ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 18.. வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா பதிவு 25
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
பதிவு 25
18 वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना- வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
அழகிய தடாகத்தில் கண்ணைப் பறிக்கும் வண்ண மீன்கள் துறுதுறுவென்று அசையுமே அது போன்ற அழகிய கயல் விழிகள் கொண்டவள் அம்பாள்.🐟🐟🐡🐡🐋🐋🐳🐳🐬🐬🐠🐠🐠
வக்த்ர= முகம் ;
பரீவாஹ = நீர் நிலை, பாயும் நீர் நிலை
லக்ஷ்மி பரீவாஹ=
ஸ்ரீலக்ஷ்மிக்குரிய நீர் நிலை
சலன் = நகர்தல்
மீனாப லோசன = மீனையொத்த விழிகள் (உவமை)
முகத் தடாகத்தில் விளையாடும் மீன்களென இரு விழிகள் கொண்டவள்.
ரூப அழகிற்க்காக மட்டுமின்றி, தன்னின்று தோன்றிய சிருஷ்டியை இமைவிலகாது கடைக் கண்ணால் காப்பாதால், விழிகள் அங்கும் இங்கும் அலைபாயும் மீன்களுக்கு உவமையாகிறது.👌👌👌👌👌👌👌👌👌👌
மதுரையில் பொற் தாமரை குளத்தில் மீன்கள் வாழ்வதில்லை .. காரணம் தெரியுமா ?
மீனாட்சி தன் கண்கள் எனும் தடாகத்தில் எல்லா மீன்களையும் பிடித்து ஓட விடுகிறாள் அவைகள் இங்கும் அங்கும் ஒட்டிக்கொண்டே யாருக்காவது எந்த கஷ்ட்டம் வந்தாலும் உடனுக்குடன் அம்பிகைக்கு தெரிவித்து அவளை ஓடி வரச் செய்கின்றன ..
மீனலோசனி .. விசாலாட்சி .. விரிந்த கண்களை உடையவள் ... காமாக்ஷி .. கண்களால் ஆட்சி செய்பவள் ..
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் மீனாட்சி எனும் திருநாமம் வருவதில்லை அதற்கு பதில் மீன லோசனா என்றே வருகின்றது
🐟🐟🐡🐡🐠🐠🐬🐬🐳🐳🐋🐋🦚🦚🦚🌸🌸🌸
வக்த்ர லக்ஷ்மீ பரீவாஹ சலன் மீனாப லோசனா -
அம்பாளின் திருமுகத்திலிருந்து மங்கலமான அழகு பிரவகிக்கிறது.
அந்தப் பிரவாகத்தில் ஓடுகின்ற மீன்கள்தாம், அவளுடைய கண்களாக விளங்குகின்றன.
அவள் மீனலோசனி. மீன்கள், குஞ்சுகளைப் பார்வையினாலேயே வளர்ப்பதாக ஐதிகம். அதன்படியே அம்பாளும், தன்னுடைய கருணாகடாக்ஷத்தால் பக்தக் குழந்தைகளை வளர்க்கிறாள்.
'சலன் மீனாப லோசனா' என்பதற்கு உள்ளார்ந்த அழகொன்று இருக்கிறது.
அலைந்து கொண்டேயிருக்கிற கண்கள் எனலாம்.
மீன்கள், நீரில் அலைந்து கொண்டேயிருக்கும்; அதுபோல், அம்பாளின் கண்களும் எப்போதும் சலனப்பட்டுக் கொண்டே, அசைந்து கொண்டேயிருக்கின்றன.
ஏன்?
திருவரங்கத்துப் பெருமாளைப் பாடுகிற திருப்பாணாழ்வார், பெருமாளின் அற்புதமான கண்களையும் பாடினார். '
கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடிய பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே....'
கறுப்பாகவும், பிரகாசமாகவும், பெரியனவாகவும், செவ்வரி பாய்ந்தனவாகவும் உள்ள அக்கண்கள், புடை பரந்தனவாம்.
அதாவது, அங்குமிங்கும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேயிருக்கும் கண்கள். பகவானுடைய கண்கள் ஏன் புடை பரக்க வேண்டும்?
பகவான் என்ன செய்கிறார் - தன்னுடைய பக்தர்கள் எங்கே எங்கே என்று சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்.
கல்யாண வீடென்று வைத்துக் கொள்வோம்; அம்மா என்ன செய்வாள்? தன்னுடைய குழந்தை பத்திரமாக சுழற்றிக் கொண்டேயிருப்பாளில்லையா?
அதுபோல், ஜகன்மாதாவான அம்பாளும் தன்னுடைய குழந்தைகளைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். மீனாக்ஷியாகவும் மீனலோசனியாகவும் இருப்பவள், தன்னுடைய கண்களாலேயே பக்தர்களைக் கடாக்ஷிக்கிறாள்.
லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பாளை வர்ணித்துக் கொண்டு வரும்பொழுது “வக்த்ர-லக்ஷ்மீ-பரீவாஹ-சலந்-மீநாபலோசநா” என்று சொல்கின்றது.
“வக்த்ர லக்ஷ்மீ” என்றால் அம்பாளுடைய முக காந்தி.
அது ஒரு பெரிய பிரவாஹமாக (பரீவாஹம்) இருக்கின்றது.
இப்படி முகதேஜஸ் பெருக்கெடுத்து ஓடுகின்றது என்றால் – நீர்ப்பெருக்கில் மீன் இருக்க வேண்டுமே இந்த காந்தி ஸமுத்ரத்தில் எங்கே மீன்?
நீண்டு நீண்டு விளங்கும் அம்பாளுடைய நேத்ரம் இருக்கிறதே அதுதான் மீன். லோசனம் என்றால் கண்.
(‘லோகனம்’ என்றால் ‘பார்ப்பது’. பார்க்கப்படுவதால்தான் ‘லோகம்’ என்றே பேர்).
மீன் மாதிரி வடிவத்தில் இருக்கிற லோசனம் – ‘மீநாபலோசனம்’. ‘மீநாக்ஷி’ என்று அப்பட்டமாகச் சொல்லாமல் ‘மீநாபலோசனா’ என சொல்லியிருக்கின்றது.
செளந்தர்யலஹரி 48, 49,50,51,52,53,54, 55 &56
48 கண்களின் அழகு
நவக்கிரஹ தோஷ நிவிருத்தி
49 எட்டு விதமான கண்ணோட்டம்
ஸர்வ ஜயம், நிதி தர்சனம்
50 மூன்றாவது கண்
தூரதர்சனம், வைசூரி நோய் நிவாரணம்
51 தேவியின் பார்வையில் எட்டு ரஸங்கள்
ஸர்வஜன வச்யம்
52 மன்மத பாணங்களைப் போன்ற கண்கள்
காமஜயம், காது, கண்களின் ரோக நிவாரணம்
53 மும்மூர்த்திகளைச் சிருஷ்டிக்கும் முக்குணங்களைப் படைத்த கண்கள்
தேவி பிரத்யக்ஷம், ஸகல லோக வச்யம்
54 மூன்று புண்ணிய நதிகளைப் போன்ற கண் ரேகைகள்
ஸர்வ பாப நிவ்ருத்தி, உபஸ்தரோக நிவாரணம்
55 கண்கள் முடாமல் இருக்கும் காரணம்
ரக்ஷிக்கும் சக்தி; அண்டரோக நிவாரணம்
56 அழகில் மீன்களையும், நீலோத்பவத்தையும் வெல்லும் கண்கள்
பந்தவிமோசனம், நேத்ரதோஷ நிவாரணம்
57 எங்கும் சமமாகப் பிரகாசிக்கும் நிலவு போன்ற கடாக்ஷம்
ஸகல ஸௌபாக்கியம்
58 மன்மதபாணம் போன்ற கடைக்கண் பார்வை
காமஜயம், ஸகலரோக நிவிருத்தி
🐟🐟🐡🐡🐠🐠🐬🐬🐳🐳🐋🐋🦚🦚🦚🌸🌸🌸
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Comments
இந்த பை அப்படீங்கற நம்பர் வருது. அப்படீன்னா நம்மால் பிரபஞ்சத்தில் எதையும் இது இதன் இத்தனை மடங்கு அப்படீன்னு சொல்ல முடியாது. எதிலும் ஒரு நிச்சயமின்மை இருக்கவே செய்யும். இதை தான் மத்வாச்சாரியார் பஞ்சபேதம், அதாவது சமமின்மை என்கிறார். ஒரு ஜடப்பொருளும் ஜீவாத்மாவும் பேதப்பட்டது, ஏன்
ஒரு ஜீவன் இன்னொன்றில் இருந்து பேதப்பட்டது. ஒரு ஜீவன் பரமாத்மாவிடம் இருந்து பேதப்பட்டது. என்கிறார். சங்கரர் மாதிரி சி இஸ் ஈக்குவல் டு ஃபோர் ஏ (C= 4A)அப்படீன்னு சொல்லிட்டா, பரமாத்வா ஜீவனின் இத்தனையாவது படி அப்படீன்னு
சொல்லிட்டா நாம பரமாத்மாவை வரையறை செய்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ள
அடைச்சுட்ட மாதிரி இருக்கும். ஆனால் வேதாந்தம் பரமாத்மாவை நி-சீமா,
எல்லையற்றவன், வரம்பு வரையறை அற்றவன் என்று சொல்கிறது.
எனவே மத்வாச்சாரியார் ரொம்ப சைன்டிபிக்-கா சி இஸ் ஈக்குவல் டு பை டி அப்படீங்கறார். ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா திரிகோணமிதில சைன் (sine) மற்றும் காஸ் (cos) மதிப்புகளை கண்டுபிடிக்கும் 'டைலர்' சீரீஸை அப்பவே கண்டுபிடித்தவர் மத்வாசாரியார். அவர் ஒரு பெரிய கணிதவியல் மேதை கூட .அவர் எவ்வளவு அழகா தன் சித்தாந்தத்தை கணிதத்தில் இருந்து, கணிதத்தின் ஒரு அழகான எண்ணில் இருந்து எடுத்திருக்கார் என்பது அற்புதம்.
சரி இங்க விசிஷ்டாத்வைதம் ,அதாவது ஆண்டாள் போன்ற ஆழ்வார்களின் நெறி என்ன அப்படீன்னா, பரமாத்மா என்பது வட்டம் போல மாயத்தோற்றம் காட்டும் ஒரு சதுரம்
என்பது. இந்த மார்க்கம் த்வைதம் மற்றும் அத்வைதம் இரண்டையும் ஓரளவு ஒத்துக்கொள்கிறது. அரிஸ்டாடிலின் கோல்டன் மீன் (Golden Mean) அப்படீன்னு சொல்வாங்களே அது மாதிரி .ஒரேயடியாக ஒரு ஜீவனிடம் நீ தான் பரமாத்மா அப்படீன்னு சொல்ல
முடியாது. அவனுக்கு மிதப்பு வந்து விடும். அதே போல உன்னால் எத்தனை சாதனை செய்தாலும் பரமாத்மாவாக எப்போதும் மாற முடியாது என்று சொன்னால் அவன் மனமுடைந்து விரக்தியாகி விடுவான். எனவே நீ அஞ்ஞானத்தில் இருக்கும் வரை பரம்பொருள் உனக்கு ஒரு குழப்ப வட்டம். நீ ஞானம் பெற்றால் அது உனக்கு ஒரு தெளிந்த சதுரம் என்று சொல்கிறது இந்த நெறி. அதாவது வெளியே குப்பன், சுப்பன், கந்தன், கண்ணன் என்று பலபேர்களில் அழைக்கப்படுபவர்கள் பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டருக்கு 'டிக்கெட்' ஆக மாறி விடுவது போல.
பெரியாவாளுக்கு நிகர் பெரியவாள்தான்.🙏🏼
அச்சுத ராவ்.ஒய்வு ரயில்வே.
அதிலும்
பரசு கொண்டு அரசு வென்றாய்
அற்புதம்
ஈச்வரனிடத்தில் பக்தி, அதே போன்ற பக்தி குருவிடத்திலும் என்று இருந்துவிட்டால் உபதேச உள்ளர்த்தமெல்லாம் புரிந்து அநுபூதி கிடைத்துவிடும். அதுதான் முதலில் சொன்ன ச்லோகம்.
இதிலே சிஷ்யர்களின் மனப்பான்மைகளையொட்டி, பக்தி பாவத்தில் பங்கீடும் கொஞ்சம் வித்யாஸாக வரும்.
‘ஈச்வரனிடத்தில் பக்தி செய்வதுதான் பரம தாத்பர்யம்; அதற்கு வழிகாட்டுபவர் என்ற முறையில் குருவிடமும் பக்தி விச்வாஸம் பாராட்டுவோம்’ என்பதாக மனோபாவமுள்ளவர்களும் இருப்பார்கள். இங்கே, ஈச்வரன் என்ற நமக்குத் தெரியாத ஆஸாமியையே மனஸு பற்றிக் கொண்டிருக்க முக்யமாக ஆசைப்படும்.
இன்னொரு பாவம், ஈச்வரனே குரு ஸ்வரூபமாக வந்திருக்கிறானென்பது ஈச்வரன், குரு இரண்டு பேரும் ஸமம் என்று வைத்துக்கொண்டு (ஆரம்பத்தில் சொன்ன ‘யஸ்ய தேவே பராபக்திர் – யதா தேவே ததா குரௌ‘ என்ற) ச்லோகத்தில் சொன்னபடி ஈச்வரனிடமும் பக்தி, குருவிடமும் அதற்குக் கொஞ்சங்கூட குறையாத பக்தி என்றிருப்பது.
பக்தியைப் பங்கு போடுவதா, அதேபோல அநுக்ரஹத்திலும் ஈச்வரன், குரு என்று இரண்டு பேர்கள் பங்கு போட்டுக்கொண்டு பண்ணுவார்களா என்று நான் பரிஹாஸம் பண்ணினாலும் அது ‘யுக்தி’ யில் சொன்னது தான். ‘அநுபவ’ த்தில் எப்படி இருக்குமென்றால் இம்மாதிரி மனோபாவகாரனுக்கு சில சில ஸமயங்களில் ஈச்வரன் என்பதிலேயே சித்தம் போய் அப்படியே பக்தியில் நிற்கும். சில சில ஸமயங்களில், ‘அவனுடைய நராகாரமே இது’ என்ற பாவத்துடன் குரு ஸ்வரூபத்திலேயே சித்தம் பக்தியில் நிரம்பிப் பதிந்திருக்கும். ஒரே ஈச்வரன் ஈச்வரனேயான ரூபம், குருவாக எடுத்துக்கொண்ட ரூபம் என்ற இரண்டின் மூலமும் அநுக்ரஹம் பண்ணுவான்.
மூன்றாவது பாவம், ‘ஈச்வரனைப் பற்றிய கவலையே இல்லை. அவன் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு வேண்டியது குருதான். ஈச்வரன் அவர் மூலம் நல்வழி காட்டுகிறான், அல்லது அவராக ரூபம் எடுத்துக்கொண்டு வருகிறான் என்ற கதையெல்லாம்கூட வேண்டாம். நமக்கு குருவான இவரேதான் ஸகலமும். இவரேதான் நம்முடைய ஈச்வரன், கீச்வரன் எல்லாமும். அதனால் இவரை மாத்திரம் அநன்யமாக உபாஸிக்க வேண்டியது. இவரே கடைத்தேற்றிவிட்டுப் போகிறார்’ என்று இருப்பது முழு பக்தியும் குரு ஒருவருக்கே செலுத்துவது.
‘
கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் தவிட்டுப்பாளையம் என்ற கிராமம் வரும்.. (வேலாயுதம்பாளையம் என்ற ஊர் தான் லேண்ட் மார்க்.). அந்த தவிட்டுப்பாளையத்தில் இருந்து கீழே இறங்கி ஒரு கிமீ தூரம் சென்றால் அழகிய கிராமம் வரும். அந்த கிராமத்தின் பெயர் நஞ்சை புகழூர். தொலைந்து போன கிராமத்தின் அழகை இங்கு ரசித்தோம். தொலைத்து விட்ட அக்ரஹாரங்களை இங்கு கண்டு மகிழ்ந்தோம்.
P.ராமகிருஷ்ணாச்சார்யா இவர் நித்ய அக்னிஹோத்ரி. சோமயாஜீ யாகம் செய்தவர். மந்திராலயாவில் சுமார் 30 வருடங்கள் பணிபுரிந்து பின்னர் மஹாபெரியவா உத்தரவின் பேரில் பல வேதபாடசாலைகளில் ரிக்வேத அத்யாபகராக இருந்து எண்ணற்ற ரிக்வேதிகளை தயார் செய்திருக்கிறார்.
இந்த வாத்யாரின் தந்தை ஒரு முறை ஈரோட்டில் வாஜபேயி யாகம் செய்து விட்டு பெரியவாளை தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். அப்போது பெரியவா அவருக்கு தரிசனம் தராமல் அவரை அங்கிருந்து கிளம்பி செல்ல சொல்லி விட்டாராம். அவர் மனம் உடைந்து ஊருக்கு கிளம்பலாம் என நினைக்கும் போது அவர் தங்கியிருந்த ஜாகைக்கு சாண்டூர் மஹாராஜா உட்பட பல பெரிய பெரிய பிரமுகர்கள் எல்லாம் வந்து இவரை பெரியவா தரிசனத்திற்கு அழைத்து செல்ல வந்திருப்பதாக தெரிவித்தார்கள். இவரால் நம்ப முடியவில்லை. யானையில் இவரை அமர வைத்து வேத வித்துக்களின் வேத முழக்கம் முன்னே செல்ல பெரியவா இருக்கும் இடத்திற்கு இவர் அழைத்து செல்லப்பட்டார்.
பெரியவாரை பார்த்த உடன் இவருக்கு கண்களில் ஜலம். அவருடைய பாதாரவிந்தத்தில் நமஸ்காரித்த பிறகு பெரியவா “ஏன் மனஸு கஷ்டப்படணும்? வாஜபேயம் பண்ணினவாளுக்கு ராஜ மர்யாதையோட, யாராவுது…. மஹாராஜா வெண்கொற்ற கொடை பிடிச்சிண்டு வரணும்..! அப்டி….. அவாளை பாக்கறதுதான் தர்மம்.! அதுப்படி பாக்கறதுக்காகத்தான்…. ஒங்களை மொதல்ல போகச் சொன்னேன்…..! அதோட எனக்குமே கூட… ஓன்னை…. அப்டிப் பாக்கணுன்னு ஆசையா இருந்துது….. யத்ருஶ்சையா (யதேச்சையா) ….. ஸாண்டூர் மஹாராஜா வந்தார்…! ….” இப்படி ஒரு பாக்கியம் வேற யாருக்கு அமையும்.
இப்போது இங்கு 7 வித்யார்த்திகள் ருக் வேதம் கற்று வருகிறார்கள். இந்த அக்ரஹாரத்தில் வேதம் அழிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தோடு தனக்கு பின்னரும் வேதம் வாழ வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு அதன் படி வாழ்ந்து வருபவர்களில் ஒருவர் தான் ஸ்ரீ ராமகிருஷ்ணாச்சார்யா. இங்கு படிக்கும் வித்யார்த்திகளில் இரண்டு பேர் கயாவில் இருந்தும், ஒரு வித்யார்த்தி மந்திராலயாவில் இருந்தும் வந்து வேதம் கற்று வருகிறார்கள். இரண்டு வித்யார்த்திகள் தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் ரிக் வேதபாடசாலைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் தான் இருக்கிறது. இப்படிப்பட்ட பாடசாலைகளை நாம் கவனிக்கா விட்டால் நாளை ரிக்வேதம் என்ற ஒன்றை நாம் கற்றுக் கொள்ளவே வழியில்லாமல் போய் விடும்.
மதியம் 1.30 மணிக்கு அங்கு சென்றோம். வாத்யாரும் அவர் மனைவியும் அருமையாக உபசரித்தனர். போதும் போதும் என்கிற அளவுக்கு சாப்பாடு போட்டு எங்களை திக்குமுக்காட செய்து விட்டார்கள். இது போதாதென்று போகும் போது வெளியே சாப்பிட வேண்டாம். குழந்தைகள் எல்லாம் பசி தாங்க மாட்டார்கள் என்று சுத்தமாக அவல் உப்புமா (நிஜமாகவே தேவாமிர்தம் தான்) மற்றும் அவர்கள் இல்லத்திலேயே செய்த தேங்காய் பர்பி என்று பலகாரங்களை தனியாக கட்டி கொடுத்து விட்டார்கள். வித்யார்த்திகளுக்கு வஸ்திரங்கள், விளையாட்டு உபகரணங்கள், பஞ்சபாத்திர உத்தரணிகளை கொடுத்து நமஸ்காரம் செய்து கொண்டோம்.
நம்முடைய வீட்டிற்கு நான்கு பேர் வந்தாலே உணவிற்கு வெளியில் ஆர்டர் செய்து உட்கார்ந்து விடுவோம். ஆனால் வாத்யாரும், அவர் மனைவியும் எங்கள் 20 பேருக்கு மடியாக சமையல் செய்து நாங்கள் சாப்பிட்டு முடித்த பிறகு தான் அவர்கள் சாப்பிட்டார்கள். அதிதி போஜனம் முடிந்தால் தான் நாங்கள் சாப்பிடுவோம்னு சொன்னார். எங்களால் மறுக்க முடியவில்லை.
வேத ரக்ஷண நிதி ட்ரஸ்ட்டில் இருந்தும் மாதம் கொஞ்சம் தொகை வந்து கொண்டிருக்கிறது. அது போக சாய்ராம் ட்ரஸ்ட் ஒன்றில் இருந்து அரிசி வந்து கொண்டிருக்கிறது.
பாடசாலையின் முகவரி, அலைபேசி எண், வங்கி கணக்கு விவரங்களையும் பதிவு செய்துள்ளேன். உங்களால் முடிந்த உபகாரங்களை இவர்களுக்கு செய்யலாம். அதற்கு முன் ஒரு தடவை சிரமம் பார்க்காமல் இந்த பாடசாலைக்கு சென்று நித்ய அக்னிஹோத்ரியை நமஸ்காரம் செய்து விட்டு வரவும்.
விலாசம்
ஸ்ரீ.ராமகிருஷ்ணாச்சார்யா
ஸ்ரீஹரிவாயு குரு வித்யா பீடம்
ரிக் வேத பாடசாலை
அக்ரஹாரம்
2/26A நஞ்சை புகழூர் (போஸ்ட்)
கரூர் 639 113
அலைபேசி எண் 9791627922
பாடசாலையின் வங்கி கணக்கு விவரங்கள்
P.Ramakrishnachar R. Padmavathi
Account Number : 1227101052117 (SB Account)
Canara Bank Karur Branch
IFSC --- CNRB0001227
--------------------------------------------------------🌺🌹ஓர் ஊரில், வட்டிக்கு பணம் கொடுத்தும், அநியாய வட்டி வசூலித்தும்,
வட்டி தராதவர்களை அவமானப்படுத்தியும் ஒரு வாழ்ந்து வந்தான் செல்வந்தன் மேகநாதன்
🌺இதனால், அவன் பலரின் சாபத்திற்கு ஆளானான். கோவிலுக்கு அவன் அடிக்கடி சென்று வந்தாலும்,
அவனுக்கு அவன் செல்வத்தின் காரணமாக மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.
🌺இந்நிலையில் கர்ப்பமுற்றிருந்த மேகநாதன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் தருணம் வந்தது.
🌺மனைவிக்குப் பிரசவ வலி வந்த செய்தியைக் கேட்டு, கடையிலிருந்து வீடு நோக்கி சென்றான் மேகநாதன்.
🌺செல்லும் வழியில் சிவாலயம் ஒன்று குடமுழுக்கிற்காக திருப்பணி நடந்து கொண்டிருந்தது.
🌺சிலர் கோவிலை பெருக்கி சுத்தம் செய்தனர். சிலர் தோரணம் கட்டினர். சிலர் விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தனர்.
🌺அப்போது ஏணியில் நின்றபடி மதில் சுவற்றுக்கு ஒரு ஏழை தொழிலாளி வெள்ளையடித்துக் கொண்டிருந்தார்.
🌺அவரது சுண்ணாம்பு மட்டை கீழே விழுந்து விட, அவ்வழியாக சென்ற செல்வந்தரைப் பார்த்து,
🌺"ஐயா தர்மப்பிரபு..... தயவு கூர்ந்து கீழே விழுந்த அந்த மட்டையை கொஞ்சம் எடுத்துக் கொடுங்களேன்" என்று கேட்க,
🌺தர்மப்பிரபு என்ற வார்த்தையில் மயங்கிய மேகநாதன், மட்டையை எடுத்து ஏணியில் சிறிது படிகள் ஏறி அந்த மட்டையை கொடுத்துவிட்டு சென்றான்.
🌺மேகநாதன் செய்த பாவங்களின் பலனாக, இவன் குழந்தை பிறக்கும் தருவாயில் இறந்து போய்,
🌺இவனுக்கு குலம் தழைக்காது போவதே விதியாக இருந்தது.
🌺எம தூதர்கள் இவன் இல்லம் அடைந்து பாசக்கயிற்றை வீச தயாரானார்கள்.
🌺திடீரென்று சிவலோகத்திலிருந்து இரு பூதகணங்கள் தோன்றி, எமதூதர்களை தடுத்தனர்.
🌺குடமுழுக்கிற்காக தயாராகும் சிவாலயத்தில், அடியவர் ஒருவருக்கு மேகநாதன் சிறு உதவி செய்த காரணத்தால்,
அந்த புண்ணியத்தில் லட்சத்தில் ஒரு பங்கு இவருக்கு சேர்ந்துவிட்டது.
🌺ஆகவே, இவரது குழந்தையின் உயிரை கவரக்கூடாது என்பது ஈசனின் ஆணை என்றனர்.
🌺மேலும் சுகப்பிரசவத்திற்கு வேண்டியவற்றை செய்ய எம்பெருமான் கட்டளையிட்டுள்ளார்.
🌺ஆகவே திரும்பி செல்லுங்கள் என்று எமதூதர்களை திருப்பி அனுப்பி விட்டனர் அந்த சிவகணங்கள்.
🌺தன் குழந்தைக்கு நிகழவிருந்த ஆபத்தையும், கோவிலுக்கு தன் உதவியினால் அது விலகியதையும்
🌺ஜோதிடர் மூலம் அறிந்து கொண்ட செல்வந்தன் மேகநாதன்
மனம் திருந்தி கோவில்களுக்கு தன்னால் இயன்ற திருப்பணிகள் செய்து வரலானான்.
🌺கோவிலை சுண்ணம் அடித்து கொண்டிருந்தவர்களுக்கு மட்டையை எடுத்து கொடுத்ததற்கே இவன் இப்பலனை அடைந்தால்,
🌺அவன் ஆலயத்தில் உழவாரப்பணி செய்பவர்களுக்கு எத்தகைய புண்ணியம் கிடைக்கும் என்பதை பாருங்கள்.
🌺ஆனால், நாம் இந்த உழவாரத் திருப்பணியை, கிடைக்க போகும் புண்ணியத்திற்காக அல்ல,
ஈசன் மீது வைத்திருக்கும் எல்லையற்ற அன்பினால் செய்ய வேண்டும்.....🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹In a town, giving money on interest and collecting unjust interest,
Selvanthan Meghanathan lived a life by humiliating those who did not pay interest
🌺Thus, he became cursed by many. Though he frequented the temple,
He got respect and honor because of his wealth.
🌺Meghnathan's wife, who was pregnant in this situation, was about to give birth.
🌺 Hearing the news that his wife was in labor, Meghanathan went home from the shop.
🌺 On the way, a temple was being repaired for the Kudamukuz.
🌺 Some people enlarged the temple and cleaned it. Some made postures. Some people were setting up lights.
🌺 At that time a poor worker was whitewashing the wall while standing on a ladder.
🌺 Seeing the rich man passing by, his lime bat fell down,
🌺 "Lord Dharmaprabhu.....please take that bat that fell down" to ask,
🌺 Meghnathan, mesmerized by the word Dharma Prabhu, took the bat, climbed a few steps up the ladder, gave the bat away and left.
🌺🌺 As a result of Meghnathan's sins, he died near the birth of his child.
🌺 It was his destiny that his clan would not die.
🌺 Our messengers reached his house and prepared to throw the love rope.
🌺Suddenly two Bhutaganas appeared from Shivaloka and stopped the messengers.
🌺 Because Meghnathan gave a little help to a servant in the temple preparing for immersion,
One millionth of that merit has been added to him.
🌺 Therefore, it was Eason's order not to take the life of his child.
🌺 And the Lord has ordered to do what is necessary for a healthy delivery.
🌺 So those Shiva Ganas sent back the emissaries to go back.
🌺 The danger that was about to happen to her child and that it was averted by her help to the temple
🌺Selvanthan Meghanathan learned through astrologer
He changed his mind and started doing his best to the temples.
🌺 If he achieved this benefit because he gave the bat to those who were plastering the temple,
🌺 See what blessing those who work in his temple get.
🌺 But, we do this plowing work, not for the merit that we will get,
To be done with infinite love for Eason.....🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
கருவிற்கும் உயிர் தந்து
எருவிற்கும் இலை தந்து
மருவிற்கும் முக்தி தந்து
வரமாய் வருபவளே ..
வாரணம் ஆயிரம் பாடுகின்றோம்
காரணம் இன்றி அருள்பவளே ஆபரணம் சூடி வருவாயோ ?
நவராத்திரி நாயகியே நல்லோர் பிணி தீர்ப்பவளே
சௌபாக்கிய தாயினீ யே
சர்வ மங்கள பூஷிதையே
சரண் கொண்டோம்
சடுதியில் வருவாய்
சகதி கொண்ட வாழ்க்கை இதில்
சக்தி கொண்டு எழுப்பிடுவாய் 💐💐💐
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே...
என்றே உருகினாள் ஆண்டாள் அன்று .. .
*கண்ணா* ஆண்டாளாய் நின்று பாடுகிறேன்
கற்கண்டு இனிக்குமோ ... ஏலக்காய் மணம் வீசுமோ
கண்ணன் நாமம் சுவை ருசித்தோர்க்கே
பால் பாயசம் தந்திடினும் பாகும் தேனும் கொட்டினும்
பல் இளிக்க சுவைப்பரோ பரந்தாமன் நாமம் தரும் இனிப்புக்கே ..
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே...🙏🙏🙏
*பதிவு 350* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*93 சிவனுடைய கருணையின் உருவே தேவி*
*மனோரத ஸித்தி*
அராலா கேஶேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே
ஶிரீஷாபா சித்தே த்ருஷதுபலஶோபா குசதடே
ப்ருசம் தந்வீ மத்யே ப்ருது ருரஸிஜாரோஹ விஷயே
ஜகத் த்ராதும் ஶம்போர் ஜயதி கருணா காசிதருணா 93
மோது முலை அற்ப இடை முற்றும் முனி தம்பம்
ஆதி பரன் இன்னருள் திரண்டு அருணம் ஆகும்
மாது நின் மலர்ப்பதம் மனத்து எழுதி வைத்தேன்
உன் கூந்தலின் இருளாகவும் (அடர்த்தியாக இருப்பதால் இருண்டு கருத்து இருக்கின்றது)
புன்னகையின் ஒளியாகவும் குழைந்த திருமேனியாகவும் திரண்டு ஒன்றையொன்று மோதும்
திருமுலைகளாகவும் இல்லையெனும் படியான இடையாகவும்
ஆதிபரனின் இன்னருளே திரண்டு அருணம் என்னும் உருவாக இருக்கின்றது.
அன்னையே உன் மலர்ப்பதம் என் மனத்தே அழியாமல் எழுதி வைத்தேன்🙏🙏🙏
*பதிவு 352* 🙏🙏🙏started on 7th Oct 2021
உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு பிடிப்பு, ஆதாரம் தேவை.
அம்பாளுக்கு எந்த ஆதாரமும் தேவையற்றவள் என ஒரு நாமம். முடிவில்லாதது அழியாதது என்கிறது
சாண்டோக்யஉபநிஷத் (VII.24.1)
ஆரம்பம் முடிவு இல்லாத ஒன்றுக்கு எது ஆதாரம்?💐💐💐
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹா வாராஹி தேவி பற்றிய பதிவுகள் :*
அன்னை ஸ்ரீ மஹாவாராஹி மஹாசத்தியான ராஜராஜேஸ்வரியிடம் இருந்து தோன்றியவள்.
இவளே ராஜராஜேஸ்வரியின் படை தலைவி ஆவாள். பராசக்தியின் 7 வடிவங்களில் ஒரு வடிவம் வராஹி வடிவமாகும்.
வராஹி போர் கடவுளாவாள். வராஹி வழிபாடு வெற்றியை தருவதாக ஐதீகம். தோல்விகள் அவமானங்கள் போன்றவற்றில் இருந்து வராஹி வழிபாடு காப்பாற்றும் என்பது ஐதீகம்.
ஸ்ரீ வராஹி உபாசனை சிறந்த வாக்கு வன்மை தைரியம் தருவதோடு எதிர்ப்புகளை சந்தித்து வெற்றி பெரும் ஆற்றலை தருகிறது.
இந்த தெய்வம் நேபாளத்தில் பாராஹி என்றும் புத்த மதத்தில் வஜ்ரவராஹி அல்லது மறிச்சி என்றும் அழைக்கப்படுகிறாள்.
எருமை வாகனத்துடனும் பன்றி முகத்துடன் கூடிய இந்த பெண் தெய்வம் பெரும்பாலும் தாந்த்ரீக வழிபாட்டிற்கு மட்டுமே வழிபட்டு வரப்படுகிறது.
மஹாசக்தியான துர்கா தேவியானவள் ரத்தபீஜன் என்கிற அரக்கனுடன் போரிடும்போது தன்னுள் இருந்து மஹாசக்தியை ஏழு பாகங்களாக பிரித்து போர் களத்துக்கு அனுப்புகிறாள். வராஹி அதில் ஒருவளாக இருக்கிறாள்.
தாந்திரிக முறைப்படி வழிபடப்படுவதால் இந்த தெய்வத்தாய் இரவு நேரங்களில் தான் வழிபடுவர்.
இந்தியாவிலேயே வாராஹிக்கு சிறப்பான கோவில் ஒடிசா மாவட்டத்தில் உள்ளது.
வட மாநிலங்களில் இவள் பாதாள பைரவியாக வணங்கப்படுகிறாள். தமிழகத்தில் சென்னை மைலாப்பூரிலும் கோவையிலும் வாராஹிக்கு கோவில்கள் உள்ளன.
இங்கு பூஜைகள் எப்போதும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மட்டுமே விமர்சையாக நடைபெறும்.
வாராஹி கண் திருஷ்டியை போக்ககூடியவள், பயத்தை அகற்றி தைரியத்தை தருபவள் வாராஹி. "ஓம் ஷாமலயா வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தானோ வாராஹி ப்ரசோதயாத்" என்கிற மந்திரத்தை 108 முறை தினமும் சொல்லி வர மன பயம் துயரம் நீங்கி தோஷங்கள் விலகும்.
வாராஹி தேவியை புருவ மத்தியில் தியானித்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட வேண்டும். வாராஹிக்கு மிளகு வடை, வெண்ணெய் எடுக்காத தயிர் சாதம் சுண்டல் சுக்கு சேர்ந்த பானகம் போன்றவற்றை அளிக்கலாம். எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் வாராஹியை வழிபட்டால் தீரும்.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
*🤘ஓம் நமசிவாய🙏*
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 125* 💐💐💐
வாத்ஸலாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்
ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |
ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:
ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||
ன்னு இவளோட சரித்திரங்களை எல்லாம் நினைச்சு பார்க்கணும். இந்த பகவானோட கதைகளை ஏன் கேட்கணும்னா அப்பதான் அவனோட பிரபாவம் தெரியும். இந்த குணங்களை எல்லாம் நாம நினைக்கும் போது தான், பகவான் காப்பாத்துவார் என்கிற நம்ம நம்பிக்கை உறுதிப்படும். பக்தி வளரும்.
அடுத்த ஸ்லோகம் “ஜிஹ்வே கீர்த்தய கேசவம்’ என்கிற ஸ்லோகம். அதை நாளைக்கு பார்ப்போம்.
1. வீட்டில் யாரிடமும் நொய் நொய் என்று இருக்கக் கூடாது...
2. தேவை யில்லாமல் பேசாதீர்கள்,,,,
3. மகனோ - மகளோ அறிவுரை சொல்லாதீர்கள்,,, அவர்கள் வரவு சிலவு கேட்காதீர்கள்... பணத்தின் அருமை தெரியவில்லை என்று திட்டாதீர்கள்,,,
4. கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்,,, உத்தரவு போடாதீர்கள்,,, மரியாதையை எதிர்பார்க்காதீர்கள்,,,
5. அந்தக் காலத்தில் அப்படி இருந்தோம் -- ஒரு ரூபாய்க்கு படி அரிசி வாங்கினோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள்,,,
6.உன்னை எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன்... திருமணம் செய்து வைத்தேன் என்று... டயலக் திரும்பத் திரும்ப சொல்லாதீர்கள்..
விரும்ப மாட்டார்கள்
7. பேரன் பேத்தி மேல் அதிகம் அன்பு காட்டாதீர்கள்,,, பேரன் பேத்திகள் வளர்ந்தவுடன் தாத்தா பாட்டியை டீ லில் விட்டு விடுவார்கள்,,,
8. என் பேரன் என் பேத்தி - ரத்த சம்மந்தம் இப்படி எல்லாம் பீலா விட்டு கற்பனை செய்யாதீர்கள்,,, ஒரு வெங்காயமும் கிடையாது... நீங்கள்
வளர்க்கும் நாயை அன்போடு நீங்கள் தலையைத் தடவினால் அது
வாலை ஆட்டும்,,, அது போலத்தான் எல்லாம்... எப்போதும்,,
9. என் பேரன் என் பேத்தி நான் இல்லாமல் தூங்க மாட்டான் என்று கப்சா விடாதீர்கள்,,,, அதே வாய்தான் பக்கத்து வீட்டுக்காரரிடம் “அய்யோ.. என் பேரன் அப்படி படுத்துறான் ” என்று சொல்லும்,,,,
10. திருமணம் ஆனவுடன் தனிக் குடித்தனம் வைத்து விட வேண்டும்,,, அவரவர் குழந்தை குட்டிகளை அவரவர் வளர்க்க வேண்டும், அப்போதுதான் அதன் அருமை தெரியும்,,,, சொந்தக் காலில் நிற்கும் போதுதான் பொறுப்பு வரும் - வளரும்.
11.அப்பா அம்மா என் கூடவே இருக்க வேண்டும் என்று சொல்வது வேலைக்காரிக்கு கொடுக்கும் பணம் மிச்சம் என்பதற்காகவும் இருக்கலாம்,,,,
12. முக்கியமான ஒன்று வருமானத்தைச் சேர்த்து கடைசி வரை உங்கள் சேமிப்பை நம்பி இருங்கள்,,, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்,
13.வீடு வாசல் சொத்து இருந்தால் - எனக்குப் பிறகு என் மனைவிக்கும் அதன் பிறகு இப்படி பிரித்துக் கொள்ளுங்கள் என்று உயில் எழுதி வையுங்கள்,,,,
14. மகனையோ மகளையோ குற்றம் குறை சொல்லாதீர்கள்..
அவரவருக்கு தெரிந்த படி வாழட்டும்,,, பாட்டி வைத்தியம்
எல்லாம் சொல்லாதீர்கள்,, விரும்ப மாட்டார்கள்,,, குழந்தைக்கு
சுரம் என்றால் பிரபல டாக்டரிடம் போய் 5000 செலவு செய்தால்தான் அவர்களுக்கு நிம்மதி.....
15. இருப்பதை சாப்பிடுங்கள்..வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள்,,,
வலிகளை தாங்கிக் கொள்ளுங்கள்,,,
பேச்சைக் குறையுங்கள்... சிரிக்க கற்றுக் கொள்ளுங்கள்
கடைசியாக ஒன்று ---
*ராமா கிருஷ்ணா... அல்லா... ஏசப்பா... என்னை சீக்கிரம் எடுத்துக் கொள்ளப்பா என்று வேண்டாதீர்கள்,,,, யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்*...
*காரணம் நீங்கள் இந்த* *பூமியில் அனுபவிக்க*
*வேண்டியது இன்னும்(!) ஏராளம் இருக்கிறது*.....*😏😛
எந்த சந்தர்ப்பத்திலும் முடிவுகளை நாம் தான் எடுக்க பழக்க வேண்டும்,பலரிடம் ஆலோசனை கேட்கலாம் ஆனால் இறுதி முடிவு நம்முடையதாக தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும் நமக்கு வளரும்.
எந்த நிகழ்ச்சியிலும் ஒரு படிப்பினை இருக்கிறது, படிப்பினையைக் கண்டுபிடிப்பது உங்கள் புத்திசாலித்தனம்...
*What is Maturity of Mind ?*
01. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.
01. Correcting Ourselves without Trying to Correct Others.
02. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)
ஏற்றுக்கொள்வது.
02. Accepting others with Their Defects
03. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
03. Understanding the Opinions of Others from Their Perspectives.
04. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
04. Learning to Leave what are to be Avoided.
05. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
05. Leaving the Expectations from Others.
06. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
06. Doing whatever We Do with Peace of Mind.
07. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.
07. Avoiding to Prove Our Intelligence On Others.
08. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்
என்ற நிலையை விடுதல்.
08. Avoiding the status that others should accept our actions.
09. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
09. Avoid Comparing Ourselves with Others.
10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
10. Trying to Keep Our Peace in Our Mind without Worrying for Anything.
11. நம் அடிப்படை தேவைக்கும்., நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
11. Understanding the Difference Between the Basic Needs and what We Want.
12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.
12. Reaching the Status that Happiness is Not Connected with Material Things.
*இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.*
*Our Life will be Simple if Only We Practice 7 or 8 of the Above 12.*
Live Your Life & Love Your Life.
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவனின் ஐந்து முகங்கள் பற்றிய பதிவுகள் :*
*ஈசானன்:*
பிரம்ம தேவன் ஆகாயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் சாம்பல் வண்ணத்துடன் முக்கண் கொண்டவராயும், இளமதியை சென்னியில் சூடியவாறும், கோரைப்பற்கள் கொண்ட உருமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார். இறைவனின் இந்த முகமே ஈசானம் எனப்படும். அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை ஆவாள். மற்றொரு பெண் வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.
*ஈசான முகத்திலிருந்து தோன்றிய ஐந்து வடி வங்கள்:*
சோமாஸ்கந்தர், நடராசர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், சந்திரசேகரர்.
*தத்புருஷம்:*
பிரம்ம தேவன் கிழக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே தத்புருஷம் எனப்படும். பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார். காயத்ரீயை வணங்கி வருபவர்களுக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்.
*தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய ஐந்து வடிவங்கள்:*
பிட்சாடனர், காமாரி, காலாரி, சலந்தராரி, திரிபுராரி.
*அகோரம்:*
பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் முக்கண் கொண்டவராய் நெருப்பினையும், வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார். இறைவனின் இந்த முகத்திற்கு அகோரம் என்று பெயர்.
*அகோர முகத்திலிருந்து தோன்றிய ஐந்து வடிவங்கள்:*
கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நீலகண்டர்.
*வாமதேவம்:.*
பிரம்ம தேவன் வடக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும், மானும் மழுவும் கைகளில் ஏந்தி பிரம்மனுக்கு காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே வாமதேவம் எனப் படும்.
*வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய ஐந்து முகங்கள்:*
கங்காதரர், சக்ரவரதர், கஜாந்திகர், சண்டேசானுக்கிரகர், ஏகபாதர்.
*சத்யோஜாதம்:*
பிரம்ம தேவன் மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன், வெண்மை நிறமான இளையோனாய் பிரம்மன் முன்பு தோன்றினார். இந்த முகமே சத்யோஜாதம் எனப்படும்.
*சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய ஐந்து முகங்கள்:*
லிங்கோத்பவர், சுகாசனர், அரிஹரர், உமாமகேசர், அர்த்தநாரி.
இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தா லும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறு பிறவியில் முக்தியும் கிட்டும் என்பது பிரம்ம தேவனின் வாக்கு ஆகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி. 🙏
*🤘ஓம் நமசிவாய🙏*
*One Story, Two Perspectives*
A famous book writer sat in his study. He took out his pen and began to write:
“Last year, I had surgery to remove gallstones. I was bedridden for a long time.
In the same year, I turned 60 and was retired … quitting a company that I loved so much. I had to leave the job I've been doing for 35 years.
That same year I was abandoned by my beloved mother who passed away.
Then, still in the same year, my son failed his final medical exam because of a car accident. Repair costs from the car damage marked the peak of bad luck last year.”
At the end he wrote:
“What, what a bad year!"
The writer's wife entered the room and found her husband who was sad and pensive. From behind, the wife saw the husband's writing. Slowly she backed away and left the room.
15 minutes later she came back in and put down a piece of paper with the following words:
“Last year, my husband finally managed to get rid of his gallbladder which had been making his stomach hurt for years.
That same year, I am grateful that my husband was able to retire in a healthy and happy state of mind & body. I thank God he was given the opportunity to work and earn for 35 years to support our family.
Now, my husband can spend more of his time writing, which has always been his hobby.
In the same year, my 95 year old mother-in-law, without any pain, returned to God in peace.
And still in the same year, God protected our son from harm in a terrible car accident. Our car was seriously damaged by the accident, but my son survived without any serious injuries.”
In the last sentence his wife wrote:
“Last year was a year full of extraordinary blessings from God, and we spent it full of wonder and gratitude.”
The writer smiled with emotion, and warm tears flowed down his cheeks. He was grateful for a different point of view for every event he had gone through the past year. A different perspective of the same events now made him joyful.
Friends, in this life we must understand that it is not happiness or joy that makes us grateful. It is *gratitude that makes us happy/joyful*! Let’s practise seeing events from a positive point of view and keep envy away from our hearts.
_”We can complain because rose bushes have thorns, or rejoice because thorn bushes have roses.”_
*Abraham Lincoln*
Good to re-read this article even though you may have read it before.
பூத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ
தாக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ
வீக்கவந்த யோகிகாள் விரித்துரைக்க வேணுமே. 75👍👍👍
*வாழும் காலத்தே விழிப்புணர்வுடன் வாழ வேண்டும்.பின்னால் வருந்திப் பயன் இல்லை.*
_*திரௌபதிக்கு தனது வயது 80 ஆனது போல இருந்தது...*_
உடல் ரீதியாக மற்றும் மனரீதியாகவும் கூட
*அஸ்தினாபுரம்* நகரைச் சுற்றி
விதவைகள் அதிகமாக இருந்தனர்.
ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர்.
அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் *அரசி திரௌபதி, அஸ்தினாபுரம் அரண்மனையில்* அசையாமல் வெற்றிடத்தைப் பார்த்துக் கொண்டிருந் தாள்.
பிறகு,
*ஸ்ரீ கிருஷ்ணர்*
அறைக்குள் நுழைய,
*திரௌபதி கிருஷ்ணரைப்* பார்த்ததும் ஓடி வந்து அவனிடம் சரணடைந்தாள்...
*கிருஷ்ணர்,* அவள் தலையை தடவிக் கொடுக்கிறார்.
அவளோ அழத் தொடங்கினாள்.
நேரம் மெல்ல நகருகிறது.
*கிருஷ்ணன்* கேட்டார்.
*திரௌபதி*
என்ன நடந்தது?"
"ஒன்றும் நடக்கவில்லையே *கிருஷ்ணா"*
*கிருஷ்ணர்:*
விதி மிகவும் கொடூரமானது
*பாஞ்சாலி..*
நாம் நினைப்பது போல் வேலை செய்யாது!"
அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது.
முடிவுகளையும் மாற்றுகிறது.
நீ பழிவாங்க நினைத்தாய், வெற்றி பெற்றாய், *திரௌபதி!*
உன் பழிவாங்கல் முடிந்தது...
*துரியோதனனும், துச்சாதனனும்* மட்டுமல்ல, *கௌரவர்கள்* அனைவரும் மடிந்துவிட்டனர்.
நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!
*திரௌபதி:* "சகோதரா,
என் காயங்களைத் ஆற்ற வந்தீர்களா? அல்லது அதன்மீது உப்பு தூவ வந்தீர்களா?"
*கிருஷ்ணர்:* இல்லை, *திரௌபதி* உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன்.
எல்லாம் நமது தொலை நோக்கு பார்வையற்ற செயல்களின் விளைவு என்பதை உணர்த்த வந்தேன்.
*திரௌபதி:* அதனால் என்ன?
இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பு *கிருஷ்ணா?*
*கிருஷ்ணர்:* இல்லை, *திரௌபதி* நீ மட்டுமே காரணம் என்று
கருதாதே...
ஆனால்,
உன் செயல்களில், நீ கொஞ்சம் தொலைநோக்கு பார்வையைக் கொண்டு இருந்திருப்பாயேனால், நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டாய்..
*திரௌபதி:* நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா?
*கிருஷ்ணர் :* நீ நிறைய செய்திருக்கமுடியும்.
உனது சுயம்வரம் நடந்தபோது
*கர்ணனை* அப்படி அவமானப் படுத்தாமல், போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளித் திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந்திருக்க கூடும்!
அதற்குப் பிறகு குந்தி உன்னை ஐந்து கணவர்களுக்கு மனைவியாக்கும் படி கட்டளையிட்டதை...
அப்போது ஏற்றுக் கொள்ளா திருந்தாலும் முடிவு வேறுவித மாக இருந்திருக்கும்.
அதற்கு பிறகு உன் அரண்மனையில் *துரியோதனனை* அவமானப்படுத்தினாய்...
பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள் என்று.
அவ்வாறு நீ சொல்லா திருந்திருந்தால், நீ மானபங்கப் பட்டிருக்க மாட்டாய்...
அப்போதும், ஒருவேளை, சூழ்நிலைகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.
"நம் வார்த்தைகள் கூட
விளைவுகளுக்கு பொறுப்பு *திரௌபதி...*
"நீ பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுதல் மிகவும் முக்கிய மானது"...
இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டு மல்ல, உனது சுற்றுப்புறத் தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்..
*_பற்களில் விஷமில்லை, ஆனால் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே...*_
எனவே வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்.
அதாவது, யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.!!
ஏனென்றால் மகாபாரதம் நமக்குள் மறைந்திருக்கிறது,!!
*_இதுவே நிதர்சனம்!_*
🙏🙏🙏
அன்புடன்...
*வாடிப்பட்டி வாரியார் ஜோதிடர் கோபிக்குமார்*
இது வாட்ஸ் அப்பில் வந்த பதிவு
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்கள் பற்றிய பதிவுகள் :*
*1. இலிங்க மூர்த்தி.*
*2. இலிங்கோத்பவர் மூர்த்தி.*
*3. முகலிங்கம் மூர்த்தி.*
*4. சதாசிவமூர்த்தி.*
*5. மகாசதாசிவர் மூர்த்தி.*
*6. உமா மகேஸ்வரர் மூர்த்தி.*
*7. சுகாசனர் மூர்த்தி.*
*8. உமேச மூர்த்தி.*
*9. சோமாஸ்கந்தர் மூர்த்தி.*
*10. சந்திரசேகரர் மூர்த்தி.*
*11. இடபாரூடர் மூர்த்தி.*
*12. இடபாந்திகர் மூர்த்தி.*
*13. புஜங்கலளித மூர்த்தி.*
*14. புஜங்கத்திராச மூர்த்தி.*
*15. சந்தியா தாண்டவ மூர்த்தி.*
*16. சதா நிருத்த மூர்த்தி.*
*17. சண்ட தாண்டவ மூர்த்தி.*
*18. கங்காதர மூர்த்தி.*
*19. கங்கா விசர்ச்சன மூர்த்தி.*
*20. திரிபுராந்தக மூர்த்தி.*
*21. கல்யாண சுந்தர மூர்த்தி.*
*22. அர்த்த நாரீஸ்வரர் மூர்த்தி.*
*23. கஜயுக்த மூர்த்தி.*
*24. சுவரா பக்ன மூர்த்தி.*
*25. சார்த்துலஹர மூர்த்தி .*
*26. கிராத மூர்த்தி.*
*27. கங்காள மூர்த்தி .*
*28. கேசவமூர்த்தி.*
*29. பிட்சாடன மூர்த்தி.*
*30. சிம்மக்ன மூர்த்தி.*
*31. சண்டேச அனுக்ர மூர்த்தி.*
*32. தெட்சணா மூர்த்தி.*
*33. யோக தெட்சிணாமூர்த்தி.*
*34. வீணாதர தெட்சிணாமூர்த்தி.*
*35. காலாந்தக மூர்த்தி.*
*36. காமதகன மூர்த்தி.*
*37. லகுளிச மூர்த்தி.*
*38. பைரவ மூர்த்தி.*
*39. ஆபதோத்திராண மூர்த்தி.*
*40. வடுக மூர்த்தி.*
*41. ஷேத்திர பாலக மூர்த்தி.*
*42. தட்சயக்ஞவத மூர்த்தி.*
*43. வீரபத்திர மூர்த்தி.*
*44. அகோரஸ்திர மூர்த்தி.*
*45. பாசுபத மூர்த்தி.*
*46. குரு மூர்த்தி.*
*47. அசுவாருட மூர்த்தி.*
*48. கஜாந்திக மூர்த்தி.*
*49. சலந்திரவத மூர்த்தி.*
*50. ஏகபாத மூர்த்தி.*
*51. திரிபாத மூர்த்தி.*
*52. ஏகபாத திருமூர்த்தி.*
*53. கௌரிவர பிரசாத மூர்த்தி.*
*54. விஷாபகரண மூர்த்தி.*
*55. கவுரிலீலா சமந்வித மூர்த்தி.*
*56. கருடாந்திக மூர்த்தி.*
*57. பிரம்மசிரச்சேத மூர்த்தி.*
*58. கூர்ம சங்கார மூர்த்தி.*
*59. வராக சம்ஹார மூர்த்தி.*
*60. மச்ச சம்ஹார மூர்த்தி.*
*61. பிரார்த்தனா மூர்த்தி.*
*62. ரக்தப்பிட்சப் பிரதான மூர்த்தி.*
*63. சிஷ்ய பாவ மூர்த்தி.*
*64. சக்ரப்ரத மூர்த்தி.*
என *"சிவபராக்கிரம"* நூலில் கூறப்பட்டுள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் தங்கள் சிவபூஜையில் அறுபத்து நான்கு சிவ வடிவங்களின் பெயர்களை கூறி வழிபாடு செய்யலாம்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி. 🙏
*🤘ஓம் நமசிவாய🙏*
*துன்பம் இல்லாமல் வாழ்வோம்*.......... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹*மூன்று வகை மனிதர்கள் உள்ளனர் என்றார் குரு கோபால்சாமி
🌺முதல் வகை பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.
🌺இரண்டாம் வகையினர்: பசுவும் அதன் கன்றும் போல் உள்ளனர்.
🌺மூன்றாம் வகையினர்: கணவனும் மனைவியும் போல் உள்ளனர்
🌺முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும்.:
எப்படியென்றால்.. பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப்போகிறது,
🌺அதுசென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது,
🌺காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலையெல்லாம் படுவதில்லை,
🌺இருப்பதற்கு உணவு ஊட்டும்.அதுபோல் குஞ்சுகளுக்கும் தன் வாயில் ஊட்டப்படும் உணவு தான் தெரியும்,
🌺தன் தாய் யார், தகப்பன் யார் போனது வராதா எதுவும் தெரியாது,
நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும், மீந்துபோன பறவை வாழும் வரை வாழும், அவ்வளவு தான்...
🌺இந்த வகை மனிதர்கள் இது போலத்தான் கிடைத்த வேலையை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையா பட்டினி கிடப்பார்கள்.
🌺வாழ்க்கை சக்கரத்தில் அகப்பட்டு, புற வாழ்க்கைக்காக அலைந்து, திரிந்து, கடைசியில் மரணிப்பார்கள்.
🌺அவர்களுக்கு பகவானே உங்களை நினைக்ககூட தெரியாது. வாழ்வார்கள், உயிரோடு வாழும் வரை அவ்வளவு தான்.
🌺இரண்டாவது பசுவும் கன்றும் எப்படியென்றால்...
பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும்,
அதன் கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும்.
🌺கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும்,
🌺கன்றுவுக்கு தெரியும்,
தாயின் மடியிலிருக்கும்
பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று.
🌺ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது,
🌺கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும்.
அது போல ஒரு சாராருக்கு ஸ்ரீமந் நாராயணா.... உங்களை தெரியும். வரும் வழியும் தெரியும், உங்களால் தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும்,
🌺ஆனாலும் ஸ்ரீமந் நாராயணா.... உங்களோடு வரமுடியாமல் பாசம் என்ற
ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கிட்டு பகவானே உங்களை பார்த்து, பார்த்து ஏங்கி தவிக்கும்.
🌺மூன்றாவது கணவனும் மனைவியும். எப்படியென்றால்..
🌺முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி போவான், ஆனால் அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்கு பிடித்த வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு
சமைத்து, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு, தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள்.
🌺முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான், அவளை பிரிய மறுக்கிறான். அது போல ஒரு சாரார் ஸ்ரீமந் நாராயணா.... உங்களை கண்டதில்லை.
🌺ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக உணர்த்தப்பட்டு உங்களை காண முற்படும் வேளையில், உங்களுக்கு பிடித்தப்படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.
🌺முதலில் சோதிக்கும் ஸ்ரீமந் நாராயணா.... நீங்கள் எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகி்றீர்கள்
🌺எங்களோடு உறவாடுகிறீர்கள், முடிவில் உங்களோடு
எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறீர்கள்.
🌺நாங்களும் ஆனந்தமாக உங்களோடு கலந்து விடுகிறோம்.
🌺ஆக மூன்று விதமான மனிதர்கள் தான் உலகில் உள்ளனர் என்றார்கள்,
என்றென்றும் ஸ்ரீமந் நாராயணா.... உன் பாத திருவடி நினைத்தே நம் வாழ்வில்
*துன்பம் இல்லாமல் வாழ்வோம்*.....🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
*Let's live without suffering*.......... A simple story that explains 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 *There are three types of people said Guru Gopalswamy
🌺The first type is like a bird and its chicks.
🌺Second category: They are like the cow and her calf.
🌺Third Type: Like husband and wife
🌺First the bird and her chicks.:
How about.. the bird lays eggs and hatches and goes to search for food for its chicks,
🌺By the time it arrives, snakes and other birds eat those chicks as their food.
🌺Birds don't worry too much about missing chicks,
🌺Food feeds for existence. Similarly, chicks know only the food that is fed in their mouths.
🌺 I don't know who is his mother, who is his father, who is gone or not coming,
In the morning it will try to fly and fall down and die, the surviving bird will live as long as it lives, that's all...
🌺 These types of people will do the work they get, eat what they get, or starve.
🌺Caught in the wheel of life, they wander and wander for outer life and finally die.
🌺They don't even know to think of you Lord. They will live, that's all as long as they live.
🌺 How about the second cow and calf...
The cow is tied in one place,
Its calf is bound in one place.
🌺The calf will see the cow and the cow will see the calf.
🌺The calf knows,
In mother's lap
Drinking milk only suppresses hunger.
🌺But a cubit of rope around its neck prevents it from going to its mother,
🌺 The calf will be longing for pulling and pulling.
Like that, a Sarar knows Sriman Narayana... you. You know the way to come, and you know that human life will be eternally happy only because of you.
🌺 But Sriman Narayana.... I can't come with you
Hanging on a rope, God will see you, longing to see you.
🌺The third husband and wife. How about..
🌺A husband who marries a woman he doesn't know before, doesn't even talk to her face, doesn't like her and walks away, but she, from the day she saw him, dresses him as he likes and feeds him as he likes.
🌺She cooks and dresses herself to his liking, convincing him that she was born for him and attracting him to her side.
🌺He hates her at first and melts in her love within a year and goes wherever she goes and refuses to part with her. A Sarar Sriman Narayana like that... never saw you.
🌺 One day when someone is convinced by someone and seeks to see you, they change themselves to your liking.
🌺Shriman Narayana, the first tester.... You are dissolved in our pure love and come with us.
🌺You are in relationship with us and ultimately with you
You allow us to unite.
🌺 We also happily join you.
🌺 They said that there are only three types of people in the world,
Forever Sriman Narayana....Think of your feet in our lives
*Let's live without suffering*.....🌹🌺
--------
🌹🌺Sarvam sri Krishnarpanam 🌹🌺
ஆறு குணங்கள் கொண்டவனே
ஆறுமுகனின் மாமனே
ஆறுகள் பல ஓடினும் அடைக்கலம் உன்னிடம் அன்றோ
*வாத்ஸல்யம்* கொண்டவனே கல் தூணுக்கும் தாய்மை தந்தவனே
*அபய ப்ரதான ஸமயாத்’* –
அபயம் என்றே வருவோரின் அபாயம் பாய்ந்து தடுப்பவனே
*ஆர்தார்த்திநிர்வாபணாத்*
ஆதிமூலம் நீயென்றே உணர்ந்த கஜ ராஜனை கணப்பொழுதில் காத்தவனே
*ஔதார்யாத்*
கருணா ரஸ சாகரம் நீயன்றோ ... புடவை பல தந்தே புன்னகையை ஒரு பென்னகைக்கு தந்தவனே
*_அகஷோஷனாத்_*
கல்லுக்கும் கருணை காட்டி ஸ்ரீமாதாவாக்கினாய்
*அகணிதஷ்ரேயபதப்ராபணாத்*
சிறுவனை துருவனாக்கி துருவனை தாரகை ஆக்கி தவழ விட்டாய் வானத்திலே
நின்னை சரணடைந்தேன், கண்ணா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாத்தென்று..
நின்னை சரணடைந்தேன், கண்ணா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொண்டுருவை போக்கென –
நின்னை சரணடைந்தேன், கண்ணா
நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறன்கள் வளர்த்திட
நல்லவை நாட்டிட, தீயவை ஓட்டிட
கண்ணா நின்னை சரண்புகுந்தேன் 🙏🙏🙏
வேதத்தின் வித்தே வித்தின் வினையே
வினையின் விழுப்பொருளே
விழுப்பொருளின் கரு உருவே ..
உருவின் அருவே அருவின் ஆனந்தமே
ஆனந்தம் முடிவில்லா பரமானந்தமே ...
தாயே தமிழே தரணி போற்றும் நாயகியை ஒன்பது நாட்கள் மட்டும் போதுமோ புகழ்ந்திட ...
புவியில் எடுக்க வேண்டும் இன்னும் ஜென்மங்கள் போற்றி புகழ்ந்திடவே
*பதிவு 351* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*மனோரத ஸித்தி*
அராலா கேஶேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே
ஶிரீஷாபா சித்தே த்ருஷதுபலஶோபா குசதடே
ப்ருசம் தந்வீ மத்யே ப்ருது ருரஸிஜாரோஹ விஷயே
ஜகத் த்ராதும் ஶம்போர் ஜயதி கருணா காசிதருணா 93
சிவம் எனும் மஹா சமுத்திரத்தில் நதியாய் நம்மை அழைத்துக்கொண்டு செல்கிறாள் .
கர்வம் ஆணவம் மமதை மமகாரம் எனும் பேர் இறைச்சலுடன் வாழ்க்கை நடத்தும் நம்மை சாந்தப்படுத்தி திருத்தி சிவம் எனும் மஹா கடலில் சேர வைக்கிறாள் .
பிறகு இறைச்சல் இல்லை
அமைதி ஆனந்தம் பேரானந்தம் பரமானந்தம் மட்டுமே
குண்டலிநீ யாக மூலாதாரத்தில் சுருண்டு படுப்பவள் சிவ நாமத்தை சொல்வோர் உடம்மில் விருட்டு என்று கிளம்பி சஹஸ்ரஸ்தானம் வரை வந்து அந்த ஆத்மாவை இறைவனுடன் சேர்த்து வைக்கிறாள் .
சிவ சிந்தனை இல்லாதோர் உடம்பில் குண்டலிநீ மூலாதாரத்தை விட்டு கிளம்பவே கிளம்பாது ... 🐍🐍🐍
*பதிவு 354* 🙏🙏🙏started on 7th Oct 2021
(நிர்குண உபாசனை) (132-151)
*❖ 132 நிராதாரா* = சுவாதீனமானவள் - தன்னிறைவுற்றவள்
மிகவும் அருமையான திருநாமம் ..
ஆதாரம் இல்லாதவள் ...
அவளே எதற்கும் ஆதாரமாய் இருப்பதால் தனக்கென்று எந்த ஆதாரமும் இல்லாதவள் .
ஆதாரம் தேவை இல்லாதவள் .
ஆதாரத்திலிருந்து கிளம்பியவள் ..
மூலா தாரம் அவளே
அம்பாள் உபாஷனையில்
*ஸாதாரம் , நிராதாரம்* என்று இரண்டு வகை உண்டு
மந்திர வடிவாக , ஸ்துதி வடிவாக வழி படுவது *ஸாதாரம்*
ஞானத்தினால் , மானசீகமாக வழிபடுவது *நிராதாரம்*
நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம்.
□ *பிரதமை*
நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. அன்றைய தினம் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.
□ *துவிதியை*
இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி தேவியாக போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும்.
□ *திரிதியை*
மூன்றாவது நாளுக்கு உரிய வாராகி அன்னை, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.
□ *சதுர்த்தி*
நான்காம் நாளில் அருள்பவள் மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
□ *பஞ்சமி*
ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் இவளுக்கு ஏற்றவை.
□ *சஷ்டி*
ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம் இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. இவள் விரும்புவது தேங்காய் சாதம்.
□ *சப்தமி*
ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். இந்த அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து வழிபடலாம்.
□ *அஷ்டமி*
எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, சர்க்கரை பொங்கல் படையல் இட்டு வழிபடலாம்.
□ *நவமி*
ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னை யை வழிபடுவது வழக்கம். இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து
□ *விஜயதசமி*
பத்தாவது நாள் விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.
விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு என்றாலும் அதில் விசேஷமான நாட்கள் கடைசி மூன்று நாட்கள். சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும். இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும்.
அஷ்ட லஷ்மி ஸ்தோத்ரம், லலிதா சஹஸ்ரநாமம், லஷ்மி சஹஸ்ரநாமம் ,தேவி பாகவதம், படித்து நாமஸ்மரணை செய்து நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அளவில்லாத பலன்களை அடைவார்கள்..... 🪷🪷🪷
*துன்பம் இல்லாமல் வாழ்வோம்*.......... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹*மூன்று வகை மனிதர்கள் உள்ளனர் என்றார் குரு கோபால்சாமி
🌺முதல் வகை பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.
🌺இரண்டாம் வகையினர்: பசுவும் அதன் கன்றும் போல் உள்ளனர்.
🌺மூன்றாம் வகையினர்: கணவனும் மனைவியும் போல் உள்ளனர்
🌺முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும்.:
எப்படியென்றால்.. பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப்போகிறது,
🌺அதுசென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது,
🌺காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலையெல்லாம் படுவதில்லை,
🌺இருப்பதற்கு உணவு ஊட்டும்.அதுபோல் குஞ்சுகளுக்கும் தன் வாயில் ஊட்டப்படும் உணவு தான் தெரியும்,
🌺தன் தாய் யார், தகப்பன் யார் போனது வராதா எதுவும் தெரியாது,
நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும், மீந்துபோன பறவை வாழும் வரை வாழும், அவ்வளவு தான்...
🌺இந்த வகை மனிதர்கள் இது போலத்தான் கிடைத்த வேலையை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையா பட்டினி கிடப்பார்கள்.
🌺வாழ்க்கை சக்கரத்தில் அகப்பட்டு, புற வாழ்க்கைக்காக அலைந்து, திரிந்து, கடைசியில் மரணிப்பார்கள்.
🌺அவர்களுக்கு பகவானே உங்களை நினைக்ககூட தெரியாது. வாழ்வார்கள், உயிரோடு வாழும் வரை அவ்வளவு தான்.
🌺இரண்டாவது பசுவும் கன்றும் எப்படியென்றால்...
பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும்,
அதன் கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும்.
🌺கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும்,
🌺கன்றுவுக்கு தெரியும்,
தாயின் மடியிலிருக்கும்
பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று.
🌺ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது,
🌺கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும்.
அது போல ஒரு சாராருக்கு ஸ்ரீமந் நாராயணா.... உங்களை தெரியும். வரும் வழியும் தெரியும், உங்களால் தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும்,
🌺ஆனாலும் ஸ்ரீமந் நாராயணா.... உங்களோடு வரமுடியாமல் பாசம் என்ற
ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கிட்டு பகவானே உங்களை பார்த்து, பார்த்து ஏங்கி தவிக்கும்.
🌺மூன்றாவது கணவனும் மனைவியும். எப்படியென்றால்..
🌺முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி போவான், ஆனால் அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்கு பிடித்த வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு
சமைத்து, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு, தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள்.
🌺முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான், அவளை பிரிய மறுக்கிறான். அது போல ஒரு சாரார் ஸ்ரீமந் நாராயணா.... உங்களை கண்டதில்லை.
🌺ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக உணர்த்தப்பட்டு உங்களை காண முற்படும் வேளையில், உங்களுக்கு பிடித்தப்படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.
🌺முதலில் சோதிக்கும் ஸ்ரீமந் நாராயணா.... நீங்கள் எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகி்றீர்கள்
🌺எங்களோடு உறவாடுகிறீர்கள், முடிவில் உங்களோடு
எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறீர்கள்.
🌺நாங்களும் ஆனந்தமாக உங்களோடு கலந்து விடுகிறோம்.
🌺ஆக மூன்று விதமான மனிதர்கள் தான் உலகில் உள்ளனர் என்றார்கள்,
என்றென்றும் ஸ்ரீமந் நாராயணா.... உன் பாத திருவடி நினைத்தே நம் வாழ்வில்
*துன்பம் இல்லாமல் வாழ்வோம்*.....🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
*Let's live without suffering*.......... A simple story that explains 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 *There are three types of people said Guru Gopalswamy
🌺The first type is like a bird and its chicks.
🌺Second category: They are like the cow and her calf.
🌺Third Type: Like husband and wife
🌺First the bird and her chicks.:
How about.. the bird lays eggs and hatches and goes to search for food for its chicks,
🌺By the time it arrives, snakes and other birds eat those chicks as their food.
🌺Birds don't worry too much about missing chicks,
🌺Food feeds for existence. Similarly, chicks know only the food that is fed in their mouths.
🌺 I don't know who is his mother, who is his father, who is gone or not coming,
In the morning it will try to fly and fall down and die, the surviving bird will live as long as it lives, that's all...
🌺 These types of people will do the work they get, eat what they get, or starve.
🌺Caught in the wheel of life, they wander and wander for outer life and finally die.
🌺They don't even know to think of you Lord. They will live, that's all as long as they live.
🌺 How about the second cow and calf...
The cow is tied in one place,
Its calf is bound in one place.
🌺The calf will see the cow and the cow will see the calf.
🌺The calf knows,
In mother's lap
Drinking milk only suppresses hunger.
🌺But a cubit of rope around its neck prevents it from going to its mother,
🌺 The calf will be longing for pulling and pulling.
Like that, a Sarar knows Sriman Narayana... you. You know the way to come, and you know that human life will be eternally happy only because of you.
🌺 But Sriman Narayana.... I can't come with you
Hanging on a rope, God will see you, longing to see you.
🌺The third husband and wife. How about..
🌺A husband who marries a woman he doesn't know before, doesn't even talk to her face, doesn't like her and walks away, but she, from the day she saw him, dresses him as he likes and feeds him as he likes.
🌺She cooks and dresses herself to his liking, convincing him that she was born for him and attracting him to her side.
🌺He hates her at first and melts in her love within a year and goes wherever she goes and refuses to part with her. A Sarar Sriman Narayana like that... never saw you.
🌺 One day when someone is convinced by someone and seeks to see you, they change themselves to your liking.
🌺Shriman Narayana, the first tester.... You are dissolved in our pure love and come with us.
🌺You are in relationship with us and ultimately with you
You allow us to unite.
🌺 We also happily join you.
🌺 They said that there are only three types of people in the world,
Forever Sriman Narayana....Think of your feet in our lives
*Let's live without suffering*.....🌹🌺
--------
🌹🌺Sarvam sri Krishnarpanam 🌹🌺
நெறியிலே
மயங்குகின்ற நேர்மையொன் றறிகிலீர்
உறியிலே தயிரிருக்க வூர்புகுந்து வெண்ணைதேடும்
அறிவிலாத மாந்தரோ டணுகுமாற தெங்ஙனே. 76👏👏👏
அறிவுப் பிறப்பெடுத்தோர் செல்லும் வழி எது என அறிந்திடாது, மயங்கி, எது நேர்வழி என அறிகிலீர்.
நம் வீட்டு உறியிலேயே தயிர் இருக்க, ஊரிலுள்ள எல்லா வீடுகளிலும் சென்று வெண்ணையைத் தேடும் அறிவற்றவர்களாகிய உங்களுக்கு எப்படி விளக்குவேன்?
நம் உடலிலேயே தயிர் உள்ளது; அதைக் கடைந்தால் வெண்ணை கிடைத்துவிடும். கடையும் வழி என்ன? என்பதைக் காணுங்கள்.
இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடத்திலே தேடிப் பயனென்ன?🪷🪷🪷
*You are what you are*
An old man, staying in a small south Indian town came to visit his son in Bombay recently. The son in his early thirties is a successful businessman living with his wife and son. The father, having spent most of his life at his birthplace, hardly understands a splatter of Hindi or English, forget Marathi. But he doesn't care. 'I have come here to spend a few days with my son and his family. I don't have to go out and socialize with the city people,' he said.
Last week he was in a very good mood. 'Let's go to a five star hotel's bar tonight,' he told his father. It was a beautiful evening. Talking about everything under the sun they had a few drinks. As usual they were offered some salad, peanuts, wafers etc as accompaniments with their drinks. The old man being almost toothless was not much interested in eating.
Unfortunately while walking in the lobby, he missed a step and stumbled. Down he went, scattering the chana on the plush carpet.
No problem. Now try to visualize that scenario. Someone else in his son's place would have been mortified, embarrassed to death. He might have cursed not his father but his own self for causing this awkward situation.
'
No sir, not this son. Gently, with a smile, he helped his father get back on his feet. Instead of feeling irritated or angry, he was amused. He found the whole incident very funny. Laughing, they both went home and on the way they decided to return to the same place the following Sunday.
The old man liked the place and liked the chana too.
Few days back, at a friend's place they both described this event and made everybody laugh.
Why should I feel embarrassed with his nature and habits?
Nobody has a right to stop him from doing whatever he feels comfortable with, as long as it is not harmful to others.'
The son doesn't care what the staff in the hotel thought about that incident. He says 'they should be concerned only with their bills and tips. I am concerned about my father's happiness.' The wife too totally agrees with the husband on this issue. She feels there are enough other qualities in her father- in- law to feel proud of.
Accept them .The above incident is not mentioned just to show the love and devotion of a son for his father. More than love it is a matter of understanding and a healthy respect for the other person's lifestyle.
*A seventy plus old man doesn't want to change his lifestyle now. He likes the way he eats or dresses or talks. In his eyes there is nothing wrong with the old ways of living. And the son says, ok, fine. Every body has a right to live as per his wish. Now at his age, why should he be forced to learn to eat with a fork and knife, if he doesn't want to? I will feel bad if he is doing something morally wrong or indulging in some harmful activities. But otherwise it is fine. I am not going to try to change him at this stage. He is my father. I love him, respect him.*
_Hey folks, can you think this way? So many times we see people getting embarrassed by the so called unsophisticated behavior of their family members. They keep on apologizing about their lack of class and manners or about their drawbacks to outsiders. My wife can't speak proper English; she doesn't know what's happening in the world, so I avoid taking her out or introducing her to my friends and business associates... My parents can't eat with a spoon and fork, so I don't take them to restaurants My husband is working as an ordinary clerk, so I feel awkward when I introduce him to my rich friends. My brother is mentally challenged, so I don't feel like going out with him..._
*Are you plagued with such thoughts or do you meet such people who think alike? If you do, please ask yourself. Why do others or I feel this way? Really what is there to feel ashamed of? Most of the people always have this fear of other peoples' opinions and comments. What would others say?*
*_Nothing.. You are what you are._*
Have a great Sunday !!!!
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மங்கள வாழ்வு தரும் மகாளய பட்சம் பற்றிய பதிவுகள் :*
மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும்.
இந்த காலக்கட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும், திரயோதசி, கஜச்சாயை என்றும் கூறப்படுகிறது.
மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தானங்களைச் செய்வதால் 12 மாதங்களிலும் தானம் செய்த பலன் கிடைக்கும்.
பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.
இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும்.
வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
இந்த காலத்தில் திருமணம் போன்ற எந்த சுபகாரியத்தையும் செய்யமாட்டார்கள். ஏனென்றால், இந்த காலப்பகுதி முழுக்க முழுக்க முன்னோர்களுக்கு உரியது என்று கருதப்படுகிறது.
சிரார்த்தம், திதி கொடுப்பது, தான, தர்மங்கள் செய்வது, பங்காளிகளுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்ப்பது, அதாவது சொத்து உள்ளிட்ட பிரச்சனைகளில் உள்ள வில்லங்கங்களை தீர்த்து கொள்கிற காலம்தான் இந்த மகாளய பட்சம் என்பதாகும்.
இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு புல், பழம் கொடுக்கலாம்.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி !
*🤘ஓம் நமசிவாய🙏*
எல்லாரும் மோக்ஷத்துக்கு முயற்சி பண்ணி, ஸம்ஸாரத்தைக் கழித்துக்கொண்டு லோக வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் போவதென்பது ஸாத்யமில்லை. பலவித எண்ணமுள்ள ஜனங்களைப் படைத்து ஆடவிட்டு, ஒடவிட்டு, பரஸ்பரம் மோதிக்கொள்ளவிட்டு இதிலே விசித்ர விசித்ரமாகப் பல ரஸங்கள் ஏற்படும்படியாக லோக நாடகத்தை ஈச்வரன் நடத்திவருகிறான். இப்படி நாடகம் பார்த்து ரஸிப்பதற்குத்தான் அவன் லோக லீலை செய்வதே. எல்லாரும் ஞானிகளாகி பரம பக்தர்களாகி அவன் விட்ட வழி என்று இருந்தால், ப்ரேம ரஸம் என்ற ஒன்றையே பெருக்கிக் கொண்டிருந்தால், அல்லது அதுவும் இல்லாத பரம சாந்தியில் முழுகிவிட்டால் ஈச்வரனுக்கு எப்படி ட்ராமாவின் ரஸபேதங்கள் கிடைக்கும்?
உலகமேயில்லாத மஹா ப்ரளயம் என்பது அதுதான்.
இப்படி எத்தனை யுகயுகம் அவனிடம் லயித்திருந்தாலும், அதுவும் அவனோடேயே நிரந்தரமாக, சாச்வதமாகச் சேர்ந்து அவனை அறிந்து ஐக்யப்பட்ட அத்வைத மோக்ஷமில்லை. ப்ரளயத்தில் லயித்த ஜீவர்கள் அத்தனை யுகயுகங்களுக்கு அப்புறம் மறுபடி ஸ்ருஷ்டி ஏற்படும்போது லயம் நீங்கி அவனுக்கு வெளியிலே வந்து மறுபடி பிறக்கத்தான் வேண்டும். அவனுக்கு ட்ராமா பார்த்துத்தான் ஆகணும். லயத்தில் அவனை அறியும் அநுபவமும் இல்லை.
ஐக்யம் என்று அப்படியே அவனேயான அறிவாகி ஏகமாக ஆகிவிடுவதுதான் சாச்வத விடுதலை. லயம் என்பது ஐக்யமில்லை. ஒரு வஸ்து இன்னொன்றிலே ஒன்றாக இழைந்திருக்கும் நிலைதான் லயமே தவிர, அதுவாகவே ஆகிவிடுவதல்ல. அதனால்தான் ப்ரளயத்தில் லயித்தவர்களை அவன் மறுபடி ஸம்ஸாரத்தில் அவிழ்த்துவிடமுடிகிறது. நித்யப்ரளயமான தூக்கமே எடுத்துக்காட்டு.
சாஸ்த்ரங்கள், இம்மாதிரி ஜீவஸமூஹம் முழுதும் தன் முயற்சியும் ஸாதனையும் இல்லாமல் அவனுடைய க்ருபையாலேயே அவனிடம் லயித்திருப்பதையும் மறுபடி அடுத்த ஸ்ருஷ்டியில் உத்பவிப்பதையும்தான் சொல்கின்றனவே ஒழிய, லோகம் பூராவும் ஞானம் பெற்று அறிவான, ஆனந்தமான மோக்ஷம் அடைவதாகச் சொல்லவில்லை.
அதாவது, ‘லோகம் என்று ஒன்று இருந்தால் அதிலே மோக்ஷாதிகாரிகளாக ஆகாத பலபேர் இருந்துகொண்டுதானிருப்பார்கள்; விசேஷமாக பக்தி, ஞானங்கள் இல்லாதவர்களாகவே பலர் இருந்துகொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கும் தன்னிடம் ஒடுங்கியிருப்பதான சாந்த நிலையைத் தரவேண்டுமென்று ஈச்வரன் நினைக்கும்போது லோகமே இல்லாமல் பண்ணித்தான் ப்ரளயத்தில் எல்லாவற்றையும் தனக்குள் இழுத்துக்கொள்வான்; லோகம் என்று ஒன்று இருந்து அதில் பக்தி, ரஸம், ஞானத்தின் சாந்தி என்ற இரண்டு மட்டுமே இருப்பதாக விடமாட்டான்’ என்றே சாஸ்த்ரங்களிலிருந்து ஏற்படுகின்றன.
ஞானத்தின் உண்மையான சாந்திநிலைக்கு லோகம் இருந்தும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். ப்ரேம ரஸத்துக்கும், அது ஒன்றே பெருகுவதற்கென்று வைகுண்ட, கைலாஸாதி லோகங்கள் இருக்கின்றன. ஆகையால் நவரஸ நாடகமாகத்தான் இந்த ஜீவலோகம் இருக்கவேண்டும்.
அகத்திக்கீரை தருவதால்...
முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.
கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.
நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.
பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்
சுப வாழ்வு ஏற்படும்.
பசுவும் அதன் புண்ணியங்களும்……..
*பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
*பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
*பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), நாட்டுப் பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும்.
இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.
*பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.
*பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். நாட்டுப் பசுவின் கால் பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக் கொண்டார்கள்.
*`மா’ என்று நாட்டுப் பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது.
*பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.
*மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.
*ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசு தானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த
பசு மாடு அங்கு தோன்ற, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு் வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
*உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சி அடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது நல்ல ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
பசுவே நம் கோ மாதா.
நம் கோமாதாவை காப்போம்....!
🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
--------------------------------------------------------
🌺🌹" பண்டரிபுரத்தில் பிறந்து செருப்பு தைக்கும் வேலையில் கிடைக்கும் சிறிய வருமானத்தில் தன்னுடைய குடும்பம் வயிறு கழுவினாலும் இரவும் பகலும் பாண்டுரங்கன் மேல் அளவில்லாத பக்தி கொண்டு அவனை போற்றி பாடுவதிலே தான் பெரும்பகுதி நேரத்தை செலவிட்டவர் ஸந்த் ரோகிதாசர்.
🌺ஏகாதசி அன்று அவர் பஜனை நாள் பூரா கோவில் அருகே நடக்கும். அனைவரும் பக்தி ரசத்தில் மூழ்கி அனுபவிப்பார்கள்.
🌺இதனால் அவரால் ஒரு மாசத்துக்கு 10 ஜோடி செருப்பு தான் பண்ண முடிந்தது. அதை வைத்து அரை வயிற்று கஞ்சி தான் அவருக்கு இருந்தாலும் பகவன் நாமா சொல்லி ஆனந்தமாக நாட்களை நகர்த்தினார்.
🌺அப்படி இருக்க ஓர் நாள் அந்த ஊர் ராஜாவுக்கு திடீரென்று அடுத்த ஊர் ராஜாவின் மேல் படையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் படை வீரர்களுக்கு காலணி வழங்க ஊரிலுள்ள அனைத்து செருப்பு தைக்கும் தொழிலாளிகளிடமும் ஒருமாத காலத்தில் தலா 1000 ஜோடி செருப்பு தைக்க வேண்டும் என்று ஆணையிட்டான்.
🌺 எல்லா தொழிலாளிகளும் இரவும் பகலும் உழைக்க கிளம்பிவிட்டார்கள். ரோஹிதாசருக்கு நிச்சயம் தன்னால் 1000 ஜோடிசெருப்பு செய்ய முடியாது என்று தெரியும். எல்லாம் இறைவன் செயல் என்று வழக்கம் போல் பாண்டுரங்க பஜனையிலே நிறைய நேரம் செலவானது.
🌺இன்னும் மூன்று நாள் இருக்கு அதற்குள் 1000ஜோடி செருப்பு ரெடியாக வேண்டும். இல்லையேல் அரசனின் கடும் தண்டனை நிச்சயம்.
🌺அவர் மனைவி அழுதாள்.. “எப்படியாவது ஏற்பாடு பண்ணுங்களேன்?"
🌺"என்னால் எப்படி அம்மா அவ்வளவையும் பண்ண முடியும்? ரெண்டே நாளில் ஆககூடிய காரியமா இது?
🌺தம்புரா மூலைக்கு போனது. முக்கி முனகி செய்தாலும் 11 ஜோடி கூட தயாராகவில்லை."பாண்டுரங்கா, நீயே வழிகாட்ட வேண்டும்!"
🌺“அய்யா” என்ற தெருவில் ஒரு குரல் கேட்டது.“யாரப்பா?”
“இந்த ஊரிலே ரோஹிதாசர் என்பது யார்?”
🌺“ஏன்? நான் தான்”
“உங்களுக்கு செருப்பு தைக்க உதவிக்கு ஆள் வேண்டும் என்று கேட்டீர்களாமே”
🌺“சொல்லியிருந்தேன் பல பேரிடம். ஆனால் இதுவரை ஒருவரும் கிடைக்கவில்லை, இனி கிடைத்தாலும் பிரயோஜனமில்லை நாளை விடிந்தால் அரசனின் ஆட்கள் என்னை இழுத்து போய் தண்டனை கொடுக்க போகிறார்கள். ஆகவே எனக்கு உதவிக்கு இப்போ ஆள் வேண்டாம்"
🌺"இல்லை அய்யா, எனக்கு ஓர் வாய்ப்பு கொடுங்கள். நான் வேலையை முடித்து விடுகிறேன்” .
🌺“உன்னால் முடியாதப்பா”.
“அதென்ன அந்த மூலையில்?”
“என்னுடைய தம்புரா”
🌺“நீங்கள் பாடுவீர்களா எனக்கு பாட்டு ரொம்ப பிடிக்கும். நீங்கள் பாடிக்கொண்டே இருங்கள் நான் முடித்து விடுகிறேன்”
🌺“பாடினால் என்னை நான் மறந்து போய்விடுவேன்.
உனக்கு கொஞ்சம் கூட உதவ முடியாதே தம்பி."
🌺பரவாயில்லை அய்யா…
"உங்கள் உதவி வேண்டாம் நீங்கள் பாட ஆரம்பியுங்கள் நான் என் வேலையை ஆரம்பிக்கிறேன் அடடே! இன்று ஏகாதசி ஆயிற்றே. நீங்கள் பாடுங்க.
🌺"தம்பி, ஏகாதசி அன்று நான் கோவிலில் பாடுவது வழக்கம் இன்று இந்த வேலையால் அதை கூட செய்யவில்லை. என் கவலை எனக்கு.”
🌺“கோவில் கிட்டே உக்காந்து பாடறதை இங்கே உக்காந்து பாடுங்க நானும் கேட்பேன் இல்லையா."ரோகி தாசர் விட்டல விட்டல விட்டல விட்டல என நாமஸ்மரணம் செய்ய ஆரம்பித்து பின்னர் தன்னையே மறந்து பாட ஆரம்பித்தார்..
🌺நேரம் சென்றதே தெரியவில்லை.
இரண்டு நாள் போனதே தெரியவில்லை. நாள் பூரா பஜனையில் ஈடுபட்டார் ரோஹிதாசர். பையன் 1000 ஜோடி செருப்பு தயார் செய்து நூறு நூறாக மூட்டை கட்டி வைத்து விட்டான்.
🌺“தம்பி, ரொம்ப நன்றிப்பா.
என் மானத்தை மட்டுமல்ல என் உயிரையும் காப்பாற்றினாய். ரெண்டு நாளாய் ராப்பகலா உழைச்சே. இந்தா எண்ணெய் சீயக்காய் ஆத்தில் போய் குளிச்சுட்டு வா சாப்பிடுவோம்.” போனவன் வரவில்லை.
🌺"ஏம்மா, அந்த பைய்யன் வரவில்லையே ஏதாவது பேர் ஊர் கேட்டாயா அவனிடம்."
“பண்டரிபுரம் தானாம். பேர் பாண்டுவாம்”.
🌺ராஜாவின் ஆட்கள் செருப்பை எல்லாம் தூக்கி போய் கை நிறைய காசு கொடுத்தார்கள்.
எண்ணையும் காசுமாக தூக்கிக்கொண்டு பையனை எங்கெல்லாமோ தேடி கிடைக்காமல் கோவிலுக்கு சென்றார்.
🌺தூரத்திலிருந்தே பாண்டுரங்கன் தெரிந்தான். ஒருகணம் அவன் முகம் அவருக்கு அந்த பையன் முகமாக தோன்றி சிரித்தது, ஆனந்த கண்ணீர் விட்டு அழுது புலம்பி அரற்றி ஆர்ப்பரித்து கிடந்தார் ரோகிதாசர் விட்டலனோ புண்முறுவல் பூத்தான் அங்கே ..🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
*Let's live without suffering*.......... A simple story that explains 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 *There are three types of people said Guru Gopalswamy
🌺The first type is like a bird and its chicks.
🌺Second category: They are like the cow and her calf.
🌺Third Type: Like husband and wife
🌺First the bird and her chicks.:
How about.. the bird lays eggs and hatches and goes to search for food for its chicks,
🌺By the time it arrives, snakes and other birds eat those chicks as their food.
🌺Birds don't worry too much about missing chicks,
🌺Food feeds for existence. Similarly, chicks know only the food that is fed in their mouths.
🌺 I don't know who is his mother, who is his father, who is gone or not coming,
In the morning it will try to fly and fall down and die, the surviving bird will live as long as it lives, that's all...
🌺 These types of people will do the work they get, eat what they get, or starve.
🌺Caught in the wheel of life, they wander and wander for outer life and finally die.
🌺They don't even know to think of you Lord. They will live, that's all as long as they live.
🌺 How about the second cow and calf...
The cow is tied in one place,
Its calf is bound in one place.
🌺The calf will see the cow and the cow will see the calf.
🌺The calf knows,
In mother's lap
Drinking milk only suppresses hunger.
🌺But a cubit of rope around its neck prevents it from going to its mother,
🌺 The calf will be longing for pulling and pulling.
Like that, a Sarar knows Sriman Narayana... you. You know the way to come, and you know that human life will be eternally happy only because of you.
🌺 But Sriman Narayana.... I can't come with you
Hanging on a rope, God will see you, longing to see you.
🌺The third husband and wife. How about..
🌺A husband who marries a woman he doesn't know before, doesn't even talk to her face, doesn't like her and walks away, but she, from the day she saw him, dresses him as he likes and feeds him as he likes.
🌺She cooks and dresses herself to his liking, convincing him that she was born for him and attracting him to her side.
🌺He hates her at first and melts in her love within a year and goes wherever she goes and refuses to part with her. A Sarar Sriman Narayana like that... never saw you.
🌺 One day when someone is convinced by someone and seeks to see you, they change themselves to your liking.
🌺Shriman Narayana, the first tester.... You are dissolved in our pure love and come with us.
🌺You are in relationship with us and ultimately with you
You allow us to unite.
🌺 We also happily join you.
🌺 They said that there are only three types of people in the world,
Forever Sriman Narayana....Think of your feet in our lives
*Let's live without suffering*.....🌹🌺
--------
🌹🌺Sarvam sri Krishnarpanam 🌹🌺
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவராத்திரி பற்றிய பதிவுகள் :*
சிவபெருமானுக்கு ஒரு ராத்திரி 'சிவராத்திரி". அம்பாளுக்கு ஒரு ராத்திரி 'நவராத்திரி" என்பது ஆன்றோர்களின் வாக்கு.
அம்பிகையை வழிபடுவதற்கு பல விழாக்கள் இருந்தாலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அம்பிகையை மூன்று வடிவங்களில் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்து வழிபடக்கூடிய ஒரு விழாவாக, நவராத்திரி விழா விளங்குகின்றது.
முக்கிய விரதங்களில் ஒன்றான நவராத்திரி விழா இன்று (26.09.2022) திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.
மக்களின் பண்பாட்டை வளர்க்கும் விழாக்களில் முக்கியமானது நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும்.
நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.
தனம், தானியம், நிலையான இன்பம், ஆரோக்கியம், சொர்க்கம் மற்றும் வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.
*நவராத்திரிக்கு கொலு வைப்பது ஏன்?*
ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி மற்றும் மனிதர் என எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் அவளை காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்.
*முதல் படி, அதாவது கீழ் படியில் :*
ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்.
*இரண்டாம் படியில் :*
இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.
*மூன்றாம் படியில் :*
மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள்.
*நான்காம் படியில் :*
நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.
*ஐந்தாம் படியில் :*
ஐந்தறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்.
*ஆறாம் படியில் :*
ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள்.
*ஏழாம் படியில் :*
சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.
*எட்டாம் படியில் :*
தேவர்களின் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள்.
*ஒன்பதாம் படியில் :*
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.
*கொலு வைக்க சிறந்த நேரம் :*
காலை - 06.15 மணி முதல் 07.15 மணி வரை
நண்பகல் - 12.05 மணி முதல் 02.05 மணி வரை
மாலை - 06.05 மணி முதல் 09.05 மணி வரை
*நவராத்திரி சிறப்புகள் :*
நவராத்திரியின் 9 நாட்களும் சர்க்கரை பொங்கல், உளுந்து வடை போன்ற நெய்வேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
நவராத்திரி நாட்களில் வீட்டில் அரிசி மாவை பயன்படுத்தி கோலமிட வேண்டும். இவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.
நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சிறந்த வழிபாடாகும்.
தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கல பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தான தர்மங்கள் தான் நவராத்திரி பூஜைகள் நிறைவு செய்ய உதவி புரிகின்றன.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
*🤘ஓம் நமசிவாய🙏*
*அம்பிகையின் மகிமை*
அம்பாளுக்கு ஒரு பெயர் உண்டு. “ *நாமபாராயணப்ரீதா* “ என்று.
அம்பாளின் நாமாக்களைச் சொல்வதே அம்பாளைத் திருப்திப்படுத்துவதற்கு ஒப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது.
தியானம் விசேஷம்தான் என்றாலும் யாருடைய மனம் அவர்களுடைய வசத்தில் இருக்கிறதோ அவர்கள்தான் தியானம் செய்யலாம்.
எல்லோராலும் செய்ய முடியாது. எவனுடைய மனம் ‘இங்கே அங்கே ‘ என்று அலைபாய்கிறதோ (அப்படிப்பட்டவர்கள் தியானம் செய்ய முடியாததால்) அவர்களுக்குச் சுலபமான வழி “ *நாமபாராயணப்ரீதா* ” என்று சொல்வது போல் அம்பாளின் நாமாக்களைச் சொன்னாலே போதும்..🙏🙏🙏
*பதிவு 355* 🙏🙏🙏started on 7th Oct 2021
(நிர்குண உபாசனை) (132-151)
அஞ்சனா: அவித்யா, அஞ்ஞானம்
அம்பாள் பூர்ண ப்ரம்ம ஞான உரு.
குற்றங்குறை அற்றவள்.
மாசு மரு இல்லாத ஸ்ரீ லலிதாம்பாள்.
அஞ்சனம் என்றால் மை என்றும் ஒரு அர்த்தம்.
மை தீட்டுவதே அழகு சேர்க்க.
அழகுக்கு எதற்கு மை?
அம்பாள் அதனால் தான் நிர் -அஞ்சனா. நிஷ்களங்கமானவள்
🙏🙏🙏🪷🪷🪷
*பதிவு 352* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
இஷ்டப் பிராப்தி
கலாபி: கர்ப்பூரைர் மரகதகரண்டம் நிபிடிதம்
அதஸ் த்வத்போகேன ப்ரதிதின மிதம் ரிக்தகுஹரம்
விதிர் பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே 94
கிரணங்களாகிய பச்சைக்கர்ப்பூரத்தால் நிறைவு செய்யப்பட்டது;
களங்கமாகத் தோன்றுவது கஸ்தூரி.
ஆகையால் தின்ந்தோறும் உனது உபயோகித்தால் காலியாகும் அப்பாண்டத்தை பிரம்மா மீண்டும் மீண்டும் உனக்காக நிச்சயம் நிரப்பி வைக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.
இருட்டில் பிறந்தாய் உலகம் கண்டதோ வெளிச்சம் ...
வெண்ணெய் தின்றாய் ...
திருடியதோ எங்கள் நெஞ்சம்
பூதகி பால் உண்டாய் ...
சுரந்ததோ தாய்மை எனும் பால் உலங்கெங்கும்
மாமனை அழித்தாய் ...
மடிந்ததோ அனைவர் மமகாரம்
சொன்னாய் கீதை ...
சுவை கண்டதோ சுகந்தம் கொண்டதோ எங்கள் உள்ளம்
பாரத போர் நடத்தினாய் ...
தர்மம் அடைந்ததோ சிரஞ்சிவீ பட்டம்
🙏🙏🙏
*அலங்காரம்-15*
💐💐💐💐
குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த,
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்! இரு நான்கு வெற்பும்,
அப்பாதி யாய்விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய,
சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடை சண்முகனே!
தமிழில் இன்று கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியத்தில், தொல்காப்பியர் முருகப் பெருமானை அழகாக நிலை நாட்டிச் சென்று விடுகிறார்!
மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மை-வரை உலகமும் - என்று தொல்காப்பியமே முழங்குகிறது!
திருமாலான மாயோனையும், முருகனான சேயோனையும் தமிழ்க் கடவுள்களாகக் காட்டி முழங்குகிறது! இவர்களுக்கு மட்டுமே ஆலயங்களும், பூசைகளும், மக்கள் வழிபாடும், குரவைக் கூத்துகளும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன!
(குறிப்பு: இந்திரனும், வருணனும் வெறும் நிலத் தெய்வங்களாகவே சொல்லப்பட்டு, மக்கட் தெய்வங்களாகச் சொல்லப்படாததால்...இவர்கள் தமிழ்க் கடவுள், தமிழர் கடவுளாக ஆகவில்லை!)
சப்பாணி கொட்டாயே முருகா, சப்பாணி கொட்டாயே!
தமிழ்க் கடவுளாய், உன் திருமுகத்தில் அழகு பொங்கச் சிரித்து, சப்பாணி கொட்டாயே!
*பதிவு 348*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
தீ⁴யன்த்ரேண வசோ-க⁴டேன கவிதா-குல்யோபகுல்யாக்ரமைர்-
ஆனீதைஶ்ச ஸதாஶிவஸ்ய சரிதாம்போ⁴-ராஶி-திவ்யாம்ருதை:
ஹ்ருத்-கேதார-யுதாஶ்-ச ப⁴க்தி-கலமா: ஸாபல்யம்-ஆதன்வதே
துர்பி⁴க்ஶான்-மம ஸேவகஸ்ய ப⁴கவன் விஶ்வேஶ பீ⁴தி: குத :
धीयन्त्रेण वचोघटेन कविताकुल्योपकुल्याक्रमै-
रानीतैश्च सदाशिवस्य चरिताम्भोराशिदिव्यामृतैः ।
हृत्केदारयुताश्च भक्तिकलमाः साफल्यमातन्वते
दुर्भिक्षान् मम सेवकस्य भगवन् विश्वेश भीतिः कुतः
அழைத்து தர வேணும் ஊழ் பவ
கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே” – (திருப்புகழ்)
அப்படினு முடிக்கறார் அவர். அந்த மாதிரி, இந்த ஸம்ஹாரங்கிற மலைல நம்ப சுத்திண்டே இருக்கறோம். இதிலிருந்து நம்மள விடுவிச்சு….,
“க்ருபை சித்தமும் ஞான போதமும் – ஹே முருகா ! நீ என்னிக்கி கொடுப்பியோ, அந்த நாள் தான் ஒரு நாள்”, அப்டிங்கறார்.
நமக்கு முப்பது நாள்ல ஒரு நாள் தான் பௌர்ணமி வர்றது. அந்த மாதிரி இல்லாம, ஞானிகளுக்கு அந்த மந்தஸ்மித சந்த்ரிகை, அம்பாளோட மந்தஸ்மித சந்த்ரிகை, முப்பது நாளும் தெரிஞ்சிண்டு இருக்கு.
*பதிவு 345* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
அனுத்தமோ துராதர்ஷ :
க்ருதஜ்ஞ : *க்ருதிராத்மவான்||9*
💐💐💐
இப்போது இதற்கு ஒரு பிராயச்சித்தம் செய்யும் நிலை ஏற்பட்டு விட்டதே!” என்று அகஸ்தியரும் புலம்பினார்.
அப்போது வசிஷ்டர் தம் சிஷ்யர்களை அழைத்துக் கற்பூரம் எடுத்து வரச் சொன்னார்.
அந்தக் கற்பூரத்தைக் கொண்டு ராமனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டினார் வசிஷ்டர்.“என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான் ராமன்.
“ராமா!எந்தச் செயலாக இருந்தாலும் அதைச் செய்விப்பவன் நீ.
நீ செய்விக்காவிட்டால் உலகில் ஏதும் நடக்காது.
நீயின்றி ஓரணுவும் அசையாது. அனைத்துச் செயல்களையும் நீ இயக்குவதால் நீயே செயல் – ‘ *க்ருதி* :’ என்றழைக்கப்படுகிறாய்.
எனவே அனைத்துச் செயல்களின் வடிவில் இருப்பவனான உனக்கு மங்கள ஆரத்தி காட்டி விட்டபடியால்,
அச்வமேத யாகமாகிய இந்தச் செயல் இனிதே நிறைவடைந்ததாகப் பொருள்!” என்றார் வசிஷ்டர்.
உருவரங்க மாகிநின்ற வுண்மையொன்றை யோர்கிலீர்
கருவரங்க மாகிநின்ற கற்பனை கடந்துபின்
திருவரங்க மென்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே. 77
ஒரே நினைவோடு அன்பால் என்புருகி தியானம் செய்யுங்கள்.
நமக்குள் உருவாக அரங்கத்தில் ஒளியாக நின்று ஒன்றாய் இருக்கும் உண்மையை உணர்ந்து அதுவே இறைவன் குடியுருக்கும் கோயிலாக இருப்பதைக் கண்டு அறிந்து
அத்திருவரங்கத்தில் உடலையும் உயிரையும் இணைத்து சிவத்தில் கரைய தவம் புரியுங்கள்.🙏🙏🙏
பொன்னிலும் அதிகம் மின்னும் பொற்றாமரையே
பெண்ணிலும் எவரும் உன் நிகர் உண்டோ
கண்ணிலும் என்றும் நின்றாடும் பாவை நீ அன்றோ ..
விண்ணிலும் கண்டறியா கார்முகிலே
பண்ணிலும் ஸ்வரமாய்
பாசத்தில் பெற்றவளாய்
பார் சிறக்க வரும்
பரா சக்தியாய்
பரந்தாமன் சகோதரியாய்
பரமேஸ்வரன் கரம் பற்றும் பொன் மகளே
நவராத்திரி நன்னாளில்
நா இனிக்க உன் நாமங்கள் உரைக்கின்றோம் ..
புராணம் அதில் தேட வேண்டாம் தானவர்களை ...
எல்லாம் எங்களுள் ..
பத்துதலை *ராவணன்*
நெஞ்சம் எனும் பஞ்சனையில் உறங்குகின்றான்
பார் மிரட்டிய *பாண்டாசூரன்* புத்தி தனில் சூன்ய மாளிகையில் கும்மாளம் போடுகிறான் தினம் தினம் ...
எருமை புத்தி தனில் எக்காலாமும் சிரிக்கிறான் *மகிஷன்*
மது விரும்பும் மனமதில் சூது விதைத்தே சதுரங்கம் ஆடுகிறார் *மது கைடபர்கள்*
*கம்சனும் இரணியனும்*
கருமை நிறத்தில் என் நெஞ்சம் அதை வர்ணம் அடிக்கின்றனரே
*தாயே* ...
மந்திரிணீயும் , வாராஹியும் , அஸ்வரூடாவும் ஸம்பத்கரியும் எங்கு போயினர் *அம்மா* ?
வாராயோ மீண்டும் ஒரு யுத்தம் செய்தே எங்களை மீளாயோ
காஞ்சி வாழ் மகான் மீண்டும் வந்தால் பாடுவோம் பல்லாண்டு பல்லாண்டு உன் மீதே
🙏🙏🙏🎼🎼🎼🎼
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏
"ஏன் கொலு வைக்கல்லே? -மூன்று வயதுக் குழந்தை பெரியவாளைப் பார்த்து.
"நாம சங்கல்பம் பண்ணிக்கல்லே
அம்பாள் சித்தம்- கொலுவைத்த பெரியவா
பெரியவாளுடைய மனம் நளினீதளகதஜலம்-தாமரை இலைத் தண்ணீர், முத்துக்களாகப் பளீரிடும் ஆனால், ஒட்டிக்கொள்ளாது.
தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தபோது நவராத்திரி வந்தது.
பக்தர் குழுவில் மூன்று வயதுக் குழந்தை ஒன்று, எல்லோரையும் போல் நமஸ்காரம் செய்துவிட்டு, பெரியவாளை நோக்கிப் போயிற்று.
பெரியவாள் எதிரில், தட்டுத் தட்டாக பழங்கள், கற்கண்டு, திராட்சை.
குழந்தை ஆப்பிளை லட்சியம் செய்யவில்லை.
பெரியவாளைப்பார்த்து, "ஏன் கொலு வைக்கல்லே?" என்று கேட்டது.
குழந்தை சொன்னது, தெய்வம் சொன்ன மாதிரி.
கூடியிருந்த பக்தர்களை, ஆளுக்கு ஒரு பொம்மை வாங்கி வரும்படி கூறினார்கள் பெரியவா. ஒரு மணி நேரத்தில் ஏராளமான பொம்மைகள் வந்து சேர்ந்து விட்டன. அதற்குள் படிக்கட்டு தயார்.
நவராத்திரி முடிந்ததும், பொம்மைகளைக் காகிதத்தில் சுற்றி, அட்டைப்பெட்டியில் வைத்து, பாதுகாப்பாக வைப்பதற்கு, பிரும்மசாரி ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.
"கொலு வைக்கணும்னு நாம சங்கல்பம் பண்ணிக்கல்லே. அம்பாள் கிருபை. நவராத்திரி முடிஞ்சு போச்சு. வருகிற பக்தர்களிடம் ஒவ்வொரு பொம்மையா கொடுத்துடு. அடுத்த வருஷத்துக்காக ப்ரிஸர்வ் பண்ணாதே. அடுத்த வருஷ நவராத்திரி. அம்பாள் சித்தம்"-பெரியவா.
பெரியவாளுடைய மனம் நளினீதளகதஜலம் - தாமரை இலைத் தண்ணீர் முத்துக்களாகப் பளீரிடும். ஆனால், ஒட்டிக்கொள்ளாது.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔱🙏
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 128* 💐💐💐
முகுந்தமாலைல நேத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம்.
वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्
औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |
सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:
प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: ||
வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்
ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |
ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:
ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||
“ஏதாவது வேலைக்கு போகணும் பெரியவா”
அப்படீன்னு சொன்ன போது, “மேல நீ படி” அப்படீன்னு சொல்றா பெரியவா, எப்படி நான் படிப்பேன்ன போது, பெரியவா “நீ ஏன் இவ்ளோ பயப்படறே?”
அப்படீன்னு கேட்கறா.
“நீ மேல படி” அப்படீன்னு பெரியவாளே சிதம்பரம் college-ல seat வாங்கி கொடுத்து, சிதம்பரத்துல ஆறு பேர்கிட்ட, ‘வாரத்துக்கு ஒரு நாள் இந்த கொழந்தை வருவான் சாப்பாடு போடுங்கோ’ அப்படீன்னு, அவருடைய சாப்பாடுக்கு ஏற்பாடு பண்ணி, கை செலவுக்கு ஒரு முதலியார் கிட்ட சொல்லி அதுக்கு பணம் வாங்கி கொடுத்து,
அப்படி அந்த குழந்தயை படிக்க வைக்கறார், அவன் படிச்சு நன்னா வந்து சௌக்யமா இருந்தான்ங்கறது தவிர, அந்த வயசுல வந்து என்ன ஆகுமோ, நமக்கு வாழ்க்கைல அப்படிங்கற அந்த பயம், அந்த பயத்தை பெரியவா போக்கினா.
நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மகாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ – ப்ரஹ்ம ரூபா) அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ – கோவிந்த ரூபிணீ), அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ – ருத்ரரூபா) என்று சொல்கிறது. லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான்
பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், க்ஷீரசாகரத்திலிருந்து பிறந்த மஹாலக்ஷ்மியும், இரண்டு மஹரிஷிகளுக்குப் பெண்களாகவும் அவதரித்திருக்கிறார்கள்.
மஹாலக்ஷ்மியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தபஸ் செய்தார். அதற்கிணங்கவே லக்ஷ்மிதேவி அவருக்குப் புத்திரியாக உத்பவித்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் அவளுக்கு பார்கவி என்று பெயர் ஏற்பட்டது.
‘
குழந்தையாக வந்த காத்யாயனியைத் தமிழ் நாட்டுக் கிராம ஜனங்கள்கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் ஊகம். ‘காத்தாயி’ என்று சொல்கிற கிராம தேவதை காத்யாயனிதான் என்று நினைக்கிறேன்.
‘பட்டாரிகை’ என்று பெரிய ஸ்ரீவித்யோபாஸகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான், நம் கிராம மக்கள் ‘பிடாரி’ என்று சொல்லிப் பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் ‘பட்டாரிகா மான்யம்’ என்பதைப் ‘பிடாரிமானியம்’ என்று திரித்துக் குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம்.
இவ்வாறே கிராம ஜனங்களும்கூட ஸரஸ்வதியை நீண்ட காலமாக வழிபட்டிருக்கிறார்கள். ‘பேச்சாயி, பேச்சாயி’ என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாக்தேவி ஸரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.
அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும், ஸரஸ்வதிதேவியையும் பூஜித்து எல்லாச் சக்தியும், சம்பத்தும், நல்ல புத்தியும் பெறுவோமாக!
*பதிவு 356* 🙏🙏🙏started on 7th Oct 2021
(நிர்குண உபாசனை) (132-151)
நிரஞ்சனம் அந்த கருப்பாக குறை போல் இருக்கும் மை அளவிற்கு கூட குறை இல்லாதவள் .. நம் கலங்கங்களை தீர்க்க கூடியவள் . நி + ரஞ்ஜனா ... அதிகமான சந்தோஷத்தை தருபவள் . 👏👏👏
*பதிவு 353* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
இஷ்டப் பிராப்தி
கலாபி: கர்ப்பூரைர் மரகதகரண்டம் நிபிடிதம்
அதஸ் த்வத்போகேன ப்ரதிதின மிதம் ரிக்தகுஹரம்
விதிர் பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே 94
இப்படி உன்னுடைய ஸ்நானத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் சாமக்கிரியைகளை நீ தினமும் உபயோகம் செய்வதால் காலியாகும் இந்தச் சிமிழை
பிரம்மா மீண்டும் மீண்டும் உனக்காக நிரப்பி வைக்கிறார்.🙏🙏🙏
உனை காணா நாட்கள் பிறவா நாட்கள் அன்றோ *கண்ணா*
உனை நினையா நெஞ்சம் நின்று போன இதயம் அன்றோ *கண்ணா*
உனை பார்க்கா விழிகள் பாவை இழந்த விழிகள் அன்றோ *கண்ணா*
உன் நாமம் சொல்லா நாக்கு தீப்புண்கள் கொலுவிருக்கும் நாக்கன்றோ *கண்ணா*
உன் நிழல் தேடி வாரா கால்கள்
சுடும் எண்ணெய் கொப்பரையில் விழுந்த கால்கள் அன்றோ *கண்ணா*
உன் உருவம் சேரா உடல் மூச்சு விடும் வெறும் பிணம் அன்றோ *கண்ணா*
குருக்கிடுக்கு மேழைகள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்திருத்தி மெய்யினாற் சிவந்த வஞ்செழுத்தையும்
உருக்கழிக்கு மும்மை யுமுணர்ந்துணர்ந்து கொள்ளுமே. 78🪷🪷🪷
அந்த குறிப்பைத் தவிர அதனால் வரும் துன்பங்களை அறியாத ஏழைகளே!
பெண்ணின்பத்தினை பெரிதாக போற்றி குலாவுகின்ற பாவிகளே!
அதனால் உங்கள் உடம்பு உருக்குலைந்து உயிர் போய்விடுமே!
ஆதலால் நல்ல குருநாதர் உன்னைத் திருத்திக் கற்றுக்கொடுக்கும் உண்மையான யோகத்தை செய்து நமது மெய்யில் பஞ்சாட்சரமாக இருக்கும் மெய்ப் பொருளை அறிந்து ‘சிவயநம’ என்ற அஞ்செழுத்தை ஓதி உனக்குள்ளேயே உணர்ந்து தியானித்து அறிந்து கொள்ளுங்கள்.🪷🪷🪷
சிரித்தால் சிக்கல் தீரும் இதயம்
நினைத்தால் நீராய் கொட்டும் கருணை
படித்தால் நாவெங்கும் மலைத்தேனின் இனிமை
அமர்ந்தால் அரியணை நாணும் மென்மை ..
ஆர்பரித்தால் சங்குகள் கோடி சேரும் உண்மை
நீயன்றி ஓர் அணுவும் உண்டோ உன் அருள் இன்றி கருவில் உயிர் சேர்வது உண்டோ ?
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 129* 💐💐💐
முகுந்தமாலைல நேத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம்.
वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्
औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |
सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:
प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: ||
வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்
ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |
ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:
ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||
“இருக்கு பெரியவா” அப்படீன்ன ஒடனே. “நான் உன்னை படிக்க வெக்கறேன்” அப்படீன்னு பெரியவா சொல்றா.
அந்த மாதிரி படிக்க வைக்கறா. அந்த மாதிரி கடந்த அம்பது, நூறு வருஷங்கள்ல, சாதுக்களா இருக்கறவாளுக்கு, நம்ம நல்ல வழியில இருக்கணுமே அப்படீன்னு பயப்படறவா எல்லாருக்கும் மஹாபெரியவா, அபயம் கொடுத்து “நீ நல்ல வழியில போ, நீ பயப்படாதே” ன்னு அந்த அபயம் கொடுத்தா.👍👍👍
--------------------------------------------------------
🌺🌹"ஒரு ஆற்று நீரில் மீன்களின் கூட்டத்தில் ஒரு மீன் சத்தமாக அறிவுரை கூறி கொண்டே இருந்தது.
🌺நண்பர்களே....உணவுக்கு ஆசைப்பட்டு யாரும் கரையோரம் போய் விடாதீர்கள். அங்கே தூண்டிலுடன் மானிடன் நம்மை காவு வாங்க காத்து கிடக்கிறான்.
🌺நீரில் தடையோ, வலையோ தென்பட்டால் வேகமாக நீந்தி தாவி தப்பிக்க வேண்டும் என்று கூறியது.
🌺ஒரு குட்டி மீன் கேட்டது எப்படி குதிக்க வேண்டும் செய்து காட்டுங்கள் என்றது.
🌺அறிவுரை கூறிய மீன் வேகமாக நீந்த முற்படும் போது தான் தெரிந்தது, அது முதலிலேயே கரையோரம் தூண்டிலில் இருந்த புழுவுக்கு ஆசைப்பட்டு சிக்கி கொண்டது. மீன் இழுத்ததால் மனிதனும் அந்த அறிவுரை கூறிய மீனை வெளியே எடுத்து கொன்று விட்டான்.
🌺இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை
நாம் முதலில் பாதுகாப்பாய் இருக்கிறோமா, வேடதாரிகள் அருகில் இருக்கிறோமா, நல்லவற்றை கடைபிடிக்கிறோமா, நல்லவர்களுடன் தான் இருக்கிறோமா,
🌺நல்ல ஆலோசனை தான் பெறுகிறோமா, நம்மை வைத்து மற்றவர் நம் மீதே சவாரி செய்யாமல் இருக்கிறார்களா என்று சுய பரிசோதனை செய்து கொள்வது எப்பொழுதும் உத்தமம்.
🌺ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளை உறுதியாக பற்றிக் கொள்வோம், மரண பயம், கடன் பயம், மற்றொரு பிறவி பயம், வேடதாரிகள், கபடதாரிகள் பயம் என எல்லாம் நீங்கி சிறந்த வாழ்க்கை நாம் ஒவ்வொருவரும் பெறுவோம் 🌹🌺
---------------------------------------------------------- 🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவராத்திரி 2 ம் நாள் அம்பிகைக்குரிய அலங்காரமும், பிரசாதமும் பற்றிய பதிவுகள் :*
அம்பிகை வழிகாட்டில் மிக முக்கியமானதாக கருதப்படும் நவராத்திரி விழாவை தற்போது நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் மலைமகளான துர்க்கா தேவிக்கு உரியதாக கொண்டாடுகிறோம்.
அதன்படி இரண்டாம் நாளான இன்று துர்க்கை அம்மனை, ராஜ ராஜேஸ்வரியாக அலங்காரத்தில் வழிபட வேண்டும். பொதுவாக துர்க்கை என்றாலே அழிக்கும் தெய்வம், உக்ர வடிவானவள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் துர்க்கா தேவி என்பவள் காக்கும் தெய்வம்.
நவராத்திரியின் ஒன்பது நாளும் சிறப்பானதாக கருதப்படும் நிலையில், ஒவ்வொரு நாளுக்குரிய சிறப்பையும் தெரிந்து கொண்டு நவராத்திரி விரதம் இருந்து, அம்பாளை வழிபடுவது கூடுதலான சிறப்பை தரும்.
முதல் நாளில் அம்பிகையை மகேஷ்வரியாக பாவித்து அலங்காரம் செய்து வழிபட்டோம். இதே போல் இரண்டாம் நாளில் அம்பிகைக்கு உரிய அலங்காரம் என்ன, என்ன நிறம், என்ன பிரசாதம் என்பது உள்ளிட்ட விபரங்களை தெந்து கொள்ளலாம்.
அந்த காலத்தில் கொற்றவை என்ற பெயரால் வழிபடப்பட்ட தெய்வம் இந்த துர்க்கை அம்மன் தான். சங்க இலக்கியங்களில் கொற்றவை என்ற பெயரால் போற்றப்பட்ட தெய்வம். வெற்றியை தரக்கூடிய தெய்வம். அந்த காலங்களில் மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன் வெற்றி கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யப்படும் தெய்வமாகவும் இருந்தது துர்க்கை அம்மன் தான்.
காளி தேவியின் வடிவமாகவும், துர்க்கையின் அம்சமாகவும் விளங்கக் கூடிய தெய்வத்தை தான் கொற்றவை என சங்க காலத்தில் வணங்கினர். தற்போது நாம் துர்க்கா தேவியாக வணங்கி வருகிறோம்.
அம்பிகையின் உக்கிரமான சொரூபமாக சொல்லப்படுவது இந்த துர்க்கா தேவி. துர்க்கை என்ற சொல், துர்க்கம் என்ற சொல்லின் மூலம் என கருதப்படுகிறது. துர்க்கம் என்றால் தமிழில் அகழி என்று பொருள். அந்த காலத்தில் ராஜாக்களின் அரண்மனை அல்லது கோட்டை அல்லது நாட்டை சுற்றி ஆழமான குழிகள் வெட்டி, அதில் நீர் நிரப்பி, முதலைகள் வளர்ப்பார்கள். இவற்றிற்கு அகழி என்று பெயர்.
நாட்டிற்கு அல்லது அரண்மனைக்கு ஏதாவது ஆபத்து வரும் போது, பாதையை அமைத்து விடுவார்கள். இதனால் எதிரிகள் முதலைகள் இருக்கும் தண்ணீருக்குள் இறங்கி, கோட்டை சுவர் மீது ஏறி, அரண்மனைக்குள் அல்லது நாட்டிற்குள் வர முடியாது.
அது போல் நமது வாழ்க்கைக்கு பெரிய அரண் அமைத்து, துன்பங்களை நம்மிடம் அண்ட விடாத தெய்வம் என்பதால் துர்க்கை என்று பெயரால் அம்பாளை நாம் அழைக்கிறோம். துர்க்கை என்றாலே துன்பத்தை அகற்றி, வெற்றி தரக்கூடியவர். என்று பொருள்.
துர்க்கை என்றாலே யாராலும் வெற்றி பெற முடியாதவள் என்ற அர்த்தமும் உண்டு. இந்த துர்க்கா தேவியானவளை பொதுவாக நாம் சிவன் கோயில்களில் வழிபட முடியும். சிவன் கோயில்களில் சிவ துர்க்கையாக வழிபடும் அதே சமயம், விஷ்ணு கோயில்களில் விஷ்ணு துர்க்கை என்ற திருநாமத்தாலும் அம்பாள் வழிபடப்படுகிறாள்.
*பிரசாதம் :*
அம்பிகையிடம் வெற்றியை பிரார்த்தனை செய்வதற்குரிய நாளாக நவராத்திரியின் இரண்டாம் நாள் அமைகிறது. அம்பாளை வெற்றி பெறக்கூடிய கோலமான ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அலங்கரிக்க வேண்டும். இரண்டாவது நாளில் கட்டம் வகையிலான கோலமிட வேண்டும். அம்பிகைக்கு முல்லை மலர் மற்றும் இலை வகையில் மருவு வகை இலையையும் சாற்றி வழிபட வேண்டும்.
நவராத்திரி இரண்டாம் நாளுக்குரிய பிரசாதமாக புளியோதரை மற்றும் பழ வகைகளில் மாம்பழம் வைத்து வழிபட வேண்டும். மஞ்சள் நிறத்திலான வஸ்திரம் அணிவித்து, நாமும் அணிந்து கொண்டு, கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்களை பாடி அம்பாளை வழிபட வேண்டும்.
அம்பாளின் முன் அமர்ந்து ராஜ ராஜேஸ்வரி அஷ்டகத்தை படிக்கலாம் அல்லது ஒழிக்க செய்யலாம். முதல் படிக்கும் கீழே விளக்கேற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, நெய்வேத்தியம் வைத்து ஆரத்தில் காட்ட வேண்டும். நவராத்திரியின் இரண்டாம் நாளில் இந்த முறைப்படி அம்பாளை வழிபட்டால் வீட்டில் தனம், தானியம் பெருகும் என்பது ஐதீகம்.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
*🤘ஓம் நமசிவாய🙏*
🌺🌹 "A fish in a group of fish in a river was giving loud advice.
🌺Friends....don't let anyone go to the shore because of the desire for food. There lies a baited deer waiting to take us.
🌺 It said that if you see an obstacle or a net in the water, you should swim quickly and jump to escape.
🌺 A small fish asked, show me how to jump.
🌺 The advised fish was only seen when it was trying to swim fast, and it got caught by the worm that was on the bait on the shore. As the fish pulled, the man also took out the fish that gave the advice and killed it.
🌺This is the truth we need to know
Are we safe first, are we near guardians, do we follow good things, are we with good people,
🌺 It is always good to do a self-examination to see if we are getting good advice and are not riding on others.
🌺 Let's hold on to Sri Krishnan Thiruvadi firmly, fear of death, fear of debt, fear of another birth, fear of impersonators, fear of hypocrites will be removed and we will all get a better life 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
அதே போல YOUTH
2. PERMANENT ஒன்பது எழுத்துக்கள்
அதே போல TEMPORARY.
3. GOOD நான்கு எழுத்துக்கள்
அதே போல EVIL.
4. BLACK ஐந்து எழுத்துக்கள்.
அதே போல WHITE.
6. LIFE நான்கு எழுத்துக்கள்
அதே போல DEAD.
7. HATE நான்கு எழுத்துக்கள்
அதே போல LOVE.
9. ENEMIES ஏழு எழுத்துக்கள்
அதே போல FRIENDS.
10. LYING ஐந்து எழுத்துக்கள்.
அதே போல் TRUTH.
11. HURT நான்கு எழுத்துக்கள்
அதே போல் HEAL.
12. NEGATIVE எட்டு எழுத்துக்கள்
அதே போல POSITIVE.
13. FAILURE ஏழு எழுத்துக்கள்
அதே போல SUCCESS.
14. BELOW ஐந்து எழுத்துக்கள்.
அதே போல ABOVE.
15. CRY மூன்று எழுத்துக்கள்
அதே போல JOY.
16. ANGER ஐந்து எழுத்துக்கள்
அதே போல HAPPY.
17. RIGHT ஐந்து எழுத்துக்கள்
அதே போல WRONG
18. RICH நான்கு எழுத்துக்கள்
அதே போல POOR.
19. FAIL நான்கு எழுத்துக்கள்
அதே போலPASS.
20. KNOWLEDGE ஒன்பது எழுத்துக்கள்
அதேபோல IGNORANCE
வியப்பாக இருக்கிறது
இந்த ஒற்றுமை.
இதிலிருந்து அறியப்படும் நீதி
என்ன என்றால்,
LIFE is like a double edged sword but the choice we make determines our future.