக்ரஹா* --

யாருடைய உதவியும், எந்த விதமான உதவியும் தேவையற்றவள் லலிதாம்பிகை.

பக்தர்கள் இதைச்செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பு இல்லாதவள் என்கிறார் ஹயக்ரீவர்.🙂🙂🙂
ravi said…
குத்து விளக்கெரிய,

யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில்,

விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின்

மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த *கண்ணா*

நீ எங்களுடன் பேசுவாயா?

மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே!

நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை.

கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய்.

இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?

உன் கணவன் தான் உனக்கு மட்டும் தான் ... நாங்கள் வேண்டுவது அவன் திருவடியை மட்டுமே

மூன்றடி அளந்தே எங்களையும் அவன் தன் அடிமையாக்கி கொண்டான் ... அவன் பார்வை ஒன்றுக்கே எங்குகிறோம்

ஒரு பெண் மனதை இன்னொரு பெண் அன்றோ புரிந்து கொள்வாள் ..

நீ புரிந்து கொள்ளாமல் இருப்பது உனக்கு அழகா ? 💐💐💐
ravi said…
குத்து விளக்கெரியக்

கோட்டுக்கால் கட்டில் மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை

கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா!

வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்!

நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.🙂🙂🙂
ravi said…

பழனிக் கடவுள் துணை -03.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-17

மூலம்:

பகையும் உறவு(ம்) நல்கும் பாசமற்ற ஞான
மிகையுதிக்கு மாறொருசொல் விள்ளாய் – சிகைநிமிர்த்துக்
கூவும்(அ)டற் சேவற் கொடிப்பழனிக் குன்றுடையாய்!
யாவுமுன(து) ஆடலென்(று)ஓர்ந் தேன் (17).

பதப்பிரிவு:

பகையும் உறவும் நல்கும் பாசம் அற்ற ஞான
மிகையுதிக்கு மாறொரு சொல் விள்ளாய்! – சிகை நிமிர்த்துக்
கூவும் அடல் சேவல் கொடிப் பழனிக் குன்று உடையாய்!
யாவும் உனது ஆடல் என்று ஓர்ந்தேன்!! (17).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

நடக்கின்ற எல்லாம் பழனிப்பெருமாளே உன் திருவிளையாடலே என்று எல்லாம் வல்ல எம் பெருமானிடம் சரணாகதி புகுகின்ற ஒரு அற்புத வெண்பா.

பாசம்- பகை, உறவு இவற்றை நல்கும். ஆனால், ஞானம் அவற்றை அகற்றும்.

பகை, உறவு நல்கும் பாசத்தை அகற்றவல்ல ஞானத்தின் அதிபதியே! ஞானம் மிகுந்து வர, எனக்கு அருள் கூறாய்! ஞானச் சொல் பகராய்! தலை நிமிர்த்துக் கூவும், வெற்றியுடைய சேவல் கொடியை உடைய, பழனி மலையின் சொந்தக்காரனே! யாவும் உனது திருவிளையாடலே என்று அறிந்து தெளிந்தேன்! நன்றே வருகினும், தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றும் இல்லை! எல்லாம் உன் செயல்! உன் ஆட்சியின் கீழே! பழனாபுரிப் பெருமாளே! நீயே என்னைக் காத்து இரட்சிப்பாய்!

ஊனக் கண்ணுடைய என்னை உன் ஞானக் கண்னால் நோக்கு!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
*❖ 70 கிரிசக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா =*

கிரிசக்ரம் எனும் தேரேறும் தண்டநாதா (வாராஹீ) எனும் தேவி புடைசூழ திரண்டிருப்பவள்🐷🐷🐷
ravi said…
*அம்மா* ...

கையில் தண்டம் தாங்கி கண்களில் நாதம் தருபவளே ...

*வாராஹீ* என்றே சொன்னால்

வாரதே தீமை எதுவும்

சூழாதே என்றும் கவலைகள் எதுவும்

பாடாதே என்றும் வறுமைகள் ...

பிணி தீர்ப்பவளே பகைவர்க்கு பிணி தருபவளே ...

உன் பிஞ்சு கரங்களில்

அஞ்சி வாழும் எம்மை அணைத்திடுவாய்

எஞ்சி நிற்கும் வாழ்வு தனில் ஏற்றம் தந்துடுவாய் ..

உனை கொஞ்சி விளையாடும் பஞ்சு என்னை தஞ்சம் கொள்வதில் தடை ஏதும் உனக்கு உண்டோ தாயே 🐷🐷🐷
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

29 –
சித்தம் குளிரக் கதிர் அத்தம் வைத்து

அமுத
வாயைத்திற அருண்மதி அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா*

சூரியன் எங்கே உதித் தால் எங்களுக்கென்ன?

அழகான வரம் ஒன்று தந்தாய் என் வாழ்க்கை துணையும் உனையே சிந்திப்பவராய் ...

இது மாபெரும் வரம் அன்றோ

அது மட்டுமா

என் உறவினர் தோழர்கள் தோழிகள் ஒருவர் விடாமல் உனையே ஒருவன் என்று வணங்கும் அருள் தந்தாய்

அது மட்டுமா ..

உன் வடிவே ஆன சங்கரன் எங்கள் இடையே உலவ செய்தாய் அது மட்டுமா ...

காஞ்சி பெரியவாளாய் காமாக்ஷியாய் நீ வந்து நடமாடும் தெய்வம் ஆனாய் ...

திருவாரூரில் சுந்தரன் துணைக்காக தெரு தெருவாய் நடந்தாய் ...

மீண்டும் பூமி செழிக்க சுவாமிநாதனாய் வந்தே உள்ளம் கொள்ளை கொண்டாய் ...

கொடுப்பதற்கு உன் போல் தெய்வம் உண்டெனில்

சூரியன் எங்கு உதித்து எங்கு மறைந்தால் எங்களுக்கென்ன ?

மனம் குளிர உன் பிறை நிலவை தந்தே

அமுதம் என எங்கள் மனம் குளிர வைப்பவன் நீ அன்றோ *அருணாசலா*🙏🙏🙏
ravi said…
🌹🌺 "Mahalakshmi who stands at the door will enter your house as Varalakshmi... a simple story 🌹🌺 -------------------------------------------------- ------

🌹🌺If women say this 1 line mantra when they wake up in the morning and open the front door, wealth and prosperity will increase in the house. Poverty never sets foot in the house.*

🌺 To stay Mahalakshmi Kataksam at home, very simple things that women should do
Mantra to recite:*

🌺🌹 'Welcome Varalakshmi'*🌹🌺

Say this one line mantra 🌺 and then open the door.

🌺 If you do this, Mahalakshmi standing at the door will enter your house as Varalakshmi.

🌺 There will be no poverty in a home that welcomes Mahalakshmi like this every day. You can follow this topic daily.

🌺 For those who can't do this on Friday only, Lakshmi Kataksam will remain at home.

🌺Sprinkling the door with kolam on Friday morning and drawing Mahalakshmi's feet on the door will bring Lakshmi Kadaksh to the house.


🌺 The women in the house wake up in whatever mood, other people in the house also start the day by looking at them. If the woman in the house is depressed and mentally troubled, the work of the people in the house will not go well.

🌺When the women of the house are always happy and smiling, the house becomes a temple🌹🌺

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஏன் திராவிட வேதம் எனப்படுகிறது..?

வைணவத்தின் அடிநாதமே சரணாகதி..
பணிதல்..

பக்தி என்பது குலம் சார்ந்து வருவதல்ல..
அது பூர்வ புண்ணியத்தால் வருவது..

பன்னிரு ஆழ்வார்களில் ,

முதலாழ்வார்கள் மூவரும் அயோநிஜர்கள்..
அதாவது கண்டெடுக்கப்பட்டவர்கள்..

மழிசைப் பிரான் தனக்குத் தானே விளக்கம் தருகிறார், அந்திம வம்சம், பஞ்சம சாதி என்று..

பெரியாழ்வார் எனப்படும் விட்டுச் சித்தன் வேயர் குலத்தவர்..
அவரது வளர்ப்பு மகள் ஆண்டாளோ கண்டெடுக்கப்பட்டவள்..

குலசேகர ஆழ்வார் கொங்கு வேளாளர்..
கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்..
விப்ரநாராயணனான தொண்டரடிப்பொடியாழ்வார் பிராமணர்..

திருப்பாணாழ்வார் பாணர் குலத்தவர்..

நம்மாழ்வார் சைவ வேளாளர்..
அவர்தம் சீடரான மதுரகவி ஆழ்வார் பிராமணர்..

கடைக்குட்டி ஆழ்வாரான மங்கை மன்னனோ கள்ளர் இனத்தவர்..

ஆனால் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னரே,
திருமால் என்கிற ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி,
சாதி மறுப்பு முழங்கியது வைணவம்..

குறிப்பாக,
நாலாயிர திவ்யப் பிரபந்தம்..

திராவிடம் என்றால் வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரிக் கண்டம் வகையான தமிழகம் என்றே கருத வேண்டும்..
குடகும், கேரளமும் உள்பட..

தமிழ் வேதம் என்பதையே இங்கு திராவிட வேதம் என்கிறோம்..

இழிகுலத்தவர்களேனும் எம் அடியார்கள் ஆகில், தொழுமினீர்.. கொடுமின், கொண்மின் என்று ஆரவரிக்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்..

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து எத்தனை
நலந்தானில்லாத சண்டாள சண்டாளர்களாகிலும்,
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே...
என்று இன்னும் உயரம் தொடுகிறார் நம்மாழ்வார்..

புந்தியால் சிந்தியாது, ஓதி உருவெண்ணும்
அந்தியால் ஆம்பயன் அங்கென் என்று பக்திக்கு இலக்கணமே சொல்கிறார் முதலாழ்வாரான பொய்கையார்...

அதாவது, இறைவனை மனதால் இடைவிடாது சிந்திப்பதை விட்டு, வெறுமனே மந்திரங்களை உருப்போடுவதோ, கடனே என்று சிரத்தையில்லாமல் சந்தியா வந்தனம் செய்வதாலோ என்ன பயன் என்கிறார்..

வைணவம் என்கிற தேருக்கு அச்சாணி போன்றவர் எம்பெருமான் யதிராஜர்,
உடையவர் ஸ்ரீ இராமானுஜர்...

உலகத்தை உய்விக்க வல்ல எட்டெழுத்து மந்திரத்தை தனக்கெனப் பொத்தி வைத்துக் கொள்ளவில்லை அவர்...
ஊரும், நாடுமறிய கோட்டியூர் கோபுரத்தின் மீதேறியே முழங்கினார்..

ஓம் நமோ நாராயணாய..

எம்பெருமான் திருவடிகளே சரணம்..
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 15*

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்

*பொருள்*

சிவாய நம என்று கூறும் ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் உபாயமாகும். அவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. இதைத் தவிர நாம் மதி / அறிவு என்று நினைக்கும் அனைத்து விஷயங்களும் விதியின் வழியில் தான் செல்லும்

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
பாதாரவிந்த சதகம் !

61.ஜனோயம் ஸந்தப்தோ ஜனனி பவ சண்டாம்சு' கிரணை:
அலப்த் வைகம் சீ'தம் கணமபி
பரக்ஞான பயஸ:
தமோ மார்க்கே பாந்தஸ் தவ ஜடிதி காமாக்ஷி சி'சி'ராம்
பதாம்போஜச் சாயாம் பரமசி'வ ஜாயே ம்ருகயதே

அன்னையே ! பரம சிவனின் இல்லாளே ! காமாக்ஷி ! இருள் சூழ்ந்த பாதையில் பிறப்பிறப்புத் தொடரெனும் சூரியனின் உக்கிர கிரணங்களால் வாடிய இந்த வழிப்போக்கனான மானுடன், பேரறிவு நீரின் குளிர்ந்த ஒரு துளியைத் கூடப்பெறாமல் தவித்தவனாக, குளிர்ந்த உன் திருவடித் தாமரைகளின் நிழலைத் தேடி அலைகிறான்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ந்ருத்தாவஸானே நடராஜ ராஜோ நநாத டக்காம் நவபஞ்ச வாரம்|
உத்தர்துகாம: ஸனகாதி ஸித்தான் ஏதத் விமர்சே சிவ ஸூத்ர ஜாலம்|| *
என்று ஒரு ச்லோகம் இருக்கிறது. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுகிறேன்.
பேசாத சிவன் ஆடாமல் அசங்காமலிருப்பார். அவரே ஒரே ஆட்டமாக ஆடுகிறபோதுதான் பாஷா சாஸ்திரமே பிறந்தது. இதை மேற்படி ச்லோகம் தெரிவிக்கிறது.
நடராஜர் என்பது ஆடும் பரமேசுவரனுடைய பெயர். நடன், விடன், காயகன் என்ற உல்லாச கலைக்காரர்களில் நடன் நாட்டியம் செய்பவன். அந்த நடர்களுக்கெல்லாம் ராஜா நடராஜா. யாரைக் காட்டிலும் உயர்ந்த நடனம் செய்யமுடியாதோ அவன்தான் நடராஜா. மஹா நடன் என்று அவன் சொல்லப்படுகிறான். “
ravi said…
மஹாகாலோ மஹாநட:” என்று ஸம்ஸ்கிருத அகராதியான “அமரகோசம்” சொல்கிறது. ‘அம்பலக் கூத்தாடுவான்‘ என்று தமிழில் சொல்லுவார்கள். ‘அம்பலக் கூத்தாடுவான் பட்டன்‘ என்பது பிராமணர்களுக்கு உரிய பெயராக இருந்ததென்று சாஸனங்களால் தெரிய வருகிறது. ஆதியில் பிராம்மணர்களும் இப்படி நல்ல தமிழ்ப் பெயராக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவம்பலக் கூத்தாடுவானென்பது நடராஜாவுடைய தமிழ்ப்பெயர். அவருக்கும் வியாகரணத்துக்கும் உள்ள ஸம்பந்தத்தைத்தான் சொல்ல வந்தேன். “ந்ருத்தாவஸாநே” ச்லோகத்தின் விஷயம் இதுதான். அவர் பெரிய கூத்து ஆடுகிறார். நாமெல்லாம் ஆடவேண்டிய கூத்தைச் சேர்த்து வைத்து அவர் ஆடுகிறார். அந்த நடராஜ விக்கிரஹத்தின் தலையில் படர்ந்தாற்போல் ஒன்று இருக்கும்; அது இரண்டு பக்கத்திலும் நீண்டு இருக்கும். அதில் சந்திரன் இருக்கும். கங்கையும் இருக்கும். அது என்ன? அதுதான் நடராஜாவுடைய ஜடாபாரம். இந்தக் காலத்தில் போட்டோ எடுக்கிறார்கள். அதில் “ஸ்நாப்-ஷாட்” என்பது ஒன்று. ஒரு வஸ்து சலனத்தில் இருக்கும்பொழுதே, திடீரென்று ஒர் அவஸரத்தில் போட்டோ எடுப்பது அது. நடராஜா வெகு வேகமாக நர்த்தனம் பண்ணுகிறார். பண்ணி நிறுத்தப் போகிற ஸமயத்தில் ஜடாபாரம் இரண்டு பக்கங்களிலும் நீட்டிக்கொண்டு இருக்கும். அந்த நிலையை அந்தக் காலத்துச் சிற்பி மனஸிலே எடுத்த ஸ்நாப்-ஷாட் தான் அந்த ஸ்வரூபம்.
நடராஜாவுடைய கையில் ஒரு உடுக்கு இருக்கிறது. அது குடுகுடுப்பாண்டி வைத்திருப்பதைவிடப் பெரியது, மாரியம்மன் கோயிற் பூஜாரி வைத்திருப்பதைவிடச் சிறியது. அதற்கு டக்கா என்றும் டமருகம் என்றும் பெயர்கள் உண்டு. பாதத்தின் தாளத்தை அநுஸரித்து, அந்த டமருக தாளமும் இருக்கும். இதன் ஒலியைத்தான் மேலே ச்லோகத்தில் ‘நநாத டக்காம்’ என்று சொன்னது.
ravi said…
தேப்பெருமாநல்லூர் ஸ்ரீவிசுவநாத சுவாமி கோவில்

ஸ்ரீ அன்னதான தட்சிணாமூர்த்தி

கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி. யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும் என்பது நம்பிக்கை.

இக்கோவிலின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் காலடியில் முனிவர்கள் இல்லை. அதற்கு பதில் நாகம் ஒன்று படம் எடுத்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இவரை ஸ்ரீஅன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இவருக்கு பழைய சோறு (அதாவது முதல் நாள் சமைத்து இரவு தண்ணீர் ஊற்றிய அன்னம்) நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்பது நம்பிக்கை
இவருடைய அருளால் தான்
தேப்பெருமாநல்லூர் இராமசாமி
என்பவர் நிறைய அன்னதானம் செய்து அன்னதான சிவன்
என்றழைக்கப்பட்டார்( இரண்டாவது படம்)
மதுரகாளிதாசன்
ravi said…
[04/01, 07:24] +91 96209 96097: *யுகா வர்த்தாயை நமஹ*🙏
யுகத்தின் தர்மங்களை சுழற்றுபவர்
[04/01, 07:24] +91 96209 96097: *மஹாகாமேச-மஹிஷீ* மஹாத்ரிபுரஸுந்தரீ🙏
இதயத்தில் அறத்தின் படி வாழும் எண்ணத்தை தோற்றுவிற்பவள்
ravi said…
பாதாரவிந்த சதகம் !

62.ஜகத்யம்ப ஸ்ரீமந் நக கிரண சீனாம்சு'க மயம்
விதானம் பிப்ராணே ஸுர முகுட ஸங்கட்ட மஸ்ருணே
நிஜாருண்ய க்ஷெளமாஸ்
தரணவதி காமாக்ஷி ஸுலபா
புதை:ஸம்விந்நாரீ தவ சரண மாணிக்ய பவனே

தாயே ! காமாக்ஷி ! உன் திருவடிகளாகிற ரத்தினமாளிகை, மிக
அழகிய நகெஒளியாகிற சீனப்பட்டாலான மேல் கட்டியுள்ளது.
தேவர்களின் கிரீடங்கள் உரசுவதால் வழவழப்புள்ளது. செந்நிறமாகிய பட்டுவிரிப்புள்ளது. அதில் பேருணர்வு என்ற பெண் ஞானிகளால் எளிதில் பெறத்தக்கவளாக விளங்குகிறாள்.
ரத்தின மாளிகையில் அமருமிடத்திற்கு மேல்அஸ்மானகிரி என்ற மேல் விரிப்பும் அமருமிடத்தின் மீது பட்டு விரிப்பும் உள்ளது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 16*

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி

*பொருள்*

கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் தண்ணீரின் குணம்/பெருமை அது இருக்கும் நிலத்தின் தன்மையினாலும், நல்ல மனிதர்களின் குணம்/பெருமை அவர் செய்யும் தர்ம காரியங்களினாலும், கண்ணின் பெருமை கருணை பொங்கும் விழிகள் மூலமும், சிறந்த பெண்ணின் குணம் /பெருமை அவளின் கற்பு நெறி மாறாப் பண்பினாலும் நீ அறியலாம்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
🌹🌺 "Sri Krishna, the pool formed by bringing all the holy rivers to one place - Syama Kundam .. is a simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 We can develop love for Sri Krishna by performing Govardhana Krivalam. Those who want to worship Govardhana Hill should crawl around it.

🌺 Govardhana Krivalam 26 km. containing the path. According to Rupa Goswami those who want to climb the Govardhana Hill should first take a dip in the Manasa Ganga and then visit the nearby Harideva before starting the Krivalam.


🌺 Manasa Ganga: Krivalam should start from this place and end here. Krishna summoned Ganga there by his own mind; So that Ganga was named as Manasa Ganga.

🌺Haridev's Temple: Lord Krishna resides here in the form of Narayana. He is also the one who lifted Govardhana hill.

🌺Sakaleswara Mahadeva: A temple known as Sakaleswara Mahadeva is located near Sanatana Goswami's bhajanai hut. It is one of the main Pancha Shiva Lingams of Vrindavan.

🌺Lakshmi Narayana Temple: This is one of the 108 Divya Desa temples blessed by the Alwars. The vigrahas in this temple are considered to be the ceremonial vigrahas of Govardhana Hill.

🌺Aniyor: A place where food is dedicated to Govardhana Hill with samosas, kachori, rice, puri, sweets, vegetables and dairy products arranged like a mountain. It is also known as Annakoota Kshetra.

🌺Raghava Pandita's Hut: Near the Apsara Kund is the Bhajanai hut of Raghava Pandita, a close associate of Caitanya Mahaprabhu. In the nearby Katamba forest, there are Surabi Kundam, Indra Kundam, Airavata Kundam, Rudra Kundam and Uddava Kundam.

Radha Gundam: Radha Gundam is considered to be the most sacred place in the universe. Srimati Radha Rani's form of love can be seen here in liquid form. There is no difference between Srimati Radharani and Radha Gundam.

🌺 Syama Gundam: After killing Aristasura, Krishna summoned all the holy rivers to one place. The pool thus formed is called Syama Gundam.

🌺 Kusuma Sarovar: Gopis carry flowers for Krishna at this place. Caitanya Mahaprabhu bathed here.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *ஸ்ரீ கிருஷ்ணர் , எல்லா புனித நதிகளையும் ஓரிடத்திற்கு வரவழைத்து உருவான குளம் - சியாம குண்டம் ..என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺நாம் கோவர்தன கிரிவலம் மேற்கொள்வதன் மூலமாக ஸ்ரீ கிருஷ்ணர் மீதான அன்பை வளர்த்துக்கொள்ள முடியும். கோவர்தன மலையை வழிபட விரும்புபவர்கள் அதனைச் சுற்றி வலம் வர வேண்டும்.

🌺கோவர்தன கிரிவலம் 26 கி.மீ. பாதையைக் கொண்டது. ரூப கோஸ்வாமியின் கூற்றின்படி கோவர்தன மலையை வலம் வர விரும்புபவர்கள், முதலில் மானஸ கங்கையில் நீராடி பின்னர், அருகில் இருக்கும் ஹரிதேவரை தரிசித்த பின்னரே, கிரிவலத்தைத் தொடங்க வேண்டும்.


🌺 *மானஸ கங்கை:* கிரிவலத்தை இவ்விடத்தில் தொடங்கி இறுதியில் இங்கேயே முடிக்க வேண்டும். கிருஷ்ணர் தனது மனதாலேயே கங்கையை அங்கு வரவழைத்தார்; அதனால் அந்த கங்கை, மானஸ கங்கை என்று பெயர் பெற்றது.

🌺 *ஹரிதேவரின் கோயில்:* கிருஷ்ணர் இங்கு நாராயண ரூபத்தில் வீற்றிருக்கின்றார். கோவர்தன மலையை தூக்கியவரும் இவரே.

🌺 *சகலேஸ்வர மஹாதேவர்:* ஸநாதன கோஸ்வாமியின் பஜனை குடிலுக்கு அருகில் சகலேஸ்வர மஹாதேவர் என்று அழைக்கப்படும் சிவாலயம் அமைந்துள்ளது. விருந்தாவனத்தின் பிரதான பஞ்ச சிவலிங்கங்களில் இதுவும் ஒன்று.

🌺 *லக்ஷ்மி நாராயண கோயில்* : ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்ய தேச கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் இருக்கும் விக்ரஹங்கள் கோவர்தன மலையின் உற்சவ விக்ரஹங்களாக கருதப்படுகின்றனர்.

🌺 *அனியோர்* : சமோசா, கச்சோரி, சாதம், பூரி, இனிப்பு, காய்கறிகள், பால் பதார்த்தங்களை மலைபோல அமைத்து கோவர்தன மலைக்கு அன்னப் படையல் அர்ப்பணிக்கப்பட்ட இடம். இஃது அன்னகூட க்ஷேத்திரம் என்றும் அறியப்படுகிறது.

🌺 *ராகவ பண்டிதரின் குடில்* : அப்சர குண்டத்தின் அருகில் சைதன்ய மஹாபிரபுவின் நெருங்கிய சகாவான ராகவ பண்டிதரின் பஜனை குடில் அமைந்துள்ளது. இதற்கு அருகில் இருக்கும் கதம்ப வனத்தில், சுரபி குண்டம், இந்திர குண்டம், ஐராவத குண்டம், ருத்ர குண்டம், உத்தவ குண்டம் அமைந்துள்ளது.

🌺 *ராதா குண்டம்* : இப்பிரபஞ்சத்தில் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுவது ராதா குண்டம். ஸ்ரீமதி ராதா ராணியின் பிரேமையின் ஸ்வரூபத்தை இங்கு திரவ நிலையில் காணலாம். ஸ்ரீமதி ராதாராணிக்கும் ராதா குண்டத்திற்கும் வித்தியாசமில்லை.

🌺 *சியாம குண்டம்* : கிருஷ்ணர் அரிஸ்டாசுரனை வதம் செய்த பிறகு, எல்லா புனித நதிகளையும் ஓரிடத்திற்கு வரவழைத்தார். அதன்படி உருவான குளம், சியாம குண்டம் என்று அழைக்கப்படுகிறது.

🌺 *குசும சரோவர்* : இவ்விடத்தில் கோபியர்கள் கிருஷ்ணருக்காக மலர்களை எடுத்துச் செல்வர். சைதன்ய மஹாபிரபு இங்கு நீராடியுள்ளார்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*_✍️ 04, Wednesday, Jan., 2023_*

*❤️இன்றைய சிந்தனை*

*🧿''''மன்னிப்புக் கேட்பவன்''''’*

*♻️மன்னிப்பு என்ற வார்த்தை, சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் அதைக் கேட்பதும் ,கொடுப்பதும், அவ்வளவு சுலபமில்லை.*

*♻️பெரிய பெரிய பிரச்சனைகளையும், சச்சரவுகளையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டு வரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு.*

*♻️ஒருவர் இன்னொருவரை பாதிக்கின்ற விதத்தில் ஏதாவது தவறு செய்து விட்டால், அந்த தவறை உணர்ந்து, மனதார மன்னிப்புக் கேட்கும் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று.*

*♻️அதற்கும் அப்பாற்பட்டது, கேட்கப்படும் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு சகஜ நிலைக்குத் திரும்புவது.*

*♻️“மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனிதன்“ என்று ஒரு வசனம் உண்டு.*

*♻️இன்றைய சூழலில் அப்படிப்பட்ட மனிதர்களோ பெரிய மனிதர்களோ காணக் கிடைப்பது அரிது.*

*♻️ஈகோ, பிடிவாதம்,, வாக்குவாதம்,, புரிதலின்மை, போன்றதால் மன்னிப்பு என்பதே மறைந்து வருகிறது.*

*♻️பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும்,அதை ஒப்புக் கொள்வதற்கு தன்மானம் இடம் கொடுப்பது இல்லை.*

*♻️உதாரணமாக, வகுப்பில் ஒரு மாணவன் எதையாவது திருடி விட்டு, அதை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கும் போது, இனி இப்படி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி அதை மன்னித்து விட்டு விட வேண்டும்.*

*♻️அதைவிடுத்து, அன்றிலிருந்து எந்தப் பொருள் காணவில்லையென்றாலும், அதை அவன் தான் எடுத்திருப்பானோ என்று சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது.*

*♻️இந்தப் பார்வை, தவறு செய்யத் தூண்டுமே தவிர ஒருபோதும் திருத்தாது... நம்மில் பலர் இந்தத் தவறினை செய்கிறோம்.*

*♻️கேட்கப்படும் மன்னிப்பை தற்காலிகமாக வழங்கி விட்டு, உள்ளூர அவர் செய்த தவறினை நினைத்துக் கொண்டே இருக்கிறோம்.*

*♻️பல நேரங்களில் அதைச் சொல்லிக் காட்டி குத்திக் கொண்டே இருப்பது சிலரின் வழக்கம்..*

*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️நம் தவற்றை மற்றவர்கள் சுட்டிக் காட்டும் போது அது உண்மையாக இருந்தால் அதை நேர்மையாக ஒப்புக் கொள்வோம்.. அது நம்மைப் பற்றிய நன்மதிப்பைத் தான் கூட்டும்.*

*⚽மிருகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசமே அவனுக்குள்ள மற்றவர்களின் சிறிய தவறுகளை மன்னித்து மறப்பது தான்...*

*மன்னிப்பு கேட்போம்... மனதாரக் கொடுப்போம்..*

ravi said…
திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பல பேரின் கனவு மற்றும் லட்சியமாக இருக்கும்..

ஆதாரப்பூர்வமாக திருமலையில் நடந்த முதல் திருமணம்,
திருப்பெரும்புதூர் சாம வேத விற்பன்னர் கேசவ சோமயாஜியுடையதே..

மணமகள் காந்திமதி..

நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுவதும் தொகுத்தவர் நாதமுனிகள்..

அவரது பேரன் ஆளவந்தார்..

அவர் திருமலைக்குப் போகிறார்..

என்ன.?
வேங்கடவனுக்குச் சாற்ற துளி கூட திருத்துழாய் இல்லையா.?
பூக்கள் இல்லையா.??
நந்தவனம் என்பதே இல்லையா.???

வாழ்நாள் முழுவதும் புலம்பிக்கொண்டே இருக்கிறார்..

திருமலையில், கொடிய விலங்குகள்,
நச்சுப் பூச்சிகள்..
யாரும் குடியிருந்து நந்தவனம் அமைக்கத் தயாரில்லை..

கடைசியாக அவர்தம் ஆசை நிறைவேறியது..

அவரது பேரன் திருமலை நம்பி நான் போகிறேன் என்றார்..

திருமலையில் இருக்கும் அந்த நம்பியை நம்பி,
இந்த நம்பி போக,
இவனை நம்பி குடும்பப் பெண்களும்..

தனி ஆளாகத் திருமலையில் நந்தவனம் அமைத்தவர் அவர்..

அவரது தங்கை தான் காந்திமதி..

திருமணம் நடந்து,
இரு வருடங்களுக்குப் பிறகு,
ஒரு அழகிய ஆண் குழந்தை பிறக்கிறது..

திருமலைநம்பி பார்த்த உடனே பூரித்துப் போகிறார்..

ராமனைப் பின் தொடர்ந்த இலக்குவன் போல் இருக்கிறானே.?

சரி..
மிகவும் நல்லது..
அதுவே அவன் பெயராகட்டும்..

இளைய பெருமாள்..
இளைய பெருமாள்..
இளைய பெருமாள்..

அந்தக் குழந்தைக்கு பின்னொரு காலத்தில் இன்னொரு பெயர் வந்தது..

உடையவர் ஸ்ரீ ராமானுஜர் என்று..
வேத வித்து..

எம்பெருமான், யதிராஜர் மலரடிகளே சரணம்..
🙏💖🙏
ravi said…
நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஏன் திராவிட வேதம் எனப்படுகிறது..?

வைணவத்தின் அடிநாதமே சரணாகதி..
பணிதல்..

பக்தி என்பது குலம் சார்ந்து வருவதல்ல..
அது பூர்வ புண்ணியத்தால் வருவது..

பன்னிரு ஆழ்வார்களில் ,

முதலாழ்வார்கள் மூவரும் அயோநிஜர்கள்..
அதாவது கண்டெடுக்கப்பட்டவர்கள்..

மழிசைப் பிரான் தனக்குத் தானே விளக்கம் தருகிறார், அந்திம வம்சம், பஞ்சம சாதி என்று..

பெரியாழ்வார் எனப்படும் விட்டுச் சித்தன் வேயர் குலத்தவர்..
அவரது வளர்ப்பு மகள் ஆண்டாளோ கண்டெடுக்கப்பட்டவள்..

குலசேகர ஆழ்வார் கொங்கு வேளாளர்..
கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்..
விப்ரநாராயணனான தொண்டரடிப்பொடியாழ்வார் பிராமணர்..

திருப்பாணாழ்வார் பாணர் குலத்தவர்..

நம்மாழ்வார் சைவ வேளாளர்..
அவர்தம் சீடரான மதுரகவி ஆழ்வார் பிராமணர்..

கடைக்குட்டி ஆழ்வாரான மங்கை மன்னனோ கள்ளர் இனத்தவர்..

ஆனால் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னரே,
திருமால் என்கிற ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி,
சாதி மறுப்பு முழங்கியது வைணவம்..

குறிப்பாக,
நாலாயிர திவ்யப் பிரபந்தம்..

திராவிடம் என்றால் வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரிக் கண்டம் வகையான தமிழகம் என்றே கருத வேண்டும்..
குடகும், கேரளமும் உள்பட..

தமிழ் வேதம் என்பதையே இங்கு திராவிட வேதம் என்கிறோம்..

இழிகுலத்தவர்களேனும் எம் அடியார்கள் ஆகில், தொழுமினீர்.. கொடுமின், கொண்மின் என்று ஆரவரிக்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்..

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து எத்தனை
நலந்தானில்லாத சண்டாள சண்டாளர்களாகிலும்,
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே...
என்று இன்னும் உயரம் தொடுகிறார் நம்மாழ்வார்..

புந்தியால் சிந்தியாது, ஓதி உருவெண்ணும்
அந்தியால் ஆம்பயன் அங்கென் என்று பக்திக்கு இலக்கணமே சொல்கிறார் முதலாழ்வாரான பொய்கையார்...

அதாவது, இறைவனை மனதால் இடைவிடாது சிந்திப்பதை விட்டு, வெறுமனே மந்திரங்களை உருப்போடுவதோ, கடனே என்று சிரத்தையில்லாமல் சந்தியா வந்தனம் செய்வதாலோ என்ன பயன் என்கிறார்..

வைணவம் என்கிற தேருக்கு அச்சாணி போன்றவர் எம்பெருமான் யதிராஜர்,
உடையவர் ஸ்ரீ இராமானுஜர்...

உலகத்தை உய்விக்க வல்ல எட்டெழுத்து மந்திரத்தை தனக்கெனப் பொத்தி வைத்துக் கொள்ளவில்லை அவர்...
ஊரும், நாடுமறிய கோட்டியூர் கோபுரத்தின் மீதேறியே முழங்கினார்..

ஓம் நமோ நாராயணாய..

எம்பெருமான் திருவடிகளே சரணம்..
ravi said…
💙இந்த புத்தாண்டில் எப்பொழுதும் உங்கள் முகத்தில் புன்னகை பூத்து குலுங்கவும😍

குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கம்😘

உங்கள் வாழ்வு மென்மேலும் வளர்ச்சி அடையவும்💐

கனவுகள் நனவாகவும்😍

கடவுளை வேண்டிகொள்கிறேன் 🙏🏻

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்

இனிய 2023 😘 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐🍫🤗
ravi said…
_*விஷ்ணுவை பற்றி நாம் அறிந்ததும்... அறியாததும்...!*_


காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நல்வாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார்.

*திருமாலின் ஏகாதசி* :

ஏகாதசி மாதந்தோறும் வருகிறது. இதில் பெருமாளுக்குரிய ஏகாதசி திதியில், அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று மனதார வழிபடுங்கள். தடைபட்ட எல்லா சுபக்காரியங்களையும் நடத்தித் தந்து அருளுவார் திருமால்.

*துளசி* :

திருமால் கோவில்களில் யார் ஒருவர் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறாரோ அவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

*நரசிம்மர் வழிபாடு :*

நம்முடைய வாழ்வில் இழந்த பொருட்களை மீட்டெடுப்பதற்கு தினந்தோறும் நரசிம்ம மந்திரத்தை மனஅமைதியுடன் சொல்ல வேண்டும்.

நரசிம்மரை தொடர்ந்து வழிபடுவதால் பில்லி, சூனியம், செய்வினை, எதிரிகளால் தொந்தரவு போன்ற பிரச்சனைகளில் இருந்து காப்பார்.

சந்திப் பொழுதில் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றிய நரசிம்மரை தொடர்ந்து 9 சுவாதி நட்சத்திர தினத்தன்று பூஜித்து வந்தால் கடன்கள், நோய்கள், திருமணத் தடை தீரும்.

நரசிம்மரை வழிபடுவதால் ஆனந்தமான வாழ்வும், வளமான வாழ்க்கையையும் பெறலாம்.

*ஆஞ்சநேயர்* :

ஆஞ்சநேயரை சாந்த வடிவில்தான் வழிபட வேண்டும். மஞ்சள் கலந்த குங்குமம், துளசி, வெண்ணெய் போன்றவற்றால் அர்ச்சனை செய்யலாம்.

அனுமனின் அருள் வேண்டுபவர்கள் இராம மந்திரத்தை தினசரி கூறினால் போதும்.

*விஷ்ணுவின் சிறப்புகள் :*

விஷ்ணு கோவில்களில் பக்தர்களுக்கு தீர்த்தம், மஞ்சள் காப்பு, திருத்துழாய், சிவப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. சடாரி பக்தர்களின் தலையில் வைப்பது திருமாலின் திருவடியே நம் தலையில் படுவதாக ஐதீகம்.

திருமாலின் உடலிலிருந்து உருவானதே எள்ளும், தர்ப்பையும். சிரார்த்த காலத்தில் இவற்றைப் பயன்படுத்தினால் விஷமிகள் விரட்டியடிக்கப்படுவார்கள்.

மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியும் எள்ளிற்கு உண்டு. தர்ப்பை உபயோகிக்காமல் செய்யும் கர்மாக்கள் முழுமை பெறாது என்பது ஐதீகம்.

கோவில்களில் வலம் வரும்போது திருமாலுக்கு 4 முறையும், லட்சுமிக்கு 4 முறையும், ஆஞ்சநேயருக்கு 11 அல்லது 16 முறையும் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

திருமால் கோவிலுக்கு சென்று முதலில் அவரின் முகத்தை பார்த்து வணங்கக்கூடாது. முதலில் அவரின் திருவடிகளைப் பார்த்து வணங்கிய பின்னரே படிப்படியாக அவரின் முகத்திற்கு வர வேண்டும்.

*பரந்தாமனை மனதார வழிபட்டு வாழ்வின் நலம் பல பெற்று வாழ்க வளமுடன்*

ravi said…
*_✍️ 04, Wednesday, Jan., 2023_*

*❤️இன்றைய சிந்தனை*

*🧿''''மன்னிப்புக் கேட்பவன்''''’*

*♻️மன்னிப்பு என்ற வார்த்தை, சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் அதைக் கேட்பதும் ,கொடுப்பதும், அவ்வளவு சுலபமில்லை.*

*♻️பெரிய பெரிய பிரச்சனைகளையும், சச்சரவுகளையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டு வரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு.*

*♻️ஒருவர் இன்னொருவரை பாதிக்கின்ற விதத்தில் ஏதாவது தவறு செய்து விட்டால், அந்த தவறை உணர்ந்து, மனதார மன்னிப்புக் கேட்கும் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று.*

*♻️அதற்கும் அப்பாற்பட்டது, கேட்கப்படும் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு சகஜ நிலைக்குத் திரும்புவது.*

*♻️“மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனிதன்“ என்று ஒரு வசனம் உண்டு.*

*♻️இன்றைய சூழலில் அப்படிப்பட்ட மனிதர்களோ பெரிய மனிதர்களோ காணக் கிடைப்பது அரிது.*

*♻️ஈகோ, பிடிவாதம்,, வாக்குவாதம்,, புரிதலின்மை, போன்றதால் மன்னிப்பு என்பதே மறைந்து வருகிறது.*

*♻️பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும்,அதை ஒப்புக் கொள்வதற்கு தன்மானம் இடம் கொடுப்பது இல்லை.*

*♻️உதாரணமாக, வகுப்பில் ஒரு மாணவன் எதையாவது திருடி விட்டு, அதை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கும் போது, இனி இப்படி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி அதை மன்னித்து விட்டு விட வேண்டும்.*

*♻️அதைவிடுத்து, அன்றிலிருந்து எந்தப் பொருள் காணவில்லையென்றாலும், அதை அவன் தான் எடுத்திருப்பானோ என்று சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது.*

*♻️இந்தப் பார்வை, தவறு செய்யத் தூண்டுமே தவிர ஒருபோதும் திருத்தாது... நம்மில் பலர் இந்தத் தவறினை செய்கிறோம்.*

*♻️கேட்கப்படும் மன்னிப்பை தற்காலிகமாக வழங்கி விட்டு, உள்ளூர அவர் செய்த தவறினை நினைத்துக் கொண்டே இருக்கிறோம்.*

*♻️பல நேரங்களில் அதைச் சொல்லிக் காட்டி குத்திக் கொண்டே இருப்பது சிலரின் வழக்கம்..*

*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️நம் தவற்றை மற்றவர்கள் சுட்டிக் காட்டும் போது அது உண்மையாக இருந்தால் அதை நேர்மையாக ஒப்புக் கொள்வோம்.. அது நம்மைப் பற்றிய நன்மதிப்பைத் தான் கூட்டும்.*

*⚽மிருகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசமே அவனுக்குள்ள மற்றவர்களின் சிறிய தவறுகளை மன்னித்து மறப்பது தான்...*

*மன்னிப்பு கேட்போம்... மனதாரக் கொடுப்போம்..*

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

(நேற்றைய தொடர்ச்சி)
வாத்தியங்களில் முக்கியமானவை மூன்று வகை. அவை சர்ம வாத்தியம் (டக்கா, மேளம், கஞ்சிரா, மிருதங்கம் போலத் தோல் சேர்ந்த வாத்தியம்) , தந்திரி வாத்தியம் (வீணை, ஃபிடில் போலத் தந்தி போட்டது) , வாயுரந்திர வாத்தியம் (நாயனம்,புல்லாங்குழல் முதலிய துளை போட்டுக் காற்றை ஊதும் கருவிகள்) என்பவை. இவைகளில் சர்ம வாத்தியம் தண்டத்தாலோ ஹஸ்தத்தாலோ அடிக்கப்படும். அந்த வாத்தியத்தை நிறுத்தும்பொழுது சாப்புக் கொடுப்பது, அதாவது, சேர்ந்தாற்போலச் சில அடிகள் அடிப்பது வழக்கம். அதுபோல நடராஜருடைய டமருகத்தில் நடனம் முடியும் காலத்தில் – ந்ருத்த அவஸானே- ஒரு சாப்புத் தொனி உண்டாயிற்று. அதைப்பற்றித்தான் முன்சொன்ன ச்லோகம் ஆரம்பிக்கிறது.
நடராஜா நிருத்தம் செய்கிறார். ஸனகாதிகள், பதஞ்ஜலி, வியாக்கிரபாதர் முதலியவர்கள் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மஹா தபஸ்விகள் ஆகையால் அந்த நிருத்தத்தைக் கண் கொண்டு பார்க்க முடிந்தது. நடராஜாவுடைய நடனத்தை ஞானநேத்திரம் உடையவர்கள்தாம் பார்க்க முடியும். ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய விச்வ ரூபத்தைத் தரிசிக்கும் சக்தியை பகவானே அர்ஜுனனுக்குக் கொடுத்தார். இதே சக்தியை வியாஸர் ஸஞ்சயனுக்கும் கொடுத்து, அவனையும் விச்வரூபத்தைக் கண்டு திருதராஷ்டிர மஹாராஜாவுக்கு வர்ணிக்கும்படிப் பண்ணினார். அந்த ஸ்வரூபத்தை அவர்களால் மட்டும் பார்க்க முடிந்தது. குருக்ஷேத்ர யுத்த பூமியில் இருந்த மற்றவர்களால் பார்க்க முடியவில்லை. தேவதைகளும், ரிஷிகளும், யோகிகளும் ஸ்ரீ நடராஜமூர்த்தியின் தாண்டவத்தைப் பார்ப்பதற்காகப் பலப் பிரயத்தனம் செய்து, அதற்கு வேண்டிய பார்வையைப் பெற்றார்கள். அந்தப் பார்வை திவ்விய திருஷ்டி என்று சொல்லப்படும். ‘திவ்ய சக்ஷுஸ்’ என்று கீதையில் பகவான் சொல்கிறார்.
நிஜமான கண்களைக் கொண்டு ஸனகாதிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடராஜாவின் டான்ஸ் கச்சேரியில் விஷ்ணு மத்தளம் கொட்டிக் கொண்டிருக்கிறார். பிரம்மா தாளம் போட்டுக் கொண்டிருக்கிறார். நிருத்தம் முடிகிற ஸமயத்தில், டமருகத்தில் சாப்பு கிடுகிடுவென்று 14 சப்தங்களாக உதிர்ந்தது. ச்லோகத்தில் சொன்ன ‘நவ பஞ்சவாரம்’ என்றால் ஒன்பதும் ஐந்தும் சேர்ந்த பதினாலு. நநாத டக்காம் நவபஞ்சவாரம்.
ravi said…
*20. துயிலெழுக! துயிலெழுப்புக!*

*திருப்பாவை-20ஆம் பாசுரம்:*

_முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று_
_கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!_
_செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு_
_வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!_
_செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்_
_நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்_
_உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை_
_இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்_ .

அசட்டையினால்
அலட்சியத்தால்
அகம்பாவத்தால்
அழுக்காறால்-
அமரர்களுக்கு
அவ்வப்போது விளைவதுண்டு தீமை;
அப்போதெல்லாம்
அமரர்கூட்டம் யாவும்-
புலன்களை ஓட்டுக்குள்
உள்வாங்கிடும் ஆமை!

அங்ஙனம்-
அமரர்களைக் காத்திடும்
ஓடாக-
விளங்கிடும் பெம்மானே!
வையத்தில் ஆருண்டு-
உனக்கு ஈடாக?

பொதுவாகப்
பார்க்குமிடத்து-
வீரம் கொண்டோர்க்கு
ஈரம் இருக்காது அகத்தில்;
புன்னகை தவழாது- அன்றாடம்
பெருங்கோபமே இருக்கும் அவர் முகத்தில்!

இஃதே போல்-
இரக்க சுபாவம் நிரம்ப
இருப்போர்க்கு-
இருந்திடும் ஒருவித பயம்;
இன்னதென்று
இனங்காணா ஓர் பயத்திலேயே-
இருந்திடும் அவர்தம் சுயம்!

ஆனால்-
அனந்த நாராயணனே!
உன்னால் மட்டுமே
ஒரே நேரத்தில்-
தென்றலாகவும் வீச முடியும்;
புயலாகவும் பேச முடியும்!

தூயவனே! உன்னிடமுண்டு-
துணிவு;
துணிவுடன் கூடிய பணிவு;

முதல்வனே! உன்னிடமுண்டு-
முனிவு;
முனிவுடன் கூடிய கனிவு!

செருவில்-
பகைவர்களைப் பந்தாடிடும்- உன்
ஒரு வில்!

இத்துணை சிறப்புகள்
வாய்த்தவனே!
இராக்கதனை-
இலகுவாய் வெம்போரில்
சாய்த்தவனே!

உறக்கம் கலை;
உன் அடியார்களின்
உற்பாதம் களை!

செப்புச் செம்பைப்போல
சேயிழையே! உன் முலை;
"இருக்கிறதா?
இல்லையா?"
இந்தக் கேள்விக்கான விடையை-
இங்குள எவரும்
அறிந்திடா வண்ணம்
அமைந்துள்ள உன் இடையை-
படைத்ததில் காணலாம்- இறைவனின் மூளை!

இங்ஙனம்-
இயற்கையாய்
எழில்கொஞ்சும்
ஏந்திழையே!
கொண்டவனெனும்
கொழுகொம்பின்மேல்-
படர்ந்து நிற்கும்
பூங்கொடியே!

நப்பின்னையே!
நானிலத்தில் உள்ள
நங்கையரில்- யாருமுனக்கு
ஒப்பில்லையே!

உன்னவனை-
உறக்கத்திலிருந்து எழுப்பு;
உளம்குளிர நோன்பிருந்த
கன்னியர் எமைக்காண-
சற்றே திரும்பட்டும்
அவன் கழுத்து!

கண்ணாடி தந்து-உன்
கண்ணாளனை அனுப்பு;
விசிறியைத் தந்து- அந்த
விமலனை அனுப்பு;
நோன்பிருக்கும் வேளையில்-
நேயர்கள் எம்மோடு- அவன்
நீராடுதல் சிறப்பு!

- S.நடராஜன், சென்னை
ravi said…
*❤இன்றைய சிந்தனை..( 05.01.2023..)..*
…………………………………………….

*'தவறு என்று தெரிந்தும்'*
...........................................

பொய் சொல்வது எவ்வளவு தவறு என்று நினைக்கின்றோமோ, அதை விடப் பொய் என்று தெரிந்தும் நம்புவது மிகப் பெரிய தப்புத் தானே...

அதுபோல தவறு என்று தெரிந்தும் அதையே தொடர்ந்து செய்வதும் எவ்வளவு தப்பு..?.

ஆனால் அன்றாட வாழ்வில் அதைத்தான் நாம் செய்து கொண்டே இருக்கின்றோம்.,

இப்படித் தான் போரசையில் பல பொய்களை உண்மை என்று நம்பி ஏமாந்து கொண்டு இருக்கின்றோம், ப‌ண‌த்தையும் இழ‌ந்து கொண்டு வருகின்றோம்.,

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனின் அப்பா ஆசையாக ஒரு செர்ரி மரத்தை வளர்த்து வந்தாராம்.

ஒருநாள் வாஷிங்டனுக்குப் புதிய கோடாலி ஒன்று கிடைக்க, அதைக் கொண்டு கண்ணில் படுகிற மரம், செடிகளை எல்லாம் வெட்டி எறிந்து இருக்கிறார்.

அவர் வெட்டித் தள்ளியதில் அப்பா வளர்த்த செர்ரி மரமும் ஒன்று. வெட்டப்பட்ட மரத்தைப் பார்த்து வாஷிங்டனின் அப்பாவுக்கு அதிர்ச்சி.

மரத்தை யார் வெட்டியது என அவர் எல்லோரிடமும் கேட்க, வாஷிங்டன், தனது தவறை தைரியமாக ஒப்புக் கொண்டாராம்.

உண்மை தெரிந்து கோபத்தில் ஏதேனும் செய்து விடுவாரோ என எல்லோரும் நடுங்கிக் கொண்டு இருந்தார்கள்.

வாஷிங்டனின் அப்பாவோ, அமைதியாகி இருந்தார். மகனை அழைத்து, ‘நான் கோபக்காரன்னு தெரிஞ்சும், நீ உண்மையை சொன்னே பார்த்தியா... அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சது.

செர்ரி மரம் வெட்டப் படாம இருந்து இருந்தா எனக்குக் கிடைத்து இருக்கிற மகிழ்ச்சியை விட, நீ உண்மை பேசியது எனக்குப் பெரிய மகிழ்ச்சி...” என்று மகனின் நேர்மையைப் பாராட்டினாராம்.

வாஷிங்டனின் மனத்தில் இது ஆழமாகப் பதிந்து போனது.

அதன் பிறகு,

தன் வாழ்நாளில் எந்தச் சூழலிலும் எத்தனை பெரிய செயலுக்கும் பொய் சொல்வதில்லை என்கிற தன் கொள்கையில் உறுதியாக இருந்து இருக்கிறார்.

ஆம்.,தோழர்களே..,

*பொய் சொல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை;*

*அது நாம் அறியாமலேயே நமக்கு எல்லா நலன்களையும் கொடுக்கும்.✍🏼🌹*

ravi said…
அனைவருக்கும் வணக்கம்🙏

நமது ஓம் நமசிவாய அறக்கட்டளை சார்பில் வருகிற பொங்கலை முன்னிட்டு ஏழை குழந்தைகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள், உடை போன்ற நலத்திட்ட உதவிகள் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் அதிகப்படியான ஏழை குடும்பங்கள், குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் முதியவர் காப்பகங்கள் போன்றவை போதுமான நிதி உதவிகள் இல்லாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் செயல்பட்டு வருகிறது.

எனவே அனைவரும் ஈசன் அருளால்‌ தங்களால் இயன்ற சிறு தொகையாவது நன்கொடையாக அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எப்படி கோயிலில் நம் பெயரில் செய்யும் அர்ச்சனைக்கு பலன் உள்ளதோ, அதுபோல நம் பெயரில் செய்யும் தானத்திற்கும் பலன் உண்டு. நம்முடைய பெயரில் செய்யும் தானத்தில் பல மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்றால், அதைவிட புண்ணியம் வேறேதுவுமில்லை.

அனைவரும் இணைந்து செய்யும் இந்த உதவியின் மூலம் அதிகப்படியான ஏழை எளிய மக்களுக்கு உதவ முடியும்.

இந்த குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வெறும் பார்வையாளராக மட்டும் இல்லாமல் அனைவரும் நமது அறக்கட்டளையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

தங்களால் இயன்ற நிதி உதவியை கீழே குறிப்பிட்டுள்ள அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 👇
________________________________

*வங்கி விவரம் :*

Name : Om Namasivaya Charitable Trust

Account Number : 39740686917

IFSC Code : SBIN0002197

Bank Name : State Bank of India

Branch : Aramboly
_________________________________

*G-pay number 8300845263*

*Phonepe number 8300845262*

மேலும் விபரங்களுக்கு :

அறக்கட்டளை தொலைபேசி எண் : 8300845263

நன்றி.

ஓம் நமசிவாய🙏
ravi said…
🌹🌺" They will also get the wealth and prosperity that Kuselar got
A simple story explaining... about the temple where she pays offerings 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 "Kuselam" means tattered cloth. As he wore such a garment due to poverty, his original name of #Sudama disappeared and became #Kuselar.
He was called by the name

🌺 When Kannan studied the Vedas in the Gurukul of a sage named #Sandeepani, Sudama was his close friend.

27 children after marriage
Giving birth to extreme poverty
Sudama withered. His wife
Name "#Kshutkshama (Susheela)
means This name means that she is thin because of hunger
Meaning.

🌺 Their poverty will disappear
So Sudama's youth
A friendly Yadava king
Go and see Kannan
She listened and received prayers from many people to give it to Kannan
To her husband after the cloth
She gave.

🌺Kannan was very happy to see his childhood friend and agreed to work with his wife Rukmini. Kuseler was reluctant to give her and he snatched her from her hand
To take a handful and put it in your mouth, that moment #kuselarin_
He went from poverty to great wealth like Kubera

🌺 First Wednesday of March every year at Sri Guruvayurappan temple
Kuseler Day is celebrated.
She was the main speaker that day
becomes

🌺 coming to the temple
Devotees also get the wealth and prosperity that Kuselar got from Kannan's darshan.
beg and pray
She belongs to the Lord
They pay tribute.

🌺 On the first Wednesday of the month of Margazhi, the day of Kuselar, Guruvayurappan image or Lord Krishna is also seen in our homes.
If she is worshiped with an image and mixed with jaggery, she will be blessed with wealth

🌺#Kusela_Sarithra_Slokam🌹

🌺Kuselanama Bhavatassatirdyadham
Katassa Sandeepanimandre Dwija:
Dwathekarakena Thanadinisbruho
Dinani ninye prasami gruhasrami 🌹🌺

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *குசேலருக்குக் கிடைத்த ஐஸ்வர்யம்* , *செல்வச் செழிப்பு* *தங்களுக்கும் கிடைக்க*
*அவல் காணிக்கை* *செலுத்தும்* *கோவில்* *பற்றி* ... *விளக்கும்* *எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺 "குசேலம்" என்றால் கிழிந்து நைந்து போன துணியைக் குறிக்கும். ஏழ்மையின் காரணமாக அத்தகைய ஆடையை அணிந்திருந்த படியால், #சுதாமா என்ற அவரது இயற்பெயர் மறைந்து #குசேலர்
என்ற பெயராலேயே அழைக்கப்படலானார்.

🌺கண்ணன் சிறுவயதில் #சாந்தீபனி என்ற முனிவரின் குருகுலத்தில் வேதங்கள் பயின்றபோது, அவரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சுதாமா.

🌺திருமணம் முடிந்து 27 குழந்தைகள்
பெற்றெடுத்து மிகவும் வறுமையில்
வாடினார் சுதாமா. இவரது மனைவி
பெயர் "#க்ஷுத்க்ஷாமா(சுசீலை)
என்பதாகும். பசியால் வருந்தி மெலிந்த தேகம் உடையவள் என்பது இப்பெயரின்
பொருள்.

🌺தங்கள் வறுமை நீங்கும்
பொருட்டு சுதாமாவின் இளமைக்கால
நண்பரான யாதவ குல அரசன்
கண்ணனைப் போய் பார்த்து வரும்படி
அவள் கேட்டுக் கொண்டு, கண்ணனுக்குக் கொடுக்கும் பொருட்டு பலரிடம் யாசகம் பெற்று நான்கு பிடி அவலை ஒரு கிழிந்த
துணியில் முடிந்து தன் கணவனிடம்
அளித்தாள் அவள்.

🌺தன் இளமைக்கால நண்பனைக் கண்ட கண்ணன் மிகவும் மகிழ்ந்து, தனது மனைவி ருக்மிணியுடன் பணிவிடைகள் புரிந்தார். குசேலர் கொடுக்கத் தயங்கிய அவலை அவரே கையிலிருந்து பிடுங்கி
ஒரு கைப்பிடி எடுத்து வாயில் போட்டுக் கொள்ள, அந்த நிமிடமே #குசேலரின்_
வறுமை_அகன்று_குபேரனைப் போன்ற பெரிய செல்வத்தைப் பெற்றார்

🌺ஸ்ரீ குருவாயூரப்பன் கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாத முதல் புதன்கிழமை
குசேலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அன்று அவலே முக்கிய நிவேதனமாக
அமைகிறது.

🌺கோவிலுக்கு வரும்
பக்தர்களும் கண்ணனின் தரிசனத்தால் குசேலருக்குக் கிடைத்த ஐஸ்வர்யம், செல்வச் செழிப்பு தங்களுக்கும் கிடைக்க
வேண்டு மென்று வேண்டிக் கொண்டு,
படிக்கணக்கில் இறைவனுக்கு அவல்
காணிக்கை செலுத்துகின்றனர்.

🌺குசேலர் தினமான மார்கழி மாத முதல் புதன் கிழமையன்று நம் வீடுகளிலும் குருவாயூரப்பன் படம் அல்லது கிருஷ்ணர்
படம் வைத்துப் பூஜித்து, வெல்லம் கலந்த அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும்

🌺#குசேல_சரித்திர_ஸ்லோகம்🌹

🌺குசேலநாமா பவதஸ்ஸதீர்த்யதாம்
கதஸ்ஸ ஸாந்தீபனிமந்திரே த்விஜ:
த்வதேகராகேண தனாதிநிஸ்ப்ருஹோ
தினானி நின்யே ப்ரஸமீ க்ருஹாஸ்ரமீ🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
உங்கள் வெற்றிகளை விதி எனும் கதவு மூடினால் நம்பிக்கை எனும் சாவி அந்த கதவை திறக்கும். நம்பிக்கை வையுங்கள் அதன் பலன் நிச்சயம் உண்டு..

உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்துதான் பிறக்கிறது.

எனவே உங்கள் எண்ணங்களும் செயல்களும் தூய்மையானதா ? என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

தோல்வி உங்களை அடுக்கடுக்காக தாக்கினால், மனம் தளராமல் உங்கள் முயற்சியை அடுக்கடுக்காக எடுத்து வையுங்கள்.

ஒரு நாள் நீங்கள் எடுத்த முயற்சி கோபுரம் ஆகும், வெற்றி உங்கள் மகுடம் ஆகும்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 17*

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
“அறும்-பாவம்!” என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?

*பொருள்*

வெறும் பானையை அடுப்பில் வைத்து தீ மூட்டி பொங்கு என்றால் பொங்குமா ? அது போல் செய்ய வேண்டிய காலத்தில் நல்லது செய்யாமல், அடுத்தவருக்கு கொடுத்து உதவாமல் இருந்து விட்டு, அதன் பலனாக இன்று வறுமை வந்த போது, கடவுளே இது சரியா , இது முறையா, நீ இருக்கிறாயா , இல்லையா . சங்க நிதி, பதும நிதி என்று கூறும் இரண்டு நிதி அளவுப் பணம் வருமா ? என்று கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன் , நமக்கு நல்லது நடக்க வேண்டுமானால் பிறருக்கு நல்லது செய்யுங்கள், கடவுளை நொந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 17*

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
“அறும்-பாவம்!” என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?

*பொருள்*

வெறும் பானையை அடுப்பில் வைத்து தீ மூட்டி பொங்கு என்றால் பொங்குமா ? அது போல் செய்ய வேண்டிய காலத்தில் நல்லது செய்யாமல், அடுத்தவருக்கு கொடுத்து உதவாமல் இருந்து விட்டு, அதன் பலனாக இன்று வறுமை வந்த போது, கடவுளே இது சரியா , இது முறையா, நீ இருக்கிறாயா , இல்லையா . சங்க நிதி, பதும நிதி என்று கூறும் இரண்டு நிதி அளவுப் பணம் வருமா ? என்று கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன் , நமக்கு நல்லது நடக்க வேண்டுமானால் பிறருக்கு நல்லது செய்யுங்கள், கடவுளை நொந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
[05/01, 07:22] +91 96209 96097: *நைகமாயாய நமஹ* 🙏
பற்பல அற்புதங்களை செய்பவர்
[05/01, 07:22] +91 96209 96097: மஹாகாமேச-மஹிஷீ *மஹாத்ரிபுரஸுந்தரீ*🙏
ஆன்மாவின் மூன்று உடலாக இருந்து இறைவனுடன் சேர்ப்பவள்
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிறப்பு வாய்ந்த சிவ வடிவங்கள் பற்றிய பதிவுகள் :*

*மூலவரே உற்சவர்*

சிதம்பரத்தில் நடராஜர் மூலவரே உற்சவருமாக வலம் வரும் நாள்கள்:

1. ஆனித் திருமஞ்சனம்
2. மார்கழித் தரிசனம்.

*மரகத லிங்கம்*

திருநள்ளாறு திருத்தலத்தில் தியாகராஜப் பெருமான் சந்நிதியில் மரகதத்திலான சிவலிங்கம் உள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள இதற்கு ஐந்து கால அபிஷேக, ஆராதனைகள் நடைபெறகின்றன.

*மரகத நடராஜர்*

திருஉத்தரகோச மங்கை திருத்தலத்தில் நடராஜர் மரகதத் திருமேனியுடன் காட்சியளிப்பார். எப்போதும் சந்தனக்காப்புடன் இருப்பார். திருவாதிரை நாளில் மட்டும் புதிய அலங்காரம் நடைபெறும்.

*ஆண் பெண்ணாக உலா*

திருவானைக்காவில் பங்குனி மாதம் நடைபெறும் பஞ்சப்பிரகாரத் திருவிழாவில் இறைவன் பெண் வேடத்திலும், இறைவி ஆண்வேடத்திலும் திருவீதிவுலா வருகிறார்கள்.

*சிவனின் மானுட வடிவங்கள்*

பெரிய புராணத்தில் சிவபெருமான் சுந்தரருக்காக மேற்கொண்ட மானுட வடிவங்கள் ஆறாகும்.

அவையாவன:

* தடுத்தாட்கொள்ள வந்த அந்தணர் வடிவம்.

* திருவதிகையில் திருவடி சூட்ட மேற்கொண்ட முதியவர் வடிவம்.

* திருக்கூடலையாற்றூருக்கு அழைத்துச் சென்ற வேதியர் கோலம்.

* திருக்கருகாவூரில் தண்ணீரும், பொதிசோறும் அளிக்க வந்த மறைவேதியர் கோலம்.

* திருக்கச்சூரில் உணவு இரந்து கொடுத்த அந்தணர் கோலம்.

* பரவையார் ஊடலைத் தவிர்க்க மேற்கொண்ட ஆதிசைவர் வடிவம்.

திருநாவுக்கரசருக்காக சிவன் மேற்கொண்ட மானுட வடிவங்கள் இரண்டு:

* திருப்பைஞ்ஞீலியில் பொதிசோறளிக்க மேற்கொண்ட அந்தணர் வடிவம்.

* பனிபடர்ந்த இமயமலையில் அப்பருக்கருள மேற்கொண்ட மாமுனி வடிவம்.

*இவற்றைத் தவிர ஏனைய ஏழு மானுட வடிவங்கள் :*

* திருநீலகண்ட நாயனாருக்கருள மேற்கொண்ட சிவ யோகியார் வடிவம்.

* இயற்பகை நாயனாரைச் சோதிக்க மேற்கொண்ட தூர்த்த வேடம்.

* இளையான்குடிமாற நாயனாரை உய்விக்க வந்த அடியார் வேடம்.

* அமர்நிதி நாயனாரை ஆட்கொள்ள வந்த பிரம்மச்சாரி வடிவம்.

* மானக்கஞ்சாற நாயனாருக்காக மேற்கொண்ட மாவிரதியார் வடிவம்.

* திருக்குறிப்பு தொண்ட நாயனாருக்காக மேற்கொண்ட அருந்தவர் வேடம்.

* சிறுத்தொண்ட நாயனாருக்காக மேற்கொண்ட பைரவர் வேடம்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 449* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*185* नीलचिकुरा *நீலசிகுரா* -

கன்னங்கரேர் என்ற கருநாக கூந்தலுடையவள் அம்பாள் என்கிறார் ஹயக்ரீவர்.

ஆக்ஞா சக்ரத்தை கருநீல வர்ணம் என்பார்கள்.

பின் மண்டையில் முகுளம் பகுதியில் மேல் இருக்கும் இந்த சக்ரத்தை கேசங்கள் மறைத்து இருக்கும்.

இது வெளியில் பிறர் கண்களில் படக்கூடாது என்பதற்காகத்தான் இன்றும் தலை மழித்தாலும் சிறிய சிண்டு, சிகையாவது பின் மண்டையில் மரியாதையோடு வைத்துக் கொள்வது. அம்பாள் பக்திக்கு எடுத்துக் காட்டு.

உச்சிக்குடுமியின் தாத்பர்யம் இது தான்.🙌🙌🙌
ravi said…
*185* नीलचिकुरा *நீலசிகுரா* -

கன்னங்கரேர் என்ற கருநாக கூந்தலுடையவள் அம்பாள் என்கிறார் ஹயக்ரீவர்.

ஆக்ஞா சக்ரத்தை கருநீல வர்ணம் என்பார்கள்.

பின் மண்டையில் முகுளம் பகுதியில் மேல் இருக்கும் இந்த சக்ரத்தை கேசங்கள் மறைத்து இருக்கும்.

இது வெளியில் பிறர் கண்களில் படக்கூடாது என்பதற்காகத்தான் இன்றும் தலை மழித்தாலும் சிறிய சிண்டு, சிகையாவது பின் மண்டையில் மரியாதையோடு வைத்துக் கொள்வது. அம்பாள் பக்திக்கு எடுத்துக் காட்டு.

உச்சிக்குடுமியின் தாத்பர்யம் இது தான்.🙌🙌🙌
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 45*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
அம்பாளின் எழில் நிறைந்த புன்னகை காஞ்சி நகரையே புத்துணர்ச்சி பெற வைக்கிறது.

கருணையே உருவெடுத்த தெய்வம் அந்த அற்புத மங்கை.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவள் முக தரிசனம் பெற்று ஆனந்த சாகரத்தில் மூழ்குவது ஒன்றே எனக்கு பிடித்த வேலை.
ravi said…
स्मयमानमुखं काञ्चीभयमानं कमपि देवताभेदम् ।

दयमानं वीक्ष्य मुहुर्वयमानन्दामृताम्बुधौ मग्नाः ॥ २९॥

29. Smayamana mukham Kanchi maya maanam kamapi devathaa bedham,

Dhayamanam Veekshya muhurvaya mananda amrudhambhudhou magnaa.

ஸ்மயமானமுகம் காஞ்சீபயமானம் கமபி தேவதாபேதம் |

தயமானம் வீக்ஷ்ய முஹுர்வயமானன்தாம்றுதாம்புதௌ மக்னாஃ ||29||
ravi said…
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே

பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே!

அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே!

துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்🙂🙂🙂
ravi said…
கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு

உரிமையாளரான நந்தகோபனின் மகனே!

கண்ணனே!

நீ எழுவாயாக.

வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே!

அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே!

உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக!

உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து,

உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல,

நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம்.

எங்கள் வேண்டுகோளை ஏற்பாயா கண்ணா ?

கண்ணா இங்கே பார்

உண்ணவில்லை நெய் சேர்க்க வில்லை

வளையல் இல்லை கண்களில் உறக்கம் இல்லை

அதனால் மை இல்லை

மலர்கள் சூடவில்லை

மயக்கும் வார்த்தைகள் இல்லை

*திருமீயச்சூர்* கொலுசு இல்லை

தின்ன தின்ன திகட்டா உன் நாமம் ஒன்றே ஒட்டியுள்ளது உடம்பில் ...

உன் வேணுகாணம் காற்றில் கரைவது போல் கரைகின்றோம்

கண் திறந்து பார் கண்ணா ... பார்த்தபின் கண் மூட மாட்டாய் என்றுமே
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 430*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

ஸ்லோகம் 58 contd ...
ravi said…
எப்படி சிவானந்த லஹரி பக்தி ஸ்லோகத்தில் ஆரம்பித்து, ரமண பகவான் ஈஸ்வரனோட ஐய்க்யம் ஆர பாவத்தைச் சொல்லி, பின் மூல பஞ்ச சதி யிள் அம்பாள் பாதத்தை சரணடைந்தால் அவல் கடாக்ஷம் அடையப் பெறலாம் என ரொம்ப கோர்வையாக அழகா பொருள்பட பாமரருக்கும் புரியும்படி எளிய விளக்கம்!

பக்தி அற்றவனுக்கும்.பக்தி வரும். என்பதில் ஐயமில்லை.!!

சௌந்தர்ய.லஹரி எப்படி அழகு பெட்டகமா அம்பாளை வர்ணிக்கிறது

சிவானந்தலஹரீ
பக்திப் பெட்டகம்!

நம் ஆசார்யாள் எழுதின ரெண்டுமே ரெண்டு கண்கள்!!
ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 53 started on 6th nov

*பாடல் 16 ... பேராசை எனும்*

(பேராசையில் கலங்குவது நியாயமா முருகா?)

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே
ravi said…
பூமேல் மயல் போய் அற மெய்ப் புணர்வீர்' என்பதனால் ஜெகமாயை
அற்று தர்மத்தையும் சத்தியத்தையும் கடைபிடிக்கும் சீலர்களே என்கிறார்.

அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுங்கள்.

செல்வச் செருக்கைவிட கல்விச் செருக்கு கொடியது.

இறைவனின்
திருவருளினால் அறிவு வாய்க்கப்பெற்றேன் என்கிற உண்மையை
உணர்ந்தால் கல்விச் செருக்கு வராது.

தமக்குக் கிடைத்த கல்வி அறிவும்
ஞானமும் குகன் அருளால் கிடைத்தவை என்று உணர்ந்து, உலகப்
பற்றிலிருந்து விடுபட்டு, 'தர்மம் .. சத்யம்' என்கிற ஒழுக்கங்களைக்
கடைபிடிக்கும் உத்தம சீலர்கள் செய்ய வேண்டியது இன்னொன்று
உண்டு.

அது முருகப் பெருமானின் திரு நாமங்களை 'மைந்தா குமரா'
என ஆர்ப்பு உய்ய மறவாது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

இதுவே அவர்கள் கடைபிடித்த 'சத்ய .. தர்ம' வாழ்விற்கு நல்ல பயனைத்
தரும் வழியாகும்.
ravi said…
[04/01, 19:30] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 433* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[04/01, 19:37] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

*ஸித்திஸ்* :‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
மிக உயர்ந்த பலனை அளிக்கும் என்பது இந்த நாமத்தின் அர்த்தம் ..

கண்ணன் தன் வளர்ப்பு தாயான யசோதைக்கு முக்தி அளிக்க விரும்பினான்

ஆனால் அதை கேட்டு வாங்க வேண்டும் யசோதை என்று விரும்பினான் ...

அவள் அதை கண்ணனிடம் கேட்பதாகவே தெரியவில்லை ...

வெறும் கண்ணா கண்ணா என்று ஒரே ஸ்மரணம் தான் அவளிடம் .

கண்ணனே தனக்கு கிடைத்தபின் வேறு முக்தி வேண்டுமோ என்றே நினைத்தாள் ..

அவன் ஓடி விளையாடும் இடமெல்லாம் வைகுண்டத்தை கண்டாள் ...

சுற்றி நிற்கும் கோபியர்களை நித்ய சூரிகளாய் கண்டாள் ...

ஆதிசேஷனையும் கருடனையும் பலராமனாய் நந்த கோபனாய் பார்த்தாள் ...

வேறு தனி வைகுண்டம் எதற்கு என்றே முக்தி கேட்க விருப்பம் இல்லாமல் இருந்தாள் 👣👣👣👣
ravi said…
*20. துயிலெழுக! துயிலெழுப்புக!*

*திருப்பாவை-20ஆம் பாசுரம்:*

_முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று_
_கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!_
_செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு_
_வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!_
_செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்_
_நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்_
_உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை_
_இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்_ .

அசட்டையினால்
அலட்சியத்தால்
அகம்பாவத்தால்
அழுக்காறால்-
அமரர்களுக்கு
அவ்வப்போது விளைவதுண்டு தீமை;
அப்போதெல்லாம்
அமரர்கூட்டம் யாவும்-
புலன்களை ஓட்டுக்குள்
உள்வாங்கிடும் ஆமை!

அங்ஙனம்-
அமரர்களைக் காத்திடும்
ஓடாக-
விளங்கிடும் பெம்மானே!
வையத்தில் ஆருண்டு-
உனக்கு ஈடாக?

பொதுவாகப்
பார்க்குமிடத்து-
வீரம் கொண்டோர்க்கு
ஈரம் இருக்காது அகத்தில்;
புன்னகை தவழாது- அன்றாடம்
பெருங்கோபமே இருக்கும் அவர் முகத்தில்!

இஃதே போல்-
இரக்க சுபாவம் நிரம்ப
இருப்போர்க்கு-
இருந்திடும் ஒருவித பயம்;
இன்னதென்று
இனங்காணா ஓர் பயத்திலேயே-
இருந்திடும் அவர்தம் சுயம்!

ஆனால்-
அனந்த நாராயணனே!
உன்னால் மட்டுமே
ஒரே நேரத்தில்-
தென்றலாகவும் வீச முடியும்;
புயலாகவும் பேச முடியும்!

தூயவனே! உன்னிடமுண்டு-
துணிவு;
துணிவுடன் கூடிய பணிவு;

முதல்வனே! உன்னிடமுண்டு-
முனிவு;
முனிவுடன் கூடிய கனிவு!

செருவில்-
பகைவர்களைப் பந்தாடிடும்- உன்
ஒரு வில்!

இத்துணை சிறப்புகள்
வாய்த்தவனே!
இராக்கதனை-
இலகுவாய் வெம்போரில்
சாய்த்தவனே!

உறக்கம் கலை;
உன் அடியார்களின்
உற்பாதம் களை!

செப்புச் செம்பைப்போல
சேயிழையே! உன் முலை;
"இருக்கிறதா?
இல்லையா?"
இந்தக் கேள்விக்கான விடையை-
இங்குள எவரும்
அறிந்திடா வண்ணம்
அமைந்துள்ள உன் இடையை-
படைத்ததில் காணலாம்- இறைவனின் மூளை!

இங்ஙனம்-
இயற்கையாய்
எழில்கொஞ்சும்
ஏந்திழையே!
கொண்டவனெனும்
கொழுகொம்பின்மேல்-
படர்ந்து நிற்கும்
பூங்கொடியே!

நப்பின்னையே!
நானிலத்தில் உள்ள
நங்கையரில்- யாருமுனக்கு
ஒப்பில்லையே!

உன்னவனை-
உறக்கத்திலிருந்து எழுப்பு;
உளம்குளிர நோன்பிருந்த
கன்னியர் எமைக்காண-
சற்றே திரும்பட்டும்
அவன் கழுத்து!

கண்ணாடி தந்து-உன்
கண்ணாளனை அனுப்பு;
விசிறியைத் தந்து- அந்த
விமலனை அனுப்பு;
நோன்பிருக்கும் வேளையில்-
நேயர்கள் எம்மோடு- அவன்
நீராடுதல் சிறப்பு!
ravi said…
அர்ஜுனனும், கிருஷ்ணனும் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் கேட்டார்!

அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை முதியவருக்கு கொடுத்தான்!

''ஆகா, இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே,'' என்ற மகிழ்ச்சியுடன் தன் வீட்டுக்குப் புறப்பட்டார்!

இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடம் இருந்து பறித்துச் சென்று விட்டான்!

சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, ஒரு விலையுயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதை பத்திரமாகக் கொண்டு செல்லும்படி கூறினான்!

முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டு சென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்து விட்டார்!

இதை அறியாத அவரது மனைவி, பரணிலிருந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றாள்!

பானையை கழுவும் போது அதிலிருந்த ரத்தினக்கல் ஆற்றில் விழுந்து விட்டது!

அவள் தண்ணீர் பானையுடன் வீட்டில் நுழைந்த போது, வெளியே சென்றிருந்த முதியவர் அந்த குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி ''இதிலிருந்த ரத்தினக் கல் எங்கே?'' என மனைவியைக் கேட்டார்!

ஏதுவுமறியாமல் அவள் விழிக்க, ஆற்றிற்கு சென்று பல மணி நேரம் தேடியும் பலனின்றி திரும்பினார்!

சில தினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் முதியவரை பார்க்கும் போது, அவர் நடந்ததைச் சொல்லி வருந்தினார்!

அர்ஜுனன் கண்ணனிடம், ''இவர் அதிர்ஷ்டக்கட்டை,'' என்றான். அதை ஆமோதித்த கண்ணன், ''இந்த முறை நீ இவருக்கு இரண்டு காசு மட்டும் கொடு,'' என்றார்!

அர்ஜுனனும், அதைக் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, ''இரண்டு காசுகள் அவருக்கு என்ன சந்தோஷத்தைக் கொடுத்து விடும்?'' எனக் கேட்டான்!

"எனக்கும் தெரியலை, இருப்பினும் என்ன நடக்கிறது பார்க்கலாம் வா,'' எனக்கூறிய கண்ணன், அவனுடன் முதியவரைப் பின் தொடர்ந்தார்!

செல்லும் வழியில் மீனவர் ஒருவர் உயிருடன் வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும்படி முதியவரிடம் கேட்டான்!

யோசித்த முதியவர், 'இந்த காசுகள் எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒரு வேளை பசியைக் கூட போக்காது' என்பதால், அந்த மீன்களை வாங்கி ஆற்றிலேயே விட்டுவிட்டால் புண்ணியமாவது மிஞ்சட்டும் என தீர்மானித்தார்! அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டார்!

இன்னொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்த அவர், மீனின் வாயைப் பிளந்து பார்த்தார்!

அதைப் பார்த்ததும் அவர் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார்! அது அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த ரத்தினக்கல்!

சந்தோஷ மிகுதியால் 'சிக்கியாச்சு' என்று கூச்சலிட்டார்! அதே நேரம் அஙகு தற்செயலாக, இவரிடம் கொள்ளையடித்த திருடன் வர..,?

அவன் திடுக்கிட்டு, தன்னைத் தான் முதியவர் கூறுகிறார் என்றெண்ணி திரும்பி ஓடுகையில், கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து விட்டனர்!

அவனை சிறையில் அடைத்து விட்டு, அவன் வீட்டிலிருந்த திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்து முதியவரிடமே அளித்தனர்!

அர்ஜுனன் கண்ணனிடம், ''வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள்? அதிலும் இது போன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம்?'' என்று கேட்டான்!

கண்ணன் சிரித்துக்கொண்டே… ''இவர் நீ முன்பு கொடுத்ததை தானும் தன் குடும்பமுமே எடுத்துக் கொள்ள வேண்டுமென நினைத்தார்!

அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல், மற்றவருக்கும் பயன்படாமல் பரண்மீது ஒளித்து வைத்திருந்தார்!

ஆகவே அவையிரண்டுமே அவரிடம் தங்கவில்லை; இப்போதோ? தன்னிடம் இருந்தது மிகவும் குறைவானதே என்றாலும், தனக்கு உதவாவிட்டாலும், இன்னொரு உயிராவது வாழட்டுமே? என கருதினார்!

அந்த புண்ணியத்தால்தான் இழந்த செல்வத்துக்கும் மேலாகவே அவர் அடைந்தார்!

பொது நலமுள்ளவர்களுக்கே லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்,'' என்றார்!
ravi said…
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.

சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.

என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....

ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)

மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)

இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

#சித்திரை (vernal equinox) - புத்தாண்டு.
#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.
#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.
#தை 1(winter solstice) - பொங்கல்.

இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...

#நமது #முன்னோர்கள் "#தன்னிகரற்ற" #மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள்.

ஸர்வம் ஸ்ரீ
கிருஷ்ணார்ப்பணம்🙏

ஓம் நமோ நாராயணாய 🙏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 44*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
एणशिशुदीर्घलोचनमेनःपरिपन्थि सन्ततं भजताम् ।

एकाम्रनाथजीवितमेवम्पददूरमेकमवलम्बे ॥ २८॥

28. Yena sisy deerga lochanam yena paripandhi santhatham namathaam,

Yekamra nadha jeevitham yevam pada dooramekam aavalambhe.

ஏணஶிஶுதீர்கலோசனமேனஃபரிபன்தி ஸன்ததம் பஜதாம் |

ஏகாம்ரனாதஜீவிதமேவம்பததூரமேகமவலம்பே ||28||
ravi said…
மான்குட்டி கண்களைப் போல் மிரள மிரள விழிக்கும் அழகை எப்படி சொல்வேன்?

அவளை எப்போதும் தேடி தரிசிக்கும் பக்தர்களின் பாபங்களை போக்கும் அந்த கடைக்கண் பார்வையை என்ன சொல்லி வர்ணிப்பேன்?

அம்பாளின் ஸ்வரூபம் இப்படி தான் என்று எவராலுமே சொல்ல முடியாதே.

நான் எப்படி சொல்வேன்.

அவள் ஏகாம்ர ஈஸ்வரனின் பிராணன். மூச்சுக்காற்று.

எட்டாத உயரத்தில் இருப்பவளை என்ன வென்று சொல்வேன். நான் தரையில் விழுந்து நமஸ்கரிப்பது ஒன்றே சரி.
ravi said…
*184 *निस्तुला - நிஸ்துலா* --

ஸ்ரீ லலிதை ஒப்பிலாமணி. யாருடன் எதனுடன் அவளை ஒப்பிடுவது?

ஹிமாசல கைலாச மலையை வேறு எந்த மலையுடன் ஒப்பிட முடியும்.

அவள் ஹிமவான் மகள் அல்லவா?🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 448* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருபினும், முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே!

நீ எழுவாயாக!

நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே!

பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக.

பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே!

லட்சுமிக்கு நிகரானவளே!

துயில் எழுவாயாக.

எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து

இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.

நப்பின்னையே நான் சொல்லி நீ தெரிவது ஒன்றும் இல்லை .. இவ்வையகம் உள்ள உயிர்கள் உங்கள் சிசுக்களே ... உங்கள் தூக்கம் அதை விட மேன்மையோ ...

எங்களை படைத்த பின் காக்க மறுப்பது உங்கள் மாண்போ ?

துடிக்கும் உயிர்களை துவள விடுவது முறையோ ..

கண்ணன் எனும் காயை பக்தி எனும் தடி எடுத்து பழுக்க வைத்தால் அதை நீ மட்டும் சுவைப்பது சரியோ ...

சாட்சியாய் வருபவனை மனச்சாட்சி இன்றி மறைத்து வைத்தல் நியாமோ ...

காட்சி தருபவனை உன் கட்சி என்று சொல்லுதல் சிறந்த பெண்மையோ ?

வறட்சி கொண்டுள்ளோம் வீழ்ச்சி பெற மாட்டோம் ...
புகழ்ச்சிக்கு நீ அடி பனிதல் தவறன்றோ...
ravi said…
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா!

துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்!

திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.🙏🙏🙏
ravi said…
*ஹரே கிருஷ்ணா பக்தர்களே*🌹
புதன்கிழமை நடந்த அட்வான்ஸ் வகுப்பில் *ஸ்ரீமத் பாகவதபுராணம்* முதல் காண்டம் ஒன்பதாவது அத்தியாயத்தில் இருந்து *ஸலோகங்கள் 34 முதல் 43 வரை* மிகவும் தெளிவாகவும், விளக்கமாகவும் கற்பிக்கபட்டது‌.

அதில் பிஷ்மர் இவ்வுலகை விட்டு நீங்கும் முன்பாக தன் மனதை நிலை படுத்தி பகவான் கிருஷ்ணரை பிராத்தனை செய்து இவ்வுடலை விடுத்தார் என்பதை மிகத் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தார்.

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

இதிலிருந்து சில கேள்விகள்
*1. பகவான் கிருஷ்ணரின் மீது எவ்வாறு பீஷ்மர் தன் மனதை நிலைநிறுத்தினார்? 2. பிஷ்மர் எவ்வாறு கிருஷ்ணரை வர்ணித்தார்?*

*3. பிஷ்மர் தன்னை எவ்வாறு பகவான் கிருஷ்ணரிடம் இணைத்து கொண்டார் என சூதர் விளக்கினார்?*
*4. நிர்விகல்ப-சமாதி என்றால் என்ன?*
*5. பீஷ்மர் தன் மரணத்தின் மூலம் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?* பதில்களை கீழே பதிவிடும் படி வேண்டிக்கொள்ளுகிறோம்.

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

மேலும் *தமிழ்‌ கீதை புத்தாண்டு விழா சம்மந்தமான தங்களது அனுபவத்தையும்பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களையும்* இங்கு பதிவிட இந்தக் குழு உங்களை அன்புடன் வரவேற்கின்றது.🪷

*ஹரே கிருஷ்ணா 🙏*
ravi said…
*அம்மா* ...

பகை அழிக்கும் படை சேர்க்கும் சிகை கொண்ட படை

தளபதிகள் தடை ஒன்றும் இல்லாமல் சடை கொண்டோன் அருள் கொண்டு

போரில் நடை பயின்று

உடை மாறும் முன் யமன் கொண்ட விடைக்கு

மடை திறந்த வெள்ளம் போல் உணவை தரும் போது

கடை கொண்ட விழி மூலம்

எடை கொண்ட புன்சிரிப்பை பூ மழையாக்கி பொழிகின்றாய் ...

என் சொல்வேன்!!

உன் தலைமை கொண்ட படையை .. ஆறுபடை கண்ட ஆனந்தம் ..

ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தே போரிட்டானோ

கலைஞானக் கண் திறந்து வைத்து உன் நாமம் ஆயிரம் எழுத வைத்தானோ ?

வந்த கலி தீர்ந்ததென்று
உந்தன் கலி பாட வந்தேன்

சந்தமுள்ள ஆயிரம் கவிச் சரணம் தந்தேன்

அம்மா நீ உன் திருச்சரணம் தருவாய்

கலி தீர்ந்தென்று களி செய்து வைத்தேன் .

களிப்புடன் உமையொரு பாகனுடன் வந்தே களி தின்ன வருவாய்

என் உயிர் கொள்ளை கொண்ட காளியே 💐💐💐
ravi said…
*❖ 72 பண்ட சைன்ய வதோத்யுக்த ஷக்தி விக்ரம ஹர்ஷிதா =*

பண்டாசுரனின் படைகளை துவம்சம் செய்த ஷக்திசேனையின் பராக்ரமத்தை கண்டு ஆனந்திப்பவள்👏👏👏
1 – 200 of 507 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை