சிவானந்தலஹரி-21-என்னுடைய மனமாகிய அழுக்கில்லாத, படுதாவால போட்ட.. ஒரு tent.. ஒரு குடில்
இன்னைக்கு சிவானந்தலஹரில 21ஆவது ஸ்லோகத்தைப் பார்ப்போம், த்⁴ருʼதிஸ்தம்பா⁴தா⁴ராம் த்³ருʼட⁴கு³ணநிப³த்³தா⁴ம் ஸக³மநாம் விசித்ராம் பத்³மாட்⁴யாம் ப்ரதிதி³வஸஸந்மார்க³க⁴டிதாம் । ஸ்மராரே மச்சேத:ஸ்பு²டபடகுடீம் ப்ராப்ய விஶதா³ம் ஜய ஸ்வாமிந் ஶக்த்யா ஸஹ ஶிவக³ணை: ஸேவித விபோ⁴ ॥ ஹே விபோ! – எங்கும் நிறைந்தவரே, ‘ஸ்வாமிந்’ – ஆண்டவரே, ‘ஸ்மராரே’ மதனனை எரித்தவரே, நீங்கள் என் ‘மச்சேத:ஸ்பு²டபடகுடீம்’ – என்னுடைய மனமாகிய அழுக்கில்லாத, படுதாவால போட்ட.. ஒரு tent.. ஒரு குடில், அதுல, ‘சக்தியா ஸஹ’ – பராசக்தியோடு, ‘ப்ராப்ய’ – வந்து.. நீங்கள் அங்கு விளங்கவேண்டும்..வெற்றியோடு விளங்கவேண்டும் அப்படீன்னு சொல்றார். இந்த tent எப்படி இருக்குன்னா, ‘த்⁴ருʼதிஸ்தம்பா⁴தா⁴ராம் ‘ – த்ருதின்னா உறுதி அல்லது தைர்யம், அதை ஸ்தம்பமா, நடுவுல ஒரு கம்பம் கொடுத்து, அது மேலதான் படுதா போட்டு கயறு வெச்சு கட்டுவா இல்லையா? அப்படி என்னுடைய சிவ பக்திங்கறது என் மனசுல உறுதியா இருக்கு, அது தான் அந்த நடுத் தூண், ‘த்⁴ருʼதிஸ்தம்பா⁴தா⁴ராம் த்³ருʼட⁴கு³ணநிப³த்³தா⁴ம்’ – த்ருடகுணம் அப்படீன்னா.. அந்த பக்தியிலேர்ந்து நழுவாத வைராக்கியம், அது தான் குணம்.. குணம...