ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 26.கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா- பதிவு 33
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
பதிவு 33
26 கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா
அப்போது ஒருபெண், அவர் கையில் ஒளிவீசும் குடத்தைக் கொடுத்து விட்டு மறைந்தாள். இதன்பின் கருவுற்ற நரசமாம்பா, பிறக்கப்போவது ஆண்குழந்தை என்று உணர்ந்தார்.
அந்த சமயம் காசி சென்ற நரசமாம்பாவின் கணவர் நரசிம்ம சாஸ்திரி, அங்குள்ள விநாயகர் முன்பு கைகூப்பி நின்றார். திடீரென்று அந்த சந்நிதியிலிருந்து ஒரு குழந்தை வெளிப்பட்டுத் தன்னுள் கலப்பதாக உணர்ந்தார். அதே நேரம் நரசமாம்பா ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க குழந்தைக்கு கணபதி என்று பெயரிட்டனர்.
அவரை அனைவரும் 'நாயனா' (தலைவர்) என்று அழைத்தனர்.
பிற்காலத்தில் வாசிஷ்ட காவ்ய கண்ட கணபதி முனி என்ற பெயர் ஏற்பட்டது.
தான் கணபதியின் அம்சம் என்பதை அவரே தன் எழுத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கணம், இலக்கியத்தில் பிரமிக்கத்தக்க அளவு புலமை கொண்ட நாயனாவுக்கு மந்திர மார்க்கத்திலும் ஈடுபாடு ஏற்பட்டது. 18 வயதில் திருமணம் ஆனாலும்,
திருத்தலங்களுக்குச் சென்று தியானம் செய்வதிலேயே அவருக்கு விருப்பமிருந்தது. ஒருமுறை புவனேஸ்வரில் இருந்தபோது, கனவில் அம்பாள் வந்து, அவர் நாக்கில் தேன் ஊற்றினாள். அந்தக் கணமே கடல் மடை திறந்தாற்போல் வடமொழியில் கவிதை பாடும் கவியானார்.
அவர் சொல்லச்சொல்ல அவருடைய சீடர்கள் எழுதிக் கொண்டனர்.
என்றும் இளையவள் நீ
என்றும் இருப்பவள் நீ
என்றுமே புதிராய்ச் சிரிப்பவள் நீ!
ஏழ்கடல் அலைகள் போல்
எண்ண முடியாதவள் நீ
என்னுள் தெரிபவள் நீ!
வங்காளத்தில் உள்ள நவத்வீபத்தில்
மிகச்சிறந்த அறிஞர்கள் பங்குபெற்ற ஓர் அவை கூடியது.
அங்கே சென்ற நாயனா, சான்றோர்கள் வைத்த தேர்வுகளில் வெற்றி பெற்று அவர்களைத் திகைக்க வைத்தார்.
அவர்கள் தான் அவருக்கு காவ்ய கண்ட என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டினர்.
நினைத்த மாத்திரத்தில் நெடுங்கவிதைகளை சொல்லக்கூடிய கவிஞர்'
என்பது அதன் பொருள்.
அப்போது அவருக்கு வயது 22.
புன்னகை ஒன்றினால் புவனங்கள் சமைத்தாய்
அன்னையே பார்கவி!
இன்னும் நான் என்சொல்?
இவர் மந்திர சாதனையில் பல சிகரங்களைத் தொட்டார்.
அவருக்கு எல்லா நாட்களுமே நவராத்திரி தான் என்று சொல்லுமளவு அம்பிகையைப் பல
வடிவங்களில் நேரில் பார்த்தார்.
அவர் இயற்றிய உமா சஹஸ்ரம் உலக பெயர் பெற்றது .. எல்லாம் அம்பாளின் தாம்பூலத்தின் மகிமை
அம்பாளின் தாம்பூல மகிமை பக்தர்களுக்கு என்னவெல்லாம் தரும் .. பட்டியலை பார்த்தால் தலை சுற்றி மயக்கமே வந்து விடும்
கல்வி,
நீண்ட ஆயுள்,
கபடு இல்லாத நட்பு,
நிறைந்த செல்வம்,
எப்போதும் இளமை,
பிணி இல்லாத ஆரோக்கியமான உடல்,
சலிப்பு வராத மனம்,
அன்பு நீங்காத மனைவி/ கணவன்
புத்திர பாக்கியம்,
குறையாத புகழ்,
சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம்,
எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்),
செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசு,
துன்பமில்லாத வாழ்வு,
உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை (பக்தர்களை) என்றும் பிரியாத கூட்டு.
1. விழுத்துணை ? (1)
2. துணையும், தொழும் தெய்வமும் பெற்றதாயுமாக வருவாள் ( பாடல் 2)
3. புத்தியில் வந்து பொருந்தும் தம்பதிகள் ( 3)
4. பாசத்தொடரை எல்லாம் வந்து வந்தரிப்பவள் (8)
5. மன்னளிக்கும் செல்வம் தருவது மட்டும் அல்லாமல் விண்ணளிககும் செல்வமும் , அழியா முத்தி வீடும் தருவாள் (15)
6 என் அறிவின் அளவிற்க்கு தன்னையே தாழ்த்திக்
கொள்பவளாய் வருவாள் (16)
7.அவள் பாதங்கள் என் பயத்தை அழித்து ஆண்டு கொண்ட பொற் பாதங்கள் (18)
8.எமன் வரும்போது அவனை என்னிடம் அண்டவிடாது வெளியில் நின்று ரக்ஷிக்கிறாள்(18)
9.மீண்டும் பிறவாமல் என்னை ஆண்டு கொள்வாள்(22)
10 என் உள்ளத்தே விளையும் கள் அவள் . களிக்கும் களியும் அவளே .. என் கண்மணியும் அவளே (23)
11. பிணிக்கு மருந்தும் அவளே -24
12.. வஞ்சப் பிறவியை உடைப்பவள் , 27
13.உள்ளம் உருகும் அன்பு படைப்பவள் 27
14 நெஞ்சத்தில் உள்ள அழக்கையெல்லாம் தன் அருட்புனலால் துடைப்பவள் -- 27
15. அழியா அரசு , செல்லும் தவநெறி ,சிவலோகம் தருபவள் ..28
16. வானுலகம் தருபவள் 34
17 என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இல்லாமல் ஒளிவெளி ஆகி இருப்பவள் 36
18.அமராவதியை ஆளும் அருள் 38
19 நாம் வாழ்வதற்கு அவள் பாதத் தாமரைகள் உண்டு , எமனிடம் இருந்து தப்பிக்க அவள் விழியின் கடை உண்டு 39
20 அவள் தன் அடியார்களின் நடு இருக்கக் பண்ணுவாள் ... நம் சென்னியின் மீது அவள் தன் பத்ம பாதம் பதித்திடுவாள் 41
21 மீண்டும் இந்தத் தோலும், ரத்தமும், குடலும், தசையும் கொண்ட உடற்கூட்டை விரும்பிப் பிறக்க மாட்டார்கள் 48
22.. மரணம் பிறவி இரண்டும் எய்தார்...51
23. தேர், குதிரை, மதங்கொண்ட யானை, மாபெரும் மணிமகுடம், நவமணிகளா லான அழகிய பல்லக்கு, பிற மன்னர்கள் கப்பமாகச் செலுத்திய பொற்குவியல், விலைமதிப்பு மிக்க பொன்னாரம் ஆகிய உன் அழகிய அணிகலன் களெல்லாம், 52
24 வண்மை , குலம் கோத்திரம் கல்வி குணம் 67
25 . படையாத தனம் இல்லை 68
26 தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே 69
27 இந்திர பதவி யையும், ஐராவதம் என்ற யானையையும், ஆகாய கங்கையையும், வலிமை மிகுந்ததான வச்சிராயுதத்தையும் கற்பகச் சோலையையும் 83
28 பல்வகை இசைக்கருவிகள் முழங்க வெள்ளை யானை யின் மேல் ஏறிச் செல்லக் கூடிய இந்திர பதவியை அருள் பவள் 91
29 தம்மால் இயன்ற அளவு தொழும் அடியவர்கள் ஏழுலகங்களையும் ஆட்சி புரியக் கூடிய அதிபர்கள் எனத்தக்க அளவில் வளமான வாழ்வைப் பெறுவர்.96
30 அபிராமியன்னையின் மூங்கிலை யொத்த அழகிய நீண்ட திருத்தோள் களும்,
கரும்பு வில்லும், ஆணும், பெண்ணும் ஒருவரை யொருவர் விரும்பக் காரணமாக உள்ள மணம் மிகுந்த அழகிய ஐந்து மலரம்புகளும்,
வெண் முத்தனைய புன்முறுவலும் மானின் கண்ணையொத்த
திருவிழிகளும் எளியவனாகிய அடியேனின் நெஞ்சில் எப்போதும் குடிகொண் டிருக்கின்றன. 100
31 அவளை தொழுவோர்க்கு ஒரு தீங்கும் இல்லை
👌👌👌👌👌👌👌👌👌👌
Comments
முத்தமிழால்
வைதாரையும் ஆங்கு வாழ வைப்போன்,
வெய்ய வாரணம் போல்,
கை தான் இருபது உடையான்
தலைப் பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன்,
உமையாள் பயந்த இலஞ்சியமே!
உமை அன்னை கொஞ்சிடும் குற்றால மலை இலஞ்சி முருகன்!
இலஞ்சி என்னும் குளத்தில் உதித்த குகன்!
இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சியில் அமர்ந்த பெருமாளே!
முத்தமிழால் திட்டினாலும், அச்சோ தமிழ் பேசுகிறானே என்று, ஆங்கே அப்போதே வாழ வைப்பான்!
தாழப் பேசியவனுக்கும் வாழப் பேசுபவன் என் முருகன்!
யானை போல் மதம் கொண்ட, இருபது கை இராவணனை....பத்து தலையும் "கத்தரித்தான்" -
பேப்பரைக் கத்தரித்தால் எப்படி களேபரம் ஆகாமல், மென்மையாக, அதே சமயம் சரக் சரக் என்று கத்தரித்து விடுமோ, அது போல் "கத்தரித்தானாம்"! - ஏன்?
*பதிவு 375* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*90 ப்ரஜாபவ*
👍👍👍
ஸுரேச’: ச’ரணம் சர்ம
விச்’வரேதா: *ப்ரஜாபவ* : |
அஹ: ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ஆனால் அந்த தெய்வீகமான அன்பில்கூட என் மகன், எனக்கு மட்டுமே சொந்தம் என்ற பாச உரிமை (possessiveness) மற்றும்
அன்பின் மிகுதியால் மகனின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் இடமுண்டு.
ஆனால், மகன் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடும் அக்கறையோடும்
கூடியது தந்தையின் பாசம்!” என்றான் சகதேவன்.
*பதிவு 376*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ராதௌ⁴தேபி ச பத்³மராக³லலிதே
ஹம்ʼஸவ்ரஜைராஶ்ரிதே .
நித்யம்ʼ
ப⁴க்திவதூ⁴க³ணைஶ்ச ரஹஸி ஸ்வேச்சா²விஹாரம்ʼ குரு
ஸ்தி²த்வா மானஸராஜஹம்ʼஸ கி³ரிஜாநாதா²ங்க்⁴ரிஸௌதா⁴ந்தரே .. 46..👏👏👏🙏🙏🙏
இந்த ஸ்லோகத்தில் மனதை அன்ன பட்சியாக வர்ணிக்கிறார் ஆச்சாரியாள்
ஏ ராஜ அன்னமே .. நீ சந்தோஷமாக வாழ உனக்கு ஓர் உபாயம் சொல்கிறேன் கேள்
பரமேஸ்வரனின் திருவடிகள் எனும் ராஜ மாளிகைகள் இருக்கிறது ..
அவன் நகங்களின் ஒளி கண்ணை பறிக்கும் அழகு கொண்டது ...
முடியில் உள்ள சந்திரன் பாதங்களுக்கு சுண்ணாம்பு அடித்ததைப்போல் இன்னும் ஒளியை சேர்க்கிறது ..
அவன் பாதங்கள் பொன்நிறமானவை.. அவை பத்மராக கற்கள் வழி எங்கும் சிந்தியதை போல் சிவப்பாக இருக்கின்றன ...
அங்கே பக்தி எனும் அழகிய பெண் ஒருத்தி வசிக்கிறாள் அங்கே சென்றால் அவளுடன் நீ இன்பமாக வாழலாம் 🪷🪷🪷
ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார் பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார் பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறு குறுப்பு அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பெரியவரை நெருங்கினான்.
ஐயா…!
என்ன தம்பி?
உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?
ஆமாம்!
அதில் என்ன தெரிகிறது?
நான் பார்த்தால் என் முகம் தெரியும்
நீ பார்த்தால் உன் முகம் தெரியும்
அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?
ஆமாம்!
பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
பெரியவர் புன்னகைத்தார்.ன
சாதாரணக் கண்ணாடிதான் ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய
பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?
அப்படிக் கேள் உங்களில் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கண்ணாடி போன்றவர்கள்
எனக்கு ஒன்றும் புரியவில்லை
ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும் எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இது தெளிவுபடுத்துகிறது.
எப்படி?
நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும் இல்லை குறைப்பதும் இல்லை உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?
“ஆமாம்”
அதே போல் உன் சகோதரனிடம் நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்தஅளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும் எதையும் மிகையாகவோ ஜோடித்தோ சொல்லக் கூடாது துரும்பைத் தூண் ஆக்கவோ கடுகை மலையாக்கவோ கூடாது இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!
அடுத்து…?
கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும் இல்லையா?
ஆமாம்!
அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும் அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!
அப்புறம்?
ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ எரிச்சலோ படுகிறாரா?
இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்.
சரியாகச் சொன்னாய் அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும் அந்தக் குறைகள் நம்மிடம்
இருக்குமேயானால் திருத்திக் கொள்ள வேண்டும் இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்.
ஐயா…! அருமையான விளக்கம் நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா அப்பப்பா!யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும் என்று அந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு அவரை வணங்கி சென்றான்.
ஆம் உறவினர்களே & நண்பர்களே... இனி கண்ணாடி முன்னால் நின்று உங்கள் முகத்தை பார்க்கும்போது எல்லாம் இந்த அறிவுரைகளை மறந்துவிடாதீர்கள்... இவை உங்களின் மனத்தை அலங்கரிக்கும்.
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
நமது பரம்பரையின் முக்கியமான அடிப்படை ஈச்வரனே ஆகும். ஈச்வரனிடம் பக்தியும் ஸ்ரத்தையும் கொண்டால் நமக்கு எந்த சூழ்நிலையிலும் அமைதி கிடைக்கும். நமக்கு எவ்விதமான கவலைகள், கஷ்டங்கள் இருந்தாலும், ஓர் ஆலயத்தில் பகவத் சன்னிதியில் பத்து நிமிடங்கள் அமர்ந்தால், நமது மனம் சாந்தமாகி நமது பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். பழக்கத்தின் மூலம் பல ஆஸ்திகர்கள் இத்தகைய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். “கோயிலுக்குப் போய் பகவத் சன்னிதியில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். எனது மனம் மிகவும் பிரஸன்னமாகி விட்டது” என்று பலர் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். ஈச்வர விஷயத்தில் உள்ள நம்பிக்கையானது எல்லா காலங்களிலும் எல்லா நிலைகளிலும் நமக்கு நன்மையையே தரும். ஆகவே, இறை நம்பிக்கை மிகவும் அவசியம்.
பூமியைத் தாங்குபவர்
கோபத்தை சீர் செய்பவள்
-------------------------------------------------- ------
🌹🌺Panthaman Srihari sends a pot to every human being born on this earth...
🌺The whole pot is full of all the treasures we need to live life to the fullest!
🌺 Food, clothes, shelter, father, mother, wife, children, friends, relations, education, mercy, peace, peace, happiness, goodwill, love, health, devotion, sacrifice, etc., contain many such treasures.
🌺But no treasure is fully enjoyed by us,
🌺 Because all our eyes are on the next pot!
🌺Some people will go with a copper pot and we will miss it!
🌺Some will go with a silver bowl and we will long for it,
🌺 A few people will go with a gold pan and we will yearn for it!
🌺 Somehow they will struggle to reach that luxurious pot, but they do not know that any treasure in the clay pot is not complete in it!
🌺 Go near and ask how only you got the gold pan,
He also gave me the earthen pot,
🌺 When I said that I have earned a lot and bought this pot,
They run and earn and somehow buy gold (house, vehicle, several lakhs, why even crores),
🌺 But you can't keep anything inside, only the outside world will be proud and proud!
🌺Happy to find this pot, they throw away the earthen pot and take the treasures from it and put it in the golden pot.
🌺Some will fit
Some will scatter,
They will live without worrying about scattered things and live with a gold pan
🌺 Times change
All the hidden treasures
They lose their normal state and can't stay there and leave the pot!
🌺 In the last days we will be unable to live in a broken pot, we will lose our treasures and wander the streets,
🌺 Various enemies will be brutally sitting on the streets in the name of diseases to attack us!
🌺 One side of the person before crossing the street
Let's run away with bites and bleeding wounds,
🌺 Only then will you know the beauty of the treasure of health!
🌺 Only then will I remember that I threw it out because it didn't fit inside the gold pan!
🌺 Let's seek relationships and friendships to cure blood wounds!
🌺 Now you will understand that it is wrong to drive away falsely that there is no room in the pot,
🌺 Let's look for that earthen pot to protect us from diseases in the absence of anyone...
🌺The earthen pot can be seen leaning in a broken condition on some street,
🌺 Let's run with desire,
The treasures of mother and father are dead,
🌺 All the treasures of wife, children, relationships, friendships, peace, peace and happiness will be destroyed!
🌺 The treasure of health is fighting for life!
🌺Only the treasures of love, kindness, sacrifice, devotion, without any harm, without any expectations.
Applying medicine to the injured!
🌺 Realize the importance of earthenware and properly
When you want to live
🌺excuse me...🌺🌹
🌺The time I gave you is over,
Can you return the pot and the treasures ..!? .
One will stand by asking ..!..
🌺 Who are you..??.. then I am
God will carry away the broken pot and the ruined treasures as He said!
🌺 To look at him longingly, hear some rough noises behind and look back, all the diseases that have overtaken us.
With a cruel face
Run with bloodlust!
🌺Then what happened in the blink of an eye!!
🌺Check where you keep that pot and treasures given by Bharandaman.
🌺Panthaman who created us can come anytime looking for a pot.🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
--------------------------------------------------------
🌹🌺இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பரந்தாமன் ஸ்ரீஹரி ஒரு பானையை கொடுத்து அனுப்புகிறார்...
🌺அந்த பானை முழுவதும் நாம் நிறைவோடு வாழ்வதற்கு தேவையான எல்லா பொக்கிஷங்களும் நிறைந்திருக்கும்!
🌺உணவு, உடை, இருப்பிடம், அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவுகள், கல்வி, கருணை, அமைதி, நிம்மதி, சந்தோஷம், நல்லெண்ணம், அன்பு, ஆரோக்கியம், பக்தி, தியாகம் இதுபோன்ற நிறைய பொக்கிஷங்கள் அதில் இருக்கும்,
🌺ஆனால் எந்த பொக்கிஷத்தையும் நாம் முழுமையாக அனுபவிப்பது இல்லை,
🌺காரணம் நம் பார்வையெல்லாம் அடுத்தவன் பானைமீது தான் இருக்கிறது!
🌺ஒரு சிலர் செம்பு பானையோடு செல்வார்கள் அதைப்பார்த்து ஏங்குவோம்!
🌺ஒரு சிலர் வெள்ளிப்பானையுடன் செல்வார்கள் அதைப்பார்த்து ஏங்குவோம்,
🌺ஒரு சிலர் தங்கப்பானையோடு செல்வார்கள் அதைப்பார்த்தும் ஏங்குவோம்!
🌺எப்படியாவது அந்த ஆடம்பரமான பானையை அடைந்துவிடவேண்டும் என்று போராடுவார்கள், ஆனால் இவர்களுக்கு தெரிவதில்லை மண்பானையில் இருக்கும் எந்த பொக்கிஷமும் அதில் முழுமையாய் இல்லையென்று!
🌺அருகில் சென்று உங்களுக்கு மட்டும் எப்படி தங்கப்பானை கிடைத்தது என்று கேட்க,
எனக்கும் மண்பானை தான் கொடுத்தார்,
🌺நான் தான் நிறைய சம்பாதித்து இந்த பானையை வாங்கினேன் என்றதும்,
ஓடி ஓடி சம்பாதித்து எப்படியோ தங்கப்பானை (வீடு, வாகனம், பல லட்சம், ஏன் கோடிகள் கூட ) வாங்கிவிடுவார்கள்,
🌺ஆனால் உள்ளே எதையும் வைக்கமுடியாது, வெளியுலகுக்கு மட்டும் தங்கப்பானை கவுரவமாகவும் பெருமையாக இருக்கும்!
🌺இந்த பானை கிடைத்த சந்தோஷத்தில் மண்பானையை தூக்கி எறிந்துவிட்டு அதில் இருந்த பொக்கிஷங்களை எடுத்து தங்கப்பானையில் திணிப்பார்கள்
🌺சில பொருத்துக்கொள்ளும்
சில சிதறிவிடும்,
சிதறியவற்றை பற்றி கவலைப்படாமல் தங்கப்பானையோடு வாழ்வதே சந்தோஷம் என்று வாழ்வார்கள்
🌺காலம் மாற மாற
அடைத்து வைத்த பொக்கிஷங்கள் எல்லாம்
தங்களது இயல்பு நிலையை இழந்து அங்கே இருக்க முடியாமல் பானையை சிதைத்துக்கொண்டு வெளியேறிவிடும்!
🌺இறுதிகாலத்தில் சிதைந்த பானையில் இருக்கவும் முடியாமல், பொக்கிஷங்களையும் இழந்துவிட்டு, தெருத்தெருவாக அலைவோம்,
🌺நம்மை தாக்குவதற்காக விதவிதமான எதிரிகள் நோய்கள் என்ற பெயரில் கொடூரமாக தெருக்களில் உட்கார்ந்து இருப்பார்கள்!
🌺தெருவை கடப்பதற்குள் ஆளுக்கொரு பக்கம்
கடித்து குதற ரத்தகாயங்களோடு தப்பித்து ஓடிவருவோம்,
🌺ஆரோக்கியம் என்ற பொக்கிஷத்தின் அருமை அப்போதுதான் தெரியும்!
🌺தங்கப்பானைக்குள் அடங்காததால் வெளியே வீசியெறிந்தது அப்போதுதான் நினைவுக்கு வரும்!
🌺ரத்த காயங்களுக்கு மருந்துபோட உறவுகளையும் நட்பையும் தேடுவோம்!
🌺பானையில் இடமில்லை என்று பொய்யாக விரட்டியடித்தது தவறு என்று இப்போது புரியவரும்,
🌺யாருமற்ற நிலையில் நோய்களிடமிருந்து காத்துக்கொள்ள அந்த மண்பானையாவது கிடைக்காதா என்று தேடி அலைவோம் ...
🌺ஏதோ ஒரு தெருவோரத்தில் உடைந்த நிலையில் சாய்ந்தபடி அந்த மண்பானை கண்ணில் தெரியும்,
🌺ஆசை ஆசையாய் ஓடிச்சென்று பார்ப்போம்,
அம்மா அப்பா என்ற பொக்கிஷங்கள் இறந்துபோயிருக்கும்,
🌺மனைவி குழந்தைகள் உறவுகள் நட்புகள் அமைதி நிம்மதி சந்தோஷம் என்ற பொக்கிஷங்கள் எல்லாம் சிதைந்துபோயிருக்கும்!
🌺ஆரோக்கியம் எனும் பொக்கிஷம் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும்!
🌺அன்பு கருணை தியாகம் பக்தி என்ற பொக்கிஷங்கள் மட்டும் எந்தவித சேதமும் இன்றி எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி
காயம் பட்டவர்களுக்கு மருந்து தடவிக்கொண்டு இருக்கும்!
🌺மண்பானையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நல்லமுறையில்
வாழவேண்டும் என்று நினைக்கும் போது
🌺excuse me...🌺🌹
🌺உங்களுக்கு கொடுத்த time முடிஞ்சிடுச்சி,
அந்த பானையையும் பொக்கிஷங்களையும் திருப்பி தரமுடியுமா ..!? .
என்று கேட்டபடி ஒருவர் நிற்பார் ..!..
🌺யார் நீங்க..??.. என்றால் நான் தான்
கடவுள் என்று சொல்லியபடி உடைந்த பானையையும் சிதைந்த பொக்கிஷங்களையும் தூக்கிச்செல்வார்!
🌺ஏக்கத்தோடு அவரையே பார்த்து நிற்க, பின்புறத்தில் ஏதோ கரடுமுரடான சத்தங்கள் கேட்டு திரும்பி பார்த்தால் நம்மை தேடியலைந்த நோய்களெல்லாம
கொடூரமான முகத்தோடு
ரத்தவெறியுடன் ஓடிவரும்!
🌺அப்புறமென்ன கண்ணிமைக்கும் நேரத்தில் கதம் கதம்!!
🌺பரந்தாமன் தந்த அந்த பானையையும் பொக்கிஷங்களையும் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
🌺நம்மை படைத்த பரந்தாமன் பானைதேடி எப்போது வேண்டுமானாலும் வரலாம்.🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
சிவபுராணத்தின் பெருமைகள்
****************************************
படித்ததில் பிடித்தது, மகிழ்ந்தேன் பகிர்ந்தேன்
இதை எழுதியவர்க்கு எனது உளம் நிறைந்த பாராட்டுகளும் நன்றியும்
==================================
தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.
வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ‘ திருவாசகத்தை’ நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.
மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.
எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.
மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.
மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.
ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் ” ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்” என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.
தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.
மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி ” இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் ” என்றார்.
அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.
சிவபுராணத்தின் பெருமைகள்
****************************************
படித்ததில் பிடித்தது, மகிழ்ந்தேன் பகிர்ந்தேன்
இதை எழுதியவர்க்கு எனது உளம் நிறைந்த பாராட்டுகளும் நன்றியும்
==================================
தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.
வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ‘ திருவாசகத்தை’ நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.
மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.
எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.
மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.
ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் ” மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்” எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.
மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.
ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் ” ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்” என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.
தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.
மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி ” இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் ” என்றார்.
அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.
ஆக , ஆனி – மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.
சிறப்பு – 1 நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.
சிறப்பு – 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும்.
சிறப்பு – 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும்.
சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் போற்றி என முடியும்.
இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.
சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.
திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.
ரமண மகிஷி , திருவண்ணிமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.
காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.
பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.
இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.
“புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்” என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
திருச்சிற்றம்பலம்
மாணிக்கவாசகர் மலரடிகள் போற்றி !!!
*பதிவு 389* 🙏🙏🙏started on 7th Oct 2021
(நிர்குண உபாசனை) (132-151)
🪷🪷🪷
கோடி வருடங்கள் யுகங்களுக்கு முன்னே எப்படி இருந்தாளோ அப்படியே இன்றும் நாளையும் இருப்பாள்
அதே கருணை அதே தாய்மை அதே காரூண்யம்...
கோடி கோடி நபர்கள் அம்மா தாயே என்றே அழைத்து விட்ட பின்பும் இன்றும் அதே ஆர்வத்துடன் தன் நாமங்களை தினமும் சொல்லி எந்த குழந்தையாவது முக்தி வேண்டாதா தன்னிடம் என்று துடிப்பவள் 🙏🙏🪷
*பதிவு 387* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99
🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
These six Chakraas are but temporary stages or planes wherein the Kundalini rests awhile, avowedly for mastering them, while the Sahasraaraa is her permanent abode, whence the practioner should not lose sight of his final goal, Nirvaanaa, beguiled by the temptations offered by the psychic powers attainable at the lower centres, but should lead the Kundalini on to the Sahasraaraa, there to effect her union with her Lord.
Up to the moment of such blending, the practitioner retains his individual consciousness and thereafter enters the blissful state of Nirvaanaa as long as the Kundalini rests in the Sahasraaraa prior to her descent therefrom.
The duration of her staty depends on the strength of practice and the previous experience of the practitioner.🍁🍁🍁
திருமலையில் பெண்குரங்குகள் ஒரு கிளைவிட்டு கிளை தாவுமன்றோ 🐒
வானவர் பூமாலை உனக்கே தொடுத்த வண்ணம் இருப்பார் அன்றோ 🌺🌸💐🍁🍂🌹
அப்படி ஆராதனை செய்ய வருவோர் ஏழுமலையின் சிகரங்களில் கொஞ்சம் இளைப்பாறுவார்கள் அன்றோ ?
அவ்வளவு உயர்ந்தமலை அன்றோ அது?
அரங்கத்தில் திருவனந்தாழ்வான் மேல் பள்ளிகொண்ட பெருமானுடைய பட்டாடை செவ்வானம் அன்றோ ?
பிரமனைப் படைத்த அழகிய நாபிக்கமலமும்
செந்நிறப் பீதாம்பரம் இவற்றின்மேல் என் உயிர் படிந்துவிட்டது என்றால் அதில் ஏதும் வியப்பு உண்டோ *கண்ணா* ??
மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
சந்திசெய்ய நின்றான்,
அரங்கத்(து) அரவின் அணையான்
அந்திபோல் நிறத்தாடையும், அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலதன்றோ
அடியேன் உள்ளத்(து) இன்னுயிரே🪷🪷🪷
சொல்லுவாச லோரைந்து சொம்மிவிம்மி நின்றது
நல்லவாச லைத்திறந்து ஞானவாச லூடுபோய்
எல்லைவாசல் கண்டவ ரினிப்பிறப்ப தில்லையே. 111
அருத்தடைத்த வாசலாகவும், சொர்க்கக் வாசலாகவும் உள்ள பத்தாம் வாசலை அறிந்து கொள்ளுங்கள்.
அங்குதான் ஒரேழுத்து பஞ்சாட்சரமாக மின்னிக்கொண்டு நிற்கிறது.
அந்த நல்ல வாசலில் ஐந்தெழுத்தை ஓதி நந்தி விலகி ஈசன் உறையும் ஞான வாசலில் சேந்து இன்புறலாம்.
இதுவே இறைவன் இருக்கும் எல்லைவாசல் என கண்டறிந்து தியானமும் தவமும் புரிபவர்கள் இனி இப்பூமியில் பிறப்பது இல்லையே!
ஆசைகள் என்ற கயிற்றை முன் நிறுத்தி பிரபஞ்சத்தை இயக்குபவள்
மாயை காட்டி வெறும் நிழலை நிஜமாக்கி நிஜத்தில் வாழவைக்கின்றாய்
நிழல் மறையும் முன்னே நிஜத்தில் நீ வருவாயோ ...
நினைவெல்லாம் உன் நாமம் இருந்தால் மாயையை என்னை என் செய்யும் .. ??
திரை அகன்று உன் திவ்விய தரிசனம் கிடைத்தால் புரியாதோ சிதம்பர ரகசியம் எனக்கே 🍂🍁
புவனம் பூத்தவளே மறைத்தல் வேண்டாம்
மண்ணில் உள்ளவரை உன் மடி மீதே உறங்க நிஜத்தில் வாராயோ ?
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 154* 💐💐💐
முகுந்தமாலா 24, 25 ஸ்லோகங்கள் பொருளுரை
गोपीलोचनचातकाम्बुदमणिः सौन्दर्यमुद्रामणिः
यः कान्तामणिरुक्मिणीघनकुचद्वन्द्वैकभूषामणिः
श्रेयो देवशिखामणिर्दिशतु नो गोपालचूडामणिः ॥ २५ ॥
ப⁴க்தாபாயபு⁴ஜங்க³கா³ருட³மணிஸ்த்ரைலோக்யரக்ஷாமணிர்
கோ³பீலோசனசாதகாம்பு³த³மணி: ஸௌந்த³ர்யமுத்³ராமணி: |
ய: காந்தாமணிருக்மிணீக⁴னகுசத்³வந்த்³வைகபூ⁴ஷாமணி:
ச்ரேயோ தே³வசிகா²மணிர்தி³சது நோ கோ³பாலசூடா³மணி: ॥ 25 ॥
शत्रुच्छेदैकमन्त्रं सकलमुपनिषद्वाक्यसम्पूज्यमन्त्रं
संसारोत्तारमन्त्रं समुपचिततमसः सङ्घनिर्याणमन्त्रम् ।
सर्वैश्वर्यैकमन्त्रं व्यसनभुजगसन्दष्टसन्त्राणमन्त्रं
जिह्वे श्रीकृष्णमन्त्रं जप जप सततं जन्मसाफल्यमन्त्रम् ॥ २६॥
சத்ருச்சே²தை³கமந்த்ரம் ஸகலமுபனிஷத்³வாக்யஸம்பூஜ்யமந்த்ரம்
ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசிததமஸ: ஸங்க⁴னிர்யாணமந்த்ரம் |
ஸர்வைச்வர்யைகமந்த்ரம் வ்யஸனபு⁴ஜக³ஸந்த³ஷ்டஸந்த்ராணமந்த்ரம்
ஜிஹ்வே ஸ்ரீக்ருʼஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜன்மஸாப²ல்யமந்த்ரம் ॥
ன்னு ஒரு ஸ்லோகம்.
When your actions have had a positive impact on people you DON'T EVEN KNOW, you have experienced one aspect of humility.
Have a Tuesday filled with terrific moments.
Teachings and philosophies cannot transform anyone - they can only inspire you.
The power of relationships is much stronger than the power of knowledge and money.
A truly mature mind will be able to allow the thoughts without blocking them but will retain only the ones which are pure and positive.
Vision is an art of seeing things that are not yet visible.
As you start and end the day, be thankful for every little thing in your life. You will come to realize how blessed you really are.
To heal a wound we must stop scratching it.
Once the River became very proud of the tremendous flow of its water.
The River felt that I am so powerful that I can wash away everything with me - the mountains, houses, trees, animals, humans, etc.
One day the River proudly asked the Ocean, "Tell me, what should I bring for you ? Houses, animals, humans, trees, whatever you want, I can uproot and bring with me."
The Ocean understood that the River has become egoistic.
He said to the River, "If you want to bring something for me, Uproot some Grass and bring it."
The River said, "Is that all, I'll bring it right away."
While passing through the field, the River exerted its full force on the grass, but the Grass did not get uprooted.
The River tried several times, but failed.
Eventually the River gave up and reached the Ocean and said,
"I can uproot trees, houses, mountains etc.
But whenever I apply force to uproot the grass, it bends down and I have to pass from above, empty-handed."
The Ocean listened carefully to the River and said with a smile,
"Those who are hard and rigid like mountains and trees,
are easily uprooted.
But the one who has learned the humility of Grass, cannot be disturbed even by the fiercest of winds or violent storms."
Happiness in Life, does not mean fighting battles, but avoiding them.
To retreat skilfully is also a victory in itself, because Arrogance turns even Angels into Devils.
And Humility turns even an Ordinary Person into an Angel.
The Journey of the Seed is upto the Tree, the Journey of the River, upto the Ocean, and the Journey of Man is to the Divine.
Whatever is happening in the world is the law of Nature.
You and I are just Instruments.
8.விராவைர் மாஞ்ஜீரை: கிமபி கதயந்தீவ மதுரம்
புரஸ்தா தானம்ரே புரவிஜயிநி ஸ்மேர வதனே
வயஸ்யேவ ப்ரௌடா சிதிலயதி யா ப்ரேம கலஹ
ப்ரரோஹம் காமாக்ஷ்யா: சரணயுகலீ ஸாவிஜயதே (8)
எதிரில் வணங்குகிற சிவனிடம் சிலம்புகளின் ஒலிகளால் எதனையோ இனிது பேசி, புன்னகை பூத்த அவருடன் மிகவும் பழகிய தோழி போல், ஊடல் கலகத்தின் காரணத்தைத் தளரச் செய்கிற காமாக்ஷியின் திருவடிகள் நன்கு விளங்குகின்றன. (8)
வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கருங்காலி பற்றிய பதிவுகள் :*
கருங்காலி என்பது ஒரு பழமையான மர வகையை சர்ந்தது. பல ஆண்டுகள் வாழ்ந்த கருங்காலி மரத்தின் கருமையான நடுப்பகுதியை வெட்டி நம் தேவைக்கு ஏற்ப சுவாமி சிலைகள், வீட்டு உபயோக பொருட்கள் செய்யப்படுகிறது.
குறிப்பாக பழைய காலத்தில் உலக்கை கருங்காலி மரத்தில் தான் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். கருங்காலி மரம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது.
கருங்காலி மரத்தின் வேர், பட்டை, பிசின் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. துவர்ப்பு தன்மை மிகுந்தது. நீரிழிவு, பெருவயிறு மற்றும் இரத்த குறைபாட்டால் ஏற்படும் நோய்களும் சரியாகும்.
கருங்காலி மரத்தின் வேரை எடுத்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து நல்ல தண்ணீரில் ஊற வைத்து பிறகு அந்த தண்ணீரை கசாயமாக காய்ச்சி வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும்.
வயிற்றில் உள்ள புழு, பூச்சிகளை வெளியேற்றும். நீரிழிவு நோயாளிகள் தினமும் இருவேளை இந்த கஷாயத்தை அருந்தினால் சர்க்கரையின் அளவு குறையும்.
ரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரிக்கும். பித்தத்தை குறைக்கும். கருங்காலி மரத்தின் பிசினை இடித்து பொடியாக்கி தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் வலுவாகும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.
பெண்களின் கர்ப்பப்பை வலுவாக்கும். அதிக இரத்தப் போக்குள்ள பெண்களுக்கு நல்ல பலனளிக்கும். பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை படுதல் பிரச்சனையை சரிசெய்யும்.
கருங்காலி பிசின் உடலின் நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரிசெய்யும். கருங்காலி கட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை கொண்டு குளித்தால் உடல் வலி, உடம்பு சோர்வு அனைத்தும் நீங்கும்.
கருங்காலி மாலையானது நன்றாக செதுக்கி மணிகளாக செய்து 108 மணிகளை கொண்டு மாலையாக செய்யப்படுகிறது. கருங்காலி மாலை கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது.
ஆகையால் நம்முடைய அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் போக்கி நேர்மறை எண்ணங்களை நம்முள் செலுத்தக்கூடிய தன்மை நிறைந்தது.
பொதுவாக கோயில்களின் கலசங்களில் கருங்காலி கட்டையை போடுவார்கள். எதற்காக என்றால் எப்படிப்பட்ட கதிவீச்சுகளையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் என்பதற்காகத்தான்.
*குறிப்பு :*
இந்த அற்புத சக்தி வாய்ந்த உயர்தர கருங்காலி மாலையானது ஒரு பூஜையின் போது 108 மாலைகள் மட்டுமே வைக்கப்படும். தற்போது குறைந்த எண்ணிக்கையில் (91) மட்டுமே உள்ளதால் தேவைப்படுபவர்கள் உடனே தொடர்பு கொண்டு கருங்காலி மாலையை முன்பதிவு செய்து உறுதிப்படுத்தவும்.
*பூஜையில் வைக்கப்பட்டுள்ள இந்த கருங்காலி மாலையை நீங்கள் பெற விரும்பினால், 6369199775 என்ற எண்ணிற்கு கால் மூலமாகவே அல்லது WhatsApp மூலமாகவே முன்பதிவு செய்யவும்.*
WhatsApp : wa.me/+916369199775
*கருங்காலி மாலையின் விலை 3000 /- ரூபாய்.*
தையல்காரர் கத்தரிக்கும் போது பார்த்து இருக்கீங்களா?
அய்யோ, காசு கொடுத்து வாங்குன துணியை இப்படிச் சரக் சரக்-ன்னு வெட்டுறாரே-ன்னு இருக்கும்! :)
ஆனால் அப்பறம் தான் தெரியும் - கத்தரிப்பது துணியை அல்ல! உதிரிகளைத் தான் என்று!
பயனற்ற உதிரிகளைக் கத்தரித்தால் தான், பயனுள்ள ஆடை வரும்!
அது போல் "கத்தரித்த" பெருமாள்!
தையல் காரப் பெருமாள்!
ஒரு தையல் காத்த பெருமாள்!
அந்தப் பெருமாளின் மருகன்! என் ஆசை முருகன்!
*பதிவு 376* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*90 ப்ரஜாபவ*
👍👍👍
ஸுரேச’: ச’ரணம் சர்ம
விச்’வரேதா: *ப்ரஜாபவ* : |
அஹ: ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ஒருவேளை ஒரு மகன் தன் தந்தையை வெறுக்கிறான் என்றால், அவன் தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக இருக்க வேண்டும்
அல்லது மன நோயாளியாக இருக்க வேண்டும்!” என்றான் சகதேவன்.
இதைக் கேட்ட பீமன், “அப்படியானால் கம்சன் தன் தந்தையான உக்ரசேனரை வெறுத்து ஒதுக்கிச் சிறையில் கூட வைத்தானே!
*பதிவு 377*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ஹ்ருʼதா³ராமே(அ)க⁴ஜீர்ணச்ச²தா³꞉
ஸ்ரஸ்தா
ப⁴க்திலதாச்ச²டா விலஸிதா꞉ புண்யப்ரவாலஶ்ரிதா꞉ .
தீ³ப்யந்தே கு³ணகோரகா ஜபவச꞉புஷ்பாணி
ஸத்³வாஸனா
ஜ்ஞானானந்த³ஸுதா⁴மரந்த³லஹரீ ஸம்ʼவித்ப²லாப்⁴யுன்னதி꞉ .. 47..🌹🌹🌹🌸🌸🌸
சம்பு தியானம் வசந்த ருது உடன் compare பண்ணும் ஸ்லோகம் .. வசந்தம் வந்து விட்டால் என்னவெல்லாம் நடக்கும் ?
💐 பழைய இலைகள் உதிரும்
💐புதிய இலைகளும் மலர்களும் பிறக்கும்
🌸 எங்கும் இனிமையான சுகந்தமும் தென்றலும் இருக்கும்
🌸 பழங்கள் பூத்து க் குலுங்கும்
🍁 எங்கும் பசுமை
🍁 மனம் சுகம் கொள்ளும்
சம்பு தியானம் அதாவது சிவ சிந்தனை நம் மனம் எனும் வனத்திற்குள் வந்துவிட்டால் அதுவே *வசந்த ருது ...*
வசந்த காலம் ...
சிவ சிந்தனை வந்து விட்டால் என்னவெல்லாம் நிகழும் ?
🍂 பாவங்கள் எனும் பழைய இலைகள் உதிர்ந்து போகும்
🍃 மனம் தேடும் நிம்மதி அமைதி சந்தோஷம் ஆனந்தம் எல்லாம் தேடி வரும் பறவைகள் போல
🍀 எங்கும் ஞானம் திகழும் பக்தி பெருகும்
🦜 சொல்லும் பேசும் வார்த்தைகளில் இனிமை இழைந்தோடும்
🌹பிறரை மனம் உவந்து பாராட்டும் குணம் பெருகும் ...
இன்னும் வளரும் ....
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏
மழநாடு--ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?"--பெரியவா.
நான், பெரியவாளிடம் எதுவும் கேட்கவில்லை யே? என் மனசுக்குள்ளே தானே நினைத்துக் கொண்டிருந்தேன்! அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்? தெள்ளத் தெளிவாக பதில் சொல்லிட்டாளே!.
மலைக்கோட்டைத் தெருவில் அவருக்கு, வீடு கிடைத்தது. 'வீடும்' கிடைக்கும் (பெரியவா உத்தரவு!)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பதினெட்டு வயதில் காலடி எடுத்து வைத்தவருக்கு, இப்போது ஐம்பத்தெட்டு வயது. எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழும்,சுருக்கெழுத்து - தட்டச்சு சான்றிதழ் களும் அவரை ஒரு தனியார் அலுவலத்தில் வெகு எளிதாக நுழைத்து விட்டன.
இனி எங்கே போய் வாழ்நாளைக் கழிப்பது? என்று பூதாகரமான பிரச்னை. கையில் - இல்லை, பையில்நிறைய பணம் இருக்கிறது. பந்துக்கள் இல்லையே?
பையன் - இதோ, கொல்கத்தாவில் இருக்கிறான். வங்கி மண்டல அதிகாரி. அவன், நல்லவனாகத் தான் - பாசமுள்ளவனா கத்தான் - வளர்ந்தான்.
பானை பிடித்தவளும் நல்லவளாகத்தான் இருந்திருப்பாள். புகுந்த வீட்டைப் பற்றிய அக்கறையே இல்லை. எப்போதும் பிறந்த வீட்டுப் பெருமைதான். அங்கே போய்த் தங்கினால்,இப்போதிருக்கும் பேச்சு-வார்த்தை உறவும் அற்றுப் போய் விடும்.
யார் வழி காட்டுவார்கள்?
'சங்கரனே துணை' என்று 'ஸத்ய வ்ரத நாமாங்கித' காஞ்சி க்ஷேத்திரத்துக்கு வந்தார், திருவாளர் முன்னாள் மேலாளர். நாலு நமஸ்காரம், கை கட்டி, வாய் புதைத்து...
"அநேகமா எல்லா க்ஷேத்திரமும் தரிசனம் பண்ணிட்டோம். போன வாரம் தலைக்காவேரி போய்விட்டு, அப்படியே காவிரிப் பூம்பட்டினமும் போய்விட்டு வந்தோம்.." --பெரியவாளிடம் பக்தர்.
பெரியவாள் சொன்னார்கள்.
"காவேரி உற்பத்தி ஸ்தானத்திலேயும், சங்கமத் துறையிலும் ரொம்ப குறுகலாகத் தானே இருக்கு?"
"ஆமாம்..."
"காவேரி, ரொம்ம்ம்ப அகலமா இருக்கிற மத்ய ஸ்தானத்துக்கு என்ன பேரு?--பெரியவா.
"அகண்ட காவேரி"-- -பக்தர்.
"அது எங்கே இருக்கு?"---பெரியவா
"திருச்சி பக்கத்திலே.."
"அந்தப் பிரதேசத்துக்கு என்ன பேரு?"--பெரியவா
ஓய்வு பெற்ற மேலாளர் விழித்தார்.
கிங்கரர்களை அதட்டிப் பழக்கம். சங்கரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு விழித்துப் பழக்கமில்லை.
"மழநாடு-ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?"---பெரியவா.
"எங்க தாத்தா சொல்லுவார்..."
"காவேரி தீரம்தான் மழநாடு. ரொம்ப ஆசாரக்காரர்கள் இருந்த நாடு..உன் பாட்டனார் இருந்த இடம்."பெரியவா
'ஓல்டுமேன்' நெளிந்தார்.
"திருச்சியிலே ஜாகை வெச்சுக்கோ. தினமும் ஒரு கோயிலுக்கு - உச்சிப் பிள்ளையார் - மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸன் - இப்படி தரிசனம் பண்ணிண்டு இரு.."---பெரியவா.
வந்தவர், நாலு முறை நமஸ்காரம் செய்து விட்டுப் பிரசாதம் பெற்றுக் கொண்டார்.
அவர், உத்தியோக காலத்தில், எத்தனையோ புதிர்களை விடுவித்திருக்கிறார். ஆனால், இப்போது ஒரு புதிருக்கு விடை காண முடியாமல் தவிக்கிறார்.
'நான் பெரியவாளிடம் எதுவும் கேட்கவில் லையே?
என் மனசுக்குள்ளே தானே நினைத்துக் கொண்டிருந்தேன்.
அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்?
தெள்ளத் தெளிவா பதில் சொல்லிட்டாளே!
இந்தப் புதிருக்கு விடை தெரிந்திருந்தால், அவர் தாயுமானவர் ஆகியிருப்பார்
அவ்வளவு அவநம்பிக்கை வேண்டாமே!
இனிமேலும் - நாளைக்கே கூட - ஞானத்தைப் பெறலாமே?
மலைக்கோட்டைத் தெருவில், அவருக்கு வீடு கிடைத்தது. 'வீடும்' கிடைக்கும்.
பெரியவா உத்தரவு..
Jaya Jaya shankara Hara Hara Shankara 🪔🙏
ஸகல தேவதைகளும் கோவுக்குள் அடக்கம்
ஏனென்றால் கோவுக்குள் முப்பத்து முக்கோடி தேவர்களுமே அடக்கம். ஸகல புண்யதீர்த்தங்களும் ஒரு பசுவுக்குள் இருக்கின்றன. நம்முடைய ஆலயம் ஒவ்வொன்றிலும் சில தெய்வங்களுக்கு ஸந்நிதிகள் இருக்கின்றன; அதைச் சேர்ந்ததாக ஒவ்வொரு புண்ய தீர்த்தம் இருக்கிறது. கோ என்பதோ அத்தனை தெய்வங்களும் அத்தனை புண்ய தீர்த்தங்களும் குடி கொண்ட ஆலயமாக இருக்கிறது.
(இன்று கோபாஷ்டமி)
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏
"அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்".
(''சங்கரன் என்ற பெயர் வைத்தாலும் கூப்பிடும் போது 'சங்கு' என்று கூப்பிடுவார்கள் தெரியுமோ? விஷ்ணு கையில் சங்கு உள்ளது அல்லவா?
சைவ, வைணவ ஒற்றுமை எப்படி இயல்பாக நடந்து விடுகிறது பாருங்கள்!'')
மே 13,2017, தினமலர்- தேடி வந்த செல்வம்!- திருப்பூர் கிருஷ்ணன்.
காஞ்சிப்பெரியவர் தரிசனத்திற்கான பக்தர்கள் வரிசை விறுவிறுவென்று நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு தம்பதி தீர்த்தப் பிரசாதம் வாங்கி கொண்டிருந்த போது, நகர்ந்து கொண்டிருந்த வரிசை, சற்று தடைபட்டது.
காரணம் அந்த தம்பதி, தணிந்த குரலில் பெரியவரிடம் தங்கள் கோரிக்கையை முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
கணவருக்கு வயது நாற்பதும். மனைவிக்கு முப்பத்தைந்தும் இருக்கும். எவ்வளவோ வேண்டுதல்களை நிறைவேற்றியும் பற்பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டும் அவர்களுக்கு இதுவரை குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தங்களுக்கு குழந்தை வேண்டும் என்பது அவர்கள் வேண்டுதல்.
''ஆக சுதானந்தம் வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். சுதா' என்றால் குழந்தை. மழலைச் சொல் கேட்டும், அதன் விளையாட்டு களைப் பார்த்தும் கிடைக்கிற ஆனந்தத்திற்கு 'சுதானந்தம்' என்று பெயர்.
குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்ன்னு திருவள்ளுவர் சொல்லியிருக்காரே!'' என்று சொல்லி விட்டு கலகலவென்று சிரித்தார் பெரியவர். ஒரு குழந்தை சிரிப்பதை போல் இருந்தது அவரது சிரிப்பு. சற்றுநேரம் அவர்களை காத்திருக்குமாறு பணித்தார்.
வரிசை நகர்ந்தது. வரிசையில் ஒருவர் மூன்றே மாதமான பச்சிளம் குழந்தையைப் பாதுகாப்பாக கையில் ஏந்தி வந்து கொண்டிருந் தார். அவர் சுவாமிகள் முன்னிலையில் குழந்தையை வைத்துவிட்டுச் சொன்னார்:
''நான் பெரிய குடும்பஸ்தன். ஐந்து குழந்தைகள். இந்தக் குழந்தை பக்கத்துப் போர்ஷன் தம்பதியின் ஆண் குழந்தை. அவர்கள் அண்மையில் விபத்தில் காலமாகி விட்டார்கள். இந்தக் குழந்தை மட்டும் தப்பி விட்டது. இறந்தவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள் என்பதால், இருதரப்பு பெற்றோரும் இந்த குழந்தையை ஏற்க மறுத்து விட்டனர். எனக்கு இந்தக் குழந்தையையும் வளர்க்குமளவு வசதி இல்லை. சுவாமிகள் தான் இந்த பிரச்னைக்கு தீர்வு சொல்ல வேண்டும்!''
கலகலவென்று தன் தெய்வீகச் சிரிப்பை உதிர்த்த பெரியவர், தள்ளி நின்ற தம்பதியை அழைத்தார்:
'நீங்கள் கேட்ட பாக்கியத்தை பகவான் உடனே கொடுத்து விட்டார் பார்த்தீர்களா? இது உங்கள் வீட்டில் வளரவேண்டிய குழந்தை. நீங்கள் பெற்ற குழந்தை தான் இது. இவரிடமிருந்து பெற்றுக் கொள்கிறீர்களே? அப்போது பெற்ற குழந்தை என்று தானே அர்த்தமாகிறது! எங்கோ பிறந்து இன்று நீங்கள் என்னைத் தேடிவந்த நேரத்தில் சரியாக இது உங்களை நாடி வந்திருக்கிறது.
அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம். அத்தனை புண்ணியம்! இந்தக் குழந்தை சங்கர ப்ரசாதம் என்பதால் 'சங்கரன்' என்று பெயர் வைத்து உங்கள் குழந்தையாக வளர்த்து வாருங்கள்!' என்றார் பெரியவர்.
தொடர்ந்து பேசிய பெரியவர், ''சங்கரன் என்ற பெயர் வைத்தாலும் கூப்பிடும்போது 'சங்கு' என்று கூப்பிடுவார்கள் தெரியுமோ? விஷ்ணு கையில் சங்கு உள்ளது அல்லவா? சைவ, வைணவ ஒற்றுமை எப்படி இயல்பாக நடந்து விடுகிறது பாருங்கள்!''
மறுபடியும் நகைத்தார் பெரியவர். குழந்தையை கொடுத்தவர் விழிகளிலும், பெற்று கொண்டவர்கள் விழிகளிலும் ஆனந்தக் கண்ணீர் திரையிட்டது
நலன்களை பெறுவதற்கு மனிதன் சாஸ்திரங்களில் கூறப்பட்ட தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். முழுமையாக அனுசரிக்க முடியாவிட்டால் கூட முடிந்த அளவுக்கு அதை பின்பற்றவேண்டும்.
தர்மத்தை சிறிதளவு அனுஷ்டிப்பது கூட ஒருவனை பெரும் பயத்திலிருந்து ரக்ஷிக்கிறது.
கீதையில் பகவான் சொல்கிறார்:
பக்தியோடு பகவானைப் பூஜிப்பது முக்கியமானது. அதாவது பக்தியுடன் எனக்கு இலை, புஷ்பம், பழம் அல்லது தண்ணீரையும் எவனொருவன் சமர்ப்பித்தாலும் அதை எனது பூஜா சாமக்ரியை போல் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பகவான் சொல்கிறார்.
ஒருவன் தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற தர்மத்தை அனுஷ்டித்தால் போதும், தனக்கு குறிப்பிடப்படாத வேறெந்த தர்மத்தையும் கடைப்பிடிக்க அவசியம் இல்லை. அப்படிப்பட்டதை அனுஷ்டித்தாலும் அது பயனற்றது.
உதாரணமாக எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவித கேள்வித்தாள் பெறுவான். பத்தாம் வகுப்பு மாணவனுக்கு வேறு ஒரு வித கேள்வித்தாள் கொடுக்கப்படும். இவ்விரு மாணவர்களும் தங்களில் மற்றவனுடைய கேள்விகளுக்கு எவ்வளவு சிரமப்பட்டு விடை எழுதினாலும் அவர்களுக்கு ஒரு மதிப்பெண் கூட கிடைக்காது.
எவ்வளவு குறைபாடுகளுடனும் கூட தன் சொந்த தர்மத்தை அனுஷ்டிப்பது மற்றவனை சார்ந்த தர்மத்தை நன்றாக கடைப்பிடிப்பதையும் விட சிறந்தது என்று பகவான் சொல்கிறார்.
மற்றொரு இடத்தில் கிருஷ்ண பகவான், தன் தர்மத்தில் ஸ்ரத்தையுடன் ஈடுபடுபவனுக்கு குறைபாடற்ற நிலை ஏற்படுகிறது என்று இதற்கு அர்த்தம்.
பகவானின் இந்த உபதேசங்களை எப்போதும் மனதில் கொண்டு எல்லோரும் அவரவர் தர்மத்தை அதிகபக்ஷம் கூடியமட்டும் அனுஷ்டித்து நலன்களை பெறுவார்களாக
பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் பத்திரிக்கையில் வெளிவந்த நாள் அன்று! கர்நாடக மாநில அளவில் எட்டாவது இடத்தைப் பிடித்த ஒரு மாணவனின் படம் ஒன்றை காண்கிறார் சுதா மூர்த்தி.
ஒல்லியாகவும், வெளிறிப் போயும் இருந்த அந்த சாதாரண மாணவனின் பெயர் ஹனுமந்தப்பா. அவன் கண்களில் ஒரு பிரகாசம் இருந்ததை கவனிக்கிறார் சுதா மூர்த்தி.
அடுத்த நாள் அதே பையனின் பேட்டி அன்றைய செய்தித்தாளில் வந்திருந்தது. அந்த ஹனுமந்தப்பா ஒரு கூலித் தொழிலாளியின் மகன் என்றும், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன் என்றும் அவன் தந்தை ஒரு நாளைக்கு வெறும் நாற்பது ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார் என்றும் அதனால் மேற்கொண்டு படிக்க வாய்ப்பில்லை என்றும் செய்தி வந்திருந்தது.
உடன் அவனது முகவரியைக் கண்ட சுதா மூர்த்தி அவனை பெங்களூரு வரவழைக்க கடிதம் எழுதி உடன் பயணச்செலவும், ஒரு ஆடை வாங்க கூடுதல் பணமும் ஏற்றுக் கொள்வதாக தகவல் அனுப்பியிருக்கிறார்.
அந்தப் பையன் குறிப்பிட்ட நாளில் சுதாவின் அலுவலகம் நுழைகிறான். பெங்களூருக்கு வருவது அதுவே முதல் முறை.
சுதா அவனை வரவேற்று "உன்னுடைய மதிப்பெண்கள் குறித்து மகிழ்ச்சி. நீ விரும்பினால் மேற்படிப்புக்கான செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எந்த மேற்படிப்பாக இருந்தாலும் நாங்களே மொத்த செலவுகளை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறுகிறார்.
ஹனுமந்தப்பா முதலில் திகைத்து பின்னர் தனது கிராமத்துக்கு அருகில் உள்ள பெல்லாரியில் "ஆசிரியர்" பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு தன் விருப்பத்தை தெரிவித்தான். எந்தவொரு படிப்பென்றாலும் செலவை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறியும் ஹனுமந்தப்பாவின் தேர்வு ஆசிரியராக வேண்டும் என்பதாகவே இருந்திருக்கிறது.
சுதா மூர்த்தி ஒப்புக்கொண்டு மாதாமாதம் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க சரியான தகவல்களை தெரிந்து தொடர்பு கொள்வதாக கூறி அவன் ஊர் திரும்பி விட்டான்.
பிறகு ஒரு அஞ்சல் அட்டையில் தனக்கு மாதாமாதம் 300 ரூபாய் தேவைப்படும் என்றும், தனது நண்பருடன் ஓர் அறை எடுத்து தங்கி மேலும் செலவை குறைக்க தாங்களே சமையல் செய்து கொள்ளப் போவதாகவும் அழகான கையெழுத்தில் கடிதம் வந்திருக்கிறது.
ஆறு மாத செலவுக்கு உடனே 1800 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார் சுதா.
நாட்கள் ஓடின. அடுத்த 6 மாத காலத்துக்கு மீண்டும் 1800 ரூபாய் சுதா மூர்த்தி அனுப்பி வைக்க, ஹனுமந்தப்பாவிடமிருந்து ஒரு கடிதமும் 300 ரூபாய் பணமும் கவரில் வைத்து சுதாவிற்கு திரும்பி வந்துள்ளது.
கடிதத்தில் கடந்த இரண்டு மாதங்கள் கல்லூரி விடுமுறை என்றும் அதனால் வீட்டில் இருந்ததாகவும் 300 ரூபாய் மட்டுமே செலவானது என்றும் மீதம் 300 ரூபாய் தங்களுக்கு திருப்பி அனுப்புகிறேன் என்றும் எழுதியிருக்கிறது. தயவுசெய்து இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் வேண்டி எழுதப்பட்டிருந்தது.
சுதா மூர்த்தி இப்படி எழுதுகிறார்.
"நான் ஆடிப் போய் விட்டேன். அவ்வளவு ஏழ்மையிலும் எவ்வளவு நேர்மை?
மாதாமாதம் என்ன செலவானது என்பது குறித்த கணக்கை நான் எதிர்பார்க்கவில்லை. இதை ஹனுமந்தப்பா அறிந்திருந்த போதும் மீதி பணத்தை திருப்பி அனுப்பி வைத்த நேர்மையை என்னால் நம்பவே முடியவில்லை என்கிறார்.
நேர்மை என்பது குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்ததோ அல்லது ஒருவருடைய கல்வித்தகுதி அல்லது நிதிநிலைமையைப் பொறுத்தோ அல்ல என்பதை அந்த அனுபவம் எனக்கு உணர்த்தியது.
இந்த நேர்மையை எந்தக் கல்லூரியாலும் கற்றுக் கொடுக்க முடியாது.
பெரும்பாலான மக்களுக்கு நேர்மை நேரடியாக இதயத்திலிருந்து மலருகிறது.
ஹனுமந்தப்பா, ஓர் முன்மாதிரி மனிதன்."
படித்ததில் பிடித்தது.
பாடல் - 36
அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது. . . . .[36]
விளக்கம்:
மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு இல்லாமல் சினத்தை விடுத்து வாழ்வது இனிதாகும். தனக்கு வேண்டிய பொருளை அபகரிக்காமல் அதனை மறந்து விடுதல் இனிது.
*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🙏🏻🙏🏻🌹🌻🌹🌻🌹🌻
அடியார்களுக்கு நல் அருள் புரிபவர்
உலகப் பற்றை நீக்குபவள்🙏🙏
ரொம்ப Simple !!
படித்துதான் பாருங்களேன் !!
மண்ணால் போரெனில் பாரதம் ....
பெண்ணால் போரெனில் ராமாயணம் ....
சகுனி குழப்பினால் பாரதம்....
கூனி குழப்பினால் ராமாயணம் ....
பெண் ஐந்தை மணந்தால் பாரதம் ...
பத்தை (10) மறுத்ததால் ராமாயணம் ....
அனுமன் கொடிதனில் பறந்தால் பாரதம் ...
அனுமன் கடல்தாண்டி பறந்தால் ராமாயணம் ....
இறை இப்புவி இறங்கி சாரதியானால் பாரதம் ...
இறை இப்புவி இறங்கி சத்திரியனானால் ராமாயணம் ....
மேய்த்தது கோ எனில் பாரதம்..
மேன்மை கோ எனில் ராமாயணம் ...
பகடையால் பகையெனில் பாரதம்....
பாவையால் பகையெனில் ராமாயணம் ........
பிறன்மனைவியை அவமதித்ததால் பாரதம்...
பிறன்மனைவியை அபகரித்ததால் ராமாயணம் ....
அவதாரம் புனிதனாய் வலம்வந்தது பாரதம் ....
அவதாரம் மனிதனாய் வலம்வந்தது ராமாயணம் ...
இறைவன் கீதை தந்தால் பாரதம் ...
இறைவன் சீதை பெற்றால் ராமாயணம்....
நாயகியை தொட்டு சேலைஇழுத்தால் பாரதம்...
நாயகியை தொடாது சோலையில் வைத்தால்
ராமாயணம் .....
ஐவருக்கு ஒருத்தியெனில் பாரதம் ....
ஒருவருக்கு ஒருத்தியெனில் ராமாயணம் ....
மறைந்திருந்து அம்பெய்யகற்றால் பாரதம் ...
மறைந்திருந்து அம்பெய்துகொன்றால் ராமாயணம்...
வில்லால் அடித்த வீரனுக்கு விவாகமெனில் பாரதம் ...
வில்லை ஒடித்த வீரனுக்கு விவாகமெனில்
ராமாயணம் ....
கற்புநெறிக்காக பெண் கண்ணை கட்டினால் பாரதம்...
கற்புநெறிக்காக பெண் கனலில் இறங்கினால் ராமாயணம்....
கதையில் குருடன் அரசன் எனில் பாரதம்....
கதையை எழுதியது திருடன் எனில் ராமாயணம் ...
அரக்கினால் மதில் ஆன அரண்மனை எரிந்தால்
பாரதம் ....
அரக்கியின் மதி கோணலால் அரண்மனை எரிந்தால்
ராமாயணம் ....
அரங்கனின் செய்கையால் அபலைக்குஅபயமெனில்
பாரதம் ....
குரங்கனின் செய்தியால் அபலைக்கு அபயமெனில்
ராமாயணம்....
மண்ணின் மயக்கத்தினால் பிளவெனில் பாரதம் ...
மானின் மயக்கத்தினால் பிரிவெனில் ராமாயணம்
உறவுக்குள் சண்டையெனில் பாரதம்...
உறவுக்காக சண்டையெனில் ராமாயணம் ....
படித்ததில் பிடித்தது!
*பகவான் புகழ் பாட..*
ஒருமுறை பராசர பட்டர் எனும் பக்தர் ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார். என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்? என அரங்கன் கேட்க... முதலில், உம்முடைய ஆதிசேஷனைப்போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பார்க்கலாம் என்றாராம் பராசரர். அட... ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ? என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட... பராசரபட்டருக்கு ஆயிரம் நாக்குகளை வழங்கினான். ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர். மன்னிக்கவும் ரங்கா ! உன்னை என்னால் பாட முடியாது! என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார். ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு! பின்னே... பாடு என்று உத்தரவு போட்டாகிவிட்டது. பராசரர் கேட்டபடி, ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகிவிட்டது. அப்படியும் பாட முடியாது என்று மறுத்தால், அரங்கனுக்கு ஆச்சரியம் எழத்தானே செய்யும்? என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய்; கொடுத்தேன். பிறகென்ன... பாடவேண்டியதுதானே? முடியாது என்கிறாயே ! என்றான் அரங்கன்.
பராசர பட்டர், மீண்டும் கைகளைக் குவித்துக்கொண்டார்; மொத்த உடலையும் இன்னும் குறுக்கிக்கொண்டார்; முதுகை வளைத்து இன்னும் கூனாக்கிக்கொண்டு, அரங்கா... உன் ஒளி பொருந்திய அழகை என்னால் பாடமுடியாது என்று சொல்வதற்கே, எனக்கு ஆயிரம் நாக்குகள் தேவையாக இருக்கும்போது, பரஞ் சோதியாகத் திகழும் உன்னையும் உனது பேரழகையும் பாடுவதற்கு, எனக்கு இன்னும் எத்தனை எத்தனை நாக்குகள் தேவையோ?! என்று சொல்லிப் புகழ்ந்தாராம் பராசரர். பகவானின் பேரழகுத் திருமேனியை விவரிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்தித்து, அவனுடன் இரண்டறக் கலந்திருக்கின்றனர் அடியவர்கள்! அப்பேர்பட்டவனது திருநாமத்தைச் சொல்வது, எத்தனை வல்லமையை நமக்கு வழங்கும் என்பதை இதன்மூலம் உணரலாம்.
🤘சர்வம் விஷ்ணு மயம் 🌹🌻🌸🐍🐚
#mahavishnuinfo
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 155* 💐💐💐
முகுந்தமாலா 25, 26 ஸ்லோகங்கள் பொருளுரை
शत्रुच्छेदैकमन्त्रं सकलमुपनिषद्वाक्यसम्पूज्यमन्त्रं
संसारोत्तारमन्त्रं समुपचिततमसः सङ्घनिर्याणमन्त्रम् ।
सर्वैश्वर्यैकमन्त्रं व्यसनभुजगसन्दष्टसन्त्राणमन्त्रं
जिह्वे श्रीकृष्णमन्त्रं जप जप सततं जन्मसाफल्यमन्त्रम् ॥ २६॥
சத்ருச்சே²தை³கமந்த்ரம் ஸகலமுபனிஷத்³வாக்யஸம்பூஜ்யமந்த்ரம்
ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசிததமஸ: ஸங்க⁴னிர்யாணமந்த்ரம் |
ஸர்வைச்வர்யைகமந்த்ரம் வ்யஸனபு⁴ஜக³ஸந்த³ஷ்டஸந்த்ராணமந்த்ரம்
ஜிஹ்வே ஸ்ரீக்ருʼஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜன்மஸாப²ல்யமந்த்ரம் ॥
ன்னு ஒரு ஸ்லோகம்.
உபநிஷத் வாக்யங்கள் எல்லாம் இந்த கிருஷ்ண நாமத்தைதான் கொண்டாடறது.
உபநிஷத் வாக்ய ஸம்பூஜ்ய மந்த்ரம். சகலம் எல்லாமே இந்த கிருஷ்ண மந்த்ரம் தான்.
*ஸம்ஸாரோத்தாரமந்த்ரம்* -ஸம்ஸாரத்துல இருந்து உன்னை தூக்கி விடக் கூடிய மந்த்ரம் இது.
*‘ஸமுசிததமஸ: ஸங்க⁴னிர்யாணமந்த்ரம்* ’
நீ சேர்த்து வெச்சிருக்கிற எல்லா அக்ஞானத்தையும் போக்கடிக்கக் கூடிய மந்த்ரம்கிறார்.
நாம TVயை பார்த்து வெட்டிப் பேச்சு பேசி அந்த மாதிரி பொழுது விடிஞ்சா நிறைய அக்ஞானத்தை சேர்த்து வெச்சுக்கறோம்.
கிருஷ்ண நாமத்தை ஜபம் பண்ணு.
அது எல்லா அக்ஞான இருளையும் அது ஓட்டிடும்.
சமூபசித- நாம collect பண்ணி வெச்சிண்டிருக்கிற தமஸ்னா அக்ஞானம்.
*சமூக பூஜித தமஸ் சங்க* அந்த அக்ஞான கூட்டத்திற்கு நிர்யாண மந்த்ரம். அதை போக்கடிக்கற மந்த்ரம்
*பதிவு 390* 🙏🙏🙏started on 7th Oct 2021
(நிர்குண உபாசனை) (132-151)
🪷🪷🪷
புருஷன் என்பது பரம்பொருள் ..
அதில் இருந்து பிரிந்து சிருஷ்டிக்காக வேறுபட்டது பிரக்ருதி .
இரண்டும் சேர்ந்தது ஜகத் .
அதிலிருந்து மஹத் ..
பின்னர் புத்தி , அஹங்காரம் , ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் , மனசு , பஞ்ச தன்மாத்திரைகள் , பஞ்ச பூதங்கள் ஆகிய யாவையும் தோன்றின .
இவற்றை தோற்றுவிக்கின்ற அம்பாள் , தான் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருக்கின்றாள் 🌸🌸🌸
*பதிவு 388* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99
🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
*Ham* – Ether-Visudhhi-Chathurdasaara
*Yam* – Air-Anaahataa-Bhahirdasaara
*Vam* – Water – Manipura – Antardasaara
*Ram* – Fire – Svaadishthaana- Astakona
*Lam* – Earth – Mulaadhaaraa – Trikona
The same and thus having transcended the tenty-one Tattvaa-s from Prithvi to Manas, and the six-chakraas, which when taken together, would form the lower Sri-chakraa.
சதுரமாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்தும்
உதிரவோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன், ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட, மாமயிலாட, அரங்கத்தம்மான்
திருவயிற்று உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே🌸🌸🌸
நாலு பக்கங்களிலும் உயர்ந்திருக்கும் மதில்களல் சூழப்பட்ட இலங்கை மாநகரத்தின் அரசனான இராவணனை
முதல்நாள் போரில் தோல்வியுறச்செய்து வெறுங்கையோடு இலங்கைக்கு அனுப்பிவைத்தவன் நீயன்றோ .
இன்றுபோய் போர்க்கு நாளை வா என்றும் சொன்னவன் நீயன்றோ
சீதையை விட்டுவிட மனமில்லாமல் மறுபடியும் போர்செய்ய வந்தவன்
தலைகள் பத்தையும் உதிரும்படியாகக் கணைதொடுத்தவன் நீயன்றோ
தலைகளை வெட்டி வீழ்த்த என்று சொல்லாமல் இலேசாக உதிரும்படியாகத் தலைகளை உதிர்த்தவன் நீயன்றோ
வண்டுகள் இசை பாட, மயில்கள் ஆடும் திருவரங்கத்தில் பள்ளி
கொண்டிருக்கும் உன் திருவயிற்றில்
அணிந்திருக்கும் *உதரபந்தம்* என்னும் திருவாபரணம் என் நெஞ்சினுள் எப்போதும் நிலைத்திருப்பதில் வியப்பு என்ன *கண்ணா*?
[உதரபந்தம் – அரைஞாண் கயிறு]
மதம் பிடித்தவர்கள் நாங்கள் ... 🙃🙃
மதம் பிடித்துப்
போனவர்கள் நாங்கள் 🙃🙃
மதம் கண்டு நல்ல மனம் தனை வதம் செய்தவர்கள் நாங்கள் .. 🙃🙃
வதம் செய்தே சதம் கண்டோம் என்றே பெருமை அடிப்பவர்கள் நாங்கள் 🙃🙃
சதம் கண்டும் உன் வசம் ஆகா பேதைகள் நாங்கள் 🙃🙃
வசம் செய்யும் ஞாயகியே 🦜🦜
வல்லமை தாராயோ வாக்கினில் வந்தே சேராயோ ... 🌸
பூக்கும் குவளைக்கும் மலரும் கமலத்திற்கும் கருணை காட்டுபவளே .. 🌸🌸
பூநாகம் குடி கொண்ட நெஞ்சம் இதில்
ரீங்காரம் செய்தே
ஓம்காரம் கொண்டு
என் ஆங்காரம் தனை அழிப்பாயே 🙏🙏
*அங்குசோஜ்வலா =* க்ரோதத்தை வெளிப்படுத்தும் அங்குசத்தை தாங்கியபடி ஜொலிக்கிறாள் 🙏🙏🙏
சாதிபேத மாயெழுந்து சர்வசீவ னானபின்
ஆதியோடு ஆடுகின்ற மீண்டுமிந்த சென்மமாம்
சோதியான ஞானியர்க்கும் சுத்தமாய் இருப்பனே. 112
முன்பிறவியில் ஆதியை அறிந்து தியானித்தவர்கள் நிலையடையாது
மீண்டும் ஜென்மம் எடுத்தவர்கள் விட்ட குறை பற்றி வந்து மைப் பொருளை அறிந்து கொள்வார்கள்.
யோக ஞான சாதகத்தை தொடர்ந்து செய்து சுத்த ஜோதியான ஈசனை உணர்ந்து சுத்த ஞானியாகி இறைவனை அடைய பாடுபட்டு வாழ்ந்திருப்பர்.
🌺🌹Gnanappana was written by Poontanam. He was born in a village called Keezhatorur under Perinthalmannai in Malappuram district of Kerala.
🌺Poontanam is his clan name. He lived in the sixteenth century. A book called Gnanappana was written in prayer to Guru Vayurappan when he had to lose a child born after a long time.
🌺This book is written in simple Malayalam style, without mixing Sanskrit and contains high philosophical concepts.
🌺 There are hearsay stories that a poet named Melpathur Narayana Bhattathiri complained that there was a grammatical error in this book, so he apologized to Guruvayurappan, and later, thanks to Guruvayurappan's grace, the two became friends.
🌺It has 360 lines. It also has the special name of Malayalam Bhagavad Gita.
🌺 46,660 people gathered and sang the songs in this book. It is recorded in the Guinness book.
🌹🌺 Song 🌹🌺
🌺 It's time for Kannan to come
Time of arrival of Kannan - Shoreline
The breeze will see - that
Unmatched to the sound of royal Monaco
Quality flute listening - gone
Even the spirit will recover!
(Kannan)
🌺 The river is flowing, the river is singing - the breeze
Stay and stay and swing - good
Such is the mind of a praising servant
Jumping and jumping - fame
Saying and singing!
(Kannan)
🌺Kannan is not like a jewel, no - that
When I saw it, not a single beetle came
Do not consider this as a dream or reality, O mind - one
Time and I will tell no lies - ours
None other than Kannan!
(Kannan)🌺🌹 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
-------------------------------------------------------
🌺🌹ஞானப்பான என்ற நூலை பூந்தானம் என்பவர் எழுதினார். இவர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மண்ணைக்கு உட்பட்ட கீழாற்றூர் என்னும் ஊரில் பிறந்தார்.
🌺பூந்தானம் என்பது அவரின் குலப் பெயர் ஆகும். இவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தையை இழக்க நேரிட்டபொழுது குருவாயூரப்பனை வேண்டி எழுதியதே ஞானப்பான என்னும் நூல்.
🌺இந்த நூல் எளிய மலையாள நடையில், சமசுகிருதம் கலக்காமல், உயர்ந்த தத்துவக் கருத்துகளை உள்ளடக்கியவாறு எழுதப்பட்டது.
🌺மேல்பத்தூர் நாராயண பட்டதிரி என்னும் புலவர் இந்த நூலில் இலக்கணப் பிழை இருப்பதாகக் குறை கூறியதாகவும், அதனால் இவர் வருந்தி குருவாயூரப்பனை வேண்டியதாகவும், பின்னர், குருவாயூரப்பன் அருளால் இருவரும் நண்பர்களாகினர் எனவும் செவிவழிக் கதைகள் உள்ளன.
🌺இது 360 வரிகளைக் கொண்டது. மலையாளத்து பகவத் கீதை என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.
🌺46,660 பேர் கூடி இந்த நூலில் உள்ள பாடல்களைப் பாடியுள்ளனர். இது கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது.
🌹🌺பாடல் 🌹🌺
🌺கண்ணன் வருகின்ற நேரம்
கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
தரமான குழலிசை கேளும் - போன
ஆவி எல்லாம் கூட மீளும்!
(கண்ணன்)
🌺சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!
(கண்ணன்)
🌺கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வர்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
(கண்ணன்)
🌺தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம் 🌹
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
If your foot slips, you can always recover but When your tongue slips, you can never recover your own words.
If we have the chance to make people happy, just do it. Sometimes people are struggling silently. May be our act of kindness may make their day.
Words and thoughts can be inspirational, but until you take the first step and motivate yourself, your dream will just remain a dream.
It's time to wake up, take a deep breath and enjoy the sweetness of nature with all your heart. It is a guarantee for a day that’s beyond amazing.
Celebration of potential is success. Celebration of blessings is gratitude. Let us celebrate life.
Always remember three powerful resources available you - love, prayer and forgiveness.
I can't help but think back to high school when I read this quotation, back to the days when almost everyone--especially the "popular" kids--were so worried about what other people thought about them that they never gave a thought to what they were doing to other people in the name of having a reputation. Most of them were lost after high school, when they went on to college or into the job world, when they found that their "rep" didn't follow them into the real world.
அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில், இடுகம்பாளையம், கோயம்புத்தூர்,
விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு ராஜகுருவாக திகழ்ந்த வியாசராஜர் பிரதிஷ்டை செய்த தலங்களில் ஒன்றுதான் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயம்.
விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு ராஜகுருவாக திகழ்ந்தவர், வியாசராஜர். மாத்வ குருமார்களில் ஒருவராகவும், ஸ்ரீவியாசராஜ மடத்தின் பீடாதிபதியாகவும் விளங்கிய இவர், அனுமன் பாதம்பட்டதாக அறியப்பட்ட 700-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமன் சிலையை பிரதிஷ்டை செய்தவர். அப்படி அவர் பிரதிஷ்டை செய்த தலங்களில் ஒன்றுதான் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயம்.
தல வரலாறு :
வியாசராஜர், தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்தார். அப்போது அவருக்கு பாறையின் மீது ஆஞ்சநேயர் தியானம் செய்வது போன்ற காட்சி தென்பட்டது. அதன் உண்மை நிலையை அறிய நிஷ்டையில் ஆழ்ந்தார். அப்போது அவருக்கு சில காட்சிகள் தோன்றின.
ராமனுக்கும் ராவணனுக்குமான போர் முடிந்தது. ராமன் பெற்ற வெற்றியை , அசோகவனத்தில் இருக்கும் சீதையிடம் சொல்வதற்காக பறந்து சென்றார் அனுமன். அங்கு சீதையைக் கண்டு வணங்கியவர், “அன்னையே! உங்களை நானே அழைத்துச் சென்று விடுவேன். அது ராமபிரானின் புகழுக்கு இழுக்காகும். எனவே ராமர் வெற்றி பெற்ற தகவலைச் சொல்லவே நான் வந்தேன்” என்றார்.
அப்போது சீதையின் நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்திருப்பதைப் பார்த்த அனுமன், அதுபற்றி சீதையிடம் கேட்டார். அதற்கு சீதை, ராவணனுடனான யுத்தத்தில் ராமனுக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம் அணிந்ததாக கூறினாள்.
‘அன்னை நெற்றியில் சிறிதளவு செந்தூரம் இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி கிடைத்தது என்றால், உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டால் என்னுடைய தெய்வம் ராமபிரானுக்கு எவ்வளவு வெற்றி கிடைக்கும்’ என்று எண்ணிய ஆஞ்சநேயர் தன்னுடைய உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டார்.
வெற்றிக்குப் பின் ராமர், சீதை மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்குத் திரும்பினார். வழியில் 7 தீர்த்தங்கள் கொண்ட இந்த இடத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். அதற்கு வழிவகை செய்வது போல், அங்கு ஒரு வில்வ மரத்தடியில் சுயம்பு சிவலிங்கம் காணப்பட்டது. அதன் எதிரில் திருநந்தி தேவரும் தென்பட்டார். இதுவே உகந்த இடம் என்று நினைத்த ராமர், சிவ பூஜை செய்தார். அனுமனும் சற்று தூரத்தில் இருந்த பாறையில் ராம ஜெபம் உச்சரித்தபடியே காவலுக்கு நின்றார்.
இந்த காட்சிகள் அனைத்தும் வியாசராஜர் தியானத்தில் வந்து போனது. இதையடுத்து அனுமனின் உருவம் தென்பட்ட பாறையின் மீது அனுமன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்த அனுமன் 5 அடி உயரத்தில் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் காட்சி தருகிறார். நேர் பார்வையும், இடது கையில் சவுகந்தி மலரை வைத்தபடியும், வலது கையால் ஆசீர்வதிக்கும் தோரணையிலும் அருள் புரிகிறார். அவரது தலைக்கு பின்புறமாக வளைந்து நிற்கும் வாலில் மணி கட்டப்பட்டுள்ளது.
அனுமன் அருளும் இந்த ஆலயம், ‘இடுகம்பாளையம் அனுமந்தராயர் கோவில்’ என்றும், ‘ஜயமங்கள ஆஞ்சநேயர் கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆலயம் குறுகலான நிலப்பரப்பில் அமைந்திருப்பதால், ‘இடுகம்’ என்ற பெயரில் இந்தத் திருத்தலம் பெயர் பெற்றுள்ளது.
ஆலயத்தின் தென்புறத்தில் விநாயகரும், கன்னி மூலையில் ராமர் பூசித்த ராமலிங்கேஸ்வரரும், அவருக்கு எதிரில் திருநந்தி தேவரும், வடக்கில் செல்வமுத்துக்குமரனும், அவருக்கு அருகில் பர்வதவர்தனி அம்மனும் சன்னிதி கொண்டிருக்கிறார்கள். பிரதான தெய்வமாக ஜெயமங்கள ஆஞ்சநேயர் விளங்கு கிறார். இவர் நவக்கிரக தோஷங்களைப் போக்குவதோடு, மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் வேண்டும் பக்தர்கள், ஆஞ்சநேயரை மனதார பிரார்த்திக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், தங்களது வீட்டில் தினமும் ஒரு கைப்பிடி அரிசியை தனியாக எடுத்து வைக்கிறார்கள். இப்படி 30 நாட்கள் சேர்த்த அரிசியை கோவிலில் சமர்ப்பிக்கிறார்கள். இப்படி பக்தர்கள் பலரும் சேர்ப்பிக்கும் அரிசியில் அன்ன தானம் வழங்கப்படுகிறது.
ஆறு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.
கோயம்புத்தூரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இடுகம்பாளையம். கோயம்புத்தூரில் இருந்து அன்னூர் வந்து, அங்கிருந்தும் இடுகம்பாளையம் செல்லலாம்.
இது ஆன்மீக பூமி,
சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், மகரிஷிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.
ௐ ஶ்ரீ ராமஜெயம்,
ராம நாமமே சொன்னால் அங்கே வருவார் ஹனுமார், க்ஷேமங்கள் யாவையும் தருவார், ஶ்ரீ ராம பக்த ஹனுமார்.
A beautiful explanation given by Shri T Sadagopan Iyengar, an erstwhile genius from IIT Kanpur. He is also the Founder Director of the International Institute of Information Technology, Bangalore - a new generation Institute, promoted jointly by the Government of Karnataka and IT industry in 1999. He has been admired for his simplicity and complex knowledge.
Once at a Shrad Ceremony, the person performing Shrad had some revolutionary thoughts. He was translating all the Mantras recited by the Shastri into it's Tamil meaning..... instead of repeating it in Sanskrit.
The Shastri did not like it and told him "Do not say the Mantras in Tamil. It can only be said in Sanskrit."
"Why not? Doesn’t God understand other languages like Tamil?" The person provokingly asked the Shastri.
At this, Shri T Sadagopan Iyengar Ji, who was nearby, said the following:-
"
"This is because of the Electro Magnetic Waves," the person said.
"So what does it mean?" Iyengar Ji asked.
"Changing to Specific Frequency the voice can be carried far," the person replied.
"Well what do you say now?"
"Mantras are uttered not for translation or communication. They are set for specific sound waves."
"Is it not possible in Tamil?"
"Yes it is possible, but not by its literal translation, as it is. You have to form words which should mean and also produce the same frequency waves as Sanskrit words when you form sentences."
"So?"
"
"Hope we understand the underlying message.....
Hari Om."
"Mantras are different from Shlokas, Dohas, etc. What’s being said here is about such Mantras.
Here the discussion is about the Mantras from the Vedas and the Vedas are called as Apourusheya Sastras (not written by humans). They all are chanted with Svaras (intonations - voice modulation) in order to derive the declared benefit of such mantras. Why is it so? It’s because they are all arrangements of sound forms invoking the necessary forces from the nature in order to bless the person chanting them, by granting him that wish. Mantras are called as 'Mantras' because 'Mananath Traayathe Iti Mantra.' Which means - That which protects by repetition is called Mantra.
Hence the efficacy of Mantras lie in such chanting and as they are originally arranged in Sanskrit, it is recommended not to tamper with that tradition and practice."
Hari Om Tat Sat!!!Pranamams 👌👌
திருமணத்தடை..., பணப்பிரச்சனைகளுக்கு பெருமாளை வழிபட மறக்காதீர்கள். திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது.
ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே 'திரு" என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
தோஷங்களில் பலவகையான தோஷங்கள் உள்ளன. அவற்றில் சந்திர தோஷமும் முக்கியமான ஒன்றாகும்.
ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்க வேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.
தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடுவதுடன், திருவோண நட்சத்திரமன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷமான வாழ்வு அமையும்.
எல்லா மாதங்களிலும் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வேண்டி விரதம் இருக்கலாம்.
திருவோண விரதம் இருக்கும் முறை :
பின்னர், அன்று உண்ணப்போகும் உணவுப் பொருள் எதுவாக இருப்பினும், அதில் உப்பு சேர்க்காமல், உண்ண வேண்டும்.
ஒருவேளை அரிசி உணவும், மற்ற வேளைக்கு சிற்றுண்டி, பால், பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
மிகுந்த பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால் வேண்டியது நிறைவேறும் என்பது திண்ணம்.
பலன்கள் :
காலை வழிபாடு - நோய் குணமாகும்.
நண்பகல் வழிபாடு - செல்வம் பெருகும்.
.
மாலை வழிபாடு - பாவம் நீங்கும்.
.
அர்த்தயாம வழிபாடு - முக்தி கிடைக்கும்.
திருவோணம் அன்று பெருமாளை வழிபட்டால் கல்வித்தடை, திருமணத்தடை, பணப்பிரச்சனை போன்ற அனைத்துவித பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும்🐚
ஶ்ரீ மஹாவிஷ்ணுவின் வாட்ஸ்அப் குழுவில் இணைய
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏
*"பெரியவாளின் பார்வை ஒரு பரம்பரையின் மீது விழுந்து விட்டால் அவர்கள் மரணப் பள்ளத்தாக்கில் விழுந்தாலும் கைத் தூக்கி விட்டு விடுவார் "*
பம்பாயைச் சேர்ந்த ஏழை இளைஞர். இவரின் தந்தை பம்பாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் சிறிய பணியில் இருந்தார்.
மிக சொற்ப வருமானம். இளைஞர், அவருக்கு ஒரு தங்கை என இரு குழந்தைகள்.
அப்பொழுது அந்த இளைஞர் பியுசி படித்துக் கொண்டிருந்தார்.
இளைஞரின் படிப்பு அத்துடன் நிற்க குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல்.
எங்கு தேடியும் வேலைக் கிடைக்காததால், அவ்வப் பொழுது கிடைக்கும் சிறு பணிகளைச் செய்து, பொருள் ஈட்டினார்.
தாயும் தன் பங்குக்கு அக்கம் பக்கம் உதவி செய்து பணம் ஈட்டினார் என்றாலும் நிரந்தரப் பணி இல்லாததால் வருமானமும் நிரந்தரமாக வரவில்லை.
மிகவும் கஷ்ட நிலைதான் என்றாலும் அந்த கஷ்ட நிலையிலும் தன் தங்கையை படிக்க வைத்தார்.
வந்த வருமானத்தை வைத்து தாய் எப்படியோ சமாளித்து வந்தார்.
அமைதியான நடத்தை, நல்ல ஒழுக்கம், சிறந்த பக்தி, பெரியவர்களிடத்து மரியாதை, நேர்மை என நல்ல பண்புடன் இருந்தனர்.
ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் தாயும் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.
மன வேதனையும், வறுமையும் வாட்ட தாயின் பொருளுதவியும் நின்று போன நிலையில் குடும்பம் தத்தளித்தது.
தங்கையின் படிப்பு பத்தாம் வகுப்புடன் நின்றது.
தாய் ஈட்டிய சிறு பொருள் கொண்டு வாரம் ஐந்து நாட்கள் உணவருந்திய குடும்பம் மூன்று நாட்கள் கூட சமாளிக்க முடியாது திண்டாடியது.
தாங்க முடியாத சூழலில் தங்கை வீட்டு வேலை செய்து பொருள் ஈட்டுவதாக சொல்ல, அண்ணனின் உள்ளம் வலித்தது.
மனமும் கனவும் பெரிதாக இருந்து என்ன பயன் , அதை செயல்படுத்த சரியான சூழ் நிலை இல்லையே;
மூன்று மாதங்கள் வலியும் வேதனையுமாய் கழிய, தன் தந்தையின் நெருங்கிய சொந்தக்காரர் திருநெல்வேலியில் இருப்பது நினைவுக்கு வந்தது.
திருநெல்வேலியில் தன் உறவினர் வீட்டுக்குச் சென்றவருக்கு பெரும் அதிர்ச்சி .
வாசலில் ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அக்ரஹாரத்தில் அக்கம் பக்கத்தவரிடம் விசாரிக்க, ‘அவர்கள் வெளியூர் சென்று விட்டார்கள், எப்பொழுது வருவார்கள் எனத் தெரியாது’ என அனைவரும் ஒரே பதிலையே கூறினர்.
மிகவும் நெருங்கிய உறவு என்பதால் முழுமையாக அவரை நம்பி வந்து விட்டார்.
கையிலோ மிகவும் சொற்ப பணம். திரும்பிப் போக முடியுமா என்பதே கேள்விக்குறி.
அங்கு வேறு யாரையும் தெரியாது. பொழுது சாய்ந்து விட்டதால், சரி நாளை அவர் வருகிறாரா என பார்ப்போம் என முடிவு செய்து பிரயாணக் களைப்பில் ஒரு வீட்டுத் திண்ணையில் அயர்ந்து உறங்கி விட்டார்.
காலையில் பொது இடத்தில் குளித்து விட்டு அரை குறையாக வயிற்றை நிரப்பி விட்டு உறவினருக்கு காத்திருந்தார்.
அன்றும் அவர் வரவில்லை. அன்றைய பொழுது பயனில்லாது போயிற்று.
மறு நாள் பொழுது விடிந்தது. அவருக்கும் தான் வாழ்க்கையில் புதிய உதயம் தோன்றியது.
வழக்கம் போல் உறவினருக்கு காத்திருந்தவருக்கு ஏமாற்றம் தான்.
நம் வருகை அறிந்து உறவினர் பயணப் பட்டிருப்பாரோ என சந்தேகம் எழுந்தது. மேற் கொண்டு என்ன செய்வது எனப் புரியவில்லை.
அந்த சமயத்தில் நமது மஹா பெரியவா திருநெல்வேலியில் முகாமிட்டிருந்தார்.
அக்ரஹாரத்து மக்கள் அவரைத் தரிசிக்க செல்ல இவருக்கும் தரிசிக்க ஆவல் பிறந்தது.
அவர் முகாமிட்டிருந்த இடம் சென்றார்.
கூட்டம் வழிய அந்த கூட்டத்துடன் அவரும் கலந்தார்.
தரிசிக்க முடியுமா என்று தெரியவில்லை.
நேரம் நகர்ந்துக் கொண்டிருந்த்து. அந்த சமயம் பின் இருந்து ஒருவர் வந்து, “என்னப்பா, பெரியவாளைத் தரிசிக்க வந்தியா? வா” என்று அவரை முன் நோக்கி அழைத்துச் சென்று பெரியவா முன் நிறுத்தி விட்டு சென்று விட்டார்.
மஹா பெரியவா முன் நின்ற இளைஞர் நமஸ்கரித்து எழுந்தார்.
அவரின் உள்ளத்து சோகத்தையும், கள்ளமில்லா உள்ளத்தையும் படம் பிடித்த மஹா பெரியவா, “என்னப்பா எங்கேந்து வர?” எனத் துவக்கினார்.
“பம்பாய்லேந்து வரேன்” என வார்த்தைகள் வாயிலிருந்து தடங்கி தடுக்கி விழுந்தது.
“யாரு... இன்னார் பையனா நீ?” எனக் கேள்வி எழுப்ப, இளைஞர் ஆம் எனத் தலை அசைத்தார்.
மேலும் அவரைப் பேச விடாது பெரியவாளே பேசத் தொடங்கினார்.
“ உங்க அப்பாவத் தெரியும்பா. அவர் மடத்துக்கு வந்திருக்கார்.
உங்க தாத்தாவுக்கும் மடத்துக்கும் தொடர்பு உண்டு.
உன் அப்பா அம்மா காலமாயிட்டா இல்லியோ.
இப்ப நீ என்ன பன்ற?”
“வேலை ஒன்னும் இல்லைப் பெரியவா” நா தழு தழுத்தது.
“உன்னோட வேற யார் இருக்கா?” “ஒரு தங்கை மட்டுமதான்”
“அவ என்ன பண்றா?”
“பத்தாவது படிச்சுட்டு வீட்டு வேலை பாக்கறா” என்றார் கண்ணீர் வழிய.
சில நொடி அமைதிக்குப் பின் மஹா பெரியவா தொடர்ந்தார்.
“நீ யாரை நம்பி இங்க வந்தியோ அவா உன் வருகை தெரிஞ்சு வேற ஊர் போய்ட்டா.
இனி அவாளுக்காக காத்திருக்காத. இன்னிக்கே ஊருக்கு கிளம்பு.
இனிமே நீ யாரையும் நம்பி இருக்க வேண்டாம். கவலைப்படாம போ” என்று சொல்ல இளைஞர் ஒன்றும் பேசவில்லை. கைகட்டி நின்றார்.
வந்தவர் அமைதி காக்க, “ சரி , நீ ஒண்ணு செய். இவனுக்கு ஆகாரம் பண்ணி வெச்சு, அவன் பம்பாய் போய் சேர ரயில் டிக்கெட்டும் வாங்கிக் கொடு” என்று சொல்ல வந்தவர் அதை பெரும் பாக்கியமாக எடுத்துக் கொண்டார்.
இளைஞர் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க, மஹபெரியவா ஆசியுடன் அனுப்பி வைத்தார்.
மஹாபெரியவாளைத் தரிசித்த நினைவுகள் நீண்ட பயணத்தின் துணை வர இளைஞரும் பம்பாய் ரயில் நிலையம் வந்தடைந்தார்.
ரயில் நிலைய நுழைவு வாயிலில் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்க, சட்டைப் பையில் கை விட டிக்கெட் அங்கு இல்ல.
பேன்ட் பாக்கெட்டில் கை விட அங்கும் இல்லை.
அவசரம் அவசரமாக தான் ஒரு மாற்றுத் துணி வைத்திருந்த துணிப் பையில் தேட டிக்கெட் அங்கும் இல்லை.
பரிசோதகர் அவரை தனியே ஓரமாக நிறுத்தி வைத்தார்.
கையிலோ மிகவும் சொற்ப பணம், தண்டனைக்குரிய தொகையை எப்படியும் செலுத்த முடியாது.
எதையும் மேற்கொண்டு சிந்திக்க முடியாது நின்றார்.
டிக்கெட் பரிசோதகர் தன் பணி முடித்த பின் இவர் பக்கம் திரும்பினார். “நீ ஏன் ஓரமா நிக்கற?”
“ சார் நீங்கதான் என்னிடம் டிக்கெட் இல்லை என்று நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்” என்றான்.
இல்ல டிக்கெட் இல்லனு தான் என்னை நிறுத்தி வைத்தீர்கள் என அவர் மீண்டும் சொல்ல இவர் மறுக்க, இப்படியே போய்க் கொண்டிருந்தது.
அங்கு அவருள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவர் நம் மஹா பெரியவர் அல்லவா?
(பரிசோதகருக்கு இளைஞரின் நேர்மையை படம் பிடித்து காட்டிக் கொண்டிருந்தார்.)
மஹா பெரியவா தான் எண்ணிய வேலை நடந்து முடியும் வரை விலகுவதில்லை. அனைவரையும் கைப்பாவையாக்கி நடனம் ஆட வைப்பவரின் பொம்மலாட்டம் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது.
யோசித்துக் கொண்டே நடந்தவர் அந்த இளைஞனையும் அழைத்துக் கொண்டு தன் அலுவலக அறை வந்தார்.
தான் திருநெல்வேலி சென்றதையும் உறவினர் இல்லாததால் செய்வதறியாது நின்றதையும் மஹா பெரியவாளைத் தரிசித்ததையும் - ஏன் சொல்கிறோம் எனப் புரியாமலே கொட்டிக் கொண்டிருந்தார்.
அந்த இளைஞர் மீது மேலும் ஆர்வம் ஏற்பட அவன் குடும்பத்தை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
அன்றைய நிகழ்வுகளை இளைஞரால் நம்ப முடியவில்லை இது நாம் தரிசித்த மஹா பெரியவாளின் கருணைதான் எனப் புரிந்து அவருக்கு மனமார நன்றி செலுத்தினார்.
டிக்கெட்டைத் தொலைக்கச் செய்து கருணையும் காட்டி விட்டாரே என உள்ளம் உருக நன்றி செலுத்தினார்.
டிக்கெட் பரிசோதகர் அந்த இளைஞரை கல்லூரியிலும். தங்கையை மேற்படிப்பிலும் சேர்த்தார்.
குழந்தைப் பாக்கியம் இல்லாத அத் தம்பதியர் - இருவரையும் தங்கள் சொந்த பிள்ளைகள் போல் பார்த்துக் கொண்டனர்.
எங்கோ அனாதையாய் கிடந்த தங்கள் மீது பாசத்தைப் பொழியும் தம்பதியர் மீது இவர்களும் மிகுந்த அன்பு காட்டினர்.
நல்ல ஒழுக்கம், அடக்கம், பணிவு, பக்தி, மரியாதை, சொந்த பெற்றோரைப் போல் கண்ணும் கருத்துமாய் இயல்பாய் அக்கறைக் காட்டுவதும் பாசத்தைப் பொழிவதுமென அவர்களின் நடவடிக்கை அனைத்தும் தம்பதியரைக் கரைய வைத்தது. பிள்ளைப் பாசத்தையே அனுபவித்திராத அவர்களுக்கு, இவர்கள் இருவரும் காட்டிய பாசம் உள்ளத்தை உருக்கியது.
வயதான காலத்தில் மஹா பெரியவாதான் இவர்களைக் காண வைத்து அனைத்து சந்தோஷங்களையும் தந்து ஆனந்தப் பட வைத்துள்ளார் என மஹா பெரியவாளை வணங்கித் தம்பதியர் நன்றி கூறினர்.
மஹா பெரியவாளைத் தரிசித்த நாள் முதல் தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடந்து வரும் அதிசயத்தை உணர்ந்த இளைஞர் பக்தியுடன் நாள் தவறாது நன்றி செலுத்தினார்.
ஆதரவற்று பெரும் பள்ளத் தாக்கில் வீழ்ந்திருந்த தனக்கு அன்புக் கரம் நீட்டி ஆசியுடன் பெரும் பாக்கியத்தையும் அள்ளிக் கொடுத்த மஹா பெரியவாளே அவரின் முழு முதற் தெய்வமா னார்.
அனாதையாய் நின்ற தனக்கும் தன் தங்கைக்கும் அன்பு பெற்றோர்களாகி வளமும் தந்த டிக்கெட் பரிசோதகர் தம்பதிகளை தன் சொந்த பெற்றோரா கவே பூஜித்தார்.
வருடங்கள் நகர்ந்தன. தம்பதியர் தங்கையை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். இளைஞரும் ஒரு தனியார் அலுவலகத்தில் ஒரு பணியில் அமர்ந்தார். இளைஞருக்கும் திருமணம் செய்ய வரன் தேடிய பொழுது வரன் அமையாது, வயது கடந்துக் கொண்டே போனது. தம்பதியர் இளைஞரின் பூரண சம்மதத்துடன் ஒரு அனாதை விடுதியில் ஒரு நல்லப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து முடித்தனர்.
வருடங்கள் சென்றன. டிக்கெட் பரிசோதகர் தான் சம்பாதித்த சொத்து மற்றும் பூர்விக சொத்து என அனைத்து சொத்துக்களையும் நான்குப் பிரிவாகப் பிரித்தார்.
மனைவி மற்றும் சட்டப்படி தத்து எடுத்துக் கொண்ட மக்களுக்கு கொடுத்தது போக மீதி ஒரு பங்கை சமூக சேவைக்கு என ஒதுக்கினார். அந்தத் தொகை மூவர் ஒப்புதலின் பேரில் செலவழிக்கப்பட வேண்டும் என எழுதி வைத்தார்.
பரிசோதகர் மற்றும் சில ஆண்டுகளில் அவர் மனைவியும் இறந்து விட சொத்து சற்று பெரியத் தொகையாக இருந்ததால் அதை எந்த விதத்தில் சமூகப் பணிக்கு செலவிடுவது, அதை எப்படிக் கையாள்வது எனக் குழப்பம் ஏற்பட தன்னை அனைத்திலும் வளமாக்கிய தன் தெய்வம் மஹா பெரியவாளைத் தேடி இளைஞர் காஞ்சி வந்தார்.
பெரியவாளின் முன் கண்ணீர் பெருக்கோடு கைக் கூப்பி நின்றார். அவர் வடித்த கண்ணீர் பெரியவாளின் பாதத்தில் நன்றியாகப் போய்க் கலந்தது. அந்தக் கண்ணீரே மஹா பெரியவாளுடன் உரையாடியது. உணர்ச்சிப் பெருக்கோடு நின்றவர் ஆசுவாசப் படுத்திக் கொள்ள பெரியவா மௌனமாய் இருந்தார். சில நிமிடங்களில் சுதாரித்த இளைஞர், தன் குழப்பத்தை தெரிவித்து தங்களின் சித்தப்படி செய்ய விழைகிறேன் என்றார்.
“பணத்தை அனாதைக் குழந்தைகளின் கல்விக்கும், மற்றும் ஆதரவற்ற முதியோர் களுக்கும் செலவிடு. நீ செய்யும் உதவி உன் இடது கைக்கு கூடத் தெரியக் கூடாது. அவர்களுக்கு தொண்டு செய்வதையே இனி உன் முழு நேரப் பணியாகக் கொள்” என ஆசி கொடுக்க , இளைஞர் தன் குழப்பம் தீர்ந்த மகிழ்வில் ஆசியுடன் உத்தரவு பெற்றார். இல்லம் வந்தவர் தன் பணியை ராஜினாமா செய்து விட்டு, மஹாப் பெரியவாளின் ஆசிப்படி தொண்டாற்ற ஆரம்பித்தார்.
இளைஞரின் தாத்தா மஹாபெரியவாளைத் தரிசித்தவர். அவர் தந்தையும் பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்றவர். நம் மஹா பெரியவாளின் பார்வை ஒரு பரம்பரையின் மீது விழுந்து விட்டால் அவர்கள் மரணப் பள்ளத்தாக்கில் விழுந்தாலும் கைத் தூக்கி விட்டு விடுவார். இது அந்த பரம்பரையின ரின் விசுவாசத்தைப் பொறுத்தது. ஆதரவற்று அனாதயாய் நின்ற அண்ணனையும் தங்கையையும் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து அனைத்திலும் வளமாக்கினார். குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு முதுமையில் போற்றிப் பேண அருமையான செல்வங்களைத் தந்து பாக்கியம் தந்தார். அனாதையாய் நின்ற ஒரு குடும்பத்திற்கும், முதியவர்களுக்கும் ஆசி தந்த மஹா பெரியவா அந்த செல்வ வளத்தையே மேலும் மேலும் பல அனாதை களுக்கும் முதியவர் களுக்கும் பயன்படும்படி செய்தார். இது மஹா பெரியவாளின் கருணையா... காருண்யமா...
மஹா பெரியவாளின் ஒரு ஆசி எத்தனை ஆசிகளாக பெருகி அதனால் எத்தனை மக்கள் பாக்கியம் அடைகிறார்கள்.
எண்ணிலடங்கா ஆசிகளையும் அனுக்ரஹங்களையும் வாரி வாரி வழங்கி தன் புகழை மறைப்பொரு ளாக வைத்துச் சென்ற மாமுனியே சரணம் சரணமையா!
மஹா பெரியவாளைத் தரிசித்த நாள் முதல் தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடந்து வரும் அதிசயத்தை உணர்ந்த இளைஞர் பக்தியுடன் நாள் தவறாது நன்றி செலுத்தினார்.
ஆதரவற்று பெரும் பள்ளத் தாக்கில் வீழ்ந்திருந்த தனக்கு அன்புக் கரம் நீட்டி ஆசியுடன் பெரும் பாக்கியத்தையும் அள்ளிக் கொடுத்த மஹா பெரியவாளே அவரின் முழு முதற் தெய்வமா னார்.
அனாதையாய் நின்ற தனக்கும் தன் தங்கைக்கும் அன்பு பெற்றோர்களாகி வளமும் தந்த டிக்கெட் பரிசோதகர் தம்பதிகளை தன் சொந்த பெற்றோரா கவே பூஜித்தார்.
வருடங்கள் நகர்ந்தன. தம்பதியர் தங்கையை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். இளைஞரும் ஒரு தனியார் அலுவலகத்தில் ஒரு பணியில் அமர்ந்தார். இளைஞருக்கும் திருமணம் செய்ய வரன் தேடிய பொழுது வரன் அமையாது, வயது கடந்துக் கொண்டே போனது. தம்பதியர் இளைஞரின் பூரண சம்மதத்துடன் ஒரு அனாதை விடுதியில் ஒரு நல்லப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து முடித்தனர்.
வருடங்கள் சென்றன. டிக்கெட் பரிசோதகர் தான் சம்பாதித்த சொத்து மற்றும் பூர்விக சொத்து என அனைத்து சொத்துக்களையும் நான்குப் பிரிவாகப் பிரித்தார்.
மனைவி மற்றும் சட்டப்படி தத்து எடுத்துக் கொண்ட மக்களுக்கு கொடுத்தது போக மீதி ஒரு பங்கை சமூக சேவைக்கு என ஒதுக்கினார். அந்தத் தொகை மூவர் ஒப்புதலின் பேரில் செலவழிக்கப்பட வேண்டும் என எழுதி வைத்தார்.
பரிசோதகர் மற்றும் சில ஆண்டுகளில் அவர் மனைவியும் இறந்து விட சொத்து சற்று பெரியத் தொகையாக இருந்ததால் அதை எந்த விதத்தில் சமூகப் பணிக்கு செலவிடுவது, அதை எப்படிக் கையாள்வது எனக் குழப்பம் ஏற்பட தன்னை அனைத்திலும் வளமாக்கிய தன் தெய்வம் மஹா பெரியவாளைத் தேடி இளைஞர் காஞ்சி வந்தார்.
பெரியவாளின் முன் கண்ணீர் பெருக்கோடு கைக் கூப்பி நின்றார். அவர் வடித்த கண்ணீர் பெரியவாளின் பாதத்தில் நன்றியாகப் போய்க் கலந்தது. அந்தக் கண்ணீரே மஹா பெரியவாளுடன் உரையாடியது. உணர்ச்சிப் பெருக்கோடு நின்றவர் ஆசுவாசப் படுத்திக் கொள்ள பெரியவா மௌனமாய் இருந்தார். சில நிமிடங்களில் சுதாரித்த இளைஞர், தன் குழப்பத்தை தெரிவித்து தங்களின் சித்தப்படி செய்ய விழைகிறேன் என்றார்.
“பணத்தை அனாதைக் குழந்தைகளின் கல்விக்கும், மற்றும் ஆதரவற்ற முதியோர் களுக்கும் செலவிடு. நீ செய்யும் உதவி உன் இடது கைக்கு கூடத் தெரியக் கூடாது. அவர்களுக்கு தொண்டு செய்வதையே இனி உன் முழு நேரப் பணியாகக் கொள்” என ஆசி கொடுக்க , இளைஞர் தன் குழப்பம் தீர்ந்த மகிழ்வில் ஆசியுடன் உத்தரவு பெற்றார். இல்லம் வந்தவர் தன் பணியை ராஜினாமா செய்து விட்டு, மஹாப் பெரியவாளின் ஆசிப்படி தொண்டாற்ற ஆரம்பித்தார்.
இளைஞரின் தாத்தா மஹாபெரியவாளைத் தரிசித்தவர். அவர் தந்தையும் பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்றவர். நம் மஹா பெரியவாளின் பார்வை ஒரு பரம்பரையின் மீது விழுந்து விட்டால் அவர்கள் மரணப் பள்ளத்தாக்கில் விழுந்தாலும் கைத் தூக்கி விட்டு விடுவார். இது அந்த பரம்பரையின ரின் விசுவாசத்தைப் பொறுத்தது. ஆதரவற்று அனாதயாய் நின்ற அண்ணனையும் தங்கையையும் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து அனைத்திலும் வளமாக்கினார். குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு முதுமையில் போற்றிப் பேண அருமையான செல்வங்களைத் தந்து பாக்கியம் தந்தார். அனாதையாய் நின்ற ஒரு குடும்பத்திற்கும், முதியவர்களுக்கும் ஆசி தந்த மஹா பெரியவா அந்த செல்வ வளத்தையே மேலும் மேலும் பல அனாதை களுக்கும் முதியவர் களுக்கும் பயன்படும்படி செய்தார். இது மஹா பெரியவாளின் கருணையா... காருண்யமா...
மஹா பெரியவாளின் ஒரு ஆசி எத்தனை ஆசிகளாக பெருகி அதனால் எத்தனை மக்கள் பாக்கியம் அடைகிறார்கள்.
எண்ணிலடங்கா ஆசிகளையும் அனுக்ரஹங்களையும் வாரி வாரி வழங்கி தன் புகழை மறைப்பொரு ளாக வைத்துச் சென்ற மாமுனியே சரணம் சரணமையா!
மால் வாங்கி ஏங்கி மயங்காமல், வெள்ளி மலை எனவே
கால் வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி, கழுத்தில் கட்டு
நூல் வாங்கிடாது,
அன்று வேல் வாங்கி, பூங்கழல் நோக்கு நெஞ்சே!
படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை,
முருகா என்கிலை, முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை,
பரமானந்தம் மேற் கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை,
நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே?
பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண்
சேல் என்பது ஆகத் திரிகின்ற நீ,
செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை, கொற்ற மயூரம் என்கிலை,
வெட்சி தண்டை
கால் என்கிலை, மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே?
டேய், சும்மா ரோட்டோரம் அவளைப் பார்த்துவிட்டு, அவ உடம்பைப் பால்-ன்னு சொல்லுற, பேச்சைப் பஞ்சு-ன்னு கொஞ்சற!
கண்ணு மீன் மீன்-ன்னு சீன் போடும் நீ... மனம் போன போக்கெல்லாம் போகும் நீ...
செந்திலோன் கை வேல்-ன்னு சொல்ல வாய் வரலை,
மயில்-ன்னு சொல்ல வாய் வரலை,
கொஞ்சும் சலங்கை இரு தாள்-ன்னு சொல்ல வாய் வரலை!
ஹைய்யோ மனமே! நீ எங்ஙனே முக்தி காண்பதுவே? :))
*பதிவு 377* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*90 ப்ரஜாபவ*
👍👍👍
ஸுரேச’: ச’ரணம் சர்ம
விச்’வரேதா: *ப்ரஜாபவ* : |
அஹ: ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
இருவரும் கண்ணனை அணுகி இக்கேள்வியை முன் வைத்தார்கள்.
அதற்குக் கண்ணன், “உக்ரசேனர் கம்சனின் தந்தையே இல்லை.
உக்ரசேனரின் மனைவியான பத்மாவதி, தனது அந்தப்புர மாடத்தில்
உலாவிக் கொண்டிருந்தபோது, திரமிடன் என்ற கந்தர்வன் அவ்வழியே வந்தான்.
பத்மாவதியின் அழகில் மயங்கினான்.
உக்ரசேனரைப் போல வடிவம் எடுத்து அவளை நெருங்கி அவளுடன் ஆனந்தமாக இருந்தான்.🍃🍃🍃
*பதிவு 378*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ஹ்ருʼதா³ராமே(அ)க⁴ஜீர்ணச்ச²தா³꞉
ஸ்ரஸ்தா
ப⁴க்திலதாச்ச²டா விலஸிதா꞉ புண்யப்ரவாலஶ்ரிதா꞉ .
தீ³ப்யந்தே கு³ணகோரகா ஜபவச꞉புஷ்பாணி
ஸத்³வாஸனா
ஜ்ஞானானந்த³ஸுதா⁴மரந்த³லஹரீ ஸம்ʼவித்ப²லாப்⁴யுன்னதி꞉ .. 47..🌹🌹🌹🌸🌸🌸
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
அதாவது
இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல்
குற்றமற்ற வீணையின் நாதமும் ,
மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் ,
வீசுகின்ற தென்றலின் சாயலும் ,
செறிந்த இளவேனிலின் மாட்சியும் ,
ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் குளிர்ச்சியும்
போன்று இன்பம் பயப்பதாகும் .
என்று பாடுகிறார் ... மூக பஞ்சசதி யில் ஒரு ஸ்லோகம்
அம்மா காமாக்ஷி இந்திரன் முதலானோர் கீரிடங்கள் உன் பீடம்
அங்கே சங்கீதங்கள் சூழ்ந்த கடம்ப வனத்தில் வீசும் தென்றலின் இசை
நீ வசந்தமாக வரும் காட்சி என் கண் முன் தெரிகிறதே அம்மா என்ன புண்ணியம் செய்துள்ளேன் என்று பாடுகிறார் 🌸🌸🌸
10.ரஜஸ் ஸம்ஸர்கோபி ஸ்திதம் அரஜஸாம்
ஏவ ஹ்ருதயே
பரம் ரக்தத்வேன ஸ்த்திதமபி
விரக்தைக சரணம்
அலப்ப்யம்
மந்தானாம் தததபி ஸதா மந்த கதிதாம்
விதத்தே காமாக்ஷ்யா:
சரணயுக
மாச்'ச'ர்ய லஹரீம்
காமாக்ஷியின் திருவடிகளின் விந்தை அலையை எழுப்புகிறது.
ரஜஸ்ஸுடன் (புழுதியுடன்) சேரும் போதும், ரஜஸ் (ரஜோகுணம்) அற்றவருக்கு எளிதாகக்கிடைக்கிறது. (புகலிடமாகிறது)
மந்தர்களுக்குக் கிட்டாதாயினும் மந்த நடை எப்போதும் போடுகிறது.
வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....🙏🙏🙏🙏🙏
தெளிந்த மனம் கொண்டவர்
உலகப் பற்றை அறுப்பவள்����
பாடல் - 37
இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென் றுணர்தல் இனிது. . . . .[37]
விளக்கம்:
தனக்குள்ள இளமைப் பருவத்தை மூப்பென்று உணர்தல் இனிது. சுற்றத்தாரிடம் இனிய சொற்களைக் கேட்பது இனிதாகும். மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.
*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🙏🏻🙏🏻🌹🌻🌹🌻🌹🌻
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான்
வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன் கொல்?
அறியேன்
அரங்கத்தம்மான் திரு
ஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே💐💐💐
நீயன்றோ என் அனைத்து மிகப்பாரமான, சுமக்க முடியாத பாபங்களை என்னிடமிருந்து தொலைத்தாய்
*கண்ணா*
நீயன்றோ
என்னைத் தன்னிடம் அன்புடையவனாகப் பண்ணிவைத்தாய்
*கண்ணா* அதுமட்டுமா,
நீ அன்றோ ரங்கனாய் என் மனத்தினுள்ளும் வந்து புகுந்து கொண்டாய் ..
மாட மாளிகை பல இருக்க
கூட கோபுரங்கள் குவிந்திருக்க
என் மனம் எனும் ஓட்டை குடிசையோ நீ தங்கும் இடமானது ?
அங்கே மழை வருமே *கண்ணா* ...
வெயில் உதிக்குமே *கண்ணா*
காற்று அடிக்குமே *கண்ணா* ..
வெள்ளம் அடித்து செல்லுமே.. *கண்ணா* ..
*கோவர்த்தன்* என்றே மனதில் நிற்பாயோ என் மூச்சு காற்று ஓயும் வரை *கண்ணா*
*கண்ணா*
நீ என்னுள் புக நான் என்ன தவம் செய்தேனோ!
முற்பிறவியில் பெரிய தவத்தைச் செய்திருப்பேனோ?
அறியேன்
ஹரி ஒன்றையே அறிவேன் ...
பிராட்டியும் முத்தாரமும் வீற்றிருக்கும் அந்தத் திருமார்பு என்னை ஆட்கொண்டதில் வியப்பு என்ன கண்ணா ?🙏🙏🙏
மனதையே கரும்புவில்லாக தரிப்பவள்💐💐💐
நீ பேசும் சொற்கள் பாலில் கலந்து வருவதோ ...
உன் கருணை பாகில் பங்கு எடுத்துக்கொள்வதோ
உன் கண்கள் மதுரம் என்றால் உன் செவிகள் கேட்பதும் மதுரம் தோய்த்த உன் நாமங்கள் அன்றோ
உத்தமியே எல்லாம் தேன் என்றால் நாங்கள் உனை சுற்றி வரும் தேனீக்கள் அன்றோ ...
ரீங்காரம் இடுகின்றோம் தினம் தினம்
ஓம்காரியே எங்கள் ஆங்காரம் அடியோடு அழிப்பாயே
-------------------------------------------------- -----
🌺🌹 Sita's marriage ended well. The elders decorated Sita and sent her to Sri Rama's abode. Ramapiran had his eyes closed as if he was sleeping.
Sita sat at his feet. Then Rama lovingly said to Sita, "Devi, I will remove my feet."
🌺But Sita Devi kept her head bowed. Seeing this, Ramabran said, "What a goddess! Are you hesitating whether we, the royal princess, should touch her feet? If so, don't do it" and pulled her feet.
🌺Sita replied, "Not so, Swami! I heard a story. On the way to Mithila, a beautiful woman placed her foot on a stone and stood and bowed down.
🌺Today, they locked the ring with navaratna stones while decorating me. Perhaps in it, the stones of Navarre transformed into beautiful maidens and stopped when they stepped on them. She will be my rival.
🌺That's why I'm afraid" said Sita Pratti mischievously and laughed. Immediately Rama said to Sita "Devi! In this birth I have touched any other mother except you" he swore in the hands of the goddess and gave assurance.
🌺Sri Rama Pran... You are the only thing I have with Sita - I will not touch any other mother as the second one! " Everyone thinks that it is said. But in reality, Lord Vishnu has three wives namely Sri Devi, Budevi and Nyandevi.
🌺 The meaning of this is that Ramapiran said that "I will not think of anyone even in my dreams except you, who is my goddess after coming to earth as Ramapiran."
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
-------------------------------------------------------
🌺🌹சீதா கல்யாணம் நல்ல படியாக முடிந்தது. சீதையை அலங்காரம் செய்து ஸ்ரீ ராமனின் இருப்பிடத்திற்கு பெரியவர்கள் அனுப்பி வைத்தனர். இராமபிரான் உறங்குவது போல கண்களை மூடிக் கொண்டு இருந்தார்.
🌺சீதை அவரது காலடியில் அமர்ந்தாள். அப்பொழுது ராமர் சீதையிடம் "தேவி, என் பாதங்களைப் பிடுத்துவிடேன் " என்று அன்புடன் கூறினார்.
🌺ஆனால், சீதா தேவி தலையைக் குனிந்த படி இருந்தாள். இதனைக் கண்ட ராமபிரான், " என்ன தேவி! அரச குமாரியான நாம் இவரது பாதங்களைப் பிடிப்பதா என்று தயங்குகிறாயா? அப்படி எனில் வேண்டாம்" என்று கூறி தனது கால்களை இழுத்துக் கொண்டார்.
🌺அதற்கு சீதை " அப்படியல்ல சுவாமி! ஒரு கதை கேள்விப்பட்டேன். தாங்கள் மிதிலை வரும் வழியில் ஒரு கல்லின் மீது தங்களது பாதம் பட, அழகான பெண் ஒருத்தி வந்து நின்று வணங்கினாளாம்.
🌺இன்று, எனக்கு அலங்காரம் செய்யும் போது நவரத்தினக் கற்களை கொண்ட மோதிரத்தைப் பூட்டியுள்ளனர். ஒருவேளை அதில் , தங்கள் பாதம் பட்டவுடன் நவரத்தினக் கற்கள் அழகிய கன்னியாக உருப்பெற்று வந்து நின்றுவிட்டால். அவள் எனக்குப் போட்டியாக இருந்து விடுவாளே.
🌺அதனால் தான் அஞ்சுகிறேன் " என சீதா பிராட்டி குறும்புடன் சொல்லிச் சிரித்தார். உடனே ராமர் சீதையிடம் " தேவி ! இந்த ஜன்மத்தில் உன்னைத் தவிர வேறு எந்த மாதரைக் கூட மனதாலும் தீண்டேன் " என்று தேவியின் கைகளில் சத்தியம் செய்து உறுதி மொழி கொடுத்தார்.
🌺ஸ்ரீ ராம பிரான்... சீதையிடம் நீ ஒருத்தி தான் எனக்கு உரியவள் - வேறு மாதரை இரண்டாவதாக மனதாலும் தீண்ட மாட்டேன்! " என்று கூறுவதாகத் தான் எல்லோரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையில், மகாவிஷ்ணுவுக்கு ஸ்ரீ தேவி, பூதேவி, நீளாதேவி என்று மூன்று மனைவிமார் உண்டு.
🌺 "இராமபிரானாக இந்த ஜென்மத்தில் பூமிக்கு வந்து விட்ட பிறகு இருக்கும் எனக்குரிய தேவியான உன்னைத் தவிர கனவில் கூட நான் மனதாலும் யாரையும் நினைக்க மாட்டேன்" என்று ராமபிரான் கூறியதாகத் தான் இதற்கு பொருள் கூற வேண்டும்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
10.ரஜஸ் ஸம்ஸர்கோபி ஸ்திதம் அரஜஸாம் ஏவ ஹ்ருதயே
பரம் ரக்தத்வேன ஸ்த்திதமபி விரக்தைக சரணம்
அலப்ப்யம் மந்தானாம் தததபி ஸதா மந்த கதிதாம்
விதத்தே காமாக்ஷ்யா: சரணயுக
மாச்'ச'ர்ய லஹரீம்
காமாக்ஷியின் திருவடிகளின் விந்தை அலையை எழுப்புகிறது. ரஜஸ்ஸுடன் (புழுதியுடன்) சேரும் போதும், ரஜஸ் (ரஜோகுணம்) அற்றவருக்கு எளிதாகக்கிடைக்கிறது. (புகலிடமாகிறது) மந்தர்களுக்குக் கிட்டாதாயினும் மந்த நடை எப்போதும் போடுகிறது.
வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
*சிவமயம்*
*திருச்சிற்றம்பலம்*
3 எங்கேனும் போகினும், எம்பெருமானை, நினைந்தக்கால்,
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை;
பொங்கு ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே!
எம் கோனே! உனை வேண்டிக்கொள்வேன், பிறவாமையே.
திருச்சிற்றம்பலம்
🙏🌹🪔🔯🕉⚛️🪔🌷🙏
One look at the picture and you would think that the idyllic setting is somewhere in Europe. Not really! This village is very much in India and one of the richest in the whole of South Asia.
Located near Bhuj in Gujarat, the village has a population of 32,000 with a per capita income of Rs 12 lakhs. The 17 banks in the village collectively hold deposits of more than INR 5000 crores in FDs. The name of the village is Madhapar.
Most residents of Madhapar work abroad in foreign countries like the UK, US, Africa and the Middle East. Mainly, 65% of the deposits are made by the NRI Patels from the village. Their contributions in the form of remittances for their family members living in the village are deposited either in Post Offices or the 17 nationalized banks in the village.
Instead of depending on the government for funds, generations of Gujrati Patels ploughed back money to their village and made Madhapur one of the most picturesque destinations in western India.
This transformation was possible for the simple reason that they didn’t forget their roots. They wanted to do something for the place they came from and changed the landscape.
Indeed, Madhapar is a little paradise one should visit in his/her lifetime.
🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴
பட்டை தீட்டத் தீட்ட
வைரம் பொலிவாகும்.....
தடைகளைத் தாண்டத்
தாண்ட ....
உன் வாழ்க்கை பலமாகும்.....!!!!!
இரவு போய் பகல் வருவதைப் போல்.....
பிறப்புண்டேல் இறப்புண்டு.....
இயன்றவரை உத்தமராய்
இறுதிவரை வாழ்ந்திடுவோம்....!!!!
துன்பம் வரும்போது கண்களை மூடாதே.....
அது உன்னைக் கொன்றுவிடும்.....!!!!
கண்களைத் திறந்து பார்.....
நீ அதை வென்று விடலாம்....!!!!!
இழந்துவிட்ட ஒருவரின்
சாயலில் இன்னொருவரைக் காண்பதென்பது.....
சில நேரங்களில் வரமாய்
பல நேரங்களில் மிகப்பெரும் வலியாய்...!!!!
தனிமை ஒரு வரம்...
தனிமை ஒரு தவம்...
தனிமை ஒரு சுகம்...
தனிமை ஒரு சாபம்..
தனிமை ஒரு கொடுமை...
தனிமை ஒரு பயம்....
தனிமை ஒரு சுயஅலசல்
தனிமை ஒரு தொலைதல்....
தனிமை ஒரு கொண்டாட்டம்....
தனிமை ஒரு நிலைக் கண்ணாடி....
தனிமை ஒரு ஞானவிறக்கம்....
அவரவர் சிந்தனைக்கு ஏற்றவாறு...
உறுமாறும் தனிமை ஒரு மாயக்காரன்....!!!!
விரும்புகிறோமோ
இல்லையோ....
தனிமையில் தான்
உலகிலிருந்து விடுதலைப் பயணமும்....!!!!!
தலைக்கு மேலே பறந்தாலும்....
தரையிறங்கத் தான் வேண்டும்....
தாகத்தை தீர்த்துக்கொள்ள.....!!!!
எந்நிலையும் எந்நாளிலும் ஒன்று போல் அமையாது....!!!!
தயங்குபவர்களுக்கும் ...
பயப்படுவர்களுக்கும்....
யோசிப்பவர்களுக்கும்...
இந்த உலகில் எதுவும்
சாத்தியமில்லை.....
துணிவும்,
முயற்சியும் தான்
வெற்றியின் முதற்படி....!!!
இப்பிறவியில் உனக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை எதுவோ.....
அதை ஏற்றுக் கொண்டு
முழுமையாக வாழு....!!!!
உனக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது....
உன் தலையெழுத்தை எழுதுவது நீ தான்...
பிறர் மீது பொறுப்பை
வீசாதே....!!!!
அழுகை யாரையும் விட்டு வைப்பதில்லை.....
எளியவர்கள் எல்லோர் முன்பும் அழுகிறார்கள்....
வலிமையானவர்கள்
தனிமையில் அழுகிறார்கள்.....!!!!
அன்பான இனிய காலை வணக்கம் 🙏.
வாழ்க வளமுடன். அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவோம்.
🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தட்சிணாமூர்த்தி வடிவில் அருள்பாலிக்கும் அம்பிகை பற்றிய பதிவுகள் :*
அம்பிகை, தட்சிணாமூர்த்தி வடிவில் அமர்ந்து அருள்பாலிக்கும் இடங்கள் இரண்டு உள்ளன.
ஆலமர் செல்வன் என்பது சங்ககாலத் தொடர். சிவப்பரம்பொருள் ஆலமர் செல்வனாக தட்சிணாமூர்த்தியாக சின்முத்திரை காட்டி சனகாதி முனிவர்களுக்கு மோனஉபதேசம் செய்ததை நாம் அறிவோம்.
அன்னை, தட்சிணாமூர்த்தி வடிவில் தமிழ்நாடு தில்லை [சிதம்பரம்] நகரில் தில்லைக்காளி ஆலயத்தில் அருளுகிறார்.
அவருக்குக் கடம்பவன தக்ஷிண ரூபிணி என்பது திருநாமம் .வழிபாட்டில் இருக்கும் ஆலமர் செல்வி [ பெண்வடிவ தட்சிணாமூர்த்தி] திரு உருவம் இஃது ஒன்றேயாகும்.
எல்லோரா குடைவரைக் கோயிலில், ஆதிபராசக்தியான ஆதிசக்தி ஆலமரத்தின் கீழ் இருக்கும் ஆலமர் செல்வியாகக் காட்சியளிக்கிறார்.
சிம்மவாஹினியாக ஆலமரத்தின்கீழ் அருளுகிறார். இங்கு வழிபாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
*கடம்பவன தக்ஷண ரூபிணி:*
தக்ஷிணாமூர்த்தி ரூபிணீ தென்முகக் கடவுளின் வடிவினள். யோக மூர்த்தியான தட்சிணாமூர்த்தி, தன் யோகத்தில் அம்பிகையைத் தியானிக்கிறார். அவள் ஈசனின் உள்ளே இருப்பதால் தட்சிணாமூர்த்தியும் தேவியே.
தெற்கு நோக்கி அமர்ந்ததால் இவரை, தட்சிணாமூர்த்தி என்றனர். சிவன் கோவில்களில் தெற்குச் சுற்றில் இவர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார்.
இவரை அறமுரைத்த பட்டன் என்றும் ஆலமர் செல்வன் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இறைவனுக்கும் இறைவிக்கும் மூன்று விதமான வடிவங்கள் உண்டு இருவரும் தனித்தனியே இருத்தாள் ஒருவகை நடராஜரும் சிவகாமியும் தனித்தனி வடிவத்தில் திகழ்கின்றனர் இருவரும் இணைந்திருக்கும் வடிவம் அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கியிருக்கும் முத்தம் மூன்றாவது வகை அவ்வகையில் காமாட்சி வடிவத்தில் இறைவன் அடக்கம் ஒன்றும் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் அம்பிகை அடக்கம் என்றும் கூறுவர்.
சனக்காதி முனிவர்களால் நன்கு வழிபட்ட படுபவள் தட்சிணாமூர்த்தியிடம் சாணக்கதியர் உபதேசம் பெற்றனர் சாணக்கத்தனர் என்ற நான்கு முனிவர்கள் அனைத்தையும் கற்றறிந்தும் உண்மை பொருள் விளங்காமல் இருந்தனர் உண்மை பொருளை அறிய ஈசனை நாடினர் ஈசன் முத்திரை காட்டி அவர்களுக்கு மௌனத்திலேயே மெய்ப்பொருளை தெளிவாக முனிவர்கள் என்ற பொருளில் அந்த நான்கு முனிவர்களையும் சாணக்காதீர் என்று குறிப்பிடுவர்.
சிவஞான பிரேயர் தேனி
சிவஞானத்தை அளிப்பவள் தட்சிணாமூர்த்தி வடிவிலான வெளியே அம்பிகை சானக்கரியருக்கு உண்மையான சிவஞானத்தை அளித்தாள் தன்னை அன்பு அவர்களுக்கு சிவஞானத்தை அளிப்பாள் சிவனைப் பற்றிய அறிவை அம்பிகையும் தேவையும் பற்றிய அறிவை சிவபெருமானுக்கு குருவடிவில் இருந்து அருள்கின்றனர் அவர்கள் அங்குலம் செய்ய வடிவில் அவர்களைப் பற்றி அறிவது இயலாது இயலாத செயலாகும் என்னரிய சிவஞானத்தை இன்னமும் குழந்தையருளி கொண்டே வீசும் என்று அம்பிகை சீர்காழி குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு சிவஞானத்தை கொடுத்தாள் அதாவது அம்பிகை தன் திருமுல்லை பாலில் எண்ணி பார்ப்பதற்கும் அரிதான சிவஞானத்தை குலைத்து கொடுத்தாள் மேலும் சிவனடியை சிந்திக்கும் திருப்பொருகு சிவஞானம் என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார் அத்தகைய சிவஞானத்தை அம்பியை அருள்கிறாள்.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
*🤘ஓம் நமசிவாய🙏*
1.க்ருஷ்ண! க்ருஷ்ண! ராம! என்று ஹரிநாம கீர்த்தனம் செய்வானானால் ஆயிரம் ராஜஸூயங்கள் செய்த பலனை அடைவான் என்று வஸிஷ்ட ஸ்ம்ருதி கூறுகிறது.
2.விஸருதாநி பஹூன்யேவ தீர்த்தானி விவிதானி ச|
கோட்யம்ஸேனாபி துல்யானி ஹரேர்நாம ஜபேன வை
கணக்கு வழக்கற்ற புண்ய தீர்த்தங்களைக் கேள்விப் படுகிறோம். அவை ஹரிநாம ஜபத்தின் மஹிமையில் கோடியில் ஒரு பங்குகூட ஆகாது என்று விச்வாமித்ர ஸ்ம்ருதி கூறுகிறது.
3.ஹரேர் நாமபரம் ஜாப்யம் த்யேயம் கேயம் நிரந்தரம்|
கீர்த்தனீயஞ்ச ஸததம் நிர்வ்ருதிம் பஹுதை சதா
மோக்ஷத்தை விரும்புகிறவன் அனவரதமும் ஹரி நாமத்தையே ஜபம் செய்ய வேண்டும். ஹரி நாமத்தையே த்யானம் செய்ய வேண்டும் என்று ஜபாலி ஸ்ம்ருதி கூறுகிறது.
4.ஸர்வபாப யுதோ யஸ்து ந்ருஹரேர் நாம கீர்த்தனாத்
விமுச்ய ஸர்வதுர்காணி யாதி ப்ரும்ம ஸனாதனம்
ஸகல பாபங்களையும் செய்தவனாயினும் நரஸிம்ம நாமத்தைக் கீர்த்தனம் செய்பவன் ஸகல கஷ்டங்களையும் தாண்டி ஸனாதனமான ப்ரும்மத்தை அடைகிறான் என்று காலவ ஸ்ம்ருதி கூறுகிறது.
நாமமே பலம் நாமமே
சாதனம்🙏
ஸர்வம் ஸ்ரீராம மயம்
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண
கிருஷ்ண ஹரே ஹரே
ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி🙏
ஓம் நமோ நாராயணாய 🙏
இதுபோன்று பல ஆன்மீக விஷ்ணுவின் தகவல்களைப் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி எப்போதும் படிக்கலாம்👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்!
முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்!
பயந்த தனி
வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!
இதுக்குப் பொருள் தேவையா என்ன?
ஒரே ஒரு பொருள் தான்! பயந்த தனி வழிக்கு அவன் அருளே பொருள்! அவனே பொருள்! அவனே பொருள்!
முன்பு செய்த எத்தனையோ தவறுகளுக்கும், பாவங்களுக்கும் எத்தனை எதிரிகள் திரண்டு வரப் போகிறார்களோ?
அவர்களை எதிர்கொள்ள என்னிரு தோளா? பன்னிரு தோளா?
நான் பயந்து போய், தனி வழியில் செல்லும் வேளை வந்து விட்டது!
உற்ற துணை எல்லாம் மற்ற துணை ஆகி விட்டது!
*பதிவு 378* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*90 ப்ரஜாபவ*
👍👍👍
ஸுரேச’: ச’ரணம் சர்ம
விச்’வரேதா: *ப்ரஜாபவ* : |
அஹ: ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
வந்தவன் தன் கணவனல்ல, கந்தர்வன் என்று உணர்ந்த பத்மாவதி அவனைத் தாக்க முற்பட்டாள்.
கோபம் கொண்ட அவன், “நான் உன்னோடு உறவாடும்போதே நான் உன் கணவன் அல்ல என்று நீ புரிந்து கொண்டதை நான் அறிவேன்.
ஆனால் அப்போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது நாடகம் ஆடுகிறாயா?
உனக்குப் பிறக்கப் போகிற குழந்தை
உங்கள் குலத்தையே அழித்து விடும்!” என்று சபித்து விட்டுச் சென்றான்.
அந்தக் குழந்தைதான் கம்சன்.
தனக்கு நேர்ந்த இந்த அவமானத்தை வெளியே சொல்லிக்கொள்ள முடியாமல்,
தன் வேதனைகளை எல்லாம் மனத்தினுள்ளே அடக்கிக்கொண்டு வாழ்ந்து வந்தாள் பத்மாவதி.
*பதிவு 379*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ஸுரமுநிஸ்வாந்தாம்பு³ஜாதாஶ்ரயம்ʼ
ஸ்வச்ச²ம்ʼ ஸத்³த்³விஜஸேவிதம்ʼ
கலுஷஹ்ருʼத்ஸத்³வாஸனாவிஷ்க்ருʼதம் .
ஶம்பு⁴த்⁴யானஸரோவரம்ʼ வ்ரஜ மனோ ஹம்ʼஸாவதம்ʼஸ ஸ்தி²ரம்ʼ
கிம்ʼ க்ஷுத்³ராஶ்ரயபல்வலப்⁴ரமணஸஞ்ஜாதஶ்ரமம்ʼ ப்ராப்ஸ்யஸி .. 48..
ஏ மனமே அங்கே பார் ஒரு அழகான ஏரி ... அந்த ஏரி யில் நித்தியானந்தம் எனும் ரஸம் நிரம்பி இருக்கிறது
*ஸுரமுநிஸ்வாந்தாம்பு³ஜாதாஶ்ரயம்ʼ*
ரிஷிகள் அங்கே வந்து சம்பு தியானம் செய்கிறார்கள் .. அந்த ஏரியில் தண்ணீரில் தாமரைகள் இரவிலும் மலர்ந்து இருக்கின்றன
*ஸ்வச்ச²ம்ʼ*
அந்த ஏரி அமைதியாய் இருக்கிறது அதிக ஆழம் உள்ளது
*ஸத்³த்³விஜஸேவிதம்ʼ*
நல்ல பக்ஷிகளும் தேவர்களும் ரிஷிகளும் அந்த ஏரியை நாடி வருகின்றன
*கலுஷஹ்ருʼத்ஸத்³வாஸனாவிஷ்க்ருʼதம் .*
சுகந்தம் நிறைந்த வெண்மை நிறம் கொண்ட தண்ணீர் என்றும் வற்றுவதில்லை
*ஶம்பு⁴த்⁴யானஸரோவரம்ʼ*
*வ்ரஜ மனோ ஹம்ʼஸாவதம்ʼஸ ஸ்தி²ரம்ʼ*
ஒரே இடத்தில் எல்லா நன்மைகளும் கிடைக்கின்றன
*கிம்ʼ க்ஷுத்³ராஶ்ரயபல்வலப்⁴ரமணஸஞ்ஜாதஶ்ரமம்ʼ ப்ராப்ஸ்யஸி* .?.
அந்த ஏரியை விடுத்து காக்காய் குளிக்கும் குட்டையில் சுழன்று வாடுகிறாயே ...
சந்தோஷம் நிம்மதி ஆனந்தம் இவைகள் என்ன நீ வெறுக்கும் பொருட்களோ ??💐💐💐
ராஜராஜனுக்கு எத்தனையோ பெருமை சொல்கிறார்கள். அவனுடைய வீர தீரப் பிரதாபங்களைச் சொல்கிறார்கள். பக்தியைப் பாராட்டுகிறார்கள். கோவிலுக்காகவும், மூர்த்திகளுக்காகவும், ஆபரணாதிகளுக்காகவும், நித்ய நைமித்திக வழிபாடுகளுக்காகவும், சிப்பந்திகளுக்காகவும், கலைஞர்களுக்காகவும் அவன் வாரி வாரி விட்ட ஒளதாரியத்தைப் புகழ்கிறார்கள். இத்தனையையும் ஒரு detail விடாமல் கல்வெட்டில் பொறித்து வைத்ததைப் போற்றுகிறார்கள். தான் பரம சாம்பவனாக இருந்தும், பெருமாள் கோவில், புத்த விஹாரம் எல்லாவற்றையும் பேணிய மனோ விசாலத்தை ஸ்தோத்திரிக்கிறார்கள். அட்மினிஸ்ட்ரேஷனிலும் அபாரத் திறமை காட்டி, ராஜ்யத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து முடியாட்சியிலேயே குடியாட்சியாக ஊர்ச் சபைகளுக்கு நிறைய ஸ்வதந்திரம் தந்து, அதன் மெம்பர்களை ஜனநாயகக் குடவோலைத் தேர்வு முறையில் நியமிக்கப் பண்ணினதைக் கொண்டாடுகிறார்கள். நிலங்களையெல்லாம் அளந்து ரிஜிஸ்டர் பண்ணினான்; தெருக்களுக்குப் பேர் கொடுத்து door number போட்டான் என்றெல்லாம் சிலாகிக்கிறார்கள். அவனுடைய மத உணர்ச்சி, கலா ரசனை, உதார குணம், planning எல்லாவற்றுக்குமே ஒரு ரூபகமாக இந்தப் பெரிய கோவிலை அவன் கட்டினதை அவனுடைய சிகரமான சிறப்பாகப் போற்றுகிறார்கள்.
ஏனென்றால் இது தமிழையும் ஸம்ஸ்கிருதத்தையும் இருகண்களாக அவன் மதித்துப் போற்றினான் என்பதற்கு அற்புதமான proof ஆகத் தெரிகிறது. நம்முடைய மஹத்தான கலாசாரத்துக்கு மாதா பிதாக்களாக இருக்கிற இந்த இரண்டுக்கும்தானே இப்போது குத்துப் பகை, வெட்டுப் பகை என்று பேதப்படுத்தி வைத்திருக்கிறது? இதைப் பார்த்து மனஸ் தாங்க முடியாமல் வேதனைப்படுகிறபோது, ‘ராஜராஜனுக்குச் சிலை வைக்கிறார்கள்; அவனுடைய ஜன்ம தினமான ஐப்பசி சதயத்தில் ப்ருஹதீச்வரருக்கு மஹாபிஷேகாதிகள் பண்ணுகிறார்கள்’ என்றெல்லாம் கேள்விப்பட்டால், உடனே ஒரு ஆஸ்தை, நம்பிக்கை, உத்ஸாஹம் ஏற்படுகிறது. ராஜராஜனைக் கௌரவிக்கப் புறப்பட்டு விட்டார்களோல்லியோ? ஸரி, அவன் தமிழ், ஸம்ஸ்கிருதம் இரண்டு மரபுகளையும்தானே போற்றி வளர்த்தான்? அதையும் தெரிந்து கொள்வார்கள். ‘நாமும் அப்படியே செய்வதுதான் அவனுக்கு நிஜமான உத்ஸவம். பேத புத்தி போனால்தான் அவனுக்கு விழா எடுக்க நமக்கு உரிமையும் தகுதியும் உண்டு’ என்றும் புரிந்து கொண்டு விடமாட்டார்களா?’ என்று தோன்றுகிறது.
தமிழ் மகன் என்று ராஜராஜனை நன்றாகச் சிறப்பிக்கட்டும். அது வாஸ்தவம்தான். தேவாரத் திருமுறைகளை அவன்தான் கண்டெடுத்தான். அதுமட்டுமில்லாமல் ஈச்வர ஸந்நிதானத்தில் அது பிரதிபூஜா காலத்திலும் ஜீவசக்தியோடு பிரகாசித்து ஒலித்துக்கொண்டு எந்நாளும் லோகத்தில் சிரஞ்ஜீவியாக இருக்கும்படி, ஆலயங்களில் ஓதுவாமூர்த்திகளை நியமனம் பண்ணி, வழிபாட்டிலேயே ஓர் அங்கமாகத் ‘திருப்பதிக விண்ணப்ப’த்தை ஆக்கினான். பெரிய கோவிலில் இப்படி ஐம்பது பேரை நியமித்திருக்கிறான். ஆனபடியால் தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிர் தந்தவன் என்று அவனை விசேஷிக்க ஸகல நியாயமும் உண்டு.
ஆனால் இதைமட்டும் சொன்னால் one-sided தான்; ஒருதலைப்பக்ஷம்தான். ஸம்ஸ்கிருதத்துக்கும், வேத, வைதிக, ஆகம சம்பிரதாயங்களுக்கும் அவன் அளவிலாத மதிப்புணர்ச்சியோடு தொண்டு செய்திருப்பதையும் சேர்த்துச் சொன்னால்தான் அவனுக்குப் பூர்ண நியாயம் பண்ணினவர்களாவோம். ஆலய நிர்மாணம், பூஜை, உத்ஸவம், எல்லாம் சாஸ்திர சம்பிரதாயப்படியேதான் அவன் ஏற்பாடு பண்ணினான். மூலஸ்தானத்துக்கு நர்மதா பாணலிங்கம்தான் சிலாக்யம் என்ற சாஸ்திர விதிக்குக் கட்டுப்பட்டு, ராஜ்ய காரியம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, “அறுபா நான்கு வேளான் செட்டி” என்ற அறுபத்து நாலு பேரோடுகூட அவன் எத்தனையோ நூறு மைல்கள் போய் நர்மதையில் இத்தனாம் பெரிய லிங்கத்தைக் கண்டு, இவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டு வந்தான் என்று தெரிகிறது. கோயிலிலே அநேகக் கல்வெட்டுக்களைப் பொறித்தபோது, முதல் கல்வெட்டை,
என்று ஸம்ஸ்கிருதத்திலேயே ஆரம்பித்திருக்கிறான்.
ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்
என்றும்,
வடமொழியும் தென்தமிழும் ஆனான் கண்டாய் என்றும் தேவாரத்தில் ஸ்வாமியைச் சொல்லியிருப்பதை அதே ‘ஸ்பிரிட்’டில் எடுத்துக்கொண்டு, ஒரு பக்கம் ஏகப்பட்ட கனபாடிகளும், இன்னொரு பக்கத்தில் ஏகப்பட்ட ஓதுவார்களுமாக வேதமும் தேவாரமும் ஸந்நிதானத்தில் நிவேதனம் பண்ணும்படியாகச் செய்தான்.
(இன்று ராஜராஜனின் சதயப்பெருவிழா)
உலகத்தை படைப்பவர்
சந்தேகம் இல்லாதவள்
-------------------------------------------------- -----
🌺🌹 Narada once went to Emapattinam. The place was quiet without any commotion. He asked Emmadharman the reason for that.
🌺 Swami! Most people in the world observe Ekadasi fast. In particular, in Rukmangathan's country, it has been ordered that all people above the age of eight must observe the Ekadasi fast.
🌺So, no one came here from there. All those who die go directly to Vaikunda.
🌺Therefore, I have no business with the country, he said sadly. Narada took him to Brahma.
🌺So fasting should be prevented in the country, he said. Brahman got scared. I can't accept what you are saying. Lord Narayanan does not tolerate abuse of his devotees. He said he didn't want all this work.
🌺Narada would not let go. He started this play to make the world aware of Lord Vishnu's mercy. Even if Brahman knows this, it is not fair for Emadharman to know it!
🌺 The play continued. He said that people who are fasting in the country should be stopped anyway. Brahman, who had no other choice, agreed to this. He created a woman named Mohini.
Do not eat on Ekadasi. Do not engage in sex. This maiden must seduce Rukmangathan to deviate from his Ekadasi fast. He should be made to eat and engage in grooming.
🌺If you do that, the Ekadasi fast will be interrupted in that country. He said that those who die will also come to our world. The glorious Mohini came to Rukmangathan's country. The king will come to Mantramalai there for hunting.
🌺 Claiming that he is the king of the country, he asked her to marry him. King! I am the daughter of Brahman. I came to earth to know their pride and see them. I will also marry according to their wishes.
🌺 But I will stay in your palace only, she said. Both were married in Gandharva style. The king's wife Sandhyavali and son Dharmangada accepted her.
-------------------------------------------------------
🌺🌹நாரதர் ஒருசமயம் எமபட்டினம் சென்றிருந்தார். அவ்வூர் எவ்வித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாய் இருந்தது. அதற்கான கரணத்தை அவர் எமதர்மனிடம் கேட்டார்.
🌺சுவாமி! பூலோகத்தில் பெரும்பாலானவர்கள் ஏகாதசி விரதம் இருக்கின்றனர். குறிப்பாக, ருக்மாங்கதன் என்பவனின் நாட்டில் எட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
🌺எனவே, அங்கிருந்து யாருமே இங்கு வரவில்லை. இறப்பவர்கள் அனைவரும் நேராக வைகுண்டத்திற்கு சென்று விடுகின்றனர்.
🌺அதனால் அந்நாட்டைப் பொறுத்தவரை எனக்கு அறவே வேலை இல்லை, என வருத்தத்தோடு சொன்னான். நாரதர் அவனை பிரம்மனிடம் அழைத்து சென்றார்.
🌺தந்தையே! இது மிகப்பெரிய அநியாயமாக இருக்கிறது. அநியாயம் செய்பவர்களும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். அவர்களும் பரமபதத்தை அடைந்துவிட்டால் எமலோகத்தில் இருப்பவர்களுக்கு என்ன வேலை?
🌺எனவே அந்நாட்டில் விரதம் இருப்பதை தடுக்க வேண்டும், என்று கூறினார். பிரம்மன் பயந்துபோனார்.நீ சொல்வதை என்னால் ஏற்க முடியாது. பகவான் நாராயணன் தனது பக்தர்களுக்கு அபச்சாரம் செய்வதை பொறுத்துக்கொள்ள மாட்டார். இந்த வேலையெல்லாம் வேண்டாம் என்றார்.
��நாடகம் தொடர்ந்தது. எப்படியேனும் அந்நாட்டில் விரதம் இருப்பவர்களை தடுத்தாக வேண்டும் என்றார். வேறு வழியில்லாத பிரம்மன் இதற்கு சம்மதித்தார். மோகினி என்ற பெண்ணை படைத்தார்.
��
🌺அவ்வாறு செய்தால் அந்நாட்டில் ஏகாதசி விரதம் தடுமாறும். இறப்பவர்களும் எமலோகத்திற்கு வருவார்கள் என்றார். பேரழகு வாய்ந்த மோகினி ருக்மாங்கதனின் நாட்டிற்கு வந்தாள். அங்குள்ள மந்திரமலைக்கு அரசன் வேட்டைக்கு வருவான்.
🌺மோகினி ஒரு மறைவிடத்தில் அமர்ந்து வீணை வாசித்துக்கொண்டிருந்தாள். வேட்டைக்கு வந்த அரசன் வீணாகானம் கேட்டு அத்திசைநோக்கி நடந்தான். மோகினியைக்கண்டான். அவளது அழகில் மயங்கினான்.
🌺தான் அந்நாட்டின் அரசன் என்பதை எடுத்துச்சொல்லி, தன்னை மணந்துகொள்ளும்படி வேண்டினான். மன்னரே! நான் பிரம்மனின் புத்திரி. தங்கள் பெருமையை அறிந்து தங்களைக் காணவே பூலோகம் வந்தேன். தங்கள் விருப்பப்படியே திருமணமும் செய்துகொள்கிறேன்.
🌺ஆனால் நான் உங்கள் அரண்மனையில்தான் தங்குவேன் என்றாள். இருவருக்கும் கந்தர்வ முறைப்படி திருமணம் நடந்தது. அரசனின் மனைவி சந்தியாவளியும், மகன் தர்மாங்கதனும் அவளை ஏற்றுக்கொண்டனர்.
🌺மோகினி அரசனை தனது வலைக்குள் சிக்கச் செய்தாள். தன்னைவிட்டு எங்கும் செல்லவிடாமல் பார்த்துக்கொண்டாள். இந்நிலையில் ஏகாதசி திதி வந்தது. அன்று மன்னன் மது, மாமிசம் எதுவும் உண்ணாமல் விரதம் இருந்தான். மோகினி அவனிடம், அரசே! விரதம், உபவாசம் எல்லாம் மன்னர்களுக்கு விதிக்கப்படவில்லை.
🌺மன்னரின் கடமை நாட்டையும், மக்களையும் காப்பதுதானே. உங்களுக்கு பதிலாக மூத்த மனைவியை விரதம் இருக்கச் சொல்லுங்கள். அதுவே போதுமே, என்றாள். என் உத்தரவுப்படி இந்நாட்டு மக்கள் அனைவருமே ஏகாதசி விரதம் இருக்கின்றனர். நீயும் அதை பின்பற்றி ஆகவேண்டும்.
🌺எனவே இந்த ஏகாதசி முதல் நீயும் விரதத்தை அனுஷ்டிப்பாய் என்றான். மோகினி அதிர்ந்துபோனாள். நான் ஏகாதசி விரதம் இருக்க வேண்டுமானால் எனக்கொரு வரம் தரவேண்டும் என்றாள்.
🌺அரசனும் ஆராயாமல் வாக்கு கொடுத்துவிட்டான். ஏகாதசியன்று நீங்கள் என்னோடு உணவருந்த வேண்டும். ஒரு ஏகாதசியில் அவ்வாறு செய்தால் போதும். அடுத்த ஏகாதசியிலிருந்து இவ்விரதத்தை இருவரும் சேர்ந்து கடைபிடிப்போம், என்றாள்.
🌺இதில் ஏதோ சதி இருப்பதை அரசன் புரிந்து கொண்டான். இருப்பினும் வாக்கிலிருந்து தவறவும் முடியவில்லை. இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தான்.
🌺அப்போது சந்தியாவளியும், தர்மாங்கதனும் அங்கு வந்தனர். நடந்ததை அறிந்தனர். அவளிடம் சந்தியாவளி, நீ எனது கணவரை விரதத்திலிருந்து பிறழச் செய்யாதே. அவர் கொடுத்த வரத்திற்கு பதிலாக என் உயிரை வேண்டுமானாலும் கேள். தருகிறேன் என்றாள்.
🌺மோகினி சிரித்தாள். உன் உயிர் எனக்கு வேண்டாம். அந்த வரத்திற்கு ஈடாக உன் மகனின் உயிரைக்கொடு என்றாள். ருக்மாங்கதன் இந்த நிபந்தனைக்கு மறுத்தான்.
🌺பிள்ளையைக் கொன்று பிரம்மஹத்தி தோஷத்தை அடைய விரும்பவில்லை என்றான். ஆனால், சந்திராவளி தெளிவாக இருந்தாள்.
🌺அன்பரே! என் பிள்ளையை கொல்வதற்கு நான் சம்மதிக்கிறேன். நமக்கு வாக்குதான் முக்கியம். பிள்ளையை கருவில் சுமந்து வளர்ப்பதால் தந்தையைவிட தாய்க்கே அதிக உரிமை உண்டு. அப்படியிருக்க, தர்மத்தைக் காப்பாற்ற என் பிள்ளையை காவு கொடுக்க சம்மதிக்கிறேன்.
🌺அவனை கொன்று, அவனது தலையை மோகினியின் கையில் கொடுத்து விடுங்கள், என்றாள். தர்மாங்கதனும் அதற்கு சம்மதித்தான். அப்பா! உங்கள் வாக்கைக் காப்பாற்ற என்னை நான் அர்ப்பணிக்கிறேன்.
🌺அதனால் நற்கதியை அடைவேன் என்றான். சந்தியாவளி தரையில் அமர்ந்தாள். தர்மாங்கதன் தாயின் மடியில் படுத்தான். மோகினியோ தர்மாங்கதனின் உயிரை பறிப்பதில் விடாப்பிடியாக இருந்தாள்.
🌺ஏகாதசி விரதத்தை எந்த நிலையிலும் கைவிடமாட்டேன் என கூறிய ருக்மாங்கதன் வாளை உருவி ஓங்கினான். அப்போது பூமி அதிர்ந்தது. வானம் இருண்டது. மகாவிஷ்ணு ருக்மாங்கதன் முன்பு தோன்றி அவனை தடுத்தார்.
🌺ருக்மாங்கதா! உனது மன உறுதியைக் கண்டு மகிழ்ந்தேன். நீ இன்னும் சிலகாலம் வாழ்ந்து உன் மனைவியுடன் என்னிடமே வந்து சேர் என ஆசிர்வதித்து மறைந்தார்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏
"ஸ்மரணாத் அருணாசலம்"
அண்ணாமலைக்கு அரோஹரா என்று சொல்லி,பெரியவாள் பாதங்களில் விழுந்த ஒரு பண்டார பிச்சைக்காரன்.- (அவனிடம் கூட ஈஸ்வரனைப் பார்த்த பெரியவா)
(தெய்வம் தெய்வ வடிவிலேயே வந்தாலும், நம்பாத பாமரர்கள் நாம்- என்னத்தைச் சொல்ல!)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு வரகூரான் நாராயணன்.
ஒரு கிராமத்தில் முகாமை முடித்துக் கொண்டு, அடுத்த முகாமுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள் பெரியவாள்.
வழியில் ஒரு பிச்சைக்காரன் வந்தான். தொலைவிலிருந்து பார்த்தபோதே, 'இவர் ஒரு சாமியார். ரொம்பப் பேர் கூட வருகிறார்கள். நல்ல சில்லறை தேறும்' என்று எண்ணியிருப்பான் போலும்.
அருகில் வந்ததும், "அண்ணாமலைக்கு அரோஹரா' என்று கூவிக் கொண்டே, பெரியவா பாதங்களில் விழுந்தான. பெரியவாள், உடன் வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.
"இவன் நமக்கு ரொம்பவும் உபகாரம் செய்திருக்கான்"-- பெரியவா.
'இவன் என்ன உபகாரம் செய்தான்?'- (தொண்டர்கள் மனதில்)
"ஸ்மரணாத் அருணாசலம் என்று சொல்வார்கள். அருணாசலேஸ்வரை நினைத்தாலே போதுமாம். ரொம்ப புண்ணியம்!.இவன் நமக்கெல்லாம் அருணாசலேஸ்வரை ஞாபகப்படுத்தி, உபகாரம் செய்திருக்கான்."- பெரியவா.
பிச்சைக்காரன் இன்னும் நின்று கொண்டிருந்தான். பத்து பைசா கூட கிடைக்கவில்லை.
பெரியவாள், அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்கள்.
"இன்னிக்கு, எங்கேயும் பிச்சைக்குப் போக வேண்டாம்.."-- பெரியவா.
"அப்படியானால், சாப்பாட்டுக்கு என்ன வழி"--- பிச்சைக்காரன்.
"மடத்திலேயே சாப்பிடலாம்.... அப்புறமா வெளியூர் போ"- பெரியவா.
பெரியவாள் பக்தர்களைப் பார்த்துச் சொன்னார்கள்;
"எந்தரோ மஹானுபாவுலு. எங்கெங்கெல்லாமோ .எத்தனையோ மகான்கள், சித்தர்கள்,பக்தர்கள் இருக்கிறார்கள். இந்தப் பண்டாரத்தைப் பாருங்கள். நாளைய தினத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அன்றன்று கிடைக்கும் பிட்சையில் காலம் தள்ளுகிறான்.இவனுக்குள்ள ஞானம் கூட நமக்கு வருவதில்லை" -பெரியவா.
ஒரு பண்டார - பிச்சைக்காரனிடம் கூட ஈஸ்வரனைப் பார்த்தார்கள் பெரியவாள். உடன் வந்து கொன்டிருந்த ஒரு வித்வான் சொன்னார்'
"ஈஸ்வரனே அவதாரம் செய்து வந்தால்கூட, நாம் அவரை வெறும் மனிதராகப் பார்க்கிறோம்!""
பெரியவாளைத்தான் குறிப்பிட்டாரோ?
தெய்வம், தெய்வ வடிவிலேயே வந்தாலும், நம்பாத பாமரர்கள் நாம். என்னத்தைச் சொல்ல?
11.ஜடாலா மஞ்ஜீர ஸ்புரத் அருண ரத்நாம்சு' நிகரை:
நிஷீ தந்தீ மத்யே நகருசி ஜரீ காங்க பயஸாம் |
ஜகத் த்ராணம் கர்த்தும் ஜநநி மம காமாக்ஷி நியதம்
தபஸ் சர்யாம் தத்தே தவ சரண பாதோஜ யுகலீ ||
என் தாயே ! காமாக்ஷி ! கால் தண்டைகளில் ஒளிர்கிற சிவப்பு
ரத்தின ஒளிக்கதிர்களால் சடைதரித்ததாக, நக ஒளி வெள்ளமாகிய
கங்கை நீரின் நடுவே அமர்ந்துள்ளதாக, நியமத்துடன் தவம் புரிவதை
உன் திருவடித்தாமரை உலகைக் காப்பதற்கென்றே ஏற்றுள்ளது.
தேவியைப் போல் அவளது இருதிருவடிகளும் உலகைக் காக்கத் தவக்கோலம் பூண்டுள்ளன போலும். அதற்கேற்றவாறு கால் தண்டை சிகப்பு ரத்தின ஒளியே அதன் சடை, நக ஒளி எனும் நீரோட்டமே கங்கை பிரவாஹம். அதன் நடுவே ஆஸனம்.
வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
பாடல் - 38
சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே
நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங்
சுற்றா உடையான் விருந்து. . . . .[38]
விளக்கம்:
ஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை இனிது. சுற்றத்தை உடையவனின் பகையை அழிக்கும் தன்மை இனிது. கன்றோடு பொருந்திய பசுவுடையவனது விருந்து எல்லா வகையினும் இனியது.
*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🙏🏻🙏🏻🌹🌻🌹🌻🌹🌻
ராகு, கேதுவினால் உண்டாகும் காள சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாக சர்ப்ப தோஷங்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடர்கள் சொல்வதெல்லாம், ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும்.
ஆனால் காள - சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படுவதாகும்.
இதற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த தலங்களில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றாகும்.
சர்ப்பங்களில் முதன்மை ஆனவரான ஆதிசேஷனே, திரேதா யுகத்தில் லட்சுமணனாகவும், துபாவர யுகத்தில் பலராமராகவும் கலியுகத்தில் ஸ்ரீ ராமானுஜராகவும் அவதரித்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது.
ஆகவே, ராகு, கேதுவினால் உண்டாகும் காள சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாக சர்ப்ப தோஷங்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
கோவிலுக்குப் பின்புறம் உள்ள குளம், ஆதிசேஷன் உருவாக்கியதால் இந்த குளத்தில் நீராடி, ஸ்ரீ ராமானுஜரையும், ஸ்ரீ ஆதிகேசவன், யுதிராஜநாதவல்லித் தாயாரையும் தரிசிப்பது, காளசர்ப்ப தோஷத்திற்கு மிகச் சிறந்த பலன்களைத்தரும்🐚
இது போன்று பல ஆன்மீக விஷ்ணுவின் தகவல்களைப் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி எப்போதும் படிக்கலாம்👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
காட்டில் பெய்யும் மழையும் காயும் நிலவும் யாருக்கும் பயன் படுவதில்லை ..
என் பதிவுகளையும் அதில் சேர்த்துக்
கொள்ளலாம் .. So மிக்க நன்றி .. வெறும் GM உடன் நிறுத்திக்கொள்ளமல் கேள்வி கேட்டதற்கு
பிரம்ம கபாலம் என்பது பிரமனின் 5வது தலையை ஈசன் கிள்ளி எரிந்ததனால் அவர் கையில் கபாலம் ( மண்டை ஒடு) ஒட்டிக்கொண்டு விட்டது .. கூடவே பிரம்மஹஸ்தி தோஷம் ... இதை திருமால் தன் கையில் இருந்து சிந்திய ரத்தத்தினால் சரி செய்தார் என்று ஒரு கதை ... இது தான் பிக்ஷை ... இப்படி நதிகள் போல நிறைய கதைகள் . கதைக்குள் போய் ஆராய்வதை விட சாராம்சம் எடுத்துக்கொள்வது சிறந்தது . பிரம்மம் ஒன்றே ... வேறு வேறு பெயர்கள் நம் விருப்பப்படி ... யாரும் யாருக்கும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை . இப்படி பாகுபாடு காண்பதே மாயம் புத்தி இன்மை
actions.
Forgiveness is the key that unlocks the handcuffs of hate.
Every interaction is an opportunity to learn only if we are interested in improving rather than proving ourself.
Mathematics may not teach us how to add happiness or how to minus sadness. But it does teach one that every problem has a solution.
Every little smile can touch somebody’s heart. No one is born happy, But all of us are born with the ability to create happiness.
Friendship means understanding, not agreement. It means forgiveness, not forgetting. It means the memories last, even if the contact is lost.
There are three gates leading to the hell of self-destruction for the soul - lust, anger and greed. everyone should abandon them.
“Yes Babuji! Daughter has done MBBS from KGMC and her future husband is also an MD there…and Babuji! My son is also in his final year of engineering.”
Standing at the door, I was thinking whether I should invite him inside or not, when he said, "Okay Babuji! I'll leave now.....Still many more cards to be distributed.....please come with your family, my entire family will feel very happy to see you all."
After two years of that incident, when he once again came to my residence, it came out in conversation that his son was working somewhere in Germany.
Now, out of curiosity, I finally asked him the question : "How did you provide for the higher education of your children with your limited income?"
"
Then I said, "Son! Always look at your own plate. If we look into what others have, we will not even be able to enjoy what we actually have. Whatever we have in the present, we should accept it from the heart, thank God and always keep trying to improve our future. Always believe in yourself, that only you have the power to change your future and no one else. Keep trying to better yourself."
"My son wiped away his tears and then looked at me with a smile, as if trying to say, that I promise you that from today onwards I will not compare my life with anyone and do my best to make my future better. And since then, none of my children made any demands of any kind from me. With limited resources, they started to improve their life. Babuji! Wherever they are today, is the result of their own sacrifices."
I kept listening to his words silently and intently. I was able to feel the power of a father's love in the deepest core of my heart.
Our future, our destiny, and how well we build it depends on us.
ஐம்பூதங்களின் நுட்ப வெளிப்பாடுகளான தன்மாத்திரைகளை தன் அம்புகளாக்கி கொண்டவள்💐💐💐
ஐந்தெழுத்து உரைப்போர்க்கு ஆத்மாவாய்
திகழ்கின்றாய்
ஐங்கரனுக்கு அன்னையே ஐயம் தீர்த்து அருள் செய்பவளே
ஆறுதல் தர நீ இருக்க மனம் ஆங்காரம் கொண்டு அலைவதேன் ?
அஞ்சுதல் அழிய வேண்டியே அம்பாள் உனை அடி பணிந்தோம் ...
வேறுதலை வணங்க மாட்டோம் ..
உன் சேருதலை வேண்டுகின்றோம்
ஒரு மாறுதலை தருவாயோ 🙏🙏🙏
ஓரிடமு மன்றியே யொன்றிநின்ற ஒண்சுடர்
ஆரிடமு மன்றியே யகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவர் சிவன்தெரிந்த ஞானியே. 114
சோதியாக உள்ளது.
அச்சோதியே எல்லா உயிரிலும் வியாபஈத்து அவரவர் மனத்துள்ளும் புற உடம்பிலும் மெய்ப் பொருளாக விளங்கி நிற்கின்றது.
அதனை அறிந்து தன சீவனிலே சிவனைக் கண்டு தியானிக்கும் யோகி தெளிந்த ஞானியே!������
When Valmiki completed his Ramayana, Narada wasn't impressed. 'It is good, but Hanuman's is better', he said.
'Hanuman has written the Ramayana too!', Valmiki didn't like this at all, and wondered whose Ramayana was better.
So he set out to find Hanuman.
In Kadali-vana, grove of plantains, he found Ramayana inscribed on seven broad leaves of a banana tree.
He read it and found it to be perfect. The most exquisite choice of grammar and vocabulary, metre and melody. He couldn't help himself. He started to cry.
'Is it so bad?' asked Hanuman
'No, it is so good', said Valmiki
'Then why are you crying?' asked Hanuman.
'Because after reading your Ramayana no one will read my Ramayana,' replied Valmiki.
Hearing this Hanuman simply tore up the seven banana leaves stating
"Now no one will ever read Hanuman's Ramayana.'"
Valmiki was shocked to see this action of Hanuman and asked him why he did this,Hanuman said, 'You need your Ramayana more than I need mine.
You wrote your Ramayana so that the world remembers Valmiki;
I wrote my Ramayana so that I remember Ram.'
At that moment he realized how he had been consumed by the desire for validation through his work.
He had not used the work to liberate himself from the fear of invalidation.
He had not appreciated the essence of Ram's tale to unknot his mind.
His Ramayana was a product of ambition;
but
Hanuman's Ramayana was a product of pure devotion & affection.
That's why Hanuman's Ramayana sounded so much better.
That is when Valmiki realized that "Greater than Ram...is the name of Ram!"
(राम से बड़ा राम का नाम).
There are people like Hanuman who don't want to be famous. They just do their jobs and fulfill their purpose.
There are many unsung "Hanumans" in our life too, our spouse, mother, father, friends, let's remember them and be grateful to all.
In this world, where everyone is highlighting his work and seeking validation, let just do our karma because he who matters, the almighty God, knows without telling him and in the end, it is actually just he who matters.
Stay blessed 🙏🙏
ஒரே வகுப்பில் படிக்கும் நண்பர்களான அந்த பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் வித்தியாசமான எண்ணமொன்று தோன்றியது.
அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது கிராமத் தெருவில் மேய்ந்து கொண்டிருந்த மூன்று எருமைகளை ஓட்டிக் கொண்டு அருகிலிருந்த காட்டுக்கு சென்றனர். எருமைகளின் முதுகில் 1, 2, 4 என்று எண்களை எழுதி விட்டு பொழுது சாயும் வரை காத்திருந்தனர்.
இரவானதும் யாருக்கும் தெரியாமல் எருமைகளை பள்ளி வளாகத்துக்குள் ஓட்டி விட்டு எதுவும் தெரியாதது போல் வீடு திரும்பினர் இருவரும்.
காலையில் பள்ளிக்குள் நுழைந்த தலைமை ஆசிரியருக்கு ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தது. "என்னது இது, ஏதோ வித்தியாசமான வாடை பள்ளிக்கூட நடைபாதைகளில் வீசுகிறதே ...?" என்று சக ஆசிரியர்களை அழைத்து விசாரித்த போது, "வாசம் மட்டும் இல்ல சார், சாணி கெடக்குது சில வகுப்பறைகளில்" என்று முகம் சுழித்தனர் ஆசிரியர்கள். உடனே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பள்ளி முழுவதும் தேடியதில் மூன்று எருமைகளும் சிக்கின. தேமே என்று இரவு முழுவதும் பள்ளிக்கூட வகுப்பறைகளில் சுற்றிக் கொண்டும் ஓய்வெடுத்துக் கொண்டும் இருந்தவை இப்போது அலுவலர்கள் கட்டுப்பாட்டில்.
எருமைகளை ஓட்டிக் கொண்டு செல்ல இருந்த அலுவலர்களிடம் ஒரு ஆசிரியர் கேட்டார், "அந்த இன்னொரு எருமை எங்கே ...?"
"பள்ளி முழுக்க தேடிட்டோம், இந்த மூணு எருமைகள் தாங்க இருந்துச்சு."
"அதெப்படிங்க சாத்தியம் ...? பாருங்க எருமைங்க முதுகில் 1, 2, 4ன்னு எழுதியிருக்குல்ல. அப்ப எருமை எண் 3 எங்க ...?"
குழப்பத்தோடு தலையைச் சொறிந்தனர் அலுவலர்கள்.
ஒட்டு மொத்த ஆசிரியர்களும், மாணவர்களும், களேபரம் கேள்விப்பட்டு கூடிய ஊர் மக்களும் அந்த நான்காவது எருமையை கண்டுபிடிக்கச் சொல்லி குரல் எழுப்பினர்.
பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அனைவரும் அந்த எருமை எண் மூன்றைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
இல்லாத எருமையை இன்னும் தேடிக்கிட்டே இருக்காங்க ...!!!
வேடிக்கையா இருக்குல்ல ...? சிரிச்சு முடிச்சப்புறம் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நாமும் நம் வாழ்க்கையில் இந்த 'இல்லாத எருமையை' எத்தனை முறை தேடி அலைஞ்சிருக்கோம் என்று ..?
நம்மிடம் இருப்பதை வைத்து திருப்தியாக, நிறைவாக, வாழ முடியும் என்ற நிலையில் கூட, பக்கத்து வீட்டுக்காரரோட புதிய கார், எதிர்த்த வீட்டுக்கார அம்மாளோட புதிய பட்டுப் புடவை, கூட வேலை செய்றவரோட பதவி உயர்வு, அவரோட புகழ், இவரோட செல்வம் என்று நம்மிடம் இல்லாதவை பற்றி மட்டுமே நினைத்து, யோசித்து, கவலைப்பட்டு, தூங்க முடியாமல் கழித்த பொழுதுகள் எத்தனை எத்தனை ...???
கொஞ்சம் நம் வாழ்க்கையை உற்று நோக்கினால் நாம் அடைந்திருக்கும் வெற்றிகள், சாதித்திருக்கும் சாதனைகள், நம்மை சுற்றியிருக்கும் அன்பான உறவுகள் என எல்லாமும் மிக அழகாகத் தெரியும்.
உங்கள் அருகிலேயே இருக்கும் உறவுகளோடு ஒரு அரை மணி நேரம் அன்போடு செலவழிக்கத் தெரியாமல் ஆண்ட்ராய்டு ஃபோனில், "உலகில் அன்பு அழிந்து கொண்டிருக்கிறது ..." என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம்.
*இல்லாத எருமையைத் தேடுவதை கொஞ்சம் நிறுத்தி விட்டு, அருகிலேயே இருக்கும் அருமைகளோடு கொஞ்சம் நேரத்தை செலவழிப்போமே ...!!!.* 😃 😃 😃 *படித்ததில் ரசித்தது.*
*பதிவு 392* 🙏🙏🙏started on 7th Oct 2021
(நிர்குண உபாசனை) (132-151)
இந்த உலக இயலுக்கு, சம்பந்தத்திற்கு அப்பாற்பட்டவள் .
ஆதி சக்தி, அநாதி யானவள்.
ஒன்று பலவாகி பல பலபலவாகி விரிவடைகிறது என்றால் அது தான் மாற்றம் ...
முந்தைய நாமத்தில் மாற்றம் இல்லாதவள் என்ற பொருளையும் சேர்த்துக்கொண்டால் அவள் ஒன்றே ஆனவள் என்று புரியும் ������
*பதிவு 390* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99
🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
One is of the character of the Rudra-granthi at the end of the Swaadhisthaanaa,
Another is of the character of the Vishnu-granthi at the end of the Anaahataa,
And another is of the character of the Brahma-granthi at the end of the Aajnaa ckakra.
Above these, the three quadrilaterals with the four doors have flights of steps at bethe four doors.
This Bhu-grha is the pericarp of the Sahasaradhalapadma. There are a thousand petals in this lotus.
The Baindava-sthaanaa is in the middle of the pericarp with the four doors.������
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 157* 💐💐💐
முகுந்தமாலா 25, 26 ஸ்லோகங்கள் பொருளுரை
शत्रुच्छेदैकमन्त्रं सकलमुपनिषद्वाक्यसम्पूज्यमन्त्रं
संसारोत्तारमन्त्रं समुपचिततमसः सङ्घनिर्याणमन्त्रम् ।
सर्वैश्वर्यैकमन्त्रं व्यसनभुजगसन्दष्टसन्त्राणमन्त्रं
जिह्वे श्रीकृष्णमन्त्रं जप जप सततं जन्मसाफल्यमन्त्रम् ॥ २६॥
சத்ருச்சே²தை³கமந்த்ரம் ஸகலமுபனிஷத்³வாக்யஸம்பூஜ்யமந்த்ரம்
ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசிததமஸ: ஸங்க⁴னிர்யாணமந்த்ரம் |
ஸர்வைச்வர்யைகமந்த்ரம் வ்யஸனபு⁴ஜக³ஸந்த³ஷ்டஸந்த்ராணமந்த்ரம்
ஜிஹ்வே ஸ்ரீக்ருʼஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜன்மஸாப²ல்யமந்த்ரம் ॥
ன்னு ஒரு ஸ்லோகம்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
அப்படீங்கிற மந்திரத்தை சொல்ல சொல்லி இருக்கா. ஹரி நாமத்தை சொல்ல சொல்லி முன்னாடி நிறைய ஒருஸ்லோகத்துல வந்திருக்கு. ராம நாமம் கேட்கவே வேண்டாம். மஹா மந்திரம். கிருஷ்ண நாம மந்திரத்தை பத்தி இவ்ளோ சொல்லியிருக்கார்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ன்னு ஜபிச்சுண்டே இருந்தாலே இந்த பலன்கள் எல்லாமே கிடைக்கும்.
அடுத்த ஸ்லோகதுல இந்த கிருஷ்ணன் தான் மருந்துன்னு ஒரு ஸ்லோகம். அதை நாளைக்கு பார்ப்போம்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா