ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 32

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 39

32 रत्नग्रैवेयचिन्ताकलोलमुक्ताफलान्विता - 

ரத்நக்ரைவேய சிந்தாக லோலமுக்தா பலாந்விதா -




உலகின் விலையுயர்ந்த எந்த நகைக் கடையிலும் காணமுடியாத அற்புத நெக்லெஸ் அம்பாள் அணிந்து கொண்டிருக்கிறாளே. 

சிப்பியிலிருந்து வெளிவந்த நல் முத்துக்கள், 

நவமணி முத்து மாணிக்கங்கள் கோர்த்த தேவலோக நகைச் சிற்பிகளின்  கைவண்ணத்தில் உருவான  நகாஸ் வேலைப்பாடு மிக்க ஆபரணம் அம்பாளிடம் வந்தபிறகு மேலும் அழகு பெறுகிறது.💐💐💐

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அல்லவோ அவள் 🙏

ரத்ன = ரத்தினங்கள் / மணிகள் க்ரைவேய = 

பதக்கமாலை - ஹாரம் 

சிந்தாக = ஓயாது /

அலைகழிக்கப்படுவது 

லோல = ஆடும் - இங்குமங்கும் ஆடுதல் 

முக்தபல் = முத்துகள் 

அன்விதா = சேர்ந்த - கூடிய 

32 ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தபலான்விதா =

முத்தோடு ரத்தினமும் சேர்ந்தாடும் பதக்கமாலை (ஹாரம்) அணிந்திருப்பவள்.


லோல  என்ற சொல்லுக்கு ஆடுதல் என்று பொருள்.

லோலக  என்றால் பதக்கம் என்று கொள்ளலாம். 

லோலக  என்று பொருள் கொண்டு முத்துமாலையுடன் கூடிய ரத்தினங்களாலான பதக்கம் அசைந்தாடுகிறது என்றும் பொருள் கொள்ளலாம்

ஓவ்வொரு தேவர்களும் பரிசாக விலை உயர்ந்த நகைகளை அம்பாளுக்கு தந்து அதை அவள் அணியும் அழகை பார்த்து 

மெய்ப்புளம் அரும்பி ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து கரும்பிற் களித்து மொழி தடுமாறி முன் சொன்னதெல்லாம் தரும் பித்தராய் பித்தன் முன் நின்றனர் ... 

அருமறைகள் பழகி சிவந்த பதாம் புயத்தாள் சிந்தும் ஒளி மிகுந்த புன்னகையின் முன் எந்த நகையும் எடுபடாமல் போனதாம் ...

அவள் அழகுக்கும் எந்த நகையும் ஒவ்வாமல் போனதாம் ... 

மதங்கர் குல பெண்களில் தோன்றிய பேரழகியின் முன் எந்த நகை எடுபடும் புன்னகை ஒன்றை தவிர ??😊😊😊



 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐



Comments

ravi said…
*177 நிராபாதா --*

எந்த பாதிப்பும் அற்ற ப்ரம்மஸ்வரூபிணி அம்பாள்.

எல்லா பாதிப்பும் மாயையினால் தானே.

மாயையை அடக்கி ஆள்பவள் அம்பாள்.

பிரம்மத்தின் பக்கமே அவித்யா, மாயை நெருங்கவே முடியாதே.

என்ன செய்யும்?
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 36*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
ஶ்வேதா மந்த2ரஹஸிதே ஶாதா மத்4யே ச வாட்3ப4நோதீதா |

ஶீதா லோசநபாதே ஸ்பீ2தா குசஸீம்நி ஶாஶ்வதீ மாதா ‖2௦‖
ravi said…
அம்மா ... உன் மந்தஹாசத்தில் முத்துக்கள் போல் ஈசன் அணியும் திருநீறைப் போல் வெண்மையாய் வாணீ அணியும் சேலை போல் ஜொலிக்கிறாய்

உன் நிறம் கண்டே ஆவினங்கள் தாங்கள் சுரக்கும் பாலை வெண்மையாக்கிக் கொண்டதோ ?

இடையில் இளைத்தவளாய் ஞானத்தில் முதிர்ந்தவளாய் கருணையில் காரிகையாய் இருக்கிறாய்

வாக்குக்கும் மனதிற்கும் இன்னும் எட்டாதவளாய் இருக்கிறாய் ..

பார்வையில் பனி மலையை தாங்கி உள்ளாய் ...

உன் அருளுக்கு எல்லை காண்போர் மூளை இல்லா மூடர்களே 🦚🦚🦚
ravi said…
எருமைகள் பால் சொரிந்து

உறங்கும் உன் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால்,

உன் வீட்டுக்குள் நுழைய முடியவில்லையடி பெண்ணே !

உன் வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி உனை எழுப்புகிறோம்

தலையிலோ பனி பெய்கிறது.

கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி,

மேலே பனியின் குளிர்ச்சி,

இத்தனையையும் தாண்டி இறைவனை
கண்ணனை அடைய எத்தனிக்கிறோம்

அவன் பாதம் நான் மட்டும் வணங்கி புண்ணியம் பெற்று என்ன பயன் என் ஆருயிர் தோழியே .. ?


நீயும் பெறவேண்டும் அந்த ஆரா அமுதன் அருள் நம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்

அன்றோ

பனியின் தலையையும் பாலின் குளிர்ச்சியையும் தாங்கி கொள்கிறேன் ..

புரிந்து கொள்
எழுந்து நில்
துணிந்து வா
பணிந்து அவன் தாள் பணிவோம் 🦚🦚🦚
.
ravi said…
கனைத்திளங் கற்றெருமை

கன்றுக்கு இரங்கி
நினைத்து

முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும்

நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழ

நின் வாசல் கடைபற்றி

சினத்தினால்

தென் இலங்கைக் கோமானைச்

செற்ற
மனத்துக்கு இனியானைப்

பாடவும் நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய்

ஈதென்ன பேருறக்கம்!

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.🪷🪷🪷
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 427* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
ஆயிரம் அச்வமேத யாகங்கள் செய்து எப்படிச் சாத்தியம்?” என்று கேட்டார் பிரம்மா.

“அதற்கு ஒரு குறுக்கு வழி சொல்கிறேன்.

பூமியில் சத்திய விரத க்ஷேத்திரத்தில் ஒரு யாகம் செய்தால் ஆயிரம் யாகங்கள்
செய்தமைக்குச் சமம். அங்கே யாகம் செய்!” என்றார் திருமால்.

பூமிக்கு வந்த பிரம்மா, அந்த சத்திய விரத க்ஷேத்திரத்தை ஆசையுடன் பார்த்தார்.

‘ *க* ’ எனப்படும் பிரம்மா ஆசையுடன் பார்த்ததால், ‘ *காஞ்சீ* ’ என்ற பெயர் அந்த க்ஷேத்திரதுக்கு ஏற்பட்டது.
ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 46 started on 6th nov

*பாடல் 15 ... முருகன், குமரன்*

(நாம மகிமை)

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து,

உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ,
எண் குண பஞ்சரனே
ravi said…
நெஞ்சம் கசிந்து உள்ளம் உருகுதல் என்பது சாமான்யப் பொருள்.

இனி
சிறப்புப் பொருளை பார்ப்போம்.

மாணிக்க வாசகர் திருவெம்பாவையில்,

.. மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய
வாழ்த்தொலி போய்
வீதி வாய்க் கேட்டலுமே விம்மி
விம்மி மெய்மறந்து
போதார் அமலியின் மேல் நின்றும்
புரண்டிங்கன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் ..

... என்கிறார்.

இறைவன்பால் கொண்ட அன்பின் முதிர்ச்சியின் அறிகுறி
அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலே தன் வயம் இழந்து, தற்போதம்
கேட்டு மூர்ச்சிக்கும் நிலையை அடைதல்வேண்டும். இந்நிலையை,

.. *தீவிர தர சத்தினி பாதம் ..*

... என்று சித்தானந்த சாதனை கூறும்.

அப்பர் பெருமான் வாக்கு,

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்

பின்னை யவகூடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்து அவனுக்கே பிச்சி யானாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள்

அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்

தன்னாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

... திருவாரூர் திருத்தாண்டகம்.
ravi said…
சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம்.

एको वारिजबान्धवः क्षितिनभो व्याप्तं तमोमण्डलं
भित्वा लोचनगोचरोऽपि भवति त्वं कोटिसूर्यप्रभः ।
वेद्यः किन्न भवस्यहो घनतरं कीदृग्भवेन्मत्तम-
स्तत्सर्वं व्यपनीय मे पशुपते साक्षात् प्रसन्नो भव ॥ ५८॥

ஏகோ வாரிஜபா³ந்த⁴வ꞉ க்ஷிதினபோ⁴ வ்யாப்தம்ʼ தமோமண்ட³லம்ʼ
பி⁴த்வா லோசனகோ³சரோ(அ)பி ப⁴வதி த்வம்ʼ கோடிஸூர்யப்ரப⁴꞉ .
வேத்³ய꞉ கின்ன ப⁴வஸ்யஹோ க⁴னதரம்ʼ கீத்³ருʼக்³ப⁴வேன்மத்தம:
ஸ்தத்ஸர்வம்ʼ வ்யபனீய மே பஶுபதே ஸாக்ஷாத் ப்ரஸன்னோ ப⁴வ ..

இது 58வது ஸ்லோகம்.
ravi said…
அப்படி, அவருடைய, தாபம் இருந்ததனால, அருணாசலேஸ்வரர் கூப்பிட்டார்.

ஓடிவந்து அப்பான்னு, அருணாசலேஸ்வரரை கட்டிண்டார்.

அதுக்கு அப்புறம், ஞானசூரியனா, உட்காந்துண்டுருந்தார்.

அவர்ட, வந்தவாளுக்கெல்லாம், அவர், அந்தந்த ஜீவனுடைய, பரிபாகத்துக்கு தகுந்தமாறி, அவாளை, வழிநடத்தினார்.

நிறையபேர், அவரை, சரணாகதி பண்ணி, ஒரு லக்ஷ்மிங்கிற பசுமாடு, அவா அம்மா, அவாள்ளெல்லாம் ஞானத்துக்கா வந்தா?

அவரை வந்து சரணடைஞ்சுட்டா. அவ்வளவுதான். அவாளுக்கெல்லாம், ஞானம் கொடுத்தார் அவர்.
ravi said…
*❖ 63 காமதாயினி =* இச்சைகளை பூர்த்தி செய்பவள்
ravi said…
அம்மா பிச்சை போட்ட வாழ்வு இதில்

இச்சை பல கொண்டு வாழ்கிறேன் ..

எச்சை தந்த மேனி தனில் எங்கும் கொச்சை கொச்சை ஆசைகள் ...

பச்சை பச்சை செழுமை தேடும் முடிவில்லா ஆசைகள்

முடிவு பெரும் வாழ்க்கை தனில் ஏன் அம்மா முடிவு பெறா ஆசை வைத்தாய் ... ?

எரிந்து போகும் மேனி தனில் ஏனம்மா தீ அணைக்கா ஆசை வைத்தாய் ...

மண்ணுக்குள் சென்ற பின்னும் என் மனம் மண்ணாளும் பதவி வேண்டுமே ...

பொன்னாலும் பெண்ணாலும் பிறக்கும் இச்சைகள்

எந்நாளும் என்னாலும் யார் சொன்னாலும் கொல்லும் திறன் தருவாய் ...

இதுவே என் இச்சை *காம தாயினியே* 🪷🪷🪷🪷🙌
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

22 –
கேளாது அளிக்கும் உன் கேடு இல் புகழைக்

கேடு செய்யாது அருள் அருணாசலா (அ)
🦚🦚🦚
ravi said…
என் உயிர் தோழியே

வாய்த்த இப் பிறவியை துயர் அணுகா தடுக்கும்
கங்கையைத் தலையில் கொண்டவனும்,

சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில்,
கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும்,

வானத்தையும், பூலோகத்தையும்,
பிற உலகங்களையும்

காத்தும், படைத்தும், அழித்தும்

விளையாடுபவனுமான

தன்மைகளைக் கொண்டவன் நம் *அருணாசலன்*

அவனை

நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும்,

இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும்,

பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, *அருணாசலா* என்னும் மந்திரம் சொல்லி,

அவனது பொற்பாதத்தை வணங்காமல் வாழ்ந்து என்ன பயன் ??

நாம் என்ன வெறும் மூச்சு விடும் பிணங்களா?

இல்லையடி

சிவம் குடி கொண்ட சிற்றம்பலம் அடி நம் உள்ளம்

அடி முடி காணாதவன் வாழ்கின்ற இல்லமடி இது

கேட்காமல் கொடுப்பவன் அவன்

அவனின் இந்த பெருமைக்கு

அவன் களங்கம் செய்வானோ ?

சூரியன் உதிக்காமல் போகலாம் ..

சந்திரன் மறைந்து போகலாம் ..

காற்று நின்று போகலாம்

கடல் வற்றி போகலாம்

வானம் பிளந்து போகலாம்

பூமி வெடித்து போகலாம்

தீயில் பனி மலை வாழலாம்

ஆனால் அருணாசலனின் அருள் வற்றி போகுமோ ... ???

அவன் கருணை கறுத்து போகுமோ ...???

இல்லையடி பெண்ணே ...

அவனே நிரந்தரம் அந்தரம் தனில் ஆனந்த நடனம் புரிவான் ..

வந்தே *ஹரன்* என்பான்

அள்ளி அள்ளி வரம் தருவான் ...

அவன் நாமம் ஒருமுறை சொல்லிப்பார் ...

கங்கை தன் பாவம் கழிய உன்னிடம் ஓடி வருவாள் 🙌🙌🙌
ravi said…
முகுந்தமாலா 38 ஸ்லோகம் பொருளுரை
ravi said…
नमामि नारायणपादपङ्कजं करोमि नारायणपूजनं सदा ।

वदामि नारायणनाम निर्मलं स्मरामि नारायणतत्त्वमव्ययम् ॥ ३८॥

நமாமி நாராயணபாத³பங்கஜம்

கரோமி நாராயணபூஜனம் ஸதா³ ।

வதா³மி நாராயண நாம நிர்மலம்

ஸ்மராமி நாராயணதத்த்வமவ்யயம் ॥

ன்னு சொல்றார்.
ravi said…
https://chat.whatsapp.com/HcBx62FBO4aCfnokryZVZp

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற மங்களகரமான நிறங்கள் பற்றிய பதிவுகள் :*

வாரத்தில் ஒவ்வொரு நாளும் சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளினை அடிப்படையாகக் கொண்டது .

இந்த கோள்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதோடு நம்முடைய வாழ்வை பல்வேறு விதமாக பாதிக்கக்கூடியவையும் கூட. ஒவ்வொரு கோளும் தனக்கே உரிய வண்ணத்தையும் முன்னிறுத்துவதாக உள்ளது.

அதேபோல் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வண்ணமும் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒரு கோளுக்குரியதாகக் கருதப்படுகிறது.

எனவே, அந்தந்த நாளுக்குரிய வண்ணத்தை அணிந்து அந்தந்த கோளினை வணங்கி நல்ல பலன்களை அடைந்து அந்த நாளை சிறப்பானதாக்குங்கள்.

*திங்கள்: (சந்திரன்)*

வெள்ளை நிறத்துடன் தொடர்புடையது திங்கள் சந்திரனைக் குறிக்கும் சொல் என்பதால் அதன் வெள்ளை நிறம் அனைத்திலும் சிறந்ததைக் குறிக்கிறது. எனவே வெள்ளை நிற உடைகளை அணிவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.
இந்த உடைகள் வெள்ளை நிற நகைகள் அதாவது முத்து, வைரம் ஆகியவற்றினையும் குறிக்கும்.இன்று சந்திரனை வழிபட வேண்டும்.

*செவ்வாய்: (செவ்வாய்)*

சிவப்பைச் சார்ந்த நிறங்களைக் குறிக்கும் சிவப்பு வண்ண உடைகளையும், சிவப்புக்கல் அல்லது பவளம் ஆகிய நகைகளையும் அணிந்து செவ்வாய் கிரகத்தினை வழிபட வேண்டும்

*புதன்:*

பசுமையைக் குறிக்கும் புதன்கிழமையில் பச்சை நிறம் முக்கியத்துவம் பெறுகிறது. பச்சை நிற உடைகள், மரகதம் உள்ளிட்ட பச்சை நிறக் கற்கள் ஆகியவற்றை அணியலாம்.இன்று புத கிரகத்தினை வழிபட வேண்டும்.

*வியாழன்:(குரு)*

மஞ்சள் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நகைகள் மற்றும் தங்க நிற உடைகளை அணிவது மங்களகரமாக இருக்கும்.இன்று நவக்கிரக குருவை வழிபட வேண்டும்.

*வெள்ளிக்கிழமை: (சுக்கிரன்)*

இளம்சிவப்பு (பிங்க்) வெள்ளிக்கிழமைகளில் இளம்சிவப்பு நிறத்தை தேர்வு செய்யுங்கள்.இந்த பிங்க் நிறத்தில் உடைகள், மாணிக்கம் உள்ளிட்ட சிவப்பு நிறக்கற்களை கொண்ட நகைகள் ஆகியவற்றை அணியலாம்.இன்று சுக்கிரனை வழிபட வேண்டும்.

*சனிக்கிழமை: (சனி)*

கருப்பு சனிக்கிழமை கருப்பு நிறம் சிறந்தது.அதேப்போல் நீலம், ஊதா மற்றும் வாடாமல்லி நிறங்களையும் அணியலாம்.நீலக்கல் உள்ளிட்ட இந்த நிறங்களை ஒத்த கற்களைக் கொண்ட நகைகளையும் அணியலாம்.இன்று சனிக்கிரகத்தை வழிபட வேண்டும்.

*ஞாயிற்றுக்கிழமை: (சூரியன்)*

சூரியனுக்குரிய நிறங்கள் இந்த நாளில் சூரியனை ஒத்த நிறங்கள் சிறந்தவை. ஆரஞ்சு நிறம் எதிரிகளை விலக்க வல்லது மற்றும் உடனடியாக பலன் தர வல்லது.விஷம் உள்ளிட்ட ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கவல்லது. எனவே அன்று ஆரஞ்சு நிற உடைகள் மற்றும் நகைகளை அணிவது பொருத்தமானதாக இருக்கும். இன்று சூரிய கிரகத்தை வழிபட வேண்டும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
https://chat.whatsapp.com/HcBx62FBO4aCfnokryZVZp

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மார்கழி மாதத்தில் மட்டுமே காண முடியும் அதிசய லிங்கம் பற்றிய பதிவுகள் :*

தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ளது அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்தக் கோயிலில் என்ன அதிசயம் என்றால்....இங்கு மார்கழி மாதம் மட்டும் பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தை வைத்து வழிபடப்படுகிறதாம்.

மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள். இதற்காக, குறைந்தது 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும்.

பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கம்
முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் புரிந்தனர். அந்தப் போரினால் உலகில் அதிக பேரழிவுகள் ஏற்பட்டன.

இந்தத் துன்பங்களை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர்.

அதன்படி ஆதிஷேசன் தன்படங்களால் மேருமலை சிகரத்தின் முடியை அழுத்திக் கொள்ள வேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியைத் தளர்த்த வேண்டும் என்று கூறினார்கள்.

ஆனால் வாயுதேவனால் பிடியைத் தளர்த்த முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார். இதனால் உயிரினங்கள் அனைத்தும் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்தப் பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிஷேசனிடம் பிடியைத் தளர்த்த வேண்டினார்கள்.

ஆதிஷேசன் தன் பிடியைக் கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிஷேசனின் சிரத்தையும் சேர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறி விழுந்தது. அவற்றிலொன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடு) காட்சியளிக்கிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன.

இவ்விடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் 60 அடி நீளத்தில் பார்ப்பதற்கே பிரம்மாண்டமான தோற்றத்தில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

நாகரின் முழு உடலிலும் பக்தர்கள் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து பூசி உள்ளனர். இவ்வாறு மஞ்சள் குங்குமம் தடவி வழிபடும்போது நாக தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. படமெடுத்த நிலையில் அமைந்துள்ள ஆதிசேஷன் லிங்க வடிவைத் தாங்கி நிற்பது சிறப்பு.

*மரகத லிங்கத்தின் வரலாறு :*

பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வழிபட்டு விட்டு, அவரது அருகில் இருக்கும் உமாதேவியை வழிபடாமல் விட்டு விடுவார்.

இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர், என சாபமிட்டார்.

இதையறிந்த சிவன், நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கௌரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார். (இக்கோவிலில் கேதார கௌரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது).

அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவபெருமான் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தார். பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார். அர்த்தநாரீஸ்வர மூலவருக்கு முன்னால் மரகதலிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த லிங்கத்தின் அருமை அறிந்து பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார்.

தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார். பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்து கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்குள் எடுத்து பேழையில் வைத்து விட வேண்டும். என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார். மற்ற நேரத்தில் சாதாரணமான லிங்கத்தை வைத்து வழிபடுங்கள் என்று கட்டளையிட்டாராம்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘 ஓம் நமசிவாய 🙏*
ravi said…
_*ஓம் எனும் ப்ரணவ மந்திரம் தரும் மகத்தான பலன்கள்!*_


ஒருவரது மனதை ஒருமைப்படுத்தி அவரது எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்தி தியான நிலைக்கு இட்டு செல்லும் அற்புத சக்தி ஓம் என்னும் மந்திரத்திற்கு உள்ளது.

இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பதன் மூலம் நமது உடலின் இயக்கம் சீரடைகிறது.

நமக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அழிந்து நேர்மறை ஆற்றல் பெருகுகிறது.

ஓ' என்ற ஓசையை உச்சரிக்கும் பொழுது மார்பு பகுதி சீரான இயக்கத்தை பெறுகிறது. 'ம்' என்ற ஓசையை உச்சரிக்கும் பொழுது நமது மூளை பகுதி தூண்டப்படுகிறது. அதோடு நமது முகத்தில் உள்ள தசைகளும் நன்கு வேலை செய்கின்றன.

*ஓம் என்ற மந்திரம் எப்போது கூற வேண்டும்?....*

தினமும் காலையில் 10 நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்து வெறும் ஓம் என்ற மந்திரத்தை மட்டும் கூறினாலே போதும் அந்த நாள் முழுக்க நாம் சிறப்பாக செயல்பட அந்த மந்திரம் பல அற்புத ஆற்றல்களை நமது உடலிற்கு தருகிறது.

ஓம் என்பதை உச்சரிப்பதில் கூட ஒரு தாத்பரியம் இருக்கின்றது. ஓ வின் உச்சரிப்பைக் குறைத்து ம்- இன் உச்சரிப்பை நீட்டித்து சொல்ல வேண்டும். ஓம் என்னும் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் தூண்டப்பட்டு நமக்குள் பெரிய மாறுதலை ஏற்படுத்தும். நமது கவனத்தைச் சிதறவிட செய்யாது. மன அழுத்தம் என்னும் பாதிப்பிலிருந்து மீள செய்யும்.

ஒவ்வொரு மனிதனுக்குள் எப்போதும் தெய்வசக்தியும், அசுர சக்தியும் போட்டி போட்டு கொண்டே இருக்கும். அசுரசக்தியை வெல்லும் சக்தி ஓம் என்னும் மந்திரத்துக்கு உண்டு. ஓம் என்னும் ஒலி அதிர்வுக்கு சக்தி வாய்ந்த ஆற்றல்கள் உண்டு என்பதைக் கண்கூடாக உணரலாம்.

காலையும், மாலையும் 15 நிமிடங்கள் ஓம் என்னும் மந்திரத்தை ஒருமுகத்துடன் செய்து வந்தால் ஆன்மிக பேரின்பத்தை நீங்கள் உணர முடியும். ஓம் மந்திரத்தை உள்வாங்கி உச்சரித்தால் அந்த மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும் ஒருவித காந்தசக்தி போல பரப்புவதை உணரலாம்.

ஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்துவரும் சப்தம். பூமி சுற்றும் போது எழும்பும் ஒலி அலைகள். இவை தான் பிரபஞ்சத்தை இயக்குகின்றன. நம் உயிரில் இருந்து பிராணனில் இருந்து ஓம் மந்திரம் உருவாகி வெளியில் வருவதால் தான் இதற்கு பிரணவ மந்திரம் என்ற பெயர் வந்தது.

🙏மந்திரம் தரும் மகத்தான பலன்கள்:...

மந்திரங்கள் என்பது பெரும்பாலும் சமஸ்க்ரித மொழியில் இருந்து வந்ததே. இந்த மந்திரங்களை உச்சரிக்கும்போது நமது உடலுக்கும் மனதிற்கும் அபிரிமிதமான சக்தி கிடைக்கும். இந்த மந்திரங்கள் என்பவை குறிப்பிட்ட ஒலி அலைகளின் கூட்டு கலவையாகும்.

நூற்றுக்கணக்கான இதுபோன்ற ஒலி அலைகள் வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கின்றன. இந்த மந்திரங்கள் எல்லாம் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. சமஸ்க்ரிதம் என்பது தேவ பாஷை என்று சொல்லப்படுகிறது, அதாவது தேவர்களை வசீகரிக்கும் தன்மை இந்த சமஸ்க்ரிதத்திற்கு உண்டு.

இதன் ஒவ்வொரு வார்த்தைகளையும் உச்சரிக்கும் போது எழுகின்ற சப்த அலைகள் அபிரிமிதமான சக்தியை கொண்டதாக இருக்கிறது. இந்த மந்திரங்களை முறையாக உச்சரிக்க கற்றுக்கொள்வதற்கே சிறுவயதில் இருந்து பயிற்சி பெற வேண்டியது அவசியமாகும்.

இந்த மந்திரங்களை சரியாக உச்சரிப்பது மட்டுமல்ல, இதை உச்சரிப்பவர்கள் உடல் மற்றும் மனதை சுத்தமாக வைத்திருப்பதும் அவசியமாகும்.


🌷🌷
Kousalya said…
I think when you really started posting one by one, i thinku have soo much knowledge on ஆன்மீகம்....too nice..இப்படி ஒரு சங்கம் கிடைக்க நான் கொடுத்து வைத்தது மனதிற்கு அமைதி.....அதற்கும் அந்த மாதவனின் காருண்யமே...🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷
Lakshmi Bakaraman said…
Very good.
சக்தியில் நானும் மிகவும் கொடுத்துவைத்திருக்கிறேன். உனக்கு கடவுள் அருள் நிறைய இருக்கு.
எல்லா புகழும் உன் பெற்றோருக்கு போயிசேரும்.
ravi said…
*இன்றைய சிந்தனை*

28.12.2022

*எதுவும்_நிரந்தரமில்லை...*


***************************************************************************************


*இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழும் வரை நமக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது.பதவி,பட்டம், அதிகாரம், பொருள், பணம், புகழ், மனைவி, மக்கள், வீடு, வாசல், தோட்டம், துரவு ஏனைய அனைத்துமே நிரந்தரம் இல்லை. ஏன் நமது பெயரும் கூட அப்படித் தான்.*

*இவை சில நாள் மட்டும் நம்மோடு.பின் வேறொருவரோடு. நம்மை விட்டுச் சொல்லாமல் சென்று விடும்.*

*நாட்கள் செல்லச் செல்ல நம்மை இவ்வுலகம் மறந்து விடும். காற்று உள்ளே இருக்கும் வரை தான் உடல். காற்று வெளியே போய் விட்டால் நாம் பிணம்.*

*சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளிகள் தான் நாம்..இந்த சொற்ப வாழ்வு நிரந்தரம் என்று மயங்காதீர்கள்.*

*சொத்து, சுதந்திரம், அதிகாரம், பேர், புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான்.*

*சாவி கொடுத்தால் குரங்கு பொம்மை. ஆடும்.. டமாரம் தட்டும்.. தலையை ஆட்டும்,விசை இருக்கும் வரை தான் வேலையே செய்யும்.*

*ஒரு காவல்காரன். வழக்கம் போல் தப்பட்டை அடித்துக் கொண்டு நடுநிசியில் ”ஜாக்கிரதை” ‘’ஜாக்கிரதை’’என்று கத்திக் கொண்டே போவான்…*

*ஒருநாள் அவசரமாக வர வேறு ஒரு ஊருக்கு போக வேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை செய்ய வேண்டியதாயிற்று.*

*அவன் பிள்ளை கொஞ்சம் வேள்வி ஞானம் உள்ளவன். இரவில் அவன் தப்பட்டை அடித்துக் கொண்டு ''ஜாக்கிரதை,ஜாக்கிரதை'' என்று சொல்லிக் கொண்டு தகப்பன் வேலையை செய்தான்.*

*அடுத்த நாள் ராஜாவே அந்தக் காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான்.அந்தப் பையனைப் பார்க்கத் தான் வந்தான்.*

*”ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ?, இங்கேயே தண்டனையைக் கொடுத்து நிறைவேற்றுவாரோ .? காவல்காரன் மிகவும் நடுங்கினான்.*

*ஆனால் ராஜா அந்தப் பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக?.*

*முதல் நாள் இரவு பையன், ” ஜாக்கிரதை. ஜாக்கிரதை” என்று அப்பாவை போல் சும்மா கத்திக் கொண்டு போகவில்லை.*

*சில வார்த்தைகள் சொன்னது தான் ராஜாவை மயக்கியது. அந்த வாக்கியங்கள் இவை தான்.*

*அடே தூங்கு மூஞ்சி, விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயும் என்னடா, அண்ணன் என்னடா, தம்பி என்னடா, காசும் பொய்,வீடும் பொய் சொந்தமும் இல்லை, பந்தமும் இல்லை,. எல்லாம் மாயை..*

*இதை எல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள். பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், வாழ்வே சோகம், மாயம், விழித்துக் கொள் ஜாக்கிரதை….*

*ஆசையும், பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா . உன் உள்ளே இருக்கும் ஞானம் எனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தைத் திருடுபவர்கள்.*

*விளக்கு எடுத்துக் கொண்டு வெளியே திருடர்களைத் தேடாதே.. உனக்கு உள்ளே ஒளிந்து இருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்கிரதை ஜாக்கிரதை…*

*மனக்கோட்டை கட்டுபவர்கள் நாம். நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள், இளமை, வாலிபம் நிரந்தரமல்ல..*

*நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிப் போய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை,*

*இதில் நீ என்ன? நான் என்ன?, எல்லாமே மாயை.. விழித்துக் கொள், ஜாக்கிரதை, ஜாக்கிரதை,.*

*"உங்கள் புகழை, உங்கள் பதவியை, அதிகாரத்தை ஒரு போதும் நம்பாதீர்கள்." இது எதுவுமே நிரந்தரம் கிடையாது".*

*ஏற்றம் வரும் போதே மாற்றமும் நிகழும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*

*#வாழ்த்துகள்.*

*#வாழ்க_வளத்துடன்.*

ravi said…
*விருப்பம் நிறைவேறாத போது கோபம் அதிகரிக்கிறது....!*

*விருப்பம் நிறைவேறினால் பேராசை அதிகரிக்கிறது....!*

*கோபமும் பேராசையும் நம் வாழ்வை அழிக்கும் ஆயுதங்கள்...!!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
பாதாரவிந்த சதகம் !

55.விதன்வீதா நாதே மம ஸிரஸி காமாக்ஷி க்ருபயா
பதாம் போஜந்யாஸம் பசு
பரிப்ருட ப்ராண தயிதே
பிபந்தோ யன் முத்ராம் ப்ரகடம்
உபகம்பா பரிஸரம்
த்ருசா நானந்த்யந்தே நலிந பவ
நாராயண முகா: |

பசுபதியின் உயிரான மனைவியே! நாடத்தக்கவளே! காமாக்ஷி!
கம்பைக் கரையருகே வெளிப்படையாகத் தெரிகிற உன் திருவடிப்பதிவுகளை பிரும்மா நாராயணன் முதலானோர், கண்ணாரக் கண்டு களிக்கின்றனர். அந்தத் திருவடிப்பதிவைக்
கிருபையுடன் என் மீது வைப்பாயாக.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺 *"ஸ்ரீ கிருஷ்ண நாமம் சொல்லும் பக்தன் எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்" என்பதை --- விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹“ *ஒருநாள் சிறைக்கைதிகள் அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண பக்தி சேவை இயக்கம் சார்பில் பகவத் கீதையும், ஸ்ரீ கிருஷ்ண மஹாமந்திர உபன்யாசம் வழங்கப்பட்டது.

🌺அதில் கலந்து கொண்ட அனைவருடைய வாழ்க்கையும் ஸ்ரீ கிருஷ்ணன் அருளால் மாற்றம் அடைய துவங்கியது.

🌺ஒரு நாள் சங்கர் எனும் கைதியினுடைய மனைவி உமா கடிதம் எழுதியிருந்தாள். !!!*

🌺அன்புள்ள அத்தானுக்கு..
நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

🌺கைதி சங்கர் பதில் எழுதினான்.
அன்பே.. நான் இங்கு அனுதினமும்ஸ்ரீ கிருஷ்ண மஹாமந்திர உச்சடானம் செய்து என் மனதை பக்குவமாக மாற்றிக் கொண்டு இருக்கிறேன்.

🌺குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்..
நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

🌺ஒரு வாரத்துக்குப் பின் மனைவி உமாவிடமிருந்து கடிதம்.
அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளை யெல்லாம் அகற்றினர்.. இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?

🌺கைதி சங்கர் திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

🌺அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டி யிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!

🌺*"ஸ்ரீ கிருஷ்ண நாமம் சொல்லும் பக்தன் எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்"*

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺A simple story that explains "A devotee who chants the name of Sri Krishna achieves his work wherever he is" 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹“ * For one day all the prisoners were given Bhagavad Gita and Sri Krishna Mahamandra Upanyasam on behalf of Sri Krishna Bhakti Seva Movement.

🌺 The lives of all those who participated in it began to change with the grace of Sri Krishna.

One day Uma, the wife of a prisoner named Shankar, wrote a letter. !!!*

🌺 Dear Athan..
After you went to jail for kidnapping, me and the children are left with no income. I think that we can cultivate the rocky land behind our house, plant a garden and grow vegetables and support our family.. but I don't know how to dig the land.

🌺 Prisoner Shankar wrote a reply.
Dear.. I am here doing Anuthinumsri Krishna Mahamantra Uchadanam and making my mind mature.

🌺 Find some other means for family expenses. Do not touch the land behind. That is where I have buried the stolen gold bars..
You go to do something, then you will forget the place you put me..

🌺 Letter from wife Uma after a week.
Dear husband.. some group came with bogline machine and dug our backyard and removed all the rocks.. now the land is level. But there are no gold nuggets..?

Prisoner Shankar again wrote to his wife.

🌺Dear.. they are police department.. they will read my letter to you and dig for gold.. but actually I have not buried any gold.. now you grow vegetable garden..!!

🌺*"A devotee who chants the name of Shri Krishna achieves his work wherever he is"*

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan 🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -28.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா -11

மூலம்:

நிகளமிட்டு நான்முகனை நீயன்(று) அடைத்த
புகழுரைக்கும் நான்மயங்கப் போமோ – சகளமொடு
நிட்களமும் கூறாய்! நிகர் தீர் பழனிமலைக்
கட்கவின்ற ஞானமுரு கா (11).

பதப்பிரிவு:

நிகளம் இட்டு நான்முகனை நீ அன்று அடைத்த
புகழ் உரைக்கும் நான் மயங்கப் போமோ? – சகளமொடு
நிட்களமும் கூறாய்! நிகர் தீர் பழனி மலைக்
கண் கவின்ற ஞான முருகா!!! (11).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

நிகளம் - விலங்கு;
சகளம் -உருவநிலை;
நிட்களம் - அருவநிலை;
கண் என்பது கட் என வலித்தது இங்கு;
கவின்ற-அழகுற்று விளங்கிய

இந்தப் பாடலில், உருவமும், அருவமும் இரண்டுமே கடவுள் நிலை என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது.
"உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே" என்ற நம்மாழ்வாரின் கருத்தை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

தனக்கு நிகரே அற்ற, பெரும் புகழுக்கு உரித்தான, பழனி மலையில் அழகுற்று விளங்கும் ஞான முருகனே! ஞான தண்டாயுதபாணியே! பிரணவ மந்திரத்தின் பொருள் அறியாது முழித்த நான்முகனை, நீ விலங்கிட்டு அடைத்த, உன் பராக்கிரமத்தை, பெரும் புகழை உரைக்கும் நான், மயங்கலாமோ? பழனிப் பெருமாளே! உருவமும், அருவமும் இரண்டுமே கடவுள் நிலை என்று பகர்வாய்! ஞானத்தின் உச்சமே! ஞான குருவே!

உரு, அரு எல்லா நிலையும் நீயே என்று பகர்வாய் ஞான குரு!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 9*

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து

*பொருள்*

கால் சுடும் அளவிற்கு நீர் வற்றி போய் வெரும் மணலாக ஆறு வற்றி போனாலும், அதை தோண்டுவோருக்கு, ஊற்று நீர் கொடுத்து இந்த உலகதிற்கு உதவும் நதியைப் போலே நல்ல மனம் படைத்தோர், நல்ல காரியங்கள் செய்யும் நல்ல குடியில் பிறந்தோர் தங்களுக்கு இல்லையென்றாலும் அடுத்தவர் கேட்கும் பொது தங்களிடம் உள்ள பொருளையும் கொடுத்து உதவுவார்கள்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
பகல் பத்து (திருமொழி) திருநாள் 6 நாள் :
இன்று நம்பெருமாள்,
பெரிய திருமொழி தொடகத்திற்கு ஏற்க, இராமானுஜருக்கு காஞ்சி வரதராஜ ராக கருட வாகனத்தில் கீழப்படியில் காட்சி கொடுத்தது போல், இன்று சிகப்பு சிக்குத் தாடையில் வரதன் கலிங்கத்துராய் , சூரிய சந்திர வில்லைகள், ஓட்டியாண காப்பு சாற்றி, பங்குனி உத்திர பதக்கம், வைஜயந்தி பதக்கம், அடுக்கு பதக்கங்கள், அரைச் சலங்கை, மகர கர்ண பத்ரம், வைர அபயஹஸ்தத்துடன், வெண்பட்டு வஸ்திரம், 2 வட பெரிய முத்து சரம் சாற்றி, நெல்லிக்காய் பொட்டு மாலை, தங்கப்பூண் பவள மாலை,
பின் சேவையாக - மகரி பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கல் கைகளில் சாற்றி, சேவை சாதிக்கிறார் 🙏🏻
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

23 –
கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு

உவகை
வெறி கொள அருள் அருணாசலா (அ)🙏🙏🙏
ravi said…
கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன.

அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன.

நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன.

இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள்.

அவர்கள் *அருணாசலா* என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள்.

இந்தக் காரணங்களால், இந்தக் குளம்

நம் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது.

என் ஆருயிர் தோழியே

தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில்,

நம் சங்கு வளையல்கள் சலசலக்க,

கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப,

மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

இல்லையடி நான் வரமாட்டேன் ...

தோழி சொல்கிறாள்

கேள் நான் வாரா காரணம் ...

என் கண்கள் ஒரு தடாகம்

அதில் என் அருணாசலன் தாமரையாய் மலர்ந்துள்ளான் ...

கரையும் அழுக்குகள் என் பாவங்கள் ...

தாமரை எங்கு உள்ளதோ அங்கே வண்டு வரும் அன்றோ ...

அதோ உமை எனும் வண்டு என் கண்களில் உள்ள அருணாசலம் எனும் தாமரையை மொய்ப்பதை பார் ...

இரவில் அவனே மலரும் குவளைகள்

அவன் அணியும் திங்கள் குவளை கண்டு காதல் சிந்துவதை பார் ...

மேகம் ஓடும் என் கண்களை விடுத்து நீ சொல்லும் இடம் ஏன் வரவேண்டும் ... ??

இன்னும் கேளடி என் கண்மணி !!

அவன் என் கரங்களில் அவன் சொரூபம் எனும் மதுவை வைத்துள்ளான் ..

அதனால் கள் வெறி கொண்டுள்ளேனடி...

உன்னுடன் தள்ளாடி தள்ளாடி வர இயலாதே 🪷🪷🪷
ravi said…
புள்ளின்வாய் கீண்டானை

பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக்

கீர்த்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்!

நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.🙏🙏🙏
ravi said…
புள்ளின்வாய் கீண்டானை

பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக்

கீர்த்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்!

நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.🙏🙏🙏
ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 47 started on 6th nov

*பாடல் 15 ... முருகன், குமரன்*

(நாம மகிமை)

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து,

உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ,
எண் குண பஞ்சரனே
ravi said…
அருள்வாய் ...

இச் சொல்லுக்கு விஷேசமான பொருள் காணலாம். இதுவரை ஆன்மா
பக்குவம் அடையும்பொருட்டு மும்மலத்திற்கு துணையாய் இருந்து
செயல்பட்டு திருவான சக்தியே மலபரிபாகம் ஏற்பட்டபின் அருட்
சக்தியாக மாறி,

சக்தி + நிபாதம் + பதியச் செய்வாய்.

அருணகிரியார், அருட்சக்தியானது தன்னிடம் சக்திநிபாதமாய் திகழ
வேண்டும் என்றும், அவ்வாறு பதிவதாலேயே விஷயங்களில் விரக்தி
ஏற்பட்டு இறைவனிடம் தனது ஆன்மா விரவவேண்டும் என்று
பிரார்த்தனை செய்கிறார். இந்நிலை இவருக்கு கிடைத்தது. அதனை,
பத்தியால்' எனத் தொடங்கும் இரத்தினகிரித் திருப்புகழில்,

வித்தகா ஞானசத் திநிபாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே

... என்கிறார். (திருப்புகழ் - பாடல் 567).

இதே கருத்தை 'செவிக்கு ...' என்கிற 26வது கந்தர் அந்தாதியில்,

.. உற்றன, கட்செவிக்குன்ற,
வாரண வள்ளி பொற்றாள் ..

... என்று தேவிமார்களின் சக்தி நிபாதம் தமக்கு கிடைத்ததைக்
கூறுகிறார்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 428* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
விச்வ கர்மாவை விட்டு யாக சாலையை ஏற்படுத்தச் சொல்லி யாகம் செய்யத் தொடங்கினார் பிரம்மா.

புரோகிதரான வசிஷ்டர் பிரம்மாவிடம், “தந்தையே! தங்கள் மனைவியான சரஸ்வதி தேவியில்லாமல்
தாங்கள் மட்டும் தனியாக யாகம் செய்யக் கூடாது! சரஸ்வதி தேவியை அழைத்து வாருங்கள்!” என்றார்.

“அவளுக்கும் எனக்கும் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவள் கோபித்துக் கொண்டு பாரதத்தின் வடக்கே தவம் புரிகிறாள்.

நீ வேண்டுமானால் அவளை அழைத்துப் பார்!” என்றார் பிரம்மா.
ravi said…
சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம்.

एको वारिजबान्धवः क्षितिनभो व्याप्तं तमोमण्डलं
भित्वा लोचनगोचरोऽपि भवति त्वं कोटिसूर्यप्रभः ।
वेद्यः किन्न भवस्यहो घनतरं कीदृग्भवेन्मत्तम-
स्तत्सर्वं व्यपनीय मे पशुपते साक्षात् प्रसन्नो भव ॥ ५८॥

ஏகோ வாரிஜபா³ந்த⁴வ꞉ க்ஷிதினபோ⁴ வ்யாப்தம்ʼ தமோமண்ட³லம்ʼ
பி⁴த்வா லோசனகோ³சரோ(அ)பி ப⁴வதி த்வம்ʼ கோடிஸூர்யப்ரப⁴꞉ .
வேத்³ய꞉ கின்ன ப⁴வஸ்யஹோ க⁴னதரம்ʼ கீத்³ருʼக்³ப⁴வேன்மத்தம:
ஸ்தத்ஸர்வம்ʼ வ்யபனீய மே பஶுபதே ஸாக்ஷாத் ப்ரஸன்னோ ப⁴வ ..

இது 58வது ஸ்லோகம்.
ravi said…
T.K. ஸுந்தரேஶ்வர ஐயர், மஹான்னுதான் சொல்லணும்.

அவர், முதல் நாள், பகவானை வந்து தரிசனம் பண்ணும்போது, எல்லாரும் தமிழ்ல, பாசுரங்கள் பாடிண்டுருக்கா.

உனக்கு தெரிஞ்சது பாடேன்னவுடனே, ‘மட்டு பற்றின்றி’ – அப்படிங்கற தேவாரத்தை பாடறார்.

‘நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு ‘‘நா நமச்சிவாயமே’’, அப்படின்னு, நாக்கு ‘‘நமச்சிவாயம்’’ ன்னு, சொல்லிண்டே இருக்கணும்.

பகவானுக்கு அவ்வளவு சந்தோஷம்.

ஆஹா! ஹான்னு!, கொண்டாடி, இதையே உபதேசமா, வெச்சுக்கோ, அப்படின்னு, நிறைய ஜபம் பண்ண வைக்கிறார்.

அடிக்கடி, தரிசனம் பண்ணிடுருக்கார்.

ஒரு நாளைக்கு, எல்லாரும் எல்லாம், கொண்டுவாரேள்ளே!! நான் ஒண்ணுமே, கொண்டுவரல்லியே பகவானே!! னு சொல்லும்போது,

நீ உன்னையே கொண்டு வந்திருக்கியேங்கிறார் பகவான்.

நிறைய கைங்கரியம் பண்றார். எழுதறது, ரமணருடைய தம்பி அந்த ஆஸ்ரமத்தை பாத்துக்கிறார்.

அவருக்கு, உறுதுணையாக இருக்கணும் அப்படின்னு, ஒரு வார்த்தை ரமணர், சொன்னதுக்காக, அந்த ஆஸ்ரமரத்துக்கு வேண்டிய support எல்லாம் பண்றார், இந்த ஸுந்தரேஶ்வர ஐயர்.
ravi said…
[28/12, 07:19] +91 96209 96097: *காமக்னே நமஹ*🙏
அடியார்களின் தாழ்ந்த ஆசைகளை அழிப்பவர்
[28/12, 07:21] +91 96209 96097: *மஹாதந்த்ரா* மஹாமந்த்ரா மஹாயந்த்ரா மஹாஸநா🙏
யாரும் அறிய முடியாத வழிபாட்டு முறைகளை தெளிவிப்பவள்
ravi said…
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁
*🪷 சர்வம் சிவமயம்🪷*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁


*மூன்று சிவரகசியங்கள்*

இவற்றை தெரிந்தவன் வாழ்வை வென்று விடுகிறான்..

ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான்.

எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி "அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு" என்கிறான்.
இந்த எமதூதன் நினைக்கிறான், "ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக்கொண்டு போய்விட்டால் இந்த குழந்தைக்கு யார் கதி" என்று எடுக்காமல் திரும்பி விட்டான்.

நீங்களெல்லாம் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு எண்ணங்களை வைத்திருக்கிறீர்கள். அளவுகோல்களை வைத்திருக்கிறீர்கள்.
ஆக, எமதூதன் அந்த குழந்தைக்கு யார் கதி என்று நினைத்து பரிதாபப்பட்டதனால் உயிரை எடுக்காமல் போய்விட்டான்.

ravi said…





*ஆனால், அங்கே எமன் சொல்லிவிட்டார், "உனக்கு சிவலோக ரகசியங்கள் தெரியவில்லை......

கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை......

அது தெரிகிற வரைக்கும் பூமியில் போய் கிட" என்று அவனை தூக்கி பூமியில் போட்டுவிட்டார்.....

அவன் ஒரு பூங்காவில் முனகிக் கொண்டு கன்னங்கரேலென்று கிடக்கிறான். அப்போது அந்த வழியாக வருகிற ஒரு தையற்காரன்,
"என்னடா இது, இங்கே முனகல் சத்தம் கேட்கிறதே" என்று அவனைப் பார்த்து விட்டு, இவனிடம் இருந்த துணியை அவனுக்கு போடுகிறான். மேலும்.... "என்னுடன் வா" என்கிறான்.

எமதூதன் ஒரு வார்த்தை பேசவில்லை.
தையற்காரனுடன் அவன் வீட்டுக்குச் சென்றான். திண்ணையில் எமதூதனும், அந்த தையற்காரனும் படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ravi said…
அந்த தையற்காரனின் மனைவி தையற்காரனை மட்டும், "வா வா வந்து கொட்டிக்கோ" என்று கூப்பிடுவாள்.
அவன் "விருந்தாளி வந்திருக்கிறானே" என்று சொல்வான். அவள் கணவனை திட்டி விரட்டுவாள்.

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று". எமதூதன் ஒன்றும் சொல்ல மாட்டான். போய்க் கொண்டே இருப்பான். ஒரு பத்து நிமிடம் கழித்து இவள் "சரி சரி வா" என்று எமதூதனை மறுபடியும் கூப்பிடுவாள்.....

அப்போது அவன் லேசாக சிரிப்பான். கன்னங்கரேலென்று இருந்த அவன் உடம்பு கொஞ்சம் பொன்னிறமாக மாறும். ஆனால் ஒன்றும் பேச மாட்டான்.

தையற்காரன் சொல்வான், "எனக்கு இந்த காஜா போடுவதற்கு பட்டன் தைப்பதற்கு எல்லாம் ஆளில்லை . தங்குவதற்கு இடமும் சாப்பாடும் போடுகிறேன். எங்கள் வீட்டில் இருந்து கொள்" என்று சொன்னான்.!!
எமதூதன் டெய்லரிங் அசிஸ்டண்ட் ஆகிவிட்டான்.

ravi said…
ஒரு பத்து வருடம் ஆகிறது. ஒரு குதிரை வண்டியில் ஒரு பணக்கார பெண்மணி கை கொஞ்சம் முடமாக இருக்கிற குழந்தை, அத்துடன் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை என இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து தையற்காரனிடம் "இந்தக் குழந்தைக்கு நல்லா தளர்வாக தைக்க வேண்டும். கை கொஞ்சம் சரி இல்லாமல் இருக்கிறது" என்று சொல்வாள்.
எமதூதன் அந்த குழந்தையையும் பார்ப்பான். அந்த பணக்கார பெண்மணியையும் பார்ப்பான். சிரிப்பான். அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் பொன்னிறமாக மாறும்.

ravi said…
இன்னும் ஒரு ஐந்து வருடம் ஆகிவிடும்.

ஒருநாள் ஒரு பெரிய பணக்காரன் பென்ஸ் காரில் வருவான். வந்து "இந்தாங்க பத்து மீட்டர் துணி இருக்கிறது. இதிலே 20 வருஷம் தாக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பராக சபாரி சூட் தையுங்கள்" என்று சொல்லி கொடுத்து விட்டுப் போவான்.

அதற்குள் நம் எமதூதன் தேர்ந்த தையற்காரன் ஆகிவிடுகிறான்.

முதல் நாள் போய்விட்டது.
இரண்டாம் நாள் போய்விட்டது....

ravi said…
தையற்காரன், "நாளை டெலிவரி , அந்த பணக்காரன் வந்து கேட்பான், என்ன சொல்வது?" என்று கேட்கிறான்.
இவன் டர்ரென்று அந்த பேண்ட் துணியை கிழிப்பான். ஒரு தலையணை உறை, பெட் கவர் தைப்பான். தையற்காரன் திட்டுவான்". என் பிழைப்பில் மண்ணை போடுவதற்கு வந்தாயா? இப்போது அவன் வந்து கேட்டால் நான் என்ன பண்ணுவது?" என்பான்.

அப்போது கார் டிரைவர் ஓடி வருவான். "நீங்கள் சபாரி தைக்காதீர்கள். என் முதலாளி இறந்து விட்டார். அதனால் அவருக்கு ஒரு தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்து விடுங்கள்" என்று சொல்வான்.

ravi said…
இவன் முகத்தில் சிரிப்பு வரும் முழுவதும் பொன்னிறமாக மாறி விடுவான்.
அப்படியே மேலே போவான்.....

அப்போது தையற்காரன் சொல்வான், "அப்பா நீ யார்? வாழ்க்கையில் இதுவரைக்கும் மூன்று முறைதான் சிரித்தாய். ஒவ்வொரு தடவை சிரிக்கிற போதும் உன் உடம்பு பொன்னிறமாக மாறியது. அதனால் அதற்கு விளக்கத்தை சொல்லிவிட்டு, நீ போ" என்பான்.

அவன் "நான் எமனுடைய தூதுவன். ஒரு தாய் இறந்து விட்டால், அந்த குழந்தைக்கு யார் கதி என்று அந்த தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால் பூமியில் போய் சிவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா" என்று அனுப்பினார்கள். அதனால் வந்தேன்.

"என்ன தெரிந்து கொண்டாய்?" என்று இவன் கேட்பான்.

முதல் நாள் உன் மனைவி என்னை அடிக்க வந்தாள் அல்லவா...?
அப்போது அவள் முகத்தில் தரித்திர தேவி தெரிந்தது.
பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வாவா என்று கூப்பிடும் போது அன்னை மகாலட்சுமி தெரிந்தார்.
அப்போது, இந்த உலகத்தில் "ஒருவன் பணக்காரன் ஆக இருப்பதற்கும் ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள்தான் காரணம்" என்று தெரிந்து கொண்டேன். இது போய்விட்டு அது வருவதற்கு பத்து நிமிடம் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன்.
#இதுதான் #சிவரகசியம் #ஒன்று!

ravi said…
மனிதர்களிடமே பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால் எந்த கார்டை வைத்து விளையாடுவது என்று தெரியாததினால் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.
"பத்து வருடம் கழித்து ஒரு பணக்கார பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா...?
அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா...?
அதுதான் நான் இதற்கு அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்த குழந்தை.

நிஜமான தாய் ஏழை. அவள் இறந்து விட்டால் கூட இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வதற்கு, இதற்கு கொஞ்சம் தளர்வாக தைக்கவேண்டும் என்று சொல்கிற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான். இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது முறை சிரித்தேன்.
ஒரு எமதூதன் ஆகிய எனக்கே பச்சாதாபம் இருக்கிறபோது, இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது எனக்கு தெரிந்தபோது #இரண்டாவது #சிவ ரகசியம் #புரிந்தது.

கடவுள் எல்லாம் காரண காரியங்களோடு நடத்துகிறான்......

மூன்றாவது #சிவ_ரகசியம் மூன்று நாட்களில் சாகப் போகிறவன் இன்னும் 20 வருஷம் நான் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நினைத்துக்கொண்டு, நன்றாக 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணி தை என்று சொன்னானே!!
"எனக்கு தெரியும் அவன் சாகப்போகிறான்" என்று, அதனால்தான் நான் துணி தைக்கவே இல்லை.

அவன் இறந்த அந்த நேரத்தில் துணியை கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்".
இந்த ஜனங்கள் இந்த உலகத்தில் ஏதோ நூறு வருஷம் இருநூறு வருஷம் கொட்டகை போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.!!

நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்தக் கலியுகத்தின் எதார்த்தமான உண்மை!

அதுவே தெரியாமல் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன் என்றும், மற்றவன்தான் செத்துக் கொண்டிருக்கிறான் என்றும் நினைக்கிறான் அல்லவா? அதுதான் #மூன்றாவது #சிவரகசியம்!!

அதனால்தான் இந்த உலகத்தில் அவன் திறமையாக செயலாற்ற முடியாமல் இன்னும் 20 வருஷம் கழித்து நடக்கப் போகிற குழந்தையுடைய கல்யாணத்திற்கு இன்றைக்கு காசு இல்லையே என்று வருத்தப்படுகிறான்!!

இன்னும் 15 வருடம் கழித்து கல்லூரியில் படிக்கப் போகிற பையனுக்கு பணம் இல்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான்!!!
அதனால்தான் உலகத்தில் நிம்மதி இல்லாமல் இருக்கிறது. பேசிக் கொண்டிருக்கிறபோது இப்போதே செத்துப் போவோம், என்று நினைத்தால், நீ சந்தோஷமாக இருப்பாய்!

இந்த மூன்று ரகசியங்கள்.....

அதாவது ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் நடக்கிறது.....

இரண்டாவது எது நடந்ததோ அதற்கு கடவுள் ஒரு மாற்றுவழி வைத்திருப்பார்.
மனிதனின் மனநிலையில் உள்ள ஈகோவினாலும், அறியாமையினாலும் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மூன்றாவது எந்த நேரத்திலும் சாவு வரலாம்.
இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த #அஞ்ஞானம்தான் உலகில் துக்கங்களுக்கு எல்லாம் காரணம்.

இவைதான் அந்த மூன்று #சிவ_ரகசியங்கள் என்பான்.....

எனவே, நாமும் இந்த சிவ ரகசியங்களை புரிந்து கொண்டு வாழப் பழகி விட்டால், நம் உடலில் உயிர் இருக்கும் வரை நிம்மதியாக வாழலாம்!!

சர்வம் சிவமயம்


✴️✴️🟥🟥✴️✴️

*சர்வம் சிவமயம்*
*ஆன்மீக பயணம்*

🟥🟥🟨🟨🟥🟥
ravi said…
பொன்னான புதன்கிழமை வணக்கம் 🙏

*வெண்பூசணி பலன்கள்:*

*_பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும். ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும். சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்._

தங்களின் நட்புகளுக்கும், உறவுகளுக்கும் பகிரவும்..

என்றும் அன்புடன் 🙂,

நலம் நாடுபவர்களின் நாடி
ravi said…
இன்னிக்கு முகுந்த மாலையில 39, 40 ஆவது ஸ்லோகம் பார்க்கப் போறோம். இரண்டையும் சேர்த்து படிக்கலாம். அந்த இரண்டுலயும் சேர்த்து ஒரு கருத்தைத்தான் சொல்றார்.

श्रीनाथ नारायण वासुदेव श्रीकृष्ण भक्तप्रिय चक्रपाणे ।

श्रीपद्मनाभाच्युत कैटभारे श्रीराम पद्माक्ष हरे मुरारे ॥३९॥

अनन्त वैकुण्ठ मुकुन्द कृष्ण गोविन्द दामोदर माधवेति ।

वक्तुं समर्थोऽपि न वक्ति कश्चित् अहो जनानां व्यसनाभिमुख्यम् ॥ ४०॥

ஸ்ரீனாத² நாராயண வாஸுதே³வ ஸ்ரீக்ருʼஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே ।

ஸ்ரீபத்³மனாபா⁴ச்யுத கைடபா⁴ரே ஸ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥ 39 ॥

அனந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ।

வக்தும் ஸமர்தோ²ऽபி ந வக்தி கஸ்சித் அஹோ ஜனாநாம் வ்யஸனாபி⁴முக்²யம் ॥ 40॥

ன்னு சொல்றார்.
ravi said…
இந்த நாமங்கள் எல்லாம் சொல்லி, ஸ்ரீநாதா, நாராயண, வாசுதேவா, ஸ்ரீ கிருஷ்ணா, பக்தப்ப்ரிய, சக்ரபாணே, ஸ்ரீபத்மநாப, அச்யுத, கைடபாரே, ஸ்ரீராம, பத்மாக்ஷா, ஹரே, முராரே, அனந்த, வைகுண்ட, முகுந்த, கிருஷ்ண, கோவிந்த, தாமோதர, மாதவன்னு, சொல்ல முடியும்.

‘ *வக்தும் ஸமர்தோ²ऽபி’* –

இந்த பகவந் நாமங்கள் எல்லாம் சொல்றதுக்கு நமக்கு சக்தி இருக்கு.

ஆனா ‘ *ந வக்தி கஸ்சித்’*

யாரும் இதை சொல்ல மாட்டேங்கறாளே!😰😰😰😰😰😰😰😰😰
ravi said…
पुरतः कदा न करवै पुरवैरिविमर्दपुलकिताङ्गलताम् ।

पुनतीं काञ्चीदेशं पुष्पायुधवीर्यसरसपरिपाटीम् ॥ २१॥

21. Puratha kadha nu kara vai pura vairi vimardha pulakithanga lathaam,

Punathim Kanchi desam pushpa aayudh veerya sarasa pari paatim.

புரதஃ கதா ன கரவை புரவைரிவிமர்தபுலகிதாங்கலதாம் |

புனதீம் காஞ்சீதேஶம் புஷ்பாயுதவீர்யஸரஸபரிபாடீம் ||21||
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 37*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
பரமேஸ்வரனை ஸ்படிகத்திலான லிங்கம், பாதரசத்தாலானது, சந்திரகாந்தக் கல்லால் ஆனது,

ஹிமயமலைக் கல்லாலானது, மரகதக் கல்லால் ஆனது என்று பார்க்கும்போது சிவன் தெரிய மாட்டார்.

அந்தந்த உலோகம், கல், வஸ்து மட்டும் தான் தெரியும்.

அம்பாள், தானே மண்ணெடுத்து கையினால் பிடித்து வைத்த சிவலிங்கத்தை அவள் மண்ணாக பார்க்கவில்லை.

அதை அருவத்தின் உருவமாக பார்த்தாள்,

உமாமகேஸ்வரன் அவளுக்கு மணலாக இல்லாமல் மஹேஸ்வரனாக தென்பட்டான்.

அவனைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தாள்.

ஆசையாக ஆலிங்கனம் செய்து கொண்டாள்.

எல்லாவற்றிலும் உள்ள சர்வேஸ்வரன் மண்ணிலும் தன்னை அவளுக்கு காட்டினான்.

காஞ்சி நகருக்கே பெருமை தரும் ஏகாம்ரநாதர், காமராஜபீடம், சக்தி ஸ்தலம் ஆகியவை.

அம்பாள் காஞ்சிபுராதீஸ்வரி.

மன்மதனுக்கு உயிரளித்து, அவன் ஆயுதங்களை தானும் கையில் ஏந்திய காமாக்ஷியை தரிசனம் செய்யும் பாக்யம் கிடைக்குமா? என்று ஏங்குகிறார் மூகர் .🙌🙌🙌
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 441* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*178 நிர்ப்பேதா --*

எந்த வித்தியாசமும் லலிதாம்பிகைக்கு கிடையாது.

சர்வமும் ப்ரம்மமயத்தில் எப்படி பேதம் கண்டுபிடிப்பது?🙏
ravi said…
[28/12, 11:06] Jayaraman Ravilumar: *ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ஸ்ரீ-நகர வர்ணனை

*💐💐💐(55-63)*
[28/12, 11:06] Jayaraman Ravilumar: (ஸ்ரீநகர வர்ணனை நிறைவு பெற்று பண்டாசுர வதம் தொடர்கிறது)

(பண்டாசுர வதம்)🏹
ravi said…
❖ *64 தேவர்ஷி கண ஸங்காத ஸ்தூயமாநாத்ம வைபவா =*

தேவாதி தேவ கணங்களும் முனிவர்க்குழாமும் போற்றிப் புகழும் பெருமையும் உயர்வும் கொண்டவள்.
ravi said…
அம்மா உனை போற்றாதவர் உளரோ ...

கண்டு புகழாதோர் உண்டோ

பார்த்து பரவசம் கொள்ளாதோர் கண்டதுண்டோ

நினையாதோர் வாழ்ந்ததுண்டோ

நினைப்போர் வீழ்ந்ததுண்டோ

துதியாதோர் துக்கம் அன்றி வேறு கண்டதுண்டோ

துதிப்போர் சொர்க்கம் பெறாமல் இருந்ததுண்டோ

மறந்தோர் மண்ணுக்கு இறை அன்றோ

உன் நினைவு இருப்போர் மண்ணிலும் மகேஸ்வரன் காணத் தவறியது உண்டோ

மரகதமே மாணிக்கமே மாதுளம் அதரம் கொண்டவளே ...

க்ஷண நேரம் உனை நினையா விடில் நிறுத்தி விடுவாய் நான் சுவாசிக்கும் காற்றை 🙌🙌🙌
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

23 –
கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு

உவகை
வெறி கொள அருள் அருணாசலா (அ)🙏🙏🙏
ravi said…
கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன.

அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன.

நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன.

இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள்.

அவர்கள் *அருணாசலா* என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள்.

இந்தக் காரணங்களால், இந்தக் குளம்

நம் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது.

என் ஆருயிர் தோழியே

தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில்,

நம் சங்கு வளையல்கள் சலசலக்க,

கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப,

மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

இல்லையடி நான் வரமாட்டேன் ...

தோழி சொல்கிறாள்

கேள் நான் வாரா காரணம் ...

என் கண்கள் ஒரு தடாகம்

அதில் என் அருணாசலன் தாமரையாய் மலர்ந்துள்ளான் ...

கரையும் அழுக்குகள் என் பாவங்கள் ...

தாமரை எங்கு உள்ளதோ அங்கே வண்டு வரும் அன்றோ ...

அதோ உமை எனும் வண்டு என் கண்களில் உள்ள அருணாசலம் எனும் தாமரையை மொய்ப்பதை பார் ...

இரவில் அவனே மலரும் குவளைகள்

அவன் அணியும் திங்கள் குவளை கண்டு காதல் சிந்துவதை பார் ...

மேகம் ஓடும் என் கண்களை விடுத்து நீ சொல்லும் இடம் ஏன் வரவேண்டும் ... ??

இன்னும் கேளடி என் கண்மணி !!

அவன் என் கரங்களில் அவன் சொரூபம் எனும் மதுவை வைத்துள்ளான் ..

அதனால் கள் வெறி கொண்டுள்ளேனடி...

உன்னுடன் தள்ளாடி தள்ளாடி வர இயலாதே 🪷🪷🪷
ravi said…


*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் :*

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது.

தேவர்களின் விடிகாலை பொழுதாக போற்றப்படும் மார்கழியில் திருவாதிரை பண்டிகை ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவனுக்கு உகந்த நாள். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளான சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை.

ravi said…
சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்தி காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் அவிர்பரித்து நின்ற நாள் ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்.

"பிறவா யாக்கைப் பெற்றேன் பெரியோன்" என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவபெருமானை குறிக்கிறது. சேந்தனார் வீட்டுக்கு களி சாப்பிட நடராஜ பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜ பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது.

ravi said…
சிவபெருமான் சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திரம் நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திரு நடனம் கண்டால் ஆச்சரியப்பட வைக்கும். இறைவனின் நடனமே உலகின் அசைவிற்கு காரணமாக இருக்கிறது. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் 'காஸ்மிக் நடனம்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதப்படுகிறது. அதனாலயே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று திருமூலர் கூறியுள்ளார். கடவுள் துகள், ஹிக்ஸ் போசான் என்று பலவற்றை கண்டாலும் அது நடராஜரை தொடர்புபடுத்துகிறது. திருமூலரும் அப்படியே கூறுகிறார். கடவுளை, அணுவின் அணுவே என்று பாடுகிறார். அதையே சிவமாக பார்க்கிறார்.

ravi said…
ஒவ்வொரு தமிழ் மாதமும் திருவாதிரை நட்சத்திர தினம் என்பது சிவ வழிபாட்டுக்கு உகந்தது. அந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரத நாள். இந்த நாளில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

இந்நாளில் நாம் காணும் நடராஜரின் அற்புதமான நடன திருக்காட்சியே ஆருத்ரா தரிசனம் என்று போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் பெண்கள் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். இதை மையமாகக் கொண்டு பெண்கள் சிலர் திருவாதிரை விரதம் எடுத்து தாங்கள் தாலியினை மாற்றிக்கொண்டு சிவபெருமானை வழிபட்டு தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்.

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த இரு விழாக்களிலும் மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.

இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தினந்தோறும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்கிறார்.

29ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், 30ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 31ஆம்தேதி வெள்ளி பூத வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

ஜனவரி 1ஆம் தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 2ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 3ஆம் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 4ஆம் தேதி தங்க ரதத்திலும் சாமி வீதி உலா நடைபெறும்.

தொடர்ந்து 5ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. ஆருத்ரா தாிசனம் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் திருவாபரண அலங்கார காட்சி, சிற்சபையில் ரகசிய ஸ்தாபன பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறுகிறது.

தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சாமியும், அம்பாளும் சிற்சபைக்கு எழுந்தருளும் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. 7ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா, 8ஆம் தேதி இரவு ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறும்.

இதனிடையே முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற உள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா மாணிக்கவாசருக்கு காப்பு கட்டுடன் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 5ல் மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவல நிகழ்ச்சியும் அன்று இரவு ராட்டின திருவிழாவும் நடைபெறும்.

மேலும் முக்கிய நிகழ்வான ஜனவரி6 ஆருத்ர தரிசன விழாவும் நடைபெற உள்ளது. இதையொட்டி நடராஜரும் சிவகாமி அம்மனும் கிரிவலப் பாதையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

ஓம் நமசிவாய
ravi said…
https://chat.whatsapp.com/HcBx62FBO4aCfnokryZVZp

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் :*

தேவர்களின் விடிகாலை பொழுதாக போற்றப்படும் மார்கழியில் திருவாதிரைப் பண்டிகை ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவனுக்கு உகந்த நாள். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளான சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை.

ravi said…


சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற நாள் ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்

"பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்" என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சேந்தனார் வீட்டுக்கு களி சாப்பிட நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது.

சிவபெருமான் சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

ravi said…
மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால் ஆச்சரியப்பட வைக்கும். இறைவனின் நடனமே உலகின் அசைவிற்கு காரணமாக இருக்கிறது. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் 'காஸ்மிக் நடனம்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதப்படுகிறது. அதனாலேயே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று திருமூலர் கூறியுள்ளார். கடவுள் துகள், ஹிக்ஸ் போசான் என்று பலவற்றை கண்டாலும் அது நடராஜரை தொடர்புபடுத்துகிறது, திருமூலரும் அப்படியே கூறுகிறார். கடவுளை, அணுவின் அணுவே என்று பாடுகிறார். அதையே சிவமாகப் பார்க்கிறார்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் திருவாதிரை நட்சத்திர தினம் என்பது சிவ வழிபாட்டுக்கு உகந்தது. அந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரத நாள். இந்த நாளில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

இந்நாளில் நாம் காணும் நடராஜரின் அற்புதமான நடனத் திருக்காட்சியே ஆருத்ரா தரிசனம் என்று போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் பெண்கள் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். இதை மையமாகக் கொண்டு பெண்கள் சிலர் திருவாதிரை விரதம் எடுத்து தங்கள் தாலியினை மாற்றிக் கொண்டு சிவபெருமானை வழிபட்டு தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வர்.

சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த இரு விழாக்களிலும் மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சிய அளிப்பது தனிச்சிறப்பாகும்.

இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தினம்தோறும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்கிறார்.

29ம் தேதி வெள்ளி சந்திர பிற வாகனத்திலும், 30ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 31ஆம் தேதி வெள்ளிப் பூத வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

ஜனவரி 1ஆம் தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், இரண்டாம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், மூன்றாம் தேதி தங்க கைலாச வாகனத்திலும், நாலாம் தேதி தங்க ரதத்திலும் சாமி வீதி உலா நடைபெறும்.

தொடர்ந்து ஐந்தாம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. ஆருத்ரா தரிசனம் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிகாலை இரண்டு மணி முதல் காலை 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் திருவாபரண அலங்கார காட்சி, திற்சபையில் ரகசிய ஸ்தாபன பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறுகிறது.

தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சாமியும், அம்பாளும் திற்சபைக்கு எழுந்தருளும் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ஏழாம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா, எட்டாம் தேதி இரவு ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

இதனிடையே முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற உள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா மாணிக்கவாசருக்கு காப்பு கட்டுடன் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி ஐந்தில் மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவல நிகழ்ச்சியும் அன்று இரவு ராட்டின திருவிழாவும் நடைபெறும்.

மேலும் முக்கிய நிகழ்வான ஜனவரி6 ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது. இதையொட்டி நடராஜரும் சிவகாமி அம்மனும் கிரிவலப் பாதையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘 ஓம் நமசிவாய 🙏*
ravi said…
<< திருப்பாவையில் திவ்ய தேசங்கள் >>

1. மார்கழித் திங்கள் - நாராயணனே நமக்கே பறை தருவான் - பரமபதம்.

2. வையத்து - பாற்கடலில் பையத் துயின்ற - க்ஷீராப்தி.

3. ஓங்கி - ஓங்கி உலகளந்த உத்தமன் - திருக்கோவலூர்.

4. ஆழிமழை - பாழியம் தோளுடை பத்மநாபன் - திரு அனந்தபுரம் .

5. மாயனை - வடமதுரை மைந்தன் - மதுரா .

6. புள்ளும் - வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து - திருவண் வண்டூர்.

7. கீச்சு கீச்சு - கேசவனைப் பாடவும் - திருவாய்ப்பாடி.

8. கீழ்வானம் - தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் - வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சி.

9. தூமணி மாடம் - குன்றின்மேல் விளக்கு - திருக் கடிகை.

10. நோற்று சுவர்க்கம் - நாற்றத் துழாய்முடி நாராயணன் - திருக்காட்கரை.

11 கற்றுக் கறவை - முகில் வண்ணன் பேர் பாட - காளமேகப் பெருமாள் திருமோகூர்.

12. கனைத்திளம் - தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்- தில்லை திரு சித்திர கூட்டம்.

13. புள்ளின்வாய் - பள்ளிக் கிடத்தியோ - திருக்குடந்தை.

14. உங்கள் புழக்கடை - நாவுடையாய் - செந்தமிழும் வடுக்கலையும் திகழ்ந்த நாவர் - தேரழுந்தூர்.

15. எல்லே - மாற்றாரை மாற்றழிக்க வல்லான் மாயன் - திருவல்லிக்கேணி.

16. நாயகனாய் - மாயன் மணிவண்ணன் - திருக்குறுங்குடி.

17. அம்பரமே - அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் - சீர்காழி.

18. உந்து மத களிறு - பந்தார் விரலி மைத்துனன் - திருநறையூர்.

19. குத்து விளக்கு - மலர்மார்பா - திருவிடவெந்தை.

20. முப்பத்து மூவர் - செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் - திருப்பாடகம்.

21. ஏற்ற கலங்கள் - ஊற்றமுடையாய் பெரியாய் - பெரும்புறக் கடல் - திருக்கண்ண மங்கை.

22. அங்கண்மா ஞாலம் - அரசர் அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய்து - திருமாலிருஞ் சோலை.

23. மாரி மலை முழஞ்சில் - பூவை பூ வண்ணா - திருவரங்கம்.

24. அன்றிவ் உலகம் - குன்று குடையாய் - கோவர்த்தனம்.

25. ஒருத்தி - கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால் - திருக்கண்ணபுரம்.

26. மாலே மணிவண்ணா - ஆலின் இலையாய் - பூரி ஜெகன்நாதர்.

27 கூடாரை வெல்லும் - சீர் கோவிந்தா - (திருவேங்கடம்).

28 கற்றுக் கறவை - குறை ஒன்றுமில்லாத கோவிந்தா - (விருந்தாவனம்)

29 சிற்றம் சிறுகாலை - பறை கொள்வான் கோவிந்தா - (துவாரகை.)

30 வங்கக் கடல் - அணிபுதுவை - (ஸ்ரீவில்லிபுத்தூர்).

(P B அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி தொகுத்ததில் எடுத்தது)
ravi said…
*இன்றைய சிந்தனை (29.12.2022)*
......................................................

*‘’வாழ்வதற்கு ஆயிரம் வழிகள்...!"*
.......................................................

போராட்டமே இல்லாத வாழ்க்கை இங்கு யாருக்கும் அமைவதில்லை...

போராட்டத்தை சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது. பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துக் கொண்டேதான் இருக்கிறது...

பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தன் தேவைகளை பூர்த்தி செய்கிறது..

போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து, போராட்டத்தில் மடிவதுதான் வாழ்க்கை. இன்று மனிதன், போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றான், அதைத்தான் விரும்புகின்றான்...

வாழ்க்கையில் தங்கள் குறிக்கோளை நிலை நிறுத்திக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் போராட வேண்டி உள்ளது...

பூந்தோட்டத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது மலர்கள் பூப்பதுண்டு. ஆனால்!, அவை நிலைப்பது இல்லை, அது நியதியும் இல்லை...

அதுபோலத்தான் வாழ்க்கையெனும் பூந்தோட்டத்தில் இன்பம்,துன்பம் வருவதும் போவதும்.. எவ்வாறு பூந்தோட்டத்தில் மலர்ந்த ஒரு பூ நிலைப்பது இல்லையோ அதேபோல்தான் வாழ்க்கையும்...

போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே வெற்றி பெற இயலாது.. போராட்டம் இல்லை என்றால் வாழ்க்கை உப்பு சப்பு இல்லாமல் போய்விடும்.

வாழ்க்கையில் உங்களுக்கு அழுவதற்கு நூறு காரணங்கள் இருந்தாலும் சிரிப்பதற்கு என்னிடம் ஆயிரம் காரணங்கள் இருக்கிறது என்று வாழ்ந்து காட்டுங்கள்.

சரியான, நேர்மையான வாழ்க்கை பயணப் பாதை முட்கள் நிறைந்த கரடு முரடான பாதைதான்...

இந்தப் பாதையில் முட்களாகவும், கரடு முரடான கற்களாகவும், பிறரின் அவமானப் பேச்சுக்களும், பழிச்சொற்களும், நியாயமில்லாத விமர்சனங்களும்தான் நிறைந்து இருக்கும்...

*ஆம் தோழர்களே...!*

🟡 *களை இல்லாத தோட்டம் இல்லை; அதுபோலவேதான், போராட்டம் இல்லாத வாழ்க்கையும் இல்லை. வாழ்க்கையை அழகானதாக மாற்றி கொள்வது நம் கையில்தான் உள்ளது...!*

🔴 *எல்லோர் வாழ்விலும் இன்ப, துன்பங்கள் உள்ளன. நாம் அவற்றை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். ஆசையை குறைத்துக் கொள்ள வேண்டும். மன நிறைவு இருந்தாலே போதும், வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்...!!*

⚫ *போராட்டங்கள் இருந்தாலும் கூட, யாரும் வாழ்க்கையை வெறுப்பதில்லை. போராட்டங்களையெல்லாம், ஏற்றுக் கொள்ளவும், நமக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளவும் பழகினாலே போதும், வாழ்க்கை பூந்தோட்டமே...!!!''*

🔘 _*நீங்கள் எப்படிப்பட்ட பாதையில் பயணம் செய்தாலும் உங்கள் நற்சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்புங்கள். வாழ்க்கைப் பயணம் இனிதாய் அமையும். வாழ வாருங்கள்; வாழ்க்கைக்கு வழிகள் ஆயிரம் உள்ளன..✍🏼*_

ravi said…
பாதாரவிந்த சதகம் !

56.ப்ரணாமோத்யத் ப்ருந்தாரக
முகுட மந்தார கலிகா-
விலோலல் லோலம்ப ப்ரகர மய
தூம ப்ரசுரிமா
ப்ரதீப்த: பாதாப்ஜ த்யுதி விததி
பாடல்ய லஹரீ-
க்ருஸானு: காமாக்ஷ்யா மம
தஹது ஸம்ஸார விபிநம்

வணங்க முன் வந்த தேவர்களின் கிரீடத்தில். சூடியுள்ள மந்தாரமலர்களில் மொய்க்கின்ற தேனீக்களின்கூட்டமாகிற அடர்ந்த புகை கொண்டதும், கொழுந்து விட்டெரிவதுமான காமாக்ஷியின் தாமரைபோன்ற திருவடி ஒளிவரிசையின் செந்நிற அலையான அக்கினி, எனது பிறப்பிறப்புத் தொடரை எரிக்கட்டும்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…

பழனிக் கடவுள் துணை -29.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-12

மூலம்:

முருகா! கடம்புசெச்சை மொய்க்குரவன்(று) என்பாட்(டு)
ஒருகாலம் நீயணிந்த(து) ஓர்ந்தும் – பெருகார்வம்
எய்திலேன் அந்தோ எழிற்பழனி யப்பா! என்
செய்தியோ? மாயச் செயல் (12).

பதப்பிரிவு:

முருகா! கடம்பு செச்சை மொய்க் குரவ! என்று என்பாட்டு
ஒரு காலம் நீ அணிந்தது ஓர்ந்தும் – பெருகு ஆர்வம்
எய்திலேன்! அந்தோ! எழில் பழனியப்பா! என்
செய்தியோ? மாயச் செயல்!! (12).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

செய்தியோ- செய்தாயோ?
மாயம்- சூது;
செச்சை- வெட்சி;
மொய்- குரா; (கடம்பு, வெட்சி, குரா இவை எல்லாம் முருகனுக்கு உரிய மலர்கள்);

"முருகா! கடம்பு, வெட்சி, குரா எல்லாம் அணிந்த ஞான குருவே!" என்று நான் அணிந்த பாடல்களை எல்லாம் நீ ஒரு காலம் விருப்புடன் சூடிக் கொண்டது நான் தெளிந்து உணர்ந்தும், பெருகுகின்ற ஆர்வம் எய்திலேன்! அந்தோ! அழகே உருவான பழனியப்பா! என் செய்தாயோ? என்ன மாயச் செயல் செய்தாயோ!! மாயவன் மருகா! நீயே புகல்!

"உன் மாமன் மெச்சும் மாயம் பல புரி முருகா! என் தாயென என்னை நித்தமும் நீயே கா!!"

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺" Priyam on the devotees... he does not know what he is doing.. Vittalan .... a simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺Janābāi is a great devotee and disciple of Namadeva of Vithalar who has a temple with Rukmini in Bhandaripuram, Solapur district of Maharashtra state, India. Janabai was born in the 13th century AD and attained samadhi in 1350.

🌺 Janabai, a great devotee of Panduranga Vittalar, composed devotional songs for Vittalar called Abangam.

🌺Janabhai was born in the 13th century AD in a town called Gangaket in Parbani district of Maharashtra state.

🌺 After the death of Janabai's mother in his childhood, his father took him to Bandaripuram and started doing housework in Namadeva's father's house.

🌺Janabhai was only a few years older than Namadev. Like Namadeva, Janapai also composed Bhatigangas with great devotion to Lord Vittalar.

🌺Jadaloda Kari Jani | Kera Pari Chakrapani || Badi Keuniya Shrim | Neuneeam daghi thuri aisa pakdeesa poolala | Neesa Kama Karam Lagala || Janim Mahne Vidopala
Kaya Uttarai hovum thula ||🌹🌺

🌺Janabai collects garbage everywhere to throw it away. But before she does, Pandurangan throws the garbage into the basket with his hand.

🌺Then he puts the garbage basket on his head and throws it away. Don't do all this.

🌺 Due to the love of the devotees... he does not know what he is doing. Janabayi says what can I do for him who loves the milk of devotees like this.🌹🌺

🌺🌹vazhga Vayakam 🌹vazhga Vayakam 🌹vazhga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *பக்தர்கள் மேல் உள்ள ப்ரியத்தால்... தான் என்ன காரியம் செய்கிறோம் என்று தெரியாமலேயே இருக்கிறான்.. விட்டலன் ....விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺ஜனாபாய் (Janābāi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் எனும் ஊரில் ருக்மணியுடன் கோயில் கொண்டுள்ள விட்டலரின் பரம பக்தையும், நாமதேவரின் சீடரும் ஆவார். ஜனாபாய் கிபி 13-ஆம் நூற்றான்டில் பிறந்து, 1350-இல் சமாதி அடைந்தார்.

🌺பாண்டுரங்க விட்டலரின் பரம பக்தையான ஜனாபாய், விட்டலர் மீது இயற்றி பாடியுள்ள பக்திப் பாடல்களை அபங்கம் என்பர்.

🌺மகாராட்டிரா மாநிலத்தின் பர்பணி மாவட்டத்தில் உள்ள கங்காகேத் எனும் ஊரில் கிபி 13-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் ஜனாபாய்.

🌺ஜனாபாயின் சிறுவயதில் தம் தாயார் இறந்த பிறகு, தந்தையால் பண்டரிபுரம் அழைத்துச் செல்லப்பட்டு, நாமதேவரின் தந்தை வீட்டில் வீட்டு வேலைகள செய்யத் துவங்கினார்.

🌺ஜனாபாய் நாமதேவரை விட வயதில் சில ஆண்டுகளே மூத்தவர். நாமதேவரைப் போன்றே ஜனாபாயும், பகவான் விட்டலர் மீது பெரும் பக்தி கொண்டு பதிகங்கங்கள் இயற்றினார்.

🌺ஜாடலோட கரி ஜனி | கேர பரி சக்ரபாணி || பாடி கேஊனியா ஸ்ரீம் | நேஊனீயாம் டாகீ தூரி ஐஸா பக்தீசா பூலலா | நீச காம கரும் லாகலா || ஜனிம் மஹ்ணே விடோபாலா
காய உத்தராயீ ஹோவும் துலா ||🌹🌺

🌺ஜனாபாய், குப்பைகளைப் பெருக்கி தூக்கிப்போடுவதற்காக அங்காங்கே கூட்டுகின்றாள். ஆனால் அவள் செய்வதற்கு முன்னமே அந்த குப்பைகளை தன் கையால் கூடையில் கொட்டி விடுகிறான் பாண்டுரங்கன்.

🌺பிறகு அந்த குப்பை கூடையை தன் தலைமேல் வைத்து தூரத்தில் எறிந்துவிட்டு வருகிறான். இதையெல்லாம் செய்யக்கூடாது.

🌺பக்தர்கள் மேல் உள்ள ப்ரியத்தால்... தான் என்ன காரியம் செய்கிறோம் என்று தெரியாமலேயே இருக்கிறான். இப்படி பக்தர்களின் பால் அன்பு வைத்திருக்கும் இவனுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும் என்கிறாள் ஜனாபாயீ.🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது’ என்ற வார்த்தை இப்போது ரொம்பவும் அடிபடுகிறது. சர்க்கார் திட்டங்கள் இதற்குத்தான் என்கிறார்கள். எல்லோருக்கும் வயிறு நிரம்பச் சாப்பாடு, மானத்தையும், குளிர் வெயிலையும் காப்பாற்றப் போதுமான வஸ்திரம், வசிப்பதற்கு ஒரு சின்ன ஜாகை இருக்க வேண்டியதுதான். இதற்கே சர்க்கார் திட்டம் போட வேண்டும். இதற்கு அதிகமாகப் பொருளைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் ‘வாழ்க்கைத் தரம்’ என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பதுதான். தேவைகளை அதிகமாக்கிக்கொண்டு அவற்றுக்காக ஆலாப் பறப்பதால் நிறைவு ஒருவருக்கும் கிடைக்காது. இதைப் பிரத்யக்ஷத்தில் பார்க்கிறோம். நாம் மேலைநாட்டுக் காரர்கள் மாதிரி, போக போக்கியங்களுக்குப் பறக்கிறோம். போகத்தின் உச்சிக்குப்போன மேல் நாட்டுக்காரர்களோ அதில் நிறைவே இல்லை என்பதால் நம்முடைய யோகத்துக்கு, வேதாந்தத்துக்கு, பக்திக்குக் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துக்கூட நாம் புத்தி பெறவில்லை என்றால், அதுதான் துரதிருஷ்டம்.

ravi said…
ஒருத்தன் பீரோ நிறைய துணி வைத்திருந்தாலோ, கண்ட வேளையில் ஹோட்டலுக்குப் போய் கண்டதைத் தின்பதாலோ, வீட்டை ஏர்-கண்டிஷன் செய்து கொண்டு விட்டதாலோ அவனுடைய வாழ்க்கை தரமாகி விடாது. மனம் நிறைந்திருந்தால் அதுவே வாழ்க்கைத் தர உயர்வாகும்! மன நிறைவு வெளி வஸ்துக்களால் ஒருநாளும் கிடைக்காது. வெளி வஸ்துக்களைச் சேர்க்க சேர்க்க மேலும் மேலும் சௌகரியத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டு புதுப்புது வஸ்துக்களைக் கண்டுபிடித்து வாங்கிக் கொண்டேதான் இருப்போம். நாம் இப்படி இருப்பதைப் பார்த்து வசதியில்லாதவர்களுக்கும் இதே ஆசை வெறியை உண்டாக்கி விடுகிறோம். இதனால் போட்டி, சண்டை எல்லாம் உண்டாகின்றன. வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக ஏக முஸ்தீபுடன் இறங்கிய பின்தான் சகலருக்கும் எப்போது பார்த்தாலும், எதையாவது வாங்கிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது.
ravi said…
நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்கள்தான். இப்போது கோடீசுவரனிலிருந்து எல்லோருக்கும் இந்தக் குறை இருப்பதால் எல்லோருமே தரித்திரர்களாகத்தான் ஆகியிருக்கிறோம். பணம் இல்லாவிட்டால்தான் தரித்திரம் என்பதில்லை. பணம் அதிகமாகிவிட்டதாலேயே, எல்லோரும் தரித்திரர்களாகியிருக்கிறோம்.

ravi said…
இந்த போக்கிய வஸ்துக்கள் அதிகமாக ஆக, ஆத்மிக நாட்டம், நல்ல சித்தம் எல்லாமே போய் விடுகின்றன. மேல்நாட்டில் எத்தனை சஞ்சலம், விபசாரம், கொலை, கொள்ளை என்று பார்க்கிறோம்! அதெல்லாம் இங்கேயும் வருவதற்குப் பூர்ண கும்பம் கொடுக்கிறோம். வேண்டாத வஸ்துக்களை அவசியத் தேவை என்று நினைத்துக் கொண்டு அவற்றுக்காக ஆத்மாபிவிருத்தியை அலட்சியம் செய்துவிட்டு, பணவேட்டையிலேயே இறங்கியிருப்பதுதான் நவீன வாழ்க்கை முறை. போதுமென்ற மனசோடு நிம்மதியாக வாழ்ந்த காலம் போய்விட்டது.

ravi said…
இப்போது யாருக்குமே நிறைவு இல்லை; பழைய நிம்மதி இல்லை. சமூக வாழ்விலும் பரஸ்பர சௌஜன்யம் போய், போட்டியும், பொறாமையும் வலுத்து விட்டன. ஒருத்தன் ஆடம்பரமாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதில் ஆசை ஏற்படத்தானே செய்யும்? எல்லோருக்கும் எல்லா ஆசையும் நிறைவேறுவது எங்கேனும் சாத்தியமா? ஏமாற்றம் உண்டாகிறது; ஆசாபங்கத்தில் துவேஷம் பிறக்கிறது.

ravi said…
எனவே, வசதி உள்ளவர்கள் எளிய வாழ்க்கை நடத்துவது அவர்களுக்கும் நல்லது; மற்ற ஜனசமூகத்துக்கும் நல்லது. பழைய காலத்தில் இப்படித்தான் இருந்தது. வேத சாஸ்திரத்தை ரக்ஷித்தவர்களுக்கு எத்தனை ராஜமானியம் வேண்டுமானாலும் தருவதற்கு ராஜாக்கள் சித்தமாயிருந்தார்கள். ஆனாலும், அவர்கள் பொருளில் ஆசை வைக்கவே கூடாது என்று சாஸ்திரம் விதித்தது. இதை இன்றைக்கும் சில வார்த்தைகளிலிருந்தே ஊகிக்கலாம். ‘வெண்கலப் பானை‘ ‘வைர ஓலை‘ போன்ற வார்த்தைகளைக் கேட்கிறீர்கள். பானை, மண்ணால் செய்தது. முற்காலத்தில் வசதி உள்ளவர்களும் பானைதான் வைத்து சமைத்தார்கள். அப்புறம் வெண்கலப் பாத்திரம் வந்தது. அதுவே வெண்கலப் பானை ஆகிவிட்டது. ‘ஓலை‘ என்பது காதிலே வெறும் பனை ஓலையைச் சுருட்டிப் போட்டுக் கொள்வதைக் குறிக்கும். அம்பிகைக்கூட பனை ஓலைத்தோடுதான் போட்டிருந்தாள். (தாலீ தலா பத்த தாடங்க) என்று ‘சியாமளா தண்டகம்’ சொல்கிறது. பிறகு வைரத்தில் தோடு செய்தார்கள். இருந்தாலும் ‘வைர ஓலை’ என்று பழைய பெயரும் ஒட்டிக் கொண்டது. அந்தக் காலத்தில் வசதியுள்ளவர்கள் எட்டு அடுக்கு வீடு கட்டிக் கொண்டதில்லை. எல்லோருடைய வீடும் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் இருக்கும். நம்முடைய சிற்பம் முதலிய சாஸ்திரங்களின் பெருமை தெரிவதற்காக ராஜாக்கள், மந்திரிகள், பெரிய மாளிகை கட்டிக் கொண்டிருந்தார்கள். வைசியர்களும் பெரிய வீடுகள் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
ravi said…
ஆனால், பொது ஜனங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்த பிராம்மணர்கள் சிறுகக் கட்டிப் பெருக வாழ்ந்தவர்கள்தான். எல்லா விஷயத்திலும் அவர்கள் எளிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் சாஸ்திர விதி. அரண்மனைக்கும் மேலாகக் கோயில்தான் ஊருக்கே பெரிய வீடு; கோயில் ஸ்வாமிக்குத்தான் ரொம்பவும் உயர்ந்த நகை நட்டு, ஆபரணம் எல்லாம். உத்ஸவம்தான் ஊருக்கெல்லாம் கல்யாணம் மாதிரி. தனிமனிதர்களின் டின்னர், டீ பார்ட்டி, ஆடம்பரம் எதுவும் அப்போது கிடையாது. வசதியுடையவர்கள் எளிமையாக வாழ்ந்த வரையில் மற்றவர்களுக்கும் இவர்களிடம் துவேஷமில்லை. பிற்பாடு வேதரக்ஷணத்தையும், கிராமத்தையும் விட்டு அவர்கள் பட்டணத்துக்கு வந்து பண வேட்டையில் விழுந்ததும்தான் சமூகத்தின் சௌஜன்யமே சீர்குலைந்து விட்டது. பழைய எளிய வாழ்க்கை முறைக்குத் திரும்ப எல்லோரும் பிரயாசைப்பட வேண்டும்.

காந்தி இருந்த வரைக்கும், ‘எளிய வாழ்க்கை, எளிய வாழ்க்கை’ (Simple living) என்ற பேச்சாவது இருந்தது. இப்போது அந்த அபிப்பிராயமே போய்விட்டது. மறுபடி அந்த முறைக்கு மக்களைக் கொஞ்சத்தில் கொஞ்சமாவது திருப்ப வேண்டும். நிறைவு மனசில்தான் இருக்கிறது என்று உணர்ந்து, அவரவரும் கடமையைச் செய்து கொண்டு எளிமையாக இருக்க வேண்டும். அவரவரும் இப்படித் தேவைகளைக் குறைத்துக் கொண்டு மனசினால் நிறைந்து சுபிட்சமாக இருக்க சந்திர மௌளீசுவரர் அநுக்கிரகம் செய்வாராக!
ravi said…
*ஏகாதசி புண்ணியம்*

''வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்களுக்கு விரதம் அனுஷ்டிக்கத் தேவையான உபகாரங்களை யாரொருவர் செய்கின்றாரோ அவர் 23 ஏகாதசி விரதம் அனுஷ்டித்ததற்குச் சமம்'' என்று
ஶீமன் நாராயண வேங்கடவன் அருளியதாக வேதம் சொல்கிறது.

பெருமாளுக்கு உகந்த மாதமான மார்கழியில் ஆண்டுதோறும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியன்று வைகுண்ட துவாரம் வழியாக பிரசன்னமாகும் பெருமாளைச் சேவித்து அவர் பின்னே வைகுண்ட துவாரம் கடப்பவர் பிறப்பில்லா முக்திநிலைச் சுவர்க்கம் புகுவர் என்பது ஐதீகம்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில், திருவல்லிக்கேணி ஶீ பார்த்தசாரதி பெருமாள் கோயில், சிறுதிருப்பதி சிறுதாமூர் ஶீ ஶீனிவாசர் 'வெற்றி வழங்கும் பெருமாள் கோவில்' ஆகிய புண்ணியத் தலங்களில் பெருமாளைச் சேவிப்பது உத்தமம்.

சிறுதிருப்பதி சிறுதாமூர் ஶீ ஶீனிவாசர் ''வெற்றி வழங்கும் பெருமாள்'' கோவிலில் 2023 ஜனவரி 1 ஆம் தேதி காலை 8.00 மணிக்கு பெருமாள், தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர், ஶீ சக்ரத்தாழ்வார், ஶீ பாண்டுரங்கர், ஶீ ராமானுஜர், ஶீ தேசிகர் திருமஞ்சனம்.

2023 ஜனவரி 2 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு, ஸ்வாமி புறப்பாடு. 🙏🏻

சிறப்பு அன்னதானம். பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல் நிகழ்ச்சி.

*அனைவரும் வருக. வருகின்றவர்கள் தங்களின் வருகை குறித்து முன்னரே தகவல் தரவும்.*

Route: Google: Sirudhamur Srinivasar

உங்களுக்காகப் பிரார்த்தனை, அன்னதானம் செய்ய பணம் செலுத்த வங்கிக் கணக்கு விவரம்:

Axis Bank Sirudhamur.
A/c.918020098346758
IFSC :UTIB0003845 "Sirudhamur Sri Srinivasar Charitable Trust"

கோத்ரம், பெயர், நட்சத்திரம், முகவரி அனுப்பவும்:

ஶீ.பார்த்தசாரதி
அர்ச்சகர்
8870755366
S.விஜயகிருஷ்ணன்
9600644446🙏🏻
ravi said…
https://chat.whatsapp.com/HcBx62FBO4aCfnokryZVZp

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீநடராஜரின் ஆனந்த தாண்டவத்தின் தத்துவம் பற்றிய பதிவுகள் :*

நடராஜர் வடிவம் என்பது சிவபெருமான் ஆனந்தத் தாண்டவ கோலத்தில் திருநடனமாடுவதை சித்தரிக்கிறது.

அத்திருநடனம் ஆக்கல், காத்தல், அழித்தல் தொழில்கள் நம் ஒவ்வொருவர் உள்ளேயும், பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு கணமும் இடையறாது நடந்து கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

நடராஜர் வடிவத்தில் பொருள் பதிந்த அடையாளக் குறியீடுகள் பல உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது அவரின் ஐம்பெரும் சக்திகளைக் குறிப்பனவாம்.

ஆக்கல் சக்தியை (சிருஷ்டி) அவர் பின்னால் இருக்கும் வலது கை காட்டுகிறது. அந்தக் கை ஒரு டமருகத்தை ஏந்திநிற்கிறது. அதன் நாத ஒலியே சிருஷ்டியின் தொடக்கம் என்பதைக் காட்டுகிறது.

அவர் முன்னால் இருக்கும் வலது கரம்—அஞ்சற்க என்று கூறும் அபயகரம். காத்தல் (ஸ்திதி) சக்தியைக் குறிக்கிறது.

அவரின் பின் இடதுகரம் தீயை ஏந்தியிருக்கிறது. அது அழித்தல் சக்தியைக் குறிக்கும் அக்னி தெய்வத்தைக் காட்டுகிறது.

அவரின் வலது கால் ஒரு சிறிய உருவம் கொண்ட மனிதன்மீது ஊன்றியிருக்கிறது. அதுவே ஆணவத்தைக் குறிக்கும் அபஸ்மரன். (முயலகன்). அது “மறதி” மற்றும் “கவனமின்மை” யைக் காட்டுகிறது. இது மறைக்கும் சக்தியை (திரோபவம்) குறிக்கிறது. இதனால் ஆன்மா இறைவனிடமிருந்து தன்னை வேறாகக் காண்கிறது.

சிவபெருமானின் முன் இடதுகரம் யானைத் துதிக்கையைப்போல் நீண்டு தூக்கிய பாதத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இது அனுக்கிரகம் என்னும் திருவருட்சக்தியைக் குறிக்கிறது. இச்சக்தியால் ஆன்மா இறைவனோடு ஒன்றாவதை உணர்கிறது.

மூன்றாம் கண் எனப்படும் அவரின் நெற்றிக்கண் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய அனைத்தையும் காண்கிறது. திருவாசி எனப்படும் நெருப்பு வட்டம் பிரபஞ்ச உணர்வையும், அத்திருச்சபையிலே சிவபெருமான் ஆடுவதையும் காட்டுகிறது.

இடது காதில் இருக்கும் தோடு பெண் தன்மையையும், வலக்காதிலுள்ள தோடு ஆண் தன்மையையும் குறிக்கிறது. திருவாசியின் மேல் மகாகாலம் என்னும் காலதேவன் இருக்கிறார்.

சிவனின் இன்னொரு வடிவமான அவர் காலத்தை உருவாக்கி, அதையும் கடந்து நின்று, காலத்தை விழுங்கி நிற்கிறார்.

சிவபெருமானின் திருமேனியை சுற்றியிருக்கும் பாம்பு குண்டலி சக்தியை அதாவது நமது முதுகுத்தண்டில் வீற்றிருக்கும் ஆன்மீக சக்தியை குறிக்கிறது.

அவர் வலது கரத்தின் டமருகத்திலிருந்து புறப்படும் ஓசையானது இது ஆரம்பம் என்பதை அறிவிக்கிறது. அவர் இடது கரத்தில் அனைத்தையும் விழுங்கிவிடும் தீச்சுடர் இருக்கிறது. இது முடிவு என்பதை அறிவிக்கிறது. அதுவே ஒரு புது ஆரம்பத்தை தொடக்கி வைக்கிறது.

முழுவதும் தங்கத்தினால் ஆன சிவநடராஜரின் இவ்வடிவம் புகழ்பெற்ற சிதம்பரம் கோவிலில் மூலதனத்தில் வணங்கப்படுகிறது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
Why does Lord Shiva live in the crematorium, and do you know such mysterious things about him?
Yes good question . I try to answer this Question

Lord Shiva is everywere


Actually we saw Shivling kept in Crematorium Grounds some times idol also

Lord Shiva called as lord of Crematorium Ground

Crematorium ground is called Rudra Bhoomi


Lord Shiva called Smashana Adhipati

Why lord Shiva called lord Of Smashana


For every living beings on earth Death is the last Truth of life

Lord Shiva is only God who is Beyond birth ,death, time and Karma and who can give highest Moksha.

Look on interesting story of Rudra Bhoomi(Crematorium Ground)

Intresting Story

Once Goddess Uma asked Lord Shiva the same thing. Why Rudra Bhoomi? Why you like Rudra Bhoomi

"As we know I am the greatest destructive force of this universe (Laya) and when people die, they go to Rudra Bhoomi(Crematorium) However, every one in this world gets completely indulged in Maya, material gains, bonds and relationships, not knowing or realizing that they have Paramatma(God) (me and you) in them, guiding them through Buddhi (intellect) and they still do not think of how they could break free from this cycle of birth and death.

They don't pray to God out of pure love, they do it to ask/beg him to do them favours. Once someone dies, all his relatives leave him after 11 days and start talking about how to share the money he has worked hard to earn. They do not think of him anymore, because they are in the same Maya that he was.

Then, this jiva/atma cries heart-wrenchingly, lamenting on how wasted and pointless his life has been as he had not thought of and earned the real wealth that is God's blessing and progress toward moksha. He stays in the rudra bhoomi alone, scared, devastated and clueless.

That is why I stay there too. To make sure he's not alone. To console him. To tell him that I shall give him yet another chance to gain wisdom. After all, we are 'Jagatah Pitaro Vande Parvati Parameshwara' the parents of every life in this creation. So, as the father, it is my duty to help the wounded and pained child reach me. That is why I stay at the Rudra Bhoomi."
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 38*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
पुण्या काऽपि पुरन्ध्री पुङ्खितकन्दर्पसम्पदा वपुषा ।
पुलिनचरी कम्पायाः पुरमथनं पुलकनिचुलितं कुरुते ॥ २२॥

22. Punyaa kaapi purandhri punghitha kandharpa sampadhaa vapushaa,

Pulinachari Kampaaya pura madhanam pulaka nichulitham kuruthe.

புண்யா கா‌உபி புரன்த்ரீ புங்கிதகன்தர்பஸம்பதா வபுஷா |

புலினசரீ கம்பாயாஃ புரமதனம் புலகனிசுலிதம் குருதே ||22||
ravi said…
காமாக்ஷி எனும் பாலை, கையில் மன்மத பாணங்கள் , கரும்பு தநுஸு ஏந்திக்கொண்டு ஆனந்தமாக கம்பா நதிக்கரையில் நடக்கிறாள்.

ஆங்காங்கே காணும் மணல் திட்டுகள் மேல் ஏறி இறங்கி அமர்ந்து தனிமையில் இனிமை காண்கிறாள்.

எங்கும் காணும் புதுமை, எளிமை, வளமை அவள் மனத்திலுள்ள கருணை, அன்பை பிரதிபலிக்கிறது.

உடல் இப்படி நடமாடுகிறதே தவிர அம்பாளின் உள்ளம் சதா அந்த சதாசிவனையே நினைத்து அவனை காண்பதெப்போ என்று தேடுகிறது. ஏங்குகிறது.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 442* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*179 பேதநாசிநீ --*

ஏகமயமாக எல்லாவற்றையும் பரிபாலிக்கும் அம்பாள் எந்த பேதத்தையும் அழிப்பவள்.

''ஏகம் சத்'' அல்லவா. அது அவளல்லவா?

முதலாவதாக அம்பாளுக்கும் அவள் பக்தர்களுக்கும் இடையே கூட எந்த பேதமும் இல்லையே. '' *தத் த்வம் அசி* '' அது நீயாகவே இருக்கிறாய். இது தான்.🪷🪷🪷
ravi said…
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து

ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல்

பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்

போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்!

எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்🪷🪷🪷
ravi said…
உன் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில்

செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன.

ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன.

காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி,

திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக செல்கின்றனரே

பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும்,

தாமரை கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருப்பது என்ன நியாயம் ?

தூக்கத்தில் என்ன சுகம் கண்டாய் ...

இதோ நிஜத்தின் அழகை பார் ...

நிழல் கொண்ட அழகு கூம்பி விடும் நீ எழுந்து விட்டால் ...

கண்ணன் ஒன்றே நிஜம் மற்றவை எல்லாம் மாயமடி ... எழுந்திரு ...

எழாத நாள் ஒன்று வரும் எல்லோருக்கும்

அது எழாமல் செய்வான் என் கண்ணன் ... நிஜம் என்று நம்பியோர்க்கே
ravi said…
💐💐💐

*65 பண்டாசுர வதோத்யுக்த ஷக்திஸேனா சமன்விதா =*

பண்டாசுரனை அழிக்க வலிமை பொருந்திய பெரும் சேனையுடன் திரண்டிருப்பவள்.
ravi said…
அம்மா ...

உன் கண் பார்வை ஒன்றே போதாதோ ...

அதர்மம் அழிய அசுரர்கள் ஒழிய

சேனை வேண்டுமோ தாயே ...

ஒரு கொசுவை அடிக்க படை ஏன் கொண்டாய் ?

*அம்பாளின் பதில்*

உண்மை ...

அவனை அழிக்க படை தேவை இல்லை தான் ...

மனம் திருந்தி விடுவானோ என்றே பல நாள் போரிட்டேன் ...

நல்ல குணம் வருவது சுலபம்

தீமை தனை விரட்டுவதே கடினம் ...

உடம்பில் ஊறி தின்னும் காளான் போல்

உள்ளே இருந்தே தானவராக்கி விடும் ..

அழிப்பது அவனை அல்ல உள்ளே உள்ள அவன் அகங்காரம் அதை ...

சூரன் அவனை குகன் கொல்ல வில்லை இரண்டாக்கினான் ...

அழிப்பதில்லை எவரையும் ஈசன் ...

அவன் அழிப்பது உன்னில் கொண்ட அகம் எனும் அசுரனையே ...

தீய குணம் கொண்டோர் அனைவரும் பண்டாசுரர்களே ...

படை கொண்டு வருவேன் தடை இன்றி வாழ்வு பெறுவாய் ... 🙌🙌🙌
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ஸ்ரீ-நகர வர்ணனை

*💐💐💐(55-63)*
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

24 –
கொடியிட்டு அடியரைக் கொல் 🙌🙌🙌🙌🙌

உனைக் கட்டிக்
கொண்டு எஙன் வாழ்வேன் அருணாசலா (அ)
ravi said…
ஆண் காதணிகள் தண்ணீரில் ஆட,

அவர்களின் தங்கநகைகள் ஆட,

பெண்களின் கூந்தல் ஆட,

நறுமனக்கூந்தலில் உள்ள மலர்களில் தேன் சொரிய

அதை முகர்ந்த வண்டுகள் ஆட,

குளிர்ந்த நீரில் ஆடும் போது

உன் நினைவு வருகிறதே அருணாசலா.

கொஞ்சும் கிளிகள் கூவும் மயினாக்கள் பாடும் குயில்கள் ஆடும் மயில்கள் தாவும் மான்கள் தவழும் புழுக்கள்

உன் பெயர் அன்றோ உரைக்கின்றன

உன் மார்பில் தவழும் கொன்றை மாலையின் மணம் மனம் அதை கொள்ளை கொள்கிறதே அருணாசலா

பந்த பாசங்களில் இருந்து எம்மை பிரிக்கும் வளையல்கள் அணிந்தனையோ அருணாசலா

இப்படி உன் அடியாராய் ஆக்கி என் ஆணவத்தை கொன்றாயோ அருணாசலா ...

உன்னை மணந்தால் இன்னும் எதை எல்லாம் கொல்வாயோ நீ ...

எனக்கு என்று இருந்த கர்வம் பொறாமை , மமதை அகங்காரம் ஆணவம் அனைத்தையும் கொன்றாய்

என் மனம் அதை உன் வசப்படுத்திக் கொண்டாய் ..

எனக்கென்று உன் நாமம் தவிர சொத்து என்று ஒன்றும் இல்லையே அருணாசலா

எப்படி உன்னுடன் குடித்தனம் புரிவேன் இனி அருணாசலா 💐💐💐
ravi said…
வியாசர் ஒரு ஸ்லோகத்துல சொல்றார்

*நாராயண இதி நமாஸ்தி வாகஸ்தி வசவர்த்தினி |*

*ததாபி நரகே கோரே பதந்தீதி ததத்புதம் ||*

ன்னு சொல்றார்.

நாராயணா என்ற நாமம் இருக்கு. வாக்கு இருக்கு. இரண்டும் ‘ *வசவர்த்தினி* ’ –

இரண்டும் நம்ம கையில தான் இருக்கு.

நம்ம வாக்கு, அதாவது நம்ம நாக்கு நம்ம கிட்ட தான் இருக்கு.

நாராயணாங்கிற நாமம் சுலபமா சொல்லலாம்.

அது நம்ம கிட்ட தான் இருக்கு! என்ன ஆச்சரியம்! இது இருந்து கூட ஜனங்கள் போய் கோரமான நரகத்துல விழறாளேன்னு சொல்றார்.🪷🪷🪷
ravi said…
இந்த வ்யஸனம்ங்கிற வார்த்தைக்கு தீமையைக் கொடுக்கக் கூடிய காரியங்கள்னு அர்த்தம்.

கெட்டப் பழக்கங்கள், குடி, சூதாட்டம், இந்த காலத்துல சினிமா, internet, whatsapp, facebook எல்லாம் சேர்த்துக்கலாம். இந்த modern gadgets, technology எல்லாமே மூளையை பாழ் பண்ணும் ன்னு சிவன் சார் warn பண்றார்.

அதுல 1% வேணா நாம நல்லதுக்கு use பண்றோம்.

பாக்கி நேரம் எல்லாம் அதுல வீண் பண்றோம்.

அந்த மாதிரி பண்ணினா உடம்பும் கெடும். stress ஜாஸ்தி ஆகி மனசும் கெடும்ங்கிறது பார்த்தாலே தெரிகிறது.

இந்த கால நம்ம வாழ்க்கை முறையில சரியான சாப்பாடு இல்ல.

இல்லை.சாப்பாடு இருக்கு.

அதை எப்படி சாப்பிடணுமோ, அது தெரியல.

அதை நிதானமாக ருசிச்சு, சந்தோஷமா சாப்பிடறது, நல்லபடியா தூங்கறது எல்லாமே கெட்டு இருக்கு.

அதுக்கு நாம ஜபம் நல்லதொரு மருந்தாக மஹான்கள் prescribe பண்றா.🪷🪷🪷
ravi said…
*❖ 66 சம்பத்கரீ சமாரூட சிந்தூர வ்ரஜ சேவிதா =* சம்பத்கரீதேவி தலைமையில் திகழும் பெரும் யானைப்படையின் செவையை ஏற்றிருப்பவள்.
ravi said…
வேழம் தந்தே வேதம் எழுதியவளே

வேதம் எழுதியே வித்தாகி போனவளே

வித்தாகி சத்தாகி சம்பத்கரீ ஆனவளே

சம்பதிகரீ ஆகியே சங்கடம் பல தீர்த்தவளே

சங்கடம் தீர்த்தே சடுதியில் வருபவளே

சடுதியில் வந்தே சர்வமும் அளிப்பவளே

உன் பாதம் தினம் தொழ வேண்டுகிறேன் வேழ முகத்தோனை தினம் தினமே 🪷🪷🪷
ravi said…
வேழம் தந்தே வேதம் எழுதியவளே

வேதம் எழுதியே வித்தாகி போனவளே

வித்தாகி சத்தாகி சம்பத்கரீ ஆனவளே

சம்பதிகரீ ஆகியே சங்கடம் பல தீர்த்தவளே

சங்கடம் தீர்த்தே சடுதியில் வருபவளே

சடுதியில் வந்தே சர்வமும் அளிப்பவளே

உன் பாதம் தினம் தொழ வேண்டுகிறேன் வேழ முகத்தோனை தினம் தினமே 🪷🪷🪷
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

25 –
கோபம் இல் குணத்தோய் குறியாய்

எனைக்கொளக்
குறை என்செய்தேன் அருணாசலா (அ)
ravi said…
அழகிய மார்புகச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே!

கேளுங்கள்
நம் தோழி வனிதா

எம்பெருமானே என்று அருணசலனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள்.

தெரியும் அன்றோ ?

அவள் வாய் ஒரு ஆலயம் அதில் வரும் வார்த்தைகள் ஸ்ரீ ருத்ரம்

கண்களில் கங்கை தாரை தாரையாக பெருகும்.

அவள் உண்மையில் இவ்வுலகில் இல்லை

விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள்.

அருணாசலன் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்தானவள்

அவளைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான அருணாசலனின் தாள் பணிந்து பாடுவோம்.

பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.

அருணாசலன் கொஞ்சம் கோபக்காரன்

அந்த கோபம் நம் மீது குறி வைத்தால்

நம் கதி என்னவாகும் ...?

அவன் அப்படி செய்ய மாட்டான் என்றே அலட்சியம் வேண்டாம் ...

வாருங்கள் .... அவன் புகழ் பாடுவோம் 💐💐💐
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 443* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 39*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
तनिमाद्वैतवलग्नं तरुणारुणसम्प्रदायतनुलेखम् ।

तटसीमनि कम्पायास्तरुणिमसर्वस्वमाद्यमद्राक्षम् ॥ २३॥

23. Thanimadvaitha valagnam tharunaa aruna sampradhayatha anulekham,

Thata seemini Kampayaa tharunima sarvaswam aadhyam adraksham.

தனிமாத்வைதவலக்னம் தருணாருணஸம்ப்ரதாயதனுலேகம் |

தடஸீமனி கம்பாயாஸ்தருணிமஸர்வஸ்வமாத்யமத்ராக்ஷம் ||23||
ravi said…
அதோ போகிறாளே , கம்பா நதிக்கரையில்

நீர் கலந்த மிருதுவான வெண்ணிற மணலில் கால்களை அளைந்து கொண்டு.

ஆஹா மெதுவாக செல்லும்போதும் என்ன அழகு.

துடியிடை, ஒடிந்துவிடும் இடை என்பார்களே, அது இந்த சிவந்த ரோஜா இதழ் நிற அழகியிடம் தான் காண்கிறது.

இவ்வளவு இளமையான அழகிய அம்பாள் உதயகால சூரியன் மாதிரி ஜொலிக் கிறாள்.

அவளை தரிசிக்க என்ன பாக்யம் செய்திருக்கிறேன்'' என்று வியக்கிறார் மூகர். 👏👏👏
ravi said…
ஏலே என் தோழியே! இளமைக் கிளியே!

நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும்,

இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே?

நியாமா ? கிளிப்பிள்ளைக்கு சொல்வதை போல் சொன்னோம் ..

ஸ்ரீ மத் பாகவதம் எழுதியவரும் ஒரு கிளி அன்றோ ...

கிளி போல் இருந்தும் கிலி கொண்டு தூங்குவதேன் ?

வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும்,

எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ பறந்து வாராயோ ,

வானம் இடிபடவும்
பூமி பொடிபடவும் நடுவில்
நின்றாடும் வடிவழகன் அவனன்றோ

கொடிகள்
ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து
ஆடும் கலை அழகன் அவனன்றோ

பிள்ளை உள்ளம்
துள்ளும் வண்ணம்
கண்ணன்
கொட்டி வரும்
மத்தளமும் சத்தமிட

வருவான் ஒரு
பதில் கூறுவான்

நிலவென
பார்ப்பான்

அருள் மழை
தருவான்

செங்கையில் வண்டு
களின் களின் என்று ஜயம்
ஜயம் என்றாட

இடை சங்கதம்
என்று சிலம்பு புலம்போடு தண்டை
கலந்தாட

இரு கண்கள் கொடும்
பகை என்றென்ன மென்று குலைந்து
குலைந்தாட

மலர் பங்கஜம் அவன்

அவனை பாடிய பிள்ளை
நிலாவும் எழுந்தாட

விரைந்து
வருவான் எழுந்து வருவான்
கனிந்து வருவான்

கண்ணன் என் மன்னன் என் கண்களில்
தெரிகின்றான்

கண்கள்
சிவந்திடும் வண்ணம்
எழுந்தொரு காட்சியை
தருகின்றான்

வாடிய மகன்
இவன் வாழிய என்று
ஒரு வாழ்த்தும் சொல்கின்றான்

வானகம் வையகம் எங்கணுமே

ஒரு வடிவாய் தெரிகின்றான்

எழில் வடிவாய் தெரிகின்றான்

கண்ணன் தெரிகின்றான்

என் கேசவன் தெரிகின்றான்

மாதவன் தெரிகின்றான்

என்
கோவிந்தன் தெரிகின்றான் 🙌🙌🙌
ravi said…
எல்லே இளங்கிளியே!🦜

இன்னும் உறங்குதியோ!

சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்!

போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே

நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய்

உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ?

போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.👏👏👏
ravi said…
*14. எழுவாய் பெண்ணே! (9)*

*திருப்பாவை- 14ஆம் பாசுரம்:*


_உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்_
_செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்_
_செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்_
_தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்_
_எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்_
_நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!_
_சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்_
_பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்_ .

நாணமே சிறிதுமின்றி
நன்றாக உறங்கிடும்
நங்கையே!

துயில்வதனையே விரும்புகின்ற-
தசக்கிரீவன் தம்பியின்
தங்கையே!

"கதிரவன் நாளை வருமுன்னே-

கன்னியர் உங்களை எழுப்பிடுவேன்!"

என
சதிராடினாயே சொற்களால் நேற்று!

பொழுது நன்கு விடிந்தும்
போர்வை போர்த்திக் கொண்டு
உறங்குகின்றாயே இன்று-
உன் சபதத்தில் தோற்று!

இல்லத்தின் பின்புறத்தில்
இருக்கின்ற தோட்டத்தில்
அமைந்துள்ளதே

ஒரு குளம்!
ஆங்கே சென்று பார்;

அறிவாய் பூக்கள் பலவற்றின் உளம்!

இரவியின் வருகை கண்டு
இதழ்விரித்து நின்றிடும்-

அங்கு
இருக்கின்ற செங்கழுநீர் மலர்!


இன்னொரு புறத்திலே-

ஆதித்யனின் வருகை கண்டு
அங்கமெல்லாம் வெட்கம்சூழ-

ஆங்கே கூம்பிப் போய்விடும்
ஆம்பல் மலர்!

இவை சுட்டவில்லையோ உனக்கு-

இயற்கையின் காலக் கணக்கு?

சோம்பலாய் இருக்கும் நீ-

ஆம்பல் மலர்போல் கூம்பாமல்-

எங்களுடனே கலந்திடு!

செங்கழுநீர் மலர்போலே மலர்ந்திடு!

சொற்களிலே மென்மை;

பற்களிலே வெண்மை;

உடுத்துவதோ காவி;
உளத்தில் நிற்கும்-
இறையுணர்வு மேவி!

இத்தகைய தன்மையுடைய
இருடிகளும்

யோகியரும்
தயாராகினர்-

தங்கள் கோயிலுக்குச் சென்று-
திருச்சங்கம் ஊத;
திவ்வியப் பிரபந்தம் ஓத!

சக்கரமும் சங்கும்
திருக்கையினில் ஏந்திடும்
சக்கரவர்த்தியை-

கமலத்தில் வீற்றிருப்போன்
கரங்குவித்து வணங்கிடும்
கமலக் கண்ணனை-

இலக்குவனின் அண்ணனை-

இருந்தமிழில் ஏத்திட வாராய்!
இமைதிறந்து எங்களைப் பாராய்!
ravi said…
[29/12, 17:50] Jayaraman Ravilumar: *பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 49 started on 6th nov
[29/12, 17:50] Jayaraman Ravilumar: *பாடல் 16 ... பேராசை எனும்*

(பேராசையில் கலங்குவது நியாயமா முருகா?)

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே
ravi said…
முன் பாடல்களில் ஆன்ம முன்னேற்றத்திற்கு தடையாய் நிற்கும்
சிலவற்றைச் சொன்னார். அவைகளில் சில,

அகமாடை மடந்தையர்
அமரும் பதி கேள் அகம்
வளை பட்ட கை மாதொடு மக்கள்
மங்கையர் மையல் வலை
ஐவாய் வழி செல்லும் அவா

இவைகளுடன் இப்பாட்டில் போராசை என்னும் விரோதியைச்
சேர்த்துச் சொல்கிறார்.

பேராசையையே தனது உருவமாகக் கொண்டவன் சூரபத்மன்.

1008 அண்டங்களை 108 யுகங்களாக அரசாண்டும் மனத் திருப்தி
அடையாமல் தேவ லோகத்தையும் தனது வசப்படுத்தி, தேவர்களை
சிறையிலிட்டதன்மூலம் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொண்டான்
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 426*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 58வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
ஸம்ஸ்க்ருத ஸ்லோகம், இருக்கு,

அதைக்கூட ரமணரே, தமிழில் எழுதிருக்கார்.

நல்ல தென்றல் வீச ஆரம்பிச்சுட்டா, அப்புறம், விசிறிக்கு!, என்ன வேலை?,

அந்த மாதிரி, மஹானுடைய, ஸங்கம் கிடைச்சிட்டதுன்னா, அப்புறம், சாதனைகள் எல்லாம் ஒரு பேச்சுக்குதான்,

அப்படிங்கற மாதிரி, ஒரு ஸ்லோகம், இருக்கு.

தினமும் சந்தியாவந்தனம் பண்றோம்.

அதுல காயத்ரி மந்த்ரம் இருக்கு.

அதுல, ‘‘பர்க்கோதேவான்னு’’ வரும் – பர்க்கோதேவாங்கிறது, பரமேஸ்வரனுக்கு, ஒரு பேர்.

அதனால, இந்த காயத்ரி மந்த்ரம் ஜபிக்கிறதே, பரமேஸ்வரன்கிட்ட பக்தி, அப்படின்னு சொல்வா!.🪷🪷🪷
ravi said…
[29/12, 17:38] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 430* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[29/12, 17:38] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
எட்டுக் கைகளில் எட்டு ஆயுதங்களுடன் சக்கரம், அம்பு, கத்தி, தாமரை, சங்கு, வில், கேடயம், கதை அஷ்டபுஜப் பெருமாளாகத் தோன்றி
அசுரர்களை வீழ்த்தினார் திருமால்.

கலகம் செய்ய எண்ணிய அசுரர்கள், பிரம்மாவின் யாகத்தை நிறுத்தும்படி சரஸ்வதியிடம் வேண்டினார்கள்.

ஏற்கனவே பிரம்மாவின் மேல் கோபத்தில் இருந்த சரஸ்வதி வேகவதி என்னும் நதியாக யாகசாலையை நோக்கி பெருவெள்ளத்துடன் வந்தாள்.🙌
ravi said…
🌹🌺 "Visiting Hampi, the birthplace of Hanuman, we too can surely develop a better attitude of service in bhakti." A simple story that explains ---
-------------------------------------------------- ------

🌺🌹“ The Hanuman temple located in Hampi —Anaikunthi area is revered as his birth place. It was here that Hanuman appeared as the divine son of Kesari and Anjana. There are 555 steps to reach this beautiful stone temple….

🌺Hanuman not only served in the Ramayana, but also participated in the Mahabharata, Arjuna's chariot flag and Bhima's roar. Hanuman is the best example of a devotee and a great mentor for the spirit of service.

🌺 Vigilant service in all circumstances, exemplary celibacy, asceticism, application of Shastra wisdom to practical life, powerful sevaka, purposeful service, enthusiasm, freshness, eloquence, humility, the list of divine qualities of Hanuman goes on and on.

🌺 By visiting Hanuman's birth place Hampi, we too can surely develop a great service attitude in bhakti.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *ஹனுமானின் பிறப்பிட பூமியான ஹம்பியை தரிசிப்பதால், பக்தியில் சிறந்த சேவை மனப்பான்மையை நாமும் நிச்சயம் வளர்த்துக்கொள்ள முடியும்." என்பதை --- விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹“ ஹம்பி —ஆனைகுந்தி பகுதியில் அமைந்துள்ள ஹனுமான் கோயில், அவரது பிறப்பிடமாகப் போற்றப்படுகிறது. இங்குதான் கேசரிக்கும் அஞ்சனைக்கும் ஹனுமான் தெய்வீக மகனாகத் தோன்றினார். இந்த அழகான கற்கோயிலுக்குச் செல்ல 555 படிக்கட்டுகள் உள்ளன....

🌺ஹனுமான் இராமாயணத்தில் சேவை செய்தது மட்டுமின்றி, மஹாபாரதத்திலும் அர்ஜுனனின் ரதக் கொடியிலும் பீமனின் கர்ஜனையிலும் பங்கெடுத்துக் கொண்டார். சேவை மனப்பான்மைக்கு ஹனுமான் மிகச்சிறந்த உதாரண பக்தராகவும் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.

🌺எல்லாச் சூழ்நிலையிலும் விழிப்பான சேவை, முன்னுதாரண பிரம்மசாரி, துறவு, சாஸ்திர ஞானத்தை நடைமுறை வாழ்விற்கு ஏற்ப கடைபிடித்தல், சக்தி வாய்ந்த சேவகர், குறிப்பறிந்து சேவை செய்தல், உற்சாகம், புத்துணர்ச்சி, பேச்சுதிறன், பணிவு என ஹனுமானின் திவ்ய குணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

🌺ஹனுமானின் பிறப்பிட பூமியான ஹம்பியை தரிசிப்பதால், பக்தியில் சிறந்த சேவை மனப்பான்மையை நாமும் நிச்சயம் வளர்த்துக்கொள்ள முடியும்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்

நம்பெருமாள்
வைகுண்ட ஏகாதசி
பெருவிழா 22-23
பகல் பத்து எட்டாம் திருநாள்
அர்ஜுன மண்டபத்தில்

இன்று நம்பெருமாள் இன்று முத்து சார்க் கொண்டை, மகர கர்ண பத்ரம், மார்பில் பருத்தி பூ பதக்கம், அதன் மேல் நாச்சியார் பதக்கம், சந்திர கலை , மகரி,, அடுக்கு பதக்கங்கள், வைர அபயஹஸ்தத்துடன்,பச்சை பட்டு வஸ்திரம் அணிந்து, 2 வட பெரிய முத்து சரம், தங்கப் பூண் பவள மாலை, சிகப்பு கல் 3 அடுக்கு மகர கண்டிகை சாற்றி,
பின் சேவையாக - பங்குனி உத்திர பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கல் கைகளில் சாற்றி, சேவை சாதிக்கிறார்..
ravi said…
[30/12, 07:23] +91 96209 96097: *காந்தாய நமஹ*🙏
அடியார்களை தன் அழகால் வசீகரிப்பவர்
[30/12, 07:23] +91 96209 96097: மஹாதந்த்ரா மஹாமந்த்ரா *மஹாயந்த்ரா* மஹாஸநா🙏
அனைத்து இறை தொடர்பையும் இறை இயக்கத்துடன் அளிக்க வல்லவள்
ravi said…
*யட்சனின் கேள்விகளும் யுதிஷ்டிரர் அளித்த மறுமொழிகளும் |*

*யட்சனின் கேள்விகளுக்கு தருமர் அளித்த விடைகளில் வெளிப்படையாக ஒரு அர்த்தம் தெரியும். ஆனால் தத்துவார்த்த முறையில் ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு அப்பதில்களில் புதைந்து கிடக்கும் பொருளும் தெரியும்.*

👇👇
ravi said…
*இன்றைய சிந்தனை*

30.12.2022

*இரண்டு குட்டிக் கதைகள்*

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மிகச் சிறந்த பொய்யைச்
சொல்லும் ஒருவருக்கு
ஆயிரம் பொற்காசுகள்
பரிசாகக் கொடுக்கப்படும்
என்று ஒரு அரசன்
அறிவித்தான்.

நாட்டின் பல பகுதியில்
இருந்தும் பலர் வந்து
பல பொய்கள் சொல்லிப்
பார்த்தனர். ஆனால்,
அரசனுக்கு திருப்தி
ஏற்படவில்லை.

ஒரு நாள் கந்தல் உடை
அணிந்த ஒரு ஏழை
அரச சபைக்கு வந்து,
தான்போட்டியில் கலந்து
கொள்ள விரும்புவதாகக்
கூறினான்.அரைகுறை
மனதுடன் அரசன்
சம்மதம் தெரிவித்தான்.

அந்த ஏழை சொன்னான்,
“அரசே, உங்களுக்கு
ஞாபகம் இருக்கிறதா ?
நீங்கள் எனக்கு ஆயிரம்
பொற்காசுகள் தர வேண்டி
இருக்கிறது. அதை வாங்க
தான் நான் வந்தேன்.”

அரசனுக்கு கோபம் வந்து
விட்டது.

“யாரிடம் புளுகுகிறாய் ?
நானாவது உனக்கு பணம்
கடன் தர வேண்டி
இருப்பதாவது ?” என்று
உரத்தக் குரலில் சுத்தினான்.

உடனே ஏழை சொன்னான்,
“அரசே, நீங்களே ஒப்புக்
கொண்டு விட்டீர்கள். நான்
பொய்யன் என்பதை
உங்கள் வாயாலேயே
ஒப்புக் கொண்டு விட்டதால்,
போட்டி விதியின்படி,
எனக்கு ஆயிரம்
பொற்காசுகள் கொடுங்கள்”
என்று பணிவுடன் கேட்டான்.

கோபத்திலும் அவசரத்திலும்
தாம் உளறி விட்டோம்
என்பதை உணர்ந்த அரசன்,
“நீ சொன்னதை பொய் என்று
ஒப்புக் கொள்ள முடியாது”
என்று அவசரமாக மறுத்தான்.

ஏழை விவசாயி சொன்னான்,
“சரி, நான் சொன்னதை
பொய் என்று ஒப்புக்
கொள்ளாவிட்டால்,
போகிறது. உண்மை என்று
ஒப்புக் கொண்டீர்கள்
அல்லவா. எனவே, எனக்குத்
தர வேண்டிய ஆயிரம்
பொற்காசுகளைக் கொடுத்து,
கடனை அடையுங்கள்.”

கையைப் பிசைந்த அரசன்,
அந்த ஏழையை சிறந்த
பொய்யன் என்று ஏற்று,
ஆயிரம் பொற்காசுகளை
வழங்கினான்.

மன்னனாக இருந்தாலும்,
அவனும் மனிதன் தான்
என்பதற்கு இன்னும் ஒரு
உதாரணம் உள்ளது.

ஒரு மன்னனுக்கு
சொர்க்கம், நரகம் குறித்த
பெருத்த சந்தேகம் வந்தது.
அதை யாராலும் தீர்க்க
முடியவில்லை.

இந்நிலையில், காட்டில்
வேட்டையாடச் சென்ற
இடத்தில், ஒரு சாமியாரைப்
பார்த்தான் மன்னன்.

இவரிடம் கேட்கலாம் என்று
முனிவர் தவம் கலைய
காத்திருந்தான்.
கண் விழித்தார் முனிவர்.

“யார் நீ” என்று கேட்டார்.

“நான் மன்னன்…”

“சரி, சாப்பாட்டுக்கு
என்ன செய்கிறாய்?”

“நான் ஒரு நாட்டுக்கே
மன்னன் என்கிறேன்.
என்னைப்பார்த்து
சாப்பாட்டுக்கு என்ன
செய்கிறாய் என்கிறீரே ?”

“எனக்கு உன்னைப்
பார்த்தால், திருடனைப்
போல் தெரிகிறது”
என்றார் முனிவர்,

மன்னனுக்கு கோபம்
வந்துவிட்டது.

“முனிவராயிற்றே என்று
பொறுமையாக காத்து
இருந்து உங்களிடம் ஒரு
கேள்வி கேட்க நினைத்தால்,
என்னையே திருடன்
என்கிறீரா ? உம்மை என்ன
செய்கிறேன் பார்” என்று
வாளை உருவினான்
மன்னன்.

முனிவர் சிரித்துக் கொண்டே,
“இது தான் நரகத்துக்குச்
செல்லும் வழி!” என்றார்.

மன்னனுக்கு சட்டென்று
ஞானம் தோன்றியது.
கேள்வி கேட்காமலே, தாம்
வந்த நோக்கத்தை ஞான
திருஷ்டியால் அறிந்து,
பதில் சொல்லிய
மகாமுனியாக காட்சி
தந்தார் முனிவர்.

வாளை கீழே போட்ட
மன்னன், “சுவாமி என்னை
மன்னிக்க வேண்டும்!”
என்று பணிந்தான்.

“இது தான்
சொர்க்கத்துக்குச்
செல்லும் வழி”
என்றார் ஞானி.

சாஷ்டாங்கமாக விழுந்து
விட்டான் மன்னன்.

உயர்பதவியில் இருக்கும்
போது, எதையும் ஒன்றுக்குப்
பத்து முறை யோசித்துப்
பேசுவதே சிறப்பானது.

*ஆன்மீக கதைகள் மற்றும் ஆன்மீக தகவல்கள் மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்* 👇👇
http://srimahavishnuinfo.blogspot.com
ravi said…
They do not try to inform people of their ignorance. When you accuse someone of being wrong, you close them off to considering another perspective by heightening their defenses. If you first validate their stance (“That’s interesting, I never thought of it that way…”) and then present your own opinion (“Something I recently learned is this…”) and then let them know that they still hold their own power in the conversation by asking their opinion (“What do you think about”). "Brianna Wiest
ravi said…
EGO ON BACK BURNER



Long ago, there lived a king named Trishanku who belonged to the Ikshvaku clan. He was a noble ruler, loved and respected by his people. One day, a strange thought crossed his mind.


“I know that the soul when liberated from the body goes to heaven. But I wish to go there along with my body”.


Trishanku approached sage Vasishta and requested him to perform the necessary rituals which would directly transport him to heaven or Indralok. The sage told him that it would not be possible as earth and heaven are worlds apart. They have their own set of rules and it would be foolhardy to imagine that an exception can be made.


Disappointed though, Trishanku approached sage Vishwamitra with his bizarre request. Vishwamitra who had a running feud with Vasishta readily agreed to perform the ritual. As the yagna came to an end, Trishanku rose from the earth and approached heaven.


However he was spotted by Indra, the lord of heavens who pushed him back to earth. Trishanku cried for help and Vishwamitra with his powers arrested the fall. As a result, Trishanku with his head down was suspended in mid-air in an inverted position.


After an argument, Indra and Vishwamitra called a truce, not before the sage created a heaven in mid-air where Trishanku stayed for the rest of his life.


One can learn a lesson or two from the Trishanku episode.


Set a goal which is realistic and achievable rather than one that is straight out of the realms of fantasy. Trishanku fell between two stools without realizing his dream. Vishwamitra’s lost his powers accumulated over years by supporting a worthless cause.


Had Trishanku listened to wise counsel and kept his ego on the back burner, he would have been a happy man enjoying his life on earth.
ravi said…
Thursday Tweak (From Ancient Indian Texts)

इन्द्रियाणि पराण्याहुरिन्द्रियेभ्यः परं मनः।
मनसस्तु परा बुद्धिर्यो बुद्धेः परतस्तु सः॥

The senses are superior to the gross body, and superior to the senses is the mind.
Beyond the mind is the intellect, and even beyond the intellect is the soul.

Have a Thursday thoroughly enjoying the present
ravi said…
A hopeless person feels difficulty in every chance & a hopeful person feels a chance in every difficulty.



Everyday do something that will inch you closer to a better tomorrow.



Live your life and forget your age.



Grow through what you go through.



Nobody is superior, nobody is inferior, but nobody is equal either. People are simply unique, incomparable. You are you and I am I.



Being a good person is like being a goal keeper. No matter how many brilliant save you have on your record, people will remember only the one you missed. That's life.



Don't judge each day by the harvest you reap, but by the seeds that you plant.
ravi said…
PARALLEL AUTHORITY



One day an employee of a mid-sized organization got ill.


Had to be admitted in a hospital.


Was not able to 'attend office' for 3-4 days.


Mr. X called him up, “Hi, hope you are now recovering. Just called up to known as to when would it be possible for your to rejoin? I understand that you are not well, but you know the backlog is increasing and it is in your interest to rejoin ASAP. Do send me your lab reports to support your medical leave".


Mr. Y called him up, " Hi, hope that your re recovering now. Just called up to ask you if you need any assistance from the company? By the way medical expenses are so much high these days and unfortunately you fell ill at the fag end of the month. I will be sending you some cash with our HR executive today. Hope it helps and don't worry about how we will settle it. Get well soon, we miss you at office".


Both Mr. X and Mr. Y are from the same organization.


Both of them have parallel 'authority'.



Both belong to the organization that preaches 'good HR practices'.



Think about it.
ravi said…
We do not heal the past by dwelling there; we heal the past by living fully in the present. Marianne Williamson



Stay as simple as you can because Simplicity in anything is impossible to copy.



Life is a football game, and we are the football. Never mind the kicks of people, because, without kicks we may not reach the goal.



It is literally true that you can succeed best and quickest by helping others to succeed. Napoleon Hill



Working for success may make you a master. But, working for satisfaction will make you a legend. The greatest use of life is to spend it for something that will outlast life itself.



We often think that when things change, we will be happy. But the truth is - when we are happy, things will change. No problem is bigger in front of you because it has come to you to find a solution, and you are the architect



To live is to have problems and to solve problems is to grow intellectually.
ravi said…
Your good deeds might seem invisible, but they leave a trail that is imprinted on the hearts of others....



Plenty of people miss their share of happiness, not because they never found it, but because they didn't stop to enjoy it.



Kind words can be short and easy to speak, but their echoes are truly endless.



It is small things, little acts that go unnoticed that actually make the difference



Nothing in this world is good or bad. It is our thinking which makes it so. A knife is good when a surgeon uses it, and terrible when a criminal uses it.



Someone asked me who your own in this world…..I replied with a smile, “Time”. If time is right, everyone is ours otherwise no one is.



Happiness is a perfume you cannot pour on others without getting a few drops on yourself - Ralph Waldo Emerson
ravi said…
LARGE HEARTEDNESS



I decided to have tea at a food stall at Shivaji Park. Two women are peeling onions inside. Both are poorly dressed and look like workers at the stall. One is around 65 years of age and the other one is in her 40s. I order tea and start chatting in Marathi with the older lady.


“This is the first time I have come to this stall.”


“It’s been here for 25 years now.”


“Oh ok. I am surprised I missed it all these years.”


“I am not the owner of the stall. I have been coming and eating here for many years. I live near catering college.”


“Ok. So why are you peeling onions?”


“Because we have become good friends. I help her in her daily work and she feeds me.”


“That’s good.”


My tea is over. I ask the younger lady how much to pay. It’s fourteen rupees. I give her 20 bucks and ask her to keep the change. As I leave, the lady calls me.

“Sir?”

“Yes?”

“From the extra money you paid me, I will give her a cup of tea.”


The younger lady smiles at the older lady. She delighted by the offer. She gets up and shakes my hand to thank me. She then turns to her friend and says “Apan ardha ardha peeu.” (We will share the cup of tea.)


I realise that the old lady is from an educated family. It’s not the free tea, she feels happy to see the compassion around her. Maybe that is what missing in her life.


As I walk back, I couldn’t believe what the younger lady did. I am amused by her love and honesty. She looked like an employee who was running the stall. Yet, she decided to use the extra money to offer free tea to her old friend.


This is the India that moves me. The frustration of living in a badly managed country melts away every time I meet such characters. The innocence and large heartedness of the poor is a powerful magnet to pull me back to my senses.


The tea was well made. But the after taste of this memory will last a lifetime.
ravi said…
[31/12, 07:17] +91 96209 96097: *காமாய நமஹ*🙏
அடியார்களின் உள்ளத்தை கவர்பவர்
[31/12, 07:17] +91 96209 96097: மஹாதந்த்ரா மஹாமந்த்ரா மஹாயந்த்ரா *மஹாஸநா*🙏
உயர் ஆசனத்தில் அமரும் பண்பு உள்ளவள்
ravi said…
🌹🌹🌹🙏🏻❤️❤️❤️

*இன்றைய சிந்தனை*
…………………………………………….........

*"நாமும் பலி கொடுப்போம்.’’*
......................................................

தலையை வெட்டினால் தான் பலி என்பதல்ல; நாம் அன்றாடம் நம் சுயநலத்துக்காக எத்தனை பேரின் மகிழ்ச்சியைப் பலி கொடுகின்றோம் என்று கவனித்துப் பாருங்கள்..

கோபம்,காழ்ப்பு, விரோதம் போன்ற நம் வீண் அகங்காரங்களை நாமும் பலி கொடுப்போம்.

ஒரு பலி கொடுக்கும் தீவிரத்தோடு, உங்கள் உயிர்ச் சக்தியை முழுமையாக செயல்களில் செலுத்தி அதில் ஈடுபடுங்கள்.

ராமகிருஷ்ணன பரமஹம்சரின் வார்த்தைகள் மீது ஒருவன் மிகுந்த மரியாதை வைத்து இருந்தான். அவனது படுக்கையில் ஏராளமான மூட்டைப் பூச்சிகள் இருந்தன.

”மனித உயிர்,மற்ற உயிர் என்று பிரிக்காமல், எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்கும்படி ராமகிருஷ்ணா அடுக்கடி சொல்வாரே,

தொந்தரவு செய்யும் இந்த மூட்டைப் பூச்சிகளை எப்படிக் கொல்வது என்று அவன் குழம்பிப் போனான்.

தினமும் தூக்கம்
பறி போயிற்று.

குருவிடமே கேட்கலாம் என்று உறக்க மிகுந்த களைப்புடன் அவரைத் தேடி  வந்தான்..

அங்கே அவன் கண்ட காட்சி அவனுக்கு திகைப்பூட்டியது.

ராமகிருஷ்ணர் தன் பாயில் அமர்ந்து இருந்தார். அதிலிருந்த ஒவ்வொரு மூட்டைப்பூச்சியாக எடுத்து நசுக்கிக் கொண்டு இருந்தார்.

எந்த உயிரையும் காழ்ப்போ, விரோதமோ, வெறியோ இல்லாமல் கையாளும் வரை அதில் தவறில்லை என்பதை ராமகிருஷ்ணர் தன் செயல் மூலம் அவனுக்கு தெளிவுபடுத்தினார்..

*ஆம்.,நண்பர்களே.,*

ஆடு , மாடுகளுக்கு உணவு தாவரம்..
சிங்கம் , புலிகளுக்கு உணவு ஆடு , மாடுகள் ..

ஒன்று அழிந்தால் தான் ஒன்று இந்தப் புவியில் வாழ முடியும் ,

இதுதான் இயற்கையின் நியதி ..

இருந்தாலும் உயிர்ப் பலிகளை நாம் நிறுத்துவோம்
அனைத்து உயிர்களிடம் அன்பு செலுத்துவோம்                                                                         
   🌹🌹🌹🙏🏻💐💐💐💐 ,!!


ravi said…
🌹🌹🌹🙏🏻❤️❤️❤️

*இன்றைய சிந்தனை*
…………………………………………….........

*"நாமும் பலி கொடுப்போம்.’’*
......................................................

தலையை வெட்டினால் தான் பலி என்பதல்ல; நாம் அன்றாடம் நம் சுயநலத்துக்காக எத்தனை பேரின் மகிழ்ச்சியைப் பலி கொடுகின்றோம் என்று கவனித்துப் பாருங்கள்..

கோபம்,காழ்ப்பு, விரோதம் போன்ற நம் வீண் அகங்காரங்களை நாமும் பலி கொடுப்போம்.

ஒரு பலி கொடுக்கும் தீவிரத்தோடு, உங்கள் உயிர்ச் சக்தியை முழுமையாக செயல்களில் செலுத்தி அதில் ஈடுபடுங்கள்.

ராமகிருஷ்ணன பரமஹம்சரின் வார்த்தைகள் மீது ஒருவன் மிகுந்த மரியாதை வைத்து இருந்தான். அவனது படுக்கையில் ஏராளமான மூட்டைப் பூச்சிகள் இருந்தன.

”மனித உயிர்,மற்ற உயிர் என்று பிரிக்காமல், எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்கும்படி ராமகிருஷ்ணா அடுக்கடி சொல்வாரே,

தொந்தரவு செய்யும் இந்த மூட்டைப் பூச்சிகளை எப்படிக் கொல்வது என்று அவன் குழம்பிப் போனான்.

தினமும் தூக்கம்
பறி போயிற்று.

குருவிடமே கேட்கலாம் என்று உறக்க மிகுந்த களைப்புடன் அவரைத் தேடி  வந்தான்..

அங்கே அவன் கண்ட காட்சி அவனுக்கு திகைப்பூட்டியது.

ராமகிருஷ்ணர் தன் பாயில் அமர்ந்து இருந்தார். அதிலிருந்த ஒவ்வொரு மூட்டைப்பூச்சியாக எடுத்து நசுக்கிக் கொண்டு இருந்தார்.

எந்த உயிரையும் காழ்ப்போ, விரோதமோ, வெறியோ இல்லாமல் கையாளும் வரை அதில் தவறில்லை என்பதை ராமகிருஷ்ணர் தன் செயல் மூலம் அவனுக்கு தெளிவுபடுத்தினார்..

*ஆம்.,நண்பர்களே.,*

ஆடு , மாடுகளுக்கு உணவு தாவரம்..
சிங்கம் , புலிகளுக்கு உணவு ஆடு , மாடுகள் ..

ஒன்று அழிந்தால் தான் ஒன்று இந்தப் புவியில் வாழ முடியும் ,

இதுதான் இயற்கையின் நியதி ..

இருந்தாலும் உயிர்ப் பலிகளை நாம் நிறுத்துவோம்
அனைத்து உயிர்களிடம் அன்பு செலுத்துவோம் ,                                        

.*                                 
   🌹🌹🌹🙏🏻💐💐💐💐 ,!!


ravi said…
*"அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது"*

அணையை கடந்து வெள்ளம் சென்று விட்டால் மறுபடியும் அந்த வெள்ளம் பின் அதே அணைக்கு திரும்ப முடியாது. அதே போல தவறவிடும் வாய்ப்புகள் திரும்ப கிடைக்காது. எனவே நேரத்தையும் வாய்பையும் தவறவிடாமல் கிடைக்கும்போதே பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

*பகிர்வு- தகவல் உலா ✍️*
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 40*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
पौष्टिककर्मविपाकं पौष्पशरं सविधसीम्नि कम्पायाः ।

अद्राक्षमात्तयौवनमभ्युदयं कंचिदर्धशशिमौलैः ॥ २४॥

24. Poushtika karma vipaakam Poushpa saram savidasimni Kampaya,

Adraksham aatha youvanam abhyudhayam Kanchi dardasasimoulou.

பௌஷ்டிககர்மவிபாகம் பௌஷ்பஶரம் ஸவிதஸீம்னி கம்பாயாஃ |

அத்ராக்ஷமாத்தயௌவனமப்யுதயம் கம்சிதர்தஶஶிமௌலைஃ ||24||🙌🙌🙌
ravi said…
இச்சையை தூண்டுபவன் காமன். மன்மதன்.

காமனின் ராஜ்யத்தில் நிறைந்து காண்பவர்கள் யௌவன மங்கைகள், தேக ஆரோக்யம் கொண்ட புஷ்டியான ஆண்கள்.

பார்த்துவிட்டால் கண்ணை அதிலிருந்து அகற்ற முடியாமல் செய்யும் பொன்னிற மேனியன்,

பிறைச் சந்திரனை முடியில் சூடியவன்,

பித்தா பிறைசூடி என்று பாட வைப்பவன்,

வர்ணிக்க முடியாத கம்பீரம், புஷ்டி, யௌவனம் நிறைந்த ஏகாம்ரநாதன்,

வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவன்.

அப்படிப் பட்டவரின் மேன்மையான மூர்த்தியை, நடை பயிலும் காமாக்ஷியை கம்பா நதிக்கரை பிரதே சத்தில் கண்குளிர தரிசித்தேன். ������
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 444* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*181 ம்ருத்யுமதநீ -*

காமேஸ்வரன் கால சம்ஹாரன்

அவனே காமேஸ்வரியும் ஆனபோது காலனை பற்றி என்ன கவலை ?

அம்பாளை சரணடைந்த நமக்கும் தான் என்ன கவலை?
ravi said…
எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே!

கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே!

ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக.

நீயோ வெளி காப்பாளன் அதோ அங்கும் உறங்குவது போல் நடிக்கும் எங்கள் கண்ணன் எங்கள் உள் காப்பாளன் ...எங்கள் உள்ளம் திறக்க உன் மாயை எனும் கதவை திறப்பாயோ

மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன்

எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான்.

அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம்.

அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம்.

அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே.

மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.

மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்

எங்கள் ஆலய மணிகதவை கொஞ்சம் தாழ் திறவாய்

மனக்கதவம் திறந்த பரம்பொருளை

திருக்கதவும் திறக்க வரமருள்வான்

இருக்கரம் கூப்பி கண்ணனை வலம் வரவே

எங்கும் கண்ணன் மயமாய் மலர தாழ் திறவாய்

ஆடும் திருவடி கோலம் அறிந்திட ஹரியே தாழ் திறவாய்

அன்னையின் மார்பினில் பொன்மணி கண்டிட மாதவா தாழ் திறவாய்

அருள்நெறி தெளிவுற பாசுரம் புகழ் பெற

அன்பே தாழ் திறவாய்

ஒருமுறை இருமுறை பலமுறை கேட்டேன் ஒளியே தாழ் திறவாய்

காவலனே தாழ் திறவாய் எங்கள் தலைவா தாழ் திறவாய்🙌🙌🙌

கதவே தாழ் திறவாய் தாழ் திறவாய்..
ravi said…
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே!

கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே!

மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன்

நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம்

துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா!

நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.🙌🙌🙌
ravi said…
*15. உறக்கமும் உரையாடலும்!*

*திருப்பாவை- 15ஆம் பாசுரம்:*

_எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!_
_சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்!_ _போதருகின்றேன்_
_வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்_
_வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக_
_ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை_
_எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்_
_வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க_
_வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்_ .

*தோழியர்:*

ஏ! பெண்ணே!
ஏனடி இன்னமும்
எழவில்லையோ

என் கண்ணே!
கிளியே!

கண்மூடித் துயிலுவதில்
உனக்கென்ன அத்தனை களியே?

*படுத்துக் கிடப்பவள்:*

சிலுசிலுவென காற்றடித்து
சித்தத்தில் பித்தமேற்ற-

குளுகுளுவெனக் குளிரடித்து
குறட்டைவிடத் தூண்டிடுதே!

ஆதலால் அன்றாடம்-
அந்தகாரம் தொடங்கி
அதிகாலைப் பொழுதுவரை-

ஓய்வுக்கு வேலைதந்தேன்;
வேலைக்கு ஓய்வுதந்தேன்!

உறக்கத்துடன் இங்ஙனம்நான்
உறவாடிடும் வேளையிலே-

உபத்திரவம் செய்திடவே
உயிர்த்தோழியர் வந்தீரே!

உங்களின் குரல்கேட்டு
உள்ளம் நொந்தேனே!

மீண்டும் மீண்டும் அழைக்காதீர்!

மாற்றார்தம் செயல்களில்
மூக்கை நுழைக்காதீர்!

அழைப்பதை நிறுத்துங்கள்!

அரைநொடியில் வருகிறேன்;

அனைவருடனும் நோன்பிருந்து
ஆச்சரியம் தருகிறேன்!

*தோழியர்:*
உன் பேச்சு என்னவென்று
ஊருக்கே தெரியும்;

கயிறு திரிப்பவள் நீயென்று
குழந்தைக்கும் புரியும்!

வாய்ச்சொல்லில் நீ செய்வாய் சாலம்;

இதனை நம்பாது-
இம்மியளவும் ஞாலம்!

வாக்களித்தல் உனக்கு
சுளுவான காரியம்;

அவ்வாறு வாக்களித்ததை
அட்டியின்றி நிறைவேற்றுதல்-
உனக்கு ஒவ்வாத காரீயம்!

இதனை நன்கறிந்தது-
இந்தக் கூட்டம்;

இதன் முன்பு-
எடுபடாது உந்தன் ஆட்டம்!

*படுத்துக் கிடப்பவள்:*

கிலி கொள்ளும்
கிளியைப் பார்த்து
புலி என்பதா?

மருள விழிக்கும்
மானைப் பார்த்து
சீயம் என்பதா?

வாய்ச்சொல்லில்
வீராங்கனை யார்-

வம்பிழுக்கும் நீங்களா?
வாய்மூடும் நானா?

நீங்களே வல்லவிகள்;
என்னை எழுப்பிட
பாடப்படும் பாட்டுக்கு-
நீங்களே பல்லவிகள்!

நானோ-
வாய் திறக்காதவள்;
வல்லூறு போல- பொய்
வானில் பறக்காதவள்!

சரி விடுங்கள்; நான்
செப்புவதற்கு
செவிமடுங்கள்!

வாய்ச்சொல்லில்-
நானும் வல்லவியே!

இங்ஙனம் ஒப்புவதால்
விளையும்-
அனைவர்க்கும் நல்லவையே!

*தோழியர்:*
வாராய் நீ விரைந்து!
உன் வீட்டின் வாயிலில்

நீண்ட நேரமாய்-
உரைக்கின்றோம் இதை இரைந்து!

ஆயிற்று வெகுநேரம்-

ஆங்கே வானில்
வெய்யோன் உதித்து- வெண்மதி மறைந்து!
இன்னமும் என்ன உறக்கம்-

உன் கண்களில் சோம்பல் நிறைந்து?

பெண்ணே!
திறக்கட்டும் உன் விழி!

விழித்தெழுந்து வீண்சோம்பலைப் பழி!

அனைத்திலும் கொடிதாம்-

அச்சோம்பல் தன்னை அழி!

அங்ஙனம் அழித்து அவன்சீர் பரவு;

அதனினும் உண்டோ-
அகிலத்தை வெல்ல வேறு வழி?

*படுத்துக் கிடப்பவள்:*

உங்களுடன் வருவதற்கு
நான் ஒப்புகிறேன்!

ஆயினும் அதற்கு
உண்டு ஒரு நிபந்தனை;
அதனைச் செப்புகிறேன்!

இங்கே வந்திருக்க வேண்டும்
நம் சுற்றத்துத் தோழியர் மொத்தமும்;
அங்ஙனம் இருந்தால்தான்
நோன்பிருக்க விழையும் என் சித்தமும்!

ஆக-
ஆருயிர்த் தோழியரில்
ஆரேனும் வாராதுளரோ என
ஆராய்ந்து கூறடி கணக்கு;

அங்ஙனம் வாராதிருந்தால்
அவர்களை வரவழைத்து
அதன்பின் கூறடி எனக்கு!

*தோழியர்:*

கூறியது போதும்- நீ
பொய்ச் சாக்கு!

குறைகூறுவதை விடுத்து
எழுந்துவந்து எம்மை நோக்கு!

இங்கே கண்டோம்- நாங்கள்
அனைவரின் வருகையை;

இன்னும் எதிர்பார்ப்பது
உந்தன் ஒரே ஒரு கையை!

எழாமல் இன்னமும் நீ
எதாவது சாக்கிட்டு-
படுக்கையிலேயே கிடப்பது
சரிதானோ?

எண்ணுக!
ஒருவாறு நீ எழுந்ததும்
உடனடியாய் இங்கு வந்து-
நிற்கின்ற எங்களை எண்ணுக!

தவங்கள் புரிவோர்
தரிசிக்க விழைந்திடும்
நவநீதக் கண்ணனை
நாவற்பழ வண்ணனை-

அவங்கள் பலபுரிந்த
அரக்கன் கம்சன்-
சவமாக்கிட எண்ணினான்;

சூழ்ச்சி பல பண்ணினான்!

ஏவினான் கண்ணன்மேல்
ஆனையை;
" *குவலய பீடம்* " அதன் பேர்!

கண்ணனை அழித்திட
அதற்கிட்டான் ஆணையை;

குமுறியது மதுராபுரி ஊர்!
அன்றோ-

ஆனையைக் கொல்ல
விழைந்தது முதலை;
இன்றோ-

ஆனை கொல்ல விழைகிறது முதலை!

ஆனையை எதிர்கொண்டு
அழித்தனன் கிருட்டிணன்;

அங்ஙனம் அழித்து- தன்
அம்மானை மிரட்டினன்!

ஆனை மட்டுமா?

அச்சுதனை அழித்திட எண்ணி
அழிந்தவருண்டு அநேகர்!

அங்ஙனம் அழிந்த
அசுரர்களில் பலர்-
அரக்கன் கம்சனின் சிநேகர்!

தாடகை;
திருணாவர்த்தன்;
சகடாசுரன்;
பகாசுரன்;
பிரலம்பாசுரன்- என
அப் பட்டியல் நீண்டது!
அனைத்து அரக்கரையும்
அச்சுதனின் கைகள் கீண்டது!

"இத்தகைய
இணையற்ற ஆற்றலை-
இப்புவியில் கொண்ட
கண்ணனுக்கு மாற்றிலை!"

எனப் போற்றுவோம் வாராய் பெண்ணே!
அவன்புகழ் சாற்றுவோம்
வாராய் பெண்ணே!💐💐💐💐

-
ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 50 started on 6th nov
ravi said…

பழனிக் கடவுள் துணை -31.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-14


மூலம்:

அறைகழற்செஞ் சீறடிகள் அன்றென் சிரத்தில்
உறையவைத்த மேன்மைஎனக் குண்டோ – இறையளவும்
இன்றோ அறியேன், எழிர்பழனி மாமலைமேல்
நின்றோனே! மெய்யுரைப்பாய் நீ (14).

பதப்பிரிவு:

அறை கழல் செம் சீறடிகள் அன்று என் சிரத்தில்
உறைய வைத்த மேன்மை எனக்கு உண்டோ? – இறை அளவும்
இன்றோ அறியேன்!! எழில் பழனி மாமலை மேல்
நின்றோனே! மெய் உரைப்பாய் நீ!!! (14).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

மிக உருக்கமான வெண்பாக்களில் ஒன்று.

அழகே உருவான பழனி மா மலையின் மீது நின்றோனே! பழநியாண்டவனே! ஒலிக்கின்ற சிலம்பு பொருந்திய உன் செம்மையான சிறிய திருவடிகள் அன்று என் தலையில் பொருந்தும்படி வாய்த்த சிறப்பு, மேன்மை எனக்கு உண்டோ? ஒரு சிறிது அளவும் இன்றோ அறியேன் உன் அடிமை! மெய்யே உருவான பழனியப்பா நீயே மெய் உரை!

தரிசான என் சிரசில் உன் திருவடிப் பரிசு!என்னே பாக்கியம் செய்தேன் என் ஞான தண்டாயுதபாணியே!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே!

கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே!

மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன்

நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம்

துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா!

நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.🙌🙌🙌
ravi said…
[30/12, 19:52] Jayaraman Ravilumar: *பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 50 started on 6th nov
[30/12, 19:52] Jayaraman Ravilumar: *பாடல் 16 ... பேராசை எனும்*

(பேராசையில் கலங்குவது நியாயமா முருகா?)

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே
ravi said…
உடல் நோயைவிட கொடிதானது பிறவி நோய்.

இந்தப் பெரிய பிறவி
நோய்க்குக் காரணம் நம் ஆசைகளே.

ஆசைகளை நிறைவேற்றிக்
கொள்ளும் முயற்சிகளே வினைகளாக அமைந்துவிடுகின்றன.

வித்து இன்றி விளைவு இல்லை
வினை இன்றி நுகர்ச்சி இல்லை

ஆகையினால் பிறவிக்கு ஆணி வேர் ஆசைகளே.

.. அவா என்ப பிறப்பீனும் வித்து ..

... என்கிறது திருக்குறள்.

சிறிய ஆசைகளை அனுபவித்துத் தீர்த்துவிட
வேண்டும்.

பெரிய ஆசைகளை அறிவாட்சித் திறனால்நீக்கிவிட
வேண்டும்.

பேராசைக்கு மருந்து அனுபவமன்று.

அறிவால் ஆராய்ந்து
பார்த்து அமைதி பெறுதல்.
ravi said…
[30/12, 19:48] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 431* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[30/12, 19:48] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
மீண்டும் திருமாலை உதவிக்கு அழைத்தார் பிரம்மா.

வெஃகணைப் பெருமாள் என்ற திருநாமத்துடன் வேகவதி நதியின் குறுக்கே
ஓர் அணைபோலத் திருமால் சயனித்தார்.

அவரைக் கண்டதும் சரஸ்வதியின் வேகம் அடங்கியது.

“கணவன் மனைவி இப்படி சண்டை போட்டுக் கொள்வது நல்லதல்ல. சரஸ்வதீ! நீயும் இணைந்து இந்த யாகத்தைச் செய்து முடி!” என்று
திருமால் சொல்ல,

சரஸ்வதி, சாவித்திரி, காயத்திரி மூவருடனும் இணைந்து பிரம்மா தன் யாகத்தைச் செய்து முடித்தார்.

அவரது பாபங்கள் அனைத்தும் அதனால் விலகவே, திருமால் அந்த யாகசாலையில்
உத்திரவேதியில் தீக்கு நடுவே வரதராஜப் பெருமாளாகக் காட்சி தந்தார்.🙌🙌🙌
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 426*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 58வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம்.

एको वारिजबान्धवः क्षितिनभो व्याप्तं तमोमण्डलं
भित्वा लोचनगोचरोऽपि भवति त्वं कोटिसूर्यप्रभः ।
वेद्यः किन्न भवस्यहो घनतरं कीदृग्भवेन्मत्तम-
स्तत्सर्वं व्यपनीय मे पशुपते साक्षात् प्रसन्नो भव ॥ ५८॥

ஏகோ வாரிஜபா³ந்த⁴வ꞉ க்ஷிதினபோ⁴ வ்யாப்தம்ʼ தமோமண்ட³லம்ʼ
பி⁴த்வா லோசனகோ³சரோ(அ)பி ப⁴வதி த்வம்ʼ கோடிஸூர்யப்ரப⁴꞉ .
வேத்³ய꞉ கின்ன ப⁴வஸ்யஹோ க⁴னதரம்ʼ கீத்³ருʼக்³ப⁴வேன்மத்தம:
ஸ்தத்ஸர்வம்ʼ வ்யபனீய மே பஶுபதே ஸாக்ஷாத் ப்ரஸன்னோ ப⁴வ ..

இது 58வது ஸ்லோகம்.
Oldest Older 201 – 355 of 355

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை