ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 8. ராகஸ்வரூப பாசாட்யா பதிவு14
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
8. ராகஸ்வரூப பாசாட்யா
பதிவு 14
முதலில் பட்டர் எப்படி வர்ணிக்கிறார் என்று பார்ப்போம் X = Y = Z என்பதால் அதாவது
AA = LS = SL
AA அபிராமி அந்தாதி
LS லலிதா சஹஸ்ரநாமம்
SL சௌந்தர்ய லஹரீ
கையில் அணையும் திரிபுர சுந்தரி
1. பனி மலர் பூங்கனை
2. கரும்பு வில்
4. மென் பாஸாங்குசமும்
5. அங்குசமும்
பண் களிக்கும் குரல் , வீணை , கரங்கள் , பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்மெருமாட்டி தன் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாய் , அருமறைகள் பழகி சிவந்த பாதங்கள கொண்டவளாய்
மஹாராணியாய் கம்பீரமாய் காட்சி தருகிறாள் .. என்ன பேறு பெற்றோம் இவள் நம்முன் தோன்றவே 💐💐💐💐🙌🙌🙌🙌🌷🌷🌷🌷
*रागस्वरूपपाशाढ्या - ராகஸ்வரூப பாசாட்யா* -
பாசம் என்றால் கயிறு.
கயிறு என்ன செய்யும்? பிணைக்கும். இணைக்கும், இறுக்கி அணைக்கும்.
நம்மை ஒருவர் விடாமல் உன்னிடம் எனக்கு பாசம் உண்டு, அன்பு உண்டு, அன்பினால் இணைப்பேன், பிணைப்பேன் என்று உணர்த்த ' *இடது* '' கையில் ஒரு ''பாசம்'' எனும் கயிறு வைத்திருப்பவள் .
ஆசைகள் என்ற கயிற்றை முன் நிறுத்தி பிரபஞ்சத்தை இயக்குபவள்
ராகமாகிய ஆசைகளே பிறப்புக்குக் காரணம்.
அதனை கயிறாக கொண்டு பிரபஞ்சத்தை அவரவர் வினைப்படி தோற்றுவிக்கிறாள் என்பது புரிதல்.
மற்றொரு பார்வையில், கருணையின் காரணமாக, அன்னையானவள்,
ஆசைகளின் வேரை அறுத்து ‘வீடு-பேறு’ என்னும் முக்திக்கு வழி செய்பவள் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது
👣👣💐💐🌷🌷👍👍🙌🙌
அது முழுவதும் தீரும் வரை பிறவி மரணம் இரண்டும் நம் எல்லோருக்கும் வாய்த்துக்கொண்டே தான் இருக்கும் .
அம்பாளை சரண் அடைந்தால் இந்த இரண்டு நிகழ்ச்சி களும் நம் வாழ்க்கையில் நடை பெறாது ...
பிறவிக்கு வித்திடுபவன் காமன் ... ஆசை .... காமம்
இறப்பிற்கு முடிவு கட்டுபவன் காலன் .எமன் .
இவர்கள் இரண்டு பேருமே அம்பாளின் உபாசகர்கள் ..
தங்கள் ஆயுதங்களை அன்னையிடம் சமர்பித்தவர்கள் ..
அன்னையின் இடது பாதம் பதிந்தது காலன் அவன் நெஞ்சிலே
அவள் கடைக்கண் பார்வை உயிர் மீண்டும் பெற்றுத்தந்தது காமனுக்கு .
பட்டர் அதனால் தான் இப்படி பாடுகிறார் ..
தம் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே .....
நினைத்து பாருங்கள் ... பிறவியே இல்லை என்றால் ஏது மரணம் ?
பிறவிகள் தான் வினை செய்யத் தூண்டுகிறது ..
புதிய புதிய வினைகளை, பாவங்களை செய்து கொண்டே இருக்கிறோம்
மத்தில் மாட்டிக்கொண்ட தயிர் போல் நம் ஆவி பிறவி எனும் மத்தில் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறது ...
அம்மா உன் அருள் இருந்தால் பின்னும் எய்துமோ குடம்பும், கொழுந்தும் குருதியும் தோயும் இந்த குரம்பையிலே ....
ஒரு கரத்தில் மலர்கனை காமனின் ஆயுதம் அதை வைத்திருக்கிறாள்
இன்னோரு கரத்தில் பாசம்
இன்னொரு கரத்தில் அங்குசம்
இன்னொரு கரத்தில் என்னை பனிந்தவர்களின் வாழ்க்கை இதோ இந்த கரும்பு வில்லை போல் இனிக்கும் என்கிறாள் 🌷🌷🌷💐💐💐🙌🙌🙏🙏
*ராக ஸ்வரூப பாஷாட்ய*
ஆசைகள் என்ற கயிற்றை முன் நிறுத்தி பிரபஞ்சத்தை இயக்குபவள்
ராகமாகிய ஆசைகளே பிறப்புக்குக் காரணம். அதனை கயிறாக கொண்டு பிரபஞ்சத்தை அவரவர் வினைப்படி தோற்றுவிக்கிறாள் என்று பார்த்தோம் ...
மனதில் விருப்பு வெறுப்பு இவை இரண்டுமே மீண்டும் மீண்டும் பாவங்கள் செய்ய த் தூண்டுகிறது ...
மனதில் இருக்கும் விருப்பு.....
இந்த உலகத்தை வெல்லவேண்டும் எல்லோரும் நமக்கு அடி பணிய வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது
விளைவு பேரசாசை ... பொறாமை , முன் கோபம் , போதும் என்ற மனம் இல்லாமை ....நம்மை பல பாவங்களை செய்யத் தூண்டுகிறது
வினை தீர மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறோம்
வெறுப்பு ... இது துவேஷம் ...
இன்னொருவர் நம்மில் மேலையாக இருந்தால் நம்மால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை .
இந்த விருப்பு, வெறுப்பு அம்பாளை வணங்குவோர்களுக்கு இருப்பதில்லை
தன் கரங்களில் உள்ள பாசம் , அங்குசம் கொண்டு நம் மனதை அவளுக்கு அடிமை செய்கிறாள் .
நெஞ்சத்து அழுக்கை எல்லாம் தன் அருட்புனலால் துடைக்கிறாள் ...
நமக்கு கொஞ்சமும் வலி தெரியாமல் நம் பந்த பாசங்களை அரிக்கிறாள் .
நான் , என் மனைவி , என் கணவர் , என் குடும்பம் எனும் சங்கலியை உடைத்து திரோதானத்தை நீக்கி நமக்கு நம் மனதில் ஒளிந்திருக்கும் சிவ ஜோதியை காண்பிக்கிறாள் .
அதனால் தான் பட்டர் வெண்ணெயாய் உருகி பாடுகிறார் .. அம்மே என்ன பேறு பெற்றேன் .. அழியா குலக்குன்றே , அருட்கடலே , இமாவான் அளித்த கோமளமே என்று 🌷🌷🌷
பாசம் ஒரு கையில் புரிந்து விட்டது ஆனால் அங்குசம் எதற்கு அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் ... நாமெல்லாம் என்ன மதம் பிடித்த யானைகளா ??
ஆமாம் மதம் பிடித்த யானைகள் தான் ...
பல மதங்கள் உண்டு என்று நம்பும் யானைகள்
பல தெய்வங்கள் உண்டு என்று நம்பும் மதம் பிடித்த யானைகள்
மனதை அடக்க முடியாமல் அதற்கு மதம் பிடிக்க வைத்து திண்டாடுகிறோம் ...
அவள் நம் மனம் எனும் யானையை தன் அங்குசத்தால் கட்டுப்படுத்தி அதை தன் பக்கம் திருப்புகிறாள் ..
எவ்வளவு உயர்ந்த அன்பு காரூண்யம் ...
இப்படியும் ஒரு தாய் நமக்கு கிடைப்பாளா ? 💐💐💐💐
Raaga denotes desire or wish and Paashaa is a type of rope. Devi pulls all the desires of Her devotees . The arm is Devi's left upper arm
Comments
*ஹிமவானால்* ;
*வத்ஸலதயா* - குழந்தையிடத்து வாத்ஸல்யம்/அன்பு;
*கராக்ரேண* - கை விரல் நுணியால்; ஸ்ப்ருஷ்டம் - தொடப்பட்டதும்;
*கிரிசேந* - உன் புருஷனான பரமசிவனால்;
*அதர-பான-குலதயா* - அதரபானம் பண்ணுவதிலேயே அதிக ப்ரேமையுடவரான;
*முஹு* : - அடிக்கடி;
*உதஸ்தம்* - உயரத் தூக்கப்பட்டதும்;
*சம்போ* : - அவருடைய - பரமசிவனுடைய;
*கரக்ராஹ்யம்* - கையால் பிடிக்கத் தகுந்ததும்;
*ஒளபம்ய ரஹிதம் -* உபமானமில்லாத/நிகரற்ற;
*முக முகுர வ்ருந்தம் -* முகமாகிற கண்ணாடிக்குக் காம்பு/பிடி போன்ற; தவ சுபுகம் -
உன் முகவாய்க்கட்டையை;
*கதம்காரம் ப்ரூம:* எப்படி வர்ணிப்போம்.??💐
*இந்திரஜித் சொன்ன கீதை* 🌸
*தந்தையர் தினத்தன்றே ...*
இனியும் கூப்பிட நாள் வருமோ இல்லை
இதுவே காலன் அழைக்கும் நாளோ ...
நீ வாழவேண்டும் ... வேறு சிந்தனை எனக்கில்லை ...
நானும் ராமனே என்றே பார் புகழ வேண்டும் ...
தந்தை சொல் மிக்கோன் என்றே
ராவணன் சிரித்தான் ..
மகனே ராமன் என்ற பெயர் அவனுக்கே சொந்தமில்லை
அனைவருக்கும் தந்து விட்டான் ..
அவன் பேர் சொல்வோர் மட்டுமே அவன் போல் உயர்வர் ...
அப்பா பிறர் மனை ஏன் நோக்க கண்டாய் ..
தன் மனை அழகே உச்சம் தொடும் வேளை தனில் ..
தவறு புரிந்தேன் இல்லை மகனே ...
திருவின் பாதங்கள் லங்கை பட வேண்டும் ..
சக்ரவர்த்தி திருமகன் இங்கே வர வேண்டும் .
லங்கை தனை வாழ்த்த வேண்டும் என்றே விரும்பினேன் ..
வழி தெரியவில்லை மதி இழந்து போனேன் ...
சீதையிடம் ஆசை இல்லை ...
என் மகளாய் காண்கிறேன் ...
வீடு பெற வேண்டியே வீண் சண்டை நான் புரிகிறேன் ...
அவன் கையால் முக்தி
அதற்கும் மேல் உண்டோ ஒரு பக்தி ?
தந்தையே வணங்குகிறேன்
உன் உள் மனம் யார் அறிவார் ..
ஊரார் நீ தச முகன் அன்று காமுகன் என்றே தூற்றினும்
உன் போல் நல் உள்ளம் கொண்டோர் என் தந்தை எனில் இது நான் முன் செய் புண்ணியமே ..
செல் மகனே .. இறை அங்கே காத்திருக்க
வீடும் பேறும் உனை காண தவம் இருக்க
இனி ஒரு பிறவி எனில் நீயே என் மகனாய் பிறக்க வேண்டும் ..
அதுவே என் தவமும் தந்தையே . !!
லக்ஷ்மணன் விடுத்தான் ஒரு அம்பை ..
வீழ்ந்தான் மேகநாதன் ..
மூடிய மேகம் சிந்தியது கண்ணீர் ..
உடல் எங்கும் தந்தை தந்த குருதி
உதட்டினிலே உலகம் ஜபிக்கும் உத்தமன் நாமம் ...
அந்த ராம ஜயம் மாறியதே இந்திர ஜித் ஜயம் கண்டே
சொன்னான் ராமன் ... உன் போல் வீரம் கண்டதில்லை ...
சோரம் போனாய் .. இருந்தும் பாசம் கொண்டாய் ..
உன் தந்தை பாசம் என் தசரத பாசம் தனை வென்றதே ...
பெறுவாய் மகான் என்ற பேரை ...
எல்லா உனையே வணங்குவர் காஞ்சியிலே ... 🌸🌸🌸
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 36*
यद् भाव्यं तद् भवतु भगवन्पूर्वकर्मानुरूपम् ।
एतत्प्रार्थ्यं मम बहुमतं जन्मजन्मान्तरेऽपि
त्वत्पादाम्भोरुहयुगगता निश्चला भक्तिरस्तु ॥ ७ ॥
நாஸ்தா² த⁴ர்மே ந வஸுனிசயே நைவ காமோபபோ⁴கே³
யத்³ பா⁴வ்யம் தத்³ ப⁴வது ப⁴க³வன்பூர்வகர்மானுரூபம் ।
ஏதத்ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜன்மஜன்மாந்தரேऽபி
த்வத்பாதா³ம்போ⁴ருஹயுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து ॥ 7 ॥
ன்னு அழகான ஒரு ஸ்லோகம்
ஏன்னா, அவா ஞானம் அடைஞ்ச பின்ன கூட, உலகத்துல எல்லாத்துலயும் கிருஷ்ணனை பார்க்க தெரிஞ்ச பின்ன கூட, அவா அந்த கிருஷ்ணனோட கதைகளைப் பேசிண்டு, அவனுடைய நாமத்தை ஜபிச்சுண்டு, அவன் ரூபத்தை தியானம் பண்ணிண்டு உட்கார்ந்திருக்கிறது தான் இருக்கறதுக்குள்ள safest.
இந்த ஜன்மா கடைசி ஜன்மாவா இருக்கனுமேயானால் ஜாக்ரதையா இருக்கணும்.
திரும்பவும் போயி நாம அந்த சேத்துல விழுந்துடக் கூடாது
எங்கிறதுல பெரிய பெரிய ஞானிகள் கூட அவ்ளோ ஜாக்ரதையா இருக்கா.🌸🌸🌸🌸🌸
அரசனுக்கே தாய்.
தாய்க்கு மிஞ்சிய கோயில் கிடையாது.
*கும்பகர்ணன் சொன்ன கீதை* 🪷
உப்பிட்டவனை எப்படி மறப்பேன் ராமா ?
உடம்பின் குறுதி அவன் வேள்வியின் நெய் அன்றோ ...
துடிக்கும் இதயம் அவன் விதைத்த விதை அன்றோ ...
தூக்கி வளர்த்தான் தோளிலும் மார்பிலும் ..
நான் துவண்டு போனால் ஒரு க்ஷணம் ....
துடித்தே போவான் பல க்ஷணம் ..
என் கண்ணில் நீர் கண்டால் கடலையே வற்ற செய்வான்
பாசம் கொண்டவன் நேசம் தந்தவன் ... கேசம் கோதியவன் வாசம் புரிகிறான் என் நெஞ்சமதில் மஞ்சம் கொண்டே
இழைப்பேனோ அநீதி அவனுக்கே ... சொல் ராமா ...
ராமன் சிரித்தான் ...
*கும்பகர்ணா* .. பாசம் பந்தம் இந்த ஐந்திரியங்கள் பிண்ணும் வலை சிலந்தியும் பிண்ணுமோ ?
அழியும் உடல் இது ஆரத்தி காட்டலாமோ ...??
அடங்கும் மூச்சு இதற்கு தாலாட்டு பாடலாமோ ??
பாசம் பந்தம் நஞ்சிலும் கூடியவை ..🐍🐍🐍
அதர்மம் பக்கம் நின்றே நீ அழிந்து விட்டால்
எரும்பும் 🐜 எட்டி பார்க்காது உன் உடலை ...🐜🐜🐜
சரணம் செய் ...
மரணம் பிறவி இனி இல்லை மீண்டும் பிறந்து இறக்க ...
ஐயனே ஆழ்ந்த உண்மை ...
நான் அழிப்பது நஞ்சு உண்ட உடலை ராவணன் வளர்த்த சுடலை
இதோ என் உயிர் அடையட்டும் உன் பாதம் ...
வளரட்டும் உன் காலடியில்
தசமுகன் தரும் உப்பு அதில் இல்லை ..
எல்லாம் *ராம மயமே*
*ராமன்* சொன்னான்
காலடி என்று சொன்னாய் ...
வருவேன் பூர்ணா நதிக்கரையில் விரைவில் ஒரு நாள்
உறங்காமல் இரு ..
பாசம் பந்தம் இல்லா வாழ்க்கை என்னவென்றே புரிய வைப்பேன் ...
புனிதனாய் காலடியில் பின்பே காஞ்சி தனில் ..
கண் மூடினான் கும்பகர்ணன் ...
மூடிய கண்ணில் பூர்ணா பொங்கி வழிந்தாள் 🪷🪷🪷🪷🪷
*பதிவு 260* 🙏🙏🙏started on 7th Oct 2021
*85 ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா =* 🙏
முதல் பாகம் ஐந்து அக்ஷரங்கள் கொண்டது;
*வாக்பவ கூடம்* என்று பெயர்.
இரண்டாவது பாகமான *காமராஜ கூடம்,*
ஆறு அக்ஷரங்கள் கொண்டது.
மூன்றாவது பாகத்தில் நான்கு அக்ஷரங்கள்;
*சக்தி கூடம்* என்று பெயர்.
இந்த மூன்று பாகங்களையும் அம்பாளின் திருவடிவமாக, வடிவத்தின் பாகங்களாக வர்ணிப்பதுண்டு.
வாக்பவ கூடம், அவளின் முகம் ;
மத்யகூடமான காமராஜ கூடம், கழுத்து முதல் இடுப்பு வரையுள்ள பகுதி;
இடுப்பின் கீழே சக்தி கூடம்.
ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா -
லலிதாம்பிகையாக குண்டத்திலிருந்து வெளிப்பட்டபோது, முதலில் தெரிந்தது அவளுடைய திருமுகம்.
அதுவே ஞானத்தை அருளவல்லது.
ஆகவே, ஸ்ரீ மத் என்னும் அடைமொழி.
இது ஞானசக்தியின் இருப்பிடம்.
மனிதர்களில், மனத்தின் வசப்பட்டுத் தடம்புரளும் இந்திரியங்கள் பெரும்பாலும் முகப்பகுதியிலேயே அமைந்துள்ளன.
எனவே, நம்முடைய முகங்களை அம்பாளின் திருவடிகளில் பொருத்தினால், அவளின் முகத் தாமரை மனக்கோயிலில் மலரும்.🪷🪷🪷🪷🪷
*பதிவு 260* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 👌👌👌67
*67 மோவாய்க்*
*கட்டையின் சிறப்பு*
*தேவியின்* *ப்ரஸன்னம்*💐💐💐
கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா
கிரீஶேனோதஸ்தம் முஹுரதரபானாகுலதயா
கரக்ராஹ்யம் ஶம்போர் முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம் ப்ரூமஸ் தவ ஶுபுக மௌபம்ய ரஹிதம் 67
மலர்க்கை தொட
மனத்துள் அன்பு
புக ஆசையால் இறைவன் கரத்து ஏந்தப்
பொலிவுறு நின் சுபுகம் போற்றின்
முகவாசி அரன் படிமக்கலம் பார்க்க
விட்ட முகிழ்க்காம்பு போலும்
சகவாழ்வை இகழ்ந்து இதயம் தனித்தவர் தம்
தவக்கொழுந்து தழைத்த கொம்பே
பிள்ளைப்பாசத்தால் இமயமலை அரசன் மலர்க்கையால் தொட,
மனத்துள் அன்பு புக ஆசையால் இறைவன் தன் கரத்தில் ஏந்த,
ஒளிவீசும் நின் சுபுகம் போற்ற வேண்டும் என்றால் அரனாகிய சிவபெருமான் தன் பிரதிபலிப்பைப் பார்க்கும் கண்ணாடியின் முகிழ்க்காம்பு போல் இருக்கிறது.
உலக வாழ்க்கையை இகழ்ந்து இதயத்தைத் தவத்தில் ஈடுபடுத்தியவர்களின் தவத்தின் பயனாக விளங்கும் அன்னையே.🌸🌸🌸
ஸ்னேஹாத்ருதாம் விதலிதோத்பல காந்தி சோராம்
ஜேதாரமேவ ஜகதீஶ்வரி ஜேதுகாம: |
மானோத்ததோ மகரகேதுரஸௌ துனீதே
காமாக்ஷி தாவக கடாக்ஷ க்ருபாணவல்லீம் ||31||
- கடாக்ஷ சதகம்.
ஹே ஜகதீஸ்வரி! காமாக்ஷி! தன்மானமுள்ளவனாம்
இந்த மன்மதன், தன்னை ஜெயித்தவரனான சிவனை வெல்லும் ஆசையுடையவனாய்,
ஸ்நேகத்தால் கூராக்கப்பட்டதும், மலர்ந்த நீலோத்பல மலரின் காந்தியை அபஹரிப்பதுமான,
உனது கடாக்ஷமாகிற வாளினைச் சுழற்றி வீசுகிறான்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்......🌹🌹🌹
நய துல்ய சோம வதன
துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்
ஆதி நெடு மூதண்ட அண்ட பகிரண்டங்கள்
யாவும் கொடும் சிறகினால்
அணையும் தனது பேடை அண்டங்கள் என்னவே
அணைக்கும் கலாப மயிலாம்
நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியாகுலன் சங்கு வாள்
மா திகிரி கோதண்டம் தண்டம் தரித்த புயன்
மாதவன் முராரி திருமால்
மதுகைடவாரி திரு மருகன் முருகன் குமரன்
வரமுதவு வாகை மயிலே.
கந்தர் அநுபூதியில் நிராகுலன் என்பதும் இங்கு நிர்வியாகுலன் என்பதும்
ஒரே பொருளைக் கொண்ட இரு சொற்கள்.
மனக்கவலை அற்றவன்
என்பது இதன் பொருளாகும்.
அதனால் அவன் அடியார்களும்
மனக்கவலையற்று வாழவேண்டும் என பிரார்த்திக்கிறார்.
*மதுகைடவாரி*
'மது', 'கைவடன்' என்கின்ற இரு அசுரர்களும் மஹாவிஷ்ணுவின்
செவிகளில் இருந்து தோன்றிய 'அதிபல மகா வீரர்கள்'.
அவர்களை
எதிர்த்து ஜெயிக்க முடியாமல் திருமால் தத்தளித்த போது அவர்கள்
திருமாலை நோக்கி, உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்க, திருமால்
அதற்குப் பதிலாக, நீங்கள் என்னால் கொல்லப்பட வேண்டும் என்று
கேட்க, அவ்வசுரர்கள் திருமாலின் தொடையில் வந்து ஏற, தன்
கதையினால் அவர்களைக் கொன்று விடுகிறார்.
இந்த 'மது' தான்
'கும்பகர்ண' ணாக பிறக்கிறான்.
'கைடவன்' ராவணனின் மகன்
'அதிகாய' னாக பிறக்கிறான்.
*பதிவு 258*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 33
சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 33 வது ஸ்லோகம்
नालं वा सकृदेव देव भवतः सेवा नतिर्वा नुतिः
पूजा वा स्मरणं कथाश्रवणमप्यालोकनं मादृशाम्।
स्वामिन्नस्थिरदेवतानुसरणायासेन किं लभ्यते
का वा मुक्तिरितः कुतो भवति चेत् किं प्रार्थनीयं तदा ॥ ३३॥
நாலம் வா ஸக்ருʼதே³வ தே³வ ப⁴வத: ஸேவா நதிர்வா நுதி:
பூஜா வா ஸ்மரணம் கதா²ஶ்ரவணமப்யாலோகநம் மாத்³ருʼஶாம் ।
ஸ்வாமிந்நஸ்தி²ரதே³வதாநுஸரணாயாஸேந கிம் லப்⁴யதே
கா வா முக்திரித: குதோ ப⁴வதி சேத் கிம் ப்ரார்த²நீயம் ததா³ ॥ 33॥
*கதா²ஶ்ரவணம்’* உன்னுடைய சிவபுராணத்தை படிக்கறது, சொல்றது, கேட்கறது.
இந்த கதா ஸ்ரவணம் ‘ஆலோகனம்’ கோவிலுக்கு போய் ஸ்வாமி தரிசனம் பண்றது.
இதெல்லாம் ஒரு தடவை பண்ணினாலே ‘ *மாத்³ருʼஶாம்’* என்னை மாதிரி இருக்கிறவாளுக்கு போறாதா?
‘நாலம் வா’ இந்த மாதிரி உன்கிட்ட பக்தி பண்ணிண்டு இருந்தாலே போருமே.
‘கா வா முக்தி’ இதை தவிர முக்தின்னு வேற என்ன இருக்கு? ‘
*பதிவு 258* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*70. ப்ரஜாபதயே நமஹ (Prajaapathaye namaha)*
🏵️🏵️🏵️🏵️
ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : *ப்ரஜாபதி* : |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
*TSK என் பதில்* ...🙏
காசு கொடுத்துத்
தன்னைப் புகழ்ந்துக்
கவிதை எழுதச்
சொல்லவில்லை
மலர்கள்....
பணம் கொடுத்துப்
பாராட்டுக்
கட்டுரை சமைக்கச் சொல்லவில்லை
நதிகள்...
பொன்னள்ளித்
தந்து தனக்குப்
பூபாளம்
பாடச் சொல்ல
வி்ல்லை
குயில்கள்...
வெள்ளிப் பரிசீந்து
தனக்கு
விழா எடுக்கச் சொல்லவில்லை
அருவி...
பெட்டியணிகளீந்து
தனக்குப்
பட்டந்தரச்
சொல்லவில்லை
தென்றல்....
தென்றல் தானாக
அருவித் தலைநீவ..
அருவி நிலம்
படர்ந்து நதியின் நடையாக...
நதியின் துளிவாங்கி
மலரில் தேனாக...
தேனே இழையோடும்
குயிலின் குரலாக...
தானாக வரும் தடம் புகழ்..
பிறர் தந்து பெறுவதல்ல
கிரீடம்...👑
⚡⚡⚡
இதை அபிராமி பட்டர் பூமியில் பிறந்த நாமே புண்ணியம் செய்துள்ளோம்
தேவர்களைக் காட்டிலும் என்று இப்படி சொல்கிறார் ..
பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே.
மனித பிறவி ஒரு வரப்பிரசாதம்...
வரி வரியாய் தெளித்தன வார்த்தைகள் தாயிடம் இருந்தே ...
அம்மா சூர்ப்பனகை மூக்கறுத்த இடம்
அதில் முந்தேவர் வாழ்த்த வந்தாய் ... முடிவில்லா புகழ் கொண்டாய் ...
ஓடும் போது ஏனம்மா இந்த தேக்கம் ...
ஆக்கம் கொண்டவள் நீ ஊக்கம் தருபவள் நீ ...
உண்மை உரைப்பாயோ ... ??
ஒரே ஒரு பொய் சொன்னேன் ...
மெய்யெல்லாம் பொய் ஆகி போனது ..
நெய்யாய் இருந்த மனம் அன்று ஏனோ கல்லாய் போனது ..
மெய் அது என்றும் பொய் தானே தாயே ...
அன்னை புன்னகைத்தாள்
பொய் இன்றி நெய் கொண்டு மெய்யொடு செல்ல வில்லை அன்று ஒரு நாள்
பத்தினிக்கு பாவம் செய்தேன் ...
ராமன் வர நேரம் கொண்டான் ...
திதி அவள் தந்தாள் தசரதனுக்கு மகளாய் அன்று வைதேகி ...
சாட்சி எங்கே என்றான் திரும்பிய ராமன் ...
திரும்பிய இடம் எல்லாம் பொய் அது நிரம்பி போனது ...
சொன்னேன் *இல்லை* என்றே நா கூசாமல் ..
எனக்கே சாபம் தந்தாள் வைதேகி ..
தேங்கி தேங்கி ஓடுவதற்க்கே ..
வேகம் இருந்தும் விவேகம் இழந்தேன் அன்று ...
போகம் வந்தே சாபம் தந்தது ..
அம்மா தேங்கி தேங்கி சென்றே ஏங்கி ஏங்கி நிற்கும் உயிர்களுக்கு பொங்கி பொங்கி உணவளிக்கிறாய்...
சீதை தந்த வரம் இது ..
ஓடுபவர்கள் எல்லாம் ஓய்ந்து போகும் நேரமதில்
தேங்கி தேங்கி சென்றே
எல்லோர் வாழ்விலும் அணில் கண்ட, ராமன் போட்ட மூன்று வரிகளாய் ஜொலிக்கிறாய் 🐿️
எங்கள் மனம் கவர் கோதையாய் கோதாவரியாய் நீ இருக்க குறை ஒன்றும் உண்டோ எங்களுக்கே
பெற்றவள் சிரித்தாள் ... அதில் சிந்தியது ஆழ்கடல் முத்துக்கள்
[20/06, 09:03] Metro Kowsalya: அருமை....பணிகிரேன் காலடியில் பிறந்தவரை கைநிறைந்த மலர் கொண்டு..🙏🙏🙇♀️🙇♀️🌹🌹🌹
*காலடி* 👌👌👌
பூர்ணமானவளே
கொழுக்கட்டையில் பூரணமாய் இனிப்பவளே ...
பொன் மகளே புனிதமே படிகிறேன் உன் காலடியில்
*ஓர்* அடி உனை நோக்கி வைத்தால் *ஈரடி* நீ வைப்பாய் எனை வந்து தழுவி க்கொள்ள
*மூன்றடி* மண் கேட்டான் முகுந்தன் ..
அவன் சொற்படி வாழ்கிறாய் என்றும் நீயே
*நாலடி* பாட வேண்டும் என்றே என் நாக்கசைத்தேன்...
*ஐந்தெழுத்து* சொல் போதும் என்றாய் ...
*ஆறடி* இடம் அதில் அடியேன் புகும் முன் நெஞ்சில் கொஞ்சும் *ஏழையடி* நான் என்றேன்
யாருக்கும் எட்டாதவள் *எட்டடி* கொண்டே எனை சாய்தாள் தன் மடியில் ...
அம்மா *ஒன்பது* கோணங்கள் மேவி நிற்பவளே
*பத்து* விரல்களும் கைக் கூப்ப பித்தானேன் உன் மீதே !!
பந்தம் எனும் முதலை பற்றக்கண்டோ சங்கரன் கத்தினான் அன்று .. 🐊🐊🐊
மிதிலை ஆளும் அரசி என்றே அங்கே கொட்டினாயோ கனகம் தனை தாரகையாய் ... ✨✨✨
ஆர்யாம்பாள் ஆனந்தமாய் குளிக்க வழி மாற்றி வந்தாயோ ...
உனை போல் எவருண்டு .. ??
உவமை சொல்ல ஒரு வழி உண்டோ என் பூர்ணமே !!
- *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹”மன்னன் மகேந்திரன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் மகேந்திரன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான்.
🌺முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் நான் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன;
🌺இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன்.
🌺நீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்று கூறினார்.
🌺பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான்.
🌺இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின.
🌺மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, ஹரே நாராயணா! எனக்கு இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.
🌺இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே! என்றான்.
🌺முனிவர் அவனை நோக்கி, மன்னா! பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார்.
🌺அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு? என கூறி அந்த இடம் விட்டு வெளியேறினார் முனிவர்
🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
@mahavishnuinfo
திருவரங்கத்தில் ஓர் ஏழை வைணவர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பதினாறு குழந்தைகள்!
திருவரங்கநாதன் கோயிலில் பிரசாதம் வழங்கப்படும் போதெல்லாம், அதைப் பெற்றுக்கொள்ள முதல் ஆளாக வந்து நின்றுவிடுவார். தான் ஒருவனுக்கு மட்டுமின்றித் தன்குடும்பம் முழுமைக்கும் பிரசாதம் வேண்டுமெனக் கேட்பார்.
அரங்கனுக்கு அன்றாடம் தொண்டுசெய்யும் அடியார்களெல்லாம் அரங்கனின் பிரசாதத்தில் ஒருதுளி கிட்டுவதே பேரருள் என எண்ணிப் பெற்றுச்செல்ல, இவர் எந்தத் தொண்டும் செய்யாமல், பிரசாதம் மட்டும் நிறைய வேண்டுமெனக் கேட்பதைக் கோயில் பணியாளர்கள் விரும்பவில்லை. உரத்தகுரலில் அர்ச்சகர்கள், இவரை விரட்டுவதால் தினமும் கோயிலில் கூச்சல் குழப்பம் ஏற்ப்படும்.
ஒருநாள் பிரசாதம் பெற்றுக்கொள்ளத் தன் பதினாறு மெலிந்த குழந்தைகளுடன், வரிசையில் வந்துநின்றுவிட்டார்,
அச்சமயம் அங்கே வந்த ராமாநுஜர் அக்காட்சியைக் கண்டார்.
அந்த வைணவரை அழைத்து, “நீர் கோயிலில் ஏதாவது தொண்டு செய்துவிட்டுப் பிரசாதம் பெற்றுச் சென்றால் யாரும் உம்மைக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், நீர் பிரசாதம் பெறவேண்டும் என்பதற்காகவே, இரவு பகலாக இங்கே கோயிலில் வந்து நின்றிருப்பதால் தானே இத்தகைய கூச்சல் குழப்பம் ஏற்படுகிறது?” என்று கேட்டார் ராமாநுஜர்.
“
மீண்டும் “விச்வம், விஷ்ணுர், வஷட்காரோ” எனத் தொடங்கி “பூதப்ருத்” என்ற திருநாமத்துடன் நிறுத்திவிட்டார்.
“
அடுத்தநாள்முதல் அரங்கனின் கோயிலில் அந்த ஏழை வைணவரைக் காணவில்லை. அவர் எங்கு சென்றார் எனக் கோயில் பணியாளர்களிடம் ராமாநுஜர் விசாரித்த போது, “வேறு எங்காவது அன்னதானம் வழங்கியிருப்பார்கள், அங்கு சென்றிருப்பார்!” என அலட்சியமாகக் கூறினார்கள். ஆனால், அன்றுமுதல் கோயிலில் ஒரு விசித்திரமான திருட்டு நிகழத் தொடங்கியது.
அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப்படும் பிரசாதத்தில் ஒரு பகுதி மட்டும் தினமும் காணாமல் போய்க்கொண்டே இருந்தது.
இத்தனைப் பணியாளர்கள் இருக்கையில் யாருக்கும் தெரியாமல், உணவைத் திருடிச் செல்லும் அந்த மாயத்திருடன் யாரென யாருக்கும் புரியவில்லை. இச்செய்தி ராமாநுஜரின் செவிகளை எட்டியது. “எவ்வளவு நாட்களாக இது நடக்கிறது?” என வினவினார் ராமாநுஜர்.
சிலநாட்கள் கழித்துக் கொள்ளிடத்தின் வடக்குக் கரைக்கு ராமாநுஜர் சென்ற போது, அந்த வைணவரும், அவரது பதினாறு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் அங்கே ஒரு மரத்தடியில் குடியிருப்பதைக் கண்டார்.
“அவன் பெயர் ‘அழகிய மணவாள ராமாநுஜ தாசன்’ என்று சொன்னான்!” என்றார் அந்த ஏழை. “கோயிலுக்கு அருகில் இருந்து இறைவனுக்கு, இடையூறு செய்ய வேண்டாம் என்று, இவ்வளவு தூரம் தள்ளி வந்து இந்த மரத்தடியில் தங்கினேன். ஆனால், உங்களது தெய்வீகப் பார்வை, என் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிட்டது போலும்! சரியாகப் பிரசாதம், என்னைத் தேடி தினமும் வருகிறது!” என்றார்.
‘பூதப்ருதே நம:’ என ஜபம் செய்த உமக்கு ‘பூதப்ருத்’ ஆன அரங்கன், தானே வந்து சத்துள்ள உணவளித்து, மெலிந்திருந்த உங்களை இன்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வைத்திருக்கிறான்!” என அந்த ஏழையிடம் சொல்லி, அரங்கனின் லீலையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
“பூதப்ருதே நம:” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஆறாவது திருநாமத்தை ஜபிக்கும் அடியார்களுக்கெல்லாம், அரங்கனே நல்ல உணவளித்து, அவர்களைச் சத்துள்ளவர்களாக ஆக்கிடுவான்.
ரங்கா ! ஸ்ரீ ரங்கா !
🌺🌹 ”King Mahendran went hunting in the forest. There he saw a sage. King Mahendran was very pleased to talk to him for a while. She begged him to accept some donation from her.
🌺Sage, do nothing. I am completely satisfied with my situation. These trees give me enough fruit to eat;
🌺These pure streams give me all the water I need; This is where I fall asleep.
🌺 Even if you are a Mannady king, why should I care about your donations? He said that.
🌺Emperor, donate something to purify and please me; Donate one within the city; He begged me to get up with him into the city.
🌺Finally the sage agreed to go with the emperor. Took him to the palace. There he found gold bells, marbles and many other dramatic objects. Wealth and power were everywhere.
🌺The king told the sage to wait and went to a corner and said, Hare Narayana! He began to pray that I would have more wealth and that the people and the nation would bless me.
🌺 Meanwhile the sage got up and tried to get out. The emperor who saw him go. Follow him, sir, and stand; You are not going to receive my donation! Said.
🌺 Sage said to him, Manna! I do not feel sorry for the beggars. What can you give? You said you were begging all the time.
🌺 This is the way love is expressed. What is the difference between love and business if you ask God whether it is this or that? The sage left the place saying🌹🌺 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
(நாள்: 17.06.2022 - 30.06.2022)
19.06.22 *ஸ்ரீ பத்ரகாளியம்மன்* காலை ஆலயத்தில் எழுந்தருளுதல் ....
*திருக்கோயில் வரலாறு*
இதிகாச காலங்களில் சும்பன், விசும்பன் அரக்கர்கள் வாழ்ந்து வந்தனர். பல தவங்கள் இருந்து பல வரங்களை பெற்றனர். அழியா வரம் வேண்டி பிரம்மதேவரை வேண்டி பல ஆயிரம் வருடங்கள் தவமிருந்தனர். தவப்பலனால் பிரம்ம தேவர் நேரில் தோன்றினார் அவரிடம் தங்களுக்கு சாகா வரம் வேண்டுமென்று வேண்டினர்.
இத்திருத்தலத்தில் அம்மைநோய் போக்க. தினமும் சங்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது. அம்மை நோய் வந்தவர்களுக்கு ஐந்தாம் நாள் பேச்சியம்மனுக்கு படையலிட்டு விபூதி பிரசாதம் இட்டு வர மேனியில் உள்ள முத்துக்கள் உடனே இறங்கும் என்பது ஐதீகம்.
கவசம்
மகாபெரியவா கவசம் பாடிடவே
மகாகணபதி அருள் புரிந்திடுவாய்
மகாஸ்வாமிகளாய் வந்துதித்த
மகாகணபதி உன் தாளே சரண்
மகாலஷ்மி மைந்தன் சிரசை காக்க
சுப்ரமண்யர் குமாரர் வதனம் காக்க
விழுப்புரத்தில் உதித்தவர் விழிகளை காக்க
அனுஷத்தில் தோன்றியவர்
நெற்றியினை காக்க
சுவாமிநாதனாய் வந்தவர்
செவிகளை காக்க
மனதிலே என்றும் மகாபெரியவா
இருக்க
புத்தியை என்றும் மகாசூரியன் இயக்க
மலர் முகம் உடையவர்மலர்வாய்
காக்க
நாராயணன் தான் நாவினை காக்க
நான்மறை வித்தகர் நாசியை காக்க
கருடவாகனன் தான் கழுத்தினை
காக்க
தோடுடைய செவியன் தோளினை
காக்க
தோகை மயில் வாகனன் தோலினை காக்க
வேதநாயகன் மார்பினை காக்க
பசுபதியானவர் வயிற்றினை காக்க
காஷ்ட மௌனப்பிரியர் கரங்களை
காக்க
முக்கண் உடையவர் முன் பின் காக்க
முழங்கால் தொடைகளை
முருகவேள் காக்க
விரல்களைத்தான்
விரிசடையோன் காக்க
பாதயாத்திரைப்பிரியர்
பாதங்களை காக்க
அங்கங்கள் அனைத்தையும்
அபயகரத்தான் காக்க
எல்லா திசைகளிலும்
காஞ்சிமகான் இருக்க
எல்லா பிணிகளையும்
என்றுமே ஓழிக்க
காவி உடை தரித்து வந்த காமாஷி
எல்லோரையும் எப்போதும் எங்கும்
காக்க காக்க காக்க
ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி
மகாஸ்வாமிகள் திருவடிகளே
சரணம் சரணம் சரணம்
சிறுவாச்சூர் மதுரகாளிதாசன்
*கவசம்*
மகாபெரியவா கவசம் பாடிடவே
மகாகணபதி அருள் புரிந்திடுவாய்
மகாஸ்வாமிகளாய் வந்துதித்த
மகாகணபதி உன் தாளே சரண்
மகாலஷ்மி மைந்தன் சிரசை காக்க
சுப்ரமண்யர் குமாரர் வதனம் காக்க
விழுப்புரத்தில் உதித்தவர் விழிகளை காக்க
அனுஷத்தில் தோன்றியவர்
நெற்றியினை காக்க
சுவாமிநாதனாய் வந்தவர்
செவிகளை காக்க
மனதிலே என்றும் மகாபெரியவா
இருக்க
புத்தியை என்றும் மகாசூரியன் இயக்க
மலர் முகம் உடையவர் மலர்வாய்
காக்க
நாராயணன் தான் நாவினை காக்க
நான்மறை வித்தகர் நாசியை காக்க
கருடவாகனன் தான் கழுத்தினை
காக்க
தோடுடைய செவியன் தோளினை
காக்க
தோகை மயில் வாகனன் தோலினை காக்க
வேதநாயகன் மார்பினை காக்க
பசுபதியானவர் வயிற்றினை காக்க
காஷ்ட மௌனப்பிரியர் கரங்களை
காக்க
முக்கண் உடையவர் முன் பின் காக்க
முழங்கால் தொடைகளை
முருகவேள் காக்க
விரல்களைத்தான்
விரிசடையோன் காக்க
பாதயாத்திரைப்பிரியர்
பாதங்களை காக்க
அங்கங்கள் அனைத்தையும்
அபயகரத்தான் காக்க
எல்லா திசைகளிலும்
காஞ்சிமகான் இருக்க
எல்லா பிணிகளையும்
என்றுமே ஓழிக்க
காவி உடை தரித்து வந்த காமாஷி
எல்லோரையும் எப்போதும் எங்கும்
காக்க காக்க காக்க
ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி
மகாஸ்வாமிகள் திருவடிகளே
சரணம் சரணம் சரணம்👍👍👍👍👍
தினமும் சுலபமாக. படிக்கலாம். 🙏🙏
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 37*
ரமண பகவான் கிட்ட ஒரு ராணி ஒருத்தி ரொம்ப பக்தியா இருந்தா. அவ ஒரு வாட்டி இந்த cinema-scope, cinema மாதிரி ஏதோ ஒண்ணு கொண்டு வந்து போட்டு காண்பிச்சாளாம்.
ரமணர் பத்து நிமிஷம் பார்த்திண்டு இருந்தாராம்.
அப்புறம் வேற ஒரு cinema அடுத்த நாள் போட வந்தாளாம்.
அதுக்கு நடுவுல ஒரு பாட்டி ரமணர் கிட்ட வந்து நீங்க இந்த cinema ல்லாம் பார்க்கலாமா? வேண்டாமே’ அப்படீன்ன உடனே அவர் சரிம்மானுட்டாராம்.
அடுத்த நாள் அந்த ராணி இன்னிக்கு ஒரு documentary தான். அதை பார்க்கலாமே, அப்படீன்ன போது, ரமணர் ‘வேண்டாம்’ அப்படீங்கறார்.
அப்போ அந்த ராணி சொல்றா. ‘நீங்க எவ்ளோ பெரிய ஞானி. உங்களை இது போய் பாதிக்கப் போறதா?’ ன்ன உடனே ‘அப்படி நினைக்கக் கூடாது. யாரையும் பாதிக்கும்.
அதுனால நான் நெருப்போட விளையாடற விஷயத்துக்கே நான் வரலை.
இது வேண்டாத சமாச்சாரம். எனக்கு வேண்டாம்’ ன்னு சொல்லிட்டு அவர் அவரோட புஸ்தகத்தை எடுத்துப் படிக்கறார்.
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 38*
यद् भाव्यं तद् भवतु भगवन्पूर्वकर्मानुरूपम् ।
एतत्प्रार्थ्यं मम बहुमतं जन्मजन्मान्तरेऽपि
त्वत्पादाम्भोरुहयुगगता निश्चला भक्तिरस्तु ॥ ७ ॥
நாஸ்தா² த⁴ர்மே ந வஸுனிசயே நைவ காமோபபோ⁴கே³
யத்³ பா⁴வ்யம் தத்³ ப⁴வது ப⁴க³வன்பூர்வகர்மானுரூபம் ।
ஏதத்ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜன்மஜன்மாந்தரேऽபி
த்வத்பாதா³ம்போ⁴ருஹயுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து ॥ 7 ॥
ன்னு அழகான ஒரு ஸ்லோகம்
ஸ்வாமிகளும் அப்படித்தான். எந்த modern gadgets கிட்டயே வர மாட்டார். newspaper, TV, எல்லாம் lifeல பார்த்ததே கிடையாது.
அவர் சொல்வார். 1954ல அந்த மாதிரி எப்பவோ ஔவையார் னு ஒரு படம் பார்த்தேன்.
சுவாமி படம்னு friend கூட்டிண்டு போனான்.
ஆனா எனக்கு போறும்னு ஆயிடுத்து. அதுக்கப்புறம் நான் cinema வே பார்த்ததில்லை, அப்படீம்பார்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் கூட ‘பாத்திரத்தை தேய்ச்சு தேய்ச்சு வச்சாதான் பளிச்சுன்னு இருக்கும். அது மாதிரி நம்ம மனசை எந்த அழுக்கும் ஏறாம பாத்துக்கணும்’ என்பார்.🌹🌹🌹
*அம்மா* ...
நான் செய் புண்ணியம் நீயும் செய்தனையோ... அறியேன் ...
ஹரியே கதி என்றே அகம் தனை ஒழித்தவன் உன்னில் தனை சேர்த்துக்கொண்டான்
ஞானத் திருமேனி காண வர வேண்டுமே
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே
தாயாகித் தயை செய்யும் தேவியே
தடை நீங்க அருள் செய்ய வாவா
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்
காதில் நான் கேட்பது வேணு கானாம்ருதம்..
கண்ணில் நான் காண்பது குருவின் பிருந்தாவனம்..
மாயனை என் நேயனை
மாசில்லாத தூயனை
என் மனதில் வாழும் தேவனை
தேடினேன் தேவ தேவியே👌👌
உன் தாமரைப் பாதமே🪷 என் சென்னி சூடும் வேதமே 🌸
உன் நீர் என் மீது தெளித்தே💦 வென்றேன் காலனை 🐃🐃🐃
வேண்டும் வரம் தருபவளே 🌹🌹
வேண்டும் என் நெஞ்சில் உன் உருவே !!💐💐💐
குருவே சரணம்
ராகவேந்திரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*பதிவு 261* 🙏🙏🙏started on 7th Oct 2021
*அத* = கீழே
*கடி* = இடுப்பு
*பர்யந்த* = முடிவுக்கு வருதல் -
*முடிய மத்ய கூட* = மத்ய-கூட வடிவாக அமைந்துள்ள நடுப் பகுதி
ஸ்வரூபிணி = வடிவம்
மந்திரங்களுக்கும் அவற்றின் தேவதைகளுக்கும் பேதமில்லை.
மந்திரங்களுக்குள்ளேயே அந்த தேவதை உறையும் மந்திரங்களில், *பஞ்சதசீ* முக்கியமானது; முதன்மையானது.
அதன் வடிவாக இருப்பவள் அம்பாள்.🪷
*பதிவு 261* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 👌👌👌68
*ராஜவச்யம்*🪷🪷🪷
மந்திரங்களுக்கும் அவற்றின் தேவதைகளுக்கும் பேதமில்லை.
மந்திரங்களுக்குள்ளேயே அந்த தேவதை உறையும் மந்திரங்களில், *பஞ்சதசீ* முக்கியமானது; முதன்மையானது.
அதன் வடிவாக இருப்பவள் அம்பாள்.🪷
தவ க்ரீவா தத்தே முககமலநால ஶ்ரியமியம்
ஸ்வத: ஶ்வேதா காலாகரு பஹுல ஜம்பால மலினா
ம்ருணாலீ லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா 68
முப்புரம் எரித்த பரமசிவனுடைய புஜங்களின் தழுவுதலால் எப்போதும் மயிர்க்குச்சால் முள்களுடன் கூடியிருப்பதால்
முகத்தாமரைக்குக் காம்பு போன்ற பொலிவை அடைகிறது.
அதற்கும் கீழுள்ள முத்துமாலை
இயற்கையில் வெண்மையாயினும்
கறுப்பான அகிலுடன் கூடிய சந்தனக்குழம்பினால்
சேற்றில் அழுக்கடைந்த தாமரைக் கொடியின்
பொலிவைக் கொண்டதாக இருக்கிறது.👏👏👏
காமாக்ஷி ஸன்ததமபி ஸ்ம்ருதி மார்க காமீ |
கௌடில்யமம்ப கதமஸ்திரதாம் ச தத்தே
சௌர்யம் ச பங்கஜருசாம் த்வதபாங்கபாத: ||32||
- கடாக்ஷ சதகம்.
அம்மையே காமாக்ஷி! உன் கடைக்கண்ணானது வேதவழியைப் பின்பற்றுவதாயிருப்பினும், முனிவர்களுடைய ஸம்ருதி மார்க்கத்தில் எப்போதும் இருந்த போதிலும், ஏன் இந்த குடில ஸ்வபாவத்தையும், நிலையில்லாத தன்மையையும், தாமரைப்பூவின் காந்தியையும் திருடும் பழக்கத்தையும் கைகொண்டுள்ளது?
அம்பிகையின் கடைக்கண் பார்வை சஞ்சல ஸ்வபாவமுள்ளதாகையால் அதற்கு "நிலையில்லாமலிருப்பது" உண்டென்று சொல்வது பொருந்துகிறது. மேலும், தாமரை புஷ்பங்களின் காந்தியை அபகரிப்பதாகச் சொல்லி அதற்கு செளர்யம் (திருட்டுத்தனம்) இருப்பதாக கூறுகிறார். குடிலம்/கௌடில்யம் என்பது நேராக,ஒழுங்காக இருப்பதற்கு எதிரிடையானது.
இந்தப் பாடல் ஒரு நிந்தாத்துதியாகச் சொல்லப்படுகிறது.
ஸ்ரீ அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
- Simple story to explain🌹🌺 --------------------------------------------------- ------
🌺🌹 ”Guardian Muniandi. As usual, he would beat the drum and shout "Be careful" in the middle.
🌺One day Muniandi had to move to another city in a hurry and his child had to face his work.
🌺His child was a scriptural scholar before birth Shanmugam.
🌺So there was pre-natal scent wisdom. At night the son Shanmugam beat the drum and the father Muniandi did the work, telling him to be careful.
🌺The next day the king himself stood in the doorway of the guardhouse. He just came to see the boy.
🌺"Oh, the king has come. What great mistake has my son made? Will he be punished and executed here?" Guard Muniandi shuddered.
🌺But did the king come to honor the boy with a gift or not? Why? First day night boy Shanmugam '' Beware. Be careful, '' Dad did not shout like Muniandi.
🌺The king was seduced by what he said in a few words as a slogan. Let’s look at those sentences of justice. Don't be careful?
🌺Do we taste only some of these zealous slogans inspired by Adi Shankara here?
🌺 “Mata Nasti Father Nasti Ball Brother
Artham Nasti Gruham Nasti Tasmat
Jagrata Jagrata ”
🌺Do not fall asleep and wake up. No father, no mother, no brother, no brother, no money, no house. No own, no bond. Injured and lying air-tight bag, do not be fooled by all this, wake up immediately Beware beware,
🌺“Janmatukkam Zaratukkam Jayatukkam Puna; Puna: Samsara Sakaratukkam Tasmat Jagratha: Jagratha”
🌺Birth is misery, old age is the greatest sorrow, the grief of a built-up wife, the tragedy of life, magic,
Beware of vigilance.
🌺 “Lust; Kurodachcha Lopachcha Dehe Nishtanti Thaskara;
Gnana Ratnapa Haraya Tasmat Jagrata Jagrata! ”
🌺Love and affection, anger and greed are thieves. Do not take the lamp and look for thieves outside,
🌺Inside, chase after those who are hiding inside you. Awake, beware beware.
🌺“Asaya Padyade Janthu: Karmana Bahu Sindaya: Ayukshinam Na Janathi Tasmat Jagrata
Be careful ”
🌺Dosha is a human animal with all desires, is it usual to be fooled by anticipation? We, the fortified Mannarsamis, who drink with the mind that destruction is eternal, do not wake up, beware beware.
🌺“Our property is all dream-built mansions, adolescence is not permanent brother, yesterday bud, morning flower, evening withered and thrown away. This life is like lightning, in which you are what I am, awake, beware, beware.
🌺 Don't be fooled that the snowdrop on the top of the leaf that shines before the sun comes is our life, eternal. Property freedom, arrogance, fame, everything is up to the blind eye. Yemen that is not even a little wet in the chest. Beware Beware
🌺If you give me the key, this monkey toy will knock on the door until it works. The work is here only until the time of karma is given. Then? What else
🌺What to think about in this. Sing on the stage, dance until you can. Awake to realize this, Pandit Shanmugam went on to say that vigilance is vigilance ...... !!!
⁇🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
- *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹”காவல்காரன் முனியாண்டி. வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ''ஜாக்ரதை'' என்று கத்திக்கொண்டே போவான்.
🌺ஒருநாள் அவசரமாக முனியாண்டி வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை சண்முகம் செய்யவேண்டியதாயிற்று.
🌺அவன் பிள்ளை சண்முகம் முன் ஜன்மத்தில் ஒரு வேதமறிந்த பண்டிதனாக இருந்தவன்.
🌺எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது. இரவில் மகன் சண்முகம் தப்பட்டை அடித்துக்கொண்டு ஜாக்ரதை சொல்லிக்கொண்டு அப்பன் முனியாண்டி வேலையை செய்தான்.
🌺அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான். அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தான்.
🌺''ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ, இங்கேயே ஏதாவது தண்டனையை கொடுத்து நிறைவேற்றுவானோ ?'' காவல்காரன் முனியாண்டி நடுங்கினான்.
🌺ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக? முதல் நாள் இரவு பையன் சண்முகம் '' ஜாக்ரதை. ஜாக்ரதை'' என்று அப்பா முனியாண்டிபோல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை.
🌺ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னதுதான் ராஜாவை மயக்கியது. அந்த நீதி வாக்யங்களை பார்ப்போமா. ஜாக்ரதையாக இருக்க வேண்டாமா?
🌺ஆதி சங்கரர் அருளிய இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சிலவற்றை மட்டும் இங்கே ருசிப்போமா?
🌺“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”
🌺அடே தூங்குமூஞ்சி விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயுமென்னடா, அண்ணனென்னடா தம்பியென்னடா,காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,
🌺“ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந: சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”
🌺பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், கட்டின மனையாளோ நடக்கும் துயரம், வாழ்வே சோகம்,மாயம்,
விழித்துக்கொள் ஜாக்ரதை.
🌺“காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”
🌺ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா .உன் உள்ளே இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை தேடாதே,
🌺உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை.
🌺“ஆசாயா பத்யதே ஜந்து : கர்மணா பஹு சிந்தயா: ஆயுக்ஷீணம் ந ஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா
ஜாக்ரதா”
🌺ஆசையெல்லாம் தோசை தான் மனித மிருகமே, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமா? நாம், மனக்கோட்டை மன்னார்சாமிகள், அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால் குடிப்பவர்கள், விழித்துக் கொள்ளவேண்டாமா, ஜாக்ரதை ஜாக்ரதை.
🌺“நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள், இளமை வாலிபம் நிரந்தரமல்ல தம்பி, நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிபோய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை, இதில் நீ என்ன நான் என்ன, விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை,.
🌺சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளி நம் வாழ்வு, சாஸ்வதம் என்று மயங்காதே. சொத்து சுதந்திரம், டாம்பிகம், பேர் புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான். கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாதவன் அந்த யமன் . ஜாக்ரதை ஜாக்ரதை
🌺சாவி கொடுத்தால் அது வேலை செய்யும் வரை தான் இந்த குரங்கு பொம்மை டமாரம் தட்டும்.தலை ஆட்டும் நடக்கும். கர்மா அளிக்கும் நேரம் வரை தான் வேலையே இங்கு.அப்புறம்? வேறென்ன
🌺இதில் என்ன யோசிக்க இருக்கிறது. மேடையில் ஏறியாச்சு, வேஷம் கலையும் வரை, வேளை வரும் வரை ஆடு பாடு. இதை உணர விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை என்று கூறி சென்றான் பண்டிதன் சண்முகம்......!!!
🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
இந்த நூற்றாண்டில் பிரத்யக்ஷமாகத் திரும்பத் திரும்பப் பார்த்த விஷயம் சொல்கிறேன். தர்மசாஸ்திர ஆசாரங்கள் எத்தனையோ ஆயிரம் வருஷங்களாகப் பிளவுபடாமலே இருந்திருக்கின்றன. அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்றெல்லாம் தத்வரீதியில் பிரிந்த போதுங்கூட இவர்கள் புதுப்புது தர்ம சாஸ்திரங்களை எழுதி வைத்துக்கொண்டு விடவில்லை.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏
ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு தன் கன்றை அடையாளம் கண்டு கொள்ளாதா, என்ன?
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
(உழவாரப்பணி, கோபுரங்களில் வேலை, நாலைந்து பையன்களை உடன் வைத்துக் கொண்டு, சந்தடி இல்லாமல், சிவத்தொண்டு செய்யும் ஒரு வைதிகரை பாராட்டிய பெரியவா)
(அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.)
தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
சொன்னவர்-ஒரு அணுக்கத் தொண்டர்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
🛕🛕🛕🛕🛕🛕🕉️🕉️🛕
பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள். அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை கிராமத்தார் களும் பயன் படுத்திக் கொண்டார்கள்.
ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம் தன்னந் தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர் முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்) மழை-காற்றுக்கு அஞ்சாமல், கருவறையில் கோயில் கொண்டுள்ளார்.
இப்படி எத்தனையோ கோயில்கள்.
தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப் பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.
‘எப்படி?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது. அது சிவரகசியம்!
அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர். அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு!
அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி.
உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து பையன்களை உடன் வைத்துக்கொண்டு சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.
அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத் தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.
பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு கொடுத்தாரோ, தெரியாது. விலையுயர்ந்த ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில் வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர் பெரியவாள், அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச் சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச் சொன்னார்கள்.
எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.
இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய பண்டிதரா? யாகம் செய்தவரா..?
பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள்.
“இவரைப் பார்த்திருக்கிறாயோ?”
“இல்லை”
“இவர் அட்ரஸ் தெரியுமோ?”
“தெரியாது”
“எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?” (என்ன குறும்பு!)
பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது. ஒரு பத்திரிகையில் கூட இவர் புகைப்படத்தைப் பார்த்ததில்லையே…
“இவர் சிவப்பழம்…பிரசாதத்தோட நெறய்ய பழங்கள் கொடு…”
அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப் பணியாளர் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.
அது எந்தவகை ஸித்தி?
ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
இதென்னடா எல்லாரும் ஒரு நாள் போகப்போறவங்க தானே னு கிண்டலாக தெலுங்கில் பதில்கூறினேன்,
அதற்கு அவன் எனக்கு அநுப்பி வைத்த வீடியோ பார்த்து வியந்துவிட்டேன், பகவத் கைங்கர்யம் என்றால் சாதாரண விஷயமில்லை,
இவர் தன் வாழ்நாள் முழுவதையும் மேலக்கோட்டை யோகநரசிம்மருக்கு தொண்டு செய்தே கழித்துள்ளார்,
நித்தமும் 300 படிகள் மேலும் கீழுமாக ஏறி இறங்கி தலையில் திருமஞ்சனத்திற்கான நீரை சுமந்து செல்வாராம்,
ஒருநாளில் இப்படி 6 அல்லது 8 முறை தீர்த்தம் சேகரிக்க வருவாராம்,
இவர் தூக்கிசெல்லும் தோரணையை வைத்து இவரை அனைவரும் யதுகிரி பாகுபலி என்றே செல்லமாக அழைத்தனர்,
எத்தனை வைராக்கியம் பாருங்கள்,
இந்த காலத்தில் பலரிடம் இல்லாத நற்குணங்களில் இதுவும் ஒன்று,
அண்ணார் செய்த கைங்கர்யத்திற்கு அவருக்கு நிச்சயம் வைகுண்ட ப்ராப்தி கிட்டும்.
⁃ விச்வம் - எல்லாமாய் இருக்கிறான்.
⁃ விஷ்ணு: - எல்லாவற்றினுள்ளும் இருக்கிறான்.
⁃ விச்வம், விஷ்ணு இவை இரண்டுமே நாராயண என்கிற சொல்லுக்கு அர்த்தம் காட்டுகின்றன.
இப்படி சமஸ்த விஷயங்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருப்பதனாலே விஷ்ணு என்பது வெறும் சொல் அல்ல...
அவன் சர்வ வியாபி என்பதைக் குறிக்கும் மந்த்ரம். எல்லா வஸ்துக்களிலும் சராசரங் களிலும் பரவியிருக்கிறான்.
"மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான்".
இது வேத வாக்யத்தின் தமிழ் வடிவம்தான்!
அந்தர்யாமி ப்ராஹ்மணம் என்ற உபநிஷத் பாகத்திலும் இதே பொருள்பட வாக்கியம் இருக்கிறது.
"சமுத்திரமே நமக்கு பந்து" என்ற பொருளுடன் யஜுர் வேதம் முடிகிறது.
சமுத்திரம் பந்துவா...? அது எப்படி?
சமுத்திரம் என்றால் அதிலே சயனித்திருக்கும் பகவான். வித்யாரண்யர் பாஷ்யம் எழுதுகிறார். அதில், "சமுத்திரம் என்றால் பகவான் என்று அர்த்தம்" என்கிறார்.
சமுத்திர ஸ்வரூபியாய் இருக்கிறான்;
விருக்ஷங்களைப் பார்த்தால் அதுவும் பகவத் ஸ்வரூபம்.
ஜோதியைப் பார்த்தால் அதுவும் பகவத் ஸ்வரூபம்.
சூரியன் பிரகாசிக்கிறான், அது விஷ்ணு;
சந்திரன் பிரகாசிக்கிறான் - அது விஷ்ணு;
விருட்சங்கள் நிற்கின்றன - அவையும் விஷ்ணு;
பர்வதம், நிலம், ஜலம்... யாவும் விஷ்ணுவே.
எல்லா இடத்திலும் அவன் பரவியிருப்பதனாலே "மாகடல் நீருள்ளான்" என்பது ஏற்றமானவாக்கியம்.
உபநிஷத்தையும், ஆழ்வாருடைய திவ்ய வாக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது உண்மை புரிகிறது.
அந்த ஆனந்தத்தை அனுபவித்தால் தான் தெரியும். வாயால் விளக்கிச் சொல்ல முடியாது!
நம் உள்ளுக்குள்ளேயும் பரமாத்மா எழுந்தருளியிருக்கின்றானே!
அதனால்தான் உறங்கி எழும் பொழுது கூட மெள்ள எழுந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
தூக்கத்திலிருந்து தடாலென்று எழுந்து தடுமாறி, கதவில் சிலர் இடித்துக் கொள்வார்கள். அப்படியெல்லாம் அமர்க்களம் செய்யக்கூடாது!
ஏன் மெள்ள எழுந்து கொள்ளவேண்டும் என்று கேட்டால், நம்முடைய ஹ்ருதயத்திலே பகவான் இருக்கிறான் இல்லையா..?
அந்த பகவானுக்கு எந்தவித தீங்கும் ஏற்படக்கூடாது;
ஹிரண்ய கசிபுவினுடைய ஆட்கள், பிரஹ்லாத னை மலை மேலிருந்து உருட்டினார்கள்.
அந்தக் குழந்தை, மலை மேலிருந்து விழுகிறது.
"நான் சின்னாப்பின்னமாகிப் போயிடுவேனோ?" என்று அந்தக் குழந்தை பயப்படவில்லையாம்.
"ஹ்ருதயத்துக்குள்ளே பகவான் உட்கார்ந்தி ருக்கிறானே, அவனுக்கு அடிபட்டுவிடப் போகிறதே! என்ன ஆகுமோ...?" என்று ஹ்ருதயத்திலே உள்ள பகவானை இரண்டு கைக-ளாலும் பிடித்துக்கொண்டு விழுந்ததாம் அந்தக் குழந்தை
நம்முடைய பர்த்தாவை - நாராயணனை இந்தக் குழந்தை இவ்வளவு ஜாக்கிரதையாக ரக்ஷிக்கிறதே, இந்தக் குழந்தையை நாம் ரக்ஷிக்க வேண்டாமா.. என்று அந்த பூமாதா ம்ருதுவாக மாறி, வெல்வெட்டு மெத்தையிலே விழுகிற மாதிரி பிரஹ்லாதனைத் தாங்கிக் கொண்டாள்
முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்
சகல லோகமும் நடுங்க
சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும்
சஞ்சலப்பட உமையுடன்
கங்காளர் தனி நாடகம் செய்த போது அந்த
காரம் பிறந்திட நெடும்
ககனகூட மும் மேலை முகடு மூடிய பசும்
கற்றைக் கலாப மயிலாம்
சிங்கார குங்கும படீர ம்ருக மத யுகள
சித்ரப் பயோதர கிரித்
தெய்வ வாரண வநிதை புனிதன் குமாரன்
திருத்தணி மகீரதன் இருங்
கெங்காதரன் கீதம் ஆகிய சுராலயன்
க்ருபாகரன் கார்த்திகேயன்
கீர்த்தி மாஅசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி
கிழி பட நடாவு மயிலே.
நான் ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு
நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு
நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே
இளமை இருக்கும் புது எழிலிருக்கும்
என்னை இழுக்கும் இரு விழியிருக்கும்
இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும்
ஆட வேண்டும் மயிலே
அவனோடு உறவாடி
அன்போடு நான் சேர்ந்து
ஆட வேண்டும் மயிலே
சிறு நகையும் சிங்கார நடையழகும்
கருங்குழலும் காணாத பேரழகும்
சிறு நகையும் சிங்கார நடையழகும்
கருங்குழலும் காணாத பேரழகும்
விரிமார்பும் வித்தார சொல்லழகும்
விரிமார்பும் வித்தார சொல்லழகும்
முழுமதியும் முத்தாரப் பல்லழகும்
இருவர் : முழுமதியும் முத்தாரப் பல்லழகும்
கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும்
கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும்
கருணை பிறக்கும் தனி உடலமைப்பும்
கண்டதும் மனமெலாமழகிலே
மலர்ந்துடல் சுகம் பெற
குலவிட ஜோதியாய் வீசிடும் நாதனுடன்
தாம் ததீம் ததீம் ததீம் தகிடவென
ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு
நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
*பதிவு 259*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 33
சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 33 வது ஸ்லோகம்
नालं वा सकृदेव देव भवतः सेवा नतिर्वा नुतिः
पूजा वा स्मरणं कथाश्रवणमप्यालोकनं मादृशाम्।
स्वामिन्नस्थिरदेवतानुसरणायासेन किं लभ्यते
का वा मुक्तिरितः कुतो भवति चेत् किं प्रार्थनीयं तदा ॥ ३३॥
நாலம் வா ஸக்ருʼதே³வ தே³வ ப⁴வத: ஸேவா நதிர்வா நுதி:
பூஜா வா ஸ்மரணம் கதா²ஶ்ரவணமப்யாலோகநம் மாத்³ருʼஶாம் ।
ஸ்வாமிந்நஸ்தி²ரதே³வதாநுஸரணாயாஸேந கிம் லப்⁴யதே
கா வா முக்திரித: குதோ ப⁴வதி சேத் கிம் ப்ரார்த²நீயம் ததா³ ॥ 33॥
இதை பார்த்தா எல்லாருமே இந்த மாதிரி தான் சொல்றான்னு தோணறது நமக்கு. ஆனா ஆதிசங்கரரை போன்ற ஒரு ஞானி, இந்த பக்தியே முக்தி, அப்படீன்னு சொல்றது, எப்படி நாம புரிந்து கொள்ள வேணும்னா,
மஹா பெரியவா, “சிவ சிவ பச்யந்தி ஸமம்’ அப்படீன்னு காமாக்ஷி கடாக்ஷம் கிடைச்சுதுன்னா, அவன் காட்டையும் மாளிகையையும் ஒண்ணாவே பார்ப்பான்.
பயமே போயிடும். மித்ரனையும் சத்ருவையும் ஒண்ணாகவே பார்ப்பான்.
கோபமே போயிடும். ஒரு யுவதியினுடைய உதட்டையும், ஓட்டாஞ்சில்லியையும் ஒண்ணாவே பார்ப்பான்.
காமமே அற்று போயிடும்.
காமாக்ஷியினுடைய கடாக்ஷம் கிடைத்தப் புருஷர்கள், அந்த மாதிரி குழந்தையாயிடுவா. ஞானியாயிடுவா, அப்படீன்னு சொல்றார்.
*பதிவு 260* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*70. ப்ரஜாபதயே நமஹ (Prajaapathaye namaha)*
🏵️🏵️🏵️🏵️
ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : *ப்ரஜாபதி* : |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார்.
“அத்தைத் தின்று அங்கே கிடக்கும்!” என்று பதிலளித்தார் மாறன்.
(“செத்தது என்று அறிவில்லாத இவ்வுடலுக்குப் பெயர். அத்தகைய உடலில் அணுவைப் போல் சிறியதான ஜீவாத்மா பிறவி எடுத்தால்,
அது எதை அநுபவித்து எங்கே வாழும்?” என்று கேள்வி.
“அந்த சரீரத்துக்குரிய சுக துக்கங்களை அநுபவித்துக்கொண்டு அவ்வுடலிலேயே அந்த ஜீவாத்மா வாழும்!” என்பது மாறன் தந்த பதில்.)
அதைக் கண்டு வியந்த மதுரகவி, அவருக்குச் சீடராகி, மாறன் பாடிய பாசுரங்களை எல்லாம் ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்தார்.
முப்பத்தைந்து ஆண்டுகள் பூமியில் வாழ்ந்த மாறன், தன் பூதவுடலை நீத்து வைகுந்தம் அடைந்தார்.
*சும்மா*==
படிச்சிதான் பாருங்களேன்*.
வீட்ல எல்லோரும் சும்மாதானே இருக்கீங்க அதனால சும்மா தான் போட்டேன் சும்மா படிச்சு பாருங்க.
+++++
*அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*.
*அது சரி *சும்மா* *என்றால் என்ன??*
*பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!
*"சும்மா"* ======
*என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?*
*வேறு மொழிகளில்* *இல்லாத சிறப்பினை*
*நாம் அடிக்கடி கூறும்* *இந்த*"சும்மா"* *எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்*.
*1 . கொஞ்சம்* *"சும்மா"* இருடா?
( *அமைதியாக/Quiet*)
*2.கொஞ்ச நேரம் *"சும்மா"* *இருந்து விட்டுப் போகலாமே? (*களைப்பாறிக் கொண்டு/Leisurely*)
*3.அவரைப் பற்றி *"சும்மா"* *சொல்லக் கூடாது!*
(அருமை/in fact)*
*4.இது என்ன *"சும்மா கிடைக்கும்ன*
நினச்சியா*?
(இலவசமாக/Free of cost)
*5. *"சும்மா" கதை அளக்காதே?*
(பொய்/Lie)
*6. *"சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்* -
(உபயோகமற்று*/Without use)
*7. *"சும்மா"* *"சும்மா" கிண்டல் பண்ணுறான்.* (அடிக்கடி/Very often)*
*8.இவன் இப்படித்தான்.. *சும்மா* *சொல்லிக்கிட்டு இருப்பான்*.
(எப்போதும்/Always)
*9.ஒன்றுமில்லை *"சும்மா" சொல்கின்றேன்*-
(தற்செயலாக/Just)
*10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா" தான் இருக்கின்றது
(காலி/Empty)
*11.சொன்னதையே *"சும்மா" சொல்லாதே.*
(மறுபடியும்/Repeat)
*12.ஒன்றுமில்லாமல் *"சும்மா" போகக் கூடாது*- (வெறுங் கையோடு/Bare)
*13. *"சும்மா"தான் இருக்கின்றோம்*-
(சோம்பேறித் தனமாக/ Lazily)
*14.அவன் *"சும்மா" ஏதாவது உளறுவான்* -
(வெட்டியாக/idle)
*15.எல்லாமே *"சும்மா" தான் சொன்னேன்*-
(விளையாட்டிற்கு/Just for fun)
*நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"*
*என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* (என்றால் அது *"சும்மா"* இல்லை!)
*உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை*.
*ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்*
++++++
உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்தது என்றால் அதற்குப் பின்னால் இருக்கும் ஆன்மீக ரகசியங்கள் எத்தனை தெரியுமா?
நீங்கள் இதுவரை அருள்மிகு உண்ணாமுலை சமேத அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரிவலப் பாதையில் (14 கி மீ) ஒரே ஒரு முறை வலம் வந்திருந்தால்,அதுவே அண்ணாமலை கிரிவலம் என்று பெயர்; அது பவுர்ணமி அன்று சென்றிருந்தாலும் சரி; விடுமுறை நாளில் சென்று இருந்தாலும் சரி; எந்த நாளாக இருந்தாலும் சரி;
பகலில் கிரிவலம் சென்று இருந்தாலும், இரவில் கிரிவலம் சென்று இருந்தாலும், வெயிலில் கிரிவலம் சென்று இருந்தாலும், கொட்டும் மழையில் கிரிவலம் சென்று இருந்தாலும்; பனியில் கிரிவலம் சென்று இருந்தாலும் சரி;
உலகத்தின் அனைத்து ஜீவன்களுக்கும் அப்பா தான் இந்த அண்ணாமலை என்று எண்ணியவாறு கிரிவலம் சென்று இருந்தாலும் சரி; கொஞ்சம் கூட பக்தி உணர்ச்சியே இல்லாமல் ஒருவர் கூப்பிட்டார்; அதனால் கிரிவலம் வந்தேன் என்று கிரிவலம் சென்று இருந்தாலும் சரி; ஜோதிடர் சொன்னதால் பரிகாரத்திற்காக கிரிவலம் சென்று இருந்தாலும் சரி!!!
3000 முறை மனிதப் பிறவிகள் எடுத்தப் பின்னர் தான் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல ஒருவரால் முடியும்;
அங்கே அவர்கள் பல கோடி முறை பூஜை செய்து, தவம் இருந்து பெற்ற வரத்தால் தான் உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்திருக்கின்றது என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?
அதுமட்டும் அல்ல; பல நூறு பிறவிகளாக நம்மைப் படைத்த அந்த ஈசனிடம் கோவிலுக்குச் சென்று உருகி,உருகி, அழுது, அழுது "அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்; அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்" என்று வேண்டியிருந்தால் மட்டுமே இப்பிறவியில் அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையாரின் அருள் கிட்டும்; இதை நாம் உணர்வது கிடையாது;
பல விதமான விலங்குகள், செடி, கொடிகள் என்று 84,00,000 பிறவிகள் எடுத்துவிட்டு, இறுதியாக காளை பிறவி எடுக்கும் ஆத்மா, அதற்கு அடுத்த படியாக முதன் முறையாக ஆண் மனிதப் பிறவி எடுக்கும்; பசு பிறவி எடுக்கும் ஆத்மா, அதற்கு அடுத்த படியாக முதன் முறையாக பெண் மனிதப் பிறவி எடுக்கும்; அப்படி முதன் முறையாக மனிதப் பிறவி எடுக்கும் போது, அண்ணாமலையில் தான் ஈசன் பிறக்க வைக்கிறார் என்பது அகத்தீசர் நமக்கு போதிக்கும் அருணாச்சல ரகசியங்களில் ஒன்று!!!
1008 முறை கிரிவலம் முடிக்கும் போது நமது அனைத்து முற்பிறவி பாவங்களும், புண்ணியங்களையும் அண்ணாமலையார் ஈர்த்து நம்மை பரிசுத்தமான ஆத்மாவாக மாற்றிவிடுகிறார்; நமது அனைத்து முற்பிறவிகளின் மொத்த கர்மாக்களும் அக்னி மலையான அருணச்சலம் என்ற அண்ணாமலையார் எரித்துவிடுகிறார்;
போன நான்கு பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை மட்டுமே அனுபவிக்க இப்பிறவி செலவாகிவிடும்; போன நான்கு பிறவிகளில் செய்த புண்ணியங்கள் தான் பெற்றோர், உடன் பிறந்தோர், வாழ்க்கைத்துணை, வாரிசுகள், சொத்துக்கள், படிப்பு,
புகழ், வருமானம், லாபம், பெருமை, பிரபல யோகம் என்று கிடைக்கின்றன;
அதே போன நான்கு பிறவிகளில் செய்த பாவங்கள் தான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி காலத்தில் எதிர்கொள்ளும் நோய், அவமானங்கள், கடன், வம்பு வழக்குகள், மாந்திரீகத்தால் எவனுக்காவது/எவளுக்காவது அடிமையாக இருத்தல், விரக்தி மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள், ஏமாறுதல், துரோகத்தால் துவண்டு போகுதல், பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் தவித்தல், சுய இன்பத்தால் உடல் நலத்தைச் சீரழித்தல், ஆங்கில மருத்துவத்தினால் உண்டாகும் பக்கவிளைவுகள், விபத்துக்களால் உண்டாகும் உடல் உறுப்புச் சேதாரம், தெய்வங்களைப் பழித்துப்பேசுதல் அல்லது கேலி செய்தல்=அதன் மூலமாக மேலும் பல கொடூரமான பாவவினைகளை உருவாக்கிடுதல் போன்றவைகள் உண்டாகின்றன;
உங்களில் சிலருக்கு இந்த கிரிவலம் எளிமையானதாக இருக்கும்; பலருக்கு கடினமானதாக இருக்கும்; சிலருக்கு கிரிவலம் செல்லும் போதே வயிற்று உபாதைகள், காலில் அடிபட்டு ரத்தம் வருதல், தொடர்ந்து நடக்க முடியாத அளவுக்கு மயக்கம் வருதல் போன்றவைகள் ஏற்படும்; இவையெல்லாம் இனி வரும் காலங்களில் உங்களுக்கு வர இருக்கும் விபத்து, அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு மாற்றாக அருணாச்சலேஸ்வரர் தரும் பரிகாரம் ஆகும்;
பகலில் கிரிவலம் செல்பவர்கள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம் வரையிலும் பசுக்கள் இருப்பதைக் காணலாம்; அதற்கு வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை தானமாகத் தருவது இன்னும் பல கோடி புண்ணியத்தை அள்ளித் தரும்; நமது ஊரில் இருக்கும் கோவில் பகுதியில் அல்லது நமது தெருவில் இருக்கும் ஒரே ஒரு பசுவுக்கு (நாட்டுப் பசு தான் புண்ணியம் தரும்; ஜெர்ஸிப்பசுவால் ஒரு ஆன்மீக நன்மையும் ஒரு போதும் கிடையாது) ஒரு வாழைப்பழம் தானம் செய்தாலே பெரும் புண்ணியம்;அப்படிப் பட்ட சூழ்நிலையில் அண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒரே ஒரு பசுவுக்கு தானம் செய்தால் அது எப்பேர்ப்பட்ட புண்ணியம் என்பதை இக்கணத்தில் புரிந்து கொள்ளுங்கள்:
நீங்கள் கிரிவலம் செல்லும் போது திடீரென மழை வந்தால், உடனே கட்டிடத்திற்குள் ஒதுங்க வேண்டாம்; விடாப்பிடியாக கிரிவலம் செல்லுங்கள்; மழை வரும் சமயத்தில் சில பல வருண சித்தர்கள் அப்போது கிரிவலம் வருவார்கள்: அதை நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் உணர முடியாது; ஆனால்,அவர்கள் நம்மை ஒரே ஒரு விநாடி பார்ப்பார்கள்; அதன் மூலமாக பெருமளவு கர்மாக்கள் நம்மிடம் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் ஈர்த்துக் கொள்வார்கள்;
இந்த வரிகளை வாசித்துவிட்டு, மழை நாட்களாக தேர்வு செய்து கிரிவலம் சென்று கொண்டே, மீண்டும் உணர்ச்சி பூர்வமான தவறுகளைச் செய்தால் ஒரு போதும் அருணாச்சலேஸ்வரர் மன்னிக்க மாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ