ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 15 - அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா பதிவு 22

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

15  अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா   

பதிவு 22



இன்று நாம் காண இருப்பது 15வது திருநாமம் 

15  अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -  

அஷ்டமி அன்று ராத்திரி  சந்திரன் கண்டு களித்ததுண்டா?

ஒருநாள்  மொட்டைமாடியில் நின்று ரசித்தால்  தெரியும்.  

அந்தமாதிரி  ஒளியுள்ள, பூரண காந்தியான நெற்றி அவள் முக லாவண்யத்திற்கு எடுப்பாக, பொருத்தமாக இருப்பவள்.🌝🌝🌕


ஷ்டமி சந்திர = அஷ்டமியில் வரும் பிறைச் சந்திரன் 

விப்ராஜ = உள்-ஒளிர்தல் 

அலிக = நெற்றி ; 

ஸ்தல = பிரதேசம் / 

மேடு ஷோபிதா = அழகுடன் அமைந்திருத்தல் 🙏🙏🙏

அஷ்டமியின் சந்திரப்பிறையைப் போன்ற ஒளிரும் நெற்றிப்பிரதேசத்தை அழகுடன் அமையப்பெற்றவள்.🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝

ஆதி சங்கரர் இந்த சந்திரனை வைத்துக்கொண்டு சௌந்தர்ய லஹரியில் ஒரு சரித்திரமே படைத்துள்ளார் ..

அம்மா உன் முகம் பூர்ண சந்திரன் ..

அந்த சந்திரன் தேயக்கூடியது 

ஆனால் உன் முக சந்திரன் என்றுமே வளர் பிறை ..

அது என்றும் தேயாது ..

உன் நெற்றி சந்திர பிறை 

ஆனால் அது பாதிதான் நீ சூடிய பிறையும் பாதிதான் 

இவை இரண்டையும் மாற்றி அமைத்து ஒட்டி விட்டால் அதுவே பூர்ண சந்திரன் அன்றோ அந்த ஒட்டும் கயிறாக என் மனம் இருக்க அருள் செய் தாயே என்கிறார் .. 

இதற்கு மேலும் யாராவது கூடுதலாக வர்ணிக்க முடியுமா ?? 🌕🌝🌝🌝🌝🌕🌕🌕🌝



அறுபத்து மூன்று வர்ணனைகள் 

ஸ்வரூப வர்ணனையும் அம்பாளின் இருப்பிட வர்ணனையும் சேர்த்து கிட்டத்தட்ட 63 திருநாமங்கள் (காமதாயினி என்கிற 63ஆவது திருநாமம் வரை). 

இவற்றுள் மிகவும் அழகான ஒன்று அம்பாளுடைய திருநெற்றியை விவரிக்கக் கூடியது. அஷ்டமி சந்திர விப்ராஜ அஷ்டமி சந்திரன்! எவ்வளவு நுணுக்கமாக நம்முடைய மஹான்கள் சிந்தித்தார்கள் என்பதற்கும் நம்முடைய பாரம்பரியம் எவ்வளவு நுணுக்கமான பாரம்பரியம் என்பதற்கும் இதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். 



சாதாரணமாக ஒரு பெண்ணின் நெற்றி என்று வர்ணிக்கும்போது நவீன காலத்து வர்ணனையானாலும் சரி, முந்நூறு நானூறு ஆண்டு காலத்துக்கு முந்தைய வர்ணனையானாலும் சரி, பிறை நெற்றி என்றுதான் வர்ணிப்பார்கள். 

பிறைச் சந்திரன் எப்படி இருக்கும்? என்று சிறிது யோசித்துப் பார்க்க வேண்டும். ஆதிசங்கர பகவத்பாதர், சௌந்தர்யலஹரியில் அஷ்டமி சந்திரன் என்பதற்கு ஒரு விளக்கம் கொடுப்பார். நேரடியாக அஷ்டமி சந்திரன் என்று சொல்லாமல் வேறுவிதமாகச் சொல்வார்.

"அம்மா! உன்னுடைய திருமுகத்தை நான் பார்க்கிறேன். இரண்டு சந்திரன்கள் அங்கே இருக்கின்றன" என்பார் ஆதிசங்கரர். 

அம்பாளிடம் எப்படி இரண்டு சந்திரன்கள் இருக்கின்றன? 

ஏற்கெனவே ஒன்று இருக்கிறது. 'தாரா நாயக சேகராம்' என்று தியான ஸ்லோகத்தில் வருகிறதல்லவா? 

தாரா நாயகன் என்றால் நட்சத்திரங்களுக்கெல்லாம் நாயகனான சந்திரன் என்று அர்த்தம். 

ஏற்கெனவே அவள் திருமுடியிலே ஒரு சந்திரன் இருக்கிறது. அம்பாளைப் பார்த்து விட்டு ஆதிசங்கரர், 'இரண்டு நிலவுகள்' என்றார். 

இரண்டு நிலவுகள்கூட அல்ல, ஒரு நிலவின் இரண்டு பாகங்கள் என்கிறார். 



எப்படி? "உன் திருநெற்றியைப் பார்க்கிறேன். அதைப் பார்க்கும்போது உன் திருமுடியிலே ஒரு நிலா இருக்கிறதே அதன் மற்றொரு பாதிதான் உன் நெற்றியிலே வந்து அமர்ந்ததோ என்று தோன்றுகிறது" என்கிறார்! 

முழு நிலவில் ஒரு பாதி அவள் திருமுடியிலும் மற்றொரு பாதி அவள் திருநெற்றியில் அஷ்டமி சந்திரனாகவும் (எட்டாம் பிறை) இருக்கிறது. 

ஆதிசங்கரர் மேலும், "ஆனால் இந்த இரண்டு நிலவுகளும் திசைமாறி இருக்கின்றன. இரு பாதிகளும் ஒன்றையொன்று நோக்காமல் எதிர்த் திசைகளில் நோக்குகின்றன. ஒன்று செய்யலாம். 

மேலே இருப்பதை எடுத்துக் கீழே இருக்கும் பாதியுடன் வைத்துத் தைத்து விட்டால் முழு நிலா கிடைக்குமே" என்றார். 

எப்படித் தைப்பது என்பதையும் சொன்னார்; "அமிர்தம் இருக்கிறதல்லவா? அந்த அமிர்தம் என்னும் பசையை எடுத்து ஒட்டிவிடலாம்!" என்று கூறுகிறார். 



ஒட்டியது பிரிந்துவிட்டால் என்ன செய்வது? "ஆகவே அந்த அமிர்தத்தையே கயிறாக மாற்றி (ஸுதாலேபஸ்யூதி) இரண்டு பாதிகளையும் சேர்த்துத் தைத்துவிட்டால் இரண்டும் சேர்ந்து மஹாபூர்ணிமையாகத் திருமுகம் விளங்காதா?" என்றார். 

இது எங்கேயிருந்து ஆசார்யருக்குத் (சௌந்தர்யலஹரியில்) தோன்றியது? 

அஷ்டமீ சந்த்ர விப்ராஜ என்ற லலிதா சஹஸ்ரநாமத்தின் திருநாமத்திலிருந்து தான்.

பிறைச் சந்திரன் என்னும்போது நான்காம், மூன்றாம் பிறையெனில் அதில் நடுவிலே ஒரு பள்ளம் இருக்கும். 

அதனால்தான் அஷ்டமி சந்திரன் என்று வர்ணித்தார்கள். 

அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரையிலான காலகட்டத்தில் சரியாக நடுவில் உள்ள எட்டாவது நாள் சந்திரன். 

அது எப்படி சரிபாதியாக இருக்குமோ அப்படிப்பட்ட கச்சிதமான அமைப்பிலான நெற்றி. அதுவும் அது சாதாரண திருநெற்றி இல்லை - அஷ்டமீ சந்த்ர விப்ராஜ(த்) அலிகஸ்தல சோபிதா.



                                        💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

சௌந்தரிய லஹரி 


பாடல் 46   பாதிச் சந்திரன் போன்ற நெற்றியின் வர்ணனை 

லலாடம் லாவண்யத்யுதி விமலம் ஆபாதி தவ யத்

த்விதீயம் தந்மந்யே மகுடகடிதம் சந்த்ர சகளம்

விபர்யாஸ ந்யாஸாத் உபயமபி ஸம்பூய ச மித:

ஸுதாலேப ஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர:

லாவண்யமான வெண்ணிலாவுடன் ப்ரகாசிக்கும் உனது நெற்றியானது கிரீடத்திலிருக்கும் அர்த்த சந்திரனைத் தவிர்த்து வேறான அர்த்த சந்திரன் போல தோன்றுகிறது. 

ஏனென்றால் மேலும் கீழுமாக எதிரெதிர் திசையில் வளைவுகளையுடைய இரு நிலாக்களையும் வளைவுகள் பொருந்தும்படியாகச் சேர்த்து வைத்தால் அம்ருதம் நிறைந்த பூர்ண சந்திரன் போன்ற தோற்றமாம். இது தான் "அஷ்டமீசந்த்ர பிப்ராஜத் அலிகஸ்தல சோபிதா" என்னும் நாமம்.


அன்னையின் உச்சிக் வகிட்டின் கேசங்களுக்கு கீழ் புருவம் வரையில் இருக்கும் நெற்றிப் பகுதி வளைந்து கன்னங்களை அடைவது பிறைச் சந்திரனைத் தலைகீழாக கவிழ்த்து வைத்தது போல் இருக்கிறதாம். (இது பற்றி பெரியவர் திராச ஒரு பதிவு போட்டிருக்கிறார், அது இங்கே). பிறைச் சந்திரன் என்று சொல்லும் போது அர்த்த சந்திரன் என்கிறார். 

அஷ்டமீ தினமானது பக்ஷத்தின் நடுவில் இருக்கும் திதி. அமாவாசையில் இருந்து தினமும் சந்திரனைப் பார்த்துக் கொண்டே வந்தால் அஷ்டமி தினத்தில் சரிபாதியாக வளர்ந்திருக்கும். அதனால் அர்த்த சந்திரன். இவ்வாறாக இரு அர்த்த சந்திரனை வளைவுகள் பொருந்தும்படி அமைத்தால் வருவது முழு நிலா.



                                       💐💐💐💐💐💐💐💐💐💐💐💐





Comments

சிந்து said…
Woooooow sir mind blowing கவிதை, how beautiful you narrated everyones big story in a kavi line,OMG its heart melting to read again and again 🙏🙏🪷🫡
கீர்த்தி said…
Bind blowing sir, narrated everyone, tears are coming while reading. No words to express my feelings sir.
சூர்யா said…
Superb sir no words to praise you. 👏
மலர் said…
வணங்குவதை தவிர வேறொன்றும் அறியேன். சொல்ல வார்த்தைகள் இல்லை.
Malar said…
உணர்ச்சி வசப்பட்டு கண்களில் நீர் வர செய்கிறீர்.
Kousalya said…
அருமையான சேவை..just making & realising their strengths (partly counciling) is the most required need of the hour...great 👍👍
ravi said…
Good morning .

Felt like sharing .

Generally almost all have extreme talents but feel shy or beaten up by not having adequate self confidence .

It appears while talking with some , the thorns are many in their life journey and so much so it's pain .

Our sub group really gives them the light they missed or the joy they never unearthed .

Timely Motivation, apt appreciation and implanting self confidence in them and making them realise woman power in them is the need of the hour as a part of VS seva .

All are talented but their talents were not understood or recognised by their own kith and kin how rich they are in their thinking and excelling in winning challenges !!

Let us keep the sub group alive in welcoming each one 's story lines in depth .

If our association helps them in realising their worth , I think there will not be more bliss than this .

I hope you concur with me . Good day . 🙏🙏🙏
Kousalya said…
முகம் காணாதவர்களுக்கும் முதன்மையாக வாழ்த்து அளிக்கும் உங்களின் மேலான குணத்திற்கு எனது பணிவான நமஸ்காரங்கள்...🙏🙏🙇‍♀️🙇‍♀️🌹🌹👍👍
Malar said…
True words sir. The talentd r not appreciated by own kith nd kin. Made me cry. U make me cry a lot sir. Be it real lifes quote or on God. I sail deep in ur quotes. The reality matters.
ravi said…
Mam am i not boasting in my 60 page write up . This is talent and nothing wrong in others knowing . Not everyone can master . Pls don't feel shy . Our introductions are one-time only ..
Sethu said…
Thank you for this motivation sir. I hope I have not loaded up your chat window with my pictures sir. Sorry.
ravi said…
🌹🌺" *கர்ணா* ..... *உன் தற்பெருமையை நிறுத்தி வீரத்தை போர்க்களத்தில் காட்டு 'என்ற சல்லியன்.* ' ... *என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹கர்ணன் தனக்கு தேரோட்டியாக சல்லியன் இருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என சொல்ல, துரியோதனன் அவரை கர்ணனின் தேரோட்டியாக இருக்குமாறு கேட்க அவரது இருப்பிடம் செல்கிறான்.

🌺சல்லியனை சந்தித்து அர்ஜுனனை வெல்ல நீங்கள் கர்ணனுக்கு தேரோட்டியாக இருக்க வேண்டும் என்று வேண்டினான். கடும் கோபம் கொண்ட சல்லியன் “ துரியோதனா, நான் ஒரு அரசன். ஆனால், கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன். என் நிலை இறங்கி நான் அவனுக்கு தேர் ஒட்டுவதா?? “ என்று கடிந்தார்.

🌺துரியோதனனோ “ நீங்கள் கர்ணனை விட மேலானவர்தான். நான் தங்களை அவமதிக்க முயலவில்லை சல்லியரே. என் மனதில் சில காரணங்கள் உண்டு. கர்ணன் அஸ்திரங்கள் உபயோகத்தில் அர்ஜுனனை விட மேலானவன். தாங்கள் ரதம் செலுத்துவதிலும், குதிரைகளை கட்டுக்குள் வைப்பதிலும் பகவான் கிருஷ்ணருக்கு நிகரானவர்.

🌺ஸ்ரீ கிருஷ்ணன் அனைவருக்கும் முதலானவன். அவனை யுத்தத்தில் வெல்ல யாராலும் இயலாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனாலும் அவன் பார்த்தனுக்கு சாரதியாய் இருக்கிறான். நீங்கள் கண்ணனைப் போல சமமான திறமை வாய்ந்தவர்.

🌺தாங்கள் கர்ணனுக்கு ரதம் ஓட்டினால் உங்களுக்கு அது அவமானம் தராது. மாறாக பேரையும், புகழையும் தான் தரும். “ என்று நயவஞ்சக வலை விரித்தான்.

🌺சல்லியன் தன்னை கண்ணனுடன் ஒப்பிட்டு பேசியதால் மனம் மகிழ்ந்தார். ஒரு நிபந்தனையோடு அதற்க்கு ஒப்புக்கொண்டார். “நான் என்ன சொன்னாலும் கர்ணன் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். என்னை அவமதிப்பது போலே அவன் நடந்தால் நான் அவனுக்கு சாரதியாய் இருக்க மாட்டேன்.

🌺இதற்கு சம்மதம் எனில், கர்ணனுக்கு தேர் ஓட்ட நான் சம்மதிக்கிறேன். “ என்றார். துரியோதனனும் கர்ணனும் அவரின் நிபந்தனைக்கு ஒப்புகொண்டடால் சல்லியன் கௌரவ போர் தளபதியான கர்ணனுக்கு தேரோட்டி ஆனார்.

🌺
ravi said…
பாண்டவ படைக்கு ஆதரவாக போரில் கலந்து கொள்ள வந்த சல்லியன், விருந்து உபசரிப்பால் ஏமாற்றப்பட்டு, கொடுத்த வாக்கினால் கௌரவர்களுக்கு போரிட சென்றவன். இதை அவன் தருமரிடம் கூறிய போது தருமர் அவனின் நிலை அறிந்து சல்லியனை கௌரவர்களுக்காக போர் செய்ய அனுமதித்தார்.

🌺அப்போது அவர் ஒரு உதவியை சல்லியனிடம் கேட்டார். “அதாவது, கர்ணன், அர்ஜுனனுடன் போர் புரிய நேர்ந்தால், அர்ஜுனனை பாராட்டியே பேச வேண்டும். இது கர்ணனின் ஆவலைக் குன்றச் செய்யும் ” என்பதே அந்த உதவி. நிச்சயம் செய்வதாக வாக்களித்தார் சல்லியன்.

🌺போர் ஆரம்பிக்கையிலேயே #கர்ணனுக்கும், தேரோட்டியான சல்லியனுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. ' இன்று பாண்டவர்களை வெல்வது உறுதி ' என்றான் கர்ணன்.

🌺உடன் சல்லியன் ' உன் தற்பெருமையை நிறுத்தி வீரத்தை போர்க்களத்தில் காட்டு 'என்றான் #சல்லியன். ' தேவாதி தேவர்களையும், அசுரர்களையும் வென்ற எனக்கு அர்ச்சுனனை வெல்வது எளிது ' என்றான் கர்ணன்.

🌺“ வீண் தற்பெருமை வேண்டாம். உன் வீரம் நான் அறிவேன். சிவனுடன் போர் புரிந்தவன் அர்ச்சுனன். சித்திரசேனன் என்னும் கந்தர்வனுடன் போரிட்டு #துரியோதனனை மீட்டவன் அவன். அப்போது, கர்ணா நீ எங்கே போனாய்? விராட நகரில் ஆநிரைகளை மீட்ட போது அர்ச்சுனனுக்கு பயந்து ஓடியவன் நீ.

🌺உத்தரன் தேரோட்டிய போதே கங்கை மைந்தனையும், துரோணரையும் வென்றவன், கண்ணன் தேரோட்டும் போது சற்று எண்ணிப்பார். உன் ஆணவப் பேச்சை நிறுத்தி, ஆற்றலை செயலில் காட்டு “ என்றான் சல்லியன். கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டாமா ? தன் வேலையை ஆரம்பித்தான் சல்லியன்.

🌺#கர்ணனின் ஆரம்பம் அசத்தலாகவும், பாண்டவர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தது. அவனது ரதத்தை இருபுறமும் இருந்து காத்தனர் அவனது இரு மக்கள். சத்தியசேனன் மற்றும் சுசேனன்.

🌺அர்ஜுனன், எய்த என்னன்ற அம்புகள் கர்ணனைத் தாக்க, கர்ணன் சோர்ந்து போகிறான். அப்போது அவன் முடிவு அவன் கண்களில் தெரிகிறது. மரணம் தன்னை நெருங்கி வந்ததை கர்ணன் உள்மனதில் அறிகிறான். காளதேவன் அசிரீரியாக “ கர்ணா, பூமாதேவி உன் ரதத்தை தன்னுளே பிடித்து வைக்கப் போகிறாள் ” கவனம் என எச்சரிக்கிறார்.

🌺அதை உணர்ந்து செயல்படும் முன்னரே தேர் சக்கரம் மண்ணில் புதைகிறது. கர்ணன் சல்லியனிடம் தேரை பூமியில் சிக்குண்ட இடத்தில் இருந்து மீட்க்குமாறு கூறினான். அதற்க்கு சல்லியன் “ எனது வேலை தேர் ஓடுவது மட்டும் தான்.

🌺தேரரை மீட்பது அல்ல. மேலும் நான் ஏற்கனவே துரியோதனனிடம் என்னை நீ அவமதித்து பேசினாலோ, முறை தவறி பேசினாலோ நான் உன்னை விட்டு விலகி விடுவேன் என்ற நிபந்தையின் பெயரில் தான் உனக்கு சாரதி ஆனேன். இப்போது நான் போகிறேன் “ என்று கூறிவிட்டு நகந்தார். பூமாதேவியின் சாபம் வேலை செய்ய தொடங்கியது.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺🌹


ravi said…
🌹🌺 *ஹே கிருஷ்ணா* ..... *உம்மை போன்ற பரம தயாளன் ஒருவர் உண்டோ* !!.….... *என்ற ஜகந்நாத பக்தன்* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹‘தாஸியா’ ஒரு அப்பாவி அவருக்கு ஜகந்நாதனை பற்றி எல்லாம் அவ்வளவாக தெரியாது, ஆனால் அவர் ஊரில் வந்த பாகவத உத்தமர்கள் ஜகந்நாதன் சரித்திரம் சொல்லவதை தூரத்தில் இருந்து கேட்டு இருக்கிறார்.

🌺 ஓ இவ்வளவு பரமக்ருபாகரனா இந்த ஜகந்நாதன் என்று மனதிற்குள் நினைத்துகொண்டு அவனை ரசிக்க ஆரம்பித்தார். தினமும் ஹரி பஜனை செய்து வாழ்வை பயனுள்ளதாக மாற்றி கொள் என வந்த பாகவதர் உபதேசம் செய்தனர்.

🌺இவரும் தினமும் ஜகந்நாதா! ஜகந்நாதா! என சொல்லி கொண்டு வாழ்வை நகர்த்தி வந்தார்.

🌺இப்படி இருக்க இவருக்கு ஆர்வம் மேலிட்டது சரி என்று இவர் ஊரில் இருந்து கிளம்பி நடக்க ஆரம்பித்தார் நடந்தார் நடந்தார் நடந்து கொண்டே இருந்தார், ஆனால் சேத்திரம் வந்த பாடில்லை இருப்பினும் ஒரு வழியாக வந்து சேர்ந்தார்.

🌺சரி நம் ஜகந்வாதனுக்கு ஏதாவது கொடுக்கலாமே என்று தன் கையில் வைத்து இருந்த சிறிய தொகையை வைத்து ஒரு தேங்காய் வாங்கி சமர்ப்பிக்க நினைத்தார் அதை ஒரு துண்டில் வைத்து முடிந்து கொண்டு சென்றார்.

🌺 போகும் வழியில் வாயில் காப்பாளன் இவன் என்ன சுற்றி கொண்டு போகிறான் என வாசலில் நிறுத்தி நீயெல்லாம் கோவிலுக்கு வர தகுதி இல்லாதவன் என நிறுத்தினான்.

🌺 இவரும் வாசலில் நின்ற ‘பட்டரிடமெல்லாம்’ இந்த தேங்காயை ஜகந்தாதனிடம் சேர்த்து விடுங்கள் என கூற அவர்களோ பெரிய அதிய தேங்காய் போ போ என விரட்டி அடித்தனர்.

🌺 மனம் நொந்து இவர் கருட ஸ்தம்பம் வந்து ஹே ஜகந்நாதா! நீ கருணை மிக்கவன் அல்லவா எம்மை போன்ற அனாதைகளின் தாயல்லவா நான் ஆசையோடு உமக்காக வாங்கி வந்த இந்த தேங்காயை ஏற்று கொள்ள இங்கு யாருக்கும் மனது இல்லை

🌺அன்று குசேலர் கொண்டு வந்த அவுலை ஆசையுடன் ஏற்று கொண்ட பரம க்ருபாநிதி நீ அல்லவா! ஜகந்நாதா! இந்த அபலை வாங்கி வந்த தேங்காயை திருப்பி எடுத்து செல்ல போவது இல்லை

🌺இதோ உமக்கு சேர வேண்டியது நீயே எடுத்து கொள் என்று அவர் தேங்காயை நீட்ட ஜகந்நாதன் வந்து உடனே அதை வாங்கி கொண்டான்.

🌺ஹே கிருஷ்ணா உம்மை போன்ற பரம தயாளன் ஒருவர் உண்டோ!!🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 ' *பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார ஸேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன் நிறைவாக வாழலாம் என்பதை - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹'சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே ஸ்ரீகண்ணனும் இருப்பான். ஏனெனில், அந்தச் சத்தியம் என்பதே சாட்ஷாத் அவன்தானே!' என்று போற்றுகின்றனர் வைணவப் பெருமக்கள்.

🌺பகவான் இருக்குமிடத்தில் சத்தியம் நிறைந்திருக்கும். பஞ்ச பாண்டவர்களிடம் இருந்த சத்தியமும் தர்மமும்தான் அவர்களைக் காத்தன. அதாவது, பகவான் பாண்டவர்களுடன் இருந்ததால்தான் அவர்கள் வென்றனர்.

🌺''ஒரேயொரு பாணத்தில் பாண்டவ வம்சத்தில் உள்ள அனைவரையும் அழித்துவிட முடியும். ஆனால், அவர்களுக்கு ரட்சகனாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரே... அவர் மட்டும் இல்லையென்றால், விரல் சொடுக்கும் நேரத்துக்குள் அழித்துவிடலாம்'' என பீஷ்மரும் துரோணரும் சொன்னார்கள்.

🌺ஆச்சார்யர்கள் சொன்னதை விடுங்கள்... ஸ்ரீபரமேஸ்வரனே சொல்கிறார்... ''கண்ணபிரான் அவர்களுடன் இருக்கும் வரைக்கும், பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்று!

🌺பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார ஸேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன் நிறைவாக வாழலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

🌺'சரக சம்ஹிதை’யின் ஒளஷத சாஸ்திரம், அற்புதமாக இதை விவரிக்கிறது. 'எப்படி வாசுதேவனுக்குத் தோல்வி என்பதே கிடையாதோ, இந்தச் சமுத்திரம் எப்படி வற்றாமல் இருக்கிறதோ, என் தாயாரின் திருமணத்தை எப்படி நான் பார்த்தது கிடையாதோ... இந்த சத் வாக்கியங்கள் அனைத்தும் உண்மையானதைப் போல, இந்த மருந்தும் வேலை செய்து குணமாக்கும்’ என்கிற மந்திரத்தைச் சொல்லியபடி, மருந்து தயார் செய்வார்களாம்.

🌺இத்தனை பெருமைகளைக் கொண்டவன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. இதனால்தான், அபராஜிதன் எனும் திருநாமம் அமையப் பெற்றான். அபராஜிதன் என்றால், தோல்வியே இல்லாதவன் என்று அர்த்தம்!🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 *ஸ்ரீ கிருஷ்ணனை புரிந்தவர்கள் மகான் ஆகிறார்கள்* .
*புரியாதவர்கள்* , *மனிதனாக இந்த பூமியில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்* .….... - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹குரு ஸ்ரீ ஆதிசங்கரரிடம் ஒரு மாணவன், ஒரு கேள்வியை கேட்டான்! ‘குருவே! “நல்லதை படைத்த இறைவன் தானே, கெட்டதையும் படைத்துள்ளார்! நல்லதை, நாம் மனம் அப்படியே ஏற்கின்றது அல்லவா?

🌺நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் நம் மனது, எதற்காக, கெட்டதை ஏற்றுக் கொள்ளக் மறுக்கின்றது’? குரு ஸ்ரீ ஆதிசங்கரர், சிறிய புன்னகையோடு, ‘அது அவரவர் இஷ்டம்’ என்று சொல்லிவிட்டார்.

🌺சிறிது நேரம் கழிந்தது, இரவு நேர சாப்பாடு, சாப்பிடும் நேரம் வந்தது. குரு ஸ்ரீ ஆதிசங்கரர் தன்னுடைய சிஷ்யனுக்கு, உணவாக ஒரு டம்ளரில் பாலையும், ஒரு தட்டில் சாணத்தையும் கொடுத்தார்.

🌺இதைப் பார்த்த மாணவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான்! குழம்பிய மாணவனின் மனதிற்கு குரு ஸ்ரீ ஆதிசங்கரர் பின்வருமாறு விளக்கம் அளித்தார்.

🌺‘பசுவிடமிருந்து தான் பால் வருகின்றது. சாணமும், அதே பசுவிடமிருந்து தான் வருகின்றது. பாலை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் நாம், எதற்காக சாணத்தை மட்டும் ஏற்க மறுக்கிறோம்?’

🌺பால் போன்று நன்மையைத் தரும் பொருட்களை நாம் நேரடியாக மகிழ்ச்சி என்று சொல்லி அனுபவிக்கின்றோம்.

🌺சாணத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதை உரமாக்கி, மண்ணில் புதைத்து, அது தரும் நன்மையின் மூலம் பலன் அடைகின்றோம்.

🌺இதே போல் தான் வாழ்க்கையில் வரும் கெட்டதை மண்ணில் புதைத்து, அதிலிருந்து கிடைக்கும் நன்மையை, அனுபவங்களை நம்முடைய வாழ்க்கையின், உரமாக்கி முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றவாறு பதிலைக் கூறினார்.

🌺ஸ்ரீ கிருஷ்ணன் நமக்காக படைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும், பல மர்மங்கள் அடங்கி தான் இருக்கின்றது.

🌺ஸ்ரீ கிருஷ்ணனை புரிந்தவர்கள் மகான் ஆகிறார்கள்.
புரியாதவர்கள், மனிதனாக இந்த பூமியில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்

🌺இதுதானே வாழ்க்கை! ஒரு மனிதன் மகானாக மாறுவதற்கும், மீண்டும் மறுபிறவி எடுப்பதற்கும், அவரவர் வாழ்கின்ற வாழ்க்கையை, எந்த கண்ணோட்டத்தில் பார்த்து வாழ்கின்றார்கள், என்பதை பொறுத்தே அமைகின்றது.

🌺அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணனை, நினைத்து, உருகி, சிந்தித்து செயல்பட்டு, சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

Sindhu said…
What a wooooowie sir,you're really making us proud by all your words and work youre doing 👏 🙏🙏🙏
ravi said…
Good morning sir
Absolutely I agree with you. It is very rare to get better half and family members wo appreciate spouses talents. Let this Madhava group be a vent to all those who want to pour our their talents and also their sad happenings to that every one here gets their mind blocks removed. Let this be a platform to exhibit their talents.
ravi said…
Good morning 🙏

*Meaning ... Poorvangam 1 to 12*
ravi said…
1

ஓம் சு’க்லாம்ப3ரத4ரம் விஷ்ணும் ச’சி’வர்ணம் சதுர் பு4ஜம்/

ப்ரஸன்ன வத3னம் த்4யாயேத் ஸர்வ விக்4னோப சா’ந்தயே// 1💐💐💐
ravi said…
யார் தூய ஆடை அணிந்திருக்கிறாரோ,

எங்கும் வியாபித்திருக்கிறாரோ,

வெள்ளை நிலவு போன்ற நிறமுடையவரோ,

சாந்தமான முகத்துடன் நான்கு கைகள் கொண்டிருக்கிறாரோ

அவரை, தடைகள் அகற்றித் தரும்படி தியானிக்க வேண்டும்.🙏🙏🙏
ravi said…
2

யஸ்யத்3 விரத3 வக்த்ராத்3யா:ப் பாரிஷத்3யா :ப் பர *ஸ்ஸ* தம் ( கண்ணாடி ஷ )

விக்4நம் நிக்4நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமா *ஸ்* ரயே( கண்ணாடி ஷ)👍👍👍
ravi said…
விஷ்வக்ஸேனம்... என்பவர் சேனை தளபதி ... அவர் எல்லா தடைகளையும் தவிடு பொடி ஆக்குபவர் .. அவருக்கு முதலில் நமஸ்காரங்கள்
ravi said…
3

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ச’க்தே: பௌத்ரமகல்மஷம் /

பராச’ராத்மஜம் வந்தே சு’கதாதம் தபோநிதி4ம் //

நான் வியாசரை வணங்குகிறேன்.

அவர் ரிஷி வசிஷ்டரின் கொள்ளுப்பேரன்,

ரிஷி சக்தியின் பேரன்,

ரிஷி பராசரரின் மகன்,

சுகமுனிக்கு அப்பன், களங்கமற்ற தபஸ்வி.🙏🙏🙏
ravi said…
4.

அவிகாராய சு’த்3தா4ய நித்யாய பரமாத்மனே /

ஸதை3கரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே //4

விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.

அவர் பரமாத்மாவாக இருக்கிறார்.

மாறாதவர், தூயவர், காலமற்றவர்.

எப்போதும் ஒரே தன்மையிலிருந்து எல்லாவற்றையும் வெல்பவர்🙏🙏🙏
ravi said…
5

வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே /

நமோ வை ப்3ரஹ்மநித4யே வாஸிஷ்ட்டா2ய நமோ நம : //

விஷ்ணு வடிவத்திலிருக்கும் வியாசருக்கு வந்தனம்.

வியாச ரூபத்திலிருக்கும் விஷ்ணுவுக்கும் வந்தனம்.

வேதத்துள் திளைக்கும், வஷிஷ்டரின் வழிவந்த அவருக்கு மீண்டும் மீண்டும் வந்தனம்.💐💐💐
ravi said…
6 அவிகாராய சு’த்3தா4ய நித்யாய பரமாத்மனே /

ஸதை3கரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே //

விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.

அவர் பரமாத்மாவாக இருக்கிறார்.

மாறாதவர், தூயவர், காலமற்றவர்.

எப்போதும் ஒரே தன்மையிலிருந்து எல்லாவற்றையும் வெல்பவர்🙏🙏🙏
ravi said…
7 யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்மஸம்ஸார ப3ந்த4னாத்/

விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரப4விஷ்ணவே //

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப4விஷ்ணவே/💐💐💐
ravi said…
யாரை நினைப்பதால் ஸம்ஸார பந்தங்களிலிருந்து விடுதலை கிடைக்குமோ,

அந்தச் சர்வவல்லமை யுடைய, ஸ்ரீவிஷ்ணுவுக்கு நமஸ்காரம்.🙏🙏🙏
ravi said…
8

ஸ்ரீவைச’ம்பாயன உவாச ச்’ருத்வா த4ர்மானசே’ ஷேண பாவனானி ச ஸர்வச: /

யுதிஷ்டி2ர: சா’ந்தனவம் புனரேவாப்4ய பா4ஷத // 👏👏👏
ravi said…
*ஸ்ரீ வைசம்பாயனர் சொல்கிறார்*


ஒன்று விடாமல் எல்லாத் தர்மங்களையும், உள்ளம் சுத்தம் செய்யும் செயல்களையும் கேட்டு,

சந்தனுவின் புத்திரராகிய பீஷ்மரிடம் யுதிஸ்டி2ரர் மீண்டும் கேட்கிறார்.

*த4ர்மான் அசேஷேண ச்’ருத்வா-*

யுதிஷ்டிரர் எல்லாத் த4ர்மங்களையும் கர்மங்களையும் பற்றிக் கேட்டார்.

அவை இவ்வுலகிலும் மறு உலகிலும் ‘ *அப்4யுத3ய* ’ எனும் விளைவுகளையும் ‘ *நிஸ்ரேயஸ்* ’ எனும் மோக்ஷத்தையும் நல்குவதாக உள்ளன.

புருஷார்த்தங்களை அடைவதற்கு விதிக்கப்பட்ட, விலக்கப்பட்ட (விதித, நிஷேத) கர்மாக்களை ஒன்று விடாமல் கேட்கிறார்.🙏🙏🙏
ravi said…
*பாவனானி ச சர்வச’: ச்’ருத்வா-*

பல வழிகளில் மனச் சுத்தம் தரும் பிராயச்சித்த கர்மாக்களைப் பற்றியும் கேட்கிறார்.

விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுவிப் பதற்குச் சடங்குகள் பல உள்ளன.

பாவப் பயன்கள் விளையாமல் நசிக்கவும் செய்வதுண்டு.

வேதங்களில் இந்தத் தர்மங்கள் கூறப்பட்டுள்ளன.

வேதங்களுக்கு உட்பட்டனவாக இருப்பதால் இவை வைதிகக் கர்மா எனப்படுகின்றன.

எல்லாவற்றையும் கேட்டபிறகும் யுதிஸ்டிரருக்குப் போதவில்லை.

புருஷார்த்தங்களை முழுவதுமாக அடைய உதவும் சாதனங்களைக் கேட்கிறார்.

சுலப முறையில் (அல்ப்ப ப்ரயாசை), செய்வதற்கு எளிமையான (சுக சம்பாத்ய),

அதே சமயம் அதிகபட்ச நற்பலனைத் (அனல்ப ப2லா-பூ4மப3லா) தரும் மார்க்கங்களைச் சொல்லுமாறும் வினவுகிறார்.

சந்தனுவின் புத்திரரான பீஷ்மரை யுதிஸ்திரர் வினவுகிறார்.🙏🙏🙏
ravi said…
*யுதிஷ்டி2ர உவாச*

8.

கிமேகம் தை3வதம் லோகே கிம் வா ‘ ப்யேகம் பராயணம் /

ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்னுயுர் மானவா: சு’ப4ம்//

யுதிஸ்டிரர் சொல்கிறார்:

எல்லாச் சாஸ்திரங்களிலும் மொழியிலும் இறைவன் யார்?

எது ஒருவரது முடிவான குறிக்கோள்?

யாரை அறிந்து கொண்டு வழிபடுவதன் மூலம் ஒருவர் தெய்வாம்சத்தை அடைவார்?
ravi said…
10

கோ த4ர்ம: ஸர்வ த4ர்மானாம் ப4வத: பரமோ மத: /

கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்மஸம்ஸார ப3ந்த4னாத் //🙏🙏🙏
ravi said…
நீங்கள் எந்தத் தர்மத்தை உயர்ந்த தர்மமாகக் கூறுகிறீர்கள்?

பிறந்து, பிறந்து சாகும் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட விரும்பும் ஜீவன் எதை ஜபிக்க வேண்டும்?

*சர்வ த4ர்மானாம்-*

நீங்கள் மொழிந்த சகல தர்மங்களில், உங்களைப் பொறுத்தவரை, பரம தர்மம்- மிக உயர்ந்த சாதனம் எது?

முடிவாக அடையவேண்டிய சாத்தியத்தை அடைவதற்கான முடிவான சாதனம் எது?

*கிம் ஜபன்* :

எந்த மந்திரத்தினை ஜபிப்பதால், ‘ஜந்து’ அறியாமையில் பிறந்த ஜீவனை, ‘ *ஜன்ம ஸம்ஸார ப3ந்த4னாத் முச்யதே’*

-வேறொன்றாக ஆகத்துடிக்கும் ‘ *ஸம்ஸார* ’ பந்தங்களிலிருந்து விடுபடவைக்க முடியும்?🙏🙏🙏
ravi said…
11

*ஸ்ரீ பீஷ்ம உவாச*

ஜகத் ப்ரபு4ம் தே3வதே3வம் அனந்தம் புருஷோத்தமம் /

ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத் தித://
ravi said…
*ஸ்ரீ பீஷ்மர் பதிலளிக்கிறார்:*

அகிலாண்டமாகிய ஜகத்திற்கு இறைவனும்,

எல்லாத் தேவதைகளுக்குத் தலைவனும், எல்லையிலாதவரும்,

புருஷ உத்தமனும் ஆகியவரது ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி வாழ்த்துபவர் முழுவதுமாய் அர்ப்பணித்த வராகிறார் (சகல துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறார்).🙏🙏🙏
ravi said…
11

தமேவ சார்ச்சயந் நித்யம் ப4க்த்யா புருஷமவ்யயம் /

த்4யாயன் ஸ்துவந் நமஸ்யம்ஸ் ச
யஜமானஸ்தமேவ ச //

தோற்றமும் மறைவுமில்லாத அந்த *ஈசனைப்* பணிந்து, தியானித்து, போற்றிப் புகழ்ந்து பக்தி செய்பவர் துக்கங்களைக் கடக்கிறார். (இது 4 வது கேள்விக்கான பதில்).
ravi said…
12

அனாதி3நித4னம் விஷ்ணும் ஸர்வலோக மஹேச்’வரம்/

லோகாத்4யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வது3க்கா4திகோ3 ப4வேத் /
ravi said…
*Meaning*

ஆதியும் அந்தமும் இல்லாத விஷ்ணுவை,

அகில லோகங்களுக்கும் முதல்வனை,

பிரபஞ்சம் முழுவதையும் அறிபவரைப்

போற்றுவதால் ஒருவர் கவலையிலிருந்து விடுபடுகிறார்.💐💐💐
ravi said…
13

ப்3ரஹ்மண்யம் ஸர்வத4ர்மஜ்ஞாம் லோகானாம் கீர்த்திவர்த4னம்/

லோகநாதம் மஹத்3பூ4தம்
ஸர்வபூ4த ப4வோத்3ப4வம் //💐💐💐
ravi said…
*Meaning*

அனைத்துத் தர்மங்களையும் அறிந்தவர்,

பிரம்மனுக்கு அருள்பவர்,

எல்லா உயிர்களின் புகழை உயர்த்துபவர்,

அகில லோகங்களுக்கும் தலைவர்,

எல்லா உயிர்களின் இருப்பிற்கு முதலாகவும் இருப்பவரை எப்பொழுதும் போற்று.🙏🙏🙏
ravi said…
14

ஏஷ மே ஸர்வத4ர்மாணாம் த4ர்மோ’தி4கதமோ மத: /

யத்3ப4க்த்யா புண்ட3ரீகாக்ஷம் ஸ்தவைரர்ச்சேந் நர: ஸதா3 // 💐💐💐
ravi said…
*Meaning*

எல்லாத் தர்மங்களிலும் இந்தத் தர்மமே உயர்வானது என்று நான் கருதுகிறேன்.

புண்டரிகாட்சனைப் போற்றிப் புகழ்ந்து பிரார்த்திப்பதே அந்த உயர்ந்த தர்மமாகும்.

பீஷ்மரைப் பொறுத்தவரை ‘ *எது உயர்ந்த தர்மம்* ’ என்று யுதிஸ்த்திரர் கேட்கிறார்.

அதற்குப் பீஷ்மர் இவ்வரிகள் மூலம் பதிலளிக்கிறார்.💐💐💐
ravi said…
15

பரமம் யோ மஹத் தேஜ : பரமம் யோ மஹத் தப : /

பரமம் யோ மஹத் ப்3ரஹ்ம பரமம் ய: பராயணம் // 14🙏
ravi said…
*Meaning*

அவர் பரம மகா ஜோதி;

பரம மகா அரசர்,

பரம வரம்பிலா பிரம்மம்,

அவரே முடிவான இலக்கு.

(இது இரண்டாம் கேள்விக்கான பதில்).

‘கவனமாகக் கேட்பாயாக,

விஷ்ணுவின் ஆயிரம் சொற்களை நான் எடுத்து இயம்பப் போகிறேன்’ என்று யுதிஸ்டி2ரருக்குப் பீஷ்மர் புகல்கிறார். எது ‘ *ஏகம் பராயணம்’*

முடிவான இலக்கு? என்று யுதிஸ்டி2ரர் கேட்கிறார்.

இது இரண்டாம் கேள்வி,

இதற்கான பதில் இங்கே தரப்படுகிறது.💐💐💐
ravi said…
15

பவித்ராணாம் பவித்ரம் யோ மங்க3லானாம் ச மங்க3லம் /

தை3வதம் தே3வதானாம் ச பூ4தானாம்யோ’வ்யய: பிதா//💐💐💐
ravi said…
அவர் தூய்மையிலும் தூயவர்,

மங்கலங்களுக் கெல்லாம் மங்கலமானவர்,

எல்லாத் தேவதைகளுக்கும் தலைவர்,

எல்லா உயிர்களுக்கும் அழியாத தந்தை

(முதல் கேள்விக்கான பதில்).🙏🙏🙏
ravi said…
16

யத: ஸர்வாணி பூ4தானி ப4வந்த்யாதி3 யுகா3க3மே /

யஸ்மிம்ச்’ச ப்ரலயம் யாந்தி புனரேவ யுக3க்ஷயே // 16💐💐💐
ravi said…
*Meaning*

யுகத் தொடக்கத்தில் யாரிடமிருந்து எல்லா உயிர்களும் பிறந்தனவோ,

பிரளயத்தின் போது யாரிடம் அவை சென்று அடங்குகின்றனவோ... *.. யத: சர்வாணி பூ3தானி ப4வந்தி* -

அனைத்துத் தனிமங்களும் அவரிடமிருந்துதான் தோன்றின.

*_ஆதி3யுகா3க3மே_* - படைப்பின் துவக்கத்தில்.

யுகம் என்பது கல்பத்தைக் குறிக்கிறது.

கல்பம் என்றால் ஒரு சுழற்சி.
*யஸ்மின் ச பிரலயம் யாந்தி -*

அவரிடம்தான் அவை சென்று ஒடுங்குகின்றன. *புன: ஏவ யுக3 க்ஷயே* -

இவ் யுகச் சுழற்சி மீண்டும் முடியும்போது, மறுபடியும் அவரிடமிருந்துதான் அவை உதிக்கின்றன.

💐💐💐
ravi said…
17

தஸ்ய லோகப்ரதா4னஸ்ய ஜக3ந்நாதஸ்ய பூ4பதே /
விஷ்ணோர்நாமஸஹஸ்ரம் மே ச்’ருனு பாபப4யாபஹம் //💐💐💐
ravi said…
*Meaning*

ஓ.. அரசே!
விஷ்ணுவின் ஆயிரம் திரு நாமங்களைக் கேளும்,

பிரபஞ்ச முதல்வன், உலகங்களின் தலைவன்.

அவர் திருநாமங்கள், எல்லாப் பயங்களையும் பாவங்களையும் நீக்கும்.💐💐💐
ravi said…
18

யானி நாமானி கௌ3ணானி விக்யாதானி மஹாத்மன: /

ருஷிபி4: பரிகீ3தானி தானி வக்ஷ்யாமி பூ4தயே // 💐💐💐
ravi said…
*Meaning*

ரிஷிகள் நன்றாய் உணர்ந்தும், சிறப்பாய்ப் பாடியும் உள்ள மஹாத்மாவாகிய ஈசனின் நற்பண்புகளை நான் வரிசைப்படுத்திச் சொல்கிறேன்.

வளம் அடைய கேட்பாயாக.🙏🙏
ravi said…
*யானி நாமானி கௌ3ணானி -*

ஏதாவதொரு குணத்தில் சம்பந்தப்பட்ட பெயர்கள்.

*மஹாத்மன* :-

பரமேஸ்வரரின் மகிமைகளைச் சாற்றுகின்றன.
ravi said…
*விக்யாதானி* -

அவை புராண, ஸ்ருதி, ஸ்மிருதிகளில் அறியப்படுபவை,

பல தலைமுறைகளாகக் கேட்கப்பட்டு வருபவை.

*பரிகீ3தானி* -

வேத மந்திரங்களால் அவை பேசப்பட்டு, ஓதப்பட்டு வருகின்றன.

*ருஷிபி* :-

மந்திரங்களைக் ‘கண்ட’ ரிஷிகள். பரமேச்வரரின் மகிமைகள் வேதங்களிலும் புராணங்களிலும் ரிஷிகளால் பேசப்படுகின்றன.

இந்த ஸ்லோகங்களில் பீஷ்மர் பகவானை *மஹாத்மா* என்று குறிப்பிடுகிறார்.

மிகப்பெரிய எல்லையிலா ஆத்மா என்று அர்த்தம்

( *மஹான் ச அசெள ஆத்மா ச இதி மஹாத்மா)* .🙏🙏🙏
ravi said…
19

ருஷிர் நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேத3வ்யாஸோ மஹாமுனி :/

ச்சந்தோ3னுஷ்டுப் ததா2 தே3வோ ப4க3வான் தே3வகீஸுத : //👍👍👍
ravi said…
*Meaning*

இந்த ஆயிரம் நாமங்களுக்கும் வேத-வியாசரே ரிஷி,

இதன் சந்தம் *அனுஷ்டுப்* .

தேவகியின் மைந்தன்தான் *அதிதேவதை* .👍👍👍
ravi said…
20

அம்ருதாம் சூ’த்3ப4வோ பீ3ஜம் ச’க்திர் தே3வகீநந்த3ன :/

த்ரிஸாமா ஹ்ருத3யம் தஸ்ய சா’ந்த்யர்த்தே2 விநியுஜ்யதே //👍👍👍
ravi said…
*Meaning*

*அம்ருதாம்சூ’த்3ப4வ* என்பது விதை;

*தேவகி நந்த3ன* என்பது சக்தி;

*த்ரிசாமா* என்பது இதயம்;

ஜபம் மன அமைதிக்காகச் செய்யப்படுகிறது.

விஷ்ணு சஹஸ்ரநாமம் மந்திரங்களாகவே கருதப்படுகின்றது.

இது கனி தரும் மரம் போலுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மரத்தின் முழு சக்தியும் அதன் விதையில் (பீஜம்) புலப்படாமல், நுட்பமாயுள்ளது.

சஹஸ்ரநாமங்களை ‘ *அம்ருதாம்சூத்3ப4வ* ’ என்பதன் அர்த்தம் ஈசனின் பெயர்கள் யாவும் கனிதரும் மரங்களின் விதைகளைப் போன்றவை.

மரத்தின் சகல சக்திகளும் அவ்விதையில் பொதிந்திருக்கின்றன.

விதையில் எதிர்கால மரம் இருக்கிறது.

மறைந்திருக்கும் அந்தச் சக்தி தேவகி நந்தனன்.

அது ஈசனின் இன்னொரு பெயர், *த்ரிசாமா* என்பதும் பகவானின் பெயரே.

அது ஹ்ருதயம் (இதயம்) போல் பாவிக்கப்படுகிறது.

இதுவே உட்கருத்தாகும்.

*வினியோகம்* -என்றால் எந்தத் தேவைக்காக சஹஸ்ர நாமம் வழங்கப்படுகிறது?

அந்தத் தேவை ஷாந்தியாக இருக்கலாம்.

ஷாந்தி இரண்டுவகை.

ஆபேஷிகம், ஆத்யந்திகம், சார்புடையது, சார்பற்றது.

பேசப்படும் தேவதை மஹாவிஷ்ணு.👍👍👍
ravi said…
22

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரப4விஷ்ணும் மஹேச்’வரம் /

அநேகரூப தைத்யாந்தம் நமாமி​புருஷோத்தமம்🙏🙏🙏
ravi said…
*Meaning*

எங்கும் நிறைந்து வியாபித்திருக்கும் புருஹோத்தமரை நான் வணங்குகிறேன்.

என்றும் வெற்றியுடன், எப்போதும் வலிமையுடன், எல்லார்க்கும் தலைவனாய், அசுரர்களை அதிட்டிக்கும்,

பல வடிவங்களாக வெளிப்படும் அவரை வணங்குகிறேன்.

மேலே சொல்லப்பட்ட வரிகள் ‘ *லகுநியாஸ* ’ வகை.

நியாஸத்தின் மந்திரங்களாகப் பகவானின் பெயரே அமைந்துவிடுகிறது.🙏🙏🙏
ravi said…
Good morning .

*நியாஸ* :
ravi said…
ஓம் அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் தி3வ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய

ஸ்ரீவேத3வ்யாஸோ ப4க3வான் ருஷி :/

அனுஷ்டுப் ச்சந்த3:/

ஸ்ரீமஹா விஷ்ணு: பரமாத்மா ஸ்ரீ மந்நாராயணோ தே3வதா/

அம்ருதாம் சூ’த்3ப4வோ பா4னுரிதி பீ3ஜம் /

தே3வகீ நந்த3ன: ஸ்ரஷ்டேதி ச’க்தி:/

உத்3ப4வ: ஷோப4ணோ தே3வ இதி பரமோ மந்த்ர :/

ச’ங்கப்4ருந் நந்த3கீ சக்ரீதி கீலகம்/

சா’ர்ங்க3த4ன்வா க3தா3த4ர இத்யஸ்த்ரம்/

ரதாங்க3பாணி- ரஷோப்4ய இதி நேத்ரம்/

த்ரிஸாமா ஸாமக4: ஸாமேதி கவசம்/

ஆனந்த3ம் பரப்3ரஹ்மேதி யோனி: /

ருது: ஸுத3ர்ச ன’: கால இதி தி3க்3ப3ந்த: /

ஸ்ரீ விச்’வருப இதி த்3யானம்/

ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரீத்யர்த்தே ஸஹஸ்ர நாம ஜபே விநியோக3://🙏🙏🙏
ravi said…
*Meaning* 🪷

இது நீண்ட நியாஸம்.

ஸ்ரீ விஷ்ணுவின் சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் மஹாமந்திரமாக விளங்குவதற்கு ரிஷியாக இருப்பவர், மந்திரங்களைக் கண்ட வேத வியாஸர் ஆவர்.

*சந்தஸ்* எனும் ‘பா’வடிவம் *அனுஷ்டுப்* ஆகும்.

இதில் நான்கு பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 8 எழுத்துகள் இருக்கும்.

பரமாத்மா வாக ஸ்ரீ மஹா விஷ்ணுவும் தேவதையாக ஸ்ரீமந்நாராயணனும் இருக்கின்றனர்.

இவர்களே இங்கு எழுந்தருளச் செய்யப்படுகின்றனர்.
----1👌👌
ravi said…
*அம்ருதாம்சூத்3ப4வ: பா4னு:* எனும் உத்க்ருஷ்ட மந்திரமாக விளங்குவது விஷ்ணு சஹஸ்ரநாமங்கள்,

இவை விதைகள்.

*தேவகீநந்த3ன* : *ஸ்ரஷ்தா* தான் சக்தி,

*உத்3ப4வ க்ஷோபணோ தே3வ:* தான் மகாமந்திரம்.

*சங்க3ப்ரன்- நந்த3கீ சக்ரீ, கீலகமாகும்.*

இதுதான் சக்தி வெடித்து வெளிப்படுத்தாமல் பூட்டி வைப்பது.

*சார்ங்க3த4ன்வா க3தா3த4ர:* ஆகியவை அஸ்திரங்கள்.

இவை எதிர் விசைகளிலிருந்து உபாசகரைக் காப்பவை.👍👍
ravi said…
உபாசகர் இந்த மந்திரங்களை உச்சரிப்பவர்.

*ரதாங்க3பாணி: அக்ஷோப்4ய:*

என்பவை கண்கள்.

உபாசகர் இந்தக் கண்களின் உதவியால் மந்திரங்களின் பொருளைப் பார்க்கிறார்.

*திரிஸாமா சாமக3: சாம என்பது கவசம்.*

*ஆனந்த3ம் பரப்பி3ரம்மம்* என்பது யோனி.

இதன் வழியாகத்தான் வெளிப்பாடுகள் நிகழ்கின்றன.

மந்திரங்களின் விளைவுகள் வெளிப்படும் வழிகள். ருது:

*சுத3ர்சன* : *கால என்பது திக்பந்தம்* .

இது பாதுகாப்பு முடிச்சு.

பகவானின் விஸ்வரூபத்தின் பேரில் தியானம் மேற்கொள்ளப்படுகிறது.

*சஹஸ்ரநாம ஜெபத்தில் ஈடுபடுவது ஸ்ரீ மஹா விஷ்ணுவை மகிழ்விப்பதான செயலாகும்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sethu said…
Again…. You are grounded sir. This is what everybody likes you. I wish my father was here sir. He loves people like you.
ravi said…
https://chat.whatsapp.com/CVC5I4mUuXn4fCe9btAOMy

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடு பற்றிய பதிவுகள் :*

நாம் எந்த காரியம் தொடங்கும் முன்பு விநாயகரை வழிபடுவது வழக்கம். கணபதியை கையெடுத்து கும்பிட்டால் காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. பிள்ளையார் சுழி போட்டுத்தான் செயல்களைத் தொடங்குவது வழக்கம்.

முழு முதற்கடவுளான விநாயகருக்கு ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர். துதிக்கை - படைத்தல், மோதகம் ஏந்திய திருக்கரம் - காத்தல், அங்குச கரம் - அழித்தல், பாசம் உள்ள கை - மறைத்தல், தந்தம் உள்ள கை அருளல்... இப்படி, அவரது ஐந்து கரங்களும் ஐந்தொழில்களைக் குறிப்பது மட்டுமின்றி, ஐங்கரங்களும் 'சிவாய நம' என ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்தும்.

விநாயகர் சதுர்த்தி கணபதியை வழிபட நல்ல நேரம் ஆகஸ்ட் 31ஆம் தேதி புதன்கிழமை காலை 11.05 மணி முதல் பிற்பகல் 01.38 மணி வரை உள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாளிலேயே வீட்டு பூஜை அறை மற்றும் வீட்டினை தூய்மை படுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜை அறையில் முதலில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.

ஒரு சிறிய கலசத்தில் தூய நீரை நிரப்பி வைத்து, அதில் மஞ்சள் மற்றும் குங்கும பொட்டு அணிந்து குல தெய்வமாக வழிபடவும். இந்த நீரை ஒவ்வொரு நாளும் தீபம் ஏற்றும் போது அதில் உள்ள தண்ணீரை செடிக்கு ஊற்றி புதிதாக மாற்றலாம். தீப, தூபத்தைக் காட்டி நாம் பிள்ளையார் வழிபாட்டை தொடங்கலாம்.

*எப்படி பூஜை செய்வது :*

ஒரு பலகையை எடுத்து அதை சுத்தம் செய்து, கோலமிட்டு, அதன் மீது புதிதாக வாங்கிய பிள்ளையார் சிலையை வைக்கவும். அவருக்கு மஞ்சள் அல்லது சந்தனத்தால் பொட்டு வைத்து, அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும்.

எருக்கம் பூ மாலை, மலர் மாலையை சூட்டவும், அருகில் அருகம் புல் பரப்பி வைக்கலாம். பிள்ளையார் சிலைக்கு முன் ஒரு பித்தளை தட்டு வைத்து, அதில் சிறிது அரிசியை போட்டு அதன் மீது ஒரு தூய வெற்றிலை வைக்கவும். பின்னர் மஞ்சள் தூளில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிள்ளையார் பிடித்து, வெற்றிலை மீது வைக்க வேண்டும்.

பொதுவாக பலன்கள் அல்லது வைவேத்திய பொருட்கள் ஒற்றைப்படையில் வைப்பது நல்லது. 5, 7, 11 என வைக்கலாம். பிள்ளையாருக்கு அப்பம், மோதகம், கொழுக்கட்டை, முறுக்கு, பழங்கள் ஆகியவை மிகவும் பிடிக்கும். என்பதால், விநாயகர் சிலைக்கு அருகில் வைத்து பூஜை செய்யலாம்.

விநாயகர் சதுர்த்தியில், நாயகனான கணபதியை வழிபட்டு பூஜையை தொடங்கலாம். தேங்காய் உடைத்து கற்பூர தீப ஆதாரனை சமர்ப்பித்து பூஜை செய்யலாம். 'ஓம் கம் கணபதியே நமஹ' என்ற மந்திரத்தை உச்சரித்து கொண்டிருங்கள். பூஜை முடித்த பின்னர் பிரசாதங்களை அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து நாமும் சாப்பிடலாம்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

சைவ க்ஷேத்ரங்கள் அளவுக்குக் காவேரிக் கரையில் வைஷ்ணவ க்ஷேத்ரங்கள் இல்லாவிட்டாலும், சைவத்துக்கும் இல்லாத ஒரு சிகரமான பெருமையை வைஷ்ணவ ஸம்பந்தப்படுத்தியே பிள்ளையார் காவேரிக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். என்னவென்றால், சைவர்கள் தங்கள் க்ஷேத்ரங்களுக்குள் முதலிடம் கொடுத்துக் 'கோயில்' என்றே குறிப்பிடுவது சிதம்பரம். அது காவேரிக்கரையில் இல்லை. வைஷ்ணவர்கள் இதே மாதிரி 'கோயில்' என்று முதல் ஸ்தானம் தந்து சொல்கிறது ஸ்ரீரங்கம்.
ravi said…
அதுதான் காவேரிக்கே ஜீவ மத்யமான ஸ்தானத்தில் இருக்கிறது. 'உபய காவேரி' என்பதாக இருப்பக்கமும் காவேரி நதி சூழ, 'காவேரி ரங்கன்' என்றே கியாதி பெற்றிருக்கிற பெருமாள் அங்கே பள்ளி கொண்டிருக்கிறார்.
அந்த ரங்கராஜா எப்படி அங்கே வந்தார்? விக்நேச்வரர் பண்ணிய லீலையால்தான்!
ravi said…
இக்ஷ்வாகு வம்சத்தினர் வழிவழியாகப் பூஜித்து வந்த ஸ்ரீ ரங்கநாத விக்ரஹத்தை ராமசந்திர மூர்த்தி விபீஷணருக்குக் கொடுத்துவிட்டார். அது அவருடைய நன்றி பாராட்டும் பெரிய மனஸுக்கும் தியாகத்துக்கும் ஒரு பெரிய 'ப்ரூஃப்'. அயோத்தியில் நடந்த ஸ்ரீராம பட்டாபிஷேகத்தில் எல்லா வானரர்களும் ராட்சஸர்களும் கலந்து கொண்டுவிட்டு அப்புறம் தங்கள் தங்கள் ஊருக்குப் புறப்பட்டார்கள். அப்போது ராமர் அவர்கள் தனக்குச் செய்த ஸஹாயத்தை நன்றியோடு நினைத்து, அவர்களுக்குப் பொன்னையும் பொருளையும் வாரிவிட்டு வெகுமதிகள் கொடுத்தார். இவருக்குக் கைங்கர்யம் செய்ய அவர்களுக்குக் கொடுத்து வைத்திருந்ததே பெரிய வெகுமதி, பாக்கியம் எல்லாம். ஆனால் அவருடைய உசந்த குணம் அவர்களிடம் நன்றி பாராட்டி வெகுமதிகள் கொடுத்தார். இவரால்தான் ஸுக்ரீவனும், விபீஷணனும் ராஜாக்களாக ஆனதே. ஆனால் அவர்களுக்குத் தாம் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவே ஸ்வாமி நினைத்து, ராஜாராமரானவுடன் பெரிசாகப் பரிசுகள் தந்தார். முக்யமாக நவரத்னாபரணங்கள், பீதாம்பராதிகள் தந்தார்.
ravi said…
விபீஷணருக்கு மட்டும் அது போதாது, அதற்கு மேல் ரொம்ப உசந்த ஒன்று தரணும் என்ற எண்ணினார். ஏனென்றால் அண்ணாவைத் தியாகம் செய்துவிட்டு ராமரே ஸர்வமும் என்று அவர் காலில் வந்து விழுந்தவர் விபீஷணர். சரணாகதருக்கு உதாரணமாக அவரையே சொல்வது. விபீஷணருக்கும் ஸுக்ரிவனுக்கும் ஒரு பெரிய வித்தியாஸம் சொல்கிறதுண்டு:பெண்டாட்டியையும் கிஷ்கிந்தா ராஜ்யத்தையும் தனக்குப் பெற்றுக்கணும் என்றே ஸுக்ரீவன் ராமரிடம் வந்து விழுந்தது, விபீஷணர்தான் கார்யார்த்தமாக இல்லாமல் நிஜமான சரணாகதி செய்தது என்பார்கள். அதோடு, ராமசந்த்ரமூர்த்தி தன்னுடைய சரணாகத ரட்சணத்தை ப்ரகடனப் படுத்திக்கொண்டு ஸத்யப் பிரதிக்ஞையாகவே ஸகலருக்கும் வாக்குக் கொடுக்கும்படியான வாக்கியத்தைச் சொல்ல வைத்தவரும் விபீஷணரே. அவர் நிஜமான சரணாகதராக வந்திருந்த போதிலும் ராமரைச் சுற்றியிருந்தவர்கள் - ஹநுமார் ஒருத்தரைத் தவிர ஸுக்ரீவன், அங்கதன் முதலானவர்கள் - அவரை ஸந்தேஹித்துப் பேசினார்கள். அதனாலேயே, நல்ல பக்திமானை
ravi said…
ஸந்தேஹிக்கிறார்களே என்பதில் ராமருக்கு உண்டான உணர்ச்சி வேகத்திலே அவர் பெரிசாக ஸத்யப் பிரதிக்ஞை பண்ணிவிட்டார்:" 'நான் உன்னைச் சேர்ந்தவன்' என்று ஒருத்தன் ஒரே ஒரு தரம் சொல்லி என்னை யாசித்துவிட்டாலும் போதும், அவனுக்கு லோகத்தில் எது ஒன்றாலும் பயம், அதாவது கஷ்டம் ஏற்படாதபடி அபயம் தந்து ரட்சிப்பேன். இதுவே என் ஜீவித விரதம்" என்று ஒரு ஆவேசத்தில் சொல்லிவிட்டார்:

"ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே 1

அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் - வ்ரதம் மம 11"
ravi said…
அப்பேர்ப்பட்ட பக்திமானுக்கு ரொம்பப் பெரிசாக ஒன்றைத் தரவேண்டும் என்று ராமர் இப்போது பட்டாபிஷேகம் பண்ணிக்கொண்ட ஸமயத்தில் நினைத்தார். பரமத் தியாகியான அவராலேதான் அப்படிப் பண்ண முடியும் என்கிற மாதிரி, என்ன செய்தாரென்றால் இக்ஷ்வாகு வம்ச குலதனமாக, குலதேவதையாக, வழிவழியாகப் பூஜை பண்ணிக்கொண்டு வந்திருந்த ரங்கராஜா விக்ரத்தையே ப்ரணவாகாரமான விமானத்தோடுகூட விபீஷணருக்குக் கொடுத்துவிட்டார். கொடுத்து, லங்கைக்குத் திரும்ப அனுப்பிவிட்டார்.
ravi said…
விக்ரஹத்தோடு புறப்பட்ட விபீஷணர் அயோத்தியிலிருந்து தெற்காக ரொம்ப தூரம், அயோத்தியிலிருந்து பார்க்கிறபோது ஏறக்குறைய தேசத்தின் தெற்கோரத்தில் இருக்கிற உபய காவேரிக்கு வந்துவிட்டார்.

அதுவரை சும்மாப் பார்த்துக்கொண்டிருந்த விக்நேச்வரர்தான் சட்டென்று அப்போது, "இந்த பாரத தேசத்தை, தமிழ் தேசத்தை, ரமணீயமான இந்தக் காவேரித் தீவை விட்டுப் பெருமாள் போகவாவது?" என்று நினைத்தார். மாய விளையாட்டெல்லாம் பண்ணி, ரங்கநாதர் அந்த இடத்திலேயே அசைத்தெடுக்க முடியாதபடி ப்ரதிஷ்டை ஆகும்படிச் செய்துவிட்டார். என்ன செய்தாரென்றால்...

"விமான விக்ரஹங்களை பூமியில் எங்கேயும் வைக்கப்படாது. எங்கே கீழே வைத்தாலும் அங்கேயே அது நிலையாக ப்ரதிஷ்டை ஆகிவிடும். அதனால் நேரே லங்காபுரிக்கே அதைக் கொண்டு போய் அங்கேதான் கீழேவைக்கணும்" என்று ராமர் சொல்லியினுப்பியிருந்தார்.
ravi said…
விக்நேச்வரர் என்ன பண்ணினார் என்றால், காவேரி அலை புரட்டிக்கொண்டு போகிற அழகைப் பார்த்ததும் விபீஷணருக்கு அதிலே ஸ்நானம் பண்ணணும் என்ற ஆசை தோன்றும்படிப் பண்ணினார். தாமும் ஒரு ப்ரஹ்மசாரிப் பையனாக அங்கே போய் நின்று கொண்டார். ஸாதுப் பிள்ளை, சமர்த்துப் பிள்ளை என்று தோன்றும்படியான ரூபத்தோடு நின்று கொண்டார்.

"அப்பா, கொழந்தே!நான் ஸ்நானம் பண்ணிட்டு வரவரையிலே இதை c பூமியிலே வெச்சுடாம, கையிலேயே வெச்சுக்கறயா?" என்று விபீஷணர் கேட்டார்.

"அப்படியே பண்றேன். ஆனாலும் எனக்குக் கை கனத்துப் போனா என்ன பண்றது? மூணு தரம் ஒங்களைக் கூப்பிடறேன். அப்டியும் நிங்க வல்லேன்னா கீழே வெச்சுப்புடுவேன்" என்று விக்நேச்வரர் சொன்னார்.
ravi said…
ஆனா ஸரி" என்று விபீஷணரும் ஒப்புக் கொண்டார். விக்நேச்வரர் என்ன பண்ணினார் என்றால், விபீஷணர் பிரவாஹம் கண்ட உத்ஸாஹத்தில் காவேரிக்குள் ரொம்ப தூரம் நீச்சலடித்துப் போய்விட்ட ஸமயம் பார்த்து, சட் சட் என்ற அவர் மூன்று தரம் கூப்பிட்டார்.

அவர் அதற்குள் வரமுடியவில்லை.

"நான் சொன்னபடி கூப்டுட்டேன். நீங்க சொன்னபடி வரல்லை. கனம் தாங்காம இதோ பூமியிலே வெச்சுட்டேன்" என்ற சொல்லிக்கொண்டு உபய காவேரி மத்தியிலிருந்த திட்டில் விக்ரஹத்தை வைத்துவிட்டார்.

விக்ரஹம் அங்கேயே அப்படியே ஆழமாக ப்ரதிஷ்டை ஆகிவிட்டது.
ravi said…
கதையைப் பார்த்தால் அதுவரை நல்ல பலிஷ்ட பாலர் ஒருத்தர் கையிலே தாங்கி கொள்கிற அளவுக்கே - (சிரித்து) Portable size என்கிறார்களே, அப்படித்தான்- விக்ரஹமும் அதற்கான விமானமும் சேர்ந்தே இருந்திருக்கணும் என்று ஆகிறது. இக்ஷவாகு வம்ச ராஜாக்கள் தாங்களே பண்ணுகிற தங்களது அகத்துப் பூஜையில் வைத்துக்கொண்டிருந்தார்கள் என்றால், அப்படித்தானே (சிறிய அளவினதாக) இருந்திருக்கணும்?

இப்போது காவேரிக் கரையில் வைத்தபின்தான், பெருமாளும் க்ஷீரஸாகரமா யில்லாவிட்டாலும் மஹாநதியாக இருக்கிற இடத்தில் ஸந்தோஷப்பட்டுக்கொண்டு பெரும் ஆளாகவே நன்றாக நீள நெடுக ஆக்ருதி எடுத்துக்கொண்டிருக்கணும். அதே மாதிரி விமானமும் பெரிசான ஆலய ஸந்நிதியாக ஆகியிருக்கணும்.
ravi said…
வேக வேகமா ஸ்நானம் முடித்து ஓடிவந்த விபீஷணருக்கு ஒரே ஏமாற்றமும் கோபமுமாக வந்தது. 'கீழே வைக்கப்படாது என்று 'கன்டிஷ'னாயிற்றே, இந்த பிள்ளை வைத்து விட்டதே!என்ன ஆயிருக்குமோ?' என்று விசாரப்பட்டுக் கொண்டு விக்ரஹத்தை பூமயிலிருந்து எடுக்கப்போனார். ஆனால் அவர் எத்தனை பிரயத்னம் செய்தும் விக்ரஹம் அசைந்தே கொடுக்காமல் பூமியிலே நன்றாகப் பதிந்துவிட்டிருந்தது. விபீஷணருக்கு ப்ரஹ்மசாரிப் பிள்ளை மேல் கோபம் கோபமாக வந்தது. அவரைக் குட்டுவதற்காகக் கையை மடக்கிக்கொண்டு வந்தார். பிள்ளையார் ஒட்டமாக ஒட, "விட்டேனா பார்" என்று விபீஷணரும் துரத்தினார். மலைக் கோட்டை உச்சிக்குப் போய்விட்ட பிள்ளையார் தாமே மனஸ் இரங்கி விபீஷணருக்குப் பிடிபட்டார். பகவானாக நமக்குப் பிடிபட்டால்தான் உண்டே தவிர, நாமாக ஸொந்த பலத்தால் அவரைப் பிடித்துவிடமுடியுமா என்ன? யசோதைக்கூடப் பாடாகப் படுத்தின பாலக்ருஷ்ணமூர்த்தியை உரலில் கட்டிப் போடப் போய், எத்தனை கயிறும் போதாமல் வேர்த்து விருவிருத்துத் தினறின போது, பகவானேதான் மனஸ் இரங்கி கயிற்றைப் போதும்படியாக்கி அவள் தன்னை உரலோடு சேர்த்துக் கட்டிப் போடும்படிப் பண்ணினான் என்றுதானே பாகவதத்தில் இருக்கிறது?
ravi said…
பிள்ளையார் விபீஷணருக்குப் பிடிபட்டு அவர் தன்னுடைய சிரஸில் குட்டுவதற்கும் பரம கருணையோடு காட்டிக்கொண்டிருந்தார். எல்லாரையும் எவர் குட்டுப் போட்டுக்கொள்ள வைக்கிறாரோ, அவரே அப்போது தனக்குக் குட்டு வாங்கிக்கொண்டார்.

அந்த க்ஷணமே பிரம்மசாரி ரூபம் மாறி விக்நேச்வர மூர்த்தியாகி தர்சனமும் கொடுத்தார்.

அந்த தர்சனத்திலேயே விபீஷணருடைய ஏமாற்றம், துக்கம், கோபம் எல்லாம் பாதிவாசி சமனமாகிவிட்டது. பாக்கிப் பாதியும் சமனமாகும்படியாக விக்நேச்வரர், அவரிடம், "பெருமாளை நான் லங்கைக்குப் போக விடவில்லையே என்று வருத்தப்படாதே. இங்கே இருந்தபடியே அவர் லங்கையைப் பார்த்து அநுக்ரஹம் பண்ணும்படியாகத்தான் அவரை நான் வைத்திருக்கிறேன். தெற்குப் பார்க்கப் பெருமாளை ப்ரதிஷ்டை செய்கிற வழக்கமே இல்லாவிட்டாலும் நான் இங்கே அப்படித்தான் வைத்திருக்கிறேன்" என்றார்.
Shyamala said…
So far no one hv written poet on me in my lyfe tyme sir..who ll get t mindset 2 appreciate others.. very few in t universe.. one among them is u sir.. no words, oly tears rolling on my eyes...எந்த ஜென்மத்தில் செய்த புன்னியமோ இந்த ஜென்மாவில் தாங்கல் நன்பர்கலாக கிடைத்தது🙏🙏
Sethu said…
Sir…. Just now I read
as I was busy with my plants since this mid-morning. Really don’t know how much I owe you sir. The words you praise us with were not just words. They are the feelings you have on us. But applying each and one without fail on a page is something very much adorable sir. I wish we should meet you at least once in our life time to say a THANK YOU in person, which I hope everyone will endorse this. Thank you sir. Very emotional it was.
Velammal said…
🙏🙏🙏 solvatharku varthaikal illai. Vazhga valamudan
ravi said…
Mam என்பது வயதையோ , இருக்கும் தூரத்தையோ குறிக்காது ..

என்னை விட என்னில் காணா நல்ல குணங்கள் உள்ள எல்லா பெண்களையுமே நான் mam என்று தான் அழைப்பேன் ..

அப்படி அழைக்கும் போது எனக்குள் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும் ..

அவர்கள் சாதித்தில் நீ ஒரு கால் தூசி கூட சாதிக்க வில்லை . நிதானமாக நடந்து கொள் என்றே ...

எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட ஒரு கட்டளை இது janani mam 🙏🙏🙏
ravi said…

1. கட்டுண்ட ஆன்மாக்களுக்காக பரம புருஷரின் ஆளுமையின் பௌதீக படைப்புகளின் நோக்கம் என்ன? /What is the purpose of material creations by Supreme personality of Godhead for the conditioned souls?
*
1/1
a. நாத்திகராக மாறாமல் இருக்க /Not to become an atheist
b. பகவானிடம் திரும்ப செல்ல / To go back to Godhead

c. ஆச்சார்யார்களைப்பற்றி தெரிந்து கொள்ள / To know about acharyas
d. வேதங்களை புரிந்து கொள்ள /To understand Vedas
ravi said…
Feedback
பகீ.3.10 - படைப்பின் ஆரம்பத்தில், மனித குலங்களையும் தேவர்களையும் விஷ்ணுவிற்கான யாகங்களுடன் சேர்த்து அனுப்பிய பிரஜாபதி, "யாகங்களைச் செய்து சுகமாக இருங்கள்; ஏனெனில், மகிழ்ச்சியான வாழ்விற்கும் முக்திக்கும் தேவையான அனைத்தும் இந்த யாகங்களால் அடையப்பெறும்" என்று கூறி அவர்களை ஆசீர்வதித்தார்

BG 10: In the beginning of creation, the Lord of all creatures sent forth generations of men and demigods, along with sacrifices for Viṣṇu, and blessed them by saying, “Be thou happy by this yajña [sacrifice] because its performance will bestow upon you everything desirable for living happily and achieving liberation.”
ravi said…
2. பௌதிக உலகில் யாகங்களைச் செலுத்தி தேவர்களை ஏன் திருப்திப்படுத்த வேண்டும்? / Why should one satisfy the demigods by offering sacrifices to them in the material world?
*
1/1
a. வாழ்வதற்கான இயற்கை பொருட்களை வழங்குவதற்காக / For the supply of natural products for living.

b. ஏனென்றால் அவர்களைக்கண்டு பயம் / Because one is afraid of them
c. அது ஒரு கோவில் சடங்கு / It is a temple ritual
d. மேலே உள்ளவை எதுவும் இல்லை /None of the above
ravi said…
Feedback
பகீ.3.12 - பல்வேறு வாழ்க்கைத் தேவைகளின் அதிகாரிகளான தேவர்கள், யாகங்களால் திருப்தியடைந்து உங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் அளிக்கின்றனர். இத்தகு அன்பளிப்புகளை பதிலுக்கு அவர்களுக்குப் படைக்காமல் அனுபவிப்பவன் நிச்சயமாக திருடனேயாவான்.

BG 12: In charge of the various necessities of life, the demigods, being satisfied by the performance of yajña [sacrifice], will supply all necessities to you. But he who enjoys such gifts without offering them to the demigods in return is certainly a thief.
ravi said…
3. உண்ணும் உணவை பகவானுக்கு முதலில் வழங்காவிட்டால் ஒருவருக்கு என்ன கிடைக்கும்? / What does one get if the food they eat is not offered first to the Supreme God?
*
1/1
a. புண்ணியம் / Piousness
b. செல்வம் / Wealth
c.பாவம் /Sin

d.ஒன்றுமில்லை /Nothing
ravi said…
Many materialistic persons become attached to worshiping these demigods to get some temporary, materialistic benefits. Krishna discusses this demigod worship in Bhagavad-gita:

“Those whose minds are distorted by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures.” (Bhagavad-gita 7.20)

Less intelligent people who have lost their spiritual sense take shelter of demigods for immediate fulfillment of material desires. Generally, such people do not go to the Supreme Personality of Godhead, because they are in ignorance and passion and therefore worship various demigods. Worshipers of demigods are motivated by small desires and do not know how to reach the supreme goal.
ravi said…
Feedback
பகீ.13 - யாகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட உணவை உண்ணும் பகவானின் பக்தர்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். தங்களது சுய புலனின்பத்திற்காக உணவு தயாரிப்பவர்கள் பாவத்தையே உண்கிறார்கள்.

BG 13: The devotees of the Lord are released from all kinds of sins because they eat food which is offered first for sacrifice. Others, who prepare food for personal sense enjoyment, verily eat only sin.
ravi said…
4. ஒருவர் இந்த கலி யுகத்தில் யாகம் செய்ய எளிதான வழி எது? / What is the easiest way to performance of yajña by anybody in this age of kali?

*
1/1
a. அஸ்வமேத யக்ஞம் /Aswameda yajña
b. ராஜசூய யக்ஞம் / rajasuya yajña
c. வாஜபேய யக்ஞம் / vajapeya yajña
d. ஸங்கீர்த்தன யக்ஞம் / saṅkīrtana yajña
ravi said…
Feedback
பகீ.3.12 - பல்வேறு வாழ்க்கைத் தேவைகளின் அதிகாரிகளான தேவர்கள், யாகங்களால் திருப்தியடைந்து உங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் அளிக்கின்றனர். இத்தகு அன்பளிப்புகளை பதிலுக்கு அவர்களுக்குப் படைக்காமல் அனுபவிப்பவன் நிச்சயமாக திருடனேயாவான்.

BG 12: In charge of the various necessities of life, the demigods, being satisfied by the performance of yajña [sacrifice], will supply all necessities to you. But he who enjoys such gifts without offering them to the demigods in return is certainly a thief.
ravi said…

5. யக்ஞ புருஷன் யார்? / Who is yajña-puruṣa?
*
1/1
a. இந்திரன் தேவன் / Indra Deva
b. பிரம்மா தேவன் / Brahma Deva
c. பகவான் விஷ்ணு / Bhagavan Vishnu

d. மேலே உள்ள அனைவரும் / All the above
ravi said…
Feedback
பகீ.3.15-விதிக்கப்பட்ட கடமைகள் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை. வேதங்கள் நேரடியாக முழுமுதற் கடவுளிடமிருந்து தோன்றியவை. எனவே, எங்கும் பரவியுள்ள முழுமுதற் கடவுள், எல்லா யாகங்களிலும் நித்தியமாக வீற்றுள்ளார்.

BG15: Regulated activities are prescribed in the Vedas, and the Vedas are directly manifested from the Supreme Personality of Godhead. Consequently the all-pervading Transcendence is eternally situated in acts of sacrifice.
ravi said…
1. தெய்வ வழிபாட்டின் மூலம் நமது ஆசையை பௌதிக உலகில் எப்படி நிறைவேற்ற முடியும்?/How our desire can be fulfilled in material world by demigod worship?


Many materialistic persons become attached to worshiping these demigods to get some temporary, materialistic benefits. Krishna discusses this demigod worship in Bhagavad-gita:

“Those whose minds are distorted by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures.” (Bhagavad-gita 7.20)

Less intelligent people who have lost their spiritual sense take shelter of demigods for immediate fulfillment of material desires. Generally, such people do not go to the Supreme Personality of Godhead, because they are in ignorance and passion and therefore worship various demigods. Worshipers of demigods are motivated by small desires and do not know how to reach the supreme goal.
ravi said…
ப.கீ3.11:தெய்வ வழிபாட்டின் மூலம் நமது ஆசையை பௌதிக உலகில் எப்படி நிறைவேற்ற முடியும்? தியாகங்களால் மகிழ்ந்த தேவர்கள் உயிர்களை மகிழ்விப்பார்கள்; இவ்வாறு மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கிடையிலான ஒத்துழைப்பினால் செல்வச் செழிப்பு அனைத்திலும் ஆட்சி செய்யும்.

ப. கீ3. 12: யாகங்களில் அர்பணிக்கப்படாமல் தேவர்களுக்கு காணிக்கைகளை வழங்காமல் அதை அனுபவிப்பவன் நிச்சயமாக திருடன்தான்.

a. Demigods being pleased by sacrifices will please the living entities; thus by co-operation between men and demigods prosperity will reign over all (3.11)

b. Without yajna, one is a thief – One who enjoys the gifts without offering them to the demigods is certainly a thief (3.12)
ravi said…
2. வேதங்களில் கூறப்பட்டுள்ள யாகங்களை பின்பற்றுவதால் என்ன பலன்?/What is the benefit of following the acts of sacrifice as given in the Vedas?

The idea of sacrifice is inherent to most religions, but in Hinduism it has a special significance. Yajna or Sacrificial ritual (or ritual sacrifice) is the oldest continuing practice of Hinduism and constitutes the core of its ritual and spiritual dimensions. Its essential purpose is to make a devotional offering as a sacred duty and an obligation towards God and his creation.

In Vedic literature there are recommendations for worshiping different gods for different purposes (e.g., a diseased man is recommended to worship the sun), those who are not devotees of the Lord think that for certain purposes demigods are better than the Supreme Lord. But a pure devotee knows that the Supreme Lord Krishna is the master of all
ravi said…
Feedback
ப. கீ 3.15: வேதங்களில் கூறப்பட்டுள்ள தியாகச் செயல்களைப் பின்பற்றுவது கிருஷ்ணரின் விருப்பத்தைப் பின்பற்றுவதற்குச் சமம்.
*யாகம், தியாகம், ஒரு விரிவான சடங்கு அல்ல. ஒருவரின் கடமைகளைக் கடைப்பிடிப்பது உண்மையில் யக்ஞம். வேதங்கள் பல்வேறு வகையான உயிரினங்களுக்கு பல்வேறு வகையான கடமைகளை விதிக்கின்றன.
*யாகத்தில் (யாகம்) பங்கேற்பதன் மூலம், பொருள்சார் நோக்கத்துடன் கூட, ஒருவன் ஆழ்நிலையுடன் தொடர்பு கொள்கிறான். ஏனெனில் வேதங்கள் இறைவனிடமிருந்து நேரடியாக வெளிப்பட்டவை.
*தியாகம் தவறான அகங்காரத்தை நீக்குகிறது, சுய உரிமை உணர்வு. ஒருவன் தியாகத்தில் பங்கு கொள்ளும் அளவிற்கு உன்னதத்தை உணர முடியும். ஆன்மிக வாழ்க்கை ஒரு ஆழ்நிலை காரணத்திற்காக பலவிதமான தியாகங்களாகக் காணலாம். இது சடவாதிகள் பக்தி உணர்வு திருப்தியை அடைய யாகம் செய்வதில் இருந்து தொடங்குகிறது. தியாகத்தின் உச்சம் ஒரு தூய பக்தனின் வாழ்க்
ravi said…
B. G:3.15-Following the acts of sacrifice as given in the Vedas is equivalent to following the will of Krishna.
*Yajna, sacrifice, is more than an elaborate ritual. Adherence to one’s duties is actually yajna. The Vedas prescribe various types of duties for different classes of beings.
*By participating in sacrifice (yajna), even with materialistic objective, one comes in contact with transcendence. This is because the Vedas directly emanate from the Lord.
*Sacrifice removes false ego, the sense of self-proprietorship. One can perceive transcendence to the extent that one partakes of sacrifice. Thus spiritual life can be seen as varying degrees of sacrifice for a transcendental cause. It starts with materialists performing yajnas to achieve pious sense gratification. The culmination of sacrifice is the life of a pure devotee, pure sacrifice .
ravi said…
Mail from Mr.Krishnamurthy to Doordharshan Chennai on 'Mangaiyar Solai' Program telecast on 27-08-2022:

Sir/Madam,

Brilliant exposition by Writer Sivasankari Madam.Inspiring.Respecting women is real women emancipation by Sivasankari Madam is real GEM.She herself that example. Good Anchorage.Good Team that produced.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்

சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ
From -
புதுமைப் பெண் – பாரதியார் கவிதை
My small suggestion is to invite college students as viewers as part of programme on voluntary interest subject to your organization guidelines.

M.KRISHNAMURTHY
ravi said…
Astrolagy temple என்று அறியப்படுகின்ற ஸ்ரீ வித்யாசங்கரர் ஆலயம்.*👏🏾

கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து 100 கி.மி. தூரத்தில் அமைந்துள்ள தலம் சிருங்கேரி. அழகிய மலைகள் சுற்றிலும் அரண் செய்ய, புனித நதி துங்கபத்திரா குளுமையைத் தர, எழில்மிகு கோலத்துடன், ஆன்மீகச் சிறப்புடன் விளங்கி வருகிறது இவ்வாலயம்.

சுற்றிலும் உள்ள மலை ரிஷ்யசிருங்க பர்வதம் என்று அழைக்கப்படுகிறது. அத்வைத வேதாந்த தத்துவத்தைத் தென்னாட்டில் ஸ்தாபிக்க ஓர் மடத்தை நிறுவ விரும்பினார் ஸ்ரீ ஆதிசங்கரர். அதற்காகத் தகுந்த இடம் தேடி அவர் பாத யாத்திரை வரும்போது சிருங்கேரியில் ஓர் அற்புதக் காட்சியைக் கண்டார். கொளுத்தும் வெயிலில் நிறைமாத கர்ப்பிணியான தவளை ஒன்று பிரசவ வேதனையால் துடித்தபோது, ஒரு நல்ல பாம்பு படமெடுத்து தவளைக்கு நிழல் கொடுத்தது. ஒன்றுக்கொன்று பகையான அவை தம் பகையை மறந்து ஒன்றன்மீது ஒன்று அன்பு செலுத்தும் காட்சியைக் கண்ட அவர், அதுவே தாம் மடம் நிறுவத் தகுந்த இடம் என்று தீர்மானித்தார்.
ravi said…
*

சங்கரர் தன் 32 வருட வாழ்நாளில் சுமார் 12 வருடம் சிருங்கேரியில் தங்கி, சாரதாம்பாள் கோவிலையும், மடத்தையும் அமைத்து, அத்வைத வேதாந்தம், உபநிஷதத்தின் உண்மைப் பொருள் விளக்கம் எல்லாம் செய்தார். தமது சீடர்கள் மூலம் அவ்வுண்மைகள் எல்லா இடத்துக்கும் பரப்பினார்.

சாரதாம்பாள் கோவில் நுழைவாயில், கோபுரம், பிரதட்சிணம் செய்ய மூடிய பாதையுடன் கூடிய விஸ்தாரமான ஹால், பெரிய கல் தூண்கள், வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சாரதா தேவி வியாக்யான தர்ம சிம்மாசன ஸர்வஜன பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளாள்.

சங்கரர் மடத்தை ஸ்தாபித்தபோது சிருங்கேரி கிராமத்தை தீயசக்தி மற்றும் நோய்கள் தாக்காமல் இருக்க நான்கு திசைகளிலும் நான்கு கோயில்களை அமைத்தார். கிழக்கில் கால பைரவர், மேற்கில் ஆஞ்சநேயர், தெற்கில் துர்கை, வடக்கே காளி ஆகியோ
ravi said…
கிழக்கில் கால பைரவர், மேற்கில் ஆஞ்சநேயர், தெற்கில் துர்கை, வடக்கே காளி ஆகியோருக்குக் கோயில்கள் கட்டினார்.

சாரதாம்பாள் ஆலயத்தை அடுத்துள்ள வித்யா சங்கரர் ஆலயம் கலை, நுணுக்க வேலைப்பாடுகளுடன் கற்களால் மிக அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அளவற்ற ஆன்மீக அதிர்வலைகளை உடையது இவ்வாலயம். இங்கு செனறு தரிசித்தால் மன அமைதியையும், ஆன்மீக உணர்வுகளையும் ஒருவர் நன்கு உணர முடியும். திரும்ப ஒருமுறை சிருங்கேரி செல்ல மாட்டோமா என்ற ஆர்வத்தையும் ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறாள் சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள்.
ravi said…
சிற்பக்கலைச் சிறப்பு வாய்ந்த வித்யாசங்கரர் கோவில், மலைக்குன்றுகளும் நிலமும் நீர்வளமும் அமைதியான சூழ்நிலையை உண்டாக்கும்.

ஸ்ரீ வித்யாசங்கர கோவில் - 600 வருடம் பழமையான கலைவேலைப்பாடு கொண்ட கோவில் - ஸ்ரீசக்கர வடிவில் இருக்கிறது . உள்ளே லிங்க வடிவில் ஸ்ரீ வித்யா சங்கரர் - உள்ளே அழகிய தூண்கள் இருக்கின்றன.

வித்யா சங்கரர் கோயிலின் அமைப்பு திராவிட ஹொய்சள கலைப்பாணிகளின் கலவையாக உள்ளது. இதன் நீள்வட்ட வடிவமும், சிகர விமானத்தின் அமைப்பும் தனித்துவம் மிக்கவை. சுற்றுச் சுவர்களில் சிவன், விஷ்ணு, தேவி மற்றும் பல தெய்வ மூர்த்தங்களின் அழகிய திருவுருவங்கள் உள்ளன.

கோயிலுக்குள் மகாமண்டபத்தில் பன்னிரண்டு ராசிகளைக் குறிக்கும் பன்னிரண்டு தூண்கள் உள்ளன.
ravi said…
கோயிலுக்குள் மகாமண்டபத்தில் பன்னிரண்டு ராசிகளைக் குறிக்கும் பன்னிரண்டு தூண்கள் உள்ளன.

ஒவ்வொரு நாளும் காலையில் அன்றைய ராசியைக் குறிக்கும் தூண் மீது சூரிய ஒளி நேரடியாக விழுமாறு நேர்த்தியாக இத்தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ராசி சக்கரத்தின் சின்னங்களான 12 ரூபங்களுள்ள (Zodiac signs) 12 சப்தஸ்வங்களால் ஆலய மண்டபம் சுற்றப்பட்டிருக்கிறது

12 மாத கால அளவில் ஒவ்வொரு துணிலும் சூரியகிரகணங்கள் விழுகின்ற அமைப்பில் மிக அற்புதமாக இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது..

இந்த மாதிரி இடங்களை நம் சுற்றுலாத்துறை கூட உயர்த்தி காட்டுவதில்லை 😢
ravi said…
தாஜ்மஹாலை போய் பார்க்க நம்மை படிப்பித்த சமூகம்.. நம் பாரதத்தின் வேத வாஸ்துவிதக்தர் தந்த அற்புதங்களில் ஒன்றான இந்த ஆலயத்தின் வடிவமைப்பை
காண படிப்பிக்கவில்லை.
இனியாவது சிறிது நம் நாட்டின் கலாசாரசமூகத்தை திரும்பி பார்ப்போம்..

நன்றி.திரு.ராஜப்பா, தஞ்சை.gy temple என்று அறியப்படுகின்ற ஸ்ரீ வித்யாசங்கரர் ஆலயம்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து 100 கி.மி. தூரத்தில் அமைந்துள்ள தலம் சிருங்கேரி. அழகிய மலைகள் சுற்றிலும் அரண் செய்ய, புனித நதி துங்கபத்திரா குளுமையைத் தர, எழில்மிகு கோலத்துடன், ஆன்மீகச் சிறப்புடன் விளங்கி வருகிறது இவ்வாலயம்.

சுற்றிலும் உள்ள மலை ரிஷ்யசிருங்க பர்வதம் என்று அழைக்கப்படுகிறது. அத்வைத வேதாந்த தத்துவத்தைத் தென்னாட்டில் ஸ்தாபிக்க ஓர் மடத்தை நிறுவ விரும்பினார் ஸ்ரீ ஆதிசங்கரர். அதற்காகத் தகுந்த இடம் தேடி அவர் பாத யாத்திரை வரும்போது சிருங்கேரியில் ஓர் அற்புதக் காட்சியைக் கண்டார். கொளுத்தும் வெயிலில் நிறைமாத கர்ப்பிணியான தவளை ஒன்று பிரசவ வேதனையால் துடித்தபோது, ஒரு நல்ல பாம்பு படமெடுத்து தவளைக்கு நிழல் கொடுத்தது. ஒன்றுக்கொன்று பகையான அவை தம் பகையை மறந்து ஒன்றன்மீது ஒன்று அன்பு செலுத்தும் காட்சியைக் கண்ட அவர், அதுவே தாம் மடம் நிறுவத் தகுந்த இடம் என்று தீர்மானித்தார்.
ravi said…
சங்கரர் தன் 32 வருட வாழ்நாளில் சுமார் 12 வருடம் சிருங்கேரியில் தங்கி, சாரதாம்பாள் கோவிலையும், மடத்தையும் அமைத்து, அத்வைத வேதாந்தம், உபநிஷதத்தின் உண்மைப் பொருள் விளக்கம் எல்லாம் செய்தார். தமது சீடர்கள் மூலம் அவ்வுண்மைகள் எல்லா இடத்துக்கும் பரப்பினார்.

சாரதாம்பாள் கோவில் நுழைவாயில், கோபுரம், பிரதட்சிணம் செய்ய மூடிய பாதையுடன் கூடிய விஸ்தாரமான ஹால், பெரிய கல் தூண்கள், வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சாரதா தேவி வியாக்யான தர்ம சிம்மாசன ஸர்வஜன பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளாள்.

சங்கரர் மடத்தை ஸ்தாபித்தபோது சிருங்கேரி கிராமத்தை தீயசக்தி மற்றும் நோய்கள் தாக்காமல் இருக்க நான்கு திசைகளிலும் நான்கு கோயில்களை அமைத்தார். கிழக்கில் கால பைரவர், மேற்கில் ஆஞ்சநேயர், தெற்கில் துர்கை, வடக்கே காளி ஆகியோருக்குக் கோயில்கள் கட்டினார்.
ravi said…
சாரதாம்பாள் ஆலயத்தை அடுத்துள்ள வித்யா சங்கரர் ஆலயம் கலை, நுணுக்க வேலைப்பாடுகளுடன் கற்களால் மிக அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அளவற்ற ஆன்மீக அதிர்வலைகளை உடையது இவ்வாலயம். இங்கு செனறு தரிசித்தால் மன அமைதியையும், ஆன்மீக உணர்வுகளையும் ஒருவர் நன்கு உணர முடியும். திரும்ப ஒருமுறை சிருங்கேரி செல்ல மாட்டோமா என்ற ஆர்வத்தையும் ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறாள் சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள்.

சிற்பக்கலைச் சிறப்பு வாய்ந்த வித்யாசங்கரர் கோவில், மலைக்குன்றுகளும் நிலமும் நீர்வளமும் அமைதியான சூழ்நிலையை உண்டாக்கும்.

ஸ்ரீ வித்யாசங்கர கோவில் - 600 வருடம் பழமையான கலைவேலைப்பாடு கொண்ட கோவில் - ஸ்ரீசக்கர வடிவில் இருக்கிறது . உள்ளே லிங்க வடிவில் ஸ்ரீ வித்யா சங்கரர் - உள்ளே அழகிய தூண்கள் இருக்கின்றன.

வித்யா சங்கரர் கோயிலின் அமைப்பு திராவிட ஹொய்சள கலைப்பாணிகளின் கலவையாக உள்ளது. இதன் நீள்வட்ட வடிவமும், சிகர விமானத்தின் அமைப்பும் தனித்துவம் மிக்கவை. சுற்றுச் சுவர்களில் சிவன், விஷ்ணு, தேவி மற்றும் பல தெய்வ மூர்த்தங்களின் அழகிய திருவுருவங்கள் உள்ளன.

கோயிலுக்குள் மகாமண்டபத்தில் பன்னிரண்டு ராசிகளைக் குறிக்கும் பன்னிரண்டு தூண்கள் உள்ளன.
ravi said…
ஒவ்வொரு நாளும் காலையில் அன்றைய ராசியைக் குறிக்கும் தூண் மீது சூரிய ஒளி நேரடியாக விழுமாறு நேர்த்தியாக இத்தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ராசி சக்கரத்தின் சின்னங்களான 12 ரூபங்களுள்ள (Zodiac signs) 12 சப்தஸ்வங்களால் ஆலய மண்டபம் சுற்றப்பட்டிருக்கிறது

12 மாத கால அளவில் ஒவ்வொரு துணிலும் சூரியகிரகணங்கள் விழுகின்ற அமைப்பில் மிக அற்புதமாக இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது..

*இந்த மாதிரி இடங்களை நம் சுற்றுலாத்துறை கூட உயர்த்தி காட்டுவதில்லை*😢

*தாஜ்மஹாலை போய் பார்க்க நம்மை படிப்பித்த சமூகம்..* *நம் பாரதத்தின் வேத வாஸ்துவிதக்தர் தந்த அற்புதங்களில் ஒன்றான இந்த ஆலயத்தின் வடிவமைப்பை*
*காண படிப்பிக்கவில்லை.*
*இனியாவது சிறிது நம் நாட்டின் கலாசாரசமூகத்தை திரும்பி பார்ப்போம்..*
Oldest Older 201 – 311 of 311

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை