ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 22 - sloka 1 to 11 [அஜாமிளன் மோக்ஷம்]

 




अजामिलो नाम महीसुर: पुरा
चरन् विभो धर्मपथान् गृहाश्रमी ।
गुरोर्गिरा काननमेत्य दृष्टवान्
सुधृष्टशीलां कुलटां मदाकुलाम् ॥१॥

அஜாமிலோ நாம மஹீஸுர: புரா
சரந் விபோ₄ த₄ர்மபதா₂ந் க்₃ருஹாஶ்ரமீ |
கு₃ரோர்கி₃ரா காநநமேத்ய த்₃ருஷ்டவாந்
ஸுத்₄ருஷ்டஶீலாம்ʼ குலடாம் மதா₃குலாம் || 1||

1. முன்பொரு சமயம், அஜாமிளன் என்ற ஒரு பிராமணன், தர்ம நெறியில் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன், தந்தையின் உத்தரவுப்படி, காட்டிற்கு சுள்ளி பொறுக்கச் சென்றான். அங்கு, குடிப்பழக்கத்துடன், குணம் கெட்ட பெண் ஒருத்தியைக் கண்டான்.

स्वत: प्रशान्तोऽपि तदाहृताशय:
स्वधर्ममुत्सृज्य तया समारमन् ।
अधर्मकारी दशमी भवन् पुन-
र्दधौ भवन्नामयुते सुते रतिम् ॥२॥

ஸ்வத: ப்ரஶாந்தோ(அ)பி ததா₃ஹ்ருதாஶய:
ஸ்வத₄ர்மமுத்ஸ்ருஜ்ய தயா ஸமாரமந் |
அத₄ர்மகாரீ த₃ஶமீ ப₄வந் புந-
ர்த₃தௌ₄ ப₄வந்நாமயுதே ஸுதே ரதிம் || 2||

2. இயற்கையாக இந்திரியங்களுக்கு வசப்படாதவனாக இருந்தபோதும், அவளுடைய மோக வலையில் வீழ்ந்து, தர்மத்தைக் கைவிட்டான். பல கெட்ட காரியங்களைச் செய்தான். கிழவனான அவன், ‘நாராயணா’ என்ற உன் பெயர் கொண்ட தன் கடைசி பிள்ளையிடத்தில் அதிக ஆசை வைத்தான்.

स मृत्युकाले यमराजकिङ्करान्
भयङ्करांस्त्रीनभिलक्षयन् भिया ।
पुरा मनाक् त्वत्स्मृतिवासनाबलात्
जुहाव नारायणनामकं सुतम् ॥३॥

ஸ ம்ருத்யுகாலே யமராஜகிங்கராந்
ப₄யங்கராம்ஸ்த்ரீநபி₄லக்ஷயந் பி₄யா |
புரா மநாக் த்வத்ஸ்ம்ருதிவாஸநாப₃லாத்
ஜுஹாவ நாராயணநாமகம் ஸுதம் || 3||

3. மரண சமயத்தில், பயங்கரமான மூன்று யமதூதர்கள் அவன் முன்னே தோன்றியதும், பயத்தினால் தன் மகனை ‘நாராயணா’ என்று கூப்பிட்டான்.
முன்பு சிலகாலம் உன்னிடம் கொண்டிருந்த பக்தியே இதற்கு காரணம்.

दुराशयस्यापि तदात्वनिर्गत-
त्वदीयनामाक्षरमात्रवैभवात् ।
पुरोऽभिपेतुर्भवदीयपार्षदा:
चतुर्भुजा: पीतपटा मनोरमा: ॥४॥

து₃ராஶயஸ்யாபி ததா₃த்வநிர்க₃த-
த்வதீ₃யநாமாக்ஷரமாத்ரவைப₄வாத் |
புரோ(அ)பி₄பேதுர்ப₄வதீ₃யபார்ஷதா₃:
சதுர்பு₄ஜா: பீதபடா மநோரமா: || 4|

4. கெட்ட நடத்தையுள்ள அஜாமிளன் ‘நாராயணா’ என்ற உன்னுடைய நாமத்தைச் சொன்னவுடன், அந்த நாமத்தின் மகிமையால், நான்கு கரங்களுடன், மஞ்சள் பட்டுடுத்தி, திவ்ய ரூபத்துடன் விஷ்ணு தூதர்கள் அங்கு தோன்றினார்கள்.

अमुं च संपाश्य विकर्षतो भटान्
विमुञ्चतेत्यारुरुधुर्बलादमी ।
निवारितास्ते च भवज्जनैस्तदा
तदीयपापं निखिलं न्यवेदयन् ॥५॥

அமும் ச ஸம்பாஶ்ய விகர்ஷதோ ப₄டாந்
விமுஞ்சதேத்யாருருது₄ர்ப₃லாத₃மீ |
நிவாரிதாஸ்தே ச ப₄வஜ்ஜநைஸ்ததா₃
ததீ₃யபாபம் நிகி₂லம் ந்யவேத₃யந் || 5||

5. பாசக் கயிற்றால் அஜாமிளனைக் கட்டி இழுக்கின்ற யமதூதர்களைப் பார்த்து, அவனை விட்டு விடுமாறு கூறி, பலாத்காரமாய்த் தடுத்தார்கள். அப்போது அந்த யமதூதர்கள், அஜாமிளன் செய்த பாபங்களையெல்லாம் கூறினார்கள்.

भवन्तु पापानि कथं तु निष्कृते
कृतेऽपि भो दण्डनमस्ति पण्डिता: ।
न निष्कृति: किं विदिता भवादृशा-
मिति प्रभो त्वत्पुरुषा बभाषिरे ॥६॥

ப₄வந்து பாபாநி கத₂ம்ஷ்க்ருதே
க்ருதே(அ)பி போ₄ த₃ண்ட₃நமஸ்தி பண்டி₃தா: |
ந நிஷ்க்ருதி: கிம் விதி₃தா ப₄வாத்₃ருஶா-
மிதி ப்ரபோ₄ த்வத்புருஷா ப₃பா₄ஷிரே || 6||

6. உன்னுடைய தூதர்கள் "தர்மம் அறிந்தவர்களே! பாபத்திற்கான பிராயச்சித்தமானது செய்த பிறகு எப்படி தண்டிக்க முடியும்? பாபத்திற்கான பரிகாரம் உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டனர்.

श्रुतिस्मृतिभ्यां विहिता व्रतादय:
पुनन्ति पापं न लुनन्ति वासनाम् ।
अनन्तसेवा तु निकृन्तति द्वयी-
मिति प्रभो त्वत्पुरुषा बभाषिरे ॥७॥

ஶ்ருதிஸ்ம்ருதிப்₄யாம் விஹிதா வ்ரதாத₃ய:
புநந்தி பாபம் ந லுநந்தி வாஸநாம் |
அநந்தஸேவா து நிக்ருந்ததி த்₃வயீ-
மிதி ப்ரபோ₄ த்வத்புருஷா ப₃பா₄ஷிரே || 7||

7. வேதங்களிலும், ஸ்ம்ருதிகளிலும் சொல்லப்பட்டிருக்கும் பிராயச்சித்தங்கள் பாபங்களைப் போக்குகின்றது. ஆனால், பாபம் செய்யத் தூண்டும் வாசனையை போக்காது. பகவத் பக்தியானது, பாபங்களையும், அவற்றைச் செய்யத் தூண்டும் வாசனையையும் போக்கி விடும் என்று விஷ்ணுதூதர்கள் கூறினர்.

अनेन भो जन्मसहस्रकोटिभि:
कृतेषु पापेष्वपि निष्कृति: कृता ।
यदग्रहीन्नाम भयाकुलो हरे-
रिति प्रभो त्वत्पुरुषा बभाषिरे ॥८॥

அநேந போ₄ ஜந்மஸஹஸ்ரகோடிபி₄:
க்ருதேஷு பாபேஷ்வபி நிஷ்க்ருதி: க்ருதா |
யத₃க்₃ரஹீந்நாம ப₄யாகுலோ ஹரே-
ரிதி ப்ரபோ₄ த்வத்புருஷா ப₃பா₄ஷிரே || 8||

8. மேலும் அவர்கள், ‘இந்த அஜாமிளன் பயத்தினால், முடியாத நிலையிலும் கூட ஹரிநாமத்தைச் சொன்னான். அதனால், அவன் ஆயிரம் கோடி ஜன்மங்களில் செய்த பாபங்கள் விலகி விட்டது’ என்று சொன்னார்கள்.

नृणामबुद्ध्यापि मुकुन्दकीर्तनं
दहत्यघौघान् महिमास्य तादृश: ।
यथाग्निरेधांसि यथौषधं गदा -
निति प्रभो त्वत्पुरुषा बभाषिरे ॥९॥

ந்ருணாமபு₃த்₃த்₄யாபி முகுந்த₃கீர்தநம்
த₃ஹத்யகௌ₄கா₄ந் மஹிமாஸ்ய தாத்₃ருஶ: |
யதா₂க்₃நிரேதா₄ம்ஸி யதௌ₂ஷத₄ம் க₃தா₃ -
நிதி ப்ரபோ₄ த்வத்புருஷா ப₃பா₄ஷிரே || 9||

9. நெருப்பு எவ்வாறு விறகுகளை எரிக்கிறதோ, மருந்து எவ்வாறு வியாதியை குணப்படுத்துகிறதோ, அதுபோல் அறியாமல் சொன்னாலும், உன்னுடைய நாமம் மனிதர்களுடைய சகல பாபங்களையும் சாம்பலாக்கி விடும். பகவன் நாமம் அத்தகைய சக்தி வாய்ந்தது என்று விஷ்ணு தூதர்கள் சொன்னார்கள்.

इतीरितैर्याम्यभटैरपासृते
भवद्भटानां च गणे तिरोहिते ।
भवत्स्मृतिं कंचन कालमाचरन्
भवत्पदं प्रापि भवद्भटैरसौ ॥१०॥

இதீரிதைர்யாம்யப₄டைரபாஸ்ருதே
ப₄வத்₃ப₄டாநாம் ச க₃ணே திரோஹிதே |
ப₄வத்ஸ்ம்ருதிம் கம்சந காலமாசரந்
ப₄வத்பத₃ம் ப்ராபி ப₄வத்₃ப₄டைரஸௌ || 10||

10. இவ்வாறு சொன்னதும் யமதூதர்கள் சென்றுவிட்டனர். உன் தூதர்களும் சென்றனர். அஜாமிளன் எஞ்சிய காலத்தைத் உன்னைத் தொழுது, உன் நாமங்களைச் சொல்லிக் கொண்டு கழித்தான். பிறகு, விஷ்ணு தூதர்கள் அவனை தங்கள் இருப்பிடமான வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.

स्वकिङ्करावेदनशङ्कितो यम-
स्त्वदंघ्रिभक्तेषु न गम्यतामिति ।
स्वकीयभृत्यानशिशिक्षदुच्चकै:
स देव वातालयनाथ पाहि माम् ॥११॥

ஸ்வகிங்கராவேத₃நஶங்கிதோ யம-
ஸ்த்வத₃ம்க்₄ரிப₄க்தேஷு ந க₃ம்யதாமிதி |
ஸ்வகீயப்₄ருத்யாநஶிஶிக்ஷது₃ச்சகை:
ஸ தே₃வ வாதாலயநாத₂ பாஹி மாம் || 11||

11. தனது தூதர்கள் சொன்னதைக் கேட்ட எமன், உன்னிடம் பக்தி செய்பவர்களை நெருங்கக் கூடாது என்று கட்டளையிட்டான். வாதங்களைப் போக்குபவனே! நீ என்னைக் காப்பாற்றவேண்டும்.


Comments

Anonymous said…
*ஓம்காரேஸ்வரர் &*
*மாமலேஸ்வரி* *அல்லது மமலேஸ்வரி*

ஜோதி லிங்கம் - MP

*தக்ஷன் வதம்*

பிராஜபதி அவன் பிரம்மனின் மானசீக புத்திரன் ..

வேதங்கள் அறிந்தவன் ... விவேகங்கள் கொண்டவன் வீரன் அவன் சூரனும் அவனே

வெற்றிப் படிக்கட்டில் தாண்டி தாண்டி வந்தவன் ...

பொருள் செல்வம் குறைவில்லை பிள்ளை செல்வம் அளவில்லை

தவம் கோடி செய்தே தாக்ஷாயணியை மகளாய் பெற்றான் ...

சொக்கனை மருமகனாய் பெற்றான் ...

யார் கொள்வார் இந்தவம் ? யார் அடைவார் இப்பேறு ?

ஈசன் இனி தன்வசம் என்றே இருமார்ப்பு கொண்டான் ...

நாவிற்கு வேலி போட்டவன் நரம்பின்றி பேசினான் .... ஈசன் தன்னை புகழ்வதில்லை என்றே ....

பற்றற்றவன் புகழுக்கு அப்பார்ப்பட்டவன் புரம் எரித்தவன்

பூவின் மனம் கொண்டவன் பூவைப்போல் மணப்பவன் பூந்தளிரை மணந்தவன் புன்சிரிப்பு ஒன்றை தவழ விட்டான் ... அதுவே பூநாகம் என படம் எடுத்ததே !!

தக்ஷன் பெரும் வேள்வி ஒன்றை செய்தான் ...

வேள்வி கேள்வியாக மாறும் என்றே அறியாமல்

முப்பது முக்கோடி தேவர்கள் கந்தர்வர்கள் மால் , அயன் அனைவரும் கூடி நிற்க

அண்டம் கடந்தவனுக்கு அழைப்பில்லை ...

பிண்டம் போட மனமில்லை ...

தண்டம் ஏந்தும் ரிஷிகள் , அங்கே செய்த பண்டம் தனையே நோட்டமிட வேள்வி வெகுண்டதே ....

அழையா வீட்டில் பழியாய் செல்ல வேண்டாம் என ஈசன் தடுத்தும் சென்றாள் தாக்ஷாயணீ....

சென்றவள் அங்கே சிலையாய் நின்றாள் வா வென கூப்பிட நாதி இல்லை ....

ஈசனை மதிக்கா உயிர்கள் அனைத்தும் வெந்து போவார் சீக்கிரம் என்றே வளர்ந்த அக்னியில் மலர்ந்த பூவாய் விழுந்தாள்

மதி கெட்ட தக்ஷன் மிதி பட்டான் பூத கணங்களால்...

வீர பத்திரன் வெட்டினான் பிராஜாபதியின் செருக்குண்ட தலையை

எல்லோரும் ஈசனை வேண்ட ஆட்டின் முகம் கொடுத்தான் தக்ஷனுக்கு ...

மந்தம் கொண்டது ஆடு ...

பந்தம் தொலைப்பது ஆடு ...

நந்தம் மறுப்பது ஆடு

அந்தம் வரும்
முன்னே ஆடி பாடுவது ஆடு

செய்த தவறை உணர்ந்தான் தக்ஷன் ...

உயிர் மட்டுமே பிழைத்து நின்றது

உயிர் துறந்த தாக்ஷாயணீ சக்தி பீடங்களில் சங்கரனுடன் சங்கரியாய் அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறாள்
Anonymous said…
*Glimpses from Srimad Bhagavatham ... Summary of today's discourse from Sri H.G Rudranath Prabhuji ( 12th July 2025) 💐*

The stories of Raja Parikshit and Prajapathi Dakshan were recalled with passion and Bhava very eloquently and Prabhuji made a wonderful connection with our real time lives from the key takeaways of these two stories

1.Raja Parikshit unlike Dakshan had only one choice ... He was given only 7days to live in this material world ..

Life was full of negativities in high dense ...

He chose to spend those 7 days in listening to the glories of Lord of eternities .

This shows one should not wait thinking he or she is far off from the end ...

Atleast we are fortunate to chant or listen to HIS glory not confining to just 7 days as we have no such curse or limitation to live .

Everyday Smaran (स्मरण) of HIS holy names will make our lives transform from present level to the sky level and help us to cross the ocean of samsara with ease .

Sage Shukadeva Goswami did not want to see the end of Raja Parikshit . He walked away sooner he completed telling Srimad Bhagavatham.

He was sure Raja Parikshit having heard of the glories of bhagavatham in his last 7 days would reach the abode of Lord Vishnu much before the bite of fearful Snake Takshaka, fulfilling a curse placed upon the king.

So only one option is left for us in life and nothing good in store for us just surrender to the lotus feet of bhagavan . Rest will be taken care of ...

2.Suppose we are left with two options in life ... When Prajapathi Dakshan undermined the glories and power of Lord Shiva he allowed his tongue, a free ride .. it went uncontrolled and the result was utter chaos....

He could have consulted all superiors sitting in his kingdom . He could have consulted his father Brahmaji ...

But he lost his control over his tongue ..

He abused The lord profusely like
Sisubalan against Krishna ..

The end came to him with a big prize . His head was chopped off and replaced by the head of a goat which eats each and everything that comes in its way , besides goats have no brain of their own .

So in life if we have only two options it is always better to seek opinions from experienced people to do or not .

32 teeth protect the tongue besides our mouth but the tongue conquers all and by uttering painful words it gets into a messy situation always

Lastly in order to train the tongue to speak always good words practice to take food after offering the food to the lord ..

That is what we call it Prasad ...

HE is always pleased with gentle gestures rather than hurting our minds and bodies with difficult and impracticable rituals ..

Next week if we are blessed with three options how to handle life .....🙏
Anonymous said…
*மஹாகாலேஷ்வர் &*
*ஹர்சித்தி மாதா*

ஜோதிர்லிங்க, மத்திய பிரதேசம்

*ராவணன் வதம் 3*

கண்கள் உறக்கம் ஏங்க

காதுகளில் ராமன் புகழ் கோஷங்கள் பஞ்சு வைத்து தடுத்தும் விழ

மனம் தடுமாற பிண வாசனை மூக்கைத் துளைக்க

தச முகங்கங்களும் தாழ்ந்திருக்க

இலங்கை வேந்தன் தத்தி தத்தி நடந்துபோனான்

காலன் அவனை பின் தொடர்ந்தான் தன் கடமை தனை முடிக்க

அழகன் அவன் அவன் புன்னகை கண்டு என் பொன் நகை பொலிவு இழந்து போனதே ...

அவன் கண்ணழகை கண்டே காதலுற்றேன் ...

கார்மேகம் அவன் மேனி கண்டு துடுக்குற்றேன் ...

தோள்களில் யானைப்படைகள் பிளிர்வதை கேட்டேன் ...

அவன் கால்களில் குதிரைப்படை கணைக்க கண்டேன் ...

அம்புகள் அனைத்தும் அவன் வேல் விழி செல்லும் திசை நோக்கி செல்வதைக்
கண்டேன்

கண்டேன் உணர்ந்தேன்

கவிகள் புனையா காவியம் அவன்

கண்கள் மிறலும் ஒவியம் அவன் ... காதல் பேசும் மாறன் அவன்

கற்கண்டு வார்தையிலே யாரும் சொல்லா சொல் ஒன்று சொன்னான் ...

நீர் கொண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையை அசைத்தவனை காமனை எரித்தவனை கைக்குள் வைத்தவனை

எவரையும் பரலோகம் அனுப்பும் பத்து தலைகள் கொண்டவனை

இன்று போய் நாளை வா என்றான் ...

உயிர் இழந்த சடலம் நாளை வர காத்திருக்குமோ ?

ராமா உன் சீதை இதோ ...

என் நுனி விரலும் பட்டதில்லை ..

உச்சம் தொட்ட உத்தமி ...

சிதை மூட்டி சித்திரவதை செய்யாதே ...

சிரித்தான் ராமன் ..

வானம் அழைக்கும் போதிலே ஞானம் பேசுகிறாய் ....

கயிலை அசைந்தும் உன் கர்வம் அசையவில்லை ...

கொல்வது நான் அல்ல உன் அகங்காரம் ஒன்றே ...

ஈசனை வணங்கி ஈஷாட அம்பை விட்டான் ராமன் ..

என்றோ தான் இருந்த இடம் அது என்றே உள்ளமதை வதைக்காமல் உயிர் அதை பறித்ததே !!

அஹங்காரம் மூன்று மமகாரம் நான்கு காமம் மூன்று என்றே பத்து தலைகள் பறந்து சென்றனவே உடலை விட்டு ....
Anonymous said…
[12/07, 11:38] Jayaraman Ravikumar: *த்ருஷ்ட்வா தாம் சபரீம் பலானி பவதே தாதும் தப: குர்வதீம்*

*பூயோ பக்திமதீம் குருஷு அதிதராம் ஆனந்த பூர்ண ஆசயாம்*

ராமன் அவள் தவம் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறான் ..

அவள் குரு பக்தியை பார்க்கிறான் ...

அவள் சேமித்து வைத்துள்ள பழங்களை பார்க்கிறான் ..

அவள் உடல் நடுங்கினாலும் அதுவும் ஒரு அழகிய நடனமாகவே ராமனுக்குத் தெரிந்தது ...💥💥💥
[12/07, 11:38] Jayaraman Ravikumar: அவள் ஆனந்தத்தின் உச்சிக்கே போய் விட்டாள் .. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள்

ராமன் சபரியிடம் பார்த்த பாத்திரங்கள்

1. குகன் ... பணிவிடையில்

2. அனுமன் ... பக்தி செலுத்துவதில்

3. விபீஷணன் ... சரணாகதி புரிவதில்

4. லக்ஷ்மணன் ... காவல் புரிவதில்

5. பரதன் ... பாதங்களை தொழுவதில்

6. பரமேஸ்வரன் ... நடனம் ஆடுவதில்
[12/07, 11:38] Jayaraman Ravikumar: *வ்ருத்தாம் வேபது நர்த்தனாம் த்ருத ஹ்ருதம்*

*மந்த ஸ்மிதம் யத் முகே*
*ஜாதம் தத் தவ க்ருத்ர ராஜ கதித ஸ்வாமின் ததாது ச்ரியம்*👍👍👍

ராமா அவள் பக்தியை பார்த்து பரவசப்பட்டு ஒரு புன்னகை பூத்தாயே அதே புன்னகை வடுவூரிலும் மின்னுகிறதே .. சபரியின் பக்தி எங்களுக்கும் வர வேண்டும் ராமா .. உன் புன்னகை அதற்கு அருள் புரியட்டும் 🥇🥇🥇
[12/07, 11:38] Jayaraman Ravikumar: பக்தி சரனாகதி
பணிவிடை
அருமை
ஜெய்ஸ்ரீராம்🙏🏻🙏🏻🌷
Anonymous said…
விளையாட்டாய் திரை உலகத்தை புரட்டிப்போட்ட திருவிளையாடல் !!! - 60 யை கடந்தும் இன்னும் அதிர்வுகள் நிற்பதில்லை


1965 ஆண்டு பல எதிர்மறைகளை அரசியலிலும் தமிழ் பட உலகிலும் சந்தித்த ஆண்டு - ஆன்மிகம் தேய்ந்து கொண்டிருந்த நேரம் -

வளர்பிறையை காண முடியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருந்த காலம் ..

பகுத்தறிவு எனும் போர்வையில் பல சமூகப் படங்கள் இறைவன் என்று ஒருவன் இருக்கின்றானா எனும் கேள்விகளை மக்கள் மனதில் ஆழமாக எழுப்பிக்கொண்டிருந்தது -

படம் எடுத்து பாடம் சொல்ல எந்த தயாரிப்பாளர்களும் முன் வரவில்லை - பணம் பல போட்டு கைகளை சுட்டுக்கொள்ள எவரும் தயாராக இல்லை

நாகராஜன் மகுடி இல்லாமல் படம் ஒன்று எடுக்கத் தொடங்கினார் - பாம்பு போல் நேரமும் எண்ணங்களும் வளைந்து வளைந்து சென்றன -

கக்கினால் மாணிக்கமும் வரலாம் அல்லது விஷமும் வரலாம் .....

விஷம் உண்டவனையே கருவாக வைத்து ஒரு படம் எடுத்தால் எல்லோருக்கும் கிடைக்கப்போவது அமிர்தம் அன்றோ ?
Anonymous said…
எண்ணங்கள் செயல் பாட்டைத் தூண்டின ... செயல் பாடுகள் நடிகர்களைத் தேடின -

தேடிய நடிகர்கள் நாலாய் பக்கமும் ஓட நடிப்புக்கெனவே பிறந்த ஒருவன் முன் வந்தான் - அவன் அதுவரை அப்படி ஒரு பாத்திரத்தில் நடித்ததில்லை ..

அடியும் முடியும் எவரும் காணாத ஈசனை , வெள்ளியங்கிரியில் வீற்றிருக்கும் பரமனை வெள்ளித்திரையில் காண்பிக்க வேண்டும் --

Anonymous said…
தத்ரூபமாக இருக்க வேண்டும் - மக்கள் நடித்தவனை முழுவதும் மறந்து நடம் புரியும் ராஜனையே திரையில் காண வேண்டும் ..... திருவிளையாடல் வெறும் தெரு விளையாடலாய் மாறி விடக்கூடாது..

இசை தேவகானமாய் இருக்க வேண்டும் -

காட்சிகள் காணும் கண்களை புனிதப்படுத்தி வேண்டும் -

தேர்ந்தெடுக்கும் நடிகர்கள் திரையில் கொடுக்கும் வேடத்தில் வாழவேண்டும் -

பாடல்கள் படிப்பினையை ஊட்ட வேண்டும்

வசனங்கள் திரை இருக்கையுடன் கட்டிப்போட வேண்டும் -

எல்லா சுவைகளும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் - தமிழை தமிழாக பேசவேண்டும்

ஈசன் அருள் கிடைக்க வேண்டும் - படம் ஒரு சரித்திரம் படைக்க வேண்டும் -- இவைகளே APN மனதில் படமாக ஓடின ....

Anonymous said…
சிவலீலா நாடகத்தின் வெற்றி APN க்கு ஊக்க சத்தை தந்தது அந்த நாடகத்தில் ஏற்று நடித்த இரு வேடங்கள் அந்த தேடும் நம்பிக்கையை தந்தது -

தமிழ் வசனங்கள் பாலாய் அவர் மனதில் பொங்கியது ---

சொந்த நிறுவனத்திற்கு வெற்றி மட்டுமே தரும் விஜயலக்ஷ்மி எனும் திருமகள் நாமத்தை சூடினார் ---

திருவிளையாடல் ஆரம்பம் ஆனது

- ஈசன் நக்கீரனை சந்திக்கும் காட்சி -

சிவனாய் சிம்மக்குரலோன் நக்கீரனாக APN --

தமிழ் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு அங்கே விளையாடியது -

பேசும் தமிழ் உச்சரிக்கும் வசனம் உயர்ந்த நடிப்பு இந்த காட்சியை காலக்கண்ணாடியில் நிரந்தரமாக ஒரு இடத்தைப் பிடித்து தந்தது

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?

சிவனாய் மாறிய சிவாஜி கணேசன் பேச

குறுந்தொகைப்பாடல் இடியாய் இறங்க பார்ப்பவர்கள் ஸ்தம்பித்துப்போக அரங்கம் அதிர வசூல் மழை மின்னல் இடியுடன் பெய்ய தொடங்கியது

சிவன் தொடர

அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

நக்கீரன் தன் முடிவை தானே தேடிக்கொள்ள

சங்கறுப்பது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்?
சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை..!!!

ஈசனின் தீப்பொறிகள் நக்கீரனை மட்டும் எரிக்க வில்லை இறை இல்லை எனும் வாதங்களையும் சேர்த்து அழித்தது ---

Anonymous said…
நாகேஷின் தர்மி கதாபாத்திரம் இன்றும் பணக்காரனாய் வாழ்ந்துகொண்டிருக்கிறது . அவர் வரும் காட்சிகளை துளியும் வெட்டக்கூடாது என் நடிப்பை விட அவருடைய இந்த நடிப்பு நாகேஷுக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என்று சிவாஜி முன்மொழிய அதை APN ஆமோதிக்க நாகேஷின் தர்மி வேடம் இனி யாரும் நடிக்கவே முடியாது எனும் மங்கா புகழை அவருக்கு வாங்கித்தந்தது நாகேஷ் கடைசி வரை எல்லா மேடைகளிலும் சிவாஜியின் இந்த பெருந்தன்மையை சொல்லிக்கொண்டே இருப்பார்

சிவாஜியின் அந்த மீனவன் நடையை சௌகார் ஜானகி சிங்கப்பூர் சிவாஜி கணேசன் பாராட்டு விழாவில் மிகவும் உயர்வாகப்பேசி சிலாகித்துக்கொண்டார் இந்த நடையின் அழகை காணவே நான் பலமுறை இந்த படத்தைப்பார்த்தேன் என்றும் ஒரு கர்வத்துடன் சொன்னார் .. ருத்திர தாண்டவம் ஆட சிவாஜி எடுத்துக்கொண்ட முயற்சிகளைப்பற்றியும் அவர் பிரமித்துப்பேசினார்

ravi said…
நான் பெற்ற செல்வம் எனும் படத்தில் ஒரு சிறு நாடக காட்சி ஒன்று வரும் அதில் சிவாஜி ஒருவரே சிவனாகவும் நக்கீரராகவும் நடித்துள்ளார் இதை உணர்ந்த APN தான் நக்கீரனாக நடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்தாராம் - உடனே நீங்கள் நடிக்க வரவில்லை என்றால் சிவனாக நானும் நடிக்கப்போவதில்லை என்று சொன்ன பின்பே APN படத்தில் நக்கீரராக நடிக்க சம்மதித்தாராம் அந்த வேடம் , உரையாடல் அவருக்கு பெரும் மதிப்பை பெற்றுக்கொடுத்தது ....

ravi said…
20 நிமிடங்களில் 5 பாடல்கள் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டிருந்தன --

ஒருவர் கூட அரங்கத்தை விட்டு வெளி செல்ல வில்லை

இயற்கையின் உந்தலையும் மீறி ரசித்துக்கேட்டுக்
கொண்டிருந்தார்கள் -

இசையமைப்பும், பாடல் வரிகளிலும் எல்லோரையும் கையிலாயத்திற்க்கே இழுத்துச் சென்றன

பாட்டும் நானே பாடல் காட்சி இன்றும் கண்களுக்கு விருந்து .

ஒரு சிவாஜியே ஓஹோ ஆஹா என்று நடித்துக்கொண்டிருக்க சேர்ந்தார்போல் 5 சிவாஜிகள் - ஒருவர் பாட , ஒருவர் வீணை மீட்ட , ஒருவர் புல்லாங்குழல் வாசிக்க , ஒருவர் மிருதங்கம் வாசிக்க ஒருவர் பாட்டுக்கு ஜதி போட பார்ப்பவர் அனைவருக்கும் ஒரு ஆனந்த விருந்து -

ஒரு நாள் போதாது பாலயாவின் ஒரு நாள் போதுமா பாடலை ரசிக்க ...

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும் DR பாலமுரளி கிருஷ்ணாவை ஒருநாள் போதுமா என்ற பாடலை பாடவைக்கும்போது APN சொன்னாராம் - உங்கள் இந்த பாடலை மிஞ்சும் படியாக (படக்கதைக்காக ) TMS சிவனாகத் தோன்றும் சிவாஜிக்காகப்பாடுவார் --- அதனால் நீங்கள் கோபித்துக்கொள்ளக்கூடாது -

ravi said…
உடனே அவர் நான் தோற்பதாகவே வைத்துக்கொண்டாலும் அது சிவனிடம் தானே ! அதனால் எனக்குப்பெருமையே என்றாராம் -- எப்படிப்பட்ட பெரும் ஜாம்பவான்கள் திரை உலகில் அந்த காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொது புல்லரிக்கின்றது
என்று பலவகை
பார்த்தால் பசுமரம் பாடல் வாழ்க்கையின் எதார்த்தம்

ஒன்றானவன் உருவில் இரண்டானவன் KBS இன் குரலில் ஒரு சிவஸ்துதி ...

ravi said…
TMS பாடிய பாடல்கள் TR மகாலிங்கம் பாடிய பாடல்கள் டாக்டர் பாலமுரளியின் கர்வம் இல்லாத ஒரு நாள் போதுமா பாடல் எப்படி நினைவை விட்டு அகலும் இசை அமைத்தவர் KV மகாதேவன் ஆயிற்றே !

கண்ணதாசனை சிவதாசனாக மாற்றிய படம் இது என்றால் மிகையாகாது .. இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை என்றப்பாடலில் ஒரு வரி வரும் - சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ .... இந்த கதையை அதிகமான யாரும் படித்ததில்லை ஆனால் கண்ணதாசன் பிறர் அறியாமையைப் பயன்படுத்தி வரிகளை அமைத்து பணம் சம்பாதிக்க வில்லை --- பெரிய புராணம் திருவிளையாடல் புராணம் , சிவபுராணம் என்ற நூல்களை அலசினார் - சிவ பண்டிதர்கள் பலரை அணுகினார் - இந்த கதை உண்மை - தனது பக்தை ஒருத்திக்காக சாட்சி சொல்வதற்கு சிவ லிங்கமே கும்பகோணம் அருகில் உள்ள ஊரில் இருந்து மதுரைக்கு வந்துள்ளது. இதுவும் ஈசனின் திருவிளையாடல்களில் ஒரு கதையாக சொல்லப்படுகிறது. இந்த கதை நிஜமாக நடந்தது என்பதற்கு இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், கும்பகோணம் அருகில் உள்ள கோவிலிலும் உள்ளது.- இந்த உண்மையை தெரிந்த கொண்ட பின்னரே அந்த வரிகளை அமைத்தார் --- யாரோ சொன்னார்கள் என்று வரிகளை அமைக்கவில்லை -- எப்படிப்பட்ட ஒரு உன்னதமான கவிஞர் !!

ravi said…
பாட்டும் நானே என்ற பாடலும் , பார்த்தா பசுமரம் என்னும் பாடலும் கவிஞர் தான் எழுதினார் என்பார்கள் சிலர் . இந்த பாடல்களை சிவலீலா எனும் நாடகத்திற்காக கா.மு. ஷெரிப் எழுதினார் அதையே படத்தில் APN இந்த படத்திற்காக தங்க வைத்துக்கொண்டாள் -- துரதிஷ்ட்டவாதமாக படத்தின் எல்லா பாடல்களும் கண்ணதாசன் இயற்றியவையே என்று APN படத்தின் டைட்டிலில் காட்டினார் - இதை நல்ல நட்பின் அடையாளமாய் கா.மு. ஷெரிப் அவர்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை - எப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் அந்த காலத்தில் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டும்

இன்றும் ஆச்சரியமாக தோன்றுவது 11 பாடல்கள் இருந்தும் ஒரு பாடல் கூட தரம் குறையாமல் தேனில் ஊறிய பலா சுளைகள் போல் இன்றும் சுவை குறையாமல் எப்படி உயிர் வாழ்கின்றன ? அர்த்தம் புரியும் படி பாடல் வரிகள் இருக்குமா , தமிழை தமிழாகவே பாட முடியுமா?

பாடல்களை வடித்தவர்கள் , பின்னணி பாடியவர்கள் இசை அமைத்தவர் , ஒலிப்பதிவு , ஒளிப்பதிவு படத்தொகுப்பு தயாரிப்பு , கலை ,திரைக்கதை / வசனம் /இயக்கம் எங்குமே தொய்வு இல்லாமல் ஒரு படம் எடுத்து அதுவும் ஒரு புராணப்படம் எடுத்து மாபெரும் வெற்றி காண முடியுமா ? முடியும் என்று நிரூபித்த படம் திருவிளையாடல் ...

நடிகர்கள் ஒவ்வொருவரும் நடிப்பு , அனுபவம் , திறமை , குரல் வளம் என்பதில் போட்டி வைத்தால் மற்றவர்களை மிஞ்சக்கூடியவர்கள் .

டி .ஸ் பாலையா , டி .ஆர் மகாலிங்கம் , முத்துராமன், நாகேஷ் ஏ கருணாநிதி பி.டி சம்பந்தம் , டி . என் சிவதாணு , ஓ ஏ கே தேவர் , ஈ .ர் சகாதேவன் , APN - கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல் இவர்களை மிஞ்சி நடிக்க வேண்டும் அது அந்த கலைத்தாயின் மூத்த மகன் ஒருவனால் தான் முடியும் என்று APN நம்பினார்

அவர் நம்பிக்கை வீண் போகவில்லை .

அதே நம்பிக்கை மீண்டும் தில்லானா மோகனாம்பாள் எடுத்த போதும் அவரை கைவிட வில்லை

எந்த தொழில் முன்னேற்றமும் இல்லாத ஒரு காலக்கட்டம் அது --

அப்பொழுதே "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே" என்று பாடி, பறக்கும் பறவைகளை வானில் அப்படியே நிற்க வைத்து அலைபாயும் கடலை அமைதியாக்கி வீசும் சூறாவளி காற்றை கொஞ்சம் உறங்க வைத்து ,

அர்த்த நாரியாய் சிவாஜியையும் சாவித்திரியையும் ஒரே பிரேமில் கொண்டு வர வைத்து அதிசயப்பட வைத்திருப்பார் இயக்குனர்

மாநிலம் முழுவதும் 13 திரை அரங்குகளில் 100 நாட்களை தாண்டி ஓடியது

சென்னையில் மூன்று அரங்குகளில் வெள்ளி விழா கண்டது -

பிலிம் பேர் சிறந்த படம் என்று வெகுவாக பாராட்டியது .

சிறந்த மாநிலப்படமாகத் தேசிய விருது பெற்றது வசூலிலும் சக்கை போடு போட்டது -

இந்த படம் பல பக்தி படங்கள் உருவாக விதைப்போட்டது

நடிகைகளில் பெண் சிவாஜியை போன்று திறமை கொண்டவர்கள் அதிகம்

சாவித்திரி ஆகட்டும் தேவிகாவாகட்டும் , கே.பி சுந்தராம்பாள் ஆகட்டும் , மனோரமா வாகட்டும் , ஜி .சுகுந்தலாவாகட்டும் பேபி சரிதாவாகட்டும் படத்தை தூக்கி நிறுத்துவதில் போட்டி போடும் அழகு இன்றும் பிரமிக்க வைக்கின்றது .

ஒருநாள் போதுமா இப்படத்தை வர்ணிக்க ?

யுகம் யுகமாக பல படங்கள் இனி வந்தாலும் வேர் என ஊன்றி நிற்கும் ஒரே ஒரு புராண வெற்றி படம் திருவிளையாடல் மட்டுமே !

மதுரை ஸ்ரீதேவி திரையரங்கில் தொடர்ந்து 100 நாட்கள் இப்படத்தைப் பார்த்த ஒரு மூதாட்டிக்கு இயக்குனர் APN சிறப்புப் பரிசுகள் வழங்கிக் கௌரவித்தார் என்று அறியும் போது பொது மக்களை எவ்வளவு தூரம் இந்தப்படம் கவர்ந்திருக்கிறது என்பதை உணரலாம் ..

அந்த காலக்கட்டத்தில் ஏன் அதற்குப்பிறகும் எல்லா திருமண விழாவிலும் கோயில் விழாக்களிலும் பட்டித் தொட்டிகளிலும் இப்படத்தின் வசனங்கள் ஒலித்து தெய்வம் உண்டு தெய்வம் உண்டு நம்பியவர்களுக்கு நல்ல வாழ்க்கை உண்டு என்று பறைசாற்றின -

இன்றும் சிவராத்திரி ஆகட்டும் பிரதோஷ விழாக்கள் ஆகட்டும் இப்படம் சின்னத்திரையை ஆக்ரமித்துக்கொள்ள தவறுவதில்லை.....

திருவிளையாடல் படம் 100 வயதை கடந்தாலும் இதே ஆச்சரியத்துடன் தான் இன்னும் நாம் அல்லது நமது சந்ததிகள் அலசிக்கொண்டிருப்பார்கள் .இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை !!

ravi said…
Shriram

14th JULY

*Whatever the _Guru_ Prescribes is _Sadhana_*

Let me tell you in a nutshell what _paramartha_ is. It is, in essence, going through worldly life without having a sense of attachment for any worldly thing or matter. We remain unaffected by pleasure and pain when we realize that what we call our _prapancha_ really belongs to God, who gave it us. This can be easily achieved by constantly keeping on the lips the _nama_ given to us by the _sadguru_.

That person alone can be called a _sadguru_ who himself has and will lead us to a permanent sense of contentment. This applies to all _sadgurus_ in all places at all times. Do not attach value to his look and physique, but judge him by his teaching. The _sadhana_ he prescribes should be carried out diligently. To do so is, indeed, _paramartha_. If you make an alteration in the prescribed thing, it will only mean that your ego still persists, and anything done egoistically is doomed to fail. So first bury your ego and place complete trust in the _sadguru_.

True _paramartha_ does not consist of empty prattle or lofty preaching to others; it is for one’s own sake. In fact, the less known it is to others the better. Public esteem is of no use, actually harmful. To be misled into feeling false greatness is injurious to our purpose.

One person opens a confectionery shop, another may sell coal. What difference does it make, so long as the business is profitable? Similarly, worldly status is of no count; what matters is the advancement in _paramartha_.

Any worldly situation can be put to use in _paramartha_, so long as our approach is sane and steady. Control of mind coupled with strong devotion is what is of real consequence.

_Paramartha_, in fact, is easy to achieve. The fun is that it is neglected, not seriously attempted, merely because of its very simplicity. Remember that _prapancha_ is by no means an impediment to _paramartha_; it can, in fact, be turned into a good aid. All that a _sadhaka_ has to do is to accept his duties as _prarabdha_ and carry them out to the best of his ability, and apply the mind devotedly to God. Let Him be ever in your heart, His name on your lips, and the body employed in doing your duties in _prapancha_: this is, in essence, _paramartha_.

*****
ravi said…
*வைத்தியநாதர் (ஜார்கண்ட்)*

*தையல்நாயகி*

*பஸ்மாசூரன் வதம்*

அக்ஷரங்கள் அழகாய் கோத்து

லக்ஷ்ணமாய் ஈசனை தொழுவான் அவன் ..

பக்ஷணங்கள் பல படைத்து பாகுடன் படைப்பான் அவன் ...

அன்னை அவள் பாதம் பணிந்து

புன்னை மரம் அருகில் பூஜை செய்து

தன்னைத்தான் அற்பணிப்பான் அவன் ...

கண்ணை தான் பிடுங்கி கண்ணப்பன் தந்ததைப்போல் அன்னையிடம் அன்பு வைத்திருந்தான் அவன் ...

கர்வம் அஹங்காரம் பூஜை வேளை தனில் அவன் உள் புக அனுமதித்தான்
தன்னிலும் பக்தி செலுத்துவோர் யாரும் தட்டிக் கேட்பதில்லை என்பதால் ...

வரங்கள் பொழிய விருப்பம் கொண்டான் பரமேஸ்வரன் ...

தடுத்து சொன்னாள் தேவி அவள்

முன் பார்த்த பக்தன் இல்லை இவன் ...

அகம் எங்கும் நான் எனும் விஷம் பரவி புறம் எங்கும் போலி வேடம் பூண்டுள்ளான் புரம் மூன்றும் கொண்ட அசரர்கள் போல்

வரம் தந்தால் வினை உண்டு அன்பே என்றாள்

சிரித்தான் ஈசன் ...

வினை ஏதும் எனக்கு வந்தால் உன் விரல்கள் மீண்டும் எனை தழுவாதோ ... ?

பக்தனுக்கு முக்காலங்கள் இல்லை ...

முன்பு பக்தன் இன்று நாஸ்திகன் நாளை துரோகி என்றே ...

ஒரு சொட்டு பக்தி இருந்தாலும் பசுபதி நான் பாலாக உருகி விடுவேன் ...

என் செய்வேன் நீயே சொல் !!

அன்பே யார் தடுப்பார் உன் கருணை வெள்ளத்தை

காத்திருக்கிறேன் கட்டி அணைக்க ...

இதை இப்பொழுதே செய்யலாமே ...

ஈசன் நமட்டு சிரிப்பில் நாணம் வந்தே கரைந்து போனாள் தேவி

அகம் எங்கும் மமதை அஹங்காரம் ஆணவம் ....

பஸ்மாசூரன் கேட்டான் ஓர் வரம்
யாரும் இதுவரை கேட்காத வரம் ...

யார் சிரசில் என் கரங்கள் பட்டாலும் பட்டவர் பஸ்மாமாக போக வேண்டும் ...
தருவாயா இந்த வரம் தயாநிதியே !!

யோசனை ஏதும் இல்லாமல்

வேண்டுவோர் வேண்டியபடி வேண்டும் வரம் தந்தான் ஈசன்

வளர்த்த கடா மார்பில் பாய வரம் தந்தவன் ஜடாமுடியில் கரம் வைக்க ஆசைப்பட்டான்
அக்க்ஷரா வை தலை கீழே மாற்றி ராக்ஷஸா வாக மாறிய பஸ்மாசூரன்

கங்கை கதற , பிறை நிலா பேதலிக்க திரிசூலம் திகைத்து நிற்க தேவி அவள் சிலையாய் நின்றாள் ..

உடம்பில் ஓடிய பாம்புகள் மூச்சு விட மறந்து போக

அண்டங்கள் அனைத்து லோகங்கள் ஸ்தம்பித்து நிற்க பிரளயங்கள் பல வந்து போயினவே ...

முப்பது முக்கோடி தேவர்கள் கந்தர்வர்கள் ரிஷிகள் முனிகள் ஈசனை காப்பாற்ற தவம் இருக்க

பிரம்மன் ஓடினான் மாலிடம் ...

மாலும் நாளும் போற்றும் ஈசனுக்கு அந்தம் ஏதும் இல்லை என்றார் ...

சொன்னவர் சொக்கிப்போகும் மோகினியாய் மாற பஸ்மாசூரன் தன் சிரம் தனில் கரம் வைக்க பஸ்மம் ஆனானே !!

அழிந்த காமன் அழிக்கும் சிவனை அன்று மோகினி கண்டு மயங்க வைக்க ... மகர ஜோதி ஒன்று மலை மீது தோன்றியதே !!🙏
ravi said…
*ஸ்லோகம் 13 ... சௌந்தர்ய லஹரீ*

6வது ஸ்லோகத்தில் மன்மதனைப்பற்றி விவரித்தார் ..

முதலில் அவனுக்கு ரூபம் கிடையாது .. அவன் ஒரு நோஞ்சான் ...

வைத்திருக்கும் எந்த ஆயதங்களும் ஒரு போரில் /யுத்தத்தில் கூடப் பயன் படாத உபகரணங்கள் ...

வைத்திருக்கும் தேரோ *தென்றல்*

கூட வரும் தோழனோ *வசந்த ருது* ...

வில்லோ புஷ்பங்களால் ஆனது ...

அம்புகளோ மலர் கணைகள்

வில்லின் நாணோ தேனீக்களின் வரிசைகள் ....

ஆனாலும் இப்படிப்பட்ட ஒருவன் யாருடன் போரிட்டாலும் ஜெயித்து விடுகிறானே !

உன் கடாக்ஷத்தில்
ஓர் துளி அவன் மீது விழுவதால் மட்டுமே அவனால் எல்லா போரிலும் வெற்றி ஒன்றையே காண முடிகிறது ...

என்று வர்ணித்தார் ...

இந்த ஸ்லோகத்தில் கொஞ்சம் மாறுதலாக சிந்திக்கிறார்

*ஸ்லோகம் 13*

நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸூஜட3ம்

தவாபாங்கா3லோகே பதிதம் அனுதா4வந்தி ஸதஸ:

கலேத்வேணீபந்தா: குசகலஸ
விஸ்த்ரஸ்த- ஸிசயா

ஹடா2த்ரு ட்4யத் காஞ்ச்யோ விகளிதது கூலா யுவதய :

எதற்கு மன்மதன் வரை போக வேண்டும்
அம்பாளின் கடாக்ஷ கருணையில் ஓர் துளியை விவரிக்க ??

ஒரு வயதானவனை எடுத்துக்
கொள்வோம்...

தள்ளாத வயது பார்க்கவும் அவன் மிகவும் அவலக்ஷணம் ...

வயதானதால் எதிலும் அவனுக்கு நாட்டம் இல்லை ...

மேலும் அவன் ஒரு ஜடமாய் வாழ்பவன் ...

இப்படிப்பட்டவன் மீது அவன் கொண்ட ஆழ்ந்த பக்தியால் அல்லது முன் வினை பயனால் அவனுக்கு அம்பாளின் கடைக்கண் பார்வையில் ஒரு துளி கிடைக்கிறது என்று வைத்துக்
கொள்வோம்....

அவ்வளவு தான் ... அவனை பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான யுவதிகள்

தங்கள் நிலை மறந்து அணிந்த நகைகள் அவிழ ,

உடுத்திய ஆடைகள் விடை பெற

மேகலைகள் மண்ணில் சிதற

ஒட்டியணங்கள் உடம்பில் ஒட்டாமல் வீதியில் ஓட

அவன் பின் ஓடுகிறார்கள் ..

அவர்கள் எல்லோர் பார்வையிலும் அவா மன்மதனாக தெரிகிறான் ...

வயது , முதிர்ச்சி இயலாமை பற்றுகள் இல்லாமை , ஜடதன்மை எதுவுமே அங்கே குறிக்கிடவில்லை ...

*அவ்வளவு உயர்ந்தது மென்மையானது மேன்மையானது அம்பாளின் ஒரு துளி கடாக்ஷம் என்கிறார்*

கொஞ்சம் விரசமாக இந்த ஸ்லோகம் மேல் பார்வையில் தெரிந்தாலும்

இதன் தத்துவ விளக்கத்தை நாம் புரிந்துகொண்டால் ஆதிசங்கரரின் கவித்துவதையும் பக்தியையும் புரிந்து கொள்ளலாம் !!

இங்கே யுவதிகள் என்பது உபநிஷதங்கள் வேதங்கள் ..

பொதுவாக இவைகளை ஸ்திரீகளோடு ஒப்பிட்டே சொல்வார்கள் ...

வேதங்களும் உப நிஷதங்களும் சாட்சாத் பரமேஸ்வரன் ,

அந்த காமேஸ்வரனை தங்கள் பதிகளாக நினைத்து அவனுடன் எப்பொழுதும் ஒன்று சேர்ந்து இருக்க விரும்புகின்றனவாம்

இங்கே சொல்லப்பட்ட கிழவன் அம்பாளின் ஒரு துளி கடாக்ஷத்தால் காமேஸ்வரனாகவே மாறி விடுகிறான் ( சிவ ஸாயுஜ்ய பதவி)...

வேதங்களும் உபநிஷத்துக்களும் இவனைப் பார்த்துவிட்டு இவன் தான் தாங்கள் நாடும் காமேஸ்வரன் என்று நினைத்து பின்னே ஓடி வருகின்றனவாம்

In short , அந்த வயோதிகன் பார்க்க சகிக்காதவன்

அம்பாளின் கருணையால் எல்லோர் மனம் கவரும் மன்மதனாய் காமேஸ்வரனாய் ஆகி விடுவதால்

வேதங்கள் , உபநிஷதங்கள் என்னும் யுவதிகள் அவனை சூழ்ந்து கொண்டு துதி பாடுகின்றன என்கிறார் ...

*இப்போ சொல்லுங்கள் எங்கே இருக்கிறது விரஸம் ??*
ravi said…
*SAUNDARYA LAHARI-Shloka-14*

*Goddess Tripurasundari is transcendant*

क्षितौ षट्पञ्चाशद्-द्विसमधिक-पञ्चाशदुदके
हुतशे द्वाषष्टि-श्चतुरधिक-पञ्चाशदनिले ।
दिवि द्विः षट् त्रिंशन् मनसि च चतुःषष्टिरिति ये
मयूखा-स्तेषा-मप्युपरि तव पादाम्बुज-युगम्
॥ 14 ॥

kshitou shat panchaasad dwi samadhika panchaasad udakae

hutaasae dwaashashtis chamaradhika panchaasad anilae

divi dwishshat trimsan manasi cha chatu shshashtir iti yae

mayookhaas taeshaam apy upari tava paada ambuja yugam . 14

*TRANSLATION:* Fiftysix for earth, fifty-two for water, sixty-two for fire, fifty-four for air, seventy-two for ether and for mind (manas) sixty-four – these are your rays (connected with human existence).

Even beyond these are you twin feet (the cause of the sentient world).

*SIGNIFICANCE:* Even though, electricity was yet to be invented, the ancient Indian masters, knew of the “energy distribution system” of our human body.

The various charkas, like modern, electrical cutouts or junctions, store the energy and redistribute in a typical “hub and fork” system.

The 72,000 nerves in the human body, all-starting from the head, move throughout the body connecting each and every organ.

The cosmic energy is collected from the head [Head Office] and stored in the charkas [branches] for further redistribution.

That is why, when we meditate, we are advised to visualize the energy in the form of a white light entering the head.

Further, as we progress in our meditation, we are advised to energize each and every chakra to ensure our energy distribution is efficient at all levels.

Only if sufficient energy is received can the body remain balanced for the long journey of meditation.

The 72,000 nerves, which are the forks, end up in 360 sub-branches, which are connected to the various Chakras of hubs or branches.

Depending upon their nature and requirements, the values are assigned. Earth (56) is heavier as compared to Water (52), Fire (62) is heavier than Air (54), Ether (72) is denser than Manas (64) – these are values representing the various chakras of the Body.

These represent the 360 nerve ends, which join at the charkas.

The original (and therefore, ultimate) source of energy, which keeps these supplied is situated at the Head (Sahasrara Chakra) and is represented by the Goddess, the Pure Consciousness

🪷🪷🪷🪷🪷
ravi said…
[15/07, 14:01] Jayaraman Ravikumar: *இன்று ஒரு அருமையான ஸ்லோகம் ...*

*கொஞ்சம் நீண்ட பதிவு ... பொறுமையாக அனுபவித்து படிக்கவும்*

ஆங்கிலத்திலும் விளக்கம் கொடுக்க முயற்சி செய்துள்ளேன்
[15/07, 14:04] Jayaraman Ravikumar: *Part A*

*கலைகளாகவும் காலங்களாகவும்* *அதற்கும் அப்பாற்*
*பட்டவளாகவும்* *அம்பாள் இருக்கிறாள்* 👌👌👌

ஒரு அருமையான ஸ்லோகம் இன்று அலசல் செய்ய கிடைத்துள்ளது ...
இது என் பாக்கியம், அன்னை தந்த வரம் என்றும் சொல்லலாம்

முடிந்தவரை எளிதாக சொல்ல பிரயத்தனம் செய்துள்ளேன் ...

சரி என்ன ஸ்லோகம் அது மிகவும் நம்மை ஆச்சரியப்பட வைக்க போகிறது இன்று ?

வேறு எது சௌந்தர்ய ளஹரீ தான் ... *ஸ்லோகம் 14*

ஒரே ஸ்லோகத்தில் கணிதம் , கவித்துவம் , அலங்கார சொற்கள்
கலைகள் , பஞ்ச பூதங்கள் , மனம் , ஆதார சக்கரங்கள், கால அட்டவணை இப்படி எல்லாவற்றையும் இணைத்து அம்பாளை ஸ்தோத்திரம் செய்வது புதுமை மட்டும் அல்ல பக்தி பூர்வமானது...

அம்பாளின் பூரண அருள் பெற்ற ஆதி சங்கரர் ஒருவரால் மட்டுமே இது முடியும் ... சாத்தியம்💐
[15/07, 14:06] Jayaraman Ravikumar: *Part B*

சரி கணிதம் எப்படி மற்றவைகளுடன் இணையப்போகிறது என்று பார்ப்போம்

பொதுவாக ஒரு வருடம் என்பது 360 நாட்கள் மட்டுமே ... மாதம் என்பது average ஆக 30 நாட்கள்

சரி மீண்டும் கொஞ்ச நேரம் கழித்து இங்கு வருவோம்

கலைகள் ... 64 என்று தெரியும் ... அதற்கும் மேலும் சந்திர கலைகள் உள்ளன ... கதிர்கள் என்று சொல்லலாம் கிரணங்கள் என்று சொல்லலாம் ... எப்படி இவைகளை இங்கே இணைக்க முடியும் ...? பார்ப்போம் சிறிது நேரத்திற்கு பிறகு

*கால அட்டவணை*

ஒரு வருடம் என்பது ஆறு பருவங்கள் ( ருதுக்கள் )

*ஆறு பருவங்கள் மற்றும் அவை வரும் மாதங்கள்:*

இளவேனில் (சித்திரை, வைகாசி): *வசந்த ருது*

முதுவேனில் (ஆனி, ஆடி): *கிருஷ்ம ருது*

மழைக்காலம் (ஆவணி, புரட்டாசி): *வர்ஷ ருது*

குளிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை): *சரத் ருது*

முன்பனிக்காலம் (மார்கழி, தை): *ஹேமந்த ருது*

பின்பனிக்காலம் (மாசி, பங்குனி): *சிசிர ருது*
[15/07, 14:06] Jayaraman Ravikumar: *Part C*

*ஆதார சக்கரங்கள்*

*மூலாதாரம்* 56 நாள்கொண்ட வஸந்தருதுவுக்கு ஒப்பாகவும்.

*மணிபூரகம்* 52 நாள்கொண்ட க்ரீஷ்மருதுவுக்கு ஒப்பாகவும்.

*ஸ்வாதிஷ்டானம்* 62 நாள்கொண்ட வர்ஷருதுவுக்கு ஒப்பாகவும்.

*அனாஹதம்* 54 நாள்கொண்ட சரத்ருதுவுக்கு ஒப்பாகவும்.

*விசுத்தி* 72 நாள்கொண்ட ஹேமந்தருதுவுக்கு ஒப்பாகவும்.

*ஆக்ஞை* 64 நாள்கொண்ட சிசிரருதுவுக்கு ஒப்பாகவும் சொல்லப்படுகின்றது

அதாவது 56+ 52+62+54+72+64 =360 days
ravi said…
[15/07, 14:07] Jayaraman Ravikumar: *D ஆதார சக்கரங்கள் + பஞ்ச பூதங்கள் + மனம் இவைகளின் தொடர்பும் ஆதார சக்கரங்கள் இருக்கும் இடங்களும் அதன் தன்மைகளும்*

*மூலாதாரம்* (Muladhara):

இது உடலின் அடிப்பகுதியில், முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது.

இது பூமியின் சக்தியையும், உயிர்ச்சக்தியையும் குறிக்கிறது.

*சுவாதிஷ்டானம்* (Swadhisthana):

இது தொப்புளுக்குக் கீழே, அடிவயிற்றில் அமைந்துள்ளது.

இது உணர்ச்சிகள் மற்றும் படைப்பாற்றலுடன் தொடர்புடையது.

*மணிபூரகம்* (Manipura):
இது தொப்புளுக்கு மேலே, சூரியனின் ஒளிக்கற்றை அமைந்துள்ள இடத்தில் உள்ளது. இது தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையுடன் தொடர்புடையது.

*அநாகதம்* (Anahata):
இது மார்புப் பகுதியின் நடுவில் அமைந்துள்ளது.

இது அன்பு மற்றும் இரக்கத்துடன் தொடர்புடையது.

*விசுத்தி* (Vishuddha):
இது தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது.

இது தொடர்பு மற்றும் வெளிப்பாட்டுடன் தொடர்புடையது.

*ஆக்ஞா* (Ajna):
இது புருவமையத்தில் அமைந்துள்ளது.

இது உள்ளுணர்வு மற்றும் ஞானத்துடன் தொடர்புடையது.

இந்த ஆறு சக்கரங்களும் உடலின் பல்வேறு பகுதிகளிலும், செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

*ஆதார*
*சக்கரங்களும் பஞ்ச பூதங்களும் மனதும்*

*மூலாதாரம்* ... இது பூமி தத்துவம் ( நிலம்)

*மணிபூரகம்* - இது நீர்த்தத்துவம்

*அநாகதம்* : அக்னித் தத்துவம்

*விசுத்தி* வாயு தத்துவம்

*ஆக்ஞா* ஆகாய தத்துவம்

ஆறு ஆதார சக்கரங்கள் நேரம், இடம் மற்றும் பொருள்களின் காலா சக்கரத்தால் பிணைக்கப்
பட்டுள்ளன,

அதேசமயம் தேவி உச்சமான அல்லது தூய உணர்வு காலா சக்கரத்தின் பிடிக்கு அப்பாற்பட்டது.
[15/07, 14:08] Jayaraman Ravikumar: *ஆதார சக்கரங்களின் தன்மைகள்*

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதையும் அவருடைய குண்டலனீ எழுந்து எந்த சக்கரம் வரை வந்துள்ளது என்பதையும் நாம் பழகிய சில நாட்களில் தெரிந்து கொள்ளலாம் ...

குண்டலிநீ அதாவது நம் உயிர் சக்தி 3.5 அடி உள்ள தன்னை ஒரு பாம்பு போல சுருட்டிக்கொண்டு படுத்திருக்கும் ...

அதை எழுப்பி சஹஸ்ராரம் ( சிரசின் நடு பகுதி) வரை நம்மை கொண்டு செய்ய வைத்தால் பேரானந்தம் அமிர்தம் சிவானந்த வெள்ளம் நமக்கு கிடைக்கு ...

பிறவிகளே இனி இல்லை என்ற நிலை ...

அம்பாள் குண்டலினியாக இருந்துகொண்டு நாம் செய்யும் கர்ம வினைகளின் படி நம்மை மேலே உயர்த்தி செல்கிறாள்...

நல்ல எண்ணங்கள் , சிந்தனைகள் கெட்டு விட்டால் நம்மை மீண்டும் கீழ் இறக்கி மூலாதார சக்கரத்தில் தள்ளி விட்டு விட்டு பாம்பு போல் தன்னை சுருக்கிக் கொண்டு உறங்க செல்கிறாள்

சரி அந்த அந்த சக்கரத்தில் இருப்பவர்களின் தன்மைகளை பார்ப்போமா ?

*மூலாதாரம்* ...

குண்டலினி மேலே செல்லாமல் இங்கேயே தங்கி விட்டால் அவர்கள் மந்த புத்தி கொண்டவர்களாக
வும், ஜடங்களாகவும் வெறும் சாப்பிடுவது தூங்குவது எனும் செயல்களை மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள் ... அவர்களால் அவர்களுக்கே உபயோகம் ஏதும் இல்லை

*ஸ்வாதிஷ்ட்டானம்*
இங்கே குண்டலினி தங்கி விட்டால் அவர்கள் தூங்குவதும் , உடல் சுகம் தேடுவதும் சாப்பிடுவதுமாகவே இருப்பார்கள் ... வேறு உபயோகம் ஏதும் இல்லை

*மணிப்பூரகம்*

இங்கே குண்டலினி வந்து தங்கி விட்டால் கொஞ்சம் கேள்விகள் கேட்க்கும் ஞானம் பிறக்கும் ... நான் யார் ? யார் கடவுள் ? இப்படி கேள்விகளுக்கு ஓர் புரிதலை தேடுவார்கள்

*அனாகதம்* (மனது) ஆன்மீக தேடல் உள்ளவர்களாக இருப்பார்கள் .. கோயில்கள் அடிக்கடி செல்லும் பழக்கம் ஏற்படும் .. பக்தி பதிவுகளை படித்து ரசிப்பார்கள்

*விசுத்தி*.. தன் இறை அனுபவங்களை பிறருக்கும் பகிர்வார்கள் ... பிறரையும் ஆன்மீக நெறியில் கொண்டுவர முயற்சிப்பார்கள் ... தான் பெற்ற இன்பம் பிறரும் பெற வேண்டும் என்று நினைப்பார்கள்
ravi said…
[15/07, 14:09] Jayaraman Ravikumar: *ஆக்ஞா சக்கரம்*

இங்கே குண்டலிநீ வந்துவிட்டால் பரமானந்த நிலை ... நம்மை மறந்த நிலை ... சமாதி நிலை .... சுவாமி ராமகிருஷ்ணர் , ரமணர் , பெரியவா போன்றார் இந்த நிலைக்கு குண்டலினியை வெகு சீக்கிரத்தில் கொண்டு வந்து விட்டார்கள்

*சஹஸ்ராரம்* ... இது தான் முக்தி நிலை பரமனுடன் ஒன்றாக இணையும் நிலை ... ஆனந்த பைரவரும் ஆனந்த பைரவியும் சிவ சக்தி ஐக்கியமாகி ஆயிரம் தாமரைகளில் அமுதை சுரக்கும் நிலை ... நம் உடம்பில் உள்ள 72000 நரம்புகளுக்கும் அமுதம் கிடைக்கும் நிலை

குண்டலினி அவ்வளவு சுலபமாய் மேலே எழாது ...

மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் சேர்ந்து அக்கினிகண்டம்.

அதற்குமேல் *ப்ரம்மக்ரந்தி* என்று ஒரு முடிச்சு உள்ளது.

மணிபூரகமும் அநாஹதமும் சேர்ந்து சூரிய கண்டம்.

அதற்குமேல் விஷ்ணுக்ரந்தி என்று ஒரு முடிச்சு உள்ளது.

விசுத்தியும் ஆஜ்ஞையும் சேர்ந்து ஸோம கண்டம். அதற்குமேல் ருத்ரக்ரந்தி என்று ஒரு முடிச்சு உள்ளது.

இந்த முடிச்சுக்களை அவிழ்த்தால் தான் குண்டலினி சஹஸ்ராரம் சேர முடியும்
[15/07, 14:12] Jayaraman Ravikumar: பிரம்மாண்டத்தில் நாட்களாய் இருப்பவை 360

பிண்டாண்டத்திலும் அக்கினிகண்டத்தில் 108,

சூரியகண்டத்தில் 116, சந்திரகண்டத்தில் 136

ஆக 360 கிரணங்கள்.
ravi said…
[15/07, 14:14] Jayaraman Ravikumar: சரி இனி ஸ்லோகத்தை பார்ப்போம்

எப்படி ஆதி சங்கரர் மேல் சொன்ன எல்லாவற்றையும் இணைக்கிறார் என்று பார்ப்போம்

க்ஷிதௌ ஷட்பஞ்சாஶத்³ த்³விஸமதி⁴கபஞ்சாஶது³த³கே

ஹுதாஶே த்³வாஷஷ்டிஶ்சதுரதி⁴கபஞ்சாஶத³னிலே ।

தி³வி த்³விஷ்ஷட்த்ரிம்ஶன்மனஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே

மயூகா²ஸ்தேஷாமப்யுபரி தவ பாதா³ம்பு³ஜயுக³ம் ॥ 14 ॥

*க்ஷிதௌ ஷட்பஞ்சாஶத்³*

*க்ஷிதௌ* என்றால் பூமி அதாவது மூலாதாரம்

*பஞ்சாஶத்* என்றால் 50

*ஷட்* என்றால் 6

அதாவது மூலாதாரத்தில் பூமி தத்துவத்தில் 50+6 = 56 கலைகளாக நீ இருக்கிறாய்

*த்³விஸமதி⁴க*
*பஞ்சாஶது³த³கே*

இதை இப்படி சொல்ல வேண்டும்

*த்விசமதிக பஞ்சாஸத் -*
*உடகே*

*உடகே* என்றால் நீர் ...
*த்விசமதிக பஞ்சாஸத்* என்றால் 2 + 50 = 52

அதாவது மணிப்பூரக சக்கரத்தில் ( நீர் தத்துவம்) 52 கலைகளாய் இருக்கிறாய்

*ஹுதாஶே த்³வாஷஷ்டிஶ்சதுரதி⁴கபஞ்சாஶத³னிலே ।*

ஷஷ்டி என்றால் 60 ( ஷஷ்டியப்த பூர்த்தி என்று சொல்கிறோம் அல்லவா )

த்வா என்றால் 2 ... த்வா ஷஷ்டி என்றால் 62 ...

அக்னி தத்துவம் அதாவது ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் 62 கலைகளாக இருக்கிறாய்
[15/07, 14:15] Jayaraman Ravikumar: *சதுரதி⁴கபஞ்சாஶத³னிலே ।*

அனிலே என்றால் வாயு .

சதுர் என்றால் 4 பஞ்சாஶ என்றால் 50

அதாவாது வாயு தத்துவம் அனாகதம் என்பது இருதய ஸ்தானம் ... அனாகத சக்கரத்தில் 54 கலைகலாய் நீ இருக்கிறாய்

தி³வி த்³விஷ்ஷட்த்ரிம்ஶன்

விசுத்தி சக்கரம் ... திவி என்றால் ஆகாயம்

த்ரிம்ஶது என்றால் 30

ஷட்த்ரிம்ஶது என்றால் 6 + 30 = 36
திவி எனும் வார்த்தை 2 தடவை வருவதால் 36×2 = 72

அதாவது விசுத்தி சக்கரத்தில் 72 கலைகளாய் இருக்கிறாய்

மனஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே

ஆக்ஞா சக்கரம் மனதை குறிக்கும்
சதுஷ்ஷட்டி என்றால் 64

64 கலைகளாய் உள்ளாய்
*மயூகா²ஸ்தேஷாமப்யுபரி தவ பாதா³ம்பு³ஜயுக³ம்*

இப்படிப்பட்ட கலைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கும் சஹஸ்ரார சக்கரத்தில் உன் திருவடி தாமரைகள் இருக்க அங்கிருந்து அமிர்த பிரவாகத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறாய்

காலசக்ரத்தையும் நீ தான் சுழற்றுகிறாய் காலம் கடந்தும் நீயே வியாபிக்கிறாய் ...
[15/07, 14:19] Jayaraman Ravikumar: இப்பொழுது கணக்கு சரியாக வரும்

56 + 52+62+54+72+64 = *360*

எப்படி ஒரே ஸ்லோகத்தில் கலைகளையும் , கால அட்டவணை யையும் , பருவங்களையும் , ஆதார சக்கரங்களையும் , பஞ்ச பூதங்களையும் மனதையும் இணைத்து ஒரு ஸ்லோகம் எழுதியுள்ளார் ஆதி சங்கரர் ... இந்த வரமும் கவித்தன்மையும் யாருக்கு கிடைக்கும் ?
ravi said…
*க்ருஷ்ணேஷ்வர் / குஷ்மேஸ்வரர் &*

*குஷ்மேஸ்வரி / குங்கமனேஸ்வரி*

*மஹாராஷ்டிரா*


*கம்சன் வதம்*

கண்ணன் சிரித்தான்

தன் தாயும் நொடிக்கு நூறு முறை தன் நாமம் சொல்லி அழைத்ததில்லை...

பெற்ற தேவகியோ இப்படி நினைத்ததில்லை

கோபியரும் இப்படி கொண்டாடியதில்லை ....

மூச்சிலும் பேச்சிலும் என் நாமம் காற்றிலும் கருப்பிலும்

கண்டது என் உருவம் ...

வெறுப்பிலும் கரிப்பிலும் கண்ணன் துவேஷம் ...

கற்றதெல்லாம் கண்ணன் என் உயிர் எடுப்பதற்கே ...

மாமன் இவன் மா மா என்றே அழைக்க ஆசை தான் ...

தாயின் கருணை தளிர் விடவில்லையே

என் ஆறு தம்பிகளை கண் திறக்கும் முன்னே கொன்றான் கண்கள் இருந்தும் இவன் குருடனே

விட்டு விட்டால் தொட்டு செய்த பாவங்கள் பட்டு விடுமா ?

நட்டு இழந்த இயந்திரம் போல் எட்டு என்றே கணக்கிட்டவனை சட்டு என்று கொல்ல வேண்டும் ...

மா மா என்ற வார்த்தைக்கு இனி மறு பிறவி தரவேண்டும்

ஓங்கி ஒரு குத்து விட்டான் கம்சனை கண்ணன்

பத்து திங்கள் காத்திருந்த குழவி போல் பொத்து என்று கீழ் விழுந்தது அவன் தாடையும் பற்களும்

ஓங்கி ஓர் அறை கொடுத்தான் கண்ணன் ...

ஓடிப்போய் அரை தனில் அழ நேரமில்லை கம்சனுக்கு

பாடி ஓர் அடி அடித்தான்

பார்வை மங்கி கூண்டை விட்டு வெளி கிளம்பும் கிளி போல் உயிர் உயரத்தில் சிறகின்றி பறந்ததே !!!
ravi said…
பஞ்சபூதம் + மனம் =
ஆறு உலகங்களின் கூறுகளில் இறைவியின் திருவடித் தாமரைகளின்
மேன்மையை விளக்குகிறது....
ஆனால் ரவி இவையெல்லாம் என்னை போன்ற சாமானிய பக்தைக்கு அப்பாற்பட்ட விஷயம்
( ஞானசூனியம் )
ஏதோ சாமியிடம் ஹாய் ஹலோ என்று பிரேயர் மட்டும்தான் செய்யத் தெரியும்...
இவ்வாறெல்லாம் அலசி ஆராயத் திறமை கிடையாதுப்பா...
உன்னுடைய ஆர்வத்திற்க்கும் அசாத்தியமான திறமைக்கும்...
ஒரு விழாவை நான் எடுக்க வேண்டும்...
அடுத்து ஒரு திருமண மண்டபத்தில் நாம் சந்திக்கும் பொழுது விழாவினை நடத்தி விடுகிறேன் ppa 😂
பகிர்வினை முழுமையாக என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றாலும் உனது திறமைக்கு
ஆகா!! ஓகோ!" சபாஷ்...
இதுவும் எதுவும்
*உன்னால் முடியும் தம்பி!!!!!*!
என்று எனக்கு விளங்குகிறது
ஆசிகளுடனும் வாழ்த்துக்கள்
ravi said…
தாண்டி போகக்கூடிய பதிவுகள் ...
இருப்பினும் நேரம் ஒதுக்கி உங்கள் உண்மை நிலையை தயங்காமல் சொல்வதற்கு நான் தான் சபாஷ் சொல்ல வேண்டும்

புரியாத , புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் என்றும் எதுவும் இல்லை .. நாம் நம் மனதை லயப்படுத்தி படிக்க வேண்டும் ... என்னால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது என்றால் எவராலும் எதையும் புரிந்து கொள்ளலாம்

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்

இந்த இரண்டு வரிகள் தான் இந்த ஸ்லோகம்

1. யாதும் ஆனாய் காளி
2. எங்கெங்கு காணிலும் சக்தியடா
அவள் காலமாய் நம்முடன் பயணிக்கிறாள் ... காலம் கடந்தும் எங்கும் எதிலும் வியாபிக்கிறாள் ...

அம்புட்டுத்தான் சொல்ல வந்த விஷயம்
ravi said…
கேதார்நாத் &
கேதாரகௌரி
உ.பி

*நரகாசுரன் வதம்*

பெற்றோர்கள் அவர்கள் எனை பெற்றவர்கள் கற்றவர்கள் அதி கருணை கொண்டவர்கள் ...

எனக்கு அந்தம் என்றே ஒன்று வந்தால் அது அவர்கள் மூலமாக வரவேண்டும்

பிரம்மன் திகைத்தான் ..

இப்படி ஒர் வரம் இதுவரை யாரும் கேட்டதில்லை ...

கொடுத்தாலும் யார் இந்த பாவம் செய்ய முன் வருவார்கள் ?

அந்தம் ஒன்று வருவதென்றால் பந்தம் அறுக்க பெற்றோர் வருவாரோ ... ?

சந்தம் இதுவென்றே தமிழ் சங்கம் சொல்லுமோ ?

பிரம்மன் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான் ...

வேதங்கள் வாயடைத்துப்
போயின ...

வராக அவதாரத்தில் பூமியுடன் இரண்டற கலந்தான் மாதவன் ...

இரவும் பகலும் சேர்ந்து குழவி ஒன்றை ஈன்றதே ....

பாசத்தில் பாலாறு ஓட உச்சி முகர்ந்தாள் அண்ணல் தந்த அரும் கொழுந்தை ...

வராகனும் கடல் அடி சென்று முத்துக்கள் பல தன் பிள்ளை மீதே அள்ளித் தெளித்தான்

அவன் வளர வளர பெற்றது குயில் அல்ல கோட்டான் என்றே புரிந்தது பெற்றோருக்கு ...

யுகம் மாறியும் அவன் தொல்லை மாறவில்லை கொடுக்கும் துன்பம் குறையவில்லை ...

பூமா தேவி சத்திய பாமாவானாள் ... வராகன் கண்ணனான் ....

முன் வினை எண்ணங்கள் மறந்து போக

பின் தங்கிய போரை முன் கொண்டு வந்தாள் பூமா ....

கண்ணன் வில் பிடிக்க பூமா தேரோட்டினாள் பெற்ற பிள்ளையின் விதி முடிக்க

விரைந்தன அம்புகள் ...

கண்ணன் சற்றே சோர்வடைய வில்லை கையில் எடுத்தாள் ...

கொடுத்த தாய்ப்பால் போரில் குறுதியாய் எங்கும் ஓட

அவன் விதி முடித்தாள்

தானே அவன் தாயென்றே அறியாமல் ...

உணர்ந்தான் நரகாசுரன் உள்ளம் குளிர வேண்டினான் ...

இது என் பெற்றோர் கொடுத்த வரம் ... தரம் இன்றி குறை கூற வேண்டாம் ...

இந்த நாள் வின் கானட்டும் வான வேடிக்கைகள் ...

அணியட்டும் அனைவரும் புத்தாடைகள்

குவியட்டும் எங்கும் நெய்யில் விளைந்த பக்ஷணங்கள்

என்னை மறக்காமல் எண்ணெய் தேய்த்து குளிப்போர்

வெண்ணெய் போல் வாழ்வு மென்மை பெற்றோரே !!

அப்படியே ஆகட்டும் ... தீப ஒளிகள் எங்கும் சுடர் விட இந்த நாள் இனி *தீபாவளி* என்றே அழைப்பார் உலகோரே !

என்றாள் கண்களில் நீர் முட்ட

வாயினில் வார்த்தை தடுமாற

மனம் கணக்க , பதை பதைக்க...

அடிவயிறு *அம்மா* வென்ற குரல் கொடுக்க

இறுக அணைத்துக்
கொண்டாள் தன் கரங்களால் வீழ்ந்த தன் மகனை .....🙏
ravi said…
[18/07, 10:02] Chandramouli: Wow, amazing and my pranams to you for all round contribution to Hinduism . I will go through it sometime today 🙏🙏
[18/07, 22:01] Chandramouli: மிக மிக அருமை. படத்தின் அனைத்து சாராம்சமும் தங்கள் எடுத்து மூலம் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். 👌👍👏👏
ravi said…
Wonderful article athimber! I really enjoyed it. Keep writing more😊👍
ravi said…
Excellent Ravi. Enjoyed your well researched & covered , interesting work. Very proud of you. Well done. Continue! 👍👏🏼👏🏼👏🏼
ravi said…
ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில்

உமாப்புலியூர், திருவோமாம் புலியூர்

*பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்* *(துயர்தீர்த்த நாதர்)*
*
*தாயார்* :

*பூங்கொடிநாயகி*

*விகர்ணன் வதம்*

நல்லவன் ..உத்தமன்

ஓங்கி சபையில் அதர்மம் இது அண்ணா என்றே குரல் கொடுத்தவன்

சேராத இடம் அதில் சேறு நிறைந்த இடமதில் சோறு உண்டான் ...

செஞ்சோற்று கடன் தீர்க்க போருக்கு வந்தான் !!

99 தம்பிகளில் தப்பி பிறந்தவன் ...

தவறுகள் பிறர் இழைத்தால் அழைத்தல் இல்லாமல் அங்கே வருவான் ...

தட்டி கேட்பான் .. கேட்க வில்லை என்றால் வெட்டி பேச்சின்றி எட்டி செல்வான்

திரௌபதி கேட்டாள் " "கண்ணா இன்று போரில் மடியப்போகுபவர் யார் யார்?"

கண்ணன் சிரித்தான் ..

முற்றும் அறிந்தவன் நான் என்பதால் முன்கூட்டி கேட்கிறாயோ ...

இது தேவ ரகசியம் ... சொல்வது தவறு "

புரிந்துகொள்... இன்று நல்லவன் ஒருவன் மடியப்போகிறான் ...

எந்த பக்கம் கண்ணா??
இதை மட்டும் சொல் ...

சிரித்தான் கண்ணன் ...

எந்தபக்கமும் சாயாதவன் அவன் என்றான் ...

நல்லவன் என்கிறாய் ..

ஒரே நல்லவன் தர்மர் அன்றோ ...

ஐயகோ அவரை நான் இழப்பதா இன்று கண்ணா ?

பொறுத்திருந்து பார் ..

மேலும் கேள்விக்கு பதில் இல்லை என்றான் கண்ணன்

அர்ஜுனா எதிர் வருபவன் நல்லவன் உத்தமன்... விகர்ணன் ....

வலி ஏதும் வராமல் அவனை வதம் செய் ...

ஐயோ கண்ணா இவனையா வீழ்த்துவது?

என் திரௌபதிக்கு சபையில் குரல் கொடுத்தவன் ..

பிதாமகர் துரோணர் , கிருபர் இவர்களிடம் தர்க்கம் செய்தவன் ... முடியாது கண்ணா ...

உனக்கு கீதை சொல்லி என்ன பயன் ...

பீமா இதோ உன் பகை ... அவனை அமைதியாக வதம் செய்

பீமனும் கண் கலங்க விகர்ணன் சொன்னான்

வீரம் அழக் கூடாது ..தர்மம் தோற்க கூடாது ...

கண்ணன் உங்கள் பக்கம் ..

அக்கம்பக்கம் பார்க்காமல் எனை கொன்று விடு

சேரட்டும் என் உயிர் பரந்தாமன் பாதங்களில் இன்றே

போர் இட்டான் பீமனுடன் ..

மனம் இல்லாமல் கொன்றான் பீமன் ..

மனம் மகிழ கண்ணன் விகர்ணனை தனதாக்கிக்
கொண்டான் !!!
ravi said…
*SAUNDARYA LAHARI- 32 SHLOKA -28*

*Supremacy of the Goddess is re-asserted.*

सुधामप्यास्वाद्य प्रति-भय-जरमृत्यु-हरिणीं
विपद्यन्ते विश्वे विधि-शतमखाद्या दिविषदः ।
करालं यत् क्ष्वेलं कबलितवतः कालकलना
न शम्भोस्तन्मूलं तव जननि ताटङ्क महिमा
॥ 28 ॥

sudhaam apy aaswaadya pratibhaya jaraa mrityu harineem

vipadyantae viswae vidhi sata makha mukhaadyaa divishadah

karaalam yat kshwaelam kabalitavatah kaala kalanaa

na sambhos tanmoolam tava janani taatanka mahimaa. 28

*TRANSLATION:*

Even Gods like Indra and Brahma, who are beyond the grasp of cruel aging and death because of the effects of Divine Nector [Amritha] which they have consumed, do die and disappear (during Pralaya). But Shambu thy consort, despite swallowing the most potent poison [Kalakootha] never died. That is because of your greatness which is revealed by your ear studs viz. the sun and the moon. (The sun and the moon are not bound by time and are immortal. They continue even after the entire Universe is destroyed.)

*SIGNIFICANCE:*

The SUN and the Moon are responsible for the presence of life in this World. The Sun, with its heat gives life to the creations, the Moon ensures that there is no overexposure to the Sun which will result in their destruction. [If the vegetation is exposed to sun all the 24 hours, they will definitely die away. That is why, the night is important when the Moon rules. ] So both the Sun and Moon ensures that the life on this Earth continues. These are like the 2 ear-studs of the Goddess. Further, the immortality of Shiva, in spite of consuming the strongest poison [Kalakoottam] is because of the blessings of his wife. [In India we believe that the longevity of the husband is because of the good ness and the chastity (Pathivratyam) of his wife]

The sincerity of the Indian women in praying for the longevity of her husband is brought out poetically by the Acharya in stating that Devas like Brahma and Indra who have partaken “Amrutha” or Nector which ensures immortality, do get destroyed during Pralaya, but your husband the Lord Shiva, despite consuming the most potent poison does not die – this is because of the blessings of the Goddess, Lord Shiva’s wife. The indestructible nature of Shiva is compared to the continued exitence of Sun and the Moon which continue to be part of the Universe even after all the creations are destroyed during Pralaya. (28)

🪷🪷🪷🪷🪷
ravi said…
*தேவர்கள் கண்* *இமைப்பார்களா ?*

பொதுவாக நமக்குத் தெரிந்த விஷயம் ...

அமரர்கள் கண் இமைக்கவே மாட்டார்கள் ...

அதனால் தான் நளன் மாதிரியே வந்த தேவர்களை கண்டும் தமயந்தி உண்மையான நளனை கண்டுபிடித்து திருமணம் செய்து கொண்டாள் என்று படித்திருக்கிறோம் ...

ஆனால் ஆதி சங்கரர் ஏன் எதிர்மறையாக தேவ கூட்டம் கண் இமைக்கும் என்று இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார் ...??

வாருங்கள் கொஞ்சம் அலசுவோம்

*சௌந்தரிய ளஹரீ ஸ்லோகம் 18*

தனுச்சா²யாபி⁴ஸ்தே தருணதரணி
ஶ்ரீஸரணிபி⁴:

தி³வம் ஸர்வாம் உர்வீம் அருணி
மனி மக்³னாம் ஸ்மரதி ய: ।

ப⁴வன்த்யஸ்ய த்ரஸ்யத்³ வனஹரிண
ஶாலீனநயனா:

ஸஹோர்வஶ்யா வஶ்யா: கதி கதி ந கீ³ர்வாணக³ணிகா: ॥ 18 ॥

அம்மா உன் சிவந்த மேனியில் இருந்து வரும் காந்தி காலையில் உதிக்கும் பால சூர்யனைப்போல்
( *தர்ண தரணி* என்றால் இளம் சூரியன் )

பூமி அதற்கும் மேலும் உள்ள உலகங்கள் அனைத்தும் அந்த சிவப்பு ஒளியில் மூழ்கி சிவப்பாக மாறி விட்டன....

இப்படிப்பட்ட ரூபத்தில் மனதில் நிலை நிறுத்திக்கொண்டு எவனொருவன் உன்னை தினமும் தியானிக்கிறானோ

அவனை வேடனை கண்டு மிரண்டு போகும் மான்களைப் போல் ( ஹரிண என்றால் மான் )

எல்லா தேவ கன்னிகைகளும் (ஊர்வசியில் இருந்து ஆரம்பித்து) *ஸஹோர்வஶ்யா* என்பதை ஸஹ ஊர்வஶ்யா என்று பிரிக்க வேண்டும்

மிரண்டு அவனிடம் வசியம் ஆகிறார்கள் ...

(மிரண்ட மான்கள் கண்களை இமைக்கும்....)

சாதகன் தேவ கன்னிகைகளை தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லை ... எல்லாரும் இவனைக்கண்டு ஓடிவருவார்கள்

மேலாக பார்த்தால் வசியம் செய்யக்கூடிய ஸ்லோகமாக தெரிந்தாலும் உண்மையில் அதன் தாத்பரியம் வேறு

அம்பாளின் அருள் நமக்கு கிடைத்து விட்டால் நாம் எதையும் தேடி போக வேண்டிய அவசியம் இல்லை எல்லாம் நம்மை நாடி வந்துவிடும் ...பிறர் நம்மிடம் மயங்குவது நாமே அம்பாளாகவே அவர்கள் கண்களுக்குத் தெரிவதனால் தான் ...

அந்த அளவிற்கு அவள் நம்மை உச்சம் தொட வைப்பாள் என்கிறார் ஜகத்குரு ... 🙏🙌
ravi said…
*SAUNDARYA LAHARI- 33 - SHLOKA 29*

*Being an ideal wife while being supreme Goddess [Poetic fancy]*

किरीटं वैरिञ्चं परिहर पुरः कैटभभिदः
कठोरे कोठीरे स्कलसि जहि जम्भारि-मकुटम् ।
प्रणम्रेष्वेतेषु प्रसभ-मुपयातस्य भवनं
भवस्यभ्युत्थाने तव परिजनोक्ति-र्विजयते
॥ 29 ॥

kireetam vairincham parihara purah kaitabha bhidah

kathorae koteerae skhalasi jahi jambhaari makutam

pranamraeshwae taeshu prasabham upayaa tasya bhavanam

bhavasya abhyutthaanae tava parijanoktir wijayatae. (29)

*TRANSLATION:*

While Brahma, Vishnu, Indra etc. were praying to you having removed their crowns and placing them at your feet and you suddenly get up and rush in a hurry, to receive your divine husband Lord Shiva who arrives suddenly, your devotees express their concern saying thus “Mother, please avoid the crown of Brahma (in front) and the crown of Vishnu to your right and also that of Indra, which are made of very hard material which are at your feet to ensure that you don’t injure your lotus feet”.

*SIGNIFICANCE:*

This is very interesting visualization by the Great Acharya. When he graphically looks at the portrait of the Goddess, he finds that the Trinity of Brahma, Vishnu and Indra are praying at the feet of the Goddess. These Devathas have, out of reverence to the Goddess, placed their crowns, made of various precious metals, at her feet. The poet hidden inside Sankaracharya, is full of concern for the Goddess, imagining the possibility of her injuring her soft feet by coming in contact with the sharp edges of the crowns, if she were to suddenly get up from her Simhasanam, which can happen, if her husband, Lord Shiva were to arrive suddenly.

[Note: Wives, according to Indian culture, do not remain seated in the presence of their husbands – a formal demonstration of the inherent respect, which they always have for them. Genuine respect for one’s husband, however less endowed he may be, when compared to the accomplishments of his wife, is the root cause of the “family peace and stability” prevalent in India even today. Of course, the husbands should “deserve” the respect and not merely “desire” it by their own development, mental and spiritual. If both command respect [and not merely demand it] from one another, family life can be wonderful. ] (29)

🪷🪷🪷🪷🪷
ravi said…
கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில்

*கோல்*
*வளங்கையம்மை*

*மஹிஷி வதம்*

மஹிஷனை கொன்றாள் தாய் ...

மஹிஷியை கொல்ல வந்தான் ஹரி ஹரன் ...

தாயைப்போல் தயை கொண்ட கமலக் கண்கள் !!

தந்தைப்போல் பொன்னார் மேனியன் ... !!

தாயைப்போல் தாக்ஷண்யம்...!!

தந்தைப்போல் சிவானந்தம் ...

தாயைப்போல் அடர்ந்து வளர்ந்த கேசம் ...

தந்தைப்
போல் ஜடாமுடி

தாயை போல் சுழலும் விழிகள்

தந்தை போல் சாத்வீக நெற்றி ...

குனித்த புருவம் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு

பவளம் போல் மேனியில் பால்வெண்ணீற்....

நெய் என உருகும் உள்ளம் !!

நேர் பார்வை அது தருமே லாவண்யம் !!

மஹிஷியின் அட்டகாசம் ...

மலிந்து போகும் ஆன்மீக உயிர்கள் ...

பறந்து கிடக்கும் எலும்புகள் மண்டை ஓடுகள் ...

பெண் அல்ல இவள் பேய் என்றே சொல்லும் சிதறி கிடந்த பிண்டங்கள் !

மந்திரியின் வஞ்சனை

அஞ்சனையில் படுத்தாள் தாய் என சொல்லிக்கொள்ளும் மஹா ராணி ...

தலைவலி போகும் புலியின் பால் அருந்தினால்...

அம்பென புறப்பட்டான் மணிகண்டன் ...

புலித்தோல் உடுத்தும் தந்தை அவனை நினைத்தான் !!

காடெங்கும் புலி கறந்து ஓடும் தாய் பால் ..

கண் இமைக்கும் நேரமதில் ஓடும் பால் நின்றதே !

கோர உருவம் ஒன்று வந்ததே ...

எடுத்தான் வில்லை தொடுத்தான் புன்னகை ஒன்றை ..

திரிபுரம் எரிந்தது போல் எரிந்துபோனாள் மஹிஷி !!

ஓடிய பால், கொஞ்சம் அவளுக்கு பால் வார்த்ததே

அஷ்டாக்ஷரமும் (8) பஞ்சாக்ஷரமும் (5)
ஹரிஹரனும் (5)

பதினெட்டாகி(18) மகரஜோதியாய் மணி அடித்து

நம் மடமை எனும் எருமையை வதம் செய்கின்றதே நாள்தோறுமே !!💐💐💐
ravi said…
*இரண்யகசிபு வதம்*

அசுரர் வம்சம் ...

அந்த சேறிலே பிறந்ததோ ஓர் செந்தாமரை ...

பங்கஜம் மேனி அதிலே கமலங்கள் கரங்கள் ...

அரவிந்தம் வீட்டுத் நண்பர்கள்

பதுமமும் முண்டகமும்
குருகுல தோழர்கள்

அம்போருகம், நளினம் அவன் இரு கண்கள்

வாரிஜம் ,ஜலஜம் அவன் பக்தி அலைகள்

இண்டை , புண்டரீகம் அவன் நம்பிக்கை

முளரி , சதபத்ரி அவன் சொல்லும் நாமங்கள்

சரோஜம் , ராஜீவம் அவன் செய்யும் சரணாகதி

கஞ்சம் அவன் உள்ளம் அதில் இருப்பதோ பஞ்சம் இல்லா எட்டு அக்ஷ்ரங்கள்...

யாரடா உன் நாராயணன் ...
எங்கேடா அவன் உள்ளான் ...

இதோ இந்த தூணை பிளக்கிறேன் ... வரச்சொல் இதில் அவனை ...

மேகங்கள் மிரண்டன ...

மின்னல்கள் பயந்தன

இடிகள் ஓசை கேட்டு இருமின

பிரளயம் வந்ததோ என்றே நிலங்கள் வெடித்தன ...

பறவைகள் தங்கள் குஞ்சுகள் தனை சுமந்து நாலாபுறமும் பறந்தன ...

விலங்குகள் இலக்கு இல்லாமல் ஓடின

சிம்மம் ஒன்று மனிதன் ஒன்று சேர்ந்து வந்து கர்ஜித்ததே

நீண்டு வளர்ந்த நகங்கள் ...

நீர் சொட்டும் நாக்கு ...சிவந்து போன கண்கள்

காடு போன்ற பிடரி ... கர்ஜிக்கும் குரல் ...

வேட்டையாட ஏங்கும் பற்கள் ...

புடைத்த நரம்புகள் ... படைத்த தோற்றம்

வாசல் படிகள் அந்தி மயங்கும் நேரம் அசுரனின் அந்தம் வரும் நேரம்

மகன் வேண்டினான் ...

கொல்வது குற்றம் இல்லை ...

குறை இருப்பினும் உன் சரண் அடைந்தான் இனியும் பிறவி இல்லா முக்தி வேண்டும் என் தந்தைக்கே !

சிரித்தான் அழகிய சிங்கர் ...

உன்னைப்போல் ஓர் அவதாரம் எடுக்க வேண்டும் ...

உயிராக தந்தையை மதிக்க வேண்டும் ... வரம் தருவாயா பிரகலாதா... ?

ஆடிப்போனான் பிரகலாதன் ...

நான் உங்கள் அடிமை என்னிடம் வரமா ?

ஆம் நீ சரி என்றால் எடுப்பேன் ஒரு அவதாரம் ...

பெறுவேன் ஈசனிடம் ஓர் பரசு ..

வருவேன் பரசுராமனாய் ...

சிலிர்த்துப்போனான் பிரகலாதன் !!
ravi said…
*சிவபுரி உச்சிநாதர் கோயில் கடலூர்*
( திருநெல் வாயில்)

*உச்சிநாதர், மத்யானேஸ்வரர்*

*கனகாம்பிகை*

*ஹயக்ரீவன் வதம் ...* 🐴

குதிரை முகம் ... கோணல் புத்தி
தான் எனும் கர்வம்
தனதே எல்லாம் எனும் குணம் ...

நான்மறைகளை மறைத்து விட்டால் நான்முகன் என் செய்வான் ...?

நானே ராஜா

நானே படைப்பேன் அகிலத்தை என்றே மார்தட்டினான் !

வேதங்களை பிடுங்கி கடலுக்குள் எடுத்து சென்றான் ...
தவித்தான் பிரம்மன்

தாயுமான தயாளனை துதித்தான் ..

வெண்மை நிறைந்த குதிரை 🦄ஒன்று ஹூம் ஹூம் என்றே கணைத்து கடலுக்குள் நுழைந்ததே ....

சண்டை பல வருடம் ... வண்டை போல நசுக்கினான் மாதவன் அசுரனை ...

கசங்கி போய் உமிழ்ந்தான் தான் விழுங்கிய வேதங்களை ...

வெளி வந்தே ஹயக்ரீவர் தந்தார் பிரம்மனிடம் திருடு போன வேதங்களை ...

*ஓம் ஞானானந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிகாக்ருதிம்.*

*ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே.*

பிரம்மன் கண்களில் ஆனந்த கண்ணீர் ....

வாயில் மூல மந்திரம் ....

இன்னொரு அதிசயமும் செய்தார் ஹயக்ரீவர் ....

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

ஸ்ரீ லலிதா த்ரிஶதி தந்தார்

உலகம் அம்பாள் எனும் கவசம் தாங்கி நிற்கவே!!
ravi said…
*SAUNDARYA*
*LAHARI- 34 ... *SHLOKA 30*

*The Glory of Mother as understood by the meditator.*

स्वदेहोद्भूताभि-र्घृणिभि-रणिमाद्याभि-रभितो

निषेव्ये नित्ये त्वा महमिति सदा भावयति यः ।
किमाश्चर्यं तस्य त्रिनयन-समृद्धिं तृणयतो
महासंवर्ताग्नि-र्विरचयति नीराजनविधिम् ॥ 30 ॥

swadaehod bootaabhir ghranibhir animaadwaabhir abhitah

nishaevyae nityae twaam aham iti sadaa bhaavayati yah

kim aascharyam tasya trinayana samriddim trunayatah

mahaa samvarta agnir wirachayati neeraajana vidhim. 30

*TRANSLATION:*

He who is able to identify his own Self with shining rays emanating all around you, O Divine Goddess, who is permanent and surrounded by deities representing the eight-fold aishwaryas like Anima, etc. such a person will receive eternity and will be revered even by Pralayagni or Kalpantha-kalagni [fire which puts an end to Kalpas].

*SIGNIFICANCE:*

This verse signifies the state of mind of a sincere and hard-working “sadhaka” who has reached a high state of meditation (nirbija samadhi).. For this, meditation has to be continued as an abhyasa, which according to Sage Pathanjali, happens when the sincere efforts are continued for years without break and with reverence. He he will be able to identify himself and become one with the Goddess, his Ishta Devatha. Such a Sadhaka, will find that his mind has stopped throbbing, and he is experiencing the shining rays of energy emanating from the Goddess. Everything else cease to exist. Anyone who reaches this exalted state, can easily command all the powers of this world (popularly known as the eight-fold aishwaryas such as Anima, laghuma, etc.) if he so chooses. But, if he does not allow himself to be dissuaded by these benefits, but continues in his selected path, he realizes the Goddess and becomes aware of the true nature of the SELF [Purusha]. Anyone who reaches this state naturally becomes immortal and indestructible [amrutatwam] i.e. beyond the fires of destruction. In fact, the pralaya-agni becomes a “mangala arthi” for him. Here destruction has no reference to the mortal body. The body will be destroyed as usual. But the soul will realize immortality, which is its true nature. [With warm regards: R. Hariharan]

🪷🪷🪷🪷🪷
ravi said…
*அருள்மிகு அபி*
*விருத்தீஸ்வரர்*
*ஆனந்தவல்லி* அம்பாள் கோவில்,

Okkur, Pudukkottai District, Tamil Nadu.

*கார்த்தவீரிய* *அர்ஜுனன் வதம்*

அவரும் ராமன் தான் ..

சாந்தம் இல்லை அதி ரௌந்தரம் முகத்தில் உண்டு

உதடுகள் புன்னகையை சுவைத்ததில்லை...

பெண் நகையை நேசித்ததில்லை ..

பொன் நகையை விரும்பியதும் இல்லை

கண் நகையில் ஏனோ ஒரு சோகம் ...

எதையோ எண்ணுகையில் மட்டும் ஓர் வித ஏக்கம்

தந்தையை கொன்றவன் சந்தோஷமாய் திரிய தான் மட்டும் தவிப்பது ஏன் ...

ரத்தம் ரசிப்பது ரத்தமே

பால் கொடுத்தால் அதற்கு தேன் கொடுத்தால் சுகம் காணுமோ ?

சுழற்றினான் ஈசன் தந்த பரசுவை ....

ஆயிரம் கரங்கள் கொண்டவன் கார்த்தவீர்யன் உதவும் கரம் ஏதும் இன்றி வீழ்ந்தான் தரையில் ...

21 தலைமுறைகளை பூண்டோடு வெட்டினான் பரசுராமன் ....

வெட்டிய தலைகள் தன் விதி கண்டு நொந்தனவே ....

தாய் சொல்லில் தர்மம் கண்டான் தந்தை சொல்லில் மந்திரம் பெற்றான்

ஈசன் சொல்லில் பரசுவை பெற்றான் ராமன் சொல்லில் ஞானம் பெற்றான் ...

கர்ணன் சொல்லில் சாபம் தந்தான் ...

பீஷ்மர் சொல்லில் அம்பை தனை கை விட்டான்

எல்லாம் தெரிந்தவன் ஏனோ தனிமையில் மட்டும் இனிமை கண்டான் ...

தாரங்கள் பல கண்டதில்லை ஒருவரையும் இவர் அவதாரத்தில் ...👍
ravi said…
*தாயின் மடியில்*

அம்மா ....

உன் சரண் புகுந்தேன் உன் பாதம் பணிந்தேன் ...

உலகெல்லாம் உன் வடிவம் ஒன்றே கண்டேன் !!

கண்டேன் கணக்கில் அடங்கா இயற்கையின் அழகு !!

அழகு பிறந்த வரலாறை ஆராய்ச்சி செய்ய துணிந்தேன் !!

துணிந்த என் செயலில் துணையாய் நீ இருக்க

அதிக காலம் ஒன்றும் ஆகவில்லை விடை அறிய !

அறிந்த விடை , விடையேறும் நீங்கள் இருவர் அன்றோ ?

சடையில் கங்கையும் மூன்றாம் பிறையும் ஐதி போட ,

மடை திறந்து சிவானந்தம் நடை போட

கடை உன் பார்வை தாயின் மடி காட்ட

தடை ஏதும் இன்றி உன் மடிமீது சற்றே உறங்கிப்போனேன் ..

கண் திறந்து பார்க்கையிலே

ஜொலிக்கும் சூரியனாய்

ஒலிக்கும் ஓம்காரமாய்

ஒளிக்கும் தாரகையாய் நீ சிரித்திருக்க என்ன வேண்டுவேன் இனியும் எனக்கு ? 🙌🙏
ravi said…
*SAUNDARYA LAHARI SHLOKA 31*

*Importance of the Powerful Sri-tantra*

चतुः-षष्टया तन्त्रैः सकल मतिसन्धाय भुवनं
स्थितस्तत्त्त-सिद्धि प्रसव परतन्त्रैः पशुपतिः ।
पुनस्त्व-न्निर्बन्धा दखिल-पुरुषार्थैक घटना-
स्वतन्त्रं ते तन्त्रं क्षितितल मवातीतर-दिदम् ॥ 31 ।।

chatushshashtyaa tantraih sakalam atisandhaaya bhuvanam

sthitas tat tat siddhi prasava para tantraih pasupatih

punastwan nirbandhaad akhila purusha arthaika ghatanaa

swatantram tae tantram kshiti talam avaateetarad idam. 31

*TRANSLATION:* The Lord of all souls, Pasupathi, after he had created the sixty-four [thanthras] or sidhanthas, all of them capable of providing one specific desired power (sidhi) to the practitioner and deluded the world. [Use of the word “deluded” is to indicate that he did not give everything and held back the most important final tantra.] Thereafter, you persuaded Him, O mother, to create in this mortal world SRI THANTRA, the knowledge of which grants the devotee, the powers to control all the (four) purusharthas or states in life.

*TATPARYAM:* Here the use of the word Pashupathi for Lord Shiva is significant. It is to reveal that side of the Lord, which is the cause of creating all the animals, both rational and irrational. Human beings are capable of perfecting whatever they wish to command, by continuous practice and penance called “samyama”. This can procure for them various psychic powers (sidhis) included in the Tantra Sastras like mayajalam (magic), yogini jalam, etc. During the Mimamsa days, humans believed that the ultimate objective of severe penance [tapa] was to command the powers then known to humans and described in the 64 tantras. Lord Shiva is presiding deity and Lord of Hata Yoga, which teaches these tantras. Sankara Acharya, in his efforts to resurrect the true object of Hindu Religion [Adwaitha] tried to educate (in a very smart and subtle manner) the practitioners of Hata Yoga to look beyond the Tantras. Since Tantra Yoga was only limited to appeasing Shakthi and procuring through her all the psychic powers, the Acharya recommended going beyond this stage and conquer the Goddess and reach the Ultimate Truth of existence that is Shiva. He could have challenged the then prevalent Tantra methods. But he preferred to do this much more shrewdly by stating that Goddess herself persuaded her Lord Shiva to reveal the great *SRI VIDYA THANTRA,* by mastering which, the humans can move beyond the mere psychic powers. This will enable them to realize the Four (abstract and subtle) Purusharthas [Dharma, Artha, Kama and Moksha], which will result in the Human Soul reaching the ultimate Paramananda. If Sri Vidya Thantra was not known to the world, they would have had all the psychic powers but the real power of winning over their “prarabdas” and avoiding rebirths would have eluded them forever. That means, the cycle of birth and death (of the soul in the physical bodies) would continue.

🪷🪷🪷🪷🪷
ravi said…
*SAUNDARYA LAHARI SHLOKA 32*

*Sri-vidya Tantra revealed [in code]:*

शिवः शक्तिः कामः क्षिति-रथ रविः शीतकिरणः
स्मरो हंसः शक्र-स्तदनु च परा-मार-हरयः ।
अमी हृल्लेखाभि-स्तिसृभि-रवसानेषु घटिता
भजन्ते वर्णास्ते तव जननि नामावयवताम् ॥ 32 ॥

Sivas sakti kaamah kshiti ratha ravis seeta kiranah

smaro hamsas sakras tadanucha paraa maara harayah

amee hrul laekhaabhis tisrubhir avasaanaeshu ghatitaah

bhajantae varna astae tava janani naama avayavataam. 32

*TRANSLATION:*
The Goddess, Mother of all of us, the parts that combine to form Thy name(mantra) are 3 groups of syllables – first the group representing *ka, e, i and la* indicated by the words Shiva, Sakti, Kama and Ksiti [Vishnu] respectively;
the second group *ha, sa, ka, ha, and la,* denoted by Ravi, Sitakirana, Smara, Hamsa and Shakra and the third group of letters consisting of *sa, ka, la* denoted by Para, Mara and Hari. These 12 letters when joined with the seed letter Hrilekha [syllable Hrim] added at the end of each of the three groups together constitute the holy word.

*SIGNIFICANCE:* This holy Panchadasakshari Manthra [15-letter mantra] indicated here secretly – consists of three parts viz., ka-e-i-la-hrim at the end of Vagbhava koota [the consonants represents Lord Shiva, who was the originator of Vak or word as mentioned in the Rik Veda as the origin of the Universe], ha-sa-ka-ha-la-hrim at the end of Kama raja koota [the element of God of Love which assisted the creation of the Universe] and sa-ka-la-hrim at the end of Shakthi koota [which was instrumental in the creation]. These are arranged as 4+hrim, 5+hrim and 3+hrim total making 15.. This is the secret of the Sri Vidya Tantra.
ravi said…
*SAUNDARYA LAHARI SHLOKA 32*

*Sri-vidya Tantra revealed [in code]:*

शिवः शक्तिः कामः क्षिति-रथ रविः शीतकिरणः
स्मरो हंसः शक्र-स्तदनु च परा-मार-हरयः ।
अमी हृल्लेखाभि-स्तिसृभि-रवसानेषु घटिता
भजन्ते वर्णास्ते तव जननि नामावयवताम् ॥ 32 ॥

Sivas sakti kaamah kshiti ratha ravis seeta kiranah

smaro hamsas sakras tadanucha paraa maara harayah

amee hrul laekhaabhis tisrubhir avasaanaeshu ghatitaah

bhajantae varna astae tava janani naama avayavataam. 32

*TRANSLATION:*
The Goddess, Mother of all of us, the parts that combine to form Thy name(mantra) are 3 groups of syllables – first the group representing *ka, e, i and la* indicated by the words Shiva, Sakti, Kama and Ksiti [Vishnu] respectively;
the second group *ha, sa, ka, ha, and la,* denoted by Ravi, Sitakirana, Smara, Hamsa and Shakra and the third group of letters consisting of *sa, ka, la* denoted by Para, Mara and Hari. These 12 letters when joined with the seed letter Hrilekha [syllable Hrim] added at the end of each of the three groups together constitute the holy word.

*SIGNIFICANCE:* This holy Panchadasakshari Manthra [15-letter mantra] indicated here secretly – consists of three parts viz., ka-e-i-la-hrim at the end of Vagbhava koota [the consonants represents Lord Shiva, who was the originator of Vak or word as mentioned in the Rik Veda as the origin of the Universe], ha-sa-ka-ha-la-hrim at the end of Kama raja koota [the element of God of Love which assisted the creation of the Universe] and sa-ka-la-hrim at the end of Shakthi koota [which was instrumental in the creation]. These are arranged as 4+hrim, 5+hrim and 3+hrim total making 15.. This is the secret of the Sri Vidya Tantra.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
அப்பேர்ப்பட்டவள் அபய வர ப்ரதானத்தை கைக் கார்யமாக முயற்சி பண்ணிச் செய்ய வேண்டியிருக்கவில்லை! அவள் பாட்டுக்கு இருந்தாலே போதும். அவள் எப்படி இருக்கிறாள்? என்ன ஸ்வரூபம்?
”லோகாநாம் சரண்யே!”
என்கிறார். உலகமெல்லாம் அடைக்கலம் புகுகிற இடமாக, புகலிடமாக இருக்கிறாள்.
ravi said…
அதனால் – லோக ஜனங்கள் ”ச(sa)ரணம்!” என்று வந்து அவளுடைய ச(cha)ரணங்களில் தானே விழுகிறார்கள்? அவள் பாட்டுக்கு ஸ்வாபாவிகமாக இருக்கிறபடி சரணாலயமாக இருந்து கொண்டிருக்கிற போது அவளுடைய அந்தச் சரணங்களே சரண் புகுந்தவர்களுக்கு வராபயம் வழங்கிவிடுகின்றன. ஒரு கார்யமாக இல்லாமல், ஒரு புஷ்பம் வாஸனை வீசுகிற மாதிரி!
பயம் போகவேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்கும் போது கேட்டபடி அபயந்தான் தரமுடியும்; அதற்கு மேல் ஒன்று தருவதற்கில்லை. ஆனால் இது வேண்டும், அது வேண்டும் என்று ஏதாவது வரம் கேட்டால் வேண்டியதற்கும் ஜாஸ்தியாகத் தர இடமுண்டு. L.I.G. ஃப்ளாட் கேட்டால் H.I.G. தர இடமுண்டு. அந்த மாதிரி ”வாஞ்சா ஸமதிக”மாக – விரும்பியதற்கும் மேலாக – அம்பாள் பாதங்களே கொடுத்துவிடுகின்றன.
அபயத்தில் வலது கை மேல் பக்கமாக நீட்டிக் கொண்டிருக்கும். அது மேல் உலகமான வைகுண்ட-கைலாஸாதிகளைக் குறிப்பதாக அவர்கள் சொல்வார்கள். ஆகாசம் மாதிரி அகண்டமான அத்வைத ஸ்திதியைக் குறிப்பதாக நாங்கள் [அத்வைதிகள்] சொல்கிறோம்.
வரஹஸ்தத்தைப் பார்த்தால் அது கீழ்ப்பக்கமாக நீட்டிக் கொண்டிருக்கும். ” ‘அது வேணும், இது வேணும்’ ஸமாசாரமே கீழானதுதான். அதனால்தான் இப்படி. அதோடு இதைக் கொடுப்பதும் இடது கை. இடது கையால் கொடுப்பது கௌரவமில்லை” என்று சொல்வதுண்டு. ஆனால் இதுகளையே நல்லபடியாக எடுத்துக்கொள்ளவும் இடமிருக்கிறது. அம்பாளே இடது பாகமாக இருப்பவள் தானே? செயலில்லாத அபய ஸ்திதிக்கான ஹஸ்தம் செயலில்லாத சிவபாகத்தைச் சேர்ந்ததாக இருக்கிற மாதிரி, அநுக்ரஹச் செயலைச் செய்கிற வர ஹஸ்தம் சக்தியுடைய பக்கத்தில் பொருத்தமாக இருக்கிறது. கீழே நீட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கை எதைக் காட்டுகிறது என்று பார்த்தால் ஸாக்ஷாத் சரணாரவிந்தத்தைத்தான் காட்டுகிறது! ”என் பாதத்தைத் தருகிறேன். பிடிச்சுக்கோ! அதுதான் பெரிய வரம்” என்று தெரிவிக்கிறது. இப்படி [வரமுத்திரையை] உசத்தியாகவும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.
ravi said…
ஆயிரம் குயில்கள் ஒன்று சேர்ந்து பாடும் உன் குரல் கேட்டேன் ... செவிகள் தேனடை ஆகியதே !

ஆயிரம் நாமங்கள் அள்ளித் தெளித்தேன்
என் அதரத்தில்...

அவை மதுரம் ஓடும் நதியானதே !

ஆயிரம் முறை உனை நினைத்தே செயல் புரிந்தேன் ... ஜயம் ஒன்றே பதில் ஆனதே

ஆயிரம் பேர்களுக்கு அன்ன தானம் செய்தேன் உன் பெயரால் ...

ஆதவன் இறங்கி வந்து என் கரம் தழுவக் கண்டேன்

ஆயிரம் ஆயிரம் ஆண்டும் ஓடி மறைந்தாலும்

மண்ணில் ஈரம் உள்ளவரை உனை மறவா உயிர்கள் பிறந்து உய்யும் !!

கலவை மன்னா ...

நான் காட்டும் கற்பூரத்தில் உன் ஆயிரம் முகங்கள் மலர்வதன் அதிசயம் சொல்வாயோ ?
ravi said…
HEALING

She came into our hotel lobby… carrying a doll. And our hearts were never the same again.

I was the GM of Radisson Blu GRT Chennai hotel, when my Duty Manager walked in.

“Sir, there’s a young lady in the lounge. She’s feeding a baby doll with milk. Crying. Singing lullabies. She thinks it’s real.”

I walked out. There she was young, beautiful, and visibly broken. “She’s not drinking,” she sobbed. “What if she dies?”

Our guest relations officer Smitha ,gently tried to reason with her, but she grew more distraught.
“If she dies… I can’t go through it again.”

Then her mother arrived. Room 204. I still remember. “She lost her baby six months ago. It choked during a feed. She hasn’t recovered. This doll is part of her own way of healing. We’ve come from Madurai for psychiatric treatment.”

I didn’t know what to do.
And then… Rajalakshmi, our soft-spoken housekeeping attendant working in the lobby lounge stepped forward. “Sir, may I spend some time with her?” she asked.

She sat beside the girl. Quietly. Gently. “I too lost my baby. Years ago. I cried just like you.

Would you let me adopt your doll? I’ll feed her, sing to her… keep her in my temple.

And maybe, when you’re ready, God will send you a real baby.”

The woman looked at her, paused… and handed over the doll for Lakshmi to hold , with tears in her eyes .

No one treated her like this before. That day, Rajalakshmi spent hours with her—talking ,feeding her, calming her - all after duty hours.

But what I didn’t know? She called her every day after that. On her own.

Until one day, a handwritten letter arrived at our hotel. It was from the mother. “She is healing,” it said. “She’s smiling again.

And sir… she is pregnant. She says it’s a gift from God… and from Rajalakshmi.” “She calls her Akka. Elder sister. Guardian angel.”

I sat in my office that day and cried quietly. Hospitality isn’t about five stars. It’s about five seconds.

When pain meets pure humanity… and something begins to heal.

Rajalakshmi didn’t just clean our floors. She cleaned sorrow with empathy.

She reminded us what hospitality truly means. It’s not a job. It’s a calling.

And sometimes, the ones who wear simple cotton sarees and jasmine flowers… are the ones who carry the heaviest love.🙏
ravi said…
Shriram

30th August

*Lasting Contentment is Nowhere but in Rama*


Everyone devotedly engrosses himself with worldly matters, but nobody ever obtains contentment. He experiences a mixture of happiness and unhappiness. One sometimes feels disgusted with worldly matters, but we cannot shake them off. Handling coins tarnishes the hands, but that is not the fault of money. So, excessive regard for money leads to worry and misery. Too much regard for worldly esteem has a similar effect. One should follow the course of the world and behave as occasion demands, but all the while maintain calm contentedness at heart. In practical life, do as you would be done by. We must preserve our respective relationship with everyone. Be practical in your behaviour, but take care that you hurt nobody’s feelings.

Choose your associates carefully, without being carried away by mere honeyed talk. Avoid associating with smooth-tongued persons who, however, harbour evil intents at heart. To everyone give the respect he deserves; keep young ones contented, humble yourself before elders. Be noble of heart and submissive, agreeable, in behaviour. Talk not insultingly to anyone, but rather, agreeably to all. Beware of indolence, for it may well render merit ineffective.

Dependence is undoubtedly rankling, but remember everyone has it in one form or another. However, be not under obligation for sheer indolence. On the other hand, do not overrate and overtax your physical capacity. Do not worry unnecessarily about what has been or what will be; act as may be appropriate to circumstances, without being a victim of indolence.

In financial matters, accept what you earn today, and try to earn more in future. You can’t get anything for nothing, so work hard in your job. Save something from your earning, instead of spending all. If you are in debt, pay it back, in installments if necessary, and beware of contracting fresh debts. Be loyal to your employer, obedient in his service.

Be cautious in worldly transactions, and direct your effort properly. Follow the path of truth. Act with care so that nobody is put to loss on your account, even unwittingly. Remember in your heart of hearts that you belong to God. Lasting contentment is to be had in Rama, nowhere else. Therefore be in contentment with circumstances as you find them, with nama as your constant companion. Never expect that you can achieve self-interest without proper effort.

* * * * * * * * * * *
ravi said…
When Noelle was born, doctors told her young father, Ben, who had Down syndrome, that he wouldn’t be able to raise a child.

That he wouldn’t understand feeding schedules.

That he wouldn’t know how to comfort a crying baby. That he wouldn’t be enough.

But Ben didn’t listen. He held his newborn close, kissed her forehead, and whispered, “I may not know everything… but I know how to love you.” And love her he did.

Ben fed her with shaking hands, learned lullabies by humming, and rocked her every night until the sun rose.

He worked part-time folding napkins at a local diner — saving every penny for Noelle’s future.

There were stares. Whispers. Other parents asked, “Is he… the father?” Ben would just smile and nod proudly. “She’s my daughter. My best friend.”

Noelle grew. Ben aged. Years passed like pages in a quiet book.

Noelle became a woman — strong, graceful, kind. People would say, “You turned out so well.” And she’d reply, “Because I was raised by someone who only saw the world with love.”

As Ben got older, his memory began to fade. He’d forget where he put things.

Then names. Then Noelle’s. And one day, he looked into her eyes and asked, “Are you my friend?” Noelle held his hand and whispered, “I’m your girl. The one you raised. The one you gave everything to.”

Now, Noelle feeds him. Helps him walk. Hums lullabies when Ben can’t sleep.

She’s not just caring for her father. She’s repaying the man who raised her… twice.

And when they take pictures now, Noelle smiles wide. Because the world sees an old man with Down syndrome and his grown daughter.

But she sees her hero. Her teacher. Her heart.
ravi said…
கொங்குதேர் வாழ்க்கை

அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே “

இந்த செய்யுள் எல்லோருக்கும் தெரியும் ...

திருவிளையாடல் படத்திலும் சரி புராணத்திலும் சரி பாண்டிய ராஜன் தன் சந்தேகத்தை தீர்க்கக் கூடிய பாடலுக்கு 1000 பொற் காசுகள் என்று அறிவிப்பான்

ஆனால் யாருக்குமே தெரியாது அவனுக்கு வந்த சந்தேகம் எது என்று ...

மனதில் எழுந்த சந்தேகம் எதுவென்று ஆராய்ந்து பாடல் மூலம் அவனுடைய சந்தேகத்தை தீர்க்க வேண்டும் ...

வெளிப்படையாக ஒருவர் கேள்வி கேட்டாலே அவருக்கு நாம் பதில் சொல்வது கடினம்

ஆனால் மனதில் ஏற்பட்ட சந்தேகத்தை அரசரே சொல்லாமல் எப்படி பதில் தருவது ?

நக்கீரருக்கு அரசர் சந்தேகம் என்னவென்று தெரியாது

அவர் பாடலில் சொற்குற்றம் பொருள் குற்றம் மட்டுமே கண்டு பிடிப்பவர் ...

அந்த காலத்தில் எப்படிப்பட்ட ஞானிகள் இருந்திருக்கிறார்கள் பாருங்கள் .

இறைவனே பாடல் எழுதி தருமியிடம் கொடுத்து அனுப்புகிறார் ...

அரசனின் சந்தேகம் தீர்ந்து போனது ....

இன்னொரு கேள்வி ...

ஏன் ஈசன் நக்கீரனை எரிக்க வேண்டும் ...
இவ்வளவு பெரிய தண்டனை ஏன் ?

நக்கீரர் தான் தினம் வணங்கும் உமையின் கூந்தலிலிலும் இயற்கை மணம் இல்லை என்றார் ...

இது பொய்யின் உச்சம்
கர்வத்தின் எல்லை ...

தன் மனைவியின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா இல்லையா என்று எனக்கு மட்டுமே அறிந்த ஒன்று ... இன்னொருவன் எப்படி அதை கொச்சைப் படுத்தும் படி பேச முடியும் ....

இதுவே கோபமானது ...
மூன்றாவது கண்ணை திறக்க வைத்தது ...

நக்கீரர் தேவ லோக பெண்கள் என்று சொல்லி நிறுத்தி இருந்தால் அவர்
எரிந்திருக்க மாட்டார்

எந்த ஒரு நல்ல கணவனும் தன் மனைவியை வேறு ஒருவர் குறைத்து பேசுவதை பொறுக்க மாட்டான்

அதே மாதிரி மனைவியும் பொறுக்க மாட்டாள்

சிவதம்பதிகள் இதற்கு ஓர் சிறந்த உதாரணம் ...

தக்ஷன் சிவனை குறைத்து பேசியதை பொறுக்காமல் தாக்ஷாயணீ தன்னையே எரித்துக்கொண்டாள் ...🙏
ravi said…
*சேஷசேஷீ ... இதுவல்லவோ சிறந்த தாம்பத்யம்...*

ஆதி சங்கரர் வியந்து சொல்கிறார் ...

ஏ பகவதி .. நீ வாம பாகத்தை பரமேஸ்வரனிடம் இருந்து வாங்கி கொண்டாய் என்று எல்லோரும் சொல்கிறார்கள் ...

எனக்கு அதில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை ...

ஈசன் மனமாகவும் உடம்பாகவும் இருக்கும் நீ வேறு ஒரு நபராக இருந்தால் தானே அவர் தர நீ பெற முடியும் ?

நீங்கள் இருவரும் ஒருவரே என்கிற பொழுது யார் யாருக்கு தனியாக எதையும் தர முடியும் ?

இங்கே சிவ சக்தி ஒற்றுமை ஒருவர் இன்றி இன்னொருவர் இல்லை என்ற உண்மை வெளிப்படுகிறது ...

இதே சௌந்தர்ய லஹரியில் ஸ்லோகம் 23 இல்

வாம பாகம் வவ்வியது போதாமல் மீதி பாகத்தையும் நீயே எடுத்துக்
கொண்டாயோ -என்று கேட்கிறார்

அம்பிகையில் சிவன் அடக்கம் என்று சொல்கிறார் ...

ஸ்லோகம் 6 இல் ஆஹோ புருஷிகா என்று முடிக்கிறார் ...

பரமேஸ்வரனின் அழகிய எண்ணங்களுக்கு ஓர் பெண் உருவம் வடித்தால் அது தானமா உன் வடிவம் என்கிறார் ...

இங்கே இருவரும் ஓர் உடல் ஓர் ஆத்மா என்கிறார் ...

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

ஸ்ரீசிவா சிவசக்த்யைக்ய ரூபிணீ லலிதாம்பிகா |என்கிறது ...

இப்படிப்பட்ட வடிவமைப்பை சேஷசேஷீ தத்துவம் என்பார்கள்

உடைமை, உடையவர் என்ற இந்த உறவு ஸமரஸப்பட்ட ஆனந்தபைரவர், ஆனந்தபைரவி இருவருக்கும் ஸமமாக நிலை எப்பொழுதும் உண்டு

ஶரீரம் த்வம் ஶம்போ⁴: ஶஶிமிஹிரவக்ஷோருஹயுக³ம்

தவாத்மானம் மன்யே ப⁴க³வதி நவாத்மானமனக⁴ம் ।

அதஶ்ஶேஷஶ்ஶேஷீத்யயமுப⁴யஸாதா⁴ரணதயா

ஸ்தி²த: ஸம்ப³ந்தோ⁴ வாம்
ஸமரஸபரானந்த³பரயோ: ॥ 34 ॥
ravi said…
சுகத்தை தருபவன் நீ துன்பங்கள் அகற்றுபவன் நீ

தாய் தந்தையே உலகம் என்றாய் ... சொர்க்கம் தாயின் பாதங்களில் என்றாய் ...

ஓர் பழம் வேண்டி நின்றாய் ... அதிலே ஓராயிரம் கீதை சொன்னாய் ...

பிரம்மம் நீ ... வேதம் நீ வேண்டியதை தருபவன் நீ

வேழம் நீ பவழம் நீ விளையாட்டாய் எதையும் புரிபவன் நீ

புனிதன் நீ பூத்துக்குலுங்கும் மலர் நீ ...

ஞானம் நீ கானம் நீ கண்ணில் தெரியும் தெய்வம் நீ ...

நதியும் நீ கடலும் நீ நல்லோர்க்கும் புல்லோர்க்கும் நடுநிலை நீ ...

தேன் அருந்த வந்தேன் வண்டாய் நானே ...

மலைத்தேனாய் உனைக்கண்டேன் மலைத்தேன் களித்தேன்

காலம் வீண் செய்தேன்

களிரே உனை இனி கட்டிப்போட்டேன் என் மனமதில் ...

நீ எங்கெழுந்து அருள்வது இனியே ?
ravi said…
*சௌபாக்கியம்*

ஒருவன் எப்போதும் சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருந்தான்.

ஒருநாள் ஒருவர் கேட்டார்:
"எதற்காக இவ்வளவு சுள்ளி பொறுக்கிறாய்?"

அவன் பதில்: "குளிர் காய்வதற்காக!"

அதற்குப் பதில்: "ஆனால் நீ குளிர் காய்வதை ஒருபோதும் பார்க்கலையே?"

அவன் சிரித்துக்கொண்டு, "சுள்ளி பொறுக்கவே நேரம் போகுது… குளிர் காய எங்கே நேரம் கிடைக்கும்?" என்றான்.

👉 நம்ம வாழ்க்கையும் அப்படித்தான்.

பணம் சம்பாதிப்பது வாழ்வை சுகமாக வாழத்தான்,

ஆனால் சிலர் சம்பாதிப்பதில் மட்டும் மாட்டிக்கொண்டு,
வாழ்வின் ஆனந்தத்தை அனுபவிக்கவே நேரம் கிடைக்காமல் போகிறது.

✨ உண்மையான பணக்காரன் யார் தெரியுமா?
கவலை இல்லாமல் தூங்கும் ஒருவர் தான்!

💡 அளவோடு உழைத்து, வாழ்க்கையை ஆனந்தமாக வாழ கற்றுக்
கொள்ளுங்கள்
👍
ravi said…
கன்னங்கள் பத்மராகம் என்றால் உதடுகள் பவழமோ ?

கார் மேகம் மேனி என்றால் காரூண்யம் பெய்யும் கனகமோ ?

பெரும் வயிறும் வேழ முகமும் வேண்டியதை அள்ளி த் தரும் கற்பக விருக்ஷமோ ?

ஊழ் வினைகள் அசுரர்கள் என்றால்

ஊர்ந்து வரும் உன் மூஞ்சூறு பிரம்மாஸ்திரமோ ?

உன் மேல் நான் வைக்கும் நம்பிக்கை உன் தும்பிக்கையிலும் வலியது அன்றோ

உன் அருள் கண்டு மலைத்தேன்

மலைத் தேன் என ஆனந்த கண்ணீர் பெருகி எங்கும் ஓடியதே !!🙏

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை