ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 54 (278-282)

 

278-282

 LT 54 

 லப்³போகா³ லப்³ஸுகா² லப்³ஹர்ஷாபிபூரிதா

ஹ்ரீம்‍காரமூர்திர்ஹ்ரீம்‍காரஸௌதஶ்ருங்க³கபோதிகா 54

278 : லப்³போகா³

உண்மையான பக்தர்கள் தரும் போகங்களை விரும்பி ஏற்றுக்கொள்பவள் 

279 : லப்³ஸுகா²

பக்தர்கள் தன் திருநாமங்களை சொல்வதையும் , விரும்பி கேட்பதையும் , விரும்பி படிப்பதையும் கண்டு சுகம் பெறுபவள் - அந்த சுகத்தை அனுபவித்து பலன்களை கேட்காமலே பல மடங்கு கொடுப்பவள்  

280 : லப்³ஹர்ஷாபிபூரிதா

என்றும் மங்களகரமாகவும் , மகிழ்ச்சியுடனும் இருப்பவள் . துயரத்திற்கு துயரம் கொடுப்பவள் 

281 : ஹ்ரீம்‍காரமூர்திர்

பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் பதினைந்தாவது எழுத்தாகிய ஹ்ரீம்கார வடிவினள் 

282 : ஹ்ரீம்‍காரஸௌதஶ்ருங்க³கபோதிகா

ஹ்ரீம்கார மாளிகையின் சிகரத்தில் வசிக்கும் அழகிய பெண் புறா

 

 

278. Om Labdha Bhogaayai Namaha

Salutations to the Mother, who gets her desired Pleasures and Comforts. Bhogam is experience of pleasure. Happiness normally comes after some suffering. Devi is the only one without any barriers or obstacles, who is the personification of Happiness. What we usually enjoy is transitory, the moments stay for seconds. Devi is happiness, and that condition is always permanent.

279. Om Labdha Sukhaayai Namaha

Salutations to the Mother, who is the personification of Bliss and Pleasure and has the attributes of Bliss and Pleasure. Devi is the Blissful Manifestation, Ananda swaroopini.

280. Om Labdha Harshaabi Poorithaayai Namaha

Salutations to the Mother, who is infinite Bliss because she has reached the Pinnacle of happiness. She who gets fulfilled by the supreme happiness. Harsham means healthy body with brightness and satisfaction. we call this siddha ullasa vishayam. We get happiness when we get the desired object. Devi inspite of all this is unchanging, ever in Blissful state with a smiling face. 

281. Om Hreenkaara Moorthyai Namaha

Salutations to the Mother, who is the Manifestation of Hreenkaram. It is in the third part and the sixth letter of the Shakthi koota and the fifteenth letter in the Panchadasi Mantra.

282.Om Hreenkaara Soudhasrunga kapothikaayai Namaha

Salutations to the Mother, where Hreenkara is the Palace, and Devi is a Dove on the top storey of the Palace. The palace is White in colour. So, 'if' is white, 'er' is red, 'ee' is the Decoration of the house and 'im' is the Dove. 

* 278 * Labhdha bhoga - She who enjoys fulfillment of her will


* 279 * Labhdha sukha - She who enjoys comforts


* 280 * Labhdha harshabhi pooritha - She who gets fulfilled by the supreme happiness that she desires


* 281 * Hrimkara moorthi - She who is the personification of the sound “hrim”- the fifteenth and last letter of the panchadasakshari manthra


* 282 * Hrim kara soudha shringa kaphodhiga - She who is the dove who lives in the top of the palace called “hrim”


 


Comments

ravi said…
*மூன்று*
*ராணிகள்*

👑👑👑

👑 *மீனாக்ஷி*

நான்மாடக்
கூடலிலே நாரைகள் பறக்கும் வானத்திலே

நான்மறைகள் சாமரம் வீசும் வீதியிலே

கிளிகள் கொஞ்சும் கடம்ப வனத்தினிலே

பேரழகி ஒருத்தி காத்திருந்தாள்
கண்கள் பேசும் காதலன் வருகைக்காக ...

ஆட்சியிலே மும்மாரி பெய்கிறதா ?

முக்காலமும் பூஜை நடக்கிறதா என்று கேட்டு வந்தான் காக்க வைத்த காதலன் !!

பஞ்சும் அஞ்சும் பாதம் கொண்டவள் சொன்னாள்

விழிகள் அங்கும் இங்கும் ஓடுவது ஊர் மக்களை காக்கவே கவலை வேண்டாம் என்றாள் ...

காதலில் கண்கள் இங்கே இல்லை என்றால் கரும்பும் கசக்காதோ என்றான் ஆயிரம் மன்மத முகம் கொண்டவன்

இதயத்தை கொண்டு வந்தேன் இங்கே மான் போல் ஓடும் மனமதை எடுத்து வந்தேன் ...

நம் காதலுக்கு இது போதும்
காவியம் நாம் படைத்திடவே என்றாள்

அணிந்து இருந்த மரகத மூக்குத்தி திரிநயனம் கொண்ட சொக்கனைப்
பார்த்தே
கண் சிமிட்டியதே ஓர் காரணத்துடன் !!

👑 *காமாக்ஷி*

கண்கள் ஆட்சி செய்ய கருத்தெல்லாம் ஏகாம்பரம் ஆனதே !

காமன் அவன் தந்த ஆயுதங்கள் செல்லுமோ அவன் விதி முடித்தவன் மீதே ?

கவலை கொண்டாள் இடை என்றே ஒன்றும் இல்லாதவள்

வாரி அணைக்க கரங்கள் துடித்தும் வல்லபம் ஆயிரம் இருந்தும் ஏகன் அநேகன் வரவில்லை அங்கே

மண் எடுத்து உருவம் அமைத்தாள் மண் ஆளும் மஹாராணி

வெள்ளம் கரை புரண்டு ஓடி வர கட்டழகன் அவனை நெஞ்சம் முட்ட அணைத்துக்
கொண்டாள் ...

ஓடி வந்த வெள்ளம் பாடிக்கொண்டு சென்றது எதிர்பார்த்ததை ஏகாம்பரன் பெற்று விட்டான் என்றே !!

👑 *விசாலாட்சி*

வேதங்கள் கீதங்கள் முழங்க நாதங்கள் நமசிவாய என்றே நாவசைக்க

சஹஸ்ராரம் தனிலே யாழ் எடுத்து வாசித்தாள் விசாலமான கண்கள் கொண்ட மஹாராணி

வருவானோ விஸ்வநாதன் ... தருவானோ முத்திரை சின்னங்கள் ...

தவித்துப்போனாள் தங்க பதுமை

தங்கரதம் பவனி வர தாழம்பூ குடை பிடிக்க ஐம்பூதங்கள் பரியாக தேர் இழுக்க

வந்தான் பரிமேலழகன் ...

நரிகள் பரியாக்கியவன்

இன்று சரியாக வந்தான் வண்ண வண்ண பட்டாடையில் ...
கண்ணை பறிக்கும் நகை அணிந்து

விசாலமான கண்களில் விஸ்வநாதன் அமர்ந்தான் ...

விரிவான கண்கள் சற்றே இமை உதவி நாடியது ...

அந்தரங்கம் புரியவே இமைகள் சற்றே மூட

சரிந்தான் அவள் மடியில் சரித்திரம் எழுதியது ஓர் புதிய இலக்கணம் அன்று

சந்திரன் கொட்டி தீர்த்தான் தன் அமுத கலசத்தை அங்கே !!
ravi said…
*இரண்டு எதிர்மறை ராஜாக்கள்*

*நடராஜா & கோவிந்தராஜா*

உண்டவன் ( மண்) உறங்க

ஒழித்தவன் ( அழித்தல்) பித்தாகி போனால் யார் எனை காக்க கூடும் ?

----குமர குருபரர்

உண்டவன் இங்கே உறங்கவில்லை ஒழித்தவன் இங்கே பித்தாகவில்லை

ஆனந்த நடனம் அற்புத பாலகன் அடி முதல் காணாமல் வியந்து நின்றான் ...

இப்படியும் ஆட எப்படியும் முடியும் இவனால் என்றே மதி மயங்கி நின்றான் ....

கரங்கள் தான் குவிய கண்கள் கண்ணீர் சொரிய

கமலக்கண்ணன் முக்கண்ணன் ஆடும் நடம் அதில் எக்கண்ணும் மூடி இருக்க

கண்ணின் இமை சாய்த்து இதழ் தான் விரித்து

புன்னகை ஊன்றி தன் நகை எடுத்துக்
கொடுத்தான் பரிசாக

பரமன் கரம் கொண்டு கழுத்தில் அணிந்தான் ...

அதன் தரம் பன்மடங்கு உயர்ந்து நின்றதே !!

ஆடுவோர் ஆடியபின் என்போல் உறங்குவார் அன்றோ என்றான் கோவிந்தன் ...

சிரித்த ஈசன் சொன்னான் ...

உண்மை ... ஆடுவோர் எல்லாம் உறங்குவதில்லை

ஆடியபின் உறக்கம் தேடியும் கிடைப்பதில்லை ...

ஆனந்தம் தனை இருக்கும் போதே பங்கு போட்டால் எழுந்து ஆடாதோ வந்த உறக்கம் ... 🙏🙏🙏
ravi said…
*இரண்டு ராஜாக்கள்*

*தில்லை நடராஜன்*

*திருவாரூர் தியாகராஜன்*

ஆனந்த நடனம் இங்கே அனுதினமும்

அற்புத நடனம் இங்கே எப்பொழுதும்

பார்த்தவண்ணம் திகைத்திருக்கும் கோவிந்தன் இங்கே

ப்ராணத்தில் அஜபா நடம் கண்டு களிக்கும் மாதவன் அங்கே !

மானாட மழுவாட மதியாடப் புனலாட
மங்கை சிவகாமியாட தில்லையே சேர்ந்தாடுவது இங்கே !

மாலாட நூலாட மறையாடத்

திரையாட
மறைதந்த பிரம்மனாட

கோனாட வானுலகு கூட்டமெல் லாமாட

குஞ்சர முகத்தனாடுவது இங்கே

குண்டல மிரண்டாடத் தண்டைபுலி யுடையாடக்

குழந்தை முருகேசனாட

ஞானசம் பந்தரொடு யிந்திரர்பதி னெட்டு
முனியாட பாலகருமாடுவது அங்கே !!

நரைதும்பை யறுகாட
நந்தி வாகனமாட
நாட்டிப் பெண்களாட வினை அறுப்பது இங்கே

உனைப்பாட யெனைநாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவது அங்கே

தாயென்று சேயென்று நீயென்னு நானென்று

தமியேனை யிவ் வண்ணமாய் ஆக்குவது இங்கே !!

எங்கும் சிவானந்தம் வருவது அங்கும் இங்கும் அவன் ஆடுவதால் தானோ ? 💐💐💐
ravi said…
*இரண்டு ரங்காக்கள்* 🪷🪷

ஒருவன் ஸ்ரீ ரங்க நாதன்

இன்னொருவன் பாண்டு ரங்கன்

ஒருவன் யோக நித்ரா வில் அனந்தசயனம்

ஒருவன் சுடும் செங்கலில் நின்று தவம்

காவேரி பாதம் தழுவி காதம் ஓடும் அழகு ...

சந்திரபாஹா அமுதை பொழிந்து விட்டல விட்டல என்றே சொல்லி ஓடும் அழகு

ரங்கநாயகி தன் அரங்கம் தனில் அந்தரங்கம் கொண்டவள் ...

ருக்மிணி இங்கே அவல் சுவைத்து அமுது படைப்பவள்

கிளிகள் கொஞ்சம் அழகு இங்கே

கீர்த்தனைகள் மிஞ்சும் வானின் அளவு அங்கே

எதையும் கொடுப்பான் ஸ்ரீரங்கம் ரங்கன் ...

வேண்டதக்கது அறிவான் வேண்டும் முழுதும் தருவான் பண்டரிப்பூர் விட்டலன்

நாமம் சாத்தியவர்கள் இங்கே செய்வார் பூஜை ...

நாமம் சொல்வோர் அணைப்பார் இங்கே அவன் தேஜசஸை

கால் நடந்து செல்வோர் கோடி ...

நாடி நலம் பெற வைப்பான் விளையாடி

மால் அறிந்து மயங்குவோரை நாடி வந்து கோடி தருவான் தேடி செல்ல வேண்டாம் என்றே !! 🛕🛕
ravi said…
*தட்சிண காளி 👅 காளிகாட் மேற்கு வங்காளம்*

யாதும் ஆனாய் காளி யாவும் நீயே காளி !

போதும் போதும் என சொல்லும் மனமும் தந்தாய் !

மேலும் மேலும் வரங்கள் தந்தாய் ...

காதும் காதும் வைத்தாற் போல் உன் தீக்ஷை தந்தாய்

என்னுள் புகுந்து என்னுள் கலந்து என்னுள் நிலைத்து நின்றாய்

சொல்லும் பொருளும் ஆனோம் காளி பாலும் மணமும் ஆனோம்

சக்கரையும் அதன் சுவையும் ஆனோம் காளி

எக்கரையும் இனி உன் அக்கறை என்றே அக்கரை சேர்ந்தேன் காளி

கடலில் நீந்தும் போதே காளி கரையை காண வைத்தாய் ...

கறை படிந்த என் வாழ்க்கை இது

கை பிடித்து தூக்கி விட்டாய்

விடை என்றே வந்தாய் காளி வினைகள் ஓடக்கண்டேன் ..

விடை ஏறி நின்றாய் காளி உன் கடை கண்டு உவந்தேன்

துன்பம் இனி இல்லை காளி துயரம் இனி இல்லை ...

சடை கொண்டோன் பாகம் படை இன்றி வென்றாய் ...

தடை இனி ஏதும் உண்டோ காளி நீ எனை அடை காக்கும் போதே !!
ravi said…
கிருஷ்ணன் அவதாரம் ... *அத்புதம் பாலகம்*

இடம் கம்சனின் சிறைச்சாலை

Witness : தேவகி , வசுதேவர் , முப்பது முக்கோடி தேவர்கள் , கின்னர்கள் , ரிஷிகள் , பர்வதங்கள் , கந்தர்வர்கள் , முனிவர்கள் இன்னும் கோடி கோடி உயிரினங்கள் ...

*சூழ்நிலை :* சந்தோஷம் , பரமானந்தம் தேவகானம்
சச்சிதானந்தம்
சிவம்

ஸ்ரீமத் பாகவதம் கிருஷ்ணனின் பிறப்பை இப்படி குறிப்பிடுகிறது

தம் அத்புதம் பாலகம்

அம்புஜேக்ஷணம்
சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம்

ஸ்ரீவத்ஸலக்ஷ்மம் கலசோபிகௌஸ்துபம்

பீதாம்பரம் ஸாந்த்ரபயோதஸௌபகம்

மஹார்ஹ வைடூர்ய கிரீடகுண்டல-
த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ரகுந்தலம்

உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபி:

விரோசமாநம் வஸுதேவ ஐக்ஷத

எப்படி கிருஷ்ணன் உதித்தான் என்று தெரியுமா ?

சங்கு, சக்கரம், கதை, பத்மம் தாங்கிய நான்கு திருக்கரங்கள் ,

திருமறு,
கவுத்துவம், வனமாலை தாங்கிய மார்பு,

பீதகவாடை, மின்னும் முடி-
குண்டலங்கள்,

மேகலையும் கங்கணமும். தாமரைக்கண்கள் கொண்ட அற்புத வடிவம்.

வசுதேவர் கண்ணிமைக்
காமல் பார்த்தார்... இமைகளாய் கண்ணன் வந்த போது

கண்ணன் சொல்கிறான் ....

*அம்மா* !

நான் நான்கு கரங்களுடன் வந்திருக்கிறேன் ...

எந்த தாயும் குழந்தை நன்றாக வளர்ந்து நல்ல பெண்ணாய் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றே ஆசைப்படுவாள் ...

அறிவேன் உன் ஆசையை

இதோ பார்த்துக்கொள் உன் மாட்டுப்பெண்ணை... மார்பில் உறைந்திருக்கும் லட்சுமியை காட்டுகிறேன்

பிறகு ஒரு தாய் எதற்கு கவலைப்படுவாள்...?

நல்ல பேர / பேத்திகள் பிறக்க வேண்டும் என்றே ...

பாலன் நான் பாலகனாய் வந்தேன் ( *க* என்பது சதுர் முக பிரம்மனை குறிக்கும்) ...

இதோ என் நாபியில் உதித்த உன் பேரக்குழந்தையைப் பார்த்துக்கொள்

சிறையில் எனக்கு விளையாட உன்னிடம் ஒன்றும் இருக்காது என்றே

இதோ சங்கையும் , சக்ரத்தையும் , கதையையும் கொண்டு வந்திருக்கிறேன் ... ..

கிழிந்த துணிகள் உன்னிடம் இருக்காது

இதோ என் பட்டு பீதாம்பரம்.....

இப்படி ஒரு தாயை சரியாக புரிந்துகொண்ட குழந்தை வேறு எங்கும் உண்டா??

அதனால் சுகர் பாடும் போது
*அத்புதம் பாலகம்* என்றே தன்னையும் மறந்து பாடினார் 💐💐💐💐
ravi said…
*மூகாம்பிகை - கொல்லூர்*

ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரிலே

அழகாக வீற்றிருப்பாய்

அங்குசம் பாசம் கரும்பு வில் ஐங்கனை
அங்கையில் ஏற்றிருப்பாய்

வேயின் குழல் முழவு வீணைநாதச் சுவரம்
மேவுமிசை கேட்டிருப்பாய்

விறலியர் நடம்புரிய வேறு வேறான கலை
விந்தைகள் நயந்திருப்பாய்

ஞாயிறு முதற் பிரமன் நாராயணன் துதித்திடவும்

ஞால முழு
தாண்டி ருப்பாய்

நாடிவரும் அன்பருக்குக் கோடி நலம் தந்துலகில்
நலிவின்றிக் காத்திருப்பாய்

ஈயென இரந்துன்னை வேண்டவும் வேண்டுமோ

எனையும் நீ ஆதரிப்பாய்

இறைவி எனை ஆண்டருளும் மூகாம்பிகாம்பிகையே!!

இமயமலை வாழும் உமையே !!💐💐💐
ravi said…
இன்று வெள்ளிக்கிழமை கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு கவிதை மூலம் அழைத்துச் சென்றுவிட்டாய்....
அம்பிகையின் தரிசனமும் கவிதை படைப்பும் அருமை 🙏
ravi said…
*புவனேஸ்வரீ - புதுக்கோட்டை*👍🪷

வானமும் பூமியும் மாறினும் மாறாத
வாய்மை வடிவான தேவி

வழிபாடு செய்பவர் குறைபாடு தீரத்தின்ப
வாழ்வுதரும் ஆதி தேவி

தேனுமாய் அமுதுமாய்ச் சித்தத்திலே நின்று
தித்தித் தினிக்கும் தேவி

சேரரின் மார்பை இருகூறாகவே செய்யும்
திரிசூலம் ஏந்தும் தேவி

கானமும் சிற்பமும் கலைமலர் பலப்பலவும்
காணிக்கை கொள்ளும் தேவி

கற்பனையும் ஒப்பனையும் காலம் ஒரு மூன்றும்
கடந்த எம் தேவதேவி

ஈனமொன்றண்டாத ஞானமாதேவி

உனை
என் சொல்லி வாழ்த்துவோம் யாம்

இறைவி எனை ஆண்டருளும் புவனேஸ்வரீயே!!

இமயமலை வாழும் உமையே !!💐💐💐
ravi said…
*பெண்மை* Happy women 's day

உள்ளூரும் சிந்தனையில் உற்சாகம் பிறக்கையிலே

மேலூறும் ஓர் எறும்பு கொடுக்கழுத்தி கடிக்கையிலே

ஆளுயர நாய் பார்த்து அதிசயித்து நிற்கையிலே

கள்ளூறும் கவிதையினை உள்வாங்கி திகைக்கையிலே

ஓர் சொல்லே உலகத்து மனிதரிடம் வெளியாகும்

தன்னையும் அறியாமல் " *அம்மா* " வெனக் குரல் எழுப்பும்

அதிசயமோ ஆத்திரமோ ஆயாசப் பெறு மூச்சோ .

உணர்ச்சி எதுவரினும் இவ்வொலியே முன் நிற்கும்

ஆதார ஓர் அசைவை மானுடத்து முதற் குரலை

தன்னுள்ளே சொல்லாக்கி வடிவமைத்துத் தக்க வைத்த என் தமிழே !

இயல்பானப் பெருமொழியே

கவியரங்க காவலன் நான் கரம் கூப்பி வணங்குகின்றேன்

கவியரங்கத் தொட்டிலிலே கை கொட்டும் மழலை நான்

கையசைத்து காலசைத்து கவிபாடும் பிள்ளை நான்

காதோரம் கேட்டவற்றைக் கண் பார்த்த அதிசயத்தை என் மொழியில் கவியாக்கி

உங்கள் முன் வைக்கின்றேன்

தமிழ்ப்பாலைத் தினந்தோறும் வயிறு முட்டக் குடித்து விட்ட
தைரியத்தில் எழுதுகிறேன் ..

பிழையிருப்பின் பொறுத்தருள்வீர்

போஷாக்குக் குறைவென்றால் - அது தாய்ப்பாலின் குற்றம் அல்ல

போதாத காரணம் தான் எனக்கு ...புத்தி போதாத காரணம் தான் .

பொற் பதக்கம் பட்டப்பெயர் உதவித்தொகை எதுவுமின்றி மறைந்துவிட்ட என் பாரதிக்கு என் வந்தனம் முதலில் தருகிறேன்

பெண்மை எனும் எரிகின்ற தீயினிலே இன்று நெய்யூற்றும் விளையாட்டைப் பார்க்கிறேன்

இல்லாத பெரு நெருப்பை ஏக்கமாய்ப் பார்ப்பதற்கா ?

கிளறி விட்டு ப் பார்ப்போமே சாம்பலேனும் கிளம்பாதா என்றொரு முடிவுக்கு வந்தனரோ சிலரில் பலர் இங்கே ?

காவியங்கள் பல படைக்கவே தாரகைகள் காரிகைகளாய் வந்தனர் இங்கே ...

பெண்மையை மதிக்காவிட்டால் பேரழிவு வந்துவிடும் ...

பீஷ்மருக்கும் அம்பாய் வந்தாள் அம்பை எனும் தாரிகை ...

இலங்கை தனை அழித்திட மிதிலையால் முடிந்ததன்றோ ...

மதுரை அக்னிப்பிரவேசம் கண்டே மானிக்கங்களை சிதறியதன்றோ....

போவது மட்டும் பெண் தெய்வ கோயில் என்றால் வேண்டுவது மட்டும் ஆண்கள் சௌகரியமோ ?

பெண்மை வாழ வேண்டிடுவோம் ...

பாரதியின் எழுத்துக்கு உயிர் தந்திடவோம் 💐💐💐
ravi said…
Shriram

9th March

*It is Always Good to be Associated with Average Type of People*


At a conference of thieves, some ‘practitioners’ of the art proposed that people should be robbed without purposely hurting them, as far as possible, while others expressed the opinion that they must ‘earn’ the loot and must therefore thrash the victims. Be that as it may, all were unanimous about robbing others! That is, however, hardly different from what we people think and do. One section says, ‘We must approach Prapancha with a pragmatic outlook’; another contradicts this and advocates doing Prapancha with adequate discretion; while yet another pleads for a proper degree of self-interest while doing it. None, however, thinks of God as the basis and the goal! All agree that Prapancha is indispensable, whether with God alongside or without Him! In other words, everybody takes Prapancha as substantive, and God as an accessory of doubtful necessity or utility, or even a superfluity, a figment of imagination, or a superstition, or at best, a dispensable adjunct.

An inebriated drunkard was raving, singing a song all out of tune. Another, equally drunk, came along and hearing the first, upbraided him, ‘What a horrid ditty and what awry tunes! Let me show you what and how to sing.’ And after a while, the first drunkard similarly scolded the second! Similarly, those steeped in Prapancha start making wild, illogical assertions and enter into wrangles, with similar others. Those who clamour against social restrictions cannot be called sane, for no society can subsist without such restrictions.

Except in cases of gross maltreatment, being a subordinate may be no less pleasant than being the boss. Indeed, being a boss often involves trouble, onus, and anxiety which a subordinate may be spared. In worldly dealings we should have only enough shrewdness to save ourselves from being duped by others’ cunningness. However, we should not be wily, should not deceive or decoy others.

The majority of the people I came across in life belonged to the ordinary, average type. I found them good to live with and deal with. They are average in all respects; average in their sin and in their virtue, and even in their urge for the quest of God.

One who has enough to maintain himself and his family at a reasonable standard of life and to maintain a moral standard, may consider himself rich enough.

* * * * * * * * *
ravi said…
*GLIMPSES FROM BHAGAVATHAM (10):*

Vishnu’s attendants justified the special chariot from Vaikuntam to carry away the ghost of the wicked Dundukari thus: ‘O Pious Gokarna! What you say is true. Many people did hear the Bhagavatha Saptaham (7 day Yajna). But what was the quality and intensity of their reception? Many had come only to enjoy the free food & snacks which you supplied for 7-days – naturally they were only thinking about the food. These people were, therefore, half-asleep because of their heavy stomachs when the parayanam (chanting) was in progress. Several old men attended merely as a pastime. They were only wanting to escape the boring and tiring atmosphere in their families and spend a few hours peacefully. So, they were not concentrating on the pravachanam. Thus, the majority of those present were mentally absent from the site. Further, and more importantly, none of the listeners were interested in analyzing in the night whatever they had heard during the day. We want to make it clear to all concerned that mere physical presence at Bhagavatha Saptaham will not give best results. Now look at the ghost. It had 100% faith (shradha) and determination (sankalpam) to get cured. It was alert and listened to every word of what you said. It remained without food or water for 7 days (true shravanam). ‘Empty stomach makes the mind alert’. So, the ghost concentrated on the deep contents with fully alert mind (ekagratha). Further, and more importantly, every night, it remained continuously thinking and analyzing the essence of the stories to the exclusion of everything else (ananya manasa chintanam) - just like the cow chewing and masticating its food for hours absorbing the essence of the food and assimilating it. Further, my dear Gokarna, your brother’s soul as a ghost had suffered for many years the severe mental agony for the misdeeds committed. During the suffering, it did not curse anyone or even its own fate. But it had accepted them as its prarabda (God’s gift) and repent sincerely. Moreover, throughout its sufferings it had the presence of mind to repeat “O Lord” “O Lord” – this continuous chanting of Lord’s name means it had surrendered to His mercy unconditionally. Thus, there was sufficient ‘prayaschittam’ (sincere atonement) for the bad deeds. Finally, the ghost was also fortunate enough (result of its past actions) to be born and grow up along with a very pious and spirituasl being like you, Gokarna, who is a great Vishnubhakta. Lasly, it was very fortunate to be exposed to the scintillating spiritual atmosphere prevailing in Bhagavatha Saptaha Sat-sangham of thousands of Vishnu bhaktas for 7 full days. Now tell me, did he not deserve Vaikuntam?” Gokarna was convinced and prostrated before the messengers of Vishnu for misunderstanding them them. Vyasacharya has also conveyed through this story many other deeper Tatwams about the efficacy of Bhagavatha-saptaha-yajna which will be analysed further presently. [With warm regards: R. Hariahran

🪷🪷🪷🪷🪷
ravi said…
*பெண்மை* Happy women 's day

உள்ளூரும் சிந்தனையில் உற்சாகம் பிறக்கையிலே

மேலூறும் ஓர் எறும்பு கொடுக்கழுத்தி கடிக்கையிலே

ஆளுயர நாய் பார்த்து அதிசயித்து நிற்கையிலே

கள்ளூறும் கவிதையினை உள்வாங்கி திகைக்கையிலே

ஓர் சொல்லே உலகத்து மனிதரிடம் வெளியாகும்

தன்னையும் அறியாமல் " *அம்மா* " வெனக் குரல் எழுப்பும்

அதிசயமோ ஆத்திரமோ ஆயாசப் பெறு மூச்சோ .

உணர்ச்சி எதுவரினும் இவ்வொலியே முன் நிற்கும்

ஆதார ஓர் அசைவை மானுடத்து முதற் குரலை

தன்னுள்ளே சொல்லாக்கி வடிவமைத்துத் தக்க வைத்த என் தமிழே !

இயல்பானப் பெருமொழியே

கவியரங்க காவலன் நான் கரம் கூப்பி வணங்குகின்றேன்

கவியரங்கத் தொட்டிலிலே கை கொட்டும் மழலை நான்

கையசைத்து காலசைத்து கவிபாடும் பிள்ளை நான்

காதோரம் கேட்டவற்றைக் கண் பார்த்த அதிசயத்தை என் மொழியில் கவியாக்கி

உங்கள் முன் வைக்கின்றேன்

தமிழ்ப்பாலைத் தினந்தோறும் வயிறு முட்டக் குடித்து விட்ட
தைரியத்தில் எழுதுகிறேன் ..

பிழையிருப்பின் பொறுத்தருள்வீர்

போஷாக்குக் குறைவென்றால் - அது தாய்ப்பாலின் குற்றம் அல்ல

போதாத காரணம் தான் எனக்கு ...புத்தி போதாத காரணம் தான் .

பொற் பதக்கம் பட்டப்பெயர் உதவித்தொகை எதுவுமின்றி மறைந்துவிட்ட என் பாரதிக்கு என் வந்தனம் முதலில் தருகிறேன்

பெண்மை எனும் எரிகின்ற தீயினிலே இன்று நெய்யூற்றும் விளையாட்டைப் பார்க்கிறேன்

இல்லாத பெரு நெருப்பை ஏக்கமாய்ப் பார்ப்பதற்கா ?

கிளறி விட்டு ப் பார்ப்போமே சாம்பலேனும் கிளம்பாதா என்றொரு முடிவுக்கு வந்தனரோ சிலரில் பலர் இங்கே ?

காவியங்கள் பல படைக்கவே தாரகைகள் காரிகைகளாய் வந்தனர் இங்கே ...

பெண்மையை மதிக்காவிட்டால் பேரழிவு வந்துவிடும் ...

பீஷ்மருக்கும் அம்பாய் வந்தாள் அம்பை எனும் தாரிகை ...

இலங்கை தனை அழித்திட மிதிலையால் முடிந்ததன்றோ ...

மதுரை அக்னிப்பிரவேசம் கண்டே மானிக்கங்களை சிதறியதன்றோ....

போவது மட்டும் பெண் தெய்வ கோயில் என்றால் வேண்டுவது மட்டும் ஆண்கள் சௌகரியமோ ?

பெண்மை வாழ வேண்டிடுவோம் ...

பாரதியின் எழுத்துக்கு உயிர் தந்திடவோம் 💐💐💐

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை