ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 5. தேவகார்ய ஸமுத்யதா (1) பதிவு10
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே தேவகார்ய ஸமுத்யதா பதிவு 10 இன்று நாம் பார்க்கப் போவது 5வது திருநாமம் . எதற்காக சிதக்னிக்குண்டலத்தில் இருந்து தோன்றினாள் ? அவளுக்கும் உண்மையில் பிறவிகள் உண்டா மாந்தர்களைப்போல ?? 5வது திருநாமம் பதில் சொல்கிறது .. தேவகார்ய ஸமுத்யதா தேவர்களின் சகல காரியங்களிலும் உதவுபவள். தேவர்களால் முடியாததை எல்லாம் முடிக்கும் சக்தியுள்ள தேவி அல்லவா இவள்? தேவர்களுக்கு உதவுபவள். தெய்வ செயல்களுக்கு உதவுபவள் என்றும் அர்த்தம் கொள்ளலாம். தர்மத்தின் அடிப்படையில் அமைந்த, நேர்மையான, நீதிக்குட்பட்ட காரியங்களுக்கு துணை நிற்பவள்.🚩🚩🚩 ஸமுத்யதா என்றால் வழங்குபவள் . சரி தேவர்கள் என்றால் விண்ணோர்கள் . அமரர் தங்கோன் இருக்குமிடம் .. அப்படி என்றால் அம்பாள் அவர்களுக்கு மட்டும் தான் வருவாளா ? நாமும் அவள் பிள்ளைகள் தானே நாம் அழைத்தால் வர மாட்டாளா ? முதலில் நாமும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் நம் மனதில் வரவேண்டும் . வந்தால் மட்டுமே போதாது அப்படிப்பட்ட உயர்ந்த சேவைகள் செய்ய வேண்டும் .. விண்ணவர் யாவரு...