ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 25 : சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்த்தி-த்வயோஜ்ஜ்வலா.. பதிவு 32
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
பதிவு 32
25 சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்த்தி-த்வயோஜ்ஜ்வலா
சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்த்தி-த்வயோஜ்ஜ்வலா
கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா 10
( 25 -26)💐
25 शुद्धविद्याङ्कुराकारद्विजपङ्क्तिद्वयोज्ज्वला -சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்ஜ்வலா
அவள் பதினாறு அக்ஷரங்களை கொண்ட ஸ்ரீ வித்யா அல்லவா.
அவள் பற்கள் அவ்வளவு தூய சாஸ்திரங்களின் சத்ய ஞான வெண்மை கொண்டவை.💐💐💐
ஷுத்த= தூய ;
வித்யா = மெய்யறிவு
ஆகார் = தோற்றம் / வெளிப்பார்வை
த்விஜ = பற்கள்
பக்க்தி= அணி / வரிசை
த்வய= ஜோடி
உஜ்வலா = மின்னுதல்
ஒளிரும் பல்வரிசைகள் இரண்டும், ஞான மொட்டுகள் முகிழ்த்திருப்பது போல் அமையப் பெற்றவள்.👍👍👍👍👍👍👍👍👍👍
16 பற்கள் மேல் வரிசையில்
16 பற்கள் கீழ் வரிசையில் ..
ஒன்றுக்கு மேல் ஒன்று இல்லை .
உள் புறம் வளரும் பல்லும் இல்லை ..
There is no need for root canal , nil cavity , nil cosmatic surgery ...
யானையின் தந்தங்கள் போல் மயிலின் சிறகுகளில் இருக்கும் மூரலை போல
கடலில் இருந்து கிடைக்கும் வெண் சங்கையும் , வெண் முத்துக்களையும் போல் வெண்மை உடையது ..
அஷ்டமி சந்திரன் போல் அழகு கொண்டது ..
🦋🦋🦋🦋🦋👍👍👍👍
நான் மட்டும் வெண்மை அல்ல என் உள்ளமும் வெண்மை என்று அம்பாளின் ஓவ்வொரு பற்களும் சொல்கின்றதாம் ..
முத்துக்கள், பவழங்கள் கோமேதங்கள் அம்பாளின் பற்கள் நடுவே சிக்கி அம்பாள் சிரிக்கும் போது டமால் என்று கீழே குதித்து தெறித்து ஓடுகின்றதாம்...
மேல் வரிசை 16 பற்களும் தன்னை வணங்குபவர்களுக்கு
1. கலையாத கல்வி
2. குறையாத வயது
3. ஓர் கபடு வாராத நட்பும்
4.கன்றாத வளமையும் 5.குன்றாத இளமையும்
6.கழுபிணியிலாத உடலும்
7.சலியாத மனமும் 8.அன்பகலாத மனைவியும்/ கணவரும்
9.தவறாத சந்தானமும்
10.தாழாத கீர்த்தியும் 11.மாறாத வார்த்தையும்
12.தடைகள் வாராத கொடையும்
13.தொலையாத நிதியமும்
14.கோணாத கோலும் 15.ஒருதுன்பமில்லாத வாழ்வும்
16துய்ய அவள் பாதத்தில் அன்பும்
தருகிறது
கீழ் வரிசை பற்கள் ....
என்றும் மனமும் குணமும் மார்கண்டேயனை போல் 16 வயது இளமையாக இருக்க அருள் செய்கிறது ...
32 பற்களும் இணைந்து சூரிய சந்திரனுக்கு ஒளி தருவதைப்போல் நம் வாழ்க்கையிலும் நிறைந்த ஞானம் எனும் வைராக்கிய ஒளியை அள்ளி வீசுகிறது ..
நாம் தான் அவள் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் ..
அவள் நமக்கு அளிப்பது எல்லாமே Sixers தான் ... 🥎🥎🥎🥎🥎🥎🪔🪔👏
செக்கச்சிவந்த உதடுகளுக்கு உள்ளாக வெள்ளைவெளேரென்ற பற்கள் -
சுத்த வித்யாங்குராகார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா -
வித்யாங்குராகார என்பதை வித்ய + அங்குராகார என்று பிரிக்க வேண்டும்.
சுத்த வித்யையின் புத்தம் புதிய துளிர்கள் போன்ற பல் வரிசைகளோடு சோபிப்பவள்.
இது ரொம்பவும் தத்வார்த்தம் கொண்ட திருநாமம். 'த்விஜ' என்பது இரண்டு முறை பிறப்பதற்குப் பெயர். பல், பறவை, அந்தணன் ஆகியவை அல்லது ஆகியவர்களை இருபிறப்பாளர்கள், த்விஜர்கள் என்பார்கள்.
முதலில் தோன்றும் பால்பற்கள் விழுந்து அடுத்து வருவதால், பற்களுக்கு த்விஜம் எனப்பெயர்.
முட்டைக்குள் பிறந்து, பின்னர் குஞ்சு பொரிக்கும்போது, இன்னொரு முறை பிறப்பதால், பறவைகளும் த்விஜம்.
தாய் தந்தையர்க்குக் குழந்தையாகப் பிறந்து, பின்னர் உபநயன காலத்தில் ஆசானுக்குப் பிள்ளையாக, ஞானத் தந்தைக்குப் பிள்ளையாவதால், அந்தணர்க்கும் த்விஜர்கள் என்றே பெயர். அம்பாளின் த்விஜங்கள் (பற்கள்) பளீரிடுகின்றன. பார்த்தால், சுத்த வித்யை என்னும் தாவரத்தின் அங்குரங்கள் (முளைகள்) போல் இருக்கின்றன.
அம்பாளின் புன்சிரிப்பே நமக்கு வித்தையை உபதேசிக்கும். மிக முக்கியமான ஸ்ரீ வித்யை மந்திரம், ஷோடசீ என்பதாகும்.
இதற்குப் பதினாறு அக்ஷரங்கள் உள்ளன. இடது, வலது, கீழ், மேல் என்று எல்லா நிலைகளிலும் பதினாறு பதினாறாக, சுத்த வித்யை கிட்டுகிறது.
அம்பாளின் த்விஜ அனுக்ரஹத்தால் அனைவருமே த்விஜர்களாகலாம் (ஞானம் பெறுவது தானே இரண்டாவது பிறப்பு).
==========================================================
Comments
இந்துத் திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண்டு செய்யப்படுபவை. அவை யாவும் அழகானவை;
அடுத்தது சங்கல்பம். மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம். அறவழியில் வாழும் மக்கட் செல்வத்தைப் பெறுவதே திருமணத்தின் நோக்கம்.
பின் கன்யாதானம்! பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’
மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது: ‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக! உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக! ’’ சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார். அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன், ‘‘ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான். இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ‘‘ஓ துருவனே! உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய். நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!’’
பெண் புதிய வீட்டுக்குள் நுழையும் கிருஹப்பிரவேச சடங்கின்போது சொல்லப்படும் மந்திரங்கள்: ‘‘கந்தர்வர்களும் அப்சரஸ்களும் இவள் மீது எல்லா நலன்களையும் பொழிவார்களாக! உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க. இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு. நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக. உன் கணவன் வீட்டின் ராணியாயிரு. உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் ம்ற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.’’ பின் மணமகள் சொல்வது: ‘‘வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன்!’’ கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக!’’
பிறகு இறுதியாக சேஷ ஹோமம் செய்யப்படும். அப்போது மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘அக்கினியே! வாயுவே! ஆதித்தனே! பிரஜாபதியே! உங்களைத் தொழுதால் குறைகளும் நிறைகளாய் மாறும். உங்களைச் சரண் புகுந்தேன். தயைகூர்ந்து என்னைக் காக்க வருவீராக. என் மனைவிக்குத் துயரமான வினையெதுவுமிருந்தால் அதைத் தீர்த்தருள்க! உள்ளிருந்து தொல்லை செய்யும் என் எதிரிகளை நீங்கள் தீர்த்துக் கட்டவே இந்த ஆஹுதியை அளிக்கிறேன்.’’ இந்த மந்திரத்தைத் தொடர்ந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள். திருமணச் சடங்குகள் இனிதே நிறைவடைய இல்லற வாழ்வினுள் அடியெடுத்து வைக்கிறார்கள். வாழி நலம்
-------------------------------------------------------
🌺🌹ருக் வேதத்தில் பக்தி பாவனையை வளர்க்கும் மந்திரங்களில் இதுவும் ஒன்று. பாகவதம் போன்ற புராணங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்ட பாகவத தர்மம் இதில் உள்ளது.
🌺தூய்மை, உண்மை, தர்மம், அன்பு இவை நிறைந்தவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன். அவரிடம் அன்பு செலுத்திய உடனே இந்த குணங்களை எல்லாம் கடைப்பிடிக்கத் தொடங்கி விடுவான் பக்தன்.
🌺பகவான் தர்மப் பிரியன் ஆதலால் பக்தன் தர்மத்தை மீற மாட்டான். சத்தியத்தை மீற மாட்டான். லோபம், சுயநலம் போன்றவற்றை அருகில் நெருங்க விட மாட்டான்.
🌺சாத்வீகமான நடத்தையை வளர்த்துக் கொள்வான். பிரபஞ்சத்தைப் பிரேம மயமாக தரிசிக்கத் தொடங்குவான். தனக்கு மிகப் பிரியமான ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் அவ்வாறு அன்பு செலுத்துபவன் பகவானுக்கும் பிரியமானவன் ஆவான். “யோ மத் பக்த: ஸமேப்ரிய:”என்பது கீதை வசனம்.
🌺புத்தியோடு தொடர்புடையது ஞானம். இதயத்தோடு தொடர்புடையது பிரேமை. புத்தி, சிந்திக்கும் இடம். இதயம் அனுபவிக்கும் இடம். இதயம் பிரேம மயமானால் ஞானம் கூட பிரமையை அனுபவிக்கத் தொடங்கும்.
🌺பாகவத தர்மம் மொத்தமும் ஞானம், பிரேமை இவற்றின் சமன்வயத்தையே போதிக்கிறது. தார்மீகமான அர்ப்பணிப்பு வலிமை பெறுவதற்கு, பக்தி தன் இயல்பான நிலையை அளித்து உதவுகிறது.
🌺உண்மையில் நம் வேத சனாதன தர்மத்தின் பகுதிகளான யக்ஞம், யாகம் போன்ற செயல்கள் குறைந்து விட்டாலும் இன்னும் கருத்து வடிவில் வலிமையோடு விளங்குகிறது என்றால் இத்தகு பக்தி பாவனை மிக உயர்ந்த ஆதர்சமாக கூறப்படுவதால்தான்
🌺பிரியமானவற்றுக்கெல்லாம் பிரியமான ஸ்ரீ கிருஷ்ணனை துதிசெய்.🌹🌺
🌺என நம் கலாச்சாரத்தில் ஆதரிசமான மகனீயர்கள் அனைவரும் பரம பக்தர்கள். ஆதிசங்கரர், ராமானுஜர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, விவேகானந்தர், அன்னமய்யா, தியாகராஜர் முதலானவர்கள் அனைவரும் பக்தி பாவனைக்கு ஸ்பூர்த்தியாக நிற்கிறார்கள். 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
18.நமஸ் குர்ம: ப்ரேங்ககன் மணி கடக நீலோபல மஹ:
பயோதௌ ரிங்கத்பி: நக கிரண
பேநைர் தவலிதே ஸ்புடம்
குர்வாணாய ப்ரபலசல
தெளர்வானலசிகா
விதர்க்கம் காமாக்ஷ்யா: ஸததம்
அருணிம்னே சரணயோ: || 18
காமாக்ஷியின் பாதங்களின் செந்நிறத்தை எப்போதும் வணங்குகிறோம். அவை நகங்களிலிருந்து வெளியாகிற காந்தி எனும் நுரைகளால் வெளுத்தவை, ஒளி மிக்க ரத்தினச் சிலம்புகளிலுள்ள நீலரத்தினக்கற்களின் ஒளியாகிய நீலமான கடலில் வலுத்து எரிகின்ற படபாக்கினி (கடல் தீ)யின் தீப்பிழம்போ என்ற ஐயத்தை உண்டாக்குபவை.
திருவடிகளில் அணிந்துள்ள ரத்தினச்சிலம்புகளில் உள்ள நீலரத்தின ஒளி என்ற பரந்த நீலக்கடல், நகங்களில் ஒளி கடல்மீது படர்ந்த நுரை. செந்நிறமுள்ள திருவடிகள் கடல்தீ.
வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
*ஸ்ரீ பால சுவாமி*
இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் குப்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.
இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.
*ஸ்ரீ பிரம சாஸ்தா.*
இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை,சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.
இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.
*ஸ்ரீ கஜவாகனர்.*
இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது
திருவுருவம் உள்ளது.
*ஸ்ரீ கிரவுஞ்சபேதனர்*
இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.
*ஸ்ரீ கார்த்திகேயா.*
இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.
இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம்
இருக்கிறது.
*ஸ்ரீ சேனானி.*
இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.
*ஸ்ரீ சரவணபவர்.*
தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர்.
சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.
*ஸ்ரீ சக்திதரர்.*
இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.
*ஸ்ரீ சிகி வாகனர்.*
மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.
இவரை வழிபட்டால் சிவசக்தியை சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்கும். ஆலயப் பெருந்திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகளில் முதல்வராகவும் திருத்தேரில் மீது எழுந்தருளி அருள் தருபராகவும் உள்ள அற்புத வடிவம்.
*ஸ்ரீ சுப்பிரமணியர்.*
இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை
மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.
*ஸ்ரீ வள்ளி கல்யாண சுந்தரர்.*
இவரை வழிபட்டால் திருமணத்தடைகள்
விரைவில் அகலும், கன்னிப்
பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.
*ஸ்ரீ தாரகாரி.*
ஹதாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.
🙏 கு பண்பரசு
*பதிவு 398* 🙏🙏🙏started on 7th Oct 2021
(நிர்குண உபாசனை) (132-151)
*152*
காரணங்களை கடந்தவள் .
ப்ரம்மம் காரணங்களுக்கு அப்பாற்பட்ட பர வெளி.
அவளே ஆதி காரணி.
ஸ்ரீ சக்ர வழிபாட்டில் அம்பாள் '' *காரணானந்த விக்ரஹே* '' என்று போற்றப்படுகிறாள்💥💥💥
*பதிவு 397* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
வக்ஷபீடீம் மதுவிஜயினோ பூஷயந்தீம் ஸ்வகாந்த்யா:|
ப்ரத்யக்ஷானு ஸ்ரவிகமஹிம ப்ரார்த்தனீனாம் ப்ரஜானாம்,
ஸ்ரேயா மூர்திம் ஸ்ரியம சரணஸ்த்வாம் ஸரண்யாம் ப்ரபத்யே:||"
-
*(எல்லா மங்களங்களும் அருளும் திருமாலின் திருமார்பை அலங்கரிப்பவளே!*
*மஹாலக்ஷ்மியே!*
*உன்னையே சரணடைகிறேன், அடியேனை கடாக்ஷிக்கவேணும்!*
*புதிய ஆன்மீக தகவல்கள் படிக்க*👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
-------------------------------------------------- -----
🌺🌹This is one of the mantras in the Rukveda that promotes devotion. It contains Bhagavata dharma which is elaborated in Puranas like Bhagavata.
🌺 Lord Sri Krishna is full of purity, truth, charity and love. The devotee will start practicing all these qualities immediately after showing love to him.
🌺 God is a lover of dharma and therefore a devotee will not violate dharma. He will not break the truth. He will not let greed and selfishness come near.
🌺 Develops sattvic behavior. He will begin to see the universe as Prema Maya. He who loves Lord Sri Krishna, who is very dear to him, becomes dear to the Lord as well. “Yo mat bhakta: zamepriya:” is a Gita verse.
Wisdom is associated with intelligence. Love is associated with the heart. A place of intellect and contemplation. A place where the heart enjoys. If the heart becomes prema Maya, even wisdom will begin to experience delusion.
🌺Bhagavata Dharma teaches the balance of wisdom and love. Bhakti gives its natural state and helps the moral commitment to gain strength.
In fact, the parts of our Vedic Sanatana dharma like Yajna and Yagya are reduced but still strongly expressed in the form of ideas because this kind of devotional practice is said to be the highest ideal.
🌺Praise Sri Krishna who is dear to all dear.🌹🌺
As in our culture, the fundamentalist Maganeiyas are all great devotees. Adi Shankara, Ramanuja, Sri Ramakrishna Paramahamsa, Ramana Maharishi, Vivekananda, Annamayya, Thyagaraja etc. all stand as inspirations for devotional practice. 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
பயா தாஸ்தா தந்த: ஸ்திமித கிரண ஶ்ரேணி மஸ்ருண:
ததாதி த்வத்வக்த்ர ப்ரதிபலன மச்ராந்த விகசம்
நிராதங்கம் சந்த்ராந் நிஜ ஹ்ருதய பங்கேருஹமிவ
அந்த நிலையில் தேவியின் திருமுகத் தாமரை சூரியபிம்பத்தில் பிரதிபலிக்கிறது.
சாதாரணத் தாமரை சந்திரனை கண்டால் வாடும்.
ஆனால் என்றும் மலர்ச்சியுடன் இருக்கும் இந்தத் தாமரை சூரியனுடைய இருதயத்தாமரை போல் விளங்குகிறது.🙏🙏🙏💥💥💥💥💥
*பதிவு 398* 🙏🙏🙏started on 7th Oct 2021
(நிர்குண உபாசனை) (132-151)
*152*
காரணங்களை கடந்தவள் .
ப்ரம்மம் காரணங்களுக்கு அப்பாற்பட்ட பர வெளி.
அவளே ஆதி காரணி.
ஸ்ரீ சக்ர வழிபாட்டில் அம்பாள் '' *காரணானந்த விக்ரஹே* '' என்று போற்றப்படுகிறாள்💥💥💥
व्यामोहप्रशमौषधं मुनिमनोवृत्तिप्रवृत्त्यौषधं
दैत्येन्द्रार्तिकरौषधं त्रिभुवनी सञ्जीवनैकौषधम् ।
भक्तात्यन्तहितौषधं भवभयप्रध्वंसनैकौषधं
श्रेयःप्राप्तिकरौषधं पिब मनः श्रीकृष्णदिव्यौषधम् ॥ २७ ॥
வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம் முனிமனோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்
தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம் ।
ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்
ச்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம் ॥ 24 ॥
ன்னு சொல்றார்
இது மாதிரி புண்ய தீர்த்தங்கள்ல போய் நீ குளிச்சாலும் அது பக்தி இல்லேனா யானை குளிக்கற மாதிரி தான்னு சொல்றார்.
யானை கங்கையில குளிச்சா என்ன? குளத்துல குளிச்சா என்ன?
அதுக்கு பாவ புண்ணியத்தைப் பத்தி தெரியப் போறது இல்லை.
அழுக்கு போகும் அவ்வளவு தான்.
அதுனால கிருஷ்ண பக்தியோட நீ இந்த கார்யங்கள் எல்லாம் பண்ணனும்.
தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன்,
காதலால் நெஞ்ச மன்பு கலந்திலேனதுதன் னாலே:
ஏதிலேனரங்கர்க்கு எல்லே
என் செய்வான் தோன்றினேனே.”🙏🙏🙏
நான் ஒரு போதும் எந்த காலத்திலும் உமது பொன்னடி/ திருவடி
நாடி வந்து தொழவும் இல்லை.
போது(மலர்) கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்…
” தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்”
தொழ வேண்டும் அர்ச்சிக்க வேண்டும் உம்மை என்று உணராமலே….
காலம் தனை வீணாக கழித்தேன்
காதல் கொண்டு உருகிலேன்
கண்ணா என்ன தவறு செய்தேன் தெரியவில்லை
வந்து பிறந்து விட்டேன் உனை வாழ்த்த தெரியவில்லை
எனையும் தரம் அன்று இவன் என்று தள்ளாமல்
உன் பாதங்களில் பள்ளி கொள்ள செய்வாயோ
செவ்வாய் இதழ் கொண்டவனே 💐💐💐
புதிதாய் மலர்ந்தொளிரும் சம்பகப்பூவை போன்ற எழில் நாசி அமையப்பெற்றவள்💥💥💥
எழிலாய் ஒயிலாய் உயர்வாய் உத்தமியாய் உன்னதமாய் உண்ணா முலையாய் உலகங்கள் படைப்பவளே ..
உள்காற்றும் வெளி காற்றும் உன் எழில் கண்டே உள்ளே சென்று வெளி எட்டி பார்க்கின்றதோ
வயது வந்த பெண் போல் என் சுவாசம் கொள்ளும் நாணம் எழில் கண்டே இயங்குவதென்ன ஆச்சரியம்
இனி ஒரு பிறவி உண்டு என்றால் உன் கர்ப்பை ஒன்றே எனை சுமக்க வேண்டும் வேறு ஓர் தாய் வேண்டேன் தாயே 👌👌👌
புதிதாய் மலர்ந்தொளிரும் சம்பகப்பூவை போன்ற எழில் நாசி அமையப்பெற்றவள்💥💥💥
எழிலாய் ஒயிலாய் உயர்வாய் உத்தமியாய் உன்னதமாய் உண்ணா முலையாய் உலகங்கள் படைப்பவளே ..
உள்காற்றும் வெளி காற்றும் உன் எழில் கண்டே உள்ளே சென்று வெளி எட்டி பார்க்கின்றதோ
வயது வந்த பெண் போல் என் சுவாசம் கொள்ளும் நாணம் எழில் கண்டே இயங்குவதென்ன ஆச்சரியம்
இனி ஒரு பிறவி உண்டு என்றால் உன் கர்ப்பை ஒன்றே எனை சுமக்க வேண்டும் வேறு ஓர் தாய் வேண்டேன் தாயே 👌👌👌
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தெம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரு மெம்முளே யமர்ந்துவாழ்வ துண்மையே. 122💥💥💥
அதனை ஈசன் எனக்கு அறிவித்து கண்ணில் ஆணியைப் போல் கலந்து நிற்கிறான் என் குருபிரான்.
மெய்ப் பொருளை அறிந்தாலே இம்மண்ணில் பிறப்பு, இறப்பு இல்லாது போகும் ஈசனின் திருவடிகளை சிந்தையில் வைத்து தியானியுங்கள்.
இந்த ஞானத்தை பெற்ற யோகியரிடத்தில் அண்ணலாக ஈசன் சோதி வடிவாய் அமர்ந்து வாழ்வதும் சத்தியமே!
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காஞ்சி காமாட்சி பற்றிய பதிவுகள் :*
வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக காஞ்சியில் காமாட்சி இருக்கிறாள்.
பார்வதியின் இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.
சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.
அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர்.
இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.
காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும்.
இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது.
இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள்.
இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர்.
ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.
பௌர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுகளுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். ஒன்பது ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிகைக்கு ஆராதனைகள் நடைபெறும். இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்த பூஜை மிக சிறப்பானது. விசேஷமான பலன்களை தரவல்லது.
நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடாக்கரிய பலன்களை ஏழை எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். ஸ்ரீ சக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும்.
ஸ்ரீ சக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்கள். அப்படி இருக்கும் போது புனிதமான பௌர்ணமி தினத்தில் ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பது சுற்றுகளிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பது ஐதீகம்.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
*🤘ஓம் நமசிவாய🙏*
19.பரிவே பாராயேதாம் அலகுநி தம: கூப குஹரே திநாதீரராயேதாம் மம ஹ்ருதய பாதோஜ விபிநே நபோ மாஸாயேதாம் ஸரஸ கவிதா ரீதி ஸரிதி த்வதீயௌ காமாக்ஷி ப்ரஸ்ருத கிரணௌ தேவி சரணொள || 19
சிவே | தேவி | காமாக்ஷி ! ஒளிபரவியுள்ள உன் பாதங்கள் மிகப்பெரிய அறியாமையாகிற பாழ்கிணற்றில் (வெளியேற உதவுகிற) கயிறாகட்டும். இதயமாகிற தாமரைக்காட்டிற்கு (அதனை மலர்விக்கிற) சூரியனாகட்டும். இனிய கவிதை முறை என்ற ஆற்றின் வெள்ளம்பெருக ஆவணிமாதமாகட்டும்.
வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்...
24 நிமிடங்கள்! கடிகை நேரமே நிகழ்ந்த மிகவும் உக்கிரமான அவதாரம்.
இந்த குறுகிய கடிகை நேரத்தில் நரசிம்மருக்கு "உக்கிரம்" எங்கேயிருந்து வந்தது?
🌹 பிரம்மாவுக்கோ, ஆராயாமல் கொடுத்த குற்ற பயம்!
🌹 ரிஷிகளுக்கோ, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தங்கள் கர்ம யோகைத்தைக் கைவிட்ட குற்ற பயம்!
🌹 தேவர்களுக்கோ, தங்கள் சுயநலம் பற்றிய குற்ற பயம்!
அவரவர் செய்த குற்றங்களுக்கு அவரவர் மனசாட்சியே குத்தியதால், எம்பெருமான் "உக்கிரமாய்" தெரிகிறார்!
ஆனால் கண்ணாடிக்கு ஏது உக்கிரம்?
நீ எதுவோ, அதுவாகவே கண்ணாடியும் தெரிகிறது! கண்ணாடனும் தெரிகிறான்!
எல்லாரும் சூழ்ந்து கொண்டு குட்டிப் பிரகலாதனை மறைக்கிறார்களே அதனால் அல்லவோ நரசிம்மர் இதயம் உலுக்கி அங்கும் இங்கும் தேடுகிறார்? இதுவா "உக்கிரம்"? சொல்லப் போனால் நரசிம்மருக்கு அசதியும் வருத்தமும் தான் அப்போது வந்ததாம்!
நரசிம்மருக்கு ஏன் வருத்தம் வந்தது?
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே
- பெரியாழ்வார்
பந்தனை =அசதி, வருத்தம்! எதுக்கு பகவானுக்குப் போயி வருத்தம்?
குழந்தைக்குத் தந்தை இன்றிப் போனதே என்று வருத்தம்! அந்தத் தந்தை தன் சுய பிரதாபத்துக்குக் குழந்தையைப் பல வழிகளில் கொல்லத் துணிந்தான்! அன்றோ தந்தையின் பாசம் இல்லாமல் போனது! இன்றோ தந்தையே இல்லாமல் போனது! அதான் பந்தனை = வருத்தம்! அந்த வருத்தம் தீரப் பல்லாண்டு பாடுவோம் என்கிறார் பெரியாழ்வார்!
ஒரு ஜென்மத் தந்தைக்குப் பதிலாய் ஒவ்வொரு ஜென்மத் தந்தையாய் தானே இருக்க முடிவு செய்து விட்டார் பெருமாள்!
இப்படி சுயநலமில்ல "உக்கிரம்" கண்டு, பெருமாளின் செந்தாமரை இதயத்தில் விற்றிருக்கும் ஸ்ரீ லட்சுமி அன்னை உணர்ந்தாள்! வியந்தாள்! இறைவனையும் பக்தனையும் சேர்த்து வைக்கிறாள்! பிரகலாதனுக்கு, இறைவனை, அலைமகளான மகாலக்ஷ்மியே ஆச்சார்யனாய் இருந்து பகவானைக் காட்டி வைக்கிறாள்!
லக்ஷ்மீ நாத சமாரம்பாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம்
என்பதல்லவோ குருபரம்பரை சுலோகம்! அன்னை தானே ஆதி குரு! அதான் கூட்டத்தில் இருந்து குழந்தையை விலக்கி, அவனை முன்னே செல்விக்கிறாள் செல்வி!
"உன்னைத் தான்-ப்பா திரும்பிப் பார்த்து, திரும்பிப் பார்த்து தேடுறாரு! அதை உக்கிரம் என்று தப்பாக நினைச்சிக்கிட்டு இருக்காங்க இவங்க எல்லாரும்! நீ எதுக்கும் கவலைப்படாமல் முன்னே போ"
என்று ஆற்றுப்படை செய்து வைக்கிறாள் அன்னை! பிரகலாதனும் இறைவனுக்கு அருகில் சென்று, அணைப்பைப் பெற்று, பக்த சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ஆகி விட்டான்!
"ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் திருவடிகளே சரணம் "✍🏼🌹
விஷ்ணுவைப் பற்றி சுவாரஸ்யமான புராணக் கதைகள் மற்றும் புதிய ஆன்மீக தகவல் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்
👇👇👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
Google search 🔍 Sri mahavishnu info
விஷ்ணுவை பற்றிய அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் படிக்கலாம்
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்கள் பற்றிய பதிவுகள் :*
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன. லலிதா ஸஹஸ்ர நாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர்.
கும்பகோணம் – மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.
ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்துள்ளார்.
சென்னை – திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரத்தால் தணிக்கப்பட்டது.
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஒரு காதில் ஸ்ரீசக்ர தாடங்கத்தையும் மற்றொரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் அணிவித்துள்ளார். அதன் பின்னரே தேவியின் உக்ரம் தணிந்து சாந்தமானார்.
கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்ரமே.
சென்னை – காளிகாம்பாள் ஆலய மேருவில் அந்தந்த மாத்ருகா அட்சரங்கள் அந்தந்த ஸ்தானத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
சென்னை – திருவல்லிக்கேணி அனுமந்தலாலா தெருவில் உள்ள காமகலா காமேஸ்வரி சந்நதியிலும் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. த்ரிபங்க நிலையில் வீற்றருளும் இவள் மிக்க வரப்பிரசாதி.
சென்னை -- நங்கநல்லூரில் திதிநித்யா தேவிகளின் சக்கரங்களும் விக்ரகங்களும் இரு புறங்களிலும் திகழ 16 படிகளின் மேல் மகாமேருடன் கோலோச்சுகிறாள், ராஜராஜேஸ்வரி.
நேபாளம் குஹ்யேஸ்வரி ஆலயத்திலுள்ள தாமரை மொட்டின் நடுவே அமைந்துள்ள ஸ்ரீ சக்கரத்தை அனைவரும் தொட்டு பூஜிக்கலாம். அதில் பொங்கி வரும் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு பிரசாதமாகவும் உட்கொள்ளலாம்.
திருப்போரூர் முருகன் ஆலய பிரகாரத்தில் சிதம்பர சுவாமிகள் நிறுவிய சக்கரத்தை தனி சன்னதியில் தரிசிக்கலாம்.
தாம்பரம் -- ஸ்ரீ பெரும்புதூர் பாதையிலுள்ள பண்ருட்டிக்கண்டிகை தலத்தில் பூரணமகாமேருவிற்கு இரு புறங்களிலும் வாராஹி, மாதங்கி மற்றும் திதி நித்யா தேவியார் 15 பேரும் யந்திர வடிவாக அருள்கிறார்கள்.
திருச்சி மலைக்கோட்டையில் சுகந்த குந்தாளம்பாளின் சன்னதி ஸ்ரீ சக்கர வடிவில் அமைந்திருக்கிறது.
கேரளாவில் ஓணத்தக்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் அம்பிகை சன்னதியில் ஸ்ரீ சக்கரம் பொருத்தப்பட்டிருக்கிறது.
காசி -- அனுமன் காட்டில் முத்துஸ்வாமி தீட்சிதர் ஆராதனை செய்த சிவலிங்கத்தின் உச்சியில் ஸ்ரீ சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி ராஜகோபாலன், தேவியின் அம்சமான கோபாலஸுந்தரியாக விளங்குகிறார். அதனால் அவர் திருவடிகளில் ஸ்ரீ சக்கரம் வைத்து வழிபடப்படுகிறது.
திருவிடைமருதூரில் மூகாம்பிகை முன் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேவி உபாசகரான பாஸ்கரராயர் பூஜித்தது இந்த மகாமேரு.
புன்னை நல்லூர் மாரியம்மனின் முன் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்தவர். மகான் சதாசிவபிரம்மேந்திரர்.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
*🤘ஓம் நமசிவாய🙏*
தேனம்பாக்கத்தில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்கள் பெரியவா. அருகில் ஒரு தொண்டரும், பக்தரும் இருந்தார்கள்.
பத்தாம் வகுப்புப் படிக்கும் மாண்வன் ஒருவன் வந்து ''சங்கராசாரியார் எங்கே?'' என்று பெரியவாளையே கேட்டான்.
'பெரியவா, காஞ்சிபுரம் சாலைத் தெருவில் இருக்கா' நான் ரிடையர் ஆகிவிட்டேன்' என்று சொன்னார்கள்.
பையனும் தலை ஆட்டிவிட்டுப் போய் விட்டான். எதிரே உட்கார்ந்திருந்த சி.ஆர்.பட்டாபிராமன், *ஸர் ஸி. பி. ராமஸ்வாமி அய்யரின் (இன்று இவர் பிறந்த தினம்)* புதல்வர் சொன்னார் 'பெரியவாளுக்கு ரிடையர்மண்ட் என்பதே கிடையாது. குருஸ்தானம் என்பது சாச்வதமான போஸ்ட். குரு ஸ்லோகத்தில் குர் ப்ரம்மா,குர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: என்று சொல்லியிருக்கு, ப்ரம்மா விஷ்ணு, ஈச்வரனுக்கு ரிடையர்மண்ட் கிடையாது, பெரியவா ஜகத்குரு.. ஆகையால்
பெரியவாளுக்கும் ரிடையர்மண்ட்
கிடையாது''.
'நீ பெரிய வக்கீலோட பிள்ளை.. அதனால் லா பாய்ண்ட் சொல்றே'
என்றார் பெரியவா சிரித்துக் கொண்டே. உன்னை மடத்துக்குப் பட்டா எழுதிக் கொடுத்துட்டா, அதனால்தான்
பட்டாபிராமன்னு பெயர் உனக்கு!'
ஆம். உண்மையான வாக்கு! காஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள தாமல் கிராமத்திலிருந்த விளை நிலங்களை விற்று அந்தத் தொகையை அப்படியே சாம வேத பாடசாலை நடத்துவதற்காக மடத்துக்குக் காணிக்கையாகக் கொடுத்தவர் பட்டாபிராமன். அத்துடன் வீட்டிலிருந்த விலயுயர்ந்த நகைகளையும் விற்று மடத்துக்கே காணிக்கையாக அளித்தவர் பட்டாபிராமன்!
ஜய ஜய சங்கரா...
ஹர ஹர சங்கரா...
*kn*
*உலகமக்கள் நோய்களிலிருந்து விடுபட விக்ரம சோழன் வழிபட்ட சிறுதாமூர் அகஸ்தீஸ்வரமுடைய மகாதேவர் கோவில்*
சோழர் காலத்திய அரிய கல்வெட்டுகளும், சிற்பங்களும் நிறைந்த அகஸ்தீஸ்வரமுடையார் ஆலயம் செங்கற்பட்டு மாவட்டம் சிறுதாமூரில்
அமைந்துள்ளது. பூமிக்குள் புதைந்துபோன இந்த சிவாலய லிங்கத்தை பல ஆண்டுகளுக்குமுன் ஆலயக் குடமுழுக்குத் திருப்பணிச்செம்மல் 'சிவசேவை மாமணி' *திரு. சிவ.பால ரவி* எல்லப்பன் அவர்கள் தோண்டியெடுத்து பிரதிஷ்டைசெய்து அருகில் கிடைத்த கற்களைக்கொண்டு சன்னதி மற்றும் மேற்கூரை அமைத்து பூஜை செய்து வருகிறார்.
*விக்கிரம சோழன்*
சில ஆண்டுகளுக்கு முன் *தொல்லியல் துறை* நிபுணர்கள் சிறுதாமூர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள கல்வெட்டுக்களைப் படித்ததில் அந்த சிவன்கோவில் *கி.பி.1118 - 1136ஆம் ஆண்டுகளில்* ஆட்சி செய்த *விக்கிரம சோழன்* காலத்தைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. கோவில் சுவர்களில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுக்கள் சிவன்கோவிலை *அகஸ்தீஸ்வரமுடைய மஹாதேவர் கோவில்* என்று குறிப்பிடுகின்றன.
*மூர்த்தி குரு*
சிவன்கோவில் கருவறையின் தென்புறச் சுவற்றில் *தட்சிணாமூர்த்தி* சிற்பம் வெகு அழகாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. ஞானக்கடவுளாக இருக்கும் பரமகுரு தனது ஞானத்தை பக்தர்களுக்கு தட்சிணமாக வழங்குவதால் தட்சிணாமூர்த்தி என்று பக்தர்கள் வணங்குகின்றனர்.
இன்னல்களைத் தீர்க்கும் *மூர்த்திகுரு* என்று தட்சிணாமூர்த்தியை வியாழன் மற்றும் ஞாயிறு அன்று சிறுதாமூரில் வழிபடுகின்றனர்.
*பிரஜிரத விழா*
சிறுதாமூர் என்னும் இவ்வூர் ஜெயம்கொண்ட சோழ மண்டலத்தில் ஓய்மா நாடாக திருநல்லூர் நாட்டில் அடங்கி இருந்தது. இங்கு காணப்பெறும் ஒரு
விஷ்ணு சிற்பம் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. *அச்சுதாயபுரம்* என்றும் அழைக்கப்படும் சிறுதாமூர் அருள்மிகு ஸ்ரீ கற்பகவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வர மஹாதேவமுடையார் திருக்கோவில் கல்வெட்டுக்களிலிருந்து நாம் மேலும் பல தகவல்களை பெறுகின்றோம். கி.பி.12ஆம் நூற்றாண்டில் மூவூர் மக்கள் சேர்ந்து நடத்திய *பிரஜி ரத விழா* என்னும் சித்திரைப் பௌர்ணமி தேர்த்திருவிழா இவ்வூரில் நடைபெற்றதாம் . திருமாலும், அயனும், சிவனும் ஒரே ரதத்தில் பவனி வந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
இக்கல்வெட்டுகளை ஆய்வுசெய்தால் அரிய வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கும் என்றே கூறலாம்.
இந்தச் சிவன்கோவில் பிரதோஷகால பூஜை வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
*பிற ஆலயங்கள்*
சிறுதாமூரில் பல்லவ மன்னன் இராஜசிம்மன் காலத்தில் கட்டப்பட்ட *வெற்றி வழங்கும் பெருமாள்* ஶீ அலர்மேல் மங்காசமேத ஶீனிவாசப் பெருமாள் ஆலயம் மிகப்பொலிவுடன் அமைந்துள்ளது. திருப்பதி ஆனந்த விமானமும் ஶீரங்கம் ரங்க விமானமும் அமைந்துள்ள இத்திருக்கோவில் திருப்பதிக்கும் ஶீரங்கத்திற்கும் மிகச்சரியாக நடுவில் அமைந்துள்ளதால் *சிறுதிருப்பதி* என்று அழைக்கப்படுகின்றது.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு மாரியம்மனே பிரசவம் பார்த்ததாகத் தலபுராணமுள்ள *மருத்துவ முத்துமாரியம்மன்* ஆலயம் சிறுதாமூரில் அமைந்துள்ளது. இங்குள்ள ஶீ *சுபதிருஷ்டி கணபதி* யைச் சேவித்தால் நண்மைகள் நாளும் பெருகும் என்பது உறுதி.
*தலவழி*
செங்கல்பட்டு மாவட்ட தென்புலத்தில் உள்ள கிராமம் சிறுதாமூர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவில், மேல்மருவத்தூரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் திண்டிவனத்திற்கு முன்பே ஒலக்கூர் சாலை சந்திப்பிலிருந்து மேற்கே 5 கி. மீ. தூரத்தில் உள்ளது. (Google Map : 'Sirudhamur Srinivasar') சென்னையிலிருந்து பேருந்தில் திண்டிவனம் சென்று அங்கிருந்து டவுன் பஸ்ஸில் / ஆட்டோவில் சிறுதாமூர் செல்லலாம்.
*தொடர்புக்கு*
கோவில் புனரமைக்க, கோவிலுக்கு வர அணுகவும்
கவிஞர். விஜயகிருஷ்ணன் (செய்தி வாசிப்பாளர், தூர்தர்ஷன் பொதிகை) 9600644446 🙏🙏
©விஜயகிருஷ்ணன்
தமிழர்களான நாட்டுக்கோட்டை நகரத்தாரால் காசி விசுவநாதருக்கு குளிர்காலச்சட்டை கட்டளை ஏற்படுத்தப்பட்டு. கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக ஐப்பசி மாதம் பஞ்சமியிலிருந்து மாசி மாதம் மகா சிவராத்திரி வரை குளிர்காலத்தில் காசி விசுவநாதருக்கு குளிர்காலச்சட்டை(மக்மல் பட்டு) அணிவிக்கப்படுகிறது.
பிள்ளையார் வழிபாட்டுக்கென்றே சில அம்சங்கள் இருக்கின்றன. சிதறு தேங்காய் போடுவது, நெற்றியில் குட்டிக்கொள்வது, தோப்புக் கரணம் போடுவது ஆகியவை பிள்ளையார் ஒருவருக்கே உரியவை.
பிள்ளையார் சந்நிதியில், இரண்டு கைகளையும் மறித்து நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ளவேண்டும். இப்படியே இரண்டு கைகளையும் மறித்துக் காதுகளைப் பிடித்துக்கொண்டு, முட்டிக்கால் தரையில் படுகிற மாதிரி தோப்புக்கரணம் போடவேண்டும். இவை எதற்கு என்றால்:
யோக சாஸ்திரம் என்று ஒன்று இருக்கிறது. அதிலே நம் நாடிகளில் ஏற்படுகிற சலனங்களால் எப்படி மனஸையும் நல்லதாக மாற்றிக்கொள்ளலாம் என்று வழி சொல்லியிருக்கிறது.
பிள்ளையாரை நினைக்கிறபோது அவ்வையாரையும் நாம் சேர்த்து நினைத்தால் இரட்டிப்பு அநுக்கிரஹம் கிடைக்கும். ‘விநாயகர் அகவலை’ச் சொன்னால் இரண்டு பேரையும் ஒரே சமயத்தில் நினைத்ததாகும். எல்லோரும் இதைச் செய்யவேண்டும். வெள்ளிக்கிழமைதோறும் பக்கத்திலுள்ள பிள்ளையார் கோயிலுக்குப் போய் “விநாயகர் அகவல்” சொல்லி விக்நேச்வரனுக்கு அர்ப்பணம் பண்ணவேண்டும்.
(இன்று சங்கடஹர சதுர்த்தி)
பதிவு 6 started on 6th nov
*பாடல் 2 ... உல்லாச, நிராகுல*
உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய்,
முருகா சுரபூ பதியே
என்னும் ஜீவ போதம் அற்ற நிலை தான் அநுபூதி நிலை என்றால்,
நாம் தினமும் அனுபவிக்கும் ஆழ்ந்த தூக்க நிலைதான் அநுபூதியா?
என்கிற கேள்வி நம் மனதில் எழும். இல்லை என்கிறார் அருணை
மாமுனிவர். வெறும் தூக்க நிலை இல்லை.
.. உணர்வோடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி ..
என்ற அடியைப் பார்க்கவும். அந்த நிலையில்,
.. நானென்ப தற்றுயிரொ டுனென்ப தற்று
வெளி நாதம் பரப்பிரம வொளிமீதே
நாதம் சுரப்ப ..
.. என்பார். ('தேனுந்து முக்கனிகள்' கயிலைமலை திருப்புகழ் - பாடல் 518).
நாம் தூங்கும்போது ஒரு கட்டைக்கும் நமக்கும் வித்தியாசம் கிடையாது.
அநுபூதி நிலையில் ஆத்ம போதம் கரைந்து அருட் பெரும் ஜோதியாய்
பரமாத்மாக்குள் ஒன்றாகக் கலக்கும் நிலை கிடைக்கும். இதுவே அநுபூதி,
பெரு வாழ்வு என்கிற பெயர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. இதை ஒரு
திருப்புகழில் மிகவும் அருமையாகக் கூறகிறார்.
தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
தோன்றிய சோதியொடு ...... சிவயோகந்
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு
சோம்பினில் வாழும்வகை ......
.. 'சாங்கரி பாடியிட' (பாடல் 1240) பொதுப்பாடல்கள் - திருப்புகழ்.
இந்தப் பேரானந்த நிலையை வாய்விட்டு கூற என்னால்
முடியாதாகையினால் சகல கலா வல்லவனாகிய நீயே எல்லோருக்கும்
எடுத்துச் சொல்லவேண்டும்.
*பதிவு 387* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*91. அஹ்நே நமஹ (Ahney namaha)*
👍👍👍
ஸுரேச’: ச’ரணம் சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
*அஹ* : ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
காவலர்கள் தேடியபோது அது தேவதேவியின் இல்லத்தில் இருந்ததை அறிந்தனர்.
தேவதேவி ஒரு பாவமும் அறியாத
விப்ரநாராயணரைக் கைகாட்ட, இருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட விப்ரநாராயணர்
தன்னைக் காத்தருளும்படி அரங்கனிடம் மனமுருகி வேண்டினார்.
அரங்கன் மன்னர் கனவில் தோன்றி, தன் பக்தனுக்காக
இந்த லீலையைத் தானே செய்ததாகக் கூறி, விப்ரநாராயணரை விடுவிக்கச் சொன்னார். மன்னரும் விடுவித்தார்
*பதிவு 386*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
*51*
सत्पक्षः सुमनोवनेषु स पुनः साक्षान्मदीये मनोराजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभु: ॥ ५१ ॥
ப்4ருʼங்கீ³ச்சா²நடனோத்கட: கரிமத³க்³ராஹீ ஸ்பு²ரன்மாத4வா-
ஹ்லாத³: நாத³யுத: மஹாஸிதவபு: பஞ்சேஷுணா சாத்³ருʼத: ।
ஸத்பக்ஷ: ஸுமனோவநேஷு ஸ புன: ஸாக்ஷாந்மதீ³யே மநோ-
ராஜீவே ப்4ரமராதி4போ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு4: ॥ 51 ॥
“ *ஸத்பக்ஷ* :” – விருப்பம் உடையவரும்.
இந்த மஹா ப்ரதோஷமே நம்ப ஸ்வாமி ஹாலஹால விஷத்தை உண்டு தேவர்களை காத்ததை கொண்டாடறோம்.
அதுக்காகதானே நன்றி பாராட்டி அவரை நமஸ்காரம் பண்றோம்.
அப்படி அவரைப் போற்றினா, நம்முடைய எல்லா ஆபத்துலேந்தும் என்றும் காப்பாத்தறார்.
திருக்குடந்தை என்று அழைக்கப்படும் திவ்யதேசமான கும்பகோணத்தில், கோயில் கொண்டுள்ள கோமளவல்லித் தாயாரின் கேள்வனான சாரங்கபாணிப் பெருமாள் திருவடி களிலே நம்மாழ்வார் சரணாகதி செய்தார். “திருமாலே! உன்னை விட்டால் எனக்கு வேறு புகழ் இல்லை! நீயே அடியேனை இந்தப் பிறவிப் பெருந்துயரில் இருந்து காத்து முக்தி அளிக்க வேண்டும்!” என்று திருமாலிடம் மன்றாடிய நம்மாழ்வார்;
“என் நான் செய்கேன்? யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்!”
என்று பாடினார்.
“இறைவா! நானும் முக்திக்காக எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன். உன்னைத் தவிர மற்றொருவர் காலிலும் நான் விழ மாட்டேன். என் விஷயமாக நீ திருவுள்ளத்தில் என்ன கருதுகிறாய்? நீ ஒருவன்தான் அடியேனைக் காத்தருள வேண்டும்! உன்னைத் தவிர வேறு எந்த வழியில் முக்தி வந்தாலும் அந்த முக்தியே எனக்கு வேண்டாம்!” என்று இப்பாடலின் வாயிலாகத் தெரிவித்தார் நம்மாழ்வார். இதைக் கேட்ட சாரங்கபாணிப் பெருமாள், “ஆழ்வீர்! உங்களுக்கு முக்திதானே வேண்டும்? அது எப்படிக் கிடைத்தால் என்ன? உங்கள் முயற்சியால் கிடைத்தால் என்ன? வேறொருவர் காலில் விழுந்து பெற்றால் என்ன? கிடைக்க வேண்டிய முக்தி கிடைத்ததே என்று நீங்கள் பெற்று மகிழலாமே! அதை விட்டுவிட்டு நான் கொடுத்தால் தான் முக்தியையே ஏற்பேன் என்பது சரியாகப் படவில்லையே!” என்றார்.
அதற்கு நம்மாழ்வார், “இல்லை இறைவா! நீ கொடுத்தால்தான் அது முக்தி! வேறு வழியில் வந்தால் அதை முக்தியாகவே நான் கருத மாட்டேன்! அது காலனைக் கொண்டு மோதிரம் இடுமா போலே!” என்றார். காலனைக் கொண்டு மோதிரம் இடுதல் என்றால் என்ன? ஒரு ஊரில் வாழ்ந்துவந்த ஏழைக்கு நீண்ட நாட்களாகத் தங்க மோதிரம் செய்து கையில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால், வறுமையில் வாடிய அவரால் தங்க மோதிரம் வாங்க முடியவில்லை. இந்நிலையில் அவ்வூரில் யாரோ ஒருவர் இறந்துவிட்டார். அவருக்கான பத்து நாள் இறுதிச் சடங்குகளைச் செய்த அவரது மகன், பத்தாம் நாளில் தங்கத்தில் யம தர்ம ராஜாவின் விக்கிரகம் செய்து அதைத் தானம் செய்ய முன்வந்தான். தங்கத்தில் யம தர்ம ராஜா விக்கிரகம் செய்து அதைத் தானம் செய்தால், இறந்தவர் நற்கதி அடைவார் என்பதற்காக அவ்வாறு செய்தானாம்.
ஆனால், அந்த யம தர்மன் விக்கிரகத்தைத் தானமாக வாங்க யாருமே முன்வரவில்லை. வீட்டிலேயே பல பிரச்னைகள் இருக்க, யமனை வேறு வீட்டுக்கு அழைத்துச் செல்ல யார்தான் முன்வருவார்கள்? மோதிரம் வாங்க நினைத்த இந்த ஏழை, அவசர அவசரமாகப் போய் அந்த யமன் விக்கிரகத்தைத் தானம் வாங்கி வந்தார். அதை உருக்கித் தங்க மோதிரம் செய்துகையில் அணிந்துகொண்டாராம். ஆனால், இப்போது என்ன பிரச்னை என்றால் மோதிரத்தைக் காணும் போதெல்லாம், யமன் எப்போது நம்மை வந்து பிடித்துச் செல்வானோ என்ற யம பயம் அவருக்கு ஏற்பட்டதாம்.
இக்கதையை உதாரணமாகக் காட்டிய ஆழ்வார், “இறைவா! மோதிரம்தான் தேவை என்பதற்காக யமனை உருக்கி மோதிரம் அணிதல் உசிதமாகுமா? நல்ல தங்கத்தால் தானே மோதிரம் செய்வோம்? அதுபோலத்தான் மோட்சம் தேவை என்றால் அதற்காக ஏதோ ஒரு வழியில் அதைப் பெற்றால் அது உண்மையான மகிழ்ச்சி அளிக்காது. உன்னைப் பெறுவது தான் முக்தி. அதையும் உன் மூலமாகவே பெற்றால்தான் மகிழ்ச்சி! உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்!” என்றார் ஆழ்வார். “நம்மாழ்வாரே! உங்கள் வாயால் உங்கள் சரணாகதி நிஷ்டையை நன்றாகக் கேட்டு மகிழவே உங்களிடம் இப்படிக் கேள்வி கேட்டேன்!” என்று சொன்ன சாரங்கபாணிப் பெருமாள், “திருவாய்மொழி ஆயிரம் பாசுரங் களையும் பாடி நிறைவு செய்யுங்கள். அதன்பின் என் திருவடிகளை வந்து அடைவீர்கள்!” என்று கூறி அருளினார்.
இப்படி இறைவனை அடைவதற்கு இறைவனே வழி என்ற திடமான உறுதி பூண்டிருக்கும் நம்மாழ்வாரைப் போன்ற சரணாகதர்களுக்கு ஒரே புகலிடமாகத் திருமால் இருப்பதாலே, அவர் ‘ஸதாம் கதி:’ என்று அழைக்கப்படுகிறார். ஸத் என்பது சரணாகதி நிஷ்டையில் நிலைபெற்றவர்களைக் குறிக்கிறது. கதி என்றால் புகலிடம். ‘ஸதாம் கதி:’ என்றால் சரணாகதர்களுக்குப் புகலிடமாக இருப்பவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 451-வது திருநாமம்.“ஸதாம் கதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தானே புகலிடமாக இருந்து திருமால் காத்தருள்வார்.
*விஷ்ணுவைப் பற்றி சுவாரஸ்யமான புராணக் கதைகள் மற்றும் புதிய ஆன்மீக தகவல் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்*
👇👇👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
*Google search 🔍 Sri mahavishnu info*
*விஷ்ணுவை பற்றிய அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் படிக்கலாம்*
10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் கண்டு பிடிப்பு ..! அமெரிக்கா வில்– எப்படி சாத்தியம்.
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.
அதெப்படி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள்.
சிவபூமிதான் நாம் வாழும் பூமி .
இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.
தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர்
இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.
குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.
இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய மக்கீஸ்வரம் என்ற சிவாலயம் இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது.
இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.
மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)
தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.
பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.
நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)
திருக்கேதீஸ்வரம்,
திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)
ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.
உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்
புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,
ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,
வாழ்க்கையையும்,
பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).
வட அமெரிக்காவில்கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்
பட்டுள்ளது.
இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.
கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.
பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.
சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.
சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.
எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.
எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்
சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.
சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.
அதிகம் பகிருங்கள் சிவனின் பெருமையையும் தமிழின் பெருமையையும் உலகறியட்டும்.
நமசிவய
திருச்சிற்றம்பலம்.✍🏼🌹
--------------------------------------------------------
🌹🌺கண் பார்வை இல்லாத கணேசன் வீதியில்
அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே
*" நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம்* எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.
🌺அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை.*
🌺அந்த வழியை கடந்த ஸ்ரீ கிருஷ்ண பக்தன் ரோகித் , அவனுக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.
🌺பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் ஸ்ரீ கிருஷ்ணனை நோக்கி சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து *அதில் இருந்த வாசகத்தை மாற்றினான் ரோகித்.*
🌺அவன் சென்ற *சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. அவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.*
🌺வாசகத்தை மாற்றி அமைத்த ஸ்ரீ கிருஷ்ண பக்தன் ரோஹித், ஏதேனும் மாற்றம் உண்டா? என்று பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நன்றிகள் என மனதார வேண்டிக் கொண்டான் ரோஹித்.
🌺கண் பார்வை இல்லாத கணேசன், அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான். நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.
🌺அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன?* எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர்.
🌺இரண்டாம் வாசகத்தில் " *இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை"* என்று இருந்தது.
🌺இரண்டு வாசகங்களுமே கணேசன் குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன. ஆனால், முதல் வாசகம் அவன் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது.
🌺இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது.
🌺*உங்களுக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை நமக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்று காட்டுவோம் .*
🌺எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள். எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்.*🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
நாமெல்லாம் பெருமாள் கோயில்களுக்கு போறப்போ என்ன பண்றோம்? கடகடன்னு நேரா வரிசைல போய் நிக்கறதப் பத்தியோ, எவ்ளோ கூட்டம் இருக்குன்னோ, உள்ள போறதுக்கு தெரிஞ்சவா யாரவது கண்ணுல தெம்படறாளா அப்பிடி இப்பிடின்னு யோசிக்கறோம். வரிசைல நின்னோ யாரையாவது சிபாரிசுக்கு புடிச்சோ சந்நிதிக்குள்ளே நுழைஞ்சு பெருமாள் தாயாரை சேவிச்சுடறோம். இன்னும் சில பேர், இதோட சேர்த்து எவ்ளோ திவ்ய தேச எம்பெருமானை சேவிச்சு முடிச்சிருக்கோம் அப்படிங்கற கணக்கை சரிபாத்துக்கறா. சந்நிதிக்குள்ளே போய் அவசரகதிலே பெருமாளை சேவிச்சுட்டு வந்துடறோம். மேலும் சில பேரோ, பெருமாள் சந்நிதிக்குள்ளே போய் நின்னுண்டு, ஒருத்தரை ஒருத்தர் குசலம் விசாரிச்சுண்ட்டு பெருமாளை சேவிச்சேன்னு பாவனை பண்ணிட்டு வெளிலே வந்துடறோம்.
ப்ராசீனமான பெருமாள் கோயில்கள் ஒவ்வொண்ணும் அகல நீளமா விஸ்தீரணத்தோட இருக்கும். பிரம்மாண்டமான மதில் சுவர்கள் அழகான தூண்கள் மண்டபங்கள் சிற்பங்கள் அகலமான நிலைப்படிகள் பிரகாரங்கள்னு எவ்ளோ விஷயங்கள். எதையாவது நாமோ நின்னு சேவிக்கறோமா?
பராசரபட்டர் ஸ்ரீரங்கத்துல ரங்கநாதனை சேவிக்கப் போவாராம். பிராகாரத்தை ப்ரதக்ஷிணம் பண்றப்போ அவரை தவிர உள்ள மத்தவாள்ளாம் வேகமா இவரைத் தாண்டி போயிண்டே இருப்பாளாம். பட்டர் மட்டும் மெதுவா அங்குள்ள மண்டபங்கள் தூண்கள் சிற்பங்கள் மதில் சுவர்கள் எல்லாத்தயும் கண்ணார பாத்துண்டே மெதுவா ப்ரதக்ஷிணம் பண்ணுவாராம். கண்ணுல தாரதாரயா ஜலம் வழிய தொடச்சிண்டு தொடச்சிண்டு மறுபடியும் தன்னை சுத்திவர இருக்க சௌந்தர்யங்களை அனுபவிப்பாராம். அந்த வானளாவிய மதில்சுவர்கள் அவர் கண்ணுக்கு ஒரு பெரிய கருடன் தன்னோட பிரம்மாண்டமான ரெக்கைகளை விரிச்சுண்டு அந்த ஸ்ரீரங்கநாதனை காவல் காக்கறாப்போல நெனைச்சி அங்குலம் அங்குலமா அனுபவிப்பாராம். அப்பிடி பராசரபட்டர் அணு அணுவா ரசிச்சு சேவிச்ச ஸ்ரீரங்கத்தினை தான் இன்னிக்கு நாமெல்லாம் சேவிச்சுண்டிருக்கோம்.
ஆண்டாள் அருள பண்ணினா மாதிரி கோயில் காப்போன், தோரண வாயில் காப்போன், மணிக்கதவம் ஒவ்வொண்ணும் ஒவ்வொண்ணும் அது எதுவா இருக்கோ அதுவா பிறவி எடுக்க ஜென்ம ஜென்மாந்திரங்கள்ல சுகர்மாக்கள் நெறய்ய பண்ணிருக்கணும். அவற்றை சேவிக்கறப்போ அந்த எம்பெருமானோட திருவுள்ளத்துக்கு உகப்பாறது. அவன் திருவுள்ளத்துக்கு உகப்பா இருக்கறத பண்றதை விட வேறென்னது ஒசத்தியா இருக்க முடியும்? இதை விட ஒசந்த சுகர்மா வேறொண்ணு இருக்க முடியுமா? அவனோட சொத்தான ஆத்மாவை அபகரிச்சுண்டு வந்திருக்கோம். அவன் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆத்மார்த்தமா அனுபவிக்காம அல்ப விஷயங்களில் அதனை ஈடுபட பண்ணுவது எவ்ளோ தூஷகர்மாவை சேர்க்க வல்லது?
ந்ருஸிம்ஹ அவதாரத்தை மனனம் பண்றப்போ ஒவ்வொரு தடவையும் மனசு யோசிக்கும்... அவன் தூணுல துரும்புலல்லாம் இருந்தானே. நாமோ அந்த அவதாரத்தும் போது அப்பிடி ஏதாவது ஒரு துரும்பா இருந்திருக்கக் கூடாதான்னு. அப்படி அவன் நெறைஞ்சிருக்க இந்த பிரபஞ்சமே எவ்ளோ புண்யம் பண்ணிருக்கணும். அதனாலே தானே மூணே மூணு ஜென்மங்கள் உனக்கு எதிரியா இருந்தாலும் பரவால்லே. ஆனா உன் பக்தனா கூட மேலும் பல ஜென்மங்கள் உன்னை விட்டு பிரிஞ்சிருக்கலாகாதுன்னு ஜயவிஜயர்கள் எதிரிகளா பொறக்கற வரம் கேட்டுண்டா. ந்ருஸிம்ஹனோட நகமா சுதர்ஷனாழ்வார் கிளர்ந்தெழுந்தாரே. ஆயிரமாயிரம் ராட்சச சேனைகள்ல ஒண்ணா இருந்திருந்தா கூட அவன் கைப்பட நம்மளுக்கு கதி மோக்ஷம் கிடைச்சிருக்குமே. எவ்வளவு பிராப்தம் வேணும் இதெல்லாத்துக்கும். என்னே ஹிரண்ய கசிபு பண்ணின சுகர்மா.
ந்ருஸிம்ஹா.. ந்ருஸிம்ஹா. உன்தன்னோடுறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது. உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன். சரணாகதோஸ்மி. காப்பாத்து.
விஷ்ணுவைப் பற்றி சுவாரஸ்யமான புராணக் கதைகள் மற்றும் புதிய ஆன்மீக தகவல் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்
👇👇👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
Google search 🔍 Sri mahavishnu info
விஷ்ணுவை பற்றிய அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் படிக்கலாம்
*பதிவு 399* 🙏🙏🙏started on 7th Oct 2021
*153*
காரணம் இன்றி அருள்பவள் ..
காரணம் கொண்டு பிணி தருபவள்
காரணம் களைந்து பிணி தீர்ப்பவள்
காரணமாய் வருபவள் காரணம் ஏதும் கேட்க்காதவள் காரணீச்வரரின் காரணீ இவளே 🙏🙏🌞
*பதிவு 398* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
101
பயா தாஸ்தா தந்த: ஸ்திமித கிரண ஶ்ரேணி மஸ்ருண:
ததாதி த்வத்வக்த்ர ப்ரதிபலன மச்ராந்த விகசம்
நிராதங்கம் சந்த்ராந் நிஜ ஹ்ருதய பங்கேருஹமிவ
என்ன ஒரு கற்பனை ...
எவ்வளவு ஒரு பக்தி இருந்தால் இப்படி எல்லாம் ஸ்லோகம் இயற்ற முடியும் ?
திருவடிகளை சூரியனாகவும் திருமுகத்தை கமலமாகவும் கற்பனை செய்கிறார் கவி ...
சூரியன் தன் கதிர்களை அனுப்பி கமலங்களை எழுப்புகிறான் தினமும் ..
அனுப்பிய கதிர்கள் அம்பாளின் மொட்டாக இருக்கும் தாமரை முகத்தை எழுப்ப மனம் வராமல் திரும்பி விடுகிறதாம் ...
சூரியனுக்கு ஒரே கோபம் .. 😡😡😡
நீங்கள் என் வேலைக்காரர்கள் .
கொடுத்த பணியை ஏன் நிறைவேற்ற வில்லை?? ...
இனி உங்களை எங்கும் அனுப்ப போவதில்லை என்று கத்துகிறான்
பலகதிர்கள் வேலை இழந்ததனால் அவை சுருங்கி நாணி கூன் விழ வாடி போய் விட்டதாம் ..
மலர்கள் வாடுவதற்கு பதிலாய் இங்கே சூரியனின் கதிர்கள் வாடி விட்டன ..
சூரியன் தன்னை கிரகணம் பிடித்தவன் போல் கதிர்கள் பல இழந்து காணப்படுகிறான் ...
பொலிவு இழந்த கதிர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பேசிக்
கொள்கின்றனவாம்
பார் இவன் அகந்தையை ...
நம்மை வேலையில் இருந்து நீக்கி விட்டான் .. (PF, Gratuity ஒன்றும் settle பண்ணாமலேயே ..)
அம்பாளின் திருமுகத்தை அவள் உறங்கும் அழகை கலைக்க யாருக்கு மனம் வரும் ... ?
வா ஒன்று செய்வோம் ..
நாமெல்லாம் ஒன்று சேர்ந்து காமேஸ்வரனிடம் சென்று முறையிடுவோம் ..
அவன் வந்து எழுப்பினால் தான் அம்பாள் முகம் மலர்வாள் ...
என்று சொல்லி பரமேஸ்வரனிடம் முறையிட
ஈஸ்வரன் தன் முகத்தில் இடப்பாகத்தில் மட்டும் புன்னகையை தவழ விட்டு தன்
குளிர்ந்த ஒரு கண்ணை திறக்க
கதிர்கள் உற்சாகத்தில் கும்மி அடிக்க
சூரியன் அவர்களை மீண்டும் வேலையில் சேர்த்து கொண்டு (basic இல் 70 % increase , promotion , PLR எல்லாம் கொடுத்து)
தான் இழந்த பொலிவை திரும்ப பெற்று கொண்டானாம் ....💥🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப்பனுமாய்
மின்னப்பொன் மதிள்சூழ்
திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார்
இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே🙏🙏🙏
என்னப்பன் — நீ அன்றோ ?
என் செவிலித்தாயாய்
என்னைப் பெற்றவளாய் — என்னைப் பெற்றத் தாயாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் — தங்கம், மணி (மாணிக்கக்கல்), முத்து என்ற மூன்றின் தன்மைகளைக் கொண்ட
என்னப்பனுமாய் —
எம்பிரானாய் இருப்பவனும் நீ அன்றோ ?
பிரகாசிக்கின்ற பொன் மதிள்களால் சூழப்பட்ட
திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன் —
திருவிண்ணகர திவ்விய தேசத்தில் எழுந்தருளி
யிருக்கின்ற அப்பனும்,
தனக்கு நிகர் என்று எவருமில்லாத அப்பனும்
ஆனவன் நீ அன்றோ *கண்ணா*?
உன் திருவடி நிழலில் எனக்குச் சரண் அளித்தாயே👌👌
உன் உயர்வை எங்கனம் பாடுவேன் ?💐💐💐
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
சொப்பனமோ
எந்தன் அப்பன் திருவருள்
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
ஆடிய பாதனே அம்பல வாணனே
ஆடிய பாதனே அம்பல வாணனே
நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ
நட்சத்திரங்களின் சோபையை மங்கச் செய்யும் மூக்குத்தியுடன் ஜொலிப்பவள்🙏💥💫
தாரகைகள் தங்கள் ஒளிதனை தான் பெறவே
உதிக்கும் சூரியன் தன் கதிர்களை கூர்மை படுத்திக்கொள்ளவே
விண்முகில் விளையாடும் வெண்ணிலவும் தன்னில் அமுதம் அள்ளித் தெளித்திடவே
பசி அறியா தீ ஜ்வாலைகள் பொன்னிறம் பெற்றிடவே
உன் மூக்குத்தி வேண்டி நின்றனர் தினம் தினமே ...
உன் காந்தி பெற்றிடுவரோ அறியேன்
உவமைக்கும் உண்டோ அந்த உயர்வு தெரியேன்
உள்ளம் கொள்ளை கொண்ட வெள்ளை மனம் கொண்டவளே
ஒரு தூசி பெறுமோ உன் புன்னகை சிந்தும் ஒளி தனில் அவையே 🌝🌝🌝
கண்களிக்க வுள்ளுளே
கலந்துபுக் கிருந்தபின்
மண்பிறந்த மாயமும் மயக்கமு மறந்துபோய்
எண்கலந்த வீசனோ டிசைந்திருப்ப துண்மையே. 123
அப்பால் சோதியாக உலாவும் ஈசனை அறிந்து மேலைவாசல் என்னும் பத்தாம் வாசலை யோக ஞானத்தால் திறந்து தியானிக்க வேண்டும்.
அப்போது கண்களிக்க உனக்குள்ளே கலந்து புகுந்திருக்கும் இறைவனை தரிசிக்கலாம்.
இம்மண்ணிலே பிறவி எடுக்கும் மாயமும், மயக்கத்தைத் தருகின்ற சுக போகங்கள் யாவும் மறைந்துபோய் விடும்.
விண்ணில் நிற்கும் சூரியனைப் போல் என்னில் அகாரத்தில் கலந்து நிற்கும் ஈசனோடு இணைந்து இருப்பது உண்மையாகும்.👏👏👏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏
எப்பேர்ப்பட்ட தர்ஶனம்!
ஸ்ரீ த்யாகராஜ பண்டிதர் என்பவர் பெரிய வேத வித்து. தஞ்சாவூரை சேர்ந்த இவர், நம்முடைய பெரியவாளுக்கு பல வர்ஷங்கள் நிழலாக இருந்து அப்படியொரு கைங்கர்யம் பண்ணியவர். பெரியவாளுடைய அத்தனை தேவைகளையும், பெரியவாளுடைய ஒரு சின்னக் குறிப்பு கூட இல்லாமல், தானாகவே அறிந்து, செய்து வந்த புண்யவான்.
பெரியவா எப்போதுமே தன்னோடு வைத்துக் கொண்டிருக்கும் காமாக்ஷிக்கு பூஜை பண்ணும்போது த்யாகராஜ பண்டிதர் ஒரு பெரிய துணியை, தன் இரு கைகளாலும் அகலமாக ஸ்க்ரீன் மாதிரி பிடித்துக் கொண்டு நிற்பார். பெரியவா உள்ளே என்ன பண்ணுகிறார் என்பது துளி கூட வெளியே தெரியாதபடி பிடித்துக் கொண்டு நிற்பார். அவர் நல்ல உயரமாக இருந்ததால், நிஜமாக பெரிய திரை போட்டதுபோல் பிடித்துக் கொண்டு நிற்பதில் எந்த ஸ்ரமமும் அவருக்கு இல்லை.
"ஒரு சின்ன குறிப்பு கூட, நா....குடுக்க வேண்டிய அவஸ்யம் இல்லாதபடி இப்டி பாத்துப் பாத்து பண்றியே....பதிலுக்கு நா.....ஒனக்கு பண்ண வேணாமா?..."
பகவான் இப்படி நினைத்திருப்பானோ என்னவோ?
ஒருநாள் திரைக்கு அந்தப்பக்கம் தன்னுடைய காமாக்ஷிக்கு, பெரியவா பூஜை பண்ணிக் கொண்டிருந்தார். த்யாகராஜ பண்டிதர் வழக்கம் போல் திரையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.
ஆனால், அவருக்கு அன்றைக்கு என்னவோ பூஜை ரொம்ப நேரம் நடப்பதுபோல் தோன்றியது. அவருடைய எண்ணம் நிஜந்தான் என்பது போல், அவருக்கு கைகள் வலிக்க ஆரம்பித்தன.
"என்னாச்சு? பெரியவா இன்னிக்கு ரொம்ப நேரமா பூஜை பண்றாளே?........."
ரத்த ஓட்டம் குறைந்ததால் மரத்துக் கொண்டிருக்கும் கை வலி, இந்த யோஜனையோடு சேர்ந்ததும், லேஸாக வலதுகைப் பக்கம் பிடித்துக் கொண்டிருந்த திரை சற்று தாழ்ந்தது.......
ஒரே ஒரு க்ஷணம்!
பண்டிதரின் பார்வை உள்ளே பெரியவா பக்கம் விழுகிறது........
ஜகத்குருவானவர், தன்னுடைய பாரிஷதருக்கு "இந்தா! பிடி! என்னுடைய அபரிமிதமான அனுக்ரஹத்தை!..." என்று ரொம்ப ஸஹஜமாக வாரித் தெளித்தார்!
"அங்கே! சின்னச்சிறு குழந்தை வடிவில் ஸர்வாலங்கார பூஷிதையாக 'தகதக'வென கோடிஸூர்ய ப்ரகாஶத்தோடு ஸாக்ஷாத் அம்பிகை காமாக்ஷி அமர்ந்திருந்தாள் ! 'ஶ்ருதி ஸீமந்த ஸிந்தூரிக்ருதபாதாப்ஜ தூளிகா" என்று லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒரு மஹா ஸௌந்தர்யமான வர்ணனை வரும். வேதமாதா தன்னுடைய ஶிரஸை அம்பாளின் பாதங்களில் பதியும்படி நமஸ்காரம் செய்யும்போது, அவளுடைய ஸீமந்தத்தில் [நெற்றியின் உச்சி] பூசியிருக்கும் ஸிந்தூரமானது அம்பாளுடைய சிவந்த தாமரை பாதங்களில் படுவதால், அவை மேலும் சிவந்திருக்குமாம் ! அதோடு, தங்க கொலுஸுகளும், மணிகளும் கொஞ்சிட, ரத்னம் போல் ஜ்வலித்துக் கொண்டிருக்கும், அப்பேர்ப்பட்ட அந்த தேவியின் திருப்பாதங்களை, கோடிகோடியாய் ஸுகந்த புஷ்பங்களாலும், மஞ்சள் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்து கொண்டிருக்கும், தன் திருக்கரங்களால் பற்றிக் கொண்டு விம்மிக் கொண்டிருந்தார், நம்முடைய பெரியவா!..."
ஆஹா! எப்பேர்ப்பட்ட தர்ஶனத்தை தந்துவிட்டார்!
பெரியவாளின் மற்றொரு திவ்யமங்கள ரூபத்தை காணும் பாக்யம் பெற்றார் பண்டிதர்!
ஒரே ஒரு ஸெகண்ட்தான்!
அதற்குள் பெரியவா இவர் பக்கம் திரும்பாமலே தன் கமண்டலத்தில் இருந்த ஜலத்தை, பண்டிதர் முகத்தில் பின்பக்கமாக வீசியடித்தார்!
அந்த அதிர்ச்சியில், பண்டிதரின் வலது கை தானாக உயர்ந்து, திரை பழையபடி உயர்ந்தது.
பூஜை எல்லாம் முடிந்து அருளைத் தாங்க முடியாமல், தளும்பத் தளும்ப, மெல்ல வெளியே வந்த பெரியவா, பண்டிதரிடம் கேட்ட முதல் கேள்வி..........
"நீயும் பாத்துட்டியா?"
அத்வைதரஸ ஆச்சார்யனை, அம்பிகையாகவும், ஆச்சார்யாளாகவும் ஒரே நேரத்தில் த்வைதரூபமாக தர்ஶனம் செய்த, பாக்யஸாலி பண்டிதர், பதில் சொல்லும் நிலையிலா இருந்தார்?
அப்படியே இருந்தாலும், என்ன பதில் சொல்லுவார்,.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர பேசும் தெய்வம் - ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காமாட்சி சங்கர காமகோடி சங்கர..மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் குருதேவா.
व्यामोहप्रशमौषधं मुनिमनोवृत्तिप्रवृत्त्यौषधं
दैत्येन्द्रार्तिकरौषधं त्रिभुवनी सञ्जीवनैकौषधम् ।
भक्तात्यन्तहितौषधं भवभयप्रध्वंसनैकौषधं
श्रेयःप्राप्तिकरौषधं पिब मनः श्रीकृष्णदिव्यौषधम् ॥ २७ ॥
வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம் முனிமனோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்
தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம் ।
ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்
ச்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம் ॥ 24 ॥
ன்னு சொல்றார்
ரிஷிகளே நம்மளோட கர்மால கூடக்கூட பக்தியை சொல்லிக் கொடுத்திருக்கா.
சந்த்யாவந்தனம் பூர்த்தியிலே “காயேனவாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத், கரோமி யத் யத் சகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி.” அப்படீன்னு பண்ணின காயத்ரி ஜபத்தோட பலனை கிருஷ்ணார்ப்பணம் பண்ணினா நமக்கு பக்தி ஏற்படும்.
சித்தஸுத்தி ஏற்படும். அதுனால நாம பகவானுக்கு பக்கத்துல போக முடியும் ன்னு அந்த ஞாபகத்தோட அதற்காகத்தான் இதெல்லாம் பண்றோம்னு பண்ணனுமே தவிர மனஸு காமினி காஞ்சனத்துலயே இருந்துண்டு இருந்தா எத்தனை வருஷம் இதெல்லாம் பண்ணி என்ன ப்ரயோஜனம்னு கேட்கறார்.
Shrimati Draupadi Murmu’s personal life is a story of resilience and ‘self-pride’. There was an unforgettable moment for her in 2009 when her 25-year-old son Lakshman died unexpectedly after attending a gathering in Bhubaneshwar. His death broke her. Supriya Kumari, head of the Brahma Kumari ashram in Rairangpaur, Odisha says, “She was completely shattered. She wasn’t having any life within her to even talk.”
In one of the talks on Brahma Kumari’s television programme, Draupadi Murmu herself narrated this event, “The tsunami came into my life in 2009. It was a huge jolt to me. I couldn’t hear anything for a few days. I slipped into depression. Log kehte the ye to mar jaegi (People thought I will not survive). But, no, I wanted to live.”
But tragedy befell Murmu again when her younger son, Shipun, died in a road accident. When his body was brought home, she was broken completely, once again.
Rajesh Sharma, a local journalist who was present at her home, says, “She was crying uncontrollably. She broke down before her son’s body. She raised her hands to the sky, asking, ‘God, what more do you want from me? What is left now?’” The catastrophe came in droves.
In an indescribable series of events, her mother and a younger brother died within a month. And a year later, due to deep depression, her husband, Shyam Charan Murmu, died as well.
At the same time when you see tribal girls and boys getting free education and decent surroundings around samadhis, you can visualise carving out a beautiful future out of a deathly past.
Take a bow Droupadi Murmu, to be the President of India!
Courtesy - Sheela Bhatt, The Print
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆணவம் அழிக்கும் செவ்வந்தியின் மகிமைகள் பற்றிய பதிவுகள் :*
மனதை சுண்டி இழுக்கின்ற அதன் வண்ணங்களும், மனதில் தெய்வீகத்தை பரப்புகின்ற அதன் மணமும் நம்மை மற்றொரு உலகிற்கு அழைத்து செல்லக்கூடியவை.
அதனால் தான் இறைவனை துதிக்கின்ற பூஜைகள், வழிபாடுகளில் மலருக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் எல்லா விதமான மலர்களையும் எல்லா தெய்வத்திற்கும், வழிபாடுகளிலும் பயன்படுத்தலாமா? என்றால் அவ்வாறு செய்ய இயலாது. குறிப்பிட்ட மலர்களை குறிப்பிட்ட கடவுளுக்குத்தான் அர்பணிக்க முடியும்.
உதாரணத்திற்கு துளசியை சிவனுக்கு அர்பணிக்க முடியாது. ஆனால் விஷ்ணுப்பெருமானுக்கு மாலையாக கட்டி வழிபடலாம். ஒரு வில்வ தளமானது லட்சம் பொன் மலர்களுக்கு சமம்.
ஒரு வில்வ தளத்தை பக்தியோடு சிவனுக்கு சமர்ப்பித்தால் எப்பேர்பட்ட பாவங்களும் விலகும்.
அந்த வகையில், கடவுளுக்கு அர்பணிக்கும் மலர்களில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருப்பது செவ்வந்தி மலர் ஆகும்.
ஒருவர் தொடர்ச்சியாக இறைவனுக்கு செவ்வந்தி மலர்களை வைத்து வணங்குவதால் அவருடைய ஆணவம் மற்றும் அகங்காரம் மெல்ல மெல்ல அழியும் என்பது நம்பிக்கை.
அதை போலவே செவ்வந்தியின் தனித்தன்மை யாதெனில், மற்ற மலர்களை போல் அல்லாமல் அதனுடைய சொந்த இதழ்களை கொண்டே அதனால் மற்ற மலர்களை மரு உருவாக்கம் செய்ய முடியும். இது கர்மாவின் அடிப்படையை குறிக்கிறது.
http://blog.omnamasivaya.co.in/2022/11/blog-post_48.html
செய்யக்கூடிய செயல்களே கர்ம வினைகளாக மாறி பின் அதற்கு தகுந்தாற் போல மற்றொரு வடிவை எடுக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.
இந்த செவ்வந்தி மலர் அனைத்து விதமான தீய சக்திகளையும் தடுத்து நிறுத்தும்.
மேலும் இதனுடைய நறுமணமானது அதன் இதழ்கள் வாடினாலும் கூட புத்துணர்வுடன் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது தான் வருந்தினும் பிறருக்கு நன்மையை அளிக்கும் புனித தன்மையுடன் செவ்வந்தி உள்ளது.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
*🤘ஓம் நமசிவாய🙏*
ஜீவராசிகளுக்கும் உற்ற நண்பன்
இவ்வுலகில் மனிதர்களுக்கு 7வித
நண்பர்கள் உண்டு.
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
http://www.srimahavishnuinfo.blogspot.com
🙏1) வசிய மித்ரன்
🙏 2) அத்வைத மித்ரன்
🙏 3) லகுத மித்ரன்,
🙏4) துர்வ மித்ரன்,
🙏 5) பித்ரு பித்ரக மித்ரன் ,
🙏 6) உபயபாவி மித்ரன் ,
🙏 7) உதாசின மித்ரன்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌹 வசியமித்ரன : தனக்கு இலாபம் கிடைக்கும் வரை
சுயநலத்தோடு பழகுபவன்
🌹 அத்வைத மித்ரன : நல்ல காலத்திலும்,தீய காலத்திலும் தொடர்ந்து
நண்பனாக இருப்பான்.
🌹 லகுத மித்ரன் : நெருங்கிப் பழகமாட்டான். ஆனால் உதவிகள்
செய்யத் தயாராக இருப்பான்.
🌹 துர்வ மித்ரன் : அனேக நண்பர்கள் இல்லாதவன்.
🌹 பித்ரு பித்ரக மித்ரன் : சொந்த பந்தத்தில் வரும் நண்பர்கள்.
🌹 உபய பாவி மித்ரன் : நண்பன் எதிரி என்று பாராமல்
எல்லோருக்கும் உதவுபவன்.
🌹 உதாசின மித்ரன் : நண்பனோ, எதிரியோ யாருக்குமே உதவ
செய்யாதவன்.
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
🙏 தனம் ச பௌமம்,பசுவே ஈ கோஸ்தல்
விஹாரிய சாத் துவாரம், சயனம் சம்ஸ்தம்மே
தேகா சித்தா, தர்மம் ஏகோ கோ கோச்சரம்
🔥 நாம் மரணம் அடைந்த பிறகு, நம்மால் மண்ணில் புதைத்து வைத்து காக்கப்பட்ட பணம், புதைக்கப்பட்ட மண்ணில் தான் இருக்கும்.
🔥 கொட்டகையில் கட்டப்பட் மாடு கொட்டகையில்தான் இருக்கும்.
🔥 நம்முடைய மனைவியோ வீட்டு வாசல்வரை வரமுடியும்.
🔥 பிள்ளைகளும,; நண்பர்களும், சொந்த பந்தங்களும் சுடுகாடுவரை வரமுடியும்.
🔥 நம்முடைய இந்த மனித உடலோ எரிந்து சாம்பலாகிவிடும்.
🔥 அதன்பின் நம்முடன் தொடர்ந்து வரப்போவது யார்?
🔥நாம் செய்த தர்மம் ஒன்றுதான், மரணத்திற்குப் பின்பும் நம்முடன் தொடர்ந்துவரும். (நீதி சாஸ்திரம்)
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
ஜீவராசிகளுக்கும் உற்ற நண்பன்
🍑 தர்மத்திற்கு நான்கு கால்கள் உண்டு.
(கருணை சத்யம் தபம் தூய்மை)
🍒1. பிற ஜீவன்களை இம்சிக்காமல் இருப்பதால் கருணை காக்கப்படுகிறது.
🍒 2. சூதாட்டம் இல்லாமல் இருந்தால்
சத்யம் காக்கப்படும்.
🍒 3. மது மற்றும் போதை வஸ்துக்கள் இல்லாமல் இருந்தால்
தபம் காக்கப்படும்.
🍒 4. திருமணத்திற்கு புறம்பான தேவையில்லாத உறவு தவிர்க்கப்பட்டால்
தூய்மை காக்கப்படும்.
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕
🌹 சத்ய யுகத்தில் 100% தர்மத்தை மக்கள் கடைப்பிடித்ததால் 100000 வயது வரை வாழ்ந்தனர்.
🌹 த்ரேத யுகத்தில் 75% தர்மத்தை மக்கள் கடைப்பிடித்ததால் 10000 வயது வரை வாழ்ந்தனர்.
🌹 துவாபர யுகத்தில் 50% தர்மத்தை மக்கள் கடைப்பிடித்ததால் 1000 வயது வரை வாழ்ந்தனர்.
🌹 கலியுகத்தில் 25% தர்மம் உள்ளது. மக்களின் ஆயுட்காலமும் 100 வருடத்திலிருந்து குறைந்து வருகிறது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
🔯 வழக்கு விசாரணையில் தர்மம் நசுக்கப்படுமானால் அதனால் ஏற்படும் பாபம் நான்கு வகை.
🌺 எல்லா நண்பர்களிலும் மிகச்சிறந்த நண்பன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மட்டுமே
🌿 ஏனெனில் அவரின் சிறு அம்சம் ஜீவாதமாகளாகிய நாம் அனைவரும்
(பகவத் கீதை உண்மையுருவில் 15.7)
ஜீவ-பூத: ஸனாதன:
மன:-ஷஷ்டானீந்த்ரியாணி
ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி
🌾மொழிபெயர்ப்பு:
இந்தக் கட்டுண்ட உலகில் இருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.
🌹 ஜீவாத்மாக்கள் எனது சிறுபகுதிதான்என பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
🌹 ஏனெனில் எல்லோருடைய இதயத்திலும் பரம்மாத்மாவாக இருப்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரே
(பகவத் கீதை உண்மையுருவில் 15.15)
மத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் ச
வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோ
வேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம்
மொழிபெயர்ப்பு:
🔥நான்(கிருஷ்ணர்) எல்லாருடைய இதயத்திலும் (பரமாத்மாவாக) வீற்றுள்ளேன், (கிருஷ்ணரிடமிருந்தே ) என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் (கிருஷ்ணரே ) நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே(கிருஷ்ணரே )
பகவத் கீதை உண்மையுருவில் 5.29 கூறுகிறார் இந்த. 3 விசயங்களை ஏற்றவர்களுக்கு அமைதி கிடைக்கும் அமைதி கிடைத்தால் ஆனந்தம் தானாகவே வந்துவிடும்
பகவான் ஸ்ரீகிருஷ்ணரே அனைத்து ஜீவராசிகளுக்கும் உற்ற நண்பன்
பகவத் கீதை உண்மையுருவில் 5. 29
போக்தாரம் யக்ஞ-தபஸாம். ஸர்வ-லோக-மஹேஷ்வரம்
ஸுஹ்ருத ம் ஸர்வ-பூதானாம் க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி
மொழிபெயர்ப்பு:
(பகவான் ஸ்ரீகிருஷ்ணராகிய) நானே,
1.எல்லா யாகங்களையும், தவங்களையும், இறுதியில் அனுபவிப்பவன் என்றும்
, 2.எல்லா லோகங்களையும், தேவர்களையும், கட்டுப்படுத்துபவன் என்றும்,
3.எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்றும் அறிந்து, (பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப்) என்னைப் பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத்துயரங்களிலிருநது விடுபட்டு அமைதி அடைகிறான்.
🌿 பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆன்மிக ராஜ்ஜியமான கோலோக வ்ருந்தாவனம் /வைகுண்டம் இங்குசென்றால் மீண்டும் இந்த ஜடவுலகில் பிறவி எடுக்கமாட்டோம்.
(பகவத் கீதை உண்மையுருவில் 15.6)
ந தத் பாஸயதே ஸூர்யோ
ந ஷஷாங்கொ ந பாவக:
யத் கத்வா ந நிவர்தந்தே
தத் தாம பரமம் மம
மொழிபெயர்ப்பு:
(பகவான் ஸ்ரீகிருஷ்ணரது ஆன்மிக உலகமான கோலோக வ்ருந்தாவனம் )எனது அந்த
*பரம_வாசஸ்தலம் சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தினாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் *ஒருபோதும்_இந்த_ஜட_உலகிற்குத் திரும்புவதில்லை.*
விஷ்ணுவைப் பற்றி சுவாரஸ்யமான புராணக் கதைகள் மற்றும் புதிய ஆன்மீக தகவல் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்
👇👇👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
Google search 🔍 Sri mahavishnu info
விஷ்ணுவை பற்றிய அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் படிக்கலாம்
பதிவு 7 started on 6th nov
(ஆறுமுகமான பொருள் எது?)
வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ?
பொருளாவது சண்முகனே..🙏
*பொருளாவது* ... நித்தய அழிவில்லாத பொருள் என்பது (எது?)
*வானோ* ... ஆகாயமோ?,
*புனல்* ... தண்ணீரோ?,
*பாரோ* ... நிலமோ?,
*_கனலோ_* ... நெருப்போ?,
*மாருதமோ* ... காற்றோ?,
*ஞானோதயமோ* ... அறிவு தோன்றும் இடமோ?,
*நவில் நான் மறையோ ...*
ஓதப்படும் நான்கு வேதங்களோ?,
*யானோ* ... நான் என்கிற தத்துவமோ?,
*மனமோ* ... மனமோ?,
*எனை ஆண்ட இடம் தானோ ...*
என்னை ஆட்கொண்ட இடம் தானோ?
*பதிவு 388* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*91. அஹ்நே நமஹ (Ahney namaha)*
👍👍👍
ஸுரேச’: ச’ரணம் சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
*அஹ* : ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
*பதிவு 388* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*91. அஹ்நே நமஹ (Ahney namaha)*
👍👍👍
ஸுரேச’: ச’ரணம் சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
*அஹ* : ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
அன்று முதல் விப்ரநாராயணர் என்ற பெயர் மறைந்து ‘ *தொண்டரடிப் பொடியாழ்வார்* ’ என்ற திருநாமம் அவருக்கு ஏற்பட்டது.
இவ்வாறு தான் வழிதவறிச் சென்றபோதும் தன்னைக் கைவிடாமல் பின் தொடர்ந்து வந்து
அரங்கன் காத்தமையைத் தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலையில் பாடுகிறார்.
“சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயற்கண் என்னும் வலையுள்பட்டு அழுந்துவேனைப்
போதரே என்று
சொல்லிப் புந்தியுள் புகுந்து தன்பால்
ஆதரம் பெருக வைத்த அழகனூர் அரங்கமன்றே”
ஒருபோதும் தன் அடியார்களைக் கைவிடாமல் காத்தருள்வதால் திருமால் ‘ *அஹ* :’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 91-வது திருநாமம்.
“ *அஹ்நே நமஹ”* என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களை என்றும் திருமால் கைவிடமாட்டார்.
*பதிவு 387*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
*சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை*
सत्पक्षः सुमनोवनेषु स पुनः साक्षान्मदीये मनोराजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभु: ॥ ५१ ॥
ப்4ருʼங்கீ³ச்சா²நடனோத்கட: கரிமத³க்³ராஹீ ஸ்பு²ரன்மாத4வா-
ஹ்லாத³: நாத³யுத: மஹாஸிதவபு: பஞ்சேஷுணா சாத்³ருʼத: ।
ஸத்பக்ஷ: ஸுமனோவநேஷு ஸ புன: ஸாக்ஷாந்மதீ³யே மநோ-
ராஜீவே ப்4ரமராதி4போ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு4: ॥ 51 ॥
“ *விபு4* :” – பரமேஸ்வரனுக்கு ‘விபு:’ என்பது எங்கும் நிறைந்தவர் அப்டீன்னு அர்த்தம்.
” *ப்4ரமராதி4ப:” –* ப்ரமராம்பாவுடைய பதியான பரமேஸ்வரன்.
” *புந* :” – அடிக்கடி, ” *ஸாக்ஷாத்* ” – எனக்கெதிரில்,
*“மதீ³யே மநோராஜீவே” –* என்னுடைய மனத்தாமரையில்,
*“விஹரதாம்* ” – லீலை புரியட்டும். அப்படீன்னு அந்த வார்த்தைகளைக் கொண்டு, பரமேஸ்வரனுக்கும் அது பொருந்துற மாதிரியும், ஒரு வண்டுக்கும் அது பொருந்துற மாதிரியும் எவ்வளவு அழகான ஒரு ஸ்தோத்திரம் பண்ணியிருக்கார்.
எதையுமே ரசிக்கத் தெரியாமல் இருக்கிறோம் 😰
20.நிஷக்தம் ச்ருத்யந்தே
நயநமிவ ஸத்வ்ருத்தருசிரை:
ஸமைர் ஜுஷ்டம் ஸுத்தை
ரதரமிவ ரம்யைர் த்விஜகணை: I
சிவே வக்ஷோ ஜந்மத் விதயமிவ
முக்தா ச்'ரித முமே
த்வதீயம் காமாக்ஷி
ப்ரணதசரணம் நௌமி சரணம் ||
சிவே | உமையே ! காமாக்ஷி | கண்ணைப்போல் காதின் எல்லையைத் தொடுவதும் உதடுபோல் நன்கு அமைப்பழகுகொண்ட, நேரான அழகான பல்வரிசையுடன் இணைந்ததும். இரண்டு
ஸதனங்கள் போல் முத்துமாலை பூண்டதுமான உன் திருவடிகளைச்
சரணடைகிறேன்.
இங்கு சிலேடைவரிசை, ச்ருத்யந்தம் காதின் ஓரம், சுருதியான வேதத்தின் எல்லையான உபநிடததத்துவம். த்விஜகணம் - பற்களின் வரிசை, அந்தணரின் வரிசை. வேதமோத மறுபிறப்பான உபனயனமானவரின் கூட்டம். ஸத்வ்ருத்தம் - நல்லவட்டஅமைப்பு (பற்களில்), நன்னடத்தை (அந்தணரிடம்) முக்தாச்ரிதம் - முந்தணிந்தது (மார்பகத்தில்) முக்திபெற்றவரால் அண்டப்பெற்றது (திருவடியில்) கண்கள், உதடு, ஸ்தனம் இவற்றுடன் திருவடி உவமை பெறுகிறது. கண்கள் காதின் ஓரத்தைத் தொடுபவை. சரணங்கள் உபநிடதஎல்லையைத் தொடுபவை. உதடு சிவந்து நன்கு அமைந்த நேரான பல்வரிசையுடன் கூடியது. சரணங்கள் நன்னடத்தைமிக்க நேர்மைமிக்க அந்தணர்கள் சூழ்ந்தது. மார்பகம் முத்துமாலை பூண்டது. திருவடி முக்தர்களின் புகலிடம்.
வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
பாடல் - 07
ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா
நாற்ற மிலாத மலரி னழகின்னா
தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா
மாற்ற மறியா னுரை. . . . .[07]
விளக்கம்:
வலிமையில்லாதவன் கையிற்பிடித்த ஆயுதம் துன்பமாகும். மணமில்லாத மலரின் அழகு துன்பமாகும். தெளிவு இல்லாதவன் செய்யும் வேலை துன்பமாகும். அவ்வாறே சொற்களின் நுட்பத்தை அறியாதவனது சொல்லும் துன்பமாகும்.
*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
கோவிந்த நாமம்
திருமலா திருப்பதியில் வயதானவர் தரிசனத்துக்கான வரிசையில் கூட்டத்துடன் கூட்டமாக, பெருமாளின் அழைப்புக்காக ஏங்கி, வாய் கோவிந்தா கோவிந்தா என்று ஸ்மரிக்க, நானும் என் கணவரும் அமர்ந்திருக்கிறோம். எங்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு இன்னும் இருபத்தைந்து நிமிடங்களுக்குமேல் காத்திருக்கணும்.
"ஏம்மா. இவர் உன் அப்பாவா?"
"அப்பா மாதிரிதான். ஆனால் அப்பா இல்லை"
நான் புரியாமல் விழிப்பதைப் பார்த்த அந்தப் பெண் புன்முறுவலுடன்,
"
அவளது பதிலால் அசந்து போன நான், "பெற்ற குழந்தைகளே வயதானவர்களை அலட்சியம் செய்யும் இந்தக்காலத்தில் உன் உயர்ந்த பண்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. உனக்கு விருப்பமிருந்தால் உன்னைப்பற்றி ச்சொல்லேன்" என்றேன்.
"
பையனை கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தோம்.
எனக்கு உலகமே இருண்டு விட்டது. எங்கள் நிலைமைக்குமீறி செலவு செய்தோம். பலன் இல்லை. டாக்டர்கள், இனிமேல் கடவுள்தான் உங்கள் குழந்தையைக் காப்பாத்தணும், என்று கையை விரித்து விட்டார்கள்.
எங்கள் பாங்கில் மங்களா என்ற ஒரு க்ளார்க் இருக்கிறார். எனக்கு தோழி. என்னைப்பற்றி நன்கு அறிந்தவள். அடிக்கடி என்னிடம், "நீ விரும்பாவிட்டாலும் கடவுள் விருப்பப்பட்டால் தன்னிடம் உன்னை எப்படியாவது இழுத்துக்கொள்வார். கடவுளை இழிவாகப் பேசாதே" என்று அறிவுறை கூறுவாள். அவள் சொல்லும்போது அலட்சியமாகச் சிரித்தபடி அவள்பேச்சைக் கண்டுக்கவே மாட்டேன்.
பக்கத்திலிருந்த தாத்தா சிறுநீர் கழிக்க விரும்பி யதால் அவள் அவரை அழைத்துப்போனாள். "அப்படி என்ன விஷயமா இருக்கும்" என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன்.
திருமலையில் யாரும் பசித்திருக்கக்கூடாது என்பது அந்தக் கடவுளின் விருப்பம் என்பதுபோல் நாள் முழுதும் இலவசச் சாப்பாடு, நீர், பால் முதலியவை கிடைத்துக்கொண்டே இருக்கும். ஆனால் அந்தப் பெரியவர் தமாஷாக, "போதும் மகளே. இப்படி சாப்பிட்டவண்ணம் இருந்தால் பகவான் சன்னதிக்குப்பதில் இந்த வாஷ்ரூம் கதவைத்தட்டும்படி ஆகி விடும். நீ என்னால் தடைப்பட்ட உன் கதையைத் தொடரலாம். எனக்கும் கேட்க மிக ஆவலாக இருக்கு"என்றார்.
"மங்களா என்னைப்பார்த்துச் சொன்னது இது தான்.... நீ ஒருமுறை திருமலையில் சேவைசெய்ய வாலண்டியராக என்னுடன் வா. ஒருவாரம் அங்கே இருக்கலாம். உன் கோரிக்கையை பகவான் காதில் போடு. இரவு பகல் கதறு. பிறகு நடப்பதைப் பார்...
அதைக்கேட்டு எனக்கு சிரிப்புதான் வந்தது. கோமாவி ல் இருக்கும் குழந்தையை அம்போன்னு விட்டுட்டு, திருமலைக்குப் போய்த்தங்கணுமாம். அதுவும் ஒருவாரம். உடனே என்பிள்ளை எழுந்து ஓடுவானாம். நம்பற விஷயமா? அதுவும் கூட்டத்தைக்கட்டுப்படுத்தி ஜருகண்டி ஜருகண்டி ன்னு சொன்னபடி நிக்கணும். இதுபேர் சேவை. இதெல்லாம நம்மால் ஆகாது...என் மனதில் தோன்றியதை அப்படியே மங்களாவிடம் சொன்னேன்.
நான் இரவு பூரா யோசித்தேன். கணவரிடமும் இதைப்பத்திப்பேசினேன். நான் கோவிலுக்குப் போகலாமா என்று யோசித்ததே அவருக்குப் பேரானந்தம். "கவலைப்படாதே. ஒருவாரம்தானே. நான் வேலைக்குப்போகாமல் குழந்தையைப் பாத்துக்கறேன். ஊர்லேந்து அம்மாவை வரவழைக்கறேன். நாம் கடைசியா இதயும் செஞ்சு பாத்துடுவோம். நீ உன் பயணத்துக்கு ஏற்பாடு பண்ணு' அப்டின்னு உற்சாகப் படுத்தினார்.
மங்களா வசிக்கும் ஏரியாவில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூசாரி, திருமலையில் சேவை செய்யவிரும்பும் வாலண்டியர்களுக்கு உதவும் ஒரு ஏஜண்ட். வருஷத்துக்கு ஒருமுறை பத்துபேருக்கு, வேண்டிய உதவிகள் செய்வார். படிவம் பூர்த்தி செய்து, ஸ்லாட் கிடைக்கும்வரை காத்திருக்கணும். மாதக்கணக்காகும். ஏனென்றால் அங்கு வாலண்டியர் ஆவதற்கு அவ்வளவு டிமாண்ட். உலகெங்கும் இருப்போர் ஏங்கித்தவம் இருப்பார்கள். மங்களா எனக்கும் அவளுக்கும் இன்னும் மூன்று பாங்க் சிநேகிதிக்கும் அப்ளை செய்ய வைத்தாள். அவள் வருடம் தவறாமல் சேவைக்குச் செல்வதால் எல்லாம் தெரிந்திருந்தது.
குழந்தையைப்பிரிய மனமில்லாமல் கண்ணீருடன் கிளம்பினேன். நம்பிக்கையோடுபோ என்று என் கணவர் ஊக்குவி த்தார். உண்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை. எதைத்தின்றால் பித்தம் தெளி யும் என்ற மனோபாவத்தில் இதையும்தான் செய்து பார்ப்போமே என்றுதான் கிளம்பினேன்.
பெரிய கூட்டமாகக் கிளம்பி திருப்பதி வந்தடைந்தோம். ஏதோ இனம்தெரியாத மாற்றம் மனதில். ப்ரம்மாண்ட ஏழுமலை என்னை கைநீட்டி அரவணைத்து வரவேற்பதுபோல் மனதில் ஒரு மின்னல். தலையைக்குலுக்கிக்கொண்டேன். மலை ஏறும்போது வீசிய தென்றல், தூசுகளைத் துரத்தும் காற்றுபோல் என் மனதின் கவலைகளை தூரத்தள்ளிக்கொண்டிருப்பதை அப்பட்டமாக உணர முடிந்தது. மெள்ள மெள்ள என்னை, நான் யார் என்பதை மறந்து, சூழ்நிலைக்கு அடிமையானேன்.
அவர்கள் அளித்த தங்குமிடத்திற்குச்சென்று, குளித்து, வாலண்டியருக்கான சீருடை அணிந்து மீட்டிங் ஹாலுக்குச்சென்றோம். ஆதார் கார்ட், மற்ற விவரங்கள் எல்லாம் செக் செய்து பின் எல்லோருக்கும் எந்தெந்த இடத்தில் என்ன வித வேலை என்று ஒதுக்கினார் அந்த சூப்பர்வைசர்.
இன்னொருத்திக்கு செருப்புகள் பராமரித்து டோக்கன் வழங்குமிடத்திலும் வேலை ஒதுக்கப்பட்டது. எனக்கு எங்கே என்கிறீர்களா? கேட்டால் மூர்ச்சை ஆகி விடுவீர்கள். ஏன்னா..எனக்கும் அப்போ அப்படிதான் இருந்தது."
ஏழுமலையை தூரத்திலிருந்து பார்த்தவுடன் மனதில் தோன்றிய வேண்டப்பட்டவா கிட்ட வந்துட்டோம்ங்கற உணர்வு, மலையேறும்போது அன்புக்கரங்கள் ஆதரவாகத்தடவுவதுபோல் ஏற்பட்ட நிம்மதி, ஊர்தியிலிருந்து இறங்கிக்கீழே கால் வைத்ததும் ஏற்பட்ட இனம் தெரியாத அதிர்வு எல்லாமே நான் இதுவரை அனுபவிக்காதவையாக இருந்தாலும், எங்கள் சூபர்வைசர் என்னைப்பார்த்து,
அனைத்தையும் கடந்து சன்னதி க்குள் நுழைந்தேன்.
"எல்லா துன்பங்களையும் பின்னுக்குத்தள்ளி என் முன் வந்துவிட்டாயா" என்று கேட்பது போன்ற ப்ரமை.
என்னை மறந்தேன். எதற்காக வந்தேன் என்பதை மறந்தேன். என்குடும்பம், கணவன், மகன், பந்தம், பாசம் அனைத்தையும் மறந்த பரவசம் ஆட்கொண்டது.
சூபர்வைசரின் அழைப்பு என்னை இந்த உலகுக்குக் கொண்டுவந்தது. செய்யவேண்டிய வேலைகளை விளக்கிவிட்டு அவர் விலகிச்சென்றார்.
மூன்றுநாள் இதே அனுபவம். யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம். ஆசைதீர அவர் அருளை அனுபவித்தேன். அவர்கருணை அத்துடன் நிற்கவில்லை.
திடீரென எனக்கு மூன்றுநாள் அலமேலு மங்காபுரத்தில் லட்டுப்ரசாத கவுண்டரில் ட்யூட்டி. மகாலெட்சுமி அருளும் உனக்கிருக்கிறது என்று பகவான் உணர்த்துகிறாரோ.
நான் புறப்படும்போது என் கணவர் என் மொபைலைப்பிடுங்கி வைத்துக்கொண்டு, "இது இருந்தால் உனக்குவேலையே ஓடாது. குழந்தையைப்பற்றியே கவலைப்பட்டு போன் செய்வாய். வேலையில் நாட்டம் போகாது. ஏதாவது ஒரு அவசரம்னா மங்களாவிடம் சொல்லு போதும்"என்று கூறிவிட்டார்.
இப்போ வரும் விவரம் சொல்லலாம்னா, "அதான் நேரில் போறமே. எல்லாம் விவரமா சொல்லிக்கலாம்" என்று தோன்றி அந்த எண்ணத்தைக்கைவிட்டு பகவான் நினைப்பில் மூழ்கிவிட்டேன்.
மங்களாவுக்குக் கோடானுகோடி நன்றி சொல்லிவிட்டு வீட்டினுள் நுழைந்தேன். ஒருவாரமாக என்னைவிட்டு விலகியிருந்த அனைத்து ஆசாபாசங்களும் பசக் என்று ஒட்டிக்கொண்டன..ஒரே ஓட்டமாக குழந்தையின் படுக்கைக்கு ஓடினேன். படுக்கை காலியாக இருந்தது. என் அடிவயிற்றிலிருந்து பேரலறல் கிளம்பியது.
"ஐயோ. என் செல்வமே. உன்னை விட்டுட்டுப் போனதால் கோவத்தில் கடைசியா என்னைப் பாக்கக்கூடப் பிடிக்காமல் போயிட்டயா" என்ற என் அலறலைக்கேட்ட அம்மா வெளியே ஓடிவந்து, "ஏண்டி அலர்ற? ஒம்புள்ள ஆஸ்பத்திரில இருக்கான்" என்றதும் வயிற்றில் நெருப்பைக்கட்டிண்டு ஓடினேன்.
ஆஹாஹா. இது நிஜமா? கண்களைக்கசக்கிக் கொண்டேன். அதோ என் செல்லமகன் படுக்கையில் அமர்ந்து ஏதோ பொம்மையுடன் விளையாட்றான். அவன் அப்பா அவனுக்கு இட்லி ஊட்டிண்ட்ருக்கார். என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை. ஓடிப்போய் கண்ணில் நீர்பெருக அணைத்துக்கொண்டேன். என் கணவரும் ஆனந்தக்கண்ணீருடன் எங்கள் இருவரையும் அணைத்துக்கொண்டார்.
நடந்தது இதுதானாம். நான் கிளம்பி இரு நாட்களில் என் பிள்ளை கை கால் விரல்களை அசைத்திருக்கிறான். என் கணவர் கவனிக்கலை போல. மூன்றாம்நாள் கண்விழிகள் உருண்டதை, என்கணவர் குளிக்கப்போயிருந்ததால், குழந்தையுடன் இருந்த அம்மா பாத்துட்டு அவரிடம் சொல்லியிருக்கார். ஆனால் என் கணவர் நம்பல்லை. அன்று இரவு அவர் அயர்ந்து தூங்கும்போது அவன் அம்மா அம்மான்னு கூப்ட்ருக்கான். கனவுன்னு நெனச்சுக் கண்ணத் தொறந்தா, அது நெஜம். மறுநாள் விடிந்ததும் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை நடக்கிறது. படிப்படியாக நார்மல் ஆகிக் கொண்டிருக்கான். இந்த விவரம் எல்லாம் மங்களாவுக்குத் தெரியும். ஆனால் எனக்கு ஆனந்த அதி ர்ச்சி கொடுக்கும் பொருட்டு மறைத்திருக்கிறாள்.
எல்லா விவரமும் அறிந்து மகிழ்ச்சிபெருக்கெடுக்க குழந்தையுடன் கொஞ்சி நிமிர்ந்து பார்த்தால் படுக்கையின் தலைமாட்டில் திருப்பதி ஸ்வாமி படமாக நின்று என்னைப் பார்த்து ஆசிர்வதிக்கிறார்.
அப்போதிருந்து நான் தவறாமல் வருடாவருடம் வாலண்டியராக இங்கு வந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கிடைத்தற்கரிய பாக்கியமாக ஒரு சேவை/அனுபவம் கிடைக்கும். இதோ இப்போ பாருங்கள், சிறுவயதிலேயே அப்பாவை இழந்த நான் இந்த அப்பாவுக்குச் சில நிமிடங்களாவது ஒத்தாசை செய்யும் அனுபவம் கிடைத்துள்ளது. எல்லாம் அவன் அருள்."
அவள் முடித்ததும் கோவிந்தா கோவிந்தா கோஷம். ஆம் நாங்கள் உள்ளே செல்லலாம் என்ற அறிவிப்புடன் மண்டப கேட் திறக்கப்பட்டது. பெரியவரையும் அவரை அணைத்தபடி நடக்கும் சாரதாவையும் முன்னேவிட்டு நாங்கள் பின்னே சென்றோம்.
"ஹே கோவிந்தா. ஒவ்வொருவர் வாழ்விலும் அவரவர் வாழ்வு இன்பமயமாக்க நீ எவ்வளவு அற்புதங்கள் நிகழ்த்துகிறாய். ஏழை பணக்காரர், வேண்டியவர், வேண்டாதவர், உன்னைப்போற்றுவோர், தூற்றுவோர் என பாகுபாடின்றிஅனைவரையும் உன் கருணைமழையால் குளிப்பாட்டுகிறாயா. நன்றி உணர்வோடு அனைவரும் தரிசிக்கவருவதால்தான் இவ்வளவு கூட்டமா? இங்குள்ள அத்தனை பேர் வாழ்விலும் என்னென்ன அற்புதங்கள் நிகழ்த்தினாயோ? கோவிந்தா. கோவிந்தா..கோவிந்தா"
என்றபடி வரிசையில் முன்னேறினேன்.
கோவிந்தநாமம் ஏழுமலையிலும் மோதி எதிரொலிக்கிறது. அனைவரையும் ஆசீர்வதித்தபடி நம்மைப்பார்த்துக்கொண்டிருக்கிறார் அந்தப் பேரருளாளன்.
கோவிந்தா..நாராயணா.
*பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார். சரீர உபாதை இருப்பவர்களை உத்தேசித்து அவர்கள் வீடு வாசலுக்கே வருகிறார். வந்து சேவை கொடுக்கிறார்*.
*அப்படியொரு நாள் பகவான் எழுந்தருளும்போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள்*.
*
*உடனே பரமாத்மா கேட்டானாம்* - *இவ்வளவு கேட்கிறீரே* ... *நீர் ஏதாவது சமர்ப்பிக்கப் போகிறீரா இல்லையா*?
*உன்னிடத்திலே எது இல்லையோ அதைக் கொடுத்தால் தானே உயர்த்தி*? *என்றார் பக்தர்*.
*என்னிடத்திலே* *என்ன இல்லை என்று உனக்குத் தெரியுமா*? *பகவான் கேட்கிறார்*.
*அதைத் தெரிஞ்சு வச்சுண்டுதான்* *அதைக் கொடுக்க வந்தேன்*.
*என்னது அது*?
*கிருஷ்ணாவதார காலத்திலே கோபிகா ஸ்திரீகளுடன்* * *நீ சஞ்சாரம்* *பண்ணினாய் அல்லவா* .. *அப்போதே உன் மனசை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள்*. *ஆகையினாலே உன் மனசு உன்னிடத்தில் இல்லை*.. *அதற்கு பதில் என் மனசை உனக்குக் கொடுக்கிறேன்*..
*என்றார் பக்தர்*.
*பகவான் பதிலே சொல்லலை. வாயை மூடிக் கொண்டு விட்டார். ஆகவே மனசை சமர்ப்பிக்கணும். தேங்காய், கற்பூரம், பூ என்று சமர்ப்பித்து, மனசை அர்ப்பணிக்கலைன்னா ஏற்பானோ அவன்.? எதுவாயிருந்தாலும் மனசுடன் சேர்த்துச் சமர்ப்பிக்கப்படுவதுதான் உயர்த்தி என்று உணர்த்தத்தான் அந்த பக்தர் மனசையே அர்ப்பணித்தேன் என்றார்*.
*பூரணனான அவன் நம்மிடத்திலே ஒன்றே ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறான். இந்த மனசு அவனுடையது என்று அர்ப்பணிக்கிறோமா என்பதைத் தான் எதிர்பார்க்கிறான். அதை மட்டும்தான் எதிர்பார்த்து உயர்ந்த நிலையை நமக்குக் கொடுக்கிறான்*.
*நம் மனசை சமர்ப்பிக்கவிட்டால் நாம்தான் அபூர்ணர்களாகிறோமே தவிர அவன் பூரணனாகத் தான் இருக்கிறான்.எல்லா சுகுணங்களுக்கும் உரியவனாய், ஆபரணங்கள், ஆயுதங்களுடன் இருக்கிறான்; பகவான் சகலத்திலும் பூரணமாய் இருக்கிறான் என்று சரணாகதி கத்யத்தில் விவரிக்கப்படுகிறது*.
*விஷ்ணுவைப் பற்றி சுவாரஸ்யமான புராணக் கதைகள் மற்றும் புதிய ஆன்மீக தகவல் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்*
👇👇👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
*Google search 🔍 Sri mahavishnu info விஷ்ணுவை பற்றிய அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் படிக்கலாம்*
-------------------------------------------------------
🌺🌹இன்றைய மனிதர்கள் இருபத்துநான்கு மணி நேரத்தில் பன்னிரண்டு மணிநேரம் உறங்குகின்றனர், மீதி பன்னிரண்டு மணி நேரத்தில் பத்து மணி நேரம் பொருள் ஈட்டுவதில் செலவிடுகின்றனர்.
🌺எஞ்சியிருப்பது இரண்டு மணிநேரம் மட்டுமே, அதில் எங்கிருந்து ஆன்மீகத்தைப் புரிந்துகொள்வது? அவர்களுக்கு நேரமே இருப்பதில்லை.
🌺மேலும், இந்த யுக மக்களோ, இருப்பிடம், உணவு, மனைவி போன்றவற்றை அடைவதற்குக்கூட மிகவும் சிரமப்படுகின்றனர்.
🌺இறுதியாக, மேற்கூறிய எல்லா வற்றையும்விட, மக்கள் எப்போதுமே வியாதிகளாலும் எண்ணற்ற பிரச்சனைகளாலும் கவலை அடைந்துள்ளனர்.
🌺இதுவே இன்றைய யுக மக்களின் நிலையாகும். எனவேதான், வழக்கமான விதிகளின் மூலமாக முக்தியடைதல் மக்களுக்கு கடினம் என்று எண்ணிய கிருஷ்ணர், அவதரித்து வாழ்வின் மிகவுயர்ந்த பக்குவத்தை, ஆன்மீகப் பேரின்பத்தை எல்லா மக்களுக்கும் விநியோகிக்கின்றார்.
🌺உத்தமம் என்றால் “சிறந்தது” என்று பொருள். உத்தமம் என்பதற்கான பொருளை பத்ம புராண ஸ்லோகம் ஒன்றின் மூலமாக விளக்கலாம்:
🌺 *அப்ராரப்த-பலம் பாபம் கூடம் பீஜம் பலோன்முகம்*
*க்ரமேணைவ ப்ரலீயேத விஷ்ணு-பக்தி-ரதாத்மனாம்* 🌹🌺
🌺உன்னத அறிவாகிய கிருஷ்ண உணர்வைப் பெறுபவரின் அனைத்து பாவ விளைவுகளும் அதன் விதைகளும் படிப்படியாக அழிந்துபோகின்றன என்பதே இதன் பொருளாகும்.
🌺இதற்கான உதாரணத்தை நாம் பகவத் கீதையில் படித்துள்ளோம்—நெருப்பில் போடப்படுபவை சாம்பலாக்கப்படுவதைப் போலவே, ஸ்ரீ கிருஷ்ண உணர்வு என்னும் நெருப்பு எரியத் தொடங்கிய உடனேயே கடந்த கால பாவ விளைவுகள் அனைத்தும் சுட்டெரிக்கப்படுகின்றன.🌹🌺
🌹வாழ்க வையகம் 🌺 🌹 வாழ்க வையகம்🌺 🌹வாழ்க வளமுடன் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🌹🌺🌻
🌺🌹Man today sleeps twelve hours out of twenty four hours and spends ten hours in earning material out of remaining twelve hours.
🌺There are only two hours left, where is the understanding of spirituality? They don't have time.
🌺Furthermore, the people of this age are struggling even to get shelter, food, wife etc.
🌺Finally, above all the above, people are always worried about diseases and countless problems.
🌺 This is the condition of the people of today's age. That is why Krishna, who thought it difficult for people to attain salvation through conventional rules, incarnated and distributed the highest maturity of life and spiritual bliss to all people.
🌺 Uttam means “best”. The meaning of uttam can be explained by a sloka from the Padma Purana:
🌺 Aprarabtha-balam papam kudam beejam palonmugam
Kramenaiva Praleetha Vishnu-Bhakti-Radatmanam🌹🌺
🌺This means that one who attains Krishna consciousness, the supreme knowledge, gradually destroys all the effects of sin and its seeds.
🌺We have read an example of this in the Bhagavad Gita—just as what is put into the fire turns to ashes, once the fire of Sri Krishna consciousness starts burning, all the past sinful effects are burnt away.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
தன் பெருமையால் தானே உயர்ந்து நிற்பவர்
அனைத்து இயக்கத்திற்கும் அடிப்படையாக இருந்து தான் ஸ்திரமாக இருப்பவள்
யாருமே இல்லை. நானும் பெரியவாளும் மட்டும்தான்…!
*இந்திரா சௌந்திரராஜனின் முதல் அனுபவம்*. *(இன்று இவர் பிறந்த தினம்)*
பொதுவான கேள்விகளுக்கு கூட பலருக்கு விடை தெரியவில்லை.
அவர் எதைப் பேசி முடித்தாலும் முடிவில் ‘நாராயணா நாராயணா!’ என்றே முடிப்பதால், அவரை வைணவத்துக்கு அன்னியமாகவோ எதிராகவோ கருதவே முடியவில்லை.
1993ஆம் வருடம் மார்கழி மாதம் என்பதாக ஞாபகம். குளிர வேண்டிய அந்த மாதத்தில், பெரும் புயலும் மழையும் ஏற்பட்டு ஊரே மழைக்காடாக இருந்த வேளையில், எனக்கும் டைஃபாடு காய்ச்சல் ஏற்பட்டது.
என்னமோ தெரியலை… தரிசிக்கணும்னு தோண்றது” என்றேன்.
உடம்பு குணமாகட்டும். அடுத்த மாதம் போகலாம்” என்றாள் மனைவி!.
ஆனால், நான் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
எனக்கு ராஜப்பா என்று ஒரு நண்பர். தற்செயலாக என்னைப் பார்க்க வந்தவர், ‘நானும் என் மனைவி உமாவும் கூட வருகிறோம்” என்றார். நான்குபேர் ஆறு பேராகிவிட்டோம். வெளியிலோ மழை நிற்கவில்லை. அதனால் என்ன என்பது போல, நான் மேற்கொண்ட குரு தரிசன யாத்திரைக்குள் நம்பமாட்டாத அதிசயங்களும் அரங்கேறத் தொடங்கின.
திருவள்ளுவர் பஸ் நிலைய வாசலில் இறங்கி, செங்கல்பட்டு செல்லும் பஸ்ஸை பிடிக்கும் எண்ணத்தோடு நடந்தபோது, ஒரு திருவள்ளுவர் பேருந்து எதிரில் வந்தது. அதில் செங்கல்பட்டு செல்லவும் இடம் இருந்தது. ஒரு ஆச்சரியம்போல, ஆறுபேர் ரிசர்வ் செய்துவிட்டு என்ன காரணத்தாலோ வந்திருக்கவில்லை. அந்த இடம் அப்படியே எங்களுக்கு கிடைத்தது.
என் மனைவி, அம்மா, ராஜப்பா, அவர் மனைவி எல்லாம் குளித்து தயாரானபடி இருக்க, நான் மட்டும் தனியே பெரியவா அமர்ந்திருக்கும் இடம் நோக்கி, மல்லிகை பந்துடன் சென்றேன்.
சுவரில் சற்று சாய்ந்தபடி, கால்களை நீட்டி அவர் அமர்ந்திருக்க, அருகில் ஒருவர் என்றால் ஒருவர் இல்லை. முன்னால் ஒரு மூங்கில் தடுப்பு. அதை பிடித்தபடி நின்ற நான், பூவை என்ன செய்வது என்று தெரியாமல், அதை விரித்து, நீண்டு கிடக்கும் அவர் கால்களின் மேல் சாத்திவிட்டு நிமிர்ந்தேன். அடுத்த நொடி அந்தக் கால்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்து நின்றன.
யாருமே இல்லை. நானும் பெரியவாளும் மட்டும்தான்…!
பேச விருப்பமாக இருந்தது. ஆனால், அவர் அமர்ந்திருந்த விதம், தோற்றம் தயக்கமளித்தது. மனத்துக்குள் பலவிதமான எண்ணங்களோடு அப்படியே நின்றுவிட்டேன். ஒரு அரை மணி நேரம் நின்றிருப்பேன். பின், என் மனைவி, மகள் மற்றும் ராஜப்பாவும் உமாவும் வந்திட தரிசனம் முடித்தோம்.
அப்படியே காமாட்சி அம்மன், வரதராஜர் என்று ஒரு ரவுண்டு. மாலை வரவும் செங்கல்பட்டு நோக்கி புறப்பட்டோம். காலை வந்த அதே வேன் செங்கல்பட்டில் எங்களை கொண்டுவிட்டது. முதல் நாள் வந்த அதே பஸ், அதே டிரைவர் – கண்டக்டர் செங்கல்பட்டில்! அடுத்த ஆச்சரியம்போல மதுரையிலும் முதல் நாள் ஏறிய அதே டவுன்பஸ், அதே டிரைவர்-கண்டக்டர். வீட்டு வாசலில் என்றால், வீட்டு வாசலில் இறக்கிவிட்டனர்.
எனக்கு உடல் நலமில்லை என்பதும், நான் குரு தரிசனம் மேற்கொள்ளப் போகிறேன் என்பதும் இவர்களுக்கெல்லாம் எப்படித் தெரியும்?
என் அம்மா, மனைவி, ராஜப்பா, உமா எல்லோருமே மிக ஆச்சர்யப்பட்டார்கள். ‘இது முழுக்க முழுக்க பெரியவாளின் க்ருபை’ என்றனர். க்ருபையின் உச்சம் என்ன தெரியுமா?
காலடியில் நின்றிருந்த நிலையில், சொந்தமாக ஒரு வீடில்லாத வேதனையை நான் பிரதிபலித்திருந்தேன். ராஜப்பா தனக்கொரு பிள்ளையில்லாத குறையை பிரதிபலித்திருந்தார்.
அதன்பின் நான் புதுவீடு கட்டி குடியேறினேன். கிரகப் பிரவேசத்தில் ராஜப்பா எனக்கு உதவியாக சாப்பாடு பரிமாறும் போது தகவல் வருகிறது – உமாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக… ஒரே நாளில் இருவருக்கும் வரம்!
இதை தற்செயல் என்று கூறமுடியுமா?
மிக முக்கியமான ஒரு விஷயம். அந்த காய்ச்சலில் விழுந்தடித்துச் சென்று நான் தரிசித்துவிட்டு வந்த 30ஆம் நாள், மகா பெரியவா முக்தியடைந்து விட்டார். ‘குணமடைந்த பிறகு செல்வோம்’ என்று கருதியிருந்தால், பெரியவா தரிசனமே கிடைத்திருக்காது!
இதை என்னவென்று சொல்வது?
மனத்துக்குள் குருவாய் கருதி உருகிக் கொண்டிருந்த எனக்கு கல்கி வழியாக விடை தந்தவர் – திருவடி தீட்சை தரவும் விரும்பி, அதற்கான விருப்பத்தை ஏற்படுத்தி பயணிக்க வைத்து அழைத்து அனுக்கிரகம் செய்திருக்கிறார் என்பதையன்றி வேறு எதைச் சொல்ல?
ஹர ஹர ஹர சங்கரா!
ஜெய ஜெய ஜெய சங்கரா!
சிவ சிவ சிவ சங்கரா!
*kn*
ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம்.
அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல
முடியாத இயலாமை.
ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான்.
*தியானம் என்றால் என்ன?*
சிரித்துக் கொண்டே அந்தச்சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.
சிறுவனிடம், *"நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும்.*
அதே மாதிரி.....
*எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது.* புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.
சிறுவனுக்கு ஒரே உற்சாகம்.
சுற்றியுள்ளோருக்குக்கோ ஒரே குழப்பம்.
சிறுவன் *மகரிஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான்.*
சிறுவனை சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் *'ம்'* சொன்னார் ரமணர்.
அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது *'ம்'* வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன்
பெரிய, பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே
மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.
ரமணர் புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய *'ம்'* சொல்வதாக இல்லை.
தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது.
சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா *'ம்'* சொல்லுவார் என்று காத்திருந்தான்.
சுற்றியுள்ளவர்களுக்கும் என்ன தான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.
எதிர்பாராத ஒரு நொடியில் *'ம்'* சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.
ரமணர் புன்னகைத்தபடி.....
*"இரண்டு 'ம்' - களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும், என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும், அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பெயர் தியானம்..... புரிந்ததா இப்போ?"* என்றார் மகரிஷி புன்னகைத்தபடி.
ரமணர் சொன்ன அந்த.....
*இரண்டு 'ம்' கள்*
*வாழ்வு'ம்',*
*சாவு'ம்'*.....
இந்த இடைப்பட்ட காலத்தின் எல்லா நேரமுமே, ஒருவன் தியானத்தில் அமிழ வாய்த்திருப்பதைப்
புரிந்து கொள்ள..... *முதிரும் காலமே வேறுபடுகிறது.*
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன் தனக்கு எத்தனை இன்பந்தரும் உன் இணைமலர்த்தாள்
என் தனக்கும் அது, இராமா னுச! இவை ஈந்தருளே.
— இராமானுச நூற்றாந்தாதி
இராமனுசரை இளையாழ்வார் (இலக்குமணன்) என்பதற்குக் காரணம் உள்ளது. இலக்குமணன் போலவே, அண்ணலும் ஐந்தலைய பைந்நாகமாம் ஆதிசேஷனின் அவதாரமாகக் கொள்ளப்படுகிறார். சமயம் கிடைக்கும்போது, நான் எழுதிய இவ்விடுகையையும் வாசிக்கவும்
நின்ற வண் கீர்த்தியும் - நிலைத்த பெரும்புகழும்
நீள் புனலும் நிறை - நீர் மிக நிறைந்த சுனைகளும் கொண்ட
வேங்கட பொன் குன்றமும் - திருவேங்கடம் எனும் பொன் போல் ஒளிரும் திருமலையும்
வைகுந்தம் நாடும் - பரமபதம் எனும் திருநாடும்
குலவிய பாற்கடலும் - போற்றத்தக்க, ஆனந்தம் தரும் திருப்பாற்கடலும்
உன் தனக்கு - உம் திரு உள்ளத்துக்கு
எத்தனை இன்பம் தரும் - எவ்வளவு/எத்தகைய மகிழ்ச்சி தருமோ
உன் இணை மலர்த் தாள் - மலரொத்த உமது திருவடிகளானது
என் தனக்கும் அது - அடியேனுக்கு அத்தகைய பேருவகையை அளிக்க வல்லது
இராமானுச! இவை ஈந்தருளே - அண்ணல் இராமனுசரே! இத்திருவடிகளால் அடியேனை காத்தருள வேணும்
(ஞானமிக்க குருவின் திருவடியானது அத்தனை மேன்மையானது என்பதே பாசுரத்தின் முக்கியச்செய்தி. அதோடு, வைணவ மரபில், ஒரு குருவின் கைப்பற்றுதலும், அவரது உபதேசமும் இன்றி, நிறைந்த பக்தியோடு கூடிய பூரண சரணாகதி மட்டும் மோட்சத்தைப் பெற்றுத் தர வல்லதில்லை)
சொல்லாடல் சுவை:
பாசுரத்தில் “குலவிய பாற்கடல்” என்பதை நோக்குவோம். சாதாரணமாக ‘குலவிய” என்பதற்கு மிக நெருக்கமாகப் புழங்குதல் என்று நாம் பொருள் கொள்வோமில்லையா? இராமானுசர் ஐந்தலை அரவின் அவதாரம் என்று அறிவோம். பாற்கடலில் பெருமாள் அரவுப்படுக்கையில் (பாம்பணை) யோக நித்திரையிலிருப்பதை குலவுவதாகக் கொள்வதும் ஒரு சுவை தானே :-)
பாசுரத்தில் வரும் மற்ற இரு இடங்களில், திருவேங்கடத்தில் நின்ற திருக்கோலத்திலும், (இங்கு ஆதிசேஷனே மலையாக இருப்பதாகச் சொல்வது மரபென்றாலும், குலவுதல் அத்தனை பொருத்தமில்லை!) வைகுந்தத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும் (இங்கு ஆதிசேஷன் பெருமாள், மகாலட்சுமிக்கு குடையாகப் பரவியிருப்பதால், இங்கும் குலவுதல் பொருந்தாது) பெருமாள் அருள் பாலிக்கிறார்.
— எ.அ.பாலா
நிலைத்த பெரும்புகழும்
நீர் மிக நிறைந்த சுனைகளும் கொண்ட
திருவேங்கடம் எனும் பொன் போல் ஒளிரும் திருமலையும்
பரமபதம் எனும் திருநாடும்
போற்றத்தக்க, ஆனந்தம் தரும் திருப்பாற்கடலும்
உம் திரு உள்ளத்துக்கு
எவ்வளவு/எத்தகைய மகிழ்ச்சி தருமோ
மலரொத்த உமது திருவடிகளானது
அது - அடியேனுக்கு அத்தகைய பேருவகையை அளிக்க வல்லது அன்றோ
அண்ணல் இராமனுசரே!
இத்திருவடிகளால் அடியேனை காத்தருள வேணும்👣👣
சீராய் மலர்ந்திருக்கும் கதம்ப மலர்க்கொத்துக்களால் காதுகளை அலங்கரித்திருப்பவள் *
மலர் கொத்துக்கள் உன் செவி மூடி இருக்க கண்டேன் ...
என் குறைகள் உன் செவியில் விழுந்தும் பதில் சொல்லா ஊமை ஆனதோ
வாய் நிறைய உனை வாழ்த்துகின்றேன் ...
வாழ்த்தும் வாழ்த்துக்கள் உன் செவிகளை அடைத்தே செவிடானதோ ?
ஊமையும் செவிடுமான உன்னை
கண்ணில் நீர் வழிய கண்டேன் உன் திருமேனியை ..
இரு கண் பெற்றும் குருடானேன் ...
இமை விழியில் நீ இருக்க
இதய கோயிலில் கொலுவிருக்க
கேட்பதும் நினைப்பதும் பேசுவதும் நீ யாக இருக்க
*நான்* என்று ஒன்று இனியும் உண்டோ தாயே ? 💐💐💐
நாலுநாளு முன்னிலொரு நாட்டமாகி
நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரம மாகலாம்
ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே. 124
பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியை செய்யவேண்டும்.
நம் பிராணனில் இருந்து வெளியேறும் நாலு அங்குல மூச்சை இந்த யோகத்தில் நாட்டம் வைத்து ரேசகம், கும்பகம், பூரகம், என்று வாசியை நாட்டி செய்து வந்தீர்களானால்
என்றும் இளமை பெற்று பாலனாக வாழலாம்.
இது ஆலகால விஷம் உண்ட நீலகண்டர் மீதும் அவ்விஷத்தை தடுத்த என் அன்னையின் மீதும் ஆணையிட்டுக் கூறுகின்றேன்.👏👏👏
*பதிவு 400* 🙏🙏🙏started on 7th Oct 2021
*153*
எந்த குறைபாடு, மாசு மரு , அற்ற பரிபூரணி ஸ்ரீ லலிதாம்பிகை என்று போற்றுகிறார் ஹயக்ரீவர்.
*சுத்த ப்ரம்ம பராத்பரம்.*
*பதிவு 399* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
102
கடாக்ஷே கந்தர்ப்பா: கதிசன கதம்பத்யுதி வபு:
ஹரஸ்ய த்வத்ப்ராந்திம் மனஸி ஜனயந்திஸ்ம விமலா
பவத்யா யே பக்தா : பரிணதி ரமீஷா மிய முமே
அழுக்கற்ற உனது பக்தர்கள் பரந்து கனத்த மார்பைக் கொண்டவர்களாகவும்,
அழகிய புன்சிரிப்பை உடையவர்களாகவும்,
கடைக்கண் பார்வையில் மன்மதர்களாகவும்,
கடம்பமரம் போன்ற உடல் படைத்தவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.
அவர்களைப் பார்க்கும்போது சிவனுடைய மனத்தில் ‘இவர்களும் தேவியேதானோ ?’ என்ற மயக்கம் ஏற்படுகிறது.
(பக்தர்கள் அங்ஙனம் ஸாரூப்ய முக்தியை எய்திவிடுகிறார்கள்.)
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏
எப்பேர்ப்பட்ட தர்ஶனம்!
ஸ்ரீ த்யாகராஜ பண்டிதர் என்பவர் பெரிய வேத வித்து. தஞ்சாவூரை சேர்ந்த இவர், நம்முடைய பெரியவாளுக்கு பல வர்ஷங்கள் நிழலாக இருந்து அப்படியொரு கைங்கர்யம் பண்ணியவர். பெரியவாளுடைய அத்தனை தேவைகளையும், பெரியவாளுடைய ஒரு சின்னக் குறிப்பு கூட இல்லாமல், தானாகவே அறிந்து, செய்து வந்த புண்யவான்.
பெரியவா எப்போதுமே தன்னோடு வைத்துக் கொண்டிருக்கும் காமாக்ஷிக்கு பூஜை பண்ணும்போது த்யாகராஜ பண்டிதர் ஒரு பெரிய துணியை, தன் இரு கைகளாலும் அகலமாக ஸ்க்ரீன் மாதிரி பிடித்துக் கொண்டு நிற்பார். பெரியவா உள்ளே என்ன பண்ணுகிறார் என்பது துளி கூட வெளியே தெரியாதபடி பிடித்துக் கொண்டு நிற்பார். அவர் நல்ல உயரமாக இருந்ததால், நிஜமாக பெரிய திரை போட்டதுபோல் பிடித்துக் கொண்டு நிற்பதில் எந்த ஸ்ரமமும் அவருக்கு இல்லை.
"ஒரு சின்ன குறிப்பு கூட, நா....குடுக்க வேண்டிய அவஸ்யம் இல்லாதபடி இப்டி பாத்துப் பாத்து பண்றியே....பதிலுக்கு நா.....ஒனக்கு பண்ண வேணாமா?..."
பகவான் இப்படி நினைத்திருப்பானோ என்னவோ?
ஒருநாள் திரைக்கு அந்தப்பக்கம் தன்னுடைய காமாக்ஷிக்கு, பெரியவா பூஜை பண்ணிக் கொண்டிருந்தார். த்யாகராஜ பண்டிதர் வழக்கம் போல் திரையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.
ஆனால், அவருக்கு அன்றைக்கு என்னவோ பூஜை ரொம்ப நேரம் நடப்பதுபோல் தோன்றியது. அவருடைய எண்ணம் நிஜந்தான் என்பது போல், அவருக்கு கைகள் வலிக்க ஆரம்பித்தன.
"என்னாச்சு? பெரியவா இன்னிக்கு ரொம்ப நேரமா பூஜை பண்றாளே?........."
ரத்த ஓட்டம் குறைந்ததால் மரத்துக் கொண்டிருக்கும் கை வலி, இந்த யோஜனையோடு சேர்ந்ததும், லேஸாக வலதுகைப் பக்கம் பிடித்துக் கொண்டிருந்த திரை சற்று தாழ்ந்தது.......
ஒரே ஒரு க்ஷணம்!
பண்டிதரின் பார்வை உள்ளே பெரியவா பக்கம் விழுகிறது........
ஜகத்குருவானவர், தன்னுடைய பாரிஷதருக்கு "இந்தா! பிடி! என்னுடைய அபரிமிதமான அனுக்ரஹத்தை!..." என்று ரொம்ப ஸஹஜமாக வாரித் தெளித்தார்!
"அங்கே! சின்னச்சிறு குழந்தை வடிவில் ஸர்வாலங்கார பூஷிதையாக 'தகதக'வென கோடிஸூர்ய ப்ரகாஶத்தோடு ஸாக்ஷாத் அம்பிகை காமாக்ஷி அமர்ந்திருந்தாள் ! 'ஶ்ருதி ஸீமந்த ஸிந்தூரிக்ருதபாதாப்ஜ தூளிகா" என்று லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒரு மஹா ஸௌந்தர்யமான வர்ணனை வரும். வேதமாதா தன்னுடைய ஶிரஸை அம்பாளின் பாதங்களில் பதியும்படி நமஸ்காரம் செய்யும்போது, அவளுடைய ஸீமந்தத்தில் [நெற்றியின் உச்சி] பூசியிருக்கும் ஸிந்தூரமானது அம்பாளுடைய சிவந்த தாமரை பாதங்களில் படுவதால், அவை மேலும் சிவந்திருக்குமாம் ! அதோடு, தங்க கொலுஸுகளும், மணிகளும் கொஞ்சிட, ரத்னம் போல் ஜ்வலித்துக் கொண்டிருக்கும், அப்பேர்ப்பட்ட அந்த தேவியின் திருப்பாதங்களை, கோடிகோடியாய் ஸுகந்த புஷ்பங்களாலும், மஞ்சள் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்து கொண்டிருக்கும், தன் திருக்கரங்களால் பற்றிக் கொண்டு விம்மிக் கொண்டிருந்தார், நம்முடைய பெரியவா!..."
ஆஹா! எப்பேர்ப்பட்ட தர்ஶனத்தை தந்துவிட்டார்!
பெரியவாளின் மற்றொரு திவ்யமங்கள ரூபத்தை காணும் பாக்யம் பெற்றார் பண்டிதர்!
ஒரே ஒரு ஸெகண்ட்தான்!
அதற்குள் பெரியவா இவர் பக்கம் திரும்பாமலே தன் கமண்டலத்தில் இருந்த ஜலத்தை, பண்டிதர் முகத்தில் பின்பக்கமாக வீசியடித்தார்!
அந்த அதிர்ச்சியில், பண்டிதரின் வலது கை தானாக உயர்ந்து, திரை பழையபடி உயர்ந்தது.
பூஜை எல்லாம் முடிந்து அருளைத் தாங்க முடியாமல், தளும்பத் தளும்ப, மெல்ல வெளியே வந்த பெரியவா, பண்டிதரிடம் கேட்ட முதல் கேள்வி..........
"நீயும் பாத்துட்டியா?"
அத்வைதரஸ ஆச்சார்யனை, அம்பிகையாகவும், ஆச்சார்யாளாகவும் ஒரே நேரத்தில் த்வைதரூபமாக தர்ஶனம் செய்த, பாக்யஸாலி பண்டிதர், பதில் சொல்லும் நிலையிலா இருந்தார்?
அப்படியே இருந்தாலும், என்ன பதில் சொல்லுவார்,.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர பேசும் தெய்வம் - ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காமாட்சி சங்கர காமகோடி சங்கர..மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் குருதேவா.
व्यामोहप्रशमौषधं मुनिमनोवृत्तिप्रवृत्त्यौषधं
दैत्येन्द्रार्तिकरौषधं त्रिभुवनी सञ्जीवनैकौषधम् ।
भक्तात्यन्तहितौषधं भवभयप्रध्वंसनैकौषधं
श्रेयःप्राप्तिकरौषधं पिब मनः श्रीकृष्णदिव्यौषधम् ॥ २७ ॥
வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம் முனிமனோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்
தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம் ।
ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்
ச்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம் ॥ 24 ॥
ன்னு சொல்றார்
ஸ்ரீ ருத்ரத்தை ஜபிக்கும் போது இந்த பகவான் எல்லா வடிவமாயும் இருக்கார்னு 300 நமஸ்காரம் சொல்றது.
அப்படி அந்த ருத்ரத்தை ஜபிக்கும் போது நமக்கு அந்த பகவான் கிட்ட பக்தி வரணும்னு வேண்டிக்கணும்.
அப்படியே தான் ஒவ்வொரு கார்யங்கள் பண்ணும் போதும். வ்ரதங்கள் இருக்கும் போது மனசு பகவான்கிட்ட இல்ல, ரொம்ப களைச்சு போறதுன்னா, ஸ்வாமிகள் சொல்வார்.
‘அந்த காலத்துல எலும்புல உயிர் இருந்தது. அப்புறம் மஜ்ஜையில இருந்தது. இப்ப அன்னத்துலதான் இருக்கு.
உன்னால ரொம்ப முடியலைன்னா ஸ்ரமப் படுத்திக்காதே.
நீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பண்றது தான் முக்கியம்.
சாப்டுட்டு பாராயணத்தை முடி.
அதுவே முடியாம தளர்ச்சி ஆயிட்டேன்னா நீ வ்ரதங்கள் இருக்கறது கஷ்டம்’ ன்னு சொல்வார்.
ஆனா பக்தி முற்றினா அப்புறம் அந்த வ்ரதங்கள் எல்லாம் இயல்பா பண்ண முடியுமா இருக்கும்.
A life spent making mistakes is not only more honourable, but also more useful than a life spent doing nothing.
It is not happy people who are grateful. It is grateful people who are happy.
Most of the time, the opportunity is there, it's just that we are afraid to take the risk.
Never argue with someone who believes their own lies.
Be bold enough to use your voice, brave enough to listen to your heart And strong enough to live the life you've always imagined.
Expressing your feelings can cause hurt in a relationship, but, not expressing will hurt the relationship itself .
படிக்க படிக்க புல்லரிக்கிறது….கண்கள் கலங்கியது மகிழ்ந்தேன் பகிர்ந்தேன்
“நமச்சிவாய வாழ்க !
நாதன் தாள் வாழ்க”
திருவாசகம் சமீபத்தியஉண்மையான அதிசய சம்பவம் .
முன்னாள் படைவீரர், L I C. நிறுவனத்தில் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றவருமான சிவத்திரு G.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் வாயில்வரை சென்று மீண்டு வந்துள்ளார். அவரோடு பேசியபோது தெரிவித்த அவர் பெற்ற அனுபவம் மெய்சிலிர்க்க வைத்தது! உள்ளத்தை உருக்கியது!!
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக் கொண்டு
தும்பார் “திருமேனித் தும்பிக்கை யான்” பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
-ஒளவையார்
இன்றைய தமிழ் புத்தாண்டு தினத்தில், என் இஷ்ட தெய்வங்களில் முதல்வரான தேவகணங்களுக்கு தலைவனாகிய மகா கணபதியை நினைத்து வணங்கி, இந்த களத்தை தமிழ் கோரா மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
இந்த வாய்ப்பை அளித்த தமிழ் கோராவுக்கும் திரு செல்வ கணபதி (Selva Ganapathy) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
இதில் நல்ல விஷயங்களை பகிர்ந்து சிறப்பளிக்கவும்.
நன்றி.
பூஜை அறையில் காமாட்சி விளக்கை ஆண்கள் ஏற்ற கூடாது என ஒரு சிலர் கூறுகின்றனர்? விளக்கம் கிடைக்குமா?
நான் தினமும் பூஜை செய்வேன், தினமும் நெய் தீபம் காட்டும் போது சாமி படத்தில் இருக்கும் பூ கீழே விழும், நான் கிருஷ்ணனுக்கு நெய் தீபம் காட்டும் போது முருகன் படத்தில் இருக்கும் பூ கீழே விழும், அது நல்லதா? அல்லது சரியாக வைக்காததால் விழுகிறதா?
திருவாசகம் படிப்பதால் என்ன பயன்? அதன் மந்திர சக்தி என்ன?
திருவாசகம் என்னை மீட்ப்பித்து விட்டது!
படிக்க படிக்க புல்லரிக்கிறது….கண்கள் கலங்கியது மகிழ்ந்தேன் பகிர்ந்தேன்
“நமச்சிவாய வாழ்க !
நாதன் தாள் வாழ்க”
திருவாசகம் சமீபத்தியஉண்மையான அதிசய சம்பவம் .
முன்னாள் படைவீரர், L I C. நிறுவனத்தில் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றவருமான சிவத்திரு G.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் வாயில்வரை சென்று மீண்டு வந்துள்ளார். அவரோடு பேசியபோது தெரிவித்த அவர் பெற்ற அனுபவம் மெய்சிலிர்க்க வைத்தது! உள்ளத்தை உருக்கியது!!
எழுபத்து நான்கு வயது நிரம்பிய பெரியவர் திரு.G. கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னதை அப்படியே அவர் உங்ளிடம் சொல்வதாக பதிகின்றேன்!
“நான் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு புதுவையில் உள்ள மணக்குளவிநாயர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் . ஓய்வு பெற்ற ராணுவ வீரரான எங்கள் சிகிச்சைக்கென அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை அது.
நான் மருத்துவமனைக்குச் சென்று தங்குவதற்குத் தேவையான சில பொருட்களை எடுத்துக் கொண்டபோது என் எண்ணத்தில் ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட திருவாசகம் புத்தகம் ஒன்றினையும் கையோடு எடுத்துக்கொண்டேன்!
மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை துவங்கியது.
சிகிச்சை துவங்கி ஒரு இரண்டு நாட்கள் ஒன்றும் தெரியவில்லை. நான் எதற்கும் இருக்கட்டுமே என்று எடுத்துக்கொண்டு வந்த திருவாசகம் புத்தகத்தை என் தலைமாட்டில் வைத்துக்கொண்டேன்.
என்னால் தாங்கமுடியாத அளவிற்கு உடல் சோர்வடைந்து என் நினைவு கொஞ்சம் தடுமாறத் துவங்கியது! டாக்டர்களும் நர்சுகளும் அவ்வப்போது வந்து பார்த்து நிலைமைக்கேற்றவாறு சிகிச்சை கொடுத்தார்கள்
என் உடல் நிலைமை மோசமான நிலைக்குச் செல்வதை என்னால் உணரமுடிந்தது. இப்படி நான் உணர்ந்து கொண்டிருந்த போது திடீரென மூச்சு விடுவது சிரமமானது! இருக்க இருக்க சிரமம் அதிகமாகி நரக வேதனையானது!
உடன் அவசர அவசரமாக நர்ஸ் ஒருவர் சென்று டாக்டரை அழைத்து வந்தார்.
டாக்டர் எனது மோசமான உடல்நிலையைப் பார்த்து உடனே செயற்கையாக சுவாசம் செய்திட ஆக்ஸிஜன் குழாயினைப் பொருத்தினார்.
“நீங்கள் கொஞ்சம் கடினமான நிலையில் இருக்கின்றீர்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள்” என்று டாக்டர் ஒருவர் சொல்லிவிட்டு சென்றார்.
டாக்டர் போன பிறகு என்னுடைய உடல்நிலை மேலும் மோசமானது. முகம், மூக்கு மற்றும் உடல் எங்கும் கொரோனா நோயும் , அதன் மருந்துகளும் மொய்த்துக்கொண்டு முகம் , உடல் எங்கும் எந்த அசைவுமின்றி கிடந்தேன்.
இரவு மணி 12 இருக்கும் ஆக்ஸிஜன் மூலம் செயற்கையாக மூச்சு விடுவதற்கும் சிரமப்பட்டேன். என் உடலின் மோசமான நிலை எனக்குப் புரிய வந்தது. இரவு ஒருமணி இருக்கும் நர்ஸ் வந்து பார்த்துவிட்டு அவசர அவசரமாக டாக்டரை அழைத்து வந்தார்.
ஆக்ஸிஜன் கவசத்தை சற்றே விலக்கி தட்டுத் தடுமாறியபடியே டாக்டரிடம் ” சார், ஒருவேளை நான் இறந்துவிட்டால் என் உடலோடு சேர்த்து என் தலைமாட்டில் இருக்கும் “திருவாசகம்” புத்ததகத்தையும் சேர்த்து வைத்து புதைத்து விடுங்கள்” என்று சொல்கிறேன். டாக்டரும் சென்று விடுகிறார்.
மீண்டும் ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. என் உடல் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருப்பதை என் ஆன்மா உணர்கிறது .
இப்போதுதான் திடீரென யாரோ சாட்டையால் அடித்தது போல் என்னிடம் “தலைமாட்டில் எதற்கு திருவாசகம் புத்தகம் வைத்திருக்கிறாய் ? அதை எடுத்துப் படிக்கலாமே ” என்று சொன்னது போல் உணர்ந்தேன். அப்போது இரவு மணி இரண்டு.
திருவாசகம் புத்தகத்தை எடுக்கின்றன.
முகக்கவசத்தை முகத்திலிருந்து எடுக்கிறேன்…. திருவாசகத்தின் முதல் பதிகமான “சிவபுராணத்தை” படிக்க ஆரம்பிக்கிறேன். இந்த நிலையில் இது எப்படி நடந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை.
சிவபுராணத்தைப் படிக்கிறேன் …படிக்கிறேன்….தொடர்ந்து படிக்கிறேன்..படித்துக்கொண்டே இருக்கிறேன் …
இப்படி தொடர்ந்து சிவபுராணத்தின் வரிகளைப் படிக்கப் படிக்க
என்னையும் அறியாமல் எனக்குள்ளே ஏதோ ஒரு சக்தி பிறந்ததை என்னால் உணரமுடிந்தது!
படிப்பதை நான் நிறுத்தவில்லை …நிறுத்த முடியவுமில்லை!
சிவபுராணத்தின் தொன்னூற்றைந்து வரிகளையும் என்னால் படிக்க முடிகின்றது …கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் அது என் ஆன்மாவிற்கு சுகமாக இருந்தது!
ஏதோ ஒரு புத்துணர்வு என் உடல், மனம் எங்கும் மெல்ல மெல்ல பரவிப் பாய்வதை உணர முடிந்தது!!
இப்போது செயற்கையாக ஆக்ஸிஜன் இல்லாமல் என்னால் ஓரளவு சுவாசிக்க முடிகிறது! உடல் அசதியும் அவ்வளவாக இல்லை!
மணி விடியற்காலை நான்கு இருக்கும்!
நர்ஸ் என்னைப் பார்க்க வருகிறார் . எழுந்து உட்கார்ந்திருந்த என்னைப்பார்த்து “படுங்க சார் .உங்கள் உடம்பு இப்படி இருக்கும் போது இப்படியெல்லாம் நீங்கள் எழுந்து உட்காரக்கூடாது” என்று சத்தம் போடுகிறார்.
உடன் டாக்டரை அழைத்து வருகிறார். வந்து பார்த்த டாக்டரும் நான் எழுந்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அவர் பங்கிற்கு சத்தம் போடுகிறார்.
பிறகு என்னை பரிசோதிக்கிறார். அவருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. என்ன ஆயிற்று உங்களுக்கு? என்ன செய்தீர்கள்? என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்து என்னை பரிசோதிக்கின்றார்!
சார் ….திடீரென்று உங்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. என்ன ஆச்சர்யம்! நீங்கள் இப்போது ஓரளவு குணமடைந்துள்ளீர்கள் … என்னால் நம்பவே முடியவில்லை..
எல்லாம் அதிசயம் போல் இருக்கிறது ! நீங்கள் என்ன செய்தீர்கள் ? என டாக்டர் கேட்கிறார்.
நான் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்கிறேன்
“இறைவனுக்கு நன்றி” என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்றுவிடுகிறார்.
பிறகு மொத்தமாக ஒரு 15 நாட்கள் நான் மருத்துவமனையில் இருந்தேன்.
சிகிச்சை முடிந்து நலமாக பிறகு வீடு திரும்பினேன்.
என்று குரல் தழுதழுக்க அவர் இவ்வாறு சொல்லி முடிக்க எனது கண்களும் கலங்கின!
அந்தக்காலத்தில்
திருமுறைகள் பாடி, மூடியிருந்த கோயில் கதவுகள் திறந்தன…
முதலை உண்ட பாலகன், மீண்டும் உயிர் பெற்றார்….
அரவம் தீண்டி ஆருயிரை இழந்த குழந்தை திருநாவுக்கரசு, உயிர் பெற்று மீண்டு வந்தார்…..
எலும்பும் சாம்பலுமாய் இருந்த பூம்பாவை, மீண்டும் உயிர் பெற்று வந்தார்…..
முதலையையும் அரவத்தையும் விட கொடியதான மருந்தே கண்டுபிடிக்கப் படாத கொரோனாவின் கொடிய கரங்களில் இருந்து, கொடுங்கூற்றை உதைத்த காலகாலனான எம்பெருமானே வைத்தியநாதனாக வந்து நம் ஐயா அவர்களை திருவாசகம் என்னும் மருந்தைக் கொடுத்துக் காத்தருளி இருக்கின்றான். அதற்காகவே அவருக்கு திருவாசகம் புத்தகத்தை உடன் கொண்டு செல்லும் எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறான்.
இந்த நூற்றாண்டிலும் திருமுறைகளின் அருமையை அனைவரும் அறிந்து கொள்ள இறைவன் நடத்திய நாடகமோ இது.
மருந்து அவன் எனவும் ,
மருந்து அவை எனவும்,
மருந்து வேண்டில் இவை எனவும்,
ஐயனையும் திருமுறைகளையும் பாடிப் பரவி உள்ளார்கள் நால்வர் பெருமக்கள்.
சிவபுராணத்தில் மணிவாசகப்பெருமான்
“ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி”
“பேராது நின்ற பெரும் கருணைப் பேராறே”
“காக்கும் என் காவலனே காண்புஅரிய பேரொளியே”
என்றெல்லாம் ஐயன் சிவபெருமானைப்போற்றி புகழ்ந்திருப்பார்!
ஆம்
“பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து”
நம் போன்ற உயிர்களைக்காக்கின்றவர் கருணையே வடிவமான எம்பெருமான் சிவபெருமானே என்பதை நாம் இன்று நன்றாக உணர்ந்து கொண்டோம்!
“நாயின் கடையாய் கிடந்த அடியேற்கு தாயின் சிறந்த தயாவான தத்துவன்”
சிவபெருமான் என்பதையும் தெளிவுறத் தெளிந்து கொண்டோம்…தெரிந்து கொண்டோம்
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!!
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!!
வேதத்திலேயே பிறப்பால் ஜாதி என்பதில்லை என்கிற வாதத்தை முதலில் பார்த்து விடலாம். மூலம் வேதமாச்சே! அதனால் இவ்விஷயத்தை முதலில் தெளிவாக்கிக் கொண்டுவிட வேண்டும். இப்படி வாதம் பண்ணுவது, ப்ரெளடா விவாஹந்தான் [பெண்கள் வயதுக்கு வந்த பிறகு விவாஹம் செய்வதுதான்] வேத ஸம்மதமானது என்று வாதத்தைப் பற்றி சொன்னேனே, அதே மாதிரியானது. அதாவது, Context – ம் Continuity- ம் [சந்தர்ப்பத்தையும், தொடர்ச்சியையும்] பார்க்காமல் ஏதோ ஒரு பாகத்தை மட்டும் பார்த்து, அதுவே பொது விதி என்று விபரீதமாக அர்த்தம் பண்ணிக் கொள்வதைச் சேர்ந்ததுதான் இது.
“