அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 38 பதிவு 32

            அபிராமி பட்டரும்                              அடியேனும் 

               கேள்வி பதில்                      பதிவு 32



கேள்வி பதில் நேரம்

பதிவு 32 🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான் 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்

கேள்வி 32 

நான்

ஐயனே நேற்று கேட்க வேண்டிய கேள்விகள் இவைகள் ... நேற்றைய வர்ணனையில் மனம் பரிபோனதால் இன்று கேட்கிறேன் 

பட்டர்

நிலவென வந்தவள் 

பதில் ஒன்று தந்தவள் 

மறை சடையோன்  பாதி பாகம் கொண்டவள் 

வரை இல்லா அருள் தருபவள் 

தரை வான் காணா தவ ஒளி 

உங்கள் எல்லோரையும் கவசம்  போல் என்றும் காக்கட்டும் ... 

கேள்விகளை ஆரம்பி ரவி 🙂🙂🙂



நான்

ஐயனே ... ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பொருள் புரிந்து கொண்டுதான் சொல்ல வேண்டுமா ?

அவளைப்பற்றி சொல்ல வேண்டும் என்று ஒரு நல்ல எண்ணமும் ஆர்வமும் மட்டும் இருந்தால் போதாதா ...?? 

நீங்களே ஒரு பாடலில் நான் செய்யும் எல்லாம் உன் தோத்திரங்களே என்று சொல்லி இருக்கிறீர்கள் .. 

ஆதி சங்கரரும் அப்படிதான் சொல்கிறார் ..

ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா

கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசநாத்யாஹுதி-விதி:

ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா

ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்  27

சரியாக உச்சரிக்காததால் பலன்கள் வராதா ? 

சொல்லும் போது பலர் கணக்கு ( count) வத்துக்கொள்கிறார்கள் .. நான் 50 தடவை சொன்னேன் நான் 100 தடவை சொன்னேன் இப்படி ... 

இது குழந்தைத் தனம் அல்லவா? 

உலகத்தை படைத்த அவளை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடக்க முடியுமா ? 💐💐💐



பட்டர்

ஏதோ ஒரு கேள்வி என்று நினைத்தேன் .. பல கேள்விகளை கேட்டுவிட்டாயே ... 

பலருக்கும் வரும் சந்தேகங்கள் தான் .... 

சரியான உச்சரிப்பு அவசியம் 

இரண்டாவது... பொருள் / அர்த்தம் தெரிந்து சொல்ல வேண்டும் 

மூன்றாவது... ஒரு நல்ல குருவிடம் தீக்ஷை எடுத்துக்கொள்ள வேண்டும் . 

ஒரு குருவினால் மட்டுமே உனக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல தகுதி வந்துவிட்டதா இல்லையா என்று சொல்ல முடியும் .. 

இதில் உள்ள 1000 நாமங்களும் மந்திர பூர்வமான நாமங்கள் 

ஏனோ தானோ வென்று சொல்லக் கூடாது 

உள்ளத்தில் அன்பிருந்தால் போதாதா என்று கேட்டாய் ....

அப்படி ஒன்று இருந்தால் தான் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே மனதில் உருவாகும் .. 

சரி சில உதாரணங்கள் சொன்னால் நீ புரிந்து கொள்வாய் 🙏🙏🙏


கும்பகர்ணன்

மாபெரும் சூரன் ... ராவணனைக் காட்டிலும் சிறந்த சிவபக்தன் . 

அவன்  தேவர்களே இருக்கக் கூடாது என்று வரம் வாங்க பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்தான் .. 

தேவர்கள் கலைவாணீயிடம் தஞ்சம் புகுந்து இந்த வரத்தை அவள் பதி கொடுக்கவேக்கூடாது என வேண்டினர் 

தாய் அல்லவா உருகி போனாள் கலைவாணீ .. உடனே கும்பகர்ணன் நாவில் சென்று அமர்ந்து நாக்கு குளரும் படி செய்தாள் .. 

அவன் கேட்க இருந்த வரம் ... பிரம்மன் அவன் முன் தோன்றிய பொழுது 

நித்தியத்துவம் ( மரணமே இல்லா வாழ்க்கை) என்று கேட்க நினைத்தவன் நித்திரைத்துவம் ( தூங்கிக்கொண்டே இருப்பது) என்று கேட்டு விடுகிறான்.

அவன் கேட்ட வரம் ஒரு சாபமாக மாறியது 


மந்திர ஸ்வரூபமான நாமங்கள் என்று சொன்னேன் .. 

ஒரு வார்த்தை தவறினால் கூட அர்த்தம் அனர்த்தமாகி விடும் .. 

வீட்டில் இருப்பவர்கள் சொல்வதில்லையா மனசுல இருக்கிறதை சொல்லிவிடு ... 

நாம் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியம் அல்ல என்ன சொல்கிறோம் என்பதுதான் .. 

அண்ட சராசரங்களை ஆளும் அவள் நாம் என்ன நினைத்தோம் என்ன சொல்ல வந்தோம் என்று ஒவ்வொருவராய் பார்த்துக்கொண்டு வரம் தர முடியுமா?? 

அப்படி நாமும் எதிர்பார்ப்பது நியாயமா ? 💐💐💐


சரி ! ஏன் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும் . ?

வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வேண்டும் ஒரு target வேண்டும் ..ஒரு goal வேண்டும் .  

கணக்கு வைத்து முன்னேறாவிட்டால் வாழ்க்கை காற்று அறுந்த பட்டம் போல் திசை இல்லாமல் பறக்கும் ... 

ஒரு MBA , + two , நீட் , படிக்கவே இவ்வளவு மதிப்பெண்கள் தேவை என்று சொல்கிறோம் அல்லவா இதுவும் ஒரு கணக்குத் தானே ... 

சிசுபாலன் ... அவன் தாய் கண்ணனிடம் கெஞ்சுகிறாள் 

அவன் ஜாதகப்படி உன் கரங்களினால் மடிவான் .. 

கண்ணா !! கருணை கொண்டு அவனை கொல்லாமல்  மன்னித்து விடு என்கிறாள் 

உடனே கண்ணன் ...

"தாயே!! 99 தடவை அவனை மன்னிப்பேன் 

பிறகு வாழ்வதும் சாவதும் அவன் கையில் இருக்கிறது" என்கிறான் .. 

கண்ணன் கணக்கு வைத்துக் கொள்ள வில்லை என்றால் சிசுபாலன் இன்று வரை திட்டிக்கொண்டே இருப்பான் கண்ணனும் பொறுமையாய் கேட்டுக்கொண்டே இருப்பான் ... 


ஒரு கோடி ராம நாமங்கள் தியாக பிரம்மம் அவர் தந்தை சொல்ல சொல்ல ஆரம்பித்தார் .. 

சீதை சமேத ராமரின் தரிசனம் அவருக்கு கிடைத்தது ... 

கணக்கு வைத்துக்கொண்டு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் தவறே இல்லை ரவி 🌷🌷🌷

நான் .. ஐயனே!!! ... 

அவர் பாதங்களில் சாஷ்ட்டாங்கமாய் விழுந்தேன் 

ஆனால் எவ்வளவு தடவைகள் என்று கணக்கு வைத்துக்கொள்ள வில்லை 🙏🙏🙏



  👌👌👌👌👌👌👌👍👍👍👍💐💐💐💐💐

Comments

Savitha said…
அற்புதமான கேள்வி பதில்

மிகுவும் அருமை


Sujatha said…
Wonderful 🙏🏼🙏🏼
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 129*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 19 ,20 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
சிவானந்தலஹரியில அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பார்ப்போம். 19ஆவது ஸ்லோகம்

दुराशाभूयिष्ठे दुरधिपगृहद्वारघटके

दुरन्ते संसारे दुरितनिलये दुःखजनके ।

मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये

वदेयं प्रीतिश्चेत्तव शिव कृतार्थाः खलु वयम् ॥

து³ராசாபூ⁴யிஷ்டே² து³ரதி⁴பக்³ருʼஹத்³வாரக⁴டகே

து³ரந்தே ஸம்ஸாரே து³ரிதனிலயே து:³க²ஜனகே ।

மதா³யாஸம் கிம் ந வ்யபனயஸி கஸ்யோபக்ருʼதயே

வதே³யம் ப்ரீதிஸ்சேத்தவ சிவ க்ருʼதார்தா:² க²லு வயம் ॥

ன்னு ஸ்லோகம்
ravi said…
*து³ராசாபூ⁴யிஷ்டே²* – கெட்ட ஆசைகள் நிறைந்ததும், *து³ரதி⁴ப* – அதிபர்கள்னா bosses.

*துரதிப* : னா கெட்ட அதிகாரிகள். *

*க்³ருʼஹ த்³வார க⁴டகே* –

வீட்டு வாசல்ல போய் நின்னுண்டு, இந்த கெட்ட ஆசைகள் என்ன பண்றதுன்னா, யாராவது ஏதாவது பணம் கொடுப்பாளான்னு அவாளோட வீட்டு வாசல்ல போயி நிறுத்திடறது.

அப்படி நின்னா துரந்தே – அதோட முடிவு எப்படி இருக்குன்னா, அதோட முடிவும் நன்னாயில்ல.

அவமானப் பட வேண்டியிருக்கு.

*து³ரிதனிலயே* – பாவத்துக்கும் இருப்பிடமா இருக்கு. அவா சொன்ன காரியங்கள் எல்லாம் நாம பண்ணினா பாபம் வந்து சேர்றது💐💐
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 143* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️

48வது திருநாமம்
ravi said…
*48. பத்மநாபாய நம: (Padmanaabhaaya namaha)*
ravi said…
அப்ரமேயோ ஹ்ருஷீகேச ’:
*பத்மநாபோ* (அ)மரப்ரபு: |

விச்’வகர்மா மனுஸ்‌ த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
ravi said…
நெடுந்தூரம் பயணித்தும் அவரால் அந்த நீண்ட தாமரைத் தண்டின் அடிப்பகுதியை எட்ட முடியவில்லை.

அப்போது, “இவை அனைத்தையும் ஒரு தெய்வீக சக்தியே இயக்குகிறது.

அதனிடம் அடைக்கலம் புகுவதன்றி உள்ளத்தில்
எழும் புதிர்களைத் தீர்க்க வேறு வழியே இல்லை!” என்று அவரது உள்ளுணர்வு அவருக்கு உணர்த்தியது.

தன் மூச்சை அடக்கி, உள்ளத்தைக் கண்ணுக்குத் தெரியாத அந்தச் சக்தியிடம் செலுத்தி பிரார்த்தனை செய்தார் பிரம்மா.

நூறு வருடங்கள் கடந்தன.

திடீரென்று ஒருநாள் பிரம்மாவுக்கு ஞானோதயம் உண்டானது.

அவருக்கு ஒரு தெய்வீகக் காட்சி தெரிந்தது.

ஆதிசேஷன் மேல் மரகத மலைபோல் திருமால் சயனித்திருந்தார்.

அவரது நாபியில் இருந்து ஒரு தாமரைத்தண்டு எழுந்து வருவதையும்,
அதன் உச்சியில் உள்ள தாமரை இதழ்களில் தான் அமர்ந்திருப்பதையும் கண்டார்.🌷🌷🌷
ravi said…
சங்கராம்ருதம் - 57

ஏகதண்டி ஸன்யாஸியை பாக்கறதே தோஷம்!
“கற்றாரை கற்றாரே காமுறுவர்” என்ற வசனப்படி, அபாரமான ஶாஸ்த்ர புலமை, பாண்டித்யம் பெற்ற ஒரு மஹா வித்வானைப் பற்றி நம் பெரியவா கேள்விப்பட்டார். ஆனால் அந்த வித்வானோ, பெரியவாளின் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட ப்ரியப்படவில்லை!
காரணம்?
ravi said…
அவர் ஒரு வீர வைஷ்ணவர்!
வெறும், வீர வைஷ்ணவர் இல்லை…கடும் வீர வைஷ்ணவர்!
அவரைப் பொறுத்தமட்டில், “ஸித்தாந்தத்தில் அத்வைதத்தையும், தோற்றத்தில் ஶைவக் கோலத்தையும் மேற்கொண்டு, கையில் ஏக தண்டத்தை கொண்டுள்ள ஒரு ஸன்யாஸியை பார்ப்பதே பெரிய தோஷம்!”

ravi said…
பெரியவா.. பரிபூர்ண ஶிவமோ, பராஶக்தியோ, ப்ரஹ்ம்மமோ எதுவாக வேண்டுமானாலும் இருந்தாலும், அவரிடம் அந்த யாதவ ஶிரோன்மணியின் குஸும்பு கலந்த ப்ரேமை அவ்வப்போது, எட்டிப்பார்த்துவிடும்! ஆனால், அதிலும் ஆட்கொள்ளும் அன்பே பரிமளிக்கும்.
“நீ வராட்டா போ!…. நா…..வரேன்” என்பது போல், அந்தப் பண்டிதர் இருந்த ஊருக்கு யாத்ரையாகச் சென்று, பெரியவா தங்கினார்.
அன்பு என்னும் வலையை வாகாக விரித்து வைத்துக் கொண்டார், இந்த பண்டிதர் மாதிரி நல்ல [பக்ஷிகளுக்காக] பக்தர்களுக்காக!
ஊரே தினமும் திரண்டு வந்து பெரியவாளை தர்ஶனம் செய்தபோதும், அவர் மட்டும் வரவேயில்லை!
ravi said…
எப்டியோ போ!’ என்று அவரை விடுவதற்காகவா வந்திருக்கிறார்?
வருவோர் போவோரிடமெல்லாம் இந்தப் பண்டிதரைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார். அந்த பண்டிதரின் காதுகளிலும், பெரியவாளின் தேஜஸ்ஸையும், வித்வத் பெருமையையும் பற்றி பலபேர் புகழ்ந்து பேசுவது எல்லாமே விழுந்தது. ஆனாலும் கமுக்கமாக இருந்து விட்டார்.
பெரியவா அவரை ஆட்கொள்ளும் தருணம் வந்தது !
ஸ்ரீமடத்தின் மஹா வித்வான் ஒருவரை அந்த வீர வைஷ்ணவரிடம் தகுந்த மர்யாதைகளுடன் அனுப்பி, முறைப்படி பெரியவா அவருக்கு அழைப்பு விடுத்தார்.
ravi said…
அவர் வீர வைஷ்ணவர் என்றாலும், உண்மையான வைஷ்ணவ லக்ஷணம் கொண்டவர். ஒரு பெரிய பீடாதிபதி, இத்தனை தூரம் நம்மை அழைத்திருக்கும்போது, நாம் அதை மதிக்காமல் இருப்பது அழகல்ல என்று தோன்றியது. எனவே மடத்து வித்வானிடம் வெளிப்படையாக பேசினார்.
ravi said…
“பெரியவா… இவ்ளோ தூரம் கூப்டு அனுப்பியிருக்கா…! மாட்டேன்னு சொல்லப்டா…துதான்! ஆனாலும், எனக்குன்னு செல ப்ரதிக்ஞைகள் இருக்கு. அதை மீறரதுக்கில்ல! அது ஒங்களுக்கும், ஒங்க பெரியவாளுக்கும் ஸம்மதப்படாம இருக்கலாம்… அதான் யோஜனையா இருக்கு…”
“ஒங்களோட ப்ரதிக்ஞைகள் என்னன்னு, சொன்னேள்-ன்னா… பெரியவாகிட்ட சொல்றேன்…”
பணிவோடு கேட்டார் ஸ்ரீமடத்து வித்வான்.
“மொத்தம் மூணு ! ஒண்ணு…அத்வைத மடத்து ஏகதண்டியான ஒங்க பெரியவாளை, நா…. நமஸ்காரம் பண்றதுக்கில்ல;
ரெண்டாவுது… அவர் ப்ரஸாதம் எதுவும் குடுத்தா…. அத… ஸ்வீகரிச்சுக்கறதுக்கில்ல;
மூணாவுது… வித்வத் ஸம்பாவனை-னு ஸால்வை போத்தறது, அது இதுன்னு எதாவுது ஒங்க பெரியவா செஞ்சா, அதையுங்கூட ஏத்துக்கறதுக்கில்ல!…”
“கெட்டுது போ! நம்ம பெரியவாளோட ஐஶ்வர்யம் தெரியாம, அவரை அவமர்யாதை பண்ற மாதிரி, இப்டி கடுமையா கண்டிஷன் போட்ற இவரப்போயி, பெரியவா…எதுக்கு வரிஞ்சு வரிஞ்சு அழைக்கணும்?…”
அந்த மஹா ஸாத்வீகமான ஸ்ரீமடம் வித்வானுக்கே இப்படித் தோன்றியது.
ravi said…
ரொம்ப ஸந்தோஷம். தேவரீர் சொன்னதை, எங்க பெரியவா கிட்ட தெரியப்படுத்தறேன்”
மர்யாதையோடு அங்கிருந்து கிளம்பி, நேராக பெரியவாளிடம் வந்தார்.
முகத்தில் ஸுரத்தில்லாமல் வந்தவரிடம்…..புன்னகையோடு குடைந்தார்…. கோவர்த்தனத்தை குடையாக பிடித்த நம் கோவிந்தன்……
“என்ன சொன்னார்?…”
“ஒண்ணும் ஸெரியா படல….பெரியவா”
பண்டிதரின் ஸுரத்தில்லாத முகத்தைப் பார்த்தார்……
ravi said…
ஓஹோ! அப்டியா? ஸ்வாரஸ்யமாத்தானே இருக்கு! நீ நல்ல சேதின்னா கொணூந்திருக்கே!…”
“நல்ல சேதியா? அவர் ரொம்ப கறாரா கண்டிஷன் போடறார் பெரியவா…..”
“கண்டிஷன் போடறார்-ன்னா, அவர் முடிஞ்ச முடிவா…..வரவே மாட்டேன்னு சொல்லல… அவரோட ஏதோ கண்டிஷனுக்கு நாம ஒத்துண்டா…..வரேன்னு சொல்றார்-ன்னுதானே ஆறது? அந்த மட்டுல, நல்ல ந்யூஸ்தானே?….. ஸெரி…..என்ன கண்டிஷன் போட்டார்?…”
“சொல்றதுக்கே மனஸ் எடம் குடுக்கல…..”
“பரவாயில்ல…. சொல்லு! ...”
ravi said…
மொத ப்ரதிக்ஞை, அவர் பெரியவாளை நமஸ்காரம் பண்ண மாட்டாராம்…..”
“பேஷா..!..அப்டியே இருக்கட்டும்….ம்ம்…மேல”
“ரெண்டாவுது…பெரியவா, எதாவுது ப்ரஸாதம் குடுத்தா, அவர் ஸ்வீகரிச்சுக்க மாட்டாராம்!….”
” அவ்ளோதானே!…ம்….”
“மூணாவுது…பெரியவா அவருக்கு வித்வத் ஸம்பாவனை-ன்னு ஸால்வை போத்தறது… அதெல்லாம் பண்ணினா, அதையும் ஸ்வீகரிச்சுக்க மாட்டாராம்”
பெரியவாளோ…. ஸஹஜமாக சிரித்துக் கொண்டே…
” இவ்ளோதானே? பேஷா அவரோட இஷ்டப்படியே இருந்துட்டுப் போகட்டுமே!…”
“எப்டி பெரியவா….? பெரியவாளை மதிக்கற மாதிரி தெரியல….அவர் இப்டீல்லாம் கண்டிஷன் போடறது…”
ravi said…
ரொம்ப ஸந்தோஷம். தேவரீர் சொன்னதை, எங்க பெரியவா கிட்ட தெரியப்படுத்தறேன்”
மர்யாதையோடு அங்கிருந்து கிளம்பி, நேராக பெரியவாளிடம் வந்தார்.
முகத்தில் ஸுரத்தில்லாமல் வந்தவரிடம்…..புன்னகையோடு குடைந்தார்…. கோவர்த்தனத்தை குடையாக பிடித்த நம் கோவிந்தன்……
“என்ன சொன்னார்?…”
“ஒண்ணும் ஸெரியா படல….பெரியவா”
பண்டிதரின் ஸுரத்தில்லாத முகத்தைப் பார்த்தார்……
ravi said…
பாரு! எனக்குத்தான அவரைப் பாக்கணும்-ன்னு இருக்கு? அவருக்கு இல்லியே? அப்டி இருக்கச்சே, அவர் கண்டிஷன் போடறதுல என்ன தப்பு? எனக்கு, அவர் நெஜமாவே ஒரு பெரிய வித்வத் ஸ்ரேஷ்டர், அவர்ட்ட புதூஸா ஏதோ கொஞ்சமாவுது க்ரஹிச்சுக்கலாம்-ன்னு இருந்தா, அவர் போடற கண்டிஷனை பொருட்படுத்தாம ஏத்துக்கத்தானே வேணும்?...”
அனைத்தும் அறியும் அறிவிற்கு அறிவாய் இருக்கும் ஆச்சார்ய ஶிரோ-ரத்னத்துக்கு, வேறொருவரிடம் க்ரஹித்துக் கொள்ள என்ன இருக்கிறது?
வினயம், வினயம் என்ற ஒன்றை நமக்கெல்லாம் கற்றுத் தரவே, இந்த ப்ராக்டிகல் க்ளாஸ்!
உண்மையில் பெரியவாளே அந்த ஸ்ரீ வைஷ்ணவரின் க்ருஹத்துக்கு ஸ்வாதீனமாக, தானே விறுவிறுவென்று சென்றிருப்பார். ஆனால், விபூதி-ருத்ராக்ஷம் அணிந்த, ஏகதண்டியான ஒரு ஸன்யாஸியை, அவர் தன்னுடைய க்ருஹத்துக்குள், மனஸார வரவேற்காமல் போயிருக்கலாம்! என்பதாலேயே, அவரை அப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் வைக்கக் கூடாதென்பதற்காகவே, பெரியவா அங்கே செல்லாமல், அவரைத் தன்னிடம் அழைத்திருக்கலாம்.
ravi said…
போ! போயி அவரோட ப்ரதிக்ஞைக்கு எந்த பங்கமும் இல்லாத, இங்க வரலாம்-ன்னு சொல்லி, அழைச்சிண்டு வா…”
பண்டிதர் என்னவோ அரை மனஸோடு போய், அந்த வைஷ்ணவரை அழைத்து வந்தார், பெரியவாளுடைய ஸந்தேஶத்தை கூறி!
வைஷ்ணவருக்கு ஏக பெருமை!
ஸம்ஸ்க்ருத பாஷை…. கேட்கவும், பேசவும் மிகவும் அழகாக இருக்கும், அந்த அழகு இன்னும் கோடி மடங்கு அழகாக ஒலித்தது, நம் பெரியவா பேசியபோது!
அவர் உள்ளே நுழைந்ததும், பெரியவா அவரிடம், அழகான ஸம்ஸ்க்ருதத்தில், வைஷ்ணவர்களுக்கே உரிய பரிபாஷைகள் கலந்து, அவரை மிகவும் கௌரவமான முறையில் வரவேற்று, அவருக்கென போடப்பட்டிருந்த ஆஸனத்தில் அமரச் சொன்னார்.
வாக்தேவதையின் முன்னால் போடப்பட்டிருந்த மணையில், அவளுடைய அழகான வரவேற்பால் உண்டான ஒருவித நெகிழ்வும் ஒருசேர, அமர்ந்தார்…….!
ravi said…
வாக்தேவதையின் முன்னால் போடப்பட்டிருந்த மணையில், அவளுடைய அழகான வரவேற்பால் உண்டான ஒருவித நெகிழ்வும் ஒருசேர, அமர்ந்தார்…….!
அழகான வரவேற்பிலேயே லவலேஸம்….வைஷ்ணவரின் மனஸ் உருகியது.
வேதங்களும், “நமஹ நமஹ” என்று ருத்ரமும், சமகமும் போட்டி போட்டுக்கொண்டு நமஸ்கரிக்கும் நம் பெரியவாளை, நமஸ்காரம் பண்ணாமலேயேதான் அமர்ந்தார்!
ஸ்ரீ ராமானுஜருடைய [ப்ரஹ்மஸூத்ர] ஸ்ரீபாஷ்யம் பற்றியே அந்த வைஷ்ணவரிடம், நம் பெரியவா நிறைய “கேட்டுக் கொள்ள!!” ஆரம்பித்தார்!
ஆம்! முதலில், பெரியவா அவரிடம் கேட்டுக் கொள்வது போல் இருந்தது, போகப் போக…..அந்த வைஷ்ணவர் கேட்கக் கேட்க, ப்ரஹ்ம ஸூத்ரத்தை எழுதிய அந்த வேத வ்யாஸரே, பதில் சொல்வதாக மாறியிருந்தது!
ravi said…
வைஷ்ணவரின் முகம் பெரியவாளிடம் பேசப் பேச ப்ரகாஶமாக ஆனது! ஏனென்றால், வாஸ்தவத்தில் அவரிடம் வித்யா கர்வம் இல்லை; நல்ல உயர்ந்த வித்யை இருந்தது. அதனால், பெரியவாளிடமிருந்து கல்பூரம் போல், நிறைய க்ரஹித்துக் கொண்டார்.
பண்பின் ஶிகரமான பெரியவாளும், அவரை நிறைய ஊக்குவித்து, அவருடைய அறிவு ஸுரங்கத்திலிருந்து பாளம் பாளமாக பாண்டித்யத்தை வெளிக் கொண்டு வந்தார்.
வைஷ்ணவரும் கூட, இப்போது, “தான்…. ஒரு விபூதி-ருத்ராக்ஷம் அணிந்த, ஏகதண்டியான ஒரு ஸன்யாஸியிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை; ஒரு ஞான ஹிமாத்ரியிடமிருந்து பொங்கியோடும், ஞான கங்கையில் மூழ்கி, குளித்து, குடித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறோம்“, என்று அனுபவபூர்வமாக உணர்ந்தார்!
அவருடைய வைஷ்ணவ ஸித்தாந்தத்திலிருந்து, அத்வைதம் எப்படி மாறுபடுகிறது என்பதை, உயர்வு, தாழ்வு வித்யாஸம் காட்டாமல், ஸ்ரீ ஆச்சார்யாள் பாஷ்யத்தில் சொல்லியிருப்பதை அங்கங்கே லேஸாக கோடிட்டு காட்டியதும், அந்த வைஷ்ணவரும் பரந்த மனஸோடு அதை ஸ்லாகித்துக் கொண்டார்.
ravi said…
இப்படியாக ரொம்ப நேரம், இந்த அழகான வித்வத் ஸம்பாஷணை நடந்து, மிக மிக இனிதாக, நன்றாக முடிந்தது.
“ஒங்களோட ஸ்ரமத்தை பாராட்டாம, நா….அழைச்சதை ஏத்துண்டு, இத்தன நேரம்……என்னை வித்வத் கடல்ல மூழ்கடிச்சுட்டேள் ! ரொம்ப ஸந்தோஷம்!…..”
மஹா ஸரஸ்வதி வீணையை மறைத்துவிட்டு, தண்டத்தை சுமந்து கொண்டு, தன் முன் “வினயத்தின்” ரூபமாக நிற்பதை, இப்போது அந்த வைஷ்ணவர் நன்றாக உணர்ந்திருந்தார்.
“பெரியவாளுக்கு தெரியாத ஶாஸ்த்ர ஞானம்….. தாஸனுக்கு இல்ல! ஆனா… தாஸனுக்கு தெரியாத கருணை, பெரியவாளுக்கு இருந்தததுனாலதான், கூப்டு அனுப்பி, அனுக்ரஹம் பண்ணியிருக்கா!…….”
இதைச் சொல்லி முடிக்கும் போதே, அந்த வைஷ்ணவரின் ஹ்ருதயமும், கண்களும், குரலும் தழுதழுத்து….! அப்படியே “தண்டம்” போல் கீழே விழுந்து பெரியவாளை நமஸ்காரம் செய்ய முற்பட்டவரை……
“வேணாம்! ஒங்களுக்கு ப்ரதிக்ஞா பங்கமாய்டும்!……”
ravi said…
வினய ஸம்பன்னர் தடுத்தார்! அதில், நாமெல்லாம் பண்ணுவது போல், குத்திக் காட்டும் எகத்தாளம் கிஞ்சித்தும் இல்லை!
“ப்ரதிக்ஞை-ல்லாம் மனுஷ்யாளை முன்னிட்டு பண்ணினதுதானே? ஸன்னிதானத்ல…அதுக்கு ப்ரஶக்தியில்ல [தெய்வத்துக்கு அது பொருந்தாது!]…..”
கண்ணீர் துளிர்க்க, பெரியவாளை விழுந்து விழுந்து ஸேவித்துத் தீர்த்தார்!

ஸாக்ஷாத் ஸ்ரீமன் நாராயண ஸ்வரூபமாகவே நின்று, தன் பக்தனின் நமஸ்காரத்தை ஏற்றுக் கொண்டார்….. “நாராயண! நாராயண!” என்ற நாமத்துடன்!
“பெரியவாளை நமஸ்காரம் செய்ய மாட்டேன்!” என்றவர், தானே… தன் நிபந்தனையை தகர்த்து எறிந்தார்!
அன்று, அங்கு சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் பரமபதமான ஸ்ரீவைகுந்தத்திற்கு மானஸீகமாக நிஸ்சயம் போயிருப்பார்கள்! ஏனென்றால், பகவானும் அப்படி! பக்தனும் அப்படி!
“பெரியவா…..தாஸனுக்கு மந்த்ராக்ஷதை அனுக்ரஹிக்கணும்…”
தன்னையே ப்ரஸாதமாக தந்துவிட்ட நம் பெரியவா….அவருக்கு மந்த்ராக்ஷதையையும் அனுக்ரஹித்தார்!
ravi said…
பெரியவா கையால… மந்த்ராக்ஷதை எதுவும் வாங்கிக்க மாட்டேன்..”
வைஷ்ணவரின் ரெண்டாவது நிபந்தனையும் “ஃபணால்!!”
குழைந்து போய் நின்று கொண்டிருந்த அந்த வைஷ்ணவ பக்தரிடம் இப்போது பகவானே குழைந்து போனான்!
“என்னோட ஆசைக்காக, ஒங்களோட மூணாவுது ப்ரதிக்ஞையையும் விடலாம்-ன்னு தோணித்துன்னா.. ஒரு மஹா வித்வான் வந்தும் கூட, நம்ம மடத்ல அவருக்கு ஸம்பாவனை பண்ணல-ங்கற கொறை… எனக்கு இல்லாம இருக்கும்….”
அம்மாடீ! வருமா இந்த பரந்த ஹ்ருதயம்!
ஸ்ரீ வைஷ்ணவர் ரொம்பவே நெகிழ்ந்து போய்விட்டார்!……. கண்ணீர் பொங்க, தழுதழுக்கும் குரலில்……
“பெரியவா எது பண்ணினாலும்…என்னோட பரம பாக்யமா ஏத்துக்கறேன்”
உடனே மிகவும் உயர்ந்த ஸால்வை ஒன்றை கொண்டு வரச்சொல்லி, ஸ்ரீமடத்திலிருந்து அளிக்கும் இந்த உயர்ந்த ஸம்பாவனையை, யாரை விட்டுக் குடுக்கச் செய்தார் தெரியுமா?…….
“கண்டிஷன் போடறார்.. பெரியவா!…” என்று பெரியவாளுடைய தூதராக ஸ்ரீ வைஷ்ணவரிடம் தூதாக நடந்த, அந்த மஹா வித்வானைக் கொண்டே, ஸம்பாவனை செய்யச் சொன்னார்…
நம்முடைய மனஸிலும், “மங்களம் ஶுப மங்களம்” என்று ஒரு கண்ணீர் கலந்த ஸந்தோஷம் பரவி நிறைவதை அனுபவிக்கலாம்!
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

பரமேசுவரனுக்குப் பசுபதி என்று பெயர். இங்கு பசு என்று சொல்வது அவருடைய வாகனமான ரிஷபத்தையோ காவலாளான நந்தியையோ அல்ல. பசு என்பது நாம்தான். ஜீவர்களெல்லாம் பசுக்கள். அவர்களுக்கு யஜமானனாக இருக்கும் ஈசுவரனே பசுபதி.

தழையைக் கண்ட இடமெல்லாம் ஒடுகிற பசுவைப் போல், இந்திரிய சௌக்கியத்தைத் தேடி ஒடிக்கொண்டேயிருக்கிறோம் நாம். பசுவின் சொந்தக்காரன் அதைக் கட்டிப் போடுவதைப்போல் பசுபதியான ஈசுவரன் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறான்.
ravi said…
எங்கே கட்டியிருக்கிறான், கண்ணுக்குக் கட்டு எதுவும் தெரியவில்லையே’ என்று தோன்றும். ஆனாலும் நம்மை அறியாமலேயே இந்தக் கட்டைப்பற்றி நாம் அவ்வப்போது பேசுகிறோம். ஒரு காரியத்துக்காக நாம் எத்தனையோ முயற்சி செய்கிறோம்; அப்படியும் அது பலிதமாகவில்லை; இச்சமயத்தில், ‘முடிந்ததெல்லாம் செய்தேன்; ஆனால், கர்ம பந்தம் யாரை விட்டது? காரியம் ஜயிக்கவில்லை’ என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். ‘பந்தம்’ என்பதுதான் ‘கட்டு’. நம்முடைய பூர்வ கர்மாவினால் நம்மைக் கட்டியிருக்கிறார் பசுபதி.
ravi said…
கயிற்றால் கட்டப்பட்ட பசுவுக்கு, அந்தக் கட்டின்மீது கோபம்தான் வரும். ஆனால் கட்டை அவிழ்ந்துவிட்டால் என்ன ஆகிறது? அது அசலான் தோட்டத்தில் மேய்கிறது. அவன் அதை வெளுவெளு என்று வெளுத்துக் கட்டுகிறான். பட்டியில் கொண்டுபோய் அடைக்கிறான். அப்போதுதான் பசுவுக்குத் தன்னைக் கட்டிப்போட்டிருந்தது எவ்வளவு நல்லது என்று தெரிகிறது.
ravi said…
இப்படியேதான் கர்மக் கட்டைப்பற்றி நமக்குக் கோபம் வருகிறது. ஈசுவரன் இப்படி ஒரு கட்டைப் போடாவிட்டால் நமக்குத் தோல்வி, துக்கம் இதெல்லாம் ஏற்படாது. தோல்வியும் துக்கமும் வருவதால்தான் நாம் இப்போது ‘நமக்கு இவ்வளவுதான் பொசிப்பு’ என்கிற புத்தியைப் பெற்று, இருக்கிற மட்டும் திருப்தியுடன் நிம்மதியுடன் வாழக் கொஞ்சமாவது முயல்கிறோம். இவை இல்லாவிட்டால் நம்முடைய ஆசைக்கும், நாம் போடுகிற ‘ப்ளானு’க்கும் முடிவே இராது. இத்தனை பலமான கட்டு இருக்கும்போதே, நம்மில் ஒவ்வொரு தனி மநுஷ்யனின் ஆசைக்கும் இந்த சிருஷ்டி முழுவதையும் ஆஹுதி பண்ணினாலும் போதாமலிருக்கிறது.
ravi said…
பூலோகம் போதாதென்று, இப்போதே சந்திர மண்டலம், மார்ஸ் என்று பேசுகிறோம். கட்டு இல்லாவிட்டால் கேட்கவே வேண்டாம். இப்போதே இத்தனை போட்டி, பொறாமை, சண்டை என்றால் அப்போது எப்படியிருக்கும் என்று கற்பனை கூடச் செய்ய முடியாது. நம் ஆசை அவ்வளவையும் காரியத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யாதபடி கர்மம் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறதோ, நாம் பிழைத்தோமோ!
ravi said…
பசுவைக் கட்டிப் போடாவிட்டால் அது பயிரையும் பாழாக்குகிறது; தானும் அடிபடுகிறது. அதுபோல் கர்மாவால் ஈசுவரன் நம்மைக் கட்டிப் போடாவிட்டால் நம்மையும் கெடுத்துக் கொண்டு லோகத்தையும் கெடுத்து விடுவோம் – இப்போதே கெடுக்கிறோம். துர்பலத்திலேயே இவ்வளவு கெடுத்தால், சுயேச்சை பலம் பூரணமாக இருக்கும்போது எவ்வளவு கெடுப்போம்; கயிறு போட்டுக் கட்டுவதால்தான், ஏதோ ஒரு சமயத்திலாவது பசுவுக்குக் கட்டுத் தறியிடம் வந்து படுக்க முடிகிறது. கர்மம் கட்டுவதால்தான், நாமும் எப்போதாவது அதற்கு முளையான ஈசுவரனிடம் சித்தத்தைப் படுக்க வைக்கிறோம். இல்லாவிட்டால், பகவானை அடியோடு மறந்து, இப்படியே சம்ஸாரத்தில் உழன்றுகொண்டு தானிருப்போம்.
ravi said…
நம்முடைய க்ஷேமத்துக்காக, நமே நமக்கு அதிக உபத்திரவத்தை உண்டாக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக, பகவான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். ‘எப்பொழுது அவிழ்த்து விடுவீர்?’ என்று அவரைக் கேட்டால், ‘ஒருவருக்கும் ஒரு தீங்கும் செய்யாமல், அதனால் உனக்கும் பாபம் உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்கிற பக்குவம் வந்தால், அவிழ்த்து விடுவேன்’ என்கிறார்.
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 130* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 27👍👍👍
ravi said…
*27. சமயாசார மானஸிக பூஜை*

*ஆத்ம ஞான சித்தி*

ஜபோ ஜல்ப: ஶில்பம் ஸகலமபி முத்ராவிரசனா

கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமண மஶனாத்யாஹுதி விதி:

ப்ரணாம: ஸம்வேஶ: ஸுகமகில மாத்மார்ப்பம த்ருசா

ஸபர்யா பர்யாயஸ் தவ பவது யன்மே விலஸிதம் 27💐💐💐
ravi said…
நவாபரணபூஜையின் முடிவில் ஒரு வாக்கியம் வரும்,

*"யதா யோக்யம் ததா குரு"* -

எனக்கு என்ன யோக்யதை உண்டு என்பதை நீ அறிவாய்,

அதற்கேற்ற பலனை நீ அளிப்பாய். //

அம்பிகே!, எல்லாம் உனக்கு என்ற ஆத்ம சமர்பண நோக்குடன்//

என்று நாம் இருந்தாலும் அவளிடம் கேட்காமலேயே எல்லாம் தரும் கற்பகவிருட்சம் அவள். வேண்டத்தக்கது அறிவாள் அவள் . வேண்டும் வரம் தருவாள்.. வேண்டி நிற்கும் பக்தர்களுக்கு வேண்டாத வரமும் தருவாள் ... பட்டர் உறுதியாக இப்படி சொல்கிறார் ...
பனீமின் அவளை கண்டீர் அமராவதி ஆளுகைக்கே ...ஒரு முறை அவளை வணங்குவதை முயற்சி செய்து தான் பார்ப்போமே ..பிறகு தெரியும் அவள் எப்படிப்பட்டவள் என்று ... 👏👏👏
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 130* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
இல்லாத இடையை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள் ?
ravi said…
அப்போது, தோழி உள்ளே நுழைகிறாள். நடந்ததை விவரிக்கிறாள்:

மாத்திரை அளவில் தாள் மடுத்து, முன்பயில்
சூத்திரம் இதுவெனத் தோளின் வாங்கினான்,
ஏத்தினர் இமையவர் இழிந்த பூமழை,
வேந்து அவை நடுக்கு உற முறிந்து வீழ்ந்ததே!

’இளவரசியே, யாரோ ஒருவன், ராமன் என்று பெயராம், தம்பியோடும் முனிவரோடும் வந்தான், பெரிய சிவ தனுசைக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கையில் பிடித்துத் தூக்கினான்,

ஒரு பக்கத்து முனையைக் காலால் மிதித்தான், ஏற்கெனவே பலமுறை பழகிய ஒரு வில்லைக் கையாள்வதுபோல் சுலபமாக வளைத்தான்,

அதைப் பார்த்து வியந்த தேவர்கள் பூமாலை தூவிப் பாராட்டினார்கள்,

ravi said…
மறுகணம், அந்த வில் முறிந்து விழுந்தது, நம் அவையில் உள்ள எல்லாரும் நடுக்கத்துடன் அவனைப் பார்த்தார்கள்!’

சீதைக்கு மகிழ்ச்சி. காரணம், ‘யாரோ ஒருவன், தம்பியோடும் முனிவரோடும் வந்தான்’ என்கிற வர்ணனை, அவள் மனத்தில் உள்ள அந்த ஆணுக்குப் பொருந்திப்போகிறது.

வில்லை முறித்தவன் அவன்தானா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.

ஆனாலும், அவனாகதான் இருக்கவேண்டும் என்று அவளுடைய உள்ளுணர்வுக்குத் தோன்றுகிறது.🏹🏹🏹
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 224🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
*2. Challenge -Olive Ridley Turtle*

Green peace is one of the top NGOs who were up in their arms always for any trivial issues .

They knew L&T was a Thick Skinner and TS was highly sensitive and emotional .

They objected through various several social media about port coming up near the turtles congregation area .

Many dead turtles pushed by the waves to the shore supported their argument that port was vulnerable of killing them .

There were illegal fishing through trawlers and the fans fitted in the bottom actually smeared their bodies into two when the boats encountered them ....

But we became poor victim for every single dead body of turtle ... 🐢
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் 23*☀️☀️🌞🌞🌞
ravi said…
ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரினிஷ்டித: |

ஏஷ ஏவாக்னிஹோத்ரம்ச பலம் ச்சைவாக்னி ஹோத்ரிணாம். || 23 ||
ravi said…
உலகத்து உயிர்களெல்லாம் உறங்கும் போதும் ஸூர்ய பகவான் விழித்து இருக்கிறார்.

அவர் அக்னியால் ஹோமம் செய்கிறார்.

அவரே அக்னி.

அக்னி ஹோமத்தின் கனிகளும் பலனும் அவரே.🏹🏹🏹
ravi said…
ராமா ஆதித்தன் யார் தெரியுமா ?

உன்னைப்போல் கொடுப்பவன் ...

உள்ளமெல்லாம் நிறைந்தவன் ...

ஊழி யும் தடுப்பவன் ...

உலகம் உய்ய உழைப்பவன் ..

உதவியே செய்து பதவியே வேண்டாம் என்றே சொல்பவன் ...

ராமா நீ பூவுலகில் ஜொலிக்கிறாய் அவனோ வானுலகில் ஜொலிக்கிறான்... 🌞🌞
ravi said…
மணம் நாறும் உன் தாளினை மனதில் பதித்தேன் ...

இடம் மாறும் பூக்கள் நடை பயின்று அங்கே மழை போல் கொட்டக் கண்டேன் ...

மறையின் பரிமளம் போல் என் குறை கொண்ட மனம் நிறை கண்டதே இன்று ...

இதுவும் உன் வல்லபமோ கருணா மூர்த்தியே 🌷🌷🌷
ravi said…
*திருவதிகையில் திருவடி சூட்டப் பெறுதல்:*🏹🏹🏹
ravi said…
ஒரு முறை சித்தவடம் என்னும் மடத்தில் தங்கினார் சுந்தரரே .

உடன் வந்த அடியார்களோடு அதிகை
வீரட்டானேஸ்வரரை இடைவிடாது எண்ணிய வண்ணம் துயின்றாரே

இறைவன் முதிய அந்தணர் வடிவம் பூண்டு யாரும் அறியாதபடி புகுந்து சுந்தரர் தலையின் மேலே தமது திருவடி படும்படியாக வைத்துத் துயில் கொள்வாரைப் போன்று இருந்தாரே

உடனே நம்பியாரூரர் விழித்து எழுந்து

"அருமறை யோனே! உன் அடிகளை என் தலைமேல் ஏன் வைத்தனையே" என்று கேட்டார்.

"நீர் துயிலும் திசையை அறியாவகை செய்தது என் முதுமை" என்றார் அந்தணரே

யாருக்கு கிட்டும் இந்த திருவடி சேவை ... என் சென்னிதனில் உன் சேவடி வைக்கவே மாலும் வணங்க நின்றோன்

வேதம் எனும் மெய்ப்பீடம் தினம் துதிக்கும் சேவடி நாயேன் தலையில் பதித்திடவே சுந்தரன் போல் பக்தி இல்லை .. சுவாமி நாதா!!

தண்டமான இவ்வாழ்க்கை உன் தண்டம் கொண்டே சீர் செய்வாயோ 💐💐💐
ravi said…
ஓம் நமோ ஸ்ரீவேங்கடேசாய 🙏🏻🙏🏻

||சடாரியின் மகத்துவம்||

பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதன் தத்துவம் !!

வைஷ்ணவக் கோவில்களில் பெருமாளை சேவித்த பிறகு, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள்.
ravi said…
சற்று கவனித்துப் பார்த்தால்,அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும்.

அதென்ன திருமுடியின் மேல் திருவடி?.

பெருமாளை சேவிக்கிறோம், துளசி தீர்த்தம் ஆனப் பிறகு, சடாரி வைத்துக் கொள்கிறோம். அதன் பின்னணியை பற்றி அறிந்துக் கொள்வோம்.

ஒருமுறை, தான் வாசம் செய்யும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் சமயம், தன்னுடைய சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து, ஆதிசேஷன் மீது வைத்தார்.
ravi said…
திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்கள் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன், வழக்கத்துக்கு மாறாக தன் பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார்.

ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. ஆனால், அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை.

சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, "கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில், தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்?" என்று கேட்டன.
ravi said…
இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்" என்றன பாதுகைகள்.

பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு.

பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை.

உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று, கோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன், "நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான்.
ravi said…
ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை.

புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான்" என்று பதிலுக்கு வாதிட்டன.
ravi said…
கிரீடத்துடன், சங்கும், சக்கரமும் சேர்ந்து கொண்டதால், தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியாமல்,பகவான் எப்போது வருவார். அவரிடம் முறையிடலாம் என்று கலங்கி காத்து நின்றன.
ravi said…
பகவான் வந்தார். அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி, பாதுகைகள் முறையிட்டன. "இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். தர்மத்தை நிலைநாட்ட ,ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது, சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள்.
ravi said…
அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.

அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது" என்றார் பகவான்.
ravi said…
பகவான் சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், அவரின் திருப் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே. சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம்முடைய 'நான்' என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும்,
என்பதே சடாரி சாதித்தலின் பின்னணியில் உள்ள தாத்பரியம்..

மூல ராமோ விஜயதே 🙏🏻🙏🏻
குரு ராஜோ விஜயதே 🙏🏻🙏🏻

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.
ravi said…
பகவான் சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், அவரின் திருப் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே. சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம்முடைய 'நான்' என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும்,
என்பதே சடாரி சாதித்தலின் பின்னணியில் உள்ள தாத்பரியம்..

மூல ராமோ விஜயதே 🙏🏻🙏🏻
குரு ராஜோ விஜயதே 🙏🏻🙏🏻

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 132* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
*36 स्तनभारदलन्मध्यपट्टबन्धवलित्रया - ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா*

இந்த நாமத்தை சொல்லும் போது பட்டரை நினைக்காமல் இருக்கவே முடியாது .. அன்னை பரமேச்வரனை ஒரு கொம்பாக பிடித்துக்கொண்டு அவன் மேல் ஒரு கொடியாய் படருகிறாளாம் ... சரி அவளே கொடியாய் இருந்தால் நாம் எப்படி அவளை பற்றிக்கொள்ள முடியும் ?

பட்டர் சொல்கிறார் அவள் பரமேஸ்வரனுக்கு மட்டுமே கொடியாய் இருக்கிறாள் ஆனால் நம் எல்லோருக்கும் கொம்பாய் இருக்கிறாள் .. தன் மீது அவள் நம்மை படர விடுகிறாள் ... அவள் மீது நாம் படரும் போது ஈஸ்வரனுடன் நம்மையும் சங்கமிக்க வைக்கிறாள் .. அவள் செய்யும் வல்லபம் யாரே அறிவார் .... 🤝🤝🤝
ravi said…
[18/02, 09:31] Shivaji L&T C: Sree Maathre Nama 🌹🌹🙏🙏
[18/02, 09:34] Metro Ad Vipul: 🌷🙏🏻
[18/02, 09:45] Metro Kowsalya: Sri Lalithaambike charanam charanam🙏🙏🌹🌹
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 132* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 28👍👍👍
ravi said…
ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்

விபத்யந்தே விஸ்வே விதி-ஸதமகாத்யா திவிஷத:

கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத:

காலகலனாநா
ந-ஸம்போஸ் தன் மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா 28
ravi said…
ருத்ரத்தில் " *யா தே ருத்ர சிவா தனூ: சிவா விச்வாஹ பேஷஜீ: சிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவசே"* என்று வருகிற வரியும் இந்த அர்த்தத்தில் தான்.

பொருளாவது, "பரமசிவனே, உனது சரீரத்தில் பாதியான பராசக்தியே உலகிற்கு மருந்து,

ருத்திரனாகிய உனக்கும் அவளே மருந்து.

அவளருளால்தான் நீ ஆலகாலத்தை உண்ட பிறகும் எங்களுக்காக பிழைத்து இருக்கிறாய்.👍👍👍
ravi said…
அபிராமி பட்டரும் இப்படித் தான் சொல்கிறார் .. மூவருக்கும் அன்னே உலகத்துக்கு அபிராமி எனும் அரும் மருந்தே ... பிணியே பிணி தீர்க்கும் மருந்தே .... 🙌🙌🙌
ravi said…
சிறுவயதில் #கடவுள்_மறுப்பு கோஷ்டியினர் கேட்கும் கேள்விகளை நானும் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன்..! - #சுஜாதா

எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், “வயசானா உனக்கே புரியும். புரியும்போது கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.!”

ravi said…
இந்தப் பதில் இன்னும் குழப்பும். அப்பா பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும்.

“நீ ஏதோ டபாய்க்கிற.!” என்பேன்.

“நீ சயன்ஸ் படிக்கிற, அதனால் இதை எல்லாம் கேட்கிற. நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்”, என்பார்.

ravi said…
அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும்போது நல்ல படிப்பு வர வேண்டும், மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக்கொள்ளச் சொல்லமாட்டார், அவர் வேண்டிக்கொள்ளச் சொல்லுவது, “நிறைய அறிவு கொடு என்று வேண்டிக்கோ”, என்பார். இவை எல்லாம் எனக்குப் புரிந்ததே கிடையாது.

ravi said…
சின்ன வயதில் அவர் சொன்னது சில வருடங்கள் முன் புளி டப்பாவைத் திறக்கும்போது புரிந்தது.

ravi said…
புளி டப்பாவைத் திறந்தபோது, அதிலிருந்து சின்னப் பூச்சி ஒன்று பறந்தது. ஏர்-டைட் டப்பர் வேர் புளி டப்பா. மூடியிருக்கிறது.! அதற்குள் பூச்சி எப்படி வந்தது என்று யோசித்து தலையைச் சொறிந்தேன். நான் சொறிந்துகொள்வதைப் பார்த்துத் தலையில் என்ன பேனா.?” என்றார்கள். தலையில் பேன் எப்படி உற்பத்தி ஆகியது என்று மேலும் பலமாகச் சொறிந்துகொண்டேன். ஷாம்பு போட்டுக் குளித்தால் அரிப்பு சரியாகிவிடும் என்று கூறினார்கள். குளித்துவிட்டு பெருமாள் சேவிக்கும்போது சாளரத்தைப் பார்த்தேன். சின்ன ஓட்டையில் எப்படியொரு பூச்சி சோறு தண்ணீர் காற்று எதுவும் இல்லாமல் உள்ளே தோன்றியிருக்க முடியும்.? என்று யோசித்தேன். மீண்டும் குழப்பம்.

ravi said…
கல்லிலிருந்து பூச்சி எப்படி வந்தது என்பது தெரியாமல் இருக்க, தூணிலிருந்து நரசிம்மன் எப்படித் தோன்றினார் என்று எனக்கு எப்படிப் புரியும்.? பூச்சிக்குத் தாய் யார் என்று தெரியாமல் முழிக்கும் எனக்கு நரசிம்மருக்கு யார் தாய் என்று புரிந்துகொள்ள முடியுமா.?

ravi said…
இந்தக் கேள்விகளுக்கு ஆழ்வார் பாசுரங்களையும் ஸ்வாமி தேசிகனையும் நாடினேன். ஸ்வாமி தேசிகன் நரசிம்மர் தூணிலிருந்து வந்தார், அதனால் அவருடைய தாய் அந்தத் தூண் தான் என்கிறார். தேசிகன் கூறிய பிறகு அதை மறுத்துப் பேச முடியுமா.?

ravi said…
(a+b) ² =a²+2 ab+b² என்பதை எப்படிக் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறோமோ அதே போல் ஆழ்வார்கள் ஆசாரியர்கள் எது செய்தாலும் அதில் தப்பிருக்காது என்று முதலில் நம்ப வேண்டும். ஆசாரியன் கூறிய பிறகு அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஞானம்.

ravi said…
வள்ளுவர்

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்கிறார்.
ravi said…
இதற்குப் பொருள், “எந்தப் பொருளை யார் சொன்னாலும், அதன் உண்மைத் தன்மையை அறிவது தான் அறிவு”. அதாவது பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. ஸ்ரீ வைஷ்ணவத்தில் பகுத்து அறிவதற்கு அறிவு கலங்க வேண்டும். எனக்கு அறிவு இல்லை என்று தெரிந்துகொள்வதே அறிவு என்கிறார் நம்மாழ்வார். கொஞ்சம் அறிவியல் படித்தவர்கள் கடவுள்பற்றிப் பேசுகிறேன் என்று அவர்களின் பி.எச்.டியை வைத்துக்கொண்டு கடவுளை ஒரு வரையறைக்குள் அடக்க முயற்சி செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

ravi said…
நம் சிறிய அறிவை வைத்துக்கொண்டு அவனை அளக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது. நம் அறிவு என்பது எவ்வளவு சின்னது என்று ஒரு கணிதவியலாளர் சொன்ன சோதனை மூலமே சொல்லுகிறேன்.
ravi said…
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு கணிதவியலாளரான Jules henri poincaré, "சிந்தனைப் பரிசோதனை" என்று ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளார். இந்தச் சோதனையை யாராலும் செய்து பார்க்க முடியாது. அதனால் நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள் :

ravi said…
இன்று தூங்கி நாளை எழுந்துகொள்ளும்போது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும்...உங்கள் அப்பா, அம்மா, நாய்குட்டி, விடு, கோயில், செடி, தட்டு, அரிசி, பேனா, பென்சில், சட்டை, அணுக்கள், நீங்கள் படுத்துத் தூங்கும் கட்டில், ஏன் நீங்களும் பெரிதாகிவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

மறுநாள் காலை நீங்கள் எழுந்த பிறகு எல்லாம் பெரிசாகிவிட்டது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்றால்...முடியாது என்கிறார் Jules henri. அவ்வளவு தான் நம் அறிவு.

ravi said…
சாதாரணமாக இதையே அளக்க முடியாதபோது பெருமாளை இப்படித்தான் என்று பேசுவது எல்லாம் டூமச்.

ஆலமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.

- திருப்பாணாழ்வார்

ravi said…
எழு உலகையும் உண்டு ஒரு குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்ட பெருமாள் என்று சொல்லும்போது உலகை உண்ட பிறகு அந்த இலையில் எப்படிப் படுத்துக்கொள்வான் என்று கேள்வி எழும்.

கோவர்த்தன மலையைத் திருப்பிக் குடையாய் பிடித்தபோது அதில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் கீழே சிந்தவில்லையாம். அதே போல மரங்கள் எல்லாம் எப்போதும் போலச் சாதாரணமாக இருந்ததாம்.

( உடனே புவியீர்ப்பு தத்துவம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நீங்க இன்னும் கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.! )

ravi said…
எப்படி என்று இதை எல்லாம் யோசிக்கவே முடியாது. முயற்சியும் செய்யாதீர்கள்.! இது தான் அகடிதகடனா சாமர்த்தியம். (லிஃப்கோ தமிழ் அகராதியில் - “perfectly accomplishing even the impossible” என்று கொடுத்திருக்கிறார்கள். ).

ravi said…
நம் இரைப்பையில் ‘ஹைட்ரோ குளோரிக் அமிலம்’ இருக்கிறது என்றால் நம்புவீர்களா.? அதை ஒரு பாட்டிலில் பிடித்து அடித்தால் ரவுடிகள் வீசும் ஆசிட் தோற்றுவிடும். அந்த அமிலம் கையில் பட்டால் நம் கை ஓட்டையாகும்.! ஹார்பிக் என்ற நம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வஸ்துவில் 10% இந்த அமிலம்தான் இருக்கிறது. நம் வயிறு, ஆசிட் வைத்திருக்கும் ரவுடி.! இவ்வளவு மோசான ஆசிட் உள்ளே இருக்க நம் வயிறு ஏன் இன்னும் பஞ்சராகவில்லை.? பேன் தலையில் இருந்தால் அந்த ‘இச்சிங்’ உணர்வை நாம் எப்படி உணர்கிறோம். இச்சிங்கோ, டச்சிங்கோ நாம் அதை உணர்வது எப்படி.? உணர்த்துவது யார்.? என்று கேட்கும் கேள்விகளுக்கு விடை ஆழ்வார் பாசுரங்களில் எங்கோ புதைந்து இருக்கிறது.

ravi said…
நாம் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறோம். பதவி உயர்வு, பணம், வீடு வாசல் வேண்டும். தேர்வில் மதிப்பெண், கல்யாணம், வெளிநாட்டு வீசா, சில சமயம் காகிதத்தில் எழுதி ஆஞ்சநேயர் கழுத்தில் கூட மாட்டிவிடுகிறோம். ‘உண்டியே உடையே உகந்து ஓடும்’ என்று ஆழ்வார் சொல்லுவது போல ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் என்றாவது எனக்கு ’அறிவு இல்லை, அது வேண்டும்', என்று பெருமாளிடம் கேட்டிருக்கிறோமா.? கேட்டதில்லை, காரணம் நம்மை நாமே அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்கிறோம்.

ravi said…
இதைச் சுலபமாகப் புரிந்துகொள்ள நம்மாழ்வாரின் இந்தப் பாசுரத்தைப் பார்க்கலாம்.

அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த, நிறைஞானத்து ஒரு மூர்த்தி
குறிய மாண் உரு ஆகி, கொடுங் கோளால் நிலங் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே.

ravi said…
நிறை ஞானத்து மூர்த்தியான கண்ணன் உலகில் உள்ள அறிவு படைத்த நமக்குக் கீதையை அருளினான் என்று இதற்குப் பொருள் கூறினால் அது தப்பு. ‘அறிவில் குறைவில்லை’ என்று சொல்லும் அறிவில்லாதவர்களுக்குக் கீதையை உரைத்தான் என்று படிக்க வேண்டும்.

கட்டுரையின் கடைசிக்கு வந்துவிட்டோம். மீண்டும் நம்மாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம்.

உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வு அற மதி-நலம் அருளினன் எவன் அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயர் அறு சுடர்-அடி தொழுது எழு என் மனனே.!

என்ற பாசுரத்தைப் படிக்கும்போது, நம்மாழ்வாரும் நம்மைப் போலக் கேள்விகள் தான் கேட்கிறார் என்று தோன்றும். ஆனால் இந்தப் பாசுரத்திலேயே பதில் இருக்கிறது.! இந்தப் பாசுரத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

உயர்வு அற உயர் நலம் உடையவன் எவனோ,
அவனே மயர்வு அற மதி-நலம் அருளினன் எவனோ
அவனே அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவனோ
அவனையே துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே.!

ஏன் நம்மாழ்வார் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு அதே பாசுரத்தை இப்படிப் படிக்க வேண்டும்.

உயர்வு அற உயர் நலம் உடையவனான அவனே,
அயர்வு அறும் அமரர்களுக்கு அதிபதியான அவனே நம்மாழ்வாருக்கு
மயர்வு அற மதி நலம் அருளினான் ஆகையால் நம்மாழ்வார் கூறும்
அறிவுரைகளின் படி அவனைத் துயர் அறு சுடர் அடி தொழுது எழ வேண்டும்.

*சில சமயம் கேள்வியே பதிலாக இருக்கும்.!* ❣❣

படித்ததில் ரசித்தது...!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 131💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 18 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
சிவானந்தலஹரியில அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பார்ப்போம். 19ஆவது ஸ்லோகம்

दुराशाभूयिष्ठे दुरधिपगृहद्वारघटके

दुरन्ते संसारे दुरितनिलये दुःखजनके ।

मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये

वदेयं प्रीतिश्चेत्तव शिव कृतार्थाः खलु वयम् ॥

து³ராசாபூ⁴யிஷ்டே² து³ரதி⁴பக்³ருʼஹத்³வாரக⁴டகே

து³ரந்தே ஸம்ஸாரே து³ரிதனிலயே து:³க²ஜனகே ।

மதா³யாஸம் கிம் ந வ்யபனயஸி கஸ்யோபக்ருʼதயே

வதே³யம் ப்ரீதிஸ்சேத்தவ சிவ க்ருʼதார்தா:² க²லு வயம் ॥

ன்னு ஸ்லோகம்
ravi said…
*து³ராசாபூ⁴யிஷ்டே²* – கெட்ட ஆசைகள் நிறைந்ததும்,

*து³ரதி⁴ப –* அதிபர்கள்னா bosses. துரதிப: னா கெட்ட அதிகாரிகள்.

*க்³ருʼஹ த்³வார க⁴டகே* – வீட்டு வாசல்ல போய் நின்னுண்டு, இந்த கெட்ட ஆசைகள் என்ன பண்றதுன்னா, யாராவது ஏதாவது பணம் கொடுப்பாளான்னு அவாளோட வீட்டு வாசல்ல போயி நிறுத்திடறது.

அப்படி நின்னா *துரந்தே* – அதோட முடிவு எப்படி இருக்குன்னா, அதோட முடிவும் நன்னாயில்ல.

அவமானப் பட வேண்டியிருக்கு.

*து³ரிதனிலயே* – பாவத்துக்கும் இருப்பிடமா இருக்கு. அவா சொன்ன காரியங்கள் எல்லாம் நாம பண்ணினா பாபம் வந்து சேர்றது

*து:³க²ஜனகே* – இதுலேருந்து பணம் சம்பாதிச்சுண்டு வந்து சுகப்படப் போறோமோன்னு நினைக்கறோம். ஆனா அது துக்கத்துலதான் கொண்டு போய் விடறது.👍🤝
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 143* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️

48வது திருநாமம்
ravi said…
*48. பத்மநாபாய நம: (Padmanaabhaaya namaha)*
ravi said…
அப்ரமேயோ ஹ்ருஷீகேச ’:
*பத்மநாபோ* (அ)மரப்ரபு: |

விச்’வகர்மா மனுஸ்‌ த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
ravi said…
ஓ பத்மநாபா!” என்று திருமாலை அழைத்தார் பிரம்மா. ‘ *பத்மம்* ’ என்றால் தாமரை.

‘பத்மநாபன்’ என்றால் நாபியில்
தாமரையை உடையவன் என்று பொருள்.

பத்மநாபனாகிய திருமால், “பிரம்ம தேவரே! பிரளயக் கடலினுள்ளே தாமரைத் தண்டுக்கு
ஆதாரமாக இருப்பவன் நான்தான்.

நீங்கள் அமர்ந்திருக்கும் வட்ட வடிவிலுள்ள தாமரையே காலச்சக்கரம்.
நீங்கள் என்னால் படைப்புக் கடவுளாக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

என் அருளால் நீங்கள் இப்போது வேதங்கள் முழுமையையும்
அறிந்தவராக ஆகி விடுவீர்கள்.

இனி அந்த வேத மந்திரங்களைக் கொண்டு என்னை ஆராதித்து,
வேதத்தின் கட்டளைப்படி உலகத்தைப் படைக்கத் தொடங்குங்கள்!” என்றார்.
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 131* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
35 * लक्ष्यरोमलताधारतासमुन्नेयमध्यमा - லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய மத்யமா

இடையே இல்லாத அம்பாளையும் சீதையையும் பார்த்தோம் .. இறைவன் உண்டா இல்லையா என்ற கேள்வியைப்போல் இருப்பது அம்பாளின் இடை ... சரி அடுத்த திருநாமம் பார்ப்போம் இன்று
ravi said…
வாக் தேவிகள் விடுவதாய் இல்லை .. இடை உண்டு என்று சாதிக்கிறார்கள்.. கடவுள் இல்லை என்று ஆகி விடக்கூடாதே

*36 * स्तनभारदलन्मध्यपट्टबन्धवलित्रया - ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா -*

அம்பாளின் இடையில் வயிறுபாகம் என்று ஒன்று இருக்குமானால் அதில் மூன்று வரிகள் போல் சுற்றிக் கொண்டிலிருக்கும் கொடிகள் போல் காணப்படுமாம்.

அதிலிருந்து ஓஹோ இடை என்று ஒன்று இருக்கிறது அம்பாளுக்கு என புரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் ..🤝🤝
ravi said…
[17/02, 09:06] Metro Ad Vipul: அற்புதம்🙏🏻🌺
[17/02, 09:10] Metro Kowsalya: அற்புதம்...🙇‍♀️🙇‍♀️🙏🙏🌹🌹
ravi said…
வெளிநின்ற நின் திருமேனியைப்
பார்த்து விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை;

கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.👍
ravi said…
ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்

விபத்யந்தே விஸ்வே விதி-ஸதமகாத்யா திவிஷத:

கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத:

காலகலனாநா
ந-ஸம்போஸ் தன் மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா 28
ravi said…
அம்பிகே!

ப்ரம்மன், இந்திரன் போன்ற தேவர்கள் எல்லாம் தமது கிழத்தன்மை/மரணம் பீடிக்காதிருக்க அம்ருதம் பருகியவர்களாக இருந்தாலும் ப்ரளயகாலத்தில் அழிந்துவிடுகிறார்கள்.

ஆனால் உனது பதி பரமசிவனோ ஆலகால விஷத்தை பருகிய பின்னரோ அல்லது ப்ரளயகாலத்திலோ கூட அழிவதில்லை.

இதற்கான காரணம் பரம பதிவ்விரதையான நீ, உனது செவிகளில் பூட்டியிருக்கும் தாடங்கம் என்னும் கர்ணாபரணத்தின் மஹிமைதான்.

அந்தக் காலத்தில் சுவாசினிகள் இன்றுபோல திருமாங்கல்யம் அணியும் முறை கிடையாது.

சுமங்கலிப் பெண்கள் அணிவது கருகமணியும், பனை ஓலையால் ஆன காதணியும் தான்.

இன்றும் இல்லங்களில் வர-மஹாலெக்ஷ்மி அம்மனை ஜோடனை செய்கையில் இந்த காதோலை-கருகமணி (ரோஸ் கலரில் சுருட்டப்பட்ட பனை ஓலை ஒரு கருப்பு நிற சிறு வளையத்துள் நுழைத்தது) சார்த்தப்படுகிறது.

அதுபோல அன்னை அணிந்த தாடங்கத்தின் மஹிமையைத்தான் ஆச்சார்யார் இங்கே குறிப்பிடுகிறார்.

இதைத்தான் காளிதாசன் " *தாலீ பலாச தாடங்காம்"* என்று சொல்வதாக பரமாச்சார்யார் சொல்லியிருக்கிறார்.

அதாவது தாலீ என்பது பனை மரத்தைக் குறிக்கும்.

இலைகளை சாதாரணமாக *பலாசம்* எனக் கூறுவார்கள்.

சூர்ய-சந்திரர்களே அம்பாளின் தாடங்கங்கள் என்று சஹஸ்ரநாமம் கூறுகிறது.🤝🤝🤝
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் 24*☀️☀️🌞🌞🌞
ravi said…
வேதஷ்ச க்ரத்வஷ்ச்சைவ க்ரதூனாம் பலமேவச |
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: || 24 ||
ravi said…
ஸூர்ய பகவான் வேதங்களின் சாரத்தில் இருக்கிறார்.

தத்தம் கடமைகளை உண்மையுடன் செய்பவர்களுக்கு, கடமையின் பலனாக இருக்கிறார்.

வல்லமை பொருந்திய ஸூர்ய பகவானே எல்லா செயல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
ravi said…
பார்க்கும் இடம் எங்கும்.ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே

பரம்பொருளே எங்கள் பவித்தரமே ...
விழியின் பாவையே விடிவெள்ளி என வரும் ஆதவனே வேண்டதக்கது நீ அறியாய் எனில் வாழும் வாழ்வில் ஒரு அர்த்தம் உண்டோ ?👌
ravi said…
*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 226🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
*3... Port is coming up on forest land*

Road , Railway , mission centre followed by ORT ...Now next threat was NGO's slogan that port was being constructed on forest land ....

Coast of Orissa is mostly depositional in nature, its formation being mainly influenced by the Mahanadi and Brahmani

– Baitarani river deltas.

In 1974, the Government of Orissa divided its coast into five cyclone zones for the purpose of coastal zone management

The port is located at roughly 20 0 47’N and 0 86 58’E on the coast to the north of the Dhamra river mouth, which is formed by the confluence of the Baitarani and Brahmani rivers.

The region is extremely flat and highly susceptible to cyclonic storm surges...
ravi said…
*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 225🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
*2. Olive Ridle Turtle* ...

I always wonder how they year after year come to the same spot for congregation . This is happening generation after generation without fail ...

I read a book on this turtle and found out the truth . It has good memory power and intuition . It lives for more than 100 years unless the trawler or any other enemies terminate its life prematurely ..

It senses where their generation congregate and by swimming across several miles , locations it reaches this place ... What a creation in the galaxy of divinity ....
ravi said…
*பரவையார் திருமணம்:*

திருக்கயிலாய மலையில் ஆலாலசுந்தரரால் காதலிக்கப்பெற்ற மகளிர் இருவருள் ஒருவராகிய கமலினி என்பார் திருவாரூரில் உருத்திர கணிகையர் குலத்துட் பிறந்து பரவையார் என்னும் பெயரைப் பெற்றுத் திருமகளே இவள் என்று சொல்லுமாறு பேரழகோடு வளர்ந்து திருமணபருவம் எய்தினாரே.

பரவையார் தம் தோழியர்களுடன் வழக்கம் போல் திருவாரூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வரும் நாட்களில் ஒருநாள் சுந்தரர் சிவபிரானை வணங்கிக்கொண்டு அடியார்கள் சூழத் திரும்பி வரும் போது ஊழ்வினை பரவையாரைக் கண்டாரே.

இருவரும் அன்பு கொண்டனரே

இருவரும் வன்மீகநாதரிடம் தங்கள் விருப்பத்தை வேண்டினார்களே.

நடப்பவை ஈசன் செயல் அல்லவா!

சிவபெருமான் அன்றிரவே அடியார்கள் கனவில் தோன்றிப் பரவையாரைச் சுந்தரர்க்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு பணித்தருளினாரே

சொர்க்கத்தில் நிச்சியத்த திருமணம் திருவாரூரில் ஜாம் ஜாம் என்றே நடக்க சுந்தரர் அதி சுந்தரராய் ஆகி காஞ்சி வந்தே பாதம் பதித்தனரே 👍
ravi said…
மலர் நீயே எனில் வளர் பிறையும் தேயுமோ .. ??

குவளையும் கூம்புமோ

கமலங்கள் கலங்குமோ? ..

கற்பூர மணம் நாறும் உன் பாதங்கள் என் சென்னியில் பதிந்தால் உள்ளிருக்கும் அழுக்குகள் செந்தீயில் இட்ட துரும்பை போல் துடி துடித்து சாம்பல் ஆகாதோ ... 💐💐💐
ravi said…
*தம்பிரான் தோழராதல்:*

திருவாரூரில் கோயில்கொண்டருளிய இறைவர் அடியார்கள் கனவில் தோன்றி "நம் ஆரூரனாகிய வன்றொண்டன் நாம் அழைக்க இங்கு வருகின்றான்.

நீங்கள் மகிழ்ந்து அவனை எதிர்கொண்டழைத்து வருக" எனக் கட்டளையிட்டாரே.

திருவாரூரை அலங்கரித்து எல்லோரும் கூடி மங்கல வாத்தியங்களுடன் சென்று வன்றொண்டரை எதிர் கொண்டழைத்தார்களே

நம்பியாரூரரும் தம்மை எதிர்கொண்டழைத்த அடியார்களைத் தொழுது,

"எந்தையிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்" என்ற கருத்துக்கொண்ட :கரையும் கடலும்" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிக் கொண்டு திருக்கோயில் வாயில் அணுகினாரே.

அப்பொழுது யாவரும் கேட்க வானில் "நம்பி யாருரனே! தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம். நீ எம்மால் தடுத் தாட்கொள்ளப்பெற்ற அந்நாளில் கொண்ட திருமணக் கோலத்தையே எப்பொழுதும் மேற்கொண்டு இந்நிலவுலகில் இன்புற்று வாழ்வாயாக" என்ற அருள்வாக்குத் தோன்றிற்று.

அசரீரி கேட்ட சுந்தரர் பெருமானது கருணையை வியந்து போற்றி வாழ்த்தினார். அன்று முதல் அடியார்களெல்லாம் அவரைத் "தம்பிரான் தோழர்" என்று அழைத்தனர்.

இறைவன் கட்டளைப்படி திருமணக் கோலத்தோடு தூய தவ வேந்தராய்ப் பூங்கோயிலமர்ந்த பிரானை நாடோறும் வழிபட்டு இன்னிசைத் தமிழ்மாலை பாடியிருந்தார் சுந்தரர்.

சுந்தரரும் சுவாமி நாதனும் ஒருவரே அன்றோ ... தம்பிரான் தோழர் என்றே சொன்னாலும் ஆகுமோ மிகை ...🌞🌞
ravi said…
துணையின்றி தவித்தேன் உனை யன்றி ஒருவரும் ஓடி வரக்காணேன்...

உன் நினைவின்றி வாழும் உயிர்கள் உன் அருள் இன்றி ஏன் உலவ விட்டாய் ...

பொருள் இன்றி போனாலும் உன் நினைவின்றி வாழுதல் கோடி நரகம் அன்றோ ...
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அம்பாள்தான் ஞானம். ஸத்-சித்-ஆனந்தம் என்று அடிக்கடி கேள்விப்படுகிறோமே, அதில் சித் என்கிற பேரறிவான ஞானம் அம்பிகைதான். சைதன்ய ரூபிணி என்பார்கள். ”சிதேக ரஸ ரூபிணி” என்று [லலிதா] ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. காளஹஸ்தியில் ஞானாம்பாள் என்றே அவள் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள்.
ravi said…
அம்பாள்தான் குரு ரூபத்தில் வருபவள் என்று பெரியவர்கள் அநுபவத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
ravi said…
காளிதாஸன் [‘நவரத்ந மாலிகா’வில்] “தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்” என்கிறார். அம்பாள் தன்னுடைய காருண்ய விலாஸத்தை குரு ஸ்வரூபமாக வந்தே காட்டுகிறவள் என்று அர்த்தம். ‘தேசிக’ என்பதும் குரு, ஆசார்ய என்பவை போல நம்மை நல்ல வழிக்கு நடத்திக் கொண்டு போகிறவரைக் குறிக்கும்
ravi said…
இன்னொரு வார்த்தை. [வைஷ்ணவர்களில்] வடகடலை ஸம்ப்ரதாயத்துக்கு மூலபுருஷரை வேதாந்த தேசிகர் என்றே சொல்கிறோம். அந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் தேசிகர் என்று ‘ர்’ போடாமல், தேசிகன் என்று ‘ன்’ போட்டே சொல்வார்கள். ரொம்பவும் மரியாதை முற்றி அன்பு மேலிடுகிறபோது ஏகவசனம்தான் வந்துவிடும். பகவானையே ‘நீ’ என்றுதான் சொல்கிறோம்; ‘நீங்கள்’ என்பதில்லை.
ravi said…
அப்படி தேசிகரை தேசிகன் என்றே அவரை அநுஸரிப்பவர்கள் பிரேமையினால் சொல்வார்கள். நம் பகவத்பாதாளை அவர் காலத்திலேயே அவருடைய நேர் சிஷ்யரான தோடாகாசார்யார் ஸ்தோத்திரித்தபோது, ”சங்கர தேசிக மே சரணம்” என்றே ஒவ்வொரு அடியிலும் முடித்திருக்கிறார்1.
அம்பாள் தேசிக ரூபத்தில் வந்து ஞானம் தருவதாகச் சொல்லியிருக்கிறது. குறிப்பாக ஸ்பர்ச தீக்ஷை, நயன தீக்ஷை, மானஸ தீக்ஷை ஆகியற்றில் ஒவ்வொன்றையும் அவள் ஒவ்வொரு ரூபத்தில் செய்வதாகச் சொல்வார்கள்.
ravi said…
அம்பாளுக்கு கண்ணழகை, கடாக்ஷ விசேஷத்தை வைத்து மூன்று பிரஸித்த க்ஷேத்ரங்களில் மூன்று விதமான ரூபங்கள் இருக்கின்றன. காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்னும் ரூபங்கள். காஞ்சீபுரத்தில் காமாக்ஷியாகவும், மதுரையில் மீனாக்ஷியாகவும், காசியில் விசாலாக்ஷியாகவும் இருக்கிறாள். மூன்றிலும் கண்ணழகு, கடாக்ஷ விசேஷம் என்று சொன்னாலும் மூன்றிலுமே நயன தீக்ஷை தருகிறாள் என்று சொல்வதில்லை. மீன்தானே நயன தீக்ஷைக்குச் சொன்னது? மீனாக்ஷி என்ற பெயரிலேயே மீன் இருக்கிறதே!
ravi said…
இதனால் அவளைத்தான் கடாக்ஷத்தாலேயே ஞான தீக்ஷை தந்துவிடும் குருவாகச் சொல்லியிருக்கிறது. இது மத்ஸ்ய தீக்ஷை. காமாக்ஷி பக்தனை ஸ்பரிசித்து, அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்கிவிடுபவள். ”ஸெளந்தர்யலஹரி” ஸ்தோத்திரிக்கிற மூர்த்தி காமாக்ஷி தான்–கரும்பு வில், புஷ்ப பாணம், பாச அங்குசத்தோடு சதுர்புஜையாக இருக்கிற மூர்த்தி. அதிலே ஒரு ஸ்லோகத்தில்2 ஆசார்யாள் அம்பாளிடம், ”வேதங்கள் உபநிஷத்து என்கிற தங்களுடைய சிரஸிலே தாங்கிக் கொண்டிருக்கிறவையான உன்னுடைய திருவடிகளை என் தலையில்கூட தயையினால் வையம்மா!” என்று பிரார்த்திக்கிறார்.
ச்ரூதீநாம் மூர்தாநோ தததி தவ யௌ சேகரதயா
மமாப்யேதௌ மாத : சிரஸி தயயா தேஹி சரணௌ |
உபநிஷத்துக்கள்தான் வேதாந்தம் என்பது. ஆசார்யாளின் அத்வைதமான ஞானமார்க்கத்துக்கு வேதாந்த ஸம்ப்ரதாயம் என்றே பெயர். அதனால் இங்கே ஆசார்யாள் ஞான குரு ரூபிணியாகவே அம்பாளை பாவித்துத் திருவடி தீக்ஷை வேண்டுகிறார் என்று ஆகிறது. அதற்குக் காமாக்ஷியிடம் ஸ்பர்சமான குக்குடதீக்ஷை கேட்டிருக்கிறார். காசியிலே இருக்கப்பட்ட விசாலாக்ஷி பக்தர்களை அநுக்ரஹ சிந்தையோடு மனஸால் நினைத்தே ஞானம் அளித்துவிடும் கமட தீக்ஷை குருவாயிருப்பவள்.
Hemalatha said…
பெருமிதம் கொள்ள வேண்டிய பெண். இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.அறிவில் அவர்கள் அப்பாவை போல் அக்ஷய பாத்திரம் என்று நினைகின்றேன்
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 132💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 18 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
சிவானந்தலஹரியில அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பார்ப்போம். 19ஆவது ஸ்லோகம்

दुराशाभूयिष्ठे दुरधिपगृहद्वारघटके

दुरन्ते संसारे दुरितनिलये दुःखजनके ।

मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये

वदेयं प्रीतिश्चेत्तव शिव कृतार्थाः खलु वयम् ॥

து³ராசாபூ⁴யிஷ்டே² து³ரதி⁴பக்³ருʼஹத்³வாரக⁴டகே

து³ரந்தே ஸம்ஸாரே து³ரிதனிலயே து:³க²ஜனகே ।

மதா³யாஸம் கிம் ந வ்யபனயஸி கஸ்யோபக்ருʼதயே

வதே³யம் ப்ரீதிஸ்சேத்தவ சிவ க்ருʼதார்தா:² க²லு வயம் ॥

ன்னு ஸ்லோகம்
ravi said…
இப்பேற்பட்ட பிறவிச் சூழலில் துன்பத்தை விளைவிப்பதான ஸம்சாரம் –

இப்பேற்பட்ட பிறவிச் சூழலில் *மதா³யாஸம் கிம் ந வ்யபனயஸி* – நான் சுத்தி வந்துண்டிருக்கேன்.

இந்த ஆயாசம் என்னுடைய இந்த துன்பத்தை, களைப்பை, நீ ஏன் போக்க மாட்டேங்கற?

*கஸ்யோபக்ருʼதயே –* கஹ ன்னா பிரம்மா.

பிரம்மாவுக்கு அவருக்கு உபகாரம் பண்ணலாம், அவர் சொன்ன வார்த்தையே இருக்கட்டும்.

என் தலையில எழுதினதே இருக்கட்டும்.

அதை அனுபவிக்கட்டும்னு விட்டுட்டியோ! ன்னு சொல்றார் –

ஹே சிவ! வத – நீயே சொல்லு *அயம் ப்ரீதிஸ்சேத்தவ* – இது உனக்கு ப்ரீதியா இருந்தா *க்ருʼதார்தா:² க²லு வயம் –* நாங்கள் ரொம்ப கொடுத்து வெச்சவான்னு சொல்றார்.

அலுத்துக்கற மாதிரி சொல்றார். –

நான் சுத்தி வந்துண்டிருக்கேன். இந்த ஆயாசம் என்னுடைய இந்த துன்பத்தை, களைப்பை, நீ ஏன் போக்க மாட்டேங்கற?
ravi said…
இதையே அபிராமி பட்டரும் இப்படி சொல்கிறார் .

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்

கதியுறும் வண்ணம் கருது கண்டாய்;

கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.🙌🙌🙌🙌
.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 144* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️

48வது திருநாமம்
ravi said…
*48. பத்மநாபாய நம: (Padmanaabhaaya namaha)*
ravi said…
அப்ரமேயோ ஹ்ருஷீகேச ’:
*பத்மநாபோ* (அ)மரப்ரபு: |

விச்’வகர்மா மனுஸ்‌ த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
ravi said…
இந்தக் காட்சியை இன்றும் திருவனந்தபுரத்தில் காணலாம்.

அனந்தபத்மநாப ஸ்வாமியின் உந்தியில் இருந்து தோன்றும் தாமரையில்
பிரம்மா வீற்றிருக்கிறார்.

காலச்சக்கரமாக அவரது உந்தித் தாமரை விளங்குவது போல், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எனும்
முக்காலங்களையும் குறிக்கும் விதமாக அங்கே மூன்று வாசல்கள் உள்ளன.

இவ்வாறு நாபியில் பத்மத்தை உடைய எம்பெருமான் ‘ *பத்மநாப* :’ என்றழைக்கப்படுகிறான்.

திருவனந்தபுரம் அனந்தபத்மநாபஸ்வாமியைத் தியானித்தபடி “ *பத்மநாபாய நம:”* என்று ஜபம் செய்பவர்கள்
நன்மக்களைப் பெற்று மகிழ்வார்கள்🤝🤝🤝
Savitha said…
அனந்தனுக்கு ஆயிரம் பூக்கள் 🌼🌼🌼🌼

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை