ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்- 1 ஸ்ரீ மாதா (2) பதிவு 5
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
ஸ்ரீ மாதா (2)
பதிவு 5
ஸ்ரீமாதா, ஸ்ரீமஹாராக்ஞீ, ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ - இந்த முதல் மூன்று நாமங்களும் சிருஷ்டியை, ஸ்திதியை, சம்ஹாரத்தைத் காட்டக்கூடியவை.
ஸ்ரீமாதா என்று சொல்வது அம்மாவாக, தாயாக அந்த அம்பிகையைப் பார்த்து சொல்வது.
தாயாக இருப்பவள்தான் படைப்பவள். படைப்புத் தொழிலுக்கு அதிபதியாக இருப்பவள் ஸ்ரீமாதா என்பதால் ஆரம்பிக்கும்போதே அம்மா என்றுதான் ஆரம்பிக்கிறது.
லலிதா சஹஸ்ரநாமம்தானே, 'லலிதாம்பிகே' என்று ஆரம்பித்திருக்கலாம் அல்லவா?
ஆனால் அவ்வாறு ஆரம்பிக்கவில்லை;
'தாயாக இருப்பவளே; எங்களைப் படைப்பவளே!' என்னும் பொருளில் ஸ்ரீமாதா என்றுதான் ஆரம்பிக்கிறது.
அந்தத் தாய்க்கு, படைப்பதிலே அவ்வளவு சந்தோஷம். படைப்பதற்காகவே அவள் வடிவம் எடுத்து வருகிறாள்.
முற்றும் துறந்த ஆதிசங்கரர் தன் தாயை பிரிய மனமில்லாமல் தவிக்கிறார் ..
இருக்கும் போது உன்னை கவனித்துக்கொள்ள முடியவில்லை
ஆனால் உன்னை முழுவதும் எரிக்கும் என் கரங்கள் மட்டும் எரியாமல் நன்றாக இருக்கிறதே . என்ன விந்தை அம்மா இது ??
சரி பட்டினத்தார் என்ன சொல்கிறார் ??
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி ?
2.முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் – தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன் ?
3.வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும், தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன் ?
வாழை மட்டை பற்றி எரிகிறது . தொப்புள் கொடியின் தொடர்பை அறுத்து ..😰😰
பட்டினத்தார் தொடர்கிறார் .😰😰
4. நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன் ?🔥🔥🔥
5. அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு ?🔥🔥🔥
6. அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்
மகனே” என அழைத்த வாய்க்கு ?🔥🔥🔥
பட்டினத்தார் தொடர்கிறார் 😰😰
6. அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்
மகனே” என அழைத்த வாய்க்கு ?
7. முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!
8. வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ! – மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.🔥🔥🔥
*பட்டினத்தார் தொடர்கிறார் ....* 😰😰
9. வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ! என்னை மறந்தாளோ – சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய் ?
10.வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்!
நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; – பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்!
துறவியே ஆகிப் போனாலும் ஒவ்வொரு ஆண்மகனும் தம் தாய், தந்தையருக்கு செய்யும் கடமைகளை மறவாது நிறைவேற்றி முன்னோர்கள், ஞானிகள், சித்தர்கள் ஆகியோரின் ஆசிகளை பெற்றுய்வோம்.👣👣👣
தாயின் அருமையை இன்னும் எழுதிக்கொண்டே போகலாம் .
எதற்கும் மூலமாக இருப்பவள் தான் தாய் .
அம்பாளுக்கு மூலா தாரா என்று ஒரு திருநாமம் உண்டு .
குண்டலியில் மூலாதாரமாய் சுருண்டு பாம்பு போல் படுத்து இருக்கிறாள் .
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல சொல்ல அவள் எழுந்து மேலே நம்மை ஆயிரம் கமலங்கள் உள்ள பரமேஸ்வரன் களி நடம் புரியும் இடத்தில் அமுதம் சொரியும் அந்த சுகத்தில் நம்மை அவனுடன் ஐக்கியமாக்குகிறாள் .🌷🌷🌷
தமிழில் பல ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து வரும் பழமொழிகள் சரியான புரிதல் இல்லாமையால் பல பேர்களின் வாழ்க்கையை பந்தாடிக் கொண்டிருக்கிறது இன்னும் .
உதாரணம் மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வாழ்க்கை நிர்மூலம் என்று ..
இது பெரும் தவறு ... ஏன் என்று பார்ப்போம் .🙌🙌🙌
மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வாழ்க்கை நிர்மூலம் எனும் பழமொழியை இந்த தலைமுறையாவது நிர்மூலம் ஆக்க வேண்டும் ..
அம்பாளின் திருநாமம் மூலம் ஆண்டாள் பிறந்தது மூலம் ...
பெண்ணாகா பிறந்தவர்கள் மாதவம் செய்திருந்தால் மட்டுமே மூல நட்சத்திரம் கிடைக்கும் .
இதை எல்லோருக்கும் உணர்த்துவோம் ... திருமணம் இதனால் ஆகாத பெண்களுக்கு இனிமேலாவது வெகு சிறப்பாக திருமணம் நடக்கட்டும் ... அம்பாள் இவர்களை என்றும் கை விட மாட்டாள் .
ஸ்ரீ மாதாவாக அவள் இருக்கும் போது வேறு என்ன மனக்கவலை .
இழுவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் இனி என் குறை என்றே பாடினார் பட்டர் ..ஒரு குறையும் நம்மை அண்டாது .. இது சத்தியம் 🌷🌷🌷👍👍👍🙏🙏🙏
மூலநட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வாழ்க்கை அம்பாளின் அருளால் நிர்மூலம் ஆகாது என்று பார்த்தோம் .
இன்னும் பல தவறான புரிதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னும் சில பழ மொழிகளை பார்ப்போம்
மகள் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்
இது மாமியார்கள் இன்றும் தங்கள் வீடு தேடி வரும் மகாலட்சுமிகளை நடுத்தும் முறை .
தவறு . உண்மையான அர்த்தம் .. 🤛🏾
நம் வீட்டுக்கு வருபவள் மகாலட்சுமி
சுபிக்ஷம் தர வருபவள் அக்ஷ்ய பாத்திரமாய் ..
அவள் தொடுவதெல்லாம் பொன்னாக மாறும் வலிமை கொண்டவை ..
அவள் மண் குடத்தை தொட்டாலும் அது பொன்னாகும் ...
அதுவே உடைந்து போனால் பொன் குடம் உடைந்து போனது என்று தானே கூறுவார்கள் .
வரும் பொண்ணை பொன்னாக பாவிக்காதவர்கள் .
மண் குடத்தில் மிஞ்சும் சாம்பல்கள் என்று சொல்லவரும் பழமொழி இது 👍👍👍
இன்னமொறு தவறாக உபயோகப்படுத்தும் பழமொழி
ஒரு பெண் ஒன்றை ஒன்பதாக்குபவள்
அதாவது ஒரு சின்ன விஷயத்தை பெரிது படுத்துபவள் என்று புரிதல் ..மிகவும் தவறு இது
ஒரு விந்துவை குழவியாக்கி அதற்கு உயிர் உடல் கொடுத்து கை கால்கள் பார்வை கேட்க்கும் திறன் , நடக்கும் சக்தி என ஒன்றை அணுவிலும் சிறிய விந்துவை ஒன்பதாக்கி இந்த உலகத்திற்கு தருகிறாள் .
பட்டர் இதை மனதில் வைத்தே ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே என்று பாடுகிறார் .. ஒரு பெண் தாயாகும் போது எங்கிருந்து தான் கருணை சமுத்திரம் அவளுக்குள் எழுகிறதோ .. அதனாலேயே அவள் ஸ்ரீ மாதா எனப்போற்ற படுகிறாள்.
தாயின் பெருமைகள் நாம் எடுத்துச் சொல்வது என்பது ஒரு பெரிய சமுத்திரத்தில் ஒரு சில திவலைகள் மட்டுமே நாம் சொம்பில் எடுத்துக்கொண்டததை போல ..
எப்படி அம்பாள் அழகை நம்மால் பூரணமாக விவரிக்க முடியாதோ அதே போல் தாயாய் கருணைக்கடலாய் இருக்கும் அவள் பெருமைகளையும் எவ்வளவு யுகங்கள் ஆனாலும் பிறவிகள் எடுத்தாலும் விவரிக்கவே முடியாது .🌷🌷🌷🌷🌷
👌👌👌👌👌💐💐💐💐💐👍👍👍
Comments
நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்றாய
கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.
ஏ அபிராமியே! நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், விஷ்ணு சக்தியும் நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள். சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள்! நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல்.
அரணம் பொருள் என்று அருள் ஒன்றிலாத அசுரர்தங்கள்
முரண்அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகிதன் அடியார்
மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.
திரிபுரத்தை நிலையென்று நினைத்த, தன்மையற்ற அசுரர்களை அழித்த சிவபெருமானும், திருமாலும் வணங்கக்கூடிய அபிராமியே! அன்னையே! உன்னையே சரணம் சரணம் என்று அண்டிய அடியார்களின் மரண பயத்தை ஒழிப்பாய்! அது மட்டுமல்ல; அவர்களைப் பொய்மையான இந்த உலக வாழ்வினின்றும் விடுவிப்பாய் (பிறப்பறுப்பாய்), பெருநிலை தருவாய்!
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்புமுன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
ஏ, அபிராமி! உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள். அத்திருவடிகளைக் கண்டுகொள்ள அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே! கேள்: வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் – இவையே நின் திருவடிச் சின்னம்!
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கிது போலும் தவமில்லையே.
ஏ, அபிராமி! மென்மையான இடையில், செம்மையான பட்டணிந்தவளே! அழகிய பெரிய முலைகளில் முத்தாரம் அணிந்தவளே! வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக் கன்னங்கரிய குழலில் சூடியவளே! ஆகிய மூன்று திருக்கண்களை உடையவளே! உன்னுடைய இந்த அழகையெல்லாம் கருத்திலே கொண்டு தியானித்திருக்கும் அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை.
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
ஏ, வறிஞர்களே! நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச் சென்று, அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமா? என் பின்னே வாருங்கள். முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள்.
தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்டவள் அவளே!
மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற
அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு
முன்னாய் நடுவெங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே.
அபிராமி! நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்! தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி! அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்! உன்னை மானிடர் நினையாது விட்டாலும், நினைத்திருந்தாலும், அதனால் உனக்கு ஆகக்கூடிய பொருள் ஒன்றும் இல்லையே!
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என்ஐயனுமே.
அபிராமி அன்னையே! நீ ஒன்றாக நின்று, பலவாகப் பிரிந்து, இவ்வுலகில் எங்கும் பரந்திருக்கின்றாய் (பராசக்தியினின்று, பிரிந்த பல சக்திகள்). அவைகளிடத்திலிருந்து நீங்கியும், இருக்கக் கூடியவள் நீ! ஆனால், எளியோனாகிய என் மனத்தில் மட்டும் இடையுறாது நீடு நின்று ஆட்சி செய்கின்றாய். இந்த இரகசியத்தின் உட்பொருளை அறியக் கூடியவர்கள், ஆலிலையில் துயிலும் திருமாலும், என் தந்தை சிவபெருமான் ஆகிய இருவருமே ஆவர்.
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்றுபொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே.
ஏ, அபிராமி! என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறமும் செய்து உலகத்தைக் காத்தவளே! நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து போற்ற அருளினாய்! அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும், இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய்! இதுவோ உனது மெய்யருள்?
(விரைந்து அருள் புரிவாயாக!). * ‘ஐயன் அளந்த படியிருநாழி‘ என்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது. அதனைப் பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து, உலகைப் புரந்தனள் என்பது வழக்கு.
அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,
சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.
அபிராமி! வைகறையில் மலர்ந்த தாமரையினிடத்தும் என்னுடைய மனத்தாமரையிலும் வீற்றிருப்பவளே! குவிந்த தாமரை மொக்குப் போன்ற திருமுலையுடைய தையலே! நல்லவளே! தகுதி வாய்ந்த கருணை சேர்ந்த நின் கண் தாமரையும், முகத்தாமரையும், பாதத் தாமரையுமேயல்லாமல், வேறொரு புகலிடத்தை நான் தஞ்சமாக அடைய மாட்டேன்.
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை; நீள் சிலையும்
அஞ்சம்பும் இக்குஅலராக நின்றாய்; அறியார் எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.
அபிராமித் தாயே! நீண்ட கரும்பு வில்லையும், ஐவகை மலர் அம்புகளையும் கொண்டவளே! உன்னைத் தவிர வேறொரு புகலிடம் இல்லையென்று தெரிந்தும், உன்னுடைய தவநெறிகளைப் பயிலாமலும், நெஞ்சத்தில் நினையாமலும் இருக்கின்றேன். அதற்காக நீ என்னைத் தண்டிக்கக் கூடாது. புறக்கணிக்காமல் எனக்கு அருள் பாலிக்க வேண்டும். உலகத்திலுள்ள பேதைகளாகிய பஞ்சும் நாணக்கூடிய மெல்லிய அடிகளை உடைய பெண்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள் அல்லவா? அதே போன்றே நீயும் எனக்கு அருள வேண்டும்.
பாலினும் சொல்இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம் ஒரு
நாலினும் சாலநன்றோ அடியேன் முடை நாய்த்தலையே?
ஏ, அபிராமி! பாலைவிட இனிமையான சொல்லை உடையவளே! நீ உன்னுடைய திருவடித் தாமரையை, திருமாலைக் காட்டிலும் உயர்ந்த தேவர்கள் வணங்கும் சிவபிரானின் கொன்றையனிந்த நீண்ட சடைமுடியில் பதித்தாய். அடுத்துன் அருட்கண்கள் பட்டு உயர்ந்து நிற்கும் நால்வகை வேதத்திலே உன்னுடைய திருவடித் தாமரைகளைப் பதித்தாய். ஆனால் இன்று நாற்றமுடைய நாயாகிய என்னுடைய தலையையும், உன்னுடைய திருவடிகளில் சேர்த்துக் கொண்டாய். (மேற்கூறிய சிவபெருமான், நான்கு வேதங்களோடு என்னையும் ஒப்பிட, நான் அவ்வளவு சிறந்தவனா?)
நாயேனையும் இங்கொரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?
தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.
தாயே! மலையரசர் மகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து, நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல், உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!
தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கண் கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்
செங்கைக் கரும்பும், மலரும் எப்போதும் என் சிந்தையதே.
ஏ, அபிராமி! உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு, முப்புரத்தை எரித்த, சிவந்த கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிறந்த காவலனாவான். அன்னவனின் திருமேனியையும், உன்னுடைய குரும்பையொத்த கொங்கையால் சோர்வடையச் செய்தவளே! பொன் போன்ற சிவந்த கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய்.
தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில்கொட்டும் தறி குறிக்கும்; சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.
ஆறு சமயங்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள், அபிராமி அன்னையாகும். அவளே பேதையர்களுக்கு நற்கதியடைவதற்குச் சில உண்மையான வழிகளைக் காட்டுபவள். அப்படியிருந்தும் சில வீணர்கள் பிற சமயம் உண்டென்று அலைந்து திரிகிறார்கள். இவர்களின் செயல் பெரிய மலையைத் தடி கொண்டு தகர்ப்பேன் என்பது போல் உள்ளது.
வீணே பலிகவர் தெய்வங்கள் பால்சென்று மிக்க அன்பு
பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.
ஏ, அபிராமி! உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும் காண மாட்டேன்.
ஆண்மகப்பேறு அடைய
ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கிருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ? வல்லி நீசெய்த வல்லபமே!
ஏ, ஆனந்தவல்லி அபிராமி! உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ!
66
கவிஞராக
வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.
ஏ, அபிராமியே! பசுமையான பொன்மலையை வில்லாக உடைய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! நான் அறிவே இன்னதென்று அறியாதவன். மிகவும் சிறியவன். நின் மலர்ப்பாதத் துணையன்றி வேறொரு பற்றுமில்லாதவன். ஆகையால் பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும்.
பகைவர்கள் அழிய
தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை, குலம்
கோத்திரம், கல்வி, குணம்குன்றி நாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்குழலா நிற்பர் பாரெங்குமே.
அன்னையே! அபிராமி! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், மின்போலும் ஒளியுடைய நின் தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா? அவர்கள் கொடைக்குணம், சிறந்த குலம், கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று, ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர்.
பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,
ஊரும் முருகு சுவையொளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே.
ஏ, அபிராமி! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சுந்தரியே! உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்).
தனம்தரும்; கல்விதரும்; ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும்; தெய்வ வடிவுந் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.
கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம் பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
ஏ, அபிராமி! உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அபிராமி அன்னையே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் – இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு கொண்டேன்.
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கென் குறையே!
அபிராமித் தேவி எவருக்கும் இணையில்லாத திருமேனியழகுடையவள். வேதப் பொருளிலே திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி, இனிமையான கொம்பான தேவி இருக்க, நெஞ்சே! ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே! உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை?
என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்
நின்குறையே அன்றி யார்குறை காண்; இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?
தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.
ஏ, அபிராமி! என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன். இக்குறையுடைய பிறவியை நான் மறுபடியும் எடுத்தால் என் குறையே அல்ல. உன்னுடைய குறையேயாகும். அகன்ற வானத்தில் தோன்றும் அம்மின்னலையும் பழிக்குமாறுள்ள நுண்ணிய இடையையுடையவளே! எம்முடைய தந்தை சிவபெருமான், தன் குறை தீர, தனது திருமுடி மேல் சாத்திய அழகிய பாதத் தாமரைகளையுடையவளே!
தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த
சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே.
ஏ, அபிராமி! உன்னுடைய மாலை, கடம்ப மாலை, படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); வில்லோ கரும்பு; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உண்டும். நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்
பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும் பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
முக்கண்களையுடைய சிவன், திருமால், பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியாகும். அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள். அரம்பை முதலான தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிட்டினும், அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள்
தங்குவர் கற்பகத் தருவின் நீழலில்; தாயரின்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்
பொங்குவர் அழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் பெற்றெடுத்த ஏ அபிராமி! மணம் வீசும் பூவையணிந்த குழலுடையவளே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே தியானிப்பவர் சகலத்தையும் தருகின்ற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர். அத்தகைய பல பிறவிகளில் பெற்றெடுக்கும் மானிடத் தாயாரும் இல்லாமல் போவர் (என்றும் நிலையாகிய தாய் நீயே).
நாமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம் பொருள்.
*2. “தர்சநம் பேத ஏவச”*
சித்தாந்தம் ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது.
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.
3. “ *உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்”*
மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம்.
சரணாகதியே
மோட்சத்திற்கு வழி.
சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.
4. ” *அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”*
அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை.
இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.
5. *“தேஹாவஸாகே முக்திஸ் யாத்* ”
சரீர முடிவில் மோட்சமுண்டு –
பிறவியின் முடிவில் மோட்சமுண்டு,
மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.
6.*பூர்ணாசார்ய* *ஸ்மாச்ரய*
பெரிய நம்பிகளையே நாட வேண்டியது.
அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.
இந்த “ஆறு வார்த்தைகளை” தாமே ஆசிரியர் போல இருந்து விளக்கினார் திருக்கச்சி நம்பிகள்.
நம்பிகள் மூலம் காஞ்சி தேவப்பெருமாளிடம் பெற்ற இந்த ஆறு வார்த்தைகள் தான் ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கைப் போக்கை தீர்மானித்தது. 💐💐💐
குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே.
ஏ, அபிராமி! பஞ்ச பாணங்களையுடையவளே! உன்னுடைய திருக்கோலத்தையே மனத்தில் நினைத்து தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளைக் கொண்டு, மருட்டுகின்ற யமன்வரும் வழியைக் கண்டு கொண்டேன். கண்டதும் அல்லாமல், அவன் வருவதற்கு முன், அவன் வழியை அடைத்தும் விட்டேன் (எல்லாம் நின் திருவருளே). வண்டு மொய்க்கும் தேனொடு கூடிய கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் இடப்பாகத்தை வெற்றி கொண்டு, தானொரு பாதியாக அமர்ந்தவளே!
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வாராகியென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.
ஏ, அபிராமி! உன்னை, பைரவர் வணங்கக்கூடிய பைரவி; பஞ்சமி; பாசத்தையும், அங்குசத்தையும் உடைய பாசாங்குசை; ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி; வஞ்சகரின் உயிரை மாய்த்து, அவர்கள் இரத்தத்தைக் குடிக்கின்ற மேலான சண்டி; மகா காளி; ஒளிவீசும் கலை பொருந்திய வயிரவி, சூரிய, சந்திர மண்டலத்திலுள்ளோர்க்கு மண்டலி; சூலத்தையுடைய சூலி; உலகளந்த வராகி என்றெல்லாம் அடியார் பல்வேறு நாமங்களைச் சொல்லி வணங்குவர். குற்றமற்ற வேதங்களிலும், நின் திரு நாமங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன. அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வாழ்த்தி வணங்கி வழிபடுகின்றனர்.
செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி! அணிதரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே.
என் தாயே! அபிராமி! உன்னையே என் இரு கண்களில் எழுதி வைத்தேன். அந்த உருவம் எப்படிப் பட்டதெனின், மாணிக்கப் பூண் அணிந்த பொற்கலசம் போன்ற திருமுலை; அம்முலைமேல் பூசிய மணம் வீசும் சிறந்த சந்தனக் கலவை; அங்கே புரளும் அணிகலன்கள்; சிறந்த முத்துக் கொப்பு; வைரத்தோடு; செழுமையான கருணைமிகும் கடைக்கண்கள்; குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப் போன்ற திருமுகம் இவைகளெல்லாம் கொண்ட வடிவையே என் மனத்தில் இருத்தினேன்.
விழிக்கே அருளுண்டு; அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே.
அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு? (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்).
கூட்டியவா! என்னைத் தன் னடியாரில் கொடியவினை
ஒட்டியவா! எண்கண் ஒடியவா! தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!
ஆட்டியவா நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே.
ஏ, அபிராமித்தாயே! பொற்றாமரையில் வாழும் பேரழகானவளே! என்னை உன் அடியார்கள் கூட்டத்தில் சேர்த்தவளே! நான் செய்த கொடிய வினைகளையெல்லாம் ஒழித்தவளே! ஒன்றையும் அறியாத எனக்கு, உன்னுடைய உண்மை உருவைக் காட்டியவளே! உன்னைக் கண்ட என் கண்ணும், மனமும் களிநடம் புரிகின்றது. இவ்வாறெல்லாம் என்னை நாடகமாடச் செய்தவளே! உன்னுடைய கருணையத்தான் என்னவென்பேன்.
அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனதுஉனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.
ஏ, அபிராமி! என்னிடத்தில் நீ வைத்த பெருங்கருணையினால் நான் கள்ள நெஞ்சம் உடையவரிடம் நெருங்க மாட்டேன். உலகத்தில் மற்ற சக்திகளெல்லாம் உன்னுடைய பரிவாரத் தேவதைகளேயாகும். ஆதலினால் நான் அவர்களை வணங்க மாட்டேன்; ஒருவரையும் போற்றவும் மாட்டேன்; நான் அறிவில்லாதவனாயினும், என்னுடையதெல்லாம் உன்னுடையது என்று உன்னை வணங்கும் சில ஞானிகளோடு மட்டுமே பிணங்காது சேர்ந்து உறவாடுவேன்!
அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுதொறும்
களியாகி, அந்தக் கரணங்கள் விம்மிக், கரைபுரண்டு,
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே.
ஏ, அபிராமி! வண்டுகள் ஆர்க்கும் தாமரையில் வாழ்பவளே! பேரழகானவளே! உலகமெல்லாம் ஒளியாக நின்ற, ஒளிவீசும் உன்னுடைய திருமேனியை நான் நினைக்கும்தோறும் களிப்படைகின்றேன்.
அக்களிப்பின் மிகுதியால் அந்தக் காரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, பரவெளியாகவுள்ள ஆகாயத்தில் ஒன்றி விடுகின்றன. இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை நான் எவ்வாறு மறப்பேன்? (மறவேன் ஒருபோதும்).
விரவும் புதுமலர் இட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்
உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.
அன்னையே, அபிராமி! உன்னுடைய மணம்மிக்க திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புதுமலர்களை வைத்து இரவு, பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள், தேவர்கள் முதலிய யாவரும் இந்திர பதவி, ஐராவதம் என்ற யானை, ஆகாய கங்கை, வலிமையான வஜ்ஜிர ஆயுதம், கற்பகச் சோலை முதலியவைகளை முறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். (எனக்கும் அருள்வாயாக!)
உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத், தயங்கும் நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.
ஏ, அடியார்களே! என் அபிராமி, இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள். ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள். வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள். ஒளி விளங்கும் நுண்மையான நூலிடையாள். சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள். என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள். என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள். அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள். நீங்களும் பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள்.
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறைவண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்,
வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே.
ஏ, அபிராமி! நான் எத்திசையை நோக்கினும் உன்னுடைய படைகளாகிய பாசமும், அங்குசமும், வண்டுகள் மறைந்திருக்கும் மலர் அம்பு ஐந்தும், கரும்பு வில்லும், என்னுடைய துன்பங்களெல்லாம் தீர்க்கக் கூடிய திரிபுரையாகிய நின் திருமேனி அழகும், சிற்றிடையும், கச்சையணிந்த குங்குமம் தோய்ந்த மார்பகங்களும், அவற்றின் மேலே அசையும் முத்துமாலையும் என்கண்முன் காட்சியாய் நிற்கின்றன. (எங்கும் பரந்தவள்).
மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்;
பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே.
ஏ, அபிராமி! பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! இயமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும், வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.
மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும் படியொரு பாகம் கொண்டாளும் பராபரையே.
ஏ, அபிராமி! நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே! எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே! (ஈதென்ன வியப்போ!)
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன்பத்தருக்குள்
தரமன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர்தம்
புரம்அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே!
ஏ, அபிராமி! பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே! யாருமே துணையில்லாத நான், நீயே கதியென்று சரணடைந்தேன். ஆகையால் எளியோனாகிய என்னிடத்தில் உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று நீ தள்ளி விடுதல் தகாது. அது உன் அருளுக்கும் அறமன்று.
சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து உடம்போடு உயிர்உற வற்றறிவு
மறக்கும் பொழுதென் முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.
அபிராமித் தாயே! சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே! என்னுடைய உயிருக்கும், உடலுக்கும் தொடர்பற்று, அறிவு மறதி மிகுந்து இருக்கும் வேளையில் உன்னுடைய சேவடி என்னுடைய சென்னியில் படர வேண்டும். மேலும், பற்றின்மையை அனுக்கிரகிக்கும் உன்னுடைய துணைவரும் வந்து மோன நிலையில் நான் அறிதுயிலில் அமரும் பேற்றை அருள வேண்டும்.
வருந்தா வகைஎன்மனத் தாமரையினில் வந்துபுதுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு
விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.
ஏ, அபிராமி! உலகில் எனக்கு இனிக் கிடைக்காத பொருளென்று ஏதுமில்லை. என்னுடைய உள்ளத் தாமரையை உன்னுடைய பழைய உறைவிடமாகக் கருதி வந்தமர்ந்தாய். மேலும் நான் பிறந்தும், இறந்தும் வருந்தாமல் இருக்க அருள் புரிந்தாய். பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை திருமால் தேவர்களுக்குக் கொடுக்க முதலாக இருந்த அபிராமியே, எனக்கு இனியேது குறை?
மெல்லிய நுண்ணிடை மின் அனையாளை, விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழுமடி யாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே.
அபிராமித் தேவி! நீ மின்னல் போலும் மெல்லிய இடையினை உடையவள்; விரிந்த சடைமுடி நாதர் சிவபிரானோடு இணைந்து நிற்கும் மென்மையான முலைகளையுடையவள்; பொன்னைப் போன்றவள். இவ்வாறாகிய உன்னை வேதப்படி தொழுகின்ற அடியார்க்கும் அடியவர்கள், பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கிவர, வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மேலே ஊர்ந்து செல்லும் இந்திரப் பதவி முதலான செல்வ போகங்களைப் பெறுவர்.
பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம்பற்றி, உன்றன்
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்; இனியான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்;
முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே.
ஏ, அபிராமி! முதல் என்று கூறப்படும் மும்மூர்த்திகளும் மற்றுமுள்ள தேவர்களும் போற்றித் தொழுகின்ற புன்னகையையுடையவளே! உன்னுடைய ஞானத்திற்காகவே உருகிநின்ற என்னை உன் பாதத்திலேயே பற்றும்படி செய்து, உன் வழிப்படியே யான் நடக்கும்படி அடிமையாகக் கொண்டவளே! இனி நான் வேறொரு மதத்திலே மன மயக்கம் கொள்ள மாட்டேன். அவர்கள் செல்லும் வழியிலேயும் செல்ல மாட்டேன்.
நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம்பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை; மானே முதுகண்; முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது; நாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.
உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை, மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள். முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள். இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.
விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பித், ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து,
சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம்
தரும்பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம்நன்றே.
அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி, மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்.
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே!
ஏ, அபிராமி! அழியாத குணக்குன்றே! அருட்கடலே! மலையரசன் பெற்றெடுத்த அழகிய கோமள வல்லியே! எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை. அனைத்தையும் அன்றே உன்னுடையதாக்கி விட்டேன். இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும், அவற்றை உணராது விருப்பு, வெறுப்பற்றவனாவேன். இனி என்னை உனக்கே பரம் என்று ஆக்கினேன்.
கோமள வல்லியை அல்லியந் தாமரைக்கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே.
என் அபிராமி அன்னையை, இளமையும் அழகும் மிக்க கோமள வல்லியை, அழகிய மென்மையான தாமரையைக் கோயிலாகக் கொண்டு உறையும் யாமளவல்லியை, குற்றமற்றவளை, எழுதுதற்கு இயலாத எழில் கொண்ட திருமேனியுடையவளை, சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை, தம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்களே, ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்
ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.
என்னுடைய அன்னை அபிராமியை, புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன், முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள் அனைவரும் போற்றித் துதிப்பர்.
தைவந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும், தலைவந்த ஆறும் கரந்ததெங்கே?
மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகலறியா மடப் பூங்குயிலே.
ஏ, அபிராமி! நீ உண்மை பொருந்திய நெஞ்சைத் தவிர வஞ்சகர்களுடைய பொய் மனத்தில் ஒருபோதும் வந்து புகுந்தறியாதவள். பூங்குயில் போன்றவளே! உன்னுடைய பாதத்தாமரையைத் தலையில் சூடிக் கொண்ட சிவபெருமானாகிய சங்கரனின் கையிலிருந்த தீயும், முடிமேல் இருந்த ஆறும் (ஆகாய கங்கை) எங்கே ஒளிந்து கொண்டனவோ?
குயிலாய் இருக்கும் கடம்படாவியிடை; கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத் திடை; வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின் மீதன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.
ஏ, அபிராமி! அன்று கைலயங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு மணம் முடித்த மலையரசன் மகளே! கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே! தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தையுடையவளே! (மதுரையில் குயிலாகவும், இமயத்தில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் அம்பிகை விளங்குகின்றாள் என்பது வழக்கு).
குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருமப்புவில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும்; வெண்ணகையும்,
உழையைப் பொருக்கண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்கக்
காத்தாளை அங்குச பாசாங் குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!
எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்.
ராமாயணம்
பிடித்த கதாபாத்திரம் அனுமன்
அனுமன், பரமாத்மாவைப் போன்று என்றும் நிலையானவர்.. என்றும் நம்முடன் சிரஞ்சீவியாய் இருந்து, நமக்கெல்லாம் ராம நாமத்தின்மீது ருசியை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார். இவரை வணங்கிய மாத்திரத்தில் தைரியமும் ஞானமும் நமக்கு வளரும்; காமம் நசிந்து விடும். தனது பக்தர்களுக்கு புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வண்மை போன்றவற்றைத் தருபவர் அஞ்சனை மைந்தர்.
BG 7.16 ... பூர்ணத்தின் அறிவை தேடுவோர் இவர்களை சார்ந்து இருக்க விருப்பம் . முழு ஞானத்துடன் எப்பொழுதும் பக்தி தொண்டில் ஈடுபடவே விருப்பம்
Total points
10/10
1.பௌதிக ஆசைகள் உள்ள நான்கு விதமான நல்லோர்களின் பக்தி எத்தகையது /what is the devotion of the four kinds of good people in material desires?
*
1/1
a. விகர்மா/ vikarma
b. கர்மகாண்டம் / karmakandam
c. கர்மா/ karma
d. தூய பக்தி தொண்டு / Pure devotional service
Bg. 7.18 இந்த பக்தர்கள் அனைவரும் சந்தேகத்திற்கு இடமின்றி பெருந்தன்மையான ஆத்மாக்கள், பகவான் எந்த நோக்கத்திற்காக இறைவனிடம் வருகிறாரோ அவர் மகாத்மா அல்லது பெரிய ஆத்மா என்று அழைக்கப்படுவதால், அனைவரும் மகத்துவமுள்ளவர்கள் என்று இறைவன் கூறுகிறார். பக்தித் தொண்டினால் சில பலன்களை விரும்பும் பக்தர்கள், பாசப் பரிமாற்றம் இருப்பதால் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். பாசத்தால் இறைவனிடம் சில பொருள் பலன்களைக் கேட்கிறார்கள், அது கிடைத்தவுடன் பக்தித் தொண்டிலும் முன்னேறும் அளவுக்கு திருப்தி அடைகிறார்கள்.
*
1/1
a. ஆத்மாவை விட பஞ்சபூதங்கள் உயர்ந்தது / Nature is superior to Atma
b. புத்தியை விட மனது உயர்ந்தது / Mind is superior to Intellect
c. பொய் அகங்காரத்தை விட மனம் உயர்ந்து / Mind is superior to false ego
d. பஞ்சபூதங்களை விட ஆத்மா உயர்ந்தது / Atma is superior to Nature
And 2 D
பகீ.7.5 - பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, இதற்கு அப்பால், என்னுடைய உயர்ந்த சக்தி ஒன்று உள்ளது. இந்த தாழ்ந்த ஜட இயற்கையினை தனது சுயநலனிற்காக உபயோகிக்ககூடிய ஜீவாத்மாக்களை அஃது உள்ளடக்கியதாகும்.
BG 7.5: Besides these, O mighty-armed Arjuna, there is another, superior energy of Mine, which comprises the living entities who are exploiting the resources of this material, inferior nature.
*
1/1
a. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளது போல / Pearls are strung on the thread
b. பூ தொடுத்து மாலை காட்டியது போல / Garland made of flowers
c. வானில் உள்ள நட்சத்திரத்தை போல / Stars in the sky
d. சூரியனை சுற்றும் கோள்கள் போல / Planets revolving around the Sun
ப.கீ. 7.7
செல்வத்தை வெல்வோனே, எண்ணை விட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளது போல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.
BG: 7.7
O conqueror of wealth, there is no truth superior to Me. Everything rests upon Me, as pearls are strung on a thread.
*
1/1
a. அர்ஜுனனின் குழப்பமான மனம்/ Arjuna's confused mind
b. துரியோதனனின் அரசியல் நிகழ்வு/ Duryodhana's political agenda
c. அர்ஜுனன் மேல் துரோணாச்சார்யா காட்டும் பாரபட்சமான அன்பு/ Dronacharya's partiality towards Arjuna
d. தண்ணீரின் சுவை/ Taste of water
பகீ.7.8 - குந்தியின் மகனே, நானே நீரின் சுவையும், சூரிய சந்திரர்களின் ஒளியும், வேத மந்திரங்களின் பிரணவ ஒலியுமாக (ஓம்) இருக்கின்றேன்; ஆகாயத்தில் சப்தமாகவும், மனிதரில் திறமையாகவும் இருப்பது நானே.
BG 7.8: O son of Kuntī, I am the taste of water, the light of the sun and the moon, the syllable oṁ in the Vedic mantras; I am the sound in ether and ability in man.
5. யாரை வழிபட்டால் பிறவி இல்லா நிலை கிடைக்கும்? / Who should we worship to attain a birth-less state?
*
1/1
a. தேவர்களை / Demigods
b. முன்னோர்களை / Ancestors
c. தேசத்தலைவர்களை / National leaders
d. பகவான் கிருஷ்ணரை / Lord Krishna
BG 7.14 & விளக்கம் மற்றும் பொருளுரை: என்னுடைய இந்த தெய்வீக ஆற்றல், ஜட இயற்கையின் மூன்று முறைகளைக் கொண்டது, கடக்க கடினமாக உள்ளது. ஆனால் என்னிடம் சரணடைந்தவர்கள் அதைத் தாண்டி எளிதில் கடக்க முடியும்.
பகவான் கிருஷ்ணரோ அல்லது அவரது உண்மையான பிரதிநிதியான ஆன்மீக குருவோ மட்டுமே நிபந்தனைக்குட்பட்ட ஆன்மாவை விடுவிக்க முடியும். அத்தகைய மேலான உதவியின்றி, ஜட இயற்கையின் அடிமைத்தனத்திலிருந்து ஒருவரை விடுவிக்க முடியாது. பக்தி சேவை, அல்லது கிருஷ்ண உணர்வு, அத்தகைய விடுதலையைப் பெற உதவும். கிருஷ்ணர், மாயையான ஆற்றலின் இறைவனாக இருப்பதால், நிபந்தனைக்குட்பட்ட ஆன்மாவை விடுவிக்க இந்த கடக்க முடியாத சக்தியை கட்டளையிட முடியும்.
only Lord Kṛṣṇa, or His bona fide representative the spiritual master, can release the conditioned soul. Without such superior help, one cannot be freed from the bondage of material nature. Devotional service, or Kṛṣṇa consciousness, can help one gain such release. Kṛṣṇa, being the Lord of the illusory energy, can order this insurmountable energy to release the conditioned soul.
*
1/1
a. துயருற்றோர் / Distressed
b. செல்வத்தை விரும்புவோர் / Desirer of wealth
c. கேள்வியுடையோர் / Inquisitive
d. மூடர்கள் / Fools
ப.கீ: 7.15, 16
சற்றும் அறிவற்ற மூடர்களும், மனிதரில் கடைநிலையோரும், மாயையால் அறிவு கவரப்பட்டவர்களும், அசுரரின் நாத்திகத் தன்மையை ஏற்றவர்களுமான துஷ்டர்கள் என்னிடம் சரணடைவதில்லை.
பக்தர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர் – துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர்கள் அவர்கள்.
Those miscreants who are grossly foolish, who are lowest among mankind, whose knowledge is stolen by illusion, and who partake of the atheistic nature of demons do not surrender unto Me. O best among the Bhāratas, four kinds of pious men begin to render devotional service unto Me – the distressed, the desirer of wealth, the inquisitive, and he who is searching for knowledge of the Absolute.
*
1/1
a. துயரத்தில் இருப்பவர்/ Distressed
b. மயக்கத்தில் உள்ளவர் / Deluded speculators
c. சூரியன்/ Sun
d. அசுரர்கள்/ Demons
பகீ.7.16 - பரதர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர்- துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர் அவர்கள்.
BG 7.16: O best among the Bhāratas, four kinds of pious men begin to render devotional service unto Me – the distressed, the desirer of wealth, the inquisitive, and he who is searching for knowledge of the Absolute.
8. பகவத் கீதை 7.19 எதை அறிந்தவரை மகாத்மா மற்றும் அறிவுடையவன் என்று கூறுகிறது? / According to BG:7.19 , who can be referred to as a Mahatma and wise?
*
1/1
a. பகவான் கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணம் / Lord Krishna is the cause of all causes
b. தேவர்களே எல்லா காரணங்களுக்கும் காரணம் / Demigods are the cause of all causes
c. இயற்கையே எல்லா காரணங்களுக்கும் காரணம் / Nature is the cause of all causes
d. விஞ்ஞானிகளே எல்லா காரணங்களுக்கும் காரணம் / Scientists are the cause of all causes
ப.கீ: 7. 19
பற்பல பிறவிகளுக்குப் பின், உண்மையான அறிவுடையவன், எல்லாக் காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக எண்ணை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிக அரிதானவன்.
BG: 7. 19
After many births and deaths, he who surrenders unto Me, knowing Me to be the cause of all causes and all that is. Such a great soul is very rare.
9. பகவத் கீதை 7.20ன் படி, யார் அறிவை இழந்தவர்கள்? / According to BG: 7.20, which category of worshippers lose spiritual knowledge?
*
1/1
a. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபாடு செய்பவர்கள் / The one who worships Lord Krishna
b. சாஸ்திரத்தின் விதிமுறைபடி வழிபடுபவர்கள் / Who worship as per scriptures
c. தேவர்களை வழிபடுபவர்கள் / Who worship demigods
d. தூய பக்தர்கள் / Pure devotees
ப.கீ: 7.20
ஜட ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், தேவர்களிடம் சரணடைந்து, தங்களது இயற்கைக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளையும் நியமங்களையும் பின்பற்றுகின்றனர்.
BG: 7. 20
Those whose intelligence has been stolen by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures.
*
1/1
a. பாவங்கள் முழுவதும் ஒழிக்கப்பட்டவர்கள் / One whose sinful actions are completely eradicated
b. பாவம் செய்பவர் / The continuous sinner
c. விரதம் இருப்பவர் / One who fasts
d. முதுமையை அடைந்தவர் / Aged person
பகீ.7.28 - முற்பிறவியிலும் இப்பிறவியிலும் புண்ணிய செயல்களில் ஈடுபட்டு, எவர்களது பாவ விளைவுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதோ, எவர்கள் மயக்கத்தின் இருமையிலிருந்து பூரணமாக விடுபட்டுள்ளார்களோ, அவர்களே எனது பக்தித் தொண்டில் மனவுறுதியுடன் ஈடுபடுவர்.
BG 7.28: Persons who have acted piously in previous lives and in this life and whose sinful actions are completely eradicated are freed from the dualities of delusion, and they engage themselves in My service with determination.
அதிலே குழலின் பின்னோசை ...
மயக்கும் வார்த்தைகள்
அதிலே அடி பட்டு போகும் மாயைகள்
மந்தஸ்மிதம் நடமாடும் வர்ணனை அதிலே மயங்குவது நாம் மட்டும் அல்ல
கீதை சொன்ன நாயகனும் தான் 🦌🦌🦌🐿️🐿️🐿️🦚🦚
*அன்பர்கள் நண்பர்களிடம் விசாரித்தேன்* .
*ஊர் எல்லையில் உள்ள* *மலைமீது இருக்கிறார் கடவுள்* *என்று தகவல் கிடைத்தது*.
*வெறுங்கையோடு போகாதே*!
*ஏதாவது கொண்டு போ என்றார்கள்* .
*இருந்ததை எடுத்து கொண்டு கிளம்பினேன்* .
*மலையை பார்த்து , மலைத்து நின்றேன் , மலை அடிவாரத்தில்*!
*ரொம்ப உயரம் போலவே*!
*ஏற முடியுமா என்னால்* ? ! ? !
*மலையைச் சுற்றிலும் பல வழிகள்* !
*மேலே போவதற்கு* . . .
*அமைதி வழி* ,
*ஆடம்பர வழி* ,
*பக்தி வழி* ,
*தியான வழி* ,
*சாஸ்திர வழி* ,
*சம்பிரதாய வழி* ,
*வழிபாடு வழி* ,
*மந்திர வழி* ,
*தந்திர வழி* ,
*கட்டண வழி* ,
*கடின வழி* ,
*சுலப வழி* ,
*குறுக்கு வழி* ,
*துரித வழி* ,
*சிபாரிசு வழி* ,
*பொது வழி* ,
*பழைய வழி* ,
*புதிய வழி* ,
*இன்னும் , இன்னும் , கணக்கிலடங்காத வழிகள்* . . .
*அடேயப்பா* !
*எத்தனை வழிகள்* !
*ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி* !
*கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்* !
*என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை ! ஒதுக்கினர் சிலர்* .
*நான் கூட்டிப் போகிறேன் வா*!
*கட்டணம் தேவையில்லை*.
*என் வழியி்ல் ஏறினால் போதும்*.
*எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு* !
*என கை பிடித்து இழுத்தனர் சிலர்*!
*மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்* ,
*உனக்கு பதில்* *நான் போகிறேன்* ,
*கட்டணம் மட்டும்* *செலுத்து*!
*என்றனர் சிலர்* .
*பார்க்கணும் அவ்ளோதானே*!
*இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்*!
*அது போதும்* . . .
*அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்*!
*ஆணவத்துடன் சிலர்*.
*அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது*
*உன்னால் ஏறமுடியாது* *தூரம் அதிகம் . திரும்பி போ*.
*அவரை* *எதுக்கு பார்க்கணும்?*
*பார்த்து ஆகப்போறது என்ன?*
*அதைரியப்படுத்தினர் சிலர்*.
*உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை, ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்!*
*அது ஒரு வழிப்பாதை*!
*ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது*!
*அப்படியே போக வேண்டியதுதான்*!
*பயமுறுத்தினர் சிலர்*.
*சாமியாவது , பூதமாவது* !
*அது வெறும் கல்* !
*அங்கே ஒன்றும் இல்லை* !
*வெட்டி வேலை* !
*போய் பிழைப்பை பார்*!
*பாதையை அடைத்து வைத்து பகுத்தறிவு பேசினர் சிலர்*.
*என்ன செய்வது ?*
*ஏறுவதா*,
*திரும்பி போவதா ?*
*குழம்பி நின்ற என் முன்னால்* ,
*வயதான கிழவி , மெலிந்த கரங்களை நீட்டி , " பசிக்குது ஐயா ! சாப்பிட எதாவது குடு சாமீ ! " என்றாள்* .
*கடவுளுக்கென்று கொணர்ந்ததை*
*அந்த கைகளில் வைத்தேன்* .
*மகராசனா இரு என்று வாழ்த்தினாள்* .
*வாழ்த்திய முகத்தினை பார்த்தேன்* .
*நன்றியுடன் என்னை நோக்கிய* *அந்த பூஞ்சடைந்த கண்களிலிருந்து* *புன்னகைத்தார் கடவுள்* !
*இங்கே என்ன செய்கிறீர்கள் ?*
*நான் இங்கே தானே இருக்கிறேன்*
*அப்போ அங்கிருப்பது யார் ?*
*மலை உச்சியை காட்டினேன்*.
*உம்*...*அதுவும் நான்தான்*
*அங்கேயும் இருக்கிறேன்*,
*இங்கேயும் இருக்கிறேன்* ,
*எங்கேயும் இருப்பவன் அல்லவா நான்*
*இங்கே என்னை காண முடியாதவர்கள் அங்கே வருகிறார்கள்* .
*சிரமப்பட்டு* !
" *ஆனால் , . . . திணறினேன்* .
" *இது உமது உருவமல்லவே*"
*அதுவும் எனது உருவமல்லவே*
*எனக்கென்று தனி உருவமில்லை*
*நீ என்னை எதுவாக / எதில் காண்கிறாயோ , அது நானாவேன்*
*அப்படியென்றால்*,
*பசித்த வயிறோடு கை நீட்டியவளும் நானே*
*உணவளித்தவனும் நானே*
*வாழ்த்திய கண்களில் உனக்கு தெரிபவனும் நானே*
*தருபவனும் நானே*
*பெறுபவனும் நானே*
*நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்*
*என் தரிசனம் பெற கண் தேவையில்லை*
*மனம்தான் வேண்டும்*
*அப்போ உங்களை பார்க்க மலை ஏற வேண்டாம் என்கிறீர்களா ?*
*குழப்பத்துடன் கேட்டேன்*.
*தாராளமாக ஏறி வா*
*அது உன் விருப்பம்*
*அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே* !
*அங்கு வந்தாலும் என்னை பார்க்கலாம்*
*புரியாமல் முழித்தேன்* ,
*கடவுளே !* *என்று தன்னிச்சையாக மனம் அழைத்தது*.
*கடவுள் சொன்னார்*,
*என்னை புரிந்து கொள்வதும் / பார்ப்பதும் அவ்வளவு கடினமல்ல*
*உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால் , என்னை காண , நீ சிரமப்பட்டு மலையேறி உச்சிக்கு வரவேண்டும்*
*பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால் , நீ இருக்குமிடத்திலேயே என்னை காண்பாய்* .
*என்று சொல்லி* ,
*புன்னகைத்தார் கடவுள்* 🙏
*அற்புதமான பதிவு.*
*முழு அர்த்தம் தெரிந்து படித்து , உணர்ந்து , பகிர்ந்து மகிழ்வோம்*
ஒற்றைத் தலைவலியான ஒரு தலை நோயும்,
வாயு தொடர்பான வாத நோய்களும்,
குளிர் நோயான சயித்தியமும், கை கால்கள் இழுக்கும் வலிப்பு நோயும்,
பித்தத்தால் உண்டாகும் மனநோய் முதலியவையும்,
வயிற்று வலியான சூலை நோயும், எலும்பை உருக்கும் க்ஷய நோயும்,
குன்ம நோயும், உடற்சோர்வு என்னும் சொக்குநோயும்,
அரிக்கும் சிரங்கும், கை கால் குடைச்சலும், சிலந்தி நோயும்,
குடலில் வரும் சிலந்தி நோயும், விலாப்புறங்களில் வரும் பக்கப்பிளவையும்,
தொடையில் படரும் வாழையும்,
கடுவன் படுவன் முதலிய நோய்களும், கை கால்களில் வரும் சிலந்தியும்,
பல் குத்து நோயும், பல்லில் வரும் அரணையும், இடுப்பில் வரும்
பெரிய அரையாப்பு என்னும் கட்டிகளும், எல்லாப் பிணிகளும்
என்னைக் கண்டால் நில்லாது ஓடும்படி நீ எனக்கு அருள் செய்ய வேண்டும்!🦚🦚🦚
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தும்
சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப்பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்!
*பதிவு 218*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 28
*பொருளுரை*
सामीप्यं शिवभक्तिधुर्यजनतासांगत्यसंभाषणे ।
सालोक्यं च चराचरात्मकतनुध्याने भवानीपते
सायुज्यं मम सिद्धमत्र भवति स्वामिन् कृतार्थोऽस्म्यहम् ॥ २८॥
ஸாரூப்யம் தவ பூஜநே ஶிவ மஹாதே³வேதி ஸங்கீர்தநே
ஸாமீப்யம் ஶிவப⁴க்திது⁴ர்யஜநதாஸாங்க³த்யஸம்பா⁴ஷணே ।
ஸாலோக்யம் ச சராசராத்மகதநுத்⁴யாநே ப⁴வாநீபதே
ஸாயுஜ்யம் மம ஸித்³த⁴மத்ர ப⁴வதி ஸ்வாமிந் க்ருʼதார்தோ²ऽஸ்ம்யஹம் ॥ 28॥
ஆனா எது அதைக் காட்டிலும் ரொம்ப உயர்ந்த விஷயம்?
இப்படி அவனுடைய ஸ்தோத்திரத்தை பண்ணனும். பூஜையை பண்ணனும்.
அவனுடைய பக்தர்களோட இருக்கணும்.
எங்கும் பகவான் இருக்கார் அப்படீன்னு எல்லாத்துலேயும் பரமேஸ்வரனை பார்க்கறதுக்கு மனசை பழக்கணும் அப்படிங்கிற வழி சொல்றார் 🙌🙌🙌
அதுக்கும் மேலான… உன் மனசை கொடு.
உன் மனசை இந்த காரியங்களிலெல்லாம் செலுத்து.
அப்போ உனக்கு உயர்ந்த முக்திக்கு நிகரான உத்தம பக்தி ஏற்படும் அப்படீன்னு இந்த ஸ்லோகத்துல ஆச்சார்யாள் சொல்லித் தர்றார்.
‘கண்டேன் அவர் திருப்பாதம். கண்டறியாதன கண்டேன்’ அப்படீன்னு மஹான்கள் அந்த பகவானுடைய அனுபவத்தை பாடறா இல்லையா?
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை தியானித்து இருப்பதே *ஸாயுஜ்ய* *முக்தி* .
ஒவ்வொரு முக்தியும்.. ஒண்ணுக்கு மேல ஒண்ணு சொல்வா.
இது எல்லாமே பக்தியினால கிடைக்கும் அப்படீன்னு சொல்றார்.
நம: பார்வதீ பதயே… ஹர ஹர மஹாதேவ
*பதிவு 219* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
🏵️🏵️🏵️🏵️
அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ *ப்ரதர்தனஃ* |
ப்ரபூத-ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
இன்றும் நாம் அந்த அரண்மனையைத் தரிசிக்கலாம்.
அது நம் அனைத்துப் பாபங்களையும் போக்கவல்லது.
அந்த அரண்மனையைப் போன்றது திருமாலின் நிரந்தர இருப்பிடமான வைகுந்தம்.
துவாரகை நகரைப் போன்றது அனைத்து உலகங்களும். எப்படி துவாரகை நகரம் அழிந்தாலும்,
கண்ணனின் அரண்மனை அழியாமல் நிற்கிறதோ, அது போலவே பிரளய காலத்தில் அனைத்து உலகங்களும் அழிந்தாலும்,
வைகுந்த லோகம் அழியாமல் எப்போதும் இருக்கும்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 61வது திருநாமம். “ *ப்ரபூதாய நமஹ:”* என்று தினமும் சொல்லி வரும்
அடியவர்களையும் அவர்களது இருப்பிடங்களையும் வெள்ளம், புயல், ஆழிப்பேரலை உள்ளிட்ட ஆபத்துகளிலிருந்து கண்ணன் காப்பான்.
1. பராசக்தியின் ஏற்றம்
ஸர்வ விக்ன நாசமும் ஸகலகார்ய ஸித்தியும்
2. பாத தூளி மகிமை
ஸர்வலோக வசியம்
3. பாத தூளி முக்தியளிப்பது
ஸர்வ வித்யா ப்ராப்தி
4. பாத கமலங்களின் நிகரற்ற சக்தி
ஸகல பய நிவ்ருத்தி, ரோக நிவ்ருத்தி
5. தேவி பூஜையின் மகிமை
ஸ்த்ரீ புருஷ வசியம்
புத்ர ஸந்தானம்
7. தேவியின் ஸ்வரூபம்
தேவியின் ஸாக்ஷாத்காரம், சத்ருஜயம்
ஜனனமரண நிவ்ருத்தி
9. ஆதார சக்கரங்கள்
தேசாந்திரம் சென்றவர் திரும்பிவருதல், அஷ்டைச்வர்ய ஸித்தி
10. மூலாதாரம்
சரீர சுத்தி, வீர்ய விருத்தி
ஸத்ஸந்தானம், ஜன்ம ஸாபல்யம்
12. உவமையற்ற ஸௌந்தர்யம்
சிவஸாயுஜ்யம், ஊமையும் பேச
13. கடைக்கண்ணின் கிருபை
காமஜயம்
பஞ்சம், கொள்ளை நோய் நிவிருத்தி
15. தேவியின் சுத்த ஸத்வ வடிவம்
கவித்துவமும் பாண்டியத்துவமும்
வேதாகம ஞானம்
17. வாக் தேவதைகளால் சூழப்பெற்றவள்
வாக்விலாஸம், சாஸ்திர ஞானம்
காமஜயம்
19. காமகலா த்யானம்
காமஜயம்
ஸர்வ விஷ ஸர்வ ஜ்வர நிவாரணம்
ஸர்வ வசீகரம், ஸர்வாஹ்லாதகரம்
ஸர்வஸித்தி
உ
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*
34. கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில்
அடைவு உறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி
இடை சில நாள்கள் நீங்க மீண்டும் அக் கலத்தில் ஏறிப்
படர் புனல் கன்னி நாட்டு ஓர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்.
35. அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும் ஒப்பு இல் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து
மெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற
செப்ப அரும் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்.
*திருச்சிற்றம்பலம்*
🪔
🌺🌹Tirupati is the place with the highest lunar impact in India. The moon is a very powerful temple, so it gives peace of mind.
🌺Thirumalai Darshan is a pleasant experience for the mind. Since Sri Ramanujar engraved the chakras, their power is the size of the sea.
🌺 In the Kanda Purana, when talking about this place, Papanasam Theertham says that sins will go away, deeds will go away, poverty will go away and offspring will grow.
🌺Artically the waterfall is located in the north east and the valley is in the south there are high mountains.
🌺If the north rises and the south rises, the place will become very popular and the crowds will wave ..
Wealth piles up like a mountain.
🌺The Japanese are the first people in the world to see the moon because they are more attracted to the moon's rays.
🌺Similarly Tirupati is the place with the highest impact of the moon in India.
🌺Because the moon is a powerful temple, it gives peace of mind.
🌺Health is caused by the abundance of herbs. The earth is full of saints and is full of grace.
.
🌺Om Namo Venkatesaya Namaha .. Ezhumalayan Slogan that will give us all the blessings "
🌺 Sriya: We have arranged the magnetic wedding fund
Srivenkada Nivasaya Sreenivasaya Mangalam ”
🌺Sri Venkatachaladeesam Sriyatyasita,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீனிவாஸமஹம் பஜே ... !!!🌹
🌺 Srivenkada Srinivasa Your Thiruvatikale Saranam "Saranam" Saranam ...🌹🌺 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
----------------------------------------------------------
🌺🌹இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.
🌺திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் . ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .
🌺கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.
🌺பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.
🌺வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.
செல்வம் மலை போல குவியும்.
🌺உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்யுடன் உள்ளார்கள்.
🌺அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.
🌺சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.
🌺மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.
.
🌺ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ.. நமக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் "
🌺ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”
🌺ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!
🌺ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம்...🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
🙋♂️ *இந்த நாள் இனிய நாள்* 🙋♂️
*"சேந்தனை, கந்தனை, செங்கோட்டு*
*வெற்பனை, செஞ்சுடர்வேல்*
*வேந்தனை, செந்தமிழ் நூல் விரித்தோனை, விளங்கு வள்ளி*
*காந்தனை, கந்தக் கடம்பனை,*
*கார்மயில் வாகனனை,*
*சாம் துணைப்போதும் மறவாதவர்க்கு,*
*ஒரு தாழ்வு இல்லையே"*
வள்ளிமணாளனின் வற்றாத பெருங்கருணை, நீங்கள்
எல்லா நலங்களும் குறைவறப் பெற்று, தாழ்வு இல்லாமல், வாழ்வாங்கு வாழத் துணை புரியட்டும்.🦚🦚🦚
*பதிவு 219* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 54👌👌👌
தயாமித்ரைர் நேத்ரை: அருணதவள ச்யாமருசுபி:
சோணோ கங்கா தபநதநயேதி த்ருவம் அமும்
த்ரயாணாம் தீர்த்தானாம் உபநயஸி ஸம்பேதம் அநகம்
*சோணா நதீ* என்பது சிகப்பு நிறம் உடையதாம்;
கங்கை வெண்மையானது;
யமுனையின் இன்னொரு பெயரே காளிந்தீ, இது கருப்பு நிறமானது.
இவை போன்ற நிறங்களைத் தனது கண்களிலேயே கொண்டிருக்கிறாளாம் அன்னை.
இந்த நதி சங்கமிக்கும் இடமானது எப்படி அங்கு ஸ்நானம் செய்பவர்களது பாபத்தைப் போக்குகிறதோ, அதே போல அம்பாளது கண்கள் பக்தர்களது எல்லா பாபங்களையும் போக்கிடும் என்கிறார் பகவத் பாதர்.👁️👁️
*பதிவு 219* 🙏🙏🙏started on 7th Oct 2021
*நாமங்கள்: 51- 60*🏵️🏵️
*70 வது திருநாமம்*
ஒரு நாட்டின் தலைநகரத்தில் மஹாவாராஹி யந்த்ரமும், மூர்த்தமும் நிறுவப்படுவது மிகமிக அவசியம்.
பிற நாடுகளால் ஏற்படக்கூடிய பயங்களையும், இன்னல்களையும் தவிர்க்கும் ஆற்றல் உடையது கிரி சக்ரம்.
உன்மத்த பைரவி, ஸ்வப்னேசி, திரஸ்கரீணி, கிரிபதா போன்றோர் இந்த அம்பிகையின் பரிவார தேவதைகளாவர்.
இந்த தேவியின் நிவேதனத்தில் பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றோடு கட்டாயமாக பூண்டும், வெங்காயமும் சேர்ந்த பலகாரம் இடம்பெற வேண்டும் என பூஜை முறையில் முக்கியமாகக்குறிப்பிடப்பட்டுள்ளது.
காசியில் வாராஹி, காஞ்சி காமாட்சிஅம்மன் சந்நதியின் கோஷ்ட வாராஹி, பள்ளூர் வாராஹி, தஞ்சைப் பெரிய கோயில் வாராஹி என விசேஷமான வாராஹிசந்நதிகள் பக்தர்களுக்கு அருள்மணம் பரப்பி வருகின்றன.🐷🐷🐷
பூமியை மறுபடியும் நிலைநாட்டிய வராஹமூர்த்தி வாராஹியுடன் வராஹகிரியில் தங்கியிருந்தார்.
அச்சமயம் அங்கு சென்ற நாரதர் உலகிற்கு நலன்கள் புரிய அந்த வாராஹியை காசியில் பிரதிஷ்டை செய்தார்.
அறுபது கோடி வாராஹி கன்னிகைகள் இவள் பரிவார தேவதைகளாக ஏவல்புரிவதை ‘தேவி’ சஷ்டி கோடி பிர்வ்ருதா’ எனும் திருநாமம் உணர்த்துகிறது.
மிக்க வீர்யம் கொண்டவள் என்பதை ‘ *வீர்யவதி* ’ என்ற நாமம் குறிக்கிறது.🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷
*கைகேயி சொன்ன கீதை* 👌👌👌
பால் முகம் கொண்டவனே !!
பாலினும் சுவை மிக்கவனே !!
பால் போல் உள்ளம் கொண்டவனே !!
என்பால் ஓடி வருவாயோ ?
தாய் பால் ஊட்டியவள் நான் !!
தமிழ் பால் காதல் கொண்டே தாலாட்டு ஒன்று பாடவேண்டும் 👍
அம்மா பெற்றது கோசலையே என்றாலும் உற்றவள் நீயன்றோ ..
உன்பால் அன்றோ திருப்பால் சுவைத்தேன் ...
தேன் போன்றவள் .. என்னை பெறாமல் பெற்றவள் நீ 🙌
ராமா நன்றி கொண்டவன் நீ ...
தீயிலும் இனிமை காண்பாய்
தேள் அதிலும் சுகம் காண்பாய் ..
நஞ்சு கக்கும் பாம்பிலும் அமுதம் எடுப்பாய் ...
உன் போல் யாருண்டு உண்டு என்றால் அதுவும் நீயே அன்றோ ?💐
அம்மா ... வானகம் முடித்து விட்டேன் ...
பரதனை காப்பாற்றி விட்டேன் ..
அசுரர்களை அழித்து விட்டேன் ...
அகத்தில் குடி இருப்பவளை புறத்தில் மீட்டு விட்டேன் ...
எல்லாம் நான் செய்யவில்லை உங்கள் ஆசி செய்த லீலை
பரதனே ஆளட்டும் தாயே!!
வேண்டாம் இந்த சிம்மாசனம் ...
கண்ணே .. கனி அமுதே !!
உற்றாரரும் பெற்றோரும் மற்றோரும் பித்தம் பிடித்தவள் நான் என்றனர் ...
என் மகனே நான் இறக்கட்டும் என்றான் ..
என் கணவர் பிரிந்தார் ...
என்னை புரிந்தவன் நீ ஒன்றே ...
ராஜாவாக நீ ஆகி இருந்தால் அகம் மகிழ்ந்திருக்கும் அயோத்தி ..
தசரதன் வாழ்ந்திருப்பான் இன்னும் பல நூற்றாண்டு ...
வானவர் தானவர் ஆகும் போது ரிஷிகள் முனிகள் முக்காடு போட்டு வாழும் போது அழிக்க வேண்டாமோ அதர்மம் தனை ...
பழி வரட்டும் என்றே புரிந்தேன் ஒரு பாதக செயல் ..
புவி மறந்தாலும் மன்னிப்போர் என்னை யாரும் உண்டோ ராமா ??
அம்மா .. நான் அறிவேன் .. நீ உத்தமி என்று ...
அரக்கர் அழிய உன் மாங்கல்யம் துறந்தாய் ...
மன்னன் என் புகழ் வாழ பரதனைத் தொலைத்தாய்...
நீ தொலைத்து அதிகம்
ஆனால் துளைக்காத தொலைக்காத ஒன்று என் நாமம் ...
உன்னில் வாழும் நான் உன்னுடன் மறைவேன் அதுவே விதி என்றால் ...
ராமா ... உன் போல் எவருண்டு ...??
சொல்லிக்கொண்டே ராமன் மடிதனில் சுருண்டாள் மாசற்ற தாய் அவள்...🙌
அதோ கஞ்சி ஒன்றே குடித்து காஞ்சி தனை காக்கும் ராமன் *கோ* வை துறந்து
வெறும் தண்டம் தாங்கி அண்டம் காக்கின்றான் ...
அவனுள் வாழும் கைகேயி அசுரர்கள் அழிய நாஸ்தீகம் ஒழிய சிரிக்கின்றாள் இன்றும் என்றும் .... ☺️😊🙂
ஜன்ம ஜன்ம கே துக பிஸராவை ||
அம்த கால ரகுவர புரஜாயீ |
ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ || 17
எவ்வளவோ பிறவிகள் எடுத்தாலும் நாங்கள் செய்யும் செய்த பாவங்களை துடைக்கிறாய் ... 🐿️🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
நளனுடைய சரித்திரத்தைத் தமிழில் அழகான வெண்பாக்களில் புகழேந்திப் புலவர் பாடியிருக்கிறார். இதற்கு மூலமாக மகாபாரதத்தில் நளோபாக்கியானம் வருகிறது. இதையே ஸ்ரீஹர்ஷர் என்ற ஸம்ஸ்கிருதக் கவி ‘நைஷதம்’ என்ற அற்புதமான காவியமாக எழுதியிருக்கிறார். நிஷத நாட்டு மன்னனான நளனின் கதையைச் சொல்வதால் அதற்கு நைஷதம் என்று பெயர். இந்தக் காவியம் பண்டிதர்களுக்கெல்லாம் அருமருந்து போன்றது என்பதால் “நைஷதம் வித்வத் ஒளஷதம்” என்பார்கள்
தமயந்தி ஸ்வயம்வர மண்டபத்தில் நின்றபடி நிற்கட்டும். இப்போது ஸ்ரீஹர்ஷரின் கதையைக் கொஞ்சம் சொல்கிறேன். அவருடைய தகப்பனார் ஒரு ராஜ சதஸில் வித்வானாக இருந்தவர். ஒரு சமயம் வேறொரு ராஜ்யத்திலிருந்து ஒரு கவி இந்தச் சபைக்கு வந்தார். இருவருக்கும் வாதப் போட்டி நடந்தது. ஸ்ரீஹர்ஷரின் தகப்பனார் தோற்றுவிட்டார். மிகவும் மனமுடைந்து அவமானத்துடன் அவர் வீட்டுக்கு வந்தார். அபஜயம் அடைந்த ஏக்கத்திலேயே காலமாகிவிட்டார்.
குழந்தையின் பெருமைக்காக எந்த மகாத்தியாகத்தையும் செய்யக்கூடிய மாதா ஒருத்திக்குத்தான் அப்படிப்பட்ட யோசனை தோன்ற முடியும். அது என்ன யோசனை? சில மந்திரங்களை உக்கிரமான முறையில் அப்பியாசம் செய்வதுண்டு. இதன்படி பிரேதத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு ஜபித்தால் விரைவில் ஸித்தி உண்டாகும். இதனால்தான் இப்போதுகூடச் சில மந்திரோபாஸகர்கள் ச்மசானத்துக்குப் போய் ஜபம் செய்கிறார்கள். சிறு குழந்தையான ஸ்ரீஹர்ஷர் மாமல்லதேவி படுத்துக் கொண்டிருக்கும் போது அவள் மீது உட்கார்ந்து கொண்டுகூடப் பழக்க விசேஷத்தால் சிந்தாமணி மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டேயிருப்பதுண்டு.
Total points
10/10
(
*
1/1
a. பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் / Soon after he retires
b. பிள்ளைகளுக்கு திருமணம் செய்த பிறகு / Soon after his children get married
c. நிரந்தர வேலை கிடைத்தவுடன் / Soon after he gets a permanent job
d. வாழ்வின் தொடக்கத்தில் இருந்து / From the beginning of life
ப. கீ.: 8.5
மேலும், தனது வாழ்வின் இறுதி காலத்தில், யாரவது என்னை மட்டும் எண்ணிக் கொண்டு உடலை விட்டால், உடனடியாக அவன் என்னுடைய இயற்கையை அடைகிறான். இதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
BG; 8. 5
And whoever, at the end of his life, quits his body remembering Me alone at once attains My nature. Of this there is no doubt.
*
1/1
a. இவ்வுலகில் உயர்ந்த பதவி கிடைக்க / To get highest position in this world
b. பௌதிக பிறவியில்லாத நிலையை அடைய / To stop material birth
c. சொர்கலோகம் செல்ல / To go to heaven
d. மகிழ்ச்சியுடன் இவ்வுலகில் இருக்க / To live happily in this world
ப. கீ. : 8.6
ஒருவன் தனது உடலை விடும் போது, எந்த நிலையை எண்ணுகின்றானோ, ஐயமின்றி அந்நிலையை அவன் அடைகிறான்.
BG: 8.6
Whatever state of being one remembers when he quits his body, O son of Kuntī, that state he will attain without fail.
*
1/1
a. தினமும் பகவான் நாமத்தை உறுதியுடன் ஜெபிக்க வேண்டும் / To Chant Nama Sankeertan daily with determination
b. நேரம் இருந்தால் ஜெபிக்க வேண்டும் / Have to chant whenever time permits
c. நாம் வேண்டியது கிடைத்தால் ஜெபிக்க வேண்டும் / We have to chant, if we get, what we want
d. வாரத்திற்கு ஒருமுறை கோவிலுக்குச் செல்லவேண்டும் / To go to temple weekly once
ப. கீ: 8. 14
பிருதாவின் மகனே, பிறழாத மனதுடன் என்னை எப்போதும் நினைப்பவன், சுலபமாக என்னை அடைகிறான்; ஏனெனில், அவன் பக்தித் தொண்டில் இடையறாது ஈடுபட்டுள்ளான்.
BG: 8.14
For one who always remembers Me without deviation, I am easy to obtain, O son of Pṛthā, because of his constant engagement in devotional service.
*
1/1
a. முற்றிலும் துன்பம் நிறைந்தது / Full of distress
b. இவ்வுலகம் மகிழ்ச்சியைக் கொடுக்க கூடியது / This world will give happiness
c. பிறப்பு இறப்பு கிடையாது / No birth and death
d. முதுமை நோய் கிடையாது / No aging and disease
ப. கீ. : 8. 15
பக்தியில் யோகிகளான மகாத்மாக்கள் எண்ணை அடைந்த பிறகு, முற்றிலும் துன்பம் நிறைந்த இந்த நாற்காலிகளை உலகத்திற்குத் திரும்பி வருவதே இல்லை. ஏனெனில், அவர்கள் மிகவுயர்ந்த பக்குவத்தை அடைந்து விட்டனர்.
BG: 8. 15
After attaining Me, the great souls, who are yogīs in devotion, never return to this temporary world, which is full of miseries, because they have attained the highest perfection.
*
1/1
a. தவம் / Austerity
b. மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்பு / Repeated birth and death
c. முகப்புத் தோற்றம் / Elevation
d. நித்திய முன்னேற்றம் / Eternal advancement
ப.கீ: 8.16 :
ஜடவுலகின் மிகவுயர்ந்த லோகத்திலிருந்து மிகவும் தாழ்ந்த லோகம் வரை, அனைத்தும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நடைபெறும் துன்பம் நிறைந்த இடங்களே. ஆனால் குந்தியின் மகனே, என்னுடைய இடத்தை அடைபவன் என்றும் மறுபிறவி எடுப்பதில்லை.
BG 8.16: From the highest planet in the material world down to the lowest, all are places of misery wherein repeated birth and death take place. But one who attains to My abode, O son of Kunti, never takes birth again.
*
1/1
a. நான்கு யுகங்களும், மில்லியன் முறை சுழற்சி அடைதல்/ All the four yugas rotating million times
b. நான்கு யுகங்களும் , பில்லியன் முறை சுழற்சி அடைதல்/ All the four yugas rotating billion times
c. நான்கு யுகங்களும், நூறு முறை சுழற்சி அடைதல்/ All the four yugas rotating hundred times
d. . நான்கு யுகங்களும், ஆயிரம் முறை சுழற்சி அடைதல்/ All the four yugas rotating thousand times
ப.கீ: 8. 17
மனிதக் கணக்கின்படி ஆயிரம் யுகங்களைக் கொண்ட காலம் பிரம்மாவின் ஒரு பகலாகும்; அவரது இரவின் காலமும் அது போன்று நீண்டதே.
BG: 8. 17
By human calculation, a thousand ages taken together form the duration of Brahmā’s one day. And such also is the duration of his night.
07. ஆன்மீக லோகம் எப்படிப்பட்டது? / How is the spiritual world?
*
1/1
a. நித்தியமானது, ஆனந்தமானது / Eternal and joyous
b. ஆனந்தமானது, அழியக்கூடியது / Joyous destructible
c. மாறக்கூடியது துன்பம் நிறைந்தது / Changeable, distress
d. நித்தியமானதுதுன்பம் நிறைந்தது / Eternal, distress
ப.கீ: 8. 21
எதனைத் தோற்றமற்றதாகவும் அழிவற்றதாகவும் வேதாந்திகள் கூறுகின்றனரோ, எது பரம கதியாக அறியப்படுகின்றதோ, எந்த இடத்தை அடைந்தவன் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அதுவே எனது உன்னத இருப்பிடம்.
BG: 8. 21
That which the Vedāntists describe as un-manifested and infallible, that which is known as the supreme destination, that place from which, having attained it, one never returns – that is My supreme abode.
*
1/1
a. சாத்தியமில்லை, கடமையைக் கைவிட வேண்டும்/ Impossible, we need to relinquish duty
b. சாத்தியம், கடமையைச் சிறப்பாக செய்ய வேண்டும்/ Possible, we must perform the duty to the best of our ability
c. சாத்தியம், பலன்களைப் பகவானுக்கு அர்ப்பணித்து கடமையைச் செய்ய வேண்டும்/ Possible, perform the duty surrendering the results of the deeds to Lord Krishna
ப.கீ: 8.28
பக்தித் தொண்டின் பாதையை ஏற்பவன், வேதங்களைப் படித்தல், யாகங்களைச் செய்தல், தவம் புரிதல், தானம் கொடுத்தல், கர்ம, ஞானப் பாதைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால் அடையப்படும் பலன்களை இழப்பதில்லை. பக்தித் தொண்டைச் செய்வதன் மூலமாகவே இவையனைத்தையும் பெற்று, இறுதியில் நித்தியமான உன்னத இடத்தை அவன் அடைகிறான்.
BG: 8. 28
A person who accepts the path of devotional service is not bereft of the results derived from studying the Vedas, performing sacrifices, undergoing austerities, giving charity or pursuing philosophical and fruitive activities. Simply by performing devotional service, he attains all these, and at the end he reaches the supreme eternal abode.
ப.கீ: 8.28
பக்தித் தொண்டின் பாதையை ஏற்பவன், வேதங்களைப் படித்தல், யாகங்களைச் செய்தல், தவம் புரிதல், தானம் கொடுத்தல், கர்ம, ஞானப் பாதைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால் அடையப்படும் பலன்களை இழப்பதில்லை. பக்தித் தொண்டைச் செய்வதன் மூலமாகவே இவையனைத்தையும் பெற்று, இறுதியில் நித்தியமான உன்னத இடத்தை அவன் அடைகிறான்.
BG: 8. 28
A person who accepts the path of devotional service is not bereft of the results derived from studying the Vedas, performing sacrifices, undergoing austerities, giving charity or pursuing philosophical and fruitive activities. Simply by performing devotional service, he attains all these, and at the end he reaches the supreme eternal abode.
*
1/1
a. வேதங்களைக் கற்ற பலன் கிடைக்கும் / Will get the benefit of learning the Vedas
b. யாகங்கள் செய்த பலன் கிடைக்கும் / Will get the benefit of performing yagnas
c. தானம் கொடுத்த பலன் கிடைக்கும் /Will get the benefit of performing charity
d. மேலுள்ளவை அனைத்தும்/ All of the above
ப.கீ: 8.28
பக்தித் தொண்டின் பாதையை ஏற்பவன், வேதங்களைப் படித்தல், யாகங்களைச் செய்தல், தவம் புரிதல், தானம் கொடுத்தல், கர்ம, ஞானப் பாதைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால் அடையப்படும் பலன்களை இழப்பதில்லை. பக்தித் தொண்டைச் செய்வதன் மூலமாகவே இவையனைத்தையும் பெற்று, இறுதியில் நித்தியமான உன்னத இடத்தை அவன் அடைகிறான்.
BG: 8. 28
A person who accepts the path of devotional service is not bereft of the results derived from studying the Vedas, performing sacrifices, undergoing austerities, giving charity or pursuing philosophical and fruitive activities. Simply by performing devotional service, he attains all these, and at the end he reaches the supreme eternal abode.
*
1/1
a. இந்திர லோகம் / Indraloka
b. வைகுந்த லோகம் / vaikunthaloka
c. மகர லோகம்/ Makaraloka
d. பிரம்ம லோகம்/ Brahmaloka
Ans 10 D
இந்தப் பிரபஞ்சத்தில் பதினான்கு கோளங்கள் உள்ளன. கீழ் அமைப்புகள் பூர்லோகம் என்றும், நடுத்தர அமைப்புகள் புவர்லோகம் என்றும், பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த கோள் அமைப்பான பிரம்மலோகம் வரை உள்ள உயர் கோள்கள் ஸ்வர்லோகம் என்றும் அழைக்கப்படுகின்றன.
(ஸ்ரீமத் பாகவதம்------2:5:38------பொருள்).
There are fourteen spheres of planetary systems within this universe. The lower systems are called Bhūrloka, the middle systems are called Bhuvarloka, and the higher planetary systems, up to Brahmaloka, the highest planetary system of the universe, are called Svarloka.
(Srimad Bhagavatam------2:5:38------purport).
விமான நிலையத்தில் நமது லக்கேஜ்களை ஒரு கன்வேயர் பெல்டில் சுற்றும்படி வைத்திருப்பர்.. உரியவர்எடுக்கும் வரையில் அது சுற்றும்..
பெட்டியை எடுப்பதால் சுற்றவதை விடுத்து வெளியே போய்விடும். எடுக்கா விட்டால் மீண்டும் மீண்டும் சுற்றும்.
பெட்டி போல ஆன்மா பிறவியில் சுற்றுகிறது எடுத்துவிட்டால் முக்தி இல்லேயேல் பிறவி..
இறைவனிடம் சேரவது முக்தி. பெட்டி உரியவரிடம் சேர்வது போல. செய்த புண்ணியங்களை அனுபவிக்க சேருவது சொர்க்கம் ... புண்ணியம் தீர்ந்தபின் மீண்டும் ஜட உலகம் தான் கதி .. முக்தி இறைவனுடன் சேர்வது ..பிறவி இல்லா நிலை . மீண்டும் ஜட உலகம் வரவேண்டாம்
ப. கீ. : 8. 15 பக்தியில் யோகிகளான மகாத்மாக்கள் என்னை அடைந்த பிறகு, முற்றிலும் துன்பம் நிறைந்த இந்த தற்காலிக உலகத்திற்குத் திரும்பி வருவதே இல்லை. ஏனெனில், அவர்கள் மிகவுயர்ந்த பக்குவத்தை அடைந்து விட்டனர்.
1. சொர்க்கம் ஒரு தற்காலிக தங்குமிடம், மோட்சம் என்பது ஒரு உயிருக்கு நிரந்தர தங்குமிடம்.
2. சொர்க்கம் மகிழ்ச்சியும் துக்கமும் நிறைந்தது (ஆம், நீங்கள் படித்தது சரிதான், சொர்க்கத்திலும் துக்கங்கள் உள்ளன), மோட்சம் நித்திய ஆனந்தம் நிறைந்தது.
1. Heaven is a temporary stay only until the piousness is there whereas moksha is a permanent stay for a living being.
2. Heaven is full of joy and sorrows as well, moksha is full of eternal bliss.
பரமபுருஷர் பாதத்தில் விழுந்தபடி அவர் நாமத்தை சொல்லியபடி என் இறுதி மூச்சு நிற்கவேண்டும் .. மனைவி அருகில் இருந்தால் பாக்கியம் அதிகம் செய்தவனாவேன்
*பதிவு 219*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 29
*பொருளுரை*
அந்த பரமேஸ்வரனின் கருணை பார்வையை பெற அவரிடம் யாசிக்க வேண்டும்.
நம் மனதில் பக்தி ரசம் பெருக்கெடுக்க யாசிக்க வேண்டும்.
உண்மையில் நாம் அனைவரும் அவரிடம் எல்லாம் யாசிக்கும் பேர்வழிகள் தான்.
அவருக்கு என்று கொடுக்க என்ன இருக்கிறது. ??
எல்லாம் அவருடையது நாம் வெரும் பாதுகாப்பு செய்பவர் மட்டுமே ( trustee)
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார் நமக்கு பக்தியை பிச்சை அளிக்கும்படி.
நாம் அந்த பக்தி நிலையில் நின்று பரமனை நினைந்து பூஜை செய்து, ஸத்ஸங்கத்துடன்இருந்து, மேலும் மேலும் பக்தி பெருக பிரார்த்திப்போம்,
ஆசார்யாள் சொன்னது போல் பக்தியின் மூலம் முக்தி பெறுவது திண்ணம்.👌👌👌
பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம் என்ற ஏழு மேல் உலகங்களும், அதலலோகம், சுதலலோகம், விதலலோகம், ரசாதலலோகம், தலாதலலோகம், மஹாதலலோகம், பாதாளலோகம் என்ற ஏழு கீழ் உலகங்களும், அவற்றில் இருக்கும் அனைத்தும் எனக்கு நன்மை செய்யும் உறவினர்கள் ஆகவும்,
ஆண்களும் பெண்களும் அனைவரும் எனக்காக,
உலகங்களை ஆளும் அரசர்களும் மகிழ்ந்து எனக்கு உறவாகவும் அருளுகின்ற உன் திருநாமங்களால் உன்னைத் துதிக்க அருள் செய்தாய்.
*ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக*
*ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா*
*மண் ஆள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்*
*உன்னைத் துதிக்க உன் திருநாமம்!*💐💐💐
விஸ்வாமித்திரர் ஒரு யாகம் செய்யத் தீர்மானித்தார்.
அந்த யாகத்தின் முடிவில், இருப்பதையெல்லாம் தானம் கொடுத்து விடவேண்டும் என்பது முறை.
அதை அனுசரித்து விஸ்வாமித்திரர், தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் கொடுத்துக்கொண்டி ருந்தார்.
அதை அறிந்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கொடுக்கும் தானத்தைத் தானும் பெறுவதற்காக வந்தார்.
வசிஷ்டரின் வருகையை அறிந்த விஸ்வாமித்திரர், மனம் மகிழ்ந்து வசிஷ்டருக்குத் தானம் கொடுத்தார்.
தானம் பெற்ற வசிஷ்டரும் அமைதியாகத் திரும்பினார்.
சில நாட்கள் ஆகின. விஸ்வாமித்திரர் செய்ததைப் போலவே தானும் ஒரு யாகம் செய்ய எண்ணினார் வசிஷ்டர்.
நல்லவர்களின் நல்ல தீர்மானம் அல்லவா? உடனடியாகச்செயல் பாட்டிற்கு வந்தது.
ஆம்! வசிஷ்டர் யாகம் செய்தார், யாகத்தின் முடிவில் தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் செய்யத் தொடங்கினார்.
தகவல் அறிந்த விஸ்வாமித்திரர், ‘‘வசிஷ்டர் தானம் கொடுக்கிறார் என்றால், அது விசேஷம்தான். நாமும் போய் அதைப்பெற வேண்டும்” என்று புறப்பட்டு வந்தார்.
ஆனால், விஸ்வாமித்திரர் வருவதற்குள்ளாக வசிஷ்டர், தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் கொடுத்து முடித்து விட்டார்.
அதை அறிந்ததும் விஸ்வாமித்திரர் கொதித்தார். “ஆ! வசிஷ்டரே! நீர் என்னை அவமானப்படுத்திவிட்டீர்.
தானம் வாங்கவந்த என்னை வெறுங்கையுடன் அனுப்ப எண்ணிவிட்டீர் போலிருக்கிறது” என்றார்.
அவரை அமைதிப்படுத்திய வசிஷ்டர், “விஸ்வாமித்திரரே! கோபம் வேண்டாம்! பொருட்கள் இல்லாவிட்டால் என்ன? நல்லவர்களுடன் சேர்ந்திருந்த சத்சங்க சாவகாசப்பலன், ஒரு நாழிகை (24 - நிமிடங்கள்) என்னிடம் உள்ளது.
அதில் கால் பங்கை உங்களுக்குத் தருகிறேன்” என்றார்.
அதைக்கேட்டதும் விஸ்வாமித்திரர் மேலும் கோபப்பட்டார்.
அப்போதும் வசிஷ்டர் கோபப்படவில்லை. “சரி! விஸ்வாமித்திரரே! நீங்கள் போய், உலகுக்கெல்லாம் ஔி கொடுக்கும் சூரியனையும், பூமியைத் தாங்கும் ஆதிசேஷனையும் நான் அழைப்பதாகச் சொல்லி அழைத்து வாருங்கள்!” என்றார்.
சற்று யோசித்த விஸ்வாமித்திரர், “சரி! போய்த்தான் பார்ப்போமே!” என்று எண்ணிப் புறப்பட்டார்.
போனவர், ஆதிசேஷனிடம் தகவலைச்சொல்லி அழைத்தார்.
ஆதிசேஷன், “சுவாமி! நான் வந்துவிட்டால், என் வேலையை யார் செய்வது?’’ எனக்கேட்க, விஸ்வாமித்திரர் சூரியனிடம் போய்த் தகவலைச் சொல்லி அழைத்தார். சூரியபகவானோ, “சுவாமி! உங்களுடன் நான் வந்தால், என் வேலையை யார் செய்வார்கள்? உலகம் இருண்டுபோய்விடாதா?” எனச் சொல்லி மறுத்தார்.
விஸ்வாமித்திரர் திரும்பி வந்து, நடந்தவற்றை வசிஷ்டரிடம் சொன்னார்.
உடனே வசிஷ்டர், “அப்படியா? சரி! ஒரு நாழிகை சத்சங்க சாவகாசப் பலன் என்னிடம் இருப்பதாகச் சொன்னேன் அல்லவா? அதில் கால் பங்கை ஆதிசேஷனுக்கும் கால் பங்கை சூரிய பகவானுக்கும் அளிக்கிறேன்.
இப்போது போய்க்கூப்பிடுங்கள்!” என்றார். விஸ்வாமித்திரரும் போய் ஆதிசேஷனிடமும் சூரிய பகவானிடமும் தகவல் சொல்லி அழைத்தார்.
அவர்கள் இருவரும் உடனே வந்து விட்டார்கள். “முதலில் மறுத்த நீங்கள், இப்போது வருகிறீர்களே எப்படி? இப்போது மட்டும் உங்கள் வேலையை யார் செய்வார்கள்?” எனக் கேட்டார்.
‘‘வசிஷ்டர் அளித்த கால் பங்கு சத்சங்க சாவகாசப்
பலன் எங்கள் வேலையைச் செய்யும்” என்று ஆதிசேஷனும் சூரியபகவானும் பதில் அளித்தார்கள்.
விஸ்வாமித்திரருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது.
சத்சங்க சாவகாசப் பலன், அதாவது நல்லவர்களின் கூட்டுறவு-சேர்க்கை எப்படிப்பட்ட சக்தி படைத்தது என்பதை உணர்ந்தார்.
அப்புறம் என்ன? விஸ்வாமித்திரர் பணிவோடு, வசிஷ்டரிடம் இருந்து கால் பங்கு சத்சங்க சாவகாசப் பலனைப்பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பினார்.
திரும்பிய விஸ்வாமித்திரர் தன் ஆசிரமத்தை நெருங்கும்போது, ஆசிரம வாசலில் மகாவிஷ்ணுவைப் போலத்தோற்றம் கொண்ட இருவர் இருப்பதைப் பார்த்தார்.
அவர்களை நெருங்கி விஸ்வாமித்திரர் கேட்பதற்குள், அவர்களே விஸ்வாமித்திரரை நெருங்கி வந்து, “சுவாமி! நாங்கள் பகவானின் ஏவலர்கள். பகவான் ஸ்ரீராமராக அவதாரம் செய்யப் போகிறார். அப்போது சீதாதேவிக்கும் ஸ்ரீராமருக்கும் திருமணம் செய்து வைக்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. பகவான் அறிவித்து விட்டு வரச் சொன்னார்.
எல்லாம் சத்சங்க சாவகாசப்பலன்” என்று சொல்லிச்சென்றார்கள்.
அதன்படியே யாக சம்ரட்சணம் என்ற பெயரில் ஸ்ரீராமரையும் லட்சுமணனையும் விஸ்வாமித்திரர் அழைத்துப் போனதும், சீதாகல்யாணம் நடந்ததும் தெரியுமே!
நல்லவர்களின் தொடர்பு என்ன பலனைத் தரும் என்பதை விளக்கும் கதை இது.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கஇருப்பதம் நன்று.
(ஔவையார் - மூதுரை)
-
*பதிவு 220* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
🏵️🏵️🏵️🏵️
அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |
*ப்ரபூத* -ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
பொருளை விளக்கிக் கொண்டிருந்தார்.
அதில் “ *பாதோஸ்ய விச்வா பூதாநி த்ரிபாதஸ்ய அம்ருதம் திவி”* என்ற வரியை அவர் விளக்குகையில்,
இவ்வுலகம் என்பது திருமாலுடைய சொத்தில் நான்கில் ஒரு பங்காகும்,
பரமபதமாகிய வைகுந்தம் இதை விட மூன்று மடங்கு பெரிதாகும் என்று பொருள் கூறினார்.
‘ *குத்* ’ என்றால் கால் பகுதியான இவ்வுலகம் என்று பொருள். ‘ *த்ரிக* ’ என்றால் மும்மடங்கு என்று பொருள்.
வைகுந்தம் இவ்வுலகைவிட மும்மடங்கு பெரியதாக இருப்பதால் ‘ *த்ரிககுத்* ’ என்று அழைக்கப்படுகிறது.
“மூன்று என்ற எண்ணுக்கு தான் எவ்வளவு சிறப்புகள் இருக்கின்றன!” என்று சொல்லி
மூன்று எனும் எண்ணிக்கை கொண்ட பொருட்களை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தினார்:
தத்துவங்கள் மூன்று அசேதனம் எனப்படும் ஜடப்பொருள், சேதனம் எனப்படும் உயிர்கள், இவற்றை இயக்கும் ஈச்வரனாகிய திருமால்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
His Holiness Jagadguru Pujyasri Maha Periyava is one of the most venerated personalities of India. His knowledge about various subjects was encyclopaedic.
The experiences presented in this group are an endless sea of gracious waves that draw us to Him. Many inspiring anecdotes of the greatest and most compassionate of saints unfold themselves brilliantly.
We offer our reverential prostrations at the Lotus feet of Pujya Sri Maha Periyava. Blessed were those who had these experiences with Sri Maha Periyava and equally blessed are the readers who have the opportunity to relish these experiences.
Millions of Periyava devotees sincerely believe that He is alive even today and is guiding us on the path of dharma.It is our earnest prayer that Sri Maha Periyava bless one and all.
Loka Samastha Sukhino Bhavanthu.
Jaya Jaya Shankara Hara Hara Shankara!!!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
https://chat.whatsapp.com/HjtiV3dcOcx0iDFp38pyl1
Experiences with Maha Periyava: Maha Periyava on Goddess Karpagambal, Mylapore
(Experiences of Srimathi Thirupurasundari (Chitra), daughter-in-law of Sri Ki Va Jagannathan, a very eminent Tamil scholar, poet and author)
In one of her darshan, Maha Periyava enquired about her place of residence at Chennai.
She replied, "I am staying at Mylapore."
"Do you go to the temple?” He asked.
"Yes, I always have a darshan of Goddess Karpagambal," she said.
Periyava asked, "What do you pray to her?"
She replied, "I pray for all.”
Periyava said, "I will tell you one thing. Please listen."
"Because of the punya you have done in previous births, you are living in Mylapore. She is Goddess Karpagambal. She is Karpagatharu. She is giving bhikshai. There may be so many janmas. Pray to her that all the births should be in Mylapore and you should have darshan of the lotus feet of Goddess Karpagambal."
https://chat.whatsapp.com/HjtiV3dcOcx0iDFp38pyl1
A beggar or even a dog cannot be in hunger at Her (Karpagambal's) sannidhanam, Periyava further added.
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
https://chat.whatsapp.com/HjtiV3dcOcx0iDFp38pyl1
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏
Courtesy: Sri Parthasarathi Srinivasan 🌹
https://chat.whatsapp.com/HjtiV3dcOcx0iDFp38pyl1
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jagadguru Shri Chandrasekharendra Saraswati Mahaswamigal (20 May 1894 – 8 January 1994) also known as the Sage of Kanchi or Mahaperiyava (meaning, "The great elder") was the 68th Jagadguru Shankara charya of the Kanchi Kamakoti Peetham. Mahaperiyava's discourses have been recorded in a Tamil book titled "Deivathin Kural" (Voice of God).
https://chat.whatsapp.com/HjtiV3dcOcx0iDFp38pyl1
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
To join please click the link
Whatsapp group
https://chat.whatsapp.com/HjtiV3dcOcx0iDFp38pyl1
Telegram group
https://t.me/+IoCYa6LdVBw5NWQ9
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
# Forwarded message
## Source unknown
https://t.me/+IoCYa6LdVBw5NWQ9
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️kh 🕉️🕉️🕉️
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
மகா விஷ்ணுவும் கொசுவும் ஒண்ணு, உனக்குத் தெரியுமா?"
(ச்ருதி-வேதம், ச்ருதி-காது)
பெரியவாளின் நகைச்சுவை- இரண்டு-கொசு+சாக்கு)
கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு நாள் மடத்தில் உள்ளவர்களிடம்," மகா விஷ்ணுவும்
கொசுவும் ஒண்ணு, உனக்குத் தெரியுமா?" என்றார் பெரியவா. வழக்கம்போல் தானே அந்தப் புதிரையும் விடுவிக்கிறார்.
"விஷ்ணுவின் கையில் சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கு,
கொசுவும் சக்கரமாய் சுற்றிக்கொண்டுதான் இருக்கு. கெட்டவர்கள் விஷ்ணுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். கண் வலிக்காரர்கள் கொசுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கி விடுவார்கள்.
ச்ருதியிடம் விளையாடுபவர் விஷ்ணு. [ச்ருதி=வேதம்]
ச்ருதி முனையில் ஙொய் என்று கத்திக்கொண்டு விளையாடும் கொசு [ச்ருதி=காது]!"
இந்த சிலேடை சொன்னதுக்குக் காரணம் மடத்தோடு
அவர்கள் இருந்த முகாமில் கொசுத்தொல்லை தாங்க முடியாது.
"அனந்தசயனம் பண்ணும் பெருமாள்தான் கொசுன்னு
நினைச்சுண்டேன்னா, பகவத் ஸ்மரணையோடு தூங்கலாம்!"
என்று எல்லோரையும் சமாதானம் செய்வாராம். இப்படி
எந்தக் கஷ்டத்தையும் நகைச்சுவை ததும்ப சரி செய்துவிடும் அழகையும் பெரியவாளிடம் அனுபவிக்க முடியும்.
ஒரு நீண்ட உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளும் கேட்டார்.
ஒரு வழியாக உபன்யாசம் முடிந்தது. உடனே பெரியவா"
சாக்கு கிடைச்சுதுன்னு நன்னா ரொம்ப நேரம் சொன்னயா?"என்றார்
"நீ ஒக்காந்துண்டிருந்தது ஒரு சாக்குமேலே...
அந்த சாக்கைச் சொன்னேன்!" என்று தமாஷ் பண்ணினாராம்
Jaya Jaya Shankara Hara Hara Shankara 🌹🌹🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
https://chat.whatsapp.com/FR6Gkcf9ArIGlNzUSjKZDO
https://t.me/+uFeoRWv-CwZjZTZl
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
கரை காணமுடியாத கருணை பெருங்கடலே ஞானப் பேரொளியே ஸாந்தரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
குறிப்பு:
"மஹா பெரியவா அனுபவங்கள்" குழு 1இல் இருந்து 12 வரை அனைத்து குழுவிலும் ஒரே பதிவு தான் வரும். ஒருவர் ஒருமுறை மட்டுமே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். புதிதாக இணைபவர் களை வரவேற்கிறோம்.
மஹா பெரியவரின் பரிபூரண அருளையும், வழிகாட்டுதலையும் பெற இணைவீர்
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
**மஹா பெரியவா அனுபவங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேர
https://chat.whatsapp.com/FR6Gkcf9ArIGlNzUSjKZDO
**மஹா பெரியவா அனுபவங்கள் டெலகிராம் குழுவில் சேர
https://t.me/joinchat/Hvll5YpWEqllOGQ1
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🪔🙏
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.'🌹🙏
"எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே"🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🪔
*பகிர்வு
*Source: unknown
Note
For any similar personal experiences, feedback, suggestions, comments please send the same to
*மஹா பெரியவா அனுபவம் comments"
Through this link
whatsapp
https://chat.whatsapp.com/FkwiM2rTWp64uLABQLK3pq
Telegram
https://t.me/+VSoyqk7sobAxYjVl
Please note that your name and details should be given clearly to avoid any fake or malicious content.
https://t.me/+uFeoRWv-CwZjZTZl
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ kh 🕉️🕉️🕉️
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
சங்கராம்ருதம் - 147
காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 
முசிறியில் ஏழ்மையான ஒரு பிராம்மண குடும்பம்.
குடும்ப தலைவருக்கு அங்கே உள்ள சிவன் கோவிலில் அர்ச்சகர் வேலை, சொற்ப வருமானம்.
அவர் மனைவிக்கோ ஈஸ்வரன் மீது இருந்த பக்தியை விட காஞ்சி முனிவர் மீது பக்தி அதிகம்.
சதா சர்வ காலமும் மகா பெரியவாளை மனதால் ஜெபித்துகொண்டே இருப்பார்.
இந்த தம்பதிக்கு வயது வந்த ஒரே பெண். அவளுக்கு இவர்களால் எப்படி திருமணம் செய்து வைக்க முடியும்?
'கோயில் காணிக்கையை கொண்டு குடும்பம் நடத்துவதே சிரமமாக இருக்கிறது..
இந்நிலையில் திருமணத்தை எப்படியாவது நடத்த வேண்டுமே' என்று புது கவலை ஒன்றுக்கு புத்துயிர் கொடுத்தார் அந்த வீட்டு தலைவி.
விரைவிலேயே ஒரு வரனும் வந்தது.
அந்த அளவுக்கு பெண் பாக்கியசாலியே.
அப்போது காஞ்சியில் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.
மகானை தினமும் தரிசித்த பிறகே தான் தொழிலை தொடங்கும் விசைத்தறி அன்பர் ஒருவர் இருந்தார்.
அவருக்கு பல விசைத்தறிகள் இருந்தன.
எல்லாம் பட்டு புடவை தயார் செய்யும் தறிகள்.
இந்த அதிபர் தரிசனத்துக்கு வந்த போது, அவரை அருகே அழைத்த பெரியவா, 'எனக்காக நீ ஒரு காரியம் செய்யனுமே !" என்றார்.
'சொல்லுங்கள் காத்திருக்கிறேன்".
மகான் நிதானமாக சொன்னார், 'முசிறியில் ஒரு ஈஸ்வரன் கோவில் இருக்கிறது.
அங்குள்ள அர்ச்சகர் பரம ஏழை.
அவர் பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது.
நீ அங்கு போய் தங்கி அந்த பெண்ணின் திருமணத்தை நல்லபடியாக முடித்து கொண்டு வா என்றார்!'
மறுவார்த்தை ஏதும் பேசாமல்
'அப்படியே செய்கிறேன்!' என்று பெரியவாளை வணங்கி விடை பெற்று கொண்டார்.
திருச்சியில் உள்ள தன் பிரதநிதிகளை அனுப்பி விசாரிக்க சொன்ன போது, அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கும் விஷயம் தெரிய வந்தது.
இதை அடுத்து அந்த பிரதநிதிகள் நேராக குருக்கள் வீட்டுக்கு போய், 'நாங்கள் காஞ்சி மகான் உத்தரவுபடி வந்திருக்கிறோம்.
உங்கள் மகளின் திருமணத்தை நல்ல விதமாக நடத்தி தர சொல்லி உத்திரவிட்டிரு க்கிறார்", என்று சுருக்கமாக சொன்னவர்கள், மடமடவென காரியங்களை கவனித்தனர்.
ஊரார் வியக்கும்படி அந்த திருமணம் வெகு விமரிசையாக நடை பெற்றது.
இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் பெரியவா பக்தையான குருக்களின் மனைவி தான் வாழ்நாளில் ஒரு தடவை கூட பெரியவாளை நேரில் பார்த்தது கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது !!
பெரியவா சரணம்...
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
https://chat.whatsapp.com/FR6Gkcf9ArIGlNzUSjKZDO
https://t.me/+uFeoRWv-CwZjZTZl
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
கரை காணமுடியாத கருணை பெருங்கடலே ஞானப் பேரொளியே ஸாந்தரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
குறிப்பு:
"மஹா பெரியவா அனுபவங்கள்" குழு 1இல் இருந்து 12 வரை அனைத்து குழுவிலும் ஒரே பதிவு தான் வரும். ஒருவர் ஒருமுறை மட்டுமே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். புதிதாக இணைபவர் களை வரவேற்கிறோம்.
மஹா பெரியவரின் பரிபூரண அருளையும், வழிகாட்டுதலையும் பெற இணைவீர்
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
**மஹா பெரியவா அனுபவங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேர
https://chat.whatsapp.com/FR6Gkcf9ArIGlNzUSjKZDO
**மஹா பெரியவா அனுபவங்கள் டெலகிராம் குழுவில் சேர
https://t.me/joinchat/Hvll5YpWEqllOGQ1
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.'🌹🙏
"எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே"🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*பகிர்வு
*Source: unknown
Note
For any similar personal experiences, feedback, suggestions, comments please send the same to
*மஹா பெரியவா அனுபவம் comments"
Through this link
whatsapp
https://chat.whatsapp.com/FkwiM2rTWp64uLABQLK3pq
Telegram
https://t.me/+VSoyqk7sobAxYjVl
Please note that your name and details should be given clearly to avoid any fake or malicious content.
https://t.me/+uFeoRWv-CwZjZTZl
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ kh 🕉️🕉️🕉️
*
0/1
a. பிரம்மத்தில் இணைப்பதன் மூலம் விடுதலை / Liberation by merging into Brahmanjyoti
b. வாழும் நிறுவனம் ஒரு ஆன்மா அது உடல் அல்ல / Living entity is a soul, not a body
c. ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான் / Soul and Super-soul are one and the same
d. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பக்தர்களின் மீது காட்டும் சிறப்பு கருணை / Special mercy shown by lord Sri Krishna on his devotees.
Correct answer
d. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பக்தர்களின் மீது காட்டும் சிறப்பு கருணை / Special mercy shown by lord Sri Krishna on his devotees.
d. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பக்தர்களின் மீது காட்டும் சிறப்பு கருணை / Special mercy shown by lord Sri Krishna on his devotees.
BG 9.1: பரம புருஷ பகவான் கூறினார்: என் அன்பான அர்ஜுனா, நீ என் மீது ஒருபோதும் பொறாமை கொள்ளாததால், இந்த மிக ரகசியமான அறிவையும், உணர்வையும் உனக்கு வழங்குவேன்.
BG 9.1: The Supreme Personality of Godhead said: My dear Arjuna, because you are never envious of Me, I shall impart to you this most confidential knowledge and realization, knowing which you shall be relieved of the miseries of material existence.
2. கீழ்க்கண்டவற்றில் எக்கருத்து பகவத் கீதையின் மேன்மையை உணர்த்துகிறது? / Which of the following define the glories of the Bhagavad Gita?
*
1/1
a. சமூகத்தின் மதத்தை விளக்குகிறது / Explains religion of society
b. கல்வி அறிவு தருகிறது / Gives academic knowledge
c. ஒரு அறிவியல் கதை / A scientific fiction
d. அனைத்து கல்வியின் அரசன் மற்றும் மிகத் தூய்மையான அறிவு / Supreme authority on education offering purest knowledge
ப.கீ: 9.2
இந்த அறிவு, கல்வியின் அரசனும், எல்லா இரகசியங்களிலும் இரகசியமானதும், மிகத் தூய்மையானதுமாகும். தன்னுணர்வின் அனுபவத்தை நேரடியாக அளிப்பதால் இது தர்மத்தின் பக்குவ நிலையாகும். இது அழிவற்றதும் பேரின்பத்துடன் செயலாற்றப்படுவதும் ஆகும்.
BG: 9. 2
This knowledge is the king of education, the most secret of all secrets. It is the purest knowledge, and because it gives direct perception of the self by realization, it is the perfection of religion. It is everlasting, and it is joyfully performed.
3. பகவத் கீதை 9.10 இன் படி, பிரபஞ்சத்தில் உள்ள அசைகின்ற அசையாத அனைத்தும் யாருடைய மேற்பார்வையில் இயங்குகின்றது? / According to BG 9.10, under whose direction do all the moving and non-moving beings in this material nature function?
*
1/1
a. பகவான் கிருஷ்ணர் / Lord Krishna
b. வருணன் / Varuna
c. பிரம்ம தேவர் / Brahma Deva
d. இந்திரதேவர் / Indra Deva
ப.கீ: 9.10
குந்தியின் மகனே, எனது சக்திகளில் ஒன்றான இந்த ஜட இயற்கை, எனது மேற்பார்வையில் செயல்பட்டு, அசைகின்ற மற்றும் அசையாதவற்றை எல்லாம் உண்டாக்குகின்றது. அதன் ஆணைப்படி, இந்தத் தோற்றம் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது.
BG: 9.10
This material nature, which is one of My energies, is working under My direction, O son of Kuntī, producing all moving and nonmoving beings. Under its rule this manifestation is created and annihilated again and again.
பகீ.9.14 - எப்போதும் எனது புகழை கீர்த்தனம் செய்து கொண்டு, திடமான உறுதியுடன் முயன்று கொண்டு, எனக்கு வந்தனை செய்தபடி, இந்த மகாத்மாக்கள் பக்தியுடன் நித்தியமாக என்னை வழிபடுகின்றனர்.
*
1/1
a. காவி உடை/ Wears a saffron dress
b. கழுத்தில் துளசி மணிகள் இருக்கும் / Has tulsi beads on the neck
c. கோவிலில் வாழ்பவர் / Lives in a temple and not outside
d. பரம புருஷரான கிருஷ்ணரின் பெருமைகளைப் பாடுவதில் எப்போதும் ஈடுபட்டு இருப்பார். / Always engaged in chanting the glories of the Supreme Lord Kṛṣṇa, the Personality of Godhead
Feedback
பகீ.9.14 - எப்போதும் எனது புகழை கீர்த்தனம் செய்து கொண்டு, திடமான உறுதியுடன் முயன்று கொண்டு, எனக்கு வந்தனை செய்தபடி, இந்த மகாத்மாக்கள் பக்தியுடன் நித்தியமாக என்னை வழிபடுகின்றனர்.
BG 9.14:Always chanting My glories, endeavoring with great determination, bowing down before Me, these great souls perpetually worship Me with devotion
b. எப்போதாவது கோவிலுக்கு சென்று வழிபடுபவர் / One who goes to temple occasionally
c. கடுமையான விரதமிருந்து வழிபடுபவர் / One who follows strict fasting
d. உறுதியுடன் மௌன விரதமிருப்பவர் / One who follows silent fasting
Feedback
*
1/1
a. தினமும் கீர்த்தனம்(ஜெபம்) செய்து உறுதியுடன் வழிபடுபவர் / Always chanting glories, endeavoring with great determination