ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 33

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 40

33

कामेश्वरप्रेमरत्नमणिप्रतिपणस्तनी -காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண ஸ்தநீ | -

பெண்மைக்குரிய லக்ஷணங்களோடு காமேஸ்வரனை கவரும் லோக மாதா என்று அறிந்து கொண்டாலே போதுமானது. 

தாயை அதற்கு மேல் வர்ணிக்க நமக்கு உரிமையில்லை.




காமேஷ்வர ப்ரேம
 = காமேஷ்வரனின் அன்பு

ப்ரேமை ரதன-மணி = ரத்தினங்கள்- செல்வம் - விலைமதிப்பற்ற 

ப்ரதிபண= ப்ரதியாக - பரிமாற்றம்

ஸ்தனி = மார்பகம் 

33 காமேஷ்வர ப்ரெம ரத்னமணி ப்ரதிபண ஸ்தனி =

காமேஷ்வரனான ஈஸ்வரனின் ஈடற்ற பிரமைக்கு தன் பெண்மையின் அடையாளமான ஸ்தனங்களைப் பரிசளிப்பவள் 🌷🌷🌷

 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

Comments

ravi said…
சேற்றில் பூத்த செந்தாமரை

மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த

திருப்பெருந்துறையில் உறையும் *அருணாசலா*

நந்திக்கொடியை உடையவனே!

என்னையும் ஆட் கொண்டவனே!

என் வாழ்வின் முதல் பொருளே!

பொழுது புலர்ந்து விட்டது.

உனது பூப்போன்ற திருவடிகளில் மலர் தூவி வழிபட வந்துள்ளேன்.

எம்பெருமானே!

உன் அழகிய முகத்தில் புன்னகை பூத்தபடி எனக்கு அருள் செய்வாயாக!

*அருணாசலா*

இன்ப கடல் பொங்கட்டும் இன்று முதல்

சொற்களும் உணர்வும் உன் நாமம் ஒன்றையே பாட எங்களை சும்மா இருக்க விடு *அருணாசலா*

ஆங்கார சக்தி என்னும்
ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு நீயன்றோ *அருணாசலா*

என்றும் நீங்காத செந்தமிழில் கவிதை தந்தவன் நீயன்றோ *அருணாசலா*

சும்மா இருக்கவே அதில் சுகம் பல காணவே உன் நாமம் விடாமல் சொல்லவே உயர்வு தருவாய் *அருணாசலா* 🙌🙌🙌
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

31 –
சுகக்கடல் பொங்கச் சொல் உணர்வு அடங்கச்

சும்மா பொருந்திடு அங்கு அருணாசலா (அ)🙌🙌🙌
ravi said…
*அம்மா* சுற்றி வந்து வணங்கும் அக்னி ஒருபுறம் ...

சுடர் விட்டு கதிர் கொண்டு பூஜை செய்யும் கதிரவன் ஒருபுறம்

நிலவில் அமுதம் பெயர்த்தெடுத்து நீ நடக்கும் பாதை தனில் பனி படர்வது ஒரு புறம் ...

ஸ்ரீ புரம் தனில் சிந்தாமணியாய் நீ வீற்றிருப்பது ஒரு புறம்

சரி பாதி உடைமை ஈசனிடம் நீ கேட்டது ஒரு புறம் ...

அம்மா அந்தப்புரம் தனில் சொக்கனுடன் சோழி விளையாடுவது ஒரு புறம்

எந்த புறம் பார்த்தாலும் கருணாரஸ ஸாகரம் ஓட

பாரா முகம் கொண்டவள் என்று உனை சொல்வோர் வண்மை குலம் கோத்திரம் கல்வி இழந்து

நாளும் வீடுதோறும் பாத்திரம் ஏந்தி பலிக்கு உழலாய் நிற்பவர் அன்றோ ?💐💐💐
ravi said…
*❖ 71 ஜ்வாலாமலினிகா க்ஷிப்த வஹ்னி ப்ராகார மத்யகா =*

ஜ்வாலாமாலினி-தேவியால் ஏற்படுத்தப்பட்ட அக்னிக்கோட்டையின் மத்தியில் அமர்ந்து படை நடத்துபவள்🍒
ravi said…
*அருணாசலா*🙌

எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம். 👣

எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம். 👣

எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற் பாதங்களை சரணடைகின்றோம். 👣

எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம். 👣

உயிர்களை களைந்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகின்றோம். 👣

திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். 👣

எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். 👣

இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.

*அருணாசலா*

நாள் போவதும் தெரியவில்லை

நேரம் நகர்ந்ததும் அறிய வில்லை ...

உன் நாமம் சொல்கையில்

கோடி அண்டாக்களில் சர்க்கரை பொங்கல் செய்து அதில் நெய்க்குளம் நிரப்பி

திராட்சைகளை அதில் நிரப்பி

பாகும் பாலும் பிரவாகம் செய்ய வைத்து

பச்சை கற்பூரம் காஷ்மீர் குங்குமப்பூ கற்கண்டு கலந்து

வெள்ளம் எடுத்து அதில் வெல்லம் கரைத்து

பன்னீர் சேர்த்து

கண்ணன் திருடிய வெண்ணெய் சேர்த்து

தேனில் ஊறவைத்து மது உண்டதை போல் மயங்கி கிடக்கிறோம்

எங்களை நிற்குணமாய் பரிபூரண நிலையில் வைத்து

உன் அருள் உருவை அளித்தருள் *அருணாசலா*🙌
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

30 –
சீரை அழித்து நிர்வாணமாச் செய்து

அருள்
சீரை அழித்து அருள் அருணாசலா (அ)
ravi said…
ஹரே கிருஷ்ணா 🙏
1. 12 மஹா ஜனங்களுள் ஒருவரான பிதாமகர் பீஷ்மர் பௌதீக பந்தத்தில் இருந்து தம் மனதை விடுவித்து பகவான் ஶ்ரீகிருஷ்ணரிடம் நிலைநிறுத்தினார் .
2. தமால் மரத்தை போன்று நீல நிறம் உடையவர். மஞ்சள் வஸ்திரத்தை அணிந்தவர். தாமரை போன்ற முகம் உடையவர் என்று பீஷ்மர் பகவானை வர்ணித்தார்.
3. தம் மனம் மற்றும் புலன்களை பகவானை நினைப்பதில் ஈடுபடுத்தி பகவானின் கருணையால் தாம் நினைத்த தருணத்தில் உயிரை விட்டார் என்று சூத விளக்கினார்.
4. சிறந்த பக்தர் இறக்கும் தருவாயில் பகவானை மனதில் நிறுத்தி அவரை பற்றிய நினைவில் மூச்சை விடுவது.
5. தாஸ்ய பக்தர் பகவானுக்கு எதிராக போர் புரிந்தாலும் அதையும் பகவான் ஏற்று கொண்டு தன் பக்தரின் ஆசையை நிறைவேற்ற தாம் கொடுத்த வாக்குறுதியையும் விட்டு கொடுக்கிறார் என்று நாம் அறிந்து கொள்ளலாம்.
ஹரே கிருஷ்ணா 🙏
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து எட்டு விதமான சிறப்புகளைக் கொண்ட ஆஞ்சனேயர் பற்றிய பதிவுகள் :*

ஆஞ்சநேயர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.

1. அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு.

2. மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு.

3. மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார்.‌ இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு.

4. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு.

5. ஆஞ்சநேயரது மிகவும் சிறப்பு பெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன. அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. ‌

இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை.

"ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.‌ ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.

6. ஆலவாயன் சிவனின் அம்சம் ஆறாவது சிறப்பு. ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் அனுமரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது.

ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

7. ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு. ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள் பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகா லட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.

8. எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு. ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது. ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது.

அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களைன் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
த்ரிமூர்த்திகளை முதலில் சொல்லியிருக்கிறது: குருர் – ப்ரஹ்மா, குருர் – விஷ்ணு, குருர் தேவோ மஹேச்வர:

ப்ரஹ்ம – விஷ்ணு – ருத்ரர் என்று சொல்வார்கள். ப்ரஹ்ம – விஷ்ணு – சிவன் என்பதில்லை. சிவபக்தர்கள் சிவன் மும்மூர்த்திகளில் ஸம்ஹார மூர்த்தியாக இருப்பவன் அல்ல என்பார்கள். சிவனுடைய அநேக ரூபங்களில் ஒன்றுதான் ருத்ரன் என்பார்கள். சிவன்தான் பரமாத்மா. ஸரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆண்பாலில் சிவன் என்று சொல்லாமல் அஃறிணையாக சிவம் என்றே சொல்வார்கள். அந்த சிவம்தான் ஸகல க்ருத்யங்களுக்கும் காரணமான முழுமுதற் கடவுள். ஸகல க்ருதயமும் அடங்கிப்போன சாந்தமும் அதுதான். அதிலிருந்தே லோக வ்யவஹாரார்த்தம் ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹார க்ருத்யங்களைச் செய்யும் ப்ரஹ்ம – விஷ்ணு – ருத்ரர் தோன்றுவது. சைவத்தில் – சாக்தத்திலும்தான் – இந்த மூன்றோடு இன்னும் இரண்டு க்ருத்யங்கள். பஞ்ச க்ருத்யம் என்பதாக. திரோதானம் அல்லது திரோபவம் என்பது ஒன்று. அதுதான் மாயை. லோகத்தை எதிலிருந்து எப்படி உண்டாக்கினான்? அதுதான் புரியவே மாட்டேனென்கிறது. ஏதோ ஒரு மாயா சக்தியினால் இப்படி எல்லாவற்றையும் செப்பிடு வித்தை காட்டுகிறான். அதுதான் திரோதானம். மும்மூர்த்திகளின் கார்யங்களுக்கும் அடிப்படையானது அதுதான். பஞ்ச க்ருதயத்தில் பாக்கியிருப்பது ‘அநுக்ரஹம்’. எப்படியோ ஜீவனுக்கு கர்மா என்ற ஒன்று ஏற்பட்டபின் அதை அநுபவித்தால்தானே தீர்க்கமுடியும்? அதற்கு (1) சரீரம், (2) அதன் புறக்கரணம் மட்டுமின்றி அகக்கரணம் (மனஸ், புத்தி முதலியவை), (3) இவற்றை வைத்துக்கொண்டு வினையை அறுவடை செய்கிற களமாக உள்ள இந்த ஜகத் என்பது, (4) அறுவடையை அநுபவிப்பது என்பவை தேவையாயிருக்கின்றன. (முறையே) தநு, கரணம், புவநம், போகம் என்று சொல்லும் இந்த நாலையும் பரமாத்மா கொடுப்பதுதான் ‘அநுக்ரஹம்’. இது சின்ன அநுக்ரஹம். பெரிய அநுக்ரஹம், கடைசியில் இதெல்லாவற்றிலிருந்தும், அதாவது திரோதானத்தினால் உண்டான மாயா லோக வாழ்க்கையிலிருந்தே, ஜீவனை விடுவித்து மோக்ஷ பதத்தைத் தருவதுதான். நடராஜாவின் குஞ்சிதபாதம் அந்தப் பதத்தைத்தன் தருகிறது. அதனால்தான் தூக்கிய திருவடி என்று அதற்கு ஏற்றம்.

நடராஜாவின் நாட்டியத்திற்குப் பஞ்சக்ருத்ய பரமானந்தத் தாண்டவம் என்று பெயர். ஒரு கையில் அவர் பிடித்துக் கொண்டிருக்கிற டமருகத்தின் சப்தத்தினால்தான் ஸ்ருஷ்டி உண்டாகிறது. அபயஹஸ்தத்தினால் ‘ஸ்திதி’ என்ற பரிபாலனம் செய்கிறார். இன்னொரு கையிலிருக்கும் அக்னியால் ஸம்ஹாரம் பண்ணுகிறார். முஸலகனின் மேலே ஊன்றியிருக்கிற அவருடைய வலது பாதத்தால் திரோதான க்ருத்யத்தை நடத்துகிறார். முடிவாக, குஞ்சித பாதம் என்ற இடது திருவடியைத் தூக்கிக் காட்டி, “இதைப் பிடித்துக் கொண்டால் அதுதான் மோக்ஷாநுக்ரஹம்” எனறு தெரிவிக்கிறார்.

நடராஜா சிவம் என்ற பரமாத்மாவாக, ஸகல கார்ய காரண மூலமாக இருப்பவர். அவரிடமிருந்து ஒவ்வொரு கார்யத்திற்கு ஒவ்வொரு மூர்த்தி வருகிறார். இப்படி வரும்போது ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரத்துக்கு ப்ரஹ்ம – விஷ்ணு ருத்ரர்கள் இருப்பதுபோல திரோபவ, அநுக்ரஹ கர்த்தாக்களாகவும் இரண்டு மூர்த்திகள் இருக்கவேண்டுமல்லவா? திரோபவ கர்த்தாவுக்குத்தான் ‘ஈச்வரன்’ என்று பெயர். நடைமுறையிலும், இதர சாஸ்திரங்களிலும் ‘ஈச்வரன்’ என்பதற்கு என்ன அர்த்தம் கொடுத்தாலும், சைவ சாஸ்திரப்படி ‘ஈச்வரன்’ என்றால் திரோபவம் என்கிற மாயையைச் செய்யும் மூர்த்தி என்றே அர்த்தம். வெறுமே ‘ஈச்வரன்’ என்று சொல்லாமல் ‘மஹேச்வரன்’ என்பார்கள். ‘அநுக்ரஹ’ கர்த்தாவுக்கு ஸதாசிவன் என்று பேர்.

சுருங்கச்சொன்னால், சைவ சாஸ்திரப்படி, சிவம் என்ற பரமாத்ம வஸ்து ப்ரஹ்ம – விஷ்ணு – ருத்ர – மஹேச்வர – ஸதாசிவர்களைக் கொண்டு ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹார – திரோதான – அநுக்ரஹங்கள் என்ற பஞ்ச க்ருத்யங்களைச் செய்கிறது. சாக்தத்தில் சிவத்துக்குப் பதில் சக்தியைப் “பஞ்சக்ருத்ய பராயணா” என்று சொல்லியிருக்கிறது.

ருத்ரன் ஸம்ஹார கர்த்தா. (“குருர் ப்ரஹ்மா”) ச்லோகத்திலோ “மஹேச்வர:” என்று சொல்லியிருக்கிறது. “குருர் – தேவோ – மஹேச்வர:“. ஆனாலும் இங்கே மஹேச்வரன் என்பதைத் திரோதானகர்த்தா என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளாமல் ஸம்ஹாரகர்த்தா என்று பண்ணிக் கொள்வதுதான் பொருத்தம். முதலில் ப்ரஹ்மா, விஷ்ணு என்று ச்ருஷ்டி, ஸ்திதி கர்த்தாக்களைச் சொன்னதால் அடுத்து ஸம்ஹார கர்த்தாவைச் சொல்வதுதானே பொருத்தம்? சைவ சாஸ்த்ரப்படி நுணுக்கமாகப் போகாமல் ஸாதாரணமாக சிவம், சிவன், ஈச்வரன், மஹேச்வரன், ருத்ரன் என்ற எல்லாவற்றையும் ஒருவனுக்கே பேராகச் சொல்வதுபோலவே இங்கேயும் சொல்லியிருக்கிறதென்று அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்.
ravi said…
[06/01, 07:24] +91 96209 96097: *மஹாஷனாய நமஹ*🙏
அனைத்து உலகங்களையும் உண்பவர்
[06/01, 07:24] +91 96209 96097: *சதுஷ்ஷஷ்ட்யுபசாராட்⁴யா* சதுஷ்ஷஷ்டிகளாமயீ |
மஹாசதுஷ்ஷஷ்டிகோடியோகி³னீக³ணஸேவிதா
அறுபத்து நான்கு உபசாரங்களையும் ஏற்று அருள்பவள்
ravi said…
*_✍️ 06, Friday Jan., 2023_*

*🔹🔸இன்றைய சிந்தனை.*

*🧿''ஏற்றங்களும், இறக்கங்களும் …''*

*♻️வாழ்க்கை என்றால் வேதனைகளும்,. சோதனைகளும் இருக்கத் தான் செய்யும்..துன்பம் என்னும் சகதியில் சிக்கி வீழ்ந்து விடாமல் சரியானபடி வாழ்ந்து சாதித்துக் காட்ட வேண்டும்..*

*♻️ஆம்..வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் ..*
*எதிர்நீச்சல் போடத் தெரிந்தவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்*

*♻️வாழ்க்கை என்பது ஒரு தெளிந்த நீரோடை என்று சொல்வதற்கு இல்லை.அதில் மேடு, பள்ளமும், சுழியும், பாறைகளும் நிறைந்து தான் இருக்கும்...*

*♻️வாழ்க்கைப் படகை ஓட்டிச் செல்லும் மனிதன் சுழியில் அமிழ்ந்து விடாமலும்,, பாறையில் மோதி விடாமலும் இருக்க, சரியான முறையில் துடுப்பைப் பயன்படுத்த வேண்டும்.*

*பேரறிஞர் பெர்னாட்சாவிடம் ஒருவர் வந்து,*

*♻️'நான் பத்து முயற்சி செய்தால் ஒன்று தான் கை கூடுகின்றது பத்தும் பலன் தர வேண்டும் எனில் நான் என்ன செய்ய வேண்டும் '' என்று கேட்ட போது நீ நூறு முயற்சிகள் செய்.. பத்தும் பலன் தரும் '' என்றார் ''*

*♻️இந்த முட்டாளுக்கு எவ்வளவு சொன்னாலும் எதுவும் ஏறாது என்று பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் தான் பிற்காலத்தில் மின் குமுழை ( Electric Bulb ) கண்டு பிடித்தார்..*
*வெற்றிப் பெருமிதத்துடன்.*

*♻️வெற்றி பெற்ற எல்லா சாதனையாளர்களைப்போல தடைக்கற்களை வெற்றிக்குரிய படிக்கற்களாக கண்டதால் தான்,*
*தான் காண வேண்டியதை இறுதியில் கண்டு கொண்டு தனது இலக்கை அடைந்தார் தாமஸ் ஆல்வா எடிசன்..*

*😎ஆம்,நண்பர்களே.,*

*🏵️வெற்றி பெற்ற மனிதர்களுக்குப் பின்னால் தோல்வி முகங்கள் பல உண்டு!*

*⚽இன்பங்களும், துன்பங்களும், வருத்தங்களும், மகிழ்ச்சிகளும், வெற்றிகளும், தோல்விகளும், ஏற்றங்களும், இறக்கங்களும், மேடுகளும் பள்ளங்களும் கலந்தது தான் வாழ்க்கை!*

*🏵️நமக்கு ஏற்றம் வந்தாலும், சரிவு வந்தாலும் ஓரே தன்மையுடன் அவைகளை ஏற்றுக் கொண்டு, சோர்ந்து விடாமல் வாழ்வில் வெற்றி காணுவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.*

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
ravi said…
*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அருளுரை*

*_நடராஜ_ பெருமான்*

நாட்டியம் அல்லது நடனம் பரமசிவபெருமானின் லீலைகளில் ஒன்றாகும். ப்ரம்மாவும் விஷ்ணுவும் கூட அவருடைய நடனத்தைப் பார்க்கச் செல்வதாக புராணங்கள் கூறுகின்றன. ஸம்ஸ்க்ருத மொழியில் வியாகரணம் சிவபெருமானின் நர்த்தனத்திலிருந்து பிறந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையாகவே (அ), (இ), (உ), (ண்), முதல் (லண்) வரையான 14 மாஹேஸ்வரஸுத்ரங்களும் பாணினியின் வியாகரணத்துக்கு ஆதாரமாக இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஆரம்பம் இவ்வாறு இருந்தது..

ஸனகர் முதலிய முனிவர்களை ஆசீர்வதிக்க, நடராஜ பெருமான் தன் நிருத்யத்தின் முடிவில் தன் மத்தளத்தை 14 தடவை கொட்டினார். அந்த த்வனிகள் மாஹேஸ்வரஸுத்ரங்கள் என்ற 14 ஸூத்ரங்களாக மாறின..

ஸ்ரீ அம்பாள் பெரும் உத்ஸாகத்துடன் சிவபெருமானின் நடனத்தைப் பார்ப்பதாக நம்புகிறார்கள். லலிதாத்ரிசதி அம்பாளை லாஸ்யதர்சனஸந்துஷ்டா என்று வர்ணிக்கிறது; லலிதாஸஹஸ்ரநாமமோ அம்பாளை லாஸ்யப்ரியா என்று அழைக்கிறது. மகிழ்ச்சியாக ஒன்று சேர்ந்த அந்த சிவமும் சக்தியும் உலகத்தை கடாக்ஷிக்கின்றன..

பெரிய யாத்திரை ஸ்தலமான சிதம்பரத்தில் நடராஜ பெருமான் இருப்பதை நாம் உணர்கிறோம். அந்த க்ஷேத்ரத்தில் ஜைமினி மஹர்ஷி போன்ற முனிவர்கள் நடராஜபெருமானைப் பூஜித்து முக்தி அடைந்திருக்கிறார்கள். அப்பய்ய தீக்ஷிதருக்குகூட அவருடைய அந்திம நேரத்தில் நடராஜ பெருமான் அருள் கடாக்ஷித்தார்..

எல்லோரும் நடராஜ பெருமானை ஆராதித்து தங்கள் வாழ்க்கையை ஸ்ம்ருத்தி அடையச் செய்ய வேண்டும்..
ravi said…
''சிவபெருமானின் அம்மா பெயர் புனிதா''...."ஆ!.........ருத்ரா!!....''ஆருத்ரா"......"ஆ!.......ருத்ரா!!''.....ஆருத்ரா
அபிசேகம்:5-1-2023இரவு 9 மணிக்கு & ஆருத்ரா தரிசனம்:6-1-2023 ''திருவாலங்காடு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்''... இரத்தின சபை.தேவாரமூவர், அருணகிரி நாதர், கச்சியப்ப
சிவாச்சாரியார், இராமலிங்க அடிகள் சிறப்பித்துப் பாடிய
திருத்தலம். இங்கு இரத்தின சபாபதியின் ஊர்த்துவதாண்டவக் கோலத்தைக் காணலாம்..‘அம்மா’ என்ற குரல் கேட்க, வாசலை நோக்கிப் பார்த்தாள் புனிதவதி.வீட்டு வாசலில் சிவனடியார் ஒருவர் பசியால் வாடி வதங்கி
நின்றிருந்தார்.‘
ravi said…
அடுப்பில் இப்போதுதான் உலை வைத்திருக்கிறேன். சற்று
பொறுங்கள்’ என்று கூறினாள்.ஆனால் அவ்வளவு பொறுமை சிவனடியாருக்கு
இல்லைபோலும். ‘இல்லை தாயே! பசியில்
உயிர் போகிறது. ஏதேனும் இருப்பதை கொடு தாயே’ என்றார் சிவனடியார்.சற்றே
யோசித்தவளுக்கு மதிய உணவிற்காக தன் கணவன் பரமதத்தன் கொடுத்தனுப்பிய
இரண்டு மாங்கனிகள் நினைவுக்கு வந்தது.புனிதவதி அதில் ஒரு மாங்கனியை
எடுத்து வந்து சிவனடியாருக்கு கொடுத்து மகிழ்ந்தாள், சிவனடியார் அதை
உண்டு மகிழ்ந்தார்.'பசியும், தான் வந்த பணியும் முடிந்ததில்', புனிதவதியை
வாழ்த்திச் சிவனடியார் மறைந்தார்.ஆம்! சிவனடியார் வேடத்தில் வந்தவர்
ஈசன்.வியாபார விஷயமாக வெளியே சென்றிருந்த பரமதத்தன்,
ravi said…
மதிய உணவிற்கு
வீட்டிற்கு வந்துவிட்டான்.சமைத்து வைத்த அறுசுவை உணவுகளை அன்பு கணவனுக்கு
பரிமாறினாள் புனிதவதி.‘புனிதா!. நான் கொடுத்தனுப்பிய மாங்கனியை கொண்டு
வா’ என்றான் பரமதத்தன்.சிவனடியாரிடம் கொடுத்தது போக மீதமிருந்த ஒரு
மாங்கனியை எடுத்து வந்து, தன் கணவனுக்கு கொடுத்தாள்.அதை உண்டவன்,சுவையில்
மயங்கிப்போய் மற்றொரு மாங்கனியையும் கொண்டுவரும்படி தன் மனைவியிடம்
கூறினான்.பதறித்தான் போனாள் புனிதவதி. மற்றொரு கனியை சிவனடியாருக்கு
கொடுத்து விட்டேன் என்று கூறினால், எங்கே கணவன் கோபித்துக் கொள்வானோ எனக்
கருதிய புனிதவதி நேராக பூஜை அறையை நோக்கிச் சென்றாள்.ஈசனை நோக்கி ‘ஓம்
நமசிவய’என்று துதித்தாள். தான் இக்கட்டில் மாட்டிக் கொண்டதை கூறி
சிவபெருமானை
வேண்டினாள்.இறைவனை துதிக்க ஒன்றிணைக்க முயன்ற கரங்களில் ஒரு மாங்கனி
வந்துதித்தது.தன் பிரச்சினை தீர்ந்து விட்டது என்று எண்ணிய புனிதவதி,அந்த
மாங்கனியை கணவனிடம் கொண்டுபோய் கொடுத்தாள்.
ravi said…
ஆனால் அந்த
மாங்கனியால்தான் புதிய பிரச்சினை ஆரம்பமாகப் போகிறது என்பதை அப்போது அவள்
அறியவில்லை.மனைவி
கொடுத்த இரண்டாவது மாம்பழத்தை ஆவலுடன் சாப்பிட்டான் பரமதத்தன்.முந்தைய
மாம்பழத்தை விடவும், இதன் சுவை பன்மடங்கு அதிகமாக இருந்தது.‘ஒரே மரத்தில்
ravi said…
உள்ள இரண்டு மாம்பழங்களின் சுவையில் இவ்வளவு பெரிய மாற்றம்
இருக்குமா?’ என்று சந்தேகித்த பரமதத்தன், புனிதவதியிடம் இதுபற்றி
கேட்டான்.கணவனிடம் பொய் உரைக்க பயந்த புனிதவதி, நடந்தவற்றை அப்படியே
பதற்றத்துடன்
கூறி முடித்தாள்.ஆனால் இப்போது பதற்றமும், பயமும் பரமதத்தனிடம்.‘நீ
கூறுவது உண்மையானால், ஈசனிடம் இருந்து இன்னொரு மாம்பழத்தை பெற்று எனக்கு
தருக’ என்றான் பரமதத்தன்.புனிதவதியும் ஈசனை வேண்டினாள். இன்னொரு மாம்பழம்
அவள் கையில் வந்தது.மறுநொடியே புனிதவதியின் காலில் நெடுஞ்சாண் கிடையாக
விழுந்தான்
ravi said…
பரமதத்தன்.பதறிப்போனாள் புனிதவதி.‘தாயே! நீ சாதாரணப் பெண்
அல்ல; தெய்வ மங்கை’ என்று போற்றித் துதித்தான்.
தெய்வத்துடன் இல்லறம் நடத்துவது தகாது என்று கருதியவன் வீட்டை விட்டு
வெளியேறினான்.பாண்டிய நாட்டுக்குச் சென்றவன், அங்கு வேறொரு பெண்ணை
திருமணம் செய்து கொண்டான்.அவர்களுக்கு பிறந்த பெண்
குழந்தைக்கு,‘புனிதவதி’ என்று பெயரிட்டான்.வருடங்கள் பல ஓடியும், வழிமேல்
விழிவைத்து தன் கணவனுக்காக காத்திருந்தாள் புனிதவதி. வெகு காலம் கழித்து
தான் பரமதத்தனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது அவளுக்கு
தெரியவந்தது.
ravi said…
வாழ்வை வெறுத்து வாடினாள்.ஈசனிடம் வேண்டி பேய் உருவை
(எலும்பு வடிவம்) கேட்டுப் பெற்றாள்.பின்னர் கயிலைமலையானை தரிசனம் செய்ய
புறப்பட்டாள்.
சிவன் இருக்கும் கயிலையில் காலால் நடப்பது குற்றம் என்றெண்ணி, தன்
தலையால் நடந்து சென்றாள்.ஈசனுடன் வீற்றிருந்த பார்வதிதேவி இதைக்
கண்டு,‘சுவாமி! பேய் உருவில் தலையால் நடந்து வரும் இந்தப் பெண் யார்?’
என்று
வினவினார்.அதற்கு சிவபெருமான், ‘இவள் நம்மை பேணும் அம்மை!’ என்றார்.தன்னை
நாடி வந்த புனிதவதியைப் பார்த்து, ‘அம்மையே! நலமாக வந்தனையோ?.நம்மிடம்
வேண்டுவது யாது?’ என்று கேட்டார்.அகிலத்துக்கும் அம்மையப்பனாக
விளங்கும் சிவபெருமானே ‘அம்மை’ என்று அழைத்ததாலும், புனிதவதியின் பிறந்த
ஊர் காரைக்கால் என்பதாலும் புனிதவதி, ‘காரைக்கால் அம்மையார்’ என்று பெயர்
பெற்றார்.‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்ட ஈசனிடம், ‘ஐயனே! உன் மீது
என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும்.
ravi said…
மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை
வேண்டும். எப்போதும் உன் திருவடியில் வீற்றிருந்து, உன் நாமம் பாடும்
வரம் வேண்டும்’ என்று வேண்டினார் காரைக்கால் அம்மையார்.அவ்வாறே வரம்
அளித்தார் ஈசன்.‘அம்மையே! நீ பூலோகத்தில் ஆல வனம் உள்ள திருவாலங்காடு
சென்று, அங்கு எமது திருவடியின் கீழ் இருந்து என்றும் பாடும் வரம்
தந்தோம்’ என்று அருளினார்.காரைக்கால் அம்மையார் திருவாலங்காடு
புறப்பட்டார்.திருவாலங்காடு முன்பாக உள்ள பழையனூர் வந்து
சேர்ந்தார்.அங்கிருந்து செல்ல வழி தெரியவில்லை.ஒரே காடாக இருந்தது.ஆகவே
பழையனூரில்
உள்ள சிவன் தலத்தில் அம்மை வேண்டினார். ‘ஈசனே! ஒரே காடாக உள்ளது. எந்த
திசையில் சென்று நான் திருவாலங்காட்டை அடைவது?’ என்று
கேட்டார்.‘இங்கிருந்து
மேற்கு நோக்கிச் செல்’ என்று அசரீரி ஒலித்தது.அவ்வாறே சென்றார்
காரைக்கால் அம்மையார்.அவருக்கு வழி தெரிவதற்காக வழிநெடுகிலும்
சிவலிங்கமாக காட்சி கொடுத்தார் சிவபெருமான்.ஆகையால் தலையால் நடந்து
சென்றார் காரைக்கால் அம்மையார். பழையனூரில் இருந்து சுமார் ஒரு
கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவாலங்காட்டை அடைந்தார்.அங்கு அம்மைக்கு,
ஈசன் திருநடனம் காட்டினார்.
ravi said…
அதனை கண்டு களித்த காரைக்கால்
அம்மையார்,‘திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்’ என்னும் இரண்டு
பதிகங்களைப் பாடினார்.இது பன்னிரு திருமுறையில் பதினொன்றாவது திருமுறையாக
உள்ளது.தேவாரத்திற்கு முன்னதாக பாடப்பெற்றது. தொடர்ந்து ஈசனடியில் அம்மை
ஐக்கியமானார்."திருக்கயிலாயம் சென்ற பின்னரும் பூமிக்குத் திரும்பிவந்து சிவபெருமானின் தாண்டவத்தில் எடுத்தருளும் சேவடிக்கீழ் கீதம் பாடிக்கொண்டிருக்கும் காரைக்கால் பேய்''...''நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தருக்கும் முன்பே ஈசனைப்போற்றிப் பதிகம் பாடியருளிய காரைக்கால் பேய்''....''இல்லறத்திற்குப் பிறகு துறவறம் பூண்ட முதல் தமிழ் பெண்மணி காரைக்கால் பேய்''...''அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருக்கும் ஒரே நாயன்மார் காரைக்கால் பேய்''...''சிவபெருமானின் அற்புதத்தை வியந்து பாடல்களில் 'அற்புதத் திருவந்தாதி'யும்,'சிவாய நம'என்னும் திருவைந்தெழுத்தின் பெருமையினைப் புகழ்ந்து பாடல்களில் 'திருவிரட்டை மணிமாலை'யும்,சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் மூவரும் தேவாரப் பதிகம் பாடுவதற்கு முன்பே ஈசனைப்போற்றி ' திருவாலங்காடு மூத்த திருப்பதிகம்'என்னும் பதிகமும் பாடியருளி பதிக நிறைவில் தம்மை 'காரைக்கால் பேய்'என முத்திரை பதித்த காரைக்கால் பேய்''...''அடியேனுக்கு இறவாத இன்ப அன்பு வேண்டும்.பிறவாமை வேண்டும்,மீண்டும் பிறப்புண்டேல்,என்றும் உம்மை மறவாமை வேண்டும்,ஐயன் நடம் புரியும் போது அடியேன் மகிழ்ந்து பாடி,ஐயன் திருவடியின் கீழ் இருத்தல் வேண்டும் என்றும் திருக்கைலாயத்தில் ஈசனிடம் முறையிட்டு,அதன்பலனாய் இன்றும் திருவாலங்காடு திருத்தலத்தில் ஈசனின் திருநடனக்கோலம் கண்டு இன்புற்று அனுதினமும் பாடிப் பரவசப்படும் காரைக்கால் பேய்''.
"சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன்
ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளை
வேந்த னருளாலே விரித்தபாடல் இவைவல்லார்
சேர்ந்த விடமெல்லாந் தீர்த்தமாகச்
சேர்வாரே"[''சம்பந்தர்'']....தேவாரப் பாடல்கள் திருவாலங்காட்டைப்
பழையனூருடன் தொடர்புப்படுத்திப் பாடுகின்றன.பழையனூர் என்பது
ஊர்.திருவாலங்காடு,காடு. இது அன்றைய நிலை.நீலி என்ற பெண் முற்பிறப்பில்
தன்
கணவனால் வஞ்சித்துக் கொல்லப்படுகிறாள். இந்தப் பிறப்பில் அவனைப்
பழிவாங்கும் பொருட்டு திருவாலங்காட்டில் பேயாகத் திரிகிறாள். தரிசனசெட்டி
என்ற பெயரில் அவன் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பதை இனங்கண்டு தன்னோடு
இணையுமாறு அழைக்கிறாள்.அவன் பேயென்று இவளை நிராகரிக்கிறான்.பழையனூரில்
வாழும் வேளாளப் பெருமக்களிடம் சென்று முறையிடுகிறாள்.மறுநாள் தீர்ப்பு
வழங்குகிறோம்;இன்று ஒன்றாகத் தங்குங்கள் என்கிறார்கள். அதிர்ந்த
தரிசனசெட்டி பேயால் தான் கொல்லப்படுவேன் என்று அஞ்சுகிறான்.அனைவரும் அவன்
உயிருக்கு உத்தரவாதம் அளித்ததால் ஒன்றாகத் தங்குகிறார்கள்.நீலி அவனைக்
கொன்று பழிதீர்த்துக் கொள்கிறாள்.மிகுந்த மனவேதனையுற்ற வேளாளப்
பெருமக்கள் 70 பேரும் தீமூட்டி அதில் பாய்ந்து மாய்ந்தனர்.
திருவாலங்காடு- பழையனூர் செல்லும் வழியில் அவர்கள் தீயில் பாய்ந்த
இடத்தில் மண்டபம் உள்ளது.பெண்கள் எப்போதும் தங்களை அழகாய் பாவிக்கவே
எண்ணுவர்.ஆனால் மிக அழகான தன் அழகிய வடிவை வெறுத்து,ஈசனிடம் தனக்கு பேய்
வடிவம் தருமாறு விரும்பி கேட்டு பெற்று, தன்னை சிவனின் பேய் கணங்களில்
ஒன்றாக பாவித்து அனைத்தையும் கடந்தவர் காரைக்கால் அம்மை.அம்மையின் சிவ
”தரிசனம்”
மயிர்கூசச் செய்வது.அந்த காரைக்கால் அம்மையை வணங்குகின்றேன்.
''இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும் நான்மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும்போது
அடியின்கீழ் இருக்க என்றார்''(பெரியபுராணம்)..
''ஒப்பினை இல்லவன் பேய்கள்கூடி ஒன்றினை ஒன்றடித்(து) ஒக்கலித்துப்
பப்பினை யிட்டுப் பகண்டை யாட பாடிருந்(து) அந்நரி யாழ்அமைப்ப அப்பனை
அணிதிரு ஆலங்காட்டுள் அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார் சிவகதி சேர்ந்தின்பம்
எய்துவாரே''[காரைக்கால் பேய்]..''நேற்றைய
வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில்கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில்
அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான்
ravi said…
🌹🌺" *கோவிலைப் புதுப்பிக்கவே இந்தப் பணம் தங்களிடம் சேர்ந்திருக்கிறது என நினைத்து மகிழ்ந்த கோபண்ணா.. விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺மனமே ராமநாம ஜபத்தை விட உயர்ந்து எது. அவன் புகழ் தவிர மற்றதை பாடி என்ன பயன். ஏதுமரியா கிளிக்கு ராம நாமத்தை போதித்தாலும் அது திரும்பச் சொல்லும்போது ரம்மியமாக உள்ளதே என்று பாடியுள்ளார் கோபண்ணா என்கிற ராமதாஸர்

🌺வருமானமே இல்லாமல் தானதர்மங்கள் செய்தால் அது எவ்வளவு நாள்தான் தள்ளும் ? இதில் அதிதி உபசாரம் வேறு .

🌺நிரந்தர வருமானம் இன்றி எந்தவிதமான தான தர்மங்கள் செய்ய முடியாது என்பதை உணர்ந்த கோபண்ணா, ஹைதராபாதில் இருந்த தன் மாமா வீட்டிற்கு சென்றார் . அவரது மாமன்களான அக்கண்ணா, மாதண்ணா என்னும் இருவரும் தங்கள் மருமகனை அன்போடு வரவேற்று, உபசரித்து நவாப் தானிஷாவிடம் சொல்லி அவன் வேலைக்கு ஏற்பாடு செய்தனர் .

🌺நவாப் நல்ல குணான் எனினும் பண விஷயத்தில் மகா கஞ்சன் வரி வசூலில் எந்தவிதமான தவறை யார் செய்தாலும் தண்டிப்பான்.

🌺மாமாக்களின் தீவிரமான சிபாரிஸினால் கோபண்ணாவுக்கு பத்ராசல தாலுகாவிற்கு தாசில்தார் உத்தியோகம் அளித்தார் .. நவாப் வரி வசூலில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும் என்பதே அவருக்க இடப்பட்ட கடுமையான உத்தரவு .

🌺வசூலாகும் தொகை ஒழுங்காக அரசாங்கத்திற்கு வர வேண்டும். பத்ராஜலத்திற்கு கோபண்ணா தாசில்தாராக மிக்க மரியாதையுடன் பல்லக்கில் அழைத்து வரப்பட்டார் . அங்கு வந்ததும் முதலில் கிரிப்பிரதட்க்ஷிணம் செய்தபின் கோவிலுக்குள் சென்று ஸ்ரீராமபினை வலம் வந்து வணங்கினார் .

🌺நவாபுக்கும் மாதாமாதம் செல்ல வேண்டிய பணம் ஒழுங்காகச் சென்றது. அதே சமயத்தில் தன் பகவத் கைங்கர்யங்கள் யாவையும் ஒழுங்காக வே செய்து வந்தார் நம் கோபண்ணா . " உன் அருள் இல்லாமல் எனக்கு ஏது இந்த உத்தியோகம் ?

🌺உனக்கு தொடர்ந்து பணி செய்யவே எனக்கு இவ்வூரில் வேலை தரப்பட்டிருக்கிறது. அதை நன்கு உபயோகப்படுத்திக் கொள்வேன்" என தனக்குள் சொல்லிக் கொண்ட கோபண்ணா, மக்களிடம் சில நிமிடங்கள் மட்டுமே பேசினார் அதிலிருந்து தாசில்தார் தங்களுக்கு ஏற்றவர் என்று மக்களும் புரிந்து கொண்டனர்.

🌺பதவி ஏற்ற நாள் முதல் மக்கள் குறைகளை அவ்வப்போது தீர்த்து வைத்து அவர்களை மனங்களில் வைத்தார். நிர்வாகம் நன்றாக நடந்தது

🌺எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டு இருந்தபோது பத்ராஜல ஸ்ரீராமர் கோவில் மிக மோசமான நிலையில் இருந்தது. ஒரு காலத்தில் தம்மக்கா என்னும் அந்தப் பெண், தனக்கு கடவுள் கட்டளை இட்ட பிரகாரம் இந்த கோவிலை கட்டினாள் . மலைக்கும் இப்படி ஒரு கோயில் கட்ட ஊரார் ஒத்துழைக்க கோயில் பூரணத்துவம் அடைந்தது. பின் சிலநாட்கள் கழிந்ததும் அவள் இறைவன் திருவடி அடைந்தாள் .

🌺அதன்பின் இக்கோவிலின் மீது எவரும் பூரண அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை . மன்னன் செய்யப் போவதில்லை, அதனால் இந்த பகவத் கைங்கர்யத்தை தானே செய்தால் என்ன என்ற எண்ணம் கோபண்ணாவின் மனதில் தோன்றியது.

🌺அதே சமயம் ஊர் பெருதனக்காரர்களும் அதையே தங்கள் விருப்பமாக சொல், கோவிலைக்கட்டி கும்பாபிஷேகம் செய்ய கோபண்ணா முடிவெடுத்தார் .

🌺செலவு எவ்வளவு ஆகும் என்று கணக்கெடுத்தபோது, ஆறு லட்சம் பொன் தேவை எனத் தெரிந்தது .. கோபண்ணா தம் கஜானா அதிகாரியைக் கேட்க அவர் கையில் இருப்பது ஆறு லட்சம் பொன் என்றார் .

🌺கோவிலைப் புதுப்பிக்கவே இந்தப் பணம் தங்களிடம் சேர்ந்திருக்கிறது என நினைத்து மகிழ்ந்த கோபண்ணா , எதைப் பற்றியும் கவலை படாமல் கோவிலைப் புதுப்பிக்கும் பணியில் இறங்கினார் .

🌺பெரும் கல்தூண்கள், அழகிய சிற்பங்கள் போன்ற பல சிற்ப வேலைகளிலும், ஒழுங்காக செய்யப்பட்ட அலங்கார மண்டபம், கர்ப்பக்கிரஹம், மூலவர், பலிபீடங்கள் எல்லாமே கல்லிலேயே உருவாயின ..

🌺உயரத் தெரிந்த கோபுரம் விண்ணைத் தொடுவதாக இருந்தது. எல்லோரும் மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு வியந்து பார்க்கும் அளவிற்கு கோவில் சிறப்பாக அமைந்துவிட்டது. மூலஸ்தானத்தில் இருந்த ஸ்ரீராமர் தமக்குள் புன்னகை பூத்தார் .

🌺ஒருவருட காலத்தில் எல்லாமே ஒழுங்காக நடந்து முடிந்தது . ஆனால் மன்னன் கடுமையான தண்டனை கொடுத்து சிறையில் அடைத்தான், ஸ்ரீ ராம நாமம் சொல்லி விடுதலை பெற்றார்

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
கவலைகள் நாளைய துயரங்களை அழிப்பதில்லை. இன்றைய வலிமையை அழித்து விடும்.

தயங்கியவர்களும், தாமதம் செய்பவர்களும் வரலாறு படைப்பதில்லை.

முயற்சி செய்து முன்னேற துடிப்பவர்களும், உழைக்கத் துணிந்தவர்களும் உச்சத்தை அடைய தவறுவதில்லை.

எடுத்த காரியத்தில் எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் இழுபறியான சூழ்நிலைகளை களைந்து, சிந்தித்து செயல்பட்டு, தாமதங்களைக் தவிர்த்து, விவேகத்துடன் தொடர்ந்து முயற்சி செய்தால்,

நெருக்கடியான சூழ்நிலைகள் மறைந்து விரைவில் வெற்றிக்கு வழி பிறக்கும்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
_*சாதிக்க நினைப்பவர்களுக்கு எழுத்தாளர் சுஜாதா வழங்கிய அறிவுரைகள் ....!!!*_


1. புத்தகங்களைத் துணை கொள் ....அதை விட சிறந்த நண்பனில்லை ....

2. உடலுழைப்பை அதிகரி .... அது மட்டுமே உன்னை உயர்த்தும் , ஆனந்தமும் ஆரோக்கியமும் அதில் மட்டுமே கிடைக்கும் ..

3. குளிர்ந்த நீரில் குளி . உடல் சுறுசுறுப்பாகும் ...

4. தியானம் கைக்கொள்.... உன்னை நீ உணர்ந்து கொள்ள அது மட்டுமே வழி காட்டும் ....

5. இரவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட .... உன் தூக்கம் இன்பமாக இருக்கும் ...

6. தாய் தந்தையைப் போற்றி வணங்கு ..... அது உன் கடமை.

7. உணவில் கீரை சேர்த்துக் கொள் ....

8. எத்தனை வலித்தாலும் அழாதே . சிரி . வலிமைக்குக் மேல் வலிமை பெற்று வானம் தொடுவாய் ....

9. ஆத்திரம் அகற்று .
எதற்கும் கோபப்படாதே ....
கோபம் உன்னை ஒரேயடியாக அழித்து விடும் ....

10. கேலிக்கு புன்னகையை பரிசாக்கு ...

11. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு . திருப்பித் தாக்கி விடாதே ....

12. நட்புக்கு நட்பு செய் .
பகைவனைக் கூட நேசிக்கப் பழகு .....

13. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு ....
மேலும் மேலும் உயர்வாய் ...

14. அலட்சியப்படுத்தினால் விலகி நில் . ஆத்திரப்பட்டுவிடாதே ....

15.. அன்பு செய்தால் நன்றி சொல் .... நன்றியுணர்வு உன்னைப் பெரியவனாக்கும் ...

16. இதமாகப் பேசு .
இனிமைகள் உன்னை அரவணைத்துக் கொள்ளும் ....

17 . நீயும் நானும் எதைச் செய்தாலும் இறைவன் மௌனமாகப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் .....அவருக்கு நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும் .... ஆகவே நல்லதைச் செய் .....

நீ ஜெயிப்பாய்,
நிச்சயமாக ஜெயிப்பாய்.....
ravi said…
''திருப்பெருந்துறை *அருணாசலனே*

சூரியனின் தேரோட்டியான அருணன் கிழக்கே வந்து விட்டான்

(இந்திரனின் திசை கிழக்கு).

உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி விட்டான்.

அண்ணலே! உனது கண்களைப் போன்ற தாமரைகள் தடாகங்களில் மலர்ந்து விட் டன.

வண்டினங்கள் அவற்றில் தேன்குடிக்க திரளாக வந்து கொண்டிருக்கின்றன

அருட் செல்வத்தை வாரி வழங்கும் ஐயனே!

மலை போல் இன்பம் தருபவனே!

அருட்கடலே!

நீ கண் விழிப்பாயாக.

சுட சுட களி செய்து வைத்தோம் *அருணாசலா*

அதில் கோபுரம் போல் நெய் ஊற்றி வளர்த்தோம் ..

கூடவே துணைக்கு மேரு மலை என

முந்திரி
பிஸ்தா
திராட்சை
பால்
பாகு
தேன்
கற்கண்டு
பச்சை கற்பூரம் ஏலக்காய்
சர்க்கரை
வெல்லம்

சேர்த்து வைத்தோம் உன் ஆனந்த நடனம் அதை காணவே !!

முந்திரி மேளம் கொட்ட

திராட்சை தாளம் போட

பிஸ்தா பின்னணி ஜதி கொடுக்க

பாலும் தேனும் ஆடும் மேடையை சுத்தம் செய்ய

வெல்லம் ஸ்ருதி சேர்க்க ,

ஏலக்காய் உடுக்கை இசைக்க

எம்பிரானே! நீ உண்ணும் களி எங்கள் கலி அனைத்தும் தீர்த்ததே

*அருணாசலா*

சூது செய்து என்னை இனியும் சோதிக்காதே !

காட்டு எங்களுக்கே உன் ஜோதி உருவை *அருணாசலா*

அடி முடி நாங்களும் தேடி வந்து சொல்கிறோம் கண்டோம் என்றே *அருணாசலா*🙂🙏🙏
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

32 –
சூது செய்து என்னைச் சோதியாது

இனி உன்
ஜோதி உருக்காட்டு அருணாசலா (அ)💐💐💐
ravi said…
அம்மா பாராட்டும் குணம் கொண்டவளே

பார்ப்போர் துதிப்போர் துதியோர் எவர்க்கும் துணை வருபவளே ...

ஆனந்த தாண்டவம் சொக்கன் உன் அழகில் சொக்கித் தான் ஆடுகிறானோ ?

உன் கருணை மழை கண்டு அதில் நனைந்தே ஆடுகிறானோ ...

களி போல் இனிப்பவளே உனை சுவைத்தே எங்கள் கலி தீர்க்க ஆடுகிறானோ

கிளி போல் உன் பேச்சை கேட்டு இனி வேறு இசை இல்லை என்ற மயக்கத்தில் ஆடுகிறானோ ?

குயில் போல் உன் குரல் கேட்டு நீ பிறந்த ஊரினிலே பிரம்படி வாங்கிக்கொண்டானோ ?

பித்தனாகி திருவாரூரில் வீதி வீதி யாய் உன் நினைவில் நடந்தனோ ... ?

பல்லாண்டு பாடியவர் பல்லாண்டு வாழ வேண்டி

புன்னகை களி போல் உதிர்த்தே கனக சபை தனில்

ஆடும் அழகன் என்றும் குமரன் உன் வசம் சிக்கி யாருக்கும் சிக்காமல் ஆடுகிறானோ ?💐💐💐
ravi said…
*❖ 73 நித்ய பராக்ரமாடூப நிரீஷண சமுத்சுகா =*

நித்யதேவிகளின் ஆற்றலையும் பெருமையையும் கண்டு உணர்ச்சிப்
பெருக்கில் ஆர்பரிப்பவள்.🙌🙌
ravi said…
06.01.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 15)

Sanskrit Version:

पाञ्चजन्यं हृषीकेशो देवदत्तं धनंजयः।
पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मा वृकोदरः।।1.15।।

English Version:

Paanchajanyam hrshikeshah
devadattam Dhananjayah: |
paundram dadhmau mahaashankam
Bhimakarma vrkodarah ||

Shloka Meaning:

The conch of Lord Krishna is named as paanchajanjam
Arjuna's conch is named as Devadatta
The conch of Bhima was named as Paundram.

Additional details:

Shlokas 15, 16, 17 & 18 describe the conch sounds of the various warriors of the Pandava army (sainyam)
Jai Shri Krishna 🌺
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆருத்ரா தரிசனம் விரத முறைகள் பற்றிய பதிவுகள் :*

சிவாலயம் சென்று, நடராஜரையும், சிவகாமி அம்மனையும் வணங்க வேண்டும்.
இரவில் எளிமையான உணவை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

திருவாதிரை அன்று, நடராஜ பெருமானுக்கு களி நைவேத்தியமாக படைக்கப்படும். 'திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி' என்பது முன்னோர் வாக்கு.

இறைவனுக்கு களி படைப்பதற்கான கதை ஒன்றும் உள்ளது. முன் காலத்தில் சேந்தன் என்ற சிவபக்தர் இருந்தார். விறகு வெட்டி கிடைக்கும் சிறிய வருவாயில் வாழ்க்கை நடத்தி வந்தார். இருப்பினும் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பிறகே, அவர் உணவருந்துவார். ஒரு நாள் கடும் மழை பெய்தது.

அதனால் விறகுகள் ஈரமாகி விட்டன. அதனால் விறகுகளை விற்க முடியாமல் வருவாய் பாதிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் சேந்தன் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வருகை தந்தார். அவருக்கு எப்படி உணவளிப்பது என்று சேந்தன் கவலைகொண்டார்.

ravi said…
அவரது மனைவி, வீட்டில் அரிசி மாவும், சிறிது வெல்லமும் இருப்பதாகவும், அதைக் கொண்டு அடியாருக்கு களி செய்து கொடுக்கலாம் என்று கூறினார். அதன்படியே சிவனடியாருக்கு களியை உணவாக படைத்தனர்.

அதை உண்ட சிவனடியார் மகிழ்வுடன் புறப்பட்டார். அதற்கு மறுநாள் திருவாதிரையாகும். நடராஜரை தரிசிக்க, சேந்தனும் அவரது மனைவியும் சிதம்பரம் சென்றனர். அங்கு சிவபெருமானின் வாய்ப் பகுதியில் களி உண்டதற்கான அடையாளமாக சிறிது களி ஒட்டிக்கொண்டிருந்தது.

ravi said…
தன் வீட்டிற்கு வந்து களி சாப்பிட்டது ஈசன் என்று அறிந்ததும் சேந்தனும், அவரது மனைவியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இதை அறிந்த ஊர் மக்களும், சேந்தனின் பக்திக்கு தலை வணங்கினர். அன்று முதல் திருவாதிரை அன்று இறைவனுக்கு நைவேத்தியமாக களி படைக்கும் வழக்கம் வந்தது.

சிவபெருமான் பிறப்பும், இறப்பும் இல்லாதவராக போற்றப்படுகிறார். ஆனால் அவருக்குரிய நட்சத்திரமாக 'திருவாதிரை' இருக்கிறது. பகவத் கீதையில், 'மாதங்களில் நான் மார்கழி' என்று கூறும் கிருஷ்ணர், 'நட்சத்திரங்களில் நான் திருவாதிரையாக இருக்கிறேன்' என்கிறார்.

ravi said…
தெய்வங்களை வழிபடுவதற்கான மாதமாக கருதப்படும் இந்த மார்கழியில்தான், திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசனமும் வருகிறது. இந்த ஆருத்ரா தரிசனம், நடராஜ பெருமானுக்கு உகந்த வழிபாட்டு தினமாகும்.

இந்த நாளில் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். சிதம்பரம் நடராஜர் கோவில், திருவாரூர் தியாகராஜ பெருமான் ஆலயங்களில் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

ஆதிசேஷன், பூமியில் பதஞ்சலி முனிவராக பிறந்தார். இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்கு கீழே பாம்பு தோற்றமும் கொண்டவராக, அவரது உருவம் இருந்தது. பலகாலம் பூமியில் தவம் இருந்ததன் பலனாக, பதஞ்சலி முனிவருக்கு சிதம்பரம் ஆலயத்தில் இறைவனின் ஆனந்த தாண்டவத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அவருக்கு சிவபெருமான் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளினார். அப்போது பதஞ்சலி முனிவர், "இறைவா.. இந்த திருக்காட்சியை பூலோக மக்களுக்கும் காட்டி, அவர்கள் முக்தி அடைய வழி காட்ட வேண்டும்" என்று வேண்டினார். அதன்படியே, ஆண்டுதோறும் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில், ஆருத்ரா தரிசனம் நடைபெற்று வருகிறது.

*விரதம் இருக்கும் முறை*

ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக பிரித்துள்ளனர். அதில் ஆடி முதல் மார்கழி வரையான தட்சிணாயன புண்ணியகாலத்தின் கடைசி மாதமாக இருப்பது, மார்கழி. இந்த மாதம் தேவர்களின் அதிகாலை பொழுதாகும். அதாவது அவர்களின் பிரம்ம முகூர்த்த நேரம் என்றும் இந்த மாதத்தை சொல்வார்கள். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமிவுடன் கூடிய திருவாதிரை நட்சத்திர நாளில்தான், திருவாதிரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, சிவ நாமம் உச்சரித்து உடல் முழுவதும் திருநீறு தரிக்க வேண்டும்.

பின்னர் சிவாலயம் சென்று, நடராஜரையும், சிவகாமி அம்மனையும் வணங்க வேண்டும். காலையில் ஆலயத்தில் நடைபெறும் தாண்டவ தீபாரதனையை காண வேண்டும். பின்னர் வீட்டிற்கு வந்து இறைவனுக்கு திருவாதிரை களி படைத்து, அதை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். பகலில் உணவருந்த கூடாது. அன்று முழுவதும் சிவபுராணம் எனப்படும் திருவாசகப் பாடல்கள், தேவாரம் போன்றவற்றை பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டும். இரவில் எளிமையான உணவை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

திருவாதிரை விரதத்தை மார்கழி திருவாதிரையில் தான் அனைவரும் கடைப்பிடிப்பார். ஆனால் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திர தினத்திலும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். தொடர்ச்சியாக ஒரு வருடம் திருவாதிரை நோன்பு இருப்பவர்களுக்கு, வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பெரும் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

ஓம் நமசிவாய
ravi said…
[06/01, 10:36] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 46*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
[06/01, 10:38] Jayaraman Ravilumar: कुतुकजुषि काञ्चिदेशे कुमुदतपोराशिपाकशेखरिते ।

कुरुते मनोविहारं कुलगिरिपरिबृढकुलैकमणिदीपे ॥ ३०॥

30. Kuthuka jushi Kanchi dese kumudha thapo rasi paka shekharithe,

Kuruthe mano vihaaram kula giri paribruda kulaika mani dheepe.

குதுகஜுஷி காஞ்சிதேஶே குமுததபோராஶிபாகஶேகரிதே |

குருதே மனோவிஹாரம் குலகிரிபரிப்றுடகுலைகமணிதீபே ||30||
[06/01, 10:39] Jayaraman Ravilumar: அம்பாள், காமாக்ஷி, ஹிமவான் புத்ரி. குலத்துக்கு பெருமையளிக்கும் வகையில் அந்த ஸ்த்ரீ ரத்னம் காஞ்சியில் மஹாராணியாக பெருமை சேர்க்கிறாள்.

ஆஹா, காஞ்சியில் வசிக்கும் அவளும் உற்சாகமாக இருக்கிறாள்,

அவள் ஆட்சியில் வசிப்பவர்களையும். உற்சாகமாக, ஆனந்தமாக இருக்கச் செயகிறாளே.

சரியான குல ரத்னம் அவள்.

நீலோத்பல மலர்களை
ஆனந்திக்கச் செய்யும் சந்திரனை பிறையாக சூடிய மகேஸ்வரன் மனது நிறைந்தவளே,

பிறவி எடுத்த பயனை உன்னை தரிசித்து த்யானம் செய்வதின் மூலம் அடைந்து விட்டேன் தாயே. 🙏🙏🙏
ravi said…
[06/01, 10:33] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 450* 🙏🙏🙏started on 7th Oct 2021
[06/01, 10:35] Jayaraman Ravilumar: *186 निरपाया - நிரபாயா* -

எந்த சக்தியாலும் அழிக்கமுடியாதவள் அம்பாள் என்று இந்த நாமம் குறிப்பிடுகிறது.

ஒரு அபாயமும் இல்லாதவள். பிரம்மத்தை எவரால் நெருங்கமுடியும்?. அதற்கு மாறுதல் எது? ஏது?
ravi said…
[06/01, 10:56] Jayaraman Ravilumar: அடுத்த ஸ்லோகம்

क्षीरसागरतरङ्गशीकरा-सारतारकितचारुमूर्तये ।

भोगिभोगशयनीयशायिने माधवाय मधुविद्विषे नमः ॥ ४२॥

க்ஷீரஸாக³ரதரங்க³சீகரா ஸாரதாரகிதசாருமூர்தயே ।

போ⁴கி³போ⁴க³சயனீயசாயினே மாத⁴வாய மது⁴வித்³விஷே நம: ॥ 42 ॥
[06/01, 10:57] Jayaraman Ravilumar: க்ஷீரஸாக³ரதரங்க³சீகரா – க்ஷீர ஸாகரத்தில், பாற்கடலில் தரங்கங்கள்னா அலைகள். அந்த அலைகள் சீகரான்னா துளிகள் அந்த அலைகள் அந்த பாற்கடல்ல பகவான் படுத்திண்டு இருக்கிறதை தியானம் பண்ணி பார்த்துக்கணும்.

அதுல பாற்கடல்னா வெள்ளை வெளேர்னு இருக்கும்.

அதுக்கு நடுவுல பகவான் நீலமேக சியாமளனா படுத்திண்டிருக்கார்.

அந்த பாற்கடலோட அலைகள் எழும்பி அதோட துளிகள் அவர சுத்தி நக்ஷத்திரங்களை போல இருக்காம். தாராகணம் மாதிரி இருக்கு…

அந்த மாதிரி அவருடைய திருமேனியை இந்த பார்கடலுடைய அலைத் துளிகள் நக்ஷத்திரங்களைப் போல அழகு படுத்தறதுன்னு சொல்றார்
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
ஒருநாள் ஸாயங்காலம் விஷ்ணு இப்படி த்யானம் பண்ணி சிவ தாண்டவத்தைப் பார்த்து ரஸித்துக் கொண்டிருந்தார். ஹ்ருதய கமலத்தில் ப்ரஸன்னமாயிருக்கும் நடனமூர்த்தியின் ஸ்வரூபத்தைப் பார்த்ததில் அவருக்கு ஸந்தோஷம் தாங்கமுடியாமல் பூரிப்பு ஏற்பட்டது.

ravi said…
அந்த கனத்தை ஆதிசேஷனால் தாங்கமுடியவில்லை.

அவர் விஷ்ணுவிடம், “என்ன, இப்படி ஒரே பாரமாகி விட்டீர்களே! என்னால் தாங்கமுடியவில்லையே! என்ன காரணம்?” என்று கேட்டார்.

அதற்கு விஷ்ணு, “என் ஹ்ருதயத்தில் பரமேச்வரன் நர்த்தனம் பண்ணினார். அதுதான் பாரத்திற்குக் காரணம்” என்று பதில் சொன்னார்.

ஸந்தோஷத்தினாலேயே பாரம் என்கிறபோது அது அத்வைதம். ஈச்வரன் இவர் ஹ்ருதயத்தில் தோன்றியதால் பாரம் என்றால் இவர் ப்ளஸ் அவர் என்று இரண்டு பேர் சேர்ந்ததால் பாரம் என்பதாக த்வைத்மாக அர்த்தம் கொடுக்கிறது. அத்வைதமாகப் பண்ணிக் காட்டியதைத் திருவாரூரில் முக்காலே மூணு வீசம் மூடி வைக்கும்படியாகி விட்டதல்லவா? அதனால். பொதுஜனங்களுக்கு அவர்களுக்குப் புரிவதான த்வைத்மாகக் காட்டித்தான் அப்படியே அத்வைதத்திற்கு அழைத்துக்கொண்டு போகவேண்டும். ஆதிசெஷனின் மூலம் இதைப் பண்ண வேண்டும்’ என்று பகவான் நினைத்தார். அதனால்தான் இப்படிச் சொன்னார். இப்படிச் சொன்னால் ஆதிசேஷன் என்ன கேட்பார் என்று அவருக்குத் தெரியும்.

ravi said…
அவர் நினைத்ததுபோலவே ஆதிசேஷன், “அப்படிப்பட்ட ஈச்வர தாண்டவத்தை நான் பார்க்க வேண்டுமே!” என்றார்.

அதற்குத்தான் பகவான் காத்துக்கொண்டிருந்தார். மூடி மறைத்துக்கொள்ளாமல் நன்றாகத் தாண்டவமாடுவதாக வெளியில் தெரிகிற நடராஜ மூர்த்தியிடம் பதஞ்சலியை அனுப்பி, அவருடைய பக்தி விசேஷத்தினால் சிதம்பர க்ஷேத்ரத்திற்கு மேலும் கீர்த்தி ஏற்படச் செய்து, எல்லா ஜனங்களும் வந்து கண்ணார தர்சனம் பண்ணி, தர்சனத்தினாலே முக்தி பெறச் செய்யவேண்டுமென்பதுதான் அவருடைய ஆசை.

ravi said…
திருவாரூரில் பிறந்தால் முக்தி” “ஜநநாத் கமலாலயே” பிறப்பது நம்மிஷ்டம் இல்லை! சிதம்பரத்தில் தர்சன மாத்திரத்தால் முக்தி: “தர்சநாத் அப்ர ஸதஸி”. எங்கே பிறந்தவரானாலும் அங்கே போய் தர்சனம் பண்ணி மோக்ஷத்திற்குப் போய்விடலாம். த்வைதமான தர்சனத்தினாலேயே அத்வைதமான மோக்ஷம்! பதஞ்சலியின் மூலம் சிதம்பர மஹிமையை ப்ரகாசிக்கச் செய்து ஸர்வ ஜனங்களுக்கும் மோக்ஷோபாயம் காட்ட பகவத் ஸங்கல்பம் ஏற்பட்டது.

மகாவிஷ்ணு பதஞ்சலியிடம், “சிவ தாண்டவம்தானே பார்க்கணுமே? பாரத் வர்ஷத்தில் தக்ஷிண தேசத்தில் தில்லைவனத்தில் சிதம்பர க்ஷேத்ரம் இருக்கிறது. அங்கே சிவன் நடராஜாவாக ஆனந்தமாக ஆடிக்கொண்டிருக்கிறார். போய் தர்சனம் பண்ணிக்கொள்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

இவருடையாவும் ஜனந்களுடையவும் ஆத்மா க்ஷேமத்திற்காக மட்டும் அனுப்பி வைக்காமல் அறிவு விஷயமாகவும் பூலோகமே உபகாரம் பெரும்படியாக இன்னொரு பெரிய கார்யத்தையும் கொடுத்தார். “நடராஜாவின் டமருக நாதத்தைக் கொண்டு பாணினி வ்யாகரண ஸுத்ரம் செய்திருக்கிறார். அதைப் புரிந்துகொள்ள மஹா மேதாவிகளைத் தவிர மற்ற எவராலும் முடியாமலிருக்கிறது. ஆகையால் தேவ பாஷையான ஸம்ஸ்க்ருத்தின் அந்த வ்யாகரண ஸுதரங்களை நன்றாகப் புரியவைத்து பெரிய பாஷ்ய புஸ்தகம் எழுது” என்றும் ஆஜ்ஞாபித்தார்.

தூங்குகிற மஹாவிஷ்ணுவுக்குப் பாம்பு படுக்கை. அவர் உட்கார்ந்தால் அந்தப் பாம்பே ஸிம்ஹாஸனமாகிவிடும். நடந்து போனாரானால் குடை பிடிக்கும். ஆனால் மகாவிஷ்ணு நாட்யம் ஆடுவதில்லை. சிவன்தான் ஆடுகிறவர். ஆடுகிறவருக்குப் பாம்பு எந்தவிதத்தில் பணி செய்ய முடியும்? ஆபரணமாக அவர் உடம்பிலேயே நெளிந்துகொண்டு அலங்காரப் பணி செய்கிறது! ஈச்வரன் மேலே பல பாம்புகள் நெளிகிறபோது, அவருடைய பாதத்தில் சிலம்பாகச் சுற்றிக்கொள்ள ஆதிசேஷன் போனார்.
ravi said…

ஆதிசேஷப் பாம்பு பதஞ்ஜலி மஹர்ஷியாக அவர்தாரம் செய்து நடராஜாவிடம் போய்ச் சேர்ந்தது. அதனால் மஹாவிஷ்ணுவுக்கு சேஷபர்யங்கம் இல்லாமல் போய் விட்டதென்று அர்த்தம் பண்ணிக்கொள்ளக் கூடாது. ஆதிசேஷன் அங்கேயும் இருந்துகொண்டே தம்முடைய அம்ச கலைகளினால் பூமியில் ஒரு அவதார ரூபம் எடுத்தார்.

அத்ரி மஹர்ஷியின் புத்ரராகப் பதஞ்ஜலி அவதரித்தார்.அ தனால் ஆத்ரேயர் என்று அவருக்கு ஒரு பெயர். (ஆசார்யாளும் ஆத்ரேய கோத்ரம்தான் என்று பார்த்தோம்.)

கோணிகா புத்ரர் என்றும் அவருக்கு ஒரு பெயர். சில புராணங்களை அநுஸரித்துப் ‘பதஞ்ஜலி சரித’த்தில் அவர் கோணிகா என்ற தபஸ்வினிக்குப் புத்ரராகப் பிறந்த கதையைச் சொல்லி, அதிலிருந்தே ‘பதஞ்ஜலி’ என்ற பெயர் ஏற்பட்டதற்குக் காரணம் சொல்லியிருக்கிறது.

ravi said…
கோணிகா அஞ்சலி முத்ரையுடன் கூடிய கையில் அர்க்ய ஜலத்தை வைத்துக்கொண்டு ஸுர்ய பகவானிடம் தனக்கு மஹாத்மாவான புத்ரனை அருளுமாறு வேண்டிக் கொண்டிருந்தாள். அப்போது ஆகாசத்திலிருந்து ஆதிசேஷன் அந்த அஞ்சலி ஹஸ்தத்தில் விழுந்து அவதாரம் எடுத்தார். ‘பத்’ என்றால் ‘விழுவது’. அஞ்சலி ஹஸ்தத்தில் விழுந்ததால் அவருக்குப் ‘பதஞ்ஜலி’ என்று மாதா பெயர் வைத்தால் – இப்படி (‘பதஞ்ஜலி விஜய’த்தில்) பெயருக்குக் காரணம் சொல்லியிருக்கிறது.

ravi said…
சரகர் என்றும் அவருக்கு ஒரு பெயர்.

அவர் ஆசைப்பட்டு ஜன்மா எடுத்தது நடராஜ தாண்டவம் பார்ப்பதற்காக. அந்த ஆசை பரிபூரணமாக நிறைவேறிற்று. சிதம்பரத்தில் வாஸம் செய்துகொண்டு, நடராஜாவை ஸதா கால தர்சனம் பண்ணி, அவருடைய முக்யமான இரண்டு பக்தர்களின் ஒருத்தராகிவிட்டார்.

இவருடைய ஆசை நிறைவேறுமாறு இவரை அனுப்பி வைத்தா விஷ்ணுவுக்கு இவர் மூலமாக லோகோபகாரமான அறிவுப் பணியும் நடக்கவேண்டும் என்பதல்லவா ஆசை? அந்த ஆசையும் நன்றாக நிறைவேறியது – பதஞ்ஜலி தேவ பாஷைக்கு வ்யாகரண மஹாபாஷ்யம் எழுதினார். அவருக்கு அது மிகவும் ப்ரஸித்தியைக் கொடுத்தது.
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் :*

ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை.

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் - புனர்பூசம்;
கிருஷ்ணனுக்கு - ரோகிணி;
முருகனுக்கு - விசாகம்.

இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.

ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.

ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை.

எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார்.

சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி , திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.

இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது.

சேந்தனாருக்கும் , திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும். ஆதிரை முதல்வனுக்கு களி செய்து வணங்கி அவரின் திருவடியை அடைவோமாக!.

தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி!
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!!

திருச்சிற்றம்பலம்! தில்லையம்பலம்!!

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
[07/01, 07:29] +91 96209 96097: *அத்ருஷ்யாய நமஹ*🙏
அறிவதற்கு அரியவராக இருப்பவர்
[07/01, 07:29] +91 96209 96097: சதுஷ்ஷஷ்ட்யுபசாராட்⁴யா *சதுஷ்ஷஷ்டிகளாமயீ* |🙏

அறுபத்து நான்கு ஆகமங்களையும் வடிவமாக பெற்று திகழபவள்
ravi said…
*_✍️ 07.01.2023_*

*🔹🔸இன்றைய சிந்தனை..*

*🧿''சுய புத்தி போனாலும், சொல் புத்தி வேண்டும்.*

*♻️சொந்தமாக சிந்திக்காமலும், மற்றவர்களின் அறிவுரையைக் கேட்காமலும் செயல்படும் போது சில வேளையில் சிலர் சிக்கலில் மாட்டிக் கொள்வதை காண்கிறோம்.*

*♻️அதற்குத் தான் நம் முன்னோர்கள் சொந்த புத்தி வேண்டும். இல்லையென்றால் சொல் புத்தியாவது கொஞ்சம் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்..*

*♻️ஒரு ஊர்ல ஒரு ஜென் துறவி இருந்தார். அவர் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று மக்களுக்கு நீதிக் கதைகள், போதனைகள் சொல்லி வந்தார்.*

*♻️அவர் ஒரு நாள் ஒரு ஊருக்கு வந்தார். அங்கு சுமார் ஒரு மாதம் வரை தங்கி விட்டு வேறு ஊருக்குச் செல்ல தனது மாட்டு வண்டியைத் தயார் செஞ்சுட்டு இருந்தார்.*

*♻️அப்போது அந்த ஊரில் இருந்த ஒருவன் அவரிடம் வந்து, ஊர் ஊராகத் தானும் உங்களுடன் வந்து விடுவதாக சொன்னான்.*

*♻️இதைக் கேட்டதும் அவனைப் பற்றி அக்கம்பக்கம் விசாரித்த துறவி, அவன் ஒரு அனாதை என அறிந்து அவன் மேல் அனுதாபப்பட்டு அவனையும் சேர்த்துக் கொண்டு பொருட்களைக் கட்டிக் கொண்டு அடுத்த ஊருக்கு அவர்கள் பயணமானார்கள்.*

*♻️துறவி வண்டியில் முன்னால் அமர்ந்து இருந்தார்.அவன் வண்டிக்குப் பின்னால் அவன் அமர்ந்திருந்தான். துறவி அவனிடம்,தம்பி பின்னால் உள்ள பொருட்கள் ஏதாவது கீழ விழுகுதான்னு பார்த்துட்டே வா'ன்னு சொன்னார்.*

*♻️கொஞ்ச தூரம் பயணம் செய்த பின் ஓரிடத்தில இளைப்பாற நிறுத்தினார்கள். அப்போது வண்டியின் பின் பக்கம் வந்த துறவி சில பொருட்களைக் காணாது விக்கித்து நின்றார்.*

*♻️அவனிடம் பொருட்கள் எங்கே என கேட்க, அவன் சில பொருட்கள் கீழ விழுந்திருச்சு எனச் சொன்னான்.*

*♻️இவர், கீழ விழுந்தா? எடுத்து வைத்திருக்க வேண்டியது தானே எனத் துறவி கேட்க, அதற்கு அவன் நீங்க பொருட்கள் விழுகுதான்னு பாக்கத் தானே சொன்னீங்க என சொன்னான்..*

*♻️அவன் அவர் சொன்னதை அப்படியே செய்ததாகச் சொன்னான். துறவி கீழே விழுந்ததை பத்திரமாக எடுத்துட்டு வா என்பதை அவன் அப்படி குறுகிய மனப்பான்மையில் எடுத்துக் கொண்டான்..*

*என்ன பையன் இப்படி இருக்கிறானே என்று துறவி சலித்துக் கொண்டார்.*

*♻️அடுத்து அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.* *இந்தத் தடவை துறவி அவனிடம் கீழ எது விழுந்தாலும் பிடிச்சு எடுத்து வை என்றார்.*

*♻️சிறிது தூரம் சென்ற பின் ஒரு இடத்தில் இளைப்பாற மறுபடியும் வண்டி நின்றது.துறவி வண்டியை விட்டு இறங்கி வண்டிக்கு பின்னால் வந்து பார்த்தால் வண்டி பின்பக்கம் முழுவதும் மாட்டுச் சாணமாக இருந்தது. அவன் கையிலும் சாணம் இருந்தது.*

*♻️துறவி, என்ன தம்பி வண்டியில இவ்வளவு சாணி இருக்கு, என்ன விஷயம் எனக் கேட்க,*

*♻️அதற்கு அவன், நீங்க தானே ஐயா எது கீழ விழுந்தாலும் எடுத்து வைன்னு சொன்னீங்க அதான் எடுத்து வைத்துக் கொண்டே வந்தேன் என பதில் சொன்னான்.*

*♻️அவன் பதில் கேட்டு துறவி அவன் அறியாமையை நினைத்துக் கவலைப்பட்டார்.*

*♻️சொல்வதை அப்படியே அர்த்தம் எடுத்துக் கொள்கிறானே,, கொஞ்சம் கூட பகுத்து ஆய்ந்து பொருள் விளங்கி சமயோசிதமாக செயல்பட மாட்டேங்கறானே என மிகவும் வருத்தமுற்றார்.*

*♻️அவன் சிறுபிள்ளைத்தனமான புத்தியை மாற்றி அவனை நல்ல அறிவாளியாக மாற்ற வேண்டும் என அவர் தனக்குள் நினைத்துக் கொண்டு அருகிலிருக்கும் ஊரை நோக்கிப் பயணமானார் அவனையும் கூட்டிக் கொண்டு....*

*😎ஆம்,நண்பர்களே.,*

*🏵️இந்தக் கதையில் வரும் மனிதர்களைப் போலத் தான் நம்மில் பெரும்பான்மையோர் உள்ளனர்.*

*⚽சொல்கிற சொல்லை அப்படியே அர்த்தம் கொள்ளாமல், அதனை பகுத்து உள் அர்த்தத்தை அறிந்து அதற்கேற்ப சமயோசிதமாக செயல்பட வேண்டும்.*

*🏵️சொன்னதைத் தான் செய்தேன் என்கிற மனப்போக்கைத் தவிர்த்து, கொஞ்சம் நம்ம புத்தியையும் பயன்படுத்தினால் நாம் நிறைய செயல்களை சாதிக்கலாம்....*

*விஷ்ணுவின் ஆன்மீக தகவல்கள் மற்றும் ஆன்மீக கதைகள் அனைத்தும் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்*
👇👇
https://srimahavishnuinfo.blogspot.com

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
ravi said…
அடுத்த ஸ்லோகம்

क्षीरसागरतरङ्गशीकरा-सारतारकितचारुमूर्तये ।

भोगिभोगशयनीयशायिने माधवाय मधुविद्विषे नमः ॥ ४२॥

க்ஷீரஸாக³ரதரங்க³சீகரா ஸாரதாரகிதசாருமூர்தயே ।

போ⁴கி³போ⁴க³சயனீயசாயினே மாத⁴வாய மது⁴வித்³விஷே நம: ॥ 42 ॥
ravi said…
*போ⁴கி³போ⁴க³சயனீயசாயினே –*

போகின்னா பாம்புன்னு அர்த்தம். அந்த ஆதிசேஷனையே போகசயனமா – ரொம்ப சுகமா படுத்து தூங்கறதுக்கு ஒரு படுக்கையாகக் கொண்டு அதுல சாயினே – படுத்துண்டு இருக்கார்.

‘ *மாத⁴வாய மது⁴வித்³விஷே நம:’*

மது என்ற அரக்கனைக் கொன்ற மாதவனுக்கு என்னுடைய நமஸ்காரம்னு சொல்றார்.

அந்த பகவானுடைய யோக நித்ரையில அவர் இருக்கிற அந்த ரூபத்தை த்யானம் பண்ணி அவருக்கு நமஸ்காரம்னு தன்னை பகவான்கிட்ட ஒப்படைக்கிறார்.🙌🙌🙌
ravi said…
சாந்தாகாரம் புஜகசயணம் பத்மநாபம் ஸூரேசம்
விஸ்வாதாரம் கனகசத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மிகாந்தம் கமலநயணம் யோகிஹிருத்யானகம்யம்
வந்தேவிஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்

ன்னு புஜக சயனம் – புஜகத்துல படுத்துண்டு யோக நித்ரையில இருக்கறதுனால அவர் சாந்தாகாரமா இருக்கார்.

ஆனா உலகத்தையே அவர்தான் இயக்கிண்டிருக்கார்.

ஆனா கண்ணை மூடிண்டு சாந்தமா முகத்துல அந்த புன்னகையோட சிரிச்சிண்டு தூங்கிண்டிருக்கார்.

அவருக்கு *ஸர்வ லோகைக நாதம் –*

எல்லா உலகத்துக்கும் நாதன்.

*வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் –*

அந்த பகவானை நான் நமஸ்காரம் பண்றேன்னு சொல்ற அந்த ஸ்லோகம் மாதிரி இந்த இடத்துல.....
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 451* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*187 निरत्यया - நிரத்யயா |*

காமேஸ்வரி சாம்ராஜ்ய மஹாராஜ்னி .

அவள் இடும் சட்ட திட்டங்களை, எல்லையை மீறாதவள்.

மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக தான் இருப்பவள்.

என்ன ஒரு அற்புத குணம் அம்பாளுக்கு!
உதாரண புருஷி!🪷🪷🪷
ravi said…
*187 निरत्यया - நிரத்யயா |*

காமேஸ்வரி சாம்ராஜ்ய மஹாராஜ்னி .

அவள் இடும் சட்ட திட்டங்களை, எல்லையை மீறாதவள்.

மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக தான் இருப்பவள்.

என்ன ஒரு அற்புத குணம் அம்பாளுக்கு!
உதாரண புருஷி!🪷🪷🪷
ravi said…

பழனிக் கடவுள் துணை -07.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-21

மூலம்:

உற்றார், உறவோர், உலகத்தார், உள்ளியநூல்
கற்றார், துறந்தோர், கணமெல்லாம் – நற்றாகம்
ஆகத் தகுபே(று) அடியேற்(கு) அருள், பழனி
நாகத் தமர்பொதுமன் னா (21).

பதப்பிரிவு:

உற்றார், உறவோர், உலகத்தார், உள்ளிய நூல்
கற்றார், துறந்தோர், கணமெல்லாம் – நற்று ஆகம்
ஆகத்தகு பேறு அடியேற்கு அருள், பழனி
நாகத்து அமர் பொது மன்னா!! (21).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

நற்று ஆகம் - நல்ல விருப்பம்; நாகம்- மலை; பொது- பொதுக் கடவுள்;

பழனிமலையில் அமரும் எல்லோருக்கும் பொதுவான, சொந்தமான சொந்தக் கடவுளே! பழனியின் ராஜாதி ராஜனே!உற்றார், உறவோர், உலகத்தார், உள்ளத்தினுள் எண்ணிய நூல் கற்றார், ஆசை, பந்த பாசம் துறந்தோர், எந்தக் கணமும் நல்ல விருப்பம் நிறைவேறும் பெரும்பேறு, இவை எல்லாம் அடியேற்கு அருள் செய்து எங்களைக் காக்க வேண்டும் ஐயா! பழனாபுரிப் பெருமாளே! உன்னையே தொழுது வழிபடும் அடியாரின் காவல்காரப் பெருமாளே!

வேல் பிடித்த பழனித் தெய்வமே! உன் கால் பிடிக்கும் எம்மை நீயே வலிய வந்து வா! கா! முருகா!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
07.01.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 16)

Sanskrit Version:

अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः।
नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ।।1.16।।

English Version:

anantavijayam raja
kuntIputro yuDhistirah |
nakulah sahaadevasscha
suGoshamaNipushpakau ||


Shloka Meaning

Shlokas 15, 16, 17 & 18 describe the conch sounds of the various warriors of the Pandava army (sainyam)

Yudishtirah, the son of Kunti, also called Dharmaraja. His conch is named as Anantavijayam.
(Ananta in sanskrit means the one that has no end. Anantavijaya means one who wins endlessly).

The conches of Nakula and Sahadeva are as follows

Nakula - SuGoshah
Sahadeva - Manipushpaka

Jai Shri Krishna 🌺
ravi said…
[07/01, 07:57] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 47*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
[07/01, 08:05] Jayaraman Ravilumar: வீக்ஷேமஹி காஂசிபுரே விபுலஸ்தநகலஶக3ரிமபரவஶிதம் |

வித்3ருமஸஹசரதே3ஹம் விப்4ரமஸமவாயஸாரஸந்நாஹம் ‖31‖
[07/01, 08:06] Jayaraman Ravilumar: वीक्षेमहि काञ्चिपुरे विपुलस्तनकलशगरिमपरवशितम् ।
विद्रुमसहचरदेहं विभ्रमसमवायसारसन्नाहम् ॥ ३१॥

31. Veekshe mahi Kanchi pure, vipula sthana kalasa garima paravasitham,

Vidhruma saha chara deham vibhrama samavaaya sara samnaham.
ravi said…
பெண் என்றால் சௌந்தர்யம்.

அப்படி ஒரு பெண்ணை, தெய்வமாக, சகல சவுந்தர்யங்களோடு நான் காஞ்சிபுரத்தில் காமாக்ஷி ஆலயத்தில் பார்த்தேன்.

வைத்த கண் வாங்காமல், நகர மனமில்லாமல் சந்நிதியை விட்டு விலக நேர்ந்தது.

அப்படி ஒரு அழகுச் சிலை வேறெதுவும் இல்லை,

வேறெங்கும் இல்லை.

சிரித்த முகமும் பவழம் போல் மேனியும் கண்முன்னே நிற்கிறது. 🙌🙌🙌
ravi said…
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம்

அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க

எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே

நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி

கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.🙌🙌🙌
ravi said…
மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. 🦁🦁🦁

அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. 🔥🔥🔥

நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து,

பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புமே. 🦁🦁🦁

அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய *கண்ணனே* !

நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி,

இங்கே வந்து அருள் செய்.

மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து,

நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து,

அந்த கோரிக்கைகளைப் நிறைவேற்றி

அருள வேண்டுகிறோம் சிங்க முகத்தோனே 🦁🦁🦁

சிங்கம் கொண்ட முகம்

சிறுத்தை கொண்ட நகம்

பாயும் புலியின் குணம்

பாய்ந்து ஓடும் மான்கள் வாழும் கண் தோட்டம்

குயில்கள் கற்கும் குரல் பீடம்

மயில்கள் ஆடும் சிகை அலங்காரம் ..

அன்னம் கொண்ட எழில் உடை

அந்த நடை கண்டு மயங்காதோர் புவி தன்னில் வாழாதோர் அன்றோ *கண்ணா*
ravi said…
*திருப்பாவை- 22ஆம் பாசுரம்:*

_அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான_
_பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே_
_சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்_
_கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல_
_செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?_
_திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்_
_அங்கண் இரண்டும்கொண்டு_ _எங்கள் மேல் நோக்குதியேல்_
_எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்_ .

பரந்து விரிந்த இப் பாரில்-
பறந்ததுண்டு வேந்தர் பலர்-
புரவிகள் பூட்டிய தேரில்!

ஆட்சிக் கட்டில்;
அரசு அதிகாரம்;
இவை பொருட்டு
ஏற்பட்ட பல போர்கள்-
அதி காரம்;
அவை யாவும்
அகோரம்;
இத்தகைய அரசர்களின்
இரும்புப் பிடியில்தான்
இருந்தன ஒவ்வோர் ஊரும்!

அறவே ஒதுக்கப்பட்டது அறம்;
மறைபோலப் போற்றப்பட்டது மறம்;
அடிக்கடி மூண்ட போர்களால்-
அடிநிலம் யாவும்-செக்கர் நிறம்;
அன்பு,அமைதி போன்ற
அருஞ்சொற்கள்-
அகிலத்து அகராதிகளை விடுத்துப்
போயின புறம்!

அவனியின் இந்த
அவலத்தைப் போக்க-
அமரர்கள் பலரும்
ஆண்டவனை ஊக்க-
அவதரித்தான் கண்ணன்
அரசர்களின் திமிர் நீக்க;
அமைதியும் அன்பும் கொண்ட
அகிலத்தை உருவாக்க!

காசினியிலிருந்து
கழித்தான் கண்ணன்-
கம்சன் உள்ளிட்ட
கயவர்களின் கூட்டத்தை;
"கண்ணன்" எனும் பேர்கேட்டாலே-
கொற்றவர்கள் எடுத்தனர் ஓட்டத்தை!

கண்ணனின் திருமுன்
கணநேரம் நிற்கப் பயந்து-
கசடர்கள் தின்றனர் தெருமண்!
ஏனெனில்-
ஏய்த்திடும் நீசர்களுக்கு
எம்பிரான்- இன்னொரு
எம தருமன்!

அரசர்கள் யாவரும்
ஆணவம் ஒழித்து-
ஆண்டவன் முன்நிற்பர்
ஆனனம் ஒளித்து!

அரசர்கள் கூட்டத்தைப் போலே-
அடியார்கள் வந்தோம் திருமாலே!

"குவிப்பதா இல்லை-
இதழ் திறப்பதா?"
குழம்பிப் போய் இங்ஙனம்
தாமரையும் அல்லியும் விழிக்கும்;
ஏனெனில்-
பால்நிலவும் பரிதியும்
பக்கத்தில் பக்கத்தில்
நிற்கின்றாற் போல் சக்தி-
உன் ஒவ்வொரு விழிக்கும்!

கதிரவன் விழியொன்றில் நின்று சிறக்க-
கமலம் விழைந்திடும்- தன்
கதவிதழ் திறக்க!

மறுவிழியில்
மதி இருக்க-
அல்லி நினைக்கும்- தன்
அழகு வாய் திறக்க!

இங்ஙனம்-
இரவியும் இந்துவும்
இரு விழிகளில் நின்றிட-
இதழைத் திறப்பதா
இல்லை குவிப்பதா என
இளம்பூக்கள் யோசிப்பதில்
நாழிகைகள் சென்றிட-
நாயகனே! உன்
நயனங்களின் முன்பு
நானிலத்தின் அழகு மொத்தமும் குன்றிட-
ஆக மொத்தம்- இந்த
அகிலத்தில் ஏதுமில்லை உன்
அழகு விழிகளை வென்றிட!

அத்தகைய
அழகு விழிகளை-
எங்கள் மேல் செலுத்தி
எடுத்தெறி- எங்கள் பாவங்களை;பழிகளை!

எங்களின் மேல்
பட்டாலே போதும்-
எம்பிரானே! உன் பார்வை!
ஏழேழ் பிறவியிலும்
எங்களின் பாவம் கழிய-
கிட்டிடுமே ஒரு தீர்வை!
ravi said…
[06/01, 16:49] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 435* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[06/01, 16:49] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

*ஸித்திஸ்* :‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
கண்ணன் முக்தி தருகிறேன் என்று சொன்னாலும் இப்பொழுது வேண்டாம் என்கிறாளே ...

எவ்வளவோ முனிவர்களும் ரிஷிகளும் அடியார்களுக்கு வேண்டி கேட்பது முக்தி ஆனால் இவளோ அதை துச்சமாக எண்ணுகிறாள் ... சரி இவளுக்கு இன்னும் சோதனைகள் கொடுப்போம் என்றே கண்ணன் ஆசைப்பட்டான் ..

16000 கோபியர்களுக்கும் மேலேயும் திருமணம் புரிந்து கொண்டான்

தேவகி அவைகளை பார்க்கும் பாக்கியம் கொடுத்தான்

ஆனால் யசோதை கண்ணன் செய்து கொண்ட ஒரு திருமணத்தையும் பார்க்க கொடுப்பினை இல்லை ...

மதுரா சென்றவன் கோகுலம் ஒருதடவை கூட வரவேயில்லை ...

ஏன் இந்த நாடகம் ...

பார்ப்போம் அவன் விளையாட்டை 🦜🦜🦜
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 432*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

ஸ்லோகம் 58 contd ...
ravi said…
பாலக வெங்கட்ரமணன்… மதுரையில, ஸ்வாமி கோவில போயி 63 நாயன்மார்கள் முன்னாடி நிண்ணுண்டு, கண் ஜலம் விட்டு, உங்களுக்கெல்லாம் பரமேஶ்வரன், தரிசனம் கிடைச்சிருக்கு, உங்களுக்கு, கிடைச்ச அனுக்கிரஹம், எனக்கு கிடைக்காதான்னு கதறிருக்கார். … *_இந்த வரிகள் ஸத்யப்ரமாணம்_*
அண்ணாமலையார்,
“பாலக வெங்கட்ரமணனை” ஆட்கொண்டு பகவான் ரமண மஹரிஷியாக அருளச்செய்தார்.

_அழுதேன் நின்பால் அன்பாய் மனமாய் அழல் சேர்ந்த மெழுகேயன்னார்_ ….
…….
ஆனால் *வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே….*

_மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே_
_மணிவாசக பெருமான் திருவாசகத்தில் உருகினார். அடைந்தார்._
ravi said…
பொய்கையாழ்வாரும்

*_பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி … அழுதேன் அரவு-அணைமேல் கண்டு தொழுதேன்-_*

முதல்திருவந்தாதியில் உருகும் பக்தியை வெளிப்படுத்துகிறார். …
_இந்த புண்ணிய பூமியின் மஹான்களின் வரலாறு…. நம்மைக் கரம்பிடித்து கரை சேர்க்க ப்ரார்த்திப்போம்_🙏🙏
ravi said…
அம்மா திரிபுரையே ... மழலை மாறா மாணிக்கமே

நித்திய சுந்தரியே ... அந்தரியே ... அதிருப்தி ஒன்றும் அறியாதவளே ... ஆடல் அரசன் பட்டத்து ராணியே ... ஆயிரம் கலைகள் பிறப்பித்தவளே ...

பிணி தீர்க்க பனி அகல பணி செய்து கிடப்பவளே ...

பாதம் பணிந்தேன்

உன் பஞ்சு அஞ்சும் பாதம் என் விதி அஞ்சும் சென்னியில் வைத்தே

மதி இழந்த காலன் என் மேல் கயிறு ஒன்றை வீசம் போதே

கதி நீயே என்றே அவனை உன் சரண் புக செய்வாயே அம்மா 🙏
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

33 –
செப்படி வித்தை கற்று இப்படி மயக்கு விட்டு

உருப்படு வித்தை காட்டு அருணாசலா (அ)
ravi said…
திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள அருணாசலனே

உதயத்தை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டனவே

குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றனவே

சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறதே

நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் கலந்து விட்டனவே

என் மனதில் உனை காணும் இன்பம் எண்ணம் கலந்து நிறைந்து விட்டதே

எவரும் காணா உன் திருவடியை இந்த நாயேனுக்கே காட்டினாயே

உன் கருணை என் சொல்வதகு

தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே!

எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே!

எம்பெருமானே!

உறக்கம் நீங்கி எழுவாயாக.

அருணாசலா உன் *தத்புருஷம்* முகம் கொண்டே மாயையில் எங்களை தள்ளுகிறாய்

அதை மறைத்தே உன் *ஈசான முகம்*

அதை காட்டி அருள்வாய்

எல்லோரையும் காப்பாய் எங்கள் *அருணாசலா* 🙏
ravi said…
நம் பிரச்சினைகளுக்கு காரணம் நம்முடைய தவறான கருத்துகளே. அடுத்தவரைப் பற்றிய தவறான எடைபோடல், தன்னைப் பற்றிய அபத்தமான அவநம்பிக்கை, அதனால் ஏற்படும் கோபம், ஆத்திரம், பொறாமை போன்றவைகளே.
- பாலகுமாரன்.

வாழ்க்கை மிகவும் குறுகியது. ஒன்றுக்கும் உதவாத உங்கள்
அகங்காரத்தை உடைத்துப் போடுங்கள்.
எதையும் விரைவாக மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள். எதையும் மெதுவாக நம்புங்கள், உண்மையாக அன்பு செலுத்துங்கள்.

மனம் விட்டு வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் எதையும் தவிர்க்காமல் வாழுங்கள்.

சவால்களுக்காக சந்தோஷப்படுங்கள். அவை தான் உங்களுக்குள்ளே ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்துகிறது.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
💐💐💐💐🙏🏻🌹🌹🌹🌹

*இன்றைய சிந்தனை*
…………………………………………….....

*''தயக்கம் தவிர்..''*
…………………………………………………

வெற்றிக்கு இரண்டு எதிரிகள் உண்டு. அது தயக்கமும், முயற்சி இன்மையும் தான். துணிச்சலைத் தோழனாக்கிக் கொண்டால் தயக்கம் எனும் எதிரியை விரட்டியடித்து தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்...

தயக்கத்தை விட்டொழித்தாலே வெற்றி விரைந்து ஓடி வரும். தயக்கத்தை விரட்டும் முதல் கையாளும் முறையே நேர்மறை எண்ணங்கள் தான்.

என்னால் முடியும் என்ற எண்ணம் கொடுக்கும் நம்பிக்கை தயக்கத்தை விரட்டியடிக்கும். வெற்றியைத் தேடித் தரும்...

என்னால் முடியுமா...? - என்ற தயக்கம் தோல்வி எனும் படுகுழியில் தள்ளி விடும்...

யாரும் எமது வாய்மொழியை செவிமடுக்க மாட்டார்கள், எமக்கு யாரும் உதவ முன் வர மாட்டார்கள், இது எமக்கு ஒவ்வாது என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களைக் குறைத்தாலே அனைத்தும் நலமாக நடப்பதை உணரலாம்...

மன உறுதியால் தேடியதைக் கண்டு, அதனை அடைந்தவர்கள் உண்டு. மன உறுதியின்மையால் பின்னடைவே வரும்...

அடுத்ததாக தயக்கத்தைக் களையவும் முயற்சி அவசியம்...

நாம் எழுத்தாளர் ஆக வேண்டுமானால், எழுதியெழுதிப் பழக வேண்டும், பேச்சாளராக பேசிப்பேசி பழக வேண்டும், வெற்றியை நோக்கிச் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்...

எனவே!, நீங்கள் எதற்காகத் தயங்குகிறீர்கள், எதைக் கண்டு நடுங்குகிறீர்கள் என்பதனை உணர்ந்து அதைப் போக்க முயற்சி செய்யுங்கள்...

அதற்கான மனத் தயாரிப்புகளுடன் அடுத்தடுத்த செயல்களைச் செய்யுங்கள். மன அமைதியுடன் ஒருமுகத் தன்மையுடன் செயல்பட்டு தயக்கத்தை விட்டொழியுங்கள்...

சோர்வாக இருப்பது, தயங்குவது, பின்வாங்குவது, ஆர்வம் குறைவாக இருப்பது, முடியுமா...? என சந்தேகிப்பது, முடிவெடுக்க முடியாமல் தயங்குவது, தன்னம்பிக்கையின்றி பேசுவது, செயல்படுவது எல்லாம் துணிவின்மையின் அடையாளங்கள்...

இதைக் கொடுப்பதும் தயக்கம் தான். தயக்கத்தை விட்டொழிக்கும் பொழுது துணிச்சல் தானே வரும், துணிச்சல் வந்தால் தன்னம்பிக்கையும் அதனுடனே வந்து விடும்...

நெப்போலியன் ஒரு நாட்டை கையகப்படுத்துவதற்காக, தம் படை வீரர்களை ஆற்றைக் கடந்து படகில் அழைத்துச் செல்வாராம்...

ஆற்றைக் கடந்ததும், படகுகளை எரிக்கச் சொல்வாராம், வெற்றி பெறாமல் புறமுதுகு காட்டி வந்தால், நாடு திரும்ப முடியாது என்ற திட மனப்பான்மையை வீரர்களின் மனதில் பதிய வைக்கத் தான் அவர் இப்படிச் செயல்படுவாராம்...

அந்தச் செயல், உறுதியாக எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்ற மன உறுதியை வீரர்களுக்குத் தந்ததாம். இது நெப்போலியனின் வெற்றிக்கான தந்திரங்களில் ஒன்றாகும்...

ஆம், நீங்கள் உங்களைப் பூனையாக நினைத்துக் கொண்டால் பூனை தான். அரிமாவாக எண்ணிக் கொண்டால் அரிமா தான்...

அதாவது மனம் எவ்வளவு துணிச்சலைக் கொண்டுள்ளதோ அந்த அளவில் உங்கள் வெற்றி உறுதி...

*ஆம் நண்பர்களே...!*

நெப்போலியன் மட்டுமல்ல, தயக்கம் தவிர்த்து துணிச்சலுடன் செயல்பட்டவர்கள் அனைவருமே இன்று வெற்றியாளர்களாகவும், வரலாற்றில் இடம் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்...

தயக்கத்தைத் தாங்கும் மனநிலையை அழித்தால், மகிழ்வாய் வாழலாம்...!

துணிச்சலைத் தோழனாக்கிக் கொண்டால், தயக்கம் எனும் எதிரியை விரட்டியடித்து தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்...

தயக்கத்தை விட்டொழித்தாலே வெற்றி விரைந்தோடி வரும்...!

ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍️*


*NITPICK*

*(தீவிரமற்ற குறைபாடுகளை அடையாளம் காணுதல், அற்பமான குறைகளை கண்டுபிடித்தல்)*

meaning...... to find fault or point out minor problems in an irritating way....


1. The critical woman likes to *nitpick* and continually points out her husband’s flaws.


2. The fault-finding attorney was able to *nit-pick* the witness apart until she broke down on the stand.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_
எந்த ஒரு பிரச்சனைக்கும் 3 வகையான தீர்வுகள் இருக்கின்றன

1 . ஏற்றுக்கொள்வது

2 . மாற்றிக்கொள்வது

3 . விட்டுவிடுவது

ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக்கொள்ளுங்கள்

மாற்றவே முடியாத விஷயங்களை விட்டுத் தள்ளுங்கள்

*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*
ravi said…
*23. அரிமா அரி*

*திருப்பாவை- 23ஆம் பாசுரம்:*

_மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்_
_சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து_
_வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி_
_மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு_
_போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்_
_கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய_
_சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த_
_காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்_ .


மாரிக் காலத்தில்
மலைக் குகையில்
துயில் கொண்டிருக்கும்
துணிவுடைய சிங்கம்-

கண்கள் விழித்து
சோம்பல் முறித்து
பிடரி சிலிர்த்துப் பொங்கும்!

பிறகு-
கர்ஜித்தவாறே அது
வெளிக் கிளம்பும்;
இதை-
காணும் உயிர்க்கோ-
கிலி கிளம்பும்!

அரிமா எங்ஙனம்?
அரியே! நீ அங்ஙனம்!

நீலநிறக் கண்ணா!
தாமரைக் கண்ணா!

சீரிய உன் இல்லம் விட்டு-
சிங்காதனம் சென்று அமர்ந்திட்டு-

நேரிய எங்களின்
நோக்கத்தைக் கேட்பாயே!
நேயர்தம் விருப்பத்தை
நொடியினில் தீர்ப்பாயே!
ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 53 started on 6th nov

*பாடல் 16 ... பேராசை எனும்*

(பேராசையில் கலங்குவது நியாயமா முருகா?)

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே
ravi said…
கந்தர் அநுபூதியில் துதியாக அமைந்த ஒரே பாட்டு.

வறுமையின்
கொடுமையை வேதனையை அடுத்த பாட்டில் சொல்ல வந்தவர்,
ஒரு ஏழை, செல்வந்தர்களின் வாசலில் நின்று, 'பிரபுவே .. ' எனக்
கூவி அழைப்பது போல் முருகனை கூவி அழைக்கிறார்.

இந்த அநுபூதியில், ஐந்துமுகச் சிவனை ஐந்து வகையிலும்,
ஆறுமுகனை ஆறு விளிகளாலும் புகழ்வது அற்புதமாக உள்ளது.

1. *உதியா* ...

ஒரு தாய் வயிற்றில் உதிக்காதவன் சிவன்.

பிறவா யாக்கைப்
பெரியோன் என சிலப்பதிகாரம் கூறும்.

2. *மரியா* ...

பிறப்பு இல்லாததினால் அவருக்கு இறப்பும் இல்லை.

எல்லாம்
முடிவில் தன்னிடம் அடங்கச் செய்பவன். தான் என்றும்
நிலைத்து நிற்பவன்.

... முடிவில் ஒன்றென்றிருப்பவனை

... திருப்புகழ் (பாடல் 1124) 'அகரமுத லென' (பொதுப்பாடல்கள்)

3. *உணரா மறவா ...*

சகலம் கேவலம், நினைப்பு மறப்பு, பகல் இரவு, என குறிக்கப்படும்
நிலைக்கு அப்பாற்பட்டவன். நாம் எல்லாவற்றையும் நினைத்துக்
கொண்டு விழித்திருந்தாலும்

ஒன்றையும் நினைக்காமல்
உறங்குகிறோம்.

நாம் இப்பிரபஞ்சக் கட்டுக்குள்தான் அடங்கி
இருக்கிறோம்.

இறைவன் இந்நிலைக்கு அப்பாற்பட்டவன்.

4. *விதிமால் அறியா ...*

படைக்கும் அறிவாற்றலாலும் காக்கும் பொருளாற்றலாலும்
அடைபவர்களுக்கு பிரதிநிதியாக பிரமனும் திருமாலும்
இருக்கிறார்கள்.

இவர்களுக்குள் யார் பெரியவர் என்கிற முரண்பாடு
வந்தபோது இரண்டிற்கும் அப்பாற்பட்டது அருளாற்றல் என்பதை
சிவன் உணர்த்தினார்.

5. *விமலன்* ...

இயல்பாகவே மலம் இல்லாதவன். அவன் மல ரஹிதன்.

பின் முருகன் பெருமை கூறப்படுகிறது.

யாவற்கும் எவற்றிற்கும்
மேலானவன், எதனிடமும் பயமற்றவன்,

அதனால் அவன்
அடியார்களுக்கும் பயமில்லை.

அனாத்ம விருத்திகளாகிய
சூரபத்மாதிகளை அழித்து ஆத்ம விருத்திகளாகிய தேவர்களை
தம் சொந்த ஸ்தானத்தில் ' *ஆத்மானுபூதி* ' நிலையில் நிலைபெறச்
செய்தவன்.

*அண்டர்பதி* ' (சிறுவை) திருப்புகழில் இதைக் குறிப்பிடுகிறார்.
(பாடல் 724).🙏🙏🙏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 433*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

ஸ்லோகம் 59.
ravi said…
हंसः पद्मवनं समिच्छति यथा नीलाम्बुदं चातकः
कोकः कोकनदप्रियं प्रतिदिनं चन्द्रं चकोरस्तथा ।
चेतो वाञ्छति मामकं पशुपते चिन्मार्गमृग्यं विभो
गौरीनाथ भवत्पदाब्जयुगलं कैवल्यसौख्यप्रदम् ॥

சிவானந்த லஹரியில முந்தைய ஸ்லோகத்துல, ‘ஹே பரமேஸ்வரா! ஒரு சூரியனே இருட்டெல்லாம் பிளந்துண்டு கண் முன்னே வந்து காட்சி கொடுக்கறானே, நீ கோடி சூரிய பிரகாசம், எனக்கு ஏன் தரிசனம் தரமாட்டங்கறே?

என்னுடைய அறியாமை அவ்வளவு அடர்ந்ததா இருக்கா?

பிரபோ,ஹே பசுபதே! என் கண் முன்னாடி நீங்கள் தோன்ற வேண்டும், அப்படின்னு ஒரு பிரார்த்தனை.
ravi said…
அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

*ஸித்திஸ்* :‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 436* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
யசோதைக்கு ஒரே துக்கம் கண்ணா உன் திருமணம் பார்க்கத் துடித்தேன் .

முக்தி எனக்கு பெரிதாக தெரியவில்லை ..

வைகுண்டமதில் வேண்டிய நாள் இருந்து விட்டேன் ..

அது எப்படி என்று ஆச்சரியப்படுகிறாயா ?

நீ கோகுலத்தில் இருந்த ஓவ்வொரு நாளும் எனக்கு வைகுண்டம் தானே ...

கோபியர்களுடன் நீ ஆடி பாடியதெல்லாம் சூரிகள் தினம் அங்கு செய்வது தானே ...

நீ திருடி தின்னும் வெண்ணெய் தயிர் பால் மோர் எல்லாமும் அங்கு உனக்கு படைக்கும் பிரசாதங்கள் அன்றோ ...

பூலோக வைகுண்டம் அன்றோ என் கோகுலம் கண்ணா ...

அம்மா என்று வார்த்தைக்கு வார்த்தை அழைப்பாயே ...

கொஞ்சம் அதட்டினாலும் ஓவென்று அழுவாயே

என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு பாசாங்கு பல செய்வாயே

என்ன தவம் செய்தனை என்றே எல்லோரும் கேட்ப்பார்களே ..

இப்பொழுது ஒரு தவமும் செய்யவில்லை என்பது போல் ஆகிவிட்டதே கண்ணா ...

உன் ஒரு திருமணம் கூடவா நான் பார்க்க அதிர்ஷ்ட்டம் இல்லாதவளானேன் கண்ணா ...

இந்த கொடுமையை தாங்க முடியவில்லையே ... கண்ணா

இனி நான் வாழ்ந்து என்ன பயன் ..??

பிள்ளை மனம் கல்லு என்பதற்கு நீ யா உதாரணமாய் இருக்கிறாய் ...

சொல் கண்ணா ... 💐💐💐
ravi said…
🌹🌺 "If you are pure, if you are strong, you alone are equal to all the people in the world .. A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺Swami Vivekananda in a youth uprising meeting where the characteristics of a hero like charity, obedience and self-control that prevailed that day have gone today?

🌺 A warrior who goes to war sacrifices himself and does not consider his welfare. If one is to command the hearts and lives of others one must first step forward under command and be willing to lay down one's life.

🌺Trust in God No plan needed. So nothing will happen. Have mercy on the afflicted. Then look to God for help. The help you need is sure to come.

🌺My dear young people, I may perish in this country (America) by cold or hunger. But I entrust to you my compassion and effort to fight for the welfare of the young, the poor, the ignorant and the downtrodden.

🌺Pledge to devote your whole life to restoring the well-being of these thirty crore people who are going downhill every day.

🌺A kind heart, a thinking brain, and hands that can work are all these three things we need. Make yourself a storehouse of strength.

🌺First you feel sorry for the sufferings of the people of the world..... Ask yourself if your mind is not swayed by feelings of hatred or jealousy.

🌺 Hate and anger are being imposed layer by layer on the world. Because of that, good things continue to go unfulfilled for long periods of time. On the contrary, evil has been produced.

Swami Vivekananda said that if you are pure, if you are strong, you alone are equal to all the people in the world.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *நீ தூய்மை உள்ளவனாக இருந்தால், வலிமை உள்ளவனாக இருந்தால், நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமம் என கூறிய வீரத்துறவி .. விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺சுவாமி விவேகானந்தர் ஒரு இளைஞர் எழுச்சி கூட்டம் ஒன்றில் அந்நாளில் நிலவிய தொண்டு மனப்பான்மை, கீழ்ப்படிதல் தன்னடக்கம் ஆகிய வீரனுக்கு உரிய பண்புகள் இன்று எங்கே போய்விட்டன?

🌺போருக்குச் செல்லும் வீரன் தன்னைத் தியாகம் செய்து கொள்கிறனேயன்றி, தனது நலத்தைக் கருதுவதில்லை. ஒருவன் மற்றவர்களுடைய இதயங்களின் மீதும் வாழ்க்கையின் மீதும் ஆணை செலுத்த வேண்டுமானால் முதலில் கட்டளைக்கு உட்பட்டு முன்னேறிச் சென்று தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

🌺கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள் திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால் ஆகப்போவதும் ஒன்றுமில்லை. துன்பத்தால் வாடுகிறவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். பிறகு உதவிக்காகக் கடவுளை நோக்குங்கள். உங்களுக்குத் தேவைப்படும் உதவி நிச்சயமாக வந்தே தீரும்.

🌺எனது அருமை இளைஞர்களே குளிராலோ பசியாலோ இந்த நாட்டிலேயே(அமெரிக்காவில்) நான் அழிந்து போக நேரலாம். ஆனால் இளைஞர்களே ஏழைகள், அறியாமை மிக்கவர்கள், நசுக்கப்பட்டவர்கள் ஆகியோருடைய நலனுக்காகப் போராடும் என்னுடைய இரக்கம், முயற்சி ஆகியவற்றை உங்களிடம் நான் ஒப்படைக்கிறேன்.

🌺நாள்தோறும் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்த முப்பது கோடி மக்களின் நல்வாழ்வை மீட்டுத் தருவதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பதாகச் சபதம் மேற்கொள்ளுங்கள்.

🌺இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை . வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக உன்னை உருவாக்கிக் கொள்.

🌺முதலில் உலக மக்களின் துன்பங்களைக் குறித்து நீ வருந்து..... வெறுப்பு உணர்ச்சியாலோ, பொறாமையாலோ, உன்னுடைய மனம் அலைக்கழிக்கப்படாமல் இருக்கிறதா என்று உன்னையே நீ கேட்டுக்கொள்.

🌺உலகின் மீது வெறுப்புணர்ச்சி, கோபம் ஆகியவை அடுக்கடுக்காகச் சுமத்தப்பட்டு வருகின்றன. அது காரணமாக நல்ல காரியங்கள் தொடர்ந்து பலகாலமாக நிறைவேற்றப்படாமற் போயிருக்கின்றன. மாறாகத் தீமையே விளைவிக்கப்பட்டிருக்கிறது.

🌺நீ தூய்மை உள்ளவனாக இருந்தால், வலிமை உள்ளவனாக இருந்தால், நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமம் என கூறினார் சுவாமி விவேகானந்தர்

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…

பழனிக் கடவுள் துணை -08.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-22

மூலம்:

மன்னா தியர்நுகரும் வாழ்க்கைச் சுகமுழுதும்
நின்னானந் தத்திவலை நேருமெனச் – சொன்னார்சொற்
கொள்ளாது உழன்றேன்; குளிர்பழனிக் குன்றினருள்
வள்ளால்! கருணைசற்றே வை (22).

பதப்பிரிவு:

மன்னாதியர் நுகரும் வாழ்க்கைச் சுகம் முழுதும்
நின் ஆனந்தத் திவலை நேரும் எனச் – சொன்னார் சொல்
கொள்ளாது உழன்றேன்; குளிர் பழனிக் குன்றின் அருள்
வள்ளால்! கருணை சற்றே வை!! (22).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

மன்னன் ஆதியர் நுகரும், அனுபவிக்கும் வாழ்க்கைச் சுகம் முழுதும், நின் அருளில் துளிர்க்கும் பேரானந்தக் கடலின் சிறு துளிக்கு ஒப்பு ஆகும் என எனக்குச் சொன்னார் சொல் கொள்ளாது உழன்றேன் பழனி ஐயா! குளிர் பழனிக் குன்றின் அதிபதியே! என்றும் அருள் வள்ளல் பெருமாளே! என் மீது கருணை சற்றே வை!!

பழனி வள்ளலே! இந்தச் சிறியேன் மீது கருணை சற்றே வைக்க இதுவே தருணம்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
பாதாரவிந்த சதகம் !

63.ப்ரதீம: காமாக்ஷி ஸ்புரித தருணாநதித்ய கிரண-
ஸ்ரியோ மூல த்ரவ்யம் தவ சரணம் அத்ரீந்த்ர தனயே !
ஸுரேந் த்ராஸாமா பூரயதி யதஸௌ த்வாந்தம் அகிலம்
துனீதே திக் பாகானபி ச மஹஸா பாடலயதே

மலையரசனின் மகளே | காமாக்ஷி ! உன் திருவடி ஒளிமிக்க முதிர்ந்த சூரிய கிரணங்களின் காந்திக்கு மூலப்பொருள் என நம்புகிறேம். இது இந்திரனது எதிர்பார்வையை (கிழக்கு திசையை) நிரப்புகிறது. அனைத்து இருளையும் அகற்றுகிறது. திசைப் பகுதிகளையும் ஒளியால் செந்நிறமடையச் செய்கிறது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
*_✍️ 08, Sunday, Jan., 2023_*

*🔹🔸"இன்றைய சிந்தனை".*

*🧿‘’நகைச்சுவை உணர்வு..’’*


*♻️நகைச்சுவை உணர்வு என்பது எல்லோருக்கும் தேவையானது மட்டும் அல்ல, அவசியமானதும் கூட..*

*♻️நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சத்தை எட்டிப் பிடித்து இருக்கிறார்கள் என்பது தான் உண்மை..*

*♻️நகைச்சுவை என்பது அடுத்தவரைக் காயப்படுத்தும் அளவுக்கு கிண்டல் செய்வது என்பது சிலரின் வழக்கம். அதை விட்டு விடுங்கள்.*

*♻️நகைச்சுவை உணர்வு இருக்கும் மனிதர்கள் தங்களைச் சுற்றி மிக எளிதில் நண்பர் படையை உருவாக்கி விடுவார்கள்.அவர்கள் மிக எளிதில் மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள்.*

*♻️தலைமைப் பண்பின் மிக முக்கியமான செயலாக இந்த நகைச்சுவை உணர்வைக் குறிப்பிடுகிறார்கள்.*

*♻️காரணம் நகைச்சுவை உணர்வு உடைய தலைவர்கள் நல்ல கடுமையான முடிவுகளைக் கூட எளிமையாய் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வார்கள் என்பது தான்.*

*♻️இன்றைக்கு உலகில் ஆட்டிப் படைக்கும் சிக்கல் மன அழுத்தம். அத்தகைய மன அழுத்தம் வராமல் தடுக்கும் வல்லமை நகைச்சுவை உணர்வுக்கு ரொம்பவே உண்டு.*

*♻️வாழ்க்கை எப்போதும் வசந்தங்களையே தருவது இல்லை. சுண்டிப் போடும் தாயக்கட்டையில் எப்போதும் ஒரே எண் வருவது இல்லை.*

*♻️வாழ்க்கை பல கலவையான உணர்வுகளின் சங்கமம். வாழ்வில் வருகின்ற நிகழ்வு களையெல்லாம் இயல்பாகவும், இலகுவாகவும் எடுத்துக் கொள்ள நகைச்சுவை உணர்வு அவசியம். அது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் மாற்றும்..*

*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️உள்ளத்தில் எப்போதும் நகைச்சுவை உணர்வைக் கொண்டு இருங்கள். நம் வாழ்நாளில் எவ்வளவு காலம் சிரிக்கிறமோ, அவ்வளவு காலம் நல்ல ஆரோக்கியமாக வாழ்வோம்.*

*⚽சிரிப்பு இல்லாத வாழ்க்கை வெறும் செயற்கையான வாழ்க்கை ஆகி விடும். அதனால் நம்மால் இயன்ற வரை சிரித்து வாழ்ந்து, நமது ஆயுள் காலத்தை அதிகரிப்போம்....*

ravi said…
08.01.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 17)

Sanskrit Version:

काश्यश्च परमेष्वासः शिखण्डी च महारथः।
धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः।।1.17।।

English Version:

kaashyashcha parameshvaasah:
shiKhanDi cha mahaaraThah |
drushtadhyumno viraaDascha
saatyhakischaparaajitah ||


Shloka Meaning

Shlokas 15, 16, 17 & 18 describe the conch sounds of the various warriors of the Pandava army (sainyam)

The King of Kashi an excellent archer.
Commander supreme Shikhandi
And the unconquerable warriors Dhrustadhyumna, Viraatah and Saatyaki

They all blew their conches to signal their war cry.
Jai Shri Krishna 🌺
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 20*

அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்

*பொருள்*

கனமான அம்மியை துணையாகக் கொண்டு ஆற்றில் இறங்கினால் அது நம்மை மூழ்கச்செய்து விடும், அது போன்றது அழகான மார்பகங்களைக் கொண்டு நம்மை மயக்கும் வேசியுடன் கொண்ட உறவு. அந்த உறவு இந்த பிறவிக்கும் அடுத்து வரும் பிறவிக்கும் நல்லது இல்லை. நம்மிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் பறித்து நம்மை ஒன்றும் இல்லாத வறுமை நிலைக்கு தள்ளி, நீங்காத துன்பத்தில் ஆழ்த்தி விடும்.


*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
🌹🌹🌹🌹🙏🏻💐💐💐💐💐

*இன்றைய சிந்தனை*

……………………………………………...................

*"கூக்குரல் எழுப்புவதும் ஒரு இயலாமையே...!"*

...........................................................

நாம் சொல்லப் போகும் கருத்து நியாயமானதாக இருந்தாலும் கூக்குரல் எழுப்பிப் பேசும் பொழுது எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அது நமக்கொரு தவறான தோற்றத்தைத் தந்து விடும். குரலினை உயர்த்திப் பேசுவது நல்லதா...? என்று எவரிடம் கேட்டாலும், நல்லது இல்லையென்றே உரைப்பார்கள்.

ஆனால்!, சினம் கொள்ளும் போதும், நாம் கூறிய கருத்தினை மறுத்துப் பேசும் பொழுதும் நம் குரலினை உயர்த்தியே பேச வேண்டிய கட்டாயமும் வருகிறது...

அந்நேரம் இதயத் துடிப்பு அளவுகளைக் கடந்து உயர் மன அழுத்த நிலையால் நாளங்கள் தடித்து, கண்கள் சிவந்து சினத்தின் உயரத்திற்கே நம்மை அறியாமல் சென்று விடுகின்றோம்...

இப்படி நம்மிடம் இடையிடையே நிகழ்வதனால் பல வேண்டாத விளைவுகளும் ஏற்படும்.

இவையெல்லாம் அமைதியாக இருக்கும் பொழுது நமக்கே புரியும்.

ஆனால் இதயத்தின் துடிப்புகள் அளவை மீறும் பொழுது நம் மூளையின் செயல்பாடுகளை சீர்குலைப்பது என எவரும் அறிவதற்கு இல்லை.

குரலினை உயர்த்திப் பேசும் பொழுது நாம் மனிதன் என்ற நிலையை மீறி ஒருபடி கீழே இறங்கிப் போய் விடுகிறோம்.
அப்போது நம் மீது நமக்கே வெறுப்பு ஏற்படுகிறது.

அதுவொரு தரக்குறைவான செயல். அமைதியின் சக்தியை எவரும் புரிந்துக் கொள்வதில்லை என்பதே குரலினை உயர்த்திப் பேசக் காரணமாக இருக்கிறது.

அமைதியானவர்களால்தான் எதையும் சாதிக்க முடியும். ‘பொறுத்தவர் பூமியாள்வார்’ என்பார்கள். மாறாக தம் குரலினை உயர்த்தியே பேசுபவர்களால் எதையுமே சாதிக்க முடியாது.

நம் உயிரின் சக்தியை சேமித்து வைத்துக் கொண்டால் தான் நாம் நினைத்ததை சாதிக்கவியலும்.

உளவியல் முறையாக பார்க்கும் பொழுது அது ஒரு இயலாமை. குரலினை உயர்த்தும் பழக்கம் இடம் பொருள் பார்க்காது.

இவ்வாறு உரக்க ஓலமிட்டு குரலெழுப்புவதால் எவரும் தன்  வலிமையை நிலை நாட்ட இயலாது.

முயற்சித்துப் பார்த்தால் அந்த வாழ்க்கை நோயற்ற நிலையிலும்,  மகிழ்ச்சியானதாகவும், மன நிறைவானதாகவும் இருக்கும்...!

*ஆம் நண்பர்களே...!*

குரலினை உயர்த்திப் பேசுவது பல நோய்களுக்குக் காரணமாகவும் அமைந்து விடுகிறது. உரக்கப் பேசும்பொழுது சிந்தனையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. நம் கவனமும் சிதறுகிறது.

இந்நிலையில் பல தவறுகள் நிகழ வாய்ப்பும் இருக்கிறது.

உரக்கப் பேசுவதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. எந்தவொரு  செயலையும் அமைதியாக எதிர்கொள்ளும் போது சிக்கல்கள் எளிதாகி விடும். குரலினை உயர்த்திப் பேசுவதால் அது மேலும் சிக்கலாகி விடும்...

ravi said…
நீங்கள் கோபப்படும் நபராக இருந்தால், உங்களின் முதல் எதிரி நீங்கள் தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

யார் மீதும் எப்பொழுதும் எதற்காகவும் கோபப்படாதீர்கள். அன்பால் சாதிக்க முடியாததை கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது.

எந்த சந்தர்பத்தையும் எப்பேர்ப்பட்ட சூழலையும் சமாளிக்கத் தெரிந்த அறிவு நிறைந்தவராக நீங்கள் இருக்கலாம்.

ஆனால் அன்பின் முன் உங்கள் அதே அறிவென்னும் ஆயுதம் பலமிழந்து போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் விரும்பியது முளைக்காது.
நீங்கள் விதைத்ததே முளைக்கும். நல்லதை விதைத்து நல்லதை அறுவடை செய்யுங்கள்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
♻️ *பகவானை ஞானத்தால் திருப்தி செய்யலாம் என்றால் அவன் ஞானத்திற்கு எல்லாம் அப்பாறாபட்டவனாக உள்ளான்*

♻️ *பகவானை பக்தியில் வச படுத்தலாம் என்றால் அவ்வளவு பக்திக்கு அடியேன் எங்கு போவது*

♻️ *பகவானை புஷ்பத்தால் அழங்கரித்து வசபடுத்தலாம் என்றால் பாரிஜாதத்தையே பக்கத்தில் வைத்து அதை அசடை செய்யாதவன்*

♻️ *பகவானை சொர்ணைத்தை காட்டி மயக்கலாம் என்றால் பாதத்தில் மகா லட்சுமி சேவை செய்வதையே கண்டு கொள்ளாமல் அதீத யோகக்தில் வீற்றிருக்கிறான்*

♻️ *பகவானை பல பல திண்பண்டங்களை காட்டி பிடித்து விடலாம் என்றால் நாவின் ருசியை வென்றவனாக இருக்கிறான்*

♻️ *பிறகு எது தான் அவனுக்கு மயக்கத்தை தரும்?*

♻️ *பகவானை மயக்கி இழுத்து வருவது ஒன்று உண்டு*

♻️ *அது தான் அவனுடைய திவ்யமான திரு நாமம் இதற்கு மட்டும் தான் பகவான் தன் வசம் இழக்கிறான் வேறு எந்த வழியிலும் அவனை அடைவது கலியுகத்தில் சாத்தியபடாது*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*நாராயணா ! நாராயணா ! நாராயணா !*

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅

ravi said…
*அம்மா*

தீக்குள் விரலை வைத்தான் பாண்டாசூரன் ..

தீயில் கரியாகி போனான் ...

மெயிக்குள் பொய் வைத்து பொய்க்குள் புகுந்து கொண்டான்

நிழலில் நிஜம் காண நித்திரை துறந்தான் ..

சூனிய வாழ்க்கையில் சூத்திரகாரி உன் அருள் வேண்டி நின்றிலான் ...

குழந்தை அவன் வளரவே இல்லை குடமுழுக்கு போட்டாலும் குமரி உன் பாதம் பணியான்

எங்கள் உள்ளம் அதில் கோடி கோடி பாண்டாசூரர்கள்

தினம் தினம் வதைத்து தின்னும் போது

உனை தேடித் தேடி வந்தோம் நாடி நாடி ஓடி ஓடி வருவாய்

என்றும் மூவா முகந்தனுக்கு சோதரியே ..

சொக்கனுக்கு தினம் கொக்கி போட்டு தன்னில் சிறை வைக்கும் சிங்காரியே
ravi said…
*❖ 75 மந்திரிண்யம்பா விரசித விஷங்கவத தோஷிதா =*

மந்திணீதேவி விஷங்கனை அழித்தொழித்ததால் குதூகலிப்பவள்
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !


34 –
சேராய் எனில் மெய் நீராய் உருகிக்

கண்நீர்
ஆற்று அழிவேன் அருணாசலா (அ)
ravi said…
திருப்
பெருந்துறையில் எழுந்தருளியுள்ள *அருணாசலனே*

இந்த அதிகாலைப் பொழுதில் வீணைக்
கலைஞர்களும்,

யாழ் வாசிப்பவர்களும்

இசை மீட்டியபடி ஒருபுறம் உன் பக்தியில் லயித்து நிற்க.

ரிக் உள்ளிட்ட வேதங் களால் உன்னை வணங்குவோரும்,

தமிழ் தோத்திரப்பாடல்
களைப் பாடுவோர் ஒருபுறமும் உன் சிறப்பைப் பாடிக் கொண்டிருக்க

அருணாசலா என்ற நாமத்தை சொல்லியபடி கையில் மலர்மாலைகளுடன் பக்தர்கள் ஒருபுறம் நிற்க

வணங்குவோரும், கண்களில் கண்ணீர் மல்க

பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்ந்து மயங்கியவர்
களுமாக ஒருபுறம் இருக்க

தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்க

இவர்களது பக்தியின் முன் எனது பக்தி கடுகிலும் அணுவிலும் சிறிதன்றோ ??

எனது இறைவனே! அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொள்ள,

நீ பள்ளியில் இருந்து எழுந்தருள வேண்டும்.

நாயேனை
பேயேனை
பித்தனை
சித்தம் அற்றவனை சிவம் என்று சொல்லாதவனை

கண் திறந்து பார்ப்பாயோ *அருணாசலா* ... ??

மூன்று கண்ணில் ஒர் கண் என் பக்கம் இருக்க மனமில்லையோ உனக்கு ... ??

உன் நாமம் அன்றி வேறு ஒன்றும் அறியேன் ...

வேதம் நீ என்று உணர்ந்திலேன்

பாவி என்னைப் போல் சுவாமி நீ கண்டதுண்டோ ?

என்னுடன் சேர்ந்து விடு *அருணாசலா* ...

சாக்கடையில் சந்தனம் தெளிப்பதா ?

சேற்று மண்ணில் செந்தாமரை நடுவதா

காடு மலையில் அமுதம் பொழிவதா

என்றோ சிந்திக்கின்றாய் ..?.

என் கண்ணீர் என்னை அழித்து விடும் முன்

உன்னில் சேர அருள் செய்வாய் .

மாட்டாய் என்பதை நீ காட்டாய் என்று வீட்டாய் உனை கேட்கின்றேன் .

பாட்டாய் ஏட்டாய் பரவி இருப்பவனே 🙌🙌🙌
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 48*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
कुरुविन्दगोत्रगात्रं कूलचरं कमपि नौमि कम्पायाः ।

कूलंकषकुचकुम्भं कुसुमायुधवीर्यसारसंरम्भम् ॥ ३२॥

32. Kuruvinda gothra mathram koolacharam kamapi naumikampaayaa,

Koolangasha kucha kumbham kusumayudha veerya sara samrambham.

குருவின்தகோத்ரகாத்ரம் கூலசரம் கமபி னௌமி கம்பாயாஃ |

கூலம்கஷகுசகும்பம் குஸுமாயுதவீர்யஸாரஸம்ரம்பம் ||32||||
ravi said…
சிவந்த ரத்தினங்களை கும்பாச்சியாக கூட்டி ஒரு உருவம் செய்தால் அது தான் அம்பாளோ?

அவளது சௌந்தர்யத்துக்கு ஈடு இணை எவரைச் சொல்வது?

இப்படி அழகாக அந்த நாரீமணி கம்பா நதிக்கரையில் உலவிடும்போது உலகமே பின் செல்லாதோ?

ஒரு தாய் அழகானவள் என்று பெருமைப்படும் பிள்ளைகள் நாம்.

அழகுக்கு அழகு சேர்த்தாற்போல் யௌவன அழகி அம்பாள் கையில் மன்மத பாணங்கள், கரும்பு வில்.

எவர் எதிர்க்க முடியும் அவளை? நான் தரிசித்து மகிழ்ந்து மீண்டும் மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.
ravi said…
மூன்றடிகளால் அண்டங்கள் யாவையும் அளந்த உன் அழகிய தாமரை திருவடிகளுக்கு வணக்கம் கண்ணா

எவரும் அழிக்க முடியா தச முகனை தசரதன் மகனாய் மண்ணில் சாய்த உன் வீரத்துக்கு நமஸ்காரம் கண்ணா

சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே!

உன் புகழுக்கு வந்தனம்.

கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே!

உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும்.

கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே!

உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.ப

கைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே!

அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம்.

உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம்.

எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம் கண்ணா ...

அனாதைகள் நாங்கள் கன்று தன் தாயை தேடுவது போல் உன் நிழல் தேடுகிறோம் .

நிஜம் தனை காட்டுவாயோ கண்ணா 🙏🙏🙏
ravi said…
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி

சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி

கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.🙏🙏🙏
ravi said…
Do not complain about others, change yourself. Because it is easy to protect your feet with slippers rather than carpeting the whole earth.



If your goals set you apart from other's, it is better to be alone.



Too often we waste our time waiting for a path to appear, but it never does. We forget that paths are made by walking, not waiting. And we forget that there’s absolutely nothing about our present circumstances that prevents us from making progress again, one tiny step at a time.



Be a rainbow in someone else’s cloud.



We get old too soon and wise too late. Benjamin Franklin



If you focus on the hurt, you will continue to suffer; if you focus on the lesson, you will continue to grow.
ravi said…
TIME IS KING



Don’t let time, through your fingers slip

We are here only on a one way trip

Of your every moment make the most

We are nearing our destination, almost.



Who knows what tomorrow will bring

So, why not today, dance and sing

Time won’t wait, even if you want it to

Welcome it every day, by doing something new.



Don’t delay, or postpone for later

To your whims and tantrums will not cater

The past is to remember, the present is to live

No one is sure what the future will give.

ravi said…
Break Free Of Approval Addiction
We are each unique individuals and so is our journey of life. Getting approval for who we are and what we do certainly feels nice, it tells us we are doing something right. But being a people-pleaser and constantly seeking validation makes us live in bondage, on other people’s terms. We ultimately waste our potential and feel emotionally drained. Start living as per your desires and your potential. Life is so much easier when you are not worried about what others think about you. Remind yourself - I am a wise being. I am not dependent on people’s validation or approval for my choices. It’s my life. I am free to choose what is right for me, not what people approve of.



Do you compromise on your choices, decisions, qualities or habits when someone you admire, does not like them? Is getting people’s approval a higher priority than doing what feels right for you? Not easy to recognize or admit, but some of our behaviours may reflect an approval addiction. The biggest traps most of us fall into, is trying to please people close to us. Who we are, what we do or what we have are, should always be our decision. We need not tweak our personality to gain someone else’s approval. Let’s focus on living our values and do what feels right. We have all the answers within us. We only need to activate our intuition and follow our conscience. When we approve of our being and doing, we stop asking people to certify our worth. Otherwise our self-esteem crashes. And then, neither we nor others will respect us. You don’t need to copy anyone. Be yourself all the time. You don’t need people to approve of you, feel grateful for whoever shows you love or appreciation, but don’t seek approval. Care selflessly, help without conditions. You need nothing from anyone. Inculcate the art of remaining stable in appreciation and in criticism. Teach your mind not to seek external validation, to only remain focused on your purpose, goals and plans that make your life meaningful.

icon
Message for the day

Concentration on positive thoughts brings power and growth.


Expression: Whatever thoughts are concentrated upon, those thoughts become powerful. It is like the growth of a seed. When a thought, a positive thought, is planted in the mind and it is concentrated upon, it becomes like sunlight adding energy. The more the concentration on them these thoughts begin to grow.


Experience: When I am able to create a positive thought, each morning and water it with attention throughout the day, I am able to find myself becoming more and more powerful. Negative circumstances or people with negativity do not influence me but I become a powerful source for finishing that negativity. I am able to maintain this positive thought under all circumstances.
ravi said…

A farmer had a very beautiful daughter. A young boy came to the farmer with a desire to marry the farmer's daughter. He expressed his desire to marry the farmer's daughter. The farmer looked at him and said - young man you go to the field, I am going to release three bulls one by one. If you catch the tail of any one of the three bulls, I will give my daughter in marriage to you. The young man was happy to hear this easy condition and stood in the field to hold the bull's tail. The farmer opened the door of the house located in the field. Then a very big and dangerous bull came out of it. The young man had never seen such a bull before. So fearing him, the young man decided to wait for the next bull and he turned aside so that the bull passed him by. The door opened again, surprisingly this time a bigger and fiercer bull came out. The young man thought that the first bull was better than this. Then he turned aside and let the bull go. The door opened for the third time, a smile appeared on the young man's face. This time a small and ferocious bull came out. As the bull began to approach the young man, the young man made a pose to catch its tail so that it could catch its tail at the right time. But wonder of wonders, that bull did not have a tail.
ravi said…
Life of every human being is full of opportunities. Some are simple and some are difficult. But if you miss the opportunity once, then you may not get that very opportunity again. Try and grab the first opportunity..!!, give your best, Learn and Persist



Have a Stupendous Saturday
ravi said…
ராம நாம மகிமையை உணருகிறேன்- இசைதாஸன் திருவையாறில் சராசரியாக காலை-8.30 மணி முதல் இரவு 12.00 மணிவரை 56 கச்சேரிகள் (இசைநிகழ்ச்சிகள்), நடைபெறுகிறது. இதில் 1 வித்வான் 15 நிமிடத்திற்கு 3 கீர்த்தனைகள் பாடினாலும் கூட ஒவ்வொரு கீர்த்தனையிலும் "ராம" என்ற சொல் குறைந்த பட்சம் 6 முறையாவது வரும். அப்படி பார்க்கும்போது தினமும் சுமார் 1008 முறை ராமநாமம் ஒலிக்கிறது. 5 நாட்கள் X 1008=5040. ஆக நம் காதில் விழுகிறது. நான் 31 வருடமாக இங்கு வரும்போது இதுவரை 1,56,240 ராம நாமம் என் காதில் விழுந்திருக்கும். குறைந்தபட்சம் 1 லட்சமாவது கேட்டிருப்பேன். தமிழ்நாட்டில்திருவையாறு ஓர் புண்ணிய பூமி. ஒவ்வொரு ஆண்டும் ராம நாமத்தால் புத்துணர்ச்சியடைகிறேன். கர்நாடக சங்கீதம் இந்த ஐந்து நாளும் முழுமையாக ஒலிக்கும் ஊர், எந்த உலகத்திலும் பார்க்க முடியாது. - ராம நாம மஹிமை
*******************
(ராம நாமேதி யச்சோத்ரே
விஸ்வம்பாதா கதம் யதி
கரோதி பாபசம்தாஹம் தூலம் வன்ஹிகணோ யதா)

ராம நாமத்தை யாருடைய காது திடீரெனகேட்டுவிடுகிறதோ
அவனுடைய பாபமானது நெருப்பில் விழுந்த துகள் போல் எறிந்து போகிறது- பத்ம புராணம்
ravi said…
*திருப்பாவை-24ஆம் பாசுரம்:*

_அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி_
_சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி_
_கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி_
_கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி_
_குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி_
_வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி_
_என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்_
_இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்_

ravi said…
முன்பொருநாள்-
மூன்றடி மண் கேட்டாய்;
அவ்வாறு கேட்டு-
அரக்கனின் பிடியிலிருந்து
அகிலத்தை மீட்டாய்!

வேட்டாய் அரக்கனிடம்-
ஐயத்தை;
அளந்தாய் ஓரடியால் வையத்தை!

அன்று-
அரிய அச்செயல் ஆற்றி-
அகிலத்தை அளந்த
அக் காலடிகள் போற்றி!

சூர்ப்பணகை ஏற்றினாள்
சுயமழிக்கும் போதையை;
இராவணன் மறந்தான்-
நல்லொழுக்கப் பாதையை;
"சீச்சீ"எனச் சுளித்திடும் வண்ணம்
சிறைசெய்தான் சீதையை;
அன்றுமுதல் தந்திட்டான்
அரக்கர்களுக்கு வாதையை!

இராவணன் சீதையைப் பறித்தது-
இலங்கையின் கழுத்தினை நெரித்தது!

இலங்கைக்குச் சென்று
இராக்கதரைக் கொன்று
இராவணனை வென்று
இல்லாளை மீட்டான் அன்று!

அங்ஙனம்-
அவம்புரிந்த அரக்கனை
அடுகளத்தில் கணையேற்றி-
அதம்புரிந்த உன் வீரம் போற்றி!

கண்ணனைக் கொல்ல-
கம்சன் ஏவினான் ஓர் அரக்கனை;
கம்சனின் படையெனும்
அம்புப் புட்டிலில்-
அநேகர் உண்டு-
அவனைப் போன்ற மறக்கணை!

வல்லரக்கன்
வடிவம் தரித்தான்-
வண்டிச் சக்கரமாக;
உருண்டோடினான்
ஊர்த்தெருவில் உக்கிரமாக;
வாசுதேவனை நசுக்கிட
விழைந்தான் வக்கிரமாக!

அரக்கனின் எண்ணம்
அறியாதவனாய் வேடமிட்டு
ஆங்கே படுத்திருந்தான்
அரி-யாதவனாய்!

சக்கரத்தைக் கையில் சுழற்றுபவன்- அன்று
காலில் சுழற்றினான்;
அங்ஙனம் சுழற்றி-
அரக்கனின் ஆக்கையைக் கழற்றினான்!

சகடத்தைக் காலால் உதைத்தான்;
அவ்வாறு உதைத்து-
அவ்வரக்கனின்
அந்திம காலத்தை விதைத்தான்!

இங்ஙனம்-
சக்கரத்தைக் காலில் சுழற்றி-
சாதித்தவனே!
உன் புகழ் போற்றி!

கண்ணனின் தீரச்செயல் கண்டு
கம்சன் முகம் கடுத்து-
கசடர்களை ஏவினான் அடுத்தடுத்து!

கன்று வடிவில் வந்தான்
கீழ்மகன் ஒருவன்-
கண்ணனைக் கொல்ல;
அவன் பெயர் வத்சன்!
ஆராலும் முடியாது அவனை வெல்ல!

விளாங்கனி வடிவில்-
வந்தான் ஒரு அசுரன்;
கபித்தன் எனும் பெயர்
கொண்ட அவனொரு கசடன்!

இருவரும் விழைந்தனர்-
இறைவனைக் கொல்ல;
இதனை நன்கறிந்து-
இறைவன் நகைத்தான் மெல்ல!

கரங்களால் தூக்கினான்
கன்றினை;
குறிபார்த்தான் விளாங்கனி ஒன்றினை!

நேரமாகிவிட்டதை
நாயகன் அறிந்தான்;
பிறகு-
கனியின் மேல்
கன்றினை எறிந்தான்;

மரத்திலிருந்து விழுந்து
மரணித்தது கனி;
அஃதே போல்-
செத்து விழுந்தது கன்று;
மீண்டும் எழாது இனி!

பாவிகள் இருவரையும்
வீழ்த்தினன் பாங்காய்;
அடித்தனன் ஒரே கல்லில்
இரண்டு மாங்காய்!

வியூகம் வகுத்து
வீணர்களை அழித்த- உன்
மதி யூகம் போற்றி!

ஆயர்கள்-
ஆதிகாலம்தொட்டு
அனுஷ்டித்து வந்தனர்
இந்திர விழாவை;
வருடா வருடம்
வகைவகையாய்ப் படையலிட்டு-
சேமங்கள் பெருக
ஓமங்கள் வளர்த்து-
மனமாரப் போற்றி நிகழ்த்தினர்
மந்திர விழாவை!

மாதம் தவறாது-
மழையைப் பொழிகின்றன மேகங்கள்;
அதனால் புல்,பயிர் வளர-
அவற்றை உண்டு கொழிக்கின்றன
ஆக்களின் தேகங்கள்!

இதனால்-
இடையறாது- பசுக்கள் சுரந்திடும் பாலை;
மகிழ்ச்சியில் ஆயர்கள்
மாடுகளுக்குச் சூட்டுவர் மாலை!

"மழையைப் பெய்வித்து
மகிழ்ச்சி தரும் இந்திரனே-
மங்களங்கள் அனைத்திற்கும் ஆதிவித்து!"
என எண்ணினர் ஆயர்கள்;
ஆநிரைகளின் நேயர்கள்!

இதனால்தான்-
இந்திரனைப் போற்ற
புரிந்தனர் யாகம்;
இந்திரனால் அன்றோ-
இடையருக்கு வந்தது யோகம்!

இங்ஙனம்
இமையோர் தலைவனை
ஏத்திய ஆயர்களை
எம்பிரான் மாற்றினான்;
தன் கருத்தைச் சாற்றினான்!

"இந்திரனால் பெய்கிறதா மழை?
இல்லை! அங்ஙனம் எண்ணுதல் பிழை!

ஊர் எல்லையில்
உயரமாய் நிற்கிறதே வரை!
அதுவே மேகங்களைப்
பிடிக்கின்றது சிறை;
அதனால்தான்
பெய்கின்றது மழை-
மாதம் மூன்று முறை;
ஆகையால்-
ஆண்டவனை விடுத்து
அம்மலையை வணங்குதலே முறை!"

கடவுளே
நாத்திகம் பேசி-
மூட நம்பிக்கையை
முடித்து வைத்து-
வழங்கினார் ஆசி!

அன்று முதல்-
ஆகாயம் தொட்ட அம்மலையானது-
ஆயர்கள் வணங்கிடும் சிலையானது!

இதனால்-
இந்திரனுக்கு வந்தது சினம்;
வருணனை ஏவி-
வான்மழை பெய்ய வைத்தான் தினம்!

அது மட்டுமா?
வாயுவை ஏவி-
வன்புயல் வீசச் செய்தான்;
ஆநிரையின் கூட்டம்-
அத்தனையும் நாசம் செய்தான்!

கண்ணன் கண்டான்;
மலையைக் குடையாய்க் கொண்டான்!

அனைவரையும்-
அதன் நிழலில்
நிற்க வைத்தான்;
அமேரசன்-
அடக்கம் எனும் பாடத்தை
கற்க வைத்தான்!

"ஒன்றுக்கும் உதவாத வீணவம்-
ஆணவம்!" என்று-
இந்திரன் உணர்ந்தான் நன்கு!

குன்றைக் குடையாய் எடுத்து-
இந்திரனின் கர்வம் ஒடுக்கி-

ஆயர்களைக் காத்த
ஆண்டவனே!
உன் குணம் போற்றி!
உயரிய மனம் போற்றி!

எண்ணற்ற நீசர்களை
எதிர்கொண்டு அழித்திடும்
உன் வேல் போற்றி!
உளமுருகி அடியார்களை
உய்விக்க வைத்திடும்
உன் கால் போற்றி!

பலவாறாய் உன் சீரைப்
பாடிப் பரவினோம்;
உன் பேரைப் போற்றியே
ஊருக்குள் உலவினோம்!

நாங்கள் வேண்டிய
நல்லிசைப் பறையை
நாயகனே! அருள்வாய்;
நாளும் போதும் எமக்கு
நல்வார்த்தை மொழியட்டும்
நல்லவனே!உன் அருள் வாய்!

- S.நடராஜன், சென்னை
Hemalatha said…
வணக்கம் சார்🙏
மதுரை வள்ளியம்மை மிகுந்த ஆச்சரியத்துடன் தங்களின் கொடையைப் பற்றி கூறி மகிழ்ந்தார்கள்.அப்போது தாங்கள் முன் திருவாசக குழுவில் போடும் பதிவுகள் பற்றி கூறினேன்.நான் பல முறை கூறியதை அவர்கள் கவனிக்க வில்லை என்பதையும் உணர்ந்தேன்.எப்போதும் தங்களின் கொடைசெயல் ஆச்சரியப்படுத்தும் தங்கள் பதிவுகள் போல்.நன்றி சார்🙏🙏🙏
ravi said…
ஆதாரம் நின் திருப்பாதாரம்

இந்த அவனியில் உனை அன்றித்
துணை ஏது சுவாமிநாதா?

ஓதாரும்,தன்னை உணர்ந்தாரும்
போற்றும் போதனே சுவாமிநாதனே!!

என்றும் ஆதாரம் நின் திருப்பாதாரம்
பெற்று எனைப் பெரிதும் மகிழ்விக்கும்
அன்னையும் நீ...

கற்ற கலை யாவினிற்கும் குருவும் நீ..

கலியுக வரதா என் கண்கண்ட தெய்வமே
சங்கரா......

ஹர ஹர சங்கர!!!
ஜய ஜய சங்கர!!!💐💐💐
ravi said…
*மனம் கணக்கின்றதே சங்கரா ...* 😰😰😰

பூமாதேவி யை பாயென சுருட்டிக் கொண்டு ஓடினான் இரண்யாக்ஷகன் ...

பலவருடம் அவன் சுமை கண்டு சுந்தரி அழுதே

இனிக்கும் கடல் நீரை உப்பாக்கினாள் ...

அந்த பாரம் சுமந்தவள் பரமனின் பாரம் சுமக்க முடியவில்லையோ ?😰

பஞ்சு அஞ்சும் பொற் பாதங்கள் தாமரை கண்டு நாணுமே ...

தவம் செய்து பெற்ற பிள்ளை தரணி எங்கும் சுற்றியதே...

சூடாமணியின் வெளிச்சம்

கதிரவனின் ஓச்சம் கக்கும் தீப்பொறிகளின் உச்சம்

அனைத்தும் தோற்று போகுமே தூயவன் முகம் பார்த்தால் ...

துள்ளி ஓடும் மான்கள் சுரக்கும் பாலில் புலிக்குட்டிகள் உறவாடுமே ...

தோகை விரிக்கும் மயில்களின் கண்கள் பழரசம் பொழியுமே

மீண்டும் மீண்டும் வருவேன் என்றான் கண்ணன் ...

ஒருமுறை வந்தவன் மறுமுறை வாரானோ ??

காலடியில் சேரடி நிறைந்திருக்க

விழுப்புரம் திரிபுரமாய் எறிந்து கிடக்க

கலவை மீண்டும் காணுமோ காஞ்சி மகுடம் அதை

சிந்தாமணி மீண்டும் சிந்தியே காஞ்சி நகர் நிரம்புமோ ... ??

நெஞ்சம் கணக்கின்றதே

நேர்மைக்கும் உறக்கம் தேவையோ ??

நீதிக்கு நிழல் தேவையோ ??

தர்மம் வாழ தரணி செழிக்க சங்கரா

மீண்டும் வாராயோ ??

இறப்பு ஒன்றும் இல்லா எங்கள் ஈஸ்வரனே 💐💐💐
Hemalatha said…
எங்களின் எந்த நிலையிலும் தங்களின் கொடையைப் பற்றி நினைத்து நன்றி சொல்லாமல் இருந்தது இல்லை.🙏🙏
ravi said…
*இரவு சிந்தனை* 🤔

தேவைகள் இல்லாவிட்டால்…

மனிதர்கள்
ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்ளக் கூட
மாட்டார்கள்..

*இரவு இனிதாகட்டும்*😴 *விடியல் நலமாகட்டும்* 😍

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 434*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

ஸ்லோகம் 59.
ravi said…
हंसः पद्मवनं समिच्छति यथा नीलाम्बुदं चातकः
कोकः कोकनदप्रियं प्रतिदिनं चन्द्रं चकोरस्तथा ।
चेतो वाञ्छति मामकं पशुपते चिन्मार्गमृग्यं विभो
गौरीनाथ भवत्पदाब्जयुगलं कैवल्यसौख्यप्रदम् ॥

சிவானந்த லஹரியில முந்தைய ஸ்லோகத்துல, ‘ஹே பரமேஸ்வரா! ஒரு சூரியனே இருட்டெல்லாம் பிளந்துண்டு கண் முன்னே வந்து காட்சி கொடுக்கறானே, நீ கோடி சூரிய பிரகாசம், எனக்கு ஏன் தரிசனம் தரமாட்டங்கறே?

என்னுடைய அறியாமை அவ்வளவு அடர்ந்ததா இருக்கா?

பிரபோ,ஹே பசுபதே! என் கண் முன்னாடி நீங்கள் தோன்ற வேண்டும், அப்படின்னு ஒரு பிரார்த்தனை.
ravi said…
இந்த அறியாமையைப் போக்கிக்கறத்துக்கு, ஞானமார்கத்துல அஷ்டாங்க யோகம் பலவழிகள் இருக்கு.

ஆச்சார்யாளே சந்நியாசிகளுக்கு அந்த மார்க்கங்கள் எல்லாம் சொல்லித்தறார்.

ஆனால் இங்க பக்தி மார்க்கத்துல, அதே கைவல்ய சௌக்யத்தை, மனசை பகவான்கிட்ட ஒப்படைச்சு, யாரா வேணா இருக்கலாம், எதுவா வேணா இருக்கலாம்,

ஆனா மனசை பகவான் கிட்ட ஒப்படைச்சா பகவான் அறியாமையைப் போக்கி ஞான தீபத்தை ஏற்றி அந்தப் பேரானந்தத்தை கொடுப்பார், அப்படிங்கற கொள்கையை ஒட்டி

அடுத்த மூணு ஸ்லோகங்களில் நிறைய உவமைகளை சொல்லி ,

எப்படி மனசு ரொம்ப இயல்பா மனைவி, மக்கள், செல்வம், கிருஹம் இதுல எல்லாம் பின்னாடி போறதோ அந்த மாதிரி மனசு பரமேஸ்வரனுடைய பாதாரவிந்தத்துல போய் லயிச்சா, அனன்ய பக்தி அப்படின்னு, இந்த உலக விஷயங்களிலிருந்து மனசை எடுத்து அந்த பகவானுடைய பாதத்திலே வைக்கிறது.

வேற எதுவுமே எனக்கு வேண்டாம், ஹே பரமேஸ்வரா!

நீதான் வேணும், அப்படின்னு அந்த ஏக்கத்தை ஜாஸ்தி பண்ணிண்டு,

உலக பாசத்தை தெய்வ பாசமா மாத்தினா பகவானுடைய அருள் கிடைக்கும்.

அத அழகழகான உவமைகளை சொல்லி, சொல்றார்.🙏🙏🙏🙏🙏
ravi said…
[08/01, 17:52] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 54 started on 6th nov

*பாடல் 19* ...💐💐💐
[08/01, 17:52] Jayaraman Ravilumar: *பாடல் 19 ... வடிவும் தனமும்*

(வறுமையை நீக்கி அருள்வாய்)

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.
ravi said…
பிறப்பும் இறப்பும் இல்லாத வேலாயுதப் பெருமானே,

வறுமை என்கிற
பாவி பிடித்துவிட்டால்,

ஒருவனுடைய அழகும் சமூகத்தில் அவன்
கொண்டிருக்கும் உயர் நிலையும் நல்லொழுக்கமும், பரம்பரை
கெளரவமும், நீங்கி விடுகின்றனவே.

இது என்ன ஆச்சரியம்.!!
ravi said…
[08/01, 17:39] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 435* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[08/01, 17:39] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

*ஸித்திஸ்* :‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
யசோதையின் குமறல் துவாரகாவில் இருந்த கண்ணன் செவிகளில் விழுந்தது ...

ரொம்பவும் சோதித்து விட்டோமே என்றே வருந்தினான் கண்ணன் ...

கோகுலம் விரைந்தான் கண்ணன் ...

கண்ணன் வரமாட்டானோ என்றே ஏங்கி உள்ளே வரும் மூச்சை மெதுவாக வெளியே அனுப்பினாள் யசோதை ...

அப்பவும் அந்த தாய் உள்ளம் நினைத்ததாம் வெளி சுவாசம் இடும் சப்தமதில் எங்கோ உறங்கும் கண்ணன் அவன் உறக்கம் களையக்கூடாதே என்றே ...

நாடி நரம்புகள் ஓவ்வொன்றாய் ஓய்வு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தன ..

மூச்சு கொஞ்சம் தடுமாறியது .

மூச்சுக்கு 300 தடவை கண்ணா என்றே சொன்ன குரல் அமைதி வேண்டியது ...

கண்ணன் துடிப்பைக் கண்டு ரசித்த இதயம் தன் வேகத்தை நிறுத்திக்கொள்ள முயற்சித்தது ..

கண்ணா நீ வருவாயா

கண்கள் மூடும் முன் கண் நிறைந்த உன்னை ஒருமுறையாவது காண வேண்டும் ..

இந்த ஏழை தாய்க்கு அந்த பாக்கியம் கிடைக்குமா கண்ணா ? 🙏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 48*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
कुरुविन्दगोत्रगात्रं कूलचरं कमपि नौमि कम्पायाः ।

कूलंकषकुचकुम्भं कुसुमायुधवीर्यसारसंरम्भम् ॥ ३२॥

32. Kuruvinda gothra mathram koolacharam kamapi naumikampaayaa,

Koolangasha kucha kumbham kusumayudha veerya sara samrambham.

குருவின்தகோத்ரகாத்ரம் கூலசரம் கமபி னௌமி கம்பாயாஃ |

கூலம்கஷகுசகும்பம் குஸுமாயுதவீர்யஸாரஸம்ரம்பம் ||32||||
ravi said…
சிவந்த ரத்தினங்களை கும்பாச்சியாக கூட்டி ஒரு உருவம் செய்தால் அது தான் அம்பாளோ?

அவளது சௌந்தர்யத்துக்கு ஈடு இணை எவரைச் சொல்வது?

இப்படி அழகாக அந்த நாரீமணி கம்பா நதிக்கரையில் உலவிடும்போது உலகமே பின் செல்லாதோ?

ஒரு தாய் அழகானவள் என்று பெருமைப்படும் பிள்ளைகள் நாம்.

அழகுக்கு அழகு சேர்த்தாற்போல் யௌவன அழகி அம்பாள் கையில் மன்மத பாணங்கள், கரும்பு வில்.

எவர் எதிர்க்க முடியும் அவளை? நான் தரிசித்து மகிழ்ந்து மீண்டும் மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.
ravi said…
♻️ *இன்றைய சிந்தனை*

*✍️09.01.2023*

**********************************

*வாழ்க வளமுடன்*

**********************************

உங்கள் வாழ்வில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற முதலில்
உங்களை நீங்கள் முழுமையாக நம்புங்கள்.

உங்கள் மீது உங்களுக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை உங்கள் வாழ்க்கையையே மாற்றும்.

சில நேரங்களில் நீங்கள் கீழே விழுந்தது போல தோன்றலாம். உங்களுடன் யாரும் இல்லாதது போல உணரலாம்.

கவலைப்படாதீர்கள் உங்களை விட சிறப்பான துணை உங்களுக்கு வேறு யாருமில்லை.

இறைவன் எப்பொழுதும் நமக்குள் தான் இருக்கிறார்.நாம் தான் அதை உணர்வதில்லை.

நீங்கள் எப்பொழுதும் தனியாக இல்லை.
உங்களை வழி நடத்தும் சக்தி மிகவும் பெரியது.

தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் இருங்கள்!

இறைவன் தனது அருளை எல்லோருக்கும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

உங்கள் வாழ்வும் இறையருளால் நிரம்பி இருக்கிறது.

நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறுங்கள்.

உங்களால் முடியாத போது இறைவன் வழி காட்டுவார் .

*உங்கள் நம்பிக்கையாலும் புதிய சிந்தனைகளாலும் உங்கள் வாழ்க்கையையே சிறப்பானதாக மாற்ற முடியும்.*

*இந்த நாள் இனிய நாளாகட்டும்.*

*வாழ்க வளமுடன் நலமுடன்.*

*மேலும் விஷ்ணுவின் ஆன்மீக தகவல்கள் அனைத்தும் படிக்க Google search 🔍 Sri Mahavishnu info என்று டைப் செய்து search செய்யுங்கள் அந்த website சென்று ஆன்மீக கதைகள் விஷ்ணுவின் ஸ்லோகங்கள் அதன் விளக்கங்கள் என அனைத்தும் படிக்கலாம்*
ravi said…
*இரவு சிந்தனை* 🤔

தேவைகள் இல்லாவிட்டால்…

மனிதர்கள்
ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்ளக் கூட
மாட்டார்கள்..

*இரவு இனிதாகட்டும்*😴 *விடியல் நலமாகட்டும்* 😍

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
ravi said…
🌹🌺" *சொர்க்கவாசல் எனப்படும் பரம பத வாசல் இல்லாத ஆலயங்கள்...பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும்.*
ஆனால்*,* *கும்ப கோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில் சொர்க்கவாசல் எனப்படும் பரம பதவாசல் கிடையாது*.

🌺இதற்குக் காரணம் இருக்கிறது.
இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார். * *மகாலட்சுமியின்* *அவதாரமான கோமளவல்லியை மணமுடிப்பதற்காகத் திருமால் தான்* *எழுந்தருளியுள்ள ரதத்துடன்* *வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார்*.

🌺எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது.

🌺இதே போன்று சொர்க்கவாசல் எனப்படும் பரம பத வாசல் இல்லாத ஆலயங்கள் விபரம் கீழே*!

🌺1)காஞ்சிபுரம் பரமேஸ்வர விண்ணகரம் எனப்படும் ஸ்ரீ பரமபதநாதப் பெருமாள் ஆலயம்*.

🌺2)ராமானுஜர் அவதரித்த தலமான ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்* *பெருமாள் ஆலயம்.*

🌺3)திருக்கண்ணபுரம்* *ஸ்ரீ சௌரிராஜபெருமாள் ஆலயம்*.
*திருக்கண்ணபுரம் பூலோகத்து விண்ணகரம் என்பதால்*, இத்திருக்கோவிலில் பரமபத வாசல் கிடையாது.🌺

🌺4)திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாசன்* *பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவியை மணமுடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக வந்ததால் இக்கோவில் பூலோக வைகுண்டமாகத் திகழ்கிறது*. *இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், இங்கு சொர்க்கவாசல் கிடையாது*.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…

பழனிக் கடவுள் துணை -09.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-23

மூலம்:

வையகத்தும் வானகத்தும் மாசுணங்கள் வாழ்பிலத்தும்
செய்ய தகருகைக்கும் சேவகத்தும் – ஐயமறுத்(து)
என்னைப் புரப்ப(து) எளிதேயன் றோ?பழனி
தன்னைப் புரப்பான் தனக்கு (23).

பதப்பிரிவு:

வையகத்தும் வானகத்தும் மாசுணங்கள் வாழ் பிலத்தும்
செய்ய தகர் உகைக்கும் சேவகத்தும் – ஐய! மறுத்து
என்னைப் புரப்பது எளிதே அன்றோ? பழனி
தன்னைப் புரப்பான் தனக்கு!! (23).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

மாசுணங்கள்-பாம்புகள்;
பிலம்- நாகலோகம்;
தகர்- ஆடு;

வையகம் முழுவதும், வானகம் அனைத்தும், ஏன்? பாம்புகள் வாழும் நாகலோகத்தையும், ஆட்டை வாகனமாகச் செலுத்துகின்ற செயலைப் புரிந்து காக்கின்ற என் பழனியப்பனே! தரணி முழுதும் தனக்குள் அடக்கமான பழனியைக் காத்து இரட்சிக்கின்ற என் ஐயனே! இந்த எளியேனை, உன் அடிமையை, மாதா, பிதா, குரு, தெய்வங்கள் எல்லாம் நீயே என்று உன் திருவடியில் பணியும் என்னை காப்பது உனக்கு மிக எளிதான செயலே அன்றோ?

தண்டமான என்னைப் புரந்து நிற்கும் தண்டபாணியே! உன் ஞானத் திருவடியே சரணம்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
பாதாரவிந்த சதகம் !

65.விவேகாம்ப: ஸ்ரோத: ஸ்நபந பரிபாடீ சி'சி'ரிதே
ஸமீபூதே சா'ஸ்த்ர ஸ்மரண ஹல ஸங்கர்ஷண வசா'த்
ஸதாம் சேத: ஷேத்ரே வபதி தவ காமாக்ஷி சரணோ
மஹா ஸம்வித் ஸஸ்ய ப்ரகர வர பீஜம் கிரி ஸுதே

மலைமகளே ! காமாக்ஷி ! உன் திருவடி விவேகம் என்ற
நீர்ப்பாய்ச்சும் முறைகளால் நன்கு ஈரம் கொண்ட நல்லோரின்
உள்ளமாகிற வயலில், சாஸ்திர ஆராய்ச்சி எனும் கலப்பையால்
உழுவதன்மூலம் கிளறிச் சம நிலை பெறச் செய்ததில், பேருணர்வாகிய
உயர்ந்த விதையைத் தெளித்து விதைக்கின்றது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺" A simple story that explains about the temples without Param Pada Vaasal called Heaven Gate 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Most of the 108 Divyadeshas have Parampada Vaasal known as Sorkavavasal.*
But*,* *Kumba Konam Sri Sarangapani Temple does not have Parama Padavasal called Sorkavasal*.

There is a reason for this.
Itthalathu Swami came here directly from Vaikunda. * Thirumal came here from Vaikunda to marry Komalavalli, an incarnation of Mahalakshmi* *with a raised chariot*.

🌺Therefore, there is no gate of heaven in this temple, because by worshiping him one can attain Paramapadam (salvation).

🌺Similarly, the details of the temples without Param Pada Vasal, known as Sorkavasal, are below*!

🌺1) Kanchipuram Parameswara Vinnakaram Sri Paramapadhanath Perumal Temple*.

🌺2)Sriperumbudur Adikesavam* *Perumal Temple*, the place where Ramanuja incarnated.

🌺3)Thirukannapuram* *Sri Chaurirajaperumal Temple*.
*Since Thirukannapuram is the celestial body*, there is no paramapada gate in this temple.🌺

🌺 4) Tiruvellarai Pundarikasan near Tiruchi* *Perumal came straight from Vaikunda to marry Sridevi in ​​Perumal Temple, so this temple is considered as Phuloka Vaikunda*. *There is no gate of heaven here because worshiping him leads to salvation.

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
[09/01, 07:22] +91 96209 96097: *சஹஸ்ரஜிதே நமஹ*🙏
காலத்தை வென்றவர்
[09/01, 07:22] +91 96209 96097: *மனுவித்யா* சந்த்ரவித்யா சந்த்ரமண்டல மத்யகா🙏
அம்பாளின் அருளை பெற உண்டான வழியை அருள்பவள்
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

35 –
சை எனத் தள்ளில் செய்வினை சுடும் அலால்

உய்வகை ஏது உரை அருணாசலா (அ)
ravi said…
குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் உறையும் அருணாசலா

சிந்தனைக்கு எட்டாதவனே!

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்துபூதங்களிலும் நீயே இருக்கிறாய்.

நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை.

புலவர்கள் உன்னுடைய சிறப்பியல்புகளை கீதங்களால் பாடுகிறார்கள்,

பக்தர்கள் இந்தப் பெருமைகளைச் சொல்லி ஆடுகிறார்கள்.

இப்படி பாடியாடுபவர்களும் உன்னை நேரில் பார்த்ததில்லை.

உன் திருக்காட்சியைக் கண்டவர்கள் யாருமில்லை.

ஆனால் நீயோ எங்கள் முன்பாக தோன்றி ,

எங்கள் பாவங்களையெல்லாம் உன் கங்கை நீரால் தீர்த்து

ஆடிக்கொள்ள துடிக்கிறாயே

உடனே துயில் நீங்கி எழுவாயாக.

நீ இகழ்ந்து என்னை தள்ளினால் எனக்கு யாருண்டு அருணாசலா

செய்த தீவினைகள் என்னை சுட்டு எரிக்கும் முன்

எழுந்து வந்தே என்னை அணைத்துக்கொள் அருணாசலா 🙏🙏🙏
ravi said…
குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் உறையும் அருணாசலா

சிந்தனைக்கு எட்டாதவனே!

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்துபூதங்களிலும் நீயே இருக்கிறாய்.

நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை.

புலவர்கள் உன்னுடைய சிறப்பியல்புகளை கீதங்களால் பாடுகிறார்கள்,

பக்தர்கள் இந்தப் பெருமைகளைச் சொல்லி ஆடுகிறார்கள்.

இப்படி பாடியாடுபவர்களும் உன்னை நேரில் பார்த்ததில்லை.

உன் திருக்காட்சியைக் கண்டவர்கள் யாருமில்லை.

ஆனால் நீயோ எங்கள் முன்பாக தோன்றி ,

எங்கள் பாவங்களையெல்லாம் உன் கங்கை நீரால் தீர்த்து

ஆடிக்கொள்ள துடிக்கிறாயே

உடனே துயில் நீங்கி எழுவாயாக.

நீ இகழ்ந்து என்னை தள்ளினால் எனக்கு யாருண்டு அருணாசலா

செய்த தீவினைகள் என்னை சுட்டு எரிக்கும் முன்

எழுந்து வந்தே என்னை அணைத்துக்கொள் அருணாசலா 🙏🙏🙏
ravi said…
*அம்மா* ... சுற்றி வந்த பகை தனி எட்டி நின்றே அழிப்பவளே

வெற்றி வெற்றி வெற்றி என்றே தினம் கோஷம் கேட்டு புன்னகைப்பவளே

துன்பம் துன்பம் துன்பம் என்றே வருகையில்

துயில் விழித்து பார்க்கையில் துடைத்து விட்டு செல்பவளே

இன்பம் இன்பம் இன்பம் என்று எதிலும் இல்லை

உன் நாமம் தரும் சுகம் போல் இன்பம் ஏதும் உண்டோ என்னை வென்றவளே 🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 453* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*189 दुर्गमा -துர்க்கமா --*
நெருங்கமுடியாதவள். கடின சாதனையாலும் வழிபாட்டினாலும் உயரிய பக்தியாலும் அவளை லலிதாம்பாளாக தரிசிக்கலாம்.

காமகலாவாக குண்டலினியாகி யோக பயிற்சியால் அனுஷ்டா னத்தில் உணரலாம்.🙏🙏🙏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 49*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
कुडूमलितकुचकिशोरैः कुर्वाणैः काञ्चिदेशसौहार्दम् ।

कुङ्कुमशोणैर्निचितं कुशलपथं शम्भुसुकृतसम्भारैः ॥ ३३॥

33. Kudmalitha kucha kisorai kurvanai Kanchi desa souhardham,

Kunkuma sonair nichitham kusala padham shambhu sukrutha sambharai.

குடூமலிதகுசகிஶோரைஃ குர்வாணைஃ காஞ்சிதேஶஸௌஹார்தம் |

குங்குமஶோணைர்னிசிதம் குஶலபதம் ஶம்புஸுக்றுதஸம்பாரைஃ ||33||
ravi said…
காஞ்சி தெய்வம் காமாக்ஷி.

எல்லோரையும் காந்தம் போல் வசீகரிப்பவள்.

அவளது செந்நிறம் பக்தர்கள் கண்களை சுண்டி இழுக்கிறது.

பக்தர்களை காக்கும் பாரா தேவதையை தரிசித்து மகிழ்ந்து நமஸ்கரிக்கிறேன்.🙏🙏🙏
ravi said…
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய்

ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான்

தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

உன்னை
அருத்தித்து வந்தோம்

பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.🙏🙏🙏
ravi said…
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே!

அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே!

அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான்.

அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே!

உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம்.

அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம்.

உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

கண்ணா இதை அருள தடை ஏதும் உளதோ?💐💐
ravi said…
முகுந்தமாலையில 43ஆவது ஸ்லோகம் இப்ப பார்க்கப் போறோம்.

பகவானோட நாமங்களைச் சொன்னா பகவானே கிடைப்பான் ‘ *யாந்தி வைஷ்ணவீம் ஸித்திம் பரமாம்’* ன்னு இருக்கும்போது அதைச் சொல்ல மாட்டேங்கறாளேன்னு சொன்னார்.

நான் நாராயணனை வணங்கப் போறேன்.

நாராயணனுடைய பூஜையை பண்ணப் போறேன்.

நாமத்தை ஜபிக்கப் போறேன்.

நாராயணனுடைய தத்வத்தை ஸ்மரிக்கப் போறேன்.

நான் இதை பண்ணிண்டே இருக்கப் போறேன்னு சொன்னார்

நமாமி நாராயணபாத³பங்கஜம்

கரோமி நாராயணபூஜனம் ஸதா³ ।

வதா³மி நாராயண நாம நிர்மலம்

ஸ்மராமி நாராயணதத்த்வமவ்யயம் ॥

ன்னு தன்னுடைய முடிவை சொன்னார்.
ravi said…
அதனால எனக்கு கிடைச்ச பெரும் பேறு,

அந்த பகவானோட அனுபவமே எனக்குக் கிடைச்சுது ன்னு சொல்லிட்டு, இன்னிக்கு இரண்டு ஸ்லோகங்கள் திரும்பவும் இப்பேற்பட்ட பேரானந்தம் இருக்கும்போது,

ஜனங்கள், வீண் பேச்சிலயும் சிற்றின்பத்துலயும் காலத்தை கழிக்கறாளேன்னு சொல்றார்.

அதைப் பார்ப்போம்
ravi said…
நீங்கள் கோபப்படும் நபராக இருந்தால், உங்களின் முதல் எதிரி நீங்கள் தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

யார் மீதும் எப்பொழுதும் எதற்காகவும் கோபப்படாதீர்கள். அன்பால் சாதிக்க முடியாததை கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது.

எந்த சந்தர்பத்தையும் எப்பேர்ப்பட்ட சூழலையும் சமாளிக்கத் தெரிந்த அறிவு நிறைந்தவராக நீங்கள் இருக்கலாம்.

ஆனால் அன்பின் முன் உங்கள் அதே அறிவென்னும் ஆயுதம் பலமிழந்து போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் விரும்பியது முளைக்காது.
நீங்கள் விதைத்ததே முளைக்கும். நல்லதை விதைத்து நல்லதை அறுவடை செய்யுங்கள்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
*சூரியனும், மழையும் பயிர்களை*
*வளர செய்வதுபோல...!*

" *விமர்சனங்களும்* "
" *பாராட்டுக்களும்* "

*உங்களை வாழ்வில் மேன்மேலும் வளர செய்யும்...!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
So true it is. Not an easy one and we are blessed to hear from you with such in depth explanation of each and every aspect🙏😊

Chandra mouli
ravi said…
மிக அருமை. குறிப்பாக சிந்தாமணி க்ருஹத்தை பற்றிய குறிப்பு 🙏
ravi said…
Thank you for considering and providing us this valuable information. The Goddesses pictures too are rarer.
Thank you.
God bless you and your family, Ravi.

Sridhar
ravi said…
*ஹேய* = கழித்தல் - விலக்குதல்

*உபாத்யேய* = தேர்ந்தெடுத்தல் அல்லது அனுமதித்தல்

*வர்ஜிதா* = இல்லாத

❖ *304 ஹேயோபாதேய வர்ஜிதா =*

எதனையும் தள்ளி விலக்குதற்கும் விரும்பி ஏற்பதற்கும் அப்பாற்ப்பட்டவள் 🙏
ravi said…
யானை அளவு ஞானம் குழந்தை அளவு குணம்

மலை அளவு கருணை கடல் ஆழம் காரூண்யம்

வானம் பரந்த நோக்கம் அதில் இந்திர தனுஷுவாய் அமர்ந்த கோலம்

தாரகைகள் கொண்ட மாலை அதில் சந்திர வதனமாய் உன் திருமுகம்

சூர்யன் மேற்கில் உதிக்கும் அதிசயம் தெற்கில் நீ வந்து பிறந்த நேரம்

முன்னொரு தெய்வமின்றி முதலான முழுபொருளே!

பின்னொரு பிறவியின்றி வேரறுக்கும் வேந்தனே!

கண்ணொரு புலனிருந்தும் காணாமற் விட்டேனே!

இன்னொருமுறை அவதரித் தருள்வாய் ஞானக்கொழுந்தே
ravi said…
ஆத்மா ராம ஆனந்த ரமண

அச்சுத கேஷவ ஹரி நாராயண

பவ பய ஹரண வந்தித சரணா

ரகு குல பூஷன ராஜீவ லோசன

ஆதி நாராயண ஆனந்த ஷயன

சச்சிதானந்த ஸ்ரீ சத்ய நாராயண🙏
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 161🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
ஆஞ்சநேயர் சீதா திருக்கல்யாணத்தை சீதையே கேட்டு மகிழும்படி சொல்ல ஆரம்பித்தார் --

ராமன் ஆஞ்சநேயர் ஆரம்பிக்கும் முன்னமேயே மானசீகமாக இலங்கை வந்து சீதையின் மடியில் தவழ ஆரம்பித்தான்

-- அனுமனின் சொல்வன்மையை கேட்டு மகிழ, சீதையின் திருமணத்தை அனுமான் சொல்ல அந்த பெண்மான் கேட்க,

சீதையுடன் கேட்க யார் எல்லாம் தேவ லோகத்தில் இருந்து வந்தார்கள் தெரியுமா?

துவஜ ஆரோகணம் (கருட கொடி ஏற்றுதல்) சமயத்தில் ஒவ்வொருவராக வருவதைப்போல வர ஆரம்பித்தனர் --

முதலில் தம்பதி சமேதராக, விநாயகர், முருகன், ஐயப்பன் சூழ விடையேறி காமேஸ்வரனும் காமேஸ்வரியும் இறங்கி வந்தனர்,

அதற்கு பிறகு பிரம்மாவும் சரஸ்வதியும் ஹம்ச வாகனத்தில் இறங்கி வந்தனர்,

விஷ்ணுவும், மகாலட்சுமியும் கருட வாகனத்தில் இறங்கி வந்தனர்,

பிறகு இந்திரனும் இந்திராணியும் ஐராவதத்தில், வாஜ்ராயுதத்தை தரித்துக்கொண்டு இறங்கி வந்தனர் -

அதற்குப்பிறகு, அக்னி பகவான் தனது மேஷ (ஆட்டு) வாகனத்தில் ஏறி சிர்கு, சரம் முதலியவைகளை தரித்துக்கொண்டு, தனது துணைவியான ஸ்வாகா தேவியுடன் இறங்கினார்;

வாயு பகவான் தன் கருப்பு மான் வாகனத்தில் தனது துணைவியான ஸதாகதியுடன், கொடியைப்பிடித்துக்கொண்டு இறங்கி வந்தார்;

வருணன் தன் மீன் வாகனத்தில் ஏறிக்கொண்டு தன் மனைவியான பார்கவி தேவியுடன் பாசத்தைப்பிடித்துக்கொண்டு இறங்கி வந்தார்;

குபேரன் தனது குதிரை வாகனத்தில் ஏறிக்கொண்டு, தாமரையை கையில் பற்றி, சம்பது என்னும் மனைவியுடன் இறங்கி வந்தார்;

யமன் தனது மஹிஷ வாகனத்தில் ஏறிக்கொண்டு, எம பாசத்தை கையில் பிடித்துக்கொண்டு , தனது மனைவியுடன் இறங்கி வந்தார் ....

இங்கே எமன் வந்தது யார் உயிரையும் எடுக்க அல்ல,

எல்லோரையும் சிரஞ்சிவியாக இருக்கவேண்டி ஆசிர்வதிக்க ----

எல்லோரும் அசோகவனத்திலே ஆஞ்சநேயர் உருகி வர்ணிக்கும் சீதா கல்யாணத்தை கேட்க முதல் வரிசையில் அமர்ந்தனர்.

ஆஞ்சநேயர் ராமனையும் சீதாவையும் மனதில் வணங்கிக்கொண்டு அங்கே வந்திருந்த எல்லா தேவர்களுக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு,

ஜாம்பவானையும், சம்பாதியையும் மனதில் நினைத்துக்
கொண்டு

திருமணத்தை வர்ணிக்க ஆரம்பித்தார் ------

🙏🙏🙏
ravi said…
**தாய் இருந்தால் துன்பம் இல்லை,* *தந்தை இருந்தால் தவிப்பு இல்லை,* *தங்கை இருந்தால் தனிமை இல்லை,* *தாத்தா இருந்தால் தயக்கம் இல்லை,* *பாட்டி இருந்தால் பயம் இல்லை,* *அக்கா இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்,* **அண்ணன் இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு,* *தம்பி இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்,* *மனைவி இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்,* *மகள் இருந்தால் மழலை பருவம் தெரியும்,* *மகன் இருந்தால் மான்புமிக்க வம்சம் நிலைக்கும்,* *மண்ணில் இறக்க போகிறோமே தவிர,* *மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை,* *வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம்,* *குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்,* *அதை சொர்க்கமாக்குவதும்,* *நரகமாக்குவதும்* *நம் கையில் தான் உள்ளது* .
ravi said…
*குபேரனுக்கு அருள்புரிந்த நம் ஈசன்*

பஞ்சமுகேஸ்வரர் ஆலயம். திருவானைக்காவலில் உள்ள இந்த ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது.

பஞ்சமுக ஈஸ்வரன்

வலது புறம் உள்ள இறைவனின் சன்னிதியில் கருவறையில் கிழக்கு திசை நோக்கி அருள்புரிகிறார் பஞ்சமுகேஸ்வரர். *ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார் இறைவன்*.

ஆன்மீக தகவல்களை.. தாங்கள் அறிந்து கொள்ள... நம் குழுவில் இணைந்து இருக்க வேண்டுகிறேன்.
👇👇👇👇
https://youtu.be/EHuGbTwLQrA

சத்தியோஜாதம், அகோரம், தத்புரு‌ஷம், வர்மதேவம், ஈசானம், என்பனவே அந்த ஐந்து முகங்கள்.

நான்முகனுக்கு இருப்பது போல் சிவலிங்கத்தின் நான்கு புறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒரு முகமாக கணக்கிடப்பட்டு ஐந்து முகங்களைக் கொண்ட பஞ்சமுகேஸ்வரர் என இந்த இறைவன் அழைக்கப்படுகிறார். தாமரை பீடத்தில் அமர்ந்துஅருள்பாலிக்கிறார் இறைவன்.

எதிரே தனி சன்னிதியில் 90 டிகிரி நேர்க் கோணத்தில் இறைவி திரிபுர சுந்தரியின் சன்னிதி உள்ளது. இறைவனும் இறைவியும் எதிர் எதிர் சன்னிதிகளில் அருள்பாலிப்பதால் இருவரையும் நாம் ஒரு சேர தரிசிக்க முடியும். இந்த அமைப்பு அபூர்வமானது என்கிறார்கள் பக்தர்கள். 

இங்கு அம்மனுக்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் இரண்டு கரங்களில் சங்குகளை சுமந்தபடியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரையுடனும் காட்சி தருகிறாள்.

ஆன்மீக தகவல்களை.. தாங்கள் அறிந்து கொள்ள... நம் குழுவில் இணைந்து இருக்க வேண்டுகிறேன்.
👇👇👇👇
https://youtu.be/EHuGbTwLQrA

இறைவனையும் இறைவியையும் தரிசித்து விட்டு திரும்பி நடந்து சிறப்பு மண்டபத்தினுள் நுழைந்து மகாமண்டபத்தில் நுழைந்தால் ஆலயத்தின் பிரதான இறைவனான ராஜராஜேஸ்வரரை நாம் தரிசிக்கலாம்.

எதிரே நந்தியும், பலிபீடமும் இருக்க அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ராஜராஜேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வடதிசையில் இறைவி ராஜ ராஜேஸ்வரியின் சன்னிதி உள்ளது.

விச்ரவஸ்ஸீக்கு ராவணன், குபேரன் என்று இரு புத்திரர்கள். இருவரின் தாய்மார்கள் வெவ்வேறானவர்கள். இருவருக்கும் ஆரம்பம் முதலே பகை உண்டாகி, போகப் போக அந்தப் பகை வளர்ந்து இருவரும் யுத்தம் புரியும் அளவிற்கு அது வளர்ந்தது.

யுத்தமும் நடந்தது. குபேரனின் அனைத்து சொத்துகளும், ஐஸ்வரியங்களும, புஷ்பக விமானமும் ராவணனால் அபகரிக்கப்பட்டன.

ஆன்மீக தகவல்களை.. தாங்கள் அறிந்து கொள்ள... நம் குழுவில் இணைந்து இருக்க வேண்டுகிறேன்.
👇👇👇👇
https://youtu.be/EHuGbTwLQrA

மனம் உடைந்த குபேரன் மகாதேவரை ஆராதிக்க அப்போது ஒரு அசரீரி ஒலித்தது.

‘மகாவிஷ்ணுவானவர் தசரதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்து, ராவணனை யுத்தத்தில் சந்திப்பார். அப்போது ராவணன் தோற்கடிக்கப்
படுவான். உன்னிடமிருந்து பறிபோன புஷ்பக விமானம் உன்னை அப்போது அடையும்’ என்றது அக்குரல்.

பின் குபேரன் காவிரியின் தென் கரையில் ஒரு ஆலயம் அமைத்து, இறைவனை அங்கு பிரதிஷ்டை செய்து அவருக்கு ராஜராஜேஸ்வரர் என்று பெயரிட்டு ஆராதிக்கத் தொடங்கினான். ராஜராஜேஸ்வரர் அருளால், குபேரன் இழந்த தன் பெருமைகளையும், பொருளையும் மீண்டும் பெற்றான்.

இறைவனின் பின் புறம் நான்கு வேதங்கள் சாலிக்கிராமம் வடிவில் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும்.

ஆலயத்தின் தலவிருட்சம் மகாவில்வம். அதன் ஒரே இலையில் 12 முதல் 16 இதழ்கள் இருப்பது இந்த ஆலயத்தில் காணப்படும் அற்புதமான அதிசயம்.

திருச்சி மாவட்டம், திருவானைக் காவல் கடைவீதியிலிருந்து 1 கி.மீ கிழக்கில் உள்ளது இந்த ஆலயம்.

👇👇👇👇
https://youtu.be/EHuGbTwLQrA
ravi said…
குழந்தையோ கோமேதகமோ
மோதகமோ 🐘

முத்துக்கள் அணிவகுக்கும் ஆனந்த லஹரியோ🐘

கல்யாண ரூபமோ உள்ளம் மழலையோ உதடுகள் பவளம் பெற்ற குழவிகளோ 🐘

மலையென வரும் துயர்கள்

மழை என பெய்யும் கருணையால் காணாமல் போய் விடுமோ 🐘

கற்பகமோ கற்கண்டோ 🐘

அமிர்த கடலோ பேரானந்தம் ஊற்றடுக்கும் அழியா கிணரோ 🐘

மஞ்சளில் செய்தாலும்

மண்டையில் இருக்கும் மண்ணில் செய்தாலும்

விண்ணில் நிறைந்தவன்
வீடு பேறு தருவான் அன்றோ 🐘

வேழ முகன்
வேதம் பாதம் வணங்கும் பாலகன் 🐘

தந்தம் உடைத்து பாரதம் தந்தவன் 🐘

எதையும் தருவதில் வித்தகன் அன்றோ 🐘

முப்புரம் எரித்தவன் முன் நின்று மாங்கனி பெற்றவன்
🐘

அச்சு உடைத்து தோப்புக்கரணம் பெற்றவன் 🐘

அச்சுதன் மனம் நிறைந்தவன் ... 🐘

தம்பியின் மணம் தடையின்றி வரை இன்றி அருளியவன் 🐘

காவேரி ஓட குருமுனி குட்டு பட்டவன் ... 🐘

ரங்கன் உறங்க காவேரி கரை பக்கம் அவன் தங்க
தன் அங்கம் வலிக்க ஓடியவன் 🐘

சொல்ல சொல்ல இனிப்பவன் 🐘

துயர் தன் நிழலையும் அழிப்பவன் 🐘

தும்பிக்கையான் தான் தனை நம்பிக்கை கொண்டு வழிபடுவோர் 🐘

அம்பிகையால் அனைத்தும் பெறுபவர் அன்றோ 🐘🐘🐘🐘🐘🐘🐘
ravi said…
Most respected,

We have created e-book of Shiv lings of Kashi in Marathi which was religiously released after pradosh Pooja.

Please download and read.

Please forward this message in Marathi and e-book to all your contacts

Please ask them to further send to their contacts

May Lord Shiva bless you always

PS VENKATARAMANAN
KASHI
ravi said…
Shriram

19th SEPTEMBER

*You can Transcend Time by Belonging to God*

Our life is under continuous development. Compared to today we were behind yesterday, and tomorrow we shall be ahead of today. Even if this is true, if we don’t do today what we are expected to do, we may slide backwards tomorrow. Our next life is the result of the present one. So if we are good today, our next birth may be good, according to the saying, ‘the last dominant desire at death determines the next birth.’

Time has three dimensions; past, present and future. The past, which is already gone, will never return; you should never worry about it. When someone loses a near relative, we console him by saying, ‘whatever has happened is a thing of past; what can you do? What is the use of grieving over it?’ You should yourself follow your own advice; by conscious deliberation, you can forget past events. Similarly, you should not worry about the future, which is unknown. After doing today’s duty, you should remain composed, remembering that,’ whatever has to happen will happen’. Don’t grieve over the past and don’t worry about the future. At present, we cannot transcend time; and without transcending time, we can never attain God. Incidents are continuously unfolding in the world, and our anguish is ever there! This anguish is due to our shortcomings and incompleteness.

God is very happy when a human being is born, because He desires everyone to know the Ultimate Reality, and this is possible only in human life. Everyone should remember that it is possible for him to comprehend God. For this, our mind should develop the feeling, desire, urge, anguish for God. What is the use of very good cooking, if you forget to put in salt? If you continue to feel or maintain an attitude of your separate identity, how can you claim to be a good devotee? There are nine ways of devotion. If you follow anyone of them single-mindedly, the remaining eight get automatically included. That alone is true listening where, whatever is understood during listening, is brought into practice in day-to-day life. That alone can be called true _vedanta_, which gets assimilated in our nature and is practiced in everyday conduct, and it is the real essence of _vedanta_, to do our duty with remembrance of God throughout.

* * * * *
ravi said…
லிங்காஷ்டகம் - நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

லிங்காஷ்டகம் 1
சிவா, உன்னை மறந்தவர் எவர் வாழ்ந்தார்? உன்னை நினைத்தவர் எவர் தாழ்ந்தார்? உலகமறிந்த உண்மை இது. ஆதி அந்தமில்லாத முழு முதற் கடவுளே, மகாதேவா, அடி முடி காண முடியாத விஸ்வ பிரமமே உன்னை ஸ்லோகங்களில் பாடித் தொழுதவர்கள் எண்ணற்றவர்கள்.. எண்ணிப்பார்க்கக் கூட முடியாத அளவுக்கு உன் பக்தர்கள் உலகெங்கும் உள்ளார்கள். ஆதி சங்கரரின் அற்புதமான ஒரு எட்டு ஸ்லோகம் உன்னை பற்றி அவர் பாடியது என்னை ஈர்த்தது. அதைப்பற்றி கொஞ்சம் சொல்ல ரொம்ப ஆவல்.

ravi said…
மஹாலிங்கமே , உன்னை எட்டு சுலோகங்களில் பாடியதற்கு பெயர் லிங்காஷ்டகம். எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் கேட்கக் கேட்க அலுக்கவில்லை. பாடப் பாட நா மணக்கிறதே தவிர வெறுக்க வில்லையே. என்ன ரகசியம் இதில்?

சிவனை விஷ்ணுவும் பிரம்மாவும் வணங்குகிறார்கள். விஷ்ணுவை சிவனும் பிரம்மாவும் கோடி கோடி தேவர்களும் வணங்குகிறார்கள். இவ்வாறு ஒருவரை ஒருவர் வணங்குவதால் யாரும் யாருக்கும் இளைத்தவர்களோ சளைத்தவர்களோ இல்லை என்றும் பொருள் கொண்டாலும், மகாதேவா , நீ ஒன்றே சாஸ்வதம், வேண்டுவோர் வேண்டிய வண்ணம் பலராக, பலவாக, நிறைவாகத் தோன்றுகிறாய் என்று புரிந்து நமஸ்காரம் பண்ணுகிறேனே .நீ துக்க நாசனம் பல பிறவிகளில் சேர்த்து வைத்துக்கொண்ட , சர்வ பாப நாசனம் பண்ணுபவனல்லவா. ஆத்ம ஒளி தரும் ஜாஜ்வல்ய லிங்கமல்லவா. லிங்கமென்றாலே எனக்கு என்ன தோன்றுகிறது? . அருவத்தை ஏதோ உருத்தெரியாத ஸ்வரூபமாகக் காட்டுவது என்று. ஆனால் பார்க்கும்போதே மனத்தை காந்தமாக ஈர்க்கிறதே. இனம் புரியாத பக்தி, பரவசம், உள்ளே உலவுகிறதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வெளியே சொல்லத்தெரியவில்லையே.பொங்கி வரும் நன்றிபபெருக்கால் நான் சொல்ல முடிந்தது ''சிவ சிவா'' ஒன்றே தான். இது தான் என் ஜபம். இதைச் சொன்னாலேயே கேட்டதெல்லாம் கொடுப்பவனாச்ச்சே நீ. எத்தனை ராக்ஷசர்களும் கொடியவர்களும் கூட உன்னை வேண்டினதும் அருள் புரிந்தவனல்லவா. .

ravi said…
லிங்காஷ்டகம் மொத்தத்தில் சின்ன சின்னதாக ஒரு எட்டு குட்டி ஸ்லோகங்கள். அவற்றுள் அடக்கம் இந்த பிரபஞ்சமே என்கிற மாதிரி எளிதில் புரிகிற வார்த்தைகள். இதை படித்தோ புரிந்து கொள்ளவோ ஸமஸ்க்ரிதம் விசேஷமாக தெரியவேண்டியதே இல்லை. அன்றாட வாழ்க்கையில் காதில் விழும் சில வடமொழிச் சொற்கள் புரிந்தால் அதுவே போதும்.

எட்டு அஷ்டகத்தில் முதல் ரெண்டு ஸ்லோகம் கீழே தருகிறேன். மற்றவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் அறியலாம்.

ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गं निर्मलभासितशोभितलिङ्गम् ।
जन्मजदुःखविनाशकलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥1॥

பிரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம் நிர்மல பாசித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ravi said…
brahma muraari suraarchitha lingam nirmala bhaasita shobhita lingam
janmaja duhkha vinaashaka lingam tatpranamaami sadaasiva lingam ( 1 )

பிரம்மனும் விஷ்ணுவும் தேவர்களும் மனிதர்களும் வணங்குமே லிங்கமே,எண்ணுவோர் எண்ணமாய் விகசிக்கும் நிம்ர்மலமான ச்வயம்ப்ரகாசமான லிங்கமே பிறப்பறுக்கும் பிஞ்ஞகா ஜரை மூப்பு துக்கம் இவற்றின் துன்பத்திலிருந்தெல்லாம் விடுவிக்கும் விஸ்வநாதா நினைத்தாலே இனிக்கும் நிர்மலா சதாசிவ லிங்கமே -- உனக்கு நமஸ்காரம்

ravi said…
देवमुनिप्रवरार्चितलिङ्गं कामदहं करुणाकरलिङ्गम् ।
रावणदर्पविनाशनलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥२॥

Devamuni Pravaraarchita Lingam Kaama Dahana Karunaakara Lingam
Ravana Darpa Vinaasaha Lingam Tatpranamaami Sadaashiva Lingam (2)

தேவமுனி ப்ரவரார்சித லிங்கம் காமதஹன கருணாகர லிங்கம் |
ராவண தர்ப வினாஶன லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 2 ||

குளிர்ந்த பனிமலை. எங்கும் நிசப்தம் காற்றின் அசைவைத்தவிர. குளிரையும் பணியில் நனைந்து உடலைத் துளைக்கும் காற்றையும் லட்சியம் செய்யாத பொன்னிற மேனி. மலையின் மேல் ஒரு சிலையாக அமர்ந்து மனமே பிரபஞ்சமாக பிரபஞ்சமே நெஞ்சாக வியாபித்த ஏகாந்த ஒரு நிலையில் தியானம். முகத்தில் சாந்தம். அக்னிஸ்வரூபம் ஒரு பனிமலை மேல் உட்கார்ந்திருந்தால், அதையே தெற்கே அண்ணாமலை தீபம் என்று வணங்குகிறோமோ? செஞ்சடையான ஜடாமுடியே கிரீடம். அதன் மேல் ஒரு ஓரத்தில் அழகாக வளைந்த மூன்றாம் பிறைச்சந்திரன். மறுபுறம் அதற்கேற்றாற்போல் வெள்ளியை உருக்கி வார்த்தது போல் ஒரு பய பக்தியோடு சிரசிலிருந்து பதவிசாக வழியும் கங்கை புண்ணிய நதி. கங்காதரன். கழுத்தை அணைத்தாற்போல இது வரை யாரும் அணியாத ஒரு ஆபரணம். நாகாபரணம். அதை ஒட்டி ஜடாமுடியில் பிணைத்த அதே போன்ற ருத்ராக்ஷ மணி மாலை.

ஆகாசத்திலிருந்து பூமியை இணைப்பது போன்ற பால் வெண்ணீறு பூசிய பரந்த நெற்றி கொண்ட இந்த திரு உருவத்தின் இடையில் புலித்தோல். நெற்றி நடுவில் மூடிய முக்கண். திறந்தால் பனி மலையே அக்னியால் அழிந்துவிடும் அல்லவா?. ஒரு கையில் சக்திவாய்ந்த ஒரு திரிசூலம். பனி ச்சிகரத்துக்கு அழகூட்டும் அமர்ந்த திருக்கோலத்தில் ஒரு கால் மடித்து ஒரு கால் கீழே. இன்னும் வர்ணித்துக்கொண்டே போகலாமே உன் திருவுருவை.

ஹே, மகாதேவா, உன் பெயரே விளக்குகிறதே, நீ தேவர்களுக்கெல்லாம் தலைவன், முதல்வன், பெரியவர் களுக்குள்ளேயே ஒருவரை நாமெல்லாம் மகா பெரியவா என்று போற்றி வணங்கு கிறோமே அதே போல் தேவர்களுக்குள்ளேயே மிகப் பெரிய மகத்தான பூஜிக்கத் தகுந்த தேவனே, நீ மகா தேவன் என்பதால் தான் தேவர்களும் முனீச்வரர்களும் உன்னை வணங்குகிறார்கள். நீ யார்?. தவத்தில் முதிர்ந்த, சிவந்த, பரம சிவன். உனது தவத்தைக் கலைக்க முனைந்த அந்த மன்மதனை நீ ஒன்றும் செய்யவில்லை. உன்னை காமத்தால் வெற்றி கொள்ளவந்த மன்மதன் மேல் நெற்றிக்கண் பார்வை சற்றே பட்டதும் எரிந்து போனான்.

அசுரனாக இருந்தாலும் உன் மீது அளவில்லா பக்தி கொண்டவன் ராவணன். பத்து தலை இருந்தாலும் அவனுக்கு அது அத்தனை யிலும் அகம்பாவம் ''தலைக்கேறி'' விட்டதால் உன்னையே அசைக்கப் பார்த்தான். பலசாலி யாயிற்றே. உன்னிடமே வரம் பெற்றவன் அல்லவா? கயிலாயத்தையே கையால் தூக்க முயற்சித்த அவன் கர்வம், அவன் தற்பெருமை அனைத்தையும் நீ உன் கால் கட்டைவிரலில் ஒரு ''அழுத்து'' அழுத்தி போக்கினவனாயிற்றே மஹா தேவா, சதாசிவா, உன்னை நெஞ்சிலிருத்தி நாவினிக்க மனம் மணக்க போற்றுகிறேன். உன்னை ஒன்றும் கேட்க மாட்டேன். எனக்கு என்ன வேண்டும் என்று என்னைக்காட்டிலும் நீ யல்லவோ நன்றாக உணர்ந்தவன்.ன வேண்டும் என்று என்னைக்காட்டிலும் நீயல்லவோ உணர்ந்தவன்.

ஒரு தடவை மதுரை போயிருந்தேன். பல வருஷங்களுக்கு முன்பு. மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு வாசலில் எதிரே ஒரு அழகிய மண்டபம் உள்ளது. அதில் சிற்பத்தை தேடுவோர்கள் அங்கிருக்கும் தகரம், இரும்பு, பிளாஸ்டிக், தட்டுமுட்டு சாமான்களை மெதுவாக கண்களால் நகற்றி நாயக்கர் மன்னர்கள் நமக்கு சொத்தாக விட்டுப்போன அருமையான கற் தூண் சிற்பங்களை பார்க்க முயற்சிக்கலாம். முயற்சி வீண் போகாது. எனக்கு போகவில்லை. ஒரு ராவணன் கிடைத்தான். அவனை இணைத்திருக்கிறேன். அற்புதமான ராவணன் கைலாய மலையை பார்வதி பரமேஸ்வரர்களோடு தூங்குகிறான். அது அவனுக்கு கனமாக தோன்றவில்லை. இப்போது வியாபாரிகள், பிளாஸ்டிக், அலுமினியம், தகரம், என்று பல உலோக தட்டு முட்டு சாமான்களை அவன் மேல் ஒட்டி வைத்து துன்புறுத்துவது அவனுக்கு மட்டும் அல்ல பார்த்த எனக்கும் பிடிக்க வில்லை. என்ன செய்வது. கவனிக்க வேண்டியவர்கள் கண்ணை மூடிக்கொண்டால் என்ன பண்ணமுடியும். காசு கண்ணை மறைக்கிறது...அவர்களுக்கு, அவர்களால் ராவணன் நமக்கு மறைந்து போகிறான்.
ravi said…
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*BHAGAVAD GITA AS IT IS*

*Title : Contents of the Gita Summarized*

*Chapter 2 Sloka 1*

👉 *BG Sloka 2.1*
सञ्जय उवाच
तं तथा कृपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणम् ।
विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः ॥ १ ॥

sañjaya uvāca
taṁ tathā kṛpayāviṣṭam
aśru-pūrṇākulekṣaṇam
viṣīdantam idaṁ vākyam
uvāca madhusūdanaḥ

👉 *Synonyms*
sañjayaḥ uvāca — Sañjaya said; tam — unto Arjuna; tathā — thus; kṛpayā — by compassion; āviṣṭam — overwhelmed; aśru-pūrṇa-ākula — full of tears; īkṣaṇam — eyes; viṣīdantam — lamenting; idam — these; vākyam — words; uvāca — said; madhu-sūdanaḥ — the killer of Madhu.

👉 *Translation*
Sañjaya said: Seeing Arjuna full of compassion, his mind depressed, his eyes full of tears, Madhusūdana, Kṛṣṇa, spoke the following words.

👉 *Purport*
Material compassion, lamentation and tears are all signs of ignorance of the real self. Compassion for the eternal soul is self-realization. The word “Madhusūdana” is significant in this verse. Lord Kṛṣṇa killed the demon Madhu, and now Arjuna wanted Kṛṣṇa to kill the demon of misunderstanding that had overtaken him in the discharge of his duty. No one knows where compassion should be applied. Compassion for the dress of a drowning man is senseless. A man fallen in the ocean of nescience cannot be saved simply by rescuing his outward dress – the gross material body. One who does not know this and laments for the outward dress is called a śūdra, or one who laments unnecessarily. Arjuna was a kṣatriya, and this conduct was not expected from him. Lord Kṛṣṇa, however, can dissipate the lamentation of the ignorant man, and for this purpose the Bhagavad-gītā was sung by Him. This chapter instructs us in self-realization by an analytical study of the material body and the spirit soul, as explained by the supreme authority, Lord Śrī Kṛṣṇa. This realization is possible when one works without attachment to fruitive results and is situated in the fixed conception of the real self.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ravi said…
யானையின் எடையை எப்படி அறிவது ? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர் - ஒரு குட்டி கதை!
அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.
யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.
அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.
எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.
எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.
ravi said…
மன்மதன் வழிபட்ட காமநாதீஸ்வரர்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில். வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள நான்காவது திருத்தலமான இது, வாயுலிங்க தலமாகும். இந்த ஆலயம் சிவத்தலமாக மட்டுமின்றி, அஷ்ட பைரவர்கள் வீற்றிருப்பதால், பைரவத் தலமாகவும் திகழ்கிறது.

ஆறு அகழிகளால் சூழப்பட்டிருப்பதால், இந்த ஊர் ‘ஆறகளூர்’ எனப்பெயர் பெற்றது. ஆறும்(நதியும்), அகழியும் உள்ள ஊர் என்பதாலும் ‘ஆறகளூர்’ எனப் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்த தலம் ‘ஆறை நகர்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மூலவர் காமநாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் லிங்கம், வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறது தல புராணம். அம்பாளின் திருநாமம் பெரியநாயகி என்பதாகும்.
👇👇👇👇
https://youtu.be/EHuGbTwLQrA

மன்மதன் வழிபட்ட தலம்

இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. இந்த மரத்தடியில் அமர்ந்துதான் இத்தல இறைவனை மன்மதன் வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது. முருகப்பெருமானின் அவதாரத்திற்கு முன்பாக, அதாவது மன்மதனை சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் தகனம் செய்வதற்கு முன்பாகவே, மன்மதன் தனது மனைவி ரதியுடன் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுச் சென்றுள்ளான் என்று கூறப்படுகிறது. மன்மதன் வழிபட்டதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘காமநாதீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. 
👇👇👇👇
https://youtu.be/EHuGbTwLQrA

காமம் என்றால் விருப்பம், ஆசை என்ற பொருளும் உண்டு. தமது பக்தர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி தரும் பெருமான் என்பதாலும் ‘காமநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். 

காமநாதீஸ்வரர் கோவிலில் அஷ்ட பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீ‌ஷண பைரவர், கால பைரவர் ஆகியோர் எட்டு திசைகளில் இருந்து அருள்புரிகிறார்கள். இவர்களை வழிபட்டால் நம்முடைய பயம் நீங்கும், நமது எதிரிகள் பயந்து விலகுவர் என்பது நம்பிக்கை. மாதந்தோறும், தேய்பிறை அஷ்டமி நாளில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடக்கிறது. இந்த பூஜையில் கலந்துகொண்டு பைரவரை வழிபாடு செய்தால் திருமணத்தடை, நவக்கிரக தோ‌ஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்கும் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமி பூஜையின்போது காலபைரவருக்கு தேன், பழம், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். 

பின்னர் வெள்ளிகவசம், சந்தனகாப்பு, புஷ்ப அலங்காரம் உள்ளிட்ட சர்வ சிறப்பு அலங்காரங்களுடன் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவு 12 மணி அளவில் காலபைரவர் உள்ளிட்ட எட்டு பைரவர்களுக்கும் பூஜைகள் நடக்கும்.

சேலம்–கடலூர் நெடுஞ்சாலையில் தலைவாசலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. சேலத்தில் இருந்து ஆத்தூர் 52 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கிருந்து ஆறகளூருக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேய்பிறை அஷ்டமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஆறகளூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
👇👇👇👇
https://youtu.be/EHuGbTwLQrA
ravi said…
20-09-2023

*நாளும் ஒரு திருமுறை நம் வாயால் பாடுவோம்*

தலம் : திருவாரூர்

இரண்டாம் திருமுறை

பிறவியால் வருவன கேடுள வாதலாற் பெரிய வின்பத்
துறவியார்க் கல்லது துன்பநீங் காதெனத் தூங்கி னாயே
மறவனீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

- *திருஞானசம்பந்தர் சுவாமிகள்*

பொழிப்புரை:

நெஞ்சே! பிறவியால் கேடுகளே விளையும். பெரிய இன்பத்தை அடைய விரும்பும் துறவியர்க்கு அல்லது துன்பம் நீங்காது என மனம் சோர்கின்றாய். இறைவனை ஒருபோதும் மறவாதே! பெரியோர் கூறிய நல்வழிகளையே நீ பின்பற்றி வாழ்கின்றாய், புனிதமான கங்கை தங்கிய சடையினனாகிய அறவாழி அந்தணன் ஆரூர் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!

குறிப்புரை:

அவமிலா நெஞ்சம் (பெரிய. திருஞா.518) உயிர்க்குப் பிறத்தலும் இறத்தலும் பெருந்துன்பங்கள். மற்றையெல்லாத் துன்பங்களும் அவற்றிடை விளைவன. இறத்தலும் பிறத்தலால் உண்டாவதே, `தோற்றம் உண்டேல் மரணம் உண்டு`(தி.7 பா,63)`பிறந்தால் பிணிப்பட வாய்ந்தசைந்துடலம் புகுந்து நின்று இறக்குமாறுளதே இழித்தேன் பிறப்பினை நான்` (தி.4 ப.20 பா.8) `கெடுவது இப்பிறவி சீசீ` (தி.4 ப.76 பா.10). துறவு வீடு பேரின்பத்தைக் கொடுப்பது. அத்துறவு பிறவியால் விளையும் கேடுகளை உணர்ந்தவர்க்கே உண்டாகும். ஆதலின், பிறவியால் கேடு வருவன உள. ஆதலின் பெரிய இன்பத் துறவியாரானார் என்றருளினார். துறவியார்க்கே துன்பம் நீங்கும். துறவாதார்க்குத் துன்பம் நீங்காது என்று சோர்ந்தது நெஞ்சு. தூங்குதல் - சோர்தல். நெஞ்சே! துன்பம் நீங்காது எனச் சோர்ந்தாய். சோர்வு வேண்டா. நீ ஆரூரை மறவல் (- மறவாதே). மார்க்கமே நண்ணினாய் - சன்மார்க்கத்தினையே சேர்ந்தாய். `மார்க்கர்கண்ட நூலோதி வீடு காதலிப்பவர்` (சித்தியார்.) என் புழிப்போல நின்றது. `தயாமூலதன்மம்` என்னும் தத்துவத்தின் வழி `நின்று தாழ்ந்தோர்க்கெல்லாம் நலங்கொடுக்கும் நம்பி` (தி.6 ப.20 பா.6). யாயிருத்தலாலும் `தயாமூலதன்மவழி எனக்கு நல்கி மனந்திருத்தும் மழபாடி வயிரத்தூண்` என்றதில் அடியார்க்கு நல்கும் `தயாமூலதன் மவழி`யுடையனாதலாலும் அறவாழியந்தணன் சிவனே. அறப் பெருஞ்செல்வி சிவையே. அவன் கல்லாற் கீழிருந்து உரைத்தருளிய அறத்தின் ஏகதேசமே ஏனையோர்பால் இருப்பது. `பிறவி அறுப்பீர்காள்`. `அறவனாரூரை மறவாதேத்துமின் துறவியாகுமே` என்றதை (தி.1 ப.91 பா.2). மறவல் நெஞ்சமே `(தி.1 ப.90 பா.8). என்பதனோடு ஒப்பு நோக்கியுணர்க. மறவன் என்று பிரிப்பது மறமன்றி அறமாகாது.

*🙏🏻🙏🏻🙏🏻*
*சிவன் கழலே சிந்தையாம்*
*கடையேன்*
*குமரேசன் இராஜசிம்மன்*

👇👇👇👇👇
http://m.youtube.com/@esanaithedi
ravi said…
🌹🌺 *நாம் செய்யும் வேலைகள் எதுவாயினும், இறைவன் சிந்தனையோடு செய்தால் அவ்வேலை சிறப்பாகவும், வெற்றியாகவும், மனநிறைவாகவும் அமையும் என்பதை .....பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------
🌹🌺கங்கைக் கரை. குகன் வழக்கம்போல படகைத் தொட்டுக் கும்பிட்டு, ஆற்று நீரில் காலை அலம்பிக்கொண்டு படகில் ஏறினான். ராமன், சீதை, லட்சுமணனை சுமந்து சென்ற, புனிதப் படகல்லவா அது!
படகில் அன்றைய தினம் நாலைந்த புதிய நபர்கள் வந்தார்கள். அவர்களில் ஓர் இளைஞன், குகனிடம் பேச்சுக் கொடுத்தான்.

🌺‘‘அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்டு கொண்டிருக்கின்றன. நீ என்னடாவென்றால் இங்கே படகில் துடுப்பு இழுத்துக் கொண்டிருக்கிறாயே! ஏன், உன்னை ராமர் அழைக்கவில்லையா? நீ அந்த வைபவத்தில் கலந்துகொள்ளத் தகுதியில்லாதவனா?’’ என்றான்.

🌺குகன் அமைதியாகச் சொன்னான். ‘‘ஐயா! ராமபிரானுக்கு என் நினைவு வராதிருக்குமா? ‘உன்னோடு சேர்த்து ஐவரானோம்’ என்று ‘‘ஐயா!...என்னைத் தன்னுடைய நான்காவது தம்பியாக பாவித்தாரே… அவருக்கா என்னை மறக்கும்?’’
நெகிழ்ச்சியுடன் சொன்னான்.
‘‘அப்படியென்றால் ஏன் உனக்கு அழைப்பு விடுக்கவில்லை?’’

🌺‘‘பொதுவாக ஒரு திருமணம், ஒரு விசேஷம் என்றால் நெருங்கினவர்களுக்கெல்லாம் ஒரு சில பொறுப்புகளைக் கொடுத்து நிறைவேற்றச் சொல்வார்கள் இல்லையா, அதுபோல எனக்கும் ராமர் பட்டாபிஷேகத்துக்கு வரும் மக்களை
அக்கரையில் இருந்து படகில் அழைத்துவரும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

🌺திருமணத்தின்போது இதுபோன்ற பொறுப்பை நிர்வகிக்கும் ஒருவரால் மணமேடைக்குச் சென்று திருமணத்தைப் பார்க்க முடியாத நிலைமை ஏற்படும்.
அதுபோலத்தான் எனக்கும்.

🌺நான் மானசீகமாக ராமர் பட்டாபிஷேகத்தைப் பார்க்கிறேன். என் ராமர் என்னைப் பார்க்கிறார். நட்புடன் புன்னகைக்கிறார். ‘சாப்பிட்டு விட்டு வெகுமதிகளை வாங்கிச் செல்’ என்று பாசத்துடன் சைகை செய்கிறார். அந்த நிறைவை நான் இங்கேயே பெற்றுவிடுகிறேன். வேறு என்ன
வேண்டும் எனக்கு?’’

🌺நாம் செய்யும் வேலைகள் எதுவாயினும், இறைவன் சிந்தனையோடு செய்தால் அவ்வேலை சிறப்பாகவும், வெற்றியாகவும், மனநிறைவாகவும் அமையும் என கூறினார் குகன்

🌺அந்த இளைஞன் மட்டுமின்றி, பயணித்த அனைவருக்குமே குகனுடைய பதிலால்
கண்களில் நீர் திரண்டது.

🌺🌹ஜெய் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம💐🌹

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
Shriram

20th SEPTEMBER

*Remembering _Prapancha_ Causes Sorrow*

Everyone undergoes the experience that whatever and whoever you treated as yours and loved with attachment, ultimately failed to give real, genuine happiness. Therefore we should pray and ask Rama ,’this whole world is working on Your will alone. I am a petty creature, Rama, do You really find me to be a burden on You? Be kind, and forgive me for my innumerable unjust acts. I have heard stories of Your protection to those who surrender to You. Kindly have grace on me. I have come to your doorstep in the faith that You are the protector and giver; where else could I go except to You? The whole world is worthless, meaningless, without You. Everything about which I had become selfish has turned into a source of sorrow and pain. O Rama, whatever be my feeling, I now certainly belong to You. I have thrown myself at your doorstep, at Your mercy; I have no interest in worldly honour. Do whatever You like; eliminate my ego.’

So long as we associate with the body, the idea of ‘me, mine’ will stick on along with pride, and it will not allow awareness of God. When there is pitch darkness, there is no other remedy or its disappearance except the arrival of the sun. Similarly, the difficulties in the _prapancha_ are inescapable. But, we should not get disheartened. Remembering and harping on these difficulties and sorrows is the real cause of unhappiness and of spoiling the inherent, inborn joy. Pleasure and pain, happiness and sorrow, are certainly creations of our attachment; selfishness means attachment. Thus, we ourselves are responsible for the sorrow. We are the owners of happiness and sorrow, worry and repentance, due to our attachment. Thoughts arising in a restless mind, create worry, and disturb the real, natural balanced state of the mind. Happiness and sorrow do not depend upon circumstances; they depend upon the attitude. We have regarded the world as real; this has caused sorrow, our mind becoming engrossed with sense-pleasures.

Remembering the past and worrying for the future are the real causes of unhappiness. There is only one remedy for this. Don’t regard _prapancha_ as a means for happiness, regard it as a field for doing duty; try to make the mind steady by continuous remembrance of God.

* * * * *
ravi said…
[20/09, 07:33] +91 96209 96097: காளராத்ர்யாதி³ஶக்த்யௌக⁴வ்ருதா *ஸ்னிக்³தௌ⁴த³னப்ரியா |*
மஹாவீரேந்த்³ரவரதா³ ராகின்யம்பா³ஸ்வரூபிணீ 🙏🙏
நெய் தேன் தோய்ந்த நைவேத்யங்களை படைத்து தியானிப்பவர்க்கு அனைத்து க்ஷேமங்களையும் அருள்பவள்
[20/09, 07:33] +91 96209 96097: *ஸ்வாங்காய நமஹ*🙏🙏
தனது இறையாண்மைக்கான அடையாளங்களுடன் எப்போதும் விளங்குபவர்
ravi said…
Hare krishna mataji , Pranams

you may kindly add mine as a testimony .

Bhagavad Gita sessions are wonderful and it gives us a feeling that we are too in the war field and filled with tons of questions and doubts to ask lord krishna .

If I get a chance to have HIS dharshan I will certainly ask why don't You take an avatar now to kill people talking ill of Santana dharma and always attached with materialistic interest to amass wealth in multiples which will not be carried forward .

The explanation gives an opportunity to introspect ourselves .

Following self questions post hearing each sloka will certainly help us for a better self evaluation

1. Am i listening to each sloka with an open mind ?

2. Am I mentally present while listening to the talks ?

3. Have I totally surrendered my ego while listening to the sloka ?

4. Have I accepted the faults within me ?

5. Am i taking a particular position and trying to defend that at all times ?

6. Have I cultivated the strong need to understand "
*Who Am I* " ?

7. Have I started adopting the good habits that are good for me and giving up bad habits that are not good for me ?

8. Have I agreed that I have to change ?

9. Am I challenging myself sufficiently to change myself ?

10. Have I understood the difference between needs and desires ?

Thanks for an excellent divine service

Regards
*Jayaraman Ravikumar*
*Thane west*
*Mumbai*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர்களை அநுஸரிக்கிற அத்வைதிகளுக்கு “ஸ்மார்த்தர்கள்” என்ற பெயரே இருக்கிறது. இப்போது ஸ்மார்த்தர்களாக இருக்கப்பட்ட இளைஞர்களிலேயே பலபேருக்கு இந்த [ஸ்மார்த்தர் என்ற] பெயர் தெரியவில்லை! தங்களை “ஐயர்” என்றே சொல்லிக் கொள்கிறார்கள்.

வைஷ்ணவர்கள், விசிஷ்டாத்வைதிகள் என்றால் ஐயங்கார். த்வைதிகள் ராவ்ஜிகளாக இருக்கிறார்கள், அதாவது பேருக்குப் பின்னால் ‘ராவ்’ போட்டுக் கொள்கிறார்கள். அல்லது ‘ஆச்சார்’ போட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் ஸ்ரீ மத்வாசாரியாரைப் பின்பற்றுவதால் ‘மாத்வர்’ என்கிறோம். இவர்களும் விஷ்ணு பக்திகாரர்கள்தான். ஆனால் வைஷ்ணவர்கள் என்றால் ஸ்ரீ ராமாநுஜாசாரியாரின் மதத்தை சேர்ந்தவர்கள் என்றே நினைக்கிறோம். மத்வர்கள் ‘ஆச்சார்’ போட்டுக் கொள்வதுபோல், ஸ்ரீ வைஷ்ணவர்களும் ‘ஆசாரியார்’ என்று போட்டுக் கொள்கிறார்கள். ‘ராஜகோபால ஐயங்கார்’ ‘ராஜகோபாலாசாரியார்’ இப்படி இரண்டு தினுசாகவும் போட்டுக் கொள்கிறார்கள். மத்வர் என்று ஸ்ரீ மத்வாசாரியார் பெயரை வைத்தே அந்த மதஸ்தவரை சொல்வது போல், ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் இவர்களின் சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களை அந்தந்த ஆசார்யார் பெயரால் குறிப்பிடக் காணோம். ‘சங்கராத்வைதின்’ என்று ஏதாவது இங்கிலீஷ் ஃபிலாஸஃபி புஸ்தகத்தில் வேண்டுமானால் இருக்கும்; லெக்சரில் இந்த வார்த்தை அடிபடலாம். நடைமுறையில் இல்லை. த்வைதிகள் ராவ், விசிஷ்டாத்வைதிகள் ஐயங்கார், அத்வைதிகள் ஐயர் என்று இப்போது வைத்துக்கொண்டிருக்கிறோம்.

பொதுவாக ஸ்மார்த்தர்கள்தான் சாஸ்திரி, சர்மா என்றெல்லாமும் போட்டுக் கொள்கிறார்கள். தீக்ஷிதர்கள் என்று போட்டுக் கொள்பவர்களும் நம் பக்கத்தில் பெரும்பாலும் ஸ்மார்த்தர்களில் சிலர் மட்டும்தான். யாகம் பண்ணினவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஏற்பட்டது இந்த ‘தீக்ஷிதர்’ பட்டம். (சிதம்பரத்து தீக்ஷிதர்கள் ஸமாசாரம் வேறு.) பொதுவில் அத்வைதிகள் ஐயர் ஜாதி என்றே இப்போது தங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பேருக்குப் பின்னாடிப் போட்டுக் கொள்கிற ஜாதியைக் கொண்டு இப்படிச் சொல்லிக்கொள்கிறோம். இந்தத் தலைமுறைக்காரர்கள் ஜாதிப் பெயர் போட்டுக் கொள்வதில்லை. அது நிஷித்தமாகிவிட்டது! போன தலைமுறையிலும் ராவ்ஜிகளின் அளவுக்கு மற்றவர்கள் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால் தாத்தா காலத்துக்குப் போனால் நாம் எல்லோரும் ஒரு ஐயருக்கோ, ஐயங்காருக்கோ, ராவ்ஜிக்கோ பேரன் என்று ஆகும். ‘ஆச்சார்’ போட்டுக் கொண்டவர்களும், ‘நாங்கள் ஆச்சார் ஜாதி’ என்று சொல்லவில்லை. ராவ் அல்லது மாத்வர் என்றுதான் சொல்லிக் கொள்வார்கள். அப்படியே, ‘ஆசாரியார்’ என்று போட்டுக் கொள்ளும் வைஷ்ணவர்களும் தங்களை ஆசாரியார் ஜாதி என்று சொல்லிக் கொள்வதில்லை. ஐயங்கார் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். ஸ்மார்த்தர்கள் ஐயர் என்கிறோம். சர்மா ஜாதி, சாஸ்திரி ஜாதி என்று சொல்லிக் கொள்வதில்லை.

சங்கர பகவத்பாதாளை அநுஸரிக்கிறவர்கள் தங்களுக்குப் பெயர் ஸ்மார்த்தர் என்பதையே தெரிந்து கொள்ளாத மாதிரி, இன்னொரு முக்கியமான விஷயமும் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள். தங்களுக்கென்று ஆசாரியாள் இதுதான் தெய்வம் என்று எந்த ஒரு தெய்வத்தையும் வைக்காமல், எல்லா தெய்வங்களையும் ஸமமாகப் பார்க்கச் சொன்னார் என்பது அத்வைதிகளில் பலபேருக்கே தெரியவில்லை. தங்களுடைய உபாஸனா மூர்த்தியாகப் பரமசிவனைத்தான் ஆசார்யாள் வைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு தங்களை சைவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இப்படி நினைப்பதற்கு ஒரு காரணம் தோன்றுகிறது

த்வைதி, விசிஷ்டாத்வைதி இரண்டு பேருமே விஷ்ணுவை உபாஸிக்கிறார்கள். இதனால்தான் அத்வைதியாக இருக்க‌ப்பட்ட இந்தக் காலத்து ஸ்மார்த்தர்க‌ள், தாங்கள் அந்த இரண்டு பேருக்கும் மாறுபட்டவர்களாதலால், தங்களை சைவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் இது தப்பு.

ஐயர், ஐயங்கார், ராவ் என்பன ஸம்ஸ்கிருதப் பெயர்களாக இல்லை. எனவே ஸம்ஸ்கிருத்தில் தன் ஜாதியைச் சொல்கிறபோது ஐயங்கார் தன்னை வைஷ்ணவர் என்று சொல்கிறார். ராவ்ஜி மாத்வர் என்று சொல்கிறார். அப்படி அவர்கள் சொல்வதில் தப்பு இல்லை. ஆனால் அத்வைதியான இந்த ஐயர் ஜாதிக்காரன் மட்டும் தப்பாகத் தன்னை சைவன் என்று சொல்லிக் கொள்கிறான். மற்றவர்களுக்கும் இப்படியேதான் தப்பபிப்பிராயம் இருக்கிறது
ravi said…
[21/09, 07:28] +91 96209 96097: *அஜிதாய நமஹ*🙏🙏
யாராலும் வெல்ல முடியாத வைகுண்டத்தை தன் இருப்பிடமாக கொண்டவர்
[21/09, 07:29] +91 96209 96097: *மஹாவீரேந்த்³ரவரதா³* 1ராகின்யம்பா³ஸ்வரூபிணீ 🙏🙏
பெரும் வீரர்களுக்கு பலத்தை அளித்து பயத்தை போக்கி தியானிப்பவர்க்கு திருஷ்டி தோஷங்களை நீக்கி அருள்பவள்
ravi said…
21.09.2023:
Gita Shloka (Chapter 4 and Shloka 09)

Sanskrit Version:

जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्त्वतः।
त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन।।4.9।।

English Version:

janma karma cha me divyam
yevam yo vetti tatvatah: |
tyaktvaa deham punarjanma
naiti maameti sorjuna ||

Shloka Meaning

O Arjuna! He who thus knows My divine birth and work in its essence, having abandoned the body,
is not born again, to Me he comes.

The essence of thet upanishadic declaration 'Brahmavit Brahmaiva bhavati' is stated in this shloka.
The one who knows Brahman becomes the Brahman. Between knowig and becomig, there is no distinction
in Brahmavidya. It is different in the objective world. there the knower and knowee are different.
But in the realm of the Self, knowing and becoming are one. In other words, only he who knows Him
become the supreme Brahman. But what is this knowing of Brahman mean?

It is certainly not an intellectual conclusion, drawn by logic and argument from a
study of the Shastras.

Jai Shri Krishna 🌺
ravi said…
20.09.2023:
Gita Shloka (Chapter 4 and Shloka 8)

Sanskrit Version:

परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्।
धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे।।4.8।।

English Version:

pariTraaNaaya saaDhunaam
vinaashaaya cha dushkrtaam |
DharmasamsThaapanaarthaaya
samBhavaami yuge yuge

Shloka Meaning

One of the very popular among the Gita shlokas.

For the protection of good, for the destruction of the wicked, and for establishing Dharma,
I take birth in every age (every yuga).

God identifies three major responsibilities foo himself in this shloka

1. Protection of the good people
2. Destruction of the bad people
3. Establishment and sustenance of Dharma

The Lord himself protects the good and the righteous. By obeying the laws of Dharma, man
acquires the right of protection by the Lord, whose protecting hand never fails at any time.

Jai Shri Krishna 🌺
ravi said…
पता नहीं यह सनातनी ऊर्जावान युवती कौन है..? इसने अपने तीन मिनट के वक्तव्य में, गीता जी का जो मर्म बताया है, जो अपनी राय व पक्ष रखा है, उस सोच तक पहुंचना साधारण बात नहीं है। इस विषय पर इसका तीन मिनट में समझाना, वह बडे-बडे ज्ञानी तीन घंटों में समझा नहीं पाते। आपसे व्यक्तिगत निवेदन है कि एकबार इस प्रभावशाली वक्तव्य को ध्यानपूर्वक सुन लें..!! तत्पश्चात आपको लगे कि इसे आगे किसी अधर्मी, अज्ञानी, नास्तिक या किसी हिन्दू धर्म, संकृति, सभ्यता, परंपरा, रीति-रिवाज आदि की अवहेलना करने वाले द्रोही को भेजना चाहिए, तो बिना भय व देरी न कर उन्हें अवश्य भेज देने का साहस कर लेना।
ravi said…
#கண்ணனுக்கு_தாசன் #கண்ணதாசன்

ஆரம்பத்தில் நாத்திகம் பேசிய கவிஞர்தான் பிற்காலத்தில் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதினார். தான் இறக்கும்வரை #கண்ணனை நினைத்தே உருகினார்.

சரி வாங்க ஒரு டெமோ பாக்கலாம்

சார் ஒரு தாலாட்டு எழுதி தரனும்

"ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ"

இதுல சிறப்பே

"அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ" இந்த வரிதான்.

ravi said…
சார் இது அந்த கண்ணனுக்கு பாடும் தாலாட்டு. நான் என் மகனுக்கு பாட ஒரு தாலாட்டு எழுதி குடுங்க

"சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ
சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வ மொழி"

சார் இப்ப நாயகிக்கு காதல் வந்துடுச்சு

" கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசை படகு செல்ல செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ள துள்ள"

ravi said…
சார் லவ் செட் ஆயிடுச்சு டேட்டிங் போறாங்க

"யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே"

சார் கண்ணன் வேணா ராமனை வச்சு எழுதி தாங்க

"அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பாத்திருந்தாள்"

லவ் வீட்டுக்கு தெரிஞ்சுடுது வேற மாப்பிள்ளைய கட்டிக்க சொல்றாங்க அப்ப நாயகி என்ன சொல்லுவா?

"வாழ்ந்தாள் உன்னோடு வாழ்ந்திருப்பேன் என்று வனம் புகுந்தாள் சீதை
அந்த மங்கையின் வழிகண்டு வாழ்வதில் சுகமுண்டு இலக்கியம் அவள் பாதை"

சார் வீட்ல க்ரீன் சிக்னல் கெடச்சுடுது
சுயம்வரத்துல நாயகி தோழிகள் கிண்டல் பண்ற மாதிரி

"அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை

நெஞ்சில் நாணம் கொண்டால் கண்ணை மூடிக் கொண்டாள்
அந்த புல்லாங்குழல் மொழிக் கோதை"

சார் அடுத்து கல்யாணம்

"வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தோழி
வைதேகி காத்திருந்தாளோ

மையிட்ட கண்ணோடு மான் விளையாட மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தோழி
தேவர்கள் யாவரும் திருமண மேடை அமைப்பதை பார்த்திருந்தாளோ தோழி"

சார் அடுத்து முதலிரவு

"குத்து விளக்கேறிய
கூடமெங்கும் பூமணக்க
மெத்தை விரித்திருக்க
மெல்லியலாள் காத்திருக்க

வாராதிருப்பானோ வண்ண மலர்கள் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப் பூம் பாவை தன்னை"
( இந்த ரெண்டு வரிய சுசீலா குரல்ல ஒருமுறை கேட்டு பாருங்க❤❤❤)

இப்ப இன்னொரு அப்பா வந்து தன்னோட பெண் கருப்பா இருக்குறதாள எல்லோரும் ஒதுக்குறாங்கனு சொல்றார்

"கண்ணா கருமை நிற கண்ணா
மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுததாய் கண்ணா"

எல்லாம் சரி சார் இந்த நாயகன் ஏதும் பாட மாட்டான ?

பாடுவான் பஞ்சாயத்து எதுனா வந்தா பாடுவான்

"ஆட்டு வித்தார் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை எனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவு கிடைத்தாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
உணர்ந்து கொண்டேன் துன்பமதுன்பமெல்லாம் விலகும் கண்ணா"

சார் எல்லாம் கை மீறி போயிடுச்சு சார். என் வாழ்க்கை அவ்ளோதான???

கவலைப்படாதப்பா

" நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழை கண்ணீரை கண்டதும் கண்ணன் வந்தான்

கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்
தர்மம் எனும் தேரில் ஏறி கண்ணன் வந்தான்
தாளாத துயர் நீக்க கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்"

யப்பா தெய்வமே������

சார் எனக்கு அத்திக்காய் பாட்டுல எப்டி எல்லா காயையும் சொன்னீங்களோ அதே மாரி ராமனை பத்தி

"ராமன் எத்தனை ராமனடி

கல்யாண கோலம் கொண்ட கல்யாண ராமன்
காவலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அலங்கார ரூபம் அந்த சுந்தர ராமன்
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன்

வம்சத்திற்கு ஒருவன் ரகு ராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்"

சார் ஆகமொத்தம் 12 ராமன் சியர்ஸ்

ராமன் வந்தா ராமாயணம் வருமே சார்

"கோடு போட்டு நிற்க சொன்னால் சீதை நிற்கவில்லையே
சீதை அன்று நின்றிருந்தாள் ராமன் கதை இல்லையே"

அட!!!

சார் உங்களுக்கு கண்ணன் மேல எப்பவாச்சும் கோபம் வந்துருக்கா

வந்திருக்குப்பா

"செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத
இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா
#கர்ணா வஞ்சகன் கண்ணனடா"

மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும்
பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா
கர்ணா மன்னித்து அருள்வாயடா"

ஓ கர்ணனை கொன்னதுக்கா.
சார் கர்ணனை சொல்லீட்டீங்க அந்த மகாபாரதம் பத்தி 4 வரி

"பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான்
அந்த பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான்
நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்"

எங்கும் கண்ணன் எதிலும் கண்ணன்.
இப்டி கண்ணா கண்ணானு உருகிய நம் கவியரசர் 13ம் ஆழ்வார் என்பதில் ஐயமில்லை

இந்த கிருஷ்ணர் படத்தில்தான் தினமும் கவிஞர் காலையில் கண் விழிப்பார் கிருஷ்ண பிரபு என்று...
*கண்ணனுக்கு தாசன் கண்ணதாசன்* ... sharing a good write-up on Lord Kannan..
ravi said…
ராமா ராமா ராமா வென்று நாமம் சொல்லி
பாடணும்

நாமம் சொல்லி பாடணும்

நாமம் சொல்லத் தெரியாவிட்டால் நல்லவரோடு
சேரணும்

எண்ணி எண்ணிப் பார்க்கணும்

ஏகாந்தமாய் இருக்கணும்

என்றும் அவன் சொரூபத்தில் ஈடுபட்டே இருக்கணும்🪷🪷🪷
ravi said…
[21/09, 09:50] Jayaraman Ravikumar: *சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 163🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
[21/09, 09:52] Jayaraman Ravikumar: அந்தப் பகலிலும் பளிச்சென்று ஒரு நிலவு தென்பட்டது ராமனுக்கு.

சற்றே தலைதூக்கி, நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட அவனது பார்வையில் பட்ட அந்த நிலவும் சட்டென மேலும் ஒளிர்ந்தது.

நான்கு விழிகளின் பார்வை சந்திப்பில் இரு மனங்கள் ஒன்றாகிவிட்ட அதிசயம் அங்கே நடந்தது.

அதுதான் முதல் பார்வை.

சந்திப்பு கூட இல்லை.

ஆனாலும், என்னவோ பூர்வ பந்தத் தொடர்புபோல மனங்கள் மட்டும் கலந்துவிட்ட அற்புதம் அங்கே நிகழ்ந்தது.

அவள், பெண்மையின் இயற்கையில் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

ஆனாலும், உப்பரிகையிலிருந்தபடி அவள் அப்படிச் செய்ததால் அந்தத் தாழ்ந்த பார்வையும் அவனைச் சுற்றியே வேலியிட்டிருந்தது.

சாலையில் தொலைதூரத்திலேயே நடந்து வந்து கொண்டிருந்த அவனைப் பார்த்தவளுக்கு அவன் நெருங்கி வரவர, அதனால் விரிந்த அவள் விழிகள் தாழ,

அப்போதும் அவன் அவள் பார்வைக்குள்ளேயே சிறைபட்டிருந்தான்.🦚🦚🦚
ravi said…

பழனிக் கடவுள் துணை - 21.09.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

ஐந்தாவது-பதித்துப் பற்றந்தாதி-ஈற்றில் ஓரசைநின்ற எழுசீர்விருத்தங்கள்-27

நேர் விழிக் கொடியவர் மயல் இடை எனை விடல் முறை தானோ?

மூலம்:

தேவை யாவையும் வழங்குவம் என்னமுன்
செப்பும்நின் திருவார்த்தை
ஏவை நேர்விழிக் கொடியவர் மயலிடை
எனைவிடல் முறைதானோ
கோவை வாய்க் கனிக் குஞ்சரப் பிடியும்வன்
குறவர் தம் குலமாதும்
தூவை வேலுமாம் சத்திகள் உடையவா!
தொல்வய லூரானே (27).

பதப்பிரிவு:

தேவை யாவையும் வழங்குவம் என்னமுன்
செப்பும் நின் திருவார்த்தை
ஏவு ஐ நேர் விழிக் கொடியவர் மயல் இடை
எனை விடல் முறை தானோ?
கோவை வாய்க் கனிக் குஞ்சரப் பிடியும்
வன்குறவர் தம் குலமாதும்
தூ வை வேலுமாம் சத்திகள் உடையவா!
தொல் வயலூரானே!! (27).

பொருள் விளக்கம்:

ஏவை-ஏவு ஐ- ஏவுகின்ற கூர்மை வாய்ந்த அம்பு;
தூ வை வேலுமாம் சத்திகள்- தூ- புனிதமான ஞானசக்தி, வள்ளி குஞ்சரி - இவர் இச்சையும், கிரியையுமாம். எனவே சக்திகள் என்று பன்மையில் கூறினர் நம் சுவாமிகள்; வை- கூர்மையான;
வயலூரானே- வயல் சூழ்ந்த ஊர் பழனி என்பது குறிப்பு.

கோவைப் பழம் போல் சிவந்த வாயிதழ் உடைய தேவகுஞ்சரி, தேவசேனைத் தாயாரும், வலிமையான குறவர் குலத்தில் தோன்றியக் குலப் பெண்ணான வள்ளித் தாயாரையும், புனிதமான இச்சா மற்றும் கிரியா சத்திகள் எனவும், உடன் கூர்மையான வேலாயுதத்தையும் தன் சத்திகள் எனக் கொண்டவனே! இயற்கையான வயல்கள் சூழ்ந்த ஊரான பழனி என்னும் திருத்தலத்தின் அதிபதியே! என்னுடைய தேவை யாவையும் வழங்குவம் என்று முன்னர் நீ செப்பிய நின் திருவார்த்தை, ஏவுகின்ற கூர்மை வாய்ந்த அம்புப் போன்றக் கொடிய விழிகளை உடைய மாதர்களின் மயலில் என்னைச் சிக்க வைத்துத் தவிக்க விடல் முறை தானோ பெருமாளே? இயம்பாய்!

பாவை யர்யிருவர் கணவ! அடியவர்
பாவை விரும்புவேல் முருக! கொடுஞ்சூர
மாவைக் கண்டித்தருள் செந்தில!உன்னடிமை
தேவை எல்லாமுன்க ழலொன்றே! அருள்வாயே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
குருவே சரணம் .. குடிலே சரணம்

கணமே வருவாய் கருணை பொழிவாய்

கற்பகம் கண்டதில்லை

காமதேனு பார்த்ததில்லை

காணும் உன் திருமேனி என்றும் குறை வைப்பதில்லை

கோடிகள் குவிந்தாலும் கோமகன் உனை மறவா மனம் வேண்டும் ...

கோடியில் நின்றாலும் உனை தேடி வரும் குலம் வேண்டும் ...

உனையே கேட்க்கும் உயர் மனம் வேண்டும் ...

வேறு எதுவும் வேண்டா நிலை வேண்டும்

விண்ணில் உயர உயர பறக்க சிறகுகள் வேண்டும்

ஓடி வந்தே உனை தழுவும் கரங்கள் வேண்டும் ..

தாயென உன் மடி எனை தாலாட்ட வேண்டும் ...

தமிழ் கொண்டு என்றும் உன் பாமாலை சூட வேண்டும் ...
ravi said…
🌹🌺 A simple story about a devotee of Shiva who cut his neck with a tool to fill his own stomach in exchange for oil for a lamp 🌹🌺
-------------------------------------------------- -----------
🌹🌺Kaliya Nayanar is one of the sixty-three Nayanmars who are highly revered by Saivism. Kaliyanayan was born in Thiruvottiyuri in Thondai Nadu from the family of a merchant who had a check business.

🌺 He was very wealthy and engaged in charity for Lord Shiva and used to perform tiruvilakit tirthondin inside and outside the Thiruvotiyurth temple.

🌺 Due to Lord Shiva who came to show the glory of his true charity, all his wealth became a state of poverty which was like a double bind.

🌺 In that situation, he bought and sold the oil that was given to him by his inheritance, and with the material he got, he did his work of lighting non-stop. Then, due to the lack of oil, he used the oil to light the lamp.

🌺 As the number of workers increased and there was no one to hire him, he sold his house etc. In the end he gave up.

🌺 At the time of lighting the lamp, Sarvesvara reached the temple and scratched his neck with a tool to fill his own body in exchange for the oil to light the lamp saying, "I will die if the lighting work is stopped".

🌺 At that time Arudkaram, the mighty one, stopped Nayanara's arm.

🌺 Lord Shiva, the great sea, appeared on the way, and after the soreness (wound) disappeared, he bowed down with his hands on his head. Lord Shiva blessed him to shine in the precious Shivapuri.

🌺🌹Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan Valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 *விளக்கு எரியும் எண்ணெய்க்கு ஈடாக தமது உதிரத்தையே நிறைத்தற்குக் கருவி கொண்டு தமது கழுத்தை அரிந்த சிவ பக்தர்.....பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------
🌹🌺கலிய நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே செக்குத் தொழிலை உடைய வணிகர் மரபிலே தோன்றியவர் கலியநாயனார்.

🌺பெரும் செல்வமுடைய இவர் சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டில் ஈடுபட்டுத் திருவொற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார்.

🌺இவரது உண்மைத் தொண்டின் பெருமையை புலப்படுத்தத் திருவுளங்கொண்ட சிவபெருமான் திருவருளால் இவரது செல்வம் அனைத்தும் இவரைப் பிணித்த இருவினைப் போற் குறைய வறுமை நிலை உண்டாயிற்று.

🌺அந்நிலையில் தமது மரபிலுள்ளார் தரும் எண்ணெயை வாங்கி விற்று அதனால் கிடைத்த பொருளால் தாம் செய்யும் திருவிளக்குப் பணியை இடைவிடாது செய்தார். பின்னர் எண்ணெய் தருவார் கொடாமையால் கூலிக்குச் செக்காடி அக்கூலி கொண்டு விளக்கெரித்தார்.

🌺வேலையாட்கள் பெருகித் தம்மைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வார் இல்லாமையால் வீடு முதலிய பொருட்களை விற்று விளக்கெரித்தார். முடிவில் மனம் தளர்ந்தார்.

🌺திருவிளக்கேற்றும் வேளையில் ஒற்றியூர்த் திருக்கோயிலை அடைந்து சர்வேஸ்வரா......“திருவிளக்குப் பணி தடைப்படின் இறந்துவிடுவேன்” எனத்துணிந்து விளக்கு எரியும் எண்ணெய்க்கு ஈடாக தமது உதிரத்தையே நிறைத்தற்குக் கருவி கொண்டு தமது கழுத்தை அரிந்தார்.

🌺அப்பொழுது ஒற்றியூர்ப்பெருமானது அருட்கரம், நாயனாரது அரியும் கையைத் தடுத்து நிறுத்தியது.

🌺அருட்கடலாகிய சிவபெருமான் விடைமீது தோன்றியருள, உடன்பின் ஊறு (காயம்) நீங்கித் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்றார். சிவபெருமான் அவரைப் பொற்புடைய சிவபுரியிற் பொலித்திருக்க அருள் புரிந்தார்.

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
*ராஜ கோபாலா*

கோபத்தால் தவறு செய்பவர்கள்,
சொந்தக்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள்,

முன்விரோதம் காரணமாகப் பகை கொண்டு நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள்.

வறுமையினால் மிகவும் கஷ்டப்படுகிறவர்கள்

வெளியூர் பயணத் தடையால் வாழ்க்கையில் திசை மாறிக் கொண்டிருப்பவர்கள்

தொழிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையால் பணத்தைத் தொலைத்துக் கொண்டிருப்பவர்கள்

ஒப்பந்தம் செய்துவிட்டு, திருமணம் நடத்த இயலாமல் பரிதவித்துக் கொண்டிருப்பவர்கள்

ஆகிய அனைவரும் உன் அருளால் பிரச்சனை தீர பேரானந்தம் அடைகிறார்களே

மனநிம்மதியும் ஆரோக்கியமும் குறைவில்லாமல் பெறுகிறார்களே

உன் கருணைக்கு ஓர் அளவும் இல்லையோ கண்ணா 🦚
ravi said…
[21/09, 10:23] Jayaraman Ravikumar: *திவ்ய தேசங்கள் ...*
*திவ்விய பாமாலை* *தரிசனங்கள்* - *28**💐💐
[21/09, 10:23] Jayaraman Ravikumar: *திருக்காவளம்பாடி*
[21/09, 10:25] Jayaraman Ravikumar: கோபால கிருஷ்ணர் இவருக்கு இன்னொரு பெயர் *ராஜகோபாலன்* .

ருக்மிணி சத்யபாமாவுடன் நின்ற திருக்கோலம்.

தாயார்

*மடவரல் மங்கை செங்கமல நாச்சியார்*

*திருநாங்கூர்*
ravi said…
[21/09, 10:19] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 251*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 60*

नयन्तीं दासत्वं नलिनभवमुख्यानसुलभ-
प्रदानाद्दीनानाममरतरुदौर्भाग्यजननीम् ।
जगज्जन्मक्षेमक्षयविधिषु कामाक्षि पदयोः
धुरीणामीष्टे कः तव भणितुमाहोपुरुषिकाम् ॥

நயந்தீம்ʼ தா³ஸத்வம்ʼ நலினப⁴வமுக்²யானஸுலப⁴-

ப்ரதா³நாத்³தீ³னாநாமமரதருதௌ³ர்பா⁴க்³யஜனனீம்.

ஜக³ஜ்ஜன்மக்ஷேமக்ஷயவிதி⁴ஷு காமாக்ஷி பத³யோர்

து⁴ரீணாமீஷ்டே கரஸ்தவ ப⁴ணிதுமாஹோபுருஷிகாம்
[21/09, 10:20] Jayaraman Ravikumar: *காமாக்ஷி பத³யோ:”*

இதில் காமாக்ஷி உன்னுடைய பாதங்களின்,

“ *தவ ப⁴ணிதுமாஹோபுருஷிகாம்”,* *ஆஹோபுருஷிகாம்* ’னா அப்பேற்பட்ட பௌருஷம், அப்பேற்பட்ட மஹிமை, ஸ்ருஷ்டி, ஸ்திதி லயம் பண்றது உன் பாதங்கள் தான்.

ப்ரஹ்மாதிதேவர்கள் வணங்குவதும் உன் பாதங்கள் தான்.

வந்து நமஸ்கார பண்ற ஏழைகளுக்கு நினைச்சது காட்டிலும் கொடுக்கறது உன்னுடைய பாதம் தான்.👣👣👣👣👣
ravi said…
[21/09, 09:56] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 670* 🙏🙏🙏started on 7th Oct 2021

*367வது திருநாமம்*
[21/09, 10:18] Jayaraman Ravikumar: *367 ப்ரத்யக்*
*சிதீ ரூபா --*

அம்பாள் நம்மை உள் நோக்கி ஞானம் பெற செய்பவள் என்று உணர்த்தும் அற்புத நாமம் இது.

அவளே நமது மனோசக்தி, மனசாக்ஷி என்றும் சொல்லலாம்.

கதோபநிஷத் (II.i.1) எப்படி விளக்குகிறது பாருங்கள்:

“ஸ்வயம்புவான பரமேஸ்வரன் ஐம்புலன்களை அளித்தான்.

அவை வெளியே நாட்டம் கொண்டவையாகி விட்டது.

அவற்றை உள்ளே திருப்புவது எளிதல்ல.

மாயை வசப்பட்டவை.

ஞானி மட்டுமே ஐம்புலன்களை வெளியிலிருந்து மீட்டு அவற்றின் கவனத்தை உள்ளே ஆத்மலயம் அடைய செய்பவன் ''💐💐💐
ravi said…
❖ *306 ராஜ்ஞீ =*

மஹாராணி (பிரபஞ்சத்தின் பேரரசனான சிவனின் அர்தாங்கினி என்பதாலும் மஹாராணி என்று புரிதல்)😊😊😊
ravi said…
வெண்தந்தம் இழைத்துவைத்து

இரத்தினங்கள் பதித்துவைத்து

பட்டுமெத்தை விரித்துவைத்த
விசாலமான கட்டிலிலே

பெண் நிலவே பேரெழிலே

சிரமபரிகாரம்
செய்து
கண்ணயர்ந்து ஓய்வெடுக்க

கண்மணியே வந்தருள்வாய்🙏

செங்கமலங்களும் வணங்கும்

மென்பிஞ்சுப் பதங்களுக்கு

செம்பஞ்சுக் குழம்பெடுத்து

செஞ்
சித்திரமாய் தீட்டி

பூந்தளிர்போல் பதங்களுக்கு
பூப்போல எழில்கூட்டி

பூவைக்கு நலுங்கிடவே
பூமகளே நீ மகிழ்வாய்🙏

வெட்டிவேர் வாசநீரால் வாய்தூய்மை செய்துகொண்டு

கட்டிய மண வாளனான முக்கண்ணன் ஈசனுடன்

எட்டிய திசைகளெல்லாம் ஏற்றிகீதம் பாடிவர

கட்டிலில் சேர்ந்திருந்து காப்பாற்ற வேண்டுமம்மா🙏
ravi said…
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*BHAGAVAD GITA AS IT IS*

*Title: Contents of the Gita Summarized*

*Chapter 2 Sloka 3*

👉 *BG Sloka 2.3*
क्ल‍ैब्यं मा स्म गमः पार्थ नैतत्त्वय्युपपद्यते ।
क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप ॥ ३ ॥

klaibyaṁ mā sma gamaḥ pārtha
naitat tvayy upapadyate
kṣudraṁ hṛdaya-daurbalyaṁ
tyaktvottiṣṭha paran-tapa

👉 *Synonyms*
klaibyam — impotence; mā sma — do not; gamaḥ — take to; pārtha — O son of Pṛthā; na — never; etat — this; tvayi — unto you; upapadyate — is befitting; kṣudram — petty; hṛdaya — of the heart; daurbalyam — weakness; tyaktvā — giving up; uttiṣṭha — get up; param-tapa — O chastiser of the enemies.

👉 *Translation*
O son of Pṛthā, do not yield to this degrading impotence. It does not become you. Give up such petty weakness of heart and arise, O chastiser of the enemy.

👉 *Purport*
Arjuna was addressed as the son of Pṛthā, who happened to be the sister of Kṛṣṇa’s father Vasudeva. Therefore Arjuna had a blood relationship with Kṛṣṇa. If the son of a kṣatriya declines to fight, he is a kṣatriya in name only, and if the son of a brāhmaṇa acts impiously, he is a brāhmaṇa in name only. Such kṣatriyas and brāhmaṇas are unworthy sons of their fathers; therefore, Kṛṣṇa did not want Arjuna to become an unworthy son of a kṣatriya. Arjuna was the most intimate friend of Kṛṣṇa, and Kṛṣṇa was directly guiding him on the chariot; but in spite of all these credits, if Arjuna abandoned the battle he would be committing an infamous act. Therefore Kṛṣṇa said that such an attitude in Arjuna did not fit his personality. Arjuna might argue that he would give up the battle on the grounds of his magnanimous attitude for the most respectable Bhīṣma and his relatives, but Kṛṣṇa considered that sort of magnanimity mere weakness of heart. Such false magnanimity was not approved by any authority. Therefore, such magnanimity or so-called nonviolence should be given up by persons like Arjuna under the direct guidance of Kṛṣṇa.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ravi said…
[22/09, 07:25] +91 96209 96097: மஹாவீரேந்த்³ரவரதா³ 1
*ராகின்யம்பா³ஸ்வரூபிணீ* 🙏🙏
அம்பாள் பெரிய பெண் வடிவமாக தியானிப்பவர்க்கு திருமண பிராப்தியை அருள்பவள்
[22/09, 07:25] +91 96209 96097: *க்ருஷ்ணாய நமஹ*🙏🙏
கார் மேகம் போல் கருமை நிறம் படைத்த திருமேனி கொண்டவர்
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
தன்னிடமிருந்து த்ரவியங்களைக் கொடுத்து யஜ்ஞ ரக்ஷையைச் செய்கிற கோ, எதையும் கொடுக்காவிட்டாலும் தன்னுடைய ஸாந்நித்ய மாத்ரத்திலேயே மந்த்ரங்களை ரக்ஷித்துக் கொடுக்கிற வல்லமை வாய்ந்ததாக இருக்கிறது. அதனால்தான் மாட்டுக்கொட்டிலில் ஜபம் செய்தால் கோடிப் பங்கு (மடங்கு) பலன் என்பது. ‘கோஷ்டம்’ என்ற மாட்டுக் கொட்டிலை போன்ற பரிசுத்தமான ஸ்தலம் எதுவும் இல்லை. ஸகல தேவதைகளும் கோவுக்குள் அடக்கம்
ஏனென்றால் கோவுக்குள் முப்பத்து முக்கோடி தேவர்களுமே அடக்கம். ஸகல புண்யதீர்த்தங்களும் ஒரு பசுவுக்குள் இருக்கின்றன. நம்முடைய ஆலயம் ஒவ்வொன்றிலும் சில தெய்வங்களுக்கு ஸந்நிதிகள் இருக்கின்றன; அதைச் சேர்ந்ததாக ஒவ்வொரு புண்ய தீர்த்தம் இருக்கிறது. கோ என்பதோ அத்தனை தெய்வங்களும் அத்தனை புண்ய தீர்த்தங்களும் குடி கொண்ட ஆலயமாக இருக்கிறது. கோவே ஒரு நடமாடும் கோயில். ஸர்வ தேவதைகளுக்குமான மஹத்தான கோயில். ஸர்வ தேவதா ஸ்வரூபம் என்றால் நம்முடைய சிற்றறிவால் இன்னதென்றே கிரஹித்துக் கொள்ள முடியாமல் அல்லவா இருக்கிறது? ஒரே மலைப்பாக – பயம் கலந்த மலைப்பாக – இருக்கிறதே தவிர அன்போடு பக்தி பண்ணும்படியாக இல்லையே! அதனால் கோமாதாவைக் குறிப்பாக லக்ஷ்மி என்ற ஒரு தேவதையின் ஸ்வரூபமாகச் சொல்வது. அமர(கோச)ம் என்கிற ஸம்ஸ்க்ருத நிகண்டுவில் (அகராதியில்) லக்ஷ்மியின் பல பெயர்களைச் சொல்லும்போது ‘லோகமாதா’, ‘லோகஜனனி’ என்னும் இரண்டு பெயர்கள் சொல்லியிருக்கிறது. கோமாதா அந்த லோகமாதாவே.

கோமாதாவை லக்ஷ்மி என்கிறது ஒரு பக்கம். அவளை லக்ஷ்மியின் வாஸ ஸ்தானமாகச் சொல்வது இன்னொரு பக்கம். லக்ஷ்மிக்கு வாஸ ஸ்தானங்கள் ஐந்து. ஸுமங்கலியின் ஸீமந்தம் என்கிற வகிடு, மலர்ந்த தாமரைப் பூவின் உள்பக்கம், யானையின் மஸ்தகம் (தலை), வில்வ பத்ரத்தின் பின் பக்க ரேகை ஆகிய நாலோடு பசுவின் பின்புறமும் ஐந்தாவதாக மஹாலக்ஷ்மியின் நிவாஸமாக இருக்கிறது. கோவிடத்தில் எதிரிடைகள் சேர்கிறதில் கோமய, கோமூத்ரங்களும் பவித்ரமாக இருப்பதாகப் பார்த்தோமல்லவா? அப்படியேதான் அதன் முக மண்டலமாக இல்லாமல் ப்ருஷ்டபாகமாக இருக்கப்பட்ட பின்புறமும் பரம பவித்ரமான லக்ஷ்மீவாஸமாக இருக்கிறது. அழகுக்காக கோவின் முகத்தில் சந்தன குங்குமங்கள் இட்டுக் கழுத்தில் மாலை போட்டாலும், கோபூஜை என்று பண்ணும்போது பின்புறத்தை அலங்கரித்து அங்கேயே அர்ச்சனாதிகள் செய்யவேண்டும். ஒரு கோவினிடம் நிக்ருஷ்டமானது (தாழ்ந்தது) என்று எதுவுமேயில்லை. அதனிடம் ஸர்வமும், ஸர்வாங்கமும் உத்க்ருஷ்டமே (உயர்ந்தனவே). நம் மடம் மாதிரி தர்மபீடங்களில் ப்ரதிதினமும் காலம் கார்த்தாலே நடக்கிற முதல் வழிபாடு கோபூஜைதான் என்பதிலிருந்து கோவுக்குள்ள உத்க்ருஷ்டமான ஸ்தானத்தைப் புரிந்து கொள்ளலாம். பசுவைவிட யானை எவ்வளவோ பெரியதாக இருந்தாலும் கோபூஜைக்கு அப்புறந்தான் கஜபூஜை.
ravi said…
23.09.2023:
Gita Shloka (Chapter 4 and Shloka 11)

Sanskrit Version:

ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्।
मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः।।4.11।।

English Version:

ye yaThaa maam prapadyante
taamstayaiva bhajaamyaham |
mama vartmaanuvartante
manushyaah: paarTha sarvashah: ||

Shloka Meaning

O Arjuna ! In whatever way men approach Me, even so do I reward them, for the path
that men may take from every side is Mine.

The Lord declares that the reward for men who workship Him would be strictly in relation
to the aim and object of their worship. The purpose of devotion, its method and manner, and its
intensity would determine the nature of the reward. God is like the wish-yielding plant of
Paradise. What man wishes to obtain, that the Lord gives.
The man who is suffering from bodily pans prays to be relieved of that pain, and the pain relieved.
The poor man wishes for wealth and prosperity, and God gives them those worldly benefits.
The devotee yearns for the devotion and he gets that.
The Jnaani seeks for liberation and he attains Moksha.
This is to say that different types of persons share the grace of God in different ways
each according to his own samskaras.
If man seeks for perishable worldly things, they get only those things and not moksha.
When we approach God, we should clearly know what we should seek for.
It would be absurd for a man to approach an emperor and ask for a few vegetables.

Jai Shri Krishna 🌺
ravi said…
22.09.2023:
Gita Shloka (Chapter 4 and Shloka 10)

Sanskrit Version:

वीतरागभयक्रोधा मन्मया मामुपाश्रिताः।
बहवो ज्ञानतपसा पूता मद्भावमागताः।।4.10।।

English Version:

viitaraagaBhayokroDhaa
manmayaa maamupaashritaah : |
bahavo jnaanatapasaa
pUtaa madBhaavamagataah: ||

Shloka Meaning

Free from desire, fear and hatred, absorbed in Me, taking refuge in Me, many purified
by the penance of knowledge, have attained Me.

In this shloka, the Lord describes the merits of Jnana in different ways,
Tapas
Yajna
Agni
Nauka
Khadga.

Here Jnana is described as tapas, a penance of wonderful merit, because it cleanses
all accumulated sins of previous births and all the impurities of inheribed instincts,
impulses and tendencies. Such men who are purified by this penance are mentioned as
purified (Putah).

What are the marks of this Jana tapas?

Freedom from desire, fear and hatred,
Intense devotion and absorption to the Lord, seeking ultimate refuge in Him

These are the aspects of Jnana tapas.

What is the effect of this tapas?

Attaining the Lord, self realization through purity is the reward.

Free from desire, fear and hatred.
Jai Shri Krishna 🌺
ravi said…
[23/09, 19:02] Jayaraman Ravikumar: *ரமணர் எடுத்த* *முத்துக்கள் ...*
*சிவானந்த லஹரி -9*💐💐💐

9) गभीरे कासारे विशति विजने घोरविपिने
विशाले शैले च भ्रमति कुसुमार्थं जडमतिः |
समर्प्य एकं चेत: सरसिजं उमानाथ भवते
सुखेन अवस्थातुं जन इह न जानाति किमहो ||8||

க3பீ4ரே காஸாரே விஸ1தி விஜனே கோ4ர-விபினே

விஸா1லே ஸை1லே ச ப்4ரமதி குஸுமார்த2ம் ஜட3-மதி: |

ஸமர்ப்யைகம் சேதஸ்ஸரஸிஜம் உமா-நாத2 ப4வதே
ஸுகே2னாவஸ்தா2

தும் ஜன இஹ ந ஜானாதி கிமஹோ || 9 ||
[23/09, 19:03] Jayaraman Ravikumar: எங்கு இருந்தாலும், எந்தப் பிறவியெடுத்திருந்தாலும் பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஒரு நியதி இருக்கிறது என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.

அதுதான் அவனது மனநிலையைப் பற்றியது.

சரணடைய வேண்டும் என்ற ஆவல் மட்டும் ஒருவனுக்கு இருந்தால் போதாது.

அதைச் செய்து, அது நீடித்து நிற்பதற்கு அவனது மனநிலை பக்குவப்பட்டிருக்க வேண்டும்👍
ravi said…
[23/09, 12:03] Jayaraman Ravikumar: *திவ்ய தேசங்கள் ...*
*திவ்விய பாமாலை* *தரிசனங்கள்* - *29*💐💐

*திருஅரிமேய விண்ணகரம்*

சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது

மூலவர் : குடமாடு கூத்தன் (தைலக் காப்புத் திருமேனி)

உத்ஸவர் : சதுர்புஜங்களுடன் கோபாலன்.

தாயார் : அம்ருதகட வல்லி
[23/09, 12:09] Jayaraman Ravikumar: கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடல் அரசன் போல் நீ ஆடி
*குடமாடு கூத்தன்* எனும் நாமம் பெற்றாயோ. ?

உதங்க முனிவர் தவம் புரிந்து,கோபால கண்ணனாக உனைக் கண்டாரோ ?

உன் பிரசித்தமான நடனங்களில் இந்த குடமாடு கூத்து, காளிங்க நர்த்தனம், கோபிகைகளுடன் ராசாலீலா, குன்றமெடுத்து கோவர்த்தன நடனம் ஆடியதும் சேருமோ ?

இங்கு எல்லாம் அமிர்தம் அன்றோ

எம்பெருமான், தாயார், புஷ்கரணி என்று எல்லாம் அமிர்தத்தில் தொடங்கும் என்பது ஆச்சரியம் அன்றோ

👍👍👍
ravi said…
[23/09, 18:59] Jayaraman Ravikumar: *128. ஜனார்தநாய நமஹ (Janaardhanaaya namaha)*
[23/09, 19:00] Jayaraman Ravikumar: காஞ்சியை ஆண்டு வந்த பல்லவ மன்னனுக்கும் விக்கிரமப் பாண்டியனுக்கும் தீராத பகையுண்டு.

போரில் பாண்டியனை வெல்ல முடியாத பல்லவன், தந்திரம் செய்து அவனை வெல்ல நினைத்தான்.

அதனால் விக்கிரமன் மேல் அதிருப்தியில் இருக்கும் அந்தப் போலித் துறவிகளைக் காஞ்சிக்கு வரவழைத்தான்.🙏
ravi said…
எங்கு இருந்தாலும், எந்தப் பிறவியெடுத்திருந்தாலும் பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஒரு நியதி இருக்கிறது என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.

அதுதான் அவனது மனநிலையைப் பற்றியது.

சரணடைய வேண்டும் என்ற ஆவல் மட்டும் ஒருவனுக்கு இருந்தால் போதாது.

அதைச் செய்து, அது நீடித்து நிற்பதற்கு அவனது மனநிலை பக்குவப்பட்டிருக்க வேண்டும்👍
ravi said…
[23/09, 11:47] Jayaraman Ravikumar: *திருவடித் தாமரையின் நிழல்*
[23/09, 11:47] Jayaraman Ravikumar: जनो‌sयं सन्तप्तो जननि भवचण्डांशुकिरणैः
अलब्ध्वैकं शीतं कणमपि परज्ञानपयसः ।

तमोमार्गे पान्थस्तव झटिति कामाक्षि शिशिरां
पदाम्भोजच्छायां परमशिवजाये मृगयते ॥
[23/09, 11:49] Jayaraman Ravikumar: ஜனோ‌உயம் ஸன்தப்தோ ஜனனி பவசண்டாம்ஶுகிரணைஃ

அலப்தவைகம் ஶீதம் கணமபி பரஜ்ஞானபயஸஃ |

தமோமார்கே பான்தஸ்தவ ஜடிதி காமாக்ஷி ஶிஶிராம்

பதாம்போஜச்சாயாம் பரமஶிவஜாயே ம்றுகயதே ||61||👍
[23/09, 12:01] Jayaraman Ravikumar: 🪷 பிறவிச் சூழல் என்பது *கதிரவனின் வெப்பம்* போன்றது

🪷 வெப்பதைத் தணிக்கக் கூடிய *ஞானம்* எனும் நீரை ஒரு சொட்டுக்கூட அடைய முயற்சி செய்வதில்லை

🪷அஞ்ஞானம் என்பது இருள்

🪷அதில் திரிந்து உழல்வது நாம் தேவியின் திருவடித் தாமரைகளின் குளிர்ந்த நிழலை தேடி அலைகிறோம்

🪷அவள் கருணை இன்றி அது இயலுமோ ?

🪷 *சண்டாம்ஶுகிரணைஃ* சூரியனின் ஒளி வீசினாலும் வழி மாத்திரம் இருளாகவே உள்ளதே 😢

🪷சூரியனால் மொட்டை அவிழ்க்கும் தாமரை அவன் தரும் கிரணங்களின் தகிப்பை தாமரை கள் தண்ணீரில் வசிப்பதால் தாங்குகிறது ...

🪷அவ்வாறே நம் மனதின் இருளை நீக்கி ஞானம் எனும் வெளிச்சத்தை தருவதே தேவியின் திருவடிகள் 👣
ravi said…
[23/09, 11:43] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 672* 🙏🙏🙏started on 7th Oct 2021

*369வது திருநாமம்*
[23/09, 11:44] Jayaraman Ravikumar: *369 பரதேவதா -*

எல்லா தெய்வங்களின் சக்தியும் அம்பாளிடமிருந்தே பெறுவது என்று உணர்த்தும் நாமம் இது.

பராஆஆஆஆ சக்தி அல்லவா அவள்?🙏🙏🙏
[23/09, 11:45] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 253*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 61*

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை